Reading view

தௌஹீது பாத்திமாவும், இல்லாதுபோன அவரது புத்தம்புது இல்லமும் (கட்டுரை – 9)

தௌகீது ஃபாத்திமா அன்று காலை எப்படித் தயாரானார் என்று அவருக்கு நினைவில்லை. புதிதாகக் கட்டப்பட்ட அவரது வீட்டின் கட்டுமானத் தளத்திற்கு எப்படி விரைந்தார் போன்ற விவரங்கள் அவருக்கு நினைவில்லை. இன்னும் சில தினங்களில் அவர் குடிபுகவிருந்த வீடு அது. அவரது தந்தை தனது செல்ல மகளுக்காக அளவிலாத அன்புடன் தனது வாழ்நாள் சம்பாத்தியத்தை முழுவதும் கொடுத்து எழுப்பிய வீடு அது. அன்றைய தினம் தௌகீது ஃபாத்திமா பேசிய வார்த்தைகளோ, அவரிடமிருந்து பீறிட்ட கூக்குரலோ எதுவும் இப்போது அவருக்கு […]

Source

  •  

பொய்யாக உருவாக்கப்பட்ட கதைகளால் சஃப்தார் அலியின் வீடு பலியானது எப்படி? (கட்டுரை – 8)

தமிழில்: மணிபிரகாஷ் (தொடரின் அனைத்து கட்டுரைகளையும் வாசிக்க) சஃப்தார் அலிக்கு வயது 78. 1970-களில் கட்டப்பட்ட அவரது வீடு, அவரின் இரண்டு மகன்களான சையத் கமர் அப்பாஸ் மற்றும் சையத் ஃபராஸ் அப்பாஸ் ஆகியோருக்குச் சொந்தமானது. தங்கள் விவசாய நிலம் ஒன்றை விற்று வந்த பணத்தை வைத்து, 2002-இல் அந்த வீட்டை வாங்கினர். அப்போதிலிருந்து சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, எந்தவொரு சட்டவிரோதக் கட்டுமானம் குறித்தும் பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையத்திடமிருந்து (PDA) எந்த ஒரு அறிவிப்பையும் அவர்கள் […]

Source

  •  

புல்டோசர் இடிப்புகள் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்ன சொல்கிறது? (கட்டுரை – 7)

தமிழில் : நந்தினி கடந்த நவம்பர் மாதம், சட்டத்திற்குப் புறம்பாக நடைபெறும் புல்டோசர் இடிப்புகள் தொடர்பாக, பரவலான வரவேற்பைப் பெற்ற ஒரு தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கியது. இருப்பினும், அதன் நோக்கத்திலும் செயலாக்கத்திலும் அத்தீர்ப்பு குறைபாடுகளைக் கொண்டிருப்பதாகவே தோன்றியது. இக்கட்டுரையில், இத்தீர்ப்பையும், புல்டோசர் இடிப்புகள் தொடர்பாக அது முன்வைத்த கருத்துகளையும், சமூகத்தில் அது ஏற்படுத்திய மற்றும் ஏற்படுத்தத் தவறிய பாதிப்புகளையும் விரிவாக ஆராய்வோம். இந்திய நீதித்துறையில் அடிப்படைத் தூண்களாகக் கருதப்படும் சட்டத்தின் ஆட்சி , அதிகாரப் […]

Source

  •  

குக்ரைலும் சட்டப்பூர்வ புல்டோசர் இடிப்புகளும் (கட்டுரை – 4)

தமிழில்: பிரவீன் துளசி “நாங்கள் வீடற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். எல்லாமே என் கையைவிட்டுப் போகிறது. என் குழந்தைப்பருவத்தை இங்குதான் கழித்தேன். எனது வளர் பருவத்தையும் இங்குதான் வாழ்ந்தேன். ஒருவேளை நான் இங்கேயே இறந்துபோயிருக்கவும் கூடும்”  – ஃபர்ஹானா, அக்பர் நகரில் வசிப்பவர்.   2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் உத்தரப் பிரதேச அரசு மேலும் ஒரு அதிரடி புல்டோசர் இடிப்பு நடவடிக்கையை லக்னோவின் அக்பர் நகர் பகுதிகளில் அரங்கேற்றியது. அப்போது, சுமார் 1169 வீடுகளும், 101 வர்த்தக நிறுவனங்களும் […]

Source

  •  

புல்டோசர் இடிப்புகள்: சட்ட வரையறைகளும், அதிலிருந்து விலக்கு பெறுதலும் (கட்டுரை – 3)

