Lent/தவக்காலம் என்பது கிறிஸ்தவ மதத்தின் படி ஈஸ்டர்க்கு (இயேசு உயிர்த்தெழுந்த நாள்) முந்தைய 40 நாட்கள். இந்த தவக்காலம் சாம்பல் புதனில் தொடங்கி ஈஸ்ட்டர்க்கு முந்தைய நாள் வரை இருக்கும். இந்த 40 நாளில் விரதம், prayer, ஆடம்பரமாய் வாழுறது இவை எல்லாம் தவிர்க்கப்படும். அந்த காசை சேர்த்து சர்ச் ல கொடுத்துருவாங்க. இந்த 40 நாள் எதை குறிக்கிறது என்றால் இயேசு 40 நாட்கள் பாலைவனத்தில் விரதம் இருப்பார். அப்போ சாத்தான் வந்து உனக்கு இதை தரேன் அதை தரேன் என்கூட வான்னு ஆசை காட்டும் ஆனாலும் இயேசு கட்டுப்பாடா இருப்பாரு. இதை குறிக்கும் விதமா கிறிஸ்தவர்களும் 40 நாள் temptation எல்லாம் கட்டுப்படுத்தி விரதம் இருக்கிறார்கள். ரைட்டு.
இந்த பழக்கம் எப்படி தொடங்கியது? அதே தான்!
இது ஒரு pagan பண்டிகை.
Carnival என்பது பல நாடுகளில் மிக விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. சாம்பல் புதனுக்கு முதல் நாள் Carnival கொண்டாடப்படும். Rio de Janeiro வில் ஆண்டுதோறும் நடக்கும் Carnival உலக பிரசித்தி பெற்றது. ஆட்டம், பாட்டம், குடி, கறி, விருந்து, public parades, masquerades ன்னு ஒரே குதூகலமாக இருக்கும்.
Carnival என்ற சொல் லத்தீன் சொல்லான Carne Levare or carnelevarium லில் இருந்து வந்தது இதற்கு பொருள் ‘farewell to the flesh’. அதாவது இனி அடுத்த 40 நாளுக்கு மாமிசம் கிடையாது. ஏன் அடுத்த 40 நாள் மாமிசம் கிடையாது? winter முடிந்து வசந்தகாலம் ஆரம்பிக்கும் நாள் தான் சாம்பல் புதனுக்கு முந்தைய நாள். winter காக முந்தைய வசந்த காலத்தில் உணவை சேமித்து வைத்து இருப்பார்கள். குளிர் காலம் முடியும் போது சேமித்த உணவுகளில் மீதி இருப்பதை எல்லாம் அந்த ஒரு நாளில் சமைத்து எல்லாரும் உண்டு காலி பண்ணுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். winter க்காக November மாதமே கறியை எல்லாம் உப்பு கண்டம் போட்டு அல்லது whatever processing பண்ணி வைத்திருப்பார்கள் February, march மாதங்களில் அதன் expiry நெருங்குவதால் எல்லா சாப்பாடும் ஒரு நாளில் விருந்தாக வைக்கப்படும். அது ஒரு பெரிய விழா அதான் Carnival. அன்று நல்லா மூக்கு முட்ட சாப்பிடுவதால் அடுத்த 40 நாட்கள் no parties or celebrations, non veg, sweets.
Lent என்ற சொல் Old English word “lencten” லில் இருந்து வந்தது இதற்கு spring என்று பொருள்.
மோசஸ், எகிப்தில் இருந்து, இஸ்ரவேலர்களை மீட்டு கானானை நோக்கி அழைத்து செல்வார். எகிப்தின் பார்வோன் மன்னன், அவர்களை விட கூடாது என்று துரத்தி வரும் போது, செங்கடல் பிளந்து மோசஸ் மற்றும் இஸ்ரவேலர்கள் இக்கரையில் இருந்து அக்கரைக்கு சென்று விடுவார்கள் பார்வோன் மன்னன் அவனது படை கடலை கடக்கும் போது பிளந்திருந்த கடல் மூடி அவர்கள் மூழ்கி இறந்து விடுவார்கள்.
யாத்திராகமம் 14:16 – நீ உன் கோலை ஓங்கி, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, சமுத்திரத்தைப் பிளந்துவிடு; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோவார்கள்.
21 – மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப்பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று.
22 – இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள்; அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது.
26 – கர்த்தர் மோசேயை நோக்கி: ஜலம் எகிப்தியர்மேலும் அவர்களுடைய இரதங்கள்மேலும் அவர்களுடைய குதிரைவீரர் மேலும் திரும்பும்படிக்கு, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டு என்றார்.
28 – ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும் அவர்கள் பின்னாக சமுத்திரத்தில் பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை.
கடவுள் எப்படி மோசே மூலம் அற்புதத்தை நிகழ்த்தி இஸ்ரவேலர்களை பார்வோன் மன்னனிடமிருந்து காப்பாற்றினார் (ஆனால், கடவுள் தான் பார்வோன் மன்னன் மனதை மாற்றி அவர்களை பின்தொடர செய்வார். பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் கதை) என்பதை விளக்கும் கதை இது.
அதெப்படிங்க கடல் இரண்டாக பிளக்கும் என்று இந்த கதையை நம்பாமல் போகலாம். அல்லது என்னே கடவுளின் அற்புதம் என்று ஆச்சரியத்தில் வியக்கலாம்.
ஆனால் இப்படி நடக்க சாத்தியக்கூறு இருக்கிறதா? கடல் இரண்டாக பிளக்குமா? இதை ஆராய்ந்தவர்கள் என்ன சொல்கிறார்கள்?
பைபிளில் இயேசு பிறந்தது முதலாம் நூற்றாண்டு என்று இருக்கிறது அதை அடிப்படையாக வைத்து பின்னோக்கி சென்று பைபிளில் இருக்கும் தகவல்களை வைத்து எந்தெந்த சம்பவங்கள் எந்தெந்த காலத்தில் நடந்திருக்கும் என்று கணிக்கப்படுகிறது. அப்படி பார்க்கையில் செங்கடல் இரண்டாக பிளந்த சம்பவம் நடந்த காலம் 1250 BCE அப்போது எகிப்தின் ராஜாவாக இருந்தவர் Ramses II.
1250 BCE, Ramses II எகிப்தின் ராஜாவாக இருந்த காலத்தில் செங்கடல் இரண்டாக பிளந்த சம்பவம் நடந்திருக்கிறதா? அறிவியல், புவியியல், தொல்பொருளியல், வரலாறு, என்ன சொல்கிறது?
இஸ்ரவேலர்கள் 430 வருடங்கள் எகிப்தில் இருந்ததாக சொல்கிறது. ஆனால் 430 வருடங்கள் எகிப்தில் இஸ்ரவேலர்கள் இருந்ததாக பைபிளை தவிர வேறு எந்த எழுத்து பூர்வ ஆதாரமும் இல்லை. இத்தனைக்கும் எகிப்தியர்கள் எல்லாவற்றையும் விவரமாக பதிவு செய்வதை வழக்கமாக கொண்டவர்கள்.
