Reading view

கவிதை: சருகு போலும்… – Dr.ஜலீலா முஸம்மில்

சருகு போலும்… ******************** இராட்சத மலையாய் அது பருத்து இருந்தது மெய் பிதுங்க அழுத்தி அழ வைத்தது காற்றழுத்த மண்டலத்தில் கட்டிப்போட்டு வைத்தது எட்டுத்திக்கும் இடிந்து விழுவதாய் எங்கும் அசரீரி முழங்க மலங்க மலங்க விழிக்க வைத்தது நாளொரு மாமேனியும் பொழுதொரு…

The post கவிதை: சருகு போலும்… – Dr.ஜலீலா முஸம்மில் appeared first on Book Day.

  •  

கவிதை உலா 13 –  நா.வே.அருள்

கவிதை உலா 13 –  நா.வே.அருள் கவிஞர்கள் : அமுதபாரதி, யுகயுகன், ரிஸ்கா முக்தார், கௌ.ஆனந்தபிரபு மனித மனம் ****************** தனது மனத்தை விஸ்தரித்துக் கொள்ளக் கவிதையைவிடச் சிறந்த சாதனம் வேறொன்று உள்ளதா, தெரியவில்லை. கவிதையால்தான் நம் மனதை நாமே தோண்ட…

The post கவிதை உலா 13 –  நா.வே.அருள் appeared first on Book Day.

  •  

கந்தரோடைத் தொல்லியல் (Archaeology of Kantarodai) – பகுதி 1

“அவர்களின் இந்த (யாழ்ப்பாண) மண்ணிற்கு உள்ளே, அவர்கள் கனவிலும் கண்டிருக்க முடியாத உள்ளத்தை உவகையாக்கும் மதிப்புமிக்க தொல்வரலாற்றுச் சான்றுகள் புதைந்து கிடக்கின்றன என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.”

Paul E. Pieris
Ceylon Daily News
22-02-1919.

“பண்டைய கிரேக்கர்களும், உரோமர்களும் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்த தொலமியால் கௌரூலா என்றும், பெரிப்பிளஸ்ஸின் ஆசிரியரால் கமாரா எனவும் குறிப்பிடப்படும் நகரம் கந்தரோடை என்பதில் எனக்கு எதுவிதமான ஐயப்பாடும் கிடையாது.”

C. Rasanayagam
1926.

“(கந்தரோடை அகழ்வுகளில்) ஒரு ஸ்தூபியின் கீழே அகழாய்வு செய்யப்பட்டபோது அங்கே புதைக்கப்பட்ட ஓர் ஈமக் கிண்ணத்தில் அழுகிய எலும்பு காணப்பட்டது…அந்த ஸ்தூபியின் கீழே அழுகிய நிலையில் மற்றுமொரு எலும்புத் துண்டும் காணப்பட்டது.”

C.E. Godakumbura
7th November 1967.
1968: p. 72.

“கந்தரோடையில் குடியேற்றம் பெற்ற மக்கள் தென்னிந்திய மக்களின் கலாசார சமுதாயச் சூழலின் வழித்தோன்றல்களாகவோ அல்லது அவர்களோடு நெருக்கமான கலாசார உறவைக் கொண்டவர்களாகவோ இருந்திருக்க வேண்டும்.”

Vimala Begley
1973.

அறிமுகம் 

யாழ்ப்பாணத்திலுள்ள 3.2 சதுரகிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட கந்தரோடைக் கிராமம் அனைத்துமே ஒரு தொல்லியல் மையம்தான். கந்தரோடைக் கிராமத்தை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம்: (1) மக்களின் வதிவிடப் பகுதி, (2) தென்மேற்காக அமைந்த பனந்தோப்பு. இந்தக் கிராமத்தின் மிகப்பழமையான நகரம் அதன் நடுவே இரண்டு மீட்டர் உயரத்தில் 25 ஹெக்டயர் (62 ஏக்கர்) பரப்பளவில் அமைந்த மேட்டு நிலமாகும். அதன் பள்ளமான பரப்பு நெல்வளரும் செழிப்பான விளைச்சல் நிலம். அந்த விளைநிலத்தினருகே 40 ஏக்கர் பரப்பளவிலான கந்தரோடைக் குளம் காணப்படுகிறது. அக்கிராமத்தினூடாகச் செல்லும் வழுக்கை ஆறு எனப்படும் கடற்கால்வாய் தென்மேற்காக வளைந்து, மேற்கே கல்லுண்டாய் வழியாக நாவாந்துறைக்கருகே யாழ்ப்பாணக் கடலேரியில் சங்கமமாகிறது.

கந்தரோடையின் வரலாற்று முக்கியத்துவம் இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகளில்தான் மக்களின் கவனத்தை ஈர்த்தது. ஆனால், இது இத்தனை பழமையான நடுவம் என்பதை எவருமே எண்ணிப்பார்த்திருக்க மாட்டார்கள். 1916 ஆம் ஆண்டில் வட இலங்கையில் தொல்லியல் மேலாய்வுகளை மேற்கொண்ட வடமாகாண அரசாங்க அதிபராகவிருந்த ஜே.பி. லூயிஸ், யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் கந்தரோடை, வல்லிபுரம் ஆகிய இடங்களிலிருந்த புராதனக் கட்டட அழிபாடுகளைக்கொண்டு இந்த இரு இடங்களும் வரலாற்றுக்காலத்திற்கு முற்பட்ட குடியேற்ற மையங்களாக இருந்திருக்க வேண்டும் என அறிவித்திருந்தார். 1917-1919 ஆண்டுகளில் ஸேர். போல் எட்வார்ட் பீரிஸ் இங்கே அகழாய்வுகளை மேற்கொண்டு “கந்தரோடை ஒரு சிறிய அளவினதான அநுராதபுரம்” என அறிவித்தார் (Pieris, P. E. 1919).

“அழிந்து கிடக்கும் கட்டடங்களின் அடையாளங்களாலும், கண்டெடுக்கப்பட்ட கற்சிலைகள், கற்றூண்களினாலும், பரவிக்கிடக்கும் ஓடுகளின் துண்டுகளினாலும், கதிரமலை (கந்தரோடை) எனப்படும் இப்பழைய நகரம் மிகவும் விசாலமானதும், அழகிய வீதிகளையும், மாடமாளிகைகள், கூட கோபுரங்களுமுடையதுமாய், கண்ணைக் கவரும் வனப்பு வாய்ந்ததுமாய் இருந்திருக்க வேண்டும் என ஊகிக்கலாம்” என வரலாற்றாசிரியர் முதலியார் இராசநாயகம் கந்தரோடை நகரத்தை வருணித்தார் (இராசநாயகம், செ. 1933: 14-15). அக்கால வரலாற்றாசிரியர்களான முதலியார் இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் இருவரும் பண்டைய யாழ்ப்பாணத்தின் தலைநகராகக் கந்தரோடையை இனம் கண்டார்கள்.

தொல்லியலாய்வுகள்

கடந்த ஒரு நூற்றாண்டிற்கும் மேலாகக் கீழ்க்காணும் ஆய்வாளர்கள் கந்தரோடையில் தொல்லியல் மேலாய்வுகளையும், தொல்லியல் அகழாய்வுகளையும் இலங்கை அரசின் தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியுடன் மேற்கொண்டிருக்கிறார்கள். இவற்றில் சில ஆய்வுகளின் அறிக்கைகள் இதுவரை வெளிவரவில்லை. ஆய்வுகளில் கண்டெடுத்த தொல்பொருட்களில் பெரும்பாலானவை அநுராதபுர, மற்றும் கொழும்பு அருங்காட்சியகங்களுக்கும், யாழ்ப்பாண அருங்காட்சியகத்திற்கும், சில தனியாரிடமும் சென்றடைந்திருக்கின்றன.

கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக கந்தரோடையில் தொல்லியல் மேலாய்வுகளையும், அகழாய்வுகளையும் மேற்கொண்டவர்கள்:

போல் பீரிஸ்: 1917, 1919.

கொடகும்புர, C.E: 1966-1967 – அறிக்கை 1968.

விமலா பெக்லி: பெப்ரவரி-மார்ச் 1967.

விமலா பெக்ளி, பென்னெற் புரொன்ஸன்: ஜூன்-ஆகஸ்ட் 1970.

இலங்கைத் தொல்லியல் திணைக்களம்: 1971.

இந்திரபாலா, சிற்றம்பலம், இரகுபதி: 1983.  

பொன்னம்பலம் இரகுபதி: 1987.

கிருக்ஷ்ணராஜா: 1994-1995.

புக்ஷ்பரட்ணம், நிமால் பெரேரா: 2011.

பார்பரா ஹெல்விங், நிமால் பெரேரா:  2018-19.

கந்தரோடைத் தொல்லியல் மேலாய்வுகள்

1917-1919 ஆம் ஆண்டுகளில் கந்தரோடையில் போல் பீரிஸ் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வுகளின் பின்னர் அரைநூற்றாண்டுகளாகக் கந்தரோடைத் தொல்லியல் மையம் கவனிப்பாரற்றுக் கிடந்தது. 1956 முதல் 1967ஆம் ஆண்டுவரை இலங்கைத் தொல்லியல் திணைக்களத்தின் ஆணையாளராக (Commissioner of Archaeology) பணியாற்றிய சாள்ஸ் எட்மண்ட் கொடகும்புர (Charles Edmund Godakumbura) தனது பதவிக்காலத்தின் இறுதிப்பகுதியில் கந்தரோடையில் கவனம் செலுத்தினார். 1917-1919 ஆம் ஆண்டுகளில் கந்தரோடையில் தொல்லியலாய்வுகளை மேற்கொண்ட போல் பீரிஸ் முக்கியமாக மேலாய்வுகளையும், சில கிடைமட்ட அகழ்வுகளையுமே (Horizontal excavations) செய்திருந்ததை அறிந்திருந்தார். இவ்விடங்களில் முறையான அடுக்கமைவு அகழ்வுகள் செய்ய வேண்டிய தேவையை உணர்ந்தார். இலங்கை அரசின் அனுமதியோடு, தமிழ்நாட்டில் அரிக்கமேட்டில் தொல்லியலாய்வை மேற்கொண்டிருந்த அமெரிக்க பென்ஸில்வேனியப் பல்கலைக்கழக அரும்பொருட்காட்சியகத்தின் தொல்லியலாளர்களை இலங்கை வந்து பொம்பரிப்பிலும், கந்தரோடையிலும் தொல்லியல் அகழாய்வை நிகழ்த்தித்தருமாறு அழைத்திருந்தார். அத்துடன் 1966 ஆம் ஆண்டில் கந்தரோடையில் தொல்லியல் திணைக்கள அகழாய்வுகளையும் தானே ஆரம்பித்திருந்தார்.

இலங்கைத் தொல்லியல் திணைக்கள ஆணையாளரான கொடகும்புரவின் அழைப்பை ஏற்றுக்கொண்ட அமெரிக்கப் பென்ஸில்வேனியப் பல்கலைக்கழகத்தினர் முதலில் 1967 ஆம் ஆண்டில் கந்தரோடையில் ஒரு தொல்லியல் மேலாய்வை மேற்கொள்ளுவதாகவும், அது ஆக்கவளமுடையதாக (Productive) இருப்பின் பின்னால் விரிவான அகழ்வை மேற்கொள்ளவும் முடிவடுத்தனர்.

1967 ஆம் ஆண்டு பெப்ரவரி-மார்ச் மாதங்களில் பென்ஸில்வேனியப் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தின் தலைவராக இருந்த தொல்லியலாய்வாளர் விமலா பெக்லி கந்தரோடை வந்து தொல்லியல் மேலாய்வுகளை மேற்கொண்டார்.

இலங்கையில் அதுவரை காலமும் (1967 வரை) மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளில் தொல்பொருட்களின் சரியான காலக்கணிப்புகளோ, அல்லது அவற்றின் பண்பாட்டு வளர்ச்சி அடுக்குகளோ (Culture sequences) வரையறுக்கப்படவில்லை. அதன் காரணமாக அதுவரை ஆய்வு செய்யப்பட்ட பிராந்தியங்களின் காலக்கிரமமான வரலாற்று வளர்ச்சியை அதுவரை மேற்கொண்ட தொல்லியல் ஆய்வுகள் மூலம் கண்டறிவது இயலாத காரியமாக இருந்தது.

கந்தரோடைக் கிராமம் தெளிவாகப் பிரிக்கக்கூடிய இரு பகுதிகளைக் கொண்டிருந்தது: ஒன்று மக்களின் வதிவிடக் கிராமம், மற்றது அதற்குத் தெற்கேயுள்ள பனந்தோப்பு. அந்தப் பனந்தோப்பில் இருந்த மண்மேடுகள் பௌத்த தாதுகோபங்கள் இருந்த இடங்களாக இருக்கலாம் என போல் பீரிஸ் கருதினார் (Pieris, P.E. 1917: 11-30: 1919: 40-67). பீரிஸ் மேற்கொண்ட சிறிய அளவிலான அகழ்வுகளில் பளபளப்பாக மெருகிட்ட ஓடுகள், சுண்ணாம்புக் கற்கள் என்பன காணப்பட்டன. அக்கிராம மாணவர்களிடமிருந்து முத்திரை குத்திய மற்றும் ரோமாபுரி நாணயங்களையும் பெற்றுக்கொண்டதாகப் பதிவு செய்திருந்தார் (Begley, V. 1967: 23).

