Reading view

முயன்றுபார்ப்போம் மொழிபெயர்ப்பை தொகுதி 1  & தொகுதி 2

(ANAAMIKAA ALPHABETS வெளியீடு)

_ லதா ராமகிருஷ்ணன்

C:\Users\computer\Desktop\TRANSLATION BOOK IMAGES\495575539_2593416767670578_2721681043549735072_n (2).jpg
C:\Users\computer\Desktop\TRANSLATION BOOK IMAGES\495568723_2593416844337237_5976183938633954823_n (2).jpg

awaamikaa’முயன்றுபார்ப்போம் மொழிபெயர்ப்பை’ என்ற தலைப்பு பொருத்தமானதாகத் தோன்றியது. இதுவொரு புதிய முயற்சி. இந்த நூல் வாசிப்போருக்கு சுவாரசியமாகவும், பயனுள்ளதாகவும், மொழிபெயர்ப்புக் கலை குறித்த சில கோணங்கள், பாணி களை அறிந்துகொள்ள வழிவகுப்பதாகவும் அமையும் என்று நம்புகிறோம். 

நன்றி

மொழிபெயர்ப்பாளர்கள்

லதா ராமகிருஷ்ணன் – எஸ்.ஆர்.தேவிகா

C:\Users\computer\Desktop\TRANSLATION BOOK IMAGES\முயன்றுபார்ப்போம் மொழிபெயர்ப்பை!   new PDF_00001.jpg

*

இருநூல்களிலும் வெளியாகியிருக்கும் என்னுடைய முன்னுரையிலிருந்து சில பகுதிகள்:

மொழிபெயர்ப்பு குறித்த பார்வைகள் கண்ணோட்டங்கள் – உலகளாவிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த படைப்புகள் மொழிபெயர்ப்பாளர்கள் முன் வைத்திருப்பவை –  இணையத்தில் கூட்டமாக கொட்டிக்கிடக்கின்றன! சர்வதேச மொழி பெயர்ப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது  – செப்டம்பெர் 30. இவற்றையெல்லாம் அறிந்துகொள் வதும் படித்துத் தெரிந்துகொள்வதும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் மொழி பெயர்ப்புப்பணியைப் பொறுத்தவரை இரண்டு பழமொழிகளை நாம் நினைவு வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.  ஒன்று, சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம். இன்னொன்று ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது கடந்த முப்பது ஆண்டுகளாக புனைவு அ-புனைவு பிரதிகளை ஆர்வம் காரணமாகவும் புதிய விஷயங்களை அறிமுகப்படுத்துமாறு தமிழ்மொழியின் சிறுபத்திரிகைவெளியைச் சேர்ந்த நட்பினர் அன்போடு கேட்டுக் கொண்டதற்காகவும் மொழிபெயர்த்திருக்கிறேன் தொழில் முறை மொழிபெயர்ப்பாளராகவும் இயங்கிவருகிறேன் இந்த அனுபவங்களின் பின்னணியில் இதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

மொழிபெயர்ப்பாளர்கள் முக்கியமாக இரு வகைப்படுவர். பல்வேறு பிரதிகளை படித்து அவற்றில் சிறந்தவற்றை, மனதுக்குப் பிடித்தவற்றை மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுத் துக்கொண்டு மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டிருப்ப வர்கள் இன்னொரு பிரிவினர், மற்றவர்களால் தேர்ந்தெடுத்து தரப்படும் பிரதிகளை கட்டணம் பெற்றோ கட்டணமில் லாமலோ மொழிபெயர்ப்பு செய்பவர்கள்.

ஓர் இலக்கியப் பிரதியை மொழிபெயர்ப்பதற்கும், இலக்கியம் அல்லாத பிரதியை மொழிபெயர்ப்பதற்கும் இடையே என்ன வேறுபாடு இருக்கிறது? ஒரு பிரதியை மொழிபெயர்க்கும் போக்கில் ஒரு முட்டுக்கட்டையை _ முழுமையான அர்த்தம் அல்லது பயன் படுத்தப்பட்டிருக்கும் சூழமைவு அல்லது அதன் உள்ளர்த்தம் புரியாமல் இருக்கும் நிலை _  எதிர்கொள்ளவேண்டிவந்தால் அதை நாம் எவ்வாறு கடந்து செல்வது? மற்றவர்களின் உதவியை நாடவேண்டுமா? அப்படியெனில் யார் அந்த மற்றவர்கள் ? அல்லது, மூலப் பிரதிக்கு பாதிப்பு ஏற்படாத அளவில் நாம் சிக்கலான வார்த்தை அல்லது சொல் வழக்கை விட்டுச் சென்றுவிட லாமா? மூலப்பிரதியிடம் ஒரு மொழிபெயர்ப்பாளர் எடுத்துக்கொள்ளக்கூடிய சுதந்திரங்கள் யாவை? மொழி பெயர்ப்பின் அரசியல் என்று நாம் குறிப்பிடுவது என்ன? மொழிபெயர்ப்பு என்ற செயல் பாட்டின் வெளிப்படையான நோக்கங்கள், மறைமுகமான நோக்கங்கள் யாவை?

 இத்தகைய கேள்விகள் சந்தேகங்கள் ஒரு மொழிபெயர்ப்பாளர் மனதைத் துளைத்துக்கொண்டேயிருக்கின்றன. இருந்தும், இவை எல்லாவற்றையும் மீறி ஒரு மொழிபெயர்ப்பாளரை தொடர்ந்து இயங்கச் செய்து மக்களை இயங்கச் செய்வது மக்களிடையே ஒரு தகவல் தொடர்பாளராகப் பணியாற்றும், வெவ்வேறு மக்கள் இடையே பாலமாக திகழும் ஒரு பிரதியை மொழிபெயர்ப்பது மூலம் தனக்குக் கிடைத்த நுண்ணுணர்வுகள், அழகியல், வாழ்க்கை குறித்த விழிப்புணர்வுகள் முதலியவற்றை சக மனிதர்களோடு பகிர்ந்து கொள்ளும் ஆர்வமும், இந்த விஷயங்கள் ஆனந்தமாக ஒருவருக்குக் கிடைக்க நம்மால் வழிசெய்ய முடியும் என்ற உண்மையும் மொழிபெயர்ப்பாளரைத் தனது பணியில் அதிக அளவு பொறுப்பேற்பு உணரச் செய்கிறது. மிக முக்கியமான ஆக்கபூர்வமான வலி நிவாரணமான பல தகவல்களையும் உணர்வுகளையும் மொழிபெயர்ப்பாளர் மற்றவர்களிடம் கொண்டு போகிறார். இந்த வகையில் பார்க்கப் போனால் மொழிபெயர்ப்பு என்ற செயல்பாடு அடிப்படையாகவே ஒரு சீர்திருத்தவாதியின் செயல்நோக்கம் கொண்டது என்றும் சொல்ல முடியும்

ஒரு படைப்பாளி தன் உள்ளிருக்கும் தேர்ந்த வாசகரை திருப்திப்படுத்திக் கொள்வதே பிரதானமாய் கதை கவிதை கட்டுரை என எழுதலாம் அதில் தவறு ஏதும் கிடையாது ஆனால் ஒரு மொழிபெயர்ப்பாளர் மற்றவர்களுக்கு இருக்கும் வாசகர்களுக்கு ஆகவே முதன்மையாக செயல்படுகிறார் எனவேதான் மொழிபெயர்ப்பு என்ற செயல்பாடு அதனளவில் ஒரு சமூகச் செயல்பாடாக விளங்குகிறது எனலாம்.

இந்த செயல் பாட்டின் நோக்கம் எத்தனைக்கெத்தனை ஆக்கபூர்வமாகவும் நேர்மையானதாக இருக்க முடியுமோ அத்தனை அத்தனை அறிவுத்திறன் கொண்டதாகவும் எதிர்மறையானதாகவும் இருக்க வழியுண்டு. சிலர் மொழிபெயர்ப்பை எளிய வாசகர்களை ஏமாற்றுவதற்கான அவர்கள் மீது அதிகாரம் செலுத்துவதற்கு ஆன கருவியாக பயன்படுத்துவதும் உண்டு சில மொழி பெயர்ப்பாளர்கள் தம் மனம் போன போக்கில் மூலப் பிரதியை திருத்தியும் சுருக்கியும் அவர்கள் அளவில் தேவை யற்ற அல்லது அவர்களுக்கு பிடிக்காத பத்திகளை வரிகளை அழுத்தம் குறித்தும் அல்லது அறவே விளக்கியும் வேறு சில பத்திகளை வரிகளை புதிதாக இணைத்தும் அல்லது இடமாற்றம் செய்து மூலப்பிரதியில் மீது அதிகாரம் செலுத்துவதும் உண்டு

மொழிபெயர்ப்பாளருக்கு அடிப்படைத் தேவை இரு மொழித் திறன். மூலப்பிரதியின் உள்ளடக்கம் குறித்த அடிப் படைப் புரிதல். மூலப்பிரதியின் தொனி,, நடை, மூலப் படைப்பாளி படைப்பாளி ஒரு சொல்லை எந்த அர்த்தத்தில் பயன்படுத்தியிருக்கிறார் என்று அறிதல் –  வேறு சிலவும் உண்டு. மூலப் பிரதிக்கு ஏற்பவும் அது மொழி பெயர்க்கப்படுவதற்கான காரணம்  குறித்தும், இலக்கு மொழி வாசகர்கள் எத்தரப்பினர்  – அதாவது, சிறுவர் சிறுவர் சிறுமியரா, பள்ளி அல்லது கல்லூரி மாணவர்களா, பெரியவர்களா என்பது பற்றியும் மொழிபெயர்ப்பாளருக்குத் தெரிந்திருக்கவேண்டும்.  மூலப்பிரதி எழுதப்பட்ட காலத்தில் புழங்கிய அல்லது பயன்படுத்தப்பட்ட வார்த்தை கள் அதேயளவு இலக்குமொழியில் பயன்படுத்தப்படவேண்டுமா அல்லது சம காலத்தில் புழங்கும் வார்த்தைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாமா என்ற தெளிவும் தேர்வு மொழிபெயர்ப்பாளருக்கு இருக்கவேண்டும். 

தமிழ் தாத்தா உவேசாவின் என் சரித்திரத்தை சாகித்ய அகாதமிக்காக சில வருடங் களுக்கு முன்பு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த டாக்டர் சுப்ரமணியன் மூல ஆசிரியர் ’சல்லாபிக்கும்’ என்ற வார்த்தையை உரையாடல் என்ற பொருளில் பயன்படுத்தியிருப்பதைச் சுட்டிக் காட்டியதை இங்கே நினைவு கூறத் தோன்றுகிறது

TRANSLATION IS APPROXIMATION என்பார்கள். அ APPROXI MATION என்பதற்கு ஒத்திருத்தல், அணுகுதல் நெருங்கிய அளவில், ஏறத்தாழ சரியாய், என அர்த்தங்கள் அகராதிகளில் தரப்பட்டிருக்கின்றன ஆனால், அதைவிட முக்கியமாக ஒரு மொழிபெயர்ப்பாளரிடம் இருக்க வேண்டி யது DISCRETION என்று சொல்லலாம்: ’பொருந்துமாறு அறிதல். குழந்தைகளுக் கான(க)  கதைப் புத்தகத்தை மொழிபெயர்க்கும் போது –  கவனிக்கவும் – கதை புத்தகம்; மொழியியல் சார் நூல் அல்ல  –  ’பஸ்’ என்ற சொல்லை பேருந்து என்று மொழிபெயர்ப்பது சரியா? அதுவே FISHஏஐ மீன் என்று மொழிபெயர்ப்பதே சரி! இந்தக் குழப்பமும் தெளிவும் மொழிபெயர்ப்பாளருக்கு இருக்கவேண்டியது அவசியம்.

 ஆரம்பத்தில் தமிழ்ச் சிற்றிதழ்களில் சில  இலக்கிய படைப்பு களை நட்பினரின் வேண்டுகோளுக்கு இணங்கி ஆர்வமாக மொழிபெயர்த்த காரணத்தால் பின்னாளில் தொழில் முறை மொழிபெயர்ப்பாளராக பலவகையான பிரதிகளை மொழி பெயர்க்கவேண்டிவந்தபோது ’இலக்கு வாசகர்களை மனதில் கொண்டு எளிமையாக மொழியாக்கம் செய்யும்’படி என்னிடம் பலமுறை கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது! உதாரணமாக, குழந்தைகளுக்கான கதைகள், எழுத்தறிவு இயக்கத் திற்கான கையேடுகள் போன்றவை. அதேசமயம் எந்த அளவுக்கு ஒரு மூலப்பிரதி எளிமைப் படுத்தப்படலாம் என்பது பற்றிய தெளிவு ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு இருக்க வேண்டியது அவசியம்.

கடினமான வார்த்தைகள்தான் மொழிபெயர்க்கச் சிரமமா னவை என்று நினைப்பது சரியல்ல. மிக எளிய வார்த்தைகள்  We, Our  கூட நம்மைத் திகைக்கவைத்துவிடும்! We என்றால் நாமா, நாங்களா, Our என்றால் நம்முடையதா எங்களுடையதா  –  He என்றால் அவனா, அவரா? –  இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்

தொண்ணூறுகளில் நடந்த சாகித்திய அகாதெமி பிராந்திய மொழி பெயர்ப்புப் பயிலரங்கில்  கலந்துகொள்ளும் வாய்ப் புக் கிடைத்தது. My Child என்ற ஆங்கில சொற்பிரயோகத்தை ஒரு பங்கேற்பாளர் ’குழந்தே’ என்று தமிழில் மொழி பெயர்த்தார்.  மற்றொருவர் ‘கண்ணு’ என்று மொழிபெயர்த் தார்.  வேறொரு வர் ’செல்லம்’ என்றார். இன்னொருவர் பாப்பா என்றார்! ஒரு மொழிபெயர்ப்பாளரின் வாழ்வுச் சூழலும் அவருடைய மொழிபெயர்ப்பில் பயன்படுத்தப்படும் சொற்கள், தேர்வுகளில் ஏதோ ஒரு வகையில் வினையாற்றுகின்றன எனலாம்.

மொழிபெயர்ப்பு எனும்போது நாம் இங்கே ஆங்கிலத் திலிருந்து தமிழிலும் தமிழி லிருந்து ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்படுவதையே கருத்தில் கொண்டு பேசுகி றோம் என்பது குறிப்பிடத்தக்கது. பிறமொழிகளிலிருந்து அதாவது பிரெஞ்சு, ஸ்பானிஷ், ருஷ்ய மொழிகள் போன்ற மொழிகளில் எழுதப்பட்டு பின் ஆங்கிலம் வழியாகத் தமிழுக்கு வந்த இலக்கியப் பிரதிகள் நிறையவே. தமிழ்ச்சூழலில் ஆங்கிலம் போன்ற மொழிகளிலிருந்து ஒரு பிரதிக்கு தமிழில் கிடைப் பது பெரும் பாலும் ஒரே ஒரு மொழியாக்கம். அதுவே அரிது.  ஆனால், வேறு மொழிகளிலிருந்து ஆங்கிலத்தில் சில படைப்புகள் ஆங்கிலத்தில் இரண்டு மூன்று மொழிபெயர்ப் பாளர்களால்கூட மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. 

மூலமொழியான ஆங்கிலத்திலிருந்து அப்படி இருவேறு தமிழ் மொழிபெயர்ப்புகள் கிடைக்கு மானால், அவற்றை ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் மொழிபெயர்ப்பின் வேறு பல அம்சங்களையும் மொழிபெயர்ப்பாளர்களின் வேறுபட்ட அணுகுமுறை களையும் புரிந்துகொள்ளமுடியும். ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் என்னிடம் இலக்கிய நண்பரொருவரால் தரப்பட்ட WOMAN AT POINT ZERO  எகிப்திய எழுத்தாளர் Nawal El Saadawi யின் தன்வரலாறுத் தன்மையான புதினம் ஒன்றை மொழிபெயர்த்துக் கொடுத்தேன். சூனியப்புள்ளியில் பெண் என்று தலைப்பிட்டேன். சமீபத்தில் அதே தலைப்போடு அந்தப் படைப்பு இன்னொருவரால் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டிருப்பதை அறிந்தபோது (அதில் இந்தப் படைப்பு ஏற்கெனவே மொழிபெயர்க்கப் பட்டிருப்பது குறித்து தகவல் தரப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை!) என் மொழி பெயர்ப்பை இந்தப் புது மொழிபெயர்ப்போடு ஒப்புநோக்கும் ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், என் மொழி பெயர்ப்புப் பிரதி எதுவும் என்னிடம் இல்லை. நண்பர்களிடம் கேட்டி ருக்கிறேன். 

ஏற்கனவே மொழிபெயர்க்கப்பட்ட மூலப்பிரதி ஒன்று இன் னொரு மொழி பெயர்ப்பாளரால் மீண்டும் மொழிபெயர்க்கப்படும்போது முதல் மொழிபெயர்ப்பின் துணையோடு தன் மொழிபெயர்ப்பை செம்மைப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பும் இரண்டாம் மொழிபெயர்ப்பாளருக்கு இருக்கிறது. இந்த வாய்ப்பு ஒரு மூலப் பிரதியை இலக்கு மொழியில் முதன் முதலாக மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாள ருக்கு இல்லை என்பதால் அவர் தன் மொழிபெயர்ப்பை கூடுதல் கவனத்தோடு மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாத தாகிறது. 

தமிழ்ச்சூழலைப் பொறுத்தவரை ஆங்கிலம் வழியாகவோ நேரிடையாக பிரெஞ்சு முதலிய மொழிகளிலிருந்தோ உலகத் தரம் வாய்ந்த எழுத்தாக்கங்கள் பெரும்பாலும் சிற்றிதழாளர் களால் ஆர்வத் தோடு மொழிபெயர்க்கப்பட்டு தங்கள் கைக் காசைச் செலவழித்து தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருப்பதே அதிகம். இந்த மொழி பெயர்ப்பை ஆர்வமாகச் செய்யும் மொழி பெயர்ப்பாளருக் கும் சன்மானம் எதுவும் கிடையாது. ஆனால்,  இப்படி சிற்றித ழாளர்களின் மொழிபெயர்ப் பின் மூலம் ஒரு உலகத்தரம் வாய்ந்த படைப்பு/படைப்பாளி தமிழில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டு வாசகர்களிடையே வரவேற்பைப் பெற்றதும் அந்தப் படைப்பை இன்னொருவரைக் கொண்டு சுமாராக மொழி பெயர்த்து இந்த சுமார் மொழிபெயர்ப்பே தமிழில் கிடைக்கும்படி செய்துவிடல் நடக்கிறது. அதற்குப் பின் இந்த உலகத்தரம் வாய்ந்த படைப்புக்கு வேறு மொழிபெயர்ப்புகள் தமிழில் கிடைக்கவே வழியில்லாமல் பார்த்துக்கொள்ளப் படும்! இது மொழிபெயர்ப்புலகிற்கு இழப்பே!

ஒரு பிரதியை மொழிபெயர்த்துக்கொண்டிருக்கையிலேயே  – ஆங்கிலத்திலிருந்து தமிழில் அல்லது தமிழிலிருந்து ஆங்கிலத்தில் – அதற்கு இணையான மொழி பெயர்ப்புகளை நம் மனம் நம்மையறியாமல் செய்துகொண்டேயிருக்கும். சில வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது அவற்றிற்கு இணையான வேறு சொற்கள் மனதில் வந்து வந்து போகும். ஒரு மொழிபெயர்ப்பு இறுதி வடிவம் பெறும்போது ’மனசில்லா மனசோடு’தான் அதற்கு இணையாக மனதிலோடிய மற்ற மொழிபெயர்ப்பு களை விலக்கிவிட வேண்டி யிருக்கிறது.

ஒரே கவிதையை இருமுறை மொழிபெயர்க்கும்போது இருவேறு மொழிபெயர்ப்புப் பிரதிகள் கிடைக்கும் வாய்ப்பு களே அதிகம்!  அர்த்தம் திரியாதபடி அமையும் இரு வேறு மொழிபெயர்ப்புகள்! சில சமயங்களில் ஒரே ஒரு வார்த்தை ஒரு மொழி பெயர்ப்பு முயற்சியைக் கைவிடச்செய்துவிடும். நான் எழுதிய ஒரு தமிழ்க் கவிதைக்கு ’விழல்’ என்று தலைப்பிட்டிருந்தேன். கீழே விழுவது, விழலுக்கு இறைத்த நீர்  ஆகிய இரண்டு அர்த்தங்களையும் தரும் ஒரே சொல்லாக அதை தமிழில் பயன்படுத்தியிருந்தேன். அந்தச் சொல்லுக்கு இணையான வார்த்தையை என்னால் ஆங்கிலத்தில் கண்டெடுக்கவே முடியவில்லை. இது என் மொழித்திறன் சார் போதாமையாக இருக்கலாம். அல்லது, ஒவ்வொரு மொழிக்கும் உள்ள தனித் துவம் காரணமாகவும் இருக்கலாம்.

இந்தத் தொகுப்பில் இடம்பெறும் சில பத்திகளின் மொழி பெயர்ப்பு மூலம் மொழிபெயர்ப்பில் சிக்கல்கள் சிலவற்றைச் சுட்டிக்காட்ட முடியும்:

ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கும் முதல் பத்தி பின்வருமாறு ஆங்கில மூலமும் தரப்பட்டிருக்கிறது

ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இந்தத் தொகுப்பில் இடம்பெறும் பத்திகளில் ஒன்றின் முதல் வரி கீழே தரப்பட்டிருக்கிறது:

GHALIB IS NOT AN EASY POET TO TRANSLATE INTO URDU OR ENGLISH

காலிப் உருது அல்லது ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப் படுவதற்கு எளிதான கவிஞர் அல்ல என்பதுதான் பொருள்..

ஆங்கில வாக்கியப்படி ‘காலிப் உருது அல்லது ஆங்கில மொழிபெயர்ப்புக்கு எளிதாக வசப்படுபவர் அல்ல’ என்று பொருள்கொள்ளலாம்.

இதை ‘காலிபின் கவிதைகளை உருதுமொழி அல்லது ஆங்கில மொழியில் தருவது அவ்வளவு எளிதல்ல என்று மொழி பெயர்க்கலாம்.

அல்லது, மிர்ஸா காலிபின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது கடினம் என்றும் மொழிபெயர்க்க முடியும். ஆங்கில மூலத்தில் மிர்ஸா என்ற சொல் இல்லையே  _ தமிழில் ஏன் அதைத் தரவேண்டும் என்றோ ஆங்கில மூலத்தில் ’எளிதல்ல’ என்று இருப்பதை தமிழில் கடினம் என்று ஏன் மாற்ற வேண்டும் என்றோ கேள்வியெழ வாய்ப்பில்லை யென்றே தோன்றுகிறது!

தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் பத்திகளிலிருந்து ஒரு பகுதி கீழே தரப்பட்டுள்ளது:

கற்பித்தலில் இடைவெளி

அரசுப் பள்ளி மாணவர்களைப் பொறுத்த மட்டில் கற்றல் என்பது இன்னும் முழு முடக்கக் காலம் போலவே இருக்கிறது. இது, இணைய வழிக் கல்வியில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வு அல்ல. இணையவழிக் கல்வி இடைவெளி அல்ல. கற்றல் கற்பித்தல் என்பதிலிருந்து முற்றாகத் துண்டித்துத் தூக்கி தூர வீசியெறிந்து விட்டது என்றே கூற வேண்டும். அரசுப் பள்ளிக் குழந்தைகளில் எழுத்து களை மறந்தவர்கள் எத்தனை ஆயிரம் பேரோ? வேலைக்குச் சென்ற வர்கள் எத்தனை ஆயிரம் பேர் நிரந்தரமாகப் பள்ளி இடை விலகப் போகிறார் களோ? உண்மையில், கரோனா பெருந்துயரங் களில் இது நீடித்த, நிலைத்த பெருந்துயரமாக இருக்கப் போகிறது.

GAPING DISPARITIES IN TEACHING

As for the students of government schools learning is going to suffer as total lockdown period. This is not a disparity caused by “Online education’. Online education is not a disparity. It has completely cut off the children from Teaching&Learning process. Among the children studying in the government schools wonder how many thousands of them would have lost touch with reading and writing? Among those who had gone to work during the pandemic days how many of them would turn into dropouts? In fact this is going to be the great tragedy caused by Corona.

தமிழில் உள்ள பெருந்துயரம் என்ற சொற்றொடரை ஆங்கிலத் தில் great tragedy என்று மொழிபெயர்க்கலாம். ஆனால், மகத்தான என்ற சொல்லையும் இதே ஆங்கில வார்த்தையால் மொழிபெயர்க்க முடியும்! ஆனால், அதையே ஆங்கிலத்திலி ருந்து தமிழில் மொழி பெயர்க்கும் போது ஞ் õx great tragedy என்பதை ‘மகத்தான பேரழிவு’ என்று மொழி பெயர்க்கலாகாது!

மொழிபெயர்ப்பை STANDARDIZE செய்ய முடியாது. இந்த ஆங்கில வார்த்தைக்கு இந்தத் தமிழ் வார்த்தைதான் மொழி பெயர்ப்பில் தரப்பட வேண்டும் என்று யாரும் வரை யறுத்துவிட முடியாது. மூலப்பிரதியை எந்த அளவுக்கு சிறப்பாக இலக்கு மொழியில் பிரதிபலிக்கச்செய்ய முடியுமோ அந்த அளவுக்கு செய்யத் தேவையான இணைச் சொற்களை மொழிபெயர்ப்பாளர் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார். வார்த்தை களின் தேர்விலும் அவற்றை வரிசைப்படுத்தும், வாக்கியங்க ளாகக் கட்டமைக்கும் விதத்திலும் தான் மொழிபெயர்ப் பாளரின் தனித்தன்மை அடங்கியிருக்கிறது என்று சொல்ல முடியும். மூலப்பிரதியின் அடிநாதமாகத் திகழும் ஒரு சொல்லை இலக்கு மொழியில் அதேயள்வாய் கொண்டுவர ஒரு மொழிபெயர்ப்பாளர் முழுமூச்சாய் முயற்சி செய்ய வேண்டும். அதுவே, மூலப்பிரதியில் அத்தனை முக்கியத்துவமற்ற தாய் இடம் பெறும் ஒரு சொல்லை இலக்கு மொழியில் கொண்டு செல்லும்போது அந்த அளவுக்குப் பிரயத்தனம் செய்யத் தேவையில்லை என்று தோன்றுகிறது.

ஆங்கிலத்தில் இரண்டு வரிகள்:

MANY TIMES GHALIB COMBINES TWO OR MORE MEANINGS INTO A SINGLE WORD OR EXPRESSION,

தமிழில் –

 பலமுறை இரண்டு அல்லது அதிகமான அர்த்தங்களை ஒரு சொல்லாக  அல்லது வெளிப்பாடாக இணைக்கிறார் காலிப். 

 MANY TIMES என்பதை பலமுறை என்றோ பல நேரங்களில் என்று பல சமயங்களில் என்றோ மொழிபெயர்க்கலாம். ஆனால் அடிக்கடி ((Often) என்று மொழிபெயர்ப்பது சரியா? சரியாக இருக்காது. காரணம்,  MANY TIMES என்ற சொல்லில் ஒருமுறைக்கும் இருமுறைக்கும் இடையே உள்ள கால அவகாசம் எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம்.  MANY TIMES என்பதில் TIME வந்தாலும் அதன் மையம் காலக்கணக்கு அல்ல. பலமுறை என்பதில் காலக்கணக்கு பிரதானம் இல்லை. ஆனால் அடிக்கடி என்பதில் காலமே பிரதானம்

MINOR POET  என்பதை தமிழில் எப்படிக் குறிப்பிடலாம்?  சிறிய, எளிய அத்தனை சரி யாக இருக்குமா? ‘MAJOR POET’’ என்றால் பெருங்கவி அருங்கவி, முக்கியமான கவி, மகத்தான கவி என்று தமிழில் மொழிபெயர்த்துவிடலாம்.  ‘MAJOR POET’ என்றால்? ஒருவேளை இதற்கு வழக்கமாகப் பயன்படுத்தப்படும் தமிழ் இணைச்சொல் இருக்கலாம். முக்கியத்துவம் குறைந்த கவி என்பதுதான் அதன் அர்த்தம் என்று நன்றாகவே விளங்கினாலும் அதை அப்படியே தருவது ஏதோ விதத்தில் நெருடலாகத் தோன்றும் பட்சத்தில் மொழிபெயர்ப்பாளர் (முக்கியத்துவம் குறைந்த கவியை ஏன் மேற்கோள் காட்ட வேண்டும் என்ற நினைப்பிலும் இருக்கலாம்!) மொழி பெயர்ப்பாளர் வெறுமே POET என்று மொழிபெயர்த்து விடக் கூடும் இது சிலரின் பார்வையில் தவறல்ல சிலரின் பார்வை யில் மிகப் பெரிய தவறு!

 இப்படி எது சரி, எது தவறு என்று குழம்பவைக்கும் இடங்களும், சொற்களும் சொற்சேர்க்கைகளும் மொழி பெயர்ப்புப் பணியில் நிறையவே மொழிபெயர்ப்பாளரை இடறி விழச்செய்யும்!

 மூலப்பிரதியில் ஒரு பழமொழி தரப்பட்டிருந்தால் அதை அப்படியே இலக்கு மொழியில் பெயர்த்துத் தர வேண்டுமா, அல்லது, மூலப்பிரதியில் தரப்பட்டுள்ள பழமொழி எதைக் குறிப்புணர்த்துவதாகத் தரப்பட்டிருக்கிறதோ, தரப்படுகிறதோ அதற்கு ஏற்ற இலக்குமொழிப் பழமொழி ஒன்றை மொழிபெயர்ப்பில் இடம்பெறச் செய்வதா? என்ற கேள்வி மொழிபெயர்ப்பு சார்ந்து எப்போதும் முன்வைக்கப்படுவது. மொழிபெயர்ப்பு என்பது இன்னொரு மண்ணை, மனிதர் களை, கலாச்சாரத்தை அறிமுகப்படுத் துவது; எனவே அந்தந்த மண்ணுக்கே உரிய மணம் சார்ந்த பழமொழி களைத் தமிழில் தருவதே சரி என்ற பார்வை முக்கியத்துவம் பெறுகிறது

 மூலமொழிப் பிரதிகளை இலக்குமொழியில் கொண்டுவரும் போது இலக்குமொழி யின் வாசகர்களை கணக்கிலெடுத்துக் கொள்ளவேண்டியதும் அவசியம். இலக்கியப் பிரதிகளைப் பொறுத்தவரையும் கூட அவை எளிமைப்படுத்தப்பட்டு இலக்குமொழி களில் தரப்படும் தேவை இருக்கிறது. 

அப்படியெனில், மூலமொழிப் பிரதி என்றாலே அது கடின மானதுதானா என்ற கேள்வி எழுகிறது. அப்படியில்லை. மூல மொழிப் பிரதியே எளிமையாக இருக்கும் போது இலக்கு மொழியில் அதை மேலும் எளிமைப்படுத்தவேண்டிய தேவை இல்லை. அதே சமயம், எளிமை என்பது எல்லா நேரங்களிலும் எளிமையாக மொழி பெயர்த்துவிடக்கூடியது அல்ல என்பதை யும் நாம் மறக்கலாகாது !

உரையாடலும் வட்டார வழக்கும் மொழிபெயர்ப்பில் சிரம மான சிக்கலான அம்சங்களாகத் திகழ்பவை.  மொழிபெயர்ப் பாளருக்கு மூலமொழியில் உள்ள வாழ்வுச் சூழல் சூழல், இடச்சூழல், புழங்குமொழி, முதலியவை பரிச்சயமாக இருந்தா லொழிய அதில் உள்ள உரையாடலையும், வட்டார வழக்கையும் இலக்குமொழியில் கொண்டுவருவதில் நிறை யவே இடர்பாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

 நமக்குத் தெரிந்த, நம் தாய்மொழியான தமிழிலேயே கூட எல்லா வட்டார வழக்குகளும் அவற்றில் புழங்கும் வார்த்தை களும் அவற்றில் புழங்கு வார்த்தை களின் முழு அர்த்தமும், முழுக் குறிப்புணர்த்தல் களும் நமக்குத் தெரியுமா என்ன?  ஒரு கவிதையில் நீறு என்ற சொல் இடம்பெற்றிருந்தது. எனக்கு திருநீறு , விபூதி என்ற சொற்கள் மட்டுமே பரிச்சயம். தண்ணீர் தான் நீரு என்பதற்கு பதிலாக நீறு என்று பிழையாக அச்சாகி யிருக்கிறது என்று நானாக எண்ணிக்கொண்டு ஙிச்tஞுணூ என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துவிட்டேன். ஒரு வார்த்தையின் இடப்பொருத் தத்தை வைத்து அதன் சரியான பொருளைத் தெரிந்துகொண்டுவிட முடியுமென் றாலும் அது எல்லா நேரங்களிலும் நமக்குத் துணைபுரியும் என்று சொல்லி விட முடியாது!

 தொழில்முறையில் மொழிபெயர்ப்பாளர்களாக இயங்குபவர் களுக்கு ஒரு பிரதியை முடித்துக் கொடுக்க கால வரையறை உண்டு. இது சமயங்களில் மொழிபெயர்ப்பில் சில தவறுகள் இடம்பெறக் காரணமாகிவிடும். மொழிபெயர்ப்பில் ஏற்படும் தவறுகளை நான் நியாயப்படுத்தவில்லை. ஏற்கனவே குறிப்பிட்டது போல், ஒரு மொழி பெயர்ப்பாளர் இரு மொழிகளுக்கு இடையே பாலமாகத் திகழ்கிறார். பாலம் இடிந்து விழுந்தால் பாலம் கட்டிய நோக்கமே பாழாகிவிடும். எனவே தான் மொழிபெயர்ப் பாளர் கூடுதல் கவனத்தோடு இயங்க வேண்டியது அவசியம்.

TRANSLATION IS A THANKLESS JOB  என்பார்கள். ஒரு பிரதியை நல்லவிதமாக மொழிபெயர்த்து முடிக்கும்போது ஒரு மொழி பெயர்ப்பாளர் உணரும் மனநிறைவை விடவா மற்றவர் களின் நன்றி பெரிது என்று கேட்கும் மொழிபெயர்ப்பாளர் கள் தமிழ் வெளியில் அன்றும் இன்றும் நிறையவே உண்டு! அவர்களுக்கு என்றுமான நம் நன்றியும் வணக்கமும் உரித்தாகட்டும்!

 மொழிபெயர்ப்பாளர் should be thick-skinned, ஏனெனில் அவருடைய மொழிபெயர்ப்பு தொடர்பாக விமர்சனம் என்ற பெயரில் நிறைய வசவுகளை வாங்கிக்கட்டிக் கொள்ள வேண்டியிருக்கும்! எந்தவொரு மொழியின் வளர்ச்சிக் கும் அதன் இலக்கிய வளர்ச்சிக்கும் விமர்சனம், ஆய்வலசல், திறனாய்வு என்பதெல்லாம் மிகவும் தேவை. அதேசமயம் திறனாய்வாளர்களிலும் இருவகையினர் உண்டு. இலக்குமொழி வாசகரை take–it-for-granted ஆக பாவிக்கலாகாது என்ற மெய்யான அக்கறையோடு ஒருவருடைய மொழிபெயர்ப்பில் உள்ள குறைகளை ஆதாரபூர்வ மாகச் சுட்டிக் காட்டுவோர் ஒரு தரப்பினர்.  இன்னொரு தரப்பினர் ஒருவருடைய மொழிபெயர்ப்பில் உள்ள குறைக ளைச் சுட்டுவதன் மூலமே தம்மைப் பெரிதாக்கிக் கொள்ள முனைவோர்.

அப்படித்தான், நான் மொழிபெயர்த்த ஒரு நூலில் நான் கையாண்ட ஒரு சொற்பிரயோகம் தவறானது என்று கெக்கலித்த ஒருவர், ஆங்கிலட் மொழி பெயர்ப்பிலிருந்த மூல நூலில் இருந்து ஒரு பத்தியையும் அதற்கான என் தமிழ் மொழிபெயர்ப்பையும் வெளியிட்டு என்னுடைய மொத்த மொழிபெயர்ப்பும் சரி யில்லை என்று சாதிக்கப் பார்த்தார். நான் மொழிபெயர்த்தது மூல நூலின் வேறொரு ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து. அவர் சுட்டியது இன்னொரு ஆங்கில மொழி பெயர்ப்பிலிருந்து. அதை சுட்டிக் காட்டிய பின்பும் தனது தவறுக்காக வருத்தம் தெரிவிக்காமல் என் மொழிபெயர்ப்பில் உள்ள ஒரே ஒரு வார்த்தையைப் பிடித்துக் கொண்டு அதற்கான என் மொழிபெயர்ப்பு சரியில்லை என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால்,  நான் என்னை மொழி பெயர்ப்பு மேதை என்று என்றுமே சொல்லிக் கொண்டதில்லை

 ஆயிரத்தில் ஒருவன் என்பதை ஆங்கிலத்தில் “ONE IN A MILLION’ என்று மொழிபெயர்த்தேன்.  இதில் ஆயிரம் 10 லட்சம் என்ற எண்ணிக்கையல்லவே முக்கியம்! அரிய மனிதர், மகத்தான மனிதர் என்பதற்கு இரண்டு மொழிகளிலும் பயன்படுத்தப்படும் சொற்றொ டர்கள் இவை, ‘இந்த அம்மாவுக்கு ஆயிரத்திற்கும் லட்சத்திற்கும்கூட வித்தியாசம் தெரியவில்லை என்று எள்ளி நகையாடியிருந்தார் ஒருவர்!

ஆங்கிலத்திலிருந்து தமிழில் நான் மொழிபெயர்த்துள்ள ஸ்டீ ஃபான் ஸ்வேய்கின் ஜெர்மானியக் குறுநாவலின் ஆங்கிலத் தலைப்பு AMOK.  அதற்கு தமிழில் ‘ஆட்கொள்ளப்பட்டவன்’ என்று தலைப்பிட்டேன். அது குறித்து அந்த நூலில் இடம் பெறும் என்னுரையில் இவ்வாறு எழுதியிருக்கிறேன்:

 ”ஒரு படைப்பில் மொழிபெயர்ப்பாளர் அநாவசியமான சுதந்திரங்களை எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற திட்ட வட்டமான எண்ணம் எனக்கு உண்டு ஆனால் அMOஓ என்ற சொல் லுக்கு ’ஆட்கொள்ளப்பட்டவன்’ மிகச் சரியான மொழிபெயர்ப்பு அல்ல. அந்த வார்த்தை இந்தோனேஷியச் சொல். ஒருவித பித்துநிலையில் தறிகெட்டு ஓடியபடி கண் ணில் கண்டவர்களை குத்திக் காயப் படுத்தி யபடி செல்லும் உயரழுத்த மன நிலையை ((frenzied, delirious state of mind) மனநிலை யைக் குறிக்கும் சொல். என் தேடலில் தமிழில் இணைச்சொல் கிடைக்கவில்லை. ‘எத்தனை யாவது’ என்ற தமிழ் சொல்லுக்கு ஆங்கிலத் தில் இணை கிடைக்காதது போல். தவிர, இந்தடு கதையின் நாயகன் அந்த உயர் அழுத்த மனநிலையில் உள்ளபோதும் கனிவானவன்;  குற்றணர்வு கொள்ளத் தெரிந்த வன்; ஒருவகையில், A MEHTOD IN MADNESS’ என்ற ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் சொற்றொ டரை நினைவு கூரத்செய்வதாய் இருக்கின்றன அவன் செய்கைகள். எனவே ஆட்கொள்ளப் பட்டவன் என்ற தலைப்பு அதிகப் பொருத்த மானதாகத் தோன்றியது.”

இந்த Discretion ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு மிகவும் தேவை என்று நினைக்கிறேன் .

ஆனால், இந்த அணுகுமுறை மொழிபெயர்ப்பின் அரசியலாக மாறும் இடங்களும் உண்டு மூலப் பிரதியில் சில வரிகளை நீக்கி, சில வரிகளை திரித்து மொழிபெயர்த்து அதை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பயன்படுத்தும் போக்கு சமயங் களில் நேர்மறையான சமயங்களில் எதிர்மறையான அணுகு முறையாக இருக்கவும் வழி உண்டு.

 மூலப்பிரதியை இலக்குமொழியில் மொழிபெயர்ப்பதற்கான நோக்கத்தைப் பொறுத் தும் மொழி பெயர்ப்பின் தன்மை மாறுபட வழியுண்டு. இது சரியா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல முடியும். ஆனால், மிக நல்ல கதையில் கூட வீட்டு வேலைக்காரப் பெரியவரை அந்த வீட்டு உரிமையாளரின் பத்து வயது மகன் கெட்ட வார்த்தையில் திட்டுவதாக வரும்போது, அல்லது, பெண்ணை மதிப்பழிக்கும் வார்த்தைகள் மூலப்பிரதியில் இடம்பெறும்போது அவற்றை அப்படியே மொழிபெயர்த் துத்தானாக வேண்டுமா என்ற கேள்வி ஒரு மொழிபெயர்ப்பாளர் என்ற அளவில் எப்போதுமே என் மனதில் தவிர்க்கமுடியாமல் எழும். அவ்வாறே, இனக்கலவரத்தைத் தூண்டும் சில சொற்றொடர்கள் இடம் பெறும் ஒரு செய்தியை அல்லது இலக்கியப் பிரதியை  மொழி பெயர்க்கும் போது பரபரப்புக்காக அவற்றை அப்படியே மொழி பெயர்ப்பதை விட அதன் சாரத்தை மட்டும் மொழி பெயர்த்துத் தருவதே மேல் என்று தோன்றும்.

 ஒரு பத்தியைப் படித்து உள்வாங்கி மூலத்தின் சாரம் குறை யாமல் அதை சொந்த மொழியில் தருபவர்களைப் பார்த்தி ருக்கிறேன்! மூலப் பிரதியில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் சரியான சொல்லைத் தேடி எடுத்து அத்தனை அக்கறையாகச் செயல்படுபவர்கள் பார்த்திருக்கிறேன்!

C:\Users\computer\Desktop\TRANSLATION BOOK IMAGES\495568723_2593416844337237_5976183938633954823_n.jpg

மொழிபெயர்ப்பாளர்:    S.R. தேவிகா

1958ஆம் ஆண்டு ஜூன் 18இல் தென்னிந்தியாவில் உள்ள கும்பகோணத்தில் பிறந்தவர். சென்னை மாநிலக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார். 1980இல் மத்திய அரசுப் பணியில் சேர்ந்தார். – 2014இல் விருப்ப ஓய்வு பெற்றார். பயணம் செய்வதில் விருப்பம் கொண்டவர். ஆன்மிக நூல்களை வாசிப்பதிலும் ஆன்மிகத் தலங்களுக்குச் செல்வதிலும் ஆர்வம் கொண்டவர்

பணி ஓய்வுக்குப் பிறகு மொழிபெயர்ப்புப் பணியில் ஆர்வமாக ஈடுபட்டு வரும் இவர் தெலுங்கின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான விவிபி ராமாராவின் சிறுகதைகளின் தொகுதியை ஆங்கிலத்தி லிருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மகத்தான ஆளுமைகளான மகாத்மா காந்தி, மதர் தெரஸா, விவேகானந்தர் போன்றவர்களின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் சிறுநூல்களையும் சிறுவர்களுக்காக எழுதியுள்ளார்

மதங்களின் அடிநாதமாக விளங்குவது மனிதநேயமே என்பதை பகவத் கீதைகுரானிலிருந்து பல உதாரணங்களை முன்வைத்து எடுத்துரைக் கும் திரு.மூஸா ராஜா (பாரசீகக் கவிஞர் மிர்ஸா காலிபின் கவிதை களை பாரசீகமொழியிலிருந்து உருதுவிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்திருப்பவர்) எழுதிய ஆங்கில நூல் IN SEARCH OF ONENESS தேவிகாவின் தமிழாக்கத்தில்  வெளியாகியிருக்கிறது.

இந்த நூலின் இணை மொழிபெயர்ப்பாளர் தேவிகா (ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருப்பவர்) எப்படி மொழிபெயர்ப்புப்பணியை மேற்கொள்கிறார் என்ப தைப் பற்றி ரத்தினச் சுருக்கமாக பின்வருமாறு கூறுகிறார்:

முதன்முதலாக எழுத்தாளரான Dr.VVB.. ராமராவ்-இன் தெலுங்குக் கதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கும் பணியை மேற் கொண்ட போது முதலில் அந்த நூலை முழுமையாக வாசித்தேன். வாசிக்கும் போதே மனதிற்குள் ஒரு பூர்வாங்க மொழிபெயர்ப்பு ஓடியது. பின்னர் மொழிபெயர்க்கத் தொடங்கிய போது ஒவ்வொரு சொற்றொடராக மொழிபெயர்த்தேன். 

