Reading view

கவிஞர் ஆத்மாஜீவுக்கு உதவிதேவை

கவிஞர் ஆத்மாஜீவுக்கு உதவிதேவை

C:\Users\computer\Desktop\ATHMAJIV\493264165_1822589748308751_7037754692867415298_n.jpg

_ லதா ராமகிருஷ்ணன்

காலக்ரமம் என்ற சிற்றிதழைக் கைக்காசு போட்டு நடத்தியவர். கணிசமான எண்ணிக்கையில் தரமான கவிதைகள் எழுதியிருப்பவர்; எழுதிவருபவர் கவிஞர் ஆத்மாஜீவ். சமீபகாலமாக உடல்நலன் குன்றி, கூடவே மகளின் திருமணம், பிரசவகால சிக்கல்கள் ஆகியவற்றால் கடனாளியாகி, தான் செய்துகொண்டிருக்கும் கணினி தட்டச்சுவேலையையும் சரிவர செய்ய இயலாமல் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஃபேஸ்புக்’கில் வெளியாகிக்கொண்டிருக்கும் அவருடைய சமீப கால கவிதைகள் அவருடைய வாழ்வியல் சார் நெருக்கடியை, இயலாமையை, அதனால் அவர் ’ஃபேஸ்புக்’ நட்பினரிடம் உதவி யாசிக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதை, அப்படி அவருக்கு சிலர் உதவ முன்வருவதை, வேறு சிலர் அவரை அதற்காகப் பரிகசிப்பதை, மதிப்பழிப்பதையெல்லாம் கவித்துவம் குறையாத கவிதை களாக வெளிப்படுத்துகின்றன. ஆனால், அவற்றின் கவித்துவத்தைப் பூரணமாக அனுபவிக்க முடியாதபடி அவருடைய இக்கட்டான நிலை நமக்குள்ளும் ஒரு அலைக்கழிப்பை ஏற்படுத்துகிறது. [கவிஞர் ஆத்மாஜீவை மின்னஞ்சல் மூலம் நான் கண்ட பேட்டி பதிவுகள் இணைய தளத்தில் 28 மார்ச் இதழில் வெளியாகியுள்ளது. அதன் இணைப்பு  இதோ: https://www.geotamil.com/…/202…/9055-2025-03-28-18-07-45 ]

ஆத்மாஜீவின் சமீபகால கவிதைகள் சில:

ஒவ்வொரு விடியலிலும் 

இரவின் வாசனை

கவலைகளின் படுக்கையில் 

படுத்திருப்பது நினைவுகளின் 

உடல்.

துயரின் போர்வைக்குள் 

ஒளிந்து கொள்கிறேன்.

ஆறுதல்களின் காற்றில் மனம் 

நொடிநேர ஆசுவாசமாகிறது.

கடந்து போகிற சாலைகளில் 

இரத்தச் சுவடுகள் பதிகிறது.

எனது முகத்தைப் பார்க்கும்போது 

யாரோவின் முகமாகத் தெரிகிறது.

கடவுளே 

எங்கே நான் தொலைந்து போனேன்.

ஆத்மாஜீவ்

உற்சாகம் மிகுந்த 

நொடிகளுக்காக ஏங்குகிறேன்.

கவலைகள் படிந்த 

இந்த முகத்தைப் பிடிக்கவில்லை.

கம்பீரமான வார்த்தைகள் 

ஒதுங்கி நிற்கிறது.

ஒரு காலத்தில் 

சிரித்துக் கொண்டிருந்ததாக ஞாபகம்.

கொடுத்துக் கொண்டிருந்த கைகள் 

ஏந்திக் கொண்டிருக்கும் ஓவியத்தை 

வரைகிறேன் இப்போது.

உற்சாகம் இழந்து 

கவலைகள் படிந்த முகத்துடன் 

அலையும் என் கண்களில் படிகிறது 

ஒரு பிச்சைக்காரனின் வலி.

ஆத்மாஜீவ்

#ஆதிவிதையின்_நிழல்

ஜன்னல்கள் எல்லாவற்றையும்

சாத்தி விட்டேன்

அறையின் நடுவில் எரிந்தபடி இருக்கிறது

சிறிய அகல்விளக்கு

அகண்ட நெருப்புக்கோளத்தின்

அடையாளமாக

எனது முக ஓவியம் தீட்டப்பட்ட மேல்சுவற்றில்

இரண்டு நட்சத்திரங்கள் மட்டும்

இடையறாமல் ஒளிர்ந்து கொண்டு இருக்கிறது

மூன்றாம் கண்ணிற்குள் அமர்ந்து

வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தில்

எழுத்துகள் எதுவும் பதிக்கப்படவில்லை

வருவதும் போவதற்குமான

இடைவெளிகளில் நிற்கும் கடவுளை

கண்டு கொள்வதாயில்லை யாரும்

திறந்தே இருக்கும் வாசலின் கதவை

தட்டியபடி நிற்கும் கரங்களில் வழிகிற

குருதியிலிருந்து மறுபடி முளைக்கிறது

ஆதிவிதையின் நிழல்

ஆத்மாஜீவ் 

#காற்றில்_புரளும்_காலத்தின்_ஏடுகள்.

காலத்தின் ஏடுகள் காற்றில் புரள்கிறது.

சுவற்றில் வரையப்பட்ட கிறுக்கல்களாய் 

எனது வார்த்தைக் கூட்டங்கள்.

ஈரத்துணியை முறுக்கிப் பிழிவதுபோல் 

இருக்கிறது எனது வாழ்க்கை.

உயிருணர்வு மிக்க நிழல் 

உலவுகிறது.

கனிதரும் மரங்களை வரைகிறேன்.

ஈரமுலராத மண்ணில் வேரூன்றி நிற்கிறது

அது.

கடந்து போகும் பாதையில் இரைந்து 

கிடக்கத்தான் செய்யும் கல்லும் முல்லும்

மெல்ல ஓதுகின்றன 

என்னுள் ஐக்கியமாகும் இறைநிழல்கள்.

எனது துயரங்களின் குரலை 

கருணையுடன் கேட்கும் காதுகளை 

கடவுளின் வரவாக இருப்பில் வைக்கிறேன்.

எதையும் கேட்க விரும்பவில்லை 

நான்.

பயணத்தின் பாதை முடிகிற போது 

வண்டியிலிருந்து இறங்கிச் செல்லும் 

ஒரு வழிபோக்கனின் கடைசி பாதச்சுவட்டில் 

விதை ஒன்றை புதைக்கிறேன்.

யாரும் எதுவும் செய்ய வேண்டாம்.

காற்றில் புரளும் காலத்தின் ஏடுகளிலிருந்து 

ஒருக்கால் 

மலர் ஒன்று மலரக் கூடும்.

ஆத்மாஜீவ்

என் வாழ்வின் கடைசித் துயர்

உதிரப்போகும் இலையின் அசைவு.

கல்தூணை விரும்பாதவனின்

எளிமையான விடைபெறுதல்.

சொற்களால் அடையாளப்பட்டவனின் மொழி

தனிமையின் வனாந்தரத்தில் அலைகிறது.

எழுதப்படாத புத்தகத்தின் வெற்றுப் பக்கத்தில்

கண்சிமிட்டிக் கொண்டிருக்கிறது

முற்றுப்புள்ளி.

நடந்து கொண்டேயிருக்கிறேன்

பாம்பின் சட்டையை உரித்துக் கொண்டு.

யாசித்து அழுகிய கைகளை

எங்கே சென்று புதைப்பேன்.

ஆத்மாஜீவ்

கவிஞர் ஆத்மாஜீவின் வேண்டுகோள் இது. முடிந்தவர்கள் உதவ மறவாதீர்கள்

கவிஞர் ஆத்மாஜீவ் கைகூப்பிக் கேட்கிறேன்.

நட்பினர்களுக்கு என் அன்பான வணக்கம். 🙏

என் இதயத்திலிருப்பதை என் நட்பினரிடம் மனம்விட்டு சொல்கிறேன். 

ஓரிரு நிமிடங்கள் இந்தப் பதிவை தயவுசெய்து வாசிக்கும்படி பணிவுடன் வேண்டுகிறேன்.

இப்படி தொடர்ந்து உதவிகேட்டு பதிவிடுவதும், அதன் லிங்கை இன்பாக் சில் அனுப்பி யாசிப்பதும், எனக்கு மிக அவமானமாகத்தான் இருக்கிறது. ஒரு குற்றவுணர்ச்சியுடன்தான் வேறுவழியின்றி நண்பர்களை சங்கடப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

எனது உடலும் மனமும் முற்றிலும் தளர்ந்து விட்டது. உணவுக்கான தேவையைக்கூட பூர்த்தி செய்து கொள்ள முடியவில்லை. அன்புமகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது. 

கழுத்தை நெறிக்கும் கடன்பிரச்சனை ஏறுமுகமாகவே இருக்கிறது. அதிகப் படியான மனஉளைச்சலின் காரணமாக மூன்று வாரத்திற்குமுன் நான் மூர்ச்சையிழந்து சாவை சந்தித்து, ஆக்சிஜன் மூலம் மறுஉயிர்த்தெழந்ததில் ஏகப்பட்ட மருத்துவச்செலவு. இரண்டு வாரங்களாக வேலைக்கு செல்ல முடியாமல் போனது. இப்போதும் நீண்ட நேரம் அமரமுடியாதநிலை. மயக்கமும், மிகுந்த அழுத்தமான மனவேதனையும் சூழ்ந்திருக்கிறது.

இப்படி உதவி கேட்டு தொடர்ந்து முகநூலில் பதிவிடுவது பெரிய அவமானமாக இருக்கிறது. முகநூலில் எனக்கான இடம் முற்றிலும் கேலிக்குரியதாகி விட்டது. வாழ்வதற்கான எந்த ஆதாரமும். பிடிப்புமின்றி அவதிப்பட்டுக் கொண்டிருக் கிறேன்.

முகநூல் நண்பர்கள் அவ்வப்போது அனுப்பும் உதவிப் பணத்தில்தான் மருத்துவச் செலவும், உணவுத் தேவைகளையும் கவனித்துக் கொண்டிருக்கிறேன். நிறைவாக இல்லையென்றாலும், நட்பினரின் உதவியால்தான் ஓரளவுக்காவது சமாளித்துக் கொள்கிறேன்.

இன்பாக்சில் பலரிடம் உதவி கேட்பது சங்கடமாக இருந்தாலும், உடல் ஒத்துழைக் காத நிலையில்தான் அவமானத்துடன் இப்படி கேட்கவேண்டியதாக இருக்கிறது.

அன்பு நண்பர்களே,

கவிதை எழுதிக் கொண்டிருந்த நான் இன்று அதையே காரணங்காட்டி பிச்சை யெடுத்துக் கொண்டிருக்கிறேன் என்பதை ஒத்துக் கொள்கிறேன். இந்த முகநூலை விட்டால் எனக்கு வேறு நாதியில்லை என்ற நிலையில் தான் இன்று இந்தப் பதிவை மிகுந்த தயக்கத்துடன் கூனிக்குறுகி பதிவிடுகிறேன்.

உங்களால் முடிந்தது சிறுதொகை என்றாலும், தயவுசெய்து பிச்சையிடுவதாக நினைத்து அனுப்பி உதவுகிறீர்களா? 

கையறுநிலையில் கையேந்தும் ஒருவனுக்கு நீங்கள் அனுப்பித்தரும் சிறு அளவிலான ஆதரவும் எனக்கு, எங்களுக்கு பேருதவியாக இருக்கும்

பணிவுட னும் வணக்கத்துடனும்

இப்படி உதவி கேட்டுதான் வாழ வேண்டுமா? என்ற கேள்வி என்னை தலைகுனிய வைக்கிறது. 

நான் மட்டும் சம்பந்தப்பட்டிருந்தால், சென்ற 2024 ஏப்ரல் மாதமே “எல்லாம் முடிந்திருக்கும்”. இதுபோல, “கடன்பிரச்சனை கழுத்தை நெறிக்கிறது தயவு செய்து உங்களாலான உதவியை செய்யுங்கள்”, என்று யாசிக்கும்படியாக பதிவிட வேண்டியதிருந்திருக்காது.

எனக்கு மட்டுந்தான் கடன்பிரச்சனை, குடும்பப்பிரச்சனை. உடல் மற்றும் மனஉளைச்சல் பிரச்சனைகளா? இப்படி அசிங்கப்படும்படியாக உதவிகேட்டு கையேந்த வேண்டுமா? என்ற கேள்விகள் ஒருபுறம் இருந்தாலும், எனக்கு வேறுவழி தெரியவில்லை. மன்னியுங்கள் நண்பர்களே.