Merneptah Stele என்னும் ஒரு பழைய எகிப்திய பலகையில் (13th century BCE) இஸ்ரேல் என்னும் சொல் ஒரே ஒரு முறை இடம் பிடித்திருக்கிறது. Merneptah Stele, ராஜா Merneptah யாரை எல்லாம் போரிட்டு வென்றார் என்பதை அறிவிக்கும் ஒரு கற்பலகை ஆகும். இதில் Merneptah இஸ்ரேல் மக்களை வென்றார் என்ற குறிப்பு இருக்கிறது. இந்த Merneptah, Ramses II ன் மகன். இந்த ஒரே ஒரு கற்பலகை மட்டுமே இஸ்ரேலியர்களை பற்றிய ஒரே ஒரு external reference.
இதை தவிர்த்து இஸ்ரேல் மக்களுக்கு தொடர்புடைய இன்னொரு சொல்லும் இன்னொரு எகிப்திய கற்பலகையில் (1550-1070 BCE) காணப்படுகிறது அது Shasu of Yahweh. Shasu of Yahweh என்ற இன மக்களை பற்றிய விலாவரியாக குறிப்புகள் இல்லை என்றாலும் Shasu of Yahweh என்ற செமிட்டிக் மக்கள் கானானை சுற்றி இருந்தார்கள் என்ற குறிப்பு எகிப்திய கற்பலகையில் இருக்கிறது.
இதில் நம் கவனத்தை இழுப்பது Yahweh என்ற சொல் தான். Yahweh இஸ்ரவேல் மக்களின் கடவுள். யார் இந்த Yahweh/Jehovah? கானான் நிலம் அதை சுற்றி இருக்கும் நிலத்தில் வசிக்கும் மக்கள் செமிட்டிக் மக்கள் என்றழைக்கப்பட்டார்கள். இவர்கள் எகிப்தியர்கள் கிரேக்கர்கள் போல பல தெய்வங்களை வழிபட்டார்கள். எப்படி Zeus, Odin, இந்திரன் போன்றவர்கள் தேவர்களின் கடவுளாக அல்லது தலைமை கடவுளாக இருந்தார்களோ அப்படி இவர்களின் தலைமை கடவுள் El (father of the gods) இந்த El க்கு 70 பிள்ளைகள் எல்லாரும் கடவுள்களே. மழைக்கு ஒரு கடவுள், வெயிலுக்கு ஒரு கடவுள் இப்படி. அந்த வகையில் புயல் மற்றும் மலையின் கடவுள் Yahweh/Jehovah/YHWH. இவரது மனைவி Asherah. so செமிட்டிக் மக்கள் பல கடவுள்களை வணங்கி வந்தார்கள் அவர்களில் ஒரு சிறிய குழு Yahweh வை வழிபட்டு வந்தது. இந்துக்கள் பல கடவுள்களை வணங்கி வந்தாலும் சிலர் மாரியம்மனை முதலாவதாக வழிபடுவார்கள் இல்லையா அது போல. அந்த குழு ” Shasu “. செமிட்டிக் மக்களில் ஒரு குழு.
இஸ்ரேல் மக்களும் Yahweh வை தான் வழிபடுவதால் இந்த Shasu of Yahweh இஸ்ரேல் மக்களை குறிப்பதாக இருக்கலாம் என்று கருதுகிறார்கள். இந்த Shasu மக்களின் குடியிருப்புகள் எகிப்தில் கண்டு எடுக்கப்பட்டிருக்கின்றன. இவர்களின் வீட்டின் அமைப்பும் கானான் நிலத்தில் இருக்கும் வீட்டின் அமைப்பும் ஒன்று போலவே இருக்கிறது. எனவே இவர்கள் எகிப்திலிருந்து கானானுக்கு சென்று இருக்க கூடும்.
பைபிளில் ராம்செஸ் என்னும் நகரத்தில் இருந்து இஸ்ரவேலர்கள் புறப்பட்டு சென்றதாக இருக்கிறது. அந்த ராம்செஸ் நகரம் தற்போதைய Qantir என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.இப்போ ராம்செஸ் ல இருந்து கானானுக்கு நேரடி வழி east Mediterranean coast வழியாக செல்வது. ஆனால் பைபிளில் இஸ்ரேல் மக்கள் பாலைவனம் வழியாக சுற்றிக்கொண்டு செங்கடலை தாண்டி செல்வதாக இருக்கிறது.
செங்கடலில் குறுகிய அகலம் கொண்ட இடத்தில் அவர்கள் கடந்து சென்று இருப்பார்கள் என்று வைத்து கொள்வோம். அந்த குறுகிய அகலம் கொண்ட இடத்தில் ஆழம் 300 அடி, கடக்கவேண்டிய தூரம் 49 km. ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மக்கள் கடலை கடந்து சென்று இருக்கிறார்கள். அவ்வளவு மக்கள் கடந்து செல்ல வேண்டுமானால் குறைந்தது 1 km அகலத்திற்காவது கடல் பிரிய வேண்டும்.அப்படியானால் எவ்வளவு நீர் displace ஆகி இருக்கும்? லட்சக்கணக்கான மக்கள் 50 km தொலைவை ஒரே நாளில் எப்படி நடந்து கடந்து செல்ல முடியும்?
சாத்தியமே இல்லாதது போல் தோன்றுகிறதல்லவா? இங்கே தான் ஆய்வாளர்கள் வேறு ஒரு theory யை முன் வைக்கிறார்கள். பைபிளில் எபிரேய மொழியில் மோசஸ் நீரை இரண்டாக பிளந்த இடம் Yam Suph என்று இருக்கிறது. இந்த Yam Suph (ים סוף) என்ற எபிரேய சொல்லை ஆங்கிலத்தில் நாம் Red Sea என்று மொழியாக்கம் செய்து அது செங்கடல் என்கிறோம். ஆனால் எபிரேய மொழியில் Yam என்றால் கடல், Suph என்றால் reeds தமிழில் நாணல் செடி. ஆக Yam Suph” (ים סוף) என்றால் “Sea of Reeds” அல்லது “Reed Sea” இதன் தவறான மொழிபெயர்ப்பு தான் Red Sea செங்கடல். Reed Sea என்றால் நாணல் செடிகள் நிரம்பிய சதுப்பு நிலம்.
எகிப்தில் Luxor என்னும் ஊரில் Karnak Temple இருக்கிறது. இது Amun கடவுளுக்காக கட்டப்பட்ட கோவில். இப்போது சிதிலமடைந்து சில சுவர்கள் மட்டும் எஞ்சியிருக்கும் இந்த கோவிலில் புரட்சி செய்த Shashu மக்களை மன்னன் Seti (Ramses II ன் அப்பா) எப்படி அடக்கினார் என்ற inscriptions இருக்கிறது. ஒரு வரைபடம் போல இருக்கும் இந்த கல்வெட்டில் நைல் நதி ஆற்றினருகே நாணல் செடி அதிகமுள்ள ஒரு சதுப்பு நிலத்தில் Seti புரட்சி செய்த Shashu மக்களை அடக்கினார் என்பதாக செதுக்கப்பட்டிருக்கிறது.
பைபிளில் இஸ்ரேல் மக்கள் கடல் பிளப்பதற்கு முன்பு மிக்தோல் என்னுமிடத்தில் முகாமிட்டதாக இருக்கிறது. இந்த மிக்தோல் தற்போதைய நைல் நதி ஆற்று படுக்கையை ஒட்டி அமைந்திருக்கிறது.
