Reading view

குழந்தைகளிடம் உரையாடுங்கள்


 குழந்தைகளிடம் உரையாடுங்கள்


1. அறிவிலிருந்து ஒழுங்கமைக்கப்பட்டு வெளிப்படுவது எழுத்து. ஆனால் மனதின் ஆழத்திலிருந்து உணர்வு நிலைகளை வெளிப்படுத்துவது உரையாடல்.


2. உரையாடல் ஒருவரை பற்றி புரிந்து கொள்வதற்கும் அவருடைய சிந்தனைகளை எண்ணங்களை உணர்ச்சிகளை அறிந்து கொள்வதற்கும் மிக முக்கியமான கருவி.


3. உரையாடும்போது அனைவருக்கும் சமமான முக்கியத்துவத்தை அளிக்கின்றது. 


4. எந்த வயதினராக இருந்தாலும் உரையாடல் அவர்களின் மனதை தொடுகிறது.


5. உரையாடல் வழியே கருத்து வேறுபாடுகளை அங்கீகரித்து மதித்து அதை சரியான திசைவழியில் மாற்ற முடியும்.


6. உரையாடல் ஒருவரை ஆற்றுப்படுத்துகிற அற்புதமான மருந்து.


7. குழந்தைகளிடம் உரையாடுங்கள். மனம் திறந்து உரையாடுங்கள். அவர்களுக்கு புரியுமா புரியாதா என்று யோசிக்காமல் உரையாடுங்கள்.


8. குழந்தைகளுக்கு உரையாட இடம் தாருங்கள். அவர்கள் பேசும்போது கவனமாக கேளுங்கள். குழந்தைகள் உரையாடும்போது அவர்களை தொட்டுப் பேசுங்கள். அது ஒரு நெருக்கமான உணர்வை குழந்தைகளிடம் தோற்றுவிக்கும்.  அவர்கள் உயரத்திற்கு உங்களை குறைத்துக் கொள்ளுங்கள்.


10.  குழந்தைகள் உரையாடும்போது இடையில் குறுக்கீடு செய்யாதீர்கள். அவர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை வர வேண்டும். அத்தகைய முகமொழியும் உடல் மொழியும் உங்களிடம் இருக்க வேண்டும். உங்களுடைய சரி தவறுகளை அவர்கள் மீது திணிக்காதீர்கள்.


11. நீங்கள் அப்படி உடனடியாக குறுக்கிடும்போது குழந்தைகள் தங்கள் உரையாடலை தணிக்கை செய்ய தொடங்கி விடுவார்கள் அல்லது எதை சொல்ல வேண்டும் எதை மறைக்க வேண்டும் என்று யோசிப்பார்கள்.


12. குழந்தைகளிடம் உரையாடும்போது எப்போதுமே அறிவுரைகளை சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள்.


13. குழந்தைகளிடம் உரையாடும்போது எப்போதுமே கல்வி சார்ந்த விஷயங்களை மட்டுமே பேசாதீர்கள்.


14. குழந்தைகள் குட்டி மனிதர்கள் என்பதால் அவர்கள் இந்த உலகத்தை எப்படி பார்க்கிறார்கள் எப்படி உள்வாங்குகிறார்கள் எப்படி புரிந்து கொள்கிறார்கள் எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்பதை எல்லாம் உரையாடும்போது நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.


15. குழந்தைகளுக்கும் உலக அனுபவம் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


16.  உலகம் பற்றிய உங்கள் கருத்துக்களை தீர்மானங்களை அற உரைகளை நன்னெறிகளை குழந்தைகளிடம் திணிக்க முயற்சிக்காதீர்கள்.


17. குழந்தைகள் முன்னால் நீங்கள் முன்மாதிரியாக நடந்து காட்டுங்கள் குழந்தைகள் கண்டிப்பாக புரிந்து கொள்வார்கள்.


18. குழந்தைகள் சொற்களை அல்ல. செயல்களையே உடனடியாக புரிந்து கொள்கிறார்கள்.


19. உரையாடும் போது குழந்தைகளின் மனநிலைக்கு ஏற்ப நீங்கள் உரையாட வேண்டும். அவர்கள் தவறான விஷயங்களை மதிப்பீடுகளை கொண்டிருந்தால் அதை அவர்கள் உணரும்படி கதைகள் வழியாக உரையாட வேண்டும்.


20. குழந்தைகளுக்குத் தேவை கைகாட்டிகளே. யாராலும் குழந்தைகளின் விரல் பிடித்து அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் அழைத்து ச் செல்ல முடியாது.


21. இந்த உலகைப் பற்றி நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டிருந்தால் மட்டுமே சரியான விஷயங்களை உரையாடும் போது குழந்தைகளுக்கு சொல்ல முடியும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.


22. குழந்தைகளிடம் உரையாடுவோம்.

  •  

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 1: அன்றே சொன்னார்கள் 41- இலக்குவனார் திருவள்ளுவன்


(வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 3/3 தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 1                                                                                                         சிந்துவெளி, மொகஞ்சதாரோ மூலம் அறியக்கிடக்கும் தமிழர் நாகரிகச் சிறப்பு நம் முன்னைத் தமிழர்களின் கட்டுமான அறிவியலுக்கு மிகச் சிறந்த சான்றாகும். அவற்றின் தொடர்ச்சியாக இன்றைக்கும் காட்சியளிக்கும் கோபுரங்கள், சிதலமாகிப்போன சுரங்கப் பாதைகள் முதலியனவும் முந்தைச் சிறப்பை நமக்கு விளக்குவனவாக இருக்கின்றன. மலையே இல்லாத தஞ்சாவூர் மாநகரில் பெரிய கோயில் மட்டுமல்ல  எண்ணற்ற கோயில்கள் சிறப்பாகக் கட்டப்பட்டுள்ளன. கரிகால(ன்)...

The post கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 1: அன்றே சொன்னார்கள் 41- இலக்குவனார் திருவள்ளுவன் appeared first on அகர முதல.

  •  

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 16 : பயன் கருதாமல் பிறர் துன்பம் துடைக்க உதவுவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்


சங்கப் புலவர்கள் பொன்னுரை – 16 பயன் கருதாமல் பிறர் துன்பம் துடைக்க உதவுவோம்! “எத்துணை ஆயினும் ஈத்தல் நன்று எனமறுமை நோக்கின்றோ அன்றேபிறர் வறுமை நோக்கின்று அவன் கை வண்மையே” திணை – பாடாண்துறை – பாணாற்றுப்படை; புலவராற்றுப்படையுமாம். வையாவிக்கோப் பெரும்பேகனைப் பரணர் பாடியது. “பாணன் சூடிய பசும்பொன் தாமரை” எனத் தொடங்கும் பாடலில் இடம் பெறும் வரிகள். பதவுரை: எத்துணை = எவ்வளவு, எத்தனை; ஈத்தல் = கொடுத்தல்; மறுமை = மறுபிறவி, மறுவுலகம் என்பர் பிறர். மறுபயன் என்கிறார் பேராசிரியர்...

The post சங்கப் புலவர்கள் பொன்னுரை – 16 : பயன் கருதாமல் பிறர் துன்பம் துடைக்க உதவுவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன் appeared first on அகர முதல.

  •  

வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 3/3: அன்றே சொன்னார்கள் 40 – இலக்குவனார் திருவள்ளுவன்


(வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 2/3 – தொடர்ச்சி) வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 3/3                2000 ஆண்டுகளுக்கு முன்பே அடுக்கடுக்கான பல மாடிவீடுகள் வரிசையாக அமைந்திருந்தமை குறித்து மேலும் சில விவரம் பார்ப்போம். மதுரை மாநகர் மாடிக்கட்டடங்களால் புகழ் பெற்றது என்பதைப் புலவர் மாங்குடி மருதனார் பல இடங்களில் விளக்குகிறார். மாடிக்கட்டடங்களால் சிறப்புமிகு புகழை உடைய நான்மாடக்கூடலாகிய மதுரை என,      மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல் (மதுரைக்காஞ்சி : 429)என்றும், முகில் உலாவும் மலைபோல உயர்ந்த மாடிக்கட்டடங்களோடு உடைய மதுரை என     மழையாடு மலையி னிவந்த மாடமொடு (மதுரைக்காஞ்சி...

The post வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 3/3: அன்றே சொன்னார்கள் 40 – இலக்குவனார் திருவள்ளுவன் appeared first on அகர முதல.

  •  

வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 2/3- அன்றே சொன்னார்கள் 39 : – இலக்குவனார் திருவள்ளுவன்


(வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 1/3  – தொடர்ச்சி) வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 2/3                        வானைத் தொடும் அளவிற்கு உள்ளதாகக் கருதும் வகையில் உயர்ந்த மாடிக் கட்டடங்கள் இருந்தன என்பதற்காக வான் தோய் மாடம் என்றும் விண்ணை நெருங்கும் அளவிற்கான உயரம் எனக் கருதும் அளவிற்கு மாடிகள் அமைந்த கட்டடங்கள் இருந்தன என்பதற்கு அடையாளமாக விண்தோய் மாடம் என்றும் சங்க இலக்கியங்களில் குறிக்கப் பெற்றுள்ளன. நகரம் என்பதே பல மாடிகள் உடைய வீடுகள் நிறைந்தது என்பதே வழக்கம் என்னும் அளவிற்கு நகரங்கள் இருந்தன....

The post வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 2/3- அன்றே சொன்னார்கள் 39 : – இலக்குவனார் திருவள்ளுவன் appeared first on அகர முதல.

  •  

வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 1/3 : அன்றே சொன்னார்கள்38  – இலக்குவனார்திருவள்ளுவன்


(காலணிகளைக் கவினுற அமைத்தனர் – தொடர்ச்சி)   வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 1/3                                                                                                                கட்டடக்கலையில் தமிழ் மக்கள் பிற துறைகளைப் போல் பிறரால் ஒப்பிட இயலா அளவிற்கு மிகவும் முன்னோடியாக உள்ளனர். விரிவான இப்பொருளில் வானளாவிய கட்டடங்கள் குறித்து முதலில் பார்ப்போம். 19ஆம் நூற்றாண்டு வரை வானுயர் கட்டடங்கள் (skyscrapers) என்பது நினைக்க இயலாத ஒன்றாக இருந்தது. அதன் பின்னர்தான் இட நெருக்கடியாலும் மக்கள் பெருக்கத்தாலும் இது குறித்த சிந்தனை  பிற நாட்டார்க்கு வந்துள்ளது....

The post வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 1/3 : அன்றே சொன்னார்கள்38  – இலக்குவனார்திருவள்ளுவன் appeared first on அகர முதல.

  •  

நான் – ஒரு போஹேமியன் பயணி;2 – காயத்ரி சுவாமிநாதன்

கதை சொல்லும் குடிகள்

எம்மில் கீழோர் மேலூர் இல்லை
ஏழைகள் யாரும் இல்லை
செல்வம் ஏறியோர் என்றும் இல்லை
வாழ்வினில் தாழ்வொன்றுமில்லை
என்றும் மாண்புடன் வாழ்வோமடா”

“எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஓர் தரம் என்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இது ஏற்றம் என்றும் சொல்லலாமோ?
சாதிப் பிரிவுகள் சொல்லி
அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.
நீதிப் பிரிவுகள் செய்வார்
அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார்.
சாதிக் கொடுமைகள் வேண்டாம்;
அன்பு தன்னில் செழித்திடும் வையம்;
சாதிக் கொடுமைகள் வேண்டாம்;
அன்பு தன்னில் செழித்திடும் வையம்;”

என்ற பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. என்னுடைய சிறிய வயதில் எனது தாத்தா-பாட்டி சாதி, மதம், மொழி என எந்தவொரு வேறுபாடும் இல்லாமல், “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்று பாடிய கனியன் பூங்குன்றனாரின் வரிகளைத்தான் எனக்குள் விதைத்தார்கள். இன்றும் இந்தப் பாடல் உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. நமது மீது அன்பு செலுத்த வெறும் குடும்ப நபர்களோ, உறவினர்களோ, நண்பர்களோ மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனது வாழ்வில் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் எனக்கு தூய்மையான அன்பைக் கொடுத்தவர்கள் நான் சொன்ன இந்தப் பட்டியலில் இல்லாதவர்கள்தான். எதிர்பார்ப்பு இல்லாத அன்பு சாத்தியம் என்றால் எனது வாழ்வில் அது நித்தமும் சாத்தியமாகிறது என்றே கூறலாம். அப்படி எனது தேசாந்திரி பயணத்தில் எத்தனையோ பேர் அவர்களில் ஒருவராக என்னை நினைத்து என்னிடமிருந்து அன்பை மட்டுமே எதிர்பார்த்தார்கள், பதிலுக்கு அவர்களும் அப்படியே இருந்து வருகிறார்கள். இந்த சமூகத்தில் மக்கள் எல்லோரும் அவசரகதியில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். எப்போதுமே யாருடனாவது போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர். இச்செயல்முறை காலப்போக்கில் பெரும் சீரழிவைக் கொண்டு வருவது உறுதி. எப்போதும் ஓர் அவசர நிலைப் போக்கிலேயே இருப்பது முடிவில்லா சுழற்சி வட்டத்துக்குள் நம்மைத் தள்ளிவிடும்.

எப்போதும் போல எனது ஆறுதல் மண்டலத்தை விட்டு ஒரு தேசாந்திரி பயணம்… ஆம்,”இருளர்களோடு ஒரு வாழ்க்கை”, இருளர் என்றாலே இந்த சமூகத்தில் மிகவும் ஏளனமாகத்தான் பார்க்கிறார்கள். ஆப்பிரிக்கா நாட்டில் சதுப்பு நிலங்களில் ஒருவகை கொக்கு இனங்கள் வசிக்கின்றன. இவை உடளவில் கருமை நிறத்தில் காட்சியளிக்கும். என்னுடைய சிறிய வயதில் நான் கலசப்பாக்கம் என்ற ஊரில் வசிக்கும்போது இருளர்கள் தெரு வீதியில் பாம்புகளைத் தனது தோளின் மீது போட்டுக் கொண்டு செல்வார்கள். ஒரு அழகிய மாலைப் பொழுதில் எனது நண்பர்கள் பத்மப்ரியா, ராஜவிக்னேஷ் ஆகியரோடு விளையாடிக் கொண்டிருக்கும்போது, எனது தாத்தா-பாட்டி என்னை அழைத்து நமது வீட்டிற்கு, “இருளர் பாம்புகளோடு வந்திருக்கிறார்” என்று கூப்பிட்டார்கள். எங்கள் வீட்டு வாசற்படியில் ஒரு பெரிய பாம்பை விட்டார் அந்த இருளர். பிறகு, நாங்கள் அந்த இருளரை வராண்டாவில் அமரவைத்து உணவு உபசரித்து அனுப்பினோம். அந்த இருளர் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் இருந்தார். அப்போதிருந்தே இருளர்களது வாழ்வியல் மீது ஒரு ஈர்ப்பு உண்டானது. அப்படி பல ஆண்டுகளுக்கு முன்பாக அமுதன் பச்சைமுத்து, தன்ராஜ், பாண்டு என்ற 3 நபர்கள் என்னை இருளர்கள் வாழும் ஒரு கிராமத்திற்கு அழைத்துச் சென்றார்கள். முதலில், நான் அக்கிராமம் ஏதோ பசுமையானதாக இருக்கும் என நினைத்தே சென்றேன். முட்கள் நிறைந்த அடர்ந்த காட்டுக்குள் சென்றுகொண்டே இருந்தோம். போகும் வழியில் தன்ராஜ் மற்றும் பாண்டு இருவரும் நான் பேசும் ஒவ்வொன்றிற்கும் கவிதை வடிவில் பதில் கூறிக்கொண்டே வந்தார்கள். எல்லோரும் பாட்டுப் பாடிக்கொண்டே சென்றோம்.

வாழ்வின் ரகசியங்களை அறிந்துகொண்டே இன்று வரையிலும் ஒரு தேசாந்திரியாக மட்டுமே சுற்றித் திரிகிறேன். முதலில், என்னைப் பார்த்தபடியே ஒரு பாட்டி அருகினில் வந்தார். அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களைப் பற்றி என்னிடம் பகிர்ந்து கொண்டிருந்தார். பிறகு, எனக்கு, “கங்கா” என்று ஒரு பெயர் வைத்தார். “கங்கா என்றால் என்ன?” என்று அந்தப் பாட்டியிடம் கேட்டேன். “கங்கா என்றால் கங்கா நதி, நீ ஒரு நதி” என்றார். பள்ளிக்கூட வாசலையே மிதித்ததில்லை, ஆனால், அந்தப் பாட்டிக்கு அப்படி ஒரு ஞானம். பிறகு காட்டுக்குள்ளே செல்லும்போது, ஒரு இருளர் செம்மரி ஆடுகளை மேய்த்துக் கொண்டபடியே சென்றார். உள்ளே செல்லச் செல்ல புதிதாக ஓர் உலகத்திற்கு நுழைவது போல் தோன்றியது. வெறும் ஓலைக்கீற்று கொட்டாய்தான் முழு வீடுமே. அதனுள் ஒரு அக்கா அழகான சின்ன சின்ன ஆட்டுக்குட்டிகளை வளர்த்து வருவதைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் ஒதுங்கி நின்றார். எனது கையை அவர் கைகளோடு இணைத்து கொண்டேன். அவரது மௌனமும், கண்ணீர்த்துளிகளும் மட்டுமே எனக்கு பதில் அளித்தன. அங்கு நடக்கவே முடியாதபடி சேரும் சகதியுமாக இருந்தது. மிக அருகிலேயே ஒரு ஓடையும் ஓடிக் கொண்டிருந்தது. அந்த இடத்திலும் தத்தித் தத்தி தாவிக் கொண்டே பாட்டுப் பாடிச் சென்றேன். பின்பு, ஒரு பெரிய மீசை வைத்த தாத்தா, (ஊரிலே பெரியவர்) எங்கள் நான்கு பேரையும் வரவேற்றார். அங்கிருக்கும் வயல்வெளிகளை எல்லாம் சுற்றிக் காண்பித்துக் கொண்டிருந்தார். பிறகு, என்னை முழுவதுமாக யாரோ  பின்னிருந்து அணைத்துக் கொண்டது போல் உணர்ந்தேன். யாரென்று பார்த்தால் இரண்டு சின்ன பெண் பூக்கள்(குழந்தைகள்). ஒருமுறை எழுத்தாளர் பிரபஞ்சன் என்னிடம் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது, “எவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது?” என்று. பிறகு, கவிஞர் மனுஷ்யபுத்திரனின் ஒரு கவிதை. “என்னைச்சுற்றி பூக்கள் மலராவிட்டால் என்ன? பூக்கள் பூக்கும் இடத்திற்கு நான் சென்றிடுவேன்”. ஏனென்றால்,அந்த இரண்டு குழந்தைகளும் எனது விரல்களைப் பிடித்த ஆரம்பத்திலிருந்து, நான் அங்கே விடைபெற்றுப்போகும் வரையிலும் என்னை விடவேயில்லை. முகத்தில் அவ்வளவு நாணம்(வெட்கம்). “இருளர்கள் என்று ஏன் அழைக்கிறார்கள்?” என்பது என்னுள் விடையில்லா வினாவாகவே இருந்து வந்தது. இருளர்கள் தமிழ்நாட்டின் முக்கிய பழங்குடியினர் சமூகமாகும். இவர்கள் பாரம்பரியமாக காடு மற்றும் இயற்கை வளங்களின் மீது நம்பிக்கை வைத்து வேட்டையாடுதல், மூலிகை சேகரித்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து நான் நேரடியாக அந்தக் காட்டினுள் செல்லச் செல்ல நிறைய விஷயங்கள் புரிய ஆரம்பித்தது. அடர்ந்த இருட்டான காடுகளில் வாழ்ந்து வருவதால் இவர்களை, ‘இருளர்கள்’ என்று அழைக்கின்றனர். நான் சந்தித்த அந்த இரண்டு பெண் சிறுமிகளும் என்னிடம், எங்கள் ஊரில் இருப்பவர்களை, ‘காவல்காரன்’, ‘பாம்புக்காரன்’, ‘வேடவர்’, ‘வேடுவர்’, ‘வில்லி’, ‘காட்டுக்காரன்’ என்று தான் அழைப்பார்கள் என கூறினர். பிறகு, அக்கா ரொம்ப தூரம் நடந்து வந்திருக்காங்க போல,வா அக்கா போலாம்” என்று கைப்பிடித்தபடியே அவர்கள் வசிக்கும் ஓர் சின்னஞ்சிறிய ஓலைக் குடிசைக்கு என்னை அழைத்துச் சென்று இளநீர் கொடுத்தனர். “எங்களுக்கு இதுதான் அக்கா சொர்க்கம்” என்று கூறினர். வரிவடிவமே இல்லாத அவர்களின் மொழி பேரழகு. “ஏன், இவர்களின் பேச்சு வித்தியாசமாக உள்ளது?” என்று கேட்டேன். “ஏரவல்லம், எருக்கா, இரவா, இருளிக்கா, கோரவா” என்ற பெயர்கள் இவர்கள் பேசும் மொழி எனக் கூறினர். இந்த மனிதர்கள் எல்லோரும் எனக்கு மிக தனித்துவமாகவே தெரிந்தார்கள். இச்சமூகத்தில் இருப்பவர்களுக்கு இவர்களின் பண்பாட்டையே புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். காட்டில் வாழ்கிறார்கள் என்பதற்காகவே இவர்களுக்கு நாகரிகம் தெரியாதவர்கள் என்ற பொதுப்புத்தி எவ்வளவு பொய்யாக இருக்கிறது என்பதை நான் நேரடியாக உணர்ந்துகொண்டேன். பிறகு, நானும் அவர்களோடு ஒன்றாகிவிட்டேன். தொடர்ந்து “கதைகள், நாட்டுப்புறப் பாடல்கள், விடுகதைகள், பழமொழி” போன்ற விஷயங்கள் எல்லாம் நடந்தேறின. வெளியுலக மனிதர்களைக் காட்டிலும், இவர்களிடம் உள்ள பாலின சமத்துவம் வியக்க வைத்தது. அங்கே சில குழந்தைகள் கொம்பாட்டம், குச்சியாட்டம் போன்ற நடனங்கள் ஆடிக் கொண்டிருந்தனர். அவர்களோடு இணைந்து நானும் ஆடி மகிழ்ந்தேன்.

பிறகு, மீண்டும் ஒருநாள் இருளர்களைப் பார்க்க வேறு கிராமத்திற்குச் சென்றேன். சுமார் 500க்கும் மேற்பட்ட பட்டியலின மக்களும், பழங்குடியினரைச் சேர்ந்த இருளர் மக்களும் அதிகமாக வசித்து வருவதை நேரடியாகக் காண முடிந்தது. தோட்டத்தொழில் செய்யும் இருளர்கள் அங்கே பெருவாரியாக பாதிக்கப்பட்டுள்ளனர். எண்ணெய் படாத தலை முடி, சுத்தத்தை மறந்த துணிகள் என்று மிகவும் வறிய கோலத்தில் இருந்தனர். ஆனால், அவர்கள் எல்லோரும் மிகவும் மன மகிழ்வோடு மட்டுமே இருந்தார்கள் .இங்கே வாழும் இருளர் சமூகத்தினர் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். மருத்துவ வசதிகளின் குறைபாடு மற்றும் போதிய சுகாதார விழிப்புணர்வு இல்லாததால்,நோய் பரவல் மற்றும் சுகாதாரச் சிக்கல்கள் அதிகரிக்கின்றன. பணம், அதிகாரம், கவன ஈர்ப்பு, வெற்றி போன்ற நவீன வாழ்க்கை நம்முடைய உண்மையான இயல்பிலிருந்து நம்மை மேலும் மேலும் அநியாயப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அதனால் நாம் அர்த்தமற்ற வெறுமையான வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நான் சென்ற நிறைய இருளர்‌ கிராமங்களில் இன்னும் சமூக முன்னேற்றத்திற்கான திட்டங்கள் மற்றும் ஆதரவின் பற்றாக்குறையால் சமூக முன்னேற்றம் மந்தமாக உள்ளது என்பதை என்னால் உணர முடிந்தது. இந்த சிக்கல்களைச் சமாளிக்க, அரசாங்கம் மற்றும் சமூக அமைப்புகள் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

தொடரும்…

[email protected]

The post நான் – ஒரு போஹேமியன் பயணி;2 – காயத்ரி சுவாமிநாதன் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

  •  

முதிரா இரவு – சுருளி காந்திதுரை

காலையில அஞ்சு மணிக்கு டான்னு எந்திரிச்சு… உடல் உபாதையை முடிச்சுட்டு… செம்புல தண்ணிய மோந்து குடிச்சிட்டு பெத்த பெருமாள் நடக்க ஆரம்பித்தார். ஒரு பொட்டை நாயிக்குப் பின்னே ஆறு ஏழு ஆண் நாய்கள். மெல்லக் கடந்து போனார். இப்படித்தான் காலையில பத்து நாப்பது பேருக்கு மேல் இருக்கும். நடந்தார்கள். வயது, வயிறு, உடைகள், மேக்கப்பு… பேச்சுத் தோரணை… இதில சுமார் இருபதுக்கு மேல, பட்டதாரிகள். மத்திய மாநில அரசிடம் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்கள்… அதில் பென்ஷன் பெறுபவர்கள் பெரும்பான்மையானோர்.

