Reading view

என் இனிய ராட்சஷனே 17,18

அத்தியாயம் 17

 

சின்னப்பொண்ணு இளமதியின் கையை பிடித்து இழுத்து செல்ல 

“என் கையை விடு மா இந்த கிழிவியை இன்னைக்கு நான் உண்டு இல்லைன்னு ஆக்காம விட மாட்டேன்” என்று சிவகாமியை முறைத்துக் கொண்டே கூற “என்ன டி பண்ணுவ என்ன பண்ணுவ என் மகனுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான் உன்னை இந்த வீட்டை விட்டே வெளியே துரத்திடுவான்” என்று எகிறி கொண்டே சிவகாமி அவள் அருகில் கோபத்துடனே வர. 

 

“கூப்பிடுங்க உங்க மகனை இன்னைக்கு என்ன பண்றாருன்னு பார்ப்போம்” என்றாள் அவளும் அவருக்கு சற்றும் குறையாத கோபத்துடன் தைரியமாக “மதி நீ இப்போ உள்ளே வர போறியா இல்லையா” என்று சின்னப்பொண்ணு கோபத்துடன் கூறியவர் அவளின் கைப்பிடித்து இழுக்க சிவகாமியை முறைத்துக் கொண்டே உள்ளே சென்றாள் இளமதி. 

 

அறையின் உள்ளே வந்த இளமதி கோபத்துடன் படுக்கையில் அமர்ந்திருக்க “உனக்கு எதுக்கு இவ்வளவு கோபம் வருது பெரியவங்க பேசுனா நீயும் கூட கூட பேசுவியா சொல்லு டி” என்றார் கோபத்துடன் அவர். 

 

“அம்மா அந்த கிழவி பேசுனது எல்லாம் சரியா நீ என்னை மட்டும் கன்ட்ரோல் பண்ற” என்க அவள் அருகில் வந்து அமர்ந்த சின்னப்பொண்ணு “மதி மா நாம இந்த வீட்ல இருக்க வர அவங்களுக்கு அடங்கி தான் ஆகனும்” என்று கூறும் போதே அவரின் கண்கள் கலங்கியது. 

 

“அம்மா நாம இனிமே இந்த வீட்ல இருக்க தேவையில்லை” என்ற இளமதி தன் பையில் இருந்த அப்பாயின்ட்மென்ட் லெட்டரை எடுத்து அவர் கையில் கொடுத்தாள் “அம்மா எனக்கு வேலை கிடைச்சிருக்கு அதுவும் பெரிய ஐடி கம்பெனில மாசம் முப்பதாயிரம் சம்பளம்” என்றாள் மகிழ்ச்சியுடன். 

 

சின்னப்பொண்ணு ஒரு நிமிடம் அந்த பேப்பரை தன் கையில் வைத்து பார்த்து கண்ணீர் விட்டார் அடுத்த நிமிடம் 

“நீ என் தம்பி கூட வாழ வேண்டாமா உன் வாழ்க்கை என்ன ஆகும்” என்று கேட்க

“மா என் வாழ்க்கைக்கும் நான் வேலைக்கு போறதுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு” என்று அவள் கேட்க. 

 

“சம்மந்தம் இருக்கு நீ இங்கே இருந்து போய்ட்டா நந்தினியை கருப்பனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க 

நீங்க ரெண்டு பேரும் இன்னும் சேர்ந்து கூட வாழ ஆரம்பிக்கல”

 

“அம்மா மாமா அக்காவை கல்யாணம் பண்ண சம்மதிக்க மாட்டாரு” என்றாள் 

இவள் மிகவும் தைரியமாகவும் உறுதியாகவும் “உனக்கு எப்படி இவ்வளவு தைரியம் ஒரு நாளாவது அவன் குடும்பம் நடத்திருக்கியா உன் வாழ்க்கை என்ன ஆகும்” என்றார் பயத்துடன். 

 

“மா நாங்க ஒன்னா வாழலைன்னு யார் சொன்னா” என்றாள் அவள் அவரின் முகம் பார்க்காமல் 

“என்ன சொல்ற மதி” என்று அவர் ஆச்சரியம் அதிர்ச்சி கலந்த குரலில் கேட்க 

“அம்மா நாங்க வாழ ஆரம்பிச்சிட்டோம் அவரு கண்டிப்பா அக்காவை கல்யாணம் பண்ணிக்க மாட்டாரு இதுக்கு மேல என் கிட்ட எதுவும் கேட்க்காத” என்று அவள் சொல்லும் போதே அவளின் முகம் சிவந்து போனது அவளால் தாயின் முகம் பார்க்க முடியவில்லை எழுந்து வெளியே சென்றுவிட்டாள். 

 

சின்னப்பொண்ணுவுக்கு அனைத்தும் புரிவதை போல் இருந்தது அவருக்கும் இப்போது தான் கொஞ்சமே கொஞ்சம் நிம்மதியாகவும் இருந்தது. 

 

இளமதி அங்கிருந்து வெளியே சென்றவள் நேரே தன் மாமனை தேடி ரைஸ் மில்லுக்கு சென்றாள் அவன் அங்கே இல்லை என்றவுடன் மீண்டும் வயலுக்கு தேடிப்போக அங்கே தான் அவன் வேலை செய்து கொண்டு இருந்தான். 

 

அவனை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டே இருந்த மதி அவனுக்காக மரத்தடியில் சென்று அமர்ந்து காத்திருக்க ஆரம்பித்தாள் அவள் மறைவாக அமர்ந்திருக்க கருப்பன் அவளை பார்க்கவில்லை அப்போது வானம் இருட்டிக் கொண்டு மழை வருவதை போல் இருக்க கருப்பன் சீக்கிரமே வேலையாட்களை அனுப்பி வைத்தான். 

 

இறுதியாக கருப்பன் மட்டும் தான் நடந்து வந்து கொண்டிருந்தான் அவன் வருவதற்க்குள் மழை பொழிய ஆரம்பிக்க மா மரத்தின் அடியில் சென்று மழைக்காக ஒதுங்கி நின்றான் மழையை வேடிக்க பார்த்து கொண்டு இருந்தவன் தன் பக்கத்தில் யாரோ ஒரு பெண் நிற்பதை உணர்ந்து திரும்பி பார்க்க அங்கே நின்றிருந்த இளமதியை பார்த்தவனுக்கு கோபம் தலைக்கு மேல் ஏறியது அவளை பார்த்து முறைத்து வைக்க “என்ன மாமா என் மேல கோவமா” என்று கேட்க. 

 

அவனோ கண்டுகொள்ளாமல் மழை என்றும் பாராமல் நடந்து செல்ல “மாமா” என்று கத்திக் கொண்டே இளமதி அவன் பின்னே ஓடியவள் அவனின் கைப்பிடித்து இழுக்க 

சரியாக அவள் சேற்றில் காலை வைத்து விட கால் வழுக்கி விழ நிலைதடுமாறி அவள் விழ போக கருப்பன் அவள் விழுந்து விடாமல் பிடிக்க முயல இருவரும் ஒன்றாக சேர்ந்து கொட்டும் மழையில் சேற்றில் விழுந்தனர். 

 

கருப்பன் கீழே கிடக்க இளமதி அவன் மேலே கிடந்தாள் மழை பயங்கரமாக வெளுத்து கொண்டு இருக்க மின்னல் வேறு வெட்டி கொண்டு இருந்தது. 

 

இளமதி அவன் மேலே எக்கு தப்பாக விழுந்து கிடக்க அவள் தாவணி நழுவி அபாயகரமான பள்ளத்தாக்கு வெளியே தெரிய கருப்பனின் கண்கள் எதார்த்தமாக பார்க்க அவளின் இந்த நிலையை கண்டு வாயடைத்து போனான் ரத்தநாளங்கள் உடனே சுறுசுறுப்பாக ஆரம்பித்தது இரண்டு வார பிரிவு அவனை ஏதோ செய்தது அவன் ஆண்மை விழித்து கொள்ள பார்க்க உடனே அவளை தன்னில் இருந்து விலக்கியவன் தானும் எழுந்து நின்றான். 

 

கருப்பன் வேட்டி சட்டை என்று அனைத்தும் சேறாகி இருக்க இளமதியும் அதே நிலையில் தான் இருந்தாள்

“மாமா என் மேல கோவமா ஏன் என் கிட்ட பேச மாட்டேங்குறிங்க” என்று அவனிடம் கேட்க

“ஆமாம் டி கோவம் தான் பெரிய கலெக்டருக்கு படிக்கிறியா ஒரு நாள் என் கூட இருக்க உனக்கு உடம்பு நோவுது பெரிய இவள் மாதிரி பேசுன இப்போ எதுக்கு என் கிட்ட வந்த” என்றவன் தன் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு 

முன்னே நடந்து சென்றான். 

 

அவன் நடைக்கு இவளால் அவன் பின்னே ஓட தான் முடிந்தது “மாமா மாமா” என்று கத்தி கொண்டே வர அவன் கண்டுகொள்ளவேயில்லை மழை ஒரளவுக்கு குறைந்து விட பம்பு செட்டின் அருகில் சென்றவன் தன் ஆடையை கலைந்துவிட்டு தண்ணீர் தொட்டியில் இறங்கினான். 

 

சேற்றை சுத்தம் செய்ய தண்ணீரில் இறங்க அவன் பின்னே வந்த இளமதி 

‘இப்போ உன்னை என்ன பண்றேன்னு பாரு மாமா’ என்று மனதில் நினைத்தவள் அவளும் தண்ணீர் தொட்டியின் உள்ளே அவனுடன் இறங்கினாள். 

 

“ஏய் என்ன டி பண்ற” என்று கருப்பன் 

கத்த “உடம்பெல்லாம் ஒரே சேறா இருக்கு மாமா அதை சுத்தம் பண்ண வேண்டாமா” என்றாள் அவனை பார்த்து கொண்டே. 

 

“அதுக்கு ஒரு ஆம்பளை குளிக்கும் போது தண்ணீ உள்ளே வருவியா இறங்கு டி கீழ” என்றான் கோபத்துடன் கருப்பன் கூற. 

 

“நீங்க என் புருசன் தான உங்க கூட நான் குளிச்சா தப்பு இல்லை வேற ஆம்பளைங்க கூட குளிச்சா தான் தப்பு” என்றவள் தன் தாவணியை கழட்டி எறிந்தாள். 

 

கருப்பன் ஒரு கணம் அதிர்ந்தவன் “அடியேய் உன்னை வெளுக்க போறேன் ஒழுங்கு மரியாதையா கீழே இறங்கி போ” என்றான் “மாமா உங்களுக்கு என்னை பார்க்க பிடிக்கலைன்னா கண்ணை மூடிக்கங்க உடம்பெல்லாம் ஒரே சேறா இருக்கு ஒழுங்கா குளிக்க வேண்டாமா” என்றவள் தன் மேலாடையின் கொக்கியை கழட்ட முயற்சி செய்து கொண்டு இருந்தாள். 

 

‘அவளை பார்க்காத டா கருப்பா’ என்று தனக்கு தானே கடிவாளம் இட்டு கொண்டாலும் அவனால் அவனையே கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை தண்ணீரின் உள்ளேயே தடுமாற ஆரம்பித்தான். 

 

அவள் ஒவ்வொரு கொக்கியாக கழட்ட அவன் தன்னிலை இழந்து தவிக்க ஆரம்பித்தான் “அச்சோ மாமா வெட்ட வெளியா இருக்கே உங்க பின்னாடி மறைஞ்சு நின்னுக்கிறேன்” என்று கூறி அவன் பின்னே வர மாலை ஆறு மணி என்பதால் நன்றாகவே இருட்ட வேறு ஆரம்பித்து இருந்தது. 

