Reading view

இந்தியாவிலும் பாலஸ்தீனத்திலும் அரசே முன்நின்று நடத்தும் புல்டோசர் இடிப்புகள்

அரசின் அனுமதியுடன் வீடுகளை இடிப்பது என்பது ஒரு தனித்துவமான, கொடூரமான வழிமுறையாகும். இது இஸ்ரேல் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் மக்களைக் கட்டுக்குள் வைப்பதற்கும் தண்டிப்பதற்குமான ஒரு முறையாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த இரு வெவ்வேறு புவியியல் பகுதிகளில், குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட சமூகங்கள் இதன் மூலம் குறிவைக்கப்படுகிறார்கள். வரலாற்று ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இந்த நாடுகள் மிகவும் வேறுபட்ட சூழல்களில் செயல்பட்டாலும், இரண்டுமே இத்தகைய இடிப்பு நடவடிக்கைகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன. ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவைச் […]

Source

  •  

தௌஹீது பாத்திமாவும், இல்லாதுபோன அவரது புத்தம்புது இல்லமும் (கட்டுரை – 9)

தௌகீது ஃபாத்திமா அன்று காலை எப்படித் தயாரானார் என்று அவருக்கு நினைவில்லை. புதிதாகக் கட்டப்பட்ட அவரது வீட்டின் கட்டுமானத் தளத்திற்கு எப்படி விரைந்தார் போன்ற விவரங்கள் அவருக்கு நினைவில்லை. இன்னும் சில தினங்களில் அவர் குடிபுகவிருந்த வீடு அது. அவரது தந்தை தனது செல்ல மகளுக்காக அளவிலாத அன்புடன் தனது வாழ்நாள் சம்பாத்தியத்தை முழுவதும் கொடுத்து எழுப்பிய வீடு அது. அன்றைய தினம் தௌகீது ஃபாத்திமா பேசிய வார்த்தைகளோ, அவரிடமிருந்து பீறிட்ட கூக்குரலோ எதுவும் இப்போது அவருக்கு […]

Source

  •  

பொய்யாக உருவாக்கப்பட்ட கதைகளால் சஃப்தார் அலியின் வீடு பலியானது எப்படி? (கட்டுரை – 8)

தமிழில்: மணிபிரகாஷ் (தொடரின் அனைத்து கட்டுரைகளையும் வாசிக்க) சஃப்தார் அலிக்கு வயது 78. 1970-களில் கட்டப்பட்ட அவரது வீடு, அவரின் இரண்டு மகன்களான சையத் கமர் அப்பாஸ் மற்றும் சையத் ஃபராஸ் அப்பாஸ் ஆகியோருக்குச் சொந்தமானது. தங்கள் விவசாய நிலம் ஒன்றை விற்று வந்த பணத்தை வைத்து, 2002-இல் அந்த வீட்டை வாங்கினர். அப்போதிலிருந்து சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, எந்தவொரு சட்டவிரோதக் கட்டுமானம் குறித்தும் பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையத்திடமிருந்து (PDA) எந்த ஒரு அறிவிப்பையும் அவர்கள் […]

Source

  •  

புல்டோசர் இடிப்புகள் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்ன சொல்கிறது? (கட்டுரை – 7)

தமிழில் : நந்தினி கடந்த நவம்பர் மாதம், சட்டத்திற்குப் புறம்பாக நடைபெறும் புல்டோசர் இடிப்புகள் தொடர்பாக, பரவலான வரவேற்பைப் பெற்ற ஒரு தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கியது. இருப்பினும், அதன் நோக்கத்திலும் செயலாக்கத்திலும் அத்தீர்ப்பு குறைபாடுகளைக் கொண்டிருப்பதாகவே தோன்றியது. இக்கட்டுரையில், இத்தீர்ப்பையும், புல்டோசர் இடிப்புகள் தொடர்பாக அது முன்வைத்த கருத்துகளையும், சமூகத்தில் அது ஏற்படுத்திய மற்றும் ஏற்படுத்தத் தவறிய பாதிப்புகளையும் விரிவாக ஆராய்வோம். இந்திய நீதித்துறையில் அடிப்படைத் தூண்களாகக் கருதப்படும் சட்டத்தின் ஆட்சி , அதிகாரப் […]

