Reading view

காசி : ஷங்கர்ராமசுப்ரமணியன்

June 06, 2025 புதிய காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்துக்குள் கம்பிவேலிகளால் நெறிக்கப்பட்டு காயப்பட்ட உடலென நின்றிருக்கும் ஞானவாபி மசூதியின் மேல் எப்போதும் ஒரு கருப்புச் சூரியன்.
  •  

நிகழ்வுகளை மாற்றி அமைப்பவன் : குமாரநந்தன்

May 04, 2025 அவர் அவனை ஆச்சரியமாகப் பார்த்தார். “நேத்து அப்படி எதுவும் இங்க நடந்த மாதிரி தெரியலையே” என்றார். வேறு யாரிடமாவது கேட்கலாமா என்று பார்த்தான். ஆனால், இதை ஏன் நான் தோண்டித் துருவி விசாரிக்க வேண்டும்? அப்படி எதையும் துருவித் துருவி ஆராய்ந்தால் நடந்ததற்கு மட்டுமல்ல நடக்காத விஷயங்களும் கூட நடந்திருக்கக் கூடும் என்பதைப் போல ஆதாரங்கள் கிடைக்க ஆரம்பிக்கும்.
  •  

நினைவுகள் நெய்திடும் மௌனம் : சியாம்

June 01, 2025 ஆனந்தி நினைவுகளில் கூட நிச்சயமின்மையின் சாயல் படிந்தவளாகவே இருக்கிறாள். நினைவுகளில் ஆனந்தியும் பிறரும் மௌனம் பூணுகிறார்கள். அவர்கள் மௌனம் பூணும் இடங்களை ஆனந்தி மொழிபெயர்த்துவிட்டால் அவளது எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடுமா? நிச்சயமின்மையிலிருந்து மௌனமும், மௌனத்திலிருந்து நிச்சயமின்மையும் சதா பிறந்துகொண்டே இருக்கிறதா?
  •  

ச. அர்ஜூன்ராச் கவிதைகள்

May 29, 2025 ஓர் அந்தியில் நிழற் பூ ஒன்று நிலத்தில் மலர்ந்த வழியே திரும்பிக்கொண்டிருந்ததைப் பார்க்க நேர்ந்த போது என் உருவபொம்மையைச் சுதாரிக்காமல் இருந்துவிட்டேன்.
  •  

எதைத்தான் எழுத வேண்டும்? : ஹருகி முரகாமி

May 26, 2025 எழுதுவதைப் பற்றிப் பேசும் முன், நீங்கள் செய்தி, சம்பவங்கள், மனிதர்களைப் பற்றிய கவனிப்பை பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். என்ன நடக்கிறது, யார் என்ன செய்கிறார்கள் என்பதை உள்ளுணர்வோடு கவனியுங்கள். ஆனால், உங்கள் கவனிப்புகள் மீது மதிப்பீடுகளை இறுக்கிவைப்பதை தவிருங்கள்.
  •  

புதுமைப்பித்தனும் புத்தகக் கடையும் : ஶ்ரீநிவாச கோபாலன்

May 24, 2025 க.நா.சு. இந்நிகழ்வைக் கூறிவிட்டு, புதுமைப்பித்தன் தனது காலத்து எழுத்தாளர்களில் மேதைமையுடன் திகழ்ந்த ஒருவர் எனக் குறிப்பிட்டுக் கட்டுரையைத் தொடர்கிறார். தொடர்ச்சி கிடைக்கவில்லை. க.நா.சு. குறிப்பிட்டுள்ள சம்பவத்தை நினைவில் இருத்திக்கொண்டு அடுத்த சங்கதிக்குச் செல்லலாம்.
  •  

ஈயூனிஸ் டி சௌசா கவிதைகள்

May 22, 2025 மேற்குத் தொடர்ச்சி மலைகளில் என் சாம்பலை எறியுங்கள் என் வீடாகவே அவை தோன்றியிருக்கின்றன.
  •  

ஷங்கர்ராமசுப்ரமணியன் கவிதைகள்

May 22, 2025 நூற்றாண்டுத் துயரக் கசப்பின் மதுவைப் பருகி யாரோ ஒருவர் தூக்கி எறிந்த காலிப்புட்டியை தெருவில் பார்த்தேன்.
  •  

