Reading view

இந்தியாவில் பழுது பார்க்கும் உரிமைக்கான இயக்கம் – ஓர் விளக்கம்

பழுது பார்க்கும் உரிமை முன்பெல்லாம் நாம் வாங்கும் பொருட்களில் பழுது ஏற்பட்டால் நாமே அதை சரி செய்வோம். உட்பாகங்களில் பழுது ஏற்பட்டு பாகத்தை மாற்றவேண்டிய நிலை வந்தாலும் நாம் புதிய பாகத்தை வாங்கி வந்து பொருத்தி பொருளை பயன்படுத்துவோம். கடந்த 30…

The post இந்தியாவில் பழுது பார்க்கும் உரிமைக்கான இயக்கம் – ஓர் விளக்கம் appeared first on Book Day.

  •  

கால்நடை வளர்ப்பு துவங்கும் முன்பே பால் குடிக்க துவங்கிய கிழக்காசியர்கள் – டி.பி.கஸ்பேகர்

கால்நடை வளர்ப்பு துவங்கும் முன்பே கிழக்காசியர்களுக்கு பால் செரிமானத் திறனுக்கான பரிணாம வளர்ச்சி துவங்கிவிட்டது – டி.பி.கஸ்பேகர் பால் உற்பத்தி மற்றும் லாக்டோஸ் சகிப்புத்திறன்: பாலூட்டிகள் தங்கள் குழந்தைகளுக்கு ஊட்டமளிக்க பால் உற்பத்தி செய்கின்றன. இந்த ஊட்டத்தில் பெரும்பகுதி லாக்டோஸ் (பாலில்…

The post கால்நடை வளர்ப்பு துவங்கும் முன்பே பால் குடிக்க துவங்கிய கிழக்காசியர்கள் – டி.பி.கஸ்பேகர் appeared first on Book Day.

  •  

அறிவியலாற்றுப்படை 22: கேள்வியின் நாயகனாகும் அறிவியல் – முனைவர் என்.மாதவன்

கேள்வியின் நாயகனாகும் அறிவியல் அறிவியலாற்றுப்படை – 22 – முனைவர் என்.மாதவன் நோவா என்ற பெயரில் ஒரு கடவுளின் அனுக்க சீடர் ஒருவர் இருந்தார். அவருக்கு மனைவியும் மூன்று மகன்களும் மருமகள்களும் இருந்தனர். ஒரு நாள் கடவுள் அவருக்கு ஒரு ஆணையிட்டார்.…

The post அறிவியலாற்றுப்படை 22: கேள்வியின் நாயகனாகும் அறிவியல் – முனைவர் என்.மாதவன் appeared first on Book Day.

  •  

அறிவியலாற்றுப்படை 21 : அறிவியலின் பாதையில் நம்பிக்கைகள் – முனைவர் என்.மாதவன்

அறிவியலின் பாதையில் நம்பிக்கைகள் அறிவியலாற்றுப்படை 21 முனைவர் என்.மாதவன் பல வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வு இது. ஒரு நாள் நாய் என்னை கடித்துவிட்டது. நண்பர் ஒருவரின் வீட்டில் வளர்க்கும் நாய்தான் என்றாலும் எனக்குத் தேவையான ஊசிகளை வரிசைப்படி போட்டுக்கொண்டேன். இதே…

The post அறிவியலாற்றுப்படை 21 : அறிவியலின் பாதையில் நம்பிக்கைகள் – முனைவர் என்.மாதவன் appeared first on Book Day.

  •  

கு.வி.கிருஷ்ணமூர்த்தியின் *தமிழர் தாவரங்களும் பண்பாடும்* – நூல் அறிமுகம்

“தமிழர் தாவரங்களும் பண்பாடும்” புத்தகத்தில் நூலாசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தாவரங்களை தெய்வத்திற்கு இணையாக கருதியதை, “தெய்வம் உணாவே மாமரம் புட்பறை செய்தி யாழின்பகுதியோடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப என்ற தொல்காப்பியத்தின் வார்த்தைகள் நினைவூட்டியது. உலகில் தாவரங்கள் தோன்றிய பிறகு…

The post கு.வி.கிருஷ்ணமூர்த்தியின் *தமிழர் தாவரங்களும் பண்பாடும்* – நூல் அறிமுகம் appeared first on Book Day.

  •  

Sanskrit and other Languages of Science

In 1999, I read the Tamil historical novel Sivakaamiyin Sabatham. Set in the seventh century, the novel tells of the siege of Kanchipuram, the capital of the Pallavas, by their rivals, the Chalukyas. It is still one of the most popular books in Tamilnadu, seventy years after its first publication. At one point in the story, Aayanar, an artist and sculptor tells the Pallava king Mahendra Varma, that his deepest desire is to know the secret technology of  Ajanta paintings, which have lasted a thousand years without fading. The paintings of Ajanta are still there, a thousand years after the Pallavas and Chalukyas disappeared.

In Kanchipuram, the Kailasanatha temple built by Mahendra Varma’s great grandson Rajasimha Pallava in the eighth century, has paintings in the Ajanta style, which have sustained damage but what remains hasn’t faded. The contemporary Pandyas built a Jain cave temple of Sittannavasal, which has equally remarkable paintings.

A heritage of science and technology

These struck a severely discordant note. How many advertisements do we see on television for the latest paints that last twenty years? Enamel paints manaufactured in large chemical plants, based on the very latest technology brought to life by the most brilliant chemical engineers of the last century. Their great selling point is that they last twenty years – one hundredth of the two thousand years that Ajanta paintings have lasted, in primitive caves, sculpted by hammer and chisel.

What other remarkable scientific and technological achievements of ancient Indians was I missing?

By sheer coincidence, I happened to attend a series of lectures about the “Oral Traditions of the Sanskrit” language, by Prof Swaminathan, a retired IIT Delhi professor of mechanical engineering. He explained the Siva sutras (also called Maheshvara sutras) and how Panini used them to write extremely compact rules of grammar for Sanskrit. The Siva Sutras and Panini’s sutras reminded me starkly of the Backus-Naur notation, that every computer science or engineering student learns in college. But, wait! What was Panini doing, composing Sanskrit grammar in Backus-Naur notation?

Why is Panini never mentioned in any computer science course? Why is not a single discovery  of Baudhayana, Aryabhata, Brahmagupta or Bhaskara ever taught in a mathematics or engineering course? In any school or college? Seventy years after independence, you can hardly blame British colonialism.

The ignorance is not merely about Indian science, it is about all non European science and technology, in general. Sumeria, Egypt, China, MesoAmerica (Olmecs-Mayans-Aztecs), Persia, all ancient civilizations are totally ignored, and we get an entirely European perspective of all science and technology.

