Reading view

2 மரபே பிழையாம்

கில்மா விடியோவுக்கு வெறுத்து கிடந்தவளை, விடுவேனா பார்! என்பது போல சரத் காலிங்..

ஐயையோ! இன்னும் என்ன பேசுவாரோ?! இதுவரை கொடுத்த அதிர்ச்சிகள் போதும்பா போதும். காதலாவது?! கல்யாணமாவது?! ஆள விடுங்கடா சாமிகளா! போனை பிளைட் மோடில் போட்டு விட்டு தூக்க மாத்திரை முழுங்கி படுத்துவிட்டாள் வசுமதி.. தப்பித்தல் இஸம்.

இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் பணிசுமைகள் பற்றி கவலை படாது எந்திரித்தவளுக்கு இன்னும் சரத்தின் வாசம் தன்னுடலில் வீசுவது உணர்ந்தாள்.

மதியமாய் எழுந்ததால் பசித்தாலும் முதலில் குளிக்கணும் என்று தயாரானாள். அதற்கு முன் செல் பார்ப்போம் என்று அதன் நிலையையும் மாற்றி பார்க்க.. ஏகப்பட்ட செய்திகள்.. லன்ச் க்கு வீட்டுக்கு வரேன்.. உன் ரூம் மேட்டை எங்காச்சும் அனுப்பிவிடு. ஜஸ்ட் அரை மணிநேரம்.. சாப்பாடுலாம் வேணாம் நீ தான் வேணும்.. உன்னை அப்படியே சாப்பிடுவேன்..

சரத் இரக்கமே இல்லாது விளாடியிருந்தான். நல்ல நேரம் ரூம் மேட் காலி பண்ணிட்டு போனதை சொல்லல..

என்ன இப்படி பண்றார்? யார் கிட்டே சொல்றது?!! அம்மா தான் பொண்ணுக்கு முதல் தோழி சொல்வாங்க.. இவளுக்கு இந்த சொலவடை செல்லாது. அந்தம்மா ஸ்கூலில் எப்படி ஹெச் எம் யோ அதே போல தான் கட் அண்ட் ரைட்டா பேசும். இவளின் அண்ணன் வார்த்தையை கூட லேசா காதில் வாங்கும். வசுமதி பேசினால் உனக்கு ஒன்னும் தெரியாது கம்முன்னு கிட.. ன்னு போயிரும்..

மகளுக்கு தாய் செய்த ஒரே நல்ல விஷயம் கிலோ கணக்கில் நகை சேர்த்து வைத்திருப்பதும் கல்யாணத்துக்கு என்று லட்ச கணக்கில் பேங்க்ல சேர்த்து வைத்திருப்பது தான். ஏதாவது ஒன்னு தான் கிடைக்கும்.

எல்லாமே எல்லார்க்கும் எப்போதும் கிடைக்காதுல.

அம்மா இப்படி அளந்து பேசுவதாலோ என்னவோ இவளுக்கும் சகஜமாக பேசும் பழக்கம் வாய்க்கவில்லை. யாருக்கும் ஆமாம் அல்லது இல்லை என்ற சின்ன வார்த்தைகளில் உரையாடல் மட்டுமே வரும்.

சென்னையில் ஒரு என்ஜினீயரிங் காலேஜில் லெக்சரர் வேலை பார்த்துக்கொண்டே பிஹெச்டி முதல் வருட படிப்பில் இருந்தாலும் பேச ஆசைப்பட்டாலும் வார்த்தைகள்தான் வரவில்லை.

சரத்துடன் பழகும் பொழுது அவன் தான் பேசுவான் மெல்லிய புன்னகையோடு அதை காதில் வாங்கி ரசிப்பாள்.. பேசவேண்டும் எந்த உள்ளுணர்வும் தூண்டவில்லை.

இனிமையாய் பேசுகிறான். மரியாதையாய் நடத்துகிறான்.
என்னவள் என்பதாய் பதுகாக்கிறான். சரத்தை திருமணம் செய்தால் எதிர்காலம் இலகுவாயிருக்கும் என்றே இந்த ஊமை கோட்டான் லவ் என்று அதை தப்பாக எண்ணி கல்யாணம் வரை சிக்கிக்கொண்டது.

புது நம்பரில் இருந்து போன் வர..
யோசனையுடன் எடுத்தாள் வசு. வேறு எண்ணிலிருந்து சரத் தான் பேசுகிறாரோ என்று பயம். சூடு கண்ட பூனை அல்லவா?!

“ஹலோ”

மேம் என் பேர் சுனிதா..

ம்ம்ம்

இன்ப ராணி மேம் சொன்னாங்க உங்க பிஜில வேகண்ட் இருக்கு னு
என் கசினுக்கு அர்ஜன்டா தங்க இடம் வேணும்.. உங்களுக்கு ஓகே தானே..

தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே! என் கற்பை காப்பாற்ற ஒரு ஆத்மாவை அனுப்புவதுக்கு நன்றி தெய்வமே!

இல்ல.. இல்ல

ஓகே மா அனுப்புங்க எப்போ வருவாங்க..

இப்பவே அவங்க என் ஆர் ஐ ஏர்போர்ட் லேர்ந்து அப்டியே உங்க அபார்ட்மெண்ட் வந்துருவாங்க. அட்வான்ஸ் அன்ட் ரென்ட் மேம்..

சொன்னாள். உடனே அவளும் வசுவின் போன் பே க்கு அனுப்பிவிட திருப்தி.

இன்னொன்னு மேம்..

இனி நான் பார்த்துகிறேன் சுனிதா.. பை .. வைத்துவிட்டாள்.

சும்மா வள வளன்னு மனுஷர் ஏன்தான் இவ்ளோ பேசுராங்களோ?! சடைத்தும் கொண்டாள்.

கொஞ்சம் பொறுத்திருந்தால் இன்னொரு அதிர்ச்சிக்கும் ஆளாகி இருக்கமாட்டாள் வசுமதி.

ரோஜாவுக்கு நன்றி சொல்லும் நீங்கள் முட்களுக்கும் நன்றி சொல்ல பழகுங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு நகர்வும் ஒவ்வொரு அனுபவம். இன்பம் இனிப்பென்றால் துன்பம் கசப்பு அவ்வளவே! நாக்குக்கே ஏழு சுவை தேவையெனும் போதில் அனுதினமும் அலுக்காமல் ஓட நவரசங்களும் வேண்டும் அல்லவா!

குளித்து விட்டு ஒற்றை நைட்டியில் மீல்ஸ் ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டிருந்த வேளையில் காலிங் பெல் அடித்தது.

ரூம் மேட்டாக இருக்குமோ?! எச்சில் கையோடு கதவு திறக்க .. சாட்சாத் இவளின் ஷியாம் சரத் தான்

மாட்டிக்கிட்டான் மைனரு! நிலையில் வசுமதி.

சுமி டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?! கோழியை அமுக்குவது போல நேற்று போலவே டர்ட்டியா ஒரு அணைப்பு. கொல்றானே! 100க்கு கால் பண்ணுவோமா?! வசு யோசிக்க.. இன்னைக்கு மூணு டயமாச்சும் செய்யணும்.. உயிர் பாதுகாப்பு உறையோடு சரத்..

பாதி பசியாறி கொண்டிருந்தவளுக்கு இனி ஒரு கவளம் உள்ளே போகுமா எனும் நிலை.

என்னங்க சாப்பிட்டுட்டு வரேன்.. சும்மா சாக்கு வைத்தாள்.

நீ சாப்பிடு ஒய்ஃபி உன்னை நான் சாப்பிடுறேன்.. சரத் பல்லை காட்டி கண்ணடிக்க… மாட்டு பல்லு போல இருக்கே! இத்தனை நாள் கவனிக்கலயே! வசுவுக்கு நடப்பு கவலை தாண்டி புதுசாய் ஒன்னு முளைத்தது..

பெண்கள் அழகை ஆராதிப்பவர்கள் தான்.. அதுக்கும் நேரம் காலம் இல்லையா!

காதலனை புறக்கணித்து சோறே சொர்க்கத்தின் வாசல் என்பதை போல கூட்டு பொரியல் ரசம் மோர் என்று எல்லாத்தையும் பிரசாதம் போல தட்டில் கொட்டிக்கொண்டிருக்க..

செல்லம் எதற்கு சோபா? நான் இருக்கும் போது என்று அழகாய் மடிமேல் அமர்த்தி.. இடையை வளைக்க.. எந்த சுவற்றில் தலையை முட்டிக்கொள்ளலாம்?! எரிச்சலில் வசுமதி.

பிடிக்கல! அவ்ளோதான். அதற்கு என்ன சொல்வது தெரில.. என்னை மெல்ல ஆட்கொள்! கண்ணோடு கண் பாரு.. மெல்ல எனக்கு உன்னை தர வசதி பண்ணி கொடு.

இப்படி பரக்காவெட்டி போல அலையாதே! உன் தேவையை கூட புரிய வை.. அதும் இப்போது வேணாம் கல்யாணத்துக்கு அப்புறம் புரிஞ்சிக்க சரத்.. நீ உண்மையில் ரொம்ப நல்லவன்.. ஏன் இப்படி உன்மேலான என் நல்லெண்ணகளை கெடுத்துக்கிற!

வெளியில் பேச வசதியாய்… தத்தி தத்தி தன் மனதுக்குள் பேசி ஒத்திகை பழக.. அவனோ சட்டென்று ஜிப் இறக்கி.. உள்ளே ஒன்னும் போடலியா ஹனி என்று கேட்டு வராத வெட்கத்தை வரவழைத்து விட்டான்..

கொடுமைக்காரா! முனகும் போதே வலிக்க வலிக்க கொய்யா கனிகளை பிசையவாரம்பிக்க, சுகத்துக்கு பதில் வலித்தது.

பிடிக்காவிட்டால் காதலன் தொட்டாலும் ரேப் விக்டிம் போல எழுந்து ஓடும் உணர்வுகள் வரும்.

ப்ளீஸ்.. வெய்ட் நான் இப்ப வந்துடுறேன்.. பெட் ரூம் போயிரலாம்.. ஏமாற்றப்பார்த்தாள்.

நீ சாப்பிடு நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணாம என் வேலையை பார்க்கிறேன்..

உச்சியில் நெற்றியில் கண்ணில் காதில் கன்னத்தில் மூக்கில் உதட்டில் என்று குட்டி குட்டி முத்தங்கள். மெல்லிய இடங்களில் மீசையின் உராய்வு பட்டு உடம்பு பூரா கூசி போனது வசுமதிக்கு.. ஆனால் அவனோடு கூடும் உணர்வு மட்டும் வரவேயில்லை. வேணாம்! விட்ரு! ப்ளீஸ் தான் தொண்டை வரை நின்றது. மேற்கொண்டு உடலில் ஊறும் கைகளை தள்ளிவிட்டு..

“ரூம் மேட் இப்ப வந்துருவாங்க. வேணாம் சரத்.. ப்ளீஸ்”

ம்ம்ம்.. சரி.. அவனுக்கு எங்கே காது கேட்டது?! கைகளும் கண்களும் வருங்கால மனைவியின் அங்கங்களை ஆர்வமாய் என்ன செய்யலாம்? எப்படியெப்படி செய்யலாம்? வித விதமாய் விபரீத கற்பனையில் ஆழ்ந்து வாகாய் பல்படாத பால் கொழுக்கட்டைகளை உருட்டிக்கொண்டிருந்தது.

“சரத் விடுங்கப்பா.. காம்பர்ட்டா இல்ல… ப்ளீஸ்.. “அவள் மடியிலிருந்து எந்திருக்க.. சட்டென்று தன்னை குறுக்கி மிளகு சைசிலிருந்த காம்பை முன்னோக்கி முகத்தை குனிந்து கவ்விவிட்டான். அவனையும் தாண்டி ஜெர்க்கானாள் வசுமதி.

ஆயிரம் உணர்வு நரம்புகள் முடிச்சு பகுதி அது தொட்டாலே பற்றும் தன்மை கொண்ட இடம் அது.. இதோ காதலன் கடிச்சி கவ்வியும் கூட தலையை தள்ளி விட தான் கைகள் நீண்டது வசுவிற்கு.. தலையையும் தொட்டுவிட்டாள்..

எதற்கு இப்படி இயல்புக்கு மாறாகவே நாம் நிக்கணும். அவன் தான் இனி உனக்கான ஆண்.. உனக்கு இஷ்டமில்லை இன்பமில்லை என்றாலும்.அவன் ஆர்வமாய் அணுகுகிறான்.. இந்த உடல் மூலம்.அவனுக்கு.ஏதோ ஒரு இன்பம் கிடைக்குது.. போ அவனுக்காவது சந்தோசம் போவட்டும் விட்டு விட்டாள். சக கூட்டாளியாக அவளும் ஒத்துழைப்பு கொடுக்கணும்.. இது இயல்பு. ஆனால் அவ்வாறில்லாது அவனை செய்ய விட்டு வேடிக்கை பார்ப்பது என முடிவெடுத்தாள்.

இவளின் “இது பிடிக்கவில்லை” என்ற எண்ணத்தை மட்டும் சற்று தள்ளிவைத்தாள்.

கைகளை கழுவிவிட்டு சரத்தின் உணர்வுகளை பார்வையாளராக பார்க்க, ஒற்றை காம்பை கவ்வியவனின் ஆசைகள். எச்சிலாய் அதன் மீதே கொட்ட.. மூச்சு வாங்கினான்.. மற்றொரு மேட்டில் அவனின் விரல்கள் மிளகை சுண்டைக்காய் சைசுக்கு மாற்ற முயன்று கொண்டிருந்தது. வியர்த்தமான முயற்சி வசுவின் மைண்ட் வாய்ஸ்..

இன்னும் பெருசா வேணும்டி.. புலம்பினான். முத முத இதை சப்புறேன்.. நல்லாருக்குடி.. இதை கொஞ்சம் தொட்டு பாரேன்..

கீழே உடையை துளைத்து வெளிவருவது போன்றிருந்த பொருளை கைகளை இழுத்து வைத்து விட.. பெருசாத்தான் இருக்கும் போல.. நினைத்துக்கொண்டாள்..

தடவிக்கொடுடி.. என் கொடுமையே! செய்தாள்..

சோபாவிலேயே கிடத்தி.. நைட்டியை கழற்ற முனைய.. இவளுக்கு நிஜமாவே அந்நேரம்.வெட்கம் வந்துவிட்டது..

இடுப்பு வரை மட்டுமே உயர்த்தி விட்டு அவன் தொடைகளை முத்தமிட்டவாறே நடுவில் வர பார்க்க .. பெண்மையின் இயல்பில் தானாய் கால்கள் ரெண்டையும் பின்ன.. தடை நீக்கி தேனடைக்குள் முகம் வைக்க… ஆத்தா மீது சத்தியம் வசவுக்கு இப்பவும் கூச்சம் தவிர காதல் உணர்வுகள் முகிழ்க்கவில்லை.

அவனுக்கு வேணும் சகிச்சி கொடுக்கிறோம் தியாகி மனப்பான்மையில் இவள்.

