Reading view

அது இது எது – Crime Novel

அந்த நள்ளிரவு வேளையில் சோகையாக இயங்கிக்கொண்டிருந்த கெட் வெல் ஹாஸ்பிடலின் அமைதியை குலைக்கும் வகையில் ஒரு கார் வந்து நிற்க, அதிலிருந்து இறங்கிய ஒரு தம்பதி(ஜானகிராமன்- கனகம்) தங்களுடைய மகள் சூடாமணியை ஸ்ட்ரெச்சரில் வைத்தனர்.

அவசரமாக ஸ்ட்ரெச்சரைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்ற ஜானகிராமனும், கனகமும் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு டியூட்டி டாக்டர் மகேந்திரனை அணுகினர். பாத்ரூமில் வழுக்கி விழுந்த சூடாமணியின் தலையில் டாக்டர் பெரிய பேண்டேஜ் கட்டைப் போட்டார்.

சூடாமணியின் நிலையை உணர்ந்த டாக்டர் உடனடியாக சீஃப் டாக்டர் வராகசாமியை அழைக்கிறார். தூக்கம் கெட்ட கண்களுடன் வந்த வராகசாமி கோமா நிலைக்குச் சென்றுவிட்ட அந்தப் பெண்ணைப் பார்த்தார்.

கதறி அழுத இருவரையும் சமாதானப்படுத்திவிட்டு, பிளட் டெஸ்ட் ரிப்போர்ட்டை பார்க்க செல்கிறார் டாக்டர். ரிப்போர்டைப் பார்த்த அவர் அதிர்ந்து போனார்.

காரணம் சூடாமணியின் ரத்தத்தில் காட்மைன் எனும் போதைப் பொருள் கலந்திருக்க, அடுத்த திடுக்கிடும் தகவலாக சூடாமணியின் பெற்றோர் காணாமல் போயினர்.

அதே சமயம்..

தன்னுடைய இரண்டு தங்கைகளான ஹேமா & ஜமுனாவை கல்லூரிக்கு அனுப்பிவிட்டு, அப்பா ரங்கநாதனிடம் சொல்லிவிட்டு இன்டர்வியூவிற்குக் கிளம்பினாள் குமுதா. நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தவளுக்கு, ரெயின் ட்ராப் கம்பெனி மூலமாக வேலை கிடைக்கும் வாய்ப்பு இருந்தது.

இன்டர்வியூ லைனில் காத்திருந்த அவளை, அந்தக் கம்பெனியைச் சேர்ந்த ஆள் வந்து டைரக்டர் சங்கர் பாபுவின் அறைக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே பதற்றத்துடன் அமர்ந்திருந்த சங்கர் பாபுவைப் பார்த்தாள் குமுதா.

நேரடியாகவே விசயத்திற்கு வந்த சங்கர் பாபு, யார் அந்த மெகாபோன் மைக்கேல் என்று கேட்டு, உன்னிடம் இருக்கும் என்னைப் பற்றிய வில்லங்கமான ஆதாரம் என்ன..? என்று கேட்கிறார்.

அதே புன்னகை முகத்துடன் தன் கையில் வைத்திருந்த போனில் வீடியோ ஆப்ஷனைத் தட்டி, அவர் முன் நீட்டுகிறாள் குமுதா. அதில் கையில் துப்பாக்கியுடன் இருந்த சங்கர் பாபு ஒருவனை சுடும் வீடியோ பதிவாகியிருக்க..அதிர்ந்தார் அவர்.

பணத்தைக் கொடுத்து பேரம் பேச முடிவு செய்த சங்கரை நிறுத்திய குமுதா, தனக்கு பணம் வேண்டாம் எனக் கூறி இந்தக் கம்பெனியில் வேலை தான் வேண்டும் என்கிறாள். மேலும் நீங்கள் நியாயமாக இருந்தால் என்றைக்கும் வீடியோ ஆதாரம் போலீஸ் கைக்கு போகாது என்று கூறுகிறாள்.

ஒரு வழியாக சங்கரை மிரட்டி வேலையை வாங்கிய குமுதா, ஒரு மாதத்தைக் கடந்த நிலையில் வீட்டிற்குச் செல்ல இருந்த அவளுக்கு ஒரு பார்சலில் கேசட் வந்து சேர்கிறது. கேசட்டைப் போட்டுப் பார்த்த குமுதா அதிர்ந்து போகிறாள்.

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கட்டிலில் மயங்கிய நிலையில் கிடக்கிறாள் அவளின் தங்கை ஹேமா. இதற்கு காரணம் சங்கர் என்பதை அறிந்த அவள் அவனை மிரட்ட, பதிலுக்கு அந்த கொலை வீடீயோவைக் கேட்டு அவன் மிரட்டுகிறான்.

தங்கை ஹேமாவின் மானத்தைக் காப்பாற்ற வீடியோ ஆதாரங்களை குமுதா ஒப்படைத்தாளா..? கொலை நடந்த வீடீயோவை எடுத்தது யார்..? சூடாமணி யார்..? விலையுயர்ந்த போதை மருந்து அவள் ரத்தத்தில் இருந்ததன் பின்னணி என்ன..? சூடாமணியின் பெற்றோர் எங்கே..?

want to buy : https://amzn.in/d/awe6P28

  •  

தேடினாலும் கிடைக்காது – Crime Novel

(இந்தக் கதை நடக்கும் காலக்கட்டம் (1980’s) என்பதால் சில விஷயங்கள் இந்தக் காலக்கட்டத்திற்குப் பொருந்தாததாக இருக்கலாம்.)

யோகேஷும் நீரஜாவும் புதுமணத் தம்பதிகள். இருவரும் தங்கள் ட்ரிப்பை முடித்துவிட்டு, நீலகிரியின் ரிச்சி ரிசார்ட்டிலிருந்து கிளம்பியபோது நேரம் மதியத்தைத் தாண்டியிருந்தது. அன்றைக்கு பனி மூட்டம் அதிகமாக இருந்ததால், யோகேஷ் காரை ஜாக்கிரதையாக கையாண்டான்.

நீரஜா காரில் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு வர, திடீரென காரை சடன் பிரேக் அடித்து நிறுத்தினான் யோகேஷ். பார்த்தால் அங்கே லிப்ட் கேட்டு நின்றிருந்தான் யோகேஷின் கல்லூரி கால நண்பன் சேதுபதி. காரில் அவனை ஏற்றிக்கொண்டு பழைய நினைவுகளை அசைபோட்டபடி மூவரும் பயணத்தை தொடர்கின்றனர். ஆனால் எதிர்பாராத விதமாக கொஞ்ச நேரத்திலேயே காரின் டயர் பஞ்சர் ஆகிறது.