மொழிபெயர்ப்பும் மூலமும் ஒரே பொருளைத் தருகின்றனவா என்று படித்துப் பார்ப்பேன். சில சமயங்களில் தெரியாத சொற்ளுக்கு பொருள் அறிய இணையத் தின் உதவியை நாடுவேன். என் கருத்து சரியானது என்று தோன்றும் பொருளை எடுத்துக்கொள்வேன்”

 மொழிபெயர்ப்பில் மிகவும் உதவுவது அந்த முயற்சியில் ஒருவரின் விருப்பம் மற்றும் எடுத்துக்கொண்ட மூலப் பிரதியில் உள்ள விஷயத்தில் ஆர்வம்”

மொழிபெயர்ப்பின் மூலம் மொழிபெயர்ப்பாளர்களுடைய சிந்தனைகள், கண்ணோட்டங் களிலும்கூட நேரிய மாற்றங்கள் ஏற்பட வழியிருக்கிறது.மொழிபெயர்ப்பாளர் மூலப் பிரதியில் ஆசிரியரை விட உயர்ந்தவர் அல்ல; தாழ்ந்தவரும் இல்லை.

மொழிபெயர்ப்புப் பணியை மேற்கொள்கிறவர்கள் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் அதைச் செய்ய வேண்டியது அவசி யம். இன்று இணையத்தில் பல பல அகராதிகள் கிடைக்கின்றன. இணைச் சொற்கள், எதிர்ச்சொற்கள், ஒரு சொல்லுக் குரிய பல அர்த்தங்கள் என நிறைய கிடைக்கின்றன ’மிஷின் ட்ரான்ஸ்லேஷன்’ செய்ய வசதி இருக்கிறது ஆனால் அதை மட்டுமே நம்பினால் மொழிபெயர்ப்பு மிக மோசமாகவே அமையும். 

ஏற்கனவே குறிப்பிட்டது போல், ஆர்வமாய் மொழிபெயர்ப் பில் தொடர்ந்து ஈடுபடும்போது நம் மொழித்திறனும் மொழி பெயர்ப்பாற்றலும் நிச்சயமாக மேம்படும். மொழி பெயர்ப் புப் பணி இன்று பலருக்கு வாழ்க்கைத் தொழிலாக, வாழ்வா தாரமாக விளங்குகிறது புனைவு அ-புனைவு எழுத்தாக்கங்கள் மட்டுமல்லாமல் திரைப்படத் துறை தொலைக்காட்சி நாளிதழ்கள் சுற்றுலாத்துறை, மருத்துவத் துறை,, கணினி சார் துறைகள் என்று பல்வேறு துறைகளில் மொழி பெயர்ப்பு களுக்கு, மொழிபெயர்ப்பாளர்களுக்கான தேவையிருக்கிறது. இன்றைய GLOBAL VILLAGE சூழலில் இந்தத் தேவை அதிகரித்துக்கொண்டேபோகும் என்பது உறுதி.

***

  •  

காசியில் குமரகுருபரர்

முனைவர் ந.பாஸ்கரன்,

இணைப் பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்-1 

                                                       

குமரகுருபரர் 1625-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருவைகுண்டம் என்ற ஊரில் சைவ மரபில் பிறந்தார்.  சண்முக சிகாமணி கவிராயருக்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். பிள்ளைப் பிராயத்தில் பேசும்வயதை அடைந்தும் அவர் பேசும்திறன் பெறவில்லை. எனவே இவர் பெற்றோர் திருச்செந்தூர் முருகனைவேண்டி  கோயிலில் தங்கி உப்பில்லாத உணவை உண்டு 40 நாட்கள் விரதம் இருந்தனர். 45-ஆம் நாள்  பேசும் ஆற்றலை அடைந்தான். இறைவனுக்கு நன்றி சொல்லிக் கடன்பட்டனர். சிறுவயதிலேயே இறைவன்மீது கந்தர்கலிவெண்பா பாடி அருளினார். இறைவன்மீது கொண்ட பக்தியின் காரணமாக தலயாத்திரை மேற்கொண்டு பலதளங்களும் சென்றுவர புறப்பட்டுச் சென்றார். அப்பொழுது தருமபுரம் ஆதீனம் வந்தார்.  ஆதீனகர்த்தரிடம் இவர் வாக்குத் தடைபட்டது அதனால் மாசிலாமணி தேசிகரையே தனது குருவாக ஏற்றார். சைவ சமயத்தை அழித்து இஸ்லாத்தைப் பரப்பும் பணியில் இஸ்லாமியர் பாடுபட்டனர். இதனை உணர்ந்த மாசிலாமணி தேசிகர் இஸ்லாத்துக்கு எதிராகநின்று சைவத்தை நிலைநாட்டும் திறன்பெற்றவர் குமரகுருபரே ஆவார்  என்பதை உணர்ந்து அவரை காசிக்கு ச் சென்று வரும்படி பணித்தார். அதனையேற்று  குமரகுருபரரும்  காசியாத்திரை சென்றார். அங்கே டில்லியை ஆண்ட முகலாய மன்னனான பாதுஷாவிடம் காசி மாநகரில் இடம்வேண்டிப் பெற்று பரமசிவனுக்கு ஒரு கோயில் கட்ட நினைத்தார். ஆனால் இந்துஸ்தானி மொழி தெரியாததால் பாதுஷாவிடம் தனது கோரிக்கையை எடுத்துக் கூற முடியாமல் தவித்தார். அம்மொழி தெரிந்த சிலர் இவருக்கு உதவுவதாகக் கூறி சாக்குப் போக்குகள் சொல்லி, பாதுஷாவை சந்திக்கவிடாமல் தடுத்து வந்தனர். அதனால் வருந்திய குமரகுருபரர், எல்லாம் வல்ல சரசுவதி தேவியைத் துதித்து சகலகலாவல்லிமாலை என்னும் பிரபந்தத்தைப் பாடினார். உடனே வாணியின் அருளினால் அவருக்கு இந்துஸ்தானி மொழியில் சரளமாகப் பேசும் ஆற்றல் கிட்டிற்று. பாதுஷாவிடம் எப்படிச்செல்வது என குமரகுருபரர் யோசித்துக் கொண்டிருந்தபோது வாணியின் அருளால் சிங்கம் ஒன்று அவர் முன் வந்து நின்றது. குமரகுருபரர் அச்சிங்கத்தின் மீதமர்ந்து நேரே பாதுஷாவின் சபைக்குச் சென்றார். திடீரென்று சபைக்கு வந்த சிங்கத்தையும் அதன்மீது கம்பீரமாக அமர்ந்துவந்த குமரகுருபரரையும் கண்ட சபையோர் அச்சமும் ஆச்சரியமும் அடைந்தனர்.

பாதுஷாவோ குமரகுருபரரை வணங்கி வரவேற்றான். பல்வேறு சமயங்களைச் சார்ந்தவர்கள் கூடியிருந்த சபையில்  குமரகுருபரரை உரை நிகழ்த்த வேண்டினான் பாதுஷா. குமரகுருபரரும் கலைமகளின் அருளால் இந்துஸ்தானி மொழியில் சைவ சித்தாந்தத் தத்துவத்தை மடை திறந்த வெள்ளம் போல் எடுத்துரைத்தார். அதனைக்கேட்ட பிற சமயகுருமார்கள் இந்து மதத்திலும் சைவசமயத்திலும் ஆர்வங்கொண்டனர். பாதுஷாவும் குமரகுருபரரின் சைவசித்தாந்த உரையைக் கேட்டு அகம் மகிழ்ந்தான். அவருக்கு யாதுசெய்ய வேண்டும் எனக்கேட்டான். உடனே குமரகுருபரர் காசியிலேயே தான் இருப்பதற்கு ஒரு மடம் அமைப்பதற்கு கேதார கட்டடத்தில் இடம் வேண்டினார். அப்படியே பாதுஷா அவருக்கு கேதார கட்டத்தில் இடம் தந்து உதவினார். பின்பு குமரகுருபரர் அங்கே மறைக்கப்பட்டுக்கிடந்த விசுவலிங்கப்பெருமானை வெளிப்படுத்தி சிறுகோயில்கட்டி நித்திய பூஜைகள் சைவ நியமனப்படி நடைபெற எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். கேதார கட்டடத்தில் உள்ள கேதாரலிங்த்தை வெளிப்படுத்தி கோயில் கட்டுவித்தவர், இம்மடத்தின் கிளையைநத் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்பனந்தாள் என்ற ஊரிலும் குமரகுருபர ஸ்வாமிகள் அமைத்தார். சகலகலாவல்லி மாலை 10 எளிய தமிழ்ப்பாடல்கள் கொண்டது. இதன் முதற்பாடல் 

“வெண்டாமரைக்கன்றி நின்பதம்.

தாங்க 

என் வெள்ளை உள்ளத்

தண்டாமரைக்குத் தகாது கொலோ!

சகம் ஏழும் அளித்து

உண்டான் உறங்க 

ஒழித்தான் பித்

தாக 

உண்டாக்கும் வண்ணம்

கண்டான் சுவை கொள் கரும்பே

சகல கலா வல்லியே!

ஏழு உலகங்களையும் உண்டு பாதுகாத்தவனான திருமால் உறங்கவும், அவ்வுலகங்களை அழிக்கின்ற தொழிலையுடைய சிவபெருமான் பித்தனாகி அலையவும் செய்தவனான நான்முகன் இனியதென எண்ணிச் சுவைக்கும் கரும்பைப் போன்றவளே! வெள்ளைத்தாமரையே அன்றி உனது திருவடிகளை எனது தூய்மையான வெள்ளை உள்ளம் தாங்கத்தகுதியற்றதோ? என்பதாகும். இதில் பிரும்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முப்பெருந் தொழில்கள் குறிக்கப்படுகின்றன. பிரும்மாவே சரஸ்வதி கடாட்சம் வேண்டித் துதித்தபாடல் இது என்பதால் மற்ற கலைமகள் தோத்திரங்களுக்கு இல்லாத மகிமை இப்பாடலுக்கு உண்டு. 

  •  

காரைக்காலம்மையார் துதித்த தலையாய ஐந்தெழுத்து

முனைவர் மு.பழனியப்பன்,

தமிழ்த்துறைத் தலைவர், 

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை 

சைவ உலகின் முதன்மையர்  காரைக்காலம்மையார்.  தமிழ்ச் சைவ நெறிக்கும், தமிழிசைக்கும், பதிக வடிவிற்கும், நடராச காட்சிக்கும், இறைவனைத் தரிசித்த பெண்மைக்கும் அம்மையாரே  முதலானவர். முதன்மையானவர் ஆவார்.  அவரின் பாடல்களில்  சைவ சித்தாந்தத்தின் அடிப்படை கருத்துகளும் அமைந்திருப்பதால் அவரே சைவ சித்தாந்தத்தின் முன்னோடியாகவும் விளங்குகிறார். அவர் இயற்றிய  மூத்த திருப்பதிகங்கள், திருவிரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி  ஆகியவற்றில்  செழுமை  மிகுந்த சைவ சிந்தாத்தக் கருத்துகள் நிறைந்து நிற்கின்றன.  அம்மையாரின் பாடல்களைச்  சைவ சித்தாந்த நோக்கில் ஆராய்கையில்  பல சைவ சிந்தாந்த கருத்துகள் அவர் காலத்திலேயே கருக்காண்டு இருந்ததை உணரமுடிகின்றது. 

முதலும் முடிவும்

சைவ சிந்தாத்தின் முதன்மை நூலான சிவஞான போதத்தின் முதல் நூற்பா 

அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின்

தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம்

அந்தம் ஆதி என்மனார் புலவர்  (சிவஞான போதம்  1) 

என்பதாகும்.   சங்கார காரணனாய் உள்ள முதலையே முதலாக உடைத்து இவ்வுலகம் என்று ஐயமறக் கூறுகின்றது.  அழிக்கும் சங்கரனே   தோற்றுவிப்பவனாகவும் இருக்கிறான்  என்பதே இதன் மையப் பொருள். இந்நூற்பா  என்மனார் புலவர் என்று  தொல்காப்பிய நெறியைக் கையாள்கிறது. மெய்கண்டார்  பல புலவர்கள் சொன்ன செய்திகளை முன்வைத்து  இக்கருத்திற்கு வருகிறார்.  என்மனார் புலவர் என்ற புலவர் வரிசையில் பல புலவர்கள் இருக்கிறார்கள். காரைக்கால் அம்மையாரும் இருக்கிறார். 

இறைவனே எவ்வுயிரும்  தோற்றுவிப்பான் தோற்றி

இறைவனே ஈண்டிறக்கம்   செய்வான் – இறைவனே

எந்தாய் எனஇரங்கும்   எங்கள்மேல் வெந்துயரம்

வந்தால் அது மாற்றுவான்.  (அற்புதத் திருவந்தாதி -1) 

என்பது காரைக்காலம்மையாரின் பாடல்.  இறைவனே உயிர்களைத் தோற்றுவிக்கிறான்.  இறைவனே  உயிர்களை இறக்கம் செய்கின்றவனும் ஆகின்றான்.  அவனே வெந்துயரம் வந்தால் காப்பவனும் அருள்பவனும் அவனே ஆகான். வெந்துயரம் வரச் செய்பவனும் இறைவனே ஆவான். இறைவனின் ஐந்தொழில் அருமையையும் காரைக்கால் அம்மையார் சுட்டி அவனே அழித்துத் தோற்றி மறைத்து அருள் செய்துக் காப்பவனும் ஆகின்றான். 

இவ்வாறு சைவ சித்தாந்த    தத்துவத்தின் தோற்றுநராகவும் காரைக்கால் அம்மையார் விளங்குகிறார்.  பற்பல சைவ சிந்தாந்த செய்திகள் அவரின் பாடல்களில் ஆங்காங்கே விரவிக்கிடக்கின்றன. 

நடன நாயகன்

  காரைக்காலம்மையாரே  நடன நாயகனாக  சிவபெருமானை முதன் முதலாக நடராச உருவத்தில் கண்டு மகிழ்கிறார். பாடி மகிழ்கிறார்.  ஆண்டவன் ஆடல் வல்லானாய் ஆடி மகிழ்கிறார்.  சிவபெருமானின் ஞான நடனம், ஊன நடனம், ஆனந்த நடனம்  அனைத்தைமுய் கண்ட  முன்னவர் காரைக்காலம்மையார். 

முந்தி அமரர்  முழவின் ஓசை முறைமை வழுவாமே 

அந்தி நிருத்தம் அனல் கை ஏந்தி  அழகன் ஆடுமே 

 (திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் இரண்டு, பாடல்  7)

என்று இறைவனின்  நடனத்தைக் கண்டவர் காரைக்காலம்மையார். 

தோற்றம் துடியதனில் தோயும் திதிஅமைப்பில் 

  சாற்றிடும் அங்கியிலே சங்காரம்-ஊற்றமாய் 

  ஊன்று மலர்ப்பதத்தே உற்றதிரோதம் முத்தி 

  நான்ற மலர்ப்பதத்தே நாடு 

 (உண்மை விளக்கம் பாடல் எண். 35)

என்ற  உண்மை விளக்கப் பாடலில் அங்கியிலே சங்காரம் என்று அனல் கை ஏந்தி ஆடும் அழகனின் ஆடல்   குறிக்கப்பெற்றுள்ளது.  ஆடல்வல்லானின் வலப்புற மேற்கரத்தில்  உடுக்கை படைப்புத் தொழிலின் அடையாளமாக விளங்குகின்றது. கீழ்ப்புறத்தில் உள்ள அபயக் கரம் காத்தல் தொழிலைச் செய்கிறது. இடது புறத்தில் உள்ள மேல்  உள்ள கரம் தீயினைத் தாங்கி அழித்தல் தொழிலைச் செய்கின்றது. இடது புறத்தில் உள்ள மற்றொரு கரம்  தூக்கிய திருவடியைக் காட்டி அருளல் தொழிலைச் செய்கின்றது. காரைக்காலம்மையார் கண்ட நடனம் இந்த நடனமே ஆகும். 

ஐந்தெழுத்து மந்திரம்

காரைக்காலம்மையார் ஐந்தெழுத்து மந்திரத்தை வெளிப்பட  உரைக்காமல்  பூடகமாக தன் இரட்டை மணிமாலைப் பாடலில் உரைக்கின்றார்.  வெளிப்பட மந்திரத்தைச் சொல்வது இயல்பல்ல.  

தலையாய ஐந்தினையும் சாதித்துத் தாழ்ந்து

தலையா யினஉணர்ந்தோர் காண்பர் – தலையாய

அண்டத்தான் ஆதிரையான் ஆலாலம் உண்டிருண்ட

கண்டத்தான் செம்பொற்கழல் 

(திருவிரட்டை மணிமாலை  பாடல்எண் 10)

 என்ற இந்தப் பாடலில் காரைக்காலம்மையார் குறிப்பாக மந்திரச் சொல்லை உணர்த்துவதாக அறிஞர்கள் கருதுகிறார்கள். தலையாய ஐந்து என்பது ஐந்தெழுத்தினைக் குறிப்பதாகக் கொள்ள வேண்டும்.  தலையாய ஐந்து  என்பது  எந்த மந்திரத்தைக் குறிக்கும் என்பது  அறியப்பட வேண்டிய செய்தியாகும். நமசிவாய  என்பதையா,  அல்லது சிவாயநம என்பதையா என்பதில் தெளிவு காண வேண்டியுள்ளது. 

தலையாய, தலையாயின, தலையாய  என்ற சொற்களைச் சற்றுக் கூர்ந்து கவனிக்க வேண்டும். இந்தச் சொற்களில் உள்ள குறிப்பு  மேற்சொன்ன வினாவிற்கு விடையளிக்கும். 

  ஐந்தெழுத்து மந்திரங்கள் இரண்டும் நடராச உருவத்தில்  பொருந்தும் தன்மையன. 

ஆடும் படிகேள்நல் அம்பலத்தான் ஐயனே

நாடும் திருவடியிலே நகரம் – கூடும்

மகரம் உதரம் வளர்தோள் சிகரம்

பகருமுகம் வாமுடியப் பார்.               ( உண்மை விளக்கம் பாடல்- 33)

 என்பது நமசிவாய மந்திரம் நடராச உருவத்தில் பொருந்துவதாகும். திருவடியில் ‘ந’, திருவுந்தியில்  ‘ம ’, வளர் தோளில் ‘சி’ , முகத்தில் ‘வ’ , திருமுடியில் ‘ய’  என்பதாக நமசிவாய ஐந்தெழுத்து  நடராச உருவத்தில் பொருந்துகின்றது. 

சேர்க்கும் துடிசிகரம்; சிக்கனவா வீசுகரம்;

ஆர்க்கும் யகரம் அபயகரம் – பார்க்கில் இறைக்கு

அங்கி நகரம் அடிக்கீழ் முயலகனார்

தங்கும்மகரம்அதுதான்.                       ( உண்மை விளக்கம் பாடல்  – 34.)

 என்ற பாடலில் நடராச உருவத்தில் சிவாயநம பொருந்தும் பாங்கினை அறியமுடிகின்றது. இறைவனின் துடி ஏந்திய கரத்தில் ‘சி’ வீசிய திருக்கரத்தில் ‘வ’,  அபயகரத்தில் ‘ய’, தீ ஏந்திய கரத்தில்  ‘ந’, திருவடியில்  ‘ம’   என்பதாக சிவாயநம  என்ற ஐந்தெழுத்தும்  நடராச வடிவத்தில் பொருந்துகிறது. 

இந்நிலையில்  தலையாய ஐந்து என்று காரைக்காலம்மையார் சொல்வது நமசிவாய  என்பதையா? சிவாயநம என்பதையா?  என்ற வினா வினாவாகவே நிற்கிறது. இதற்குப் பதில் காண  

‘‘எட்டு மிரண்டு முருவான லிங்கத்தே ” 

என்ற  உண்மை விளக்கத் தொடர்  உதவுகின்றது.  எட்டும் இரண்டும்  என்பது ஒரு குறிச்சொல்லாகப் பயன்படுத்தப்பெற்றுள்ளது. எட்டு  அதனோடு இரண்டைச் சேர்க்க பத்து என்ற கூட்டுத் தொகை கிடைக்கும். அத்தொகைக்கான தமிழ் எழுத்து என்பதாகும். இது ஏறக்குறைய ‘ ய’ என்ற உயிர்மெய் எழுத்தின் வடிவத்தை ஒத்துள்ளது. 

நமசிவாய என்ற மந்திரத்தில் உள்ள ‘ ய’ என்பதனை எட்டும் இரண்டும் சேர்ந்ததால் கிடைத்த பத்து என்ற எண்ணிக்கையின் குறியீட்டுடன் ஒப்புமைப் படுத்தினால் தெளிவு பிறக்கிறது. 

தலையாய ஐந்து,  தலையாயின உணர்ந்தோர்,  தலையாய அண்டத்தான் என்பதில் உள்ள ‘ய’  என்ற எழுத்து   தலை என்பதோடு இணைத்துச் சொல்லப்பெற்றுள்ளது. இதனை முன்வைத்து  தலையில் ‘ய’ என்ற எழுத்து அமைந்த நடராச நிலையில் பொருந்துவது நமசிவாய என்ற மந்திரத்தால் மட்டுமே. 

எனவே காரைக்கால் அம்மையார் சுட்டும் தலையாய ஐந்து என்ற குறிப்பில் உள்ள மந்திரம் நமசிவாய என்பதே ஆகும் என உறுதியாகக் கூறமுடிகின்றது. காலில் ந தொடங்கி வளர்ந்து, தலையில் ய  என்பதாக முடிகின்றது. 

காரைக்காலம்மயார் பாடல்களில் சைவ சித்தாந்த அடிக்கருத்துகள் பல புதைந்துள்ளன. சாத்திரக் கருத்துகளுக்கு மூலம் திருமுறைகளே என்பதை உணர  காரைக்கால் அம்மையாரின் பாடல்களின் கருத்துகளும் துணை நிற்கின்றன. சைவ வாழ்வு வாழ திருமுறைகளையும் ஓதுவோம். சாத்திர நூல்களையும் தெளிவோம். 