விமலா பெக்லி கந்தரோடையில் மேலாய்வுகளை மேற்கொண்ட மாதங்களில் இலங்கைத் தொல்லியல் திணைக்கள ஆய்வாளர்கள் தெற்கேயிருந்த பனந்தோப்புப் பகுதியில் அகழ்வுகளை மேற்கொண்டிருந்தார்கள். அது பற்றிக் குறிப்பிட்ட விமலா பெக்லி “அந்த அகழ்வுகள் சிறிய அளவிலான தாதுகோபங்களின் அடித்தளங்களையும், அக்கட்டடங்களின் துண்டுப்பகுதிகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருந்தன.” (This excavation has so far brought to light the bases and architectural fragments of several small dagobas) எனப் பதிவு செய்திருந்தார் (Vimala Begley, V. 1967:p. 23).

“எங்களது அப்பிராந்திய மேலாய்வுகளில் மக்களின் வதிவிடம் தாதுகோப மையத்திலிருந்து வடக்கே சில பர்லாங்கு தூரத்தில் கந்தரோடைக் கிராமத்தில் காணப்பட்டது. கிராமத்தின் கரையில் வெட்டப்பட்ட ஒரு கிடங்கில், அக்கிராம ஒழுங்கைகளை அமைத்தபொழுதில் பெற்றுக்கொண்ட பெருந்தொகையிலான மட்பாண்ட ஓடுகளைக் குப்பையாகப் போட்டிருந்தார்கள். இம்மட்பாண்ட ஓடுகள் இரும்புக்கால, ஆரம்ப வரலாற்றுக்கால தென்னிந்திய மட்பாண்டங்களை ஒத்திருந்தன – அவையாவன பெருங்கற்கால கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களும், அரிக்மேட்டு வகை ரௌலெற்றெட் மட்பாண்டங்களுமாகும்.” (Vimala Begley, V. 1967: 24).

“அவ்விடத்தில் ஒரு சிறு குழியைத் தோண்டி ஆராய்ந்தபொழுது அக்குழி 12 அடி அழம்வரை வெவ்வேறு காலப்பகுதிகளுக்குரிய  மக்களின் வதிவிடக் கழிபொருட்களைக் காட்டியது. அக்குழியின் அடிமட்டக் கன்னிநிலம் வரை அகழ முடியவில்லை. அக்குழியின் மேல்  மட்டங்களிலேயே கி.பி. முதலாம், இரண்டாம் நூற்றாண்டுகளுக்குரிய தொல்பொருட்களைக் காணமுடிந்தது. இவைதவிர இரும்புத் தாது, ‘கோறல்’ கற்கள், லக்க்ஷ்மி பதக்கவில்லைகள் (Lakshmi plaques) என்பன அக்குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்டன.” (Vimala Begley, V. 1967: 24).

“கந்தரோடைக் கிராமத்திற்கு அப்பாலும் சில மேலாய்வுகளை மேற்கொண்டிருந்தோம். மேற்கே கந்தரோடைக் கிராமத்திலிருந்து கடல்வரை செல்லும் கால்வாய்க்குப் பக்கத்தில் அம்மன் கோயிலுக்குச் சமீபமாகப் பல மண்குன்றுகள் காணப்பட்டன. இன்னும் சற்றுத்தள்ளி பழைய கட்டடங்களின் இடிபாடுகள் காணப்பட்டன.” (Begley, V. 1967). இந்த மேலாய்வின் அறிக்கை பென்ஸில்வேனியப் பல்கலைக்கழக 1967 ஆம் ஆண்டின் கோடைகால அறிவிப்பு வெளியீடாக வெளிவந்தது.

தொல்லியல் ஆய்வுகளை அடிப்படையாகக்கொண்ட கந்தரோடை வரலாற்றியல்

1970 ஆம் ஆண்டு ஜீன்-ஆகஸ்ட் மாதங்களில் அமெரிக்கப் பென்ஸில்வேனியப் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தின் தொல்லியலாளர்கள் கந்தரோடையில் மேற்கொண்ட அகழாய்வுகளின் கண்டுபிடிப்புகளும், அக்குழுவிற்குத் தலைமை தாங்கிய விமலா பெக்லி 1967 ஆம் ஆண்டு பெப்ரவரி-மார்ச் மாதங்களில் கந்தரோடையில் மேற்கொண்ட மேலாய்வுகளும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினர் 1980-1981 டிசம்பர்-பெப்ரவரி மாதங்களில் கந்தரோடைக்கு அருகாமையிலுள்ள ஆனைக்கோட்டையில், பேராசிரியர் இந்திரபாலாவின் தலைமையில் மேற்கொண்ட அகழாய்வுகளின் கண்டுபிடிப்புகளுமே கந்தரோடை வரலாற்றியலின் (Historiography – வரலாற்று மெய்மை) கருப்பொருளாக அமைகின்றன. இந்த ஆனைக்கோட்டை அகழாய்வு அடுத்து வரும் இயலில் விரிவாகப் பேசப்படும்.

மேலே கூறப்பட்ட ஆய்வுகளோடு 1917-1919 ஆண்டுகளில் போல் பீரிஸ் கண்டெடுத்த தொல்பொருட்களும், 1967 ஆம் ஆண்டில் இலங்கைத் தொல்லியல் திணைக்கள ஆணையாளராகவிருந்த கொடகும்புர அவர்களது அகழாய்வின் கண்டுபிடிப்புகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. 1980களில் கலாநிதி இரகுபதியின் தொல்லியல் மேலாய்வுகளும், 1994-1995 ஆண்டுகளில் யாழப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த செல்லையா கிருக்ஷ்ணராசா கந்தரோடையில் உச்சாப்பனை என்ற இடத்தில் இலங்கைத் தொல்லியல் திணக்களத்தினரின் அனுமதியோடு மேற்கொண்ட அகழாய்வுகளும், 2011 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பரமு புக்ஷ்பரட்ணம் இலங்கைத் தொல்லியல் திணைக்கள உதவி ஆணையாளராகவிருந்த நிமால் பெரேராவுடன் இணைந்து மேற்கொண்ட கந்தரோடை அகழாய்வின் கண்டுபிடிப்புகளும், 2018 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய சிட்னிப் பல்கலைக்கழகத் தொல்லியல் பேராசிரியர் பார்பரா ஹெல்விங் கந்தரோடையில் மேற்கொண்ட அகழாய்வின் தொல்பொருட்களும், 2018 ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் டொறியன் புல்லர் மேற்கொண்ட கந்தரோடைத் தொல்தானியங்களின் கதிரியக்கக் கரிம ஆய்வுகளும் இங்கே கூறப்படுகிறது. இக்கண்டுபிடிப்புகள் அனைத்தும் கந்தரோடை வரலாற்றியலின் உருவாக்கத்திற்கு உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றன.

கந்தரோடையின் சமீபகால அகழாய்வுகளில் கதிரியக்கக் கரிமக் காலக்கணிப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் அதன் பெறுபேறுகள் இலங்கை அரசின் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளால் அறிக்கைகளில் வெளியிடப்படுவதில்லை. அவர்களில் ஒரு சிலர்தான் விதிவிலக்கானவர்கள். கந்தரோடையில் முதன்முதலாக விஞ்ஞான-அறிவியல் ரீதியிலான அகழாய்வை மேற்கொண்ட அமெரிக்கப் பென்ஸில்வேனியப் பல்கலைக்கழகத்தின் தொல்லியளாளர்களை இலங்கைக்கு வரவழைத்ததில் கலாநிதி கொடகும்புர, கலாநிதி சத்தமங்கல கருணரத்தின இருவரினதும் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

காலப்பகுதி I: ஆதி இரும்புக்காலம் – கி.மு. 1350-600.

வரலாற்றிற்கும் முற்பட்டகாலப் பெருங்கற் பண்பாட்டுப் பரவல்

அமெரிக்காவின் பென்ஸில்வேனியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விமலா பெக்லியின் தலைமையிலான குழுவினர் 1970 ஆம் ஆண்டில் ஜூன்-ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் கந்தரோடையில் மேற்கொண்ட அறிவியல்பூர்வமான அகழாய்வே வெளிநாட்டவர்களின் முயற்சியால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது அகழாய்வாகும். இந்த அகழ்வில் கண்ட முக்கியமான தொல்பொருட்கள் அமெரிக்காவிற்கு கதிரியக்கக் கரிமக் காலக்கணிப்பிற்கு (Radiocarbon C-14 Dating) அனுப்பிவைக்கப்பட்டன. விமலா பெக்லியின் விவரமான 1970 ஆம் ஆண்டின் கந்தரோடை அகழாய்வு அறிக்கை அன்றைய அரசினால் தடைசெய்யப்பட்டது. அது இன்றுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் விமலா பெக்லி, 1970 இல் கந்தரோடை அகழாய்வில் கண்டெடுத்த முக்கியமான சில தொல்பொருட்களைப் பற்றி அமெரிக்க கோர்ணல் பல்கலைக்கழகம் 1973 இல் வெளியிட்ட ஒரு நூலில் கூறியிருந்தார் (Begley, V. 1973). 

ஆரம்பகாலக் குடியிருப்புகள்: கி.மு. 1350  

தென்னாசியாவில் ‘ஹோமோ செப்பியன்ஸ்’ (Homo sapiens) எனப்படும் நவீன மனிதர்களின் சமூகங்கள் வாழ்ந்து வரும் பிரதேசங்களுள் யாழ்ப்பாணத் தீபகற்பமும் ஒன்றாகும். இப்பிரதேசத்தில் இம்மனிதக் குடியிருப்புகளின் சரியான ஆரம்பகாலத்தை அறிய முடியாது போனாலும், இற்றைக்கு 3350 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கே நவீன மனிதர்களின் குடியிருப்புகள் இருந்தன என்பதை தொல்லியலாய்வுகளில் கண்டெடுத்த அம்மனிதர்களின் பாவனைப்பொருட்களின் தேதிக்கணிப்புகளைக் கொண்டு கண்டறிய முடிகிறது. இவற்றுள் ஆரம்பப் பெருங்கற்கால கறுப்பு-சிவப்பு நிற மட்பாண்ட ஓடுகள் உபயோகத்திலிருந்த காலப்பகுதியை இப்பிராந்தியத்தில் மக்களின் குடியேற்றங்கள் ஆரம்பித்த காலமாகக் கொள்ளலாம். இதை அறிந்து கொள்வதற்கு இம்மட்பாண்டங்களின் காலக்கணிப்பு அவசியமாகிறது. 

1970 ஆம் ஆண்டு ஜீன்-ஜீலை மாதங்களில் கந்தரோடையில் அறிவியல்பூர்வமான அகழாய்வை மேற்கொண்ட அமெரிக்கப் பென்ஸில்வேனியப் பல்கலைக்கழகத் தொல்லியலாளர்கள், அங்கே கண்டெடுத்த தொல்பொருட்களை அமெரிக்காவின் கதிரியக்கக் கரிம ஆய்வுகூடத்திற்கு அனுப்பி வைத்தார்கள். அதன் பெறுபேறு பற்றி நீண்டகாலமாக இலங்கையின் தொல்லியல் திணைக்களத்தினர் எதுவிதமான அக்கறையும் காட்டவில்லை.

1977 ஆம் ஆண்டில் இலங்கைத் தொல்லியல் திணைக்களத்தின் ஆணையாளராக நியமிக்கப்பட்ட பிரபல தொல்லியராளரான சிரான் தெரனியகல, 1970 ஆம் ஆண்டில் கந்தரோடை அகழ்வுகளில் பங்கு பற்றிய பென்னெற் புரொன்ஸனைத் தொடர்புகொண்டு கந்தரோடையில் கண்டெடுத்த தொல்பொருட்களின் கதிரியக்கக் கரிமக் கணிப்புத் திகதிகளைப் பெற்றுக்கொண்டார். இந்த அறிவிப்பு 08-02-1982 திகதியிட்ட இலங்கைப் பத்திரிகை ‘Weekend’ இலும், பின்னர் இரகுபதியின் 1987 ஆம் ஆண்டின் யாழ்ப்பாணத் தொல்லியலாய்வு நூலிலும் வெளியானது.