சாப்பாட்டுக்கு மொத்தமா பேசிக் காசக் கொடுத்துட்டா, இப்ப சாப்பாட்டுப் பிரச்சனையில்லன்னு மனஆறுதல் இவர்களுக்கு.

கால, மால இருவேளையும் நடக்க வேண்டியது. பேச்சு ஊர்ப் பேச்சு. உலகப் பேச்சு… சரியா ஏழரைக்கு வீட்டுக்குப் போயிக் குளிச்சிட்டுச் சாப்பிட வேண்டியது; பேப்பர மேய, பிறகு தொலைக்காட்சி சேனல மாத்தி மாத்தி ரிமோட் பட்டன் தேய்ஞ்சு போயிருச்சு. ஏதாவது போடுறாங்களான்னு தோணும். என்ன செய்ய வர்றதுதான் டிவியில வரும்.

வெளியில இருந்து பாக்கிறவுகளுக்கு, ஊர் உலகத்துக்கு பெருசுகளுக்கு என்ன கவல? பிள்ளைக நல்லா வைச்சுக்கிறாங்கன்னு பேச்சு.

மக்கமாரு, ராஜா மாதிரி வச்சுருக்காங்கன்னு போற வர்ற மக்க மனுசார் பேசுவாங்க. உறவுகளும் அப்படித்தான் நெனைக்கும்.

ஆனா, வீட்ல பெத்தப்பெருமாள் மாதிரியா இருக்கிற பெருசுகளுக்குத்தான் தெரியும். ஒரு நா என்பது ஒரு யுகம் மாதிரி போகும். மகன், மகள்… வீட்ல இருக்கிற பொருள பாதுகாக்கத் ‘திருடனுக்குப் பயந்து அப்பாவ முழுநேர வீட்டு வாட்ச்மேனா அப்பாயின்மெண்ட் பண்ணியிருக்காங்கன்னு…?’ வெளிய சொல்ல முடியுமா?”

தொனைக்கி நாயி வேற. அத வேற மேய்க்கனும். பெத்த பெருமாள் ரோட்ல படுத்திருக்கிற நாயிக்கு இருக்குற சுதந்திரம் நமக்குயில்ல?ன்னு முனங்கினார் பல நேரம்.

யோவ், பெத்த பெருமாள்… என்ன பலத்த யோசனை. உனக்கு எப்படி அப்படித்தான் இங்க இருக்கிற எல்லாத்துக்கும்… நாங்களும் அப்படித்தான் இருக்கோம்னு புரியணும்.

வா… வா… நம்ம எல்லார் கதையும் ‘ஒரே மாவுலச் சுட்ட இட்லி’ போலத்தான்னு புலவர் சந்தானம் சொல்லவும் எல்லோரும் தன்னை மறந்து சிரித்தார்கள்.

நடையில வேகமில்ல. கால்கள் மட்டுமல்ல மனங்களும் தளர்ந்து போயிருந்தன.

அறுபத்தைக்கும், எண்பதுக்கும் இடைப்பட்டவர்கள். ‘நம்ம ஒண்ணாத்தான் இருக்கம். இடையே நம்ம பிள்ளைக உலகம் வேறு, பாவம் அம்மாக்கள். நமக்கு என்ன கவல? ராஜேந்திரன் சொல்லுயா’ன்னு அய்யனாரைக் கேட்க.

‘பகவான் இருக்கும்போது எனக்கு என்ன கவல?’

‘போயிம் போயிம் அய்யனார்ட்டக் கேட்டா. அப்படித்தான் சொல்லுவார்!’ ஒரே சிரிப்பொலி….. எதிரொலித்தது.

***

பலத்த ஹாரன் சத்தத்துடன் சென்னையில இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் கூடல்நகர் ஜங்சனைக் கடந்து அதேவேகத்தில் நிக்காம போனது. பிள்ளைகளில் ஆண், பெண் இருவருமே ஒரே மனநிலையில் இருப்பதைப்போல ரெண்டு பக்கமும் பிளாட்பாரம் மிக அருமையா மேடு பள்ளமில்லாம சமதளமாக இருந்தது.

இங்க வாக்கிங் போகும் ஆட்களின் நடமாட்டம் அதிகம். இதில் பெண்களை விட ஆண்கள் அதிகம். மாலைநேரம் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. நாகமலைக்கு மேலே மஞ்சள் வெயில் மறையத் தொடங்கியிருந்தது. மழை பெய்வதற்கானச் சாத்தியக்கூறு, இதமான தென்றல் காத்து வீசியது. ஜங்சன் பாதையில் இருபக்கமும் வேப்பமரக் குளுமை. நேத்துச் சாயங்காலம் நல்ல மழை. மண் மனமும், தென்றல் காத்தும், கனமான இதயங்களை இயல்பு நிலைக்கு கொண்டு போனது. எல்லோரையும் ஆரத்தழுவி ஆனந்தமாக்கியது.

என்ன? இவுங்கள இளைஞர்கள்ன்னு சொல்லுறேன்னு நினைக்க வேணாம். ‘இளமை திரும்புகிறது.’ அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள், நகைகள், கடிகாரங்கள், செல்போன்கள், கேன்வாஸ்… எல்லாமே நல்ல வசதிக்கான அடையாளம். வாழும் காலத்தில் பல்ல கடிச்சுக்கிட்டு சுகத் துக்கங்களை மறைத்து, மறந்து பிள்ளைகளே உலகமுன்னு வாழ்ந்தவர்கள்.

பிள்ளைகள நல்லபடியா கரையேற்றிவிட்டாங்க. ஆனா பெத்தவங்க ‘தனிமைக் குளத்தில்’ தவிக்கிறார்கள். வீட்ல தனிமை? மெல்ல மெல்ல மனித நடமாட்டத்தை நாடி நடக்க வந்துவிடுகிறார்கள்.

ஜங்சன் இருக்கு. ஆனால், ரயில்கள் நின்னு போகல. அப்படித்தான் இவர்களின் வாழ்க்கையும். எல்லாமே இருக்கு. எதுவுமே இல்ல?

ஆஸ்தி, அந்தஸ்து, காசு, பணம், நகை நட்டு, காரு, பங்களா, வேலைக்கு ஆட்கள், காவலுக்கு ரெண்டு நாய் இவ்வளவும் இருந்தும், என்ன பயன்?

எல்லோருக்கும் எல்லாம் இருக்கு. பிள்ளைகளின் வாழ்க்கை முறை வேறு, இவர்களின் உலகம் இலையுதிர் காலத்து மரம் போல… எல்லாருக்கும் மனைவி, மகன்கள், மகள்கள், மருமகன்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள்… என ‘உறவுகள்’ இருக்கிறார்கள். ‘கோலார் தங்கச் சுரங்கம் போல.’ ஆனால், மனிதனின் வாழ்க்கை பலத்த காற்றில் ‘குருவியின் கூடு பறந்து போனதைத் தேடும் குருவி போல…’ உறவுகளைத் தேடுகிறார்கள். இன்னும் தொலைத்த இன்பங்களைத் தேடியே… யாருக்காக வாழ்றோம்னு எதுவும் தெரியாது… இளைப்பாறுதல் இல்லா மனநிலையில்…? முதியோர்களின் பயணம்…

என்ன இருதயராஜ்… இந்த ஆண்டு ஜுன் மாசம் காவிரியில இருந்து தண்ணி வருமா? ஏன்ட்ட ஏன் கேட்குறீங்க…

நீ தானே பி.டபிள்யூ.டி. இஞ்சினியர்…

சும்மா இருக்க மாட்டீங்க புலவரே?

அவுக என்னைக்கி நமக்குத் தண்ணி கொடுத்தாங்க…

கேரளாவும், கர்நாடகாவும்… நல்ல பாம்பு அது; விரியன் பாம்பு இவுக.

நமக்கு பெரியாறிலிருந்து கம்பம் பள்ளத்தாக்குக்கும் காவேரில இருந்து தஞ்சை டெல்டாப் பகுதிக்குத் தேவைப்படும்போது தண்ணியத் தர மாட்டாங்கா? ஆனா, அங்க மழை பெய்யட்டும்…! மழை ச்சக்கப்போடு போடட்டும்…! அய்யோ “டேமப் பாதுகாக்கிறோம்ன்னு” “டேம் உடைகிற” மாதிரியா வரும்போது சத்தமில்லாம போன் பண்ணிட்டுத் தண்ணிய திறக்கிறோம்னு சொல்லுவாங்க. ஆனால், தண்ணியத் தொரந்துட்டுதான் போன் பண்ணுவாங்க.

புலவரே, ஆனா, பட்டம் தப்பி விடுற தண்ணி நமக்கு விவசாயத்துக்குப் பயன்படாது. நேராக் கடலுக்குத்தான் போகும். இங்க ரெண்டு பக்கமும் அதே நிலமதான்.

என்ன இஞ்சினியர் சார். நம்ம, “ஆம்பளப் பிள்ளையும், பொம்பளப் பிள்ளையும்… கேரளாவும் கர்நாடகாவும் ஒன்னுதான்னு சொல்லுங்க?

எத எதுலக் கொண்டாந்து பொருத்துறீங்க.

என்ன வம்புள மாட்டி விடுறீக. இதயராஜ் சொல்லவும்,

பெத்த பெருமாள், புலவர் சொல்லுறது சரிதான். ரெண்டு பிள்ளையும் அப்படித்தான் இருக்காங்க. அவுக நிலை. இது நம்ம நிலைமை. கால்கள் நடந்தன. மனங்கள் இறுகிப்போனது. நடந்தார்கள் நீண்டநேரம். மௌனத்தை உடைத்தார் அய்யனார். நான் மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போறேன் நாளைக்கி. யாராவது வர்றிங்களா?

யோவ், எப்பப்பாரு கோயில் கோயில்…

அய்யனார் போயிட்டு வாங்க. கடவுள்ட்ட எங்கள காப்பத்த வேண்டான்னு வேண்டிக்கங்க! மாணிக்கம்.. நம்ம விதியை நொந்துக்கறாத விட்டு; அய்யனார் நீங்கப் போயிட்டு வாங்கன்ன… முடித்தார்.

என்ன எல்லாப் பிள்ளைகளுக்கும், அம்மாவைப்பி டிக்கிது. அடப்போங்கப்பா! அம்மா அடுப்படி வேலைக்குப் பிள்ள தூக்கும். அவுகளுக்குப் பிள்ள வளர்ற வரைக்கும் மகனும் மகளும் அம்மாவத் தாங்குறாங்க. இல்ல அம்மான்னு பாசத்திலத் தொங்குறாங்க.

இது தெரியாத அம்மாக்க, பிள்ளைகதான் பெருசுன்னு புருஷன விட்டுட்டுப் போய் மக வீட்ல மகன் வீட்ல இருந்துக்கிறாக. புரியும்போது அம்மாக்கள் புலம்புவாங்க.

பிள்ளைக திருமணம் முடிச்சாப் பத்தாநாள் தனிக்குடித்தனம்.

பாம்பு தன்னுடைய தோலக் கழட்டுற மாதிரி… தானா விலகிறவுகளும் இருக்காங்க. “முதுமை கஷ்டமாயிருக்கு எல்லாத்துக்கும்.”

பொஞ்சாதியின் துணையில இருந்துட்டு, இருந்த கணவன்களைத் திடீர்னு பொஞ்சாதி விட்டுட்டுப் போனாப் பலர் பித்துப்பிடித்துப் போய் டென்சன், பிரசர், எமோசன், சுகர்ன்னு மனநோயாளியாகவும் கணவன்மார்கள் போயிர்றாங்க. அத மறந்து பேச்சில காலத்தக் கடத்துவதாகவே வாக்கிங் கூட்டதில் சேர்வதும் அங்கப் பெரும் பேச்சு. நோயும், மாத்திரையும் டாக்டருமாத்தான் இருக்கு. ‘மருந்து’ நோய்க்கு மருந்தா? இல்ல மனசுக்கா?… மாத்திரைக்கும் டக்டருக்கும் வெளிச்சம்.

எல்லார்ட்டையும் புன்னகையோடு பேசினாலும்… சிரிப்ப வில கொடுத்து வாங்குவாங்கன்னு சொல்லுறது மாதிரிதான் இருப்பாங்க. “அவுககிட்டக் காசு இருக்கு. சிரிப்பு வாங்குவாங்க.. ஆனா, சிரிப்பு வரணுமே..

மதுரை திண்டுக்கல் பேசஞ்சர் ரயில் மெதுவாகக் கூடல்நகர்ல நின்னுபோனது.

மாதா கோயில் மணி அடித்தது. நேரம் சரியாக ஆறுமணி. “எல்லோரும் சுகமாக இருக்க கர்த்தருக்கு தோத்திரம்… உன் ஆயுசு நாட்களைப் பூரணப்படுத்துவேன். (யாத்தி.23-26). ஆமேன்… ஆமேன்…

பேசஞ்சர் ரயில் மெல்ல தன் ஹாரன் ஒலியை எழுப்பியது. மூன்றாவது ஹாரன் ஒலி எழுப்பய உடனே கிளம்ப சிக்னல் கிடைச்சுருக்குப் புறப்பட ஆரம்பித்தது… மீண்டும் ஹாரன் சத்தம்…ஸ்ஸ்… டைசக்கு டைசக்கு டைசக்கு ரயில் புறப்பட்டுவிட்டது.

அய்யனார் சார், என்னய்யா, மணி ஆறாச்சு இன்னும் கிளம்பள. நாங்க இப்பதான் பேச ஆரம்பிச்சிருக்கேம். அய்யா, கதிரவன் நீங்க போயிட்டு வாங்க.

பழைய பி.ஆர்.சி.யில செக்கார இருந்தவர் பெத்த பெருமாள்.

சுந்தரம், வீட்ல இருந்து எத்தன வாட்டி கடிகாரத்தையும் செவுத்தையும் பார்க்கிறது.

எவ்வளவு நேரம் பகல்லப் படுத்துக் கிடக்கிறது. உங்களுக்கு… என்ன?

ஜங்சனை விட்டுக் கிளம்பவே மணி ஏழரையாகும்.

நான், என்னங்க சார் கொசு கடிக்காதான்னு கேட்டேன்.

அமூட்டுதான் குறுக்கிட்ட சக்திவேல் சார்.

பேரப்பிள்ளைக தராத முத்தத்தக் கொசுவாவது கொடுக்கட்டும்னு சொல்லவும். எல்லோரும் கொல்லுன்னு சிரிக்க எனக்கு ஏன்டாக் கேட்டோம்ன்னுப் போச்சு.

டியூப்லைட் வெளிச்சம் இரவைப் பகலாக்கியது. கருக் கொண்ட மேகம் இவர்கள் மனம் போலவே அமைதியா இருக்கு.

மழை பெய்யவா? வேண்டாமான்னு யோசித்தது. பிள்ளைக வயதான அப்பா, அம்மாவ வெளியே கூட்டிட்டுப் போவம்மா, வேண்டாமான்னு பொஞ்சாதிகிட்டக் கேட்ட மாதிரி… மழை காத்தக் கேட்டு இருக்கு.

காத்து வேகமா அடித்தது. மழைக்குணம் மாறி மேகக்கூட்டம் கலைந்து போனது. இப்படித்தான் பல வீடுகளிலும் பேச்சுகள் தடுமாற்றத்தால் கூட்டுக் குடும்ப உறவுகள் கலைந்து போயின.

பெத்த பெருமாள் குடும்பத்தத் தெருவே பேசும். அவுகள மாதிரியா அண்ணன் தம்பி, தங்கை ஒண்ணாயிருக்க முடியாதுன்னு… கூட்டுக்குடும்பம்.

நல்லது கெட்டதுன்னா அவுக வீட்டு ஆளுக போதும். இப்ப வீட்டைப்பாரு, ‘மனுச வாடை அத்துப்போயிக்கிடக்கு’. வீடு மட்டுமே பெருசா? மனித மனங்கள் காஞ்சு போன வாழை இலை சுருண்ட மாதிரி சுருங்கிப்போச்சு.

இன்பத்துக்கும் துன்பத்துக்கும் இடையில… வாழ்க்கை; பழச மறக்க முடியாம, புதுச ஏத்துக்கு முடியல. முதியவர்கள் மனதளவில் போராடுகிறார்கள்.

ரெண்டு தண்டவாளம் போல, சேருமா? சேராது. ரயில் சேரணும்… ஆனா, சேராது. தண்டவாளம். தவளையும் ஓந்தியும் காதலர்கள். ஆனா, பார்வைக்கு ஒரே மாதிரியா இருக்கும். எங்கூட வான்னுத் தவளைத் தண்ணிக்குள்ளக் கூப்பிட, ஓந்தி இல்ல வா மேட்டுக்குன்னுத் தவளயக் கூப்பிட. இப்படியே ரெண்டு குளத்தம் கரைமேல நட்புச் சண்டை நடக்க, மேலே இருந்து பார்த்த பருந்து ரெண்டையும் சேத்து தூக்கிட்டுப் போயிருச்சு.

“தண்ணி தவளைக்கும் ஓந்தி மேடுக்கும் கதைதான் நம்மக் குடும்பங்களின் கதையும்.”

 “தயிர்பானையில விட்ட மத்தாட்டம். எல்லோர் நாவும் உறவுகளை உச்சரிக்கத் தொடங்கினா? ஆனால், யாரு வெண்ணை எடுக்கல…” வெயில் ஏறிப் போனால் மோர் பானையில வெண்ண திரளாது. அப்படித்தான் உறவுகளிடம் சுயநலம், கர்வமும், பணத்தாசையும் வரும்போது வெறும் நீர்மோராக உறவுகள் மாறிப்போயின…

மக வீட்டுக்குப் போன அப்பாக்கள், தன்னை மாமனார்ன்னு நினைக்காம.. மருமகன மகனா நினைச்சு ரெண்டு ஒரு வார்த்தை பேசிட்டாப் போச்சு. வெறும்பயலா இருந்தாலும் மருமகன், அவனுக்குப் பெண்ணும் கொடுத்து.. ஆண்டவன் அறுபதும் சீதனமாக் கொடுத்திருப்பாரு. மாப்பிள்ள, எதாயிருந்தாலும் ஆத்துலப் போட்டாலும் அளந்து போடுங்க இதுதான் சொல்லியிருப்பாரு… இங்க வந்தமா சாப்பிட்டமான்னு போகச்சொல்லு… எனக்கு புத்தி சொல்ல வர்றாரு… என்ன அவ்வளவு அறிவாளியா உங்க அப்பா? எங்க அப்பா பேச்சையே நான் கேட்டதில்ல மருமகன் எகிறுவாக.

மக வேப்பில இல்லாம சாமியாடுவா?

யம்மா, உம் புருஷன் வந்த வாயா வச்சுட்டு சும்மா இருந்தாத்தானே… என் விட்டுக்காரர்ட்ட என்னத்தயாவது சொல்ல. அவர் மனுசன், என்னை ராத்திரி கொண்டு எடுக்கிறார். தூங்கவிடாமா?

இதெல்லாம் நமக்கு எதுக்குங்கன்னா கேட்டாத்தானே அவரு அம்மா.

அம்மாவும்… மகளும்… அப்பனுக்கு குற்றப்பத்திரிகை வாசிக்க? வரட்டும் அவருக்குத் தேவையா? வந்தம்மா இருந்தம்மான்னு இருந்துட்டுப் போறத விட்டுட்டு…

வந்தமா பேசுனமா? இருந்தம்மானு போகவேண்டியது தானே. எதையாவது சொல்ல வேண்டியது. போயி, உங்க மருமகட்டச் சொல்லி பாக்கச் சொல்லும்மா உம் வீட்டுக்காரர? அங்க உங்கப் பருப்பு வேகாது. யார் அப்புராணி எம் புருஷன்தானே கிடைச்சாரா?

ஏன்டி, மரியாதையில்லாம பேசுற? நாங்க எல்லாம் அப்படியில்ல.

யம்மா, உங்க காலக்கதைய யார் கேட்டா? ஏதாவது கேட்ட மட்டும் பேசுங்க? தேவையில்லாம பேசாதீங்க.

அந்த மனுசன் இன்னும் உலகமே தெரியாம இருக்காரு…

சரிம்மா, நா போனு போடும் போதுச் சொல்லி வைக்கிறேன்.

இப்படிப் பலரும் பல நினைவுகளை அசைபோட்டு வாக்கிங் முடிச்சுட்டு வீட்டுக்குப் போனா.

டிபன் கேரியர்ல நாலு எருவாட்டியச் சப்பாத்தின்னு இருக்கும்.

பணம் கட்டியாச்சு, அவன் வைக்கிறதச் சாப்பிட்டாகனும்.

“வாய்க்கும் வௌங்காது, வந்தாரச் சிந்தாது.” தின்னதுபோக மிச்சத்தத் தூக்கி நாய்க்குப் போட்டா?

“நாய் மோந்து பாத்துட்டு… காலத் தூக்கிட்டுப் போகும்.”

மாணிக்கத்தின் மனத்திரையில் வந்துபோனது. எல்லோரும் ஒன்னாச் சேர்ந்து உக்காந்து, பேரன் பேத்தி எல்லாட்டையும் பேசிச் சிரிச்சு… சாப்பிட்ட நாட்கள் இனி வருமா, வரும்? ஏதாவது விசேஷகக் காலம்ன்னா?

வீட்ல போயி என்னத்தச் சாப்பிட.. அய்யோ கடவுளே! காலாகாலத்தில காப்பாத்துட்டா…! இந்த தனிமையில இருந்து காப்பாத்து உனக்குப் புண்ணியமா போகட்டும்…

பெத்தப்பெருமாள் மாதிரியான மனிதர்கள் எல்லாம் இருந்தும் எதுவுமில்லா மனநிலையில் பூமியைத் தேடிப் பூ நாளும் வாடிக் கிடக்கின்றனர். ஒவ்வொரு இரவும் முதிரா இரவாக…. ஆயிரம் பெத்தப் பெருமாள் நகர்த்திக்கொண்டு இருக்கிறார்கள். முதுமையை,

“கரையான் கட்டுனப் புத்துலக் கருநாகம் குடியேறுனது கணக்கா…” மெத்தையிலப் படுத்தாத் தூக்கம் வரமாட்டேன்னுது நாம வாங்கிய வரம்…

இராத்திரி ஒம்பது மணிக்குப் படுத்துப் பெறண்டு பெறண்டு படுத்தே தூக்கம் வர எப்படியும் பதினோரு மணிக்கு மேலாகும். ஆனா, டான்னுக் காத்தால மூன்றரைக்கு முழிப்பு வந்திரும். அதுக்கு மேலத் தூக்கம் பிடிக்க மாட்டேங்குது.

வெருக்கு வெருக்குன்ன ஒத்தக் கொரங்கா இருக்க வேண்டியிருக்கு.

