Reading view

செஞ்சீலை

காட்சி அவன் தர்க்கத்திற்குள் சிக்க மறுத்துக் கொண்டிருந்தது போலும். கதிரவன் தியானத்தில் திளைப்பவன் போல அசையாது இருந்தான். புளியமரத்தடியில் இருவரும் பூசைக்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர். சாமிக்குப் போட்டு கழிந்த மாலைகள், திருநீறு, குங்குமம், சூடகம், ஊதுபத்தி, தீப்பெட்டி, பன்னீர் குப்பி, உடைந்த சிறு மண்பானை ஓடு, வேப்பிலை கொத்து, சிவப்பு பட்டு சால்வை என எல்லாமே சம்பாதித்து வந்திருந்தனர் எப்படியோ. நீள் வாக்கில் கிடந்த சிதைந்த சிறிய வேலி கருங்கல்லைப் பிரதிஷ்டை செய்து அலங்கார பணிவிடை நடந்து கொண்டிருந்தது. 
  •  

பலி

“அதெல்லாம் வைச்சிருப்பான். நீ ஒண்ணும் கவலப்படாதே. மாரியம்மா தைரியமான பொண்ணு. அவ அக்காவ கொடுமப் பண்ணுன மாதிரி இதுகிட்ட நடக்காது. எல்லாம் சரியா வந்துடும்.” அம்மாவின் ஆறுதலுக்காக சொல்லிவைத்தேனேத் தவிர, என் பேச்சில் அவ்வளவு உறுதி இல்லை. இந்த மக்களிடம் ஆணின் அதிகாரம் என்பது கல்லில் செதுக்கிய கட்டளையைப்போல. ஆம்பளைக்குச் சளைக்காமல் காட்டிலும் மேட்டிலும் உடம்பு உழைத்தாலும், பொம்பளை கொஞ்சம் அனுசரிச்சுத்தான் போகவேண்டியிருந்தது.
  •  

கொன்றைப் பூக்களும் மரவட்டைகளும்

ராகவனுக்கும் சவத்துடைய காதல் கதையைப் பற்றிக் கேட்க ஆசை. நடந்து வீடு இருக்கும் திருப்பத்தை அடைந்த போது ராகவன் அதனிடம் ”   நீ எப்படி ஒரு மதராசி தமிழ்ப் பெண்ணை காதலித்தாய் ? என்று கேட்டதை அது தனது சொந்த விஷயத்தில் இவன் ஏன் மூக்கை நுழைக்கிறான் என்றெல்லாம் நினைக்காமல்  புன்னகைத்தவாறே கண்டிப்பாக வீட்டிற்கு சென்றதும் சொல்கிறேன் என்று சொன்ன பதிலின் நாகரீகம் அவனுக்கு ரொம்பவே பிடித்தது. 
  •  

வாகை மனம்

வாவ மரத்தின் அடியில் புகைவதன் அடையாளமாக காற்றில் கருகல் வாடை வந்தது.  வெளியே வந்து பார்த்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.  பிரார்த்தனைக்கு வந்தவர்களின் வாகனங்கள் மரத்தின் நிழலில் நிறுத்தப்பட்டு இருந்தது.  தேவாலயத்தில் பிரார்த்தனைப் பாடல்கள் வேத வசனங்களுக்கு இடையில் ஒலித்துக் கொண்டு இருந்தது.  கோல்டன் பாய்  வந்த ஆட்களை வைத்து முட்டுக்கொடுத்ததை சரி செய்து கொண்டு இருந்தார்.  அவர்  அவர்களை திட்டுவது புரியாமல் சத்தமாக மட்டும் கேட்டது.  இந்தப் பக்கம் அவர்  திரும்பினால் பேச வேண்டுமென நான் கடைக்குள் வந்துவிட்டேன்.
  •  

தெய்வ நிமித்தம்

 “உங்களுக்குத் தெரியாததா சார்? கடன மறுசீரமைப்பு செய்வோம், வட்டி விகிதத்தை மாற்றி, கால அவகாசம் ஆறு மாசமோ ஒரு வருஷமோ நீட்டிச்சி கொடுப்போம். எப்படியாவது கடனை அடைத்துவிடுவோம்னு  பெரியவரும் அவர் மகனும் வந்து கெஞ்சுறாங்க. கொஞ்சம் விட்டுப் பிடிப்போமே,’’ என்ற அரவிந்தனிடம், 
  •  

குழலினிது

சண்முகநாதன், "டேட்டிங் செய்ததுக்கு அப்புறம், கண்டிப்பாக இது ஒரு அற்புத கண்டுபிடிப்பா இருக்கும்" என்றார். அவை வளர்ந்த ஓர் ஆணுடைய எலும்புகள். அந்த எலும்புக் குவியலில் இருந்து, ஒவ்வொரு எலும்பாக கவனமாக எடுத்து நானும் நாதனும் பிரஷ்கொண்டு மெல்ல வருடி, உடற்பாகத்திற்கு ஏற்றவாறு மேசையின் மீது வைத்துக்கொண்டிருந்தோம்.
  •  

