வைரவேல் பட்டி என்ற ஊரில் உள்ள, பெரிய குடும்பத்தில் உள்ள நான்கு தலைமுறை உறவுகளை மையமாக வைத்து புனையப் பட்ட குடும்ப நாவல்.
கதையின் ஆரம்பம் முதலே முருகன் ஆட்சி தான். முருகன் துதிகளும், மலையும், கோவிலும் கதையூடே பயணிக்கின்றன.
கதையின் ஆரம்பமே, ஆரவள்ளி, ஆடை வடிவமைப்பாளராக, மும்பை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதில் தொடங்குகிறது.
அவள் தாத்தா செந்தில்நாதனும், அவரை பெற்ற வடிவாம்பாளும் அவள் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக உள்ளனர்.
வார இறுதியில் தேனியில் அமைந்த ஒரு ரிசார்டில் மித்ரன் தேன்மல்லி வரவேற்பு, நண்பன் கண்ணன் மேற்பார்வையில், சொக்கநாதனின் அலப்பறையோடு வெகு விமர்சையாக நடந்தது. பூவரசன் குடும்பத்தைத் தவிர, அறிந்தவர், தெரிந்தவர், நட்பு, உறவு தொழில்துறை நண்பர்கள், தொழிலாளர்கள் என அனைவரையும் அழைத்திருந்தனர்.
தேன்மல்லி, அழகுநிலையப் பெண்களின் கைங்கரியத்தில், ப்ரீ ஸ்டைலில் சிகை அலங்காரம் செய்து, நீல வண்ண லஹங்காவில் பொருத்தமான அணிகலன்களோடு, கோட் சூட்டில் மிடுக்காக நின்ற மித்ரன்...
அரசுவுக்கு இந்திரன் குடில் முன்பு நிற்பதே பெரும் அவஸ்தையாக இருந்தது. அவரின் அம்மாவும், மகனும் வெற்றிகரமாகச் சீரைக் கொடுத்துவிட்டு வர, சென்றவர்களுக்கு மனதார நன்றி தெரிவித்து, மகளோடு டெலிபதியில் பேசியபடிக் கிளம்பி இருந்தார்.
மயிலாடும் பாறை தேன்மல்லி இல்லத்தில் முல்லைப் பதட்டத்தோடு கூடத்தை நடையால் அளந்து கொண்டிருந்தார். மாமியார் பேத்தியாளுக்குச் சீரை சேர்த்துவிட்டோம் எனவும் நிம்மதி.
புகழேந்திக்கு இரவே உறவினர் ஒருவர் மூலம் மித்ரன், தேன்மல்லி திருமண புகைப்படம் சென்றிருக்க, காலையில் தான் பார்த்தார். மித்ரன் பேண்ட் சட்டையில் இருக்க, அருகில் தேன் மல்லி மணப்பெண் அலங்காரத்திலிருந்தாள். மருமகனைத் தெரிந்தவருக்கு, அருகிலிருக்கும் பெண் யாரெனத் தெரியவில்லை. ஆனாலும் அதிர்ச்சி. யாரும் வேண்டுமென்று விளையாடுகிறார்களோ என நினைத்தவர் தங்கையிடம் கேட்காமல் சுரேந்திரனுக்கு அனுப்பி விவரம் கேட்டார்.
இந்திரன் குடில் முதலில் அதிர்ந்தாலும், பின் சுதாரித்து, கமலத்தின் ஆணைப்படி பாரதி ஆலம் சுற்றித் தேன் மல்லியை மருமகளாக உள்ளே அழைத்துக் கொண்டார். சொக்கனும், மீனாட்சியும் மணமக்களோடு மூத்த ஜோடியாக வந்து வீட்டின் கடினமானச் சூழலை இலகுவாக்க முயன்றனர்.
“பெரியம்மா, தேனு விளக்கேத்தனுமுல்ல, உங்கப் பூஜை ரூம் எங்க இருக்கு.” என அழைத்துச் சென்று, சேகரன் இல்லத்தில் தன் அத்தைமார் சொல்லச் சொல்லத் தான் செய்த முறைகளைத் தேன்மல்லியையும் செய்ய வைத்தாள்.