இந்தியத் தத்துவம் – சாங்கியம், யோகம்: பி. ஏ.கிருஷ்ணன்

சாங்கிய தத்துவம் மானுட துயரம் என்ற யதார்த்தத்தை அடிப்படையாகக்கொண்டது. இந்த துயரமான வாழ்க்கை தளையில் இருந்து விடுபட மறுபிறப்பை தவிர்க்க வேண்டும் என நம்புகிறது. அதை அடைவதற்கான வழிதான்  சாங்கியத்தின் இலக்கு.
  •  

ஸோஃபி : அலிஸாண்ட்ரா டட்டன்

May 18, 2025 இப்போது அவள் முன்னால் இருக்கும் இந்த மங்கை யார்? அவளின் உள்ளின் உள்ளே அந்தரங்க ஆழத்தில் உள்ள அவளை, இந்த ஓவியம் அப்படியே உள்ளது உள்ளபடியே வெளியே கொண்டு வந்திருந்தது. இப்படியான தன் முகத்தை, இன்னும் கண்ணாடியில் காணக்கூட அவளுக்கு வேளை வந்திருக்கவில்லை. ஸோஃபி திரும்பி, தன் பெற்றோரின் முகங்களைப் பார்த்தாள்; வேதனையால் அவை சுண்டிப்போயிருந்தன.
  •  

அழகியல் விமர்சனத்தால் ஒரு படைப்பின் கலைத்தன்மையை நிறுவமுடியாது- கே.சி.நாராயணன்

May 15, 2025 அழகியல் விமர்சனத்தின் ஒரு விசேஷமான இயல்பை அல்லது எல்லையை சொல்லவேண்டியிருக்கிறது. அழகியல் விமர்சனத்தால் ஒரு படைப்பின் கலைத்தன்மையை நிறுவமுடியாது. அது தன் கலை அனுபவத்திலிருந்து சில அவதானங்களை முன்வைக்கிறது, வாசகனுக்கு அதை பகிர்கிறது. அந்த அனுபவத்தை கொஞ்சமேனும் ஏற்றுக்கொண்டவர்களிடம் மட்டுமே அதனால் பேசமுடியும். உதாரணமாக, நான் எம்.டி.ராமநாதன் நல்ல பாடகர் என்று சொல்லி, அவரின் தனித்தன்மைகளாக நான் உணர்ந்ததை சொல்கிறேன். நீங்கள் அந்த தனித்தன்மைகளில் சிலவற்றை ஏற்கிறீர்கள், சில தனித்தன்மைகளை மறுக்கிறீர்கள் என்றால் நாம் உரையாடலாம். மாறாக, நீங்கள் எம்.டி.ராமநாதன் பாடகரே அல்ல என்று சொன்னால் நம்மால் உரையாடவே முடியாது. உங்களிடம் எம்.டி.ராமநாதன் கலைத்தன்மைகொண்டவர்தான் என்பதை  சொல்லி நிறுவ அழகியல்விமர்சனத்தால் முடியாது.
  •  

விண்மீன்கள் மோதும் போது… : ஒடெசா மோஷ்ஃபெக்

May 12, 2025 மதுக்கூடத்திற்குத் திரும்பும் வழியில் என்னை சந்தித்த அவள், இவ்வாறு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள். அவள் சொன்ன விதம், நான் அவளை முன்பே கவனிக்காவிட்டாலும், இரவு முழுவதும் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருந்தது போலவும், அதை சொல்வதற்காகவே காத்துக்கொண்டிருந்தது போலவும் இருந்தது.
  •  

திக்குவிஜயம் : கார்த்திக் ராமச்சந்திரன்

May 09, 2025 நேரமாக ஆக ஆக விதவிதமாக ஊர்வலங்கள் சென்றுக் கொண்டிருக்கின்றன. ஓதுவார்கள் இசைவாத்தியங்கள் முழங்க சென்றதை முருகேசன் புளியோதரையை திண்றவாறு பார்த்துக் கொண்டிருந்தான். பக்கத்தில் நின்றவரிடம் ‘இன்னைக்கு என்ன வாகனத்துல சாமி வரும்’ என்றான். அவர், ‘இன்னைக்கு திக்குவிஜயம்.’ என்றார். ‘அப்ப திருக்கல்யாணம் முடிஞ்சுருச்சா’ என்றான். ‘திக்குவிஜயத்துக்கு முன்னாடி திருக்கல்யாணம் நடக்குமா நாளைக்கு தான் திருக்கல்யாணம்’ என்றான் சலிப்புடன்.
  •  