வானம் இருட்டிக்கொண்டு வர, மூவரும் செய்வதறியாமல் திகைத்து நிற்க, சேதுபதி தான்  மெக்கானிக்கை அழைத்து வருவதாகச் சொல்லிச் செல்கிறான். இதற்கிடையே தங்களுக்காக காத்திருக்கும் அப்பா கேசவ்விடம், டயர் பஞ்சர் விஷயத்தை போனில் சொல்லச் சொல்லி நீரஜா கூற, போன் நம்பரை வாங்கிச் செல்கிறான் சேது.

ஆனால் கதையின் திருப்புமுனையாக, கேசவ்விற்கு போன் செய்த சேது, யோகேஷையும் நீரஜாவையும் தான் கடத்தி உள்ளதாகக் கூறுகிறான். மேலும்  பணம் 5 லட்ச ரூபாயை யாருக்கும் தெரியாமல், அவன் சொல்லும் இடத்தில் கொண்டு வந்து வைக்காவிட்டால், அன்று இரவே இருவரையும் கொன்று விடுவதாகவும் மர்ம நபரைப் போல பேசி மிரட்டுகிறான்.

கேசவ்விற்கு பேசிவிட்டு அடுத்ததாக தன்னுடைய நண்பன் கதிரவனுக்கு போன் செய்த சேது, திட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு அவனைத் தயார் படுத்துகிறான். நீண்ட நேரம் ஆகியும் தன்னுடைய மகளும், மருமகனும் வந்து சேராததால் ஏற்கனவே அயர்ந்து போயிருந்த கேசவ், பணத்தை சேது சொன்ன இடத்தில் வைக்கிறார்.

அடுத்ததாக மெக்கானிக் உடன் திரும்பிய சேது, காரை சரி செய்த பிறகு, மூவரும் இரவு ஹோட்டலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்கிறான். அடுத்த நாள் காலையில் யோகேஷும் நீரஜாவும் வீட்டிற்குச் சென்ற பிறகு, மர்ம நபர் மிரட்டிய விஷயம் இருவருக்கும் தெரியவர, கேசவ் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து போலீஸ் நண்பனை உதவிக்கு அழைக்கிறார்.

இன்ஸ்பெக்டர் தனபால் உடனே கேசவ் வீட்டிற்கு வந்து, நடந்த அனைத்து விஷயங்களையும் கேட்ட பிறகு, விசாரணையைத் தொடங்குகிறார். முதலில் கேசவ்வின் ஆபீஸில் இருந்து விசாரணையைத் தொடங்க, அங்கே பெரிய பதவியில் இருந்த பத்மநாபன் மேல் போலீசின் சந்தேகப்புள்ளி விழுகிறது.

காரணம், திடீரென 15 நாட்கள் முறையாக விண்ணப்பிக்காமல் லீவ் எடுத்தது தான். ஆனால் வெகு சீக்கிரமே கேஸின் கோணம் மாற, போலீஸின் பார்வை சேதுபதியின் மேல் விழுகிறது. ஒரு வழியாக சேதுவின் வீட்டை போலீஸ் அடைந்த போலீசிற்கு காத்திருந்தது அதிர்ச்சி சம்பவம்.

அங்கே பூட்டப்பட்டிருந்த வீட்டில், சேதுபதி இறந்து கிடந்தான். சேதுபதியின் நண்பர்களை லிஸ்ட் எடுத்து போலீஸ் விசாரிக்க ஆரம்பிக்க…

தப்பானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனரா..? சேதுபதியைக் கொலை செய்தது யார்..? யோகேஷ்-நீரஜாவை வைத்து சேதுபதி மிரட்டியது எதற்கு..? கேசவ் வைத்த பணத்தை எடுத்துச் சென்ற சேதுவின் நண்பன் கதிரவனின் திட்டம் என்ன..?

உங்களை மிரட்ட வரும் தேடினாலும் கிடைக்காது..!

want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=387

  •  

மறக்காதே மன்னிக்காதே – Crime Novel

கம்பெனி நஷ்டத்தில் ஓடியதை மறைத்து, வினயாவைத் தனக்கு திருமணம் செய்து வைத்த மாமனாரைப் பழி வாங்க முடிவெடுக்கிறான் விஷ்வா. பணக்கார பெண்ணான அருணாவைக் காதலித்துக் கொண்டிருந்த விஷ்வா, மனைவி வினயாவைக் கொலை செய்யத் திட்டம் தீட்டுகிறான்.

ஆரம்பத்தில் இருந்தே வினயாவை வெறுத்துக் கொண்டிருந்த விஷ்வாவின் அம்மா இந்திராதேவியும் இந்தத் திட்டத்திற்கு உடந்தையாக இருக்கிறாள். மேலும் வினயாவின் கொலையைத் தற்கொலையாக காட்டுவதற்கான சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறான் விஷ்வா.

அதை செயல்படுத்தும் நோக்கத்தில் ஷெரினாவை மும்பையில் இருந்து வரவழைக்கிறாள் அருணா. ஷெரினா – கொலையைத் திட்டம் போட்டு பிசிறில்லாமல் செய்து முடிப்பவள்.

இதற்கிடையில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் தன்னுடைய அப்பாவைப் பார்க்க பெங்களூர் செல்கிறாள் வினயா. வினயா பயணிக்கும் அதே ரயிலில் சென்று அவளின் கதையை முடிக்க முடிவு செய்கிறாள் ஷெரினா. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக, வினயா சென்ற ரயிலில் பாம் வெடித்து ரயில் விபத்துக்கு உள்ளாகிறது.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வினயாவை, ஹாஸ்பிடலில் இருந்து கடத்தி தன்னுடைய கெஸ்ட் ஹவுசில் அடைத்து வைக்கிறாள் அருணா. அன்றிரவு வினயாவின் கதையை முடிக்க அருணா முடிவு செய்கிறாள். ஆனால் திடீர் திருப்பமாக பணக்காரர்களின் கருப்பு பணத்தைக் கண்டுபிடிக்க எல்லோருடைய கெஸ்ட் ஹவுஸையும் போலீஸ் சோதனையிட்டு வருகிறது.

இதற்கிடையில் ஒரு பெண்ணின் இறந்த உடல் பீச்சில் கிடப்பதாகப்  போலீசிற்குத் தகவல் கிடைக்கிறது. அருணாவின் கெஸ்ட் ஹவுஸைப் போலீஸ் சோதனையிடச் செல்ல, பயத்துடன் உடன் செல்கிறாள் அவள். ஆனால் அவள் சந்தோசப்படும் விதமாக வினயா அங்கே இல்லை.