இரவு நீண்ட இரவாப் போச்சுன்னு பெத்த பெருமாள் தனக்குத் தானே மெல்ல மனசுக்குள் பொலம்புறார்……

[email protected]

The post முதிரா இரவு – சுருளி காந்திதுரை appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

  •  

பெயராடல் – அசோக்

என்னிடம் ஒரு வினோத பழக்கம் இருக்கிறது. என்னவெனில், இப்போது உங்கள் பெயர் முருகேசன் என வைத்துக் கொள்வோம். நான் உங்களை மறுமுறை பார்க்கும்போது ‘என்ன செல்வகுமார் எப்டி இருக்க?’ என்றுதான் அழைப்பேன். மறுமுறை ‘என்னப்பா கனகராஜ்?’ எனவும் அழைப்பேன். நியாயமாக, என்னால் ஒருவரின் பெயரை ‘பெயர்’ என்ற அடையாளத்துடன் நிறுத்த விருப்பமில்லை. கூடவே அதில் ஒரு மஜாவும் இருக்கிறது. நான் அப்படி அழைக்கையில் அவர்களுக்கு நிறைய பெயர்கள் என ஆகி விடுகிறது. எப்போதும் வலது கையால் முகம் கழுபவரா நீங்கள்? இம்முறை இடக்கையால் கழுவிப் பாருங்கள். புது முகம் சிக்கும். ஒவ்வொரு முறையும் உங்கள் ஒரிஜினல் தவிர மற்ற அனைத்து நாமத்தாலும் அழைப்பேன். ‘ஹலோ.. இல்லயில்ல. என் பேரு முருகேசன்ங்க’ என நீங்கள் என்னைத்திருத்தும்போது ஒரு புன்சிரிப்புடன் எதிர்கொள்வேன். மாறாக நீங்கள் சீற்றம் கொண்டால் அதில் உள்ள வேடிக்கையை இழப்பீர்கள்.

இதை நான் என் நட்பு வட்டாரத்தில் எனக்கான தனிக்குணமாகவே வைத்து இருந்தேன். கில்லி படத்தில்கூட பிரகாஷ்ராஜ் ‘சிவசுப்பிரமணியன்’ என்ற போலிசின் பெயரை ‘கோயிந்தசாமி’ என விளிப்பார். அவர் கோபம் கொள்ள, “அதெல்லாம் நீ சொல்லக்கூடாது. நீ ஏன் சொல்ற?“ என்பார். அது என்னுள் ஆழ விதைந்துவிட்டதோ என்னவோ? அப்படி அடிக்கடி நான் பயன்படுத்தும் பெயர்கள் பார்த்தசாரதி, மகா கணபதி, திருச்செல்வம், யோகராஜ் போன்றன.

தமிழ் என்றொரு நண்பன் இருந்தான். முழுப்பெயர் தமிழரசன். சற்று பெருத்த உடல். முழுக்கை சட்டை மட்டுமே அணிவான். உளுந்து மூட்டையை மேலும் ஒரு சாக்கு கொண்டு சுற்றியது போல் இருப்பான். அவனை நிறைய பேர் உருவக்கேலி செய்வார்கள். நான் அப்படியில்லை. அவனுக்கு இதன்பால் என்னிடமும், என் இந்த பெயராடல் விசயத்திலும் பெரிய அன்பு மற்றும் கிரேஸ் இருந்தது. அவனின் நண்பர்களை நான் விசாரிக்கும்போதும் அவ்வாறே செய்தேன்.

‘ஒஹ்ஹ் நம்ம ராஜேஷா?’ என்பேன். உண்மையில் அவன் பெயர் சரவணனாக இருக்கும்.

‘ஜீ இப்ப நம்ம செல்வம் வருவான்,எதாச்சும் பேர் போட்டுவிடுங்க’ என வாலண்டியராக குதூகலிப்பான் தமிழ்.

சரி. இப்போ அதுக்கு என்ன? என்றால் ஒருமுறை எங்கள் சொந்த ஊர் சென்றபோது சுப்புராஜ் மாமா என்னை பார்த்து ‘என்னப்பா பாண்டி? என்ன பண்ற?’ என்றார். சொல்லில் ஒரு நக்கல். நானோ கிராமத்தில் கார்கோ க்ராக்ஸ் என கெட்டப்பில் இருந்தேன். சுற்றிலும் பார்த்து என்னைத்தான் சொல்கிறார் என்பதை தெரிந்து கொ ண்டேன்.திக் என்று இருந்தது. நம்மை அடிக்க சில விபூதிகள் காத்துக்கொண்டுதான் இருக்கும்போல்.

‘சொன்னேன் – எம் பேரு அசோக்கு.’

‘திருப்பரங்குன்றத்துல குளத்துல தவறி விழுந்த பின்னால நைட்டு நைட்டு எந்திரிச்சி எங்காச்சும் ஒடபோறேன் ஒடபோறேனு அரட்டிகிட்டே இருப்ப. வெளக்கமாத்தால ரெண்டு போட்டதுக்கு அப்புறம்தான் தூங்குவ. அப்ப உங்க தாத்தா வச்ச பேருதான் பாண்டி. பாண்டி சாமியோட பேரு. அந்த பேரு கொஞ்ச நாள்ல காணாமப் போயி வந்ததுதான் இந்த சோக்கு எல்லாம்’ – நீண்ட விளக்கம் கொடுத்து சுப்புராஜ் மாமா பீடியை காலால் போட்டு அமத்தையில் என் மஜா எல்லாம் அணைந்துவிட்டது போன்ற ஒரு நெருடல். ஆனாலும் இந்த பாண்டிக்கு முருகேசன்கள் எல்லாம் திருச்செல்வம்கள்தாம். யோகராஜ்கள்தாம். பெயரில் என்ன இருக்கிறது?

தமிழ்தான் ஒருமுறை கேட்டான் – ‘ஏன்ஜி என்ன மட்டும் அப்படி பேர் மாத்தி கூப்பிட மாட்றீங்க?’

‘செவ்வாழைகள் கிட்ட நா வச்சிக்கிறது இல்ல’ – என்றேன். ‘கூடவே இருக்கிற’ என்பதைப் போட்டு புரிந்து கொண்டான் தமிழ் என்கிற பரிகாசன். சின்னஞ்சிறு விசயங்களில் கூட பகடி தேடுவான். சில சமயங்களில் தானே ஒரு பகடியாக மாறுவான்.

‘ஜி, இந்த கேஸ்க்காரன் வேற இன்னைக்கு என்னப் பாக்க வாரானாம்’ -தமிழ்

‘எதுக்கு?’ – நான்

‘வேற எதுக்கு கேஸ் போடத்தான்’ – தமிழ்

மேலும், ‘நேத்துதான் அஞ்சு லட்சம் செக் பாஸ் பண்ணேன். ஒத்த ரூவாகூட கைல இல்ல’ – என புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவான். அவனின் பீடிகையைப் புரிந்து கொண்டு எனக்குள்ளும் ஜிபேயிலும் ஒரு பரிமாற்றம் நிகழும்.

‘யோவ் கேஸ்க்கு கொடுக்க காசு வேணும்னு கேக்கலாம்ல?’ என்றால், ‘அதுல ஒரு ஜாலி இருக்காது ஜி’ என்பான். பின்பு ஒருமுறை பார்க்கையில், ‘ஜி, அன்னைக்கு கேஸ்க்காரன் வந்தானா, அவன பார்த்தவுடன் உங்க ‘பிட்ட’ போட்டேன்’

புரியாமல் ‘என்ன?’ என்றேன். ‘ரெண்டு மாடி ஏறி களப்பா வந்து எறக்கி வச்சான். வச்ச அடுத்த செக்கண்டு என்ன பூங்குன்றன் இந்த வாட்டி லேட்டுன்னேன்.அவன் சிரிச்சிட்டே சொன்னான்.என் பேர் கண்ணன் ஸார். ஓ அப்டியான்னேன். களப்புலாம் கலைஞ்சி போன மாதிரி தெரிஞ்சான் ஜி அவன். அந்த நேரத்துல அவன் ஒருவாட்டியாச்சும் பூங்குன்றனா இருந்திருப்பான்லஜி?’

தமிழுக்கு இனமறியா குதூகலம். ‘ஆஆ…கண்டிப்பா’ என்றேன். கண்ணன்கள் பூங்குன்றன்கள் ஆவதில் என்ன பெரிய சிக்கல் இருந்துவிடப் போகிறது?

‘நீங்க அங்க இருந்திருந்தா என்ன சொல்லி இருப்பீங்க?’ என்றான். ‘அந்த நேரத்துல மனசுக்குள் என்ன தோணுதோ அதுதான் சொல்லியிருப்பேன்’ என்றேன்.இதை திட்டம் போட்டு செய்ய முடியாது. அது ஒருவித வன்முறை. ஒருவரின் பெயர் தங்கள் பெற்றோர்களால் ருசித்து வைக்கப்பட்டது. எனக்கெல்லாம் என் அப்பா அசோக் லேலண்டு லாரியில் பார்த்து ‘குமார்’ சேர்த்து வைத்தாராம். அதை உடைத்தல் என்பது சம்பந்தப்பட்ட நபரின் சாம்ராஜ்யத்தையே தகர்ப்பது போன்றது. சிறு போர் போன்றது. அந்த போருக்கு ஒரு சிறு நகைச்சுவை உணர்வும், கடந்து செல்லும் குணமும், சிறு கணமும் போதுமானது. ஒரு பாலகனிடம் இருக்கும் மிட்டாயை படக்கென பறித்து அதே நொடியில் படக்கென இன்முகத்துடன் திருப்பி அவனிடமே கொடுப்பதைப் போன்றது. சிறுவனுக்கும், அதனைப் பிடுங்கிய நமக்கும் ஏற்படும் ஒரு சிறு மனமாற்றம்தான் அந்த போரின் வெற்றி. நிறைய இடங்களில் பார்த்து இருப்போம்.

ஒருவரின் பெயரை மற்றவர்கள் எழுதுகையில் தவறு இருப்பின் அதை செவ்வனே திருத்தும் நபர்கள் உண்டு. கார்த்திக்கை ‘கார்த்தி‘ என்று எழுதினாலே குற்றம். பெயர் ஒரு அடையாளம். பெயருக்குள் ஒரு நபரின் உடல், குணம், அங்கீகாரம், நகை நட்டு, ஜாதி மதம், முடியில் எடுக்கும் வகுடு முதற்கொண்டு கலாச்சாரம், கத்திரிக்காய் என எல்லாமே அடங்கும். பெயரே அவராக இருக்கிறார்.

தமிழை சொல்லாமல் இக்கதை முடியாது. சில வருடங்கள் அவனைக் காண முடியவில்லை. ஓடும் பேருந்தின் இருபுறமும் சிதறும் செத்த இலைகள்தானே நாம். ஒருநாள் ஓர் இரவில் சர்ச் அருகில் வரச்சொன்னான். சீரான படுக்கைப்பட்டைகள் இருந்த புளு நிற ட்ஷிர்ட் போட்டிருந்தான். முழுக்கைச்சட்டைகள் எங்கே போயின? ஆனால், அதே உடல்.

சூடான இரவு. ஆனாலும், சூடான டீ குடித்தோம். ஏனோ மனுஷனுக்கு சூட்டில்கூட சூடுதான் கேட்கிறது. வினோதமானது மனசு மட்டும்தான்.

கழுத்தில் ட்ஷர்ட் மறைவில் ஒளியும் சிலுவை, சர்ச் வாசல் என இருந்தவனை கேட்டேன்.

‘ஆமா ஜி ஒன்னும் முடியல, இந்தப் பக்கம் வந்துட்டேன். ஒரு மாதிரி நல்லாத்தான் இருக்கு. அம்மா உள்ளதான் வேல செய்றாங்க’ என சர்ச்சைக் காட்டினான். அந்நேரம் மணி ஒலித்தது. நிறைய பேசிக்கொண்டே இருந்தான். கொஞ்சம் கேட்டுக் கொண்டே இருந்தேன். பேச்சுக்கள் எங்கே இருந்து உற்பத்தி ஆகிறதோ அந்த இடமே உடலின் புனித ஸ்தலம். வாய்ல இருக்கு வார்த்த – என சொல்வாள் கோட்டையூரில் மெஸ் நடத்தும் மாமி.

‘ஜி, ஒன்னு தெரியுமா… இந்த ஏரியால நான்தான் இப்போ குட்டி அசோக். அதான்ஜி நீங்க. இங்க வந்த புதுசுல பெக்கேன்னு வேலை வீடு காசுன்னுதான் இருந்தேன். காசு இல்லாதப்ப போர் அடிக்கல. இப்போ காசிருக்கு. ஆனா, ஒரு துடிப்பே இல்ல. அதான் பார்த்தேன். உங்க ‘பிட்ட’ போட்டேன். ஒரு மாதிரி வொர்க் அவுட் ஆச்சி. ரெண்டு பொண்ணுங்களையே இப்போ கரெக்ட் பண்ணிருக்கேன் ஜி’ என்றானே பாருங்க தமிழ் என்னும் ‘டைசன் சேவியர்’.

ஆளையும் வாழ்வையும் மாற்றியிருக்கிறது பெயர். அப்படியென்றால் பெயரில் என்னதான் இருக்கிறது தேவையை விடவும்? என்றே எனக்குத் தோன்றியது. போரில் தோற்பவனும் வெற்றியை பெறுகிறானோ? எது தேவையோ அதுவே தர்மம் – என்று அச்சிட்ட காலண்டரை முன்பு ஒருமுறை தமிழ் வீட்டில் பார்த்து இருக்கிறேன். அதில் கிருஷ்ணன் சிரித்துக்கொண்டு இருந்தார். இங்கே பின்புறம் மாதா அழகிய புன்னகையுடன் நிற்கிறார். இருவரின் சிரிப்பையும் எந்தப்பெயர் பிரிக்கும்?

பேசிக்கொண்டே இருக்கையில் கடந்து செல்லும் ஒருவனை பார்த்து தமிழ் சொன்னான். ‘என்ன செந்தூரப்பாண்டி,வேளைக்கு வர நேரமா இது?. அவனோ, ‘யோவ்.. போய்யா!’ என சிரிப்பளித்தான்.

‘அவர் சர்ச் வாட்ச்மேன் ஜி. பேரு ஆரோன். அவருக்கு நா டெய்லி இப்டி ஏதாச்சும் சொல்லி கூப்டனும். அப்படியே சிரிச்சிட்டே உள்ள போவாரு.’ என்றான் தமிழ். எப்போதும் தமிழ்தான் எனக்கு.

பைக்கை ஸ்டார்ட் பண்ணிவிட்டு, ‘சரி ஜேக்கப்… வரட்டுமா?’ என்றேன்.

‘ஜீஈஈஈஈஈ..!’ என்றான்.

குளிர்ந்து மாறியது இரவு.

[email protected]

The post பெயராடல் – அசோக் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

  •  

கன்னக்குழி – ஜெயநதி

மூன்று தினங்களுக்குப் பிறகு இன்றுதான் இந்த தொழில்முறை அலைபேசி எண்ணை ஆன் செய்தாள் ரதி. பர்சனலாக ஒரு எண் வைத்திருக்கிறாள். அது அவளுக்கும் அவளுடைய அம்மா விசாலிக்கும் மட்டுமானது. கொஞ்ச நாட்களாகத்தான் அம்மாவுடன் பேசுகிறாள். அதுவும் அவளிடம் வளருகிற தன் குழந்தையின் பொருட்டு…

தானிழைத்த பெரிய தவறுக்காக ஒரு மன்னிப்பைக் கோரி நின்றவளை தாய் மன்னித்து வீட்டில் சேர்த்திருக்கலாம். ரதியும் படிப்பை தொடர்ந்திருக்கலாம். ஆனால், அப்படி எதுவும் நடந்துவிடவில்லை.

தொலைபேசி எண்ணை ஆன் செய்ததும் தொடர்ச்சியாய் தவறின அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் வந்து விழுந்தவண்ணமிருக்கிறது.

வந்தவைகளில் மஞ்சுவின் குறுஞ்செய்திதான் அதிகம். மஞ்சுநாதனை அழைத்தாள்.

‘”என்ன?” என்றாள்.

“எனக்குத் தெரியும் ரதி. மூனு   நாளைக்கு தொந்திரவு பண்ணக் கூடாதுன்னு.. ராஜ்மதன்னு புதுசு. நீதான் வேணும்னு காத்திட்டிருக்கான். இன்னைக்கு முடியுமா?”

“ம்ஹூம், முடியாதுப்பா…!” என்றாள்

“அப்ப நாளைக்கு.?….

“ம்..”

அந்தப் பக்கம் அவன் இளிப்பது தெரிந்தது.

காரைக் கிளப்பினாள். கண்ணாடியில்       முகம் பார்த்தாள். சாயமில்லாத உதடு வெளிறி இருந்தது. ரெடிமேட் மூக்குத்தி முகத்தின் வாட்டத்தை மறைத்து மின்னியது.

குதிரைவால் பின்னலை வளைத்து கொண்டையாக மாற்றியிருந்தாள். இளமையின் மீது விழுந்த நகக்கீறல்களாய் நரை அங்கொன்றும் இங்கொன்றுமாய். இன்னும் மெலிதான இரத்தப் புள்ளிகள் நாப்கினை நனைத்துக் கொண்டிருந்தது. நாளைக்கு சரியாகிவிடும்.

அப்புறம் கனஜோராய் தொழில் ஆரம்பித்து விடும். விடுபட்ட நாட்களுக்கும் சேர்த்து நுகர்வதும், கசங்குவதும், கசப்பதுமான இடிபாடுகளிடையே நொறுங்கிவிடாது

நகர்ந்து வருவது பெரும்பாடு.

ஏதாவது ஒரு முகம்

ஏதாவது ஒரு தருணம்

அழுவாச்சிக் காட்டி ஆட்டத்தைக் கலைக்கப் பார்க்கும். ஆனால், சென்டிமெண்ட்டெல்லாம் தொழில் தர்மமில்லையே!

காரிலிருந்து இறங்கி தள்ளாடி நடந்தாள்.

உலகத்தை எத்தி எத்தி பின்தள்ளி

முன் நகர்கிற இந்த தள்ளாட்டம் அவளுக்கு சுகமோ சுகம்..

வீட்டினுள் நுழைந்து கதவடைத்தாள்.

செருப்பைக் கழற்றியதும் அவளுக்காக காத்திருந்த பூனைக்குட்டி மெத்தென்று உரசி கால்களை நக்கியது.

எங்கிருந்தாலும் எவ்வளவு நேரமானாலும் வீட்டுக்கு வந்து விடுவது அவனுக்காகத்தான்..

“ச்சிலியோப்பா”… சீட்டா, லியோ, பேன்தர் மூன்றையும் கலந்து வைத்த பெயர்…அவள்பாட்டிலைத் திறக்கிற கண்ணாடி கோப்பைகள் உரசுகிற சத்தம் கேட்டாலே போதும் எங்கிருந்தாலும் ஆஜராகி விடும்.. அதற்கு மதுவை நக்குகிற பழக்கம்… அவளுடன் கட்டிலில் மல்லாந்து விடும். அவளுக்கு மனசு சுணங்கியிருக்கும்போது அதற்கு எப்படியோ தெரிந்து விடும். அவளை விட்டு விலகாது உரசிக்கொண்டு கூடவேஇருக்கும்…

“குட்நைட்…ச்சிலியோப்பா”…..என்றாள்.

வாயிலிருந்து குழறலாய் பனிப்புகை கிளம்பியது.

ஜெர்மனியின் பனிச் சூழ்ந்த மரப்பலகை வீட்டின் படுக்கையறை

ஹீட்டரில் கதகதப்பாயிருந்தது.

இந்த கசிகிற மெல்லிய வெளிச்சத்தில் மேற்கூரையை வெறித்தபடி படுத்திருப்பது நன்றாய்த்தானிருக்கிறது.

சில மெழுகுவர்த்திகள் நின்று எரிகிறது. சீக்கிரத்தில் அணைவதில்லை. அதன் தடிப்பு குறைவதுமில்லை….

அரக்கு ஒழுக்கி ஒட்டிய கடிதத்தை முனை கிழியாமல் பிரிப்பதும், அதில் ஏதும் சுவாரஸ்யம் இருக்குமாவென படித்துப் பார்க்கையில் ஒரு மண்ணுமில்லை என கசக்கிப் போடுவதுமாய்

வாழ்க்கை….!

“போங்கடா”….

நொறுங்கிவிடாது இவ்வளவு தூரம் வந்திருப்பதே விஷயம்தான்…

கொஞ்சம் வீறல்…

கொஞ்சம் விரிசல்…

ஆனாலும் எதை ஊற்றினாலும் கசிய விடாத

கண்ணாடிக் குவளை.

இன்னும்

மவுசு இருக்கிறது. போகிறவரை போகட்டுமே….

மறுநாள் விடுதியை அடைந்தபோது வாசலிலேயே மஞ்சு நின்றிருந்தான். வாயெல்லாம் பற்கள்.. சட்டைப்பை நல்ல கனத்திலிருந்தது. பெரியவருமானமாய் இருந்தால் மஞ்சு நேரிலேயே வந்துவிடுவான். இல்லையெனில் அலைபேசியிலேயே வியாபாரத்தை முடித்துவிடுவான். இன்று நல்ல வேட்டைதான்போல..

அறைக்கதவை தட்டிக்கொண்டு போனபோது, உள்ளே இருந்தவர் கதவோரம் இருந்த இருக்கையிலேயே அமரும்படி சைகை செய்துவிட்டு வீடியோ காலில் அசையாமல் “ம்” கொட்டிக் கொண்டிருந்தார். அப்படியென்றால் எதிரில் பேசிக்கொண்டிருப்பது அனேகமாய் மனைவியாய் இருக்கக்கூடும்.

இந்த ஆண்களுக்கு மனைவியிடம் நடிப்பதென்றால் அல்வா சாப்பிடுகிற மாதிரி..

பேசி முடித்ததும் அருகில் வந்து அமரும்படி சைகைசெய்தார்.

“நேர்ல இன்னும் அழகாஇருக்கே…!”

சிரித்தாள்..

“ஒகே…கே…நான் நிஜத்தை சொன்னேன்…!” அவரும் சிரித்தார்.

“ஏதோ இருக்கு உன்கிட்டே… புகைப்படத்தைப் பாத்தப்பவே கணிச்சேன்.. இன்னைக்கு ஊர்ஜிதமாயிடுச்சு.. உன்கிட்ட ஏதோ வசியம் இருக்கு…ஹா…ஹா…”

“பெரிய மனுஷ தோரணையெல்லாம் படுக்கையில உதவாது.வா..வந்து இங்க உட்கார்” என்றபடி தொடர்ந்து, “ஏதாவது ஆர்டர் பண்ணட்டுமா?” எனக் கேட்டார்.

“ம்.”..

“என்ன சொல்லட்டும்?”

“ஷாம்ப்பெய்ன்.. சப்பாத்தி.. மட்டன் கசண்டி”…- என்றாள்.

“ஆஹா ஜோர்…எனக்கும் இது ரசிக்கும். முதல்ல சாப்பிட்டு சவகாசமா பேசிட்டு அப்புறம்தான் மத்ததெல்லாம்…” என்றார்.

ரசனைக்காரன் தான்.

இன்று எல்லாப் பசிக்கும் தீனி கிட்டலாம்..

“ரதி…ஏதாவது பேசேன். உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லேன்?”

என்ன கன்றாவிடா இது…

ஏதாவது கவிஞன் எழுத்தாளனிடம் வந்து சிக்கிக்கொண்டுவிட்டேனா என்ன?…

வேலை முடிந்ததா அனுப்பி வைப்போமா என்றில்லாது, பைத்தியக்காரன்

“அதுவந்து”..

அவரே பேசினார்..

“எனக்கும் அலுப்பாயிருக்கு… நிறைய பாத்தாச்சு.. இன்னைக்கு அமைதியா பிடிச்சத சாப்பிட்டுக்கிட்டு, பேசிகிட்டு, ரூமுக்குள்ளேயே கதகதப்பா இருக்கத் தோணுச்சு. பாத்த போட்டோக்கள்ல நீதான் இதுக்கு சரியா வருவேன்னுபட்டுச்சு. அதுவும் இந்த சிரிச்சும் சிரிக்காம ஆரம்பிக்கிற போதே இடது கன்னத்தில் மட்டும் ஆழ விழுகிற கன்னக்குழி….”

ஆழமாய் பார்த்தார்.