இத்தொல்லியல் பொருட்களில் P-2515, P-2525 என அடையாளமிட்ட கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் முறையே கி.மு. 1290±60 ஆண்டையும், கி.மு. 980±220 ஆண்டையும் தந்திருக்கின்றன. இக்காலக்கணிப்பின்படி கி.மு. 1350 ஆண்டளவில் உபயோகப்படுத்தப்பட்ட மட்பாண்டங்கள், அக்காலத்தில் இங்கே பெருங்கற்கால மக்களின் குடியேற்றங்கள் இருந்திருப்பதை உறுதிப்படுத்துகின்றன (Ragupathy, P. 1987:205, Thiagarajah, S. 2016: 42)

இலங்கையில் பெருங்கற் பண்பாட்டின் நுழைவாயில் கந்தரோடை

கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்ட கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் அவ்விடத்தில் பரவியிருந்த பெருங்கற்பண்பாட்டின் முக்கியமானதொரு அங்கமாகும். முதன்முறையாக 1970 ஆம் ஆண்டில் விமலா பெக்லியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட கந்தரோடை அகழ்வாராய்ச்சியின்போது பெருங்கற்காலப் பண்பாட்டுச் சுவடுகள் பல இங்கே கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த இடத்தில் கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் பற்றியும், பெருங்கற் பண்பாட்டில் அவற்றின் சிறப்பிடம் பற்றியும் சில வரிகள் கூறுவது அவசியமாகிறது. முதன்முதலாக சிந்துவெளி நகரங்களில் கி.மு. 3000-2800 ஆண்டு காலங்களில் இனங்காணப்பட்ட இவ்வகையான மட்பாண்டங்கள் பின்னர் இந்தியத் துணைக்கண்டம் எங்கும் பரவி, பின்னர் கி.மு. 1800 ஆண்டளவில் கர்நாடகத்தில் பிரம்மகிரி, மஸ்கி ஆகிய மையங்களில் காணப்படும் பெருங்கற் புதையல்களில் காணப்படுகின்றன. தென்னாசியச் சூழமைவில் பெருங்கற் பண்பாடும், அதன் ஓர் அம்சமான கறுப்பு-சிவப்பு மட்பாண்டமும் திராவிட மக்களுக்குரிய தனித்துவமான பண்புகளாகும் (இது பற்றிப் பின்னொரு இயலில் விரிவாகப் பேசப்படும்).

பெருங்கற் பண்பாடானது முக்கியமாக இறந்த மக்களை அடக்கம் செய்யும் பெருங்கற்களைக்கொண்ட கல்லறைகளை உள்ளடக்கியது. இறந்தவர்களை அடக்கம் செய்த பின்னர் பெரிய கற்பாறைகளை கற்பலகைகளாக வெட்டியோ, அல்லாமலோ அடக்கத்தைச் சுற்றிவர நட்டு மேலாக மற்றொரு கற்பலகையால் மூடிவிடுவார்கள். இந்த அடிப்படை முறையிலிருந்து பலவகையான மாறுபாடுகள் காணப்படுகின்றன. தமிழகத்தின் தாழிப்புதையல்கள் இப்பண்பாட்டின் மற்றொரு அங்கமாகும். இம்மாதிரி பெருங்கற்களைக் கொண்ட சமாதிகளும், வழிபாட்டு நடுகற்களும் பண்டைய உலகின் பல பகுதிகளில் காணப்படுகின்றன. இந்தியத் துணைக்கண்டத்தைப் பொறுத்தவரையில் தென்னிந்தியாவில் வாழ்ந்த திராவிட மொழிகளைப் பேசும் மக்களே இந்த அடக்க முறைகளைக் கடைப்பிடித்தவராவர். 

பெருங்கற் பண்பாடு என்பது மேற்கூறப்பட்ட பெருங்கற்களைக்கொண்ட கல்லறைகள் அல்லது தாழிப் புதையல்களோடு இரும்பின் தொழில்நுட்பம், குளம் மற்றும் அணைக்கட்டு ஆகியவற்றின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் நீர்ப்பாசன விவசாயம், உழுவதற்கான ஏர், நெற் பயிர்ச்செய்கை, மட்பாண்டம் வனையும் சில், கறுப்பு-சிவப்பு மட்பாண்டம், அம்மட்பாண்டங்களில் காணப்படும் எழுத்துகள் ஆகிய பண்புகளை உள்ளடக்கியதாகும். 

செக்கோசிலாவாக்கிய நாடு தந்த சமஸ்கிருத, தமிழ் மொழிகளின் மொழியியல் விற்பன்னர், பேரறிஞர் கமில் ஸ்வெலபில்லின் கூற்று இது: 

“கறுப்பு-சிவப்பு மட்பாண்டம் திராவிடமொழி பேசும் மக்கள் காவிச்சென்ற பண்பாட்டு அடையாளம். அதன் அகில இந்திய பரவல், இவர்கள் ஒருகாலத்தில் இந்தியா முழுவதிலும் பரவி இருந்தார்கள் என்பதற்கான சான்று. கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களும், வேதகாலப் பண்பாட்டின், தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டங்களும் ஒன்றாகக் காணப்படும் கி.மு. 500 ஆம் ஆண்டுகாலப்பகுதி பெருவாரியான திராவிடமொழிச் சொற்கள் சமஸ்கிருத மொழியில் உட்புகுந்த காலமாகும்” (Kamil Zvelebil 1965: 65-69).

இலங்கையின் பெருநிலப்பரப்பில் காணப்படும் பெருங்கற் சமாதிகளினதும், தாழிப்புதையல்களினதும் அவற்றோடு காணப்படும் கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களினதும் காலக்கணிப்புகள் கி.மு. 1000 ஆண்டையும், அதற்குப் பிந்திய ஆண்டுகளையுமே தருகின்றன. இவற்றை நோக்குமிடத்து இப்பெருங்கற் பண்பாடும், அதனோடு சேர்ந்த கறுப்பு-சிவப்பு மட்பாண்ட உபயோகமும் கந்தரோடை வழியாகவே இலங்கைக்குப் பரவியிருக்கின்றன என எண்ணத் தோன்றுகிறது.

பெருங்கடல் வர்த்தக – பண்பாட்டுப் பரிமாறல்கள் 

யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் மூன்று கரையோரங்களிலும் அமைந்திருந்த இறங்குதுறைகள், துறைமுகங்களான யாழ்ப்பாணப்பட்டினம், யம்பு கோவளம், காயாத்துறை, கல்கோவளம் (பருத்தித்துறை) என்பன பல்வேறு நாடுகளுடன் வர்த்தக – பண்பாட்டுப் பாரம்பரியங்களைப் பரிமாறிக்கொள்ளும் வாயில்களாக விளங்கின. யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் கரையோரங்களில் உள்ள இறங்குதுறைகளினதும், துறைமுகங்களினதும் பெயர்களைக் கவனிக்கும்போது இந்த உண்மை நன்கு புலப்படும். 

அன்றைய யாழ்ப்பாணத் தீபகத்திற்கு மிக அருகிலிருந்த தமிழகத்துடனேயே ஆரம்பகாலக் கடல் தொடர்புகள் ஏற்பட்டிருந்தன. அதன் காரணமாக தமிழகத்தின் வரலாற்றுப்போக்கு யாழ்ப்பாணக் குடாநாட்டின் வரலாற்றுப் பண்புகளைப் பெருமளவுக்கு இயக்கியிருக்கிறது. கி.மு. 1350 ஆம் ஆண்டளவில் கந்தரோடையில் காணப்படும் கறுப்பு-சிவப்பு மட்பாண்ட உபயோகம், ஆனைக்கோட்டையில் கண்ட தாழிப்புதையல் (பின்னர் பேசப்படும்), விவசாயத்தின் வருகை ஆகிய பெருங்கற் பண்பாட்டு அம்சங்கள், அதற்குப் பல ஆயிரத்தாண்டுகள் முன்பிருந்தே தமிழகத்திற்கும், யாழ்ப்பாணத்திற்குமிடையே எற்பட்டிருந்த கடல்வழித் தொடர்புகளின் பெறுபேறுகளாகும். 

கந்தரோடையின் நிரந்தரக் குடியிருப்புகள்; குளத்து நீரைப் பாச்சி, ஏர் பிடித்து உழுது மேற்கொண்ட நெற்பயிர் விவசாயம்; செம்பு, வெண்கலம், இரும்பு ஆகிய உலோகங்களை உபயோகித்த தொழில்நுட்பம்; உருளும் சில்லை உபயோகித்து வனைந்தெடுத்த மட்பாண்டங்கள்; நீண்டதூர நெடுங்கடல் வர்த்தகம்; சமூக அமைப்பு; எழுத்துருவாக்கம்; ஆட்சிபுரியும் ஓர் அரச வர்க்கம் என்பன பெருங்கற் பண்பாட்டு வழியாகப் பெற்றுக்கொண்ட கந்தரோடை நாகரிகத்தின் பேரெழுச்சியாகும். இந்தக் காலகட்டங்களை எடுத்துரைக்கும் தொல்லியல் சான்றுகள் இனிமேல் உரைக்கப்படும்.

கந்தரோடை உள்நாட்டு மட்பாண்டங்கள்

கந்தரோடையில் பென்ஸில்வேனியப் பல்கலைக்கழகத்தினரால் நடாத்தப்பட்ட தெல்லியலாய்வின் அடிப்படையில் இப்பிரதேசத்து மட்பாண்டங்களின் தன்மை, தொன்மை பற்றி அறியக்கூடியதாகவுள்ளது. அமெரிக்கப் பல்கலைக்கழகத் தொல்லியலாளர்கள் கந்தரோடையில் கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்ட வகைகளை மூன்று பெரும் பிரிவுகளாக வகுத்து தமது ஆய்வினைச் செய்துள்ளனர் (Orton, N. 1995; கிருக்ஷ்ணராசா, செ. 1998).

இதில் முதலாவது வகையினை ‘A’ என வகுத்துள்ளனர். இவ்வகையைச் சேர்ந்த மட்பாண்டங்களின் கழுத்து வளையங்கள் (Rim) ரோமச்சிவப்பு நிறத்தினைக் (Roman Red) கொண்டிருக்கின்றன. இவ்வகையான சிவப்பு மட்பாண்டங்கள் அரிக்கமேட்டு மட்பாண்டங்களிலிருந்து வேறானவை. இம்மட்கலன்களை இரகுபதி ‘ஆரம்ப கால சிவப்பு மட்கலன்கள்: கி.மு. 1200 – கி.மு. 300’ என வகைப்படுத்தியிருக்கிறார் (Ragupathy, P. 1987: 9).

இரண்டாவது ‘B’ வகையான மட்பாண்டங்களை கறுப்பு-சிவப்பு வண்ண மட்பாண்டங்கள் என வகுத்துள்ளனர். இவை பெருமளவுக்கு தென்னிந்தியப் பெருங்கற்காலப் பண்பாட்டு மக்களுக்குரிய மட்பாண்ட வகைகள் எனவும் கொள்ளப்பட்டுள்ளன. இவ்வகையான மட்பாண்டங்கள் தென்னிந்தியாவில் அரிக்கமேட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்டங்களை ஒத்துக் காணப்படுகின்றன எனவும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. இவ்வகையான மட்பாண்டங்களின் பரவலான உபயோகம் தென்னிந்தியாவில் இரும்பின் உபயோகத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது (Orton, N. 1995; கிருக்ஷ்ணராசா, செ. 1998: 39).

மூன்றாவது ‘C’ வகையைச் சேர்ந்த மட்பாண்டங்களே அதிகளவில் கிடைத்துள்ளன. இவற்றினைச் சமையல் மற்றும் அன்றாட உபயோகங்களுக்காக மக்கள் கொண்டிருந்தமையால் இவை தடிப்பாகவும், தடிப்பான விளிம்புகளை உடையனவாகவும், பெரிய உருவத்தைக் கொண்டனவாகவும் உருவாக்கப்பட்டன. ‘சாடி’ வகையான மட்பாண்டங்களும் இவற்றில் அடங்கும். சில மட்பாண்டங்களில் ‘கிராபிற்றி’ கீறல் குறியீடுகள் காணப்பட்டன (Orton 1995; கிருக்ஷ்ணராசா 1998).

இந்த மட்பாண்டங்களின் வடிவமைப்புகளும், அவற்றில் காணப்பட்ட கீறல் குறியீடுகளும் (Graffiti marks) இலங்கையின் மற்றைய தொல்லியல் மையங்களான அநுராதபுரம், பொம்பரிப்பு, திவுல்வேவா, மகேவித்த ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பெருங்கற்பண்பாட்டு மட்பாண்டங்களை ஒத்திருந்தன (Sitampalam, S.K. 1993: 12). இவற்றுள் காணப்பட்ட கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களைப் பற்றி கருத்துக்கூறிய விமலா பெக்லி இந்த கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் தென்னிந்திய இரும்புக்கால மட்கலன்களை ஒத்திருப்பதாகவும், “கந்தரோடையில் குடியேற்றம் பெற்ற மக்கள் தென்னிந்திய மக்களின் கலாசார சமுதாயச் சூழலின் வழித்தோன்றல்களாகவோ, அல்லது அவர்களோடு நெருங்கிய கலாசாரத் தொடர்பு கொண்டவர்களாகவோ இருந்திருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார் (The people of Kantarodai have either descended from the same cultural milieu as the South Indians or have had very close cultural contacts with them) (Begley, V. 1973).