மேலில் ஜிப் திறக்கப்பட்டு வி ஷேப்பில் பாதி தெரிந்தும் தெரியாத மாறியும் இருந்த வெண்ணெய் தனங்களை வெளியில் போட்டு அழகு பார்த்தவன்.. கீழே கருப்பு புல்வெளியில் மறைந்திருந்த பவள முத்துகளை நாவால் நெருடி சுவைத்தெடுத்தான்.

அந்த இடமே நீர் சேர்ந்து எப்பவும் அழுக்காயிருக்குமே.. நைட்டி துணியாலேயே துடைத்தும் கொடுக்க..

அப்படியே இருக்கட்டும் இதான் டேஸ்ட்டா இருக்கு.. திரும்ப திரும்ப சுர சுர நாக்கால் இழுக்க.. பெண்மையின் மென்மையான ஓரங்கள் ரம்பத்தால் இழுக்கப்படுவது போல லேசு வலி..

மெதுவாப்பா! இடுப்பை இழுக்க.. மறு நொடி .. அதே வாயால் அவளுக்கு நாக்கோடு நாக்கு இழுத்து தன் எச்சிலை அவள் வாய்க்குள் அனுப்ப.. திணறிப்போனாள் வசுமதி.. இவ்ளோ தூரம் விட்டது தப்போ?!

அடுத்த நொடி தன் முக்கோண பெட்டகத்தின் வாசலில்சரத்தின் உறுப்பு ஏறி நிற்க.. உள்ளே போகவில்லை.. போனவரைக்கும் வலி கொடுக்க அஆஆஆ.. கத்தியே விட்டாள். உடல் வேறு மனம் வேறு அல்ல.. ஒன்றே நிஜம்.

இவளின் ரியாக்சனுக்கு பயந்து போன சரத் .. ஏதாவது போட்டுட்டு செய்யவா சுமி?! கேட்ட நேரம்..

காலிங் பெல்.. ரூம் மேட் தான்..

வாரிசுருட்டி எழுந்தவள்.. கண்றாவியா கலைந்து கிடந்த தலை முடியை கொண்டை போட்டு.. நைட்டியை திருத்தி வெளியே ஓட முயற்சித்தவளை.. சரத், இழுத்து அணைத்து உதட்டில் மென் முத்தமிட்டு “ஐ லவ் யூடி அம்மு” என்று ஒதுங்கி கிடந்த பொட்டை எடுத்து புருவ மத்தியில் வைத்து விட..சுனாமி போல வாரி அணைக்கும் கொள்ளை காதல் வந்தது. இத்தனை நேரம் கட்டிலில் முட்டி மோதி வராதது. இதென்ன வினோதம்.

உண்மையில் காதல்ன்னா என்ன?!

நீங்க உள்ளேயே இருங்க சரத்..
ஹாலில் இருந்த சின்ன கண்ணாடியில் பார்த்து கொண்டே கதவை திறக்க.. சிலையானாள்.

நல்ல உயரம் ஒல்லியான உறுதியான தேகத்தில் செவ செவ ன்னு நிறத்தில் பெட்டி பேகோடு வாலிபன்..

அப்போ ரூம் மேட் என்றது பெண்ணில்லையா?!

ஹாய்! மை நேம் விவியன் ஜார்ஜ் பிரஃம் அமெரிக்கா.

எதிர் பதிலில்லை இன்னும் சிலை உயிர் பெறவில்லை.

போலாம் ரைட்.. ம்ம்ம்ம்

 

  •  

எழுத்தாளர் செம்பை முருகானந்தம் எழுதிய ‘போன்சாய் நிழல்கள்’ சிறுகதை

கோபாலகிருஷ்ணன்களும் தடித்த நோட்ஸ்களும் – மணி மீனாட்சிசுந்தரம் (எழுத்தாளர் செம்பை முருகானந்தம் எழுதிய ‘ போன்சாய் நிழல்கள் ‘ சிறுகதையை முன்வைத்து) இலக்கியம் தனது எண்ணிலடங்கா வரிகளில் மனித வாழ்வைத் தக்க வைத்தபடிக் காத்திருக்கிறது. அதில் இழப்பின் வலிகளும், நம்பிக்கையின் உற்சாகமும்,…

The post எழுத்தாளர் செம்பை முருகானந்தம் எழுதிய ‘போன்சாய் நிழல்கள்’ சிறுகதை appeared first on Book Day.

  •  

அகிலத்திரட்டில் நவாபும் ஆங்கிலேய அரசும்

திருவிதாங்கூர் அரசு, ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி, நவாப் ஆகியோரின் கூட்டணி பற்றி அகிலத்திரட்டின் வரிகள் இவை. கதையின் தொடர்ச்சி: பத்மநாப சுவாமியாக இருந்த திருமால் திருச்செந்தூருக்கு சென்ற பிறகு முருகனாக மாறி விட்டார். முருகனாக...

The post அகிலத்திரட்டில் நவாபும் ஆங்கிலேய அரசும் first appeared on Her Stories.

  •  

ஈர்ப்பு அலைகள் – பகுதி 9

சூரியனை விட, மிகப் பெரிய நட்சத்திரங்கள், மிகப் பெரிய கருந்துளைகள், சூப்பர் நோவா என்று பல்வேறு ரட்சச அமைப்புகளை, விண்வெளி ஆராய்ச்சியில் கண்டுபிடித்து விட்டார்கள். ஆனால், இவை யாவும், நம்மைச் சுற்றியுள்ள அமைப்புகளை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. ஆக, மிகப் பெரிய விண்வெளி அமைப்புகள் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல, ஈர்ப்பு அலைகள். பிரபஞ்சத்தில், மிகப் பெரிய மோதல்கள் நிகழ்ந்தால் மட்டுமே, ஈர்ப்பு அலைகள் உருவாகின்றன
  •  

ஆறு தாரகைகள்

இசையும், சிகரெட்டும் இந்த நாவல் முழுதும் கிரங்கிக் கிடக்கிறது. ஒன்று காற்றுடன் இயைந்து ஒலியாகிறது; மற்றொன்று காற்றுடன் புகைவிட்டு விளையாடுகிறது. புகைப்பதற்கும், இசைப்பதற்கும் ஏதோ ஒரு ஒற்றுமை அல்லது ஒவ்வாமை இருப்பதை உள்ளூர உணரமுடிகிறது. இன்னதுதான் என்று வரையறுக்க முடியவில்லை. ஜோத்ஸ்னாவையும், கிருஷ்ணனையும் பிணைத்திருப்பது இவ்விரண்டும் தான். இவர்களிருவருக்குமிடையை நடக்கும் உரையாடலாக விரியும் இந்த நாவல் இருவருக்கும் இந்துஸ்தானி இசையின் மேல் இருக்கும் பற்றையும், ரசனையையும், மேதமையையும் ஆவணப்படுத்த முயன்றிருக்கிறது. ஆனால், கிருஷ்ணனிடம் இருக்கும் இலக்கிய ரசனையும், மொழியும் இந்த முயற்சியை ஒரு நாவலாக்கியிருக்கிறது. ஜோத்ஸ்னாவின் தொகுப்புத் தன்மையும், அதனை கற்பனைவளத்தோடு கிருஷ்ணனிடம் விவரிக்கும் தன்மையும் கூட இதற்கு ஒரு காரணம்.

கிருஷ்ணன், இந்நாவல் ஆசிரியரான யுவன் சந்திரசேகரின் ஒரு alter ego அல்லது அவரேதான் என்பது யுவனின் படைப்புகளுடன் சிறு பரிட்சயம் இருப்பவர்களுக்கும் தெரியும். ஜோத்ஸ்னா தான் சந்தித்த இசைக் கலைஞர்களைப் பற்றி விவரிக்கும் போதெல்லாம், such a great communicator, she is என்று நமக்குள் எழும் உணர்வுகளை எப்படியோ யுவன் கண்டுகொள்கிறார். பக்கங்களின் அடிக் குறிப்புகள் வழியாக அந்த விவரிப்புகள் ஜோஸ்த்னாவுடைய கற்பனையாகவோ அல்லது ஏன் என்னுடைய கற்பனையாகவோக் கூட இருக்கலாம் என்ற தன்னிலை விளக்கம் ஒரு இடையூறாக இருந்தாலும், சுவாரஸ்யமாகவும் உள்ளது. அடிக்குறிப்புகளின் வழியாக, வாசகனுடன் உரையாட முயலும் ஆசிரியரின் உத்தி எனக்கு புதுமையாகத் தோன்றியது. இந்நாவல் விவரிக்கும் இசைக்கலைஞர்கள் எவருமே புனைவுப் பாத்திரங்கள் அல்ல. மேலும் அனைவருமே பெண்கள். எனவே, இந்த அடிக்குறிப்புக்களில் இருக்கும் எச்சரிக்கையுணர்வையும், பொறுப்பையும் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆவணமாக மட்டுமோ அல்லது புனைவாக மட்டுமோ படிக்க முயல்பவர்களை, அவ்வப்போது இந்த அடிக்குறிப்புகள் மடை மாற்றி விடுகின்றன.

இந்துஸ்தானி அல்லது ஏதோ ஒரு இசையில் நல்ல பரிட்சயமும், ரசனையும் கொண்டவர்களுக்கு இந்நாவல் will be a treat indeed. மற்றவர்களுக்கு, பெண் இசைக் கலைஞர்களின் வாழ்வு பற்றிய ஒரு சித்திரம் தரும் ஆச்சரியமும், அயர்ச்சியும் ஒரு சேர கிடைக்கலாம். இசையும், கணவனும் (குடும்பம்) இரு காதல்களாகவே இப்பெண்களால் பாவிக்கப்படுகின்றன. ஆனால், சமூகம் ஏதாவது ஒன்றை மட்டும் தான் அவர்களுக்கு நிர்பந்திக்கிறது. இது இயல்பாகவே, இக்கலைஞர்களை  இசையோடு ஒதுங்க வைத்து விடுகிறது. அவர்களுடைய இசை, இழந்த குடும்ப வாழ்வின் வெற்றிடத்தையும் நிரப்பிக் கொள்கிறது.

யுவனால், இந்நாவலின் முன்னுரையையும், பின்னுரையையும் நாவலின் ஒரு பகுதியாக ஆக்கிக் கொள்ளமுடிகிறது. குறிப்பாக ஜோத்ஸ்னா பற்றிய அந்த பின்னுரையில், அதுவரை பக்கங்களின் அடிக்குறிப்பின் வழியாக மட்டுமே தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட யுவனால் இந்த பின்னுரையில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு சற்றே சுதந்திரமாக இயங்க முடிகிறது. எதற்கு இத்தனை நீண்ட பின்னுரை என்பதற்கு அடிக்குறிப்பின் வழியாக இந்நாவலின் ஆலாபனை இது என்று புன்னகைக்கிறார். ஒரு ராகத்தின் ஆரம்பத்தை விளம்பிதம் அல்லது ஆலாபனை என்பார்கள் என்ற அறிதல் இப்புத்தகத்தின் வழியாகத் தான் கிடைத்தது. அதுமட்டுமின்றி, இந்நாவலில் உள்ள இசைக் கலைச்சொற்களை தேடியதில் இசையின் சில அடிப்படைகளைப் பற்றி புரிந்து கொள்ள முடிந்தது. ஸ்வரத்தில் தொடங்கி, அதன் ஸ்தானங்கள், கமகங்கள் அல்லது அலங்காரங்கள் (embellishment) , அது உருவாக்கும் ராகங்கள் என நீண்டு சென்றது என்னுடைய கற்றல். Googleன் வழியாக இப்புத்தகத்தையும்

voxguru என்ற you tube தளத்தையும் கண்டடைய முடிந்தது. https://youtu.be/HvNWo4V49_0?si=xFkI_YWKI3PDVnMo

இப்பின்னுரையைப் படிப்பதற்கு முன்பு எழுத ஆரம்பித்த இப்பதிவின் ஆரம்பத்தில், ஜோத்ஸ்னாவையும் கிருஷ்ணனையும் பிணைத்திருப்பது இசையும், புகையும் என்றிருந்தேன். ஆனால் இந்த பின்னுரை அவர்களிருவருடைய நட்பின் வேறு சில பரிணாமங்களைச் சுட்டிக் காண்பிக்கிறது. அதுமட்டுமல்ல, இவர்களிருவரும் இசை ரசிகர்கள் மட்டுமல்ல; மானசீகமாக அதனை நிகழ்த்திக் கொள்ளும் கலைஞர்களும் கூட. இசைக் கலைஞனும், ரசிகனும் சந்திக்கும் தளத்தில் இருப்பவர்கள் இவர்களிருவரும். இசையைத் துய்ப்பவர்கள் நாங்களிருவரும் என்கிறார் யுவன்.

யுவன் சொல்வது போல் இப்பின்னுரை இந்நாவலின் நீண்ட ஆலாபனை அல்லது வலுவான அடித்தளம் தான். இந்நாவலின் மத்யமும், துரிதமும் எங்கிருந்து முளைத்தெழுந்தன என்று உணர்ந்து கொள்ள முடிகிறது.

  •  

ஏப்ரல் 2025 கதை பரிந்துரைகள்

சிறுகதை : ஒரு ரமளான் இரவு

ஆசிரியர்: குளச்சல் யூசப்

பரிந்துரை: லாவண்யா

இதழ்: காலச்சுவடு

சிறுவன் பார்வையில் விரியும் கதை. கதை முழுவதும் சிறுவன் கண்ணோட்டத்தின் அழகாக வந்திருக்கிறது. கதையில் வரும் பெரியவர்கள் அவனுக்கு கொடுக்கும் வினோத அனுபவங்களை கொஞ்சம் கூட குழந்தைமையின் innocence மாறாமல் சொல்லப்பட்டிருக்கிறது. மிக அழகான கதை. கதை நடக்கும் காலக்கட்டம் 1960 ளாக இருக்க வேண்டும். வட்டார வழக்கும் இஸ்லாத்தில் புழங்கப்படும் வழக்குகளும் தெரியாதவர்கள் கதையை புரிந்து கொள்வதில் கொஞ்சம் சிரமம் இருக்கலாம். குறிப்பாக “தாத்தா” என்ற வார்த்தைக்கு அக்கா என்ற பொருள் வரும் என்பதை யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். அது தத்தாவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

சிறுகதை : கௌரதை

ஆசிரியர்: எஸ் இலட்சுமணப்பெருமாள்

பரிந்துரை: லாவண்யா

இதழ்: உயிர் எழுத்து

முதல் முதலாக நிஜ காமம் துய்க்க பொருள் பெண்டிரிடம் செல்லும் இளைஞனின் கதை. அவனது தயக்கம், பதட்டம், ஆர்வம், புறத்தூண்டல்கள் இவை அனைத்தும் எதார்த்தமாய் அமைந்த கதை. முக சுளிப்பில்லாமல் வாசிக்க உகந்ததாக இருக்கிறது. அந்த பெண்கள் வசிப்பிடத்துக்கு அருகே சூழல் காரணமாய் வசிக்கும் இளம்பெண்ணும் அவளது நற்தாயும் அவனுள் ஏற்படுத்தும் நேர்மறை சலனம் கதையின் முரண்.