யாத்திராகமம்14:2 – நீங்கள் திரும்பி மிக்தோலுக்கும் சமுத்திரத்துக்கும் நடுவே பாகால்செபோனுக்கு முன்பாக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடியிலே பாளயமிறங்கவேண்டும் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு; அதற்கு எதிராகச் சமுத்திரக்கரையிலே பாளயமிறங்குவீர்களாக.
ஆற்றுக்கு அந்தப்பக்கம் Manzaleh ஏரி இருக்கிறது. Manzaleh ஏரியை சுற்றிலும் நாணல் செடிகள் மிகுந்திருக்கின்றன.
இந்த Manzaleh ஏரி மிகப்பெரிய ஏரி பார்க்க கடல் போலவே தோற்றமளிக்கும் ஏரி.
1882 ல் Sir Alexander Bruce Tulloch என்பவர் Manzaleh ஏரிக்கு அருகே அவரது ஆட்களுடன் முகாமிட்டு இருந்தார். அவர் அங்கு கண்ட விந்தையான காட்சியை பதிவு செய்து இருக்கிறார். இரவு மிகப்பெரிய புயல் காற்று வீசி இருக்கிறது. விடிந்தபின் முகாமை விட்டு வெளியே வந்து பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது ஏரியில் ஒரு சொட்டு நீர் கூட இல்லை.
ஆழம் குறைவான நீர் நிலைகள் மேல் அதிவேக காற்று வீசும் போது அந்த காற்று நீரை வேறு இடத்திற்கு கொண்டு செல்கிறது. இதற்கு wind-induced water displacement என்று பெயர். இன்னொன்று இருக்கிறது Wind setdown. இதில் அதிவேக காற்று தொடர்ந்து வீசும் போது நீர் விலகி சென்று விடும் கடற்கரைகளில் இதை நாம் பார்க்க முடியும். காற்று ஓய்ந்த பின் நீர் இயல்பு நிலைக்கு திரும்ப வரும். ஆக கடல் நீர் அல்லது ஏரி நீர் இரண்டாக பிளப்பதோ, பின் வாங்கி செல்வதோ, வற்றி உடனே நீர் மீண்டும் வருவதோ அற்புதம் அல்ல அது ஒரு இயற்கை நிகழ்வே.
தற்போது மிக்தோலை சுற்றி ஏரி எதுவும் இல்லை வெறும் நிலம் தான் இருக்கிறது. ஆனால் 3000 வருடங்களுக்கு முன்பு அங்கு ஒரு ஏரி இருந்திருக்கிறது என்பதை Satellite imagery மூலம் கண்டுபிடித்து இருக்கிறார்கள். ஆனால் ஏரி எப்படி கடலானது? Kinneret ஏரியையும் பைபிளில் Galilee கடல் என்றே குறிப்பிடுவார்கள். Kinneret ஏரி மிகப்பெரிய ஏரி. மிகப்பெரிய ஏரிகளை கடல் என்று பைபிள் குறிப்பது பெரிய விஷயம் இல்லை.
சரி, ஏரியில் நீர் உள்வாங்கி விட்டது அதை சில Shasu மக்கள் கடந்து சென்று இருக்கிறார்கள். மிகைப்படுத்தி சொல்லுதல் எல்லாவகை புராணங்களிலும் இயல்பானது என்பதால் ஏரி கடலானது, 100 Shasu மக்கள் லட்சக்கணக்கான மக்கள் ஆனார்கள். ஆனால் எகிப்தியர்கள் கடலில் மூழ்கி இறந்து போனார்கள் என்ற கதை எப்படி வந்திருக்கக்கூடும்?
வாய் வழியாக பல நூறு வருடங்கள் கடத்தப்பட்ட கதை பல கிளைக்கதைகளையும் சேர்த்து கொண்டு வரும். அப்படி சேர்க்கப்பட்ட கதை தான் எகிப்தியர்கள் கடலில் மூழ்கி இறந்து கதை.
Luxor க்கு அருகில் (Shasu மக்களின் குடியிருப்புகள் இருந்ததாக சொல்லப்படும் இடம்) Valley of the Kings இருக்கிறது. இறந்த மன்னர்களை புதைக்கும் இடம். இங்கு Thutmose II மன்னனின் tomb இருக்கிறது. 1550 BCE யில் இந்த tomb அமைக்கப்பட்டது. மோசஸ் செங்கடலை பிளந்த காலத்திற்கு முன்.
இந்த tomb ல் பல கதைகள் சுவரோவியமாக வரையப்பட்டு இருக்கின்றன. அதில் எகிப்திய வீரர்கள் நீரில் மூழ்கி இறந்து போவது போல ஒரு ஓவியமும் இருக்கிறது.
exodus நடப்பதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பு Island of Santorini யில் Thera என்றொரு எரிமலை இருந்திருக்கிறது. 1550 BCE யில் இந்த எரிமலை வெடித்து சிதறி இருக்கிறது. இது அடுத்தடுத்து பல சுனாமிகளை உண்டாகி இருக்கிறது.
இந்த சுனாமிகள் எகிப்தின் கடலோர பகுதிகளை தாக்கி ஊருக்குள்ளும் புகுந்திருக்கும். இதில் பலர் மாண்டு போயிருந்திருக்க கூடும். இந்த நிகழ்வு மாபெரும் நிகழ்வு. அன்றைய காலத்தில் சுனாமி பற்றிய அறிவோ, Santorini என்ற தீவு எகிப்திலிருந்து 800 km தொலைவில் இருக்கிறதென்றோ அதில் எரிமலை வெடித்தததால் ஏற்பட்ட விளைவு இது என்றோ யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
மிக பெரிய அலை வந்து பலர் இறந்து போனார்கள் என்பது அன்றைய மக்களுக்கு மிகப்பெரிய அதிசயம் பல 1000 ஆண்டுகள் நினைவில் இருக்கும் அற்புதம். இது Thutmose II மன்னனின் tomb லும் ஓவியமாக இடம்பெற்று இருக்கிறது. இந்த கதை தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டு இருக்கும். Shasu மக்களும் இந்த கதையால் உந்தப்பட்டு அவர்கள் தப்பிச்சென்ற கதையுடன் இதை இணைந்திருக்க கூடும்.
Source: Buried Secrets of the Bible with Albert Lin; National Geographic Documentary.
Once upon a time, in a quaint town nestled amidst whispering cashew trees, lived a girl named Anika. Within her, a silent storm brewed, embodied by an unseen shadow that only she could perceive. The shadow draped itself around her like an ethereal veil, forever present yet invisible to the eyes of others.
The shadow, a companion that followed Anika wherever she roamed, tormented her like an unwelcome specter. It loomed over her like an insidious fog, threatening to swallow her whole. She would catch glimpses of it from the corner of her eye, a dark silhouette silently creeping closer with each passing day.
But as the shadow encroached upon her, Anika found herself caught between a rock and a hard place. The people around her, oblivious to the relentless darkness that pursued her, dismissed her fears as mere figments of an overactive imagination. Their voices echoed with criticism and skepticism, insisting, “There is no shadow, Anika. You’re overreacting.”