கந்தரோடையில் மிகப்பழமையான உள்ளூர், மற்றும் வெளியூர் மட்பாண்டங்கள் காணப்படுகின்றன. அவ்விடத்தில் பெருங்கற்கால முறிவளைவு கொண்ட கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் (கி.மு. 1500 – கி.மு. 300), மற்றவகை கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் (கி.மு. 700 – கி.பி. 300), ஆரம்பகால சிவப்பு மட்கலன்கள் (கி.மு. 1200 – கி.மு. 300) என்பனவற்றோடு கி.மு. 500 ஆம் ஆண்டிற்குரிய பளிங்கு மெருகூட்டப்பெற்ற கிரேக்க ‘ரௌலெற்றெட்’ கலனொன்றும் காணப்பட்டது (Ragupathy, P. 1987: 58).

இந்த ஆதி இரும்புக்கால அகழாய்வு மட்டத்தில் இரும்பு ஆணிகள், இரும்புக் கருவிகள், மற்றும் செம்பு, வெண்கலக் கருவிகளும் காணப்படுகின்றன. வெண்கலப் பொருட்களில் திரிசூலம், இலை போன்ற வடிவில் அமைந்த வேல் என்பன குறிப்பிடத்தக்கவை. திரிசூலம், வேல் என்பன தென்னிந்தியப் பெருங்கற் புதையல்களிலும் காணப்படுகின்றன. இவை சைவ மதத்தின் முன்னோடியான பெருங்கற்காலச் சமய வழிபாட்டிற்குரிய பொருட்களாகும். (Sitampalam, S.K. 1993: 11-12).

இங்கே வெண்கலத்தினாலும் செம்பினாலும் செய்யப்பட்ட, முனைகள் சற்றுத் தடித்த உருண்டையான குச்சிகள் பல நீளங்களில் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் நீளமானவை, 4-5 அங்குல நீளம் கொண்டவை. இம் மாதிரியான குச்சிகள் அலெக்ஸாந்தர் காலத்தில் ரக்ஸிலாவில் (தக்க்ஷசீலம்) உபயோகத்தில் இருந்தன என பீரிஸ் குறிப்பிடுகிறார் (Pieris, P.E. 1919: 61). இவற்றைப் பரிசீலனை செய்த சிற்றம்பலம் இவை பெண்கள், தங்கள் கண்களுக்கு மை தீட்டுவதற்காக உபயோகித்த ‘கோலக்குச்சிகள்’ (Kohl sticks) என அடையாளம் காண்கிறார். இப்படியான ஒரு செப்புக் குச்சியில், நெல்லின் அடையாளம் பதிந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் (Sitrampalam, S.K. 1993: 11-12). இப்படியான கோலக்குச்சிகள் பண்டைய எகிப்தியப் பெண்களிடையே கி.மு. 1500 ஆம் ஆண்டுகளில் பாவனையில் இருந்திருக்கிறது.

அகழ்வாராய்ச்சியாளர் போல் பீரிஸ் தனது கந்தரோடை அகழ்வாராய்சிக்காக ரூபா 150 மட்டுமே தரப்பட்டதாகவும், அப்பணம் முடிந்ததும் தனது அகழ்வுகளை நிறுத்திவிட்டதாகவும் கூறியிருக்கிறார் (Pieris, P.E. 1919: 40). அகழ்வு செய்த இடத்தில்  கண்டுபிடிக்கப்பட்ட வெண்கலத்தினால் செய்யப்பட்ட ஆறு அங்குல உயரமான ஒரு பெண் தெய்வத்தின் உருவம், அதன் வலது கரம் ‘அபயஹஸ்த’ முத்திரையையும் (காத்தல் அடையாளம்), இடது கரம் ‘வரதஹஸ்த’ முத்திரையையும் (செல்வம் அளிக்கும் அடையாளம்) காட்டி நின்றது எனக் குறிப்பிட்டிருக்கிறார் (Pieris, P.E. 1919: 60). இத்தெய்வம் லக்க்ஷ்மி என அடையாளம் காணப்படுகிறது. இப்படியான செப்பு, அல்லது  வெண்கலப் பட்டயங்களை அக்கால மக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வணங்கி வந்தார்கள்.

அகழ்வுகளில் பலவகையான இரும்புத் துண்டுகளும், இரும்பை உருக்கி வேலை செய்ததற்கான அடையாளங்களும் காணப்பட்டன. இவற்றில் மிகப்பழமையானது எது, பழமையில்லாதது எது என அடையாளம் காண முடியவில்லை. மேலும், அங்கே காணப்பட்ட சிவப்பு நிறமான இந்தியத் தங்கத்துண்டுகள் தங்க ஆபரணங்களின் உடைந்த துண்டுகள் என இனங்காணப்பட்டன (Pieris 1919: 62).

கந்தரோடையின் பெருங்கற்பண்பாட்டுக்காலம் கால்நடைகள், பசு, நாய் ஆகிய பிராணிகளை வீட்டுச்சூழலில் பழக்கியெடுத்து, அவற்றை அச்சூழலில் பற்றுக்கொள்ள வைத்த காலப்பகுதியுமாகும். அகழ்வுகளில் காணப்பட்ட பெருவாரியான கால்நடை எலும்புகள், எருதுகள் விவசாய நடவடிக்கைகளுக்காக உபயோகிக்கப்பட்டதை எடுத்துக்காட்டுகின்றன. நாய்களின் எலும்புகள், அவை பழக்கப்பட்ட வீட்டு மிருகங்களாக வளர்க்கப்பட்டதைக் காட்டுகின்றன. பறவைகளின் எலும்புகள், மீன் முள்ளுகள் அவை உணவாக உட்கொள்ளப்பட்டதைக் காட்டிநிற்கின்றன. ஆட்டெலும்புகளில் காணப்படும் கூர்மையான வெட்டுகள், அவை உணவாக உட்கொள்ளப்பட்டதற்கான சான்றுகள் ஆகும். அருகிலுள்ள ஆனைக்கோட்டைக் கிராமத்தில் காணப்பட்ட பெருங்கற் பண்பாட்டுப் புதையல்கள், பெருவாரியான கறுப்பு-சிவப்பு மட்பாண்ட ஓடுகளின் இருப்பு, இரும்பின் பாவனை, வயல்கள், குளங்கள், விவசாய நடவடிக்கைகள் என்பன அனைத்தும் ஒரு பெருங்கற் பண்பாட்டின் புராதன நடைமுறைகளை எடுத்துக்காட்டுகின்றன (சிற்றம்பலம், சி.க. 1993: 10-13).

தொடரும். 

The post கந்தரோடைத் தொல்லியல் (Archaeology of Kantarodai) – பகுதி 1 appeared first on Ezhuna | எழுநா.

  •  

கவிதை: மலீகா….. கஸல் – ரிஸ்வான்

கவிதை: மலீகா….. கஸல் மலீகா…. காற்றோடு சிலு சிலுக்கும் மரங்கள் உதிர்க்கும் குல்மொஹர் மலர்களைப் போலத்தான் உனது பார்வைகளும் என்மீது விழாமல் ஒதுங்கிச் சென்று மண்ணில் விழுந்து மரணிக்கின்றன வீதியை கடந்திடும் போதெல்லாம்- உனது விழிப்புறாக்களின் இமைச் சிறகுகள் படபடக்கும் சப்தங்களை…

The post கவிதை: மலீகா….. கஸல் – ரிஸ்வான் appeared first on Book Day.

  •  

ரவி அல்லது கவிதைகள்

ரவி அல்லது கவிதைகள் **********************************  1.இணங்கியதன் பாசாங்கு பிணக்குகளை ஒதுக்கிப் பிரசன்னமாகிவிட்ட பிறகும் மனப் பேயிடம் மாட்டித்தவிப்பவர்களை என்ன செய்ய இயலும்? ஒதுங்கி இருக்கிறேன் தருணம் பார்த்து புரிதலாகுமென! *** 2 கொய்த அன்பில். புன்னகையைப் பறித்து விட்டது பூ. பூப் பறித்துவிட்டதாக குதிக்கிறாள் சிறுமி. *** 3…

The post ரவி அல்லது கவிதைகள் appeared first on Book Day.

  •  

இளையராஜா பிறந்த நாள் – கவிதை

இளையராஜா பிறந்த நாள் – கவிதை இசை பிறந்த நாள்!!!! Instant ராஜா நெருப்பாறாய் விழுங்கத் துடிக்கும் வெறுப்பாறுகளிலிருந்து காணாமல் போக வேண்டியிருக்கிறது! நம்பிக்கைகளை விழுங்கத் துடிக்கும் தற்காலிக தோல்விகளின் போது தொலைந்து போக வேண்டியிருக்கிறது! சுயமரியாதையைக் கவ்வப் பார்க்கும் அவமானங்களிடமிருந்து…

The post இளையராஜா பிறந்த நாள் – கவிதை appeared first on Book Day.

  •  

அறிவியலாற்றுப்படை 24: காகிதத்தின் கதை – முனைவர் என்.மாதவன்

காகிதத்தின் கதை அறிவியலாற்றுப்படை – 24   முனைவர் என்.மாதவன் முதலில் ஒரு சம்பவம். சர்க்கரை அரிதான பொருளாக இருந்த காலம் அது. உணவகம் ஒன்றில் இலவசமாக சட்னியுடன் சர்க்கரையையும் கொடுத்து வாடிக்கையாளர்களை கவரத் தொடங்கினர். அதாவது நெய் ரோஸ்ட் சாப்பிடுவோர்க்கு…

The post அறிவியலாற்றுப்படை 24: காகிதத்தின் கதை – முனைவர் என்.மாதவன் appeared first on Book Day.

  •  

ச. பாரதி பிரகாஷ் கவிதைகள்

ச. பாரதி பிரகாஷ் கவிதைகள் காளி வேடமிட்டு மைக்கேல் ஜாக்சன் நடனமாடுகிறார் தலையில் தீப்பிடித்தபடி ஒருவன் தண்ணீருக்குள் மூழ்குகிறான் யாரோ ஒருவரின் கண்ணீர்த் துளியில் உலகமே பிரதிபலிக்கிறது அகில உலகத் தலைவர்கள் எல்லாம் இந்தியத் தெருக்களில் பேரம் பேசி பொருள் வாங்குகிறார்கள்.…

The post ச. பாரதி பிரகாஷ் கவிதைகள் appeared first on Book Day.

  •  

தமிழ் வணிக எழுத்தாளர்கள், நாவல்கள்

இந்தப் பதிவில் வரும் எவரும் (மகரிஷி தவிர்த்து) எந்த விதத்திலும் முக்கியமான எழுத்தாளர் அல்லர். ஒரு காலகட்டத்தில் அந்தக் காலத்துக்கு சுவாரசியமான, இப்போது காலாவதியாகிவிட்ட கதைகளை வாரப் பத்திரிகைகளில் தொடர்கதைகளாகவோ, மாத நாவல்களாகவோ எழுதியவர்கள், அவ்வளவுதான். தமிழ் வணிக எழுத்து வரலாற்றிலேயே அதிகபட்சம் ஒரு அடிக்குறிப்பு (footnote) என்பதற்கு மேல் இவர்கள் யாருக்கும் இடமில்லை.

இது முழுமையான வணிக எழுத்து பட்டியலும் அல்ல என்பது தெளிவு.

படித்த சில நாவல்கள்/எழுத்தாளர்கள் பற்றி தனித்தனியாக எழுத சோம்பேறித்தனம், அதனால் இங்கே ஒன்றாக எழுதிவிட்டேன். மகரிஷி பற்றி மட்டும் என்றாவது தனியாக எழுத வேண்டும். இப்போதைக்கு அவரது நாவல்கள் சரியாக நினைவில்லை.

ஆனால் வார இதழின் பக்கங்களைக் கிழித்து bind செய்யப்பட்ட நாவல்களைப் படிப்பதில் ஒரு தனி சுகம் இருக்கிறது. அது என் தலைமுறைக்காரர்களுக்கு மட்டும்தான் தெரியும்!


