மகிழ்ச்சி என்பது ஓர் ஏமாற்று வேலை : பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
May 01, 2025
எனக்கு துயாரார்த்தமே நம்பகமான ஒன்றாகப் படுகிறது. மகிழ்ச்சி என்பது இந்த உலகுக்கும் நமக்கும் இடையே நடக்கிற, உணர்ச்சிகள் சார்ந்த பரிவர்த்தைனைகளில் இருந்து நாம் அடையும் இலாபம். அதிக விலை வைப்பதால் கிடைப்பதே இலாபம் என்பதால், அதனை எளிமையாக ஓர் வாழ்விற்கு நம்பகத்தன்மை அளிக்கும் உணர்வாக நான் துயரார்த்தத்தை பார்க்கிறேன். நாம் மகிழ்ச்சியை ஐயுறுவோம், ஆனால் துயரத்தை சிறுதும் கேள்வி கேட்க மாட்டோம். அது எப்போதும் நம்மிடம் இருந்து விலகாமல் இருக்கும் நண்பர்களைப் போல இருக்கிறது. அதன் அணுக்கம் நமக்கு ஓர் ஆழ்பரிச்சயம்.