கெஸ்ட் ஹவுசின் கதவு பூட்டிய நிலையில் இருக்க..வினயா எங்கே..? பீச்சில் இறந்து கிடந்த பெண் யார்..? வினயா இவர்களிடம் இருந்து தப்பிப்பாளா..? விஷ்வா-அருணாவின் திருமணம் நடந்ததா..?

அடுத்தடுத்த திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகரும் மறக்காதே மன்னிக்காதே..!

  •  

கற்கண்டு ஆயுதம் – Crime Novel

மேகாவும் செல்வியும் நெருங்கிய தோழிகள். தினமும் இருவரும் போனில் மணிக்கணக்கில் அரட்டை அடிப்பவர்கள். செல்வி இன்னும் இரண்டு மாதத்தில் திருமணம் ஆகி அமெரிக்காவிற்கு பறக்க இருப்பவள்.

மேகாவின் அப்பா ஆதித் உயிர்தொழில்நுட்பவியல் ஆராய்ச்சியாளர். எதிர்காலத்தில் மனிதனுக்கு வரவிருக்கும் நோய்களை மரபணு மூலம் சரிசெய்யும் நான்-வோலடைல் மெமரி ஆராய்ச்சியில் ஈடுபட்டு அதில் சில சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருப்பவர். ஆதித்தின் உதவியாளர் பிரசாத். மேகாவை ஒரு தலையாக காதலித்துக் கொண்டிருப்பவன்.

அன்றைக்கு மேகாவிற்கு போன் செய்த செல்வியின் குரல் நடுக்கத்தில் இருந்தது. மேகாவை உடனே தன்னுடைய வீட்டிற்கு அழைத்தாள் செல்வி. அங்கே சென்ற அவளுக்கு காத்திருந்தது ஒரு அதிர்ச்சி. தனக்கு நாள் தள்ளி போயிருப்பதாகவும், கர்ப்ப காலத்தில் இருக்கும் அறிகுறிகள் இப்போது தனக்கு இருப்பதாகவும் கூறி மேகாவை திடுக்கிட வைத்தாள்.

தான் எந்தத் தவறும் செய்யவில்லை எனவும், இது எப்படி நடந்தது எனத் தெரியவில்லை எனவும் செல்வி புலம்ப, மெடிக்கல் கிட்டை வைத்து மேகா செக் செய்ய ரிசல்ட் பாசிட்டிவ்வாக வருகிறது. ஷாப்பிங் போவதாகப் பொய் சொல்லிவிட்டு இருவரும் மேகாவிற்கு தெரிந்த கைனகாலஜிஸ்ட்டிடம் செல்கின்றனர்.

செல்வியைப் பரிசோதித்த டாக்டர், அவளின் உடலில் எந்த விதமான கருவளர்ச்சிக்கான அறிகுறியும் இல்லை. ஆனால் அவள் கன்சீவ்வாக இருப்பதை உறுதி செய்கிறார். டாக்டர் பேசிக்கொண்டே போக, செல்வி அப்படியே மயங்கி கோமா நிலைக்குச் செல்கிறாள்.

இதையறிந்த மேகாவின் அப்பா ஆதித், மருத்துவத் துறையில் தான் கண்டுபிடித்த ராக்கெட் கேண்டி ஆயுதம் என அழைக்கப்படும், மரபணு சிகிச்சை மூலம் செல்வியை குணப்படுத்த முன்வருகிறார். ஆனால் மருத்துவ முறைப்படி, நடைமுறைக்கு வராத டிரீட்மெண்ட்டை பேஷண்ட்டிற்கு கொடுக்க கூடாது.

அதே சமயம் வேறு இடத்தில்..

போலீஸ் இன்பார்மர் என்ற போர்வையில், தனக்கு வேண்டாத எதிரிகளைப் போலீசிடம் பிடித்துக் கொடுத்து நல்ல பெயர் வாங்கிக் கொண்டு, அண்டர் கிரௌண்ட்டில் தாதாவாக வாழ்ந்துகொண்டிருந்த சிக்கந்தரை சந்திக்க வந்திருந்தார் ஏ.சி. நமோ நாராயணன்.

நேரடியாக விஷயத்திற்கு வந்தார் ஏ.சி. வழக்கமாக பிரதமரும், ஜனாதிபதியும் வரும் இடங்களில் பாதுகாப்பு காரணமாக ரவுடிகளை சிறையில் அடைத்து வைப்பதைக் கூறிய அவர், இந்த முறை சமூக விரோதிகள் லிஸ்டில் சிக்கந்தர் பெயரும் இருப்பதாகக் கூறுகிறார். தவறுதலாக இது நடந்துவிட்டதாகவும், மூன்று நாட்கள் மட்டும் சிறையில் இருக்கும்படி கேட்கிறார் ஏ.சி. ஒரு வழியாக சம்மதிக்கிறான் அவன்.

அவர் சென்ற பிறகு அவனுக்கு ஒரு போன் வருகிறது, பேசியது ஒரு பெண்.  தன்னுடைய பெயர் தன்யா என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவள், தனக்கு வேண்டாத ஒருவனைக் கொலை செய்யும் வேலையை அவனிடம் ஒப்படைக்கிறாள். முன்பணமாக பேசிய மொத்தப் பணமான பத்து லட்சத்தையும் உடனே தர முன்வருகிறாள்.

யோசித்த சிக்கந்தர், தன்யாவின் வேலையை எடுத்துக்கொள்ள ஒப்புக்கொள்கிறான். அடுத்த நாள் அவன் போலீசில் சரணடைய வேண்டி இருப்பதால், தன்னுடைய சகாவான போஸிடம் அந்த வேலையை மாற்றிக் கொடுக்கிறான் சிக்கந்தர். தன்யா சொன்ன ஆளை முடிக்கச் செல்கிறான் போஸ். ஒரு வழியாக அந்த போட்டோவில் இருந்த ஆளைக் கண்டுபிடிக்கிறான். போஸ் கொல்ல வேண்டியது ஆதித்தின் உதவியாளர் பிரசாத்.

