Reading view

அரசியல் முரண்பாடுகளின் ஆதாரம் அரசியலில் மட்டும் இல்லை. அதற்கான வேர் சமூகத்திலும் பண்பாடிலும் பிணைந்திருக்கிறது - ஸ்டாலின் ராஜாங்கம் நேர்காணல்- 2

ஸ்டாலின் ராஜாங்கம்

ஸ்டாலின் ராஜாங்கம் தமிழ் சமூகவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வாளர், செயல்பாட்டாளர். இலக்கிய ஆய்வாளர், ஊடக ஆய்வாளர். தலித் வரலாற்றை மீட்டெழுதுவதில் பெரும்பங்கு வகிக்கும் முன்னணிச் சிந்தனையாளர். கல்வியாளர். தமிழில் இன்று தலித் ஆய்வுகளில் ஒலிக்கும் முதன்மைக்குரலாக ஸ்டாலின் ராஜாங்கம் திகழ்கிறார். ஸ்டாலின் ராஜாங்கத்தின் அயோத்திதாசர் ஆய்வு, விடுபட்ட தலித் ஆளுமைகளின் மீதான ஆய்வு, தமிழ் சினிமாவில் உள்ள பண்பாட்டு கூறுகள் குறித்து என பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. தொடர்ந்து பண்பாட்டு ஆய்வு கட்டுரைகள் இலக்கிய இதழில்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. காலச்சுவடு இதழ் உட்பட இலக்கிய இதழ்களின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றி வருகிறார். 

ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே முன்னூர்மங்கலம் என்னும் ஊரில் 19-7-1980 பிறந்தார். தந்தை ராஜாங்கம், அன்னை காளியம்மாள். மனைவி பூர்ணிமா. மகன்கள், புத்தமித்ரன், ஆதன் சித்தார்த். தற்போது மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக பணிபுரிகிறார்.

ஸ்டாலின் ராஜாங்கம்- தமிழ் விக்கி

  •  

சிந்து, சிலை, சின்னம் - ஸ்டாலின் ராஜாங்கம்

photo courtesy: Sunil Abhiman Awachar

சாதி எதிர்ப்புப் போராட்டங்களின் வட்டார வரலாறு 

1928ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் நாள் காஞ்சிபுரத்திற்கு அருகேயிருந்த அங்கம்பாக்கம் கிராமத்தின் சேரிக்குள் அதிகாலை ஒரு கும்பல் நுழைந்தது. 70க்கும் மேற்பட்டவர்களைக் கொண்டிருந்த அக்கும்பல் அங்கிருந்த தலித் மக்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கத் தொடங்கியது. எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்த மக்கள் சிதறி ஓடத் தொடங்கினர். தாக்குதலை முடித்த கும்பல் குடிசைகளைக் குடிசைகளைக் கொளுத்தி விட்டு அங்கிருந்த குப்புசாமி என்பவரின் வீட்டை நோக்கி முன்னேறியது. அந்த வீட்டின் வெளிப்புறக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைய முயன்றது. அப்போது வெளியூரிலிருந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்த குப்புசாமி சேரி மக்களின் நிலைமையை அறிந்ததோடு தம்வீடு சேதப்படுத்தப் பட்டிருந்ததையும் கண்டார். தன் குடும்பத்தினரின் நிலைமையை அறிய வீட்டிற்கு உள்ளே ஓடிய அவரை மறைந்திருந்த கும்பல் கடுமையான ஆயுதங்களோடு சூழ்ந்தது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அவர் கதவைத் தாளிட்டுக்கொண்டு வீட்டிலிருந்த துப்பாக்கியால் தற்காப்பிற்காகக் கூரையை நோக்கிச் சுட்டார். ஆனால், கும்பல் வீட்டை வைக்கோலிட்டுத் தீயிட முயன்று கொண்டிருந்தது. பிறகு வேறுவழியில்லாத குப்புசாமி உள்ளிருந்த வாறே கும்பலை நோக்கித் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார். மொத்தம் இருபத்தோருமுறை சுட்டார். இதில் 15 பேர் காயமடைந்தனர். 9 பேர் படுகாயமுற்றனர். ஐந்து உயிர்களும் போயின. இவையெல்லாம் முடிந்தபோது காலை மணி ஆறாகியிருந்தது. பிறகு சென்னை போலீஸ் கமிஷ்னருக்கும் கலெக்டருக்கும் தந்தி அனுப்பிய குப்புசாமி, போலீசார் வந்தபின்பு துப்பாக்கியை ஒப்படைத்தார். அவரோடு ஏழு தலித்துகளும் கைதுசெய்யப்பட்டனர். 