“உடுக்கை இழந்தவன் கைபோல…” என் மீதுள்ள அபிமானத்தில் சில நண்பர்கள் அவ்வப்போது உதவுகிறார்கள்.

“ஒருவரையொருவர் நேசிக்கிற பெருங்குணம் காரணமாக, தன்பக்க மிருக்கும் சிரமங்களுக்கிடையிலும் சிறுதொகையேனும் எனக்கு அனுப்பி உதவி செய்திருக் கிறார்கள் பலர்.

சொல்வதற்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தை போதாது. உதவிய அனைவரும் மனிதவுருவில் தெய்வமென நன்றியுடன் வணங்குகிறேன்.

எத்தனை முயற்சி செய்தும், நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள, நேர்மறையான சிந்தனைகளில் மனதை தேற்றிக் கொள்ள முயற்சித் தாலும், பசியும் கடனும் நெருக்கும்போது, தானாகவே எதிர்மறையில் போய் சிக்கிக் கொள்ள நேர்கிறது. 

கடந்து போகும் என்ற நம்பிக்கையை மட்டும் கடந்துபோகாமல் இறுகப் பிடித்துக் கொண்டு போராடுகிறேன்.

இந்தப் பதிவை முழுதாக வாசித்தவர்களுக்கும், இதைப்போன்றோ, அல்லது இதைவிட சற்றுகூடுதல் குறைவாகவோதான் வாழ்க்கையிருக்கு மென அறிவேன். எனினும், எனது நட்பு வட்டத்திலுள்ள நண்பர்களின் மீதான அதீத நம்பிக்கையில், என்னை நான் வெளியரங்கப்படுத்திக் கொண்டுள்ளேன். பலர் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எனது கவிதைப் பயிற்சிக்கான ஒரு அருமையான களமாக இந்த முகநூலை பயன்படுத்திக் கொண்டிருந்த நான், இன்று என்னை ஒரு கவிஞனாக முன்னிலைப்படுத்தி கையேந்திக் கொண்டிருக்கிறேன் என்பது தவிர இந்த வாழ்க்கைமீது எனக்கு எந்த புகாருமில்லை என்பதையும் பதிவு செய்து கொள்கிறேன்.

உதவ மனமிருந்தும் உதவமுடியாத சூழலிருப்பவர்களுக்கும், இதுவரை யிலும் எனக்கு உதவி செய்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறேன்.

உதவக்கூடிய சாத்தியமுள்ளவர்கள், தங்களால் முடிந்த உதவியை செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

உங்களின் எந்தவொரு சிறுஉதவியும் எனக்கு பேருதவியாகவே இருக்கும் நண்பர்களே.

நம்பிக்கையுடன், நன்றியுடன்… 🙏

ஆத்மாஜீவ், காலக்ரமம் ஆத்மாஜீவ் என்கிற வி.சி.ராஜேந்திரன், சேலம்

எனது வங்கி மற்றும் GPay விபரங்கள்.

#Bank_Details : Rajendran Chinnasamy

Kotak Mahindra Bank

Branch : Shevapet, Salem.

Account Number : 6249465891

IFSC Code : KKBK0008781

#GPay_Number : 84385 44124

#Name : V.C. Raj

C:\Users\computer\Desktop\ATHMAJIV\APPEAL FROM ATHMAJIV\கவிஞர் ஆத்மாஜீவுக்கு உதவி தேவை (1) image.jpg
  •  

முயன்றுபார்ப்போம் மொழிபெயர்ப்பை தொகுதி 1  & தொகுதி 2

(ANAAMIKAA ALPHABETS வெளியீடு)

_ லதா ராமகிருஷ்ணன்

C:\Users\computer\Desktop\TRANSLATION BOOK IMAGES\495575539_2593416767670578_2721681043549735072_n (2).jpg
C:\Users\computer\Desktop\TRANSLATION BOOK IMAGES\495568723_2593416844337237_5976183938633954823_n (2).jpg

awaamikaa’முயன்றுபார்ப்போம் மொழிபெயர்ப்பை’ என்ற தலைப்பு பொருத்தமானதாகத் தோன்றியது. இதுவொரு புதிய முயற்சி. இந்த நூல் வாசிப்போருக்கு சுவாரசியமாகவும், பயனுள்ளதாகவும், மொழிபெயர்ப்புக் கலை குறித்த சில கோணங்கள், பாணி களை அறிந்துகொள்ள வழிவகுப்பதாகவும் அமையும் என்று நம்புகிறோம். 

நன்றி

மொழிபெயர்ப்பாளர்கள்

லதா ராமகிருஷ்ணன் – எஸ்.ஆர்.தேவிகா

C:\Users\computer\Desktop\TRANSLATION BOOK IMAGES\முயன்றுபார்ப்போம் மொழிபெயர்ப்பை!   new PDF_00001.jpg

*

இருநூல்களிலும் வெளியாகியிருக்கும் என்னுடைய முன்னுரையிலிருந்து சில பகுதிகள்:

மொழிபெயர்ப்பு குறித்த பார்வைகள் கண்ணோட்டங்கள் – உலகளாவிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த படைப்புகள் மொழிபெயர்ப்பாளர்கள் முன் வைத்திருப்பவை –  இணையத்தில் கூட்டமாக கொட்டிக்கிடக்கின்றன! சர்வதேச மொழி பெயர்ப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது  – செப்டம்பெர் 30. இவற்றையெல்லாம் அறிந்துகொள் வதும் படித்துத் தெரிந்துகொள்வதும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் மொழி பெயர்ப்புப்பணியைப் பொறுத்தவரை இரண்டு பழமொழிகளை நாம் நினைவு வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.  ஒன்று, சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம். இன்னொன்று ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது கடந்த முப்பது ஆண்டுகளாக புனைவு அ-புனைவு பிரதிகளை ஆர்வம் காரணமாகவும் புதிய விஷயங்களை அறிமுகப்படுத்துமாறு தமிழ்மொழியின் சிறுபத்திரிகைவெளியைச் சேர்ந்த நட்பினர் அன்போடு கேட்டுக் கொண்டதற்காகவும் மொழிபெயர்த்திருக்கிறேன் தொழில் முறை மொழிபெயர்ப்பாளராகவும் இயங்கிவருகிறேன் இந்த அனுபவங்களின் பின்னணியில் இதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

மொழிபெயர்ப்பாளர்கள் முக்கியமாக இரு வகைப்படுவர். பல்வேறு பிரதிகளை படித்து அவற்றில் சிறந்தவற்றை, மனதுக்குப் பிடித்தவற்றை மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுத் துக்கொண்டு மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டிருப்ப வர்கள் இன்னொரு பிரிவினர், மற்றவர்களால் தேர்ந்தெடுத்து தரப்படும் பிரதிகளை கட்டணம் பெற்றோ கட்டணமில் லாமலோ மொழிபெயர்ப்பு செய்பவர்கள்.

ஓர் இலக்கியப் பிரதியை மொழிபெயர்ப்பதற்கும், இலக்கியம் அல்லாத பிரதியை மொழிபெயர்ப்பதற்கும் இடையே என்ன வேறுபாடு இருக்கிறது? ஒரு பிரதியை மொழிபெயர்க்கும் போக்கில் ஒரு முட்டுக்கட்டையை _ முழுமையான அர்த்தம் அல்லது பயன் படுத்தப்பட்டிருக்கும் சூழமைவு அல்லது அதன் உள்ளர்த்தம் புரியாமல் இருக்கும் நிலை _  எதிர்கொள்ளவேண்டிவந்தால் அதை நாம் எவ்வாறு கடந்து செல்வது? மற்றவர்களின் உதவியை நாடவேண்டுமா? அப்படியெனில் யார் அந்த மற்றவர்கள் ? அல்லது, மூலப் பிரதிக்கு பாதிப்பு ஏற்படாத அளவில் நாம் சிக்கலான வார்த்தை அல்லது சொல் வழக்கை விட்டுச் சென்றுவிட லாமா? மூலப்பிரதியிடம் ஒரு மொழிபெயர்ப்பாளர் எடுத்துக்கொள்ளக்கூடிய சுதந்திரங்கள் யாவை? மொழி பெயர்ப்பின் அரசியல் என்று நாம் குறிப்பிடுவது என்ன? மொழிபெயர்ப்பு என்ற செயல் பாட்டின் வெளிப்படையான நோக்கங்கள், மறைமுகமான நோக்கங்கள் யாவை?

 இத்தகைய கேள்விகள் சந்தேகங்கள் ஒரு மொழிபெயர்ப்பாளர் மனதைத் துளைத்துக்கொண்டேயிருக்கின்றன. இருந்தும், இவை எல்லாவற்றையும் மீறி ஒரு மொழிபெயர்ப்பாளரை தொடர்ந்து இயங்கச் செய்து மக்களை இயங்கச் செய்வது மக்களிடையே ஒரு தகவல் தொடர்பாளராகப் பணியாற்றும், வெவ்வேறு மக்கள் இடையே பாலமாக திகழும் ஒரு பிரதியை மொழிபெயர்ப்பது மூலம் தனக்குக் கிடைத்த நுண்ணுணர்வுகள், அழகியல், வாழ்க்கை குறித்த விழிப்புணர்வுகள் முதலியவற்றை சக மனிதர்களோடு பகிர்ந்து கொள்ளும் ஆர்வமும், இந்த விஷயங்கள் ஆனந்தமாக ஒருவருக்குக் கிடைக்க நம்மால் வழிசெய்ய முடியும் என்ற உண்மையும் மொழிபெயர்ப்பாளரைத் தனது பணியில் அதிக அளவு பொறுப்பேற்பு உணரச் செய்கிறது. மிக முக்கியமான ஆக்கபூர்வமான வலி நிவாரணமான பல தகவல்களையும் உணர்வுகளையும் மொழிபெயர்ப்பாளர் மற்றவர்களிடம் கொண்டு போகிறார். இந்த வகையில் பார்க்கப் போனால் மொழிபெயர்ப்பு என்ற செயல்பாடு அடிப்படையாகவே ஒரு சீர்திருத்தவாதியின் செயல்நோக்கம் கொண்டது என்றும் சொல்ல முடியும்

ஒரு படைப்பாளி தன் உள்ளிருக்கும் தேர்ந்த வாசகரை திருப்திப்படுத்திக் கொள்வதே பிரதானமாய் கதை கவிதை கட்டுரை என எழுதலாம் அதில் தவறு ஏதும் கிடையாது ஆனால் ஒரு மொழிபெயர்ப்பாளர் மற்றவர்களுக்கு இருக்கும் வாசகர்களுக்கு ஆகவே முதன்மையாக செயல்படுகிறார் எனவேதான் மொழிபெயர்ப்பு என்ற செயல்பாடு அதனளவில் ஒரு சமூகச் செயல்பாடாக விளங்குகிறது எனலாம்.

இந்த செயல் பாட்டின் நோக்கம் எத்தனைக்கெத்தனை ஆக்கபூர்வமாகவும் நேர்மையானதாக இருக்க முடியுமோ அத்தனை அத்தனை அறிவுத்திறன் கொண்டதாகவும் எதிர்மறையானதாகவும் இருக்க வழியுண்டு. சிலர் மொழிபெயர்ப்பை எளிய வாசகர்களை ஏமாற்றுவதற்கான அவர்கள் மீது அதிகாரம் செலுத்துவதற்கு ஆன கருவியாக பயன்படுத்துவதும் உண்டு சில மொழி பெயர்ப்பாளர்கள் தம் மனம் போன போக்கில் மூலப் பிரதியை திருத்தியும் சுருக்கியும் அவர்கள் அளவில் தேவை யற்ற அல்லது அவர்களுக்கு பிடிக்காத பத்திகளை வரிகளை அழுத்தம் குறித்தும் அல்லது அறவே விளக்கியும் வேறு சில பத்திகளை வரிகளை புதிதாக இணைத்தும் அல்லது இடமாற்றம் செய்து மூலப்பிரதியில் மீது அதிகாரம் செலுத்துவதும் உண்டு

மொழிபெயர்ப்பாளருக்கு அடிப்படைத் தேவை இரு மொழித் திறன். மூலப்பிரதியின் உள்ளடக்கம் குறித்த அடிப் படைப் புரிதல். மூலப்பிரதியின் தொனி,, நடை, மூலப் படைப்பாளி படைப்பாளி ஒரு சொல்லை எந்த அர்த்தத்தில் பயன்படுத்தியிருக்கிறார் என்று அறிதல் –  வேறு சிலவும் உண்டு. மூலப் பிரதிக்கு ஏற்பவும் அது மொழி பெயர்க்கப்படுவதற்கான காரணம்  குறித்தும், இலக்கு மொழி வாசகர்கள் எத்தரப்பினர்  – அதாவது, சிறுவர் சிறுவர் சிறுமியரா, பள்ளி அல்லது கல்லூரி மாணவர்களா, பெரியவர்களா என்பது பற்றியும் மொழிபெயர்ப்பாளருக்குத் தெரிந்திருக்கவேண்டும்.  மூலப்பிரதி எழுதப்பட்ட காலத்தில் புழங்கிய அல்லது பயன்படுத்தப்பட்ட வார்த்தை கள் அதேயளவு இலக்குமொழியில் பயன்படுத்தப்படவேண்டுமா அல்லது சம காலத்தில் புழங்கும் வார்த்தைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாமா என்ற தெளிவும் தேர்வு மொழிபெயர்ப்பாளருக்கு இருக்கவேண்டும். 