வெகுநேரம் ஓடிக்கொண்டிருக்கிறபோது மிகப் பிடித்த இடத்தைக் கடக்கையில் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்துவதைப்போல

திரில்லாக இருந்தது ரதிக்கு..

வித்தியாசமானவனாய் இருக்கிறான்.

“ம்… என்ன கேட்டீர்கள்? சரியாக கவனிக்கவில்லை” என்றாள்.

“காதலைப் பற்றி உன் அபிப்ராயம் என்ன? நீ லவ் பண்ணியிருக்கையான்னு கேட்டேன்?”

காதலன் இருந்தான். அவன்தான் காதலைச் சொல்லி படிப்பதிலிருந்து காதலுக்கு நகர்த்தி.. காதலிலிருந்து கர்ப்பத்திற்க்கு நகர்த்தி.. பின் கருக்கலைப்புக்கு நகர்த்தி.. ஆயிரம் சத்தியம் செய்து மறுபடியும் இன்னுமொரு கர்பத்திற்கு நகர்த்திவிட்டு ஒருநாள் அவனுக்கே அத்தனை சத்தியங்கள் சலித்திருக்கும் போல… ஓடிவிட்டான்.. திருட்டு ராஸ்கல்….இதுவரை எந்தத் தகவலுமில்லை.இவளும் தேடவில்லை..விட்டது சனியன் என்று..

இவனிடத்தில் எதற்கு இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கவேண்டும்…

“அது வந்து… காவியக் காதல் பண்ற அளவுக்கு யோக்கியமானவனை இதுவரைக்கும் நான் பாக்கவுமில்ல. காவியக் காதலியா இருக்கிற யோக்கியதை எனக்குமில்ல… பத்தொன்பது வயசுலயே இந்த லைனுக்கு வந்துட்டேன். சொல்லிக் கொள்ளும்படி எதுவுமில்ல..

அப்புறம் ஒரு கால்கேர்ள் கிட்ட காதலைப் பத்தி விசாரிக்கிறிங்கன்னா நீங்க சுவரஸ்யமான ஆள்தான்.. காதலைப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?….”

கூர்மையானாள்.

“எனக்கு இப்ப வயசு அறுபத்தி ரெண்டு. இருபத்தி மூனு வயசுல ஒருத்திய பாத்தேன். ப்ரபை அவளுடைய பெயர். அவளாக வைத்துக் கொண்ட பெயர். தமிழ்நாட்ல ஒரு நூலக வாசல்ல… யாருக்கோ காத்திட்டிருந்தா..அப்பப்ப என்னைப் பாத்துசிரிச்சா.. கன்னக்குழிவிழ… எனக்கு முதல் பார்வையிலயே ரொம்ப பிடிச்சிருச்சு..போய்ப் பேச பயம்.. ஒரு கார் வரவும் கிளம்பிப்போயிட்டா. மறுநாள் அதே நேரத்துக்கு அந்த நூலகத்துக்கு போய் ரொம்ப நேரம் காத்திருந்திட்டு ஏமாந்து திரும்பி வந்தேன். அவ கன்னக்குழி சிரிப்ப மறக்க முடியல.சிரிச்சும் சிரிக்காம ஆரம்பிக்கிற போதே இடது கன்னத்தில் மட்டும் ஆழ குழி விழுகிற சிரிப்பு… மனசு எதுலயும் ஒட்டல. அதன்பிறகு எதேச்சையா ஒருநாள் ஒரு உணவகத்துல பார்த்தேன். முன்பைவிட இன்னும் அழகாயிருந்தாள். நான் அவளையே பார்த்துக்கிட்டிருக்கிறதை கவனிச்சு அவளே என்கிட்ட வந்து லேண்ட்லைன் எண்ணைத் தந்துவிட்டு மறைஞ்சுட்டா.

அந்த எண்ணுக்கு கூப்பிட்டபோது.. ரேட் இவ்வளவு என்று பேசினாள். எனக்கு முதலில் அதிர்ச்சியாய் இருந்தாலும் அவளை மறக்கமுடியாமல் திரிஞ்சேன். சில தினங்களுக்குப் பிறகு என் காதலைத் தாங்க முடியாமல் சொன்னபோது திக்குமுக்காடினாள்… குதூகலித்தாள். நிறைய பேசினோம். அவள் அதிபுத்திசாலி. கவிதையைப் பற்றி பேச ஆரம்பித்தால் ஜான்மில்டன் பற்றி பேசுவாள். ஷெல்லி பற்றி பேசுவாள். பாரதியைப் பற்றியும் பேசுவாள். வரலாறு, புரட்சி எதைப்பற்றியும் பரவலான அறிவிருந்தது அவளிடம். முக்கியமாய் பரதம்…. சுழன்றாடினாள்…

என்னை ஸ்திரமாய் நம்பினாள்.

நம்பவைத்தேன்.

சில நாட்களில் என் அண்ணனுக்கும் பின் அம்மாவுக்கும் எல்லாமும் தெரிஞ்சு போனது.. அம்மா அடித்துக் கொண்டு அழுதாள். அரிவாள் மனையை கழுத்தில் அழுத்திக் கொண்டு அறுத்துக் கொள்ளப் போவதாய் மிரட்டினாள்.

வேற வழியில்லாம அவளை தவிர்த்தேன். பாவம் ப்ரபை.. ஆனால், அதிபுத்திசாலியல்லவா.. நான் கைவிட்டதை புரிந்து கொண்டாள்.

பின்னாளில் எனக்கு கல்யாணமும் முடிந்தது.

சில மாதங்களுக்குப் பிறகு அவளை ஒரு ரெஸ்ட்ராண்ட்டில் பாத்தேன். ஒரு ஆணுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டே

என்னைப் பார்த்ததும் சிரித்தாள். என்னை மன்னித்துவிட்டதாய் காட்டிக் கொண்டாள்… குற்ற உணர்வுடன் நான் திரும்பி விடக் கூடாதென்கிற அக்கறையோடு கன்னக்குழி விழ சிரித்துக்கொண்டே கடந்து போனாள். மனதாலும் அவ்வளவு அழகானவளை அப்புறம் பார்க்க நேராததுதான் அவளோடு இணைந்திருந்து குறுகிய நாட்களை அற்புதமான கவிதை வரியாக மாற்றியிருந்தது வாழ்வு.. ஜிகினா காகிதத்தில் அச்சிடப்பட்ட அற்புதமான பழுப்புக் கவிதை .

ப்ரபை என்னை மன்னித்துவிட்டதை நான் உணர்ந்தேன்.

உணவகத்திலிருந்து வெளியே வந்த போது மிக மெல்லிய காற்றுக்கே அங்கிருந்த போகன்வில்லா மரம் காகிதப்பூக்களை என் மீது ரோஸ் நிற வண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றி மொய்க்கச் செய்தது.

அவள் மன்னித்துவிட்டாள்.

தெருவோரப் பைத்தியக்காரி ஒருத்தி என் முகத்தில் ஆசையாய் தடவிய விரல்களை அழுக்கு உதட்டில் வைத்து முத்தினாள்.

சத்தியமாய் ப்ரபை என்னை மன்னித்துவிட்டதை உணர்ந்தேன்.

ஆனால், என்னிடமிருந்து இன்றுவரை எனக்கு மன்னிப்பே கிடைகக்கவில்லை…

பிறகு மனம் நோகிற போதெல்லாம் அங்கிருந்து கிளம்பி இங்கே வந்துவிடுவேன்… இரண்டு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது.

இன்று அவளை லைப்ரரியில் முதன்முதலில் பார்த்த தினம்..

அதைக்கொண்டாட அவளைப் போலவே ஒரு விலைமாதைத் தேடினேன்.  

எனக்கு வந்த புகைப்படங்களிலேயே நீதான் பழைய இடதுக் கன்னக் குழியோடு புது சிரிப்பை சிரித்துக் கொண்டிருந்தாய்!”

[email protected]

The post கன்னக்குழி – ஜெயநதி appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

  •  

கத்திரிப்பூ கலர்ப் பெயிண்ட் அடித்த வீடு – கலித்தேவன்

மெடிக்கல் காலேஜ் ரோட்டில் முதல் கேட்டிற்கருகே வரும் போது செல்போன் அழைத்தது. நல்ல வெய்யில் நேரம், மே மாத சூரியன் தன் முழுவீச்சை வெளிப்படுத்தும் நேரம், உச்சி வெய்யிலின் தாக்கத்தை விட சுற்றுப்புற அனலின் தாக்கம் அதிகமாயிருந்தது. வண்டியை நிழலான இடத்தில் நிறுத்தலாமென்றால், ரோட்டில் இருந்த மரத்தையெல்லாம் விரிவாக்கம் என்ற பெயரில் வெட்டியதால் கண்ணுக்கெட்டிய தூரத்தில் மரங்களே இல்லை.

முதல் கேட்டினுள்ளே நுழைந்தால் வலது புறம் பெரிய ஆலமரம், விழுதுகள் ஊன்றி நிழல் அளித்ததைக் கண்டு அதன் எல்லையில் நிறுத்தினான் திருப்பதி, அதற்குள்ளாக செல்போன் அழைப்பு நின்றிருந்தது.

செல்போனை எடுத்து அழைத்தது யார் என்று பார்த்தால் புதிய எண்ணாக தெரிந்தது. இதற்கு முன்பு இந்த எண்ணிலிருந்து அழைப்பு வந்ததாக நினைவில் இல்லை. பொதுவாக அழைப்புகள் வரும் எண்களையும் பேசுபவர்கள் குரலையும் ஞாபகம் வைத்துக் கொள்ளவது வழக்கம். அந்த எண்ணிற்கு அழைத்தான் பிசியாக இருந்தது. சரி காத்திருப்போம் என அமேசானில் உலாவி புதியதாக வந்திருக்கும் டூல்ஸ்களை பார்வையிட்டான். மீண்டும் அதே எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

“சார், அதிர்ஷ்டம் கடையில ஒங்க நம்பர் கொடுத்தாங்க. நீங்க திருப்பதிதான? வாசிங் மிஷினுக்கு சரியா தண்ணீ வரமாட்டேங்குது. தொவக்க லேட்டாவுது. வந்து என்னான்னு பாக்க முடியுமா? இப்போ வர முடியுமா?”

“ஓகே பத்துடலாம். டேங்குல தண்ணீ ஃபுல்லா இருக்கா?”

“பார்த்துட்டேன் சார். மோட்டார போட்டு தண்ணிய ஃபுல்லா ஏத்தியும் பாத்துட்டேன். ரெம்ப கம்மியா வருது போல. தொவக்க ரெம்ப நேரம் ஆவுது. இதுக்கு முன்னாடி இது மாறி ஆனதில்ல. கொஞ்சம் சீக்கிரம் வாங்க. வெளிய போகனும்”

“சரி, அட்ரச சொல்லுங்க. வந்துர்றேன்.”

“அருளானந்த அம்மாள் நகர், புஷ்பம் காலனி, ஆறாவது தெரு, மொத மாடி வீடு, கத்தரி பூ கலர்ல பெயிண்ட் பண்ணது.”

“மெடிக்கல் காலேஜ் ரோட்டுல இருக்கேன். நேரா அங்கதான் வரனும் வந்துர்றேன்.”

தினமும் தஞ்சாவூரையே சுற்றி வருவதால் முகவரி நன்றாகத் தெரிந்தது. மனதிற்குள் அதற்குள் போக வேண்டிய பாதை வரைபடமாக விரிந்து வழிகாட்டியது. ஞாபக அடுக்குகளில் தெரு, கடைகள், திருப்பங்கள் எல்லாம் எப்படி பதிகிறது.. திரும்பவும் எடுக்கப்பட்டு பயன்படுகிறது என மனதின் வன்மையை நினைத்து வியப்படைத்தான்.

வாகனத்தை மெதுவாக இயக்கி பண்ணிரெண்டு நிமிடத்தில் புஷ்பம் காலனி ஆறாவது தெருவையடைந்தான். வீட்டைக் கண்டுபிடிப்பது சுலபமாக இருந்தது. தெருவின் முதல் வீடே அவர்களதுதான், வாகனத்தை நிறுத்திவிட்டு டூல்ஸ் பையுடன் கேட்டின் கதவருகே நின்று உள்புறமாக அழைத்தான்.

“சார், சார். வீட்டுல நாயிருக்கா?”

“இதோ வர்றேன் சார்” – என்றபடி முப்பத்தியைந்து வயதுடைய பெண் நைட்டியில் வந்தார்.

“வாங்க சார், நாய் கிடையாது. பயப்படாம வாங்க.”

“ஒகே, ஒகே. ரெண்டு மூனு தடவ கடி வாங்கி ஊசி போட்டதுல கொஞ்சம் பயம். அதான் கேட்டுக்கிட்டேன். வாசிங் மிஷின் எங்க இருக்கு?

“மொதல் மாடியில் இருக்கு. வாங்க காட்றேன்”

போர்டிகோவை ஒட்டி ஏறிய மாடிப்படியின் வழியே முதல் மாடியில் வலது புறம் இருந்த மிகப்பெரிய அறையைக் காட்டினார். “இதுல இருக்கு. நீங்க பாருங்க. நா காலேஜ்க்கு போவனும். டிரஸ் மாத்திட்டு வந்துடுறேன்” என்றவருக்கு நல்ல திருத்தமான முகம். மேக்கப் இல்லாமலே அழகாக இருந்தார். நன்றாகப் படிய வாரிய தலைமுடி பின்னால் பின்னி இடுப்புவரை தொங்கியது. நைட்டியிலேய உடலின் வளைவுகளும் திண்மையும், இளமையும் தெரிந்தது. சாந்தமான முகமும் புன்னகையும் ஒரு முறை பார்த்தவர்கள் மறக்க முடியாத வன்னமிருந்தது. கழுத்தில் தாலியும், காலில் மெட்டியுமில்லை. கற்பனையில் மனம் பறந்தது.

வாசிங் மிஷின் அறையில் உள்ளே அதன் அட்டாச்சுடு பாத்ருமை ஒட்டி நன்றாக வழிவிட்டு வெளியே இருந்தது. முதலில் மிஷினுடன் இணைந்த  குழாயின் வால்வை மூடிவிட்டு ஹோசை கழற்றினான். மீண்டும் வால்வைத் திருகினான். தண்ணீர் நன்றாக வேகமாக வந்தது. ஹோசின் மறுமுனை, மிஷினின் பின்புறம் இருந்ததைக் கழற்றிப் பார்த்த போது, சிறிய வலையில் அதிக அளவில் காய்ந்த தேக்குமரப் பூக்கள் நிறைய வடிகட்டும் வலையில் சிக்கி அடைத்திருந்தால் தண்ணீர் கொஞ்சமாத்தான் செல்லும். சுத்தமாக சிறிய வட்ட வலையை கழுவி சரியாகப் பொருத்தி பழையபடி ஹோசை மாட்டிவிட்டு வால்வைத் திறந்த போது நல்ல வேகமாகத் தண்ணீர் வந்தது. மிஷினை ஆன் செய்து பார்த்தான்.

தண்ணீர் உடனே வேகமாகப் பாய்ந்ததால் மிஷின் பழையபடி வேலை செய்தது. இப்போது விரைவாகத் துணிகளை துவைத்துவிடும் . பாத்ரூமில் கைகால்களை கழுவி வெளிவந்து டூல்ஸ்பையை எடுத்து சரிபார்த்து அறைக்கு வெளிய வந்தான்.

மேலும் ஐந்து நிமிடத்திற்கு பிறகே அழைத்த பெண் மாடிக்கு வந்தார்.

மிகப்பிரகாசமான ஒளிபரவ குறுகிய கால எளிய மேக்கப்பில் ஜொலித்தார். நெருங்கிய உறவினரைப் பார்பது போல தெரிந்தது. பெண்ணுக்கேயுரிய உடல் அமைப்பும் அதற்கேற்றார் போல உடையும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டியது. ஏதோ ஒரு விஷயம் மட்டும் உறுத்தியது. அது என்னவென்று சொல்லத் தெரியவில்லை.

“என்ன சார், சரியா இருக்கா இப்ப? என்னாச்சி என்ன காரணம் தண்ணீ சரியா வராததுக்கு?”

மேல இருக்குற தண்ணீர் டேங்க்குல, காஞ்ச தேக்குமர பூ கொட்டுறது உள்ள விழுந்து கீழ வர்ற பைப்பு வழியா வந்து, வாசிங் மிஷின்ல பில்டர்ல அடைச்சிகுது. அதுனால தண்ணீ உள்ள வேகமா வராம துணிய தொவைக்க ரெம்ப லேட்டாவது. அதான் காரணம்.”

“ஓ அப்டியா, ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா? மாடியில இருக்கும் டேங்க்க பார்த்துட்டு சொல்லுங்க. சுத்தப் படுத்திடலாம்.”

ஒரு வினாடி யோசித்தவன், “சரி, ஏறி பாத்துடுவேன். ஆனா, கிளீன் நா பண்ண மாட்டேன்.”

“ம். ஓகே சார்.”

மொட்டை மாடியில், வீடு கிழக்கு பார்த்த வாசல் என்பதால் இடது புறம் மூலையில் டேங்க் சிமெண்ட் செங்கல் , கலவையில் கட்டப்பட்டிருந்தது. பின் கட்டில் இடமிருந்ததால். நிறைய தேக்குமரங்கள் இருந்தன, இரண்டு மாடி தாண்டி வளர்ந்தவை. டேங்கின் மேல் ஏறிப் பார்த்தான். பிளாஸ்டிக் மூடியாததால் உடைந்திருந்தது. பாதிக்கும் மேல் திறப்பாக இருந்த பகுதி வழியே பூக்களும் இலைகளும் விழுந்து தண்ணீரில் குப்பையாக, அழுக்காக இருந்தது. கீழே வந்து. அப்பெண்ணிடம், “டேங்க் மூடி ஒடஞ்சிருக்கு. அத மாத்தனும், தொட்டிய சுத்தம் செய்யனும். ஒடஞ்ச பக்கமா தேக்குமர பூவும் இலையும் கொட்டி குப்பையா இருக்கு” என்றான்.

“ஒரு உதவி செய்யுங்க. நீங்க கிளீன் பண்ணிட்டு அதுக்கும் சேர்த்து காசு வாங்கிக்கோங்க” என்றார்.

“ஸாரி, அந்த வேலை என்னால முடியாது. வேற தெரிஞ்ச ஆள் இருக்கு நம்பர் அனுப்புறேன். சொன்னீங்கன்னா வந்து கிளீன் பண்ணிட்டு மூடியும் புதுசா போட்டு குடுத்துட்டுப் போவாரு. இந்த தடவ இரும்பு மூடியா போட்டுங்க.” என்றபடி நம்பரை அனுப்பினான்.

“சரிங்க நம்பர் தாங்க. பேசிக்குறேன். உங்களுக்கு ஜீபே இருக்கா? இருந்தா நல்லது. உடனே பணம் அனுப்பிடுவேன். கேஷ் வச்சிகிறது இல்ல, ஸாரி” என்றார்.

“அதபத்தி பேசுனா அரசியலாய்டும். பொதுவா நா பணம்தான் வாங்குவேன் .முடியலன்னா ஜீ பே பண்ணுங்க. உங்க பேர சொல்லுங்க. பணம் வந்துட்டா செல்லிர்றேன்” என்றபடி கூலித் தொகையையும் சொன்னான்.

“ஒகே, நீங்க நோட் பண்ணிக்குங்க. எம்பேரு அனுஸ்ரீ” என்று சொல்லியடி போனிலிருந்து பணம் அனுப்பினார்.

கேட்ட தொகையை அனுப்பியிருந்தார்.

“பணம் வந்துடிச்சிங்க. தாங்க்ஸ். அனுப்பின நம்பர்ல கூப்பிட்டு தொட்டிய பாத்துட்டு ,கூலிய பேசிட்டப்புறம் வேலை பாக்க சொல்லுங்க. அதான் நல்லது. சரி நா கெளம்புறேன்.”

“ஓகே, நானும் காலேஜிக்கு போனும்” என்று கீழிறிங்கினார். திருப்பதியும் பின்னால் இறங்கினான். ஏதோ உறுத்தலாகவே உணர்ந்தான். வீட்டின் வாசலில் வைத்த வாகனத்தை எடுக்கும் போது சிமெண்ட் கலர் குவாலிஸ் அர்பன் குருஸ்னர் வந்து நின்றது. அதிலிருந்து மாநிறத்தில் குள்ளமான நபர் இறங்கி திருப்பதியை பார்தபடி வீட்டினுள் போனார்.

“யாரு வந்துட்டுப் போறது? நா இல்லாத போது கண்ட ஆளெல்லாம் கூப்புடாதேன்னு எத்தன தடவ சொல்றது?” என்ற சப்தமாகப் பேசுவது கேட்டது. லேசாக மனதிற்குள் வெம்மையை உணர்ந்தான்.

“வாசிங்மிஷின் ரிப்பேர்னு சொல்லி ஒரு வாரமாவுது. நீங்க பாக்குற மாறி தெரியல. அதான் அதிர்ஷ்டம் கடையில் அவரோட நம்பர குடுத்தாங்க. வரச் சொல்லி சரி பண்ணினேன். அதுக்கு இப்ப என்னா? நீங்க செய்ய மாட்டீங்க.. செஞ்சா குத்தம் சொல்றது. சரி, எனக்கு நேரமாவுது” என்ற கோபக் குரலும் கேட்டது. ‘இது குடும்ப வெவகாரம். நாம தலையிடக் கூடாது’ என ஒன்றும் பேசாமல் புறப்பட்டுவிட்டான் திருப்பதி.

மூன்று நாட்களுக்கு பிறகு அனுஸ்ரீ போன் செய்தார்.

“சார், நீங்க கொடுத்த நம்பருக்கு போன் பண்ணேன். சிவானந்தம்னு வந்தாரு. டேங்க்க நல்லா சுத்தம் பண்ணதோட, புது இரும்பு மூடிய வாங்கிட்டு வந்து சிமெண்டால பூசி குடுத்துட்டுப் போனாரு. ரெம்ப தேங்க்ஸ்” என்றார்.

“அதுக்கு ஏங்க தேங்க்ஸ்? எங்க வேலையில் அதுவும் ஒன்னு.. அவ்ளோதான். உங்களுக்கு திருப்தினா சரிதான்”

“ஒகே சார். வச்சிடுறேன் பை” என்றார்.

அப்போதே  வாட்சப்பில் பூங்கொத்தும், ஸ்மைலியும் , ஹார்ட்டும் தேங்க்ஸும் வந்தது. அன்றிலிருந்து  தினமும் காலை வணக்கமும் , இரவு வணக்கமும் பத்து நாட்களுக்கும் மேலாக அனுப்பியிருந்தார். திருப்பதிக்கு உறுத்தலும், தவிப்பும் ஏற்பட்டு ஒரு மாதிரியானான். பதிலுக்கு எதுவும் அனுப்புவதில்லை.

கடையிலும், வெளியிலும் வேலையில்லாத நேரம். அம்மாதிரியான காலத்தில் புத்தகம் படிப்பதில் இறங்கும் பழக்கம். நாஞ்சிலாரின் இடமோ வலமோ தொகுப்பை படிக்கத் தொடங்கினான் திருப்பதி,

தவசிப்பிள்ளை, கும்பமுனியை வைத்து நகைச்சுவையுடன் நிதர்சனமான உண்மையைக் கலந்து தரப்பட்ட பதிவுகள். பாதிக்கும் மேல் படித்துவிட்டான். முகம் முழுவதும் புன்னகையுடனும் மனமும் நிறைத்திருந்தது. செல்போன் அழைப்பு வந்தது , சற்றே சலிப்புடன் போனை எடுத்தான். அழைத்தது அனுஶ்ரீ. மணி பன்னிரெண்டாகியிருந்தது

“சொல்லுங்க , என்னாச்சி?”

“வீடு முழுக்க எல்லா பைப்பிலும் தண்ணீர் வர மாட்டேங்குது. கொஞ்சம் அவசரம். உடனே வர முடியுமா?”

“எல்லா பைப்பிலும் வரலியா? பத்து நாளுக்கு முன்னாலதானே சுத்தம் பண்ணோம். திடீர்னு வரலயா?” என்றான்.