துணைநூற்பட்டியல் 

நடராசன்.பி.ர. புலவர், (உ.ஆ) பதினோராம் திருமுறை, உமா பதிப்பகம், சென்னை 2005

மனவாசகம் கடந்தார் திருவதிகை,  உண்மை விளக்கம்,  தருமபுர ஆதீனம், 1946

மெய்கண்ட தேவ நாயனார்,  சிவஞான போதம், திருவாவடுதுறை ஆதீனம், 1949 

வெள்ளைவாரணனார்.க. (உ. ஆ) திருவருட்பயன், சைவ சித்தாந்த சமாஜம், சென்னை, 1965

  •  

கவியோகி சுத்தானந்த பாரதியார் காட்டும் தமிழ்  உணர்ச்சியும், தமிழ் வளர்ச்சியும்

முனைவர் மு.பழனியப்பன்

தமிழ்த்துறைத் தலைவர் 

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 

திருவாடானை

தமிழ் என்னும் சொல் மொழியை மட்டும் குறிப்பதன்று. தமிழ் என்னும் சொல்  மக்களின் வாழ்க்கை,  பண்பாடு, மொழி, வரலாறு, நாகரீகம், கலை, இலக்கியம், அறிவியல், வணிகம்  ஆகிய அனைத்ததையும் உள்ளடக்கிய  இன அடையாளக் குறியீடாகும்.  தமிழ் உணர்ச்சி என்பதும் தமிழ்  வளர்ச்சி என்பதும்  மொழியின் தன்மையையும் மட்டும் அடிப்படையாகக் கொண்டது அன்று. தமிழ் இனத்தின் அடையாளங்களை உள்ளடக்கியது. 

தமிழ் மொழி வளரவும், ஓங்கவும் பல்வேறு சிந்தனைகள்  எழுந்த வண்ணம் உள்ளன. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்தெட்டாம் ஆண்டு கவியோகி சுத்தானந்த பாரதியார் தமிழ் உணர்ச்சி என்ற தலைப்பில் கட்டுரைத் தொகுப்பு ஒன்றினை எழுதி வெளியிட்டுள்ளார். இதனை இராமச்சந்திரபுரத்தில் இருந்த அன்பு நிலையம் வெளியிட்டுள்ளது. இதில் தமிழ் வரலாறு, உணர்ச்சி, வளர்ச்சி பற்றிய பல அரிய சிந்தனைகள் இடம்பெற்றுள்ளன. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்னதான தமிழ்  நிலையை இந்நூல் எடுத்துரைக்கின்றது. பெரும்பாலும் அதே தமிழ் உணர்வு நிலைதான் தற்போது உள்ளது என்பதை நூலை வாசிக்கையில் உணரமுடிகின்றது. 

சிவகங்கையைப் பிறப்பிடமாகவும், சிவகங்கையை அடுத்த சோழபுரத்தைத் தனது நிறைவிடமாகவும் கொண்டு வாழ்ந்த துறவி ஆவார். இவர் ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு, வடமொழி அறிந்த பன்மொழி வித்தகரும் ஆவார். இவர் பல்வகை இலக்கிய வகைமைகளைப் படைத்தவர். இவரின் சிந்தனைகளைச் சிவகங்கை சார்ந்த சிந்தனைகளாகக் கொண்டு அவற்றைத் தமிழுலகச் சிந்தனைகளாக ஏற்பது சிறப்பாகும். 

தமிழ் உணர்ச்சி

தமிழின்  வளர்ச்சியே தமிழரின் வளர்ச்சி  என்று உரைக்கிறார் கவியோகி சுத்தானந்த பாரதிாயர்.  அவரின் தமிழ் உணர்வு கொள்ளச் செய்யும் கருத்துரைகள் கவனிக்கத்தக்கன. 

   ‘‘நான் தமிழன். தமிழ் எனது தாய்மொழி. நான் தமிழுக்கே, தமிழர் உயர்விற்கே, தமிழ்நாட்டின்  முன்னேற்றத்திற்கே வாழ்வேன். நான் எதைச் செய்தாலும்  தமிழ், தமிழர், தமிழ்நாடு ஆகிய இவை பெருமை பெறவே செய்வேன். தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும், தமிழருக்கும் கேடு சூழும் எதனையும் துணிந்தெதிர்த்து வெல்லுவேன்.  என்னுயிரை மறந்தாலும்  தமிழை மறவேன்.  என்னுடைலைச் செகுத்தாலும் தமிழைக் கைவிடேன். எனது தமிழ்‌ மொழிதான்‌ உலகில் முதன்முதல்‌ தோன்றிய முதுமொழி. தமிழ்‌ மொழியே இந்நாடெல்லாம்‌ பரவி விரிந்த பழமொழி. காலக்கோளால்‌ எமது தமிழரசி இன்று மூலையில்‌ ஒதுக்குண்டு, பிறமொழிகளால்‌ இடிப்புண்டு தனது அரியணையிழந்து, வெறுந்தரையில்‌ சிறுமையுற்றுக்‌ கிடக்கிறாள்‌. எனது அன்னையை மீண்டும்‌ மொழியரசியாக அரியணையேற்றவே நான்‌ உயிர்‌ வாழ்வேன்‌. என்னுயிர்‌ உள்ளமட்டும்‌ ஒவ்வொரு நாளும்‌, தமிழ்‌ முன்னேற்‌றத்திற்காகவும்‌, தமிழர் தலை நிமிர்ந்து உலகில்‌ ஓங்கவும்‌, இரண்டுமணி நேரமாவது ஏதாயினும்‌ பயனுள்ள ஒரு தொண்டு செய்வேன்‌. அத்‌தொண்டு செய்தாலன்றி, நான்‌ உணவு கொள்ளேன்‌. காலையும்‌ மாலையும்‌ எனது தமிழ்‌ நாட்டைத்‌ தமிழாலயமாகக்‌ கருதித்‌ தமிழ்‌ வாழவே திருவருளை வணங்குவேன்‌.. எனது தமிழகத்திற்‌ பிறந்த எல்லோரும்‌, எங்கிருப்‌பினும்‌ என்னவரே. சாதி, மத வேறுபாடுகளை நான்‌ பாராட்டமாட்டேன்‌. *நீயார்‌  என்றால்‌, அந்தச்‌ சாதி, இந்தச்‌ சாதி, அந்த மதம்‌, இந்தமதம்‌ என்னாமல் ‘‘ நான் தமிழன்‌!’’ என்றே பெருமையுடன்‌ சொல்லுவேன்‌. தமிழன்‌ எவனையும்‌ நான்‌ வெறுக்க மாட்டேன்‌. என்னை ஒரு தமிழன்‌ வெறுத்தாலும்‌, அவனை அன்புரை கூறி மாற்றுவேன்‌. எனது தமிழ்நாட்டில்‌ தோன்றிய நாவலரையும்‌, பாவலரையும் அருளாளரையும்‌, பெரியாரையும்‌ நான்‌ வணக்கமுடன்‌ போற்றுவேன்‌. ‘‘ எந்தாய்‌ வாழ்க!’’ என்ற மந்திரத்தை எப்போதும்‌ நினைப்பேன்‌. என்னை எதிர்த்த அன்னியருக்குத்‌ தமிழின்‌ பெருமையை, தமிழ்ப்‌ பெரியாரின்‌ சிறப்பை, தமிழ்‌ நாட்டின்‌ மாண்பை விளக்குவேன்‌. இன்றியமையாத சமயமன்‌றி, மற்றெப்போதும்‌ தமிழிலேயே பேசுவேன்‌,  எழுது வேன்‌… தமிழன்‌ பிற மொழியிற்‌ பேசினாலும்‌ நான்‌ தமிழிலேயே பதிற்‌ சொல்லுவேன்‌. தமிழ்ப்‌ பெரியார்‌ செய்யும்‌ அரும்பணிகளுக்கு என்னால்‌ ஆன உதவி செய்வேன்‌. தமிழன்‌ முன்னேற்றத்திற்காகத்‌ தோன்றிய எல்லா நிலையங்களையும்‌ நான்‌ மகிழ்வுடன்‌ போற்றுவேன்‌. தமிழர்‌ ஒற்றுமைக்காக நான்‌ வேண்டிய பணி புரிவேன்‌. ‘‘எந்தாய்‌ வாழ்க, எந்தாய்‌ வாழ்க.” இவ்வுறுதி தமிழன்‌ உயிர்ப்பாகுக’’ என்று தமிழன் பெறவேண்டிய தமிழ் உணர்வினைக் காட்டுகிறார் சுத்தானந்த பாரதியார். தமிழர் ஒவ்வொருவரும் இதனை ஏற்று உறுதி மொழியாகக் கைக்கொள்ளுதல் வேண்டும். இது எல்லாக் காலத்திற்கும் தேவையான தமிழ் உணர்ச்சிக் கொள்கையாகும். 

தமிழ் வளர்ச்சி

கவியோகி சுத்தானந்த பாரதியார் தமிழ் உணர்ச்சிக்கான இருபத்தாறு வழிகளைத் தமிழ் உணர்ச்சி என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார். அவற்றைத் திட்பமாக அறிந்தால் உணர்ந்தால் அவற்றின்படி நடந்தால்  தமிழ் வளர்ச்சி உறுதியாக ஏற்படும். 

தமிழில் பேசுவோம், எழுதுவோம்

தமிழன் தமிழனுடன் தமிழில் பேசுக, தமிழனுக்குத் தமிழன் தமிழில் கடிதம் எழுதுக, பிறமொழியாளருடன் பேசுகையில் தமிழின் பெருமையைச் சொல்லுக.  கொச்சைத் தமிழில் பேசவேண்டாம். தமிழைப் பிழையின்றிப் பேசிப் பயில்க!  பிறமொழிகளில் பேசும்போதும் எழுதும் போதும்  தமிழ்ப் பெரியார் திருமொழிகளை மேற்கோள் காட்டி உரைத்து விளக்குக. பேச்சு நடை எழுத்து நடை பேதமின்றி ஒன்றாக வேண்டும். ஆழ்ந்த கருத்து, இனிய சொற்கள், தெளிந்த நடை உள்ள தமிழே வெற்றிபெறும். 

தமிழ் இலக்கணக் கல்வி

காலத்திற்கேற்ற விதிகளைக் கூட்டி இனிய தமிழ் இலக்கணம் சிறுவர்களும் பயிலும் வகையில் எழுதப்பட வேண்டும். (இனிய தமிழ் இலக்கணம் என்ற பெயரில்  சுத்தானந்த பாரதியார் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இந்த சிந்தனை இவர் காலத்திலேயே இவராலேயே நிறைவேறியுள்ளது. இது மறுபதிப்பாக வெளிவரவேண்டும்) . தமிழ்ச் செய்யுள் இலக்கணத்தை  ஐரோப்பிய செய்யுளிலக்கணம் போன்று தெளிவாக எழுத வேண்டும். 

தமிழிசை வளர்ச்சி

புதிய தமிழிசை இலக்கணம்  வகுக்க வேண்டும். ஐரோப்பிய சங்கீதத்தில் வழங்குவதுபோல இசைக்குறிகள் தமிழில் உண்டாக வேண்டும். 

அகராதியியல் 

தமிழில் இலட்சம் வார்த்தைகளுக்கு பொருள் விளக்கும் அகராதிகளே உள்ளன.  வரலாறு, தரைநூல், வான நூல் , பௌதிகம், இரசாயனம், மருத்துவம், செடிநூல், பயிர் நூல், உயிர் நூல், உடல் நூல்  முதலிய பலவகையான இயற்கைச் சொற்களைப் படப் பொலிவுடன்  விளக்கும் அகராதிகள் வெளியிடப்பெற வேண்டும். தமிழர்  நடத்தும் நாடகங்களில்  இசை விருந்துகளில் தமிழ்ப்பாடல்களே முழங்க வேண்டும். நாடகங்களிலும், ஒலிப்படங்களிலும்  தமிழர் வரலாறும், நாகரிகமும், தமிழின் பெருமையும், தமிழருக்குப் புதிய உணர்வைத் தரும்  காட்சிகளும் துலங்க வேண்டும்.  இசை, சிற்பம், சித்திரம், கூத்து நாடகம் முதலிய நுண்கலைகளை வளர்க்கும் வண்ணம்  தமிழில் புதிய கலை நூல்கள் தோன்ற வேண்டும். 

புதியன படைத்தல் 

பிறநாட்டார் மெச்சிக் கற்கும்படியான காவியங்களும், கதைகளும் நாடகங்களும் தமிழில் தோன்ற வேண்டும். நம்முடன் உள்ள நாவலரையும், பாவலரையும், அருட்கவிகளையும்  ‘அதை யெழுதுங்கள், இதை யெழுதுங்கள்’’ என்று இடைவிடாது, தூண்டி, அவர்கள் மூலம்  தமிழிலக்கியங்களைப் புதிது புதிதாகச் செய்து குவிக்கவேண்டும்.  தக்க புலவர்கள் யாத்த நூல்களை அரங்கேற்றி வெகுமதி நல்க வேண்டும். தமிழறிஞர் சங்கம் ஒப்புக் கொண்ட நூல்களையே அரங்கேற்றி அச்சிட்டுப் பல  மொழிகளிலும் பெயர்த்து உலகளாவச் செய்யவேண்டும்.  பிற மொழியிற் சிறந்த புலவர் நூல்களை எளிய நடைத் தமிழில்  மொழிபெயர்த்து வெளியிட வேண்டும். மொழிபெயர்ப்புக்கென்றே சில தமிழன்பர் உழைக்க வேண்டும்.  எளிய நடையில் விரிவான தமிழர் வரலாறு ஒன்று தொகுக்கப்பட வேண்டும். 

ஆங்கிலக் கல்வி

ஒவ்வொரு தமிழனும் ஆங்கிலம் பயிலத்தான் வேண்டும்.  தமிழில் விளக்கமுடியாத சொற்களை ஆங்கிலத்திலேயே வழங்குதல் நலம். பல கலைப் புலவரின் கூட்டுறவோடு, காலத்திற்கேற்ற கலை நூல்களை உண்டாக்கல் மிகவும்  பெரிய வேலையாகும். அவ்வாறு உண்டாக்கிய சாத்திரங்களையே தமிழ்நாட்டு மாணவர்கள் பயில வேண்டும்.  இத்துறையில் வெற்றி பெற்றால்  தமிழ் ஆங்கிலம் போல விளங்கலாம். வெளிநாடுகள் சென்று பயனுள்ள தொழில் முயற்சிகளைத் தமிழர் பயின்று இங்கே நடத்த வேண்டும். 

தமிழ் எழுத்துக்கள்

உலக எழுத்துக்களில் தமிழ்  மிகவும் எளிதாக எழுதக் கூடியது.  ஹிந்துஸ்தானி, ஆங்கிலம் முதலிய  பிற மொழிகளையும்  தமிழ் எழுத்துக்களைக் கொண்டே எழுத வழியுள்ளது. இப்போதுள்ள எழுத்துக்களுடன் ஆங்காங்கு  புள்ளியும் கோடும் சேர்த்து உலக மொழிகளையெல்லாம்  தமிழில் எழுதலாம்.  தமிழ் மூலமே பள்ளிப் பாடங்கள் நடக்க வேண்டும். தமிழ் நாட்டிலுள்ள அரசியல் சபைகளிலும், கச்சேரிகளிலும், சட்டசபைகளிலும் தமிழிலேயே நடவடிக்கைகள் நிகழவேண்டும். தமிழ்க் கலையை உலகிற் பரப்ப தமிழ்ப் பத்திரிகைகள் உழைக்க வேண்டும். தமிழ்ச்சுடர் என்ற ஒரு மாசிகை படப்பொலிவுடன்  ’’மாடன் ரிவ்யூ’’ போல வெளிவரல் வேண்டும். 

தமிழ்க் கல்வி

  • 3 வயது முதல் ஆறு வயது வரை  -குழந்தைச் சாலை அமைத்துக் கல்வி வழங்கவேண்டும்
  • 6 வயது முதல் 12 வயது வரை – தமிழ்க்கணக்கு, சரித்திரம், செடி, உயிர், உடல் நூல் கல்வி வழங்கவேண்டும்
  • 12 வயது முதல் 15 வயதுவரை தமிழறிவு, ஆங்கிலம், இந்துஸ்தானி, கணிதம், அறிவியல்கல்வி      வழங்கவேண்டும்.
  • 15 வயது முதல் 18 வயது வரை தொழில்கல்வி, இராணுவக் கல்வி வழங்க வேண்டும். 
  • 18 வயது முதல் 20 வயது வரை கிராமங்களில் பொதுநலப்பணி வழங்க வேண்டும்.

அதன்பிறகு  இலக்கியப் புலவர்,தொழிற்புலவர், அருங்கலைப் புலவர்  பட்டங்கள் பெறவேண்டும் என்றும் அதன் பிறகே இல்லறம் என்று  ஒரு கல்வித்திட்டத்தைச் சுத்தானந்த பாரதியார் அறிவிக்கிறார். 

தொழில் வளம்

நாட்டில் ஓர் அங்குலம்கூட தரிசாக இல்லாது பொன்னும் பசுமையும் குலுங்கச் செய்ய வேண்டும். தமிழர் செல்வம் தமிழர் முன்னேற்றத்திற்குப் பயனாக வேண்டும்.  ஒரு தமிழனும் பசியால் வருந்துதல் கூடாது. தமிழர் பிற நாடுகள் சென்று கூலிகள் அடிமைகள் போல வாழும் இழிவை நீக்கவேண்டும். உப்பு முதல் கற்பூரம் வரை தமிழ்நாட்டில்  உண்டாக்கப்பட வேண்டும். 

தமிழர் படை

தமிழர் படை  ஒன்று ஊருக்கு ஊர்  இருக்க வேண்டும். தமிழர் சமுதாயம் திருக்குறள் வடிவாகவே  அமையவேண்டும். சாதி மத வேறுபாடுகள் எல்லாம் வீட்டுடன் கட்டிவைத்துவிட்டு நாட்டில் ஒரே குலமாகத் தமிழர் ஒன்றுபட்டு வாழ வேண்டும். தீண்டாமை, பாராமை, பெண்பழிப்பு, கைம்பெண் கண்ணீர், குழந்தை மணம், பொட்டுக் கட்டல் முதலிய தீமைகள்  எல்லாம் ஒழிய வேண்டும். தைப் பொங்கலை தமிழர் கூட்டத் திருவிழாவாகக் கொண்டாடலாம். தமிழர் தெருக்கள் பெரியார் பெயராலும் அறமொழிகளின் பெயராலும் விளங்க வேண்டும். 

தமிழ்நாடு

தமிழ்‌  நிறைவான வளர்ச்சிபெற வேண்டுமாயின் அதற்கு உரித்தான தமிழ்நாடு ஒன்று உண்டாக வேண்டும்‌. (இந்த சிந்தனை தமிழ்நாடு தோன்றுவதற்கு முன்னதானது) தென்னாடு, வடநாடு, பர்மா, மலேயா, தென்னாஃபிரிக்கா, இலங்கை முதலிய இடங்களிலெல்லாம்‌ உள்ள தமிழர் அனைவரும்‌ கூட்ட உணர்வுடன் ஒன்றுபட வேண்டும். தமிழன் எங்கிருந்தாலும், தமிழன்‌பையும்‌ தமிழரன்பையும் வளர்க்க வேண்டும். 

தமிழின் தாய்த்தன்மை

திராவிடர் பெருங்கூட்டமொன்று கூடி தமிழிற் பிறந்த தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் முதலிய மொழியினர்  தமிழைத் தாயென மதிக்கச் செய்யவேண்டும். உண்மையான தமிழ் நாகரிகப் பான்மையைத் தாய்மொழி வாயிலாகவும் ஆங்கிலத்தின் வாயிலாகவும் ஹிந்தியின் வாயிலாகவும்  தென்னாட்டவரும் வடநாட்டவரும்  விளக்க வேண்டும். காலத்திற்கேற்ற முன்னேற்ற இயக்கங்களில் தமிழர் உரிய பங்கெடுத்துக்கொள்ள வேண்டும்’’என்று தமிழ் உணர்வு  முன்னேற பல கட்டளைகளை சுத்தானந்த பாரதியார் வெளியிட்டுள்ளார். இவ்வாறு உரைக்கப்பெற்ற இருபத்தாறு கட்டளைகள்  இன்றும் (2026) தொட்டுத் துலங்கிட வேண்டிய நிலையிலேயே உள்ளது  என்பது தமிழ் வளர்ச்சிக்கான சவால்களாக உள்ளது. 

தமிழ் வழிக் கல்வி, அகராதிகள் உருவாக்கம்,  ஆட்சி மன்றங்களில் தமிழ்,  அலுவலகங்களில் தமிழ், பிறமொழிச் செல்வம் தமிழுக்கு வருதல்,  தமிழ்ச் செல்வம் பிறமொழிகளுக்குச் செல்லல், சாதி இனம் வேறுபாடு அற்ற தமிழ்ச்சமுதாயம், தமிழில் பேசும் தமிழ்ச்சமுதாயம்,  கடிதங்கள் போன்ற தகவல் பரிமாற்றங்கள் தமிழில் செய்தல், தமிழ் இசைப் பெருக்கம், தமிழ் இதழ் வளர்ச்சி, தமிழ்ப்படை  என எல்லா நிலைகளிலும் பெருத்த தமிழ் முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டிய நிலைதான் உள்ளது என்பதை  சுத்தானந்த பாரதியார் வழி உணரமுடிகின்றது. 

தொகுப்புரை

சிவகங்கையைச் சார்ந்த சிந்தனைத் துறவி சுத்தானந்த பாரதியார் ஆவார். இவர் பன்மொழிகளை பல்மொழி இலக்கியங்களைக் கற்றவர். இவர் இந்திய விடுதலைக்கு முன்னதான காலத்தில்  தமிழ் வளர்ச்சிக்கும் தமிழ் உணர்ச்சிக்குமான சிந்தனைகளை முன்வைத்திருப்பது கருதத்தக்கது. இவர்  தமிழைத் தலைமை, சிறப்பு, பெருமை போன்ற பல தகுதிகளைப்  பெற பல அரிய சிந்தனைகளை வழங்கியுள்ளார்.  இருப்பினும் அவை இன்னமும் எட்டப்பட வேண்டிய நிலையில் இருப்பதை உணரமுடிகின்றது.  தமிழர் படை, தமிழ்நாடு, தமிழ்க்கல்வி, தமிழ் அகராதி, தமிழில் அறிவியல் நூல்கள், தொழில் வளர்ச்சி போன்றன குறித்த இவரின் தமிழ் வளர்ச்சிச் சிந்தனைகள் கருத்தில் கொள்ளத்தக்கன. படைப்பாளர்களையும், அவர்களின் படைப்புகளையும் ஊக்குவிக்கும் அவரது சிந்தனைகள் தமிழக மக்களால் அரசால்  ஏற்கத்தக்கனவாகவும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டியனவாகவும் உள்ளன. 

  •  

குரு அரவிந்தனின்  சிறுகதைகள்  பன்முகப்பார்வை

குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய திறனாய்வுப் போட்டி – 3 (2025) இரண்டாம் பரிசு பெற்ற கட்டுரை.