தமிழ் தாத்தா உவேசாவின் என் சரித்திரத்தை சாகித்ய அகாதமிக்காக சில வருடங் களுக்கு முன்பு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த டாக்டர் சுப்ரமணியன் மூல ஆசிரியர் ’சல்லாபிக்கும்’ என்ற வார்த்தையை உரையாடல் என்ற பொருளில் பயன்படுத்தியிருப்பதைச் சுட்டிக் காட்டியதை இங்கே நினைவு கூறத் தோன்றுகிறது

TRANSLATION IS APPROXIMATION என்பார்கள். அ APPROXI MATION என்பதற்கு ஒத்திருத்தல், அணுகுதல் நெருங்கிய அளவில், ஏறத்தாழ சரியாய், என அர்த்தங்கள் அகராதிகளில் தரப்பட்டிருக்கின்றன ஆனால், அதைவிட முக்கியமாக ஒரு மொழிபெயர்ப்பாளரிடம் இருக்க வேண்டி யது DISCRETION என்று சொல்லலாம்: ’பொருந்துமாறு அறிதல். குழந்தைகளுக் கான(க)  கதைப் புத்தகத்தை மொழிபெயர்க்கும் போது –  கவனிக்கவும் – கதை புத்தகம்; மொழியியல் சார் நூல் அல்ல  –  ’பஸ்’ என்ற சொல்லை பேருந்து என்று மொழிபெயர்ப்பது சரியா? அதுவே FISHஏஐ மீன் என்று மொழிபெயர்ப்பதே சரி! இந்தக் குழப்பமும் தெளிவும் மொழிபெயர்ப்பாளருக்கு இருக்கவேண்டியது அவசியம்.

 ஆரம்பத்தில் தமிழ்ச் சிற்றிதழ்களில் சில  இலக்கிய படைப்பு களை நட்பினரின் வேண்டுகோளுக்கு இணங்கி ஆர்வமாக மொழிபெயர்த்த காரணத்தால் பின்னாளில் தொழில் முறை மொழிபெயர்ப்பாளராக பலவகையான பிரதிகளை மொழி பெயர்க்கவேண்டிவந்தபோது ’இலக்கு வாசகர்களை மனதில் கொண்டு எளிமையாக மொழியாக்கம் செய்யும்’படி என்னிடம் பலமுறை கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது! உதாரணமாக, குழந்தைகளுக்கான கதைகள், எழுத்தறிவு இயக்கத் திற்கான கையேடுகள் போன்றவை. அதேசமயம் எந்த அளவுக்கு ஒரு மூலப்பிரதி எளிமைப் படுத்தப்படலாம் என்பது பற்றிய தெளிவு ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு இருக்க வேண்டியது அவசியம்.

கடினமான வார்த்தைகள்தான் மொழிபெயர்க்கச் சிரமமா னவை என்று நினைப்பது சரியல்ல. மிக எளிய வார்த்தைகள்  We, Our  கூட நம்மைத் திகைக்கவைத்துவிடும்! We என்றால் நாமா, நாங்களா, Our என்றால் நம்முடையதா எங்களுடையதா  –  He என்றால் அவனா, அவரா? –  இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்

தொண்ணூறுகளில் நடந்த சாகித்திய அகாதெமி பிராந்திய மொழி பெயர்ப்புப் பயிலரங்கில்  கலந்துகொள்ளும் வாய்ப் புக் கிடைத்தது. My Child என்ற ஆங்கில சொற்பிரயோகத்தை ஒரு பங்கேற்பாளர் ’குழந்தே’ என்று தமிழில் மொழி பெயர்த்தார்.  மற்றொருவர் ‘கண்ணு’ என்று மொழிபெயர்த் தார்.  வேறொரு வர் ’செல்லம்’ என்றார். இன்னொருவர் பாப்பா என்றார்! ஒரு மொழிபெயர்ப்பாளரின் வாழ்வுச் சூழலும் அவருடைய மொழிபெயர்ப்பில் பயன்படுத்தப்படும் சொற்கள், தேர்வுகளில் ஏதோ ஒரு வகையில் வினையாற்றுகின்றன எனலாம்.

மொழிபெயர்ப்பு எனும்போது நாம் இங்கே ஆங்கிலத் திலிருந்து தமிழிலும் தமிழி லிருந்து ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்படுவதையே கருத்தில் கொண்டு பேசுகி றோம் என்பது குறிப்பிடத்தக்கது. பிறமொழிகளிலிருந்து அதாவது பிரெஞ்சு, ஸ்பானிஷ், ருஷ்ய மொழிகள் போன்ற மொழிகளில் எழுதப்பட்டு பின் ஆங்கிலம் வழியாகத் தமிழுக்கு வந்த இலக்கியப் பிரதிகள் நிறையவே. தமிழ்ச்சூழலில் ஆங்கிலம் போன்ற மொழிகளிலிருந்து ஒரு பிரதிக்கு தமிழில் கிடைப் பது பெரும் பாலும் ஒரே ஒரு மொழியாக்கம். அதுவே அரிது.  ஆனால், வேறு மொழிகளிலிருந்து ஆங்கிலத்தில் சில படைப்புகள் ஆங்கிலத்தில் இரண்டு மூன்று மொழிபெயர்ப் பாளர்களால்கூட மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. 

மூலமொழியான ஆங்கிலத்திலிருந்து அப்படி இருவேறு தமிழ் மொழிபெயர்ப்புகள் கிடைக்கு மானால், அவற்றை ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் மொழிபெயர்ப்பின் வேறு பல அம்சங்களையும் மொழிபெயர்ப்பாளர்களின் வேறுபட்ட அணுகுமுறை களையும் புரிந்துகொள்ளமுடியும். ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் என்னிடம் இலக்கிய நண்பரொருவரால் தரப்பட்ட WOMAN AT POINT ZERO  எகிப்திய எழுத்தாளர் Nawal El Saadawi யின் தன்வரலாறுத் தன்மையான புதினம் ஒன்றை மொழிபெயர்த்துக் கொடுத்தேன். சூனியப்புள்ளியில் பெண் என்று தலைப்பிட்டேன். சமீபத்தில் அதே தலைப்போடு அந்தப் படைப்பு இன்னொருவரால் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டிருப்பதை அறிந்தபோது (அதில் இந்தப் படைப்பு ஏற்கெனவே மொழிபெயர்க்கப் பட்டிருப்பது குறித்து தகவல் தரப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை!) என் மொழி பெயர்ப்பை இந்தப் புது மொழிபெயர்ப்போடு ஒப்புநோக்கும் ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், என் மொழி பெயர்ப்புப் பிரதி எதுவும் என்னிடம் இல்லை. நண்பர்களிடம் கேட்டி ருக்கிறேன். 

ஏற்கனவே மொழிபெயர்க்கப்பட்ட மூலப்பிரதி ஒன்று இன் னொரு மொழி பெயர்ப்பாளரால் மீண்டும் மொழிபெயர்க்கப்படும்போது முதல் மொழிபெயர்ப்பின் துணையோடு தன் மொழிபெயர்ப்பை செம்மைப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பும் இரண்டாம் மொழிபெயர்ப்பாளருக்கு இருக்கிறது. இந்த வாய்ப்பு ஒரு மூலப் பிரதியை இலக்கு மொழியில் முதன் முதலாக மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாள ருக்கு இல்லை என்பதால் அவர் தன் மொழிபெயர்ப்பை கூடுதல் கவனத்தோடு மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாத தாகிறது. 

தமிழ்ச்சூழலைப் பொறுத்தவரை ஆங்கிலம் வழியாகவோ நேரிடையாக பிரெஞ்சு முதலிய மொழிகளிலிருந்தோ உலகத் தரம் வாய்ந்த எழுத்தாக்கங்கள் பெரும்பாலும் சிற்றிதழாளர் களால் ஆர்வத் தோடு மொழிபெயர்க்கப்பட்டு தங்கள் கைக் காசைச் செலவழித்து தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருப்பதே அதிகம். இந்த மொழி பெயர்ப்பை ஆர்வமாகச் செய்யும் மொழி பெயர்ப்பாளருக் கும் சன்மானம் எதுவும் கிடையாது. ஆனால்,  இப்படி சிற்றித ழாளர்களின் மொழிபெயர்ப் பின் மூலம் ஒரு உலகத்தரம் வாய்ந்த படைப்பு/படைப்பாளி தமிழில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டு வாசகர்களிடையே வரவேற்பைப் பெற்றதும் அந்தப் படைப்பை இன்னொருவரைக் கொண்டு சுமாராக மொழி பெயர்த்து இந்த சுமார் மொழிபெயர்ப்பே தமிழில் கிடைக்கும்படி செய்துவிடல் நடக்கிறது. அதற்குப் பின் இந்த உலகத்தரம் வாய்ந்த படைப்புக்கு வேறு மொழிபெயர்ப்புகள் தமிழில் கிடைக்கவே வழியில்லாமல் பார்த்துக்கொள்ளப் படும்! இது மொழிபெயர்ப்புலகிற்கு இழப்பே!

ஒரு பிரதியை மொழிபெயர்த்துக்கொண்டிருக்கையிலேயே  – ஆங்கிலத்திலிருந்து தமிழில் அல்லது தமிழிலிருந்து ஆங்கிலத்தில் – அதற்கு இணையான மொழி பெயர்ப்புகளை நம் மனம் நம்மையறியாமல் செய்துகொண்டேயிருக்கும். சில வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது அவற்றிற்கு இணையான வேறு சொற்கள் மனதில் வந்து வந்து போகும். ஒரு மொழிபெயர்ப்பு இறுதி வடிவம் பெறும்போது ’மனசில்லா மனசோடு’தான் அதற்கு இணையாக மனதிலோடிய மற்ற மொழிபெயர்ப்பு களை விலக்கிவிட வேண்டி யிருக்கிறது.

ஒரே கவிதையை இருமுறை மொழிபெயர்க்கும்போது இருவேறு மொழிபெயர்ப்புப் பிரதிகள் கிடைக்கும் வாய்ப்பு களே அதிகம்!  அர்த்தம் திரியாதபடி அமையும் இரு வேறு மொழிபெயர்ப்புகள்! சில சமயங்களில் ஒரே ஒரு வார்த்தை ஒரு மொழி பெயர்ப்பு முயற்சியைக் கைவிடச்செய்துவிடும். நான் எழுதிய ஒரு தமிழ்க் கவிதைக்கு ’விழல்’ என்று தலைப்பிட்டிருந்தேன். கீழே விழுவது, விழலுக்கு இறைத்த நீர்  ஆகிய இரண்டு அர்த்தங்களையும் தரும் ஒரே சொல்லாக அதை தமிழில் பயன்படுத்தியிருந்தேன். அந்தச் சொல்லுக்கு இணையான வார்த்தையை என்னால் ஆங்கிலத்தில் கண்டெடுக்கவே முடியவில்லை. இது என் மொழித்திறன் சார் போதாமையாக இருக்கலாம். அல்லது, ஒவ்வொரு மொழிக்கும் உள்ள தனித் துவம் காரணமாகவும் இருக்கலாம்.

இந்தத் தொகுப்பில் இடம்பெறும் சில பத்திகளின் மொழி பெயர்ப்பு மூலம் மொழிபெயர்ப்பில் சிக்கல்கள் சிலவற்றைச் சுட்டிக்காட்ட முடியும்:

ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கும் முதல் பத்தி பின்வருமாறு ஆங்கில மூலமும் தரப்பட்டிருக்கிறது

ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இந்தத் தொகுப்பில் இடம்பெறும் பத்திகளில் ஒன்றின் முதல் வரி கீழே தரப்பட்டிருக்கிறது:

GHALIB IS NOT AN EASY POET TO TRANSLATE INTO URDU OR ENGLISH

காலிப் உருது அல்லது ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப் படுவதற்கு எளிதான கவிஞர் அல்ல என்பதுதான் பொருள்..