முல்லை, நாகேந்திரன், சுரேந்திரன், பவளமல்லி ஆகியோரின் ஒன்றுவிட்ட சின்னம்மா மகள். சிற்றன்னைக் கொடுமையால் அவதிப் பட்டவளை பூங்காவனம் அழைத்து வந்து தன் மகள் போல் வளர்த்தார். பூவரசன், புகழேந்தி இருவருமே நாகேந்திரனின் நண்பர்கள்.
புகழேந்தி கொஞ்சம் பந்தாவாக இருப்பார், பூவரசன் இயல்பாகப் பழக, பெண் பிள்ளைகள் இருவருக்குமே பூவரசன் மீது நாட்டம்.
மல்லியும், அரசும் ஒருவரை ஒருவர் விரும்ப, வீட்டினர் சம்மதமும் இருந்தது. அரசுப் பொருளாதார ரீதியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப் போராடிக் கொண்டிருக்க...
தேன் மல்லிக்கு நடந்ததுக் கனவா, நினைவா எனப் பிரித்து அறிய முடியாத நிலை. ‘ரெஸ்ட் ரூம் தேடிப் போனேன், வழி மாறிப் போனேன். அவன் இருந்தான், அதட்டினான், அணைத்தான், அய்யோ சாமி என்ன பார்வை, பெரியக் காதல் மன்னன். சிடுமூஞ்சிக்கு அது ஒன்னு தான் குறைச்சல். கிஸ் பண்ணானோ அப்புறம் என்ன என்னமோச் சொன்னானே…’ வழி நெடுக யோசித்தும், நடந்தது மெய்யா, பொய்யா வகைப் பிரித்து அறிய முடியாமல், அவள் கண் விழிக்கும் போது, “மேடம் மயங்கிட்டிங்க” என பெண்கள் ஸ்பா பக்கம் படுக்க...
மயிலாடும் பாறை ஊரின் ஆரம்பத்திலேயே தோட்டத்துக்கு நடுவே பழமையும், புதுமையும் கலந்து கம்பீரமாக நின்றது தேனம்மாவின் பிறந்த வீடு. நூறு வருடம் வாழ்ந்தாரும் இல்லை, தாழ்ந்தாரும் இல்லை என்ற மொழி மனிதர்களுக்கு மட்டுமின்றி வீட்டுக்கும் பொருந்தும்.
தேனம்மாவின் முன்னோர், ஜமீனுக்கு கணக்குப்பிள்ளையாக வேலைப் பார்த்துச் சீரும் சிறப்புமாக இருந்தவர்கள். தலைமுறை கடந்து குந்தி திண்ண குன்றும் மாளும் என மிஞ்சியது இந்த வீடு மட்டுமே. அவர் கணவர் வீட்டோடு மாப்பிள்ளையாக வந்தவர்...
தேன் மல்லி பண்ணையில் ஆட்கள் ரோட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர், உள்ளடங்கி வேலை பார்த்ததால் யாருக்கும் கார் கீச்சிட்டு நின்ற சத்தம் கேட்கவில்லை, அதிக வண்டி போக்குவரத்து இல்லாத சாலை, வேறு யாருக்கும் இதைப் பற்றித் தெரியவும் இல்லை.
மதிய இடைவேளையில் வீட்டுக்கு வந்த அரசு, மகள் இன்னும் வரவில்லை என்று சொல்லவும், தோட்டத்துக்கு விரைந்தார். மகளின் வண்டி ரோட்டில் சமத்தாக நிற்க, பண்ணைக்குள் சென்றுப் பார்த்தார்.
மதிய உணவு இடைவேளை, பெற்றவர் இருவரும் சாப்பிடாமல் இருக்க, தம்பியை அழைத்துக் கொண்டு எதிரே இருக்கும் கடைக்குச் சென்றாள் தேன்மல்லி. இரண்டு பார்சல்கள், பழரசம் நான்கு ஆர்டர் செய்ய, இந்தர் ஒரு ஐஸ் ஸ்டிக் தூக்கினான். அது உருகும் முன் சாப்பிடும் ஆர்வத்தில், ”பில் பே பண்ணிட்டு வா அக்கா, நான் முன்னாடிப் போறேன்” பார்சல்களை தூக்கிக் கொண்டு உள்ளே ஓடி இருக்க, இரண்டு பழரசத்தையும், சில்லறையை வாங்கிக் கொண்டு தேன் மல்லி உள்ளே வந்தாள்.