முனைவர் சகோ. ஜா. அருள் சுனிலா

பெரியகுளம், தேனி. தமிழ்நாடு.

A person wearing a pink and red dress

AI-generated content may be incorrect.

குரு அரவிந்தனின்  சிறுகதைகள்  பன்முகப்பார்வை

முன்னுரை

குரு அரவிந்தனின் தாயகக் கனவுடன், சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும், பனிச் சறுக்கல், நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகம் ஆகிய நான்கு கதைகளில் இடம் பெறும் கருத்துக்கள் பன்முக நோக்கில் திறனாய்வுக்கு உட்படுவதாக அமைகிறது.

வாழ்வியல் விழுமியங்கள்

படைப்பாளர்களின் முக்கிய நோக்கம் படைப்பு வழியாக மனித வாழ்வியலை வடித்தெடுப்பதே ஆகும். விழுமியம் என்பதற்கு மதிப்பு, சிறப்பு, உயர்வு போன்ற பொருள்களையே அகராதிகள் தருகின்றன. குரு அரவிந்தனின் சிறுகதைகளிலும் வாழ்வியல் விழுமியங்கள் முக்கிய இடம் பெறுகின்றன.

காதலும் அன்பும் 

‘தாயகக் கனவுடன்’ சிறுகதையில் தன் அத்தை மகள் பிரியா மேல் ஏற்பட்ட காதல் உணர்வை அப்பா தனது மகளுக்குக் கூறுவதிலிந்து இளம் வயதில் ஏற்படும் அன்பும் பாசமும் காலங்கள் கடந்தாலும் நிலைத்து நிற்பதை அறிய முடிகிறது. ‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் நிக்கோலாஸ் மற்றும் கலிஸ்ராவின் காதல் கதை, கதைக்கு உயிரூட்டம் அளிப்பதாக உள்ளது.

“உயிரோடு அவள் அருகே இருந்தபோதே அவர் தனது அன்பைக், காதலை மனப்பூர்வமாகப் பலவிதமான முறையில் அவளிடம் வெளிக்காட்டியிருந்தார். மேலை நாடுகளில் புரிந்துணர்வோடு ஒருவருக்கொருவர் துணையாகக் கடைசிவரை வாழ்வதென்பது ஆச்சரியமானதுதான், அப்படியான புரிந்துணர்வுள்ள ஒரு வாழ்க்கையைத்தான் அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள்” என்பதன் மூலம் மேலைநாட்டினரின் குடும்ப வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் மத்தியிலும், இணைந்து வாமும் குடும்பத்தினரின் மேன்மையையும், நோய்நொடியிலும் இறுதிவரை அன்புடனும் பாசத்துடனும் அரவணைத்துப் பாதுகாக்கும் உறவின் உன்னத நிலைகளை ஆசிரியர் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

குடும்ப வாழ்வு

குடும்ப சூழல் காரணமாக, திருமணம் செய்து தாய் நாட்டிலிருந்து அயலகம் சென்ற பெண்ணின் குடும்ப வாழ்வு ‘பனிச் சறுக்கல்’ என்ற சிறுகதையில் வெளிப்படுவதை, “வெளிநாட்டு மாப்பிள்ளைக்குக் கிராக்கி அதிகம் என்பதால் கனடா மாப்பிள்ளை என்றதும் எல்லோரும் வாயைப் பிளந்தனர். … தங்கைகளைக் கரைசேர்க்க வேண்டுமே என்று தியாகம் செய்வதாக நினைத்து அவள் கண்ணை மூடிக்கொண்டு ராஜனுக்கு வாழ்க்கைப்பட்டாள்”, என்று புதிய வாழ்க்கை, புதிய நாடு என்று எல்லாமே கொஞ்ச நாட்களுக்கு இரசிக்கக் கூடியதாக அமைந்தாலும், பின்பு கணவன் ஒரு பெரும் குடிகாரன் என்பதை அறிந்து வருந்தும் பெண்ணின் அவல நிலை புலப்படுகிறது. குடும்பம் என்பது ‘சரஸ்வதி இருக்க வேண்டிய இடம்’ என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுவதோடு, குடும்பத்தைக் கவனமாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்கவும், தங்களின் எதிர்காலம் மட்டுமல்ல, தங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தையும் கவனத்தில் கொண்டு குடும்ப வாழ்வு அமைய வேண்டும் என்ற வாழ்வியல் தத்துவம் இக்கதையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கல்வியின் சிறப்பு

‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் கலிஸ்ரா எனும் பண்ணை வீட்டுக்கார மகள் ஓய்வு நேரத்தில் வண்டி ஓட்டுவதையும், படிக்கச் செல்வதையும், ஆண்கள், படிக்கும் பெண்களை ஊக்குவிப்பதையும், படிக்கவில்லை என்றால் அதனைச் சுட்டிக்காட்டுவதை, “உன்னைப் போலவா அவள், அவள் உன்னைவிட உயர் வகுப்பில் படிக்கிறாள், ஓய்வு நேரத்தில் மட்டும்தான் வருவதாகச் சொன்னாள், படிக்கிற பிள்ளைகளைக் குழப்பக்கூடாது, அவர்களை ஊக்குவிக்க வேண்டும்” எனும் வரிகள் கல்வியின் சிறப்பை எடுத்துரைக்கின்றன.

 ‘பனிச் சறுக்கல்’ சிறுகதையில் தவறு நேர்ந்தது என்று அறிந்தபின்பு “படித்தவள், புத்திசாலி என்பதால் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் செயல்பட்டாள்” என்பதன் மூலம் பெண் தான் பெற்ற கல்வியின் அறிவால் தனது அவலமான நிலையில் முடிவெடுப்பதும், தன்னைச் சமநிலைப்படுத்தி, தெளிவாக நடந்து கொண்ட போக்கும், பெண்கள் தங்கள் தன்மானத்தைத் தவறாகப் பயன்படுத்தும் சூழலுக்கு உட்படும் நிலை ஏற்பட்டால் அதனை எவ்வாறு துணிந்து எதிர்கொள்ள வேண்டும் என்ற பாடத்தை இச்சிறுகதை உணர்த்தியுள்ளது.

“நான் படித்துக் கொண்டிருந்தேன். மாணவப் பருவம் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் இருந்தது”… “மாணவர்கள் போராட்டம் என்றால்தான் உலகமே திரும்பிப் பார்க்கும்” என்று ‘நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகம்’ சிறுகதையும் கல்வியின் சிறப்பை வலியுறுத்தி அமைகின்றது.

தொழிலின் மேன்மை

‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் வரும் விவசாயக் குடும்பத்திலுள்ள நிக்கோலாஸ் என்பவர் பிக்கப், டிராக்டர், பெரிய வண்டிகள் ஓட்டக் கற்றுக் கொண்டிருந்ததால் பெரியதொரு விவசாயப் பண்ணையில் வண்டி ஓட்டும் வேலை செய்ததையும், நிக்கோலாஸ் மற்றும் கலிஸ்ரா இருவரும் கனடா வந்தபின்பு இயற்கை விவசாயம் செய்து நல்ல வருமானம் பெற்று பூந்தோட்டங்களையும், காய்கறித் தோட்டங்களையும் பராமரித்து வாழ்ந்துள்ள தகவல்களும், கற்ற தொழில் முறையைப் பயன்படுத்தி புலம்பெயர்ந்த நாட்டிலும் நல்ல முறையில் வாழ்ந்துள்ள வாழ்க்கை அனுபவங்களும், தொழில் பயணமாகப் பிற நாடுகளுக்குப் பயணிப்போர்க்கு அனுபவப் பதிவாக அமைந்துள்ளது. 

தாய் மண்மேல் பற்று

ஈழப்போரின் விளைவாக ஆண்களும் பெண்களும் நாட்டிற்காக உழைக்க வீட்டை விட்டு செல்வதைத் ‘தாயகக் கனவுடன்’ சிறுகதை எடுத்துரைப்பதை, “பிரியா வீட்டைவிட்டுப் போய்விட்டதாகவும், விடுதலைப் போராட்டத்தில் அவளுக்கு இருந்த ஈடுபாடு காரணமாக அவள் இயக்கத்தில் சேர்ந்து விட்டதாகவும் செய்திகள் வந்தன. எனக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. பிரியாவா.. எப்படி..? தாய்மண்ணை நேசித்த வயது வந்த ஒரு பெண் என்பதால் அவளது விருப்பத்தை யாராலும் தடுக்க முடியவில்லை”எனும் வரிகள் எடுத்துரைக்கின்றன. புலம்பெயர்ந்து பிறநாடுகளில் குடியேறினாலும், தாய்மண்மேல் கொண்ட பற்றும் பாசமும் நீங்காத நினைவுகளாக உள்ளன.

பெண்ணின் பெருமை

குரு அரவிந்தன் தனது சிறுகதைகளில் பெண் பாத்திரப் படைப்புக்களை உயர்வாகப் படைத்துள்ளார். ‘தாயகக் கனவுடன்’ சிறுகதையில் வயது பெண் நாட்டிற்காகத் தன்னை அர்ப்பணித்துள்ளதாகவும்இ ‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் பெண் என்பவள், “பள்ளியின் பாட்மின்டன் குழுவுக்குத் தலைமை தாங்கியவர். பல மாணவிகளுக்குப் பயிற்சியாளராக இருந்திருக்கின்றார். வலைப்பந்தாட்டக் குழுவுக்கும் பயிற்சியாரளாரக் கடமையாற்றி வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்தவர்” என்ற செய்தியும் இடம் பெற்றுள்ளது. மேலும், இக்கதையில் வரும் கலிஸ்ரா எனும் பெண் வண்டி ஓட்டக்கூடியவராகவும், ஆண்கள், படிக்கும் பெண்களுக்கு மதிப்புக்கொடுப்பதையும் ஆசிரியர் எடுத்துரைக்கும் விதம் சிறப்புக்குரியது. 

‘பனிச் சறுக்கல்’ கதையில் வீட்டில் நடந்த விருந்தில் விஜி என்ற பெண் களங்கப்படுத்தப்பட்டாலும், குடும்பம் என்ற வாழ்விற்குள் நுண்ணறிவோடு செயல்படுபவளாகப் பெண் பாத்திரப்படைப்பு அமைந்துள்ளதை, “நல்லவளாய் நடந்து கொண்டு தனது எதிர்கால வாழ்க்கையில் சேற்றைப்பூச அவள் தயாராகவில்லை. தான் தவறு செய்யாவிட்டாலும், பெண் என்பதால் நடந்தது வெளியே தெரிந்தால் தன்மீது தீராப்பழி சுமத்தக் கணவனே தயங்க மாட்டான் என்பதை அனுபவ மூலம் அவள் அறிந்தே வைத்திருந்தாள். காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்பத் தன்னை காப்பாற்றிக் கொண்டுஇ இருத்தலுக்காய் வாழ்வதே இப்போதைய தேவை என்ற நிலைப்பாட்டோடு அவள் செயற்பட்டாள்” எனும் வரிகள் இதனை எடுத்துரைக்கின்றன.

மூத்தோர்களின் வாழ்வியல் நெறி

‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் முதியோர்களின் வாழ்வைக் குறித்த தகவல்கள் இடம் பெறுகின்றன. “நிக்கோலாஸ்இ உரையாடிக் கொண்டிருக்கும் போது, தனக்கு என்ன வயது இருக்கும் என்று சொல்லுங்க பார்க்கலாம் என்றார். என்ன, ஒரு 73 – 74 -க்குக் கிட்ட இருக்கும் என நினைக்கிறேன் என்றேன். அவர் சிரித்துவிட்டுச் சொன்னார் இல்லை எனக்கு 84 ஆச்சு என்று. அவரை இளமையாகப் பத்து வயது குறைத்து நான் காட்டியதில் அவருக்குள் மகிழ்ச்சி இருந்தது. அவரது மனைவி கலிஸ்ராவுக்கு 78 வயது ஆகிறது என்றார்” இதன்மூலம் முதிர் வயதிலும் கணவன், மனைவியைக் கவனித்துக் கொள்ளும் நற்பண்பும், நட்புறவோடு பழகும் பண்புகளும் வெளிப்படுகின்றன. வயது போகும் போது உடலில் ஏற்படும் மாற்றங்களைக் குறித்தும், அதனால் ஏற்படும் வேதனைகள்இ இளமையில் அழகுடன் இருந்த உறுப்புக்களின் மாற்றங்கள் குறித்தும் இச்சிறுகதை எடுத்துரைக்கிறது. மேலும், “பிறப்பு என்று ஒன்றிருந்தால், இறப்பு என்றும் ஒன்றிருக்கும், உலகே மாயம், இதுதான் இந்த உலகம்” என்ற வாழ்வியல் படம் இம்மனித குலத்திற்கு உணர்த்தும் செய்தியாக அமைந்துள்ளது. 

‘நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகம்’ எனும் சிறுகதையில் 80 வயது ஆப்பிரிக்கா நாட்டு முதியவர், “ஆரோக்கியமானவர் போல இருந்தார். அன்று சரித்திரத்தை மாற்றிப் படைத்த போராளிகளில் ஒருவர் என்பதால் என் மதிப்பில் உயர்ந்து நின்றார்”எனும் வரிகளும், அந்த முதியவர் வெள்ளை இனத்து மக்களிடம் தாங்கள் அடிமைப்பட்டுக் கிடந்த வரலாற்றைப் பதிவு செய்யும் விதமும், கறுப்பின மக்களின் சுதந்திரத்திற்காகப் போராடி பெற்றுக் கொண்ட உரிமைகளை எடுத்துரைக்கும் விதமும் வரலாற்று உண்மைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.

பண்பாடும் பழக்கவழக்கமும்

பண்பாடென்பது ஒரு தலைமுறையினர், சென்ற தலைமுறையினரிடம் பெற்றுக் கொண்ட வாழ்க்கை முறையாகும். ஒரு சமுதாயத்தின் பண்பாட்டை அறிந்து கொள்வதற்குப் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் அடிப்படைக் கருவிகளாக அமைகின்றன.

உணவு

இலங்கை மக்கள் உண்ணும் உணவு குறித்த தகவலை ‘தாயகக் கனவுடன்’  சிறுகதை வெளிப்படுத்துவதை, “அத்தை பிட்டு பரிமாறினாள். பிட்டுக்குத் தொட்டுக் கொள்ள மிளகாய்ச் சம்பல். வறுத்த மிளகாயை இடித்து தேங்காய்த் துருவலுடன் உப்பும் புளியும் கலந்து தயாரிப்பதுதான் சம்பல்”,எனும் வரிகளால் அறியலாம்.

பூப்பெய்தல்

பெண்களைப் பூப்பெய்த பின்பு வீட்டின் இருட்டறையில் அமரவைத்தல், அவர்களுக்குக் கொடுக்கப்படும் உணவுகள், பூப்பெய்த பின்பு முன்பு போல் குழந்தைகளோடு இணைந்து விளையாடக் கூடாது, பெரியபிள்ளையானல் தனிமைப் படுத்தப்படுதல், குமரப்பிள்ளைகளோடு கண்டபடி பேசக்கூடாது என்ற சமூக நிலையை ‘தாயகக் கனவுடன்’ சிறுகதை எடுத்துரைப்பதை, “அவளைக் கிணற்றடிக்குக் கொண்டு சென்று தலையிலே தோயவார்த்தனர். இன்று இவள் இந்த அறையில் தனிமைப்படுத்தப் பட்டிருந்தாள். அத்தை நல்லெண்ணையும், முட்டையும் எடுத்துக் கொண்டு ஸ்டோர் ரூமுக்குப் போவதை அவதானித்தேன்” எனும் வரிகள் எடுத்துரைக்கின்றன.

விளையாட்டு

சண்டிலிப்பாய் வயல் வரம்பு வழியே ஓடிப்பிடிப்பது, இலுப்பங்கொட்டை பொறுக்குவது, வானரப்படைகளோடு ஒல்லித்தேங்காய் கட்டிப் பூவல் குளத்திலே தாமரைக் கொடிகளில் சிக்காமல் நீச்சலடிப்பது, ஐயர் வீட்டு வளவிலே கொய்யாப்பழம் பறிப்பது, வேப்பமர நிழலில் மாங்கொட்டை அடிப்பது, மாட்டுவண்டில் சவாரி விடுவது, இப்படி குழந்தைகள் விளையாடும் விளையாட்டுகளாக ‘தாயகக் கனவுடன்’ சிறுகதை வெளிப்படுத்துகிறது. 

கொண்டாட்டம்

‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் பண்ணை வீட்டுப்பெண்ணின் பிறந்தநாள் விழாக் கொண்டாட்டாம் அங்கு வேலை செய்யும் பணியாளர்களுடன் நடந்துள்ளதையும், அக்கொண்டாட்டத்தில் இடம் பெற்ற கேக்வெட்டுதல், மதுஅருந்துதல், நடனம் ஆடுதல் போன்ற மேலைநாட்டுக் கலாச்சாரத்தை அறிய முடிகிறது. 

‘பனிச் சறுக்கல்’ சிறுகதையிலும் வீட்டில் பிறந்த நாள் விழாக் கொண்டாடுவதையும், மதுபானங்களுடன் விருந்து பருமாறும் நிகழ்வு நடைபெற்றாலும், அயல்நாட்டில் வாழ சென்ற வீட்டின் இல்லத்தரசி விஜி மதுபானங்களை வெறுப்பதையும், ஆனாலும் அவர்கள் வீட்டில் நடைபெற்ற விருந்தில் ஆடல் பாடல்களுடன் அவளையும் குடிக்கவைத்து, அலங்கோலப்படுத்திய மேலைநாட்டு கலாச்சார சீரழிவை ஆசிரியர் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

பொழுதுபோக்கு

‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் பிசியோதொரப்பி வைத்தியரிடம் தனது மனைவியை அழைத்து வந்த நிக்கோலாஸ் என்பவர் ‘றீடேஸ் டையஸ்ட்’ என்ற புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்த தகவல் இடம் பெற்றுள்ளது. மேலும். இக்கதையில் புலம் பெயர்ந்த பெண்கள் பலர், கனடாவில் பொழுது போக்குவதற்காகத் தங்களுக்குப் பிடித்தமான துறைகளில் சங்கீதம், நடனம், விளையாட்டு என்று ஈடுபடுவதையும் அறிய முடிகிறது.

“குடும்பமாக வந்து நீச்சல் உடையோடு பலவகையான வண்ணக் குடைகளின் கீழ் இருப்பவர்களும், மறுபக்கம் வெய்யில் காய்பவர்களுமாய் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அங்குமிங்குமாய் நிரம்பியிருக்கச் சிறுவர், சிறுமியர் ஆங்காங்கே மணல்வீடு கட்டி ஆரவாரமாய் விளையாடிக் கொண்டிருந்தனர்” என்று ‘நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகம்’ சிறுகதையின் மூலம் மேலை நாட்டு மக்களின் பொழுதுபோக்கு நிகழ்வுகளை அறிந்து கொள்ளலாம்.

போரின் அவல நிலை

போருக்குப் பின் ஈழ நாட்டின் அவல நிலையை ‘தாயகக் கனவுடன்’ சிறுகதை“ஏனைய வீடுகள் போல அத்தையின் வீடும் யுத்தத்தின் அவலத்தை எடுத்துக் காட்டியது. செல் குண்டுகள் வந்து விழுந்ததில் கூரை முற்றாகவே தூர்ந்து போயிருந்தது. செடி கொடி பற்றைகளுக்கு நடுவே வீடு ஒன்று இருந்ததற்கு அடையாளமாய் ஆங்காங்கே இடிந்து போன சுவர்கள் தலை தூக்கி நின்றன” எனும் வரிகள் எடுத்துரைகின்றன.

புலம்பெயர்தல்

ஈழப் போரின் காரணமாகப் புலம்பெயர்ந்துள்ளதை ‘தாயகக் கனவுடன்’ சிறுகதை எடுத்துரைப்பதை, “மகளின் பிரிவால் மட்டுமல்ல, யுத்தம் காரணமாக அவர்களின் குடும்பமும் சொல்லெனாத் துன்பங்களைத் தாங்கிக் கொண்டு சொந்த வீட்டைவிட்டு இடம் பெயரவேண்டி வந்தது” எனும் வரிகளால் அறியலாம். ‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் நிக்கோலாஸ், கலிஸ்ரா இருவரும் காதலால் கனடாவிற்குப் புலம்பெயர்ந்து வந்த செய்தி இடம் பெற்றுள்ளது.

அடிமை நிலையும் போராட்ட உணர்வும்

‘நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகம்’ சிறுகதையில், ஆப்பரிக்கா மக்கள் எவ்வாறு வெள்ளையர்களுக்கு அடிமைப்பட்டு, சுதந்திரம் பெற்றார்கள் என்ற வரலாற்றைக் கூறும்போது, “எமது முன்னோர்கள் ஆபிரிக்காவில் இருந்து வந்தவர்கள்.  அவர்கள் இவர்களுக்கு அடிமைகளாக இருந்ததால், எங்களையும் அப்படியே நடத்தினார்கள். எங்களால் என்ன செய்யமுடியும், சட்டம் அவர்கள் பக்கம் இருந்தது. 1600 -களில் தொடங்கிய அடிமை முறை 1865 வரை நடந்தது. கறுப்பினப் பெண்களை வேலைக்காக மட்டுமல்ல, அடிமைகளின் இனப்பெருக்கத்திற்காகவும் அவர்கள் பாவித்தார்கள். ஆறு, ஏழு தலைமுறையினர் அடிமைகளாகவே இருந்தார்கள்”என்று கறுப்பின மக்களின் அடிமை வரலாற்றைக் கூறுவதோடு, அவர்கள் கண்டு மகிழ்ந்த நாட்டிய நாடகத்தின் கருத்துக்கள் போராட்ட உணர்வினை ஏற்படுத்தியுள்ளதை, “அந்த நாட்டிய நாடகத்திலே வந்த பாடலில் சில வரிகள் எங்கள் உணர்வுகளை எழுப்பிவிட்டன. … எங்களுக்குள் பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது. எங்க உரிமையை நாங்கதானே வென்று எடுக்க வேண்டும், முடியாது என்று நினைத்தால் எதையுமே சாதிக்கமுடியாமல் போய்விடும்” என்ற உணர்வுடன் போராடி, 1962 ஆம் ஆண்டு ரெட் காபோட் என்பவர், “கறுப்பினத்தவர் கடலில் குளிப்பது குற்றமாகாது, இந்த மண்ணில் அவர்களுக்கு அதற்கான சுதந்திரமிருக்கிறது என்று அவர் தீர்ப்பு வழங்கியது சரித்திரத்தில் முக்கியமாக எழுதப்பட வேண்டியது” என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.