  •  

ஆய்வு முடிவுகள் மட்டும் முக்கியமானவை இல்லை, முடிவுகளை வந்தடைவதற்கான முறைகளும் முக்கியமானவை - ஸ்டாலின் ராஜாங்கம் நேர்காணல்

ஸ்டாலின் ராஜாங்கம்

ஸ்டாலின் ராஜாங்கம் தமிழ் சமூகவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வாளர், செயல்பாட்டாளர். இலக்கிய ஆய்வாளர், ஊடக ஆய்வாளர். தலித் வரலாற்றை மீட்டெழுதுவதில் பெரும்பங்கு வகிக்கும் முன்னணிச் சிந்தனையாளர். கல்வியாளர். தமிழில் இன்று தலித் ஆய்வுகளில் ஒலிக்கும் முதன்மைக்குரலாக ஸ்டாலின் ராஜாங்கம் திகழ்கிறார். ஸ்டாலின் ராஜாங்கத்தின் அயோத்திதாசர் ஆய்வு, விடுபட்ட தலித் ஆளுமைகளின் மீதான ஆய்வு, தமிழ் சினிமாவில் உள்ள பண்பாட்டு கூறுகள் குறித்து என பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. தொடர்ந்து பண்பாட்டு ஆய்வு கட்டுரைகள் இலக்கிய இதழில்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. காலச்சுவடு இதழ் உட்பட இலக்கிய இதழ்களின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றி வருகிறார். 

ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே முன்னூர்மங்கலம் என்னும் ஊரில் 19-7-1980 பிறந்தார். தந்தை ராஜாங்கம், அன்னை காளியம்மாள். மனைவி பூர்ணிமா. மகன்கள், புத்தமித்ரன், ஆதன் சித்தார்த். தற்போது மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக பணிபுரிகிறார்.

ஸ்டாலின் ராஜாங்கம்- தமிழ் விக்கி

  •  

நாத்திகமும் பௌத்தமும்: ஸ்டாலின் ராஜாங்கம்


பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி காலக்கட்டத்தில் நாத்திகம் பேசும் அமைப்பொன்று சென்னையில் உருப்பெற்றது. இந்து சுயாக்கியானிகள் சங்கம் (Hindu Free thought Union) என்னும் பெயரில் 1878ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு 1886ஆம் ஆண்டு முதல் சென்னை லௌகீக சங்கம் (Madras Secular Society) என்று பெயர் மாற்றம் பெற்று செயல்பட்டது. காலனிய தமிழ்ச்சமூகத்தில் அறிமுகமான நவீன சிந்தனை போக்குகளின் தாக்கத்தால் உருவான இந்த அமைப்பு 19ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள்ளாகவே மங்கிப் போனதாகத் தெரிகிறது. இதழ்களை நடத்துவதென்பது அன்றைக்குத் தொடங்கப்பட்ட அமைப்புகளின் பிரதான அங்கமாக இருந்த நிலையில் லௌகீக சங்கம் சார்பாக ‘தத்துவவிவேசினி' (1882- 1888) என்ற தமிழ் வார ஏடும் The Thinker என்ற ஆங்கில வார ஏடும் நடத்தப்பட்டன. பிற்கால அரசியலில் பேசப்பட்ட நிலைபெற்ற நவீன அரசியல் கருத்துகள் சில தொடக்கவடிவில் இந்த இதழ்களில் பேசப்பட்டன. நாத்திகம் பிரதான பேசுபொருளாக இருந்து அதன் தொடர்ச்சியாக மேற்கத்திய அறிவியல் கருத்துகளை ஆதரித்தல், மூடநம்பிக்கைகளை இனங்காட்டி மறுத்தல், பிராமணர் மற்றும் வேதமரபு எதிர்ப்பு கருத்துகளை விவாதித்தல் போன்றவை இந்த இதழ்களில் பிரச்சாரம் செய்யப்பட்டன. இந்த அமைப்பின் செயற்பாட்டை இவ்விரண்டு இதழ்கள் வழி மட்டுமே அறிய முடிகிறது. இந்த இதழ்களை 125 ஆண்டுகளுக்குப் பிறகு 2013ஆம் ஆண்டு முறையே வீ. அரசு, வே. ஆனைமுத்து ஆகிய இருவரும் முன்பின்னாகத் தொகுத்து கொணர்ந்துள்ளனர். நவீன தமிழ்ச்சமூகத்தில் பின்னர் நிலைத்த பல்வேறு கருத்துகளின் அறிமுக காலத்தைச் சேர்ந்தவை என்ற வகையில் இத்தொகுப்புகள் முக்கியமானவை. நவீன தமிழ்ச்சமூகத்தின் தொடக்ககாலம் பற்றிய புரிதலுக்கு இவற்றிலிருந்து புதிய தரவுகளைக் கண்டெடுப்பதே இதுபோன்ற தொகுப்புகளுக்கு நாமளிக்கும் மரியாதையாக இருக்க முடியும். அந்த வகையில் இந்த இதழ்களில் வெளிப்பட்ட கருத்துகளின் தொடர்ச்சியையும், பிந்தைய காலத்தில் வேறு கருத்து நிலைகளோடு அவை உசாவியதன் மூலம் அடைந்த மாற்றங்களையும் காண முயல்வதே இக்கட்டுரையின் நோக்கம். இந்தத் திசையில் இதுவொரு தொடக்கநிலை பதிவாகும். எதிர்காலத்தில் விரியத்தக்கதாகும்.

  •