இரண்டாம் அடுக்கு பிழைத்தல் விதிகள்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த சூழலைக் கணக்கில் கொண்டால், அந்தக் காலத்தின் குரங்குகளுக்கு, இன்றிருக்கும் மனித இனம் என்பது இந்த A2B கூண்டில் உள்ள எலிகள் போலத்தான். இல்லையா? இன்று இருக்கும் மனிதனை, அந்தக் குரங்குகள் எதிர்கொண்டிருந்தால், மனித இனம் இனவிருத்திக்கான வாய்ப்பின்றி அழிந்து போயிருக்கும், இல்லையா? ஒருவகையில், மனித இனத்தின் ஆண்களை புத்திசாலிகள் எனலாம். செயற்கையாகக் கருத்தரிக்கும் இடத்திற்கு  நகரும் வரை, அக்காலக் குரங்குகளுடன் இணைந்து பல்கிப் பெறுகி பொறுத்திருந்ததை,  வேறெப்படித்தான் சொல்வது? இப்படி யோசித்துப் பார்.
  •  

மெய்கண்டவன்

மந்திரித்துவிட்டதுபோல் தன் புலன்களுக்கு ஆளாகி சந்திப்பதற்கு ஒத்துக்கொண்டது தவறோ என்று நினைத்தான். அவ்வாறு நினைத்துக்கொண்டிருக்கும்பொழுதே, உடல் மெதுவாக எழுந்து உடை மாற்றிக்கொண்டது. டியோ இரண்டு அழுத்தும், தலையை சரியாக அமைத்துக்கொண்டும், பாக்கெட்டில் வாலட்டும் திறன்பேசியும் இருக்கிறதா என்று பார்த்துவிட்டும், அறையின் மின்விசிறியை அணைக்காமல் மெதுவாக கதவைத் திறந்துகொண்டு மண்டபத்தைவிட்டு வெளியேறி இருபது நிமிடத்தில் சொன்ன இடத்தில் இருந்தான்.
  •  

ஊழிப் பெருவெள்ளம்  

ஒரு கட்டத்தில் எங்களுக்கு இந்த இரவே கடைசி என்றுதான் தோன்றியது. மழை நின்றுவிட்டபோதும் நீர்மட்டம் உயர்ந்துகொண்டே இருந்தது. நாங்கள் நின்றுகொணடிருந்த தண்ணீர்த் தொட்டி இப்போது பாதிக்குமேல் மூழ்கியிருந்தது. “நாம செத்துடுவமா சுகு” என்று கேட்டு கார்த்திக் சிறிது நேரம் மெளனமாக இருந்தான். பிறகு திடீரென்று என் தோள்களைப் பற்றிக்கொண்டுக் குலுங்கி அழுதான்
  •  

முகம் அலம்பும் பூனை

மறுநாள் ஞயிற்றுக்கிழமை என்றாலும் கூட அதிகாலையிலயே எழுந்து பூனைக்கு முன்னால் பற்பொடியை தட்டி ஒரு பேப்பரில் வைத்துவிட்டு மூவரும் அமர்ந்திருந்தோம். பூனை பேப்பரில் வெள்ளையாக இருந்த பற்பொடியை எதோ உணவுப்பொருள் என்று நினைத்து மோந்து பார்த்துவிட்டு நெல் மூட்டைகளுக்கு இடையில் சென்று ஒழிந்து கொண்டது. “பூனை நம்மளப் பார்த்து பயப்படுது.” என்றான் பெரிய அண்ணன். அவன் அவ்வாறு சொன்னதும் எல்லாரும் மறைந்து நின்று கவனிக்க ஆரம்பித்தோம். ஒன்பது மணி ஆகியும் பூனை பல் துலக்கவே இல்லை. நெல் முட்டைகளுக்கு இடையில் சென்று ஒழிந்துகொண்டு வெளியே வரவும் இல்லை.
  •  

தும்ரி

அவளிடம் அப்படியெல்லாம் தனது மனதில் உள்ளதைக் கேட்க தயக்கமெல்லாம் தேவையில்லை என்று ஒரு பக்கம் உணரும் போதே மறுபக்கம் அவள் அதன் பிறகு தன்னை இப்படியே விட்டுச் சென்றாள் அதை எப்படி தாங்குவது? என்றும் அச்சமாயிருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை தேவநாயப் பாவணார் நூலகத்தில் ஒரு எழுத்தாளரின் நூல் வெளியீட்டு விழா அதற்கு போகலாம் என்று ஏற்கனவே இருவரும் பேசியிருந்தார்கள்.
  •  

நண்டுப்பிடி – பாகம் – 1

மருத்துவர் மேகன் க்ரான்ட்டை ஆண்டுக்கு ஒரு முறை ரேவதி பார்ப்பது வழக்கம். மேலோட்டமாக ஒரு சோதனை. வெறும் வயிற்றுடன் மூன்று குப்பி இரத்தம். சந்திப்பிற்கு சில தினங்கள் கழித்து அவளிடம் இருந்து ஒரு மின்னஞ்சல். அளவுகள் ஆரோக்கிய எல்லைகளுக்குள் என்ற தகவலுடன் விளக்கங்கள். முதல் வரிக்கு மேல் படித்தது கிடையாது.
  •  