யாரந்த தன்யா..? அவளுக்கும் பிரசாத்திற்கும் என்ன சம்பந்தம்..? கோமாவில் இருந்து செல்வி உயிர் தப்பினாளா..? செல்வியின் இந்த நிலைக்கு யார் காரணம்..? ராக்கி கேண்டி வெப்பன் என்பது என்ன..? ஆதித்-பிரசாத்தின் சுயரூபம் என்ன..?

want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=86

  •  

குட் நைட் குரோதம் – Crime Novel

ஆளும்கட்சியைச் சேர்ந்த மினிஸ்டர் வெற்றிச் செல்வன், தனக்கும் மாடலிங் கேர்ள் ஆன மம்தாவிற்கும் உள்ள ரகசியத் தொடர்பு வெளியே கசிவதை அறிகிறார். இன்று இல்லையென்றாலும் என்றாவது ஒரு நாள், மம்தா தனது அரசியல் வாழ்க்கைக்குப் பிரச்சனையாக வருவாள் என்று உணர்ந்த அமைச்சர் அவளைக் கொல்ல முடிவு செய்கிறார்.

மம்தாவின் பிறந்தநாள் அன்று அவளை வீட்டிற்கு வரவழைத்து, தனது பிஏ-வான ரத்னத்தை வைத்து அவளை சுட்டுக் கொல்கிறார் அமைச்சர். பிணத்தை டிஸ்போஸ் செய்யும் வேலையை ரத்னத்திடமே ஒப்படைக்கிறார்.

அடுத்த சில நாட்களில் மம்தாவை மறந்துவிட்டு அரசியல் வேலைகளில்  இருந்த அமைச்சருக்கு, கர்நாடகாவில் இருந்து ஒரு போன் வருகிறது. போனில் பேசிய பசவப்பா, சிபாரிசு செய்து தன்னுடைய வேலையை முடித்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறார்.

மேலும் பெங்களூரில் இருந்த மம்தாவிடமும் தன்னுடைய சிபாரிசு பற்றி அமைச்சரிடம் பேசும்படி கூறியதாக பசவப்பா கூறுகிறார். இதைக் கேட்ட அமைச்சர் வெற்றிச் செல்வன் அதிர்ந்து போகிறார். அன்றிரவே மம்தாவைப் புதைத்த இடத்திற்குச் சென்று பார்த்த போது, அங்கே அவளின் பிணம் இல்லை.

ஒரு வாரத்திற்கு முன்பு தன்னுடைய கண் முன்னால் ரத்தம் சிந்தி உயிர் விட்ட மம்தா எப்படி உயிருடன் இருக்க முடியும் என்று யோசித்த அவர் தன்னுடைய அடியாள் வடிவேலுவுடன் பெங்களூர் செல்கிறார். உயிருடன் இருப்பது மம்தாவோ இல்லை, மம்தா உருவத்தில் யாரோ, யாராக இருந்தாலும் உயிருடன் விட்டுவைக்க கூடாது என்று முடிவு செய்து அவளைத் தேடுகிறார்.

தேடலின் முடிவில் அச்சு அசலாக மம்தாவைப் போல இருக்கும் அஸ்வினி என்ற பெண்ணைக் கண்டுபிடிக்கிறார். சினிமா பட வாய்ப்புக்காக அழைப்பது போல், அவளைத் தனியே வரவழைத்து அஸ்வினியையும் கொலை செய்கிறார். போன தடவை புதைத்ததைப் போல் அல்லாமல் இந்த முறை பிணத்தை எரிக்கச் சொல்கிறார்.

அதே சமயம் செமினார் அட்டென்ட் செய்வதற்காக விவேக்-ரூபலாவுடன் பெங்களூரில் தங்கியிருந்தான். தன்னுடைய போலீஸ் நண்பன் வாசனை மீட் பண்ணுவதற்காக விவேக் ஸ்டேஷன் வந்த சமயம், கொலை செய்யப்பட்ட பெண்ணின் பிணத்தைக் காரில் கொண்டு போன விஷயம் அவர்களை எட்டுகிறது. விசாரணையில் அந்தப் பெண்ணின் பெயர் அஸ்வினி என்று தெரிய வருகிறது.

இந்த இடத்தில் கேஸிற்குள் நுழைகிறான் விவேக். அடுத்த நாள் கொலை செய்யப்பட்ட அஸ்வினியின் போட்டோ பத்திரிக்கையில் வருகிறது. விவேக் பத்திரிக்கையைப் புரட்டி, அஸ்வினியின் போட்டோவைத் தேடிக் கண்டுபிடிக்க.. எதிரில் ஒரு ஆட்டோ செல்கிறது. அந்த ஆட்டோவில், போட்டோவில் இருந்த அதே அஸ்வினி..

அஸ்வினி எரித்துக் கொலை செய்யப்பட்டிருந்தால், ஆட்டோவில் சென்ற அந்தப் பெண் யார்..? மம்தாவின் பிணம் எங்கே..? மம்தா தான் அஸ்வினியா..?

தேடலுடன் இப்படிக்கு குட் நைட் குரோதம்..!

want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=972

  •  

டிசம்பர் இரவுகள் – Crime Novel

வேலை விஷயமாக ஏர்போர்ட் செல்ல இருந்த அண்ணன் பார்த்திபனை எழுப்புவதற்காக மாடியில் இருக்கும் அவனது அறைக்குச் செல்கிறாள் மேகலா.  ஆனால் ஏற்கனவே எழுந்திருந்த பார்த்திபன், பணத்தைக் கொண்டு வருவதாகவும், விஷயம் வெளியே தெரிய வேண்டாம் எனவும் போனில் யாருடனோ பயத்தில் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

“கங்காதர் ஃபெர்டிலைசர்” கம்பெனியின் ஓனரான கங்காதருக்கு மூன்று வாரிசுகள். முதல் மனைவிக்கு பிறந்தவன் பார்த்திபன், இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர்கள் – ஜீவா, மேகலா.

பார்த்திபனின் பேச்சை இண்டர்காமில் ஒட்டுக்கேட்ட மேகலா, போனில் ப்ளாக்மெயிலர் சொன்ன இடத்திற்குத் தன்னுடைய காதலன் பிரகாஷை அனுப்புகிறாள். பிரகாஷ்-மேகலா இருவரும் வீட்டிற்குத் தெரியாமல் ஆறு மாதங்களாகத் தங்கள் காதலை வளர்த்து வருபவர்கள்.

பார்த்திபனுக்கு முன்னமே அந்த ஹோட்டலுக்குச் சென்ற பிரகாஷ், ப்ளாக்மெயிலருக்காக காத்திருக்க ஆரம்பித்தான். அதே சமயம் பார்த்திபனும் அங்கு வந்து சேர, கார் பார்க்கிங்கில் காரை நிறுத்தச் செல்கிறான். நீண்ட நேரமாகியும் பார்த்திபன் வெளியே வராததால், பார்க்கிங் இடத்திற்கே செல்கிறான் பிரகாஷ்.