“இதனால் இன்று நாங்கள் எல்லாம் சுதந்திரமாகக் கடலில் இறங்கிக் குளிக்க முடிகின்றது. 60 வருடங்களுக்கு முன் ஆபிரிக்க அமெரிக்கக் கறுப்பினத்தவர்கள் அமைதியான வழியில் போராடி வெற்றி பெற்றதன் மூலம் கிடைத்த இந்தத் தீர்ப்பினால்தான் இன்று பிறவுண் நிறத்தவர்களான நாங்களும் மியாமிக் கடலில் குளிக்க முடிகின்றது. புலம்பெயர்ந்து வந்த எங்களுக்கு இந்த வரலாறு தெரியாவிட்டாலும், அவர்கள் பெற்றுத் தந்த இந்த சுதந்திரம் மிகவும் முக்கியமானதாகும், இல்லாவிட்டல் நாங்களும் மியாமிக் கடற்கரையில் ஒதுக்கப்பட்டவர்களாகவே இருக்க வேண்டி வந்திருக்கும்”  என்ற வரலாற்று உண்மை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். எங்குச் சென்றாலும் ஒவ்வொரு இடத்திலும் நாம் இப்போது அனுபவிக்கும் சுதந்திரம், யாரோ எப்போதோ போராடிப் பெற்றுக் கொடுத்ததுதான். இது போன்ற சில விடயங்களை வரலாறு பதியத் தவறிவிடுகின்றது. சுதந்திரம் என்பது இலவசமாகக் கிடைப்பதில்லை, போராடித்தான் பெறவேண்டும் என்ற உண்மையும் இக்கதையில் பதிவு செய்துள்ள விதம் சிறப்புக்குரியதாகும்.

உத்தி

படைப்பாளன் தான் சொல்ல வரும் கருத்தையும், படிப்போர் பெற வேண்டிய உணர்ச்சியையும் கருத்தில் கொண்டு படைக்கும் இலக்கிய முறைகளே உத்திகள் எனப்படும்.

தலைப்புப் பொருத்தம் 

தாயகக் கனவுடன்’ என்ற சிறுகதையில் புலம்பெயர்ந்து பிறநாடுகளுக்குச் சென்றாலும், தாயக மண்ணின் கனவுகளைச் சுமந்து வாழ்வதையும், தாய்நாட்டிற்காக ஆண்களும் பெண்களும் தங்களையே அர்ப்பணிக்கும் போக்கிலும் தலைப்புப் பொருத்தம் வெளிப்படுகிறது.

‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் தலைப்பை ஓட்டியே கதையின் போக்கு அமைந்துள்ளது. ‘பனிச் சறுக்கல்’ சிறுகதையில் பனிச் சறுக்கல் ஏற்பட்டு எதிர்படும் விபத்துக்கள் போன்று குடும்ப வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. ‘நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகம்’ கதையில், “ஆபிரிக்க கறுப்பின அடிமைகள் தப்பி ஓடினால் வேட்டை நாய்களை வைத்துத்தான் வெள்ளையின முதலாளிகள் அவர்களைத் தேடிப் பிடித்தார்கள். தண்ணீரில் மோப்ப நாய்களால் மோப்பம் பிடிக்க முடியாது.” “தண்ணீரைக் கண்டால் விலகிநில் என்று எமது பெற்றோர் அறிவுறுத்துவார்கள். தண்ணீரைக் கண்டால் விலகிப் போகாதே, நீச்சலடிக்கக் கற்றுக் கொள் என்று வெள்ளையினப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவுறுத்துவார்கள்” எனும் வரிகளைக் கொண்டு கதையின் தலைப்புப் பொருத்தம் சிறப்பாக அமைந்துள்ளதை அறிந்து கொள்ளலாம். 

முன்னோக்கு உத்தி

   கதையின் பிற்பகுதியில் நடக்கும் ஒன்றைக் கற்போர் ஏற்றுக்கொள்ளும் வகையில் கதையின் முற்பகுதியிலே கூறுவது முன்னோக்கு உத்தியாகும். “முளைத்துப் பூத்திருந்த கார்த்திகைச் செடியின் பூதான் … மஞ்சள் சிகப்பு நிறத்தில் பளீச்சென்று கண்ணில் பட்டது. பழைய நினைவுகள் எல்லாம் திடீரெனக் கண்முன்னால் வந்து நின்றன. … குடியிருந்த அந்த வீட்டைப் பார்க்கவே எவருக்கும் அழுகை வரும், ஆனால் நான் அழுதது அதற்காக அல்ல, என் அத்தை மகள் பிரியாவுக்காகத்தான்” எனும் ‘தாயகக் கனவுடன்’ சிறுகதையின் வரிகள்; முன்பு நடந்த நிகழ்ச்சியை நினைவூட்டுவதாக உள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள கனிகளில் மாம்பழத்தின் வகைகளைக் குறிப்பிட்டுக் கூறுவதும் குறிப்பிடத்தக்கதாகும். 

‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் நிக்கோலாஸ் மற்றும் கலிஸ்ராவின் காதல் கதையைக் கூறும் நிகழ்வு, முன்பு நடந்த நிகழ்வை நினைவுக் கூர்ந்து மகிழ்வதாக உள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன் வெள்ளையர்களுக்கு அடிமைப்பட்டு கிடந்த பழைய நினைவுகளை மீண்டும் மீள்பதிவு செய்வதாக ‘நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகத்தின்’ சிறுகதை அமைந்துள்ளது.

இலக்கிய இன்பம்

படைப்பாசிரியர் இலக்கியங்களைத் தனது படைப்புகளுக்குள் பயன்படுத்துவதன் மூலம் படைப்பாசிரியரின் இலக்கிய ஆர்வத்தை அறிந்து கொள்ள முடிகிறது. “எந்தையுந் தாயு மகிழ்ந்து குலாவி யிருந்தது மிவ்வீடே.. அதன் முந்தைய ராயிர மாண்டுகள் வாழ்ந்து முடிந்தது மிந்நாடே..” என்று ‘தாயகக் கனவுடன்’ சிறுகதையில் இலக்கிய வரிகளின் பயன்பாட்டைக் காண முடிகிறது.

“யானைக்கும் ஒரு நாள் அடிசறுக்கும்” என்று பழமொழிகள் பயன்படுத்தியுள்ளதை ‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் காண முடிகிறது. 

“சாக்கடையில் தவறி விழுந்து விட்டது போன்ற உணர்வில் ஒரு கணம் நிலை குலைந்தாள்” என்பதன் மூலம் உவமை பயன்படுத்தியுள்ளதோடு ‘பனிச் சறுக்கலை’ குடும்ப வாழ்வோடு ஒப்புமைப்படுத்தி ஆசிரியர் தான் கூறவந்துள்ள கருபொருளைக் குறித்துக் கூறியுள்ள விதம் படிப்போரின் சிந்தனைத் திறனைத் தூண்டுவதாக உள்ளது.

மெய்பாடுகள்

“நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று

அப்பால் எட்டாம் மெய்ப்பா டென்ப” (தொல்.மெய். 3)

என்று தொல்காப்பியர் குறிப்பிடும் மெய்பாடுகள் குருஅரவிந்தனின் சிறுகதைகளில் வெளிப்படுகிறது.

“அழாதீங்கப்பா, அத்தைப் பாட்டியோட வீடு மட்டுமல்ல, இங்கே எல்லா வீடும்தான் சிதைந்து போச்சு, மெல்ல மெல்லத் திருத்தியிடுவாங்க” எனும் ‘தாயகக் கனவுடன்’ சிறுகதையில் அழுகை மெய்பாடு வெளிப்படுவதைக் காணலாம். மகிழ்ச்சி என்பது எட்டு மெய்ப்பாடுகளுள் ஒன்றாகும். 

“போருக்கு முன்னைய நாட்கள், மனதைவிட்டகலாத எவ்வளவு மகிழ்ச்சியான நாட்கள் அவை என்பதால் அந்த நாட்களை நினைத்துப் பார்த்தேன்” என்று ‘தாயகக் கனவுடன்’ சிறுகதையின் வரிகள் எடுத்துரைப்பதைப் போன்று ‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் நிக்கோலாஸ் தனது வயதையும், தனது மனைவியின் வயதையும் குறித்துக் கூறும் போது மகிழ்ச்சியை வெளிப்டுத்துகின்றார். தனது காதல் கதையைக் கூறும் நிகழ்விலும் மகிழ்ச்சி வெளிப்படுகிறது.

மெய்ப்பாடுகளில் கோபம் என்பது, வெகுளி என்றும் சொல்லப்படும், எட்டு மெய்ப்பாடுகளுள் ஒன்றாகும். ‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் நிக்கோலாஸ் கலிஸ்ராவைக் காதலிக்கும் முன் அவளைக் குறித்து முழுமையாக அறியாமல் கோபம் கொள்வதைக் காண முடிகிறது.

“ஏமாற்றப்பட்ட இனத்தைச் சேர்ந்த இவள் இருக்கிறாளா இல்லையா என்பது கூட உறவுகளுக்குத் தெரியாத ஒரு அவலம்” என்பது ‘தாயகக் கனவுடன்’ சிறுகதையில் அவலச்சுவை வெளிப்படுகிறது. ‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’  சிறுகதையில் மனைவியின் இறப்பு அவலச் சுவையை வெளிப்படுத்துகிறது. ‘பனிச் சறுக்கல்’ சிறுகதையில் விஜிக்கு நேர்ந்த இழிவான செயல் மூலம் அவலச் சுவையைக் காணலாம். ‘நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகம்’ கதையில் ஆப்பிரிக்க மக்களின் வரலாற்றைக் கூறும் நிகழ்வில் மூன்று தலைமுறைகளாக அடிமைப்பட்டுக் கிடந்த அவல நிலை வெளிப்படுகிறது.

முடிவுரை

   பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட, குரு  அரவிந்தனின்  சிறுகதைகளில் தான் வாழும் நாடுகளில் நடக்கின்ற நிகழ்வுகளைக் கருவாகக் கொண்டு சிறுகதைகளைப் படைக்கும் திறன் வெளிப்படுகிறது.  சிறுகதைகளில் வரலாறு, பண்பாடு, பழக்கவழக்கங்கள், வாழ்வியல் விழுமியங்களை இலக்கிய சுவையுடன் அனைவரும் படிக்கும் விதத்தில் எடுத்துரைக்கும் ஆசிரியரின் நடையமைப்பு சிறப்புக்குரியதாகும். சங்க இலக்கியத்தில் இருந்து அறிவியல் வரை, ஆய்வுகளை மேற்கொள்வோருக்குப் பயன்பெறும் விதத்திலும், சமூகத்திற்குப் பலவித நற்கருத்துக்களை அறிவிக்கும் போக்கிலும், தீமைகளைச் சுட்டிக்காட்டும் பண்புகளிலும் இவரது சிறுகதை இலக்கியம் இவ்வுலகிற்குப் பயனுள்ள  படைப்பாக அமைந்திருப்பது பாராட்டுகுரியது.

  •  

எழுத்தாளர் குரு அரவிந்தனின் சிறுகதைகள் பற்றிய ஓர் ஆய்வு

குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய திறனாய்வுப் போட்டி – 3 (2025) முதற்பரிசு பெற்ற கட்டுரை.

எழுத்தாளர் குரு அரவிந்தனின் சிறுகதைகள் பற்றிய ஓர் ஆய்வு

சிவகலை சிவப்பிரகாசம், வவுனியா.

A person smiling for a picture

AI-generated content may be incorrect.

ஆய்வுச்சுருக்கம்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழுக்குக் கிடைத்த புதிய வரவு புனை கதைகளாகும். ஆனால் இருபதாம் நூற்றாண்டில் தான் இதன் வளர்ச்சி பல பரிணாமங்களைப் பெற்றது. சிறுகதை வளர்ச்சியால் கன்னித்தமிழ் மறுமலர்ச்சியடைந்தது. தமிழ் எழுத்தாளர்கள் இந்த நூற்றாண்டில் எடுத்துக் கொண்ட முயற்சியால் சிறுகதைத் துறை மேலும் வளர்ச்சியடைந்தது. ஈழத்து இலக்கிய வரலாற்றில் புலம்பெயர் இலக்கியமும் முக்கிய அடித்தளமாக அமைந்திருக்கின்றது. இப் புலம்பெயர் இலக்கியம் விசைகொள்ள பலவகைப்பட்ட ஆளுமைகளைத் தன்னகத்தே கொண்ட, பரந்துபட்ட வாசகர்களின் எழுத்தாளர் குரு அரவிந்தனின் பங்களிப்பு  தனித்துவமானது. இவர் எழுதிய புல்லுக்கு இறைத்த நீர், நங்கூரி, பனிச்சறுக்கல், உறவுகள் தொடர்கதை ஆகிய நான்கு சிறுகதைகள் மட்டும் இவ் ஆய்வுக்காக வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் நோக்கமானது மேற்கூறப்பட்ட நான்கு சிறுகதைகளைத் திறனாய்வு செய்வதுடன் இவரது சமூகம் பற்றிய பிரக்ஞையையும் வெளிக்கொணர்வதாகும். பண்புநிலை அடிப்படையில் விபரண ஆய்வு முறையினூடாக இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டது. இவ்வாய்வுக் கட்டுரைக்குரிய தரவுகள் ஆசிரியருடைய சிறுகதைகள், நூல்கள், இணையத்தளங்கள் என்பவற்றிலிருந்து பெறப்பட்டுள்ளன. திறவுச் சொற்கள்:- குரு அரவிந்தன், புல்லுக்கு இறைத்த நீர், பனிச்சறுக்கல், நங்கூரி, உறவுகள்

தொடர்கதை.

அறிமுகம்

குரு அரவிந்தன் யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும், புலம்பெயர் தேசமாகிய கனடாவில் வசிப்பவருமாகிய கணக்காளர், ஆசிரியர் குரு அரவிந்தன் அவர்கள் படைப்பிலக்கியத்தில் பன்முக ஆளுமை கொண்ட படைப்பாளியாவார். ஆழ்ந்த புலமைப் பின்புலம் கொண்ட மகாஜனாக் கல்லூரியின் அறிவேற்றமும், ஆழ்ந்த புலமையும், ஆழ்ந்த வாசிப்பும் இவரின் ஆக்கங்களின் வேர்களோடு தொடர்புபட்டுள்ளன. எட்டுச் சிறுகதைத் தொகுப்புக்கள், ஏழு நாவல்கள், ஒலிப்புத்தகங்கள், சினிமாக் கதை, வசனம், சிறுவர் இலக்கியம், நாடகங்கள் என்ற பன்முகத்தளங்களில் கால்பதித்து நிற்கும் அவரது ஆளுமையின் உறுபண்பு (trait ) அறிவு நிலையிலும், ஆக்க நிலையிலும் அவர் மேற்கொண்ட செறிவான ஊடாட்டங்களின் வெளிப்படுத்துகையாயின. சர்வதேச தமிழர் மட்டத்தில் இவரது வாசகர் வட்டம் மிகப்பெரிய அளவில் பரிணாமம் அடைந்து கொண்டிருப்பதற்கு இவரின் கனதியான இலக்கியப் பங்களிப்பே காரணமாகின்றது. 

இவரது புனை கதைகள் பல பிறமொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டும், குறும் படங்களாகவும் எடுக்கப்பட்டிருக்கின்றன. கலைமகள் விருது, விகடன் விருது, உதயன் தங்கப்பதக்க விருது, தமிழர் தகவல் விருது, தமிழ்மிரர் விருது, ஞானம் விருது, சிறுகதைவித்தகர் விருது, சிறந்த ஊடகவியலாளருக்கான கவர்னர் விருது, சிறந்த திரைக்கதை வசனத்திற்கான ஜனகன் பிச்சேஸ் விருது, வடஅமெரிக்க தமிழ்ச்சங்க விருது, மகாஜனாக் கல்லூரியின் பழைய மாணவருக்கான சாதனையாளர் விருது போன்ற பல பரிசுகளையும் விருதுகனையும் பெற்றிருக்கிறார். உள்ளத்தில் ஒளியுண்டாயின் வாக்கினிலும் ஒளியுண்டாதற் போல அவர் நோக்கம் தெளிவுற அமைவதனால் அவர் ஆக்கங்களும் தெளிவாகச் சித்தரிக்கப்பட்டவையாக அமைகின்றன.

சிறுகதை

சிறுகதை என்பது நிகழ்ச்சிகளின் தொகுப்பு. அதில் நிறைய நிகழ்ச்சிகள்,விபத்துக்கள், திடீர்த்திருபப்ங்கள், எதிர்பாராத வளர்ச்சி மூலம் உச்சக்கட்டத்தை அடைதல், நிறைவான முடிவு போன்றவை இருக்க வேண்டும் என்பார் ஹியூக் வாவ்போல். ஒரு சிறுகதை மூலக்கருத்து ஒன்றையும் ஓரே ஒரு கதைப் பொருள் கூறையும் கொண்டிருப்பதால் அது நாவலிலிருந்து வேறுபடுகின்றது. கதாாசிரியரின் சிந்தனையில் பிறந்து அது வாசகனின் சிந்தகனையில் நிறைவு பெறுகிறது . சிறுகதையின் அமைப்புச் சிறப்படைவதற்கு சிறந்த தலைப்பு, தொடக்கம், நேர்த்தியான கருப்பொருளும் கதைப்பின்னலும், மனத்தினின்று அகலாத பாத்திரங்கள், நுட்பமாகக் கதைகூறல், சிறுகதையின் கால இடஅமைவு, பாத்திரப் பேச்சு, சிறந்த முடிவு என்பவை இன்றியமையாதவை. இவற்றின் தளங்களில் நின்றே ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட நான்கு சிறுகதைகளும் திறனாய்வு செய்யப்படுகின்றன.

முதலாவதாக குரு அரவிந்தனின் ‘புல்லுக்கு இறைத்த நீர் என்பதனை எடுத்துக் கொள்வோம். தள்ளாத வயதிலுள்ள ஆசிரியர் தான் கற்பித்த சிறந்த மாணவர்களைச் சந்திக்கும் போது ஏற்படும் விகசிப்பையும், எதேச்சையாக சமூகப் பிறழ்வுகளுக்குள் அகப்பட்டுக் கொண்ட மாணவனைச் சந்தித்ததால் அவரடைந்த ஆதங்கத்தையும் எடுத்தியம்புகிறது. அந்த மாணவனின் சமூகப்பிறழ்வுக்கு யார் காரணமென்பதே கதையின் கருவூலம்.

அடுத்த கதையாகிய ‘நங்கூரி என்ற சிறுகதையை எடுத்துக் கொண்டால் இக்கதை 1983ம் ஆண்டு சிங்கள இனவாதத்தால் தமிழினத்துக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரத்தால் அகதிகளாக்கப்பட்ட தமிழ் மக்களைச் சுமந்து கொண்டு தமிழ்க் கரையோரப் பிரதேசங்களூடாகக் காங்கேசன்துறையைச் சென்றடையும் நங்கூரி எனும் கப்பலில் நிகழும் சோகக்கதையைப் பேசுகிறது. பயணக் காலமான அந்த இரண்டு நாட்களில் தான் எத்தனை பாத்திரங்கள், எவ்வளவு உணர்ச்சிகள், எத்தனை விவாதங்கள், எப்படிப்பட்ட தீர்வுகள், அது ஓர் துன்பியல் நாடகம் என்பதை ஆசிரியர் யதார்த்தபூர்வமாக எழுதியுள்ளார்.

மூன்றாவது சிறுகதையாகிய ‘பனிச் சறுக்கல் என்பது, பனிச்சறுக்கல் விளையாட்டை புலம்பெயர் மக்களின் பிரச்சினைகளுடன் ஒப்பிட்டுப் புனையப்பட்டதாகும். மனவிருப்பமன்றிக் குடும்பச் சூழ்நிலை காரணமாக ஈழத்துப் பெண் புலம்பெயர் நாட்டு மணமகனைத் திருமணம் செய்து அந்த நாட்டிற்குச் சென்ற பின் அங்குள்ள இயற்கைச் சூழலுக்கு மேலாக, சமூகச் சூழலுக்கு இசைவாக்கமடையும் போது அவள் பட்ட துன்பத்தையும், அவளுக்கேற்பட்ட சோக நிகழ்வையும் எடுத்தியம்புகிறது.

நான்காவது சிறுகதையாகிய ‘உறவுகள் தொடர் கதை என்பதாகும். ஈழத்தில் நடந்தேறிய யுத்ததாண்டவத்தின் கோரப்பிடியில் சிக்கிய தனயன் உயிரைக் காப்பாற்ற தாயின் விருப்பத்துடன் கனடாவில் தஞ்சமடைகிறான். ஈழத்தில் தனியாக வாழ்ந்த தாய் யுத்தம் காரணமாக நிகழ்ந்ந இடப்பெயர்வுகளில் எங்கு போனாள் என்றறியாத தனயன் பல காலங்கள் கழித்து யுத்தம் தளர்த்தப்பட்ட சூழ்நிலையில் அவளைத் தேடித் தனது குடும்பத்தாருடன் தாய் நாட்டிற்கு வருவதையும் அதன் பின் நடந்தேறிய தொடர் சம்பவங்களையும் சித்தரிப்பதாகும்.

கதைகளின் தலைப்புகள்

சிறுகதைக்குப் பொருத்தமான பெயரும் அதன் கவர்ச்சியுமே வாசகர்களுக்கு முதலில் அறிமுகமாகின்றன. ஒரு கதைக்கு ஒரே ஒரு சரியான பெயர்தான் இருக்க முடியும். அந்தப் பெயரைத் தேடிப் பிடிப்பதில் தான் சிறுகதையாசிரியரின் தனித்திறமை அடங்கியிருக்கிறது.சிறுகதைக்குத் தலைப்பிடும்போது அதன் தொடக்கம், அதன் முடிவு, அதன் பிரதான பாத்திரம், அக்கதை கூறும் பொருள் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைக்கொண்டு தலைப்பிடலாம். குரு அரவிந்தனின் புல்லுக்குிறைத்த நீர் சிறுகதையானது அங்கு கூறப்படும் பொருளை வைத்து உட்கருத்தை உள்ளடக்கித் தலையிடப்பட்டுள்ளது. நங்கூரி, பனிச்சறுக்கல் ஆகிய சிறுகதைகளின் தலைப்பானது கதையின் தொடக்கமாக அமைந்திருக்கின்றது. உறவுகள் தொடர்கதை என்ற கதை அக்கதையின் முடிவைத் தலைப்பாகக் கொண்டுள்ளது. ஆக, சிறுகதைகளுக்குப் பெயரிடுவதில் குரு அரவிந்தன் அவர்கள் தனது தனித்திறமையை நிலைநிறுத்தியுள்ளார்.

