Reading view

நூற்றாண்டு காணும் கவிஞர் தமிழ்ஒளி அவர்களைப் போற்றும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பு

தமுஎகச வரவேற்பு 19.09.2023 “தனிமுறையில் நான் உனக்குப் புதிய சொத்து” என்று தமிழ்ச்சமூகத்திற்கு தன்னை ஒப்பளித்த கவிஞர் தமிழ்ஒளி 1924 செப்டம்பர் 21 அன்று பிறந்தவர். நாளை மறுதினம் அவரது நூற்றாண்டு தொடங்குகிறது. பாரதி, பாரதிதாசன், பெரியார், ஜீவா ஆகியோரின் கருத்தியல்களால் ஈர்க்கப்பட்டு கலை இலக்கியத்தளத்திலும் அரசியலிலும் தீவிரமாக பங்காற்றியவர் கவிஞர் தமிழ் ஒளி. விடுதலைக்கு முந்தைய காலனிய இந்தியாவிலும்
  •  

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையைத் திரிக்கும் மோசடி

தமுஎகச கண்டனம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2023 செப்டம்பர் 2 அன்று சென்னையில் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையைத் திரித்து அவர் மீது அவதூறு பரப்புவோருக்கு தமுஎகச தனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.  உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை உள்ளிட்டு மாநாட்டின் நிகழ்வுகள் அனைத்தும் காணொலியாக சமூக ஊடகங்களில் காணக்கிடைக்கிறது. அவற்றை காணும்
  •  

தமிழ்நாட்டில் பயிற்றுவிக்க இந்தியும் சமஸ்கிருதமும் படித்தவர் எதற்கு?

- தமுஎகச கண்டனம் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம்,  பகுதிநேர கெளரவ விரிவுரையாளர் பணிக்கு ஆளெடுப்பது தொடர்பான  விளம்பரம் ஒன்றை இன்று நாளேடுகளில் வெளியிட்டுள்ளது. இந்தப் பணியில் சேர்வதற்கான கல்வித்தகுதி பற்றிய குறிப்பில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிப்பாடங்களில் முதுநிலை அல்லது எம்.பில்., பட்டம் பெற்றிக்கவேண்டும் எனக்
  •  

கவிஞர் விடுதலை சிகப்பி மீது பொய்வழக்கு: கருத்துரிமைக்கு அச்சுறுத்தல்

தமுஎகச கண்டனம் மலக்குழியில் இறக்கிவிடப்பட்டு அன்றாடம் செத்தொழிவதற்கென்றே ஒருசில சாதிகளை கடவுள்கள்தான் படைத்தனரென சொல்லப்பட்டால், அந்தக் கடவுளர்கள் ஒருநாள் இறங்கி, அந்த வாழ்வு எவ்வளவு கொடியது என்பதை நேரடியாய் உணரட்டும் என்கிற மெய்யாவேசத்துடன் எழுதப்பட்டதுதான் விடுதலை சிகப்பியின் கவிதை. ஆனால் இக்கவிதை கடவுள்களை அவமதித்துவிட்டதாகவும் தங்களது மனதை புண்படுத்திவிட்டதாகவும் திரித்து பாரத் இந்து முன்னணி
  •  

இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை 'சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம்' மட்டுமே!

2023 ஏப்ரல் 2 அன்று சென்னையில் நடைபெற்ற ”திருப்பாவையில் நவீன மேலாண்மைப் பாடம்” உள்ளிட்ட மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவில் பேசிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் நீதிபதி திரு.ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்த சில கருத்துகள் அவர் வகிக்கும் பதவியின் மாண்புக்கு ஏற்புடையதல்ல என்ற தமுஎகச கருதுகிறது. “இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது இருந்த Demographic Profile மாறாமல் இருக்கும் வரைதான்,
  •  

காவிரி டெல்டாவில் நிலக்கரிச் சுரங்கம் அமைக்க தமுஎகச எதிர்ப்பு

நாடு முழுவதும் 101 நிலக்கரிச் சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான அறிவிப்பை இந்திய ஒன்றிய அரசின் நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், தமிழ்நாட்டின் உணவு உற்பத்தி மண்டலம் என்கிற தனிச்சிறப்பு வாய்ந்த காவிரி டெல்டா மாவட்டங்களில் மூன்று சுரங்கங்களைத் தோண்டப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வரலாற்றிலும் கலை இலக்கியத்திலும் பண்பாட்டிலும் தொல்காலந்தொட்டு செழித்துப் பரவியுள்ள
  •