சிறுகதை : பலூன்

ஆசிரியர்: ஜார்ஜ் ஜோசப்

பரிந்துரை: லாவண்யா

இதழ்: உயிர் எழுத்து

திருமண வரவேற்பு மணமகனின் மன ஓட்டங்கள் அழகாக எழுதப்பட்டிருக்கின்றன. காட்சிகளை கற்பனை செய்ய முடிகிறது. ஒரு feel good story. ஆனால் அழுத்தமான கதை என்று சொல்ல மாட்டேன்

சிறுகதை – ஊடாடும் பெருநிழல்

ஆசிரியர் – பென்னேசன்

பரிந்துரை: தங்கவேல்

இதழ் – சொல்வனம் ஏப்ரல் 2025

சுட்டி: https://solvanam.com/2025/04/13/%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d/

சாருவின் பிளாக் நம்பர்: 27 திர்லோக்புரி கதையை இணைவுபடுத்தும் கதை. 1984 இந்திரா காந்தி படுகொலையும் அதையொட்டிய சீக்கியர்களுக்கெதிரார வன்முறையும் தான் கதைக்களம். நேரடியான கூறுமுறை. கல்லவரத்தின் பொழுது உதவி செய்தவர் மற்றும்  40 ஆண்டுகளுக்கு பிறகு அவரை தேடிவருபவருக்கிடையான உரையாடல் தான் கதை. பழையை நினைவுகளை அப்பாவிடமிருந்து பெற்றுக்கொண்ட மகனின் நினைவுகள் உதவி செய்தவரின் பார்வையில் இருப்பது சற்று குழப்பத்தை அளித்தது, ஆனால் புரிந்துகொள்ள முடிந்தது. 40 ஆண்டுகளுக்கு பிறகு நன்றி சொல்ல மட்டும்தான் வந்தாரா எனும் கேள்வியை வாசகருடன் விட்டுசெல்கிறார்.

  •  

ஏப்ரல் 2025 கதை பரிந்துரைகள்

சிறுகதை : ஒரு ரமளான் இரவு

ஆசிரியர்: குளச்சல் யூசப்

பரிந்துரை: லாவண்யா

இதழ்: காலச்சுவடு

சிறுவன் பார்வையில் விரியும் கதை. கதை முழுவதும் சிறுவன் கண்ணோட்டத்தின் அழகாக வந்திருக்கிறது. கதையில் வரும் பெரியவர்கள் அவனுக்கு கொடுக்கும் வினோத அனுபவங்களை கொஞ்சம் கூட குழந்தைமையின் innocence மாறாமல் சொல்லப்பட்டிருக்கிறது. மிக அழகான கதை. கதை நடக்கும் காலக்கட்டம் 1960 ளாக இருக்க வேண்டும். வட்டார வழக்கும் இஸ்லாத்தில் புழங்கப்படும் வழக்குகளும் தெரியாதவர்கள் கதையை புரிந்து கொள்வதில் கொஞ்சம் சிரமம் இருக்கலாம். குறிப்பாக “தாத்தா” என்ற வார்த்தைக்கு அக்கா என்ற பொருள் வரும் என்பதை யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். அது தத்தாவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

சிறுகதை : கௌரதை

ஆசிரியர்: எஸ் இலட்சுமணப்பெருமாள்

பரிந்துரை: லாவண்யா

இதழ்: உயிர் எழுத்து

முதல் முதலாக நிஜ காமம் துய்க்க பொருள் பெண்டிரிடம் செல்லும் இளைஞனின் கதை. அவனது தயக்கம், பதட்டம், ஆர்வம், புறத்தூண்டல்கள் இவை அனைத்தும் எதார்த்தமாய் அமைந்த கதை. முக சுளிப்பில்லாமல் வாசிக்க உகந்ததாக இருக்கிறது. அந்த பெண்கள் வசிப்பிடத்துக்கு அருகே சூழல் காரணமாய் வசிக்கும் இளம்பெண்ணும் அவளது நற்தாயும் அவனுள் ஏற்படுத்தும் நேர்மறை சலனம் கதையின் முரண்.

சிறுகதை : பலூன்

ஆசிரியர்: ஜார்ஜ் ஜோசப்

பரிந்துரை: லாவண்யா

இதழ்: உயிர் எழுத்து

திருமண வரவேற்பு மணமகனின் மன ஓட்டங்கள் அழகாக எழுதப்பட்டிருக்கின்றன. காட்சிகளை கற்பனை செய்ய முடிகிறது. ஒரு feel good story. ஆனால் அழுத்தமான கதை என்று சொல்ல மாட்டேன்

சிறுகதை – ஊடாடும் பெருநிழல்

ஆசிரியர் – பென்னேசன்

பரிந்துரை: தங்கவேல்

இதழ் – சொல்வனம் ஏப்ரல் 2025

சுட்டி: https://solvanam.com/2025/04/13/%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d/

சாருவின் பிளாக் நம்பர்: 27 திர்லோக்புரி கதையை இணைவுபடுத்தும் கதை. 1984 இந்திரா காந்தி படுகொலையும் அதையொட்டிய சீக்கியர்களுக்கெதிரார வன்முறையும் தான் கதைக்களம். நேரடியான கூறுமுறை. கல்லவரத்தின் பொழுது உதவி செய்தவர் மற்றும்  40 ஆண்டுகளுக்கு பிறகு அவரை தேடிவருபவருக்கிடையான உரையாடல் தான் கதை. பழையை நினைவுகளை அப்பாவிடமிருந்து பெற்றுக்கொண்ட மகனின் நினைவுகள் உதவி செய்தவரின் பார்வையில் இருப்பது சற்று குழப்பத்தை அளித்தது, ஆனால் புரிந்துகொள்ள முடிந்தது. 40 ஆண்டுகளுக்கு பிறகு நன்றி சொல்ல மட்டும்தான் வந்தாரா எனும் கேள்வியை வாசகருடன் விட்டுசெல்கிறார்.

  •  

விஞ்ஞானிகள் எதிர்கால தொழில்நுட்பங்களுக்கு தேவையான வினோதமான 2D உலோகங்களை உருவாக்குகின்றனர்

விஞ்ஞானிகள் எதிர்கால தொழில்நுட்பங்களுக்கு தேவையான வினோதமான 2D உலோகங்களை உருவாக்குகின்றனர் – வாசுதேவன் முகுந்த்   குவாண்டம் ஒடுக்கம் (quantum confinement) வழங்கும் அசாதாரண பொருள் பண்புகள் நிஜ உலகில் மிகப்பெரிய மதிப்பைக் கொண்டவை. கிராபீன் (graphene) மற்றும் குவாண்டம் புள்ளிகள்…

The post விஞ்ஞானிகள் எதிர்கால தொழில்நுட்பங்களுக்கு தேவையான வினோதமான 2D உலோகங்களை உருவாக்குகின்றனர் appeared first on Book Day.

  •  

லலிதா ஈஸ்வரன் சிறுகதைப் போட்டி 2025 – முடிவுகள்

   

நண்பர் ஈஸ்வரன் அவரது மனைவி லலிதா இருவரும் இணைந்து குவிகம் மூலம் நடத்திய சிறுகதைப் போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இதற்கு  நடுவர் ராஜாமணி அவர்கள். 

வந்திருந்த 186 கதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 13 கதைகள் இங்கே தரப்பட்டுள்ளன. 

முதலில் கலந்துகொண்ட 186 கதாசிரியர்களுக்கும்  ஈஸ்வர் – லலிதா சார்பாகவும் குவிகத்தின் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  

தேர்ந்தெடுத்த நடுவர் ராஜாமணி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி! . 

வெற்றி பெற்ற 13 பேருக்கும் பரிசு 1000/ ரூபாய் வழங்கப்படும். 

இவர்கள் கதைகள் ஓர் அழகான புத்தகமாகத் தயாரிக்கப்பட்டு 

மே 31, 2025 சனிக்கிழமை 

ஸ்ரீநிவாச காந்தி நிலையம் , அம்புஜம்மாள் தெரு, ஆழ்வார்ப்பேட்டை , சென்னை 18 

இடத்தில் நடைபெறும் குவிகம் நேரடி நிகழ்வில் வெளியீட்டு விழாவும் பரிசளிப்பும் நடைபெறும். 

அனைவரும் வந்து நிகழ்வைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்.  

               கதை                                                                                                     எழுதியவர் 

      1. பாகற்காய் கசக்கும்                                                                        கமலா முரளி
      2. அன்பெனும் முடிவிலி                                                                    நித்யா மாரியப்பன்
      3. செம்பருத்தி                                                                                        பத்மா ராகவன்
      4. ரேவதியின் டைரி                                                                             ரிஸ்வான்
      5. மிரட்சி                                                                                                   அ. கௌரி சங்கர்
      6. கதை நாயகி                                                                                      சுதா திருநாராயணன்
      7. நிதர்சனம்                                                                                           சந்துரு மாணிக்கவாசகம்
      8. பனி படர் நாட்டில் ஒரு பனைமரம்                                       வி. ஜீவகுமாரன்
      9. குற்றம் புரிந்தவன் வீரன்வயல்.                                              வீ.உதயக்குமாரன்
      10. காலத்திறை                                                                                        பரிவை சே.குமார்
      11. அவரவர் வாழ்க்கை நியாயங்கள்                                          யசோதா பழனிச்சாமி
      12. ஸ்பந்தனா எடுத்த முடிவு                                                            லக்ஷ்மி ஆத்ரேயீ
      13. என் பெயர் சலாப்                                                                            சு ஸ்ரீவித்யா

  •  

குவிகம் குறுக்கெழுத்து – மே 2025 – சாய்நாத் கோவிந்தன்

குறுக்கெழுத்துப் போட்டி: 353

இந்த மாத குறுக்கெழுத்திற்கான லிங்க் :

https://beta.puthirmayam.com/crossword/53B02CB57A

 

சென்ற ஏப்ரல் மாதம் சரியான விடை

 

சரியான விடை எழுதினவர்களின்  பெயர்கள் இங்கே தரப்பட்டுள்ளது.     

   ( பலர் ‘ஒழிக’ என்பதற்குப் பதிலாக ‘வீழ்க’  என்று போட்டிருந்தனர். அதனால் அவர்களுடைய   பெயர்கள் விடுபட்டுவிட்டன )  

  1. ராதிகா பட்டாபி ராமன்
  2. எம் ரவி
  3. மெய்யழகி
  4. கதிர் கண்மணி
  5. அகிலா
  6. பத்மினி
  7. மிருன் கண்ணன்
  8. ஜானகி
  9. கௌரி
  10. உமையபார்வதி
  11. சிவகாமி
  12. ஜானகி ஸ்ரீனிவாசன்
  13. ராமமூர்த்தி
  14. தாமோதரன்
  15. துரை தனபாலன்
  16. நடராஜன் பாலசுப்ரமணியன்
  17. கருணாகரன்
  18. விஜயலக்ஷ்மி சீதாராமன்
  19. மனோகர்
  20. தமிழரசு
  21. விஜயா
  22. ராய செல்லப்பா
  23. ஜெயா ஸ்ரீராம்
  24. புஷ்பா விஸ்வநாதன்
  25. சித்ரா ஸ்ரீநிவாசன்
  26. மகேஷ் மகாதேவன்

இவர்களுள் குலுக்கல்  முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிர்ஷ்டசாலி : உமையபார்வதி

பரிசு பெற்றவருக்கும் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  •  

உலக இதிகாசங்கள் – வர்ஜிலின் ஏனிட்

 please draw an picture of Virgil's Aeneid book, displaying the main characters of the epic with a pleasing color not very bright. உலக இதிகாசங்கள் வரிசையில்

சுமேரியர்களின் கில்காமேஷ்

ஹோமரின் இலியட்

ஹோமரின் ஓடிஸி

ஆகிய மூன்று இதிகாசங்களின் கதைகளைக் குவிகத்தில் தொடராக வெளியிட்டு பின்னர் அவை மூன்றையும் தனித்தனிப் புத்தகமாக வெளியிட்டோம்.

குழந்தைகளும் பெரியவர்களும்  படிக்கும் புத்தகங்களாக இருக்கின்றன  என நண்பர்கள் கூறுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. காஞ்சிபுரத்தில் ஒரு அரசினர் பள்ளியில் நூலகத்திற்காக இந்த மூன்று புத்தகங்களையும் 10 பிரதிகள் அனுப்பும்படி கேட்டுக்கொண்டார்கள். மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தோம்.

நூற்றுக்கும் மேற்பட்டஇதிகாசங்கள்  உலக  அளவில் இருக்கின்றன. அவற்றிலிருந்து 10 தலை சிறந்த இதிகாசங்களைச்  சுருக்கமாக நமது குவிகத்தில் தொடராக வெளியிட்டு பின்னர் புத்தகங்களாக வெளியிடவேண்டும் என்பது என் அவா.

பத்துக்கு மூன்று பழுதில்லை என்று சொல்லும்படி மேலே குறிப்பிட்ட மூன்று புத்தகங்கள் குவிகம் பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்துவிட்டன.

இன்னும் எழுதிய வேண்டியவை

வால்மீகியின் ராமாயணம்

வியாசரின் மகாபாரதம்

வர்ஜிலில் ஏனிட்

பிர்டௌஸியின் ஷா நாமா

ஓவிடின் மெடமார்பஸிஸ்

பியோ உல்ப்

அரிஸ்டோவின் அர்லான்டோ

இவற்றுள் ராமாயணம் மகாபாரதம் இரண்டும் நமது நாட்டில் அதிகம் எழுதப்பட்ட ,பேசப்பட்ட நூல்கள். இவற்றை எப்படி வித்தியாசமான எழுதுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

அதற்கு முன் இலியட் ஓடிஸி இரண்டிற்கும் மிகவும் சம்பந்தமுள்ள ஏனிட் (Aeneid ) கதையை எழுதலாமே என்று தோன்றியதான் விளைவே இந்தத் தொடர்.

The Aeneidவர்ஜில் என்பர் எழுதியது ஏனிட் என்ற மகா காவியம்.

டிராய் யுத்தத்தில் கிரேக்கருக்கு ஆதரவாகப் போரிட்ட அக்கிலிஸின் கதையைக் கூறுவது இலியட். போரில் கிரேக்கர் வெற்றி பெற உதவிய ஓடிஸியஸ் என்று கிரேக்கர்களாலும்  யுலிஸஸ் என்று ரோமர்களாலும் அழைக்கப்படும் வீரனின் கதையைக் கூறும் இதிகாசம் ஹோமரின் ஓடிஸி.

டிராய் நாட்டுக்கு ஆதரவாகப் போரிட்ட தெய்வ குமாரன் ஏனியஸ் ஏனிட் என்பவனின் கதையைக் கூறும் காவியம்தான் ஏனிட்.

ராமாயானத்தில் அயனம் என்றால் பயணம் என்று பொருள். ராமரின் பயணமே ராமாயணம்.     ஓடிசியஸின்  பயணம் ஓடிசி . அதைப்போல இங்கே ஏனியஸின்  பயணம் ஏனிட் என்று அழைக்கப்படுகிறது.