“ஆமாங்க காலையில கூட பாத்திரம் கழுவினேன். அப்பல்லாம் வந்ததே! வாசிங் மிஷின்ல துணிய தொவச்சி மாடியில காயப்போட்டேனே.” என்றார்.

“சரிங்க. ஒடனே வர்றேன்”

டூல்ஸ் பையுடன் வாகனத்தில் ஏறி உடனே அவர்கள் வீட்டிற்கு புறப்பட்டான்.

வீட்டை நெருங்கி வாகனத்தை சுற்றுச் சுவரின் அருகே பெரிதாக வளர்ந்திருந்த புங்க மரத்தினடியில் நிறுத்தி பூட்டினான். புங்க மரத்தின் நிழலும், பசுமையும், பச்சை வாசனையும் அற்புதமான குளுமையுடன் பரந்து விரிந்திருந்தது. தெருவில் நடமாட்டமின்றி அமைதியாக இருந்தது. வீட்டின் கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்தான். கூப்பிட்டுப் பார்த்தான். பதிலில்லை. ஹாலைக் கடந்து இடது புறமிருக்கும் படுக்கையறைக்கும் சாமி அறைக்கும் நடுவில் நின்று மீண்டும் அழைத்தான். பதிலில்லை, படுக்கையறையிலிருந்து பிளாஸ்டிக் வாளியை நகர்த்தும் சப்தம் மட்டும் மெலிதாகக் கேட்டது.

மீண்டும் குரல் கொடுத்தான்.

படுக்கையறைக் கதவை மெதுவாக தயக்கத்துடனே தள்ளித் திறந்தான். அறையில் யாரும் இல்லை. பெரிய அறை. அலங்காரமான தேக்கு கட்டிலும் தலைப்பக்கம் விளக்குகள் வைத்து பிளஸ்டிக் பூக்களால் அலங்கரித்து அழகுடன் இருந்தது. ஒரு அடி உயரமுள்ள ஸ்பிரிங் மெத்தை மேலே காட்டன் போர்வையால் போர்த்தியிருந்தது. படுக்கையின் எதிரே ஐம்பத்தி மூன்று இஞ்ச் டிவியும் மரத்தால் அழகுற வடிவமைக்கப்பட்ட மையத்தில், முன்னும் பின்னும் இழுத்தும் ,சுவரில் சமமாக வைக்கும் விதத்தில் மாட்டியிருந்தனர். அறையின் இடது புற சுவரின் நடுவில் ஏசியும், மூன்று புற சுவரின் நடுவில் வண்ணமயமான விளக்குகளும் , வித்தியாசமான வடிவமைப்பில் சீலிங் பேனும் இருந்தது. வலது மூலையில் பாத்ருமின் கதவு லேசாகத் திறந்திருப்பதை இங்கிருந்தே பார்க்க முடிந்தது.

மேலும் உள்ளே நுழைவதற்குள் பாத்ரும் கதவு திறக்கப்பட்டு முழங்கால் மூட்டு தெரிய தூக்கி மார்புப் பகுதி வரை கட்டியிருந்த உள் பாவாடையும், தோள் மேல் போர்த்தியிருந்த பெரிய தேங்காய் பூ துண்டுடன் அனுஸ்ரீ வெளியே வந்தார். திருப்பதியை பார்த்ததும் புன்னகைத்து, “வாங்க, பாதி குளிக்கும் போது திடீர்னு தண்ணீ வரல.. அதான் போன் பண்ணேன்” என்றார்.

வெட்கமும் பதற்றமுமடைந்த திருப்பதி திகைத்தான்.

“ஸாரி, கூப்பிட்டு பார்த்தேன். பதிவில்லை. அதான் உள்ளார வந்துட்டேன்.”

“அது பராவாயில்ல. என் தப்புதான். வெளியே இருந்துக்கனும். நீங்க இவ்ளோ சீக்கிரம் வருவீங்கன்னு எதிர்பார்க்கல”

“வேலையில்லாம சும்மா புத்தகம் படிச்சிட்டிருந்தேன். அதான் உடனே வந்துட்டேன்.”

“புத்தகமெல்லாம் படிப்பீங்களா?”

“ம் , படிப்பேன். சரி, வந்த வேலைய பாக்கலாமா?”

கலகலவென சப்தமாகச் சிரித்தார்.

“ஓ..சாரி. வாங்க.. வந்த வேலைய பாருங்க” என்று பாத்ரூமுக்கு வழி விட்டார்.

பாத்ருமிற்குள் புகுந்து குழாய்களைத் திருகிப் பார்த்தால் சுத்தமாக தண்ணீரே வரவில்லை. சரி மாடி டேங்கில் தான் பார்க்க வேண்டுமென முடிவுக்கு வந்து திரும்பும் போது, தேங்காய்ப்பூ துண்டில்லாமல், மார்புப் பகுதியில் கைவைத்து முடிச்சிட்ட பாவடையை அவிழ்த்து கால்கள் வழியே நழுவ விட்டு அனுஸ்ரீ நிர்வாணமாக நெருங்கினார். சாதாரணமாக நல்ல உடையணிந்தாலே அழகாகத் தெரிவார். உடையில்லாமல் தினசரி பயிற்சி செய்த உடல் வனப்புடனும் ஈர்ப்புடனும் இருந்தார். எந்த ஆண்மகனும் தடுமாறும் நிலையில் மாசு மருவற்ற துல்லியமான, அருவருப்பில்லாத முழு உடல். சட்டென்று முதல் நாள் வேலைக்கு வந்த போது உறுத்தலாக உணர்ந்தது ஞாபகம் வந்தது. கண்கள் இரண்டும் வெகு ஆழமான, உறுதியான, சோகம் கலந்த அழைப்பு விடுத்ததை மனம் அறிந்தது வெளிப்பட்டது.

அந்நிலையில் திருப்பதியை கட்டிப் பிடித்தார்

ஒரு கணம் சபலம், மறுகணம் பதற்றமும் பயமும் தொற்றியது , திண்மையான மதர்த்த உடலின் அருகாமையும், ஹாமாம் சோப்பும் ஒருவித உடலின் வாசனையும் கலந்து தினறடித்தது, கைகளில், உடலின் உணர்ச்சியின் எழுச்சியால், உணர்ந்த திண்மையால் பாலுணர்வு தூண்டப்பட்டாலும் சில நொடிகளில் மனதை கட்டுப்படுத்தினான்

“விடுங்க.. என்ன இது? இப்படி உங்க வீட்டுக்காரர் பாத்தாருன்னா ரெண்டு பேருக்கும் கஷ்டம். எனக்கு கெட்டபெயரும் வந்துடும். கடைக்குத் தெரிஞ்சா வேலைக்கும் ஆபத்து, விட்டுங்க” என உதறினான். உதறுவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. நல்ல பலமான பிடியாகத் தெரிந்தது. கைகளை உயர்த்தி விட்டுவிடும் படி கெஞ்சினான். ஒரு நிமிடம் வரை அவரின் இறுகிய பிடி விலகாமலிருந்தது. கையைத் தூக்கியபடியே திருப்பதியும் வெகு அமைதியாக நின்றான்.

என்ன நினைத்தாரோ சட்டென்று முற்றிலும் விலகியவர், கண்ணீருடன் பெரும் குரலெடுத்து அப்படியே பாத்ரும் தரையில் அமர்ந்து உடல் குலுங்க தலை குனிந்து அழுதார்.

“பிளிஸ்.. எனக்கு உதவி செய்யுங்க. உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு!” என அழுதபடி இருந்தார்.

வெளியே போகலாமா வேண்டாமா என்ற முடிவுக்கு வர முடியாமல் தடுமாறினான் திருப்பதி . வெளியே வந்தவன் ஒரு முடிவெடுத்தான். போர்வையை எடுத்துக கொண்டு பாத்ருமிற்குள் நுழைந்து அனுவை முழுக்க போர்த்தி எழுப்பி ஆறுதலாக தட்டிக் கொடுத்து படுக்கையறைக்குள் மெத்தையில் அமரவைத்து, “நா வெளியே ஹால்ல சேர்ல உக்காத்திருக்கேன். டிரஸ் போட்டுகிட்டு வாங்க” என படுக்கையறையை விட்டு வெளியேறி ஹாலில் சேரில் அமர்ந்து என்னவாயிருக்கும் என்று சிந்திக்க ஆரம்பித்தான்.

இரண்டு நிமிடத்திற்குள் பெரிய பூப்போட்ட இறுக்கமான நைட்டியில் முகத்தை துடைத்தபடி வெளிவந்தவர், “உங்களுக்கு டீ யா, காபியா?” என்றார்.

“இப்பவா.. ம், சரி காபி போடுங்க. ப்ளாக் காபியா போடுங்க. சக்கரை பாதியா இருக்கட்டும்” என்றான்.

ஹாலிலிருந்து சமையலறை தெளிவாகத் தெரியும்படி கட்டப்பட்டிருந்தது. காபி போடுவதற்காக ஆயத்தம் செய்து கொதிக்கும் நீரை மௌனமாக உற்றுப் பார்ப்பது தெரிந்தது. ஆவி பறந்து முகத்தில் படிவதும் சில் அவுட் ஆக போட்டோ ப்ரேம் போலத் தெரிந்தது. ஆவி பறக்கும் காபியோடு வந்து முன்னாலிருந்த டீபாயில் வைத்து எனக்கு எதிரில் இருந்த சேரில் அமர்ந்தார்.

“எனக்கும் ப்ளாக் காபியா போட்டுகிட்டேன். இன்னிக்கு குடிச்சி பாக்குறேன். டேஸ்டு எனக்கு ஓகேன்னா இனி ப்ளாக் காபிதான்” என்றார்.

சங்கடமான புன்னகையுடன், “கொஞ்சம் கசப்பாக இருக்கும். பழகிட்டம்னா நல்ல பலன் தரும். பால் கலக்காத காபி ரெம்ப நல்லது” என்றான்.

சற்றே கலகலப்பான சூழ்நிலை உருவானது . மெல்ல பேச ஆரம்பித்தார்

“நீங்க நெனக்கிறது போல அவர் என்னாட புருஷன் இல்ல. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழுறோம். அஞ்சி வருடத்துக்கு முன்னாடி ரெண்டு பேரும் ஒரே கம்பெனியில சென்னையில வேலை பாத்தோம். புடிச்சி போய் எங்களுக்குள்ள பேசி ஒப்பந்தம் போட்டுக்கிட்டோம். கல்யாணம், குழந்தைங்க வேணாம். சேர்ந்து வாழலாம். நமக்குள்ள தோனுனா கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவெடுத்தோம். ரெண்டு பேருக்கும் சென்னை புடிக்கல. வேலை நேரமும் முன்னாடி பின்னாடி இருந்திச்சி. அவரோட சொந்த ஊர் மன்னார்குடி. இங்க தஞ்சாவூர்ல அவருக்குத் தெரிஞ்சவங்க காலேஜ்ல எனக்கு வேலையும், அவரு ஒர்க் ப்ரம் ஹோமும் வாங்கிகிட்டு மூனு வருசத்துக்கு முன்னாடிதான் தஞ்சாவூர் வந்தோம்.

வந்த புதுசுல ஒன்னும் பிரச்சன இல்ல. நல்லாத்தான் இருந்தாரு. இப்ப கொஞ்சநாளா எம்மேல சந்தேகப்படுறாரு. கல்யாணமும் , குழந்தையும் வேணாம் கடைசி வரை இப்படியே இருப்போம்ன்னு சொல்றதோட, சில சமயம் கடுமையா செயல்படுறாரு. வர வர நம்பிக்கை இழந்துட்டேன். நீங்க வேலைக்கு வந்துட்டு போன நாளா என்னோட போன எடுத்து பாக்குறாரு. அன்னக்கும் எனக்கும் அவருக்கும் சண்டை. சொல்லிப் பாத்தேன். நம்பவே இல்ல. நா என்னா பண்றது? அப்பா அம்மாவ விட்டுட்டு இவர நம்பி வந்துட்டேன். ரெம்ப கஷ்டம். இவரோட இனி இருக்க முடியுமான்னு தெரியல. அவரு பாக்கனும்னுதான் தெனம் உங்களுக்கு மெசேஜ் போட்டேன். சென்னைக்கு போயிருக்காரு. வர ஒரு வாரம் ஆகும்.”

“சரி, அதுக்கு எங்கிட்ட ஏன் இப்படி நடத்துக்கனும்? போன்ல கேட்டுருக்கலாம், வாட்சாப்புல மெசேஜ் போட்டுருக்கலாம்” என்றான்.

“செஞ்சிருக்கலாம். ஆனா, நீங்க வந்துட்டு போனதும் ஏற்பட்ட சண்டையும் , நீங்க எங்கிட்ட நடந்துகிட்ட விதமும் புடிச்சிப் போச்சி. பத்து நாளா உங்களப் பத்தி விசாரிச்சேன். உங்க வயசு, வீடு, பொண்டாட்டி , புள்ளங்க எல்லாம் தெரிஞ்சிகிட்டேன். உங்க முழு விவரமும் இப்ப எனக்குத் தெரியும். பழைய கம்பெனிக்கும் பேசிட்டேன் வேலை தர்றேன் சொல்லிட்டாங்க. அவருக்குத் தெரியாம ஏற்பாடு செஞ்சிருக்கேன்.

அதுக்கு உங்களுக்கும் என்ன சம்பந்தன்னு யோசிக்கிறது தெரியுது.

நா உங்ககிட்ட கேக்க போறது ஒன்னே ஒன்னுதான். கொஞ்ச நாள்ல வெளியூர் போய்டுவேன். உங்கள உட்பட யாருக்கும் தெரியாத ஊருக்கு. எனக்குத் தேவை வாழ்க்கையில ஒரு நல்ல பிடிப்பும் வாழ வேண்டிய உத்வேகமும் தர்ற நல்ல விஷயம். சரி, புருவத்த சுருக்கி மண்டை காய வேண்டாம். பத்துநாளுக்கு மேலா யோசிச்சி இந்த முடிவுக்கு வந்தேன். உங்க மூலமா எனக்கு குழந்தை வேணும், குழந்தை உருவானவுடனே நா கெளம்பிடுவேன். அப்புறம் ஒங்க கண்ணுலயே படமாட்டேன். இது உறுதி. ஒரு தடவ பண்ண தப்ப இன்னொரு தடவ செய்ய மாட்டேன். உங்களயும் பிரச்சனையில இழுத்து வுடமாட்டேன்” என்றார். பெருமூச்சு விட்டபடி சேரில் சாய்ந்து ஆசுவாசமாக தளர்ந்து கண்ணை மூடினார். மனதிலிருந்தவைகளை கொட்டியதால் முகம் மேலும் பிரகாசமாக ஒளிர்ந்தது. எதிர்பார்ப்புடன் நிறைவாக, புன்னகையுடன் இருந்தது.

ஆழ்ந்து அனுவை பார்தபடி காபியை குடித்து முடிந்து டீபாயில் வைத்து கைளை கோர்த்து நெற்றியில் தட்டிக் கொண்டவன், பத்து நிமிடங்களுக்கு மேலாக ஒன்றுமே சொல்லாமல் மனதிற்குள் நடக்கும் போராட்டங்களை ரசித்துப் பார்த்து முடிவெடுக்க முடியாமல் தடுமாறினான்.

மெல்ல தலை நிமர்ந்தவன் அனு அவனயே பார்த்தபடி இருந்ததை கண்டு வெட்கமடைந்து எழப்போனான்.

“இருங்க.. எங்க கெளம்புறீங்க? ஒடனே பதில் சொல்லனும்னு இல்ல. ரெண்டு நாள் கழிச்சி சொன்னாலும் போதும். சமயத்த பயன்படுத்தாத ஆண்பிள்ள நீங்கதான். வேற யாராவது இருந்தா இந்நேரம் வேல முடிஞ்சி போயிருப்பாங்க. உங்க திடமான மனசும் உடலும் எனக்கு ஒரே ஒரு தடவை போதும். வாழ்நாள் முழுக்க வாழ்த்துடுவன். நல்ல முடிவா சொல்லுங்க. மூணு நாள் காத்திருப்பேன். அப்புறம் நீங்க நெனச்சாலும் என்ன பாக்க முடியாது..!”

“சரி, நா கெளம்புறேன்” என்றபடி டூல்ஸ் பையுடன் வெளியே வந்து வாகனத்தில் அமர்ந்து மணி பார்த்தான். இரண்டரை ஆகியிருந்தது. பசியே அப்போதுதான் தெரிந்தது. மனதின் யோசனையாலும் அனுவின் பேச்சைக் கேட்டதாலும் ஒடுங்கியிருந்தது முழு வீச்சாய் கிளம்பியது. வீட்டிற்கு வண்டியைத் திருப்பி வந்து சாப்பிட்டான். மனம் மட்டும் போராட்டத்தில் இருந்தது. மனைவி கூட, “என்ன பலமான யோசனை.. சாப்பிடுங்க” என்றாள்.

என்ன சொல்வது, எப்படி சொல்வது புரியாமல் தவித்தான். இரண்டு நாட்கள் இருக்கிறதே பார்ப்போம் என்று நினைத்தான்.

மூன்று மாதம் கழித்து அனுவிடமிருந்து போன் வந்தது. “வெளியூர் கிளம்புறேன். என்னால தெந்தரவு நிச்சயமா இருக்காது. குழந்தை பிறந்ததும் நல்லா வளர்த்து படிக்க வைப்பேன். நீங்கதான் அப்பான்னு சொல்ல மாட்டேன். உங்க மனவிக்குத்தான் தேங்க்ஸ் சொல்லனும். அவங்களோட சம்மதம்தான் எனக்கு ஆசிர்வாதம். இந்த நம்பர் இனி வேல செய்யாது. பை”

ஆழ்ந்த மெளனத்தில் பதில் சொல்ல முடியாமல் தவித்தான், அதுவும் நல்லதே என மனதை திடப்படுத்த ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டான் திருப்பதி .

[email protected]

The post கத்திரிப்பூ கலர்ப் பெயிண்ட் அடித்த வீடு – கலித்தேவன் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

  •  

அங்கீகாரம் – மஞ்சுளா சுவாமிநாதன்

ஒரு பெரிய மொத்த விலை மளிகைக்கடையில் மாதாந்திர சாமான்களை எடுத்துக் கொண்டிருந்தார் ராதா. சற்றுத் தொலைவில் தண்ணீர் பாட்டில், தலையணை, டோர் மேட், பாத்திரங்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், ஒப்பனைப் பொருட்கள் என அந்தக் கடையில் அடுக்கப்பட்டிருந்த பல்வேறு இதர சாமான்களை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார் கிரிதர்.

“எங்க அம்மா அப்பாவுக்கு இந்த பித்தளை டபரா டம்ளர் செட் எடுத்திருக்கேன், எப்படி இருக்கு?” என்று கேட்டுக் கொண்டே ராதா தள்ளிக் கொண்டிருந்த வண்டியில் அந்த பொருட்களைச் சேர்த்தார் கிரிதர். சற்று நேரம் பொறுத்து, “யார்ட்லி பவுடர் எடுத்திருக்கேன். போன முறை அப்பா நம்ம வீட்டுக்கு வந்தபோது நல்லா இருக்குன்னு சொன்னாரு” என்று ஒரு டப்பாவையும், “என்சூர் எடுத்திருக்கேன். எங்க அம்மாவுக்கு முட்டி வலி இருக்குல்ல, இது குடிச்சா நல்லதாம்” என்று மற்றுமொரு டப்பாவையும் அந்த வண்டியில் சேர்த்தார்.

“ஏம்பா, அவங்க கல்யாண நாளுக்கு ஏற்கனவே புடவை வேஷ்டி எடுத்தாச்சு, இதெல்லாம் எதுக்கு? சரி, என்சூர், யார்ட்லி பரவாயில்லை, அவங்க வீட்டுல இல்லாத டபரா டம்ளரா?” என்று கேட்டார் ராதா.

“இதோ பாரு, அவங்க கிட்ட இருக்கா இல்லையாங்கறது பிரச்சனை இல்ல, நம்ம அவங்களுக்கு நிறைய செய்யுறோமா என்பதுதான் அவங்க எதிர்பார்ப்பு. உனக்கு அது புரியாது” என்று கிரிதர் ராதாவிடம் விளக்கினார். அவர்கள் திருமணமான புதிதிலிருந்து அம்மா அப்பாவின் ஆசைகளை பூர்த்தி செய்வதில் முனைப்பாக இருக்கிறார் கிரிதர். அவருக்குத் திருமணமாகி இருபது வருடம் ஆகப்போகும் தருவாயில், இன்றும் ஒரு சிறிய குழந்தை போல, மதர்ஸ் டே துவங்கி, ஆங்கிலப் பிறந்த நாள், நட்சத்திர பிறந்த நாள், திருமண நாள், என்று அனைத்திற்கும் வாழ்த்துகளும் பரிசுகளுமாய் போய் நிற்கிறார் கிரிதர்.

“டேய் ரகு, நாங்க போய் தாத்தா பாட்டிய பார்த்துட்டு வந்துடறோம். ரெண்டு நாள்தான். உனக்கு எக்ஸாம் இருக்கறதால உன்ன இங்க விட்டுட்டுப் போறோம். வீட்டுக்கு ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கூட்டிட்டு வந்து கலாட்டா பண்ணக் கூடாது என்ன?”

“சரிம்மா, நான் பார்த்துக்கறேன். கவலைப்படாம போயிட்டு வாங்க! நான் என்ன குழந்தையா? அம்மா, ஹாவ் ஃபன்” என்று ராதாவை அணைத்து வழியனுப்பி வைத்தான் ரகு. கல்லூரிக்குச் செல்லும் மகன் இருந்தும், மாமியார் மாமனார் வீட்டிற்கு செல்வதென்றால் ராதாவிற்கு அடி வயிற்றில் புளியைக் கரைத்தது. ஆரம்பத்தில் சில ஆண்டுகள் சேர்ந்திருந்த அவர்கள், கிரிதருக்கு ஹைதராபாத்தில் வேலை கிடைத்ததால் அங்கே குடிபெயர்ந்தனர். பல வருடங்கள் கழித்து சென்னை வந்த போது, மாமனார் வீட்டருகில், அதே சுற்றுவட்டாரத்தில், வேறு ஒரு வீட்டில் அவர்கள் வசித்து வந்தனர். சில ஆண்டுகள் முன்னதாக, திருச்சியில், ஓய்வூதியர்களுக்கான குடியிருப்பு ஒன்றில் சகல வசதிகளுடன் ஒரு வீட்டை வாங்கிக் கொண்டு அங்கே சென்று விட்டனர் ராதாவின் மாமியாரும் மாமனாரும்.

திருச்சியில் அவர்களைச் சந்தித்து அவர்கள் திருமண நாளன்று வாழ்த்து கூறி ஆசிகள் பெற கிரிதரும் ராதாவும் திருச்சியை நோக்கி காரில் பயணித்தனர்.

“குட் மார்னிங் மா! திருச்சி போயிட்டு இருக்கோம். ரகு தனியாதான் இருக்கான். அடச்சே… மறந்தே போயிட்டேன் பாரேன். ஹேப்பி பர்த்டே மா!” என்று தனது அம்மாவை வாழ்த்தினாள் ராதா.

“ஆண்டி பர்த்டேவையே மறந்துட்டியா நீ? வழக்கமா பொண்ணுங்கதானே இதெல்லாம் மறக்காம இருப்பாங்க? நீ ஏன்தான் இப்படி இருக்கியோ!” என்றார் நக்கலாக கிரிதர்.

“இதுல கூட ஆம்பளை, பொம்பளையா? நான் மறந்தா என்ன, என் அம்மாவே என்னை கால் பண்ணி உரிமையா அவங்க வாழ்த்தை வாங்கிக்கிட்டாங்க. உங்க அம்மா மாதிரி அடுத்த நாள் ஃபோன் பண்ணி திட்டல. அது என்ன உங்க அம்மா அப்பாவுக்கு கல்யாண நாளா இருந்தாலும் நம்மதான் முதல்ல வாழ்த்து சொல்லணும், நமக்கு கல்யாண நாளா இருந்தாலும் நாமளே கால் பண்ணி ஆசி வாங்கணும்? இந்த லாஜிக் எனக்குப் புரியல!”