English is the language of science, we are told, though most of the scientific vocabulary is in Greek or Latin. The very names of the sciences Physics, Biology, Zoology, Geology, Astronomy come from Greek. Chemistry, is an exception, adapted from the Arabic word AlChimia (or Alchemy). The  different fields of mathematics, Geometry, Trigonometry, Arithmetic have Greek origins. But Algebra comes from an Arabic word; Calculus from a Latin word. Newton wrote his most famous physics book, “Principa Mathematica de Naturalis” in Latin, not English. When Antoine Lavoisier coined new words for the modern chemistry he discovered, he did not use French; he chose Greek and Latin. English words like soda and pot ash, were Latinized into Sodium and Potassium.

A mathematical vocabulary

Did the Sumerians, Chinese, or ancient Indians use Latin or Greek? Or even need them? Obviously not. It was when I started reading the Aryabhateeyam in its original Sanskrit (with English translation assisting), that I realized what a rich vocabulary we are ignorant of.

Do you recognize the following words: vishkambha, parinaaha, kakshya, vishuvat, karna, jyaa?

How about these words : diameter, circumference, orbit, equator, hypotenuse, sine?

Here’s the stunnner. The first row of Sanskrit words have the exact same meaning as the second row of English words.

समपरिणाहस्यार्ध विष्कम्भार्धहतमेव वृत्तफलम्

Transliteration sama pariNaahasya ardha vishkamba ardha hatameva vrtta phalam

Let me explain this Sanskrit statement, word by word:

Sama – equal
Parinaaha – diameter
Ardha – half
Vishkambha – circumference
Hatam – multiply
Eva – exactly
Vrtta – circle
Phalam – result 

Literarlly “Equal diameter-half circumference-half mutliply-exactly circle’s-result”

Rephrased grammatically in English : “A circle’s area equals half the diameter  multiplied by half the circumference”.

This was stated in Sanskrit by none other than Aryabhata. It is the seventh sloka in his Aryabhateeyam.

Let me propose two quick quizzes: there are two lists of names side by side, one European, the other Indian. Just write down what they invented or discovered, as a self-test.


You can the internet to verify your answers. But did you get all answers correctly in the first list? How did you fare with the second list? Did you even recognize all the names? (Confession: I didn’t know three of them ten years ago). If you guessed that Aryabhata invented zero or discovered gravity or the heliocentric theory, give yourself negative marks. He didn’t.

But the people on the second list had one things in common. They all used Sanskrit as the language of science. Why Sanskrit? Sanskrit was not only the language of religion, and literature, it was also the language of several sciences, law, justice, administration, economics, rhetoric, logic, and several arts, namely music, dance, painting, sculpure, architecture etc. It served the same function in India and countries to the east of India, that Latin first in the Roman empire, then in Europe until perhaps the twentieth century; what Mandarin did in China from Confucian times upto perhaps today; what Arabic did in the realms of Islam. It was the link language of a cultural continent, across several kingdoms over the span of several centuries, even millennia.

Consider these somewhat famous books.


I have provided only one example in each field. In reality, each field has several books, written by scholars from various regions or cities, across several centuries. We never hear of them, because over time, Sanskrit has become more alien in India than Greek or Latin.

Now consider that quiz, again. Why is that ignorance of the inventions or discoveries of Europeans considered scientific illiteracy, but ignorance of the inventions of discoveries of Indians considered normal? It may be tempting to Islamic desturction or European colonialism. But I don’t think that is an acceptable excuse, seventy years after Independence.

When most Indians, hear Sanskrit or hear of it, we only hear of it as the language of the Vedas, or at best the language of beautfiul poetry as in Kalidasa or Jayadeva. One popular understanding is that it is a dead language, steeped in the superstition of religion. The only people talking in public about anything Sanskrit are people quoting philosophy; once in a blue moon, perhaps a musician or a dancer. Or, a chorus chanting Sanskrit mantras as background music in a Star Wars movie.

Buddhist and Jain Sanskrit literature

Sanskrit was not the only language in which science was written, in ancient and medieval India. The Jains and Buddhists wrote books on some sciences in several Prakrits, primarily Ardha Magadhi and Pali. They believed that Sanskrit was the language of the elite, and to reach the common man, the local languages should be used. But this soon led to severe fragmentation of literature. The Kushana king Kanishka convened a Buddhist Sangha in Kashmir, at which scholars began to translate several Buddhist canonical texts from Pali to Sanskrit. From then on, several original works, including on mathematics, were composed in Sanskrit also. Similarly, Jains composed Sanskrit works from the fifth century onwards, after the Valabhi Sangham. The first Sanskrit book where mathematics is the primary subject, not a chapter in an astronomy book, is Ganita Sara Sangraha, composed by the 9th century Jain mathematician Mahavira. A few stanzas of his first chapter, beautifully outline the use and power of mathematics. It should be declared the Mathematics Anthem, and printed on the first page of ever math text book. I suspect Finland or Cambodia will do it, and then India will rush to follow. Here it is, with my translation:

लौकिके वैदिके वापि तथा सामायिकेऽपि य: |
व्यापारस्तत्र सर्वत्र संख्यानमुपयुज्यते || ९

कामतन्त्रेऽर्थतन्त्रे च गान्धर्वे नाटकेऽपि वा|
सूपशास्त्रे तथा वैद्ये वास्तुविद्यादिवस्तुषु || १०

छन्दोऽलङ्कारकाव्येषु तर्कव्याकरणादिषु |
कलागुणेषु सर्वेषु प्रस्तुतं गणितं परम् || ११

Translation

In worldly life, in Vedic learning, in religious practice, 
In business, in everything, Mathematics is useful.

In romance, economics, in music dance and drama,
In cooking, medicine and in architecture, 

In prosody, poetry, logic and grammar,
In all the arts, Mathematics reigns supreme.


The libraires of Alexandria and Nalanda may have been destroyed by iconoclastic invaders, but the library of all Sanskrit knowledge is vandalized every day, by our collective ignorance and negligence.

That is ridiculous. We can change that.

References

  • 1.     Facets of Indian Astronomy, KV Sarma, 1975
  • 2.     The Aryabhatiya of Aryabhata, Walter Eugene Clark, 1930
  • 3.   Mahavira's Ganita Saara Sangraha, Prof Rangacharya, Univ of Madras, 1912 

__________

This was the first of a series of essays published in Swarajya magazine online

For the entire series click this link --> Indian Astronomy and Mathematics   

Related Links

My blogs on Astronomy and Mathematics

Shilpam Science Sundaram - TEDx lecture at Saveetha Eco Pupil school

  •  

Why does Music exist - Alan Harvey

I attended the India Science Festival held at IISER, Pune January 20 and 21, 2024. One of the lectures was by Prof Alan Harvey, University of Western Australia, titled “Why does music exist?”  These are my notes from that lecture.