சிறுகதையின் தொடக்கம்

மேற்கூறப்பட்ட நான்கு சிறுகதைகளுக்குமே கதைப் பொருளுக்கும் கதைக்கருவிற்கும் ஏற்ற தொடக்கங்கள் அமைந்துள்ளன. கதாசிரியர் சிறுகதைகளின் ஆரம்பத்திலேயே வாசகரின் கவனத்தையும் ஆவலையும் தூண்டுவதாகவே கதைகளைப் புனைந்துள்ளார் .

கதைக்கருவும் கதைப் பின்னலும்

எந்தவொரு நிகழ்ச்சியின் மேல் சிறுகதை பின்னப்பட்டுள்ளதோ அந்த நிகழ்வு சிறுகதையின் கருவாகும். கரு கதையின் சிறப்புக்கு மூல காரணமாக அமைகின்றது. கருவில் திரு இல்லையேல் கதையிலும் வளமிருக்காது. சிறுகதை, ஆசிரியரின் அனுபவத்திலிருந்து முகிழ்கின்றது. ஆசிரியர் எங்கோ எப்போதே பார்த்த ஒரு நிகழ்ச்சி கேட்ட சம்பவம் அவருக்கு நேரிட்ட சில அனுபவங்கள் இவையே நினைவாகிச் சிறுகதையாகின்றன. வேறு வேறு காலங்களில் சம்பவங்கள் நிகழ்ந்திருந்தாலும் கதாசிரியர் கற்பனையுடன் கலந்து அவற்றைக் கோர்த்து விடுகிறார். இதுவே கதைப்பின்னலாகும்.

விகடனில் வெளிவந்த ‘புல்லுக்கு இறைத்த நீர்’ மனதைத் தொடும் கதை. கதைத் தலைவனாக தள்ளாத வயது ஆசிரியர் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறார். இவரின் வாழ்வின் நிகழ்காலத்திலிருந்து சம்பவங்கள் பின்னோக்கிப் பின்னப்பட்டிருக்கின்றன. தன்னிடம் கல்வி பயின்று சமுதாயப் பிறழ்வில் சிக்குண்ட மாணவனொருவனைச் ஏதேச்சையாக கதைத்தலைவன் சந்திக்கும் போது அவரிடம் ஏற்படும் உணர்வுகளின் ஆதங்கத்தை கதாசிரியர் நுட்பமாக விபரித்திருக்கின்றார். . பிள்ளைகள் தமது இலக்குகளை அடையாளம் காணும் போது பெற்றோர்கள் அதை ஏற்றுக் கொள்வதே முக்கியம். மாறாகத் தமது சொந்த இலக்குகளைப் பிள்ளை மீது திணித்ததால் அப்பிள்ளை எவ்வாறு சீரழிந்துள்ளான் என்பதனையும் ஆசிரியரும் தானும் அதற்கொரு காரணமாக இருக்குமோ என்று ஏங்குவதையும் கதாசிரியர் சமூகத்திற்கு இக்கதையின் வாயிலாக எடுத்தியம்புகின்றார்.

விகடன் தீபாவளி மலரில் வெளிவந்த ‘நங்கூரி’ என்ற கதையை எடுத்துக் கொண்டோமானால் இக்கதையானது 1983ம் ஆண்டு பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகளை மையமாகக் கொண்டதாகும். காடையர்களால் கற்பழிக்கப்பட்ட் பெண்ணும் அவளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் அவளில் பழிபோடும் கையாலாகாத கணவனும், அவர்களை ஆற்றுப்படுத்தும் பெண் ஆசிரியரும் நங்கூரி என்ற கப்பலில் அகதிகளோடு அகதிகளாகக் காங்கேசன்துறைக்குக் கொழும்பிலிருந்து இரண்டு நாட்கள் பயணிக்கிறார்கள். மனைவி காடையர்களால் கற்பழிக்கப்பட்டமை அருவருப்போடு நோக்கும் கணவன் மானங்கெட்டுவிட்டதாகத் தற்கொலைக்கு முயல்கின்றான். மனைவியம் கணவனின் சுடுசொற்கள் தாங்காமல் தற்கொலைக்கு முயல்வாள் என்று பீதியுற்ற பெண் ஆசிரியர் அவர்களை ஆற்றுப்படுத்தி அனைவரும் கரையைச் சென்றடைகின்றனர். நெருக்கீட்டிற்குப் பின்னரான மனவடுவால் கணவன் மனநோயாளியாகிவிடுகிறான். மனைவி தான் பட்ட அவலத்திலிருந்து மீண்டு வந்து முதியோர் இல்லத்தில் கடமையாற்றுகின்றாள். ஆசிரியரின் மகள் இனப் பிரச்சினையால் ஏற்பட்ட அவலங்களைக் கேள்வியுற்று விடுதலைப் போராளியாகி மாவீரராக மரணிக்கிறாள்.

கதை ஆரம்ப கட்டத்திலிருந்து முன்னோக்கிப் பின்னப்பட்டுள்ளது. கதாசிரியர் இங்கு பெண் கதாப்பாத்திரங்களை எந்தச் சவால்களையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் உயிர்ப்பான பாத்திரங்களாகச் சிருஷ்டித்துள்ளார் .ஆற்றுகைப்படுத்திய ஆசிரயர் தனது மகள் மரணிப்பிலும் பெருமை கொள்கிறாள் எனக் கூறுமவர் அப்பெண் பாத்திரத்தின் மன வலிமையை இறுக்கமாகச் சித்தரித்துள்ளார்.

பனிச்சறுக்கல் சிறுகதையில் சித்தரிக்கப்படும் பெண் பாத்திரம் தாய் நாட்டிலிருந்து புலம் பெயர் நாட்டுக்குத் திருமணமாகிச் செல்கிறாள். அங்குள்ள பண்பாட்டுச் சூழலுக்கு இசைவாக்கமடைய எண்ணி அருந்திய மென்பானத்தில் யாரோ கலந்து கொடுத்து மதுபானத்தால் அவள் தன்னிலை மறக்கக் கணவனல்லாத யாரோ ஒருவனால் பாலியல் பலாத்காரத்துக்கு இரையாகி கின்றாள். கதையின் உச்சம் அடுத்து அவள் என்ன செய்யப்போகிறாள் என்பதுதான். எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் மிகப் பொறுப்புணர்ச்சியுடன் இப் பாத்திரத்தைப் படைத்துள்ளார். செய்யாத குற்றத்திற்குத் தண்டனையாக ஒரு பாத்திரத்தை நசுக்க முடியாது. பாதிரத்தைப் படைப்பது பெரிதல்ல, அதில் எழுத்தாளரின் பரிவுணர்ச்சியும் இருக்க வேண்டும். அந்த வகையில் கதாசிரியர் அப் பெண் பாத்திரத்தின் உள்ளக்கிடக்கையை பனிச்சறுக்கல்களால் ஏற்படும் விபத்துக்கள் குடும்ப எதிர்காலத்தையும் பாதிக்கும் என்பதுடன் ஒப்பிட்டு அப்பாத்திரத்துக்கு புதிய வலிமையையும், நம்பிக்கையையும் அளித்து வாழ வைத்திருக்கிறார்.

அடுத்து உறவுகள் தொடர்கதை என்ற கதையை எடுத்துக் கொண்டால் தாய் நாட்டில் நிகழ்ந்த யுத்தத்தின் கோரப்பிடியிலிருந்து உயிர் பிழைக்க புலம்பெயர் நாட்டில் தஞ்சமடைந்த தனயன், தனியாக விட்டுச் சென்ற தாயைத் தேடும் படலமாகும். தனியாக இருந்த தாய் இடம்பெயர்ந்து எங்கு சென்றிருப்பாள்? அல்லது உயிருடன் இருக்கின்றாளா? என ஏங்கிய தனயன் யுத்தம் தளர்வடைந்த போது தாய் நாட்டிற்குத் தனது குடும்பத்துடன் புறப்படுகிறான். அவனுடைய அன்பு மகள் புலம்பெயர் நாட்டில் பிறந்திருந்தாலும் தாய் நாட்டின் மீது கொண்ட பற்றால் அங்கு கருணை இல்லத்திலுள்ள உறவுகளைத் தொலைத்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறாள். தனயன் எல்லா இடங்களிலும் தாயைத் தேடி இறுதியாகக் கருணை இல்லத்துக்கு வருகிறான். அங்கும் தாய் இல்லாமையால் ஆதங்கப்படுகிறான். ஆனால் அந்தக் கருணை இல்லத்தில்தான் தாய், எல்லாம் மறந்த நிலையில் இருந்தாலும் தனயனால் அடையாளம் காணப்படவில்லை. அவனது மகள் அடையாளம் காணுகிறாள். உறவுகள் தொடர்கதை, உணர்வுகள் சிறுகதை என்பது போல் தனயனின் தாய் பற்றிய உணர்வலைகளை எழுத்தாளர் எட்ட நின்று விபரித்தது போல் தோன்றுகிறது. தனயன் பாத்திரத்தின் உணர்வுகளை அவருடைய மனதினூடாகவும் காட்டியிருந்தால் கதை இன்னும் மிக நன்றாக இருந்திருக்கும்.

புலம்பெயர் நாட்டில் பிறந்த மதலையின் மனிதத்துவம் மெச்சத்தக்கது. இச் செயற்பாடு அங்கு பிறந்த ஏனைய குழந்தைகளுக்கு முன்னுதாரமாகும் என்பதை ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். மேற்கூறப்பட்ட கதைகளில் ஆசிரியர் கதைகளின் கருப்பொருளை விரித்துக் கூறி அவர் உணர்த்த விரும்பும் இலட்சியத்தை அக்கருப் பொருட்களினூடாக அதனின்று மாறுபடாமல் வெளிக்கொணர்ந்துள்ளார். வெவ்வேறு காலங்களில் நிகழ்ந்த சம்பவங்களைக் கோர்வையாக்கி ஒழுங்குபடுத்தி மையக்கருவுடன் பின்னிக் கதைகளை நகர்த்தியது மட்டுமல்லாமல் கதைகளை எங்கே உச்சம் தொட வைப்பது, எங்கே திடீரென்று ஆச்சரியத்தைப் புகுத்துவதென்று துல்லியமாகக் கணித்து வாசகர்களின் மனதைத் தொட்டுள்ளார்.

கதையின் கால அமைவு

நவீன உலகம் இயந்திரமாகிவிட்டது. இத்தகைய வாழ்க்கைச் சூழலில் ஆழ்ந்து படித்கது அனுபவிக்கக்கூடிய பொறுமை மக்களுக்கில்லை. கதைகள் படிப்பது பொழுதுபோக்கு என்ற நிலைமாறி அவர்கள் குறுகிய நேரத்தில் புதுமையைக் காணத்துடிக்கின்றனர். சிறுகதையில் காலம் – அக்கதையை வாசிக்க எவ்வளவு நேரம் தேவைப்படுகிறதென்பது மட்டுமல்ல அது அதிலமைந்த உட்பொருளைப் பொறுத்ததாகவும் கையாளும் விதத்தைப் பொறுத்ததாகவும் அமையும் . சிறுகதையின் காலம் கற்பனையாகவே கையாளப்படுவது ஆசிரியரின் திறமைக்குச் சான்றாகும்.

கதாசிரியர் இந்தவகையில் மேற்கூறப்பட்ட நான்கு கதைகளையும் வாசகர் குறைவாகவும் இல்லை, மிகையாகவும் இல்லை என்று கூறுமளவிற்கு தான் சொல்ல வந்த கதையின் கருப்பொருளை கலைக்காமல் காலத்தைக் கற்பனையாகக் கையாண்டு செம்மையாக அதிக நீட்சியில்லாமல் நிறைவு செய்திருக்கிறார்.

பாத்திர அமைப்பு

படைப்பில் முன்னிலை வகிப்பது பாத்திரங்களாகும். சிறுகதை என்பது சிறியகதை. ஆதலால் அதில் அவசியமற்ற பாத்திரங்களைப் படைக்க முடியாது. ஆசிரியர் பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்தே படைக்க வேண்டும். சிறுகதையில் குறைந்த எண்ணிக்கையிலான பாத்திரங்கள் அமைவதே சிறப்பு. படைப்பாளிகள் தங்கள் படைப்புக்களுக்காக அநேக விதமான மனித இயல்புகளையும் தெரிந்த வைத்திருக்க வேண்டும். குரு அரவிந்தன் அவர்கள் ஆய்வுக்காக எடுக்கப்பட்ட நான்கு கதைகளிலும் பாத்திரங்களை கச்சிதமாகக் கையாண்டுள்ளார்.

புல்லுக்கிறைத்த நீர் என்ற கதையில் ஆசிரியர், மாணவன் ஆகிய இரண்டு பாத்திரங்களும், நங்கூரியில், அக்கா, கணவன், மனைவி அவர்களின் மகன் மற்றும் அக்காவின் மகள் ஆகிய ஐந்து பாத்திரங்கள் படைக்கப்பட்டாலும் அக்கா என்ற பாத்திரத்தைத் தவிர மற்றைய பாத்திரங்களின் இயங்கு நிலைகளை மட்டுப்படுத்திக் கதையை திறம்பட நகர்த்தியுள்ளார். பனிச்சறுக்கல்கள் கதையில் கணவன், மனைவி பிரதான பாத்திரங்களாகக் காண்பிக்கப்பட்டு அதேநேரம் நண்பர்கள் பாத்திரங்களை தேவைக்கேற்ப கையாண்டு கதையை நிறைவு செய்திருக்கிறார். உறவுகள் தொடர்கதை என்ற கதையில் தாய், மகன், மனைவி இவர்களின் மகள் என்றவாறு நான்கு பாத்திரங்களுடன் கதையை நகர்த்தியுள்ளார். மேற்கூறப்பட்ட பாத்திரங்களுக்கு ஏற்ப அவர்களுக்குரிய குணச்சித்திரங்களையும் எடுத்துக் காட்டி ‘இந்த மனிதரை எங்கோ பாத்திருக்கிறோம்’ என்று வாசகர் சொல்லுமளவுக்கு பாத்திரங்களைச் சிருஷ்டித்துள்ளார்.

பாத்திரப் பேச்சு

ஒரு பாத்திரத்தின் பண்பை விளக்கிக்காட்டும் சிறந்த கருவிதான் பேச்சாகும். ஆசிரியர்கள் பாத்திரங்களின் தரத்துக்கு ஏற்ப பேச்சை அமைக்க வேண்டும். படிக்கின்றவர் இந்தப் பாத்திரம் இப்படித்தான் பேசும். இதைத் தவிர வேறு வகையாகப் பேச முடியாது என்று கருத வேண்டும். மேற்குறிப்பிட்ட நான்கு கதைகளிலும் பாத்திரப் பேச்சானது யாழ்ப்பாணப் பேச்சு வழக்காக இருந்த போதும் கதாசிரியர் இலக்கணம் சார்ந்த பேச்சு முறையே அதிகமாகக் கையாண்டுள்ளார். இந்த மொழிநடையைத் தமிழ் அறிஞர்கள் தாயகத் தமிழ்நடை, புலம்பெயர் தமிழ்நடை என வகைப்படுத்துகின்றனர். (சதிவிரதன், ப – 15 முனைவர் மனோன்மணி சண்முகதாஸ்). இது தற்காலத் தமிழ்மொழியின் வளர்ச்சி நிலையெனக் கருதப்படுகின்றது. வாசகர்களும் புரிந்து கொள்ளக்கூடிய இவரது இத்தகைய வகைப்பாட்டை ஊடகங்களும் பேணிவருகின்றன.

கதை கூறும் முறை

பெரும்பாலும் யார் மூலமாகக் கதை கூறப்படுகிறது? ஆசிரியனுக்கும் கூறுகிறவருக்குமுள்ள தொடர்பு என்ன? என்பதே கதை கூறும் முறையாகும். ஆசிரியர் கதை கூறும் போது தான் எங்கேயும் உரைதராமல் படர்க்கையில் நின்று கதை கூறுவது சிறந்த முறையாகும். பனிச்சறுக்கல்கள் கதையில் கதாசிரியர் இந்த முறையைக் கையாண்டுள்ளார். புல்லுக்கிறைத்த நீர் என்ற கதையில் கதாசிரியர் தான் ஆசிரியர் என்ற பாத்திரமாகவும், நங்கூரியில் தம்பி என்ற பாத்திரமாவும், உறவுகள் தொடர்கதையில் தனயன் என்ற பாத்திரமாகவும் நின்று கதைப்போக்கிற்கு உதவுகிறார்.

சிறுகதை முடிவு

ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட கதைகள் அதன் வளர்ச்சிக்கேற்ப நிறைவு செய்யப்பட்டுள்ளன. இப்படித்தான் முடியப்போகிறது என்று படிப்போர் தெரிந்து கொள்ளாத வகையிலும், முடிந்த பின்னர் சிந்தித்து இது தான் சரியான முடிவென்று அவர்கள் ஒப்புக் கொள்ளும் வகையிலும் கதைகளை ஆசிரியர் நிறைவு செய்துள்ளது சிறப்பானது. சிறுகதைகள் என்றால் எப்படி அமையவேண்டும் என்பதற்குக் குரு அரவிந்தனின் இந்தச் சிறுகதைகள் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றன.

முடிவுரை

புலம்பெயர் தமிழர் இலக்கியத்துக்கு குரு அரவிந்தனின் பங்களிப்பு இன்றியமையாதது. இவருடைய சிறுகதைகள் இவருடைய நேரான அனுபவத்தின் சித்திரிப்பாகத் திகழ்கின்றன. இவர் கதைகளில் கையாளும் கதைமாந்தர்கள் நமது அன்றாட வாழ்க்கையில் காணப்படுகிறார்கள். பெண்களின் பாத்திரச் சித்தரிப்பை மிகவும் கச்சிதமாகச் செய்திருக்கிறார் . ஆசிரியர் புலம்பெயர் நாட்டுச் சூழல்கள் கதைக் களங்களாகும் போது அங்கு சித்தரிக்கப்படும் பெண் பாத்திரங்களை முன்னேற்றச் சிந்தனையுள்ளவர்களாகப் படைத்தாலும், அவர்கள் மனிதவிழுமியங்களின் பெறுமானத்தை உணர்ந்தவர்களாக இருக்கவேண்டுமெனக் கூறாமல் கூறும் பண்பு நியாயிக்கத்தக்கது. 

‘நங்கூரி’ என்ற கதை தாயகத்தின் முக்கியமான வரலாற்று ஆவணமாக ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. ஆக, சிறுகதை ஆக்கம் என்பது பொறுப்புள்ள சமுதாயப் பணி என்ற கருத்தை முன்னிறுத்தி எழுதும் புகழ்பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் தமது கதைகளால் வாசகர்களுக்கு உணர்வலைகளை ஏற்படுத்தும் அதேசமயம் இதுபோன்ற இன்னும் பல புதிய யுக்திகளைப் புகுத்தினால் மேலும் சிறப்பாக அமையும் என்பதில் சந்தேகமேயில்லை. புலம்பெயர் நாட்டுத் தமிழர்களின் அடுத்த தலைமுறையினருக்கு இவருடைய படைப்புகள் ஓர் ஆவணமாக, தாயக வரலாற்றை எடுத்தியம்புவனவாகவும், இவரது ஆக்கங்கள் மேலும் புலம்பெயர் தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்தி முக்கிய பங்காற்றுவதில் துணை நிற்பனவாகவும் அமைந்திருக்கின்றன என்பதற்கு இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது.

உசாத்துணை நூல்கள் :

குரு அரவிந்தன் (2019 ), சதிவிரதன்.மணிமேகலைப் பிரசுரம்-சென்னை

Kurunovelstory.blogspot.com

கோகிலா மகேந்திரன் (2014) ,சிறுகதையென்பது. கலை இலக்கியக் கழக வெளியீடு.

மு.முருகேஷ் – குரு அரவிந்தனின் மனதைத் தொட்ட எழுத்தின் பக்கங்கள்.

………………

  •  

இன்குலாப் என்றொரு இதிகாசம்

-ரவி அல்லது .

          இயற்கையின் மீதான தன் ஆதுரங்களை அதன் அழகியலில் கவிதைகள் வடித்த வண்ணம் பெரும் முயற்சிகள் இங்கு எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறது. உணர்வுத் தெளிவில் உந்தும் கவிதைகள் வந்த படியே உள்ளது. இது ஒருபுறம் இருக்க. ஒரு கவிஞனின் கவிதைகள் அவன் கடந்து வந்த காலத்தின் பாடுகளை அதன் கூறுகளை பேசிக்கொண்டு இருக்கிறதென்றால் அந்தக் கவிஞன் இச்சமூகத்தின் பால் கொண்ட வாஞ்சையின் வெளிப்பாடு எத்தகையது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசியல் கவிதைகளை எழுதுவதில் உள்ள அனுகூலங்களைக் கடந்து அன்றாட சிக்கல்கள் சொல்லில் அடங்காதவை. இதற்கு கவிஞருடன் பயணிக்கும் குடும்பத்தார்கள் புறந்தள்ள முடியாத அவல சாட்சியாவார்கள்.

இவைகள் யாவையும் கடந்து அக்கவிஞன் சமூகம் குறித்து சிந்திக்கிராறென்றால் அவனுக்குள் கனலும் நெருப்பு கந்தகக் கவிதைகளாக கொப்பளிப்பதில் வியப்பொன்றுமில்லை. சென்னைப் பல்கலைக்கழகத்தில் அவர் கவிதைகள் பாடமாக வைக்கப்பட்டதும், எடுக்கப்பட்டதும் அவரின் கவிதைகளின் வீரியதற்கான சான்று.

அந்த வகையில் தமிழ் சூழல் பெற்ற அற்புதமான கவிஞர் இன்குலாப். அவரின் முழுக்கவிதைகள் திரட்டான ‘ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்.’ இன்றைய தலைமுறை வாசிக்க வேண்டிய கவிதைகள் தொகுப்பு.

இத்தொகுப்பின் முதல் கவிதையே அவர் யாரென்பதையும் எது குறித்து அவரின் அக்கரைத்தனம் இருக்கிறது என்பதை தெளிவுபடுத்திவிடுகிறார்.

*புதிதாக எதையும் எழுதவில்லை.*

புதிதாக எதையும் நான் எழுதி வரவில்லை,

என்றுதான் புதிதாக எழுதி முடித்தேன்.

எழுதியதெல்லாம்

மொழி பெயர்ப்பு தான்.

