Reading view

அங்கமாலி ஜோஸ்: தில்ருபாவில் கர்நாடக இசை

கச்சேரி தொடங்கிய சில நிமிடங்களுக்குள்ளாகவே என் முன்முடிவுகள் எல்லாம் தகர்ந்து விழுந்தன. இத்தனைக்கும் சிம்மேந்திரமத்யமத்தை அத்தனை ‘கர்நாடக’ ராகமென்று வகைப்படுத்த முடியாது. ஆரோகண/அவரோகண ஸ்வரங்களைப் பிரதானமாகக் கொண்டு வாசிக்கக்கூடிய ராகம்தான். இருப்பினும் ஜோஸ் வாசித்த ஆலாபனையின் ஒவ்வொரு பிடியிலும் கர்நாடகத்தன்மை தன்னிச்சையாய் சொட்டியது.
  •  

வேலியண்ட் – ஐரோப்பிய செவ்வியல் இசையின் புது தொடக்கம்

பல இந்திய வாத்தியங்களை தனது பாடல்களில் நல்ல முறையில் அறிமுகப்படுத்தியதோடு மட்டுமல்லாது அவற்றைக் கொண்டு தேவையான உணர்வுகளை ரசிகர்களிடையே உண்டாக்க முடியும் என உணர்ந்த ஒரு ஞானவான் அவர். அடுத்தடுத்த வரும் சிம்பொனிகளில் இப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என ரசிகர்களாக நமது வேண்டுகோளாக இருக்க வேண்டும். இந்திய இசைக்கும், இளைஞர்களிடையே செவ்வியல் இசைக்கலையில் எதிர்காலம் பற்றி அவை பல புதிய திறப்புகளை அளிக்க முடியும். அது மட்டுமல்லாது, ஐரோப்பிய இசை வடிவங்களுக்கு அவை நமது பெரும் கொடையாக இருக்க முடியும்.
  •  

இந்திய இசை – ஆனந்த குமாரசுவாமி

பாடலின் வரிகள் எந்தக்காலத்தில் எழுதப்பட்டவையாக இருந்தாலும் ஆசிரியரிடமிருந்து வாய்மொழியாக மாணவர்கள் கற்றுக்கொள்ளும் அந்த இசைக்கருக்கள் தொன்மையானவை. மற்ற கலைகளையும் வாழ்வையும் போலவே இசையிலும் இந்தியா ஓர் அற்புதமான காட்சி அனுபவத்தை, இன்னும் உயிர்ப்புடன் இருக்கும் தொல்பழங்காலத்தின் உணர்வுகளுடனும், மிகுஉற்பத்திச்செயல்பாடுகளில் மூழ்கியிருப்பவர்களும் போட்டியை அடிப்படையாகக்கொண்ட  சமூகஅடுக்குகளின் பொருளாதாரப் பாதுகாப்பின்மையால் அச்சமுற்றமவர்களுமான நமக்கு அரிதாகவே கிடைக்கக்கூடிய உணர்வுபூர்வமான அனுபவங்களின் வீச்சுடனும் வழங்குகிறது. 
  •  

உஸ்தாத் பிஸ்மில்லா கான்

பிஸ்மில்லா கான் தனது வாரணாசி வேர்களுடன் ஆழமான பிணைப்பை வைத்திருந்தார். அமெரிக்காவில் குடியேறுவதற்கான வாய்ப்புகள் உட்பட, வெளிநாடுகளில் தங்குவதற்கான பல அழைப்புகள் அவருக்குக் கிடைத்தன. ஆனால், அவர் எல்லாவற்றையும் மறுத்து, "கங்கை அமெரிக்காவில் பாய முடியுமா?" என்று கேட்டுப் பதிலளித்தார். இந்த வார்த்தைகள் அவரது பிறந்த இடம் மற்றும் புனித நகரமான வாரணாசியின் கலாச்சார பாரம்பரியத்திற்கான அவரின் நிலையான பக்தியை வெளிப்படுத்தின. எவ்வளவு உயர்ந்த புகழைப் பெற்றாலும், அவரது இசையின் ஆழமும், மனதின் நிலைத்தன்மையும் வாரணாசியோடு இணைந்தே இருந்தன.
  •