“பெரியவங்களுக்கு, குறிப்பா, ஆண் குழந்தைகளை பெத்தவங்களுக்கு அவங்க பிள்ளைகள் மேல அதீத எதிர்பார்ப்பு இருக்கும். அவங்கள நாங்க எப்போதும் தாங்கணும்னு ஒரு எதிர்பார்ப்பு. எல்லா இடங்களிலும் அவங்கள முதன்மைப் படுத்தணும்னு ஒரு எதிர்பார்ப்பு. எப்படி நம்ம பிள்ளையாரை எல்லா பூஜைகளிலும் முதன்மையா வெச்சு வழிப்படறோமோ அந்த மாதிரி. என் அம்மா அப்பாதானே, செய்துட்டு போறேன் விடு!”

“அது இல்லைங்க… நீங்களும், உங்க அண்ணனும், உங்க பெத்தவங்களுக்காக எவ்வளவோ செய்யறீங்க! இருந்தாலும், அவங்க இன்னும் செய், எங்களுக்கு பாத பூஜை பண்ணு, இது உன் கடமை அப்டிங்கறது மாதிரி மிடுக்கா இருக்காங்க. அவங்களுக்கு பொருளாதார ரீதியா சுதந்திரம் இருக்கு, ரெண்டு பேருக்கும் பென்ஷன் நிறைய வருது, இல்லைன்னு சொல்லல. ஆனா, தன் சொந்த பசங்க, பேரன் பேத்தி மேல எந்த ஒரு ஈர்ப்பும் இல்லாம எப்படி இப்படி அவங்களால இருக்க முடியுது? அப்பப்போ வந்து ஐநூறு, ஆயிரம்னு பாக்கெட் மணி கொடுத்தா போதுமா?”

“இதெல்லாம் ரொம்ப யோசிக்காத ராதா! என்னால முடிஞ்ச அளவுக்கு அவங்களுக்கு நான் செய்துட்டுதான் இருப்பேன். என் வருத்தமே, அவங்க உரிமையா என்கிட்ட எதுவும் கேட்க மாட்டேங்கறாங்க அப்டிங்கறதுதான். நீ இப்போ இப்படி பேசற, நாளைக்கு ரகு கிட்ட எப்படி நடந்துக்கப் போறேங்கறத நானும் பார்க்கத்தானே போறேன்.”

“நான் ரகுவை இப்போ எப்படி நடத்தறேனோ அப்படியேதான் அவன் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் நடத்துவேன். ஒரு வருத்தம்னா உடனே பேசித் தீர்த்துப்பேன். மனசுலயே வெச்சு புழுங்க மாட்டேன். அன்பையும் எப்போதும் போலதான் காட்டுவேன். ஐம்பது வயசானாலும் ரகு என் புள்ளதானே? என் புள்ள ஆறு வயசுல அவன் கைப்பட செய்து ஒரு பர்த்டே கார்டு கொடுத்தான், அதை இன்னும் நான் பத்திரமா வெச்சிருக்கேன். அஞ்சு வருஷம் கழிச்சு அவன் எனக்கு வைரத்தோடு போட்டா சந்தோஷப்படுவேன்.. இல்லன்னு சொல்லல. ஆனா, குறைந்தபட்சம் என் பிறந்த நாளை அவன் ஞாபகம் வெச்சுகிட்டு ஒரு ஃபோன் கால் பண்ணினாலும் சந்தோஷப்படுவேன். எனக்கு எந்த எதிர்பார்ப்பும் அவன் கிட்ட கிடையாதுங்க. ”

“ரொம்பப் பேசற… எல்லாத்தையும் நானும் பார்க்கத்தான் போறேன். சரி, சரி, வீட்டுக்கு வந்துட்டோம், அவங்க என்ன சொன்னாலும் நீ எதுவும் பேசாத, நான் பேசிக்கறேன். அமைதியா இரு!” என்று வழக்கம்போல அறிவுரைகள் கொடுத்துவிட்டு, ஒரு திரை விழுந்தது போல தன்னை உள்ளிழுத்துக் கொண்டார் கிரிதர்.

வீட்டிற்கு சென்றவுடன் இருவருக்காகவும் வாங்கியிருந்த பரிசுப் பொருட்களைக் கொடுத்து ராதாவும் கிரிதரும் பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்தனர். “அம்மாவுக்கு அபிவாதயே சொல்லுடா! புள்ள அம்மாவுக்கு சொல்லலாம், உனக்கு தெரியும்ல?” என்று அபிவாதயே கேட்டு வாங்கிக் கொண்டார் கிரிதரின் அம்மா . “இந்த என்சூர் ரொம்ப நல்லதாமே, எனக்கு மாசா மாசம் ஒண்ணு ஆன்லைன்ல ஆர்டர் பண்ணிக் கொடுத்திடு,” என்று சற்று உரிமையாக அவரது தாயார் கேட்டவுடன் கிரிதருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. ‘எங்க அம்மா எப்படி கேட்கறாங்க பார்த்தியா!’ என்பது போல ராதாவைப் பார்த்துச் சிரித்தார் கிரிதர். “அடேங்கப்பா, நல்ல வாசனைடா இந்த பவுடர்!’ என்று அப்பாவும் அவர் பங்கிற்கு பவுடரை எடுத்து போட்டுக்கொண்டார். அதே சந்தோஷத்துடன் ஓடிச்சென்று பித்தளை டபரா டம்ளர்களில் சூடாக காபி எடுத்து வந்தார் கிரிதரின் அம்மா.

எல்லாம் சுமூகமாக போய்க்கொண்டிருக்க, “ராதா, உன் தம்பி சேகர் லண்டன்லதானே இருக்கான்? எப்படி இருக்கான் அவன்?” என்று ஆரம்பித்தார் கிரிதரின் அம்மா.

“நல்லா இருக்காம்மா. PR வேற கிடைச்சிடுச்சு அவனுக்கு.”

“ம்… ஆமாம், நீ எப்போ லண்டன் போற?”

“நான் ஏன் லண்டன் போகப் போறேன்?”

“யார் கிட்ட பொய் சொல்ற? நீ கூடிய சீக்கிரம் லண்டன் போயிடுவ, கிரிதர் உன்ன கூட்டிட்டுப் போயிடுவான். கல்யாணம் ஆன அன்னிக்கு உன் பக்கம் சாஞ்சவன்தானே அவன்? இன்னும் நிமிரவே இல்லயே! நீ ஆசைப்பட்டா என்ன வேணும்னாலும் செய்வான் அவன்” என்றார் கிரிதரின் அம்மா.

ராதா அதிர்ந்து போனாள். இன்றும் அவளை புதிய மருமகள் போல அவர்கள் நடத்துவதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுவும் உன் பக்கம் சாஞ்சுட்டான் போன்ற வார்த்தைகள் மிகவும் எரிச்சல் ஏற்படுத்தியது.

“என்னம்மா இது.. உன்கிட்ட சொல்லாம லண்டன் போவேனா என்ன? இப்போ எதுக்கு சம்பந்தம் இல்லாத பேசற?” என்று இடைமறித்தார் கிரிதர்.

“எனக்குத் தெரியும். நீங்க தாஜ் மகால் பார்கல? ஜெய்பூர் போகல? உங்க ஹனிமூனுக்கு கொடைக்கானல் போகல? என்ன உங்க கூட கூட்டிட்டு போனீங்களா என்ன? எனக்கு எல்லாம் தெரியும், நான் என்ன லூசா?” என்று திடீரென பல நாள் தேக்கத்தை வெளியே கொண்டு வந்து சீறினார் கிரிதரின் அம்மா.

“அம்மா, ஹனிமூனுக்கு உன்ன கூட்டிட்டு போக முடியுமா என்ன? சரி, அதை விடு, நீ கூட சிங்கப்பூர், மலேசியா, ஶ்ரீலங்கா , கைலாஷ் எல்லாம் போயிருக்க, என்ன கூட்டிட்டு போனியா என்ன? அண்ணா கூட நிறைய இடங்களுக்கு டிராவல் பண்ணியிருக்கார், அவன ஏதாவது கேட்டியா?” என்றார் கிரிதர் சற்று பொறுமையிழந்து.

“நாங்க ரிடயர் ஆகி எங்க பணத்துல போயிட்டு வந்தோம். நீ ஒண்ணும் எங்கள அழைச்சுட்டு போகல! இப்போ உன் அண்ணனைப் பத்தி பேசாத, நான் உன் கூடதானே பேசிட்டு இருக்கேன்!” என்றார் காட்டமாக கிரிதரின் அம்மா.

“அது எப்படி பேசாம இருக்க முடியும்? நாங்க லோக்கல்ல டிரிப் போனா உங்களுக்கு கோபம் வருது. அவர் வெளிநாடு போனா கூட உங்களுக்கு கோபம் வர மாட்டேங்குது, என்ன நியாயம் இது?” என்று தன்னையும் மீறி கேட்டார் ராதா.

“கொஞ்சம் சும்மா இருக்கியா லட்சுமி! இத பத்தி பேசற நேரமில்லை இது!” என்று கிரிதரின் அப்பா சற்று குரலை உயர்த்தவும், மற்ற மூவரும் கூட்டத்தை கலைத்து நகர்ந்தனர். ராதாவிற்கு படபடப்பு அடங்கவில்லை. அந்த குடியிருப்பின் கீழ்தளத்தில் வேகமாக நடக்க ஆரம்பித்தாள். அப்போது அவள் அலைபேசியில் ரகு அழைத்தான்.

“ரகு, பாருடா, எதிர்பார்த்த மாதிரியே உங்க பாட்டி பிரச்சனை பண்ணிட்டாங்க!” என்று நடந்ததை ரகுவிடம் கூறினார் ராதா.

அவன் அனைத்தையும் பொறுமையாக கேட்டுவிட்டு, “உன்ன நான் போகாதன்னு அப்பவே சொன்னேன். நீ கேட்கல. அப்பா மட்டும் போயிருந்தா இந்த பிரச்சனையே வந்திருக்காது தெரியுமா?” என்றான்.

“அப்பா வருத்தப்படுவாருன்னுதான் போனேன். அவங்க அப்படி பேசினது கூட எனக்கு கஷ்டமா இல்ல ரகு. அப்பா மனசு எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும் சொல்லு? அதைத்தான் என்னால ஜீரணிக்க முடியல. ஒரு கொழந்தை மாதிரி, எங்க அப்பாவுக்கு, எங்க அம்மாவுக்குன்னு பார்த்து பார்த்து வாங்கினார். கிட்ட தட்ட நானூறு கிலோ மீட்டர் வண்டி ஓட்டிட்டு வந்த அந்த மனுஷன் எதிர்பார்க்கறது எல்லாமே ஒரு அங்கீகாரம்தானே ரகு? அது கூட கிடைக்காட்டி எப்படி சொல்லு?”

“அம்மா, இப்படி யோசி, நம்ம படிச்ச ஸ்கூல்ல இருக்கற டீச்சர்ஸ்க்கு எல்லாம் நம்ம மேல ஒரு அபிப்பிராயம் இருக்கும். ஒரு இருபது வருஷம் கழிச்சு, அந்த ஸ்கூலுக்கு அவங்க எதிர்பார்க்காத ஒரு துறைல சாதிச்சுட்டு போனா அதை அவங்களால ஏத்துக்க முடியுமா சொல்லு? அப்படியே அவங்க ஏத்துக்கிட்டாலும், அந்த சாதனையை மனசார அங்கீகரிக்க முடியுமா? நிச்சயமா முடியாது.

அது மாதிரிதான் உங்க உறவும். கல்யாணம் ஆன புதுசுல அவங்க உன்னை எடை போட்டு வெச்சிருப்பாங்க. இருபது வருஷத்துல நீ என்ன தான் மாறினாலும் அவங்ககிட்ட இருந்து அங்கீகாரம் கிடைக்கிறது சிரமம். அதை முதல்ல நீ புரிஞ்சுக்க. அப்புறம், அப்பாவ நினைச்சு ரொம்ப கவலைப்படாத, ஹீ வில் பீ ஆல்ரைட். நீயும் நானும் போடாத சண்டையா? அதனால நான் என்ன மனசுடஞ்சா போயிட்டேன்? அப்பா இப்போ பாட்டி கையால தோசை சாப்டுட்டு இருப்பார். நீயும் பக்கத்துல உள்ள கிருஷ்ணா பவன்ல சாப்டுட்டு, கோபமா ராத்திரி படுத்துட்டு, சந்தோஷமா கார்த்தால எழுந்துக்கோ,” என்று தொண்டுக் கிழவன் போல அசாத்தியமான அறிவுரை கூறினான் ரகு.

அப்போது அருகிலிருந்த கோயில் மணியோசை கேட்க, “கடவுளே! அவர் அம்மா அப்பா கிட்டேயிருந்து கிரிதர் எதிர்பார்க்கும் அங்கீகாரம் அவருக்கு சீக்கிரம் கிடைக்கட்டும்!” என்று ஒரு பிராத்தனையை வைத்த வண்ணம் கிருஷ்ணா பவனை நோக்கி முகமலர்ச்ச்யோடு நடந்தார் ராதா.

[email protected]

The post அங்கீகாரம் – மஞ்சுளா சுவாமிநாதன் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

  •  

ப்ராங்கி ராணியார் – மீ.மணிகண்டன்

காலை நேரம் சூரியன் இப்போதுதான் மெல்ல மேலே ஏறிக் கொண்டிருந்தான். ஆற்றோரம் அமர்ந்துகொண்டு ப்ளாப் … ப்ளாப் … ப்ளாப் … எனத் தண்ணீரில் தன் கால்களால் தாளம் போட்டுக் கொண்டிருந்தது ப்ராங்கி என்ற அந்தத் தவளை. தன்னுடைய குழந்தைகளான தலைப்பிரட்டைகள் வேகமாக நீந்துவதை கவனித்துக் கொண்டிருந்தது.

பட … பட … பட்… பட … சிறகடித்துக் கொண்டு ப்ராங்கி இருந்த இடத்திற்கு சற்றுத் தொலைவில் வந்து நின்றது அந்த வெண்புறா. கண்கள் கூசுமளவிற்கு வெண்மை. ப்ராங்கி புறாவைக் கண்டது. புறாவின் பேரழகும் பளீர் வெண்மையும் ப்ராங்கியை வியப்பில் ஆழ்த்தியது. புறா மிகவும் தாகத்தோடு இருப்பது போலத் தெரிந்தது.. காரணம் தன் சிவந்த சிறிய அலகால் தண்ணீரை வேகவேகமாகப் பருகியது.

அதே நேரம் ப்ராங்கியின் குழந்தைகளில் இருவர் ப்ராங்கியிடம் நீந்தி வந்து “அம்மா, அந்தப் பறவை எங்களை அலகால் தீண்டிவிட்டது எங்களுக்கு வலிக்கிறது” என்று தங்களின் வால்பகுதியைக் காட்டி முறையிட்டன. காயத்தோடு வந்த தன் குழந்தைகளைக் கண்ட ப்ராங்கிக்கு கோபம் தலைக்கேறியது. துள்ளிக் குதித்து புறா நின்ற இடத்திற்குச் சென்றது.

“ஏய்… நீ யார்? எங்கிருந்து வருகிறாய். இந்த ஆற்றங்கரையில் இதுவரை உன்னை நான் கண்டதில்லை” என்று புறாவிடம் கேட்டது ப்ராங்கி.

“என் பெயர் டிப்லர், நானும் என்னுடைய தோழிகளும் பல மைல்களுக்கு அப்பாலிருந்து வந்திருக்கிறோம். நாங்கள் எல்லோரும் பந்தயப் பறவைகள். என் தோழிகள் சற்று தொலைவில் இளைப்பாறுகின்றார்கள். நான் தாகத்திற்குத் தண்ணீர் தேடி இங்கே வந்தேன்” என்றது டிப்லர் என்ற அந்த வெண்புறா.

“வந்தது சரி, நீர் பருகும்போது கவனமாக இருக்கக்கூடாதா? பார் … நீ உன் அலகால் என் குழந்தைகளைக் காயப்படுத்தி விட்டாய்” என்று அழுதுகொண்டிருந்த தன் குழந்தைகளைக் காட்டியது ப்ராங்கி.

“நான் நீர் அருந்தும்போது அவர்கள் குறுக்கே வந்துவிட்டார்கள்” என்றது டிப்லர் மிகச் சாதாரணமாக.

 “அவர்கள் விபரமறியாத சிறு பிள்ளைகள் நீதானே கவனமாக இருக்க வேண்டும்?” என்றது ப்ராங்கி.

 “அடடா ரொம்பப் பேசாதே நான் நீர் அருந்துகையில் எனக்கு இடைஞ்சலாக வந்தது அவர்களின் குற்றம்” என்று குரலை உயர்த்தியது டிப்லர்.

“கவனக் குறைவாக இருந்துவிட்டு மேலும் உன் தரப்பில் தவறில்லை எண்பது போலப் பேசுகிறாயே?”

“போதும் நிறுத்து. நானும் என் தோழிகளும். இது போல் பல நீர் நிலைகள் கண்டு கடந்து வந்தவர்கள். எனக்கு நீ கவனத்தைப் பற்றி பாடம் எடுக்க வேண்டாம். நீயும் உன் பிள்ளைகளும் இந்த அழுக்கு சேற்றுப் பகுதியை விட்டால் வேறிடம் அறியாதவர்கள்.”

பதிலுக்கு பதில் பேசும் டிப்லரிடம் பேசிப் பயனில்லை என்றுணர்ந்தது ப்ராங்கி. தன் காயப்பட்ட குழந்தைகளை அழைத்து கரையோரம் இல்லாமல் தூரமாகச் சென்று விளையாடும்படி சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர எண்ணியது.

“நாளை நானும் என் தோழிகளும் இங்கே வந்து நீராடிவிட்டு புறப்படுவோம். அப்போது நீயும் உன் பிள்ளைகளும் இன்றுபோல வந்து தொந்தரவு செய்யாதீர்கள்” என்று கட்டளையிட்டுச் சொன்னது டிப்லர்.

அமைதியாகச் சென்ற ப்ராங்கியை வீணாக வம்பிழுப்பதுபோல இருந்தது டிப்லரின் கட்டளை. ப்ராங்கி மௌனம் களைந்து, “நீங்கள் வந்து நீராடிவிட்டு செல்லுங்கள் அதற்காக நாங்கள் இருப்பது தொந்தரவு என்று எப்படி நீ சொல்லலாம்?” என்று படபட வென தன் ஆதங்கத்தைக் கொட்டியது.

“ஏய் … நாங்கள் ஒரு புதிய பந்தயத்திற்கு தயாராகிறோம். எந்த விதமான தொந்தரவும் இல்லாமல் முழு கவனத்துடன் நாங்கள் செயல்படவேண்டும். உனக்கு பந்தயம் என்றால் என்னவென்று தெரியுமா? எப்படித் தெரியும்? பறப்பதற்கு உன்னிடம் இறக்கைகள் இருந்தால்தானே நீ பந்தயங்களில் கலந்துகொள்ள முடியும்? உன் அழுக்கு நிறமெங்கே … என் வெண்மை நிறமெங்கே … என் அழகுக்கும் திறமைக்கும் நீ சிறிதும் இணை இல்லை. வழியை விடு … சொன்னதை கவனத்தில் கொள்” என்று சொல்லிவிட்டு பட படவென சிறகடித்துப் பறந்தது டிப்லர்.

அன்று முழுவதும் அமைதியற்ற மனநிலையில் திரிந்து கொண்டிருந்தது ப்ராங்கி. மாலை நேரம். சூரியன் தன் வீட்டிற்கு பயணித்துக் கொண்டிருந்தான். மௌனமாகக் கரையோரம் அமர்ந்திருந்தது ப்ராங்கி. முகத்தில் சோகம் நிறைந்திருந்தது. மீலு முதலை வசிக்கும் ஆற்றுப்பகுதியில்தான் ப்ராங்கியும் வசித்து வருகின்றது. தனது முதுகுச் சவாரிக்கு விலங்குகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மீலு சலனமில்லாமல் அமர்ந்திருக்கும் ப்ராங்கியைக் கண்டது.

“ஏய் ப்ராங்கி … எப்பவும் மகிழ்ச்சியா துள்ளிக் குதிச்சிட்டிருப்ப… இப்ப என்ன … முகத்தை உம்முன்னு வச்சிருக்க? உன் குழந்தைகள் எல்லோரும் நலம்தானே?” என்று ப்ராங்கியின் மௌனத்தை விசாரித்தது மீலு.

“என் குழந்தைகள் எல்லோரும் நலமாக இருக்கிறார்கள் மீலு …” என்று கூறிவிட்டு சற்றுநேர மௌனத்திற்குப் பின் “ஏன் மீலு, நான் ரொம்ப அசிங்கமா, விகாரமா இருக்கேன் இல்ல?” என்று கேட்டது. விட்டால் கண்ணீர் விட்டு அழுதுவிடும் அளவிற்கு ப்ராங்கி தனக்குள் சோகத்தைப் பொத்தி வைத்திருந்ததைப் புரிந்துகொண்டது மீலு. ப்ராங்கி கேட்ட கேள்விக்கு என்ன பதில்சொல்வதென்று தடுமாறியது, காரணம் ப்ராங்கி எப்போதும் போலத்தான் இப்போதும் இருக்கிறது. ஏன் இந்தத் திடீர் மன உளைச்சல் என்றறிய முற்பட்டு, “நீ ஒண்ணும் அப்படி இல்ல … சரி நான் கேட்பதற்கு பதில் சொல்”

“என்ன?” என்று சோகம் மாறாமல் வினவியது ப்ராங்கி.

“திடீர்னு உனக்கு ஏன் இந்த மனக்குழப்பம்?” என்று கேட்டது மீலு.

சிறிய மௌனத்திற்குப் பிறகு அன்றையதினம் காலைப் பொழுதில் ஆற்றங்கரைக்கு புதுவரவாக வந்த வெண்புறாவான டிப்லரைச் சந்தித்த கதையைச் சொல்லத் தொடங்கியது ப்ராங்கி. “இன்று காலை வரை எனக்கு இந்த குழப்பம் இல்ல மீலு. அந்த டிப்லர்தான் அவள் மிகவும் அழகானவள் என்றும், பந்தயங்களில் கலந்துகொண்டு பரிசு வாங்குவாள் என்றும் சொல்லி, நான் அழகில்லாதவள் என்றும் போட்டி பந்தயங்களில் பங்கெடுக்கும் திறனற்றவளேன்றும் சொன்னாள்.  யோசித்தேன், டிப்லர் சொல்வதும் உண்மைதானே. அவள் எவ்வளவு வெண்மையாக இருக்கிறாள் தெரியுமா? அப்படியே நிலாவில இருந்து இறங்கி நேரே இந்தக் கரைக்கு வந்தவள் மாதிரி இருந்தாள். என்னைப்பார் சேறும் சகதியோடும் செடி கொடிகள் மண்டிய இந்த ஆற்றோரம் வாழ்ந்து கொண்டு இருப்பதால் என் புறத்தோலும் ஏறக்குறைய அந்த அழுக்கு நிறத்திலேயே இருக்கிறது. மேலும் அவள் அளவுக்கு உயர உயரப் போகவோ பல மணிநேரங்கள் தொடர்ந்து பறக்கவோ என்னிடம் இறக்கைகள் கிடையாது. இருந்தால்தானே பந்தயங்களில் பங்கெடுக்க முடியும்?” என்று கூறி புன்னகை மறந்த தன் பார்வையை மீண்டும் ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரின் மீது செலுத்தியது.

ப்ராங்கி சொன்னவற்றை கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த மீலு பதில் பேசத் தொடங்கியது. “ப்ராங்கி, இப்பொ நான் எது சொன்னாலும் அதில் இருக்கும் உண்மை உனக்குப் புரியாது, மாறாக தற்காலிகமாக உனக்கு ஆறுதல் சொல்வது போலத்தான் தோன்றும். உன் மனமும் அமைதி கொள்ளாது. ஆனால், நான் கேட்பதற்கு மட்டும் பதில் சொல். டிப்லர் நாளை இங்கே வருவாளா?”

“ஆமாம். அவள் ஒரு பந்தயத்திற்காகப் பறந்து வந்தவள் நீர் அருந்துவதற்காகக் காலையில் இங்கே வந்தாள். இந்த இடத்தில தண்ணீர் நிறைய இருப்பதைக் கண்டுவிட்டு தன் தோழிகளோடு நாளை மீண்டும் இங்கே நீராட வருவதாகச் சொல்லிச் சென்றிருக்கிறாள்.”