---------------------

Alan Harvey's lecture at ISF pandal, Pune 

Why does Music exist? Speaker - Alan Harvey

Music is a science,not an art. Maybe we shouldn't think of art and science as different things

How do I remember so many songs but don't remember much prose ?

Theres something special about music, which fires the communication stream, and oxytocin is major factor. Oxytocin is involved in the plasticity of memory, which works with music in a way language alone doesn't.

The human species is the only one that sing in harmony and move synchronised like in dances.

Music fires different regions of the brain as can be seen in MRI scans that scrambled noise fires.

There may be an evolutionary reason why the ability for music evolved, and we have several conjectures, but nothing has been proved.

A slide from Alan Harvey's lecture

You shouldn't use the word music unless you refer to modern music which distinguishes compositions with song and instrument distinct from language. To call birdsong or tweets of insects or other creatures as music is absurd.

Music is different from just poetry, even poetry with rhythm, even poetry with pitch changes.

But scientists have not studied or recorded brain patterns based on poetry, as much as with music, and it's worth exploring.

Other Lecture Notes

Other essays on Music


  •  

டிசம்பர் இரவுகள் – Crime Novel

வேலை விஷயமாக ஏர்போர்ட் செல்ல இருந்த அண்ணன் பார்த்திபனை எழுப்புவதற்காக மாடியில் இருக்கும் அவனது அறைக்குச் செல்கிறாள் மேகலா.  ஆனால் ஏற்கனவே எழுந்திருந்த பார்த்திபன், பணத்தைக் கொண்டு வருவதாகவும், விஷயம் வெளியே தெரிய வேண்டாம் எனவும் போனில் யாருடனோ பயத்தில் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

“கங்காதர் ஃபெர்டிலைசர்” கம்பெனியின் ஓனரான கங்காதருக்கு மூன்று வாரிசுகள். முதல் மனைவிக்கு பிறந்தவன் பார்த்திபன், இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர்கள் – ஜீவா, மேகலா.

பார்த்திபனின் பேச்சை இண்டர்காமில் ஒட்டுக்கேட்ட மேகலா, போனில் ப்ளாக்மெயிலர் சொன்ன இடத்திற்குத் தன்னுடைய காதலன் பிரகாஷை அனுப்புகிறாள். பிரகாஷ்-மேகலா இருவரும் வீட்டிற்குத் தெரியாமல் ஆறு மாதங்களாகத் தங்கள் காதலை வளர்த்து வருபவர்கள்.

பார்த்திபனுக்கு முன்னமே அந்த ஹோட்டலுக்குச் சென்ற பிரகாஷ், ப்ளாக்மெயிலருக்காக காத்திருக்க ஆரம்பித்தான். அதே சமயம் பார்த்திபனும் அங்கு வந்து சேர, கார் பார்க்கிங்கில் காரை நிறுத்தச் செல்கிறான். நீண்ட நேரமாகியும் பார்த்திபன் வெளியே வராததால், பார்க்கிங் இடத்திற்கே செல்கிறான் பிரகாஷ்.

அங்கே கழுத்தில் குண்டடி பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தான் பார்த்திபன். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விவேக்கும், கோகுல்நாத்தும் SOC பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது தான் விவேக் அந்த விஷயத்தை கவனித்தான். காரைத் திறந்தவுடன் உள்ளே இருந்து ஒரு பெர்ஃபியூம் நறுமணம் வீசிக்கொண்டிருந்தது.

அனைத்து பூக்களையும் கொண்டு செய்த வாசமாக அது இருந்தது. மேலும் அங்கு கிடைத்த சேறு படிந்த பூட்ஸ் தடயங்கள் மிகவும் பெரிய அளவில் வித்தியாசமாக இருந்தது. கேஸ் இவ்வாறாக போய்க்கொண்டிருக்க, வேலைக்குச் சென்ற தன்னுடைய பெண் தேவியை நாலு நாட்களாக காணவில்லை என கம்பளைண்ட் கொடுக்க போலீஸ் ஸ்டேஷனிற்கு வருகிறார் ரிடையர்டு ஆர்மிமேன் ஜலபதிராவ்.

தேவி வேலை பார்த்துக்கொண்டிருந்த இடம், “கங்காதர் ஃபெர்டிலைசர்” கம்பெனி. நேரடியாக விசாரணையை கம்பெனியில் ஆரம்பித்த விவேக், உரக்கிடங்கில் இருந்து ஒரு பெண்ணின் பர்ஸைக் கண்டுபிடிக்கிறான். அந்தப் பர்ஸ் தேவியுடையது என கண்டுபிடிக்கப்பட, மேற்கொண்டு போலீஸ் நாய் சீஸரை வரவழைத்து தேடலைத் தொடங்குகிறான் விவேக்.

சீஸர் பர்ஸை மோப்பம் பிடித்துவிட்டு காட்டுக்குள் ஓடி, ஒரு கட்டத்தில் ஓய்ந்து நிற்கிறது. அங்கே மண்ணில் காலால் பிராண்டி போலீசை அழைக்க, தோண்டிப் பார்த்தால் அழுகிய நிலையில் தேவியின் பிணம் கிடைக்கிறது.

தேவியின் கொலைக்கு பார்த்திபன் காரணமாக இருந்து, தேவிக்கு நெருக்கமானவர்கள் பார்த்திபனைக் கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் கேஸ் நகர்ந்துகொண்டிருக்க, ஜலபதிராவ் வீட்டிற்கு விசாரணைக்குச் செல்கிறான் விவேக். தேவியின் மரணத்தைப் பற்றித் துப்பு துலங்க அங்கே  சென்றவனுக்குக் காத்திருந்தது ஒரு அதிர்ச்சி.

மாலைக்கண் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஜலபதிராவ், கேன்சரால் பாதிக்கப்பட்டு நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் அவரின் மனைவி, மேலும் பித்துப் பிடித்து அறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தேவியின் தங்கை அர்ச்சனா என குடும்பமே மிக மோசமான நிலையில் இருக்கிறது.

இதற்கிடையில் பார்த்திபனுக்கு வந்த மாதிரியே இன்னொரு போன் கால் ஜீவாவிற்கு வர, அவனும் பயந்து போய் யாருக்கும் தெரியாமல் பணத்துடன் வெளியே செல்ல, இதைக் கண்டுபிடித்த மேகலா, விவேக்கிற்கு விஷயத்தைச் சொல்கிறாள்.