முதலில் வர்ஜில் என்னும் மாபெரும் கவிஞரைப்பற்றி சில வரிகள்.

வர்ஜில்  அகஸ்டஸ் சீஸரின் காலத்தவர். அகஸ்டஸ் ரோம சாமராஜ்யத்தின் மாபெரும்  tதலைவர். சக்கரவர்த்தி. ஜூலியஸ் சீஸரின் வளர்ப்பு மகன். ஆண்டனி கிளியோபாத்ரா ஆகியவர்கள் அகஸ்டஸ் சீஸர் காலம்.  ஜூலியஸ் சீஸர் பெயரில் அவர் பிறந்த மாதம் ஜூலை என்று அழைக்கப்படுகிறது. அதுபோல அகஸ்டஸ்  பிறந்ததானால் அந்த மாதம் ஆகஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. வர்ஜில்  கி மு  70 ஆம் வருடம் அக்டோபர் 15இல் பிறந்து கி மு 19 செப்டம்பர் 21 இல் மறைந்தவர். நமது திருவள்ளுவரும் இந்தக் காலத்தவர் என்று கருதப்படுகிறது.

Roman Culture and the Aeneid“வர்ஜில் ஓர்  எழுத்தாளரல்ல, ஒரு கலாசாரக் கனவை உருவாக்கிய கலைஞர். அவரது படைப்புகள் அரசியலையும் ஆன்மிகத்தையும் காதலையும், வீரத்தையும் ஒன்றாகக் குழைத்து எழுதப்பட்ட  காவியங்கள். ” என்று என்று சொல்வர்.

இவரது கவிதை நடை  மனதைக் கொள்ளை கொள்ளும் ஹோமரின் பாணியைப் பின்பற்றியது.  அத்துடன் இவரது காவியத்தில்   புராணச் சிறப்பும், வரலாற்று விளக்கங்களும், அரசியல் நுட்பங்களும்  நிறைந்திருக்கின்றன. பிற்காலத்தில் வந்த ஷேக்ஸ்பியர் போன்ற பல பிரபல ஆங்கிலக்  காப்பிய ஆசிரியர்கள் இவரது பாணியைப்  பின்பற்றித் தங்கள்  காவியங்களை அமைத்தனர் என்றால் இவரது பெருமையைச் சொல்லவும் வேண்டுமோ?

கி மு 20 ஆம் ஆண்டில்  எழுதப்பட்ட   ஏனிட் ஒரு முற்றுப் பெறாத காவியம். வர்ஜில் தான் இறக்கும் போது முடிவுறாத இந்தக் காவியத்தை அழித்துவிடும்படி வேண்டினார். ஆனால் அகஸ்டஸ் சீஸர் அதன் பெருமையை உணர்ந்து  அழிக்காமல் அதனைத் தனது ரோம சாம்ராஜ்ஜியத்தின்  தேசியக் காப்பியமாகப் போற்றினான்.  காரணம் ரோம சாம்ராஜ்யம் உருவாவதற்குக் காரணமானவன் ஏனியஸ் .அதன் புகழையும் சரித்திரத்தையும் நிலை நாடியவன் ஏனியஸ் .  அன்றைய ரோம சாம்ராஜ்யத்தின் குறியீடாக அந்தக் காவியம் அமைந்திருந்தது. இலக்கிய நயத்தால் சிறந்தது. போர் பற்றிய சொல்லோவியங்களான வருணனைகளைக் கொண்டது. விரிந்த களப்பரப்பைக் கொண்டது. வீரத்தின் ஆற்றல் மற்றும் விதியின் வலிமையைக் கதைக் கருவாக முன்வைக்கிறது. ரோம் மக்களின் கடவுளர் பற்றியும் நம்பிக்கைகள் பற்றியும் பேசுகிறது

தனது நண்பரும் மிகச் சிறந்த அறிவாளியுமான  புரூட்டசால் கொலை செய்யப்பட்டு ஜூலியஸ் சீசரின்  மரணமடைகிறார். நாடு    பல அரசியல் குழப்பங்களுக்கு உள்ளானது.  மார்க் ஆண்டனி, அகஸ்டஸ்  மற்றும் லெபிடஸ் மூவரும்  சேர்ந்து மூவராட்சியை அமைத்தார்கள். ஆனால் அவர்களுக்குள் போட்டி பொறாமை சண்டை இருந்ததால் நாடு உள்நாட்டுப் பூசல்களால் பிளவுபட்டது.  வீதிச் சண்டைகளும் கலவரங்களும் அதிகரித்தன. இச்சூழ்நிலையில்  அகஸ்டஸ் தனது எதிரிகளை அழித்து சர்வ வல்லமை பெற்ற அதிகாரியாக உருவானான். சக்கரவர்த்தி என்ற பெயரைச் சூட்டிக்கொள்ளாமல் ஜன நாயக சக்கரவர்த்தியாக ஆட்சி புரிந்தான்.

அப்போதுதான்  வர்ஜிலுக்குத் தனது நாட்டின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை பிறந்தது. அகஸ்டஸின் ஆட்சிச் சிறப்பைப் போற்றும் காப்பியமாகவே வர்ஜில் ஏனியட்டைப் படைத்தார். ரோமானியர்கள் தங்கள் நாட்டின் வரலாற்றையும் வல்லமையையும் தொன்மக் கதைகளையும் பற்றிப் பெருமை கொள்ளும் விதத்தில் அமைந்தது இக்காப்பியம்.

கிரேக்கர்களுக்கும் ட்ரோஜன்களுக்கும் இடையே நடந்த ட்ரோஜன் போரின் (Trojan War) முடிவிலிருந்து தொடங்கும் கதையே ஏனியட். ட்ராய்(Troy) நகரத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு  சிதறுண்ட தனது மக்களை அழைத்துக் கொண்டு ட்ராயின் இளவரசன் ஏனியாஸ்(Aeneas) தெற்கு நோக்கிப் பயணம் செய்கிறான். 

செயல்வீரனான ஏனியாஸ், பிறப்பிலிருந்தே பெரும் புகழுக்குரியவன். இத்தாலியின் பேரரசு ஒன்றை நிறுவுவான் என்பதே அவனது விதி. ஆனால் அந்த வீதியை முறிக்க கடவுளர்கள் சதி செய்கிறார்கள். அவனுக்கு எதிராக இயற்கையின் சீற்றத்தை  ஏவி விட  ஏனியாஸ் அந்தச் சுழலில் சிக்கித் தவித்தான்.  கடவுளர்கள் தந்த இடர்களை மீறி  அவன் எப்படி வெற்றி  பெற்றான் என்பதை வீர தீர காவியமாகத் தந்தவர் வர்ஜில்!

ஏனியட்12 காண்டங்களைக் கொண்டது. முதல் ஆறு காண்டங்கள் ஏனியாஸ் தனது மக்களோடு புதிய நாடொன்றை அமைக்கத் தென்திசை நோக்கி மேற்கொண்ட பயணத்தை விவரிக்கின்றன. கடைசி ஆறு காண்டங்கள் ட்ரோஜன் மக்கள் ஏனியாஸின் தலைமையில் இத்தாலியில் நடத்திய பெரும் போரைப் பாடுபொருளாகக் கொண்டுள்ளன.

இந்த  முன்னுரையுடன் அடுத்த இதழில் ஏனிட் கதைக்குள்  செல்வோம்  

  •  

நிமிடங்களின் நிழல் – ரமணன் VSV

காலையின் பரபரப்பில் தலைநகரின் அந்தச் சாலை முழுவதும் நிரம்பியிருந்த வாகனங்கள் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தன.  மெட்ரோ ரயில், சாலையை அகலப்படுத்துதல், மழைநீர் பாதை, நடைபாதை சீரமைப்பு என ஏதாவது ஒரு காரணத்தினால் நகரம் முழுவதுமே இப்படி எல்லா நேரங்களிலும்  மெல்ல நகரும் போக்குவரத்துக்கு மக்கள் பழகி விட்டார்கள். இன்று காலை 6 மணிமுதல்  தேவியும்  அவள் நண்பர்களும் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் புரொபஸருடன் ரவுண்ட் போகும் பிராக்டிகல் வகுப்புகளை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருக்கிறார் தேவி 3ஆம் ஆண்டு மருத்துவ மாணவி.

தன் முன்னால் போய்க்கொண்டிருந்த ஸ்கூட்டர் திடுமென்று தடுமாறி அலைபாய்வதை கவனிக்கிறாள். என்ன செய்கிறாள்? இந்தப்பெண் என்று எண்ணியபடியே அவளை நெருங்கிறாள். அதற்குள் அந்தப்பெண் ஸ்கூட்டருடன் சரிந்து விழுகிறாள். ஹெல்மெட்  கழண்டு உருண்டு ஒடுகிறது. சட்டென்று தன் ஸ்கூட்டரிலிருந்து இறங்கி அந்தப்பெண்ணை தூக்க முயற்சிக்கிறாள். அவளால் எழுந்திருக்க முடிய வில்லை. மயங்கிச் சாய்ய்கிறாள். முகத்தின் நிறம் மங்கலாகயிருக்கிறது. கண்களின் இமைகளை விலக்கிப் பார்க்கிறார் தேவி விழிகள் அசைய வில்லை.  நரம்பியல் மருத்தவ மாணவியான தேவிக்கு  இது ஏதோ மூளையில் பாதிப்பு, தலையில் உள் காயம் உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டுபோக வேண்டிய எமர்ஜென்சி என்ற எண்ணம் மனதில் பளிச்சிடுகிறது. மயக்கத்தில் ஆழ்ந்திருந்த அந்தப்பெண்ணின் மூச்சு மெல்லிதாகயிருந்தது. பல்ஸ் இறங்க வில்லை என்பதை கையைப்பிடித்து பார்த்த தேவி அவசரமாக எழுந்து, வரும் ஒரு ஆட்டோவை கைநீட்டி நிறுத்தி “ “அண்ணா ஒரு எமர்ஜென்சி இந்தப்பெண்னை உடனே  ஆஸ்பத்திரிக்கு கொண்டு போணும். கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க” என்கிறார்.

வினாடிகளில் நிலமையைப்புரிந்து கொண்ட அவர் ஏறுங்கம்மா போயிடலாம் என்கிறார். அதற்குள் அங்கு கூடிய கூட்டத்தில் ஆளாளாக்கு அட்வைஸ். “ஒரு சோடா கொடுங்க இந்த தண்ணியை மூஞ்சியில் அடிங்க” என்று வாட்டர் பாட்டிலை நீட்டியவர்கள். அவரை ஏதோ ஒரு கார் அடித்து போட்டுவிட்டது என்று முடிவெடுத்த விட்ட ஒருவர்” “இப்படித்தான் பொறுப்பில்லாம சின்னப் பையன்கள்  காரை ஒட்டி அடுத்தவங்களை சாகடிக்கிறாங்க. போலீஸ் பிடிக்க மாட்டங்க! பிடிச்சாலும் பெரிய இடத்து கட்சிகாரங்க சிபார்சுலே விட்டுடுவாங்க. முதல்ல இந்த கவர்ன்மெண்ட் ஒழியணும்” என்று அரசியல் பேசினார்.. தேவி எவருக்கும் பதில் சொல்லமல் ஆட்டோகாரரிடம் “அண்ணா போகலாம் சீக்கிரம்!” என்கிறார்.. இந்த ரோடு முனையில் லெப்டில் காந்தி  ஆஸ்பட்டலுக்கு போங்க நேர எமர்ஜென்சி  வார்ட் கிட்டே போங்க என்கிறார்.  “இப்போ போயிடலாம் மேடம்” என்று ஆட்டோவை விரட்டிக்கொண்டு போகிறார் அவர்..

ஆனால்,  அந்தத் தெருமுனையில் அவர்களைத் தடுத்தது ஒரு இரும்புக் கோட்டை.  “முதலமைச்சரும் அமைச்சர்களும்  இது வழியாக ஒரு விழாவுக்கு வர்றாங்க. அதனால் இந்தப் பாதை மூடப்பட்டிருக்கு. வேற வழியா போங்க!” என்று காவலர் ஒருவர் கர்ஜித்தார். வேறுவழி என்பது அந்த பெரிய சாலையின் மறு முனை.அங்கு போய் பாதை மாறி வர 10-15 நிமிடம் ஆகும். அந்தப்பெண் கோல்டன் அவர் என்று சொல்லப்ப்படும் அதி அவசர நிலையில் இருக்கிறாள் என்பதை உணர்ந்த தேவி

  “சார், ஒரு மூணு நிமிடத்துல பக்கத்திலிருக்கும் ஆஸ்பட்டலுக்குப் போயிடலாம். ஒரு உயிரு ஆபத்துல இருக்கு!” கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க. என்றார் தேவி கெஞ்சும் குரலில்.   ஆனால், காவலர் பிடிவாதமாக, “முடியாது அம்மா. நான் என் டியூட்டியைத்தான் செய்றேன். நீங்க ஒண்ணு செய்யுங்க  “ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணுங்க. வந்துடுவாங்க. நான் இப்போ விட முடியாது,” என்றார்.

ஆட்டோ டிரைவர் மாரிமுத்து கோபத்தில் கொதித்தான். “என்னய்யா,  மனுஷன் நீ. நீயெல்லாம் எப்படி போலீஸானே? ஒரு உயிர் துடிக்கிறதுன்னு சொல்லாறங்க புரியல்லையா?  என்று கத்தி சண்டையிட ஆரம்பித்துவிட்டான்.

. நிமிடங்கள் உயிரைப் பறிக்கும் வாளாக நெருங்கிக்கொண்டிருந்தன.. சற்று நேரத்திற்கு பின்னர் அந்தக்  காவலர், “எங்க இன்ஸ்பெக்டர் காந்தி ஆஸ்பட்டல் முன்னாடிதான் இருக்கார். அவர்கிட்ட கேட்டுப்பாருங்க,” என்றபடியே  கரகரப்புகிடையே இன்ஸ்பெக்டரிடம் தகவலைச்சொல்லி வயர்லெஸ் செட்டை நீட்டினார்.

தேவி, இன்ஸ்பெக்டர் ரவியிடம் பேசினார். “சார், ஒரு பொண்ணு மயங்கி விழுந்திருக்கு. எமர்ஜென்சி உடனே ஆஸ்பட்டல் அட்மிட் செய்யணும்!!”

மூன்றாவது நாளாக தொடர்ந்து விஐபி பாதுகாப்பு டியூட்டியிலிருந்த இன்ஸ்பெக்டர் ரவி, களைப்பான குரலில், “மேடம், சீப் மினிஸ்டர் கான்வாய்  கிளம்பிருச்சுன்னு இப்போதான் மெசேஜ் வந்திருக்கு. . இந்தப் பாயின்டைக் கடந்ததும் கான்ஸ்டபிள் அனுமதிப்பார்  என்று சொல்லிவிட்டு மைக்கை கான்ஸ்டபிள்கிட்டக் கொடுங்க என்றார். “ என்னய்யா ஏட்டு நீ? அறிவு இருக்கா? நிலைமை உனக்குத் தெரியாதா?  இதெல்லாம் நீ சமாளிக்க வேண்டிய விஷயம் எதுக்கு பப்ளிக்கிட்ட வயர்லெஸ்ஸை கொடுக்கிறே? பொறுப்பில்லாதவரா இருக்கிங்க. என்னிக்குத்தான் கத்துக்கப் போறீங்க? என்று கத்துகிறார். அது தேவிக்கும் ஆட்டோ டிரைவர் மாரிக்கும் கேட்கிறது.  தேவியின் இதயம் நொறுங்கியது. ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாக நீண்டது. அந்தப்பெண்ணின் பல்ஸ் மெல்ல இறங்கிக்கொண்டிருந்தது.