 

“அய்யோ மாமா இந்த கடைசி கொக்கி மட்டும் கழட்ட வரலை நீங்களே கழட்டி விடுறிங்களா” என்று கருப்பனை தன் புறம் திருப்ப அவளின் ஈர ஆடையில் திமிறி பூத்து குலுங்கி கொண்டு இருந்தது இரட்டை ரோஜா அவற்றை பார்த்து எச்சில் விழுங்கியவன் முழுதாக தன் சுயத்தை இழந்தான். 

 

“மாமா கழட்டி விடுங்களேன்” என்று அவள் மீண்டும் கேட்க சும்மா அவள் மேல் பைத்தியமாக திரிபவன் மொத்தமாக அவளை இந்த நிலையில் பார்க்க எத்தனை முறை பார்த்தாலும் அவனுக்கு புதியதாக தான் தோன்றியது ரோஜா குவியலை அள்ளி எடுத்து ருசி பார்த்து கடித்து மென்று சுவைத்து முகற வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. 

 

தன்னை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தவித்தவன் அவளை தன் அருகில் சேர்த்தணைத்தான் இளமதி மனதில் ‘எனக்கு தெரியாதா மாமா உங்களை பத்தி’ என்று நினைத்தாள். 

 

அவள் அருகில் வந்தவன் “ஏன் டி இப்படி தான் கண்டதை காட்டி தான் மனுசனை உசுப்பேத்துவியா” என்று அவளை தன்னோடு மேலும் இறுக்கி கொண்டே கருப்பன் கேட்க “உங்க அம்மா உங்களை நல்லவரு வல்லவருன்னு சொல்றாங்களே நீங்க நல்லவரான்னு டெஸ்ட் பண்ணி பார்த்தேன்” என்றாள் அவனை பார்த்து கொண்டே. 

 

“ஊர்ல எல்லாருக்கும் நல்லவன் ஆனா உன் ஒருத்திக்கு மட்டும் ரொம்ப கெட்டவன் டி” என்றவன் அவளின் இதழில் முத்தமிட்டு அவளை கொள்ளையிட ஆரம்பித்தான்

யாரும் இல்லாத தனிமை இருள் இருவரையும் உல்லாச உலகுக்கு அழைத்துச் சென்றது. 

 

அவளை தண்ணீரில் இருந்து தூக்கியவன் உள்ளே இருந்த பம்பு செட் அறைக்குள் தூக்கி சென்றவன் அவள் மேல் படர ஆரம்பித்தான் இத்தனை நாள் பிரிவை அவனை வாட்டி வதைத்து இருக்க அதிரடியாக தன் ஆட்சியை நிலை நாட்ட அவன் இடையில் காலை சுற்றி போட்டு கொண்டு அவளும் “ம்ம்ம்ஆஆஆ” என்று துடிக்க ஆரம்பித்தாள் 

அவனின் ஒவ்வொரு அசைவுக்கும் 

“மாமா பொறுமையா பிளீஸ் ம்ம்ம்” என்று அவள் கெஞ்ச “முடியாது டி இத்தனை நாள் என்னை தவிக்க விட்டல்ல அனுபவி” என்றவன் அவளுள் அசுரனாக இயங்க ஆரம்பித்தான் “ம்ம்மாஆஆ” என்று அவள் கத்தும் சத்தமும்

இருவரின் முத்தம் சத்தமும் அறையெங்கும் எதிரொலிக்க இனிதாக இல்லறம் நடந்து முடிந்தது. 

 

இரவு இருவரும் தனியே தனியே ஈர உடையுடன் வந்து சேர்ந்தனர் சிவகாமி 

வீட்டில் இல்லாததால் இருவரையும் யாரும் கவனிக்கவில்லை மறுநாளில் இருந்து திருவிழா வேலைகள் ஆரம்பிக்க இருவரும் அவ்வப்போது கள்ளத்தனமாக சந்தித்து கொண்டனர். 

 

நான்கு நாள் திருவிழாவில் இரண்டு நாட்கள் கருப்பனுக்கு ஜீரம் வந்தது மழையில் நனைந்ததால் மூக்கு வேறு அடைந்திருந்தது எங்கும் வெளியே செல்லாமல் இருந்து கொண்டான். 

 

கடைசி நாள் திருவிழாவுக்கு அவன் கோவிலுக்கு செல்ல அவனுக்கு ராஜமரியாதை வழங்கப்பட்டது நாகராஜனுக்கு அவனை பார்த்து பொறாமை பொங்க இவனை எதாவது செய்தே ஆக வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தான். 

 

 அத்தியாயம் 18

 

அன்று கடைசி நாள் திருவிழா என்பதால் ஊரே கூடி இருந்தது பெண்கள் அனைவரும் பொங்கல் கூடையை சுமந்து கொண்டு வனத்தின் நடுவே இருந்த மைதானத்திற்க்கு வந்து கொண்டிருந்தனர். 

 

கருப்பனும் தன்னவளை தான் அந்த கூட்டத்தில் தேடிக் கொண்டு இருந்தான் அவன் எதிர்பார்பை எல்லாம் பொய்யாக்காமல் பொங்கல் கூடையுடன் நடந்து வந்தாள் அவனின் மனைவி இளமதி அரக்கு நிறத்தில் தங்க நிற பார்டர் வைத்து  பட்டு புடவை கட்டி பளபளவென நடந்து வந்து கொண்டு இருந்தாள் நேற்று இரவு அவன் தான் இந்த புடவையை கொடுத்து கட்டிவர கூறியிருந்தான். 

 

அவளின் பால் வண்ண நிறத்துக்கு அந்த புடவை அத்தனை எடுப்பாக வேறு இருந்தது தன் நீளக் கூந்தலை தளர பின்னி அதில் மல்லிப்பூ சூடி அழகான பெரிய முட்டை கண்களுடன் அதில் கண் மை ஐ லைனர் தீட்டி இருக்க அவளின் மை தீட்டிய கண்களே அவனை கொள்ளை கொண்டது. 

 

தேவலோக ரதியே நேரில் இறங்கி வந்ததை போல் இருந்தாள் கருப்பனின் கண்கள் அவளை விட்டு இம்மி அளவு கூட விலகவேயில்லை பொங்கல் கூடயை தூக்கி சென்றவளின் இடையில் இருந்த புடவை விலகி எலுமிச்சை நிற இடை பளிச்சென்று தெரிந்தது அந்த இடையிலேயே கருப்பனின் கண்கள் நிலைத்து நின்றது. 

 

பெண்கள் அனைவரும் முன்னே செல்ல இறுதியாக சென்ற இளமதியை தடுத்து நிறுத்தினான் அவள் கணவன் 

“ஏய் ஒரு நிமிசம் நில்லு டி புடவை மடிப்பே சரியில்லை” என்ற கருப்பன் அவளின் கைப்பிடித்து தனியே ஒரு பெரிய ஆலமரத்தின் பின்னே அழைத்து சென்றான் ஆலமரம் பெரிதாக இருந்ததால் அதன் பின்னே யார் நிற்கிறார்கள் என்பது சரியாக தெரியாது. 

 

அவளின் இடையில் இருந்த புடவை கொசுவத்தை சரி செய்கிறேன் என்ற பெயரில் கையை ஆடையின் உள்ளே நுழைக்க இளமதி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து திணற ஆரம்பித்தாள். 

 

ஏனெனில் அவள் தலையில் பொங்கல் கூடை இருக்க இரு கையும் மேலே கூடையை பிடித்து கொண்டு இருந்தது அவனை அவளால் தடுக்கவே முடியவில்லை அவன் கை புடவையை சரி செய்யாமல் கொசுவத்தின் உள்ளே சென்று இன்னும் ஆழமாக பாதாளத்தின் உள்ளே நுழைந்தது “அய்யோ என்ன பண்ணுறிங்க மாமா” என்று தவிப்புடன் கேட்டு கொண்டே அவள் நெளிய ஆரம்பித்தாள். 

 

“ரொம்ப அழகா இருக்க டி” என்று அவளின் கீழ் உதட்டை பார்த்து கொண்டே கூறியவன் அடுத்த நொடி அவளின் பட்டு போன்ற ரோஜா இதழை இதழை தன் இதழால் கல்வி இழுத்து முத்தமிட அவன் கைகள் இன்னும் உள்ளே சென்று ஆழத்துளையின் உள்ளே விரல் நுழைக்க அவனின் செயலில் அவள் இன்னும் தடுமாற ஆரம்பித்தாள். 

 

அவன் இதழில் இருந்த தன் இதழை வலுக்கட்டாயமாக பிரித்து எடுத்தவள் “ம்ம்ம் மாமா விடுங்க யாராவது வந்துட போறாங்க” என்று மூச்சு திணற கூற

கருப்பன் தன் கையை உடனே எடுத்து கொண்டான் அவளின் புடவையை சரி செய்தவன் கீழே குனிந்து அவளின் நாபியில் முத்தமிட்டு மேலே வந்தவன் “நைட் மேல இருக்க ரூமுக்கு வந்துரு டி” என்று மையலுடன் அவள் இதழை தன் ஒற்றை விரலால் தடவிக் கொண்டே முகத்தை தாபத்துடன் பார்த்து கொண்டே கூற பதிலுக்கு அவளின் முகம் வெட்கத்தில் இன்னும் சிவந்து போனது “ம்ம்ம்” என்று இதழ் கடித்து அவளும் தலையை ஆட்டினாள் அதன் பின் அவளை அழைத்து கொண்டு மைதானத்துக்கு வந்தான் கருப்பன். 

 

மைதானத்துக்கு வந்தும் இளமதியை விட்டு விலகாமல் கருப்பன் அவளுடனே நின்றிருந்தான் நந்தினி பொங்கல் கூடையுடன் பொங்கல் வைக்க தன் தாய் பெரியப்பொண்ணுவுடன் அங்கே வந்தாள் கருப்பன்-மதி இருவரும் ஜோடியாக நிற்பதை பார்த்து முறைத்து வைக்க கருப்பன் அவளை கண்டு கொள்ளவேயில்லை. 

 

பெரியப்பொண்ணுவும் அவளை பார்த்து முறைத்து கொண்டே அடுப்பை பற்ற வைத்து பொங்கல் வைக்க இளமதிக்கு தான் அவர்களின் முன்னே நிற்க ஒரு மாதிரியாக சங்கடமாக இருந்தது ஆனால் அவள் கணவன் மிகவும் சாதரணமாக தான் இருந்தான்

இளமதியுடன் வாழ ஆரம்பித்தது தெரிந்தால் தான் தன் அக்கா அவரின் மனதை மாற்றிக் கொள்வார் என்று நினைத்தான். 

 

“என் மகள் வாழ்க்கையை கெடுத்துட்டு எப்படி என் முன்னாடியே வந்து ஜோடியா நிக்குறா பாரு பாதகத்தி இவள் எல்லாம் நல்லா இருப்பாளா” என்று பெரியப்பொண்ணு புலம்பிக் கொண்டே கண்ணீருடன் பொங்கல் வைக்க 

“அம்மா நீ அழாத அவளுக்காக நான் ஒன்னு ரெடி பண்ணி வச்சிருக்கேன் இதை பாரு” என்று தன் போனில் இருந்த எதையோ காட்டினாள் நந்தினி அதை பார்த்தவர் அதிர்ச்சி குறையாமல் “இது எப்போ எடுத்தது” என்று கேட்க 

“அது நம்ம சுப்பையா மாமா பொண்ணு அதே காலேஜ்ல தான் படிக்குறா அவள் தான் எடுத்து கொடுத்தா இவளும் அந்த ஆளும் ரொம்ப நெருங்கி பழகுவாங்களாம் நேரம் வரும் போது நமக்கு இது உதவும்” என்றாள். 