Her heart, burdened with both the looming shadow and the weight of their words, sank further into the abyss. She felt like a fragile bird, desperately seeking refuge from an unrelenting storm, only to find herself scorned by those who believed her struggle to be imagined.
Determined to prove them wrong, Anika attempted to hide from the shadow, like a rabbit darting into the thicket, hoping to escape the predator’s gaze. She plastered a smile on her face, feigning strength while concealing the turmoil that raged within her. Yet, with each passing day, the shadow’s presence only grew stronger, encircling her like a tightening noose.
In her darkest moments, Anika wondered if she was truly losing her mind. Was the shadow a figment of her imagination, as they claimed? Or was it a tangible manifestation of her deepest fears and vulnerabilities? The uncertainty gnawed at her sanity, threatening to unravel the delicate threads of her existence.
But amid the chaos, Anika discovered a glimmer of solace in her creativity and wit. Like a jester dancing amidst the darkness, she embraced the power of words and humor as her secret weapons. She would quip, “you sly shadow, always lurking in the periphery. But I’ll outwit you yet!”
Through her words, Anika found a way to describe the indescribable, to express the inexplicable emotions that plagued her soul. Her words became a beacon, reaching out to others who shared her silent battles. They too recognized the shadow’s presence, validating Anika’s truth and providing her with a much-needed sanctuary of understanding.
United with kindred spirits who also bore the weight of unseen shadows, Anika learned that her struggle was not in vain. Together, they formed an unbreakable bond, lifting each other up as they faced their demons head-on. In their shared vulnerability, they discovered strength and resilience, the antidotes to the darkness that threatened to consume them.
Over time, Anika realized that the opinions of those who failed to perceive the shadow held no power over her truth. She understood that her journey was unique, and that her strength lay in embracing her fears and finding support from those who believed her.
And so, armed with her words and a tribe of understanding souls, Anika walked her path with newfound courage. The shadow still lurked, a constant reminder of her struggles, but it no longer held dominion over her spirit. She had learned to live alongside it, to dance with her fears while basking in the light of compassion and acceptance.
எப்படியாவது உயிர் வாழ வேண்டும் என்று, நமது மூளை பல குட்டிக்கரணம் போடும். பரிணாம வளர்ச்சி கூட, இந்த எப்படியாவது உயிர் வாழ வேண்டும் என்கிற வேட்கையின் விளைவுதான்.
இந்த வேட்கையின் ஒரு வெளிப்பாடு தான் third man syndrome. எங்கோ ஆள் இல்லாத காட்டுக்குள், நடுக்கடலில், பனி மலையில், தன்னந்தனியாக நாம் மாட்டிக்கொண்டோம் என்று வைத்துக்கொள்வோம். ஒரு ரெண்டு நாள் அதிகபட்சம் ஒரு வாரம் தனிமையில் சமாளித்து விடுவோம். பின் மெல்ல மெல்ல தனிமை, இந்த சூழலில் இருந்து மீளவே முடியாதா? ஐயோ யாருமின்றி இப்படி வந்து மாட்டிகொண்டமே என்கிற பீதி இதெல்லாம் சேர்ந்து நம்மை கடுமையாக தாக்கும்.
தனிமை தாங்க முடியாது. அப்போது நாமாகவே Cast Away படத்தில் வரும் Chuck போல ஒரு பந்தை வைத்து கொண்டு, “என்னடா Wilson நம்ம நிலைமை இப்படி ஆகி போச்சே” என்று பேச ஆரம்பித்தால் ஒரு மாதிரி சமாளிக்கலாம்.
பிக் பாஸ் வீட்டில் உள்ளே போன கொஞ்ச நாளில் காமெராவை பார்த்து மக்கள் பேச ஆரம்பித்து விடுவார்கள். அது எதோ attention seeking என்று நாம் நினைக்கலாம் ஆனால் உண்மையில் அது ஒரு உளவியல் சிக்கலே. நமது எண்ணத்தை பகிர்ந்து கொள்ள ஆள் இல்லாதபோது, வேறு ஒரு வடிகாலை நமது மூளை தேடும் அது பிக் பாஸ் காமெராவாக இருக்கலாம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளமாக இருக்கலாம், டைரியாக இருக்கலாம், அல்லது Wilson என்னும் football ஆக இருக்கலாம்.
football ஐ Wilson ஆக கற்பனை செய்து பேசும்போது கொஞ்ச நாள் வரை அது football என்பது நமக்கு தெரியும். நாள் போக போக அது football என்பது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து அது Wilson என்றொரு ஆள் என்றே நினைக்க தொடங்கிவிடுவோம். Cast Away படத்தில் Chuck, conscious ஆக ஒரு மூன்றாவது ஆளை கற்பனை செய்து கொள்கிறார். தனிமையை போக்கி கொள்ள… உயிர் வாழ…
Cast Away படத்தில் Chuck க்கு stress கம்மி அவருக்கு ஒரு நல்ல தீவு, தண்ணீர், உணவு, இருப்பிடம் போன்றவை அமைந்துவிடுகிறது. அவர் சாவகாசமாக Wilson என்றொரு ஆளை கற்பனை செய்கிறார்.
ஆனால் உயிருக்கு ஆபத்தான சூழலில் சிக்கி கொள்ளும்போது, நடுக்கடலில் பனிமலையில் ‘தோ அவ்ளோதான் நம்ம கதை முடிஞ்சது’ என்ற அதிக life-threatening சூழலில் மாட்டும்போது stress அதிகரிக்கிறது. ‘இனிமே எதுவுமே பண்ண முடியாது, சாக வேண்டியது தான்’ என்பது போல நாம நினைக்க தொடங்கும்போது, ‘அய்யய்யோ எங்க இந்த பய பிழைக்க முடியாது ன்னு கையை கிய்யா அறுத்து தொலைச்சுப்பானோ, இல்லாட்டி எதுவுமே முயற்சி பண்ணாம அப்படியே உக்காந்துருவானோ’ என்று நமது மூளை பீதி அடைந்து எப்படியாவது உயிர் வாழ வேண்டும் என்று புதிதாக ஒரு ஆளை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. நம்மை hallucinate பண்ண வைக்கிறது.
இதற்கு பெயர் third man syndrome. மலையேறுபவர்கள், polar explorers, கப்பல் விபத்தில் மாட்டி கொண்டவர்கள் பலருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டு இருக்கிறது.
1933 ல் Frank Smythe என்பவர் Mt. Everest சிகரத்தை கிட்டத்தட்ட அடையும் நிலைக்கு சென்றார். அவரும் சிலரும் மலையேற தொடங்கும்போதே சூழல் மோசமாக இருந்து இருக்கிறது. போக போக weather மோசமாக இருக்கவும் அவருடன் வந்த அனைவரும் திரும்பிவிட்டனர். இவர் மட்டும் தனியாக தொடர்ந்து முன்னேறி இருக்கிறார். பல இடங்களில், ‘இதோட நம் கதை முடிந்தது’ என்று துவளும் போதெல்லாம் ஒரு ஆள் வந்து, “அதெல்லாம் ஒண்ணுமில்ல கொஞ்ச நேரத்துல புயல் நின்னுடும், நாம இந்த பக்கமா போகலாம்” இப்படி பேசி கொண்டே வந்ததாக சொல்கிறார். அந்த ஆளுக்கு தன்னிடம் இருந்த Kendal mint cake எல்லாம் குடுத்து இருக்கிறார். இவர் சாப்பிட்டு திரும்பி பார்த்தால் கேக் கீழே கிடந்தது இருக்கிறது.