ஆங்கில வாக்கியப்படி ‘காலிப் உருது அல்லது ஆங்கில மொழிபெயர்ப்புக்கு எளிதாக வசப்படுபவர் அல்ல’ என்று பொருள்கொள்ளலாம்.

இதை ‘காலிபின் கவிதைகளை உருதுமொழி அல்லது ஆங்கில மொழியில் தருவது அவ்வளவு எளிதல்ல என்று மொழி பெயர்க்கலாம்.

அல்லது, மிர்ஸா காலிபின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது கடினம் என்றும் மொழிபெயர்க்க முடியும். ஆங்கில மூலத்தில் மிர்ஸா என்ற சொல் இல்லையே  _ தமிழில் ஏன் அதைத் தரவேண்டும் என்றோ ஆங்கில மூலத்தில் ’எளிதல்ல’ என்று இருப்பதை தமிழில் கடினம் என்று ஏன் மாற்ற வேண்டும் என்றோ கேள்வியெழ வாய்ப்பில்லை யென்றே தோன்றுகிறது!

தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் பத்திகளிலிருந்து ஒரு பகுதி கீழே தரப்பட்டுள்ளது:

கற்பித்தலில் இடைவெளி

அரசுப் பள்ளி மாணவர்களைப் பொறுத்த மட்டில் கற்றல் என்பது இன்னும் முழு முடக்கக் காலம் போலவே இருக்கிறது. இது, இணைய வழிக் கல்வியில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வு அல்ல. இணையவழிக் கல்வி இடைவெளி அல்ல. கற்றல் கற்பித்தல் என்பதிலிருந்து முற்றாகத் துண்டித்துத் தூக்கி தூர வீசியெறிந்து விட்டது என்றே கூற வேண்டும். அரசுப் பள்ளிக் குழந்தைகளில் எழுத்து களை மறந்தவர்கள் எத்தனை ஆயிரம் பேரோ? வேலைக்குச் சென்ற வர்கள் எத்தனை ஆயிரம் பேர் நிரந்தரமாகப் பள்ளி இடை விலகப் போகிறார் களோ? உண்மையில், கரோனா பெருந்துயரங் களில் இது நீடித்த, நிலைத்த பெருந்துயரமாக இருக்கப் போகிறது.

GAPING DISPARITIES IN TEACHING

As for the students of government schools learning is going to suffer as total lockdown period. This is not a disparity caused by “Online education’. Online education is not a disparity. It has completely cut off the children from Teaching&Learning process. Among the children studying in the government schools wonder how many thousands of them would have lost touch with reading and writing? Among those who had gone to work during the pandemic days how many of them would turn into dropouts? In fact this is going to be the great tragedy caused by Corona.

தமிழில் உள்ள பெருந்துயரம் என்ற சொற்றொடரை ஆங்கிலத் தில் great tragedy என்று மொழிபெயர்க்கலாம். ஆனால், மகத்தான என்ற சொல்லையும் இதே ஆங்கில வார்த்தையால் மொழிபெயர்க்க முடியும்! ஆனால், அதையே ஆங்கிலத்திலி ருந்து தமிழில் மொழி பெயர்க்கும் போது ஞ் õx great tragedy என்பதை ‘மகத்தான பேரழிவு’ என்று மொழி பெயர்க்கலாகாது!

மொழிபெயர்ப்பை STANDARDIZE செய்ய முடியாது. இந்த ஆங்கில வார்த்தைக்கு இந்தத் தமிழ் வார்த்தைதான் மொழி பெயர்ப்பில் தரப்பட வேண்டும் என்று யாரும் வரை யறுத்துவிட முடியாது. மூலப்பிரதியை எந்த அளவுக்கு சிறப்பாக இலக்கு மொழியில் பிரதிபலிக்கச்செய்ய முடியுமோ அந்த அளவுக்கு செய்யத் தேவையான இணைச் சொற்களை மொழிபெயர்ப்பாளர் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார். வார்த்தை களின் தேர்விலும் அவற்றை வரிசைப்படுத்தும், வாக்கியங்க ளாகக் கட்டமைக்கும் விதத்திலும் தான் மொழிபெயர்ப் பாளரின் தனித்தன்மை அடங்கியிருக்கிறது என்று சொல்ல முடியும். மூலப்பிரதியின் அடிநாதமாகத் திகழும் ஒரு சொல்லை இலக்கு மொழியில் அதேயள்வாய் கொண்டுவர ஒரு மொழிபெயர்ப்பாளர் முழுமூச்சாய் முயற்சி செய்ய வேண்டும். அதுவே, மூலப்பிரதியில் அத்தனை முக்கியத்துவமற்ற தாய் இடம் பெறும் ஒரு சொல்லை இலக்கு மொழியில் கொண்டு செல்லும்போது அந்த அளவுக்குப் பிரயத்தனம் செய்யத் தேவையில்லை என்று தோன்றுகிறது.

ஆங்கிலத்தில் இரண்டு வரிகள்:

MANY TIMES GHALIB COMBINES TWO OR MORE MEANINGS INTO A SINGLE WORD OR EXPRESSION,

தமிழில் –

 பலமுறை இரண்டு அல்லது அதிகமான அர்த்தங்களை ஒரு சொல்லாக  அல்லது வெளிப்பாடாக இணைக்கிறார் காலிப். 

 MANY TIMES என்பதை பலமுறை என்றோ பல நேரங்களில் என்று பல சமயங்களில் என்றோ மொழிபெயர்க்கலாம். ஆனால் அடிக்கடி ((Often) என்று மொழிபெயர்ப்பது சரியா? சரியாக இருக்காது. காரணம்,  MANY TIMES என்ற சொல்லில் ஒருமுறைக்கும் இருமுறைக்கும் இடையே உள்ள கால அவகாசம் எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம்.  MANY TIMES என்பதில் TIME வந்தாலும் அதன் மையம் காலக்கணக்கு அல்ல. பலமுறை என்பதில் காலக்கணக்கு பிரதானம் இல்லை. ஆனால் அடிக்கடி என்பதில் காலமே பிரதானம்

MINOR POET  என்பதை தமிழில் எப்படிக் குறிப்பிடலாம்?  சிறிய, எளிய அத்தனை சரி யாக இருக்குமா? ‘MAJOR POET’’ என்றால் பெருங்கவி அருங்கவி, முக்கியமான கவி, மகத்தான கவி என்று தமிழில் மொழிபெயர்த்துவிடலாம்.  ‘MAJOR POET’ என்றால்? ஒருவேளை இதற்கு வழக்கமாகப் பயன்படுத்தப்படும் தமிழ் இணைச்சொல் இருக்கலாம். முக்கியத்துவம் குறைந்த கவி என்பதுதான் அதன் அர்த்தம் என்று நன்றாகவே விளங்கினாலும் அதை அப்படியே தருவது ஏதோ விதத்தில் நெருடலாகத் தோன்றும் பட்சத்தில் மொழிபெயர்ப்பாளர் (முக்கியத்துவம் குறைந்த கவியை ஏன் மேற்கோள் காட்ட வேண்டும் என்ற நினைப்பிலும் இருக்கலாம்!) மொழி பெயர்ப்பாளர் வெறுமே POET என்று மொழிபெயர்த்து விடக் கூடும் இது சிலரின் பார்வையில் தவறல்ல சிலரின் பார்வை யில் மிகப் பெரிய தவறு!

 இப்படி எது சரி, எது தவறு என்று குழம்பவைக்கும் இடங்களும், சொற்களும் சொற்சேர்க்கைகளும் மொழி பெயர்ப்புப் பணியில் நிறையவே மொழிபெயர்ப்பாளரை இடறி விழச்செய்யும்!

 மூலப்பிரதியில் ஒரு பழமொழி தரப்பட்டிருந்தால் அதை அப்படியே இலக்கு மொழியில் பெயர்த்துத் தர வேண்டுமா, அல்லது, மூலப்பிரதியில் தரப்பட்டுள்ள பழமொழி எதைக் குறிப்புணர்த்துவதாகத் தரப்பட்டிருக்கிறதோ, தரப்படுகிறதோ அதற்கு ஏற்ற இலக்குமொழிப் பழமொழி ஒன்றை மொழிபெயர்ப்பில் இடம்பெறச் செய்வதா? என்ற கேள்வி மொழிபெயர்ப்பு சார்ந்து எப்போதும் முன்வைக்கப்படுவது. மொழிபெயர்ப்பு என்பது இன்னொரு மண்ணை, மனிதர் களை, கலாச்சாரத்தை அறிமுகப்படுத் துவது; எனவே அந்தந்த மண்ணுக்கே உரிய மணம் சார்ந்த பழமொழி களைத் தமிழில் தருவதே சரி என்ற பார்வை முக்கியத்துவம் பெறுகிறது

 மூலமொழிப் பிரதிகளை இலக்குமொழியில் கொண்டுவரும் போது இலக்குமொழி யின் வாசகர்களை கணக்கிலெடுத்துக் கொள்ளவேண்டியதும் அவசியம். இலக்கியப் பிரதிகளைப் பொறுத்தவரையும் கூட அவை எளிமைப்படுத்தப்பட்டு இலக்குமொழி களில் தரப்படும் தேவை இருக்கிறது. 

அப்படியெனில், மூலமொழிப் பிரதி என்றாலே அது கடின மானதுதானா என்ற கேள்வி எழுகிறது. அப்படியில்லை. மூல மொழிப் பிரதியே எளிமையாக இருக்கும் போது இலக்கு மொழியில் அதை மேலும் எளிமைப்படுத்தவேண்டிய தேவை இல்லை. அதே சமயம், எளிமை என்பது எல்லா நேரங்களிலும் எளிமையாக மொழி பெயர்த்துவிடக்கூடியது அல்ல என்பதை யும் நாம் மறக்கலாகாது !

உரையாடலும் வட்டார வழக்கும் மொழிபெயர்ப்பில் சிரம மான சிக்கலான அம்சங்களாகத் திகழ்பவை.  மொழிபெயர்ப் பாளருக்கு மூலமொழியில் உள்ள வாழ்வுச் சூழல் சூழல், இடச்சூழல், புழங்குமொழி, முதலியவை பரிச்சயமாக இருந்தா லொழிய அதில் உள்ள உரையாடலையும், வட்டார வழக்கையும் இலக்குமொழியில் கொண்டுவருவதில் நிறை யவே இடர்பாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

 நமக்குத் தெரிந்த, நம் தாய்மொழியான தமிழிலேயே கூட எல்லா வட்டார வழக்குகளும் அவற்றில் புழங்கும் வார்த்தை களும் அவற்றில் புழங்கு வார்த்தை களின் முழு அர்த்தமும், முழுக் குறிப்புணர்த்தல் களும் நமக்குத் தெரியுமா என்ன?  ஒரு கவிதையில் நீறு என்ற சொல் இடம்பெற்றிருந்தது. எனக்கு திருநீறு , விபூதி என்ற சொற்கள் மட்டுமே பரிச்சயம். தண்ணீர் தான் நீரு என்பதற்கு பதிலாக நீறு என்று பிழையாக அச்சாகி யிருக்கிறது என்று நானாக எண்ணிக்கொண்டு ஙிச்tஞுணூ என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துவிட்டேன். ஒரு வார்த்தையின் இடப்பொருத் தத்தை வைத்து அதன் சரியான பொருளைத் தெரிந்துகொண்டுவிட முடியுமென் றாலும் அது எல்லா நேரங்களிலும் நமக்குத் துணைபுரியும் என்று சொல்லி விட முடியாது!

 தொழில்முறையில் மொழிபெயர்ப்பாளர்களாக இயங்குபவர் களுக்கு ஒரு பிரதியை முடித்துக் கொடுக்க கால வரையறை உண்டு. இது சமயங்களில் மொழிபெயர்ப்பில் சில தவறுகள் இடம்பெறக் காரணமாகிவிடும். மொழிபெயர்ப்பில் ஏற்படும் தவறுகளை நான் நியாயப்படுத்தவில்லை. ஏற்கனவே குறிப்பிட்டது போல், ஒரு மொழி பெயர்ப்பாளர் இரு மொழிகளுக்கு இடையே பாலமாகத் திகழ்கிறார். பாலம் இடிந்து விழுந்தால் பாலம் கட்டிய நோக்கமே பாழாகிவிடும். எனவே தான் மொழிபெயர்ப் பாளர் கூடுதல் கவனத்தோடு இயங்க வேண்டியது அவசியம்.