பதினைந்து நிமிடங்கள் கழித்து, அமைச்சர்களின் வாகனங்களின் அணிவகுப்பு  ஆடம்பரமாகக் கடந்து சென்றது.. காவலர்கள் தடைகளை அகற்ற,  காத்திருந்த வாகனங்கள் வெள்ளமாகப் பாய்க்கின்றன. மாரிமுத்து ஆட்டோவை ராக்கெட்டைப் போல   கிளப்பினார்.  அதன் ஹாரன் ஒலியில் சாலையே அதிர, , பலரின் திட்டுகளை வாங்கிக்கொண்டு, காந்தி  மருத்துவமனையின் வாசலில் நுழைந்த ஆட்டோ எமர்ஜென்சி வார்ட் முன்னே நின்றது. செவிலியர்கள் ஸ்ட்ரெச்சருடன் ஓடி வந்தனர். தேவியும் செவிலியருடன் அதைத்தள்ளிக் கொண்டே உள்ளே  ஓடினார்.

அதே நேரம், , மூன்றாவது நாளாக தொடர்ந்து விஐபி பந்தோபஸ்த்து டியூட்டினால் களைத்து வெறுத்துப்போயிருந்த இன்ஸ்பெக்டர் ரவி எதிரே இருந்த கடையில்   டீ சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

.சைலண்ட்டிலிருந்த அவர் மொபைல் ஒளிர்ந்தது—மூன்று மிஸ்டு கால்கள், அவரது மனைவி கவிதாவிடமிருந்து. அவர் திரும்ப அழைத்தபோது, கவிதாவின் குரல் பதற்றத்தில் நடுங்கியது. “எங்க இருக்கீங்க? நம்ம ராதிகா ஸ்கூட்டர்லிருந்து மயங்கி விழுந்துட்டான்னு யாரோ காந்தி மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போயிருக்காங்களாம். அவங்க ஆபிஸிலிருந்து  சொன்னாங்க.  அவங்க மானேஜர் அங்கே வராராம் நான் இப்போ அங்க போய்க்கிட்டு இருக்கேன். நீங்களும் உடனே  வாங்க!”

ரவியின் உலகம் தலைகீழானது. கையில் இருந்த டீ கிளாஸ் சாலையில் விழுந்து சிதறியது. “ஐயோ!” என்று அலறியபடி, எதிரே இருந்த மருத்துவமனையை நோக்கி ஓடினார். வாகன ஓட்டிகளின் திட்டுகளைப் பொருட்படுத்தாமல் சாலையை ஒட்டிக் கடந்து, மருத்துவமனை வாசலில் நுழைந்தார்.

அவர்  ரிசெப்ஷனில் விசாரித்துக்கொண்டிருக்கும்போது   அதே வாராண்டாவில் தேவி  ஒரு டாக்டருடன் பேசிக்கொண்டே வந்தார்.. டாகடர் தேவியிடம் , “ஒரு மெடிகல் ஸ்டுடென்ட்டாக நல்ல மனசோடதான் நீங்க உதவி செஞ்சிருக்கிங்க. ஆனா அவங்களைக் கொண்டு வரும்போதே ஆல்மோஸ்ட் டெட். காப்பாத்த முடியல. MRIல பார்த்தேன். மூளையில ஒரு நரம்பு வெடிச்சு ரத்தம் கசிஞ்சிருக்கு. Intra cerebral hemorrhage (ICH), ஒரு ஐந்து நிமிஷம் முன்னாடி வந்திருந்தாலாவது ஏதாவது முயற்சி செஞ்சிருக்கலாம். சாரி.!

அவங்க பெயர், விலாசம் ஏதாவது தெரியுமா?” அதை ரிசப்ஷனில் சொல்லிடுங்க.  அவங்க போலிஸுக்கு சொல்லிடுவாங்க.

தேவி, குரல் தழுதழுக்க, “அவங்க கழுத்துல இருந்த ஐடி டாக்கில் பார்த்து அவங்க கம்பெனிக்கு போன் பண்ணியிருக்கேன், டாக்டர்.

அவங்க பேரு ராதிகா.

அந்த வார்த்தைகள் இன்ஸ்பெக்டர் ரவியின் காதுகளில் இடியாக இறங்கின.. அவர்  பதறியபடி   டாக்டரின்  அருகில் வந்து , “ராதிகா… என் மகள்…” என்று முணுமுணுத்தார். குரல் கேட்டு தேவி திரும்பிப் பார்த்தாள். ரவியின் முகத்தில் உறைந்திருந்த வலியைப் பார்த்தவளின் கண்களில்  அவளறியாமல் கண்ணீர் வழிந்தது.

நிமிடங்களின் தாமதம் ஒரு உயிரைப் பறித்திருந்தது. ஆனால், அந்த நிமிடங்களுக்குப் பின்னால் நிழலாக இருந்தது மனிதர்களின் கடமைகள், பாதுகாப்பு விதிகள், மற்றும் விதியின் கொடூரமான கைகள்.

சாலையில் வாகனங்கள் மீண்டும் ஒலிகளை எழுப்பிக்கொண்டு பரபரப்பாக ஓடத் தொடங்கின. ஆனால், மெளனமாக நிற்கும் அந்த மருத்துவமனையின் வெளிப்புறச் சுவர்கள்  ஒரு போலீஸ்காரரின் கடமையுணர்ச்சிக்கும், ஒரு தந்தையின் உடைந்த இதயத்திற்கும், ஒரு பெண்ணின் நல்ல மனத்திற்கும் என்றென்றும்  சாட்சியாக நிற்கும்—

  •  

  •  

கொஞ்சம் தேனீர் கொஞ்சம் சிந்தனை 3 – கிரிஜா ராகவன்

 

Dhritarashtra, Gandhari, and Kunti peacefully sitting in the forest during their final moments, calm - YouTube

ஒரு மைல் கல்

 

வர்ணாஸ்ரம் தர்மத்தில் வானப்ரஸ்தம் என்று ஒரு வார்த்தை உண்டு. அறுபது வயதுக்குப் பிறகு எப்படி இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடும் சொல் அது.

அறுபது வயதில் அனேகமாக பலரும் ஓரளவுக்கு வாழ்க்கையின் பெரும் பகுதிக் கடமைகளை முடித்தவர்களாகி விடுகிறார்கள். திருமணமாகி பிள்ளைகள் பெற்று அவர்கள் வளர்ந்து அவர்களுக்கும் பலர் திருமணம் செய்து பேரன் பேத்தி கூட எடுத்திருப்பார்கள். ஓரளவு பணம் சேர்த்து சொந்த வீடு சேமிப்பு என்று செட்டிலாகி இருப்பார்கள். குழந்தைகள் இல்லாதவர்களுக்கும் இது பொருந்தும். வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால் ரிடையர் ஆகியும் இருப்பார்கள். ( பெண்களுக்கு ஏது ரிடையர்மென்ட் என்கிற மைண்ட் வாய்ஸ் கேட்கிறது) சொல்ல வந்த விஷயம் அதுவல்ல.

அந்தக் காலத்தில் இந்த பருவத்தைத் தான் வானப்ரஸ்தம் என்றார்கள். குடும்பப் பொறுப்புக்களைத் துறந்து கணவனும் மனைவியும் காட்டுக்குச் செல்லும் காலம். கிட்டத்தட்ட துறவறம் மாதிரி என்று சொல்லலாம். இந்தக் காடு, துறவறம் எல்லாம் இந்த காலத்துக்கு செட் ஆகாது என்றாலும் அறுபது வயது என்பது பொறுப்புக்களைக் கைவிடும் காலம் என்பது மட்டும் உண்மை தான்.

இன்றைய காலகட்டத்தில் அறுபது வயது என்பது ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி ஒரு செகண்ட் இன்னிங்ஸ் போல. காரணம், பிள்ளைகள் நகர்ந்து விடுகிறார்கள். பெரும்பாலும் பெற்றோரை எதிர்பார்ப்பதில்லை. நாமாகப் போய் சேர்ந்து கொண்டால் தான் உண்டு. ஓரளவுக்குப் பணம் இருக்கிறது. ஆரோக்கியமும் நன்றாக இருக்கிறது. நேரம் நிறைய இருக்கிறது. இந்தப் பருவத்தை, அதாவது அறுபது வயது தாண்டிய பருவத்தைப் பலரும் மறுபிறவி எடுத்தாற் போல உற்சாகமாக வாழத் துவங்குகிறார்கள்.

தனக்குப் பிடித்ததை எல்லாம் செய்ய, இள வயதில் விட்டுப் போன, அனுபவிக்க முடியாத பலவற்றை வேக வேகமாக அனுபவிக்க ஆரம்பிக்கின்றனர். குழுவாகப் பயணம் செய்வது, நிறைய கேளிக்கைகளில் நேரம் செலவழிப்பது, பிடித்த உண்வகங்களுக்குச் செல்வது,க்ளப்,பார்ட்டி என்று கலந்து கொள்வது, கோயில் உறவினர் இல்லங்கள் என்று பயணம் செய்வது, வெளிநாடுகளுக்கு செல்வது, பிள்ளைகளுடன் சென்று தங்கி இருப்பது இப்படிப் பல.

இப்படி ஒரு ஐந்து வருடங்கள் ஓடி விடுகின்றன. பிறகு சில பல ஆரோக்கிய அச்சுறுத்தல்கள், மன உளைச்சல்கள் மெதுவாகத் தலை தூக்குகின்றன. இந்த பாதிப்பில் இன்னும் ஒரு ஐந்து வருடங்களும் ஓடி வாழ்க்கை எழுபதில் நிற்கிறது. அடுத்தது என்ன என்று கொஞ்சம் தடுமாற்றம் வருகிறது.

இது எல்லோருக்கும் நடப்பதில்லை. கொஞ்சம் கற்பனையாகத் தோன்றுகிறது என்று தோன்றலாம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன தெரியுமா? மேலே சொன்ன எல்லா விஷயங்களையும் அறுபதுக்குப் பின் அனுபவிக்கலாம். ஆசைப்படலாம். அதில் தவறில்லை. அதற்கு நமக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. அதே நேரம் அறுபது வயது என்பது உடலும் மனமும் கொஞ்சம் தளரும் நேரம் என்பதும் உடல், மன ஆரோக்கியத்தில் நிறைய கவனம் செலுத்த வேண்டும் என்பதும் நமக்குப் புரிய வேண்டும். அதனால் தான் இந்த பருவத்தைப் பொறுப்புகளைத் துறந்து தள்ளி இருக்கும் காலம் என்றார்கள்.

அறுபது வயது என்பது எல்லாம் முடிந்து விட்ட காலமா, இனி மேல் என்னால் எதுவும் முடியாதா என்கிற எண்ணம் வேண்டாம். சொல்லப் போனால் அறுபது வயது தாண்டி தான் மனமும் உடலும் பொறுப்பு குறைந்து ரிலாக்ஸ் ஆகிறது என்பது தான் உண்மை.

இந்தக் காலத்து வானப்ரஸ்தம் எப்படி இருந்தால் நமக்கு நல்லது தெரியுமா? மனதளவில் குடும்பத்தில் இருந்து சற்றுத் தள்ளி இருக்கப் பழக வேண்டும். குறிப்பாக பிள்ளைகளின் குடும்பத்தில் இருந்து அது மகனோ மகளோ. அவர்களின் வாழ்க்கையில் தலையிட்டு, கோப தாபப் பட்டுக் கொண்டு, விமர்சனம் செய்து கொண்டு, அதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகி, இவை போன்றவற்றைத் தவிர்த்து விடுதல் நமக்கும் சரி, அவர்களுக்கும் சரி, நல்லது தான்.

பிறகு என்ன தான் செய்வது என்கிற கேள்வி வரும். இந்த செகண்ட் இன்னிங்ஸில் நமக்கென்று ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அந்த திசையில் நம் நேரத்தை செலவிடுவது உத்தமம்.

ஓய்வு பெற்ற பலர், சில அதிகாரிகள், பொறுப்பான உத்தியோகத்தில் இருந்தவர்களைப் பார்த்திருக்கிறேன். புத்தகங்கள் எழுதுவது, சில அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு அதில் குழுவாகச் செயல்படுவது, தோட்டம் அமைப்பில் ஆர்வம் கொள்வது, கோவில் பொறுப்புகள் இப்படி அவரவர் இயல்புக்கு ஏற்றபடி தங்கள் நேரத்தை வடிவமைத்துக் கொள்வார்கள். இந்த விஷயத்தில் ஆண்கள் தங்களுக்கேற்ற பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் அளவிற்கு, பெண்கள் புதுப் பாதையை தேர்ந்தெடுப்பதில்லை என்று தோன்றுகிறது. அதனாலேயே மீண்டும் குடும்பப் பிரச்சினைகள் மன உளைச்சல்கள் ஆரோக்கியக் குறைச்சல் என்று கஷ்டப்படுகிறார்கள்.

நாம் தெரிந்து கொள்ள வேண்டியது இது தான். அறுபது வயது என்பது ஒரு மைல் கல். அதற்குப் பின் நாம் நூறு வயது கூட நன்றாக வாழலாம்.

ஆனால் அதற்கான பாதையை, ஓய்வான பாதையை, மனமும் உடலும் அமைதியாகப் பயணிக்க கூடிய பாதையைப் புரிந்து கொண்டு தேர்ந்தெடுப்பது நமக்கு நல்லது.

பிடித்த பிடிகளை விட்டு விட்டுக் காட்டில் கனிகளைப் புசித்துக் கொண்டு வாழும் மனநிலையோடு உடலாலும், மனதாலும் எல்லோருக்கிடையே வாழக் கற்றுக் கொண்டு விட்டால் இந்தக் கால வானப்ரஸ்த வாழ்விலும் நிம்மதியாக வாழலாம்.

 

  •  

பார்த்தது, கேட்டது, படித்தது, வாசித்தது… நினைவில் நின்றது – சுவாமிநாதன்

நோயாளியாக்கப்பட்டுள்ள தமிழக மருத்துவத் துறை! – Aram Online

இது ஒரு டீ வி யில் வந்த ஒரு எபிசோட் கதை.

ஒரே செட். ஓரங்க நாடகத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு.

ஒரு மருத்துவ மனையில் ஒரு பிரசவ வார்டு. நான்கு படுக்கைகள். நாலு நிறைமாத கர்ப்பிணிப் பெண்கள் படுத்திருக்கிறார்கள். டாக்டர்கள், நர்சுகள் வந்து போகிறார்கள். ஒருவருக்கு மாத்திரை கொடுக்கப் படுகிறது.