ஒருத்தன் நம்ம கூட இருக்கானா? இல்லையா? என்ற குழப்பத்துடனே உயிர் பிழைத்து வந்து இருக்கிறார். ஆனால் அந்த ஒருவன் இல்லாவிட்டால் நான் சோர்ந்து போயிருப்பேன் என்கிறார்.
இம்மாதிரியான பல சம்பவங்களை பற்றி John Geiger, The Third Man Factor: Surviving the Impossible என்னும் புத்தகத்தை எழுதி இருக்கிறார். இதை hallucination என்றும் சொல்ல முடியாது. ஏனெனில் hallucination க்கு பெரிதாக அர்த்தம் எதுவும் இருக்காது. தாறு மாறா இருக்கும். ஆனா third man syndrome ல் கூட வரும் அந்த நபர் நமக்கு ஆறுதல் சொல்லுவதும், idea தருவதுமாக இருப்பார். (இந்த idea நமக்கு தெரிந்த idea தான். ஆனா பதட்டத்தில் நமக்கு எதுவும் தோன்றாது. இந்த மூணாவது ஆள் புதுசா நமக்கு சொல்ற மாதிரி இந்த idea களை சொல்லுவார். அதாவது நம்ம மூளை நம்மகிட்ட எடுத்து குடுக்குது.)
1914 ல் Shackleton என்பவரும் அவரது குழுவினரும் Endurance என்னும் கப்பலில் South Georgia Island ல் இருந்து கிளம்பி Antarctica வில் அதுவரை யாரும் பார்க்காத இடங்களை பார்த்து வருவதர்க்காக கிளப்பினார்கள். ஆனால் Weddell Sea ல் உறைந்த பனிக்குள் கப்பல் மாட்டி சின்னாபின்னமாகிவிட்டது. கப்பலை பனியில் இருந்து எடுக்க பல மாதங்கள் குளிரில் முயன்று இருக்கிறார்கள் முடியவில்லை.
கடைசியில் கப்பல் மூழ்க ஆரம்பித்ததும் 3 lifeboat ல் Elephant Island சென்று சேர்ந்து இருக்கிறார்கள். அங்கு குழுவினரை விட்டுவிட்டு Shackleton உம் இன்னும் 3 பேரும் மட்டும் 1 lifeboat ல் South Georgia Island நோக்கி (1,300 kilometers) பயணித்து இருக்கிறார்கள். தீவில் ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கத்திற்கு தீவின் மலைகளில் ஏறி சென்று இருக்கிறார்கள்.
இப்படி மலை மீது நால்வரும் செல்லும்போது Shackleton க்கு கூட 3 நபர்களுடன் 4 வதாக ஒரு ஆள் வந்ததாக தோன்றி இருக்கிறது. இந்த 4ஆம் நபர் Shackleton க்கு ஆறுதலும் உத்வேகமும் அளித்தபடி வந்து இருக்கிறார்.
கவிஞர் T.S. Eliot இந்த சம்பவத்தில் impress ஆகி The Waste Land என்னும் அவரது கவிதையில் இதை பயன்படுத்தி இருக்கிறார்.
Who is the third who walks always beside you? When I count, there are only you and I together But when I look ahead up the white road There is always another one walking beside you Gliding wrapt in a brown mantle, hooded I do not know whether a man or a woman But who is that on the other side of you?
இந்த கவிதையில் இருந்து தான் Third Man என்ற பெயர் வந்தது.
பெண்கள் ஏரோபிளேன் ஓட்டுவது போல 2 வீலர் ஓட்டுவார்கள் என்று பொதுமைப்படுத்தி நக்கலடிப்பது போலவே, அறிவியலிலும், ‘பெண்களால் சிந்திக்க முடியாது, இயந்திரங்களை, தொழில்நுட்பங்களை கையாள தெரியாது’ என்பது போன்ற எண்ணங்கள் கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் இருந்தே இருக்கிறது. இந்த எண்ணத்தின் விளைவாக அறிவியலில் பெண்களின் பங்களிப்பு ஓரங்கட்டப்பட்டு வந்தது. பெண்களின் கண்டுபிடிப்புகள் ஆண்களின் பெயராலேயே வழங்கப்பட்டு வந்தது. இதற்கு “the Matilda effect” என்று பெயர்.
1969 ல் Margaret Rossiter என்னும் பெண், அப்போது அவருக்கு 24 வயது, Yale பல்கலைக்கழகத்தில் history of science ஐ தேர்வு செய்து படித்து வந்தார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் professors மற்றும் students ஒன்றுகூடி பேசுவது வழக்கம். அறிவியல் வரலாற்றில் தலைச்சிறந்த விஞ்ஞானிகளை பற்றி பேசுவார்கள். அதில் ஒருமுறை கூட ஒரு பெண் விஞ்ஞானியை பற்றி யாரும் மூச்சு கூட விட்டதில்லை. ஆச்சரியப்பட்ட Rossiter, ‘பெண் விஞ்ஞானிகளே இல்லையா?’ என்று கேட்க எல்லா ஆண்களும் ஒரே நேரத்தில் சிரித்தபடி, ‘ஏதே பெண் விஞ்ஞானியா? அப்படி ஒன்று இல்லவே இல்லை’ என்றிருக்கிறார்கள்.
அப்போ Marie Curie என்றதற்கு, Curie யின் கணவர் தான் உண்மையான மூளைக்காரர். அவர் கூடமாட இருந்து Marie Curie உதவி செய்து இருக்கிறார் அவ்வளவே என்று சொல்லி அதிர்ச்சியூட்டி இருக்கிறார்கள்.
Marie உடனே molten radium chloride ஐ electrolyze செய்து pure radium ஐ isolate பண்ணி Kelvin னின் கூற்று தவறென்று நிரூபித்தார்.
“There are sadistic scientists who hurry to hunt down errors instead of establishing the truth.” – Marie Curie
இவங்ககிட்ட பேசுறது வேஸ்ட் என்று நினைத்த Rossiter, அமைதியாக அவ்விடத்தை விட்டு நகன்று இருக்கிறார். ஆனாலும் அவர் மனதை இந்த சம்பவம் பிராண்டி கொண்டே இருந்திருக்கிறது. அதெப்படி இத்தனை வருடங்களில் பெண் விஞ்ஞானிகளே இல்லாமல் இருப்பார்கள் என்று. அவரது ஆராய்ச்சிக்கு அவர் தேர்ந்தெடுத்த தலைப்பு “Women Scientists in America”. பல வருடங்கள் ஆராய்ச்சி செய்து, பெண் விஞ்ஞானிகளை பற்றிய ஆராய்ச்சி கட்டுரை எழுதினார். அதில் ஒரு தலைப்பு Struggles and Strategies to 1940. பெண் விஞ்ஞானிகள் எப்படி மட்டம் தட்டப்படுகிறார்கள், அவர்களது கண்டுபிடிப்புகள் எப்படி கூட இருக்கும் ஆண் விஞ்ஞானி பெயரில் எழுதப்படுகிறது என்றெல்லாம் விரிவாக விளக்குகிறது இவரது ஆராய்ச்சி கட்டுரை. இது வெளிவந்தபோது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
வெற்றி பெற்றவர்கள் மட்டுமே வரலாற்றை எழுதுகிறார்கள். ஆனால் பெண்கள் விஷயத்தில் பெண்கள் வெற்றி பெற்றாலும் அந்த வரலாற்றை திருத்தி எழுதுவது ஆண்களாக இருக்கிறார்கள்.