வற்றா இருப்பு : சபரிநாதன்

May 07, 2025 மாறாக,தமிழின் முதல் இலக்கியங்கள் முன்மாதிரியற்றவை. சமஸ்கிருதத்தில் அதற்கான மூலப்படிவங்கள் இல்லை.அவை இம்மண்ணின் சுதந்திர விளைச்சல்கள் எனலாம்.ஆரிய வருகைக்கு முற்பட்ட மூலத்திராவிட இலக்கிய மரபுகளின் தடயங்கள் வேறெந்த மொழியிலும் இப்படி பதிவாகவில்லை என்கின்றனர்.எல்லா மொழிகளிலும் வாய்மொழி இலக்கியங்கள் இருந்திருக்கும் எனினும், அது தமிழில் போல செவ்வியலாக்கம் பெற்று படைப்பிலக்கியமாக உருப்பெறவில்லை. சமஸ்கிருதமயத்திற்கு பின்னரே அவற்றில் எழுத்திலக்கிய நிகழ்வு நடந்துள்ளது.யோசித்துப்பாருங்கள், கம்பராமாயணத்தில் இருந்து தமிழ் இலக்கியம் தொடங்கியிருந்தால் எப்படி இருந்திருக்கும்.அப்படி தொடங்கவில்லை என்பது தமிழிலக்கியத்தின் உச்சமாக கருதப்படும் கம்பராமயணத்தின் மேன்மைக்கும், அது எழுதப்பட்ட மொழிக்கு ஆயிரம் வருட இலக்கிய மரபும் கொள்கைகளும் உண்டென்பதற்கான சான்றும் ஆகும்.
  •  

உடைந்த பாலம் கவிதைகள் : ஷங்கர்ராமசுப்ரமணியன்

May 05, 2025 வலிமிகுந்து மொழி திணறிப் போகும் போது தொடர்பு படுவோம். அதுவரை நீ நான் என்று உரு ஆகாமல் அலையாய் திரளாய்
  •  

உலகின் கடைசி இரவு : ரே பிராட்பரி

May 03, 2025 இதில் ஏதோ மிகவும் வேடிக்கையாகத் தோன்றியது, அவனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. தான் செய்த வேடிக்கையான காரியம் என்னவென்று அறிந்ததில் அவளும் அவனுடன் சேர்ந்து சிரித்தாள். இறுதியில் அவர்கள் சிரிப்பதை நிறுத்திவிட்டு, தங்களது குளிர்ந்த இரவுப் படுக்கையில் கைகோர்த்துக் கொண்டு, தலைகளை அருகருகே வைத்துக் கொண்டு படுத்தார்கள்.
  •  

மகிழ்ச்சி என்பது ஓர் ஏமாற்று வேலை : பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

May 01, 2025 எனக்கு துயாரார்த்தமே நம்பகமான ஒன்றாகப் படுகிறது. மகிழ்ச்சி என்பது இந்த உலகுக்கும் நமக்கும் இடையே நடக்கிற,  உணர்ச்சிகள் சார்ந்த பரிவர்த்தைனைகளில் இருந்து  நாம் அடையும் இலாபம்.  அதிக விலை வைப்பதால் கிடைப்பதே இலாபம் என்பதால், அதனை எளிமையாக ஓர் வாழ்விற்கு நம்பகத்தன்மை அளிக்கும் உணர்வாக நான் துயரார்த்தத்தை பார்க்கிறேன்.  நாம் மகிழ்ச்சியை ஐயுறுவோம், ஆனால் துயரத்தை சிறுதும் கேள்வி கேட்க மாட்டோம்.  அது எப்போதும் நம்மிடம் இருந்து விலகாமல் இருக்கும் நண்பர்களைப் போல இருக்கிறது.  அதன் அணுக்கம் நமக்கு ஓர் ஆழ்பரிச்சயம்.
  •