ஒரு பெண்ணின் பக்கத்தில் ஒரு 55/60 பெண் அமர்ந்து கொண்டு “ஜோசியரிடம் கேட்டு விட்டேன், ஆண் என்றுதான் சொல்கிறார். இந்த முறையாவது ஆணை பெற்றுக் கொடு. எத்தனை பெண்கள்… ஹூம்” என்று சொல்லிவிட்டுப் போகிறாள். “ஆண்டவனே ஆண் குழந்தையைக் கொடு.. ஏமாற்றி விடாதே” என்று வேண்டிக் கொள்கிறாள். அந்த பக்கமாக வரும் நர்சிங் ” ஆண் தானே பிறக்கும்? டாக்டர் என்ன சொன்னார்? “

அதற்கு நர்ஸ் “எத்தனை தடவை கேப்ப… யாருக்குத் தெரியும்? ” என்று கேட்டுவிட்டு முணுமுணுத்த படியே சென்று விடுவாள். (அப்போது எந்த கருவியும் கிடையாது).

சிறிது நேரத்தில் 4 வது பெட் பெண் பெரிதாக சப்தம் போட அவளை ஒரு ஸ்ட்ரெக்சரில் அந்த அறையை விட்டு அழைத்துச் செல்வார்கள்.

அடுத்த காட்சியின்போது மூன்று பெட்டிலும் பெண்கள் படுத்திருப்பார்கள். அனேகமாக மயக்க நிலையில் இருப்பார்கள்.

கொஞ்சம் நினைவு வந்து முனகுவாள் ஒரு நர்ஸ் ஒரு குழந்தையைக் கொண்டு பக்கத்தில் வைப்பாள். “என்ன குழந்தை என்று கேட்பாள்” அழகான பெண் குழந்தை. அந்த பாட்டியம்மா இந்தக் குழந்தையைப் பார்க்காமலே போய்விட்டாள்” என்று சொல்லுவாள். முகத்தை மூடிக் கொண்டு அழுவாள். அவளும் அந்த குழந்தை பக்கம்கூட திரும்பாமல் வேறு பக்கம் திருப்பிக் கொள்வாள். மீண்டும் மயக்கம் அடைவாள்.

அடுத்த காட்சி அவளுக்கு மீண்டும் நினைவு திரும்பும். தன் குழந்தை பக்கம் திரும்பிக் கூட பாக்காமல், “நர்ஸ் நர்ஸ் அந்த நாலாம் நம்பர் பெண்ணுக்கு என்ன குழந்தை பிறந்தது என்று கேட்பாள் ” ஆண் குழந்தை” என்று சொன்னதும் மேலும் கண்ணீர் வரும். “நீ மயக்கத்தில் இருந்ததால் உன் குழந்தைக்கு நாங்களே உணவு கொடுத்து விட்டோம் இனி அழும்போது நீயே பால் கொடுத்துவிடு ” என்று சொல்லிவிட்டுப் போவாள். குழந்தை பக்கம் திரும்பிக் கூட பார்க்க மாட்டாள்.

சிறிது நேரம் கழித்து வேறு ஒரு நர்ஸ் வரும்போது “அந்த 3 நம்பர் பெண் எங்கே? அவருக்கு என்ன குழந்தை என்று கேட்பாள். ” ஆண் குழந்தை…. ஆனால் அந்த பெண் இறந்து விட்டாள்” என்று சொல்வாள். திடுக்கிடுவாள். குழந்தை அழத் துவங்கும். அதைப் பற்றி கவலைப் படாமல்.. “இந்த இரண்டாம் நம்பர் பெண்ணுக்கு என்ன குழந்தை ? ” என்று கேட்பாள்.

“குழந்தை அழுது… அதை கவனிக்காம கேள்வி மேல கேள்வி கேட்கிற… அந்தக் குழந்தை இறந்தே பிறந்தது. எந்த குழந்தையாய் இருந்தால் என்ன” எண்பாள்.

“என்னது.. குழந்தை இறந்து விட்டதா? ” என்று கேட்டு விட்டு. “அடப்பாவமே.. என்று கூச்சலிட்டு விட்டு… என் கண்ணே..” என்று கூறி தன் குழந்தையை ஆசை ஆசை யாகத் தூக்கி முத்தம் கொடுத்து… பாலும்.. கொடுப்பாள்.

அப்படியே ப்ரீஸ் பண்ணி… சிறிது காட்டி விட்டு பின் மெதுவாக டைட்டில் போடுவார்கள்.

பொட்டில் அறிந்தது போல இருந்தது. கடைசி நொடியில் மையக் கருத்தை பளிச்சென்று சொல்லி முடித்தார்கள்.

இன்றும் அந்த கருத்து / உண்மை பொருந்தும். ‎


  •  

எண்ணத்தில் அள்ளிக் கொஞ்சம் – 8 – இந்திரநீலன் சுரேஷ்

முதல் நாள், முதல் ஷோ

FDFS - YouTube

தியேட்டர் அனுபவங்கள் இளம் வயதில் வித்யாசமானவை. அதுவும் பிரபல நடிகர் நடித்த படங்களின் ‘முதல் நாள், முதல் காட்சி’, நினைவில் நிற்பவை! என் அனுபவத்தை உங்களிடம் சொல்வதற்கு முன், ‘மதிநிறை அழகனை’ உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்;

திருச்சியில், அப்போது வயலைத் தூர்த்து மாரீஸ்(கள்) முளைத்துகொண்டிருந்த காலம். ரம்பா, மீனா பிறக்கவில்லை. கலையரங்கம் கௌரவர்’களுக்கான இடமாக இருந்தது.

ராக்ஸி, வெலிங்டன் என்ற இரட்டை தியேட்டர்களில், ஒன்றில் புது படமும் மற்றொன்றில் சுமார் படமும் போடுவார்கள். ஒன்று ஹவுஸ்புல் ஆனதும், விதியே, என்று பக்கத்து தியேட்டருக்குத் தாவுவார்கள். வாழ்வே மாயம் போன்ற படங்களைப் பார்த்துட்டு, தாய்குலங்கள் கர்சீப்..பும், கம்பலையுமாகச் சிவந்த கண்களுடன் வெளியே வரும் காட்சியைக் காணலாம்.

Aruna Cinema Hall in Puthur,Trichy - Movie Theatre near you - Cinema Halls near me in Trichy - Justdialபழமையான முருகன், இன்னும் இளமையாக, பி.யு.சின்னப்பாவை காட்டிக் கொண்டிருக்க, இளமையான சிவக்குமார் ராமகிருஷ்ணா’வில் பெல்பாட்டத்தில் ஜெயசித்ராவை துரத்திக்கொண்டிருப்பார்.

வியாபார விஷயமாக திருச்சி வந்தவர்கள், பிளாசா’வில் புரியாத ஆங்கிலப் படத்தின் ஓரிரு அசந்தர்ப்ப காட்சிகள் முடிந்ததும், வெளிநடப்பு செய்து சொந்த ஊருக்குப் பஸ் பிடிப்பார்கள். ‘கெயிட்டி’யில் விடலைப் பையன்கள், தெருவுக்குத் தெரியாமல் ‘பாபி’ பார்த்தார்கள்.

நிற்க, மதி’யைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன்.

‘மதிநிறை அழகன்’ என் கிளாஸ் மேட். அவன் பெயரை இரண்டு துண்டாகப் பிரித்தாலும், அதன் அர்த்தத்திற்கும், அவனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

கல்லூரி என்ற ஒன்று இருப்பதே வாழ்க்கையை அனுபவிப்பதற்கான கடவுளின் கொடை என்று நம்புபவன். ஆரம்ப நாட்களில், கல்லூரி சீனியர்களின் சுற்றி வளைப்பைக் கண்டு அசராமல், இரண்டு, மூன்று லோக்கல் தாதா’களின் பெயர்களைச் சொல்லி அவர்களைச் சிதற விட்டவன்.

‘மக்கள் திலகத்’தின் ஹார்ட்கோர் ரசிகன்! அதுவும் தலைவர் படத்தை முதல் நாள், முதல் ஷோவாக, பார்ப்பதை தன் தலையாயக் கடமையாகக் கொண்டவன்.

Palace Theatre in Tiruchirappalli HO,Trichy - Movie Theatre near you - Cinema Halls near me in Trichy - Justdialதிருச்சியில், பொதுவாக ‘நடிகர் திலகத்தின் படங்கள் பிரபாத், ராஜா’விலும் , மக்கள் திலகம் படங்கள் பேலஸ் மற்றும் சென்ட்ரல் தியேட்டர்களிலும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும்.

இந்த இரண்டு இமயங்களின் படங்களை, என் போன்று சாதாரணர்கள் பார்க்க, குறைந்த பட்சம் 25 நாட்கள் கடக்க வேண்டியிருக்கும். அதற்கும் சைக்கிள் பாஸ் அல்லது லேடீஸ் டிக்கெட்டிற்காக அக்கா, தங்கைகளின் உதவியை நாட வேண்டியிருக்கும்.

மதி போன்றவர்கள், அதற்குள் பத்து முறையாவது பார்த்திருப்பார்கள். அதுவும், லெக்ச்சரர் வராத leisure period’களில், முதல் நாள், முதல் ஷோ’வின் ஆரவாரத்தை மதி வர்ணிப்பதே அழகு!

படத்தின் காதல் காட்சிகளைச் சொல்லும் விதமே தனி. வாத்தியாரின், ஒவ்வொரு அசைவுகளையும் அக்குவேர், ஆணிவேர் ஆகச் சொல்வான். கிளாஸ் மொத்தமும் சுற்றி அமர்ந்து வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கும்!

‘மதி’க்கு என்னால் ஆக வேண்டிய காரியம் ஒன்று இருந்தது. அதுதான் அஸைன்மெண்ட்ஸ். பொதுவாக ஞாயிறு, அந்தி சாயும் நேரங்களில் அவனது மெய்காவல் படையை வீட்டுக்கு அனுப்புவான். அதாகப்பட்டது, எட்டிலிருந்து பத்தாங்கிளாஸ் படிக்கும் பையன்கள்.

“அண்ணன் உடனே வாங்கியாரச் சொன்னாரு” என்று கழுத்தில் கத்தி வைத்து வாங்கிப் போவார்கள். அதைக் காப்பியடித்து எழுதுவதற்குக் கூட அவனது ஜவுளிக் கடையில் ஒரு பையனை வைத்திருந்தான் என்று கேள்வி..

எனது நெடுநாளைய கனவான, வாத்தியார் படமொன்றை முதல்நாள், முதல் ஷோ பார்க்கவேண்டுமென்ற ஆசையை ஒரு நாள் மதியிடம், தயங்கி, தயங்கிச் சொன்னேன்.

அவன், ஏதோ பெரிய ஜோக் ஒன்றைக் கேட்டாற்போல் அதிர சிரித்து விட்டு,

“மவனே நீயெல்லாம் முதல் பெஞ்சில உட்கார்ந்துகிட்டு புரொபசர் கேள்வி கேட்டவுடனே, கைதூக்கிறதுக்குத்தான் லாயக்கு. சும்மா நினைச்சுக்காதே, அப்படியே 100 பேர் தோள்ல, அசால்ட்டா படுத்துகிட்டே நகர்ந்து போய் கவுண்டர்ல கையைவிட்டு டிக்கெட் வாங்கணும். தயிர்சாதம் சாப்பிடற நீ அந்த வேலைக்குச் சரியா வர மாட்டே” என்றான் அலட்சியமாக.

Urimai Kural (1974) - Photos - IMDbஊரெங்கும் ‘உரிமைக்குரல்’. போஸ்டர் ஒட்டியிருந்தார்கள். ‘மதி’, பத்து நாட்களுக்கு முன்பாகவே, ‘MGR ரசிகன்’ போன்ற சினிமா புஸ்தகங்களைக் கிளாஸ்..க்கு கொண்டு வந்து போட்டு, பில்டப் கொடுத்து எங்களை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தான்.

படம் ரிலீஸ் ஆன, அந்தத் திருநாளும் வந்தது.

என் கிளாஸ்மேட் வாசு காலை ஆறு மணிக்கே வீட்டுக்கு வந்துட்டான்.
“இன்னிக்குக் காலேஜ் கிடையாது. யாரோ ‘பிசிக்ஸ் ப்ரொபசர் திடீர்னு போயிட்டாராம்.. பாவம்”

” ஓ! அப்படியா !!”

“அது சரி, உடனே கிளம்பு”

“எங்க? அங்கெல்லாம் நான் வரல”

“ஏய் லூசு, அங்கில்ல, இன்னிக்கு ‘உரிமைக்குரல்’ படம் ரிலீஸ், முதல் நாள் ரசிகர் ஷோக்கு, ரெண்டு எக்ஸ்ட்ரா டிக்கெட் மதி வைச்சிருக்கான். ஒன்னுல நான் போறேன், இன்னொன்னுல நீ வர்..ரையானு சொல்லு, லேட் ஆகும்னா, கணேச்சுவை கூட்டிப் போறேன்”

உடனடியாகக் கிளம்பி ஓடினேன்

Sun Life - Watch "Urimaikural" Movie On SunLife @ 12PM Tomorrow #SunLife #PudhuSunLife #MovieOnSunLife | Facebookதியேட்டர் வாசலில், மக்கள் திலகம், ஆந்திரா கட்டுக் கட்டி, பல ஆள் உயரத்துக்கான கட்டவுட்’டில் மிளிர, அதற்கு உபசரிப்புகள் பெரிய அளவில் நடக்க, ‘ரீல் பெட்டி’ ஊர்வலத்தை ஒழுங்குபடுத்தியபடி வந்தான் மதி.

என்னைப் பார்த்து, “நீ வரமாட்டேன்னு நினைச்சேன்” என்றான் நக்கலாக.

டிக்கெட் இல்லாதவர்கள் கேட்டில் மோத, என்னை அலேக்காகக் கவ்வி உள்ளே கொண்டுபோனான்.

படம் துவங்க, ஒரே கோலாகலம்!

மக்கள் திலகம், முகம் காட்டாமல் ரேக்ளா வண்டியில் சாட்டையுடன் ஒரே தாவலில் ஏற, கால்களை மட்டும் காண்பித்த கேமரா, கொஞ்சம் கொஞ்சமாக முழு உருவத்தையும் காட்ட, அதே சமயம் அந்த ரேக்ளா குதிரை, இரட்டை கால்ளையும் உயர்த்தி வானில் பறப்பது போல் எழும்ப, ஜனம், மகிழ்ச்சியில் தன்னிலை மறந்து, டிக்கெட்களையும், காசுகளையும் திரைமீது வீசியது.

“நேத்து பூத்தாளே ரோசா மொட்டு” என்று வாத்தியார் சீண்ட, ஜோடியாக நடித்த லதா இளமையுடன் சிணுங்க, ரசிகர் கூட்டம் கிறங்கியது. நம்பியார் அவர்கள், குரலை உயர்த்த, கூட்டம் அடங்கியது. ‘விழியே கதை எழுது’ மன்னர் உடையில் வர, கூட்டம் மயங்கியது. மற்றபடி வசனம் ஒரு வரி கூடக் காதில் விழவில்லை. அதைப் பற்றி யாரும் கவலைப்படவும் இல்லை. பக்கா செலிபிரேஷன்ஸ்! தன் ஹீரோவுக்காக அன்பை அள்ளிப் பொழியும் ரசிகர் கூட்டம்!