TRANSLATION IS A THANKLESS JOB  என்பார்கள். ஒரு பிரதியை நல்லவிதமாக மொழிபெயர்த்து முடிக்கும்போது ஒரு மொழி பெயர்ப்பாளர் உணரும் மனநிறைவை விடவா மற்றவர் களின் நன்றி பெரிது என்று கேட்கும் மொழிபெயர்ப்பாளர் கள் தமிழ் வெளியில் அன்றும் இன்றும் நிறையவே உண்டு! அவர்களுக்கு என்றுமான நம் நன்றியும் வணக்கமும் உரித்தாகட்டும்!

 மொழிபெயர்ப்பாளர் should be thick-skinned, ஏனெனில் அவருடைய மொழிபெயர்ப்பு தொடர்பாக விமர்சனம் என்ற பெயரில் நிறைய வசவுகளை வாங்கிக்கட்டிக் கொள்ள வேண்டியிருக்கும்! எந்தவொரு மொழியின் வளர்ச்சிக் கும் அதன் இலக்கிய வளர்ச்சிக்கும் விமர்சனம், ஆய்வலசல், திறனாய்வு என்பதெல்லாம் மிகவும் தேவை. அதேசமயம் திறனாய்வாளர்களிலும் இருவகையினர் உண்டு. இலக்குமொழி வாசகரை take–it-for-granted ஆக பாவிக்கலாகாது என்ற மெய்யான அக்கறையோடு ஒருவருடைய மொழிபெயர்ப்பில் உள்ள குறைகளை ஆதாரபூர்வ மாகச் சுட்டிக் காட்டுவோர் ஒரு தரப்பினர்.  இன்னொரு தரப்பினர் ஒருவருடைய மொழிபெயர்ப்பில் உள்ள குறைக ளைச் சுட்டுவதன் மூலமே தம்மைப் பெரிதாக்கிக் கொள்ள முனைவோர்.

அப்படித்தான், நான் மொழிபெயர்த்த ஒரு நூலில் நான் கையாண்ட ஒரு சொற்பிரயோகம் தவறானது என்று கெக்கலித்த ஒருவர், ஆங்கிலட் மொழி பெயர்ப்பிலிருந்த மூல நூலில் இருந்து ஒரு பத்தியையும் அதற்கான என் தமிழ் மொழிபெயர்ப்பையும் வெளியிட்டு என்னுடைய மொத்த மொழிபெயர்ப்பும் சரி யில்லை என்று சாதிக்கப் பார்த்தார். நான் மொழிபெயர்த்தது மூல நூலின் வேறொரு ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து. அவர் சுட்டியது இன்னொரு ஆங்கில மொழி பெயர்ப்பிலிருந்து. அதை சுட்டிக் காட்டிய பின்பும் தனது தவறுக்காக வருத்தம் தெரிவிக்காமல் என் மொழிபெயர்ப்பில் உள்ள ஒரே ஒரு வார்த்தையைப் பிடித்துக் கொண்டு அதற்கான என் மொழிபெயர்ப்பு சரியில்லை என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால்,  நான் என்னை மொழி பெயர்ப்பு மேதை என்று என்றுமே சொல்லிக் கொண்டதில்லை

 ஆயிரத்தில் ஒருவன் என்பதை ஆங்கிலத்தில் “ONE IN A MILLION’ என்று மொழிபெயர்த்தேன்.  இதில் ஆயிரம் 10 லட்சம் என்ற எண்ணிக்கையல்லவே முக்கியம்! அரிய மனிதர், மகத்தான மனிதர் என்பதற்கு இரண்டு மொழிகளிலும் பயன்படுத்தப்படும் சொற்றொ டர்கள் இவை, ‘இந்த அம்மாவுக்கு ஆயிரத்திற்கும் லட்சத்திற்கும்கூட வித்தியாசம் தெரியவில்லை என்று எள்ளி நகையாடியிருந்தார் ஒருவர்!

ஆங்கிலத்திலிருந்து தமிழில் நான் மொழிபெயர்த்துள்ள ஸ்டீ ஃபான் ஸ்வேய்கின் ஜெர்மானியக் குறுநாவலின் ஆங்கிலத் தலைப்பு AMOK.  அதற்கு தமிழில் ‘ஆட்கொள்ளப்பட்டவன்’ என்று தலைப்பிட்டேன். அது குறித்து அந்த நூலில் இடம் பெறும் என்னுரையில் இவ்வாறு எழுதியிருக்கிறேன்:

 ”ஒரு படைப்பில் மொழிபெயர்ப்பாளர் அநாவசியமான சுதந்திரங்களை எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற திட்ட வட்டமான எண்ணம் எனக்கு உண்டு ஆனால் அMOஓ என்ற சொல் லுக்கு ’ஆட்கொள்ளப்பட்டவன்’ மிகச் சரியான மொழிபெயர்ப்பு அல்ல. அந்த வார்த்தை இந்தோனேஷியச் சொல். ஒருவித பித்துநிலையில் தறிகெட்டு ஓடியபடி கண் ணில் கண்டவர்களை குத்திக் காயப் படுத்தி யபடி செல்லும் உயரழுத்த மன நிலையை ((frenzied, delirious state of mind) மனநிலை யைக் குறிக்கும் சொல். என் தேடலில் தமிழில் இணைச்சொல் கிடைக்கவில்லை. ‘எத்தனை யாவது’ என்ற தமிழ் சொல்லுக்கு ஆங்கிலத் தில் இணை கிடைக்காதது போல். தவிர, இந்தடு கதையின் நாயகன் அந்த உயர் அழுத்த மனநிலையில் உள்ளபோதும் கனிவானவன்;  குற்றணர்வு கொள்ளத் தெரிந்த வன்; ஒருவகையில், A MEHTOD IN MADNESS’ என்ற ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் சொற்றொ டரை நினைவு கூரத்செய்வதாய் இருக்கின்றன அவன் செய்கைகள். எனவே ஆட்கொள்ளப் பட்டவன் என்ற தலைப்பு அதிகப் பொருத்த மானதாகத் தோன்றியது.”

இந்த Discretion ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு மிகவும் தேவை என்று நினைக்கிறேன் .

ஆனால், இந்த அணுகுமுறை மொழிபெயர்ப்பின் அரசியலாக மாறும் இடங்களும் உண்டு மூலப் பிரதியில் சில வரிகளை நீக்கி, சில வரிகளை திரித்து மொழிபெயர்த்து அதை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பயன்படுத்தும் போக்கு சமயங் களில் நேர்மறையான சமயங்களில் எதிர்மறையான அணுகு முறையாக இருக்கவும் வழி உண்டு.

 மூலப்பிரதியை இலக்குமொழியில் மொழிபெயர்ப்பதற்கான நோக்கத்தைப் பொறுத் தும் மொழி பெயர்ப்பின் தன்மை மாறுபட வழியுண்டு. இது சரியா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல முடியும். ஆனால், மிக நல்ல கதையில் கூட வீட்டு வேலைக்காரப் பெரியவரை அந்த வீட்டு உரிமையாளரின் பத்து வயது மகன் கெட்ட வார்த்தையில் திட்டுவதாக வரும்போது, அல்லது, பெண்ணை மதிப்பழிக்கும் வார்த்தைகள் மூலப்பிரதியில் இடம்பெறும்போது அவற்றை அப்படியே மொழிபெயர்த் துத்தானாக வேண்டுமா என்ற கேள்வி ஒரு மொழிபெயர்ப்பாளர் என்ற அளவில் எப்போதுமே என் மனதில் தவிர்க்கமுடியாமல் எழும். அவ்வாறே, இனக்கலவரத்தைத் தூண்டும் சில சொற்றொடர்கள் இடம் பெறும் ஒரு செய்தியை அல்லது இலக்கியப் பிரதியை  மொழி பெயர்க்கும் போது பரபரப்புக்காக அவற்றை அப்படியே மொழி பெயர்ப்பதை விட அதன் சாரத்தை மட்டும் மொழி பெயர்த்துத் தருவதே மேல் என்று தோன்றும்.

 ஒரு பத்தியைப் படித்து உள்வாங்கி மூலத்தின் சாரம் குறை யாமல் அதை சொந்த மொழியில் தருபவர்களைப் பார்த்தி ருக்கிறேன்! மூலப் பிரதியில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் சரியான சொல்லைத் தேடி எடுத்து அத்தனை அக்கறையாகச் செயல்படுபவர்கள் பார்த்திருக்கிறேன்!

C:\Users\computer\Desktop\TRANSLATION BOOK IMAGES\495568723_2593416844337237_5976183938633954823_n.jpg

மொழிபெயர்ப்பாளர்:    S.R. தேவிகா

1958ஆம் ஆண்டு ஜூன் 18இல் தென்னிந்தியாவில் உள்ள கும்பகோணத்தில் பிறந்தவர். சென்னை மாநிலக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார். 1980இல் மத்திய அரசுப் பணியில் சேர்ந்தார். – 2014இல் விருப்ப ஓய்வு பெற்றார். பயணம் செய்வதில் விருப்பம் கொண்டவர். ஆன்மிக நூல்களை வாசிப்பதிலும் ஆன்மிகத் தலங்களுக்குச் செல்வதிலும் ஆர்வம் கொண்டவர்

பணி ஓய்வுக்குப் பிறகு மொழிபெயர்ப்புப் பணியில் ஆர்வமாக ஈடுபட்டு வரும் இவர் தெலுங்கின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான விவிபி ராமாராவின் சிறுகதைகளின் தொகுதியை ஆங்கிலத்தி லிருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மகத்தான ஆளுமைகளான மகாத்மா காந்தி, மதர் தெரஸா, விவேகானந்தர் போன்றவர்களின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் சிறுநூல்களையும் சிறுவர்களுக்காக எழுதியுள்ளார்

மதங்களின் அடிநாதமாக விளங்குவது மனிதநேயமே என்பதை பகவத் கீதைகுரானிலிருந்து பல உதாரணங்களை முன்வைத்து எடுத்துரைக் கும் திரு.மூஸா ராஜா (பாரசீகக் கவிஞர் மிர்ஸா காலிபின் கவிதை களை பாரசீகமொழியிலிருந்து உருதுவிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்திருப்பவர்) எழுதிய ஆங்கில நூல் IN SEARCH OF ONENESS தேவிகாவின் தமிழாக்கத்தில்  வெளியாகியிருக்கிறது.

இந்த நூலின் இணை மொழிபெயர்ப்பாளர் தேவிகா (ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருப்பவர்) எப்படி மொழிபெயர்ப்புப்பணியை மேற்கொள்கிறார் என்ப தைப் பற்றி ரத்தினச் சுருக்கமாக பின்வருமாறு கூறுகிறார்:

முதன்முதலாக எழுத்தாளரான Dr.VVB.. ராமராவ்-இன் தெலுங்குக் கதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கும் பணியை மேற் கொண்ட போது முதலில் அந்த நூலை முழுமையாக வாசித்தேன். வாசிக்கும் போதே மனதிற்குள் ஒரு பூர்வாங்க மொழிபெயர்ப்பு ஓடியது. பின்னர் மொழிபெயர்க்கத் தொடங்கிய போது ஒவ்வொரு சொற்றொடராக மொழிபெயர்த்தேன். 

மொழிபெயர்ப்பும் மூலமும் ஒரே பொருளைத் தருகின்றனவா என்று படித்துப் பார்ப்பேன். சில சமயங்களில் தெரியாத சொற்ளுக்கு பொருள் அறிய இணையத் தின் உதவியை நாடுவேன். என் கருத்து சரியானது என்று தோன்றும் பொருளை எடுத்துக்கொள்வேன்”

 மொழிபெயர்ப்பில் மிகவும் உதவுவது அந்த முயற்சியில் ஒருவரின் விருப்பம் மற்றும் எடுத்துக்கொண்ட மூலப் பிரதியில் உள்ள விஷயத்தில் ஆர்வம்”

மொழிபெயர்ப்பின் மூலம் மொழிபெயர்ப்பாளர்களுடைய சிந்தனைகள், கண்ணோட்டங் களிலும்கூட நேரிய மாற்றங்கள் ஏற்பட வழியிருக்கிறது.மொழிபெயர்ப்பாளர் மூலப் பிரதியில் ஆசிரியரை விட உயர்ந்தவர் அல்ல; தாழ்ந்தவரும் இல்லை.