ஆனால் விவேக் செல்வதற்கு முன்னமே பார்த்திபன் கொலை செய்யப்பட்டதைப் போலவே ஜீவாவும் கொலை செய்யப்படுகிறான். மேலும் ஜீவாவின் காரிலும் அதே பெர்ஃபியூம் நறுமணம். அவனுடைய பேண்ட் பாக்கெட்டில் ஒரு லெட்டர் இருக்க, அதில் தேவியின் ஆவி என்ற பெயரில் கடிதம் ஓடியிருந்தது.

அடுத்தது நீ.. என தேவியின் ஆவி என்ற பெயரில் ஒரு லெட்டர் மேகலாவிற்கும் வந்திருக்க..

தேவியைக் கொலை செய்தது யார்..? தேவியின் ஆவி என்ற பெயரில் நடைபெறும் கொலைகள் கேஸை திசைதிருப்புவதற்காகவா..? போலீசிடம் இருந்து ஜலபதிராவ் மறைக்கும் உண்மை என்ன..? குற்றவாளி பிடிபட்டானா..? மேலும் தெரிந்துகொள்ள வாசியுங்கள் டிசம்பர் இரவுகள்..!

want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=319

  •  

the Matilda effect

பெண்கள் ஏரோபிளேன் ஓட்டுவது போல 2 வீலர் ஓட்டுவார்கள் என்று பொதுமைப்படுத்தி நக்கலடிப்பது போலவே, அறிவியலிலும், ‘பெண்களால் சிந்திக்க முடியாது, இயந்திரங்களை, தொழில்நுட்பங்களை கையாள தெரியாது’ என்பது போன்ற எண்ணங்கள் கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் இருந்தே இருக்கிறது. இந்த எண்ணத்தின் விளைவாக அறிவியலில் பெண்களின் பங்களிப்பு ஓரங்கட்டப்பட்டு வந்தது. பெண்களின் கண்டுபிடிப்புகள் ஆண்களின் பெயராலேயே வழங்கப்பட்டு வந்தது. இதற்கு “the Matilda effect” என்று பெயர்.

1969 ல் Margaret Rossiter என்னும் பெண், அப்போது அவருக்கு 24 வயது, Yale பல்கலைக்கழகத்தில் history of science ஐ தேர்வு செய்து படித்து வந்தார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்  professors மற்றும் students ஒன்றுகூடி பேசுவது வழக்கம். அறிவியல் வரலாற்றில் தலைச்சிறந்த விஞ்ஞானிகளை பற்றி பேசுவார்கள். அதில் ஒருமுறை கூட ஒரு பெண் விஞ்ஞானியை பற்றி யாரும் மூச்சு கூட விட்டதில்லை. ஆச்சரியப்பட்ட Rossiter, ‘பெண் விஞ்ஞானிகளே இல்லையா?’ என்று கேட்க எல்லா ஆண்களும் ஒரே நேரத்தில் சிரித்தபடி, ‘ஏதே பெண் விஞ்ஞானியா? அப்படி ஒன்று இல்லவே இல்லை’ என்றிருக்கிறார்கள். 

அப்போ Marie Curie என்றதற்கு,  Curie யின் கணவர் தான் உண்மையான மூளைக்காரர். அவர் கூடமாட இருந்து Marie Curie உதவி செய்து இருக்கிறார் அவ்வளவே என்று சொல்லி அதிர்ச்சியூட்டி இருக்கிறார்கள். 

Marie உடனே molten radium chloride ஐ electrolyze செய்து pure radium ஐ isolate பண்ணி Kelvin னின் கூற்று தவறென்று நிரூபித்தார்.

“There are sadistic scientists who hurry to hunt down errors instead of establishing
the truth.”
– Marie Curie

— Swathika (@swathikasarah) August 11, 2022

இவங்ககிட்ட பேசுறது வேஸ்ட் என்று நினைத்த Rossiter, அமைதியாக அவ்விடத்தை விட்டு நகன்று இருக்கிறார். ஆனாலும் அவர் மனதை இந்த சம்பவம் பிராண்டி கொண்டே இருந்திருக்கிறது. அதெப்படி இத்தனை வருடங்களில் பெண் விஞ்ஞானிகளே இல்லாமல் இருப்பார்கள் என்று. அவரது ஆராய்ச்சிக்கு அவர் தேர்ந்தெடுத்த தலைப்பு “Women Scientists in America”. பல வருடங்கள் ஆராய்ச்சி செய்து, பெண் விஞ்ஞானிகளை பற்றிய ஆராய்ச்சி கட்டுரை எழுதினார். அதில் ஒரு தலைப்பு Struggles and Strategies to 1940. பெண் விஞ்ஞானிகள் எப்படி மட்டம் தட்டப்படுகிறார்கள், அவர்களது கண்டுபிடிப்புகள் எப்படி கூட இருக்கும் ஆண் விஞ்ஞானி பெயரில் எழுதப்படுகிறது என்றெல்லாம் விரிவாக விளக்குகிறது இவரது ஆராய்ச்சி கட்டுரை. இது வெளிவந்தபோது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

வெற்றி பெற்றவர்கள் மட்டுமே வரலாற்றை எழுதுகிறார்கள். ஆனால் பெண்கள் விஷயத்தில் பெண்கள் வெற்றி பெற்றாலும் அந்த வரலாற்றை திருத்தி எழுதுவது ஆண்களாக இருக்கிறார்கள்.

Astronomy, physics, chemistry, entomology, botany என்று பல துறைகளில் மறக்கடிக்கப்பட்ட பெண்களின் வரலாற்றை தோண்டி எடுத்தார் Rossiter. the Matilda Effect என்னும் சொற்றொடரை முன்மொழிந்தவர் Rossiter.

Matilda Joslyn Gage (1826-1898) என்பவர் அமெரிக்க எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர். இவர் பெண்களின் ஓட்டு உரிமைக்காக மற்றும் கறுப்பின அடிமை முறையை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்தவர். இவரும் வரலாற்றில் மறைக்கப்பட்ட பெண்களை பற்றி நிறைய எழுதி இருக்கிறார். ஆனால் இவரும், அவர் எழுதிய பெண்களை போலவே மறைக்கப்பட்டது தான் சோகம். இவரை கௌவரவப்படுத்தும் விதமாக, பெண்களின் சாதனைகளை,  வேண்டுமென்றே அறிந்தே ஆண்களால் மறைக்கப்படும் செயலுக்கு the Matilda Effect என்னும் பெயரை Rossiter முன்மொழிந்தார்.

Matilda மறைக்கப்பட்ட பெண்களை பற்றி பேசியவர் அவருக்குப்பின் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் கழித்து பிறந்த Margaret Rossiter அவரும் மறைக்கப்பட்ட பெண்களை பற்றி பேசியவர் இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இன்னொரு பெண் வந்து வரலாற்றில் மறைந்து போன பெண்களை பற்றி பேசத்தான் வேண்டி இருக்கும் போல.

