கோட்டை – ஒரு வாசிப்பு
வணக்கம் ஜெ.
நான் வாசு. ஆம்ஸ்டர்டாமில் வசிக்கிறேன். இன்று விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தில் புனைவு களியாட்டு கதைகளில் ஒன்றான ‘கோட்டை‘ பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. அதையொட்டி என் வாசக அனுபவத்தை பற்றி எழுதிய சிறு குறிப்பு.
இந்திய மரபில் காமம் என்ற சொல் ஐம்புலன்களின் விழைவுகளை மொத்தமாக சுட்டுகிறது. உயிர்கள் அனைத்தையும் ஆட்டுவிக்கும் ஆதி விசை. நாவின் சுவையும் காமமே. மூங்கிலை நக்கும் காளை கன்று ( பலத்த இந்திரியம் மழலையில் நாவே என்ற அணைஞ்சியின் கூற்று). பசுவிடம் பால் பருக ஓடும் கன்று, சாந்தாவின் மூன்று வயது மகன் இருவருமே எதிர்கால நாணப்பன் ஆக இருப்பவர்கள் தான். தாயின் அணுக்கதில் இருந்து பிரிக்கப்பட கசப்பால் இளமையில் பெண் உடலை வென்று கசப்பை களைய முயல்பவர்கள். காமத்தை புனிதப்படுத்தாமல் அதன் உள்ளுறையும் வன்முறை பற்றி பேசும் கதை. அதே சமயம் அந்த ஆதி விசையை புரிந்து அதே கடக்க முயல் பவர்களுக்கு மீட்பாகவும் அமைகிறது(குருசாமியில்லா அது– வாமசார தந்த்ரா மார்கம்). கதை முடிவில் கதை சொல்லி சிறுவன் ஆணாக மாறும் தருணம் சுட்ட படுவது அழகு.
வாசு