மொழிபெயர்ப்புப் பணியை மேற்கொள்கிறவர்கள் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் அதைச் செய்ய வேண்டியது அவசி யம். இன்று இணையத்தில் பல பல அகராதிகள் கிடைக்கின்றன. இணைச் சொற்கள், எதிர்ச்சொற்கள், ஒரு சொல்லுக் குரிய பல அர்த்தங்கள் என நிறைய கிடைக்கின்றன ’மிஷின் ட்ரான்ஸ்லேஷன்’ செய்ய வசதி இருக்கிறது ஆனால் அதை மட்டுமே நம்பினால் மொழிபெயர்ப்பு மிக மோசமாகவே அமையும். 

ஏற்கனவே குறிப்பிட்டது போல், ஆர்வமாய் மொழிபெயர்ப் பில் தொடர்ந்து ஈடுபடும்போது நம் மொழித்திறனும் மொழி பெயர்ப்பாற்றலும் நிச்சயமாக மேம்படும். மொழி பெயர்ப் புப் பணி இன்று பலருக்கு வாழ்க்கைத் தொழிலாக, வாழ்வா தாரமாக விளங்குகிறது புனைவு அ-புனைவு எழுத்தாக்கங்கள் மட்டுமல்லாமல் திரைப்படத் துறை தொலைக்காட்சி நாளிதழ்கள் சுற்றுலாத்துறை, மருத்துவத் துறை,, கணினி சார் துறைகள் என்று பல்வேறு துறைகளில் மொழி பெயர்ப்பு களுக்கு, மொழிபெயர்ப்பாளர்களுக்கான தேவையிருக்கிறது. இன்றைய GLOBAL VILLAGE சூழலில் இந்தத் தேவை அதிகரித்துக்கொண்டேபோகும் என்பது உறுதி.

***

  •  

அரசுப் பள்ளிகளும், தரமான கல்விக்கான அடித்தட்டு மக்களின் அடிப்படை உரிமையும்

C:\Users\computer\Desktop\download (1).jpg

 _லதா ராமகிருஷ்ணன்

C:\Users\computer\Desktop\images.jpg

எந்த நாட்டு மக்களாக இருந்தாலும் சரி, கல்வி என்பது அவர்களின் அடிப்படை உரிமை அப்படி தரப்படும் கல்வி தரமானதாக இருக்க வேண்டியது அவசியம் அரசு பள்ளி ஆசிரிய பெருமக்களுக்கு தனியார் பள்ளி ஆசிரிய பெருமக்களை விட சம்பளமும் சலுகைகளும் மிக அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதேபோல், பள்ளி சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகளும் அரசு பள்ளிகளில் மிகவும் நன்றாகவே உள்ளன

 அப்படி இருந்தும் தங்கள் வசதியின்மையையும் மீறி அடித்தட்டு மக்கள் வட்டிக்கு கடன் வாங்கியாவது தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டிய அவசியம் என்ன? பிள்ளைகள் ’டாடி’, ’மம்மி’ சொல்வார்கள் என்று அல்ப சந்தோஷம் என்று அதை ஒதுக்க முடியுமா?

 ஒரு பள்ளி என்ற கட்டமைப்பின் முதலும் முடிவுமான கவனக்குவிப்பு மாணாக்கர்களாகவே இருக்க வேண்டும். அப்படி இருக்கிறதா?

அரசுப் பள்ளிகளில் அர்ப்பணிப்போடு பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் பலர் இருக்கலாம். அதே சமயம், அரசுப் பள்ளிகளிலான பணி நியமனங்களில் லஞ்சம் தந்து பதவி பெறும் வழக்கமும் பரவலாக இருப்பதாக பேசப்படுகிறது – அது எவ்வளவு தூரம் உண்மை? ஆளுங்கட்சி அரசியல்வாதிகளின் சிபாரிசோடு உரிய பணத்தை தந்து பணியில் இணையும் ஆசிரியர்கள், மற்ற ஊழியர்கள் தவறு செய்தால் அவர்களை தலைமை ஆசிரியரோ மற்ற நிர்வாகிகளோ தட்டிக் கேட்க முடிவதில்லை என்கிறார்களே – அது உண்மையா?

 பள்ளி நேரங்களில் பல வகுப்புகளில் ஆசிரியர்கள் இருப்பதில்லை என்கிறார்கள் பெற்றோர்கள். ஆசிரியர்கள் இல்லாத சமயத்தில் பிள்ளைகள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கிறார்கள்; காயப்படுத்திக் கொள்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

 அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்,  மற்றும் அவர்களுடைய பெற்றோர்களிடம் பள்ளி சார் குறைகளை பற்றி கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கான தொடர்ந்து இடைவெளிகளான கலந்துரையாடல்கள். ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுவதாகத் தெரியவில்லை.  அப்படி ஏதாவது குறைகளை கூற வரும் பெற்றோர்களிடம்  – இவர்களில் பெரும்பாலோர் அடித்தட்டு மக்கள், குறைந்தபட்ச கல்வியறிவு பெற்றவர்கள் – ”என்ன பெரிசா கேள்வி கேட்கிறீங்க? காசு கொடுத்தா உங்க புள்ளையை படிக்க வைக்கிறீங்க?” என்று மதிப்பழிப்பதாகப் பேசி கூனிக்குறுக வைக்கும் ஆசிரியர்களும் நிர்வாகிகளும் உள்ளனர்

 கூலி வேலைக்கு வீட்டு வேலைக்கு செல்லும் அடித்தட்டு வர்க்கப் பெற்றோர்கள் தான் ஏதேனும் எதிர்த்துச் சொல்லிவிட்டால் பள்ளிகளில் அதனால் தங்கள் பிள்ளைகளை ’கட்டம் கட்டி’ கண்டிப்பதும், தண்டிப்பதும் நடக்குமோ என்று அச்சப்படுவது வெளிப்படை.

 நிறைய பள்ளிகளில், வகுப்புகளில் அவசர அவசரமாக பாடங்களை நடத்தி முடிக்கும் நிலையே உள்ளதாகத் தெரிகிறது. பாடம் மாணாக்கர்களுக்கு புரிகிறதா, சுவாரசியமாக இருக்கிறதா என்பதெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. விடைகளை –  கணித பாடம் உட்பட –  மிகுந்த பிரயத்தனத்தோடு மனனம் செய்யப் பழகுவதே மாணாக்கர்கள் அறிந்த, அவர்களுக்கு அறிவுறுத்தப்படும், ஒரே கற்றல்வழியாக இருப்பதாகத் தெரிகிறது.

 அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை வருடாந்திர இறுதித் தேர்வு என்று எதுவும் இல்லாமல் மாணவர்கள் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு அனுப்பப்படுவதால் அவர்க ளுடைய கற்றல் அளவையோ, கற்றல் தினையோ மதிப்பிட இயலாமல் இருக்கும் நிலை. தேர்வு என்பதை அவர்களுடைய கற்றல்திறனை மதிப்பிட மட்டும் பயன்படுத்தலாமே என்ற பேச்சு எழுந்ததற்கே ‘கூடவே கூடாது – அது அவர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கும்’ என்றெல்லாம் சொல்லி அநாவசியமாக அச்சுறுத்தி முட்டுக் கட்டை யிட்டார்கள் இங்கே.  

அதற்கு பிறகான வருடங்களில் பொதுத்தேர்வுகள் வரும்போது பள்ளி 100% தேர்ச்சியை காண்பிக்க வேண்டும் என்பதற்காக கல்வி கற்பதில் சற்று பின்தங்கியுள்ள மாநகர்களை பள்ளியிலிருந்து நின்று விடுமாறு வேறு பள்ளிக்கு போய்விடும் மறைமுகமாகவும் நேரடியாகவும் வற்புறுத்துவதாகவும் சில பெற்றோர்கள் சொல்ல கேட்டதுண்டு

 அரசுப் பள்ளிகளில் உள்கட்ட அமைப்புகளும் இடவசதியும் நன்றாகவே இருந்தாலும் அவற்றை சுத்தமாக பராமரித்தல் குறிப்பாக கழிப்பறைகளை பராமரித்ததில் போதிய கவனம் செலுத்தப்படுவதில்லை என்கிறார்கள் குழந்தைகளுக்கு சுத்தம் சுகாதாரத்தை அவற்றின் அவசியத்தை முக்கியத்துவத்தை போதிக்க வேண்டிய கல்விக்கூடங்கள் அவற்றில் அலட்சியமாக இருந்தால் எப்படி?

 ஆரம்ப வகுப்புகளில் உள்ள சின்னப் பிள்ளைகளுக்கு சிறுநீர் கழித்தல் மலம் கழித்தல் போன்றவற்றை அடக்கிக் கொள்ளவோ உரிய நேரத்திற்கு இயற்கை உபாதைகளை கழிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளவும் வராது அதற்காக அந்த குழந்தைகளை அடிப்பதும் திட்டுவதும் குற்றவாளிகளாக உணரச் செய்வதும் அடக்கிக் கொள்ளச் சொல்வதும் கொடுமை.

 அரசுப் பள்ளிகளில் கணினிகள் கணினி கற்பிக்கும் அறைகள் நூலகங்கள் என்று இருந்தாலும் அவை எந்த அளவுக்கு மாணவர்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது என்பது ஒரு கேள்விக்குறி. புத்தகங்களை கிழித்து விடுவார்கள் என்பதற்காகவே நூலகங்களை பூட்டி வைத்துள்ள பள்ளிகள் உண்டு என்று கூறுகிறார்கள். அதேபோலத் தான், கணினி கற்றுக் தரவும் நிறைய பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை என்கிறார்கள்.

 அரசுப் பள்ளி மாணவர்கள் பலருக்கு சரியாகத் தமிழ் படிக்க தெரியவில்லை, தமிழ் உச்சரிப்பு தெரியவில்லை, அடிப்படை தமிழ் ஆங்கிலம் கணிதம் தெரியவில்லை என்று கடந்து சில வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றாய்வுகளின் புள்ளி விவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன ஆனால் அது உண்மையா என்பதை சரிபார்த்து தெரிந்துகொள்ள முயலாமல் சுற்றாய்வுகளைப் பழிப்பதும், அவற்றுக்கு உள்நோக்கம் கற்பிப்பதும் இங்கே வாடிக்கையாக இருக்கிறது. அல்லது, நாட்டிலேயே எங்கள் மாநிலம் தான் கல்வியில் முதலிடத்தில் இருக்கிறது என்று பாமர மக்களுக்கு புரியாத தரவுகளை தந்து வாய டைத்து விடுகிறார்கள்.

அரசு பள்ளிகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடையும் மாணாக்கர்கள் கணிசமாக இருக்கிறார்கள். அர்ப்பணிப்பு மனோபாவத்தோடு பணிபுரியும் ஆசிரியர் பெருமக்களும் இருக்கிறார்கள். அவர்களை இனங் கண்டு அவர்கள் அவர்களை ஒவ்வொரு பள்ளிக்குமான ஆலோசனை குழுவினராக அதிகாரம் அளித்த பள்ளி நிர்வாகம் சீராக செம்மையாக நடந்தேறு அவர்களே சுதந்திரமாக கலந்த ஆலோசனைகள் மேற்கொள்ள செயல்பட ஊக்குவிக்கலாம்.  

மதிப்பெண்கள் அதிகம் வாங்கும் மாணாக்கர்களைப் புகழ்ந்து பேசி அதில் பெருமை கொள்வதைப் போலவே சரியாக படிக்காதம் நிலவும் பள்ளிச் சூழல், வகுப்புச் சூழலில் கற்கவியலாப் பிள்ளைகளுக்கும் உரிய அதிகார அமைப்புகள் பொறுப்பேற்க வேண்டும். அதற்குத் தேவையான நிவாரண நடவடிக்கைகளை, நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.  அப்படியில்லாமல், எதற்கெடுத்தாலும் தனியார் பள்ளி மட்டும் மேலானதா?’ என்றவிதமாகப் பேசி, பிரச்சனையை திசைதிருப்புவது எந்த வகையிலும் அரசுப் பள்ளிகளின் பயனாளிகளான எதிர்காலக் குடிமக்களுக்குப்  பலன் அளிக்காது.