அங்கே கழுத்தில் குண்டடி பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தான் பார்த்திபன். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விவேக்கும், கோகுல்நாத்தும் SOC பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது தான் விவேக் அந்த விஷயத்தை கவனித்தான். காரைத் திறந்தவுடன் உள்ளே இருந்து ஒரு பெர்ஃபியூம் நறுமணம் வீசிக்கொண்டிருந்தது.

அனைத்து பூக்களையும் கொண்டு செய்த வாசமாக அது இருந்தது. மேலும் அங்கு கிடைத்த சேறு படிந்த பூட்ஸ் தடயங்கள் மிகவும் பெரிய அளவில் வித்தியாசமாக இருந்தது. கேஸ் இவ்வாறாக போய்க்கொண்டிருக்க, வேலைக்குச் சென்ற தன்னுடைய பெண் தேவியை நாலு நாட்களாக காணவில்லை என கம்பளைண்ட் கொடுக்க போலீஸ் ஸ்டேஷனிற்கு வருகிறார் ரிடையர்டு ஆர்மிமேன் ஜலபதிராவ்.

தேவி வேலை பார்த்துக்கொண்டிருந்த இடம், “கங்காதர் ஃபெர்டிலைசர்” கம்பெனி. நேரடியாக விசாரணையை கம்பெனியில் ஆரம்பித்த விவேக், உரக்கிடங்கில் இருந்து ஒரு பெண்ணின் பர்ஸைக் கண்டுபிடிக்கிறான். அந்தப் பர்ஸ் தேவியுடையது என கண்டுபிடிக்கப்பட, மேற்கொண்டு போலீஸ் நாய் சீஸரை வரவழைத்து தேடலைத் தொடங்குகிறான் விவேக்.

சீஸர் பர்ஸை மோப்பம் பிடித்துவிட்டு காட்டுக்குள் ஓடி, ஒரு கட்டத்தில் ஓய்ந்து நிற்கிறது. அங்கே மண்ணில் காலால் பிராண்டி போலீசை அழைக்க, தோண்டிப் பார்த்தால் அழுகிய நிலையில் தேவியின் பிணம் கிடைக்கிறது.

தேவியின் கொலைக்கு பார்த்திபன் காரணமாக இருந்து, தேவிக்கு நெருக்கமானவர்கள் பார்த்திபனைக் கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் கேஸ் நகர்ந்துகொண்டிருக்க, ஜலபதிராவ் வீட்டிற்கு விசாரணைக்குச் செல்கிறான் விவேக். தேவியின் மரணத்தைப் பற்றித் துப்பு துலங்க அங்கே  சென்றவனுக்குக் காத்திருந்தது ஒரு அதிர்ச்சி.

மாலைக்கண் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஜலபதிராவ், கேன்சரால் பாதிக்கப்பட்டு நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் அவரின் மனைவி, மேலும் பித்துப் பிடித்து அறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தேவியின் தங்கை அர்ச்சனா என குடும்பமே மிக மோசமான நிலையில் இருக்கிறது.

இதற்கிடையில் பார்த்திபனுக்கு வந்த மாதிரியே இன்னொரு போன் கால் ஜீவாவிற்கு வர, அவனும் பயந்து போய் யாருக்கும் தெரியாமல் பணத்துடன் வெளியே செல்ல, இதைக் கண்டுபிடித்த மேகலா, விவேக்கிற்கு விஷயத்தைச் சொல்கிறாள்.

ஆனால் விவேக் செல்வதற்கு முன்னமே பார்த்திபன் கொலை செய்யப்பட்டதைப் போலவே ஜீவாவும் கொலை செய்யப்படுகிறான். மேலும் ஜீவாவின் காரிலும் அதே பெர்ஃபியூம் நறுமணம். அவனுடைய பேண்ட் பாக்கெட்டில் ஒரு லெட்டர் இருக்க, அதில் தேவியின் ஆவி என்ற பெயரில் கடிதம் ஓடியிருந்தது.

அடுத்தது நீ.. என தேவியின் ஆவி என்ற பெயரில் ஒரு லெட்டர் மேகலாவிற்கும் வந்திருக்க..

தேவியைக் கொலை செய்தது யார்..? தேவியின் ஆவி என்ற பெயரில் நடைபெறும் கொலைகள் கேஸை திசைதிருப்புவதற்காகவா..? போலீசிடம் இருந்து ஜலபதிராவ் மறைக்கும் உண்மை என்ன..? குற்றவாளி பிடிபட்டானா..? மேலும் தெரிந்துகொள்ள வாசியுங்கள் டிசம்பர் இரவுகள்..!

want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=319

  •  

தீமையைச் சுடு – Crime Novel

ஆபிசில் இருந்து வீட்டிற்கு வந்த போலீஸ் கமிஷனர் கனகசபாபதி  அவசரமாகத் தயாராகிக் கொண்டிருந்தார். அன்று அவருடைய நெருங்கிய நண்பர் மைக்கேல்ராஜின் ஒரே பெண்ணான ஜெனிஃபருக்கு நிச்சயதார்த்தம்.

கனகசபாபதி, மனைவி சிவகாமி, மகன் பிரபு மற்றும் மருமகள் ப்ரியம்வதாவுடன் அனைவரும் குடும்பத்துடன் நேரத்திற்கு நிச்சயதார்த்த பங்க்ஷனுக்கு கிளம்பி காரில் ஏறிய நேரம் வீட்டில் தொலைபேசி அழைக்கிறது.

டெல்லியில் இருந்து கமிஷனரிடம் அவசரமாகப் பேச அழைப்பு வந்திருப்பதாக வேலைக்காரி வள்ளியம்மை கூற, கமிஷனர் காரில் இருந்து மீண்டும் வீட்டிற்குள் சென்று ரிசீவரை எடுக்கிறார். அதில் மர்ம நபர் ஒருவன் பேசுகிறான். டெல்லியில் இருந்து பேசுவதாகச் சொன்னால் தான் உடனே உங்களிடம் பேச முடியும் என்று பொய் சொன்னதாகச் சொன்ன அவன், சித்தர் பாடல் ஒன்றைப் பாடி விட்டு போனை வைத்துவிடுகிறான்.

