அம்மையின் கதை: தாமரைக்கண்ணன் புதுச்சேரி
வில்லாலடிக்கச் செருப்பாலுதைக்க வெகுண்டொருவன்
கல்லா லெறியப் பிரம்பாலடிக்க இக்காசினியில்
அல்லர் பொழில்தில்லை அம்பலவாணற்கொர் அன்னைபிதா
இல்லாத தாழ்வல்லவோ இங்ஙனே எளிதானதுவே
காளமேகம் பின்னாளில் வசை பாடும் முன்னரே அடியார் ஒருவரை தனது அன்னையாக வரித்துக்கொண்டார் சிவபெருமான். அண்டம் முழுதும் பிறப்பித்தவர் ஆயினும் தனக்கும் அம்மை ஒருத்தி வேண்டும் என்று தோன்றியிருக்கலாம். தன்னை தரிசிக்க கயிலை வந்த காரைக்காலம்மையை 'நம்மைப் பேணும் அம்மை காண் இவள்' என்று ஈசன் உமையிடம் சொல்வதாக பெரியபுராணம் உரைக்கிறது. உலகின் தந்தை, உலகன்னையிடம் இதோ வரும் இந்த பெண்மணி என் தாய் என்கிறார்.