 

“இப்போ தான் டி நீ என் பொண்ணுன்னு நிரூபிச்சிருக்க இது ஒன்னு போதும் அவளை துரத்த” என்றார் வன்மத்துடன் அதன் பின் அனைவரும் பொங்கல் வைத்து முடிக்க மாலை ஆனது பொழுது சாயும் வேளையில் ஒவ்வொருவராக கிளம்ப ஆரம்பித்தனர். 

 

இறுதியாக கருப்பன் இளமதியை தனக்கு தெரிந்தவர்களுடன் அனுப்பி வைத்துவிட்டு ஊர் பெரியவர்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பி வந்தான் இரவு நேரம் அந்த காட்டுப்பாதையில்  வழியே நடந்து வந்து கொண்டு இருந்தவன் பின்னே ஒரு நால்வர் பின் தொடர்ந்தனர். 

 

முன்னே நடந்து சென்று கொண்டிருந்த கருப்பன் தன் பின்னே காய்ந்த சருகுகள் மிதி படும் சத்தத்திலேயே அறிந்து கொண்டான் தன் பின்னே யாரோ பின் தொடர்ந்து வருகிறார்கள் என்று தெரிந்து கொண்டான் இன்னும் பொறுமையாக கருப்பன் நடந்து சென்றவன் இருள் சூழ்ந்த ஒரு மரத்தின் அருகே செல்லும் போது காற்று பலமாக வீச ஆரம்பித்தது கருப்பன் அங்கே நின்று திரும்பியவன் சிங்கத்தை போன்று ஒரு பார்வை அவர்களை பார்க்க ஏற்கனவே வானம் இருட்டி இருக்க மழை தூர ஆரம்பித்தது. 

 

அந்த நால்வரும் அவனை சூழ்ந்து நின்று கொண்டனர் கருப்பன் அங்கிருந்த யாருக்கும் அஞ்சாமல் தன் வேட்டியை மடித்து கட்டியவன் முழுக்கை சட்டையை மடித்து விட்டு கொண்டு சண்டைக்கு தயாரானான். 

 

“யார்ரா நீங்க எல்லாம்” என்று கருப்பன் அவர்களை பார்த்து கேட்டுக் கொண்டே இருக்க “நாங்கெல்வாம் நாகராஜ் அண்ணா ஆளுங்க உன்னை கொன்னு புதைச்சுட்டு வர சொன்னாரு அண்ணன்” என்க கருப்பன் இன்னும் கோபத்துடன் அவர்களை பார்த்து முறைத்தான்.

 

“அந்த நாய் சொன்னுச்சுன்னு நீங்க எல்லாரும் என்னை கொல்ல வந்திங்களா உங்களை வெட்டி கல்லுப்பாறையில புதைக்குறதுக்குள்ள இங்கே இருந்து ஓடிப் போய்டுங்க” என்றான் கருப்பன் மீசையை முறுக்கி விட்டு கொண்டே கர்ஜனையான குரலில். 

 

அவனை பார்த்து பயந்து ஓடாமல் நால்வரும் அங்கேயே நிற்க அதில் ஒருவன் அருவாளுடன் கருப்பனை நெருங்கி வர 

கருப்பன் ராவணன் தன் எதிரிகளை வேட்டையாடுவதை போல சினத்தோடு அவன் அருகில் நெருங்கி அசால்ட்டாக அவனை தூக்கி தரையில் வேகமாக போட அவன் முதுகில் பலமாக அடி பட “அம்மா” என்று கத்தினான் மற்றவர்கள் கருப்பனை பார்த்து பயம் கொள்ள நரம்புகள் புடைக்க முகம் சிவக்க கோபத்துடன் நின்றிருந்தான். 

 

இரண்டாவதாக ஒருவன் கருப்பனை நெருங்கி வந்து அவன் மீது அருவாளை வீச போக அடுத்த நொடி கருப்பன் அவன் கையை பிடித்து வளைத்து அவன் முகத்தில் ஓங்கி குத்தினான் அவன் முகமே ரத்தமாக மாற மூன்றாவதாக இருந்தவன் பயந்து நடுங்க ஆரம்பித்தான். 

 

“அண்ணா எங்களை மன்னிச்சிடுங்க காசுக்காக ஏதோ தெரியாம வந்துட்டோம் 

பிள்ளைக் குட்டிக்காரன் அண்ணா நான் எங்களை மன்னிச்சி விட்டுருங்க” என்று அவன் காலை பிடித்து கெஞ்சிக் கொண்டு இருக்க கருப்பனின் பின்னே வந்த ஒருவன் தன் கையில் இருந்த பெரிய அரிவாளால் கருப்பனை வெட்ட பின்னிருந்து கையை ஓங்கி கொண்டு வர கருப்பன் திரும்பி பார்க்காமலேயே அவனின் கைப்பிடித்து தடுத்தவன் தன் காலை உதறிவிட்டு திரும்பி நின்று அவன் நெஞ்சில் ஓங்கி மிதித்தான் இன்னும் மூன்று பேரும் சேர்ந்து அவனை மீண்டும் தாக்க ஆரம்பித்தனர். 

 

கருப்பன் அவர்களுடன் சண்டையிட ஆரம்பித்தான் இறுதியாக அனைவரையும் அடித்து வீழ்த்த மூலைக்கு ஒருவராக விழுந்து கிடந்தனர் அவன் பலத்துக்கு அவர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை தடுமாறினர். 

 

கருப்பன் அங்கிருந்து இறுதியாக நடந்து போக அவனின் பின்னே ஒருவன் ஓடி வந்து அவன் முதுகில் வெட்ட வலியுடன் திரும்பிய கருப்பன் தன்னை காத்துக்கொள்ள அவன் கையில் இருந்த அருவாளை பிடுங்கி அவன் கழுத்தில் ஓங்கி வெட்டினான் அவன் கழுத்தில் வெட்டு ஆழமாக விழுந்து விட ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்து துடித்தவன் அதே இடத்தில் இறந்து போனான். 

 

அந்த நேரம் அங்கு வந்த நாகராஜன் 

“அடப்பாவி கொலையே பண்ணிட்டியா” என்று ஊரை கூட்ட அனைவரும் அங்கே ஓடி வந்தனர் கருப்பன் கையில் அருவாளுடன் நிற்க இறந்து போனவனின் மனைவி தன் பிள்ளைக்களோடு அங்கு ஓடி வந்து கதறி அழ ஆரம்பித்தாள். 

 

நாகராஜன் போலீஸ்க்கு போன் செய்திருக்க கருப்பனின் கையில் விலங்கு மாட்டி அழைத்து செல்ல நாகராஜன் அவன் அருகில் வந்தவன்

“பங்காளி எனக்கு தெரியாதா நீ எவ்வளவு பெரிய பலசாலின்னு இப்படி எதாவது ஒன்னு நடக்கும் எனக்கு முன்னாடியே தெரியும் இனி இந்த ஊருக்கு தலைவர்ன்னா அது நான் ஒருத்தன் மட்டும் தான்” என்றான் சிரிப்புடன். 

 

போலீஸ் அங்கே எஞ்சி இருந்த மூவரிடம் என்ன நடந்தது என்று விசாரிக்க “ஜாதி வெறியில இந்த ஊர் தலைவர் வெட்டி கொன்னுட்டான் சார்” என்றான் அழுது கொண்டே ஒருவன் 

அவர்கள் அனைவரையும் ஜீப்பில் ஏற்ற இறுதியாக கருப்பனும் ஏறினான். 

 

இளமதி அவளின் தாய் கருப்பனின் தாய் தந்தை பெரியப்பொண்ணு நந்தினி என்று அனைவரும் விஷயம் கேள்விப்பட்டு அங்கே ஓடி வந்திருந்தனர் கருப்பனுக்கு இளமதியை பார்க்கும் போது மிகவும் மனம் வலித்தது. 

 

ஜீப் அங்கிருந்து செல்ல “மாமா மாமா” என்று கத்தி அழுது கொண்டே அவளும் அவன் பின்னேயே ஓடினாள் ஒரு கட்டத்தில் ஓட முடியாமல் தவிப்புடன் நின்றவள் தன் மாமனை அழுத விழிகளுடன் பார்த்து கொண்டே நிற்க 

கண்கள் சரியாக தெரியாமல் அனைத்தும் மங்கலாக தெரிந்தது அப்படி மயங்கி கீழே சரிந்தாள். 

 

இதை தூரத்தில் இருந்து பார்த்த சின்னப்பொண்ணு அவள் அருகில் ஓட அனைவரும் அவள் அருகில் வந்தனர் தண்ணீர் தெளித்து இளமதியை எழுப்ப 

அவளும் மெல்ல கண்ணை திறந்தாள். 

 

அந்த ஊரில் இருக்கும் மருத்துவச்சி ஒருத்தி அவளின் கைப்பிடித்து பார்த்தார் 

“எல்லாம் நல்ல விஷயம் தான் நம்ம மதி உண்டாகி இருக்காள்” என்றார் அதை கேட்ட இளமதியின் முகம் மலர்ந்தது. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  •  

என் இனிய ராட்சஷனே 16

அத்தியாயம் 16

 

தனக்கு இது போன்று வெளியில் சந்திப்பது பிடிக்கவில்லை என்று இளமதிக்கு தன் மாமனிடம் கூறவும் முடியவில்லை அதை உள்ளேயும் வைத்து கொள்ளவும் முடியவில்லை அவனுக்காக தன் மனதில் தோன்றிய எதையும் வெளியே சொல்லாமல் உள்ளேயே வைத்து பூட்டி கொண்டாள். 

 

மறுநாள் காலை இளமதி வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுவிட கருப்பனும்  தன் வீட்டுக்கு சென்றான் அவன் வீட்டின் உள்ளே நுழைய மகனை வாசலிலேயே நிறுத்தி கேள்வி கேட்க ஆரம்பித்தார் சிவகாமி “எங்க டா போன ராத்திரியெல்லாம் ஏதோ பத்து லோடு மூட்டையை தூக்கி போட்டவன் மாதிரி களைச்சு போய் அசதியா வர” என்று கேட்க “மா நேத்து மில்லுல லோடு வந்துச்சு அதை இறக்கி வச்சுட்டு வந்தேன் அதான் அசதியா இருக்கு” என்றான். 

 

“ஏன் டா லோடு இறக்க தான் ஆளுங்க இருக்காங்கலே உனக்கு என்ன அப்படி ஒரு அசதி” என்று கேட்க “அம்மா சும்மா கேள்வி மேல கேள்வி கேட்க்காத எனக்கு தூக்கம் வருது வழியை விடு” என்றவன் உள்ளே சென்று தன் அறையில் படுத்து உறங்க ஆரம்பித்தான். 

 

சிவகாமி அவனை ஆச்சிரியமாக பார்த்து கொண்டே நின்றிருந்தார் 

எப்போதும் பகலில் உறங்காத தன் மகன் இன்று பகலில் உறங்குவதை பார்த்தவருக்கு ஆச்சரியமாக தான் இருந்தது கருப்பன் நேற்று இரவு முழுவதும் இளமதியுடன் இருந்ததால் அவன் நேற்று இரவு ஒரு நேரம் கூட கண் மூடவேயில்லை  அதனால் தான் பகலில் உறங்கி கொண்டு இருந்தான். 

 

அதே நேரம் கல்லூரியில் தன் வகுப்பறையில் அமர்ந்து இருந்த இளமதி பாடம் நடக்கும் வேளையில் பாடத்தை கவனியாமல் உறங்கி விழுந்து கொண்டே இருந்தாள் பாடம் நடத்தி கொண்டிருந்த பேராசிரியர் இதை பார்த்துவிட “இளமதி” என்று அந்த வகுப்பே அதிரும் படி கத்தினார். 