மதிக்கு, மதியம் லஞ்ச் ‘பத்மா’வில் சிறப்பித்தோம். எனக்கு வேலை இருக்குடா, என அவன் கிளம்ப, நாங்கள் மீதி நேரத்தைக் காவிரி அணை முக்கொம்பில் செலவழிக்க முடிவெடுத்தோம்..

மறுநாள் காலை, கிளாஸ் ரூம் நுழைந்ததுமே நல்ல வரவேற்பு!

“என்னடா ‘உரிமைக்குரல், முதல் ஷோ..வா? என்று சுற்றி வளைத்தார்கள்.

“என்ன மதி சொல்லிட்டானா?” எனக்குப் பெருமை பிடிபடவில்லை.

“ஆமா, நேத்திக்கு மத்யானமே கிளாஸ்..ல, சொன்னானே!”

“கிளாஸ்? அதுதான் கிடையாதே, ‘பிசிக்ஸ் ப்ரோபஸர்’……என்று இழுக்க அனைவரும் சிரித்தார்கள்.

என்னையும், வாசுவையும், கிளாஸ் கட் அடிக்க வைத்து, சினிமாவிற்குக் கூட்டிப் போகிறேன் பாரு! என்று, மதிநிறை அழகன் செய்த சதி என்று பிறகு தெரிந்தது.

அதனால் என்ன? அந்த வாய்ப்பு இல்லையெனில், வாத்தியார் படம், ‘முதல் ஷோ’ போய்ப் பார்க்கும் பாக்கியம் வாய்த்திருக்காது, என்றே தோன்றுகிறது..

வாழ்க்கை என்னும் சிலை, அனுபவம் என்ற உளி’யால் செதுக்கப்படுகிறது.
அச்சிலையை அலங்கரிக்க இது போன்ற தருணங்கள் தேவையானதுதானே?

 

  •  

இடம் பொருள் இலக்கியம் – 29  –   முனைவர் வ வே சு

நெருநல் உளனொருவன்-2

Safe Driving For The Ghats - Things To Keep In Mind - Tamil DriveSpark

“ ஏம்பா டிரைவர் ஸ்டெப்னி இருக்கில்ல.. சீக்கிரம் மாத்து” என்றேன்.

“ இதோ மாத்தறேன் “ என்று சொல்லிவிட்டு டிக்கியைத் திறக்க இறங்கினான்.

பின்னால் திரும்பிப் பார்த்தேன்.. நடராஜன் மடிமேல் வெள்ளைத் துணியால் கட்டுப் போடப்பட்ட தாமஸ் தலை சாயந்திருந்தது. கண்களை மூடியபடி இருந்த நடராஜனை நான் எழுப்ப விரும்பவில்லை. சென்ற இரவு எங்கள் யாருக்குமே தூக்கம் கிடையாது.

இரண்டு நாட்கள் முன்புதான், மறுபடியும் லீவு எடுத்துக் கொண்டு தாமஸ் சென்னை சென்று திரும்பினான்.  அவன் குழந்தைக்கு “பாப்டிஸம்” நிகழ்ச்சி. பெயர் சூட்டுவிழா. ஆண் குழந்தை.  . பேரென்ன என்று கேட்டோம் . “ஜெரோம்” என்று சொன்னான். இப்போது போல அப்போதெல்லாம் மொபைல் இல்லாததால் புகைப்படம் எதுவும் அவன் எடுத்து வரவில்லை. உற்சாகம் குறைந்து காணப்பட்டான். என்னடா என்று கேட்டால்

“ஹேய் ஐ மிஸ் மை லிட்டில் ஜெரோம்” என்று சொல்லிவிட்டு அகன்றுவிட்டான்.

அன்று இரவு படுக்கையில் படுத்தபடி முனகிக் கொண்டு இருந்தான். காலையில் ஹை ஃபீவர் . வாந்தி எல்லாம். பல்கலைக்கழக மருத்துவர்கள் அவனை மதுரை மருத்துவ மனையில் சேர்க்கச் சொல்லிவிட்டனர். பலகலைக்கழகத்தின் தொடர்பிலுள்ள மிகப் பெரிய தனியார் மருத்துவமனை. அங்குதான் சேர்க்கப்பட்டான். லீவ் சொல்லிவிட்டு நானும் அவனோடு இருந்தேன். அன்று இரவு ஒன்பது மணி வரை மருத்துவ மனையில் அவனோடு இருந்தேன்.

“லாட் ஆஃப் ப்ளூயிட் லாஸ் “ என்று சொல்லி ட்ரிப்ஸ் ஏற்றினார்கள். இரண்டு முறை பாத்ரூம் செல்லவேண்டி இருந்தது. நான்தான் உடன் சென்று உதவி செய்தேன். மிகத் தளர்ந்து போயிருந்தான். இரவு முழுக்க இங்கேயே தங்கிவிடுகிறேன் என்றால் “வேண்டாம் நீ ஹாஸ்டல் போய்விடு “ என்றான். அங்கிருந்து 13 கிலோமீட்டர் என் ஸ்கூட்டரில் திரும்பிவந்தேன்.

என்னோடு உடன் இருந்த நண்பர்களுக்கு விஷயத்தை தெரிவித்து விட்டு பத்து மணி அளவில் உறங்கச் சென்றேன். விடுதியிலிருந்து மறுநாள் காலை தாமஸைப் பார்க்கப் போகலாம் என்று நாங்கள் ஐந்து நண்பர்கள் தீர்மானித்தோம்.

இரவு பதினோரு மணிக்கு யாரோ கதவைத் தட்டினார்கள். மருத்துவ மனையிலிருந்து ஃபோன் வந்திருப்பதாகவும் என்னைப் பேச அழைப்பதாகவும் சொன்னார்கள். செக்யூரிட்டி அறையிலிருந்த தொலைபேசியில் பேசினேன்.

“ஹலோ “

“ தாமஸ் என்கிற பேஷண்ட் கூட இருந்த அவர் ஃப்ரெண்ட் வி வி, சுப்பிரமணியன் நீங்கதானே “

“ ஆமாம் சொல்லுங்க”

“ நான் டியூட்டி டாக்டர் குமரேசன் பேசறேன். ஐயாம் சாரி டூ செ மிஸ்டர் தாமஸ் இஸ் நோ மோர் . ஹி பாஸ்ட் அவே டென் மினிட்ஸ் பேக் . காப்பாத்த முடியல. பாடி ரிசீவ் பண்ண நீங்களோ அல்லது அவங்க உறவுகாரங்களோ உடனே வாங்க. உங்க புரொஃபசர் கிருஷ்ணசாமி அவருக்கும் இன்ஃபார்ம் செய்துவிட்டோம்.”

“டாக்டர் என்ன சொல்லறீங்க ?நான் தாமஸை பாத்துட்டு இப்பத்தான் ஹாஸ்டலுக்குத் திரும்பினேன். நம்ப முடியல.. “ போனில் என்னால் மேலே பேச முடியல. தொலைபேசித் தொடர்பும் தூண்டிக்கப்பட்டு விட்டது.

இதற்குள் பல்கலைக்கழகத்தின் அலுவல் அறை திறக்கப்பட்டு அங்கிருந்த தொலைபேசி மூலம் முக்கியமான பலரை சீனியர் சூப்பரின்டெண்டன்ட் தொடர்பு கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தீர்மானம் செய்யத் தொடங்கினர். என்ன நடந்தது என்று அப்போது எனக்குத் தெரியாது.

தனியாக இருக்கப் பிடிக்காமல் விடுதியில் நண்பர்களோடு இருந்த என்னை காலை ஆறு மணி அளவில் புரொஃபசர் எஸ். கே . அழைப்பதாக வாட்ச்மேன் வந்து சொன்னான், எங்கள் டிபார்ட்மெண்ட் லெக்சர் ஹாலில் எங்கள் வகுப்பு மாணவ மாணவியர் பலரும் வந்து அமர்ந்திருந்தனர். எல்லோர் முகத்திலும் சோகம் அப்பிக் கிடந்தது.

புரொஃபசர் எஸ். கே . உள்ளே நுழைந்தார்.

“ ஸ்டூடண்ட்ஸ் வி ஆர் சாரி டூ இன்ஃபார்ம் தெ சேட் டிமைஸ் ஆஃப் மிஸ்டர் தாமஸ்.  . மாணவராக இங்கே தங்கி படிக்கும் போது இந்த துர்மரணம் நிகழ்ந்ததால் பலகலைக்  கழகத்திற்கு சில கடமைகள் உண்டு. தாமஸ் வீட்டாரோடு தொடர்பு கொண்டு செய்தியைத் தெரிவித்த போது, “பாடியை” உடனே சென்னைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யச் சொன்னார்கள். இறுதி சடங்குகள் அங்குதான் செய்யப் போகிறார்கள். ஆம்புலன்ஸ் கிடைக்க நேரம் ஆகும் என்பதால் நாங்களே ஒரு டாக்ஸி ஏற்பாடு செய்துள்ளோம். இன்னும் அரைமணி அளவில் அந்த டாக்ஸியில் தாமஸ் உடல் சென்னைக்குக் கொண்டு செல்லப்படும்.

“பாடியை”த் தனியாக காரில் அனுப்ப முடியாது, இங்கிருந்து பாடியுடன் யாரேனும் செல்லவேண்டும். டாக்ஸி டிரைவர் தனியாக சென்னைவரை பாடியை வைத்துக் கொண்டு போகமுடியாது என்று சொல்லிவிட்டான். மருத்துவனை மற்றும் போலீஸ் சர்டிபிகேட் இருக்கிறது. அதை கையில் வைத்துக் கொண்டு யாரேனும் கூடச் சென்றால்தான் போகும் வழியில் “செக் போஸ்ட்” களில் தடை ஏதும் இன்றி வண்டி செல்ல முடியும்.

ஐ ஹாவ் அ ரெகுஸ்ட் டூ மேக். அவர் வகுப்பைச் சேர்ந்த யாரேனும் ஒருவர் காரில் உடன் செல்லவேண்டும். என்றார்.

தாமஸுக்கு நெருங்கிய நண்பன் நான் என்பது மட்டுமன்றி அங்கு இருந்தவரில் நான் ஒருவன்தான் சென்னையைச் சேர்ந்தவன்.

நான் போகிறேன் என்று முன்னே வந்தேன். என்  நண்பர்கள் “ விவிஎஸ் தனியாகப் போகவேண்டாம் துணைக்கு நாங்கள் செல்கிறோம்” என்று இன்னும் இருவர் முன்வந்தனர்.

?இரண்டு பேர் போகத்தான் இடமுண்டு. விவிஎஸ் பிளஸ் இன்னும் ஒருவர்” என்று புரொஃபசர் சொன்னவுடன் மதுரைக் கல்லூரியைச் சேர்ந்த நடராஜன் வந்து காரில் எறிக்கொண்டான். தாமஸ் தலையை மடியில் வைத்துக் கொண்டு பின் சீட்டில் அமர்ந்துவிட்டான்.

“சார் ! பஞ்சர் ஒட்டியாச்சு .பக்கத்துல பெட்ரோல் பங்க் போகணும் சார்! அப்படியே ஏதாவது சாப்பிட இங்கயே வாங்கிடனும் .. பாடியை வச்சுக்கிட்டு ஊருக்கு உள்ள போனா பிரச்சனை போலீஸ் தடுப்பான். நாம் ஹை வேஸ்ல போயிடலாம்” என்றான்.

பெட்ரோல் பங்கில் வண்டி நின்றதும் நானும் கீழே இறங்கினேன். அப்போதுதான் நாங்கள் வந்த டாக்ஸியை சரியாகப் பார்த்தேன். நம்பர் பிளேட்டிலிருந்து எல்லா இடங்களிலும் அங்கங்கே பெயிண்ட் போயிருந்தது, கதவு கண்ணாடி எல்லாம் லொட லொட. நாலு டயரும் மொட்டை. உள்ளே இருக்கும் சீட் கவரில் பல பகுதிகள் கிழிந்து கிடந்தன. எங்கள் வீட்டில் வண்டி உண்டு. நானும் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பவன். எனவே கார்கள் பற்றி ஓரளவு தெரியும். இந்த அசாதாரண சூழலில் , நான் காலையில் கிளம்பும் போது இவற்றையெல்லாம் கவனிக்கவில்லை. கவனித்திருந்தால் அப்போதே சொல்லியிருப்பேன். சென்னை வரை இந்த வண்டி போகுமா என்பதே கேள்விக் குறி ! போனாலும் பெரிய ரிஸ்க் என்னடா இப்படி வந்து மாட்டிக் கொண்டோமே என்று மனம் எண்ணியது. ஆனால் அந்த வயதில் இதையெல்லாம் எதிர்கொள்ளும் துணிச்சலும் இருந்தது.

“ஏம்பா டிரைவர்! முத்து தானே ஒங்க பேரு “

“ஆமாம் சார் ! என்ன சொல்லுங்க?”

“ முத்து இந்த வண்டிய எப்படி செலக்ட் பண்ணி எடுத்துட்டு வந்தீங்க. பாத்தாலே தெரியுது.. அவ்வளவு கண்டிஷன் இல்ல.. நாலு டயரும் சரி இல்ல. ஸ்டெப்னியும் பழசு.. போக முடியுமா?”

“சார் ! நீங்க சொல்றது கரெக்ட் .. ஆனா வேற வண்டி எதுவும் கிடைக்கல .. எஸ் கே ஐயா சொன்ன அப்புறம் ஒரு மணி நேரம் வண்டி தேடினேன் சார்.. ஒருத்தனும் “பாடி” எடுத்துட்டு போக ஒத்துக்கல .. வண்டி வராதுன்னு சொல்லிட்டான் ஆம்புலன்ஸ் இல்ல. பாடிய ஒரு மணி நேரத்துல எடுத்துட்டு சென்னைக்குப் புறப்படனும் அப்படின்னு ஐயா சொல்லிட்டாரு .. நான் யூனிவர்சிட்டி டிபார்ட்மெண்ட் டிரைவர்.. கெடச்ச வண்டிய எடுத்துட்டு கெளம்பிட்டேன் பாத்துக்கலாம் .. நாம நல்ல காரியம்தான் செய்யுறோம் ஐயா ! ஆண்டவன் பாத்துப்பான். போய் உட்காருங்க..சார் ”

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நடராஜன் எதுவும் பேசாமல் ஆயாசத்துடன் தலையை சாய்த்து அமர்ந்திருந்தான். வண்டி ஓடத் தொடங்கியது.

திருச்சியை அவுட்டரில் விராலிமலைப் பாதையில் கடந்தோம். விழுப்புரம் திண்டிவனம் செங்கல்பட்டு மதுராந்தகம் என்று தாம்பரம் வருவதற்குள் நான்கு இடங்களில் வண்டியை நிறுத்தி பஞ்சர் போட வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போ மாதிரி இல்ல. அப்ப ஒரு பஞ்சர் ஒட்டவே அரை மணி ஆயிடும். அதுமட்டுமல்ல; பஞ்சர் ஆனதும், இறங்கி டயரை மாற்றி பிறகு அருகிலுள்ள பஞ்சர் கடை தேடிப் போகவேண்டும்.