ஊடாடும் பெருநிழல்

பதற்றத்துடன் என்னை இடுப்பில் தூக்கிக் கொண்டும் என் சகோதரனை இழுத்துக்கொண்டும்  பின்வாசல் வழியாகத் தப்பித்து ஓடிய சந்தர்ப்பத்தில் பெப்பியைத் தாக்கி இழுத்துக் கொண்டு போயிருக்கிறார்கள். கடைசி வரை அவருக்கு என்ன ஆனதென்று தெரியவில்லை என்று சொன்னார் பப்பாஜி.  உங்கள் வீட்டில் பதுங்கியவாறு பெப்பி அணிந்திருந்த ஆடையின் நிறம்,   அடையாளங்களையும் கூறி அவளைத் தேடச்சொல்லி உங்களிடம் சொன்னாராம். உங்களாலும் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.
  •  

சாப விமோசனம்

சிவராமனின் மனம் காயத்ரி ஜபத்தில் லயிக்கவில்லை. குளத்தின் ஆழத்தில் உறங்கும் யக்ஷியைச் சுற்றி வந்தது. வீட்டின் கொல்லைப்புறத்தில் இருந்தாலும் அந்த சிறு குளத்தில் விளையாடவோ குளிக்கவோ ஒரு நாளும் அனுமதி அவனுக்கு இல்லை. அவன் மட்டும் அல்ல அப்பா சாம்பசிவம் கூட கிணற்றில் தான் நீர்  மொண்டு குளிப்பார். வருடங்களுக்கு ஒரு முறை குளத்தை சுற்றி இருக்கும் கற் படிகள் சீரமைக்கப்பட்டு சுத்தமாக்கப்படும். ஆனால் குளத்தின் நீர் என்னவோ எப்போதுமே மாசு படாமல் இருந்தது. அதில் தண்ணீர் குறைந்ததும் இல்லை கூடியதும் இல்லை.
  •  

கல்பதரு

’உலக வரலாறுல யோசிச்சுப் பாத்தா மண்ணை வச்சு வீடு கட்டறதுக்கு முன்னாடியே முறிஞ்சு விழுந்த கிளைகளை வச்சு கீத்தை வச்சு மனுஷங்க தங்க வாழிடத்தை உருவாக்க முயற்சி பண்ணியிருக்க வாய்ப்பு இருக்கு. அப்படின்னா கார்பெண்டரி உலகத்தோட தொன்மையான தொழில்கள்ள ஒன்னு
  •  

உயிரில் கலந்து

ஒருநாள் தூக்கம் கண்ணை இழுக்கும்போது திடுப்பென விழித்துக்கொண்டேன். காரணமின்றி கண்ணீர் பெருகியது. கேவலாக மாறியது. சத்தம் கேட்டு மாதவன் எழுந்து “ப்ரியா, என்னாச்சு? ஒடம்பு சரியில்லியா? ஃபோன் ஏதாவது வந்துதா? அழுகைய நிறுத்திட்டு என்னன்னு சொல்லேன்! ப்ளீஸ், என்னாச்சு?” என்று பதறினார். இத்தனை காலம் தாண்டியும் இன்னும் அகாலத்தில் ஃபோன் அடித்தால் எனக்கு ஏற்படும் நிலைகுலைவு அவர் அறிந்ததுதான்
  •  

அறுபது நொடிகள்

கடைக்கு ஒட்டினாற்போல இருந்த அவருடைய வீட்டுக் கதவை தட்டினான். வெளியே வந்தவரிடம் அவசரமாக பணம் வேண்டும் என்றான். கடைக்கதவை திறந்து இவனை உட்கார வைத்தவர், “கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க, இதோ வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு போனார். சில நிமிடங்கள் கழித்து வந்தவர், எவ்வளவு வேண்டும் என்று கேட்டார். ‘பதினைந்தாயிரம் வேண்டும், அடுத்த மாதம் சம்பளம் வந்தவுடன் மீட்டு விடுகிறேன்’ என்று சொல்லி தன் கழுத்தில் இருந்த செயினை கழட்டி கொடுத்தான். அதனை உரசிப் பார்த்தவர், ஒன்றும் சொல்லாமல் பதினைந்தாயிரம் ரூபாயை எண்ணி இவன் கையில் கொடுத்தார். அதற்கான ரசீதையும் வாங்கிக் கொண்டு கிளம்பினான்.
  •  

பூச்சாண்டி

‘பொதங்கிழம வயசுக்கு வந்துருக்கியா?. பரவால்ல நல்ல நாளுதான்..’ன்னு அம்மா சொன்னாங்க. ஆனா, அன்னிலேர்ந்து அவுங்க குடுத்த சாப்பாடுதான் வயித்த கொமட்டுது. சொன்னா நம்ப மாட்ட பூச்சாண்டி!. பச்ச முட்டய ஒடச்சி, அதுல நல்லெண்ணிய ஊத்தி, அப்படியே குடிக்க சொல்றாங்க.
  •