இளைஞர்களின் விழிகளில்

எரியும் சுடர்களையும்

போராடுவோரின்

நெற்றிச் சுழிப்புகளையும்

இதுவரை

கவிதையென்று

மொழி பெயர்த்திருக்கிறேன்

நியாயச் சூட்டால்

சிவந்த கண்கள் 

உரிமை கேட்டுத்

துடிக்கும் உதடுகள் 

கொடுமைகளுக்கு எதிராக 

உயரும் கைகள்-

எனது பேனாவை

இயக்கும் சக்திகள்.

இந்தக் கவிதையில் தான் யார் என்பதையும் தன்னால் இங்கு என்ன செய்ய முடியும் என்பதை தெளிவுபடுத்திவிடுகிறார். அடுத்து வரும் ‘அறைகூவல்’ கவிதையில் ‘உங்கள்- இதயத்துடிப்புகள் இந்தக் கண்ணாடியில் இன்று முகம் பார்த்துக்கொள்ளலாம். நீங்கள்- கற்றுத்தந்ததை நான்  கவிதையாக்கியுள்ளேன்.’ என்று இந்த சமூகம்தான் தன்னை இக்கவிதைக்குள் வெடித்து வீறு கொண்டு எழு வைக்கிறது என்பதை சொல்லிவிடுகிறார்.

இன்குலாப்பின் கவிதைகளில் உலக அரசியல், உள்ளூர் அரசியல்,பக்கத்து மாநில அரசியல் பார தூரமாகிப்போன ஈழ அரசியல் என எதையும் அவர் விட்டு வைக்கவில்லை.

பிரமீடுகளை பேசித்தீர்த்த கையோடு போர்ப்பந்தருக்குள் புகுந்தும் வருகிறது அவரது பேனா.

சீனாவின் தியான்மென் சதுக்க மாணவர்கள் மீதான துப்பாக்கி சூடு இன்றைய இளைஞர்களுக்கு எத்தனை பேர்களுக்கு தெரியும் என்பது எனக்குத் தெரியாது.’மறதியில் உலரும் உலகக் கனவுகளை ஈரப்படுத்த இப்போது கண்ணீர்’ என படிக்கும்போதே சட்டையைக் கிழித்து பீரங்கியின் முன் நின்ற அந்த இளைஞனின் புகைப்படம் கண் முன் வந்து போகிறது.

இயல்பாக எல்லாக் கவிதைகளையும் நாவல் போல படித்துச் செல்ல முடியாதபடி நிறுத்தி வைத்து பல இடங்களில் வார்த்தைகள் வதைத்துவிடுகிறது.

 ஆதிக்க சக்திகள் பாசிச கொடுமைகளை நிகழ்த்தும்பொழுது வர்க்க முரணை எதிர்த்து கிளர்ச்சிக்குள் ஆட்படுவது இயற்கையானது தான். சமூகப் பிரக்ஞையுள்ள கவிஞனைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை.’நீங்கள் என்னைக் கம்யூனிஸ்ட் ஆக்கினீர்கள்.’ என்று சிம்சன் போராட்டக்கலவரத்தை அவரின் நையாண்டியுடன் பேனாவின் முனையால் கீறிவிட்டும் செல்கிறார். நமக்குள் இரத்தம் சொட்டினால் நாமும் கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொள்ளலாம்.

வளர்ந்து விட்டதாக சொல்லித் திரியும்  இன்றைய நாளில் தான் ஆணவக் கொலைகள் கணக்கிலடங்காத படி நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.பள்ளிகளுக்குள் சாதிய பாகுபாடு டிஜிடலில் ஸ்டேட்டசாக ஜொலிக்கிறது.

நசுக்கப்பட்ட காலத்தில் துயரங்களில் வேதனை மோசமானது. அவரின் ‘நெருப்புக் கோலம்’கவிதையில் இப்படியாக வருகிறது.

தாயின் கர்ப்பத்தில் 

நாங்கள் சனித்தபோதோ

நீங்கள் பின்னிய

சாதிக்கயிறு

ஒரு

தொப்பூழ்க் கொடிக்கும் முந்தி

எங்கள் 

கழுத்தைச் சுற்றியது.

இன்று நாகரீகமாக வியாபித்துக்கிடக்கும் சாதியத்தை எப்படி வேரறுப்பது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. சுதந்திர போராட்ட தியாகிகள் சாதிகளின் பெயர்களில் கொண்டாடப்படுவது அவர்களின் தியாகத்தின் மேன்மைக்கு ஆகச்சிறந்த அவமானத்தின் உச்சம்.

குடி நீர்த் தொட்டியில் மலம் கலந்தது போல அரியலூருக்கு அருகே குளப்பாடி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வீட்டுக் குழந்தைகள் கிணற்றில் குளிக்க வந்தபோது மின்சாரம் பாய்ச்சி கொள்ளப்பட்டது குறித்து  மனுசங்கடா கவிதை பேசுகிறது.’அந்த பம்ப் செட்டை ரிப்பேர் செய்து விட்டார்களாம்.’

அப்பன் தோண்டுன கெணறு

அரசு மரத்துக்குப் பக்கத்திலே.

மாமன் தோண்டுன கெணறு

வளந்த தென்னைக்கு பக்கத்திலே.

தளும்புது தளும்புது தண்ணீரு.

தப்படிப்போம் வாடா பன்னீரு.

ஒடுக்கிப்பிழைத்த மனித இயந்திரம் அப்படியே மாறாமல் இருப்பதை ஒக்கிடப் போவது யார் என்பதுதான் இன்றுவரை தெரியவில்லை. அண்ணல் அம்பேத்காரும் அதன் பிறகு ஆயிரமாயிரம் தலைவர்கள் வந்தாலும் சாதியை நவீன வடிவமெடுக்க வைத்துவிடும் பாசிச கூட்டத்தை விரட்டுவது முடியாமல் இப்பொழுதும்  மூச்சுத் திணறுகிறது சமூகம்.

மும்மொழிக்கொள்கையில் முட்டி மோதிக்கொண்டு நிற்கும் இவ்வேளையில் நாகப்பட்டினம் திருமருகல் இளைஞர் ஒரு கவிதை அனுப்பி அதற்கு விமர்சனம் இன்குலாப் அவர்களிடம் கேட்டு இருக்கிறார். தன் சுயசிந்தகளுடைய ஒருவன் எங்கிருந்தாலும் பாராட்டப்பட வேண்டியவன் என்பதை கருத்தில் கொண்டு நீண்ட கவிதையொன்றை அதற்கு பதிலாக்கி இருக்கிறார். அது இன்றைக்கும் பொருந்துவது கவிஞன் காலம் கடந்தவன் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம். இளைஞனின் கவிதை,

மண்வெட்டி பிடிக்கும் 

திராணியைக் கூட

மனப் பாடக் கரையான்

தின்றுவிட்டது.

வாழ்க்கைக்கும் 

வகுப்பறைக்கும் இடையே

தொங்கும்  திரையைத்

துணிக்க வேண்டும்.

பாடமுறை

பழைய பிணங்களை

தோண்டி எடுத்து 

விசிறிக் கொண்டிருக்கிறது.

கவ்வாலிப் பாடகர், மாவோ, மார்க்ஸ்,குட்டி மணி,அண்ணல் அம்பேத்கர் , பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பாபர் மசூதி பற்றிய கவிதைகளென காலப் பெட்டகத்தை நம் முன் காட்சிப்படுத்திக்கொண்டே செல்லும்போதே திண்ணியம் வழக்கில் தீர்ப்பு சொல்லிய நீதிபதியை ‘ஐயா நீதிமானே’,என்று அவர் கருப்பு அங்கியையும்  உலுக்கிவிடுகிறார்.

நாம் கவிதைகளை கடந்து செல்லும் போதே ‘மனுசங்கடா நாங்க மனுசங்கடா.’, போன்ற பாடல்கள் நம் நரம்புகளை முறுக்கேற்றிவிடுகிறது.

ஈழத்திற்கான கவிதைகள் எத்தனையோ எழுதி இருந்தாலும் ‘முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்’ எழுதும்போது கவிஞர் கலங்கிக் தான் போயிருப்பார்.

அரசியல்,சமூக கவிதைகளுக்கு இடையில் பொதுத் தளக்கவிதைகளும் இருக்கத்தான் செய்கிறது.அதற்குள்ளும் சமூக அக்கரை தெரிவது அந்தக்கவிஞன் யாவும் சமூக விடுதலைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டதை காட்டுகிறது.

அந்த வகையில் 

எத்தனை வரைந்த போதும்

எப்பொழுதும் 

எனது

வண்ணக் கலவையில்

ஒரு துளி 

அமிலம்.

பொறுமையும் மௌனமும்

அடைகாக்கும் சூடு

உணர்த்தும்

உனக்கு 

ஒரு சிறகின் தீவிரிப்பு.

இந்த கவிதைத் தொகுப்பின் இணைப்பில் உள்ள பனிக்குடம் இதழுக்கு அளித்த செவ்வி என்று இன்குலாப் அவர்களின் ‘அழகியலுக்கான கோரிக்கையே.ஒரு போராட்டம்’ என்ற கட்டுரை, எழுதுகிறவர்களும் வாசிக்கின்றவர்களும் அவசியம் படிக்க வேண்டியது. அவரைப் பற்றி அறிந்து கொள்ளவும் மேலும் கவிஞனுக்கான பொறுப்புணர்வையும் அவர் அழகாக சொல்லி இருக்கிறார்.அதைப் படிக்கும் போது இன்குலாப் அறக்கட்டளையினரிடம் அனுமதி பெற்று அதையே தனிக் கட்டுரையாக்கும் ஆசைகள் மேலெழுந்த வண்ணம் உள்ளது.

கடந்து போன வருடமொன்றில் என் அலமாரிக்குள் வந்து தங்கிவிட்ட இந்தப் புத்தகத்தை மீள் வாசிப்பு செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். கால இயந்திரத்தில் பயணித்த அனுபவத்தை இத்தொகுப்பு நமக்கு கொடுத்தாலும் தொக்கி நிற்கும் அவலங்களை காலம்தான் சீர் செய்ய வேண்டும் என்ற பேரவா இயலாமையில் பொங்குகிறது என்பதென்னவோ உண்மைதான். இந்த கட்டுரையை தோழர் இன்குலாப் அவர்களின் ஒரு கவிதையைக் கொண்டே முடிக்கலாமென நினைக்கிறேன்.

மதங்கடந்த சொல்

அந்த பரவசத்தில் 

எல்லா முகத்திலும்

முத்தமிட்டது.

என் முகநூல் வரிகளை 

என் தோழர்கள்

ஒரு புன்முறுவலோடு கடந்து செல்லலாம்.

நேயர்கள் ஒரு கவிதை எழுதச் சொல்லலாம்.

விமர்சகர்கள் ஊடுருவிப் பார்க்கலாம்.

காதலி நட்பை மீண்டும் உறுதி செய்யத் தயங்கலாம்.

அதிகாரிகள் அடுத்த கட்ட நடவடிக்கைப் பற்றி யோசிக்கலாம்.

கடவுள் 

கடைசியாக முறையிட வந்துவிட்டானா என்று சந்தேகம் கொள்ளலாம்.

***

-ரவி அல்லது.

[email protected]

(‘ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்’ இன்குலாப் அறக்கட்டளை சார்பாக அன்னம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அன்னம் 1,நிர்மலா நகர், தஞ்சாவூர் -613007. தொடர்பு: 9443159371)

 ***

  •  

கம்பரின் ஏரெழுபது

முனைவர் ந.பாஸ்கரன்,

இணைப் பேராசிரியர்,

தமிழாய்வு துறை,

பெரியார் கலை கல்லூரி, கடலூர்-1. 

ஏரெழுபது 

கவிச்சக்கரவர்த்தி கம்பர் என்றாலே கம்பர் இயற்றிய கம்பராமாயணம் என்னும் நூல் தான் நினைவுக்கு வரும். ஆனால், கம்பர் தன் கவித் திறமையால் சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, திருக்கை வழக்கம், ஏர் எழுவது என்று பல நூல்களை இயற்றியுள்ளார். இவற்றுள் உழவர்களைப் பற்றியும் உழவுத்தொழிலைப் பற்றியும் மிக விரிவாகவும் அழகாகவும் எழுதியுள்ள ஏரெழுவது என்னும் நூலின் சிறப்புகளை இக்கட்டுரையில் காண்போம். 

ஏரெழுபது என்பது ஏரைப்பற்றி ஏர் கருவியைப் பயன்படுத்தும் உழவுத் தொழிலை பற்றியும் கூறுகின்ற எழுபது பாடல்களைக் கொண்ட கவிதைத்தொகுப்பு எனப்படுகிறது. உழவுத் தொழிலுக்கு முக்கிய கருவியாக உள்ள களப்பையைக் குறிப்பதாக ஏர் என்னும் சொல் உள்ளது.  வேளாளரையும் இது குறிக்கிறது. “சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் உழன்றும் உழவே தலை” என்னும் குறளுக்கேற்ப உழவுத் தொழில் சிறப்பைப்பல நிலைகளில் கம்பர் தொகுத்துள்ளார். ஏர்ப்பற்றிய கவிகள் தவிர பயிர் விளைவித்தலுக்குரியத் தொழில் முறைகளையும் விளக்குவதாக உள்ளது.  ஏரெழுவது  இயற்றுவதற்கு முன்பு இந்நூலுக்கு எந்த நூலும் முதல் நூலாக அமையவில்லை. ஏரெழுபதும் எந்நூலின் வழியும் தோன்றியதும் இல்லை. எனவே, முதல்நூல், வழிநூல், சார்பு நூல்  என்னும் மூன்று வகையான நூல்களில் ஏரெழுபதே முதல் நூலாக உள்ளது. ஒரு செய்தியை எரெழுபதுநூல் நயமாகவும் விளக்கமாகவும் கூறுகிறது. .எழுபது செய்யுள்களில் ஒரு கருத்தை விளங்குவதால் இந்நூல் வித்தாரகவி என்னும் சிறப்புக்குரியதாக உள்ளது.

உலகை படைக்கின்ற பிரம்மா, காக்கின்ற திருமால், அழித்துக் காக்கின்ற சிவபெருமான் என்னும் முக்கடவுளரையும் விட வேளாண் மக்களே உலகை காக்கின்றவர்களாக பசிப்பிணி யைப் போக்குகின்றவர்களாக இருக்கின்றார்கள். வேளாளர்கள் அந்தணர்களை விட பசிப்போக்குகின்ற பயிர் விளைவிக்கும் வேளாளரே சிறந்தவர். படைப்புக் கடவுளான பிரம்மா முதலில் வேளாளரையேப் படைத்துள்ளார் இவர்கள் தாய்ப்போல அனைவரையும் காப்பவராக இருந்துள்ளனர். எனவே, இவர்களுக்கு நிகராக வேறு எவரும் இல்லை என்பதே பெருமைக்குரியது.  உழவர்கள் உழவுத் தொழிலில் ஈடுபடும் ஒவ்வொரு நிகழ்வையும் விளக்கி விவரித்துப் போற்றுவதாக கம்பர் படைத்துள்ளார்.  வயலில் உழவுத்தொழிலை தொடங்குகின்ற நாள் ஒரு நல்ல நாளாக இருக்க வேண்டும் என்பதில் உழவர்கள் மிகவும் தெளிவாக இருந்துள்ளனர். நல்ல நாளையும் நல்ல நேரத்தையும் கணிக்கின்ற சோதிடர்களைக்கொண்டு நல்ல நாளைப் பார்த்துப் பொன்னேர்ப் பூட்டி உழவுத்தொல்லை நல்ல நாளில் தொடங்கியுள்ளனர். அரசரிடம் இருக்கின்ற யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை மற்றும் காலாட் படை என்னும் நான்கு வகை படைகளையும்விட சிறந்ததாக உழவுத் தொழிலை செய்யும் உழவர்ப்படை இருந்துள்ளது. வேளாளர்களின் ஏர்விழாவே உணவைத்தரும் திருநாளாகும்.  உழவர்கள் உணவை உழவுத் தொழிலில் உற்பத்தி செய்து தராவிட்டால் போர் வீரர்கள் போருக்குப் போகமாட்டார்கள். அந்தணர்கள் வேதம் ஓதுவதற்கும் போகமாட்டார்கள் என்று கம்பர் கூறுகிறார்.

 ஏர்க்கலப்பைப் படுக்க வைத்தததுப் போன்ற தோற்றத்தில் இருக்கும் தொழில்  கருவியாக உள்ளது. இதனைக் கம்பர் அலப்படை என்கிறார். அரசரின் போர்வாளுக்கு வேளாளரின் அலப்படைவாளே கூர்மையும் வலிமையும் தரக்கூடியதாக இருந்துள்ளது. உணவைத் தரும் விளைச்சலைத் தருவதாக உழவரின் அலப்படை என்னும் ஏர்க்கருவி இருந்துள்ளது. வேளாளரின் அலப்படை இல்லையேல் அரசரின் நான்கு வகைப் படையும் இல்லாத நிலையே  நடந்திருக்கும் அரசரின் வலிமையும் குறைந்திருக்கும். 

உழவுத் தொழிலுக்குப் புகழ்ப் பெற்ற ஒரு நாடு சோழநாடு. இதனைப் பொன்னிவளநாடு என்று கம்பர் கூறுகிறார். ‘சோழநாடு சோறு உடைத்து’ என்னும் பழமொழியே உழவர்களால் அந்நாட்டிற்கு வந்தது.  அலப்படையால் வடிவம் மட்டுமின்றி நிலத்தை அறுக்கும் தொழில் தன்மை உடையதாக உள்ளது. அதன் மூலம் விளைச்சலை உண்டாக்கியுள்ளனர். இதன் மூலம் பகைவரின் பகையை  அளித்துள்ளனர். ஏர்கலப்பையை ‘மேழி’ என்று கூறுவர். கலப்பை யின் கூர்முனை நிலத்தில் அழுந்தும்படியாக ஏர்க் கலப்பை மேல் கொண்டைபோல் ஒரு அமைப்பு இருக்கும். அந்த உறுப்பிற்கு மேழி என்று பெயர். அதனை அழுத்திப் பிடித்துக் கொண்டே உழவுத் தொழிலை மேற்கொள்வார்கள் .அப்படி மேழியைப் பிடிக்காமல் உழவர்களின்  கை வீணே இருந்து விட்டால் உழவுத் தொழில் நடைபெறாது. நாட்டிலும் உணவு வளம் சிறப்பாக இருந்திருக்காது.

  •  

இதற்குத்தானா?

    ஜெயானந்தன்

ஆண் மீது விழும் சாட்டையடி யாக, யமுனாவின் கேள்வி, 

ஒட்டு மொத்த ஆண் வர்க்கத்தின், 

காம சொருபத்தை காட்டும், ஒரு லேபிள். 

தி.ஜா.வும் இந்த லேபிளுக்குள் அடைப்பட்டவர் என ஏற்றுக்கொண்டுதான், இதை எழுதியிருக்க முடியும். ஒருவித, உடல் சார்ந்த எதிர்பார்ப்பு எப்பவும், தி.ஜா..எழுத்தில் வெளியே வர துடிக்கும் நப்பாசையின் உணர்ச்சிக்குரலகவே கேட்கின்றது .

ஆண் தேடும் பெண், கடைசியில் அடைவது பெண்ணைத்தானே. 

இதில், காமம் ஒருவித இலக்கிய நயத்தோடு நடந்து, ஒரே பெண்ணை அடைவது என்பதுதான் தி.ஜா.,வின் 

தார்மீக பொறுப்பாக முடிகின்றது. 

அதே நேரத்தில், பல ஆண்கள், பல பெண்கள் என்ற polygamy ஆட்டத்தையும் ஆடுகின்றார், இந்த இலக்கிய தாயக்கட்டை மன்னன். 

வாழ்க்கையை கட்டங்களில் அடுக்கி முறையாக வாழ்ந்த நாட்களில் பிறந்து, வளர்ந்த தி.ஜா.,விற்கு, டெல்லி வாழ்க்கையின் கலாச்சார சீரழிவும், சுதந்திரத்திற்கு பின், இந்திய உயர்மட்ட வாழ்வின் பித்தலாட்ட நாகரீக மோஸ்தரும் இவரது எண்ண ஓட்டத்தை புரட்டிப்போட்டதாக தெரிகின்றது. 

அலங்காரத்தம்மாள் ஒரு ஊறுகாய். 

ஒரு ஆண், ஒரு பெண்ணை அடைய, எடுத்துக்கொண்ட, வாழ்வின் பயணமாகவே மோகமுள்ளை நகர்த்தி செல்கின்றார். 

யமுனாவை, பெண் பார்க்க வருபவர்களை கேவலமாகவும், நையாண்டித்தனமாகவும், யமுனாவிடமே பேசி, பாபு தனது எண்ணத்தில் ஓடும் அவள் மீதான காதல் நதியின் அலையை, கர்நாடக சங்கீத மொழியில் சொல்வது, தி.ஜாவின் சிறப்பான பார்வை. 

அன்றைய தஞ்சை மராட்டிய ஆட்சிக்காலத்தில், பிராமண மிராசுதார்கள், நலிந்துப்போன, அழகில் கலைகளிலும் மிளிர்ந்த மராட்டிய பெண்களை இரண்டாம் தாரமாக வைத்துக்கொண்டு, குடும்பம் நடத்தியுள்ளனர். இது உண்மையான நடப்பியல்தான். அதே நேரத்தில், அந்த குடும்பத்தையும் கடைசிவரை காப்பாற்றியும் உள்ளனர். 

இந்த சரித்திர நிகழ்வை, ஒரு நாவலுக்குள் கொண்டுவந்து, அதனை கொச்சைப்படுத்தாமல், நாவலின் அழகியலை, சிதைத்து விடாமல், நாவல் சிற்பி கையாண்டவிதம், தஞ்சை கோயில்களில் காணப்படும் சிற்பங்களாக தெரிகின்றது. 

அதே நேரத்தில், அன்றைய கட்டுப்பெட்டியான, பிராமண கலாச்சாரத்தில் தேய்ந்த, பிராமண மனைவியானவள், தன் கணவனின் 

ஆசை நாயகி வேற்றின குலப்பெண் என்று தெரிந்தும் அவளையும் தன் குடும்ப உறுப்பினராக ஏற்றுக்கொள்கின்ற மானோ பாவம், 

திஜாவின், முற்போக்கு எண்ணத்தைக்காட்டுகின்றது. 

இவரது எழுத்தில் பிராமண- மராட்டிய கலாச்சார வாடை வீசுவது, அவர் வாழ்ந்த நாட்களின் குறியீடு. இது ஒரு இலக்கிய சான்றாகவும், தமிழ் இலக்கிய த்தில், பதிவாகியுள்ளது. 

– ஜெயானந்தன்

  •