 

இளமதி அவர் கத்திய சத்தத்தில் அடித்து பிடித்து கொண்டு எழுந்து நின்றாள் அவள் “நான் என்ன டாப்பிக் எடுத்துட்டு இருக்கேன் சொல்லு” என்று அவர் தன் கையை கட்டிக் கொண்டு அவளிடம் கேள்விக் கேட்க அவளோ பதிலுக்கு ஒன்றும் தெரியாமல் திருதிருவென விழிக்க “நீயெல்லாம் எதுக்கு படிக்க வர உனக்கு படிக்க விருப்பம் இல்லைன்னா வீட்லயே இருந்துக்க வேண்டியது தான நீ தூங்கி வழிய இது என்ன உன் வீட்டு பெட் ரூமா இங்கே வந்து தூங்கி எதுக்கு ஒரு சீட்டை வெஸ்ட் பண்ற இடியட் வெளியே போ” என்று திட்ட வகுப்பில் இருந்த மாணவ மாணவிகள் அனைவரும் அவளை வேடிக்கை பார்க்க அவளுக்கு ஒரே அவமானமாக இருந்தது அழுது கொண்டே வெளியே ஓடினாள். 

 

அந்த வகுப்பு முடியும் வரை வெளியே தான் நின்றிருந்தாள் இளமதி அழுது கொண்டே நின்றிருக்க பேராசிரியர் வெளியே வந்தவர் “இளமதி என்னோட ரூம்க்கு வா” என்று கூறிவிட்டு சென்றார். 

 

இளமதியும் அவரின் பின்னே கண்களை துடைத்து கொண்டே வந்தவள் வாசலில் நின்று “எக்ஸ்கியூஸ் மீ மேம்” என்றாள்

“கம் இன்” என்றார் அந்த பேராசிரியர் 

அவளும் அவரின் முன்னே வந்து தலை குனிந்து நின்றாள். 

 

அவளை ஒரு முறை பார்த்தவர் “உனக்கு என்ன தான் ஆச்சு இளமதி நீ நல்லா படிக்கிற ஸ்டூடன்ட் கிளாஸ் டாப்பர் லாஸ்ட் செமஸ்ட்டருக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு பட் உன் கவனம் படிப்புல சுத்தமா இல்லை கிளாஸ்ல தூங்கி வழியுற இன்டர்ன்ல்ஸ் மார்க் கூட ரொம்ப லோவா இருக்கு இப்படியே போனா நீ கண்டிப்பா டிகிரி வாங்க மாட்ட உனக்கு என்ன பிராப்ளம்ன்னு என்கிட்ட சொல்லு” என்றார். 

 

இளமதி அவரிடம் எப்படி என்ன சொல்வது என்று தெரியாமல் தவிப்புடன் நின்றிருந்தாள் அவளின் கணவனுடன் இருந்த இந்த கொஞ்ச நாட்களில் தான் அவளால் படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை இரவு முழுவதும் அவனுடன் கழித்தவள் பகலில் தூங்கி வழிந்து கொண்டு இருந்தாள் அதை எப்படி அவரிடம் கூறுவது என்று தெரியாமல் தவித்தவள் “சாரி மேம் இனிமேல் இப்படி நடக்காது” என்றாள் அழுத விழிகளுடன். 

 

அவளை ஒரு முறை பார்த்த அந்த பேராசிரியர் “உனக்கு அப்பா இல்லை அம்மா மட்டும் தான முதல் நாள் இந்த காலேஜ்க்கு வந்து சேரும் போது உன் அம்மா என் கிட்ட வந்து பேசுனாங்க என் பொண்ணு ரொம்ப நல்லா படிக்கிற பொண்ணுன்னு சொன்னாங்க அதை சொல்லும் போது அவங்க கண்ணுல அப்படி ஒரு பெருமை அவங்களை ஏமார்த்திடாத போய் ஒழுங்கா படி” என்று அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தார். 

 

இளமதி அழுது கொண்டே வெளியே வந்தவளுக்கு தன் தாயின் நினைவு வந்தது அவர் அவமானப்பட்டு நின்ற நாட்கள் அனைத்தும் கண்ணில் வந்து போனது தன் தாய்க்காகவாது நன்றாக படிக்க வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டாள். 

 

அன்று வெள்ளிக்கிழமை என்பதால் அவளின் அறை தோழி ஊருக்கு கிளம்பி இருந்தாள் இதை முன் கூட்டியே இளமதி கருப்பனிடம் கூறியிருக்க அவனும் எப்போதும் போல இரவு பன்னிரெண்டு மணிக்கு அவள் அறையின் கதவை தட்டினான். 

 

இளமதி படித்து கொண்டு இருந்தவளுக்கு கதவை தட்டும் சத்தத்திலேயே தெரிந்து போனது அது தன் மாமன் தான் என்று புத்தகத்தை மூடி வைத்துவிட்டு வந்து கதவை திறந்தாள் அடுத்த கணம் அவளின் இடையில் கைக் கொடுத்து தன் கைகளில் தூக்கியவன் கதவை காலால் எட்டி உதைத்து மூடினான்.

 

இளமதி கன்னத்தில் முத்தமிட்டவன் “தங்கம் என்ன டி ரொம்ப நேரமா மாமனுக்காக காத்துக்கிட்டு இருந்தியா ” என்று கேட்க அவளோ பதிலுக்கு எந்த வித எதிர்வினையும் காட்டாமல் தன் இடையில் இருந்த அவன் கையை எடுத்து கொண்டாள். 

 

அவள் திடீரென தன்னிடமிருந்து விலக கருப்பனின் முகம் வாடியது “என்னாச்சு கண்ணு மாமா மேல கோவமா” என்று கேட்க இளமதி அவனிடம் எப்படி கூறுவது என்று தடுமாறியவள் “மாமா நான் படிக்கனும்” என்றாள். 

 

கருப்பன் அவளின் கைக்கொடுத்து மீண்டும் அவளை தன்னோடு சேர்த்தணைத்தவன் “இவ்வளோ தானா அப்புறமா படிக்கலாமே” என்று கூறிக் கொண்டே அவளின் இதழின் அருகில் நெருங்கி வர “மாமா நான் படிக்கனும் பிளீஸ் எனக்கு எக்ஸாம் இருக்கு” என்றாள். 

 

“நாளைக்கு படிச்சிக்கலாம் டி இன்னைக்கு ஒரு நாள் மட்டும் சரியா” என்று அவள் அருகில் அவன் நெருங்கி வர அவனை பிடித்து தள்ளினாள் இளமதி “மாமா நான் படிக்கனும் பிளீஸ் என் கிட்ட வராதிங்க” என்றாள் இளமதி அவனை தடுத்து நிறுத்தி. 

 

“சரி நீ படி நான் கிளம்புறேன்” என்றவனின் முகம் வாடிப் போனது அவன் அங்கிருந்து செல்லும் போது அவள் போகதே என்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. 

 

கருப்பன் அங்கிருந்து செல்வதை இளமதி மேலே இருந்து பார்த்து கொண்டு தான் இருந்தாள் அதன் பின் நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தன 

இளமதி அவன் கொடுத்த போனை ஸ்விட்ச் ஆப் செய்து வைத்துவிட்டாள் தன் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தாள் இறுதி தேர்வை நல்லபடியாக முடித்தாள் ஆனால் கருப்பன் அவள் இன்றி கவலைக் கொள்ள ஆரம்பித்தான். 

 

இளமதி இறுதி வருடத்தில் இருந்ததால் கல்லூரிக்கு வந்த கேம்ப்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகி மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை வாங்கி இருந்தாள். 

 

இந்த நிலையில் அவர்கள் ஊரின் இஷ்ட தெய்வமான முள்ளையூர் அம்மன் கோவில் திருவிழா நாளும் வந்தது

முழு கிராமமும் களைக்கட்டிது நாதஸ்வரம், தப்பாட்டம், மலர் தூவி பூஜைகள் நடந்தது ஊரில் அனைவரின் வீட்டிலும் சொந்த பந்தங்கள் வந்திருந்தனர் சப்பாத்தி, இடியாப்பம், கோழி குழம்பு வாசனை என்று ஊரே மணம் வீசியது காப்பு கட்டி முடிக்க சின்னப்பொண்ணுக்கு தன் மகளின் நினைவாக இருந்தது. 

 

இளமதியை ஊருக்கு வர சொல்லி சின்னப்பொண்ணு அழைக்க அவளும் வந்திருந்தாள் பஸ்சில் இருந்து இறங்கியவள் தெருவில் பையை எடுத்து கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தாள். 

 

அவள் வரும் வழியில் எதிரே நந்தினி தன் தங்கையுடன் ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தாள் இளமதியை பார்த்த நந்தினி கண்களாலேயே எரிப்பதை போல் பார்த்துவிட்டு முறைத்து கொண்டே செல்ல பதிலுக்கு அவளை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றாள். 

 

இளமதி வீட்டின் உள்ளே வர சின்னப்பொண்ணு அவள் கையில் இருந்த பையை வாங்கி கொண்டவர் “தங்கம் எப்படி இருக்க” என்று அவளை வாசலிலேயே வரவேற்றார் 

இளமதி பதிலுக்கு “ம்ம் நல்லாருக்கேன் மா” என்று சோர்வுடன் கூறியவளின் கண்கள் தன் மாமனை தான் முதலில் தேடியது அவன் எங்கே என்று கண்களால் வீடு முழுக்க தேட அவனோ அங்கே இல்லாமல் வயலில் வேலை பார்த்து கொண்டு இருந்தான். 

 

அப்போது சிவகாமி தன் அறையின் உள்ளே இருந்து வந்தார் “இந்தா டி நீ எப்போ வந்த” என்று அவள் அருகில் வந்து கேட்க. 

 

“இப்போ தான் பாட்டி வந்தேன்” என்றாள் பதிலுக்கு இளமதி “ஆஊன்னா கிளம்பி வந்துடுறியே உனக்கு காலேசுல படிக்குற வேலையே இல்லையா என் மவன் பின்னாடியே தான் அலையுவியா” என்று கேட்க “அம்மா என்ன பேசுற நீ” என்று சின்னப்பொண்ணு கோபத்துடன் கத்த “என்ன டி ரோஷம் பொத்துக்கிட்டு வருதோ நான் உண்மையை தான சொன்னேன் ஏற்கனவே ஊரே இவளை பார்த்து சிரிச்சது போதாது இன்னும் திருவிழாவுக்கு வேற இவள் வந்து இவளை பார்த்து சிரிக்கனுமா இவள் என்ன முறையாவா கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த வீட்டுக்கு வந்தா முறை கெட்டு வந்தவள் தான” என்று கேட்டார். 

 

இளமதிக்கு உடனே கோபம் வந்து விட

“இல்லையே பாட்டி மாமா முறையா தான என் கழுத்துல தாலி கட்டுனாரு நான் பண்ணுனது தப்புன்னா உங்க மகன் அன்னைக்கு என் கூட இருந்ததும் தப்பு தான” என்று கேள்வி கேட்டாள் முகத்தில் அடித்ததை போல. 

 

“இந்தா டி இந்த மாதிரியெல்லாம் பேசிக் கிட்டு இருந்த உன் காலை உடைச்சு அடுப்புல வச்சிருவேன் என் மகன் எந்த பொண்ணையும் ஏறெடுத்து பார்க்காதவன்” என்று சிவகாமி கோவப்பட சின்னப்பொண்ணு இளமதியை சமாதானம் செய்து அவருடன் அழைத்து சென்றார். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  •  

என் இனிய ராட்சஷனே 15

அத்தியாயம் 15

 

“மாமா என்னை விடுங்க” என்று அவன் கைகளில் இருந்து துள்ளி குதித்து கீழே இறங்கினாள் இளமதி அவள் துள்ளி குதிக்கும் போது அவளின் நைட்டியின் உள்ளே இருந்த இரட்டை முயல் குட்டிகளும் அவளுடன் சேர்ந்து நடனமாட அவன் கண்களை அவளிடமிருந்து விலக்கவே முடியவில்லை. 