தாம்பரம் வரும்போது எட்டுமணி நேரம் ஆகிவிட்டது. அதாவது மாலை மூன்று மணி ஆகிவிட்டது. சாலைப் போக்குவரத்து அதிகமாகிவிட்டது. தாம்பரம் கடக்கும் போது  இரண்டு போலீஸ் வண்டிகள் எங்களைத் தடுத்து நிறுத்தின.

தாமஸ் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவன். செல்வாக்கு உள்ள உறவினர்கள் உண்டு. ஒருவர் போலீஸில் உயர் பதவியில் இருப்பவர். காலை ஆறு மணிக்கு மதுரையில் இருந்து கிளம்பிய வண்டி இன்னும் சென்னை வந்து சேரவில்லை என்றதும் அவர்கள் போலீஸ் உதவியை நாடியுள்ளார்கள். எங்கள் வண்டி நெம்பர் தெரியும் என்பதால், டிரேஸ் செய்து தாம்பரத்தில் பிடித்துவிட்டார்கள். பிறகு முன்னும் பின்னுமாக எங்களுக்கு வழி காட்டிக் கொண்டே அவர்கள் செல்ல, கீழ்ப்பாக்கத்திலுள்ள தாமஸ் வீட்டை அடைந்தோம். வழி நெடுக தெருக்காரர்களின் கூட்டம். வீடு முழுக்க உறவினர் கூட்டம்.

கலைந்த தலை கலங்கிய கண் கசங்கிய ஆடை பசித்த வயிறு  என்று நாங்கள் இறங்கினோம். முதல் மாடியில் தாமஸ் வீடு. பாடி அங்குதான் எடுத்துச் செல்லப்பட்டது. இறுதி சடங்கு செய்ய ஆயத்தங்கள் செய்யப்பட்டிருந்தன. பெரிய ஹாலில் நாடு நாயகமாக வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியில் தாமஸ் உடல் கிடத்தப்பட்டது.

இறுகிய முகத்துடன் நின்றிருந்த தாமஸின் தந்தை எங்களிடம் ஏதோ கேட்கத்  தொடங்கினார். ஆனால் அதற்கு முன் , அழுது வீங்கிய கண்களோடு இருந்த அவன் தாய் ( தாமசோடு என்னை ஒரு முறை பார்த்தவர்) எங்களைப் பார்த்துச் சொன்னாள்.

“அதெல்லாம் அப்புறம் ! நீண்ட கடுமையான பயணம் செய்து வந்திருக்கிறீர்கள் களைத்திருப்பீர்கள் .. முதலில் கை கால்  முகம் கழுவிக் கொண்டு வாருங்கள். உள்ளே கேக் பிஸ்கட் உள்ளது சாப்பிடுங்கள்”

நான் நெஞ்சுருக நின்றேன். இத்தனை பெரிய இழப்புக்கு நடுவே அந்தத் தாயுள்ளம் எங்கள் வயிற்றுப் பசியை நினைவில் கொண்டு உபசரித்ததே ! ( இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் அந்த நினைவு என்னை நெகிழ வைக்கின்றது}

வெளியே ஹாலில் கூட்டம் எங்களுக்காகக்  காதிருந்தது.

பாதிரியார் என்னிடம் “ யூ ஆர் அ குட் சமாரிடன் .. உங்கள் நண்பனுக்கான இறுதி யாத்திரையில் நீங்கள் செய்த பணி அற்புதமானது. பரமபிதாவின் அருள் உங்களுக்குக் கிட்டுவதாக ! அமரனாகிவிட்ட தாமஸின் கடைசி நேரங்களில் நீங்கள்தான் அவர் உடன் இருந்து சேவை செய்தீர்கள் எனறு அறிகிறோம்.அதைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் பேசுங்கள். எங்களுக்கு ஆறுதலாக இருக்கும்” என்றார்.

என்ன பேசினேன் என்று நினைவில்லை. பிறகு நான் ஏற்கனவே ஒருமுறை சந்தித்து இருந்த அவன் தாயையும் மனைவியையும் பார்த்து ஆறுதல் சொன்னது நினைவிருக்கிறது.

தாமஸ் மறைந்த முதலாண்டு நினைவு தினத்தன்று நான் அவன் வீட்டுக்குச் சென்று அவனது தாய் தந்தையரைப் பார்த்தேன். அவர்களுக்கு அது பெரும் ஆறுதல். மிக இள  வயது கொண்ட தாமஸின் மனைவிக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயத்திருப்பதாகச் சொன்னார்கள். அவள் தன் பெற்றோர் வீட்டில் இருக்கிறாள் . போய்ப் பார்த்து வாழ்த்து சொல்லுங்கள் என்று முகவரியும் தந்தார்கள்.

பல மாதங்கள் அந்த முகவரி எழுதப்பட்ட காகிதத் துண்டு என் பர்ஸில் இருந்தது. ஏனோ நான் சென்று பார்க்கவே இல்லை.

(தொடரும்)

 

 

 

  •  

சரித்திரம் பேசுகிறது – யாரோ

 

குலசேகரபாண்டியன்

 

சரித்திரம் பல எழுச்சிகளைச் சந்தித்திருக்கிறது. பல வீழ்ச்சிகளைச் சந்தித்திருக்கிறது. சாம்ராஜ்யங்களை வழங்கியிருக்கிறது. விழுங்கியுமிருக்கிறது. பாண்டியநாட்டின் பொற்காலக் கதை எப்படிப் போகிறதென்று பார்ப்போம்.

கி பி 1268: வெற்றி ஒன்றையே பார்த்த ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், தனது முடிவு நெருங்குவதை உணர்ந்தான். சிலவருடங்களுக்கு முன்னரே, தனது மகன் குலசேகரனை பாண்டிய நாட்டின் பட்டத்து இளவரசனாக்கியிருந்தான். தம்பி வீரபாண்டியனும், பாண்டியநாட்டின் ஒரு பகுதியை ஆண்டுகொண்டிருந்தான். அனைத்து இளவரசர்களையும் அழைத்துச் சொன்னான்: “பாண்டிய முத்துக்களே! என் கதை முடியும் நேரம் வந்துவிட்டது. நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பாண்டிய சாம்ராஜ்யத்தை உன்னத நிலைக்குக் கொண்டு செல்லவேண்டும்” என்று கூறினான். கோரினான். இளவரசர்கள் அனைவரும் உறுதி அளித்தனர். சுந்தரபாண்டியன் மகிழ்ச்சியுடன் உயிர் விட்டான்.

அவனுடன் தனது வாழ்க்கையை முழுவதும் சேர்ந்து கழித்திருந்த தம்பி வீரபாண்டியன் துக்கித்து நின்றான். இளவரசன் குலசேகரனிடம், “மகனே குலசேகரா, நீ மதுரையில் முடிசூடி, அண்ணன் விட்டுச்சென்ற இந்த வளநாட்டைப் பொன்னாடாக்கு” என்று ஆசி கூறினான்.

 முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் என்ற பட்டப்பெயருடன் கி.பி 1268 முதல் கி.பி 1311 வரை அரசாண்டான். சிற்றப்பன் வீரபாண்டியன், தம்பி விக்கிரமபாண்டியன் இருவரும் பாண்டிய நாட்டின் மற்ற பகுதிகளை ஆண்டனர்.

கி.பி. 1274: தந்தை சுந்தரபாண்டியன், முதலில் சேர நாட்டுத் தாக்குதலில் வென்றது போல, குலசேகரனும் சேரநாட்டைத் தாக்கினான். பாண்டியப் படைகள் விரைந்தது. சேரநாட்டின் மீது படையெடுத்துச் சென்று, வேனாட்டைத் தாக்கி, அந்நாட்டில் உள்ள கொல்லத்தை வென்று அதனைக் கைப்பற்றிக் கொண்டான். அதனால் இவன் ‘கொல்லம் கொண்ட பாண்டியன்’ என்னும் பட்டப்பெயர் பெற்றான்.

கி பி 1284: ஈழ நாட்டின் மீது குலசேகரன் பார்வை படிந்தது. ஆரியச் சக்கரவர்த்தி என்ற படைத்தலைவன் தலைமையில், பெரும்படை ஒன்றை இலங்கைக்கு அனுப்பிவைத்தான். அப்படைத்தலைவன் ஈழத்தின் பல பகுதிகளைப் பேரழிவிற்கு உள்ளாக்கி, நகரங்களைக் கொள்ளையிட்டுச் சுபகிரி என்னும் நகரில் இருந்த பெருங்கோட்டையைக் கைப்பற்றினான். இறுதியில், அந்நாட்டில் உள்ள பெருஞ்செல்வங்களையும், புத்தரது பல்லையும் கைப்பற்றிக் கொண்டு வெற்றியுடன் பாண்டிய நாட்டிற்குத் திரும்பினான். புத்தரின் பல்லை, ஈழ நாட்டார் புனிதப் பொருளாகக் கருதி வந்தனர். பாண்டியரோடு போர் புரிந்து, அப்பல்லைப் பெறுவதற்கு இயலாத நிலையில் இருந்தான் ஈழநாட்டு மன்னன் மூன்றாம் பராக்கிரமபாகு. நாட்டுமக்களும், மந்திரிகளும் மன்னனிடம் “பாண்டியன் நமது செல்வங்களைக் கவர்ந்தான். பல வீரர்கள் உயிர்களைக் கவர்ந்தான். இவைகள் அனைத்தையும் கூட நாங்கள் பொறுத்துக்கொண்டோம். ஆனால், புத்தரின் பல், புராதனமானது. எங்கள் உயிருக்கும் மேலானது. அதை எப்படியாவது மீட்டு வரவேண்டும்” என்று முறையிட்டனர். ஈழ மன்னன் முடிவெடுத்தான்.

பாண்டிய நாடு புறப்பட்டான். விலையுயர்ந்த பொருட்களைக் காணிக்கையாக எடுத்துக்கொண்டு மதுரைக்குப் பயணித்தான். குலசேகரபாண்டியனைப் பணிந்து நட்புரிமை கொண்டான். குலசேகரன் மகிழ்ந்தான். ஈழமன்னன் புறப்படும் நேரம் வந்தது. குலசேகரனும், விலையுயர்ந்த கொற்கை முத்துக்களை அவனுக்குப் பரிசாகக் கொடுத்தான். இலங்கை அரசன் ”பாண்டிய மன்னா! எங்கள் உயிருக்கு மேலான புத்தரின் பல்லை எங்கள் நாடு ஆயிரம் வருடங்களாகப் போற்றி வணங்கி வருகிறது. அதை எங்களுக்குத் தந்து அருளவேண்டும்“ என்று இறைஞ்சினான். மனம் நெகிழ்ந்த குலசேகரன், புத்தர் பல்லை இலங்கை மன்னனுக்குக் கொடுத்தான்.

கி பி 1279: போசளர், மட்டும் சோழ மன்னன் மூன்றாம் ராஜேந்திரன் இருவரையும் சுந்தரபாண்டியன் தோற்கடித்தது நாம் அறிந்ததே. மீண்டும் பல வருடம் கழித்து, மீண்டும் இருவரும் சேர்ந்து பாண்டியனை எதிர்க்கத் துணிந்தனர். போசளர் ராமநாதனையும், மூன்றாம் ராஜேந்திர சோழனையும், போரில் குலசேகரன் ஒருசேர தோற்கடித்தான். அத்துடன் தமிழ்நாட்டில் இருந்த போசளர் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. சோழன் பெயர் சரித்திரத்திலிருந்து மறைந்தது.

இவனது ஆட்சிக் காலத்தில் பாண்டிய நாடு உயர்நிலையில் இருந்தது. வெனிஸ் நாட்டு வழிப்போக்கனான மார்க்கோ போலோ, பாரசீக நாட்டைச் சார்ந்த இசுலாமிய வரலாற்றாசிரியர் வாசாப் என்பவரும் இவனுடைய காலத்தில் பாண்டிய நாட்டிற்கு வருகை புரிந்தனர்.

சோழ நாடு, கொங்கு நாடு, தொண்டை நாடு ஆகிய நாடுகள் இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. இவனுக்கு முன் அரசாண்ட சடையவர்மன் சுந்தரபாண்டியனது ஆட்சியில் பாண்டியப் பேரரசின் கீழ் அடங்கியிருந்த எல்லா நாடுகளும் இவனது ஆட்சிக் காலத்திலும் இருந்தது. அங்ஙனமே சடையவர்மன் சுந்தர பாண்டியனைப் போலவே இம்மாறவர்மன் குலசேகரபாண்டியனும் எம்மண்டலமும் கொண்டருளிய ஸ்ரீ குலசேகர பாண்டியன் என வழங்கப்பெற்றான். மேலும் இவன் தன் பேரரசிற்கு உட்பட்டிருந்த நாடுகள் எல்லாம் அமைதியாக இருத்தல் வேண்டித் தன் தம்பிமார்களான மாறவர்மன் விக்கிரமபாண்டியன், சடையவர்மன் குலசேகரபாண்டியன் ஆகியோரை அந்நாடுகளில் அரசப் பிரதிநிதிகளாக இருந்து ஆட்சி செய்து வருமாறு ஏற்பாடு செய்தான்.

குலசேகரன் அரசவையில் தகியுத்தீன் அப்துர் ரகுமான் என்பவர் முதன்மை மந்திரியாக இருந்து ஆட்சிக்கு துணை புரிந்தமைக்காக காயல் பட்டினம், பிடான், மாலி பிடான் என்ற கடலோர நகரங்கள் அளிக்கப்பட்டதாக அப்துல்லா வசாப் எனும் அரபிய வரலாற்றாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த காலகட்டத்தில் வருகை புரிந்த பயணி மார்க்கோ போலோ உலகின் புனிதம் வாய்ந்த நகராக குறிப்பிடுகிறார்.

இனி ஒரு சிறப்பான சரித்திரத் தகவலைச் சொல்லவேண்டும். நீங்கள் இதுவரை படித்த மன்னன் குலசேகரப்பாண்டியன் தான் தமிழகத்தின் கடைசிப் பேரரசன்! தமிழகத்துக்கு விபரீத காலம் வரும் நாள் வரப்போகிறது. அந்த விபரங்கள் இனி தொடர்வதற்கு முன்னர், ஒரு முக்கியமான விருந்தாளி ஒருவர் (உங்கள் ஊகம் சரிதான். அது இத்தாலியப் பயணி மார்கோ போலோ தான்) கதையைச் சொல்லியாக வேண்டும். அது விரைவில்.

 

  •  

பூனாச்சி – நூல் அறிமுகம் 

பூனாச்சி – நூல் அறிமுகம் ( *POONACHI* A story of a black goat) In English Heart of a Dog, Animal farm, Jungle book, Stewart the little போன்ற புத்தகங்களைப் போல மானுடவியல் என்ற…

The post பூனாச்சி – நூல் அறிமுகம்  appeared first on Book Day.

  •