நிகழ்வுகளை மாற்றி அமைப்பவன் : குமாரநந்தன்
May 04, 2025
அவர் அவனை ஆச்சரியமாகப் பார்த்தார். “நேத்து அப்படி எதுவும் இங்க நடந்த மாதிரி தெரியலையே” என்றார். வேறு யாரிடமாவது கேட்கலாமா என்று பார்த்தான். ஆனால், இதை ஏன் நான் தோண்டித் துருவி விசாரிக்க வேண்டும்? அப்படி எதையும் துருவித் துருவி ஆராய்ந்தால் நடந்ததற்கு மட்டுமல்ல நடக்காத விஷயங்களும் கூட நடந்திருக்கக் கூடும் என்பதைப் போல ஆதாரங்கள் கிடைக்க ஆரம்பிக்கும்.