 பள்ளி நிர்வாகத்தில் ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் தலையீடு அதிகம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அரசியல்வாதிகளின் ஆக்கப்பூர்வமான தலையீடு இருக்கலாம். எதிர்க்கட்சிகள் அரசுப் பள்ளிகள் நடக்கும் விதத்தை நேரில் சென்று பார்வையிடலாம். அதற்கு அரசு அவர்களுக்கு அனுமதி அளிப்பதே சரி. வாக்கு வங்கிகள் அல்ல என்பதால் மாணாக்கர்களை, குறிப்பாக அரசுப் பள்ளி மாணாக்கர்களின் கல்வி சார் அக, புற தாக்கங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது சரியல்ல.

சில வருடங்களுக்கு முன், அரசுப் பள்ளி ஆசிரியர்களே அவர்களுடைய பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் தான் சேர்க்கிறார்கள் என்பது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் நடந்தன. “என் பிள்ளை அங்கே படிக்கிறான்” என்று ஒரு பிரபல தனியார் பள்ளியின் பெயரை கர்வத்தோடு சொல்லும் அரசுப் பள்ளி ஆசிரியர்களே அதிகம்.

சமீபத்தில் பேஸ்புக்கில் ஆசிரியராக பணிபுரியும் படைப்பாளி ஒருவர் அரசு ஊழியர்கள் ஏன் அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைப்பதில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார். கூடவே, அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கும் பெற்றோர்களுக்கு அரசுப் பணி தரலாம், வேறு சில சலுகைகளை அரசு தரலாம் என்று அபத்தமான ஆலோசனையையும் அளித்திருந்தார். இது என்னவிதமான சமூகப் பிரக்ஞை? என்னவிதமான தீர்வு?

 சமீபத்தில் மறைந்த நடிகர் ஒருவர் அரசு ஆசிரியராக வேலை பார்த்ததாகவும் அந்த வேலையை அவர் தேர்ந்தெடுத்ததற்கு முக்கிய காரணம் ஆசிரியப்பணியில் நிறைய விடுமுறை கிடைக்கும் திரைப்படங்களில் நடிக்க, நடிக்க முயற்சி செய்ய அது நல்ல வாய்ப்பு என்று குறிப்பிட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. ஆசிரியர் பணி என்பது மிகுந்த அர்ப்பணிப்பு மனோபாவமும், சமூகப் பிரக்ஞையும் தேவைப்படும் ஒன்று. அதை வெறும் வாழ்வாதாரத்திற்கான இன்னொரு பணியாக பாவிப்பது மாணாக்கர்களை தான் பாதிக்கும்

 கல்விக்கூடம் என்பதில் ஆசிரியர் பெருமக்கள், நிர்வாகிகள், உதவியாளர்கள், கடைநிலை ஊழியர்கள் என்று பலதரப்பட்டவர்கள் பணியாற்றினாலும் அதன் முதலும் முடிவுமான நோக்கமும் இலக்கும் மாணாக்கர்களாகவே, அவர்களின் நலம் சார்ந்ததாகவே இருக்க வேண்டும்  என்பதில் இரு வேறு கருத்துக்கள் இடமில்லை.

***

  •  

நிலவும் போர்ச்சூழலும் தமிழக அரசின் பேரணியும்

C:\Users\computer\Desktop\496468948_2596393650706223_2021053981496977304_n.jpg
C:\Users\computer\Desktop\495211967_2596393720706216_2790141143476197362_n.jpg

இந்தப் போர்ச்சூழலில் இந்திய அரசு, ராணுவத்தின் பக்கம் நிற்பதாக நம் தமிழக அரசு சென்னையில் ஒரு பேரணி நடத்தியிருப்பது பாராட்டுக்குரியது. இதை காரியார்த்த மானது என்றும், பாவனை என்றும் இன்னும் வேறாகவும் சிலர் சொல்லக்கூடும்; சொல்ல முடியும். ஆனால், இந்தப் பேரணி இன்றைய இந்திய அரசின் மீதுள்ள வெறுப்புக்கும், இந்தியா என்ற நாட்டின் மீதே உள்ள வெறுப்புக் குமான பிரிகோட்டை கவனமாக வெளிப்படுத்துகிறது. இது அவசியமானது.

இந்தியா என்ற நாட்டின் ஒரு மாநிலமாக இருந்துகொண்டு எதற்கெடுத்தாலும் மத்திய அரசைக் குறைசொல்வதும், எதிர்த்துநிற்பதும், மதிப்பழிப்பதாய் பேசுவதும், தனித்தமிழ் நாடு கேட்கிறார்களோ, அதற்கான கலவரங்கள் ஊக்குவிக்கப்படுமோ என்ற அச்சத்தை நிறைய பேர் மனங்களில் ஏற்படுத்தியிருந்தது. அத்தகைய கலவரங்களை விரும்பும், ஊக்குவிக்க விரும்பும் (இத்தகைய கலவரங்களில் பெரிதும் பாதிப்படைவோர் எளிய மக்களே என்பதைச் சொல்ல வேண்டியதில்லை) தரப்பினருக்கும் இந்தப் பேரணி மாநில அரசுக்கு அப்படியெதுவும் எண்ணமில்லை என்று தெளிவுபடுத்தியிருக் கிறது. அவ் வகையிலும் இது முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் ‘மாநில சுயாட்சி’ என்ற சொற் றொடர் இங்கே இரண்டுவிதமான அர்த்தங்க ளில் பயன்படுத்தப்பட்டுவருகிறது. எனவே, அதைத் தெளிவுபடுத்தல் அவசியமாகி றது.

இது மக்களாட்சி நாடு. ஆளும் அரசு பிடிக்கவில்லை யென்றால் அடுத்த தேர்தலில் அவர்களைத் தோற்கடிப்ப தற்கான நியாயமான ஆயத்தங்களை, பரப்புரைகளை மேற் கொள்ளலாம். ஆனால், ஒரேயடியாக ஆளுங்கட்சி செய்வதையெல்லாமே திட்டித்தீர்த்த வாறிருந்தால் எதிர்க்கட்சியென்றாலே இப்படித்தான் என்று மக்கள் அதைப் பொருட் படுத்த மாட்டார்கள். 

ஆனால், படைப்பாளி என்றாலே ‘அரசு’ என்ற கட்ட மைப்பை எதிர்க்கக் கடமைப் பட்டவர் என்பதாக இங்கே ஒரு பார்வை நிலவுகிறது. (ஆனால், இந்தக் கண் ணோட்ட முடைய இலக்கியவாதிகளும் மாநில அரசுக்கு எதிராக இதுவரை முணுமுணுப்பாகக்கூட குரல் எழுப்பியதில்லை என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக் கிறது).

மாறாக, பாராட்ட வேண்டியவற்றை பாராட்டினால், பின் அரசின் மீது – அது மத்திய அரசோ, மாநில அரசோ – நாம் வைக்கும் எதிர்விமர்சனங்களைப் பொருட்படுத்தி கவனத்தில் கொள்வார்கள். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் ‘ இப்போ தைய போர்ச்சூழல் தொடர்பான மத்திய அரசின் முயற்சிகளை மிகத் தெளிவாக அலசி பாராட்டியிருப்பது ஓர் உதாரணம்.

  •  

நிலவும் போர்ச்சூழலும், நிரந்தர மேம்போக்கு மனித நேயவாதிகளும்

நிலவும் போர்ச்சூழலும், நிரந்தர மேம்போக்கு மனித நேயவாதிகளும் 

(அல்லது)

கொடும் போர்ச்சூழலும் காகிதக் கிளர்ச்சியாளர்க ளும் காரியார்த்தக் கலகக்காரர்களும்

……………………………………………………………………………………………………………………………………

_ லதா ராமகிருஷ்ணன்

C:\Users\computer\Desktop\495299374_2594163524262569_2891087551592783261_n.jpg

ஒரு போர்ச்சூழலைப் பயன்படுத்தி தம்மை மனிதநேய, பெண்ணுரிமை, மனித உரிமை ஆர்வலராக, போராளியாக முன்னிலைப்படுத்திக்கொள்ள முயற்சிப்பவர் களைப் பற்றி என்ன சொல்ல? எழுத்தாளர்கள் கூடவா இப்படி இருப்பார்கள்? ஒரு போரை உரிமைப்போர் என்று சொல்லி உயர்த்திப்பிடிப்பார்கள் -ஒரு போரை வன் முறை என்று வரையறுப்பார்கள். பல நேரங்களில், வசதிக்கேற்ப வேறு வேறு அளவுகோல்களை, தரநிர்ண யங்களைப் பயன்படுத்தி.

பஹல்காம் படுகொலைகள் அரசின் பாதுகாப்பு நிர்வாகத் தில் நேர்ந்த குறைபாடு என்பது உண்மை. உளவுத்துறை யிலிருந்து தீவிரவாதிகள் ஊடுருவல், திடீர்த் தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுத்ததை அடுத்து இரண்டு வாரங் கள் முழுக்கத் தேடி அப்படி எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பாதுகாப்பை விலக்கிக்கொண்ட அதே நாள் (ஏப்ரல் 22) பஹல்காம் தாக்குதல் நடைபெற்றதாக செய்திகள் வாசிக்கக் கிடைக்கின்றன. இன்னொரு செய்தி தாக்குதல் நடந்த இடத்தில் இன்னும் இரண்டு மாதங்கள் கழித்துத் தான் பாதுகாப்பு வளையமிட்டு சுற்றுலாவாசிகள் அனுமதிக் கப்படுவார்கள் என்றும் ஆனால் உள்ளூர் சுற்றுலா வழிகாட்டிகள் அதை அறிந்தும் அங்கே ’ஊர் சுற்றிப்பார்க்க வந்திருந்தவர்களை அழைத்துச்சென்றார் கள் என்று இன்னொரு செய்தி. எப்படியிருந்தாலும் இது அரசின் பாதுகாப்புநிர்வாகஞ்சார் குறைபாடு என்றே வைத்துக்கொள்ளலாம். அதற்காக, இந்திய அரசு தன்னைத் தானே குற்றவாளியாக உணர்ந்து கூனிக்குறுகி நின்றுகொண்டிருந்தால் எல்லாம் சரியாகிவிடுமா? இதற்கு முன்பாகவும்கூட அந்தப் பகுதியில் தீவிரவாதத் தாக்குதல்கள் அவ்வப்போது நடந்துகொண்டுதானிருந்தன.

இன்னொருவர் ‘ஆபரேஷன் ஸிந்தூர்’ என்ற பெயரைக் குறைகூறுகிறார். பெண் ணுக்கு ஸிந்தூர்(குங்குமம்) மங்கலச்சின்னம் என்று பேசுவதே பெண்ணடிமைத் தனம் என்று பழிக்கிறார். பஹல்காமில் குடும்பத்தோடு சென்ற ஆண்களை சுட்டுக் கொன்றவர்களால் கணவனை இழந்த பெண்களை இவர் மதிப்பழிக்கிறார் என்றே கொள்ளவேண்டியிருக்கிறது.இந்த மாதிரி வெறுப்புப் பேச்சுகளால் பெண்ணுரிமை எங்ஙனம் மேலோங்க முடியும்? வெறுப்பு தான் விரிந்து பரவும். 

பஹல்காம் படுகொலைச் சம்பவத்தில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் பயங்கர வாதிகள் சொல்லச் சொன்னதாகச் சொன்னதை அப்படியில்லவேயில்லை என்று இங்கே சிலர் அடித்துச்சொல்லவேண்டிய அவசியமென்ன? பஹல்காம் படு கொலையில் கணவரை, ஆண் உறவினர்களைப் பறிகொடுத்தவர்கள் ஒரு மதத்தின் பெயரால் தாம் அப்படி நடத்தப்பட்டதை எடுத்துரைத் திருக்கிறார்கள். அவர்களைப் பேட்டி கண்டவர்கள், களத்திற்கு சென்று நிலவரம் அறிந்த ஊடகவியலாளர்கள் (இவர்கள் மோடி ஆதரவு ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல) கொலையாளிகளின் இந்த அணுகு முறையை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறார்கள். அன்று அந்த இடத்தில் இருந்த உள்ளூர்வாசிகள் இதைக் கூறியிருக்கிறார்கள். ஆனாலும், இங்கேயுள்ள சில அறிவுசாலிக் குழுமங்கள் அப்படியொன்று நடக்கவேயில்லை என்று இங்கிருந்தே எப்படிக் கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. 