  •  

அறிவியலுக்குத் தடையாய் நின்ற மதம்!

-மேகலா இராமமூர்த்தி

மாந்தர்களாகிய நாம் வாழ்ந்துவரும் இந்தப் புவியானது சூரியக் குடும்பத்திலுள்ள (Solar System) எட்டுக் கோள்களுள் ஒன்றாகும். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை மற்ற கோள்களாகும். புளூட்டோ எனும் சிறிய கோளும் சூரியக் குடும்ப உறுப்பினராகத்தான் கடந்த காலத்தில் இருந்தது; ஆனால் வானியலாளர்கள் வரையறுத்த கோளுக்கான அளவைவிட அது சிறியதாக இருந்தபடியால் கோள் எனும் தகுதியை இழந்து, 2006ஆம் ஆண்டு ஆகஸ்டு 24 அன்று, சூரியக் குடும்பத்திலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டது.

இப்போது ’சூரியக் குடும்பம்’ எனும் சொல்லாட்சி அனைவரும் அறிந்த ஒன்றாக இருப்பினும் உலகம் அதனை அத்தனை எளிதில் கண்டடைந்துவிடவில்லை; அதற்குப் பன்னூறாண்டுகள் ஆயின என்பதுதான் வரலாறு காட்டும் உண்மை.

புவி மையக் கோட்பாடு (Geocentrism):

தொடக்க காலத்தில் பேருலகம் (Universe) புவியை மையமாகக் கொண்டது என்றும், ஏனைய கோள்கள் புவியையே சுற்றிவருகின்றன என்றும்தான் எண்ணியிருந்தனர் மக்கள். இந்தக் கருத்துருவுக்கு புவி மையக் கோட்பாடு என்று பெயர்.

பிளேட்டோ (Plato): கி.மு. 4ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கிரேக்கத் தத்துவ அறிஞரும் கருத்துமுதல்வாதியுமான பிளேட்டோ விண்மீன்கள், கோள்கள், பருப்பொருள்கள் அனைத்தையும் உள்ளடக்கிய பேருலகிற்கு மையமாக இருப்பது புவியே எனும் கருத்தைக் கொண்டிருந்தார்.

அரிஸ்டாட்டில் (Aristotle): பிளேட்டோவின் புகழ்வாய்ந்த மாணவரும் சிந்தனையாளருமான அரிஸ்டாட்டிலும் புவியானது நிலையாக இந்தப் பேருலகின் மையத்தில் அமைந்திருக்க, ஏனைய கோள்கள் வட்ட வடிவில் அதனைச் சுற்றிவருகின்றன என்று வாதிட்டார்.

கிளாடியஸ் தாலமி (Claudius Ptolemy): அரிஸ்டாட்டிலின் கருத்துக்கு வலுசேர்க்கும் வகையிலும் புவி மையக் கோட்பாட்டை ஆழமாக நிறுவும் வகையிலும் எகிப்தைச் சேர்ந்த வானியல் அறிஞரும் கணிதவியலாளருமான கிளாடியஸ் தாலமி, கி.பி.150இல் தம் வானியல் ஆய்வுகள் குறித்த விவரங்களை ’Almagest’ (Meaning: The Great Compilation – பெருந்தொகுப்பு) எனும் பெயரில் நூலாக வெளியிட்டார். அதில் பேருலகின் மையமாகப் புவியே விளங்குகின்றது என்றும் சூரியன், நிலவு, கோள்கள், உடுக்கள் அனைத்தும் புவியையே சுற்றிவருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோரின் தத்துவார்த்த அவதானிப்புகளைப்போல் அல்லாமல் தாம் வடிவமைத்த கணித மாதிரியை (mathematical model) அடிப்படையாகக் கொண்டு தாலமி புவி மையக் கோட்பாட்டை வரையறுத்திருந்தாலும் அவரின் சிந்தனைக்கு அடிப்படையாக அமைந்தது அவ்விருவரின் சிந்தனையோட்டமே. தொலைநோக்கிகள் கண்டுபிடிக்கப்படாத அக்காலத்தில், புழக்கத்திலிருந்த வானியல் கருவிகளான ஆஸ்ட்ரோலேப் Astrolabe, நோமோன் (Gnomon) போன்றவற்றின் உதவியோடும், வெறும் கண்களால் தாம் இரவு வானில் கண்டறிந்த வான்வெளி உண்மைகளை அடிப்படையாகக் கொண்டும் தம் கணித மாதிரியைத் தாலமி உருவாக்கினார். கிட்டத்தட்ட ஆயிரத்து நானூறு ஆண்டுகட்குத் தாலமியின் நூலான ’Almagest’ புவி மையக் கோட்பாட்டுக்கு வலுவான ஆதாரமாய்த் திகழ்ந்தது.

தாலமிக்குப் பிறகும் நீண்டகாலத்துக்குப் புவி மையக் கோட்பாடே நிலைபெற்றிருந்தது; அதற்கு முதன்மையான காரணம் மதங்களின் செல்வாக்கே. விவிலியத்தின் ஆதியாகம நூலானது (Book of Genesis), புவியின் படைப்பு கடவுளால் வேண்டுமென்றே செய்யப்பட்ட செயலென்றும், புவியே அவரது படைப்பின் அசையாத மையப்புள்ளியென்றும் (Psalm 104:5) விவரித்தது. இசுலாமிய சமயத்தின் புனிதநூல் கோட்பாடுகளும் புவியை மையப்படுத்தியதாகவே அமைந்திருந்தன; ஆதலால் இவ்விரு சமயத்தினரும் புவி மையக் கோட்பாட்டை ஆதரித்தனர். எனவே, கி.பி. 15ஆம் நூற்றாண்டுவரை புவி மையக் கோட்பாடே உலகோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

சூரிய மையக் கோட்பாடு (Heliocentrism):

அரிஸ்டார்கஸ் (Aristarchus of Samos): அரிஸ்டாட்டிலுக்குக் காலத்தால் சற்று முற்பட்டவரும் (310–230 BCE) கிரேக்கத் தீவான சாமோஸில் வாழ்ந்தவருமான வானியலாளரும் கணிதவியல் வல்லுநருமான அரிஸ்டார்கஸ், சூரிய மையக் கோட்பாட்டை முன்மொழிந்தவர் என்பது நமக்கு வியப்பளிக்கக்கூடிய செய்தியே. புவி, தன்னுடைய அச்சில் சுழல்கின்றது என்பதையும் இரவும் பகலும் மாறிமாறித் தோன்றுவதற்கு அதுவே காரணம் என்பதையும் கண்டறிந்துரைத்த அறிஞர் அவர். சூரியனானது புவி, நிலவு ஆகியவற்றைவிட அளவில் பெரியதாகத் தோன்றுவதையும், அவையிரண்டையும்விட அதிகத் தொலைவில் இருப்பதையும் கவனித்த அரிஸ்டார்கஸ், சூரியனே சூரிய மண்டலத்தின் மையமாக இருக்கவேண்டும் எனும் தம் கருத்தைத் தெரிவித்தார். எனினும், அரிஸ்டாட்டில், தாலமி ஆகியோரின் கருத்துக்களுக்குப் பொதுமக்களிடமும், மக்களை வழிநடத்திய மதங்களிடமும் இருந்த செல்வாக்கால் அவரின் கருத்து எடுபடாமல் போனது.