  • என் பதின்ம வயதில் ராஜேந்திரகுமார் ஓரளவு பிரபலமான வணிக எழுத்தாளர். மாத நாவல்கள் ஆரம்பித்த காலத்தில் மிகப் பிரபலமாக இருந்தார். நண்பர்கள் வட்டாரத்தில் சுஜாதா, புஷ்பா தங்கதுரை இருவருக்கும் அடுத்த இடத்தில் இருந்தார். ஞே என்று விழிக்கும் பாத்திரங்கள், பைக்கில் போகும் இளைஞனின் முதுகில் அழுந்தும் இளைஞிகள் அடிக்கடி வருவார்கள். இன்று படிக்கும்போதுதான் கழுத்துக்கு கீழே கை நகர்ந்தது என்று படித்தாலே கிளுகிளுப்பு அடைந்தோமா என்று தோன்றுகிறது.
  • நாஸ்டால்ஜியாவால் சமீபத்தில் சில கதைகளைப் படித்தேன். வால்கள் (1963) அறுபதுகளில் எழுதப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். முன்னுரையில் 1963-இல் எழுதப்பட்டது என்று போட்டிருந்தாலும் அமலா, நதியா என்று எண்பதுகளின் நடிகைகள் பேரெல்லாம் வருகிறது. ஒரு வேளை காலத்துக்கேற்ப் அப்டேட் செய்துவிட்டாரோ என்னவோ. ஒன்று நிச்சயம், 1963 காலகட்டத்தில் வெற்றி பெற்ற வணிக நாவலாக இருந்திருக்கும். பதின்ம வயதுப் பள்ளிப் பெண்களின் லூட்டி. அந்தக் காலத்து வணிக நாவல்களின் பிரதிநிதியாக இணைத்திருக்கிறேன். காப்பிரைட் பிரச்சினை வந்தால் எடுத்துவிடுவேன்.
  • மாத நாவலாக வந்த காதலுக்கு கெட்டிக்காரனை மீள்வாசிப்பு செய்தபோது அவரது அந்தக் காலக் கவர்ச்சியை புரிய வைத்தது. சளசளவென்று உரிமையோடு ஆண்களோடு பேசும் நாயகி! அந்த மாதிரி யாராவது கிடைக்கமாட்டார்களா என்று அலைந்த காலம்.
  • வணக்கத்துக்குரிய காதலியே டைம்பாஸ் புத்தகம். திரைப்படமாக வந்தது. இளமை இனிமை இந்துரேகா ஏதோ மாத நாவல். திறமையாக எடிட் செய்யப்பட்ட திரைப்படம் போல காட்சிகள் மாறுகின்றன. ஆனால் கதையில் வலு இல்லை.
  • ஒரு சாத்தான் வேதம் ஓதுகிறது எழுபதுகளில் வரும் திரைப்படம் போல பல திடுக்கிடும் காட்சிகளைக் கொண்டது.
  • என்றும் உன் அருகில், கண்டுபிடி கண்ணே, குளிர் குளிர் குளிர், மறுபடியும் மரணம், நம்புவதற்கல்ல, நீலமான ராத்திரி, நியாயம் சில சமயம் கொல்லும், ஒரு தேவி என்னைத் தேடுகிறாள் எல்லாம் படிப்பவர்களைக் கொல்கிறது.

  • ஒரு காலத்தில் மணியனுக்கு இருந்த பிரபலம் புரியாத புதிர்தான். அவர் கொடி கட்டிப் பறந்த காலத்திலேயே – நான் வேர்க்கடலை கட்டி வந்த காகிதங்களைக் கூட படித்த காலம் – அவர் கதைகளை என்னால் படிக்க முடிந்ததில்லை. எல்லாவற்றிலும் செக்ஸ், காதல் பற்றித்தான் பேச்சு. ஆனால் நேரடியாகப் பேசமாட்டார்கள், கடுப்படிக்கும் வகையில் சுற்றி வளைப்பார்.
  • கெட்ட கேட்டுக்கு இதில் பல திரைப்படமாகவும் வங்திருக்கிறது – மோகம் முப்பது வருஷம், இதய வீணை, சொல்லத்தான் நினைக்கிறேன் (இலவு காத்த கிளி), வயசுப்பொண்ணு (லவ்பேர்ட்ஸ்) என்று. இதய வீணையும் சொ. நினைக்கிறேனும் நன்றாக ஓடின என்று நினைக்கிறேன்.
  • லவ்பேர்ட்ஸ், கணவன் அமைவதெல்லாம், ஆசை வெட்கமறியும்(1976) போன்ற வாரப் பத்திரிகை தொடர்களெல்லாம் சுத்த வேஸ்ட்.
  • இதயம் பேசுகிறது தொடர்தான் அவரை பிரபலமாக்கியது என்று நினைக்கிறேன். வெளிநாட்டுக் கவர்ச்சியில் அப்போது ஆர்வமாக எல்லாரும் படித்தார்களோ என்னவோ. இரண்டு மூன்று முறை புரட்டிப் பார்த்திருக்கிறேன், எப்போது பார்த்தாலும் சாப்பாட்டைப் பற்றித்தான் புலம்புவது போல இருந்தது…

  • javar_seetharamanஎனக்குத் தெரிந்த ஜாவர் சீதாராமன் நடிகர் ஜாவர்தான். அந்த நாள், பட்டணத்தில் பூதம், வீரபாண்டிய கட்டபொம்மன், மணமகன் தேவை மாதிரி சில படங்களில் பார்த்திருக்கிறேன். எனக்குத் தெரிந்து அவர் நன்றாக நடித்தது ஏழை படும் பாடு திரைப்படத்தில்தான். அந்தப் படத்தில் ஜாவர் கதாபாத்திரத்தில் நடித்தத்தால்தான் அவருக்கு ஜாவர் என்று அடைமொழி ஏற்பட்டது.
  • ஜாவர் எழுதுவார் என்று கேள்விப்பட்டிருந்தாலும் எதையும் நான் படித்ததில்லை. சமீபத்தில்தான் சில புத்தகங்கள் pdf வடிவத்தில் கிடைத்தன. அவர் ஒன்றும் பிரமாதமாக எழுதிவிடவில்லை. அதுவும் சில சமயஙகளில் கிளுகிளுப்பாக எழுதுகிறோம் என்று நினைத்துக் கொண்டு (ரவிக்கை கிழிவது என்றால் அவருக்கு ரொம்பப் பிடிக்கும் போலிருக்கிறது) செயற்கையாக எழுதுவது கொஞ்சம் கடுப்படிக்கிறது. ஐம்பதுகளின் திரைக்கதைகள் போல பல யூகிக்கக் கூடிய செயற்கையான ட்விஸ்டுகளுடன் எழுதி இருக்கிறார். இருந்தாலும் அன்று சுவாரசியமாக இருந்திருக்கும், அந்தக் காலத்தில் நான் வாழ்ந்திருந்தால் சில நாவல்களை இன்று போல வேண்டாவிருப்பாக இல்லாமல் நிச்சயமாக விரும்பிப் படித்திருப்பேன் – குறிப்பாக உடல் பொருள் ஆனந்தி மற்றும் பணம் பெண் பாசம் – என்றுதான் நினைக்கிறேன். (மின்னல் மழை மோகினியும் அன்றைய காலகட்டத்துக்கு படிக்கக் கூடிய தொடர்கதையே) ஐம்பதுகளில் திரைப்படமாகவோ அல்லது நாடகமாகவோ வந்திருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும்.
  • அவர் எழுதியவற்றில் சிறந்தவை உடல் பொருள் ஆனந்தி மற்றும் பணம் பெண் பாசம். உ. பொ. ஆனந்தியில் மெஸ்மரிசம் என்ற போர்வையில் ஒரு பேய்க்கதை. படிக்கலாம். ப. பெ. பாசத்தில் பணக்கார வில்லன் அப்பா, அவரை நல்ல வழிக்குக் கொண்டு வர பாடுபடும் பெண். மி.ம. மோகினியில் கன்னிப் பெண்ணுக்கு இன்னல் வந்து தீர்கிறது.
  • மற்ற நாவல்கள் எல்லாம் தண்டம். நானே நான் மாதிரி நாவலில் வரும் உருவ ஒற்றுமை உள்ள இருவர், ஒருவருக்கு அம்னீசியா என்பதெல்லாம் அறுபதுகளில் கூட திரைப்படங்களில் பார்க்கக் கூடிய கருக்கள்தான். சொர்க்கத்தில் புயல் பல சினிமாத்தனமான ட்விஸ்டுகளுடன் படு செயற்கையாக எழுதப்பட்டிருக்கிறது.
  • கொடுமையிலும் பெரும் கொடுமை கிளுகிளுப்பாக எழுதுகிறோம் என்று நினைத்துக் கொண்டு எதையோ எழுதி இருப்பது. குறிப்பாக அவர் கதைகளில் ரவிக்கையை கிழித்துக் கொண்டே இருக்கிறார்கள்!

  • மகரிஷி: பல நாவல்களை எழுதி இருக்கிறார், ஆனால் பனிப்போர் என்ற குறுநாவல் மட்டுமே ஏனோ இன்னும் நினைவிருக்கிறது. ஆனால் விவரிக்கும் அளவு வொர்த் இல்லை. பிற நாவல்களைத் தேடிப் பார்க்க வேண்டும்.
  • ஜெயமோகன் மகரிஷியின் பனிமலை, வட்டத்திற்குள் ஒரு சதுரம், நதியைத் தேடிவந்த கடல் ஆகியவற்றை குறிப்பிட வேண்டிய புனைவுகள் என்கிறார்.
  • சில நாவல்கள் திரைப்படமாக வந்தன – பனிமலை என்னதான் முடிவு என்ற திரைப்படமாக; பத்ரகாளி, புவனா ஒரு கேள்விக்குறி, சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு,  வட்டத்துக்குள் சதுரம், நதியைத் தேடி வந்த கடல் ஆகிய நாவல்களும் திரைப்படமாக வந்தன.

  • கல்கி ராஜேந்திரன் கல்கியின் மகன். கல்கி பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர்.
  • ரவிகுலதிலகன் என்ற சுமாரான சரித்திர நாவலை எழுதி இருக்கிறார்.
  • சைக்கோ சாரநாதன் எழுதப்பட்டபோது பிரபலமாக இருந்தது என்று கேள்வி. சைக்கோக்கள் பற்றி எழுதுவது அப்போது புதுமையாக இருந்திருக்கும்.

  • எல்லார்வி: கலீர் கலீர் என்ற நாவல் – அதுவும் கடைசி சில பக்கங்களைக் காணவில்லை – கிடைத்தது. அந்தக் காலத்தில் புகழ் பெற்ற வயலின் கலைஞர் மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளை என்பவர் 18 நாள் ஒரு மன நோயாளியிடம் தினம் ஒரு மணி நேரம் வயலின் வாசித்ததில் அவரது மன நோய் குணமாகிவிட்டதாம். அதை அடிப்படையாக வைத்து நடனத்தின் மூலம் ஒரு மன நோயாளி குணமானார் என்று கதை எழுதி இருக்கிறார். டி.ஆர். மஹாலிங்கம், அஞ்சலி தேவி, ஈ.வி. சரோஜா, எம்.ஆர். ராதா நடித்து ஆட வந்த தெய்வம் என்று திரைப்படமாகவும் வந்தது.
  • தோடி அடகு என்ற ஒரு அபுனைவும் கிடைத்தது. பல இசை வல்லுனர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளின் தொகுப்பு.
  • ராஜமாணிக்கம் பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றையும் புத்தகமாக எழுதி இருக்கிறார்.
  • எல்லார்வியின் ஒரு சிறுகதையை – நல்வாழ்வு – இணையத்தில் கிடைக்கிறது.

  • கிருஷ்ணமணி எழுதிய வேர்கள் என்ற நாவல் விகடன் நாவல் போட்டியில் பரிசு பெற்றது. சுமாரான வணிக நாவல். நிறைய பேசிக் கொண்டே இருக்கிறார்கள். நாயகன், நாயகி இருவரும் நாயகன் நாயகி என்ற காரணத்தினாலேயே காதலில் விழுகிறார்கள், மகா தெளிவுடன் இருக்கிறார்கள்…

  • தேவிபாலாமடிசார் மாமி (1992) விகடனில் தொடர்கதையாக வந்தது, அந்தக் காலத்தில் பிரபலமாகவும் இருந்தது. பத்தினிக்கு இன்னல் வரும் ஃபார்முலாவை ஒரு ஆணும் பிடித்துக் கொண்டாரே என்று ஆச்சரியப்பட வைத்தார்.

  • யுவகிருஷ்ணா எழுதியஅழிக்கப் பிறந்தவன் நாவலின் பின்புலம் – பர்மா பஜாரின் குற்றப் பின்னணி – மட்டுமே அதை கொஞ்சம் வித்தியாசப்படுத்துகிறது. எப்படியோ முடிக்க வேண்டும் என்று அவசரப்பட்டிருக்கிறார்.

  • ஏ.கே. பட்டுசாமி எழுதிய கான்ஸ்டபிள் கந்தசாமி கல்கியில் தொடர்கதையாக வந்தது. பந்தா காட்டும் நாயகன், அவனுடைய காதல், அவன் மாட்டிக் கொள்ளும் சம்பவங்கள், கடைசியில் அடிக்கும் ஜாக்பாட் என்று கதை. கதை முக்கியமே இல்லை, ஆனால் அதன் ambience பழைய நினைவுகளைத் தூண்டியது.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

  •  

சில மலையாள நாடகங்கள்

சமீபத்தில் சில மலையாள நாடகங்களைப் படிக்க முடிந்தது.