Astronomy, physics, chemistry, entomology, botany என்று பல துறைகளில் மறக்கடிக்கப்பட்ட பெண்களின் வரலாற்றை தோண்டி எடுத்தார் Rossiter. the Matilda Effect என்னும் சொற்றொடரை முன்மொழிந்தவர் Rossiter.
Matilda Joslyn Gage (1826-1898) என்பவர் அமெரிக்க எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர். இவர் பெண்களின் ஓட்டு உரிமைக்காக மற்றும் கறுப்பின அடிமை முறையை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்தவர். இவரும் வரலாற்றில் மறைக்கப்பட்ட பெண்களை பற்றி நிறைய எழுதி இருக்கிறார். ஆனால் இவரும், அவர் எழுதிய பெண்களை போலவே மறைக்கப்பட்டது தான் சோகம். இவரை கௌவரவப்படுத்தும் விதமாக, பெண்களின் சாதனைகளை, வேண்டுமென்றே அறிந்தே ஆண்களால் மறைக்கப்படும் செயலுக்கு the Matilda Effect என்னும் பெயரை Rossiter முன்மொழிந்தார்.
Matilda மறைக்கப்பட்ட பெண்களை பற்றி பேசியவர் அவருக்குப்பின் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் கழித்து பிறந்த Margaret Rossiter அவரும் மறைக்கப்பட்ட பெண்களை பற்றி பேசியவர் இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இன்னொரு பெண் வந்து வரலாற்றில் மறைந்து போன பெண்களை பற்றி பேசத்தான் வேண்டி இருக்கும் போல.
Spirituality க்கு தமிழில் ஆன்மீகம் என்கிறார்கள். மதமும் தமிழில் ஆன்மீகம் தான். அப்படியானால் இரண்டும் ஒன்றா?
மனிதன் முதலில் spirituality யில் தான் ஆரம்பித்து இருக்கிறான். Spirituality யில் இருந்து வந்தது தான் மதம். நாம் யார்? இந்த பூமியில் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? இறந்த பின் எங்கு செல்வோம்? நமக்கு நெருக்கமான ஒருவர் இறந்த பின்னும் இந்த பூமியில் நாம் வாழ வேண்டி இருக்கே ஏன்? அதை எப்படி எதிர்கொள்ளவது போன்ற கேள்விகள் தான் spirituality க்கு ஆரம்பம். பதில் தெரியாத இந்த கேள்விகளுக்கு தத்துவங்கள் மூலம் பதில் சொல்வது spirituality. இந்த கேள்விகளுக்கு எல்லாம் கடவுள் என்று பதில் சொன்னால் அது மதம்.
Spirituality மற்றும் மதம் இரண்டிற்கும் கேள்விகள் ஒன்றே ஆனால் பதில்கள் தான் வேறு. தொடக்கத்தில் spirituality மற்றும் மதம் இரண்டும் ஒன்றற கலந்து இருந்தது. ஆனால் எல்லாவற்றிற்கும் கடவுள் என்ற ஒரே பதில் மட்டும் மனிதனுக்கு போதுமானதாக இல்லை. அப்போது சிலர் கடவுள் இருக்கிறார் ஆனாலும் சில கேள்விகளுக்கு கடவுள் மட்டுமே பதில் அல்ல என்று spirituality க்கு புதிய பாதை வகுத்தனர். அந்த புதிய பாதை இன்று, கடவுள் இருக்கலாம் இல்லாமல் போகலாம், நீங்கள் கடவுளை நம்பலாம் நம்பாமல் போகலாம் கடவுள் என்ற ஒருவரை உள்ளே இழுக்காமலே பதில் கிடைக்காத கேள்விகளுக்கு பதில் சொல்ல முயல்வதுதான் spirituality என்னும் இடத்தில் வந்து முடிந்து இருக்கிறது.
ஆரம்பத்தில் spirituality யில் எல்லா கேள்விகளுக்கும் கடவுள் என்ற பதில் இருந்தது. பின்னர் கடவுளை தொடர்புபடுத்தி ஒரு பதில் இருந்தது, இன்று கடவுளை உள்ளே இழுக்காமலே பதில் சொல்ல முயற்சிக்கப்படுகிறது.
ஒரு spiritualist கடவுள் நம்பிக்கையற்றவராக இருக்கலாம் அதே சமயம் ஒரு ஆன்மீகவாதி spiritual தாக்கமே இல்லாமல் வெறும் கடவுள் சடங்குகள் என்றும் இருக்கலாம். இன்று அவை இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் அற்றவை. ஆனால்… எல்லா மதங்களும் spiritual ஐ முன்மொழிகின்றன. Spiritual கேள்விகளுக்கு தங்களிடம் பதில் இருக்கு நாங்களும் spirituality யின் அங்கம் தான் என்கின்றன.
Spirituality மற்றும் மதத்திற்கு இருக்கும் முக்கியமான வேறுபாடு, மதம் என்பது organized குழு. அந்த organized குழுவுக்கென்று ஒருமித்த நம்பிக்கைகள் பின்பற்றவேண்டிய சடங்குகள் இருக்கும். Spirituality என்பது தனிப்பட்ட நபர்கள் தங்களுடைய புரிதலில் அவர்களுக்கென்று சில நம்பிக்கைகளை வளர்த்து கொள்வது.
Spiritual குருமார்கள் தங்களுடைய தனிப்பட்ட நம்பிக்கைகள் புரிதல்களை தன்னுடைய followers க்கு கற்பிக்கிறார்கள். இது மறுபடியும் organized குழுவாக மாறுகிறது.
இந்த தனிப்பட்ட நம்பிக்கைகள் எங்கிருந்து வரும்? தனிப்பட்ட நபர்களின் புரிதல்கள் எப்படி வருகின்றன. இவர்கள் பெரும்பாலும் அவர்கள் சார்ந்த மதத்தில் இருந்து தான் தங்களது நம்பிக்கைகள் புரிதல்களை தருவிக்கிறார்கள். ஒரு 20 வயது வரை அவர்கள் கண்டு கேட்டு பார்த்து வளர்ந்த அவர்களது மதம் சார்ந்த நம்பிக்கைகள் கோட்பாடுகள் தான் அவர்களது தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு ஆதாரமாக இருக்கிறது.
ஜக்கி வாசுதேவ், ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர் போன்றவர்கள் இந்து மதத்தை ஆதாரமாக கொண்டும், ஓஷோ ஜெயின் மதத்தை ஆதாரமாக கொண்டும் spiritual கருத்துக்களை சொல்கிறார்கள். நவீன சிந்தனைகளான Law of Attraction, Positive thinking, metaphysics and manifestation, New Thought philosophy போன்றவற்றால் ஈர்க்கப்பட்டவர்கள் அதை அடிப்படையாக வைத்து தங்களது spiritual கருத்துக்களை சொல்கிறார்கள் Eckhart Tolle போன்றவர்கள் இந்த வகை.