நிக்கோலஸ் கோப்பர்னிகஸ் (Nicolaus Copernicus): அரிஸ்டார்கஸின் கருத்து விதை, அவர் காலத்தில் முளைவிடாமல் போனாலும் கி.பி. 15/16ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த போலந்து நாட்டைச் சார்ந்த கணிதவியலாளரும் வானியலாளருமான நிக்கோலஸ் கோப்பர்னிகஸ் மூலமாக முளைவிட்டு எழுந்தது. அவரும் அரிஸ்டார்கஸைப் போலவே புவி மையக் கோட்பாட்டை மறுத்துச் சூரிய மையக் கோட்பாட்டையே முன்வைத்தார். 1543ஆம் ஆண்டு வெளிவந்தDe revolutionibus orbium coelestium’ (’On the Revolutions of the Celestial Spheres’வான்கோளங்களின் சுழற்சி) எனும் தம் நூலில், சூரியனே இப்பேருலகின் மையம்; புவி அன்று எனவும், புவியும் பிற கோள்களும் சூரியனைச் சுற்றிவருகின்றன’ எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கருத்தை அவர் கணிதவியல் அடிப்படையில் விளக்கிக் கோள்களின் இயக்கங்களுக்குக் குறிப்பாக அவற்றின் பின்னோக்கிய இயக்கங்களுக்கு (retrograde motion) எளிய விளக்கங்களைத் தந்திருந்தார்.

சூரிய மையக் கோட்பாட்டைக் கோர்ப்பனிகஸ் கண்டறிந்தது எப்படி?

தாலமியின் புவி மையக் கோட்பாட்டு வரைபடத்தைக் கண்ட கோப்பர்னிகஸ், அதில் கோள்களின் முன்னோக்கிய பின்னோக்கிய சுழற்சிகளை விவரிக்கச் வட்டத்துக்குள் வட்டமிடும் சிக்கலான முறைகள் கையாளப்பட்டிருந்ததைக் கவனித்தார். செவ்வாய், வியாழன், சனி போன்ற கோள்கள் சில நேரங்களில் பின்னோக்கி நகர்வதை விளக்குவதில் தாலமியின் புவி மைய வரைபட மாதிரி இத்தகு சிக்கலை எதிர்கொள்வதைக் கோப்பர்னிகஸ் உணர்ந்தார்.

கோள்களின் இயக்கம் அவற்றின் வேகம் குறித்த விவரங்களைத் தாலமி, அவருக்கு முற்பட்ட வானியலாளரான ஹிப்பார்கஸ் (Hipparchus) ஆகியோரின் வரைபடங்கள், மாதிரிகள், கணிதவியல் கருத்துக்கள் ஆகியவற்றின் வாயிலாக அறிந்த கோப்பர்னிகஸ், கோள்களின் இயக்கம் குறித்துத் தாம் கண்டறிந்த விவரங்களோடு அவற்றை ஒப்பிட்டுப்பார்த்து, புவியைப்போல் சூரியனுக்கு அருகிலுள்ள கோள்கள், தொலைவிலுள்ள கோள்களைக் காட்டிலும் வேகமாகச் சுழல்வதையும், புவி மெதுவாக இயங்கும் வேறொரு கோளை முந்திச்செல்லும்போது அந்தக் கோள் பின்னோக்கிச் செல்வதுபோன்ற மாயத்தோற்றம் ஏற்படுவதனையும் புரிந்துகொண்டார். [சான்றாக நாம் மகிழுந்தில் வேகமாகச் செல்வதாக வைத்துக்கொள்வோம்; நாம் செல்லும் திசையிலேயே நம்மைவிடக் குறைந்த வேகத்தில் செல்லும் மற்றொரு மகிழுந்தை நாம் கடக்கும்போது முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கும் அம்மகிழுந்து பின்னோக்கி நகர்வதுபோல் நமக்குத் தோற்றமளிக்கும்; இதே நிகழ்வுதான் கோள்களின் வேறுபட்ட வேகச் சுழற்சியின்போதும் நிகழ்கின்றது.]

எனவே, புவி உட்பட அனைத்துக் கோள்களும் சூரியனைச்சுற்றி இயங்குவதாகக் கொண்டால், கோள்களின் இயக்கத்தை இயல்பாக – எவ்விதச் சிக்கலுமின்றி விளக்கமுடியும் என்றார் கோப்பர்னிகஸ்.

வானியல் ஆய்வில் தாம் கண்டுணர்ந்த சூரிய மையக் கோட்பாட்டை வெளிப்படுத்தி நூலெழுதியவரான கோப்பர்னிகஸ், திருச்சபை மதகுருமாராக (Clergy) இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது போலந்து நாட்டுத் திருச்சபையும் கத்தோலிக்கக் கிறித்தவத்தைச் சார்ந்ததுதான்; அதனால், தாம் கண்டறிந்து ஆவணப்படுத்திய உண்மைகளை அவர் தீவிரமாகப் பரப்புரை செய்யவில்லை; அத்தோடு கத்தோலிக்கத் திருச்சபை, இறைவனின் படைப்புக் கோட்பாட்டுக்கு எதிரான சூரிய மையக் கோட்பாட்டையும் அதனை முன்மொழிந்தவர்களையும் முழுவீச்சில் ஆராய்ந்து தண்டிப்பதற்கு முன்பாகவே அவர் இயற்கை எய்திவிட்டார்.

ஜார்ஜ் ஜோச்சிம் ரெட்டிகஸ் (Georg Joachim Rheticus): கோப்பர்னிகஸின் மாணவரான ரெட்டிகஸ் சூரிய மைய மாதிரியை ஆதரித்தவராவார். கோப்பர்னிகஸ் தம்முடைய De revolutionibus orbium coelestium’ நூலை வெளியிடுவதற்குப் பேரூக்கம் தந்தவர் இவர்.