சி.ஜே. தாமஸ் ஜேஜே சில குறிப்புகளின் நாயகனாக ஜேஜேயின் ரிஷிமூலமாம். தாமஸ் எழுதிய “அவன் வீண்டும் வருன்னு” சில விதங்களில் இப்சனின் பாணியை நினைவுபடுத்தியது. ஆனால் சுமாரான நாடகம்தான். 1949-இல் எழுதப்பட்டிருக்கிறது, அப்போது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம். இன்று முன்னோடி நாடகம் மட்டும்தான் என்று தோன்றுகிறது. இரண்டாம் உலகப் போரில் பணத்தேவைகளுக்காக சிப்பாயாகச் சென்றிருக்கும் மாத்துக்குட்டி. நாலு வருஷம் பிரிவில் மாத்துக்குட்டியின் நண்பனுக்கும் மாத்துக்குட்டியின் மனைவிக்கு உறவு ஏற்படுகிறது, சாராம்மா கர்ப்பம். கண்களை இழந்து திரும்பி வரும் மாத்துக்குட்டி முதல் கோபத்துக்குப் பின் மனைவி தன் பொறுப்பு என்று உணர்கிறான், ஆனால் அவளோடு நெருங்க முடியவில்லை. ஒரு உபதேசியார் ஏசு வருகிறார் என்று பேசிக் கொண்டே இருக்கிறார், அந்தப் பாத்திரம்தான் இந்த நாடகத்தில் நினைவிருக்கப் போகிறது.

கே.டி. முகம்மது எழுதிய “இது பூமியாணு” அன்று புரட்சிகரமான நாடகமாக இருந்திருக்கும். சீர்திருத்த எண்ணம் கொண்டு காலித் ஒரு ஏழைப்பெண்ணை தன் வீட்டிற்கு அழைத்து வந்து ஆதரிக்கிறான். ஊரில் – அவனது பெரியப்பா உட்பட – எல்லாரும் அவனை காறித் துப்புகிறார்கள். பெரியப்பா பாத்திரம் நடிக்க நல்ல ஸ்கோப் உள்ளது. படிக்கலாம்.

என். கிருஷ்ணபிள்ளை எழுதிய “கன்யகா” (1944) நாடகத்தோடு என்னால் ஒட்ட முடியவில்லை. 1944-இல் 35 வயதுப் பெண், திருமணம் ஆகவில்லை, அவள் சம்பளத்தில் அவள் வீட்டில் எல்லாரும் வசதியாக வாழ்கிறார்கள், அவள் தம்பிக்கு வேலைக்குப் போவது இழிவு என்றுதான் எண்ணம். அவள் தங்கை கணவனுக்கு வேலை இல்லை, அவன் வீட்டை விட்டு வெளியேறுகிறான். தவிர்க்கலாம்.

என்.என். பிள்ளை (ஓமசேரி) எழுதிய கோவில் ஆன ஒரு satire. பசியால் முரண்டு பிடிக்கும் யானையின் கதையை வைத்து அரசியல், அதிகாரிகள் எல்லாரையும் தாக்குகிறார். சுமார்தான்.

இவற்றைத் தவிர நிங்ஙள் என்னை கம்யூனிஸ்டாக்கி (1952) என்ற தோப்பில் பாசி நாடகத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். வேறு முக்கியமான நாடகம் என்னென்ன என்று தெரியவில்லை. உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள்!

நான் படித்த நாலு நாடகங்களை வைத்து சொல்லிவிட முடியாதுதான். இருந்தாலும் படித்தே ஆக வேண்டிய மலையாள நாடகங்கள் குறைவுதான் என்று தோன்றுகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய புனைவுகள்

  •  

சில மலையாள நாடகங்கள்

சமீபத்தில் சில மலையாள நாடகங்களைப் படிக்க முடிந்தது.

சி.ஜே. தாமஸ் ஜேஜே சில குறிப்புகளின் நாயகனாக ஜேஜேயின் ரிஷிமூலமாம். தாமஸ் எழுதிய “அவன் வீண்டும் வருன்னு” சில விதங்களில் இப்சனின் பாணியை நினைவுபடுத்தியது. ஆனால் சுமாரான நாடகம்தான். 1949-இல் எழுதப்பட்டிருக்கிறது, அப்போது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம். இன்று முன்னோடி நாடகம் மட்டும்தான் என்று தோன்றுகிறது. இரண்டாம் உலகப் போரில் பணத்தேவைகளுக்காக சிப்பாயாகச் சென்றிருக்கும் மாத்துக்குட்டி. நாலு வருஷம் பிரிவில் மாத்துக்குட்டியின் நண்பனுக்கும் மாத்துக்குட்டியின் மனைவிக்கு உறவு ஏற்படுகிறது, சாராம்மா கர்ப்பம். கண்களை இழந்து திரும்பி வரும் மாத்துக்குட்டி முதல் கோபத்துக்குப் பின் மனைவி தன் பொறுப்பு என்று உணர்கிறான், ஆனால் அவளோடு நெருங்க முடியவில்லை. ஒரு உபதேசியார் ஏசு வருகிறார் என்று பேசிக் கொண்டே இருக்கிறார், அந்தப் பாத்திரம்தான் இந்த நாடகத்தில் நினைவிருக்கப் போகிறது.

கே.டி. முகம்மது எழுதிய “இது பூமியாணு” அன்று புரட்சிகரமான நாடகமாக இருந்திருக்கும். சீர்திருத்த எண்ணம் கொண்டு காலித் ஒரு ஏழைப்பெண்ணை தன் வீட்டிற்கு அழைத்து வந்து ஆதரிக்கிறான். ஊரில் – அவனது பெரியப்பா உட்பட – எல்லாரும் அவனை காறித் துப்புகிறார்கள். பெரியப்பா பாத்திரம் நடிக்க நல்ல ஸ்கோப் உள்ளது. படிக்கலாம்.

என். கிருஷ்ணபிள்ளை எழுதிய “கன்யகா” (1944) நாடகத்தோடு என்னால் ஒட்ட முடியவில்லை. 1944-இல் 35 வயதுப் பெண், திருமணம் ஆகவில்லை, அவள் சம்பளத்தில் அவள் வீட்டில் எல்லாரும் வசதியாக வாழ்கிறார்கள், அவள் தம்பிக்கு வேலைக்குப் போவது இழிவு என்றுதான் எண்ணம். அவள் தங்கை கணவனுக்கு வேலை இல்லை, அவன் வீட்டை விட்டு வெளியேறுகிறான். தவிர்க்கலாம்.

என்.என். பிள்ளை (ஓமசேரி) எழுதிய கோவில் ஆன ஒரு satire. பசியால் முரண்டு பிடிக்கும் யானையின் கதையை வைத்து அரசியல், அதிகாரிகள் எல்லாரையும் தாக்குகிறார். சுமார்தான்.

இவற்றைத் தவிர நிங்ஙள் என்னை கம்யூனிஸ்டாக்கி (1952) என்ற தோப்பில் பாசி நாடகத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். வேறு முக்கியமான நாடகம் என்னென்ன என்று தெரியவில்லை. உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள்!

நான் படித்த நாலு நாடகங்களை வைத்து சொல்லிவிட முடியாதுதான். இருந்தாலும் படித்தே ஆக வேண்டிய மலையாள நாடகங்கள் குறைவுதான் என்று தோன்றுகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய புனைவுகள்

  •  

க.நா.சு. பரிந்துரை – ஜடாவல்லவர்

இருபது இருபத்திரண்டு வயது வரை தமிழில் படிக்க பெரிதாக எதுவுமில்லை என்றுதான் எண்ணி இருந்தேன். நற்றிணையையும், நல்ல குறுந்தொகையையும் சிலப்பதிகாரத்தையும் திருக்குறளையும் கம்ப ராமாயணத்தையும் என்னால் அந்த வயதில் படிக்க முடியவில்லை. (திருக்குறளை இன்னமும் படிக்க முடியவில்லை.) புதுமைப்பித்தன் மேதை என்ற முடிவுக்கு வந்திருந்தாலும், சாயாவனம், கோபல்ல கிராமம், சில நேரங்களில் சில மனிதர்கள் மாதிரி சிலவற்றைப் படித்திருந்தாலும் தமிழ் வாசிப்பு என்றால் சுஜாதாவும் கல்கியும் விகடனும் குமுதமும்தான், டைம் பாஸ் வாசிப்புதான், தமிழில் படித்து பழகிவிட்ட ஒரே காரணத்தால்தால் நிறுத்த முடியவில்லை, படித்து தொலைக்க வேண்டி இருக்கிறது என்றுதான் நினைத்திருந்தேன். அந்த மாதிரி வாசிப்புக்கும் பெர்னார்ட் ஷாவுக்கும் இப்சனுக்கும்  ஹ்யூகோவுக்கும் ஹெமிங்க்வேக்கும் மார்க்வசுக்கும் ஆலன் பேடனுக்கும் ஹார்பர் லீக்கும், ஏன் டிக்கன்சுக்கும், தாக்கரேவுக்கும், எமிலி ப்ரான்டேவுக்கும் கூட நிறைய தூரம் இருந்தது.

அப்போது செகந்தராபாத்தில் (முதல்) வேலை. மாரட்பள்ளியில் கீஸ் உயர்நிலைப் பள்ளியில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி என்று கேள்விப்பட்டேன். நான் வசித்ததும் மாரட்பள்ளிதான். கையில் முதல் முறையாக புத்தகம் வாங்கும் அளவுக்கெல்லாம் காசு இருந்தது. சுப்ரபாரதிமணியன் கஷ்டப்பட்டு வருஷாவருஷம் அதை நடத்தி வந்தார். போனவன் வழக்கமான சுஜாதா புத்தகங்களோடு சாயாவனத்தையும் வாங்கினேன். அவர் கண்ணில் பல்ப் எரிந்தது. சின்னப் பையனுக்கு சாயாவனம் பற்றி தெரிந்திருக்கிறதே என்று அவருக்கு சின்ன சந்தோஷம். அவருடைய பரிந்துரையில் சில பல புத்தகங்களை வாங்கினேன்.

அப்போது கண்ணில் பட்ட புத்தகம் க.நா.சு.வின் படித்திருக்கிறீர்களா? புத்தகத்தை வாங்கிய கையோடு அங்கேயே பள்ளி வராந்தாவில் படித்து முடித்தேன். எனக்கு அந்தப் புத்தகம் பெரிய கண்திறப்பு. எந்த உலக மொழிக்கும் இணையான நவீன இலக்கியம் தமிழில் உண்டு என்று உணர்ந்த தருணம். அவர் போட்டிருந்த பட்டியலில் ஒன்றோ இரண்டோ கூட அப்போது படித்திருக்கவில்லை. ஆனாலும் அவரது விவரிப்பிலிருந்தே தமிழ் வாசிப்பு பற்றிய எனது எண்ணம் வெறும் அறியாமை என்று தெரிந்தது. இன்னும் கூட கிழிந்த ஒரு பிரதி என் அலமாரியில் எங்கோ இருக்கிறது, வாங்கி முப்பது வருஷமாவது இருக்கும்.

க.நா.சுவின் பரிந்துரை பாணி – இது என ரசனைக்கு ஒத்து வருகிறது, இந்த மாதிரி புத்தகம் – என்னைப் பொறுத்தவரை மிகச் சரியான அணுகுமுறை. எனக்கு ஏற்ற அணுகுமுறை. ஆனால் பின்னால் அவர் பரிந்துரைத்த புத்தகங்களில் பல என் ரசனைக்கு ஒத்தே போகாது என்பது புரிந்தது. அவர் பரிந்துரைத்த இதயநாதம், உல்லாச வேளை, கரித்துண்டு போன்றவை எனக்கு சரிப்படாது. படிக்கலாம், ஆனால் க.நா.சு. பரிந்துரைக்காவிட்டால் படித்திருக்கமாட்டேன், படிக்கவில்லை என்றால் எந்த வருத்தமும் இராது. அதாவது அவரது அணுகுமுறை எனக்கு சரிப்படுகிறது, அவரது ரசனை எனக்கு ஒத்துப் போகவில்லை. அவர் பரிந்துரைத்திருக்கும் புத்தகங்களில் ஒன்றோ இரண்டோ எனக்கு நல்ல இலக்கியமாக இருந்தால் அதிகம். அனேகம் வெறும் fluff மட்டுமே. என் கண்ணைத் திறந்த பரிந்துரைப் பட்டியல், ஆனால் பரிந்துரைகளில் வெகு சிலவே எனக்குத் தேறும் என்பது பெரிய நகைமுரண்.

அவர் பட்டியலில் எனக்கு மிகவும் ஏமாற்றம் அளித்த புத்தகம் ஜடாவல்லவர் (1918).