 

“மாமா முதல்ல இங்கே இருந்து கிளம்புங்க” என்ற இளமதி அவன் பார்வை தன்னிடம் இல்லாமல் வேறு எங்கோ இருப்பதை கவனித்தவள் தன்னை கீழே குனிந்து பார்த்தாள் பதறி அடித்து கொண்டு உடனே தரையில் கிடந்த துப்பட்டாவை எடுத்து தன் மேலே போட போக கருப்பன் அவளை போட விடாமல் அவளின் இடையில் கைக் கொடுத்து தன்னோடு சேர்த்தணைத்தவன் “எதுக்கு டி இதெல்லாம் இதுவே நல்லா தான இருக்கு நல்லா கொழுக்குமொழுக்குன்னு” என்றவன் வெண்ணை கட்டிகளை பார்த்து கொண்டே துப்பட்டாவை தூக்கி எறிந்தான். 

 

“மாமா இதெல்லாம் ரொம்ப தப்பு அந்த குண்டு வார்டனுக்கு தெரிஞ்சா என்னை கொன்னுடுவாங்க” என்றாள் பயத்துடன் 

“என் பொண்டாட்டியை எவள் டி கேள்விக் கேட்ப்பா மாமா பார்த்துக்குறேன் டி தங்கம்” என்று அவளின் பின் மேட்டில் கை வைத்து அழுத்தமாக பிடித்து கொண்டே கூற. 

 

“மாமா எனக்கு பயமா இருக்கு போங்க இங்கிருந்து முதல்ல” என்றாள் சினுங்கலுடன் “போகனுமா டி” என்று ஏக்கம் சுமந்த விழிகளுடன் கேட்டவனின் கை அவளின் கொங்கைகளில் ஒன்றை ஆடை மேலேயே அழுத்தி பிடித்து கொண்டே கேட்டது அவன் செயலில் இளமதி முகம் சிவந்து தடுமாற மீண்டும் “போகனுமா டி” என்று அவளின் காது மடலை பற்களால் கல்வி மீசை முடியால் உரசிக் கொண்டே கேட்டான் கருப்பன். 

 

 “ம்ம்ம்” என்றாள் சுகமான அவஸ்தையுடன் “நல்லா பெருசா மெது மெதுன்னு இருக்கு டி ரெண்டு கையால தான் புடிக்கனும் போல” என்றவன் இரண்டு கையாலும் அந்த தண்ணீர் பந்துகளை பிடித்து அழுத்த “ம்ம்ம் அ..ய்..யோ மா..மா” என்று துடித்தாள். 

 

அவன் கைகள் இன்னும் இன்னும் அழுத்தி கொண்டே “மதி என்னால நீ இல்லாம அங்கே தனியா இருக்க முடியலை டி” என்று கூறிக் கொண்டே அவளை வெறும் தரையில் கிடத்தினான் ஆடை மேலேயே நுனி மொட்டை விரலால் பிடித்து நசுக்கி கொண்டே. 

 

“இன்னைக்கு ஒரு படம் பார்த்தேன் அதுல இருந்து உன் நினைப்பு தான் டி” என்றான் அவள் மேலே இருந்து கொண்டே நுனி மொட்டை கையால் பிடித்து அழுத்தி கொண்டே இளமதி அவன் செயலில் துடித்து கொண்டே “ம்ம்ஆஆ என்ன படம் மாமா” என்று கேட்க அவள் காதில் அவன் ஏதோ கூற அவன் பச்சை பச்சையாக பேசிய வார்த்தையை கேட்டு “அய்யோ ச்சீ” என்று முகம் சுழித்தாள் மதி. 

 

“என்ன டி ச்சீ அதெல்லாம் இன்னைக்கு முயற்சி பண்ணி பார்ப்போம்” என்றான்

“ச்சீ நான் மாட்டேன் பா” என்றாள் இளமதி உதட்டை சுழித்து கொண்டே 

அவள் உதட்டை சுழிக்கும் போது அவளின் தடித்த கீழ் உதட்டை பார்த்தவன் அப்படியே தன் இதழால் கல்வி கொண்டான். 

 

“ம்ம்ம்” என்று அவள் முனக முழு முரடாக மாறி முத்தமிட ஆரம்பித்தான் முத்தமே அத்தனை இனிப்பாக இருக்க கழுத்து வளைவில் முகம் புதைத்தான் அங்கிருந்து வந்த அவளின் வியர்வை மணத்துடன் சேர்ந்து வந்த அவளுக்கே உண்டான நறுமணத்தையும் முகர்ந்தான் 

கழுத்தில் பல் தடம் பதியும் அளவுக்கு கடித்து வைக்க

“மாமா வலிக்குது” என்று துடித்தாள் இளமதி. 

 

மீண்டும் அங்கே முத்தமிட்டு அவளின் வலியை தீர்த்து வைத்தவன் அவனுக்கு இடையூறு செய்த நைட்டியை கை வைத்து பிடித்து இழுக்க அவளோ “வேண்டாம் மாமா நைட்டி கிழிஞ்சிரும்” என்று கத்த அந்த நைட்டி பரிதாபமாக அவன் கைகளின் பலத்தால் கிழிந்து போனது உள்ளே எதுவும் ஆடை இல்லாதது அவனுக்கு குஷியாகி விட

“உள்ளே எதுவும் போடலையா டி” என்று கேட்டுக் கொண்டே அவளின் நாபியில் முத்தமிட “ம்ஹிம் நைட்ல கசகசன்னு இருக்கு” என்றவள் கண்களை மூடி இதழ் கடித்து. 

 

அவளின் தொப்புளில் முத்தமிட்டு கொண்டே மீசை முடியால் உரியவன் இன்னும் கீழே சென்று அவளின் பெண்மையில் முகம் புதைக்க அவளுக்கு தூக்கி வாரிப்போட்டது 

“மாமா வேண்டாம்” என்று கத்திக் கொண்டே காலை சேர்த்து வைக்க போக 

அவனோ விடா காண்டனாக அவளின் பெண்மையில் முகம் புதைத்து மீசை முடியால் தேய்த்து எச்சில் முத்தமிட்டான். 

 

“ம்ம்ம்மாஆஆ மாமா வேண்டாம்” என்று அவள் துடித்து கொண்டே அவன் தலைமுடியை பிடித்து கொள்ள 

அவனோ தன் நாவால் அங்கிருந்த சிறிய முல்லை மொட்டின் உள்ளே மேலும் கீழுமாக கோடிழுத்தான் அங்கே பாலும் தேனும் வெளியே வர நாவால் வட்ட மடித்து இன்னும் வேகமாக உறிஞ்சி இழுத்தான் அவளோ “ம்ம்மாஆஆஆ” என்று கீழ் உதட்டை கடித்துக் கொண்டே அவனுடன் ஒத்துழைக்க. 

 

இன்னும் இன்னும் அங்கிருந்த விலகாமல் தன் நாவால் வருடி இதழால் கவ்வி உறிஞ்சி பற்களால் கடித்து வைத்து என அவளை முகம் சிவக்க வைத்தான் அவனின் ஒவ்வொரு தீண்டலுக்கும் இளமதி “ஸ்ஸ்ஸ்ஆஆஆ வேண்டாம்” என்று துடித்து கொண்டிருந்தாள். 

 

அவள் வாய் வேண்டாம் என்று கூறினாலும் அவள் கைகள் இன்னும் அவன் தலை முடியை பிடித்து அங்கேயே அழுத்தியது கருப்பன் மீண்டும் மேலே வர இளமதி மூச்சு வாங்க முகமெல்லாம் ரத்த நிறத்தில் சிவந்து கண்களை மூடிக் கிடந்தாள். 

 

அவள் காது மடலை கவ்வியவன் “ஏய் அந்த படத்துல பண்ணுன மாதிரி பண்ணலாமா டி” என்று கேட்க 

“நான் மாட்டேன்” என்றாள் அவள் பதிலுக்கு “சரி நான் கிளம்புறேன்” என்று அவன் எழுந்து கிளம்ப போக இளமதி தன் மேலே நைட்டியை எடுத்து மறைத்து கொண்டவள் அவன் கையை பிடித்து கொண்டாள். 

 

அவன் முகம் பார்க்காமல் வெட்கத்துடன் “மாமா லைட் ஆஃப் பண்ணுங்க கூச்சமா இருக்கு” என்க அவனும் சிரித்து உல்லாசத்துடன் நடந்து சென்று விளக்கை அணைத்து விட்டு தன் ஆடைகளை கலைந்தான் இருட்டில் அவள் எங்கே என்று தேட “ஏய் எங்கே டி இருக்க” என்று கேட்க “இங்கே தான் இருக்கேன் மாமா” என்று சத்தம் மட்டும் வந்தது இருள் அவனுக்கு ஒரளவு பழகி விட கதவின் பின்னே ஒளிந்து நின்றவளை கைப்பிடித்து இழுத்தான். 

 

அவளை வேகமாக படுக்கையில் குப்பற கிடத்தியவன் தானும் அவளின் பின்னே விழுந்து அம்பை குறி பார்த்து ஏய்த “ம்ம்ம்ஆஆஆ” என்று வலியில் துடிக்க ஆரம்பித்தாள் அவள் முன்னே கை நுழைத்து அவளின் கொங்கைகளை பிடித்து இரு கைக்கொண்டு அழுத்தி பிடித்து கசக்கி கொண்டே “ஸ்ஸ்ஆஆ இன்னும் கொஞ்ச நேரம் தான் டி” என்று அவனும் முனகினான். 

 

முதலில் அவளுக்கு வலிக்குமே என்று பொறுமையாக இயங்கியவன் நேரம் செல்ல முழு முரடனாக மாற அவளோ கத்தி கதறி துடிக்க ஆரம்பித்தாள் “அவ்ளோ தான் டி இன்னும் கொஞ்ச நேரம்” என்று கெஞ்சி கொஞ்சி அவளுள் முழுதாக ஆட்சி செய்ய அவளின் பெண்மை பொங்கி வழிந்து கதற ஆரம்பித்தது. 

 

அப்போதும் அவளை விடாமல் முழுதாக அவளுள் தன் தேவை முடிந்த பின்  மன்மத ஊற்றை முழுதாக அவளுள் கொட்டி முடிக்க இருவருக்கும் வியர்த்து வடிய ஆரம்பித்தது சோர்ந்து போய் படுக்கையில் விழுந்தவன் அவளையும் தன்னுடன் சேர்த்தணைத்து கொண்டான். 

 

அடுத்து வந்த நாட்களில் இளமதியின் அறை தோழிக்கு அம்மை போட்டு இருந்ததால் அவள் வரவில்லை அவளுக்கு பதிலாக இரவு 12 மணி ஆனால் அவளின் மாமன் அவளுக்கு துணையாக வந்துவிடுவான் தினமும் 

வரும் போது வெறுங்கையுடன் இல்லாமல் பூவுடன் வந்துவிடுவான்

புதிதாக திருமணம் ஆனவர்கள் தங்களின் ஒவ்வொரு நாளையும் ரசித்து வாழ ஆரம்பித்தனர். 

 

இளமதி இரவெல்லாம் தன் கணவனுடன் கூடி கழித்து விட்டு காலை எழுந்தவுடன் சோர்வாக இருக்க கல்லூரியில் தன் வகுப்புக்கு சென்றவுடன் தூங்கி வழிந்து கொண்டு இருந்தாள் மதிய இடைவெளியில் சாப்பிட கூட செல்லாமல் படுத்து உறங்கி கொண்டு இருந்தாள். 