ஜியோர்டானோ புருனோ (Giordano Bruno): வானியலில் மிகுந்த ஆர்வம்கொண்ட மெய்யிலாளரான புருனோ, சூரியனை மையமாகக் கொண்டே புவியும் பிற கோள்களும் இயங்குகின்றன எனும் கோப்பர்னிகஸின் கோட்பாட்டை வழிமொழிந்தார். சூரியன் என்பது உடுக்களுள் ஒன்று, எண்ணிறந்த உடுக்களையும் கோள்களையும் கொண்ட இந்தப் பேருலகம் எல்லையற்றது என்பவை இவரின் கண்டுபிடிப்புகளாகும்.

புருனோ கிறித்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தபோதிலும் ஏசுநாதரின் தெய்வீகத்தன்மை, திருப்பலியின்போது உரொட்டியும் மதுவும் முறையே ஏசுநாதரின் உடலாகவும் குருதியாகவும் மாறும் என்பன போன்ற கருதுகோள்களையும், நரகம் குறித்த கிறித்தவ மத நம்பிக்கையையும் அறிவுக்குப் பொருந்தாதவை என ஏற்க மறுத்து அவற்றை வினாக்களுக்கு உட்படுத்தினார்.

சூரிய மையக் கோட்பாட்டை ஆதரித்ததற்காகவும் கிறித்தவ மத நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்ததற்காகவும் சிறையிலடைக்கப்பட்டுத் தம் கருத்துக்களைத் திரும்பப் பெறுமாறு கத்தோலிக்கத் திருச்சபையால் சித்திரவதை செய்யப்பட்டார் புருனோ; அப்படியும் அவர் தம்முடைய கருத்துக்களைத் திரும்பப்பெற மறுத்ததால் திருச்சபையின் உத்தரவின்பேரில் பிப்ரவரி 17, 1600இல் கழுமரத்தில் கட்டப்பட்டு உயிரோடு எரித்துக்கொல்லப்பட்டார்.

”அன்பே வடிவான ஏசுகிறிஸ்துவின் போதனைகளைப் பின்பற்றுபவர்கள் நாங்கள்” என்று மார்தட்டிக்கொண்ட கத்தோலிக்கத் திருச்சபையின் செயற்பாடு, அவர்களின் பரப்புரைக்கும் நடைமுறைக்கும் உள்ள இடைவெளி மலைக்கும் மடுவுக்குமானது என்பதைத் தெளிவாய்ப் பறைசாற்றுகின்றதல்லவா?

ஜோஹன்னஸ் கெப்ளர் (Johannes Kepler): ஜெர்மானிய வானியலாளரான இவர், கோப்பர்னிகஸின் சூரிய மையக் கோட்பாட்டை ஆதரித்ததோடு, அக்கோட்பாட்டை விரிவுபடுத்திக் கெப்ளரின் கோளியக்க விதிகளை (Kepler’s Laws of Planetary Motion) உருவாக்கிய சிறப்புக்குரியவராவார். கோள்கள் வட்டவடிவச் சுற்றுப்பாதையில் சூரியனைச் சுற்றிவருகின்றன எனும் கோப்பர்னிக்கஸின் கருத்தை மறுத்து, அவை நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றிவருகின்றன எனும் உண்மையைத் தம் கணிதவியல் கணக்கீடுகளின் அடிப்படையில் முதன்முதலில் வெளியிட்டவர் இவரே.

துல்லியமான கணிதத்தை அடிப்படையாகக் கொண்ட கெப்ளரின் ஆய்வுப் பணியானது ஊக அடிப்படையிலான முந்தைய மாதிரிகளிலிருந்து வேறுபட்டிருந்தது.

கெப்ளர் ஜெர்மானியராக இருந்ததாலும், கத்தோலிக்கப் பிரிவைச் சாராது லூத்தரனாக (Lutheran – a major branch of Protestant Christianity) இருந்ததாலும் கத்தோலிக்கத் திருச்சபையினரின் அடக்குமுறைகளிலிருந்தும் கொலைத் தண்டனையிலிருந்தும் தப்பித்தார்; இல்லையேல் அவரையும் கழுவேற்றியிருப்பர் திருச்சபையினர்.

கலிலியோ கலிலி (Galileo Galilei): இத்தாலிய வானியலாளரும் இயற்பியலாளருமான கலிலியோ, தாம் செம்மைப்படுத்திய தொலைநோக்கியின் உதவியோடு வானியல் ஆய்வுகள் மேற்கொண்டு சூரிய மையக் கோட்பாட்டை உறுதிப்படுத்தினார். வியாழனின் நிலவுகளை அவர் கண்டறிந்தார் (இவற்றைக் கலிலியோவின் நிலவுகள் என்றழைத்தார் அவர்); இக்கண்டுபிடிப்பானது வானிலுள்ள கோள்கள் புவியைச் சுற்றிவரவில்லை என்பதற்கான சான்றாக அமைந்தது. அவ்வாறே வெள்ளிக்கோளில், நிலவையொத்த, வளர்நிலை தேய்நிலைகள் இருப்பதனை அவதானித்த அவர், வெள்ளி, சூரியனைச் சுற்றிவந்தால் மட்டுமே இவை சாத்தியம் என்பதனை உணர்ந்தார். பால்வீதியை ஆய்வுசெய்த அவர், அது நெபுலாவால் (nebula – a cloud of gas and dust) ஆனது எனும் முந்தைய கருதுகோள் உண்மையன்று; மாறாக எண்ணற்ற உடுக்களால் ஆனது என்பதனையும் கண்டுபிடித்தார்.

தம் வானியல் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தி அவரெழுதிய நூலான ’Sidereus Nuncius’ (’நட்சத்திரத் தூதர்’) 1610இல் வெளியீடு கண்டது. இந்நூல், வானியல்துறையில் ஒரு புரட்சிகரமான படைப்பு எனில் மிகையில்லை.

திருச்சபையினர் தம் மதவாதச் சிந்தனையை மாற்றிக்கொள்ளாமல் தொடர்ந்து சூரிய மையக் கோட்பாட்டுக்கு எதிரானவர்களாகவே இருப்பதனை அறிந்த கலிலியோ தம்முடைய ’Dialogue Concerning the Two Chief World Systems’ எனும் நூலில் அறிவியலை ஏற்க மறுக்கும் அறிவிலிகள் என்று திருச்சபையினரை மறைமுகமாகச் சித்திரித்தார்.

கலிலியோவின் செயற்பாடுகளால் எரிச்சலடைந்த திருச்சபை, அவர் தம்முடைய கருத்துக்களைத் திரும்பப்பெற வேண்டும் எனும் நெருக்கடியைத் தொடர்ந்து அளித்துவந்தது. அவர் அதனை ஏற்கமறுக்கவே, அவருடைய நூல்களைத் தடைசெய்து 9 ஆண்டுகள் அவரை வீட்டுக்காவலில் வைத்தது. அப்போதும் அவர் தம் அறிவியல் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டும், நூல்களை எழுதிக்கொண்டுமே இருந்தார். அக்காலக்கட்டத்தில் அவரெழுதிய நூல்தான், ’Two New Sciences.’ நவீன இயற்பியலுக்கு (modern physics) அடித்தளம் அமைத்துத்தந்த நூலாக அது கருதப்படுகின்றது; அதன் காரணமாக கலிலியோ, ’நவீன அறிவியலின் தந்தை’ (Father of Modern Science) என்றழைக்கப்படுகின்றார்.