“சரி … உனக்கும் டிப்லருக்கும் எப்படி பேச்சு தொடங்கியது, என்னென்ன பேசினீர்கள் என்பதை தொடக்கத்திலிருந்து சொல்வாயா?” என்று கேட்டது மீலு.

“உன்னிடம் சொல்லாமலா … சொல்கிறேன் கேள்” என்று தொடங்கிய ப்ராங்கி காலையில் தனக்கும் டிப்லருக்கும் இடையில் நடந்த உரையாடல், குழந்தைகளுக்கு டிப்லரால் ஏற்பட்ட காயம், தனது கோபம், கொந்தளிப்பு, ஆதங்கம், டிப்லர் குறையாகச் சொன்ன தன் அழகு, நிறம், தன் இருப்பிடம் மற்றும் டிப்லரின் பந்தயம், தோழிகள், டிப்லரின் கட்டளை என்று அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தது. நிறைவாக, “ஏன் மீலு, சேற்றுப் பகுதியில் வாழ்வது கேவலமா?” என்று தாழ்ந்த குரலில் கேட்டது ப்ராங்கி.

“அப்படியொன்றும் இல்லை. இயற்கையில் எல்லா இடங்களும் சமம்தான். மேலே பறந்து களிக்கும் டிப்லர் போன்றோரின் பார்வையில் வேண்டுமானால் பேதங்கள் இருக்கலாம். உயிர்கள் வாழும் இடங்களில் பேதங்கள் இல்லை.”

“ம்… நீ சொல்லிவிட்டாய். கேட்டுக்கொண்டிருந்த என்னால் அதை ஜீரணிக்க முடியவில்லை” என்று ப்ராங்கி சொன்னபோது அதன் கண்களில் நீர் நிறைந்திருந்தது.

“அழாதே ப்ராங்கி. நாளை டிப்லர் வரட்டும். பேசுவோம்” என்ற மீலு தனது முதுகுச் சவாரிக்கு பயணிகள் யாரும் வருகிறார்களா என்று பாதையைப் பார்த்தது. ப்ராங்கி தன் தலைப்பிரட்டைகளை உணவு உண்ண அழைத்துக் கொண்டிருந்தது.

மறுநாள் அதிகாலையில் சொன்னதுபோல தன் தோழிகளுடன் ஆற்றங்கரைக்கு நீராட வந்தது டிப்லர். டிப்லரும் அதன் தோழிகளும் நீர்நிலையின் அருகில் வரிசையாக நின்று நீராட ஆயத்தமானார்கள். இதற்காகவே காத்திருந்த மீலு அங்கே வந்து, “வாருங்கள் விருந்தாளிகளே, … நீங்களெல்லாம் யார் … உங்களை நான் இதுவரை கண்டதில்லையே?” என்றது.

“என் பெயர் டிப்லர். நாங்கள் பந்தயப் பறவைகள்” என்றது டிப்லர்.

“சரி சரி… என்ன வேலையாக இங்கே வந்திருக்கிறீர்கள்?”

“நாங்கள் நீராட வந்திருக்கிறோம். நீராடிவிட்டு புதிய பந்தயத்திற்கு புறப்படப் போகிறோம்.”

“மகிழ்ச்சி… உங்கள் பந்தயம் சுகமாக இருக்கட்டும். ஆனால், இங்கே நீங்கள் நீராடுவதற்கு முன் எங்கள் ராணியாரிடம் அனுமதி பெற வேண்டும் பெற்றுவிட்டீர்களா?” என்று கேட்டது மீலு.

“ராணியா… யார் அது? அனுமதி பெறுவது பற்றி எனக்கு எதுவும் தெரியாதே” என்றது டிப்லர்.

“கொஞ்சம் பொறுங்கள் எங்கள் ராணியார் இங்கேதான் இருக்கின்றார் நான் அழைக்கிறேன்” என்று கூறி “ப்ராங்கி மகாராணியாரே, கொஞ்சம் வெளியே வாருங்கள்” என்று உரக்கச் சொன்னது மீலு.

இதனைச் செவிகளில் வாங்கிய ப்ராங்கி வியப்புடன் தன் இருப்பிடத்திலிருந்து துள்ளிக் குதித்து வெளியில் வந்தது. டிப்லர் மற்றும் அவளின் தோழிகளையும் மீலுவையும் கண்டு அப்படியே நின்றது ப்ராங்கி.

மீலு தொடர்ந்தது, “மகாராணி, இவர்கள் இங்கே நீராடவேண்டுமாம் நீங்கள் அனுமதிப்பீர்களா?”

மீலுவின் இந்தக் கேள்வியால் குழப்பமடைந்தது ப்ரங்கி. தான் ராணியுமில்லை தன்னுடைய அனுமதியும் தேவையில்லை இருந்தாலும் மீலு ஏன் இப்படிக் கேட்கிறான் என்று ஒரு கணம் யோசித்தது, சரி இதில் ஏதோ பொருள் இருக்கிறது என்று புரிந்துகொண்ட ப்ராங்கி, “அதை நீ கேட்டால் போதுமா? நீராட வந்தவர்களல்லவா என்னிடம் கேட்க வேண்டும்!” என்றது.

டிப்லரும் குழப்பம் கொண்டது. மீலுவிடம், “இவர்தான் உங்கள் ராணியா? நான் நேற்று இவர்களிடம் பேசினேன் ஆனால், அப்போது அவர்கள் இதைச் சொல்லவில்லையே” என்றது.

“எங்கள் ராணியார் தற்பெருமையை விரும்ப மாட்டார்கள். நீங்கள் வந்த வேலையைப் பாருங்கள்” என்றது மீலு.

ப்ராங்கியிடம் தயங்கித் தயங்கி வந்தது டிப்லர். “வணக்கம் ராணியே” என்று தலை வணங்கியது “மன்னிக்க வேண்டும், நேற்று நான் உங்களைப் புரிந்து கொள்ளாமல் பேசிவிட்டேன். இப்போது நாங்கள் இங்கே நீராட அனுமதி தருவீர்களா?” என்று கேட்டது.

“யாரையும் உதாசீனப்படுத்தும் பழக்கம் எனக்கில்லை. நீங்கள் நீராடி விட்டுச் செல்லலாம்” என்று சுருக்கமாகப் பதில் சொன்னது ப்ராங்கி.

டிப்லரும் தோழிகளும் நீராடிவிட்டு, மீலு மற்றும் ப்ராங்கி இருவரிடமும் புறப்படும் முன் விடை பெற்றார்கள். அவர்களை வாழ்த்தி வழியனுப்பினார்கள் மீலு மற்றும் ப்ராங்கி.

புறப்பட்ட சில நொடிகளில் தங்களின் சிறகுகளால் காற்றை உந்தித்தள்ளி மேலே மேலே பறந்து கொண்டிருந்தார்கள் டிப்லர் மற்றும் குழுவினர். டிப்லரின் சிறகுகள் அசைந்தாலும் சிந்தனை அசையாமல் நேற்றைய நிகழ்வை அசைபோட்டது “நேற்று நான் இத்தனை பேசியதற்கு என்னை அந்த ஆற்றில் நீராடக்கூடாது என்று சொல்லியிருக்கலாம் ஆனால், ப்ராங்கி அப்படிச் சொல்லவில்லை. பார்வைக்கு எளிமையாக இருந்தாள் ப்ராங்கி என்று என்னவெல்லாம் பேசிவிட்டேன். இனியொரு முறை யாரிடமும் இப்படி நடந்துகொள்ளக் கூடாது” என்று தனக்குள் எண்ணிக்கொண்டே பறந்தது டிப்லர்.

டிப்லர் குழுவினர் சென்ற பிறகு மீலுவிடம் கேட்டது ப்ராங்கி “ஏய்.. மீலு, ஏன் என்னை ராணி என்று அவர்களிடம் சொன்னாய்?”

“நேற்று நீ அழுது கொண்டிருந்தாய், இப்போது மகிழ்ச்சியுடன் இருக்கிறாய். இந்த மகிழ்ச்சியை உன்னிடம் பார்க்கத்தான் அப்படிச் சொன்னேன்” என்றது மீலு.

“ஆனால், நீ சொன்னதில் உண்மை இல்லையே?”

“உண்மை இல்லை என்பது உனக்கும் எனக்கும் தெரியும், டிப்லருக்குத் தெரியாது. திரும்பிச் செல்லும்போது டிப்லர் ஒரு பாடம் படித்திருக்கும்” என்றது மீலு.

“அது என்ன?”

“நேற்று உன்னை உதாசீனப் படுத்திப் பேசிய அதே டிப்லர் இன்று உன்னை மதித்துப் பேசினாள். டிப்லருக்கு நீ யார் என்பது அவசியமில்லை அவளுடைய மதிப்பு உயர்ந்தது என்று உன்னிடம் காட்டவேண்டும் என்பதே அவளது நோக்கமாக இருந்தது. இன்று நீயும் மதிப்பில் உயர்ந்தவள் என்று தெரிந்தபோது உன்னிடம் பணிந்து பேசினாள்” என்றது மீலு.

“நானும் ஒன்றைப் புரிந்துகொண்டேன் மீலு”.

“அது என்ன?”

“டிப்லரின் மதிப்பைக் காண்பிக்கத்தான் அவள் என்னை உதாசீனப் படுத்தியிருக்கிறாள். அப்படியானால் உண்மையில் என்னிடம் ஒரு குறையுமில்லை. இது புரியாமல் நேற்று முழுவதும் அழுதுகொண்டே என் பொழுதை வீணாக்கிவிட்டேன்” என்று சிரித்தது ப்ராங்கி.

[email protected]

The post ப்ராங்கி ராணியார் – மீ.மணிகண்டன் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

  •  

ஷினோலா கவிதைகள்

அந்தூரத்து நினைவு

சற்றும் நகர்த்த முடியா
இந்நினைவை
இழுத்து இழுத்து
இவ்வளவு தூரம் வந்துவிட்டேன்

இனி வெறும்
சறுக்குப் பாதைகளே
உருட்டி விட்டால்
சிதறுவதற்கு இருக்கின்றன
ஆயிரம் வழிகள்

அதில் எதிலாவது விழுந்து
எத்துண்டாவது உடைந்தாலும்
ஏழு ஜென்மத்துக்கும் மூச்சிழுத்து
பிழைத்துக்கொள்ள மாட்டேனா?

கரைசேரா கப்பல்கள்

தெருமுனை தாண்டிடாத
காகிதக் கப்பலை
தெருவெங்கும் விட்டு
யார் கப்பல் கரை சேரும் என்று
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்

அங்கும் இங்குமாய் அது தத்தளித்து
பார்க்கும் எங்களை அலைக்கழித்து
சாரல் மழையில் சற்றே சாய்ந்து
கொஞ்சம் கொஞ்சமாய்
முழுதும் தொய்ந்து
மூச்சுத் திணறி முங்கிற்று

நாங்களோ அடுத்த கப்பலுக்கு
காகிதம் கிழித்தபடி…

ஒரு தடித்த கீறல்

பாதி கழுவிய வலுவலுப்பில்
மங்கியொழுகும் குவளைகள்
அவசரத்திற்கு எப்போதும் கிடைத்திடாத
கரண்டிகள்
பொடிசுகள் தைரியமாய்
கையாள முடிந்த கத்திகள்
தண்ணீர் ஊற்றி சுத்தினாலும்
அரையாது அடம்பிடிக்கும்
தேங்காய் துண்டுகள்
எறும்பின் நகர்வு இல்லாது
சுவைத்திட முடியா திண்பண்டங்கள்
எப்போது போட்டாலும்
அட்டூழியம் பண்ணும்
தொலைக்காட்சி அமைப்புகள்
நாள் பூராய் துவைப்பதாய் சுழற்றிக்கொள்ளும்
சலவை இயந்திரம்

எல்லாம் அதனதன் போக்கில்
சோதிக்கும் சுதந்திரம் கொண்ட
பாட்டி வீட்டிலிருந்து
வெளியேறுகிறாள் சிறுமி ஒருத்தி
விழுந்து கிடந்த ஒற்றைப் பனம்பழம்
எடுக்க வந்த ஆசையுடன்.

[email protected]

The post ஷினோலா கவிதைகள் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

  •  

ராஜேஷ்வர் கவிதைகள்

ஆல்கஹாலின் காதல் வாசம்!

இளைப்பாறுதல்
இடைமறிக்கும் பெருஞ்சித்திரம்
தோலுரிக்கும் புதுவானம்
க்ளோரோஃபில் நிரப்பப்பட்ட
முல்லை நிலம்
ஜெலட்டின் குச்சிகளாய்
வெடித்துச் சிதறும் தனிமை
யாவும் அவள் நினைவுகளின்
கிரகணத்துப் பசி!

இதழ் வலிக்கப் பருகும்
லிப்ஸ்டிக் சாயங்களில்
அமிலம் வேறு அவள் வேறாய்
கலைத்துவிடுகிறது
ஒரு கப் உறக்கத்தின்
உதட்டுச் சூடு!

இளைப்பாறுதல்
இன்புறுதல்
கிராமஃபோன் லூப் இசையில்
செத்து மடிதல்
பிணமாகி
நள்ளிரவு தாகத்தில் உயிர்த்தெழுதல்
மதுரம் பருகி
மற்றொரு கிரகணத்தின்
விரதம் முடித்தல்
யாவும்
ஆல்கஹாலின் காதல் வாசம்!

காற்றோடு மலர் வேய்ந்த கூடுகள்!

முல்லை விழுங்கும் திசைகளில்
ஆரோகணம்
ஒன்றிரண்டு மலர் சொரியும்
மணம் பரப்பி
காற்றின் கூடுகளை வேயும்

எங்கோ
தூரத்துக் கிளை முறியும்
மென் அதிர்வில்
மற்றொரு கணம்
வனம் விழித்துக்கொள்ளும்

பின்னிரவில்
கூடு திரும்பும் பறவைக்கு
முறிந்த கிளை
எவ்வகை நியாயம் கூறும்

காற்றோடு
மலர் வேய்ந்த கூடுகள்
மெல்ல சிணுங்கும்!
திறந்து கிடந்த முல்லையில்
ஏனோ
முகாரி ராகம்!

ஈரம் அவிழாத இத்யாதிகள்!

அர்ஜுனன் தேர் பத்து
என்றுதான் துவங்கும்
அந்நாட்களில்
ஓர் மழை இரவின்
பிரபந்தம்

சுவரெங்கிலும்
நிழல் ஓவியம்
சாளரங்களில்
துணுக்குகளாய் கசியும்
நீலப் பிரபஞ்சம்
சுவர் ஏறி
நிறம் சேர்க்கும்

ஒரு கைப்பிடி வெளிச்சம்
இருள் பசியாறும்
பிம்பங்களின்
நிரல் விரியும்

மழை ஓய்ந்த பின்னிரவில்
நீர் கூடி
நிலவை மடித்து
நிறை கூடும் நிலம்
மற்றுமொரு
சூரியப் பொழுதின்
திறவுகோல்!

[email protected]

The post ராஜேஷ்வர் கவிதைகள் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

  •  

முத்தமழை இங்கு கொட்டித் தீராதோ!

அண்ணாகண்ணன்

முத்தமழை இங்கு கொட்டித் தீராதோ என்ற பாடலைச் சின்மயி, தீ ஆகிய இருவரின் குரல்களிலும் கேட்டேன். சின்மயி பாடியதே சிறப்பு எனப் பலரும் எழுதியதையும் படித்தேன். இது ஒரு வகையில் கலை மதிப்பீடாக வடிவம் பெற்றதைக் கண்டு மகிழ்ந்தேன்.

இந்தப் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மிக இனிது. குழுவினரின் சேர்ந்திசையும் சிறப்பு. பின்னணி வாத்திய இசையும் மாறவில்லை. சின்மயி, தீ ஆகிய இருவருக்கும் இவை அனைத்தும் ஒன்றாகவே இருந்தன. ஆனால், சின்மயி வழங்கிய பாட்டனுபவம் தனி இனிமை உடையதாக இருக்கிறது. காரணம், அவர் பாத்திரத்தை மனத்தில் இருத்தி, சூழலுக்குள் தன்னை நிறுத்தி, வரிகளை உள்வாங்கி, அந்த உணர்வுடன் பொருந்தி, அனுபவித்து லயித்துப் பாடினார். அதுவே அனைவர் மனங்களையும் கொள்ளை கொண்டது.

இதில் வேறு ஒரு கோணமும் இருக்கிறது. தீ பாடியதை ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்றுப் படத்திலும் இதர இசை ஓடைகளிலும் அங்கீகரித்துவிட்டார். தீயின் வடிவத்தில் இன்னும் ஆழம் போதவில்லை, பாவம் சரியில்லை என்பதைச் சுட்டிக் காட்டி, அது சரியாக வரும் வரை ரஹ்மான் அவரை மீண்டும் பாடச் செய்திருக்க வேண்டும். ஆனால், இது போதும் என ஏற்றுக்கொண்டதால் பாடலின் அனுபவத்தில் குறை ஏற்பட்டது. இது, தீயின் பிழை இல்லை. ஏ.ஆர்.ரஹ்மானின் பிழை. இவர் மட்டுமில்லை, இதர இசையமைப்பாளர்களும் இந்த பாவத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

ஆனால், இங்கு ரஹ்மானின் நல்ல குணம் ஒன்றையும் பாராட்ட வேண்டும். இளையராஜா பங்கேற்ற சில மேடை நிகழ்ச்சிகளில் அவர் பாடகர்களையும் வாத்திய இசைக் கலைஞர்களையும் பாடலை இடையில் நிறுத்தி, திருத்துவதைக் கண்டேன். இது என் பாட்டு, இது இப்படித்தான் இருக்க வேண்டும் எனப் பாடல் முழுமை அடைவதற்குள் பற்பல குறுக்கீடுகள். பாடல் ஒரு கூட்டு முயற்சி என்ற உணர்வை விடுத்து, நானே பெரியவன் என்ற எண்ணம் அவருள் ததும்பி இருக்கக் கண்டிருக்கிறேன். முத்தமழைப் பாடலில் தீயின் வடிவத்தைச் சின்மயி அழகுற மேம்படுத்திப் பாடியிருக்கிறார். இதை ஏ.ஆர்.ரஹ்மான் கைத்தட்டிப் பாராட்டுவதைக் கண்டேன். இப்படி மனம் திறந்து சிறந்ததை ஏற்றுக்கொண்டால், அடுத்த பாடலில் இந்தப் பிழை நேராமல் ரஹ்மான் கவனமாக இருப்பார்.

சின்மயி அர்ப்பணிப்பு உள்ள பாடகர். தான் பாட வேண்டிய பாடலைப் பல முறைகள் பாடிப் பார்த்து, தொடர்ந்து மேம்படுத்துகிறார். அந்தப் பாத்திரத்துடன் மனம் ஒன்றிப் பாடுகிறார். அவரது ஆற்றலும் ஆளுமையும் ஒருசேர இந்த மேடையில் வெளிப்பட்டுள்ளன. இவரிடமிருந்து இந்த இயல்புகளைப் புதிய பாடகர்கள் கற்க வேண்டும்.

சிறிய இடைவெளிக்குப் பிறகு சிலிர்த்து எழுந்துள்ள சின்மயியின் உன்னதம், நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்ற பாரதியின் வரிகளை நினைவூட்டுகிறது. இதே எழுச்சியை ஓவியத்தில் ரோஹிணி மணியிடமும் நடனத்தில் ருக்மிணியிடமும் காண்கிறேன். வீறு மிகுந்த உங்களுக்குத் தோல்வி என்பதே கிடையாது. இன்னும் இன்னும் வெற்றிகள் பெறுக! புதிய நட்சத்திரங்களாய்ப் புவி மீது எழுக!

  •  

பேசாப்பொருளைப் பேசும் கதைகள்

 

பேசாப்பொருளைப் பேசும் கதைகள்

உதயசங்கர்



காலமும் சமூகமும் தான் தனக்கான படைப்பாளிகளை உருவாக்குகிறது. படைப்பாளிகள் இந்தச் சமூகத்தின் அசைவியக்கத்தை அதன் இயங்கியலைச் சரியாக முன்னுணரும்போது அவர்களது படைப்புகளில் சமூகயதார்த்தம் துல்லியமாகப் பிரதிபலிக்கிறது. சமூக யதார்த்தத்தைச் சரியாகப் புரிந்து கொண்ட படைப்பாளிகளே சமூகம் எத்திசையில் செல்கிறதென்பதையும் எத்திசையில் செல்லவேண்டுமென்பதையும் தீர்மானிக்கிறவர்களாக இருக்கிறார்கள். யதார்த்ததை  தங்களுடைய பகுத்தறிவின் மூலம் கட்டுப்படுத்தி வழிகாட்டுகிறார்கள். சமூகயதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாத படைப்பாளிகள் சமூகத்தின் சமன்குலைந்த நிலையையே சமன்நிலையென்று மயங்கி விடுகிறார்கள். அதையே தங்களுடைய படைப்புகளிலும் பிரதிபலிக்கிறார்கள். ஆனால் சமூக அக்கறையுள்ள படைப்பாளி தன் சமூகத்தை உற்று நோக்குகிறார். படைப்புகளில் இதுவரை கவனிக்காத இருள்வெளிகளின் மீதும், சாம்பல்நிறப்பகுதிகளின் மீதும் வெளிச்சம் பாய்ச்சுகிறார். புனைவின் வலிமையான மாயாஜாலத்தினால் தன்னுடைய படைப்புகளில் கவனப்படுத்துகிறார். கூருணர்வுள்ள சமூகம் அந்தப் படைப்புகளின் வழியே தன்னை சுயபரிசோதனை செய்து கொள்கிறது.

சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்களின் வாழ்க்கையை பெண்கள் எழுதியதைவிட ஆண்களே அதிகம் எழுதியிருக்கிறார்கள். அவர்களுடைய படைப்புகளில் பெண்கள் துயர்மிகு வாழ்வினை வாழ்ந்து தீர்ப்பவர்களாக, அவலத்தினால் அனுதாபம் கோருபவர்களாக, கையறுநிலையில் கதறுபவர்களாகவே அன்பே உருவானவர்களாக, தியாகதீபங்களாக, சிறு சலனங்களையும் பெரும்பூகம்பமாக உணர்பவர்களாக, சில சமயம் உறுதிமிக்கவர்களாக, பிரச்னைகளைச் சமாளித்து எழுந்து நிறகும் வல்லமை கொண்டவர்களாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் பெண்வாழ்வை ஒரு பெண் எழுதும்போது இதுவரை தெரிந்த மொத்தச்சித்திரமும் தலைகீழாக மாறுகிறது.

இதுவரை ஆண்களின் கண்கள்வழியே பெண்வாழ்வைப் பார்த்த பெண்களுக்கே கூட புதியதொரு தரிசனம் கிடைக்குமென்று சொல்லலாம்.

ஆகாத தீதார் என்ற முதல் சிறுகதைத்தொகுப்பின் வழியே தமிழ்ச்சிறுகதையுலகில் தன்னுடைய இலக்கிய இடத்தை வலுவாகப் பதிவு செய்த ஆமீனா முகம்மத் அவருடைய இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான நிஹாடு மூலம் புதியதொரு உயரத்திற்குச் சென்றிருக்கிறார். தமிழில் பொதுவாகவே பெண் எழுத்தாளர்களின் எண்ணிக்கை விகிதாச்சார அடிப்படையில் மிகவும் குறைவு. அதிலும் இஸ்லாமியப்பெண் எழுத்தாளர்கள் அரிதினும் அரிது. அங்கொன்றும் இங்கொன்றுமாக அப்போதும் இப்போதுமாக ஒன்றிரண்டு நட்சத்திரங்கள் மின்னுவதைப் போல மின்னி மறைந்து விடுவார்கள். சித்தி ஜூனைதா பேகம், ரொக்கியா பேகம் என்ற பெயர்களுக்கப்புறம், சமீபகாலமாகத் தான் இஸ்லாமியப்பெண் எழுத்தாளர்களின் படைப்புகளைப் பார்க்கமுடிகிறது. அவர்களில் ஒளிவீசும் புதிய வண்ணங்களோடு எழுந்து வந்திருக்கிறார் ஆமினா முகம்மத்.