 

கருப்பன் இப்போதெல்லாம் நந்தினியை கண்டுகொள்வதே இல்லை தன் வாழ்க்கையை ஒவ்வொரு நொடியும் ரசித்து வாழ ஆரம்பித்தான் மனதாலும் உடலாலும் இளமதியை நேசிக்க ஆரம்பித்தான் நாட்கள் அதன் போக்கில் செல்ல ஒரு வாரத்துக்கு பின் இளமதியின் அறை தோழி வந்துவிட இருவரும் சந்திக்க முடியவில்லை. 

 

ஒரே ஒரு நாள் அவளை பார்க்காததே அவன் மனதில் அப்படி ஒரு வலியை கொடுக்க அவளை தேடி கல்லூரிக்கே சென்றான். 

 

மதிய இடைவெளியில் அவளுக்காக காத்திருக்க அவளும் வந்தாள் தன் மாமனை பார்த்தவுடன் அவளின் கண்கள் கலங்கியது அவன் அருகில் ஓடிச் செல்ல அவனோ எந்த வித உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் நின்றிருந்தான். 

 

இளமதி முகத்தை தூக்கி வைத்து அழுது கொண்டே காரில் ஏறிக் கொள்ள கார் நேராக சென்று பிரபல ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றின் வாசலில் நின்றது. 

 

அவள் ஒன்றும் புரியாமல் அமர்ந்திருக்க “மதி கீழே இறங்கு” என்றான் கருப்பன் அவளும் கீழே இறங்க அவளின் கைப்பிடித்து அழைத்து கொண்டு ஒரு அறைக்குள் சென்றான் 

இளமதி அவனுடன் உள்ளே வந்தவள் ஒன்றும் புரியாமல் பார்க்க கருப்பன் கதவை தாழிட்டுவிட்டு அவள் அருகில் வந்து இறுக அணைத்து கொண்டவன் அவளின் இதழை கவ்வி முத்தமிட ஆரம்பித்தான். 

 

மதி அவனிடமிருந்து வலுக்கட்டாயமாக தன் இதழை பிரித்து எடுத்தவள் 

“போங்க என் கிட்ட வராதிங்க” என்றாள்

“என்ன டி” என்று அவன் கேட்க

“ஒரு நாள் முழுக்க உங்களை பார்க்கலை உங்களுக்கு கஷ்டமாவேயில்லையா” என்று கேட்டாள். 

 

கருப்பன் அவளின் இடையில் கைக் கொடுத்து தன் அருகில் இழுத்தவன் 

“கஷ்டமா இருந்ததால தான் உன்னை இங்கே கூட்டிட்டு வந்தேன் நீயில்லாம நான் மட்டும் எப்படி நிம்மதியா இருப்பேன்” என்றான். 

 

அவன் பேசிக்கொண்டே அவளின் மேலே இருந்த துப்பட்டாவை கழட்டி இருக்க இளமதி அப்போது தான் கவனித்தாள் ‘அட கள்ளா’ என்று மனதில் நினைத்தாள். 

 

அதன் பின் எங்கே அவளை பேசவிட்டான் அனைத்தும் முடிந்த பின் விலகி படுக்க “மாமா இப்படி ரூம் போட்டு நாம ஒன்னா இருக்குறது உங்களுக்கு தப்பா படலையா நான் உங்க பொண்டாட்டி எதுக்கு ஒளிஞ்சி மறைஞ்சி இந்த மாதிரி இருக்கனும்” என்றாள். 

 

கருப்பன் அவள் புறம் திரும்பி படுத்தவன் “இப்போதைக்கு வீட்ல இருக்க சூழ்நிலை சரியில்லை பெரிய அக்கா என் கிட்ட பேசுறதே இல்லை எல்லாம் சரி ஆன பிறகு நீ வீட்டுக்கு வந்துரு டி” என்றான் ஆனால் இளமதிக்கு ஏனோ இப்படி இருக்க பிடிக்கவேயில்லை. 

 

 

 

 

 

 

 

  •  

என் இனிய ராட்சஷனே 14

அத்தியாயம் 14

 

கருப்பன் விசிலடித்துக் கொண்டே துள்ளலுடன் வீட்டின் உள்ளே வர அங்கே அவனுக்கு முன்பு வந்து அவனின் பெரிய அக்காவும் அவரின் மகள் நந்தினியும் காத்துக் கொண்டு இருந்தனர். 

 

கருப்பனின் துள்ளல் நடை உடனே தடைப்பட்டு நின்று போனது ஒரு கணம் அப்படியே தயங்கி எப்போதும் போல் நடந்து வந்து சோபாவில் பெரியப்பொண்ணுவின் முன் வந்து அமர்ந்தான் “என்ன அக்கா திடீர்னு வீட்டுக்கு வந்துருக்க எதாவது முக்கியமான விஷயமா” என்று கேட்க்கும் போதே சின்னப்பொண்ணு அங்கே காபியுடன் வந்தார். 

 

அவர் டேபிளில் காபியை வைத்து விட்டு போக பெரியப்பொண்ணு அவரை பார்த்து முறைத்து கொண்டே மீண்டும் பேச ஆரம்பித்தார் “ஏன் டா தம்பி எதாவது விஷயம் இருந்தா தான் நானும் என் மகளும் இந்த வீட்டுக்கு வரனுமா இது எனக்கும் தான் அம்மா வீடு இங்க இருக்கவங்களுக்கு மட்டும் இல்லை” என்றார் கோபத்துடன்.

 

“அய்யோ அப்படி இல்லை அக்கா சொல்லாம கொல்லாம வந்திருக்கியே அதனால தான் கேட்டேன்” என்றான் பதிலுக்கு தனிவாக கருப்பன். 

 

“உனக்கு தெரியாதது ஒன்னுமே இல்லை டா தம்பி நந்தினி உன் மேல உயிரையே வச்சிருக்கா” என்றார் தயக்கத்துடன் கருப்பன் நந்தினியை ஏறெடுத்து பார்க்க அவள் தலை குனிந்து அப்பாவியை போல் அமர்ந்து இருந்தாள்.

 

“அவளுக்கு நீ இல்லாமல் அன்னம் தண்ணீ இறங்க மாட்டேங்குது தனியா இருந்தா உன் நினைப்புல எதாவது பண்ணிக்கிவாளோன்னு பயமா இருக்கு டா” என்று கூறும் போதே அவரின் கண்கள் கலங்கியது கண்ணீரை புடவை முந்தானையில் துடைத்து கொண்டு மூக்கை உறிஞ்சிக் கொண்டே மீண்டும் பேச ஆரம்பித்தார். 

 

இப்போது கருப்பனின் கையை கெட்டியாக பிடித்து கொண்டார் பெரியப்பொண்ணு அவனோ ஒன்றும் புரியாமல் அவரை பார்க்க 

“அதனால தான் தம்பி உன்னை பார்த்து பேசிட்டு போலாம்ன்னு வந்தேன் நீயே நம்ம நந்தினியை ரெண்டாம் தாரமா கட்டிக்கயேன் நம்ம ஊர்ல ரெண்டு பொண்டாட்டி கட்டுறது ஒன்னும் பெரிய விஷயம் கிடையாதே” என்று கூறி முடிக்க தீச்சுட்டார் போல அவர் கையில் இருந்த தன் கையை உதறினான் கருப்பன். 

 

சமயலறையில் இருந்த சின்னப்பொண்ணுவின் காதிலும் இது விழுந்தது ஒரு கணம் தூக்கி வாரிப்போட்டது தன் மகளின் வாழ்க்கை இனி என்ன ஆகுமோ என்று நினைத்து கண்ணீர் விட ஆரம்பித்தார். 

 

அப்போது “அக்கா முதல்ல என் வீட்டை விட்டு வெளியே போ” கருப்பனின் கர்ஜனையான கோப குரல் சமயலறையை வந்தடைந்தது சின்னப்பொண்ணு உடனே வெளியே ஓடி வந்து பார்த்தார். 

 

பெரியப்பொண்ணு “என்ன டா தம்பி இப்படி சொல்ற” என்று அவனை பார்த்து அதிர்வுடன் கேட்க “அக்கா இந்த மாதிரி நினைப்போட வரன்னா இனி இந்த வீட்டு பக்கமே வராத என்னால ரெண்டு பொண்ணுங்களோட வாழ்க்கையை வீணாக்க முடியாது” என்றான். 

 

பெரியப்பொண்ணு உடனே கண்ணீர் விட ஆரம்பித்தார் “அப்போ இத்தனை நாளா என் மகள் மேல பாசமா இருக்க மாதிரி நடிச்சியா” என்று கேட்க 

“அக்கா எனக்கு இப்பவும் நந்தினி மேல பாசம் இல்லாம இல்லை நானே அவளுக்கு ஒரு நல்ல பையனா பார்த்து கட்டி வைக்கிறேன் கொஞ்சம் பொறுமையா இரு” என்றான். 

 

“நீங்க மாப்பிள்ளை பார்த்து கட்டி வைப்பிங்கன்னு தான் நாங்க எங்க பிள்ளையை வச்சுக்கிட்டு இருக்கோமா போ டா நீ இல்லைன்னா என் பொண்ணுக்கு கல்யாணமே நடக்காது பாரு, இந்த ஊரே மெச்சுர அளவுக்கு ஜாம் ஜாம்ன்னு நான் கல்யாணம் பண்ணி வைப்பேன் 

தம்பியாச்சே உறவு விட்டு போக கூடாதுன்னு நினைச்சா உனக்கு அந்த கீழக்குடிக்காரி தான் அவ்வளவு முக்கியமா போய்ட்டால்ல” என்றார் கோபத்துடனே. 

 

“அக்கா இன்னொரு தடவை அவளை கீழ்க்குடிக்காரின்னு சொன்ன நான் மனுசனாவே இருக்க மாட்டேன் அவள் என் பொஞ்சாதி இந்த கருப்பனோட பொண்டாட்டி” என்றான் அவனும் ரோஷத்துடன் பதிலுக்கு சற்றும கோபம் குறையாமல். 

 

“ஓஹோ அந்த அளவுக்கு ஆகிப் போச்சா 

இந்தா வந்து நிக்குறாளே ஒன்னும் தெரியாத அப்பாவி மாதிரி இவள் சமத்து எல்லாம் எனக்கு ஆகாது பா கல்யாணத்துக்கு முன்னாடியே பொண்ணை கூட்டி கொடுத்துட்டு இந்த சொத்தை எல்லாத்தையும் வளைச்சி போட்டுட்டா நமக்கு அந்த சாமர்த்தியம் எல்லாம் வராது மா” என்று சின்னப்பொண்ணை பார்த்து கொண்டே கூற. 

 

அவர் பேச்சில் சின்னப்பொண்ணை அழுதேவிட்டார் “அக்கா என்ன இவ்வளவு மோசமா பேசுறிங்க” என்று கண்ணீருடன் சின்னப்பொண்ணு கேட்க 

“என்ன டி ரோஷமா உன் புத்தி தான உன் மகளுக்கும் வரும் நம்ம அப்பா அம்மாவை அசிங்கப்படுத்தி ஊரை விட்டு ஓடிப்போனவள் தான டி நீ நல்லா ஆடுறிங்க டி நாடகம்” என்று அவரை மேலும் கீழும் பார்த்துக் கொண்டே கூற. 

 

“அக்கா நீ வெளியே போ” என்று மீண்டும் கத்தினான் கருப்பன் அந்த வீடே அதிரும் படி அவன் கண்களில் அத்தனை கோபம் “டேய் தம்பி” என்று பேரதிர்ச்சியுடன் பெரியப்பொண்ணு அவனை பார்க்க “உன்னை வெளியே போன்னு சொன்னேன்” என்றான். 

 

பெரியப்பொண்ணு அழுது கொண்டே நிற்க “அம்மா வா போலாம்” என்று நந்தினி அவரின் கைப்பிடித்து இழுத்தவள் கருப்பனை முறைத்துக் கொண்டே விறுவிறுவென அங்கிருந்து தன் தாயை அழைத்துக் கொண்டு சென்றாள். 