தமிழில்: நீலாம்பரன் “குரலற்றவர்கள் என்று எவரும் இல்லை. திட்டமிட்டு பேசவிடாமல் மௌனமாக்கப்படுபவர்களோ அல்லது குரல் எழுப்பியும் அது கேட்கப்படாமல் தவிர்க்கப்படுபவர்களோ தான் இருக்கிறார்கள்” – அருந்ததி ராய். இந்திய நாட்டில், ‘சட்டத்திற்குப் புறம்பான’ என்னும் சொல்லாடல் காவல்துறையின் திட்டமிட்ட என்கவுண்டர்களை விவரிக்க பொதுவாகப் பயன்பட்டு வந்தது. ஆனால், சமீபத்திய ஆண்டுகளில், மனித உரிமைகளை மீறியும், சட்டத்தை மதிக்காமலும் அரசுகளால் மேற்கொள்ளப்படும் மற்றொரு வகையான நிகழ்வினை வரையறுக்கவே அந்த வார்த்தை அதிகமாகப் பயன்படுகிறது. புல்டோசர்களைக் கொண்டு வீடுகளை இடித்துத் […]

Source

  •  

கான்பூர் இடிப்பு குறித்த மீளாய்வு (கட்டுரை – 2) – தமிழில்: மோசஸ் பிரபு

“குறிப்பிட்ட சில மக்களைக் குறிவைத்து, ‘அவர்களும் சக மனிதர்கள்தான்’ என்கிற சிந்தனையை மற்றொரு மக்கள் குழுவினரின் மனங்களில் இருந்து மறக்கடிக்கச் செய்வதுதான் பிரிவினைவாதப் பிரச்சாரம் செய்பவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கிறது” – ஆல்டஸ் ஹக்ஸ்லி. “இந்து-முஸ்லிம் என மக்களைப் பிரித்துப் பேச மாட்டேன்” என்று மே 14 ஆம் தேதியன்று அறிவித்தார் நரேந்திர மோடி. ஆனால், அந்த வாக்குறுதியை அவரால் அடுத்த மூன்று நாட்களுக்குக் கூடக் கட்டிக்காக்க முடியவில்லை. அதாவது, அன்றிலிருந்து மூன்று நாட்கள் கழித்து, மே 17 […]

Source

  •  

கான்பூர் இடிப்பு குறித்த மீளாய்வு

“குறிப்பிட்ட சில மக்களைக் குறிவைத்து, ‘அவர்களும் சக மனிதர்கள்தான்’ என்கிற சிந்தனையை மற்றொரு மக்கள் குழுவினரின் மனங்களில் இருந்து மறக்கடிக்கச் செய்வதுதான் பிரிவினைவாதப் பிரச்சாரம் செய்பவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கிறது”  – ஆல்டஸ் ஹக்ஸ்லி. “இந்து-முஸ்லிம் என மக்களைப் பிரித்துப் பேச மாட்டேன்” என்று மே 14 ஆம் தேதியன்று அறிவித்தார் நரேந்திர மோடி. ஆனால், அந்த வாக்குறுதியை அவரால் அடுத்த மூன்று நாட்களுக்குக் கூடக் கட்டிக்காக்க முடியவில்லை. அதாவது, அன்றிலிருந்து மூன்று நாட்கள் கழித்து, மே […]

Source

  •  

புல்டோசர் இடிப்புகள் – புதிய முயற்சி, புதிய தொடர்

செல்வந்தர்களுக்கு நகரங்களைத் தாரைவார்ப்பதற்காக ஆண்டாண்டு காலமாக அங்கே வாழ்ந்துவரும் ஏழை எளிய மக்களின் குடிசைகளை இடித்துத் தள்ளுவதென்பது உலகெங்கிலுமுள்ள ஆட்சியாளர்கள் தொடர்ந்து கடைபிடித்துவரும் ஒரு நடைமுறையாகும். மக்களின் வீடுகளை இடித்துத் தள்ளும் கொடூரத்தின் அடுத்த கட்டமாக மற்றொரு தளத்திற்கு பாசிச பாஜக அரசு நகர்ந்து சென்றிருக்கிறது.  சிறுபான்மையின மக்களின் இருப்பையே கேள்விக்குறியாக்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களை எப்போதும் அச்சுறுத்தலிலேயே வைத்திருக்க விரும்பும் இந்துத்துவ ஆட்சியாளர்கள், அம்மக்களின் சிறுபான்மை மத அடையாளத்திற்காகவே அவர்களது வீடுகளை இடித்துத் தள்ளி வருகின்றனர். மதங்களையும், […]

Source

  •