ஏதோ ஒரு தஞ்சாவூர் கிராமத்தில் ஆசாரமான பிராமணக் குடும்பத்தில் பிறந்த சந்திரசேகரன். ஆங்கிலம் படிக்கவில்லை, தமிழிலும் சமஸ்கிருதத்திலும் தேர்ச்சி. விவசாயம், ஆனால் தங்கைகள் திருமணம், செலவுகள் என்று சொத்து கரைந்து கொண்டிருக்கிறது. முன்சீப் வேலை, கடன், திருமணம், மாமியார்-மருமகள் தகராறு, கடன் தீர்வது, மகள், மகளுக்குத் திருமணம், சுபம் என்று போகிறது.

மகா மோசமான கதை. ஒவ்வொரு அத்தியாயத்தில் முதல் இரண்டு பக்கம் உபதேசம், மேற்கோள்கள். திடீரென்று கதாநாயகன் காசிக்கு குடும்பத்தோடு போகிறான். அதனால் கதை எப்படி நகர்கிறது என்றால் ஒன்றுமில்லை. பாத்திரங்களோ வெறும் தேய்வழக்குகள். மாமியார் மோசமானவள்; “நாகரீக” மாற்றங்களால் வைதிக பழக்கங்கள் சிலவற்றை கைவிடும் மாப்பிள்ளை முட்டாள், மூர்க்கன். நாயகனும் நாயகியும் உலக மகா உத்தமர்கள். கொடுமை செய்யும் மாமியார் கிணற்றில் மருமகளை பிடித்துத் தள்ளப் போனால் அவள் தலையில் சரியாக தேங்காய் விழுகிறது. பிரதாப முதலியார் சரித்திரம் எத்தனையோ ramble ஆகும். அதற்கு ஐம்பது வருஷம் கழித்து வெளியான புத்தகம் கொஞ்சமாவது முன்னேற வேண்டாமா? இது பின்னேறி இருக்கிறது!

கதையின் சுவாரசியம் இன்று ஒன்றுதான். என்னவெல்லாம் ஆசிரியருக்கு தவறாகத் தெரிகிறது! மீசை வைத்த பிராமணன்; குருக்கள் தாழ்ந்த ஜாதி (பிராமணர்களுக்குள் தாழ்ந்தவர்களா? எனக்குத் தெரியவில்லை); காப்பி குடிப்பது, அதிலும் சீப்பிக் குடிப்பது; ஆங்கிலக் கல்வி; சுருட்டு பிடிக்கும் மேலதிகாரி. சொல்லிக் கொண்டே போகலாம்.

க.நா.சு. தன் சிறு வயதில் பார்த்த தஞ்சாவூர் கிராமங்களை, வைதிகப் பிராமணர் குடும்பங்களை ஓரளவு உண்மையாகப் பிரதிபலிக்கும் நாவல் என்று நினைக்கிறேன். மெய்நிகர் அனுபவம் என்று நினைத்து பரிந்துரைத்துவிட்டார் என்று தோன்றுகிறது.

நாவலை எழுதியவர் வரகவி என்று பட்டம் பெற்ற அ. சுப்ரமணிய பாரதி. இவர் கவிஞர் பாரதியின் நண்பர். அவரோடு சுதேசமித்திரனில் பணியாற்றி இருக்கிறார். இரண்டு பேருக்கும் எப்படித்தான் ஒத்துப் போயிற்றோ தெரியவில்லை. இவர் இந்தப் புத்தகத்தில் நாகரீக வளர்ச்சியின் பின்விளைவுகள் என்று சொல்லும் அத்தனையும் கவிஞருக்கு உண்டு – மீசை, ஜாதி ஆசாரம் பார்க்காமல் இருத்தல்…

அ. சுப்ரமணிய பாரதியைப் பற்றி க.நா.சு. தவிர வேறு யாரும் குறிப்பிட்டு நான் பார்த்ததில்லை. நீங்கள் யாராவது ஏதாவது கேள்விப்பட்டிருந்தால் சொல்லுங்கள்!

அவர் எழுதிய மாயாவதி (1911) என்ற நாடகமும் கிடைத்தது. பிரத்யும்னன் – சம்பராசுரன் கதை. 1911க்கு நிறைய உரைநடை. அன்று வெற்றி பெற்றிருக்கலாம். பக்த மஹிமை (1920) புண்டரீகன், நாம்தேவ், கோரா கும்பார் ஆகியோர், இரண்டு பக்த சிரோன்மணிகள் (1925) மாணிக்கவாசகர், பத்ராசல ராமதாஸ் ஆகியோரின் சுருக்கமான “வரலாறு”. பாண்டவ வனவாசம் (1923), பாலகோபால லீலை (1925), வனஜாட்சி (1911) என்றும் சில புத்தகங்களைப் படித்தேன்.

தஙகளைத் தாங்களே வருத்திக் கொள்ள நினைக்கும் masochist-களுக்காக – ஜடாவல்லவர், மாயாவதி இரண்டும் இணையத்தில் கிடைக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள்

  •  

16ஆம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

வல்லமை மின்னிதழ், 15 ஆண்டுகளை நிறைவுசெய்து 16ஆம் ஆண்டில் நுழைந்துள்ளது. ஆய்வறிஞர் கருத்துரையுடன் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும் தமிழின் முதல் மின்னிதழ். பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற ஆய்விதழாக இரண்டு ஆண்டுகள் இருந்தது. தொடர்ந்து நடுநிலையுடன் படைப்புகளை வெளியிட்டு வருகிறது.

இந்தப் பதினைந்து ஆண்டுகளில் வல்லமை, 19,831 ஆக்கங்களை வெளியிட்டுள்ளது. இவை, முறையே 13,949 பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. தொடர்ந்து பங்களிக்கும் படைப்பாளர்களையும் ஆய்வாளர்களையும் மதிப்பீட்டாளர்களையும் வாசகர்களையும் ஆசிரியர் குழுவினரையும் நன்கொடையாளர்களையும் பெரிதும் பாராட்டுகின்றோம். அனைவரின் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

  •  

கனடாவிலிருந்து சில கவிதைகள் | மரணத்தை வரைந்த ஓவியன் – நா.வே.அருள்

கனடாவிலிருந்து சில கவிதைகள் – முதல் கவிதை மரணத்தை வரைந்த ஓவியன் *********************** ஓர் உன்னதமான ஓவியனுக்கு காலப்போக்கில் கை விரல்களே தூரிகைகளாக மாறிவிடுகின்றன திரைச்சீலைகளில் அவன் ஓவியங்களைத் தீட்டுகிறபோது அவனது கைரேகைகளே கோடுகள் ஆகின்றன வாலிபனின் உதடுகளின் மேல் மீசை…

The post கனடாவிலிருந்து சில கவிதைகள் | மரணத்தை வரைந்த ஓவியன் – நா.வே.அருள் appeared first on Book Day.

  •  

சட்டநாதக் கரையாளர்: திருச்சி ஜெயில்

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன் இந்தப் புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டேன். இந்தியா போவதே ததிங்கிணத்தோம் ஆகிவிட்டது, அதனால் வாங்க முடியவில்லை. அமெரிக்காவில் இருந்து கொண்டு தமிழ் புத்தகங்களை வாங்கும் வித்தை இன்னும் கைவரவில்லை.

சித்ரா பாலசுப்ரமணியனின் ஒரு முகநூல் பதிவில் ஒரு புண்ணியவான் (பெயர் மறந்துவிட்டது!) இந்தப் புத்தகம் இணையத்தில் கிடைக்கிறது என்று சுட்டி கொடுத்திருந்தார். அவரும் சித்ராவும் வாழ்க!

கரையாளர் சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்ற தேசபக்தர். விடுதலைக்கு முன்பும் பின்பும் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். இன்று அவர் பெயரில் ஒரு கல்லூரி நடக்கிறது. அவர் 1967-இல் இறந்துவிட்டதாகவும் படித்தேன், பிற்காலத்தில் அதிமுகவில் சேர்ந்து சட்டமன்ற உறுப்பினரானதாகவும் படித்தேன். எது சரியோ தெரியவில்லை. ஒரு வேளை இரண்டு சட்டநாதக் கரையாளர்கள் இருக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை.

கரையாளர் என்பது கோனார் ஜாதியில் ஒரு உட்பிரிவு என்று தோன்றுகிறது. இல்லை கோனார் ஜாதியில் புழங்கும் பெயராக மட்டும் இருக்கலாம்.

கரையாளர் 1910 வாக்கில் பிறந்திருக்கிறார். தென்காசிக்காரர். 1937-இல் சட்டமன்ற உறுப்பினராகி இருக்கிறார். பின்னாளில் செங்கோட்டை தமிழகத்தோடுதான் இருக்க வேண்டும் என்று போராடினாராம்.

புத்தகம் முதல் பக்கத்திலேயே களைகட்டுகிறது. 1937 தேர்தலில் இவர் நிற்க வாய்ப்பிருக்கிறது. ராஜாஜியுடன் 1936-இல் நேர்காணல். ராஜாஜி கேட்பதெல்லாம் சிறை செல்லத் தயாரா என்பதுதான். கரையாளரின் வார்த்தைகளில் – (சட்டசபை செல்வது) ஜெயிலுக்கு செல்வது முதல் படி!

1940 டிசம்பரில் சத்யாகிரகம். என்னை சிறையில் அடையுங்கள் என்று கேட்காத குறைதான். ஆறு மாத தண்டனை.

புத்தகத்தை இரண்டு பகுதியாக பிரிக்கலாம். பிரதானப் பகுதியாக இருப்பது சிறையில் இருந்த பிற அரசியல் கைதிகளின் கோட்டுச்சித்திரங்கள். கூட இருந்தவர்கள் பலரும் அன்றைய தமிழக காங்கிரஸ் பெரிய தலைகள். ராஜாஜி, சுப்பராயன், டி.எஸ்.எஸ். ராஜன், ஸ்ரீபிரகாசா, வி.வி. கிரி, பி.எஸ். குமாரசாமி ராஜா, சர்தார் வேதரத்தினம், அவினாசிலிங்கம் செட்டியார், தினமணி ஆசிரியராக இருந்த டி.எஸ். சொக்கலிங்கம், மட்டப்பாறை வெங்கடராமய்யர் என்று பலர்.

இவரை முதலில் வேலூர் சிறைக்கு கொண்டு போயிருக்கிறார்கள். அங்கே அப்போது என்.ஜி. ரங்கா, முத்துராமலிங்கத் தேவர் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். சத்தியமூர்த்தி ஆஸ்பத்திரியில். சத்தியமூர்த்தி சிறை அதிகாரிகளுக்கு பூசணிக்காயை விட்டால் வேறு காய்கறியே கண்ணில் படாதா என்று அலுத்துக் கொள்வாராம்.

ஒரு பகுதியில் சிறையின் அன்றாட வாழ்க்கையை மிக சாதாரணமாக விவரிக்கிறார். உதாரணமாக கமான் செய்வது என்றால் ஒரு சிறையிலிருந்து இன்னொரு சிறைக்கு மாற்றுவது. சில நாட்களிலேயே இவரை திருச்சி சிறைக்கு கமான் செய்துவிட்டார்கள். ராஜாஜி போன்று பல முறை சிறை சென்றவர்கள் கறுப்பு குல்லாய் என்று அழைக்கப்படுவார்களாம். இவர் கறுப்பு குல்லாய் அல்லர். திருச்சி சிறையில் இவரது எண் 154. யார் நம்பர் 1? ராஜாஜிதான்! ஸ்ரீனிவாசராவ் என்பவர் ஆர்க்காடு பஞ்சாயத்து போர்டு தலைவராக இருந்தவராம். பிரமாதமாக சமைப்பாராம். 1932-இல் அவர் சிறையில் இருந்தபோது நன்னடத்தைக்காக அவரது தண்டனை சில நாட்கள்  குறைக்கப்பட்டிருக்கிறது. பிற கைதிகளின் வேண்டுகோளால் குறைக்கப்பட்டது ரத்து செய்யப்பட்டு அவர் பொங்கல் அன்று சமைத்துப் போட்டிருக்கிறார்! ஒரு முறை வி.வி. கிரியின் நாலு வயதுக் குழந்தை அவரை விட்டுப் போகமாட்டேன் என்று அழுதுகொண்டே சிறைக்குள்ளே வந்துவிட்டதாம்!

சுப்பராயனைப் பற்றிய விவரிப்பு அபாரம். சுப்பராயன் ஜமீந்தார். முதல் முறை சிறை. அவருக்கு சிறைக்கஷ்டமெல்லாம் அதிகமாகவே உணர்ந்தார், கோடைக்கு ஊட்டிக்கும் கொடைக்கானலுக்கும் போய் வருபவர் திருச்சியின் உஷ்ணத்தை அதிகமாகவே உணர்ந்தார் என்கிறார். கிரிக்கெட்டில் பயங்கர ஈடுபாடாம். சிறையில் யாரோ ஒரு வானொலி பெட்டி வாங்கி கொடுத்திருக்கிறார்கள், ரஞ்சி கோப்பை பந்தயம் ஒன்றில் சென்னை அணி தோற்பதைக் கேட்டு கண்ணீர் விடாத குறையாம். சுப்பராயன்தான் இந்தப் புத்தகத்துக்கு முகவுரை எழுதி இருக்கிறார்.