பொதுவாக சமூகத்தில் வாழும் பெண்களின் நிலைமை அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, எந்த சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி எப்படி இருக்கிறதென்பதைச் சாதாரணமாகச் செய்தித்தாள் வாசிக்கிற எல்லாருக்கும் தெரியும். சொல்லித்தீராதது பெண்களின் பாடுகள். பிறந்ததிலிருந்து இறப்புவரை எந்தச் சுதந்திரமுமின்றி, எந்தச் சுயசிந்தனையுமின்றி, யாரையாவது சார்ந்து, யாராவதொருவரின் பாதுகாப்பில், எல்லாரையும் எல்லாவற்றையும் அனுசரித்து வாழ்ந்து மடிந்து விடும் பெண்களின் வாழ்க்கை, என்ற கருத்தியலில் மிகப்பெரும் உடைப்பை ஏற்படுத்தும் கதைகளாக நிஹாடு தொகுப்பிலுள்ள கதைகளிருக்கின்றன.

வைகையால் உறிஞ்சப்படாத உயிர் அல்லது தற்கொலையின் நாட்குறிப்பு என்ற கதையில், வெளிநாடு சென்ற கணவனின் துரோகம் தெரிந்த கனியம்மா கரைபுரண்டுவரும் வெள்ளத்தில் தற்கொலை செய்து கொள்ளத் துணிகிறார். ஆனால் ஆமினா முகம்மதின் கலையுணர்வு அவரை ஆண்கள் மட்டுமே நியாயம் வழங்குகிற பஞ்சாயத்தில் அத்தனை பேரையும் சமாளிக்கிற வலிமையுள்ள பெண்ணாக மாற்றுகிறது.

உசுரு கருப்பட்டி கதையில் வரும் கச்சம்மா கதையில் ஆமினா முகம்மதின் மொழிநடை புதிய உச்சத்தைத் தொடுகிறது. கூட்டுவண்டியில் சாமான்களுடன், குரோதம், வஞ்சம், எல்லாம் பயணப்பட்டு வந்ததாகச் சொல்வதாகட்டும், தற்கொலை செய்ய நினைக்கும் கச்சம்மாவிடம் சிட்டம்மா தண்ணியை அழுக்காக்கிறாதே என்று சொல்லி ஞானம் போதிப்பதாகட்டும், கச்சம்மா கடைசிவரை தான் சாபம்விட்டவர்களின் வீட்டில் ஒருவாய்த்தண்ணீர் குடிக்கவில்லை என்ற முடிவுவரை இதுவரை சொல்லப்படாத கதையாக இருக்கிறது.

வாழவேண்டுமென்று முடிவெடுத்துவிட்டால் ஆயிரம் வழி இருக்கிறது என்ற வார்த்தைகளில் தான் பிடாரியம்மாளில் வரும் தங்கம்மாளின் மூர்க்கம் இருக்கிறது. எல்லாரையும் வந்துபாரு என்கிற அவருக்குத் துணையாக நாகூர் அனிபா தன்னுடைய பாடல்களின் வழியே ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தாரென்ற விவரிப்பின் எள்ளல் தொனி தங்கம்மாள் என்ற கதாபாத்திரத்துக்கு வலுவூட்டுகிறது.

காதலினால் மதம் மாறித் திருமணம் முடிந்த பெண் புகுந்த வீட்டில் தன்னை நிரூபிக்கப் போராடும் வாழ்க்கையைப் பற்றிய கதை அம்மு. இதுவரை யாரும் பேசாத கதை இது. இந்தக் கதையில் வரும் அமுதவள்ளி என்ற அமீராவின் போராட்டங்கள் மனம் உருகும் வண்ணம் ஓவியமாகத் தீட்டியிருக்கிறார் ஆமீனா முகம்மத்.

ஒவ்வொரு கதை குறித்தும் விரிவாக எழுதிவிட மனம் துடித்தாலும் முன்னுரையில் அதற்கு இடம் கொடுக்கக்கூடாதென்ற நடைமுறையை நினைத்து சுருக்கமாகச் சொல்ல நினைக்கிறேன்.

சாஜிதா மாமி கேஸ் மனதை உருக்கும் கதை. கதையை வாசித்தவுடன் சாஜிதா மாமி ஒரு செவ்வியல் கதாபாத்திரமாக மாறியிருப்பதை நாம் உணரமுடியும். மாமனாரின் ஆவி கதையில் வரும் ராசாத்தி செய்யும் பழிவாங்கல், அசனம்மாளின் தற்கொலைக் குறிப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றும்  அசனம்மாளின் தந்திரம், இரகசிய அறை கதையில் கூட்டுக்குடும்பத்தில் நடக்கும் இரட்டை நடைமுறை, கடைசிவரியில் ஒரு பெண்வாழ்வின் சுமையை நம் மீது ஏற்றிவிடும் வல்லமை கொண்ட கதையாகத் திகழ்கிறது. மகனுக்காகத் தன்னைப் பலிகொடுத்த தாயைப் பழிவாங்கும் பெண்ணின் சாதுரியம் என்று தொகுப்பு முழுவதும் பெண்களே நிறைந்து நிற்கிறார்கள்.

.ஆமீனா முகம்மத்தின் கதைகளில் வரும் பெண்கள் பழி வாங்குகிறார்கள், தந்திரம் செய்கிறார்கள், தன் சொந்தங்களின் மீதே சாபம் விடுகிறார்கள். வன்மத்தைப் போற்றி வளர்க்கிறார்கள், நாடகம் ஆடுகிறார்கள், அதிகாரம் செய்கிறார்கள், பிறழ்மனநிலை கொண்டவர்களைப் போல நடிக்கிறார்கள், அடிக்கடி தற்கொலை செய்ய முடிவெடுக்கிறார்கள், பிடிவாதம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இருத்தலைத் தக்கவைத்துக் கொள்ள என்னென்ன செய்யமுடியுமோ அத்தனையையும் செய்பவர்களாக, ரத்தமும் சதையுமாக நம் முன்னால் உலவித்திரிபவர்களாக இருக்கிறார்கள். இவர்களின் வாழ்வின் அவலங்களுக்கும் துயரங்களுக்கும் காரணமாக ஆண்கள் இருக்கிறார்கள் என்பதையும் தெளிவாக்குகிறார் ஆமீனா முகம்மத்.

ஒவ்வொரு கதாபாத்திரமும் இயங்கியல்ரீதியாக தனித்துவமாகவும் முழுமையாகவும் கதைக்குள்ளே பரிணாமவளர்ச்சி பெறுபவர்களாகவும் வருகிறார்கள். பெண்ணெழுத்துகளில் நகைச்சுவையும் எள்ளலும் கேலியும் கிணடலும் மிக அரிது. ஆமீனா முகம்மத் மிக இலகுவாக தன்னுடைய மொழிநடையில் அதைக் கொண்டு வருகிறார். வாழ்க்கையை விலகி நின்று பார்க்கும்போது மட்டுமே கிடைக்கிற அபூர்வமான நோக்கு. புதுமைப்பித்தனிடம், வைக்கம் முகமது பஷீரிடம் அத்தகையை எழுத்து முறையைப் பார்க்கலாம்.  ஆமீனா முகம்மது இயல்பாக எழுதிச் செல்கிறார். இதில் தான் அவருடைய  கலை வெற்றியடைகிறது. .

ஒரு புதிய காட்சி தெரிகிறது. புதிய உணர்வுகள் தோன்றுகின்றன. புதிய கோணத்தில் இந்த வாழ்வு துலங்குகிறது. பெண்களின் வாழ்க்கை குறித்த பழமையான சிந்தனைகள் தகர்கின்றன. பெண்கள் இப்படித்தான் சிந்திப்பார்களென்ற ஆண்களின் அனுமானங்கள் வெடிவைத்துத் தகர்க்கப்படுகின்றன. பெண்கள் பேராளுமையாக, பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறார்கள். அவர்கள் நீங்களாகவும் இருக்கலாம். உங்கள் வீட்டிலும் இருக்கலாம்!

தமிழ்ச்சிறுகதைக்கு புத்தம் புதிய காற்றாய், பேசாப்பொருளைப் பேசத் துணிந்தவராய், அபூர்வமான கதைகளுடன் மீண்டும் வந்திருக்கிற ஆமீனா முகம்மத் மிக விரைவில் இன்னும் சிறந்த படைப்புகளைத் தருவார். தமிழின் சிறந்த படைப்பாளிகளிலொருவராக மாறுவார்.

 

 

  •  

நாம தான தைரியமா வளர்க்கணும்!

கோடை விடுமுறை! ஒரு மாதம் பள்ளி விடுமுறை. நண்பர்கள் சேது, கோபி மற்றும் சேகர் மூவருக்கும் பொழுது போவதே மிகக் கடினமாக இருந்தது.

அவர்களுடைய பாரதி தெருவில் காலை ஏழு மணி முதல் எட்டு மணி வரை கண்ணாம்பூச்சி அல்லது ஓடிப் பிடித்து விளையாடுவார்கள்.

மட்டையை எடுத்துக் கொண்டு கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று தான் அவர்களுக்கு ஆசை. ஆனால், ”தெருவில விளையாடதீங்க பசங்களா” என யாராவது கத்துவார்கள்.

உடனே சேதுவின் அம்மாவோ அல்லது சேகரின் அப்பாவோ வெளியே வந்து அவர்களை வீட்டுக்குள் அழைத்துச் சென்று விடுவார்கள்.

“நேத்திக்கி கடைத்தெருவில பாபுவைப் பாத்தேன்டா. அடுத்த வருஷம் அவன் பள்ளிக்கூடத்துக்கு சைக்கிள்ல தான் வருவானாம்”என்றான் கோபி.

“அவன் தான் அரையாண்டு விடுமுறை சமயத்திலேயே சைக்கிள் கத்துகிட்டானே! அவங்க அக்கா கத்து கொடுத்தாங்களாம்” சேகர்.

“பசங்களா, உள்ள வாங்க! தெருவில வேலைக்கி போறவங்க வண்டில்லாம் வரும். உள்ள வந்து விளையாடுங்க” சேதுவின் அம்மா.

சேதுவின் வீட்டுத் தோட்டத்தில் சிறிது நேரம் பந்து விளையாடினர்.

“சரிடா!  நா வரேன். சாயந்திரம் எங்க சித்தி வீட்டுக்குப் போறேன். பத்து நாள் கழிச்சு தான் வருவேன்” என விடை பெற்றான் கோபி.

“தினமும் ஒரு பக்கம் கையெழுத்து பயிற்சி எழுதணும். ரெட்டை வரி நோட்டு வாங்கணும்” என்றான் சேது.

“ஆமா! நான் இப்போ போய் வாங்கிட்டு வரப் போறேன்” என்று சொல்லி பையில் இருந்த ஐம்பது ரூபாய் தாளைக் காட்டினான் சேகர்.

“இருடா! நானும் வரேன்” என்று சொல்லிவிட்டு அம்மாவிடம் கெஞ்சி பணம் வாங்கி வந்தான் சேது.

“ஜாக்கிரதையா ஓரமா போயிட்டு, ஓரமா வரணும்.”

“சரிம்மா! எப்பவும் பள்ளிக்கூடத்துக்கு போற பாதை தான! தைரியமா இரு! சேகரோடத் தான் போறேன்”.

இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள்.

அவர்கள் தெருவில் நல்ல இணைய வசதியும் கிடையாது. அவர்கள் வீடுகளிலும் நல்ல கைபேசியோ அல்லது நல்ல தொலைக்காட்சிப் பெட்டியோ கிடையாது. அந்தத் தெருவில் விளையாட ஒரு சிறு மைதானம் கூடக் கிடையாது.

வழக்கம் போல அவர்கள் தெரு முனை வரை கோலி விளையாடிக் கொண்டே சென்றார்கள்.

சைக்கிள் கடைக்கு அருகில் தான் நோட்டுபுத்தகம் வாங்கும் கடை!

அவர்கள் கால்கள் தாமாகவே சைக்கிள் கடை முன் நின்றன.

“பள்ளிக்கூடம் லீவு விட்டாச்சே! எங்கடா வந்தீங்க?” என்றார் சைக்கிள் கடைக்காரர்.

பதில் ஒன்றும் சொல்லாமல் சைக்கிள்களைப் பார்த்துக் கொண்டு இருந்தனர் நண்பர்கள் இருவரும்.

”கடை முன்னாடி நிக்காதீங்க! போங்க போங்க!“ என விரட்டினார் கடைக்காரர்.

“அவர் சைக்கிள் வேணும்”சேகர்.

“ஒரு மணி நேரத்துக்கு பத்து ரூவா”

“அன்னிக்கி ஒரு ரூவான்னு சொன்னீங்க”

“அது அன்னிக்கி! இது இன்னிக்கி”

சேகர் தன் பையில் இருந்து ஐம்பது ரூபாயை எடுத்தான்.

“சைக்கிள் ஓட்டத் தெரியுமா?”

“தெரியும், தெரியாது” ஓரே நேரத்தில் இருவரும் பதிலளிக்க, ”சரி, இன்னொரு இரனூறு ரூவாயக் கொடுத்துட்டு எடுத்துட்டுப் போங்கடா” என்றார் கடைகாரர்.

”அங்கிள், நாங்க சைக்கிள் வாடகைக்குத் தான் கேக்குறோம். வாங்க இல்ல” என்றான் சேகர்.

“ஆஹா! வந்துட்டாங்கடா மைசூர் மஹாராஜா பேரங்க! இருநூத்து ஐம்பது ரூவாயில சைக்கிள் வாங்க! போங்கடா” என விரட்டினார் கடைக்காரர்.

அப்போது நளினமாகச் சிரித்தபடி ஒரு இளைஞன் கடைக்குள் நுழைந்தான்.

“என்ன மாமா! சின்ன பசங்களை விரட்டிகிட்டு இருக்கீங்க” எனக் கேட்டான்.

“வாப்பா பிரபு! இந்தப் பசங்களுக்கு சைக்கிள் கத்துக்கணும். அவர் சைக்கிள் கேக்குறாங்க!”

“ம்ம்… சரியான உயரம் தான்! கால் எட்டும்! கொடுக்கலாமே!”என்றான் பிரபு.

“நீ ஊருலேந்து வந்துருக்க. உனக்கு இதெல்லாம் புரியாது. இவனுக சைக்கிள அக்கு வேறா ஆணி வேறா ஆக்கிட்டா யாரு ரிப்பேருக்குக் காசு தருவா? இல்ல… இவனுகளே கீழே விழுந்து கால கையை உடைச்சுகிட்டா… யாரு பதில் சொல்றது. சைக்கிள் ஓட்டத் தெரிஞ்சா குடுக்கலாம்”.

“சைக்கிள் குடுத்தா ஓட்டக் கத்துக்குவோம்” என சேகர் சொல்ல, பிரபு சிரித்துவிட்டான்.

“அப்போ கத்துக்கிறதுக்கு சைக்கிள் தர மாட்டீங்களா?” சேது.

“பெரியவங்க யாராவது சொன்னா தான் தருவேன்”

“மாமா, நான் சொல்றேன், தாங்க மாமா!”

“பிரபு, புரியலயா உனக்கு! சின்னப் பசங்கடா! தனியா எங்கனா போயி…”

“மாமா! நானும் லீவுல சும்மா தான இருக்கேன். நானே அவங்களோட போறேன். இந்தாங்க இருநூறு ரூவாய், வாடகை எவ்வளவு? தைரியமா குடுங்க நான் பாத்துக்கறேன்” என்றான் பிரபு.

இருநூறு ரூபாய் தாளும், பிரபுவின் நம்பிக்கையான பேச்சும் கடைக்காரரை சைக்கிள் தர முடிவு செய்ய வைத்தது.

“பாத்துப்பா! உனக்காகத் தான் குடுக்கறேன்”என்றார்.

“தேங்ஸ் அண்ணா!” என்றனர் சேதுவும் சேகரும்.

”வடக்குத் தெருவில ரெண்டு ஆலமரம் இருக்குல்ல அங்க போயிரலாம். வண்டி எதுவும் வராது. கல், மேடு பள்ளம் இருக்காது.” என்றபடி அவர்களை அழைத்துச் சென்றான் பிரபு.

“யார் கூப்பிட்டாலும் இப்படி வந்துடுவீங்களாடா!” பிரபு.

“உன்னத் தெரியுண்ணே! நல்லாவே தெரியும். மூணாம் வருஷம் நம்ம பள்ளியில பரிசு வாங்கினயே!” சேகர்.

படிப்பிலும் விளையாட்டிலும் படு கெட்டி பிரபு. சேதுவும் சேகரும் படிக்கும் பள்ளியின் முன்னாள் மாணவன்.

“ஒரு காலை அந்தப்பக்கம் போடு. பெடல்… பெடல்… காலை வை… அழுத்து! ஊம்! இன்னும் வேகமா! ஹேண்டில பிடி…”

பிரபுவின் கட்டளைகள் தெளிவாக இருந்தன. சிறுவர்கள் இருவரும் நன்றாகவே கற்றுக் கொண்டனர்.

சைக்கிள் கற்றுக் கொண்டு விட வேண்டும் அவர்கள் ஆர்வமுடன் இருந்தனர்.

“முதுகை நிமித்தி உட்காரு!”

ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை.

“சரி! வாங்க போகலாம். சைக்கிள விட்டு இறங்கு சேகர்! நல்லா கத்துக்காம ரோட்ல ஓட்டக் கூடாது.”

இறங்கும் போது, சேகர் துள்ளிக் கொண்டு குதித்தான். சைக்கிளோடு சரிந்து விழுந்து, காலில் சில சிராய்ப்புகள்!

பிரபு பக்கத்தில் ஒரு கடையில் தண்ணீர் வாங்கி காயத்தை கழுவி விட்டான். இருவருக்கும் தேநீர் வாங்கிக் கொடுத்தான்.

“தேங்ஸ் அண்ணா!” என சேதுவும் சேகரும் சொல்லிய போது தேநீரின் தெம்பும் அதில் தெரிந்தது.

“ஏண்டா! ஒரு ஒரு பைசாவையும் பாத்து பாத்து செலவு பண்ணிகிட்டு இருக்கேன். ஐம்பது ரூவா குடுத்து விட்டா, பத்து ரூவாய்க்கு சைக்கிள் விடுவியா? கீழே விழுந்து பெருசா அடி பட்டா… வரட்டும் உங்க அப்பா…“ சேகரின் அம்மா அடிக்காத குறைதான்.

மறுநாள் காலை .

“நா தர மாட்டேன் தான்யா சொன்னேன். கேளுங்க உங்க பசங்களையே! அந்த பிரபு தம்பி உறுதி குடுத்ததாலத் தான…” எனக் கடைகாரர் தன்னிலை விளக்கம் தந்து கொண்டு இருந்தார்.

“அது சரி, விழுந்து வாரி, அடிபட்டா… நீ தருவியா ஆஸ்பத்திரிக்குப் பணம்! இல்ல அந்த பிரபு வருவானா?” படபடத்தார் சேகரின் அப்பா.

”அண்ணா!” என சேகர் குரல் கொடுக்க, “அதோ வந்துட்டான் பிரபு! அவன்கிட்டயே பேசுங்க” என கடைக்காரர் சொல்ல, சேகரின் அப்பா ஆக்ரோஷமாகத்த்தான் திரும்பினார்.

ஆனால், பிரபுவின் புன்னகையும் வசீகரமும் கம்பீரமும் அவரை ஈர்த்தது.

குரலைத் தாழ்த்தி, “என்ன தம்பி!” என்றார்.

பிரபு அவர் கைகளைப் பற்றிக் குலுக்கினான்.

“ஐயாம் பிரபு! சேகர் ரொம்ப சூட்டிகையான பையன் சார்! “

“சந்தோஷம் “ உண்மையில் பையனைப் பற்றிய பாராட்டு சந்தோஷத்தைக் கொடுத்தது., “நீ..ங்க என்ன படிக்கீறீங்களா?”

“ஆமாம் சார், சென்னையில எம்.ஐ.டி ல படிக்கிறேன்.”

“அப்பா! அண்ணன் எங்க ஸ்கூல்ல ஃபுட்பால் டீம் கேப்டனா இருந்தாரு!”

”சேகரும் பிரமாதமா வருவான். என்னமா சொல்றத டக்குன்னு புரிஞ்சுக்கிறான்.”

“ஆனா அவன் கொஞ்சம் பயந்த சுபாவக்காரன்” என்றார் சேகரின் அப்பா.

“யாருக்கு பயம்? அவனுக்கா? அப்படி பயப்படுறவன் மாதிரி தெரியல்லையே ! பெரியவங்க முன்னால கொஞ்சம் பயபக்தியா, அடக்க ஓடுக்கமா இருப்பானாருக்கும். நல்ல தைரியசாலி தான்” என்றான் பிரபு. 

“இப்பக் கூட பாருங்க! கீழே விழுந்து தான வாரியிருக்கான். ரோட்டில விழுந்துடுவான்னு பயம்….” சேகரின் அப்பாவை முடிக்கவிடவில்லை பிரபு.

“நாம தான தைரியமா வளர்க்கணும். பயப்படாம இருக்கக் கத்துத் தரணும்.”

பிரபுவின் புன்னகையும் நம்பிக்கையும் சேகரின் அப்பாவுக்குத் தொற்றிக் கொண்டது.

கடைக்காரரும் இணைந்து கொண்டார். ”இந்த வயசில சைக்கிள் கத்துக்கலேன்னா எப்படி? கால் நல்லா எட்டுது. அப்புறம் என்ன?” என்றார்.

“இல்லப்பா! யார் அவனோட தினம் ஓடறது?”

“அதான் நான் இருக்கேனே! இன்னும் இருபது நாள் இங்கதான் இருப்பேன்” பிரபு.

விடுமுறை முடிவதற்குள் சேது, சேகர் மட்டுமல்ல, அவனது பள்ளி மாணவர்கள் அநேகம் பேர் பிரபுவின் தயவில் சைக்கிள் கற்றுக் கொண்டார்கள். மாலை வேளைகளில் ஃபுட்பாலும் விளையாடினார்கள்.

தைரியமும் தன்னம்பிக்கையும் அவர்கள் கண்களில் மின்னின. 

000

கமலா முரளி

கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர்  திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.

ஆங்கில இலக்கியம் மற்றும் கல்வியியலில் முதுகலைப்பட்டம் பெற்ற கமலா முரளி,சென்னை, பெரம்பூர்,விவேகானந்தா பள்ளியில் சில வருடங்கள் பணியாற்றிய பின், கேந்திரிய வித்யாலயா சங்கதனில் ஆங்கில ஆசிரியையாகப் பணியேற்றார். கேந்திரிய வித்யாலயாவின் தேசிய அளவிலான “சீர்மிகு ஆசிரியர்” விருதினை 2009 ஆண்டு பெற்றார்.

கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி.டாட் காம், மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ், கேலக்ஸி தளம், நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், சிறுவர் வனம் ,ஆனந்தசந்திரிகை, மங்கையர்மலர், கோகுலம் , இந்து தமிழ்திசையின் மாயாபஜார் , வாசகசாலை, தினமலர் பட்டம் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.

இவரது “மங்கை எனும் மந்திர தீபம்”  (“எ லேடி வித் த மேஜிக் லேம்ப்”)எனும் மொழிபெயர்ப்பு நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இவர் எழுதிய, “இந்துமதி கல்யாணம் எப்போ?” என்ற சிறுகதைத் தொகுப்பு மணிமேகலைப் பிரசுர வெளியிடாக மலர்ந்துள்ளது.

மற்றும் இவரது சிறார் கதை நூல், “கிளியக்காவின் பாட்டு” லாலிபாப் சிறுவர் உலகம் வெளியீடாக வந்துள்ளது.

கனவு இலக்கிய அமைப்பு, திருப்பூர் முத்தமிழ் சங்கம் மற்றும் திருப்பூர் மக்கள் மாமன்றம் இணைந்து வழங்கிய ’திருப்பூர் சக்தி விருது’ இந்த ஆண்டு (2024) பெற்றுள்ளார்.

The post நாம தான தைரியமா வளர்க்கணும்! first appeared on Nadukal.

  •