ஒருவழியாக நிச்சயதார்த்தம் நடக்கும் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தது  கமிஷனர் குடும்பம். ஆனால் கமிஷனரின் மனதிலோ வீட்டிற்கு திரும்பும் வரையிலும் அந்த சித்தர் பாடலே ஒலித்துக் கொண்டிருந்தது. ஏதோ விபரீதமாக நடக்கப் போகிறது என்ற எண்ணம் அவருக்கு வலுப்பட்டுக் கொண்டே இருக்க, நள்ளிரவில் அவருக்கு ஒரு போன் வருகிறது.

மைக்கேல்ராஜ் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட விஷயம் கனகசபாபதியை எட்ட அதிர்ந்தார் அவர். உடனே அனைவரும் குடும்பத்துடன் மைக்கேல்ராஜின் வீட்டிற்குச் செல்ல, அங்கே மூவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடக்கின்றனர்.

அதேசமயம்..

தஞ்சையை அடுத்த ராஜகம்பீரம் என்ற ஊருக்கு புகழ்பெற்ற நாடி ஜோதிடர் ஜலகண்டரைப் பார்ப்பதற்காக வெற்றிவேல் என்பவன் வருகிறான். அவனை குதிரை வண்டிக்காரன் பொன்னுசாமி ஜலகண்டர் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். வண்டியில் போகும் வழியில் வெற்றிவேலின் பிரச்சனைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்கிறான்.

நாடி பிடித்து பார்த்து அவர்களுக்கேற்ற ஏடு எடுத்து பார்த்து, அதில் குறிப்பிட்டுள்ள சித்தர் பாடலை வைத்து, நமக்கான பரிகாரத்தை ஜலகண்டர் கண்டுபிடித்து சொல்வதாக நாடி ஜோதிடத்தின் பெருமைகளை வெற்றி வேலுக்கு எடுத்து சொல்கிறான் வண்டிக்காரன் பொன்னுசாமி.

வெற்றிவேலின் பிரச்சனைகளை ஜலகண்டர் அவனிடம் அப்படியே கூற, அசந்து போன அவன் அதை சரிசெய்ய பரிகாரம் கேட்க, ஏடு எடுக்க உள்ளே செல்கிறார் ஜலகண்டர். அதே சமயம் அவர் பின்னே சென்ற வெற்றிவேல் அவரைக் கழுத்தை நெரித்து கொலை செய்கிறான்.

மைக்கேல்ராஜூம் அவன் குடும்பத்தினரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நினைத்த போலீஸ் கமிஷனர் கனகசபாபதி, கொலைக்கான மோட்டிவ்வை தேட யத்தனிக்கையில் மைக்கேல்ராஜ் எழுதியிருந்த கடிதம் கனகசபாபதியை வந்து சேர்கிறது.

அடுத்ததாக சம்பந்தமே இல்லாமல், புகழ்பெற்ற அமிர்தா குளிர்பான நிறுவனர் யோகானந்த் அவருடைய வீட்டு மொட்டைமாடியில் வைத்து கொலை செய்யப்படுகிறார். போலீஸ் விசாரணையில் மாதத்தில் இரண்டு முறையாவது நாடி ஜோதிடர் ஜலகண்டரை சந்திப்பதற்கு யோகானந்த் வருவது தெரிய வருகிறது.

மைக்கேல்ராஜ் மற்றும் அவருடைய குடும்பத்தின் தற்கொலையின் பின்னணி என்ன..? மைக்கேல்ராஜ் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது என்ன..? வெற்றிவேல் யார்..? ஜலகண்டர், யோகானந்த் கொலைகளுக்கான மோட்டிவ் என்ன..? போனில் கமிஷனரிடம் சித்தர் பாடலைப் பாடியது யார்..? குற்றவாளி யார்..?

Casting : போலீஸ் கமிஷனர் கனகசபாபதி, மனைவி சிவகாமி, மகன் பிரபு, மருமகள் ப்ரியம்வதா, வேலைக்காரி வள்ளியம்மை, கனகசபாபதியின் நண்பன் மைக்கேல்ராஜ், மகள் ஜெனிஃபர், மர்ம நபர் வெற்றிவேல், குதிரை வண்டிக்காரன் பொன்னுசாமி, நாடி ஜோதிடர் ஜலகண்டர், அமிர்தா குளிர்பான ஓனர் யோகானந்த்.

  •  

ரோஜா முள் துரோகம் – Crime Novel

கல்யாண மண்டபத்தில் இருந்து வைஜெயந்தி தப்பித்த விஷயம் நீண்ட நேரத்திற்கு பிறகே அவளுடைய மாமா சிகாமணிக்கு தெரிய வந்தது. பெற்றோரை சிறு வயதிலேயே இழந்திருந்த வைஜெயந்தியை தாய்மாமா தான் வளர்த்து படிக்க வைத்திருந்தார். ஆனால், வைஜெயந்திக்கு அவர் பாத்திருந்த மாப்பிள்ளைக்கோ வயது நாப்பத்திரெண்டு.

புகழ்பெற்ற கம்பெனியில் ஜி.எம் ஆக இருந்த யதுநந்தன் தான் மாப்பிள்ளை. எப்பாடு பட்டாவது வைஜெயந்தியைத் திருமணம் செய்ய பிரம்மபிரயத்தனம் செய்து கொண்டிருந்த யதுநந்தன் போலீசிற்கு பணம் கொடுத்து அவளைக் கண்டுபிடித்துத் தரும்படி கேட்டுக்கொள்கிறார்.

அடுத்த நாள் காலை கல்யாணம் நடக்க இருந்த வேளையில், திட்டம் போட்டு வைஜெயந்தி நள்ளிரவு நேரத்தில் மண்டபத்தில் இருந்து தப்பிக்கிறாள். வைஜெயந்தி தப்பிக்க மாப்பிள்ளையின் வயது மட்டும் காரணம் இல்லை. அவள் ப்ரணேஷைக் காதலித்துக் கொண்டிருந்தாள்.

ப்ரணேஷ் – பணக்கார வீட்டு பையன், தாய் வள்ளியம்மைக்குத் தெரியாமல் தன்னுடைய காதலை வளர்த்து வருபவன். திட்டப்படி ப்ரணேஷின் நண்பன் பாண்டியுடன் மண்டபத்தில் இருந்து வைஜெயந்தி தப்பிக்க வேண்டியது. அதற்குப் பிறகு ப்ரணேஷும் வைஜெயந்தியும் கல்யாணம் செய்து கொள்வது.

