Reading view

இந்தியாவிலும் பாலஸ்தீனத்திலும் அரசே முன்நின்று நடத்தும் புல்டோசர் இடிப்புகள்

அரசின் அனுமதியுடன் வீடுகளை இடிப்பது என்பது ஒரு தனித்துவமான, கொடூரமான வழிமுறையாகும். இது இஸ்ரேல் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் மக்களைக் கட்டுக்குள் வைப்பதற்கும் தண்டிப்பதற்குமான ஒரு முறையாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த இரு வெவ்வேறு புவியியல் பகுதிகளில், குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட சமூகங்கள் இதன் மூலம் குறிவைக்கப்படுகிறார்கள். வரலாற்று ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இந்த நாடுகள் மிகவும் வேறுபட்ட சூழல்களில் செயல்பட்டாலும், இரண்டுமே இத்தகைய இடிப்பு நடவடிக்கைகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன. ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவைச் […]

Source

  •  

தௌஹீது பாத்திமாவும், இல்லாதுபோன அவரது புத்தம்புது இல்லமும் (கட்டுரை – 9)

தௌகீது ஃபாத்திமா அன்று காலை எப்படித் தயாரானார் என்று அவருக்கு நினைவில்லை. புதிதாகக் கட்டப்பட்ட அவரது வீட்டின் கட்டுமானத் தளத்திற்கு எப்படி விரைந்தார் போன்ற விவரங்கள் அவருக்கு நினைவில்லை. இன்னும் சில தினங்களில் அவர் குடிபுகவிருந்த வீடு அது. அவரது தந்தை தனது செல்ல மகளுக்காக அளவிலாத அன்புடன் தனது வாழ்நாள் சம்பாத்தியத்தை முழுவதும் கொடுத்து எழுப்பிய வீடு அது. அன்றைய தினம் தௌகீது ஃபாத்திமா பேசிய வார்த்தைகளோ, அவரிடமிருந்து பீறிட்ட கூக்குரலோ எதுவும் இப்போது அவருக்கு […]

Source

  •  

பொய்யாக உருவாக்கப்பட்ட கதைகளால் சஃப்தார் அலியின் வீடு பலியானது எப்படி? (கட்டுரை – 8)

தமிழில்: மணிபிரகாஷ் (தொடரின் அனைத்து கட்டுரைகளையும் வாசிக்க) சஃப்தார் அலிக்கு வயது 78. 1970-களில் கட்டப்பட்ட அவரது வீடு, அவரின் இரண்டு மகன்களான சையத் கமர் அப்பாஸ் மற்றும் சையத் ஃபராஸ் அப்பாஸ் ஆகியோருக்குச் சொந்தமானது. தங்கள் விவசாய நிலம் ஒன்றை விற்று வந்த பணத்தை வைத்து, 2002-இல் அந்த வீட்டை வாங்கினர். அப்போதிலிருந்து சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, எந்தவொரு சட்டவிரோதக் கட்டுமானம் குறித்தும் பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையத்திடமிருந்து (PDA) எந்த ஒரு அறிவிப்பையும் அவர்கள் […]

Source

  •  

புல்டோசர் இடிப்புகள் – புதிய முயற்சி, புதிய தொடர்

செல்வந்தர்களுக்கு நகரங்களைத் தாரைவார்ப்பதற்காக ஆண்டாண்டு காலமாக அங்கே வாழ்ந்துவரும் ஏழை எளிய மக்களின் குடிசைகளை இடித்துத் தள்ளுவதென்பது உலகெங்கிலுமுள்ள ஆட்சியாளர்கள் தொடர்ந்து கடைபிடித்துவரும் ஒரு நடைமுறையாகும். மக்களின் வீடுகளை இடித்துத் தள்ளும் கொடூரத்தின் அடுத்த கட்டமாக மற்றொரு தளத்திற்கு பாசிச பாஜக அரசு நகர்ந்து சென்றிருக்கிறது.  சிறுபான்மையின மக்களின் இருப்பையே கேள்விக்குறியாக்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களை எப்போதும் அச்சுறுத்தலிலேயே வைத்திருக்க விரும்பும் இந்துத்துவ ஆட்சியாளர்கள், அம்மக்களின் சிறுபான்மை மத அடையாளத்திற்காகவே அவர்களது வீடுகளை இடித்துத் தள்ளி வருகின்றனர். மதங்களையும், […]

Source

  •