அடுத்த பகுதியாக சிறையின் நடைமுறைகளை விவரிக்கிறார். தண்ணீர் கஷ்டம், யாரையும் சுலபத்தில் சந்திக்க முடியாத நிலை, பாம்புத் தொல்லை, மூட்டைப்பூச்சி தொந்தரவு (ராஜாஜி முன்னின்று மருந்து அடித்து இந்தத் தொல்லையைக் குறைத்திருக்கிறார்) என்று பலவும் மிக சாதாரணமாக விவரிக்கப்படுவது poignant ஆக இருக்கிறது.

புத்தகத்தில் பல தலைவர்களின் கோட்டுச்சித்திரங்கள் இருக்கின்றன. Charming! இந்தப் பதிவில் இருக்கும் கரையாளரின் புகைப்படமும் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டதுதான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: விடுதலைப் போராட்டம்

தொடர்புடைய சுட்டிகள்:

  •  

மு.இக்பால் அகமது எழுதிய மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன் – நூல் அறிமுகம்

மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன் (Makkalisai Methai M.P.Seenivasan) தமிழ் திரையுலகத்தில் ஒரு நட்சத்திரமாகப் பிரகாசித்தவரும், தற்போது பெரும்பாலோர் அறியாதவராக இருப்பவருமான தோழர் எம்.பி.சீனிவாசனின் வாழ்க்கை வரலாற்றை தோழர் இக்பால் மிகச்சிறப்பாக எழுதி பரிசல் மூலம் வெளியிட்டுள்ளார்.  மறைந்திருக்கும் ஏராளமான கதவுகளை இப்புத்தகம்…

The post மு.இக்பால் அகமது எழுதிய மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன் – நூல் அறிமுகம் appeared first on Book Day.

  •  

சட்டநாதக் கரையாளர்: திருச்சி ஜெயில்

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன் இந்தப் புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டேன். இந்தியா போவதே ததிங்கிணத்தோம் ஆகிவிட்டது, அதனால் வாங்க முடியவில்லை. அமெரிக்காவில் இருந்து கொண்டு தமிழ் புத்தகங்களை வாங்கும் வித்தை இன்னும் கைவரவில்லை.

சித்ரா பாலசுப்ரமணியனின் ஒரு முகநூல் பதிவில் ஒரு புண்ணியவான் (பெயர் மறந்துவிட்டது!) இந்தப் புத்தகம் இணையத்தில் கிடைக்கிறது என்று சுட்டி கொடுத்திருந்தார். அவரும் சித்ராவும் வாழ்க!

கரையாளர் சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்ற தேசபக்தர். விடுதலைக்கு முன்பும் பின்பும் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். இன்று அவர் பெயரில் ஒரு கல்லூரி நடக்கிறது. அவர் 1967-இல் இறந்துவிட்டதாகவும் படித்தேன், பிற்காலத்தில் அதிமுகவில் சேர்ந்து சட்டமன்ற உறுப்பினரானதாகவும் படித்தேன். எது சரியோ தெரியவில்லை. ஒரு வேளை இரண்டு சட்டநாதக் கரையாளர்கள் இருக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை.

கரையாளர் என்பது கோனார் ஜாதியில் ஒரு உட்பிரிவு என்று தோன்றுகிறது. இல்லை கோனார் ஜாதியில் புழங்கும் பெயராக மட்டும் இருக்கலாம்.

கரையாளர் 1910 வாக்கில் பிறந்திருக்கிறார். தென்காசிக்காரர். 1937-இல் சட்டமன்ற உறுப்பினராகி இருக்கிறார். பின்னாளில் செங்கோட்டை தமிழகத்தோடுதான் இருக்க வேண்டும் என்று போராடினாராம்.

புத்தகம் முதல் பக்கத்திலேயே களைகட்டுகிறது. 1937 தேர்தலில் இவர் நிற்க வாய்ப்பிருக்கிறது. ராஜாஜியுடன் 1936-இல் நேர்காணல். ராஜாஜி கேட்பதெல்லாம் சிறை செல்லத் தயாரா என்பதுதான். கரையாளரின் வார்த்தைகளில் – (சட்டசபை செல்வது) ஜெயிலுக்கு செல்வது முதல் படி!

1940 டிசம்பரில் சத்யாகிரகம். என்னை சிறையில் அடையுங்கள் என்று கேட்காத குறைதான். ஆறு மாத தண்டனை.

புத்தகத்தை இரண்டு பகுதியாக பிரிக்கலாம். பிரதானப் பகுதியாக இருப்பது சிறையில் இருந்த பிற அரசியல் கைதிகளின் கோட்டுச்சித்திரங்கள். கூட இருந்தவர்கள் பலரும் அன்றைய தமிழக காங்கிரஸ் பெரிய தலைகள். ராஜாஜி, சுப்பராயன், டி.எஸ்.எஸ். ராஜன், ஸ்ரீபிரகாசா, வி.வி. கிரி, பி.எஸ். குமாரசாமி ராஜா, சர்தார் வேதரத்தினம், அவினாசிலிங்கம் செட்டியார், தினமணி ஆசிரியராக இருந்த டி.எஸ். சொக்கலிங்கம், மட்டப்பாறை வெங்கடராமய்யர் என்று பலர்.

இவரை முதலில் வேலூர் சிறைக்கு கொண்டு போயிருக்கிறார்கள். அங்கே அப்போது என்.ஜி. ரங்கா, முத்துராமலிங்கத் தேவர் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். சத்தியமூர்த்தி ஆஸ்பத்திரியில். சத்தியமூர்த்தி சிறை அதிகாரிகளுக்கு பூசணிக்காயை விட்டால் வேறு காய்கறியே கண்ணில் படாதா என்று அலுத்துக் கொள்வாராம்.

ஒரு பகுதியில் சிறையின் அன்றாட வாழ்க்கையை மிக சாதாரணமாக விவரிக்கிறார். உதாரணமாக கமான் செய்வது என்றால் ஒரு சிறையிலிருந்து இன்னொரு சிறைக்கு மாற்றுவது. சில நாட்களிலேயே இவரை திருச்சி சிறைக்கு கமான் செய்துவிட்டார்கள். ராஜாஜி போன்று பல முறை சிறை சென்றவர்கள் கறுப்பு குல்லாய் என்று அழைக்கப்படுவார்களாம். இவர் கறுப்பு குல்லாய் அல்லர். திருச்சி சிறையில் இவரது எண் 154. யார் நம்பர் 1? ராஜாஜிதான்! ஸ்ரீனிவாசராவ் என்பவர் ஆர்க்காடு பஞ்சாயத்து போர்டு தலைவராக இருந்தவராம். பிரமாதமாக சமைப்பாராம். 1932-இல் அவர் சிறையில் இருந்தபோது நன்னடத்தைக்காக அவரது தண்டனை சில நாட்கள்  குறைக்கப்பட்டிருக்கிறது. பிற கைதிகளின் வேண்டுகோளால் குறைக்கப்பட்டது ரத்து செய்யப்பட்டு அவர் பொங்கல் அன்று சமைத்துப் போட்டிருக்கிறார்! ஒரு முறை வி.வி. கிரியின் நாலு வயதுக் குழந்தை அவரை விட்டுப் போகமாட்டேன் என்று அழுதுகொண்டே சிறைக்குள்ளே வந்துவிட்டதாம்!

சுப்பராயனைப் பற்றிய விவரிப்பு அபாரம். சுப்பராயன் ஜமீந்தார். முதல் முறை சிறை. அவருக்கு சிறைக்கஷ்டமெல்லாம் அதிகமாகவே உணர்ந்தார், கோடைக்கு ஊட்டிக்கும் கொடைக்கானலுக்கும் போய் வருபவர் திருச்சியின் உஷ்ணத்தை அதிகமாகவே உணர்ந்தார் என்கிறார். கிரிக்கெட்டில் பயங்கர ஈடுபாடாம். சிறையில் யாரோ ஒரு வானொலி பெட்டி வாங்கி கொடுத்திருக்கிறார்கள், ரஞ்சி கோப்பை பந்தயம் ஒன்றில் சென்னை அணி தோற்பதைக் கேட்டு கண்ணீர் விடாத குறையாம். சுப்பராயன்தான் இந்தப் புத்தகத்துக்கு முகவுரை எழுதி இருக்கிறார்.

அடுத்த பகுதியாக சிறையின் நடைமுறைகளை விவரிக்கிறார். தண்ணீர் கஷ்டம், யாரையும் சுலபத்தில் சந்திக்க முடியாத நிலை, பாம்புத் தொல்லை, மூட்டைப்பூச்சி தொந்தரவு (ராஜாஜி முன்னின்று மருந்து அடித்து இந்தத் தொல்லையைக் குறைத்திருக்கிறார்) என்று பலவும் மிக சாதாரணமாக விவரிக்கப்படுவது poignant ஆக இருக்கிறது.

புத்தகத்தில் பல தலைவர்களின் கோட்டுச்சித்திரங்கள் இருக்கின்றன. Charming! இந்தப் பதிவில் இருக்கும் கரையாளரின் புகைப்படமும் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டதுதான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: விடுதலைப் போராட்டம்

தொடர்புடைய சுட்டிகள்:

  •  

அறிவியலாற்றுப்படை 22: கேள்வியின் நாயகனாகும் அறிவியல் – முனைவர் என்.மாதவன்

கேள்வியின் நாயகனாகும் அறிவியல் அறிவியலாற்றுப்படை – 22 – முனைவர் என்.மாதவன் நோவா என்ற பெயரில் ஒரு கடவுளின் அனுக்க சீடர் ஒருவர் இருந்தார். அவருக்கு மனைவியும் மூன்று மகன்களும் மருமகள்களும் இருந்தனர். ஒரு நாள் கடவுள் அவருக்கு ஒரு ஆணையிட்டார்.…

The post அறிவியலாற்றுப்படை 22: கேள்வியின் நாயகனாகும் அறிவியல் – முனைவர் என்.மாதவன் appeared first on Book Day.

  •  

எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் எழுதிய ‘மழலை’ சிறுகதை

எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் எழுதிய ‘ மழலை’ சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை குழந்தைகளை நம்புங்கள் – மணி மீனாட்சிசுந்தரம் அமெரிக்காவைச் சேர்ந்த கல்வியாளர் ஜான் ஹோல்ட் எழுதிய நூல்களுள் ஒன்று ‘ How Children learn?’ என்பதாகும்.தமிழில் அந்நூல் எழுத்தாளர்…

The post எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் எழுதிய ‘மழலை’ சிறுகதை appeared first on Book Day.

  •  

Kurunthokai 18: Big Jackfruit on a Fragile Branch

வேரல்‌ வேலி வேர்‌கோட் பலவின்‌
சாரல்‌ நாட! செவ்வியை ஆகுமதி
யார்‌ ௮ஃது அறிந்திசினோரே சாரல்‌
சிறுகோட்டுப்‌ பெரும்‌பழம்‌ தூங்கி யாங்கிவள்‌
உயிர்‌ தவச்சிறிது காமமோ பெரிதே
– கபிலர்‌, குறிஞ்சித் திணை


Veral veli verkot palavin
Saaral nada! Sevviyai aakumathi
Yaar akthu arinthisinore saaral
SiRukottu perumpazham thoongi yaangival
Uyir thavacchiridhu kaamamo peridhe


Oh Lord of the hills where bamboos fence the jackfruits growing in the roots
Marry this girl soon, find an auspicious time!
Her love and passion for you is great, and her hold on life is tenuous
Like a big jackfruit hanging from a fragile branch
– Kapilar, Kurinji Thinai (Hilly Landscape)


This is one of the brilliant poems from Kurunthokai. It is the imagery, the simile that elevates this poem.

The friend of the heroine is admonishing the hero. Probably there are secret trysts between them, which are getting rarer and rarer. It is easier on the hero, but the heroine is wasting away. And he needs to take the next step to save her.

Imagine a huge jackfruit hanging from a fragile branch, a twig. It is a not a question of if the fruit is going to fall to the ground but when. Her life is too hanging by a thread, she cannot live separated from him. Her love is immense, she is pining for him all the time and this all consuming passion is making her hold on life progressively tenous.

The friend of the heroine is bringing in a beautiful contrast. The hero owns lands where jackfruits goes on roots. There is no question of those fruits falling on the ground. The hero is the root-grown jackfruit, his passion is not eating him away. But the heroine is the fragile-branch-grown jackfruit, there is no life for her without him. A marriage as soon as possible is the only way to save her.

The poem refers to hills, slope, jackfruit trees. Hence the classification as a hilly landscape poem.

Kapilar has been referred to before, he is one of the most famous poets of the Sangam age.

Category: Kurunthokai Page

  •