எதிர்பாராத விதமாக, போலீஸ் விசாரணையில் வைஜெயந்தி மாருதி காரில் தப்பித்த விஷயம் தெரிய வருகிறது. மேற்கொண்டு விசாரித்ததில் ஒரு திடுக்கிடும் தகவல் போலீசிற்கு கிடைக்கிறது. வைஜெயந்தியைத் தான் காதலிப்பதாகச் சொல்லிய பாண்டி, மெக்கானிக்கல் ஷாப் நண்பனிடம் இருந்து, ஒரு காரை இரவல் வாங்கிச் சென்றதாக நண்பன் சொல்கிறான்.

இதற்கிடையில் ப்ரணேஷின் காதல் விஷயம் அவனுடைய அம்மா வள்ளியம்மைக்குத் தெரியவர, மேனேஜர் மற்றும் குடும்ப வக்கீலுடன் சேர்ந்து வைஜெயந்தியை விரட்ட திட்டம் போடுகின்றனர் மூவரும்.

யதுநந்தனிடம் பணத்தை வாங்கிய இன்ஸ்பெக்டர், பாண்டி வீட்டைக் கண்டுபிடித்து அங்கு சென்றபோது அவனும் வைஜெயந்தியும் வீட்டில் இல்லை. மேற்கொண்டு போலீஸ் வீட்டை அலச, வைஜெயந்தி எழுதிய டைரி அங்கு கிடைக்கிறது. டைரி முழுக்க காதல் கவிதைகள்.

அந்த நள்ளிரவு நேரத்தில் அக்கம்பக்கத்து ஆட்களை எழுப்பி போலீசார் விசாரணையில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, திடீரென இன்ஸ்பெக்டரின் பார்வை பாண்டி வீட்டு பரண் மேலே செல்ல, அதிர்ந்தார் அவர். அங்கு கொலுசு அணிந்த ஒரு பெண்ணின் கால்கள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.

அதிர்ஷ்டவசமாக கொலை செய்யப்பட்டிருந்த பெண் வைஜெயந்தி இல்லை. வைஜெயந்தியின் காதலன் ப்ரணேஷிடம் போலீஸ் விசாரித்த போது, வைஜெயந்தியைக் கூட்டி வரும்படி அவன் தான் பாண்டியிடம் கூறியதாகவும், ஆனால் இதுவரை தன்னிடம் அவளை அழைத்து வரவில்லை எனவும், பாண்டி வீட்டு பரண் மேல் இறந்து கிடந்த பெண் வைஜெயந்தியின் தோழி மோகினி எனவும் ப்ரணேஷ் கூற..

பாண்டி எதற்காக வைஜெயந்தியைக் கடத்தினான்..? யதுநந்தன்-வைஜெயந்தி திருமணம் நடந்ததா..? வைஜெயந்தி காணாமல் போனதற்கு காரணம் ப்ரணேஷின் அம்மா வள்ளியம்மையா..? பரண் மேல் இறந்து கிடந்த மோகினியைக் கொலை செய்தது யார்..? வைஜெயந்தி உயிருடன் இருக்கிறாளா..?

விறுவிறுப்புடன் நகரும் அடுத்தடுத்த நிமிடங்கள்..இன்றே வாசியுங்கள் ரோஜா முள் துரோகம்.

Casting : வைஜெயந்தி, தாய்மாமா சிகாமணி, மாப்பிள்ளை யதுநந்தன், ப்ரணேஷ், பாண்டி, மோகினி, மெக்கானிக் ஜோசப், ப்ரணேஷின் அம்மா வள்ளியம்மை.

  •  

எனி டைம் MONEY மர்டர் – Crime Novel

போலீஸ் அராஜகத்தைக் கண்டித்து, கவசம் பத்திரிக்கையில் கடந்த வாரம் வெளிவந்த கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிக்கை அலுவலகத்திற்கு வந்திருந்தார் ஏ.சி. டேனியல் மாணிக்கம். அவரது மிரட்டலைப் பொருட்படுத்தாத ஆடலரசும் அருணாவும் மன்னிப்பு கேட்க மறுக்கின்றனர். கோபத்துடன் அங்கிருந்து வெளியேறுகிறார் ஏ.சி டேனியல் மாணிக்கம்.

கவசம் பத்திரிக்கையைத் தரைமட்டம் ஆக்குவதற்காக எதிராளிகளிடம் காசு வாங்கிய உதவியாசிரியர் கமலப்பித்தன், யாரும் அறியாத நேரத்தில் பிரிண்டிங் அறையில் டைனமைட்டைப் பொறுத்துகிறார். கமலப்பித்தனின் உண்மையான ரூபத்தை அறியாமல் முக்கியஸ்தர் ஒருவரை பேட்டி எடுக்க வெளியில் அனுப்புகிறார் ஆடலரசு. இதை சாக்காக வைத்து வெளியில் இருந்து டைனமைட்டை இயக்க முடிவு செய்கிறார் கமலப்பித்தன்.

மறுபக்கம், மத்திய சிறைச்சாலையில் இருந்து கொண்டு போதைப் பொருள் கடத்தலை அமோகமாக செய்து வருகிறார் மாஜி மந்திரி ராஜாங்கம். அவருக்கு பின்னணியில் உதவியாக ஜெயில் சூப்பரின்டெண்டெண்ட் இன்பமணி, ஜெயிலர் உபயதுல்லா, வார்டன் சண்முகராஜன் மற்றும் சிறைத்துறை ஐ.ஜி ஈஸ்வர் உள்ளனர். மேலும் சிறையில் அவருக்குத் தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கின்றனர்.

ராஜாங்கத்தின் சுயரூபத்தை அறிந்த அருணா, அவரைப் பேட்டி எடுக்க வாய்ப்பு கேட்கிறாள். அவரோ பேட்டி கொடுக்க மறுப்பு தெரிவிக்க, சிறையில் அவருக்கு கிடைக்கும் ராஜபோக வாழ்க்கையைப் பற்றிக் கூறி பேட்டிக்கு அவரை சம்மதிக்க வைக்கிறாள் அருணா.

இதற்கிடையில் உபயதுல்லா – சண்முகராஜன் இருவரும் கைதிகளுடன் கல் குவாரிக்கு கைதிகளை வேலைக்கு அழைத்துச் செல்லும் சாக்கில் போதைப் பொருளைக் கடத்த, மறைந்திருந்து அவர்களை போட்டோ எடுக்கிறாள் அருணா. இதையறிந்த இருவரும் அவளைக் கொலை செய்து அங்கிருக்கும் கல் குழிக்குள் அருணாவைத் தள்ளுகின்றனர்.