 

இவர்கள் இருவரும் தன் வீட்டில் இருந்து வெளியே வருவதை வழியில் பார்த்த சிவகாமி “நந்தினி மா எப்போ வந்த” என்று அவளிடம் கேட்க அவள் அவரிடம் எதுவும் பேசாமல் முகத்தை திருப்பி கொண்டு சென்றாள். 

 

சிவகாமி வீட்டின் உள்ளே வந்தவர் கருப்பனிடம் “டேய் உங்க அக்காவை என்ன டா சொன்ன அழுதுட்டே போறா” என்று கேட்க “அக்காவை நான் எதுவும் சொல்லலை மா அவங்க தான் என் கிட்ட தப்பா பேசிட்டு போறாங்க” என்றவன் நடந்த அனைத்தையும் கூற. 

 

“அவள் சொன்னதுல என்ன தப்பு இருக்கு” என்று அவனிடம் கேட்க 

“என்ன மா நீயும் இந்த மாதிரி பேசுற” என்று அவன் கேட்க. 

 

“ஆமாம் டா என் பேத்தி வாழ வேண்டிய இடத்துல இன்னொருத்தி வந்து வாழுறாளே” என்றார் ஆதங்கத்துடன்

“அம்மா அப்போ இளமதி யாரு” என்று அவன் கேள்வி கேட்க “அவள் என் பேத்தி இல்லை” என்றார் கொஞ்சம் கூட யோசியாமல் அதைக் கேட்ட சின்னப்பொண்ணு மனம் தாங்க முடியாமல் அழுது கொண்டே உள்ளே சென்றுவிட்டார். 

 

கருப்பனும் அதற்க்கு மேல் அவரிடம் பேசி எந்த பயனும் இல்லை என்று நினைத்தவன் அங்கிருக்க பிடிக்காமல் வெளியே சென்றுவிட்டான் 

அவனின் மனம் வலித்தாலும் தான் செய்த தவறுக்கு தன் அக்கா காயப்படுவதை அவனால் தாங்கி கொள்ள முடியவில்லை அதனால் தான் தன் பெரிய அக்காவிடம் அவ்வாறு நடந்து கொண்டான். 

 

நந்தினி வீட்டுக்கு வந்தவுடன் தன் தாயை முதல் வேலையாக திட்ட ஆரம்பித்தாள் “அம்மா உனக்கு கொஞ்சம் கூடவா அசிங்கமா இல்லை அங்க போய் அந்த ஆளு கிட்ட கெஞ்சிட்டு இருக்கியே” என்றாள். 

 

“ஆமாம் டி இவன் இப்படி மாறுவான்னு நான் கனவுல கூட நினைக்கல” என்று பெரியப்பொண்ணு கண்ணீர் விட 

“அம்மா நீ அழாத நமக்கான நேரம் வரும் அன்னைக்கு அவங்களை கவனிச்சிக்கலாம்” என்று வன்மத்துடன் அவரிடம் கூறினாள் நந்தினி இருப்பினும் பெரியப்பொண்ணு அழுவதை நிறுத்தவேயில்லை. 

 

கருப்பனுக்கு மனதில் அவன் அக்காவை காயப்படுத்தியது அவன் தாயின் பேச்சு மிகவும் வலிக்க செய்ய மனம் தாங்க முடியாமல் வழமை மாறாமல் குடிக்க சென்றான் 

குடித்துவிட்டு வந்தவனுக்கு அப்போதும் அவனின் மனதின் ரணம் ஆறாமல் வலிக்க இரவு தன் அறையின் உள்ளே சென்று படுக்கையில் விழுந்தான். 

 

அவன் போதையில் படுத்திருக்க அவன் அலைப்பேசி ஒலித்தது அதை எடுத்து திரையில் யார் என்று பார்க்க பொண்டாட்டி என்று பக்கத்தில் அழகிய ஹார்ட் வேறு இருந்தது இளமதி தான் அழைத்திருந்தாள்.

 

அதை பார்த்துவிட்டு அழைப்பை எடுக்காமல் படுக்கையில் உருண்டு புரண்டு கொண்டு இருந்தான் மீண்டும் மீண்டும் அழைப்பை வர கோபத்துடன் அழைப்பை எடுத்தவன் காதில் வைக்க “ஹலோ மாமா” என்று இளமதி அழைக்க

“ஒரு தடவை எடுக்கலைன்னா விட மாட்டியா சும்மா சும்மா தொல்லை பண்ணிக்கிட்டு” என்று மறுமுனையில் இருந்து அவன் எரிந்து விழ அவள் அழுது கொண்டே அழைப்பை துண்டித்தாள்.

 

‘ஏதோ நைட் போன் பண்றேன்னு சொன்னாரு போன் பண்ணினா இப்படி எரிஞ்சு விழறாரு’ என்று மனதில் நினைத்தவள் கோபத்துடன் படுத்து கொண்டாள் ஆனால் அவளும் உறங்கவில்லை. 

 

கருப்பனுக்கு இன்று உறக்கமே வரவேயில்லை சிறிது நேரம் அலைபேசியில் எதையாவது பார்க்கலாம் என்று தள்ளிக் கொண்டு இருக்க அவன் நண்பர்கள் அடங்கிய பக்தி வாட்சாப் குரூப்பில் ஏதோ ஒரு வீடியோ வந்திருக்க தெரியாமல் அதை எடுத்து பார்த்துவிட்டான் அதை பார்த்த பின் அதற்க்கு முன் அவன் மனதில் இருந்த அனைத்து கோபங்களும் இறங்கி முழுதாக இளமதி நினைவு ஒன்று மட்டுமே இருந்தது. 

 

அவளை நினைத்து கொண்டே அவளுக்கு அழைக்க அவள் அழைப்பை எடுக்கவில்லை இரண்டு முறை அழைத்தும் அவள் எடுக்கவில்லை என்றவுடன் போதையில் தன் புல்லட்டை எடுத்துக் கொண்டு அவள் விடுதிக்கே சென்றுவிட்டான். 

 

பின்பக்கம் இருந்த வனத்தில் வண்டியை நிறுத்தி விட்டு நடந்து வந்து காம்பெளவுன்ட் சுவர் வழியாக உள்ளே குதித்தான் வெளியே வேறு இடியும் மின்னலுமாக இருந்தது செக்யூரிட்டி உறங்கி கொண்டு இருக்க சத்தமில்லாமல் அவனை கடந்து சென்றான். 

 

ஹாஸ்ட்டல் உள்ளே வந்தவன் இளமதி அறை எங்கு இருக்கிறது என்று தெரியாமல் அவளுக்கு அழைக்க இந்த முறை அவள் எடுத்துவிட்டாள். 

 

“உன் ஹாஸ்ட்டல் ரூம் நம்பர் என்ன” என்று அவன் கேட்க 

“எதுக்காக கேட்க்குறிங்க” என்றாள் அவள் பதிலுக்கு “சொல்லு டி” என்று அவன் கத்த அவளும் நம்பரை கூறினாள் சரியாக அந்த அறையின் வாசலில் சென்று நின்றவன் கதவை தட்ட. 

 

இளமதி போனில் “மாமா இருங்க யாரோ கதவை தட்டுறாங்க வரேன்” என்று கதவை திறக்க அங்கே தன் முன்னே நின்றிருந்த தன் மாமனை பார்த்து விழி விரித்து நின்றுவிட்டாள். 

 

அவளின் அறை தோழி உடல்நிலை சரியில்லாமல் ஊருக்கு சென்றிருக்க அறையில் அவள் மட்டுமே தனியாக இருந்தாள் வெளியே யாரோ வரும் அரவம் கேட்க அவனின் கைப்பிடித்து உள்ளே இழுத்து கதவடைத்தாள் சரியாக அந்த நேரம் மின்சாரமும் துண்டானது “மாமா எதுக்காக இங்கே வந்திங்க” என்று அவன் அருகில் வந்து அவள் சத்தமில்லாமல் கேட்க அடுத்த நொடி அவளை தன் கைகளில் தூக்கி சென்றான். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  •  

என் இனிய ராட்சஷனே 13

அத்தியாயம் 13

 

இளமதி அவன் கையை பிடித்து தடுக்க அசால்ட்டாக அவளின் கையை தட்டிவிட்டவன் அவளின் ஒத்துழைப்பில் இன்னும் தைரியம் வந்தவனாய் கைகளை தாராளமாக உள்ளே நுழைத்தான். 

 

அவள் அவன் அருகில் அத்தனை நெருக்கத்தில் இருக்கும் போது அவள் உடலில் இருந்து வந்த சந்தன மணம் அவனை இன்னும் உசுப்பேற்றியது கைகள் அவளின் வெற்றிடையை அழுத்தி பிடித்து கசக்கி விட அவன் பிடியில் பெண்ணவள் நெளிந்து கொண்டே இருக்க மற்றொரு கையால் அவளின் இடையை வளைத்து தன்னோடு நெருக்கினான். 

 

இன்னுமே அவனுக்கு சரியாக வசதி பத்தமால் போக பின்னிருக்கையில் அவளை தூக்கி சென்று கிடத்தியவன் அவள் மீது படர போக “மாமா என்ன பண்ணுறீங்க யாராவது வர போறாங்க” என்று அவள் கத்த “சும்மா இரு டி மனுஷன் அவஸ்தை புரியாம” என்று பல நாள் கூடி கழித்த மனைவியுடன் கூறுவதை போல் தடலாடியாக கூறிக் கொண்டே அவள் மீது படர்ந்தான்.

 

அவனுக்கு இடைஞ்சல் கொடுத்து டி ஷர்ட்டை கழட்டி எறிய போக “மாமா வேண்டாம் யாராவது வர போறாங்க” என்று அவள் தவிக்க 

“ம்ம்ச்ப்” என்று உச்சு கொட்டியவன் கழுத்து வளைவில் முகம் புதைத்தான் தன் மீசை முடியால் உரசி குட்டி குட்டி முத்தங்கள் இட்டான். 

 

அவன் கைகள் அவளின் ஆடை மேலேயே ஊர்ந்து சென்று குவிந்த தாமரை மொட்டுகளில் ஒன்றை பிடித்து கசக்கி விட “ம்ம்ம் மா..மா..” என்று திணற ஆரம்பித்தாள். 

 

அவள் டி ஷர்ட்டை கழட்டி விடாமல் பிடிவாதமாக பிடித்து வைத்து கொள்ள மேலாடையின் உள்ளே அதிரடியாக தன் தலையை நுழைத்தவன் இடைஞ்சல் செய்த உள்ளாடையின் ஊக்கையும் பின்னே கை நுழைத்து கழட்டினான் அவளின் மார்பின் மத்தியில் முகம் புதைத்து அங்கிருந்த பன்னீர் துளிகளை நா கொண்டு வருடினான் இளமதி இதழ் கடித்து தன் தவிப்பை அடக்கியவள் இடம் பொருள் ஏவல் மறந்து காலை அவனின் இடையை சுற்றி போட்டு தன் தவிப்பை அடக்க அவனை தன்னோடு இன்னும் சேர்த்தணைத்து கொண்டாள் அவளின் பெண்மை அவன் செயலில் பொங்கி வழிய தடுமாற ஆரம்பித்தாள். 

 

அந்த நேரம் சரியாக கருப்பனின் மொபைல் ஒலித்தது அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கருமமே கண்ணாக அவளுள் முழுதாக தொலைந்து போக அவன் நினைக்க 

முழுதாக ரீங் வந்து அழைப்பு துண்டிக்கப்பட்டு மீண்டும் மொபைல் ஒலித்தது கருப்பன் எழுந்து முன் இருக்கையில் இருந்த மொபைலை எடுக்க தீலிப் தான் அழைத்திருந்தான் அதை எடுத்து காதில் வைக்க. 