ஊரில், நாட்டில் நடக்கும் கொலை கொள்ளைகளிலெல் லாம் பல்வேறு சாதி, மதம் சார்ந்த மனிதர்கள் ஈடுபடுகிறார்கள். அதற்காக அந்தப் பிரிவுகளைச் சார்ந்த அத்தனை பேரையும் மக்கள் குற்றவாளிகளாக பாவிப்ப தில்லை; குறைத்துப் பேசுவதில்லை. அப்படிச் செய்பவர்கள் (எடுத்துக்காட்டாக, எங்காவது ஒரு பார்ப் பனர் குற்றச் செயலொன்றில் ஈடுபட்டால் உடனே அதை ஒட்டுமொத்த பார்ப்பனகுலத்தின் தலைமீது ஏற்றிவிடுபவர்கள் இங்கே சாதாரண மக்களில்லை; தம்மை மனிதநேயவாதிகளாக, சமூகப்பிரக்ஞையாளர்களாக பிரகடனம் செய்து கொள்ளும் அறிவுசாலிகளே). 

இந்த நேரத்தில் அரசியல்வாதிகளான ஒமார் அப்துல்லா, ஒவைஸி போன்றோர் கூட கவனமாகப் பேசுகிறார்கள். பாகிஸ்தானின் தொடர் அத்துமீறலைக் கண்டிக்கி றார்கள். ஆனால், காகிதக் கிளர்ச்சியாளர்களுக்கு அந்தப் பொறுப்புணர்வு கொஞ்சமும் இல்லை. இது வருத்தத்திற்குரியது; கண்டிக்கத்தக்கது.

இன்னும் சிலர் மதரீதியான வெறுப்பை வளர்க்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்ப டுத்திக்கொள்கிறார்கள். மிகவும் வேதனையளிக்கும் விஷயம் இது. 

இன்னும் சிலர் போர்நடவடிக்கைகளை romanticize செய்கி றார்கள். வன் முறையை நம் சினிமாக்களும் , சீரியல்க ளும் தொடர்ந்தரீதியில் Heroismஆக வரையறுத்துக் கொண்டேயிருப்பதுபோல். (சமீபகாலமாக ஊரில் நடக்கும் வெட்டு குத்துக்களையும், கோர விபத்துகளை யும் காட்சி ஊடகங்கள் எல்லா நேரமும் காட்டிக்கொண் டேயிருக்கின்றன; இதற்கென்றே தனி ‘க்ரைம் டைம்’ நிகழ்ச்சிகள் பரபரப்பாக, ஏற்ற இறக்க தொனிகளிலான விவரிப்புடன் தினமும் எல்லா செய்தி ஊடகங்களிலும் ஒளிபரப்பப்படுகின்றன. இது நீடிக்கலாகாது; நிறுத்தப்பட வேண் டியது. 

வெளிநாடுகளுக்குப் பயணமாகும் படைப்பாளிகள் பலர் இந்தியாவை மதிப்பி றக்கிப் பேசுவதும், இந்துமத நம்பிக்கைகள், நியமங்கள், நெறிமுறைகளை நிந்திப் பதும் வழக்கமாக இருக்கிறது.  அதற்கென்றே அயல்நாடுகளில் இயங்கிவரும் அமைப்புகள் சிலவற்றால் அவர்கள் அழைக்கப்படுவதும் நடக்கிறது.

’எம்மைத் தவிர வேறு எந்த படைப்பாளியும் ஊரில் நடக்கும் சாதிக்கொடுமை களுக்குக் குரல் கொடுப்பதில்லை – நிலா, மழை என்று மட்டுமே எழுதிக்கொண்டி ருக்கிறார்கள்’ என்று சக படைப்பாளிகளைச் சாடுபவர்கள் என்றேனும் சாதிக் கலவரப் பகுதிகளுக்குச் சென்று ஆதிக்கசாதி யினரோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட தாகவோ, அல்லது அங்கே நிகழ்ந்த சாதிக்கொடுமைக்கு எதிராக போராட்டம் நடத்தியதாகவோ, அல்லது, சட்டம்-ஒழுங்குக்கு நேரடி பொறுப்பான மாநில அரசிற்கு எதிராக போர்க்குரல் எழுப்பியதாகவோ தெரியவில்லை. 

போர் வேண்டாம் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. அதேபோல்தான், நிஜமான போர்ச்சூழல் நில வும் இந்நேரத்தில் இந்த மேம்போக்கு மனிதநேய வாதிகளுக்கும் ‘காகிதக் கிளர்ச்சியாளர்களுக்கும் காரியார்த்தக் கலகக்காரர்க ளுக்கும்’ இடமளிக்கலாகாது.

*

  •  

இரு கவிதைகள் – 1) வாழ்வின் விரிபரப்பு 2) தன்வரலாற்றுப்புனைவு

  1. வாழ்வின் விரிபரப்பு

(*சமர்ப்பணம்: சிறுமீனுக்கு)

C:\Users\computer\Desktop\495849513_2593372181008370_3021257122840379520_n.jpg

தொடர்ந்து பார்த்துக்கொண்டேயிருந்தேன் தொட்டிமீனை

அந்தச் சதுரக் கணாடிவெளியினுள்ளான நீரில் சுற்றிச் சுற்றிப்போய்க்கொண்டேயிருந்ததுமூலைகளில் முட்டிக்கொண்டபடி.

எதிர்பாராமல் மோதிக்கொள்கிறதா?

ஏதோவொரு தெளிந்த கணக்கிலா?

அவ்வப்போது நீரின் மேற்பரப்பிற்கு வந்து 

குட்டிவாய் திறந்து 

பின் மீண்டும் உள்ளோடி

சதுரப்பரப்பின் மையத்திலிருந்த உருளையருகே சென்று 

அங்கே அதற்கென்று வைக்கப்பட்டிருந்த உணவை

ஓரிரு கவளங்கள் அவசர அவசரமாய் விழுங்கிவிட்டு

மீண்டும் சதுரமாய் வட்டமிடத் தொடங்குகிறது.

சமுத்திரவாசி எத்தனை சிறிய சதுரநீர்ப்பரப்பிற்குள்….

ஆனால், நானுமோர் சமுத்திரவாசிதான் –

நிலம் நீராக காற்றாக –

நானிருப்பதும் சச்சதுர சிறுவெளிதான். அப்படியொன்றும் அவலமாக 

உணரவில்லையே நான் என்ற நினைப்பு மேலோங்க – 

ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் தன்னுடைய NUTSHELL உலகத்திலிருந்து

என்னை நோக்குப் புன்னகைப்பதுபோல் இருக்கிறது.

இன்னும் தனது சச்சதுரச் சிறுவெளியில் வட்டமடித்துக்

கொண்டிருக்கும் 

அந்த சிறுமீனைப் பார்க்க

அத்தனை சோகமாய் உணரத்தேவையில்லை 

யென்று தோன்றுகிறது

இந்த இப்போதைய மனநிலையில்…

கடல் பிரபஞ்சமாகவும்

கடக்கவியலாப் பாறையாகவும்

உருமாறும் நிறம் மாறும்

கட்புலனுக்கு அப்பாலான மனோலயம்

வாழ்வின் மகோன்னத மாயாஜாலமாக

மிகு கருணையாக….

*

2. தன்வரலாற்றுப்புனைவு

C:\Users\computer\Desktop\495129247_2591644554514466_4266352949338224541_n.jpg

 ‘’ஸெலக்டிவ் அம்னீஷியா’வை செம தோதான அளவுகளில் வரிகளில்,

வரியிடை வரிகளில் சிந்தச்செய்து கொண்டேயிருக்கவேண்டும்

சூடாக அருவத் தம்பலர்களில் தன்முனைப்புச் சக்கரையிட்டு

செத்துப்போய்விட்ட சகமனிதர்களை சீரான தொனியில் 

சகட்டுமேனிக்கு வசைபாடுவதே சிறப்பான இலக்கியத்துவமாக 

பரபரவென்று தயாரித்து ஆவிபறக்கத் தரவேண்டும் – தளும்பத்தளும்ப.

மறவாமல் ஒருபக்க நியாயத்தை மறுபக்க நியாயமாகவும் மாற்றிக்காட்டப் பழகவேண்டும்.

மறுதலிப்போரை மானங்கெட்ட கூலிப்படையினராகக் கேலிசெய்யும் 

ஞானமார்க்கந் தெரிந்து நடக்கப் பயிலவேண்டும்.

நான் அந்தத் தெருவில் அன்று நடந்தேன்

இந்தத் தெருவில் என்று நடந்தேன்

என்று முந்தி பிந்தி நடந்ததையெல்லாம்

சொந்தக்கால்களுக்குட்பட்ட பரப்பாக்கிக்கொள்ளவேண்டும்-

சௌகரியமானவற்றை மட்டுமே என்பதைச் சொல்லவும் வேண்டுமோ.

இருபது பேரிலோ அறுபது பேரிலோ ஒருவராக இடம்பெற்றிருந்ததை

இவரேயெல்லாமாய்த் திரித்துத் தன்னைப் பெரிதுபடுத்திக்கொள்ளத் 

தெரியவேண்டும்.

மனதின் ஆழத்தில் மண்டிக்கிடக்கலாகும் மகா கண்றாவி 

போர்னொகிராஃபிக் காட்சிகளை

திருத்தமாய் வெட்டியொட்டித் தகவமைத்துத் தந்து

தணிக்கைக்குத் தப்பத்தெரிந்த தரமான திரைப்பட வர்த்தகராய்

தன்னைத் தயாரித்துக்கொள்ளும் வித்தகத்தில் தேர்ச்சிவேண்டும்.

கிசுகிசுப்பாய் புறம்பேசித் திரிந்து அதையே

இலக்கிய ரசனை விகசிப்பாய்

அளந்துதரத் தெரியவேண்டும்.

புகழுக்கான தன் அலைச்சல் இலக்கியத் தேடல்

இன்னொருவருடையதோ நக்கிப் பிழைத்தல்

1, 2, 3, 4, 5, 6, 7, 8……. என்று வேறொருவர் 100 வரை எழுதிக்கொண்டேபோனால் அது பிரதியை இட்டுநிரப்பல்

அதையே 100, 99, 98, 97, 96, 95, 94…….

என்று பின்னோக்கி ஒன்று வரை தான் எழுதினால் அது

இலக்கியமாகிவிடுதல்

என்ற பிரிகோட்டுப் பார்வையைப் பெற்ற முக்கண்ணராயிருக்கவேண்டும்.

பதிலளிக்கும் பொழுதில்லாதவரை, வழியில்லாதவரை கதியில்லாதவரை

கும்மாங்குத்துக் குத்திக்கொண்டேயிருக்கவேண்டும்.

தெம்மாங்குப் பாட்டோ, திரைப்பாடல் மெட்டோ –

பின்னணியிசையுமிருந்தால் பெரிதும் உகந்ததுதானே.

எதிர்வினையாற்றும் நிலையிலில்லாதவரை குதித்துக் குதித்துப் 

பிடரியில் ஓங்கியடிக்கும் 

மனிதநேயவாதியாகத் தன் தலை பெருத்து வீங்கவேண்டும்.

தனதாமெனில் தன்முனைப்பு அறமென்றும்

பிறருடையதெனில் அது அசிங்கம் அராஜகம் ஆணவமென்றும்

பிரதிக்கு உள்ளேயும் வெளியேயுமாய்

பொருள்பெயர்த்துக்காட்ட வேண்டும்.

கொலையே செய்திருந்தாலுமதைக் கலையாக்குவதோடு நில்லாமல்

கனகச்சிதமாய் நியாயப்படுத்திக் காட்டுவதே நிலைப்பாடாகக் கடவது.

உன்னிப்பாய் 

பன்னிப்பன்னி யுரைத்தொரு

வன் கருத்தை

வெளிப்படையாகவோ உட்குறிப்பாகவோ பதிவுசெய்தல்

இன்றியமையாதது.

கொசு கடித்ததை பசுவின் பாலில் கொஞ்சம்போல் தண்ணீர்விட்டுக் காய்ச்சியதையெல்லாம்

உள்ளதை உள்ளபடிச் சொல்வதுமொரு பாவனையாக

சுயசரிதையாவதும் சொத்தைக்கதையாவதும் அவரவர் திறமாக

அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்க

ஒரு தன்வரலாற்றுப்பிரதியில் தனக்கென்ன கிடைக்குமென்று 

பார்க்கும் வாசிப்போர்

யாசிப்போராய்

நிரம்பாத பிச்சைப்பாத்திரத்தோடு

வருந்தி நிற்பதே அவர் தலைவிதி

அல்லது எழுத்துக்கலையின் நிர்க்கதி.

பிரதியின் முதலிலோ இறுதியிலோ

இந்த வரிகளுக்குத் தலைப்பாகவுள்ள

வரிகளை இடம்பெறச்செய்யவேண்டும்

மறவாமல் _ 

பொறுப்புத்துறப்பாக.

….

  •