Source

  •  

வாடகை வீட்டையும் விட்டுவைக்காத புல்டோசர் இடிப்பாளர்கள் (கட்டுரை – 6)

தமிழில்: காளிமுத்து 2022 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி, ‘கலவரக்காரர்களை’ குறிவைப்பதாகக் கூறிக்கொண்டு, கட்டகேரி பகுதியில் உள்ள இரண்டு வீடுகளை இடிக்க புல்டோசர்களை அனுப்பியது சஹாரன்பூர் மேம்பாட்டு ஆணையம் (SDA). அதற்கு முந்தைய இரவு, வடக்கு உத்தரப் பிரதேசப் பகுதிகளில் கலவரத்தைத் தூண்டியதாகவும், அதை வழிநடத்திச் சென்றதாகவும் பொய்யாகக் குற்றஞ்சாட்டி, பிடி ஆணை கூட இல்லாமல் சட்டவிரோதமாக 17 வயதே ஆன முஸம்மில் சௌத்ரி என்னும் சிறுவன் கைது செய்யப்பட்டான். அச்சிறுவனைக் காவலில் வைத்திருந்தபோது, […]

Source

  •  

குடும்பத்தினர் வீட்டினுள் இருக்கையிலேயே முகமது பிலாலின் வீடு இடிக்கப்பட்டது (கட்டுரை – 5)

தமிழில்: சேதுசிவன் வெறுமனே ஒரு கட்டிடமாக இருந்த இதனை, எங்களுக்குப் பாதுகாப்பு உணர்வைத் தரும் சொந்த வீடாக மாற்றுவதிலேயே எங்கள் முழு வாழ்க்கையும் கழிந்து விட்டது – முகமது பிலால் வடமேற்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள சஹாரன்பூர் என்ற நகரம், மரத்தினால் செய்யப்படும் கைவினைப் பொருட்களுக்குப் பெயர்பெற்ற ஊராகும். அங்குள்ள கட்டகேரி பகுதியின் மிகச்சிறிய தெருக்களில் மரப்பொருட்கள் செய்யும் மரப்பட்டறைகள் வரிசையாக அமைந்திருக்கும். மரம் இழைக்கும் சத்தமும், உளியின் ஓசையும், மரங்களை அறுக்கும் ஒலியும் காற்றில் எங்கும் நிறைந்திருக்கும். […]

Source

  •  

RSS இயக்கத்தின் தந்தை கோல்வால்கர் தரும் சான்று

இந்த மருமக்கள்தாயம் என்ற சம்மந்தம் முறையினை உருவாக்கியது நம்பூதிரி பிராமணர்களே ஆவர்! நம்பூதிரி பிராமணர்கள் திருவிதாங்கூர் மன்னர்களிடம் தாங்கள் கொண்ட  நெருக்கத்தை பயன்படுத்தி, தங்களின் அரசியல் ஆதாயத்துக்காக இந்த கொடிய வழக்கத்தை நடைமுறைப்படுத்தினர். அதை...

The post RSS இயக்கத்தின் தந்தை கோல்வால்கர் தரும் சான்று first appeared on Her Stories.

  •  

பேரரணும் – தேவையில்லாத ஆணியும் – களப்பிரன்

150கோடிக்கு ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் ஒன்று தலைநகர் டெல்லியில் உருவாகியிருக்கிற இந்தச் சூழலில், ஆர்.எஸ்.எஸ். தலைமையகமான நாக்பூர் அலுவலகம் சென்று வந்த கதையை இந்த நேரத்தில் சொல்வது பொருத்தமாக இருக்கும். 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டிற்காக சங்கத்தின் தோழர்களோடு நாக்பூர் சென்றிருந்தோம். நாக்பூர் என்று முடிவானதுமே  எப்படியாகினும் ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்திற்கு சென்றுவிட வேண்டும் என்கிற எண்ணம் என் மனதில் இருந்தது. மாநாட்டிற்கு வந்திருந்த மற்ற தோழர்களிடம் இதை […]

Source

  •