தொடர்ந்து வானியல் ஆய்வுகள் மேற்கொள்ள இயலாதபடி கண்புரை நோய் (Cataracts) கலிலியோவைப் பாதித்து அவரின் பார்வையைப் பறித்தது. எனினும், தம் உதவியாளர்களை வைத்து அவர் தம் எழுத்துப் பணிகளை மேற்கொண்டதாகத் தெரிகின்றது. வீட்டுக் காவலில் இருந்த சூழலிலேயே தம்முடைய 77ஆவது அகவையில் அவர் மரணமடைந்தார்.

சர் ஐசக் நியூட்டன் (Sir Isaac Newton): கெப்ளர், கலிலியோ ஆகியோருக்குப்பின் வந்த அறிவியலாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் நியூட்டன். இயற்பியல், கணிதம், வானியல்சார் ஆய்வுகளை அவர் மேற்கொண்டார். இயற்பியலாளராக இயக்க விதிகளையும், ஈர்ப்பு விதியையும் (the laws of motion and gravity) உருவாக்கினார். கணிதவியலாளராக கால்குலஸ் (calculus) எனும் கணிதப் பிரிவை அறிமுகப்படுத்தினார். வானியலாளராக தமக்கு முன்பு புழக்கத்திலிருந்த, கலிலியோ பயன்படுத்திய தொலைநோக்கியைப் புதுப்பித்தார். அந்தத் தொலைநோக்கியின் உதவியோடு அவர் மேற்கொண்ட ஆய்வுகள் சூரிய மையக் கோட்பாட்டுக்கு வலுசேர்ப்பனவாக அமைந்தன.

17ஆம் நூற்றாண்டின் இறுதியில் கெப்ளரின் கோளியக்க விதிகளும், நியூட்டனின் ஈர்ப்பு விதிகளும் சூரிய மையக் கோட்பாட்டின் உண்மைத்தன்மையை ஐயத்திற்கிடமின்றி நிறுவியபிறகு அக்கோட்பாடு அறிவியலாளர்களால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கத்தோலிக்கத் திருச்சபை 1822ஆம் ஆண்டு கலிலியோவின் புத்தகங்களுக்கு விதித்திருந்த தடையை நீக்கி அவற்றை வெளியிட அனுமதித்தது. எனினும் கலிலியோவை நடத்திய விதத்தில் தன் தவற்றை உணர்ந்து அது மன்னிப்புக் கேட்டதென்னவோ அவர் இறந்து 350 ஆண்டுகளுக்குப் பிறகுதான். ஆம், கலிலியோ இறந்தது 1642இல்; கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான போப் இரண்டாம் ஜான் பால் (Pope John Paul II) கலிலியோ விசயத்தில் திருச்சபை தவறிழைத்துவிட்டது என்று தம் உரையினிடையே குறிப்பிட்டது 1992இல்.

இன்று சூரிய மையக் கோட்பாடும், அதன் நீட்சியான சூரியக் குடும்பமும் (Solar System) அனைவரும் அறிந்த ஒன்றாகிவிட்டது.

மதவாதச் சிந்தனைகள் அறிவியல் வளர்ச்சிக்குப் பெருந்தடையாக இருந்ததோடல்லாமல் அறிவியலாளர்களின் உயிருக்கே ஊறு விளைவித்தன என்பதனைக் கடந்தகால வரலாறுகள் தெளிவாய் நமக்கு அறியத்தருகின்றன. அறிவியலில் மத நம்பிக்கைகளைக் கலவாமலிருப்பதே அறிவியல்துறையின் வளர்ச்சிக்கும், மாந்தகுலத்தின் அறிவு வளர்ச்சிக்கும் துணைசெய்யும் என்பதே காலம் நமக்குணர்த்தும் பாடம்.

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

  1. https://en.wikipedia.org/wiki/Geocentric_model#:~:text=In%20the%204th%20century,Eudoxus%27%20system.&text=and%20planets%20were%20carried,Eudoxus%27%20system.&text=celestial%20sphere.%20In%20his,Eudoxus%27%20system.&text=worked%20with%20Plato%2C%20developed,Eudoxus%27%20system.
  2. https://futurism.com/from-geocentrism-to-heliocentrism
  3. https://en.wikipedia.org/wiki/Aristarchus_of_Samos#:~:text=Like%20Anaxagoras%20before%20him%2C,heliocentric%20theory.%5B7%5D%5B8%5D&text=the%20Sun%2C%20albeit%20farther,heliocentric%20theory.%5B7%5D%5B8%5D&text=of%20the%20geocentric%20theories,heliocentric%20theory.%5B7%5D%5B8%5D&text=%27moving%20Earth%27%20theory%2C%20although,heliocentric%20theory.%5B7%5D%5B8%5D
  4. https://en.wikipedia.org/wiki/Copernican_heliocentrism#:~:text=Copernican%20heliocentrism%20is%20the,of%20the&text=model%20developed%20by%20Nicolaus,of%20the&text=published%20in%201543.%20This,of%20the&text=positioned%20the%20Sun%20at,of%20the
  5. https://earthobservatory.nasa.gov/features/OrbitsHistory#:~:text=Galileo%20discovered%20evidence%20to,Beginning%20on&text=support%20Copernicus%27%20heliocentric%20theory,Beginning%20on&text=when%20he%20observed%20four,Beginning%20on&text=moons%20in%20orbit%20around,Beginning%20on
  6. https://newsroom.ucla.edu/releases/the-truth-about-galileo-and-his-conflict-with-the-catholic-church#:~:text=Sixteen%20years%20after%20his,Roman%20Inquisition.&text=published%20his%20%E2%80%9CDialogue%20on,Roman%20Inquisition.&text=and%20the%20pope%2C%20Urban,Roman%20Inquisition.&text=This%20time%20he%20was,Roman%20Inquisition.
  7. https://en.wikipedia.org/wiki/Isaac_Newton#:~:text=In%20the%20Principia%2C%20Newton,by%20experiment.%5B18%5D&text=gravity%20to%20derive%20Kepler%27s,by%20experiment.%5B18%5D&text=introduced%20the%20three%2Dbody%20problem.%5B17%5D,by%20experiment.%5B18%5D&text=confirmed%20by%20the%20geodetic,by%20experiment.%5B18%5D

 

  •