 

இளமதி பதட்டத்துடன் எழுந்த அமர்ந்தவள் யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பயத்தில் தன் உடையை அவசர அவசரமாக சரி செய்து கொண்டு இருந்தாள் போனில் அவனுடன் பேசிக் கொண்டு இருந்தாலும் கண்கள் இளமதியை தான் பார்த்தது அவளின் ஒவ்வொரு செயலையும் கண்களாலேயே படம் பிடித்து கொண்டு இருந்தான் அவளின் முகச்சிவப்பையும் சேர்த்து ரசித்து கொண்டு இருந்தான் இத்தனை அழகும் தனக்கு தான் என்று நினைத்தவனுக்கு தன்னை அறியாமல் உள்ளம் துள்ளாட்டம் போட்டது. 

 

போனில் மறுமுனையில் இருந்த தீலிப் “ஹலோ மச்சான் இருக்கியா” என்று கத்திக் கொண்டே இருக்க கருப்பன் சுயநினைவுக்கு வந்து “சொல்லு டா” என்க “மச்சான் கிளம்பிட்டியா” என்று கேட்டான். 

 

“ம்ம் கிளம்ப போறேன்” என்றான் அவளை மையலுடன் பார்த்து கொண்டே 

“மச்சான் ஒரு ஹெல்ப் டா எங்க இரண்டு பேரையும் பஸ் ஸ்டாப்ல டிராப் பண்ணிடு டா இங்கே ஆட்டோ எதுவும் கிடைக்கல நீ எங்கே இருக்க” என்று கேட்டான் தீலிப். 

 

“இங்கே தான் இருக்கேன் வரேன்” என்றவன் அழைப்பை துண்டித்தான்

“நான் இப்போ கிளம்பனும் தீலிப் வெளியே காத்துட்டு இருக்கான்” என்று தயங்கி கொண்டே கூற 

“அப்போ நீங்க எனக்காக வரலையா” என்று அவள் முகத்தை திருப்பி கெண்டு கோபித்துக் கொள்ள 

“இன்னொரு நாள் கண்டிப்பா வரேன் 

என் செல்லம்ல வெள்ளக்கட்டில்ல அவளின் கன்னத்தை பிடித்து கொஞ்ச” அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. 

 

வீட்டில் இருந்தால் நாலு வார்த்தைக்கு மேல் பேசாதவன் இன்று இவ்வளவு பேசுவது அவளுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது “சரி கிளம்புங்க” என்றாள்

கருப்பன் அவளை விட்டு பிரிய மனமே இல்லாமல் அவளை தன்னோடு சேர்த்தணைக்க அவனின் மொபைல் மீண்டும் ஒலித்தது “ இவன் ஒருத்தன் மனுசனை நிம்மதியா இருக்க விடாம” என்று வாய்விட்டு புலம்பியவன்

 “சரி நான் கிளம்புறேன்” என்று அவளை வெளியே இறக்கிவிட்டு அங்கிருந்து தன் காரில் சென்றான். 

 

மதி அவனுக்கு கையை காட்டிக் கொண்டே ஏக்கம் சுமந்து விழிகளுடன் அவனை பிரியவே மனம் இல்லாமல் பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள் கருப்பனும் அவளை கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டே புது பொண்டாட்டியை விட்டு பிரிய மனம் வலித்தாலும் வேறு வழியில்லாமல் அங்கிருந்து சென்றான். 

 

மறுநாளும் கருப்பனுக்கு அவளின் நினைப்பில் வேலையே ஓடவில்லை 

இங்கே இளமதியும் பாடத்தில் கவனம் இல்லாமல் தன் மாமன் நினைவிலேயே உண்ணாமல் உறங்காமல் இருந்தாள். 

 

கருப்பன் இது சரிப்பட்டு வராது என்று நினைத்தவன் அவளுக்கு போன் வாங்க சென்றான். 

 

மதியிடம் மொபைல் இல்லாததால் அவனால் அவளிடம் பேசக் கூட முடியவில்லை அவள் கல்லூரியில் முதல் நாள் சேரும் போது இவன் மொபைல் வாங்கி தர கேட்க சிவகாமி உடனே “எதுக்கு இவளும் அவங்க ஆத்தாக்காரி மாதிரி எவன் கூடயாவது பேசி ஓடிப்போக வா” என்று கேட்க இளமதி “எனக்கு போனே வேண்டாம்” என்று கோபத்தில் கூறிவிட்டாள் அதன் பின் அவனும் வாங்கி தரவில்லை.

 

இப்போது அவளை எப்படி தொடர்பு கொள்வது என்று தெரியாமல் தவித்த கருப்பன் அன்றே ஒரு மொபைல் கடைக்கு சென்று இளமதிக்கு ஒரு மொபைலை வாங்கி கொண்டு அவளின் கல்லூரிக்கு சென்றான். 

 

மதிய வேளையில் அனைவரும் சாப்பிட செல்ல அவளுக்காக கல்லூரி வளாகத்தில் காத்திருந்தான் காலம் போன காலத்தில் காதல் கத்திரிக்காய் எல்லாம் தேவையா என்று அவன் மனம் கேள்வி எழுப்பினாலும் அவன் அதையெல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை புதிதாக காதலிக்கும் காதலனை போல் தன்னவளுக்காக காத்துக் கொண்டு இருந்தான். 

 

 இளமதி தன் தோழியிடம் ஏதோ பேசிக் கொண்டே வந்தவள் அங்கே மரத்தடியில் தனக்காக காத்திருக்கும் தன் மாமனை பார்த்து வெட்கம் பிடுங்கி தின்றது உடனே அவன் அருகில் செல்லாமல் அவனை தூரத்தில் இருந்தே ஒளிந்து கொண்டு அவன் செயல்களை பார்த்து ரசிக்க ஆரம்பித்தாள். 

 

மரத்தடியில் அங்கே வந்து கொண்டு இருக்கும் பெண்களில் தன்னவள் எங்கே இருக்கிறாள் என்று அவன் கண்கள் தேடிக் கொண்டு இருந்தது கையில் இருந்த பிளாஸ்டிக் கவரில் ஏதோ ஒரு பொருளை வைத்து கொண்டே நின்றிருந்தான். 

 

ஆறடிக்கு சற்று அதிகப்படியான உயரம் தான் உயரத்துக்கு ஏற்ற உடல்வாகு கம்பீரமான தோற்றத்துடன் எப்போதும் அணியும் அதே வெள்ளை நிற வேட்டி சட்டை தான் அணிந்து இருந்தான் வலது கையில் தங்க காப்பு இடது கையில் சில்வர் நிற கைக்கடிகாரம் அவன் அகன்று விரிந்த மார்பு மேலே இரண்டு பட்டன்கள் போடாததால் நன்றாகவே காற்று வாங்கி கொண்டிருந்தது அதில் மீன் போன்ற டாலருடன் கூடிய தங்க செயின் அணிந்து இருந்தான் இருவரும் ஒன்றாக தனிமையில் இருக்கும் போது அவன் அசைவுகளுக்கு ஏற்ப அவள் முகத்தில் மோதிக் கொண்டு இருக்கும் அதே செயின், காற்றில் அலை அலையான கேசம் பறந்து கொண்டு இருக்க ஆங்காங்கே நரை முடிகளும் இருந்தது அதுவும் அத்தனை அழகாக தான் இருந்தது. 

 

அங்கிருந்த அனைத்து மாணவ மாணவிகளும் சென்ற பின் தன்னவளை தேடி அவள் வராததால் அவன் முகம் சோர்ந்து போனது 

அவள் இல்லை என்று திரும்பி செல்ல அவன் முன் ஓடிச்சென்று மூச்சிறைக்க நின்றாள் இளமதி. 

 

அவளை பார்த்த அடுத்த நொடி தலைவன் அவனின் முகம் மலர்ந்தது அத்தனை மகிழ்ச்சி அவன் முகத்தில் 

அவன் முன் ஓடி வந்ததில் மூச்சு வாங்கி கொண்டு நின்றிருந்தாள் இளமதி. 

 

“எதுக்கு கண்ணு இப்படி ஓடி வர” என்று கேட்டவனின் கண்கள் அவள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஏறி இறங்கிய திமறி தெரிந்த அவளின் கொங்கைகளுக்கு சென்றது அவன் பேச்சுக்கும் பார்வைக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது மதி உடனே தன் துப்பட்டாவை சரி செய்ய அவன் பார்வையை அங்கிருந்து அவள் முகத்துக்கு கொண்டு வந்தான். 

 

“இந்தா கண்ணு உனக்கு போன் வாங்கிட்டு வந்தேன்” என்று அவள் கையில் கொடுக்க மதி அதை தன் கையில் வாங்கியவள் “இப்போ எதுக்கு மாமா எனக்கு போன்” என்று கேட்டாலும் கவரில் இருந்த போனை அவள் கைகள் பிரித்து பார்த்தது. 

 

“எதுக்குன்னு உனக்கு தெரியாதா இத்தனை நாள் எப்படி இருந்தேன்னு தெரியலை இப்போலாம் ஒரு ராவு கூட நீ இல்லாம கடத்த முடியலை எப்பவும் அதே நினைப்பா தான் இருக்கு” என்று அவள் அருகில் வந்து ஹஸ்கி குரலில் அவளுக்கும் மட்டுமே கேட்க்கும் படி கூற

“ச்சீ போங்க நீங்க ரொம்ப மோசம்” என்றவள் தலைகுனிந்து நிற்க

 “ராவுல உன் நினைப்பு வரும் போது போன் பண்றேன் பேசு வெள்ளிகிழமை சாய்ந்திரம் ரெடியா இரு உன்னை வந்து கூட்டிட்டு போறேன்” என்றான். 

 

“எங்கே” என்று அவள் கேட்க

“ம்ம் தேன்நிலவுக்கு” என்றான் அவளை பார்த்து கண்ணடித்து இவனுக்கு இவ்வளவு தெரியுமா என்று தோன்றியது அவளுக்கு எப்போதும் விரைப்பாக ஊரில் சுற்றுபவன் இவ்வளவு ரொமான்டிக் பாயாக இருப்பான் என்று அவள் கனவில் கூட நினைக்கவில்லை. 

 

“ராத்திரி மாமா போன் பண்றேன் எடு” என்று கூறியவன் தன் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து அவளிடம் கொடுக்க “எதுக்கு” என்று அவள் கேட்க 

“இந்த ஒரு வாரத்துல சாப்பிட்டு உடம்பை தேத்தி வை என்னை தாங்கனும்ல்ல உடம்புல வலு வேண்டாம் எனக்கு நிறைய ஆசை இருக்கு எனக்கு இணையா ஈடு கொடுக்கனும்ல்ல” என்று அவன் கூற. 

 

“அய்யோ எப்போ பாரு இதை பத்தி மட்டும் தான் பேசுவிங்களா” என்று அவள் வெட்கம் மற்றும் சற்று கோபமும் கலந்த குரலில் கேட்க 

“ம்ம் பொண்டாட்டி கிட்ட வேற எதை பத்தி பேசுவாங்க முப்பது வருஷமா பிரம்மச்சாரியாவே இருந்துட்டேன் பிள்ளை குட்டின்னு இனிமேவாது ஜாலியா இருக்க வேண்டாமா” என்றான். 

 

அவன் பேச்சில் மெய் மறந்து அவனை வைத்த கண் வாங்காமல் அவள் பார்க்க “போ போய் சாப்பிடு மாமனை சைட் அடிக்காம” என்று கூறிவிட்டு அவளை பார்த்துக் கொண்டே அங்கிருந்து கிளம்பினான். 

 

 

 

 

 

 

  •