அருணாவைத் தேடி அவளுடைய அண்ணன் விக்னேஷ், ஆடலரசுக்கு போன் செய்கிறான். அருணாவை முக்கியமான ஒரு வேலைக்கு அனுப்பியிருப்பதாக ஆடலரசு கூற, சமாதானமடைந்த அவன் அருணாவிற்காக காத்திருக்க ஆரம்பிக்கிறான். நேரம் நாட்களாக மாற ஆரம்பிக்க அருணா வீடு திரும்பவேயில்லை.

நிலைமை இவ்வாறிருக்க மாஜி மந்திரி ராஜாங்கம், ஏ.சி டேனியல் மாணிக்கம் என வரிசையாக ஒவ்வொருவராக இருதயத்தில் ஓட்டை போடப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். அடுத்ததாக உபயதுல்லா & சண்முகராஜன் கொலை செய்யப்பட போவதாக மிரட்டல் கடிதம் வருகிறது.

கொலையாளி யார்..? டைனமைட் வைக்கப்பட்ட கவசம் பத்திரிக்கை அலுவலகத்தின் நிலை என்ன..? இருதயத்தில் ஓட்டை போட்டு கொலை செய்யப்பட காரணம் என்ன..? பரபரப்பு திருப்பங்களுடன் உங்களுக்காக காத்திருக்கிறது எனி டைம் மர்டர்.

One Minute One Book-இன் புதிய முயற்சியாக கதையில் வரும் கதாப்பாத்திரங்களைத் தனியாக கொடுத்துள்ளோம்.

Casting : கவசம் பத்திரிக்கையின் ஆசிரியர் ஆடலரசு, உதவியாசிரியர் கமலப்பித்தன், பத்திரிக்கையின் சீஃப் ரிப்போர்ட்டர் அருணா, அருணாவின் அண்ணன் விக்னேஷ், அஸிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனர் டேனியல் மாணிக்கம், மத்திய சிறைச்சாலையின் ஜெயில் சூப்பரின்டெண்டெண்ட் இன்பமணி, ஜெயிலர் உபயதுல்லா, ஜெயில் வார்டன் சண்முகராஜன், மாஜி மந்திரி ராஜாங்கம், சிறைத்துறை ஐ.ஜி ஈஸ்வர்.

  •  

காகிதப் பூ தேன் – Crime Novel

வழுக்குப்பாறை கிராமத்தில் அரசாங்கத்திற்குக் கட்டுப்படாமல் தன்னிச்சையாக இயங்குகிறது மலைவாழ் மக்கள் கூட்டம். நாகரிக வாசனையே அறியாத மனிதர்களும், அங்கு நடக்கும் விசித்திர சடங்குகளும் பற்றி ஏராளமான கட்டுக்கதைகள் உண்டு. அவர்கள் எல்லைக்குள் அத்துமீறி உள்ளே வருபவர்களை அடித்துக் கொன்று விடுவர் அங்கு வாழும் மக்கள்.

இந்நிலையில் மலையின் உச்சியில் வாழும் அந்த மக்களையும், அவர்களின் வாழ்க்கை முறையையும் ஆராய்ச்சி செய்ய, சோசியாலஜி மாணவர்களைக் கொண்ட ஒரு குழு அங்கு வந்து சேர்கிறது. 12 மாணவ மாணவிகளைக் கொண்ட அந்தக் குழுவில் இந்தக் கதையின் கதாநாயகி அஜந்தாவும், கதாநாயகன் பாலமுரளியும் உள்ளனர்.

எதையுமே துணிச்சலுடன் எதிர்கொள்ளும் அஜந்தா அன்று இரவு அந்த மலை உச்சிக்குச் செல்ல முடிவு செய்கிறாள், உடன் பாலமுரளி. குழுவினர் யாரும் அறியாமல், இருவரும் மலையுச்சியை அடைந்து நேரில் கண்ட காட்சி அவர்களை அதிர வைத்தது. அங்கு சென்றதன் விளைவாக பாலமுரளிக்கு கண்பார்வை பறிபோகிறது.

அஜந்தா கட்டாயப்படுத்தியதால் தான் பாலமுரளிக்கு கண்பார்வை போன குற்றவுணர்ச்சியில் வாழ்க்கை முழுவதும் அவனுடன் வாழ முடிவெடுக்கிறாள் அவள். இதற்கிடையில் மருமகள் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார் அஜந்தாவின் அம்மா. அவளுடைய வாழ்க்கையின் அடுத்த திருப்பமாக, அஜந்தாவின் அண்ணன் வேலை பார்க்கும் கம்பெனியின் பாஸின் மகன் தினேஷ்குமார் அவளைத் திருமணம் செய்ய நினைக்கிறான். கோபத்துடன் திருமணப் பேச்சை முடித்து வைத்தவள், பாலமுரளியைக் காதலிப்பதை தினேஷிடம் தெரிவிக்கிறாள்.

பாலமுரளி கண்பார்வை இழந்ததால் திருமணத்தை மறுத்த போதும் அவனிடம் பேசி சமாளித்து ஒரு வழியாக இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். சென்னையில் இருந்த ஒரு கம்பெனி மூலமாக பம்பாயில் ஹோட்டல் ரிசப்ஷனிஸ்ட் வேலை அஜந்தாவிற்கு கிடைக்கிறது. அந்த ஹோட்டலின் ஓனரின் உதவியால் தங்குவதற்கு வீடும் கிடைக்கிறது.

ஆனாலும் மனித நடமாட்டமே அதிகம் இல்லாத தெருவில் இருக்கும் அந்த வீட்டில் இருவரும் தங்களுடைய வாழ்க்கையைத் தொடங்குகின்றனர். ஹோட்டலில் வேலை செய்து கொண்டே பாலமுரளி கண்பார்வையைத் திரும்ப கொண்டு வருவதற்காக நிறைய முயற்சி செய்கிறாள் அஜந்தா.

இந்நிலையில் 2 லட்சம் ரூபாய் இருந்தால், பாலமுரளிக்கு பார்வை மீண்டும் கிடைத்துவிடும் என்று அறிந்த அஜந்தா பணத்திற்காக அவனுக்குத் தெரியாமல், ஹோட்டலில் கிளாசிக்கல் டான்ஸ் ஆட ஒப்புக்கொள்கிறாள். ஆனால் ஹோட்டல் ஓனரின் திட்டமோ?! வேறு மாதிரி இருக்க..

பாலமுரளிக்குப் பார்வை கிடைத்ததா..? அஜந்தாவிற்கு ஆபரேஷனுக்கான பணம் கிடைத்ததா..? மனித ஓநாய்களிடம் மாட்டிக்கொண்டிருந்த அஜந்தாவின் நிலை என்ன..?

want to buy : https://www.panuval.com/kaagitha-poo-thaen-10015552

  •