வாழ்க்கையில் அடிபட்டு நொந்து நூடுல்ஸ் ஆனவர்கள் தங்களது வாழ்க்கையையே அடிப்படையாக, பாடமாக வைத்து spiritual கருத்துக்களை சொல்கிறார்கள்.
மதத்தின் சடங்கு சம்பிரதாயங்களால் பெரிதாக வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட முடியாதபோது, தங்களது இழப்பு வேதனைகளை எதையாவது சொல்லி தேற்றி கொள்ள மக்கள் spirituality பக்கம் வருகிறார்கள். இங்கும் சடங்குகளுக்கு பழக்கப்பட்ட மக்களுக்காக யோகா, மூச்சு பயிற்சி போன்றவை alternative களாக வழங்கப்படுகின்றன.
மதம் அதனால் ஏற்படும் தீமைகள் அல்லது கடவுளால் எதுவும் வேலைக்காகாது அல்லது கடவுளே இல்லை என்று மதம் ஒழியும் காலகட்டத்தில் spirituality அந்த இடத்தை எடுத்துக்கொள்ளும். Spiritual குருமார்கள் தலைமையில் organized குழு உண்டாகும். அது மதம் செய்த அதே மூடத்தனங்களை செய்யும்.
Pleiades constellation (Taurus, ரிஷபம்) என்பது நட்சத்திர கூட்டம். நமது கண்களுக்கு 7 நட்சத்திரங்கள் பிரதானமாக தெரிந்தாலும், உண்மையில் அவை பல 100 நட்சத்திர கூட்டங்களின் தொகுப்பு.
லேசான ஊதா நிறத்தில் இரவு வானத்தில் பளிச்சென்று தெரியும் இந்த நட்சத்திர கூட்டத்தை பற்றி உலகெங்கும் பல கதைகள் உண்டு. Ancient apocalypse இல் Graham Hancock அழிந்துபோன ஒரு நாகரீகத்தை பற்றி சொல்லும்போது அவர்கள் வானவியல் சாஸ்திரத்தில் வல்லுநர்கள் என்பார்.
இதை அடிப்படையாக வைத்து தான் அவருடைய theory இருக்கும். இது உண்மைதான். அந்த கால மனிதர்கள் வானியல் சாஸ்திரத்தில் வல்லுநர்கள் என்பதைவிட, இரவு நேரத்தில் மல்லாந்து படுத்து வானத்தை ஆராய்ச்சி செய்வதை தவிர அவர்களுக்கு வேறு வேலை இல்லை. வானம் என்பது அவர்களை பொறுத்தவரையில் ஒரு mystery.
வானத்திற்கு போக முடியாது. அங்கு என்ன நடக்கிறது? நட்சத்திரம் சந்திரன் சூரியன் எல்லாம் எங்கு போகிறது? என்ன செய்கிறது? என்று ஒன்றும் தெரியாதபோது அதை பற்றிய ஆர்வம் அதிகம் மற்றும் அக்காலத்தில் pollution இல்லாத இரவு நேரத்தில், பூமியில் எங்கு இருந்து பார்த்தாலும் எல்லா நட்சத்திரங்களும் சில கோள்களும் தெள்ள தெளிவாக கண்களுக்கு புலப்படும் வகையில் இருக்கும். அவற்றை படுத்துக்கொண்டே, இப்படி இருக்குமோ?! அப்படி இருக்குமோ?! என்று ஆதி காலத்து மனிதர்கள் ஆராய்ந்து வந்தார்கள். அதற்கு பல கதைகளையும் சொல்லி இருக்கிறார்கள்.
கிரேக்க புராணங்களில், இந்த 7 நட்சத்திரங்களும் Atlas இன் (வானத்தையும் பூமியும் பிரித்து வைக்கும் தூணாக அட்லஸ் இருக்கிறார்) மகள்களாக சொல்லப்படுகிறார்கள். Orion எனப்படும் வேட்டைக்காரன் இந்த 7 மகள்களையும் மோகித்து அவர்களை அடைய நினைக்கிறான்.
Atlas பூமியையும் வானத்தையும் பிரிக்கும் தூணாக இருப்பதால் மகள்களை காப்பாற்ற போக முடியவில்லை. Zeus இந்த 7 பேரையும் Orion இடம் இருந்து காப்பாற்ற அவர்களை நட்சத்திரமாக்கி வானத்தில் வைக்கிறார். Orion இறந்தபின் அவனும் நட்சத்திரமாகி வானத்தில் Pleiades ஐ தேடி கொண்டு இருக்கிறான்.
இந்த நட்சத்திர கூட்டத்தை பார்த்தால் அம்பு விடும் வேடனை போல இருக்கும். Pleiades constellation ல தெளிவா தெரிவது 6 நட்சத்திரம் தான் 7வது நட்சத்திரம் எப்போதாவது தான் தெரியும். அதற்கும் ஒரு கதை இருக்கிறது. அந்த 7வது நட்சத்திரம் காதலில் விழுந்து, காதலுடன் ஓடிச்சென்று ஒளிந்து வாழ்வதால் எப்போதாவது தான் தெரிகிறாளாம். Australian aboriginal களிடமும் இதே கதை பெயர் மாற்றங்களுடன் இருக்கும். வானத்தில் Orion நட்சத்திர கூட்டம் Pleiades நட்சத்திர கூட்டத்தின் மேல் அம்பு விடுவது போல இருக்கும்.
இரண்டும் ஒன்றாக நகர்ந்து கொண்டு இருப்பதால் Orion நட்சத்திர கூட்டம் Pleiades ஐ விரட்டுகிறது அதற்கு காரணம் என்னவாக இருக்க முடியும்? ஆண் தான் அம்பு விடுவான் அதுவும் பெண்கள் மீது கொண்ட மோகத்தால் தான் இருக்க முடியும் என்ற கதை உதித்து இருக்கிறது.
இந்து புராணங்களில் 6, 7 மற்றும் 8 எண்ணிக்கையில் பெண் தெய்வங்கள் வருகிறார்கள். சப்த கன்னிகைகள், அஷ்ட கன்னிகா. ஒரு தெய்வம் கூட குறைய இருக்கும் அந்த இடத்தை பார்வதி அல்லது மஹாலக்ஷ்மியை வைத்து தேவைக்கேற்ப நிரப்பி கொள்வார்கள். சப்த கன்னிகைகள் பற்றி பல கதைகள் உண்டு. பல்வேறு கடவுள்களை பற்றிய கதைகள் ஒரே கதையாக தொகுக்கப்பட்டு இருக்கலாம்.
அதில் பிரபலமான கதை சூரபத்மனை அழிக்க சிவபெருமானின் நெற்றியில் இருந்து ஆறு தீப்பொறிகள் சரவண பொய்கையில் விழுந்தன. அங்கு அந்த ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக வடிவம் பெற்றிருந்தன. அந்த ஆறு குழந்தைகளும் ஆறு கார்த்திகை பெண்களின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டன.
இந்த 6 கார்த்திகை பெண்கள் தான் சப்த கன்னிகைகள். பார்வதி. கார்த்திகை பெண்களை ஏழு குழுவான நட்சத்திர கூட்டமாக மாற்றினாள். பிற்காலத்தில் சூரபத்மனை அழிக்க முருகனுக்கு துணையாக போரில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே அவர்களை நட்சத்திரங்களாக மாற்றியதாக சொல்லப்படுகிறது.
இந்த 6 முனை கொண்ட நட்சத்திரம் உலகின் மிக பழமையான symbol எல்லா மதங்களிலும் உண்டு. 6 முனை நட்சத்திரம் அதை சுற்றி வட்டம் என்பது பிரபலமான சின்னம். இதற்கு மாந்த்ரீக சக்தி உண்டு என்று உலகமெங்கும் நம்புகிறார்கள். இந்து மதத்திலும் யந்திரங்களில் இவை முக்கிய இடம் பெறுகின்றன.
hexagram என்றழைக்கப்படும் இந்த symbol தீய சக்திகளிடமிருந்து நம்மை காக்கும் என்று நம்பப்படுகிறது. இதிலிருந்து வந்ததுதான் “hex” (சூனியம் வைப்பது என்று தோராயமாக பொருள் எடுத்துக்கொள்ளலாம்).
இது போக ஆண் பெண், நீர் நெருப்பு, போன்ற opposite விஷயங்களின் balance ஐ குறிக்கவும் இந்த symbol பயன்படுகிறது. முருகனின் சரவணபவ நட்சத்திரம் சட்கோணம் என்றழைக்கப்படுகிறது. சிவன் (ஆண், மேல் நோக்கிய முக்கோணம்) சக்தியின் (பெண், கீழ் நோக்கிய முக்கோணம்) இணைப்பு முருகன்.
இந்த சட்கோணம் வரைந்து நாம் விரும்பும் தெய்வத்தின் பெயர் அல்லது அதற்கு உரித்தான மந்திரம் போன்றவற்றை இந்த சட்கோணத்தில் எழுதி வழிபட நினைத்தது நிறைவேறும் என ஒரு நம்பிக்கை இந்து மதத்தில் உண்டு இதை சித்தர்கள் எதிர்கின்றனர். மாந்த்ரீகம் தாந்த்ரீகம் போன்றவை கூடாது என்கின்றனர்.
சட்கோணத்தை சுற்றி வட்டம் வரைந்தால் அது விஷ்ணுவின் சக்கரமான சுதர்சன சக்கரத்தை குறிக்கிறது.
“Star of David” இது யூதர்களுடன் தொடர்புடைய symbol. யூதர்கள் இதை Shield of David என்று அழைப்பார்கள். இஸ்ரேல் நாட்டு தேசிய கொடியிலும் இந்த symbol காணப்படும்.
ஆரம்பத்தில் யூதர்கள் menorah எனப்படும் 7 மெழுகுவர்த்திகள் கொண்ட symbol தான் பயன்படுத்தி வந்தனர். இன்றும் இஸ்ரேலின் official emblem ஆக இருக்கிறது. 19ஆம் நூற்றாண்டு வாக்கில் கிறிஸ்தவர்கள் சிலுவை அடையாளத்தை பிரபலமாக பயன்படுத்தி வந்தனர்.
அப்போது ஐரோப்பியாவில் வாழும் யூதர்கள் கிறிஸ்துவ பொருட்களிடமிருந்து (புனித புத்தகம், கொடி etc. ) தங்களது பொருட்களை வேறுபடுத்தி காட்ட இந்த 6 முனை கொண்ட நட்சத்திரத்தை அடையாளமாக பயன்படுத்த ஆரம்பித்தனர். menorah தூரத்தில் இருந்து பார்த்தால் சிலுவை போலவே இருக்கும். எனவே வித்தியாசம் நன்கு தெரிய சிலுவைக்கு மாற்றாக இந்த நட்சத்திரம் பயன்பாட்டிற்கு வந்தது. அதன்பின்னர் இதற்கு பல அர்த்தங்கள் வழங்கப்பட்டது. இந்த அடையாளம் தாவீது (David) ராஜாவின் (யூத ராஜா) படை சின்னமாக பயன்பட்டது என்றனர்.
Kabbala என்னும் யூதர்களில் ஒரு பிரிவினர் இந்த symbol க்கு magical குணங்கள் இருக்கிறது என்றார்கள். நாஜிக்கள் யூதர்களை கடுப்பேத்துவதற்காக மஞ்சள் நிற நட்சத்திரம் அணிய வற்புறுத்தினார்கள். இன்று மஞ்சள் நிற 6 முனை நட்சத்திரம் heroism தியாகத்தின் சின்னமாக யூதர்களால் பார்க்கப்படுகிறது.
Chrono என்னும் prefix நாம் நிறைய பார்த்திருப்போம் பயன்படுத்தி இருப்போம். Chronometry என்றால் நேரத்தை அளப்பது.
Chronograph என்றால் stopwatch ஆக பயன்படுத்தக்கூடிய வாட்ச்.
Chronology என்றால் ஒரு sequence of events இதற்கு அடுத்து இது நடந்தது அதற்கு அடுத்து அது நடந்தது என்று வரிசையாக நிகழ்வுகளை சொல்வது.
Chronobiology உயிரினங்களின் மேல் நேரத்தின் (periodicity) தாக்கத்தை பற்றி படிப்பது.
ஆக Chrono என்பது நேரத்துடன் சம்பந்தப்படுத்தப்பட்டது. அது என்ன Chrono? Chrono என்பது கிரேக்க புராணத்தில் வரும் நேரத்தின் கடவுள் பெயர். Khronos அல்லது Chronus என்பது கிரேக்கத்தில் நேரத்திற்கான சொல். ஆரம்பத்தில் நேரத்தை ஒரு மனிதனாக உருவகப்படுத்தி சொல்லும் பழக்கம் இருந்தது. உதாரணமாக, அதிர்ஷ்டத்தை ஒரு பெண்ணாக நாம் உருவகப்படுத்தி சொல்லுவோம் ‘அதிர்ஷ்ட தேவதை நம்மகிட்ட வரணும்னா நாம இப்படி எல்லாம் பண்ணனும்’ என்று பேச்சு வழக்கில் சொல்வோம். ஆனால் அதிர்ஷ்டம் என்றொரு கடவுளோ தேவதையோ இல்லை ,அதிர்ஷ்டம் என்றொரு கற்பனை கதாபாத்திரம் கூட இல்லை.
அது போல நேரத்தை ஒரு மனிதனாக சொல்வது கிரேக்கர்கள் பழக்கம். பின்பு இது கிரேக்க கடவுள்Zeus அப்பா Cronus என்று மாறிவிட்டது. அதாவது Chronus வேறு Cronus வேறு. ஆனால் காலப்போக்கில் Cronus தான் Chronus, நேரத்தின் கடவுள் என்று புதிய கதை உருவாகிவிட்டது.
Chronos ஒரு linear time. நேற்று, இன்று, நாளை… என்று அடுத்தடுத்து போய்க்கொண்டு இருக்கும் இருக்கும். இன்னொரு கிரேக்க கடவுள் இருக்கிறார் அவர்தான் Aion.
Aion என்பது cyclical time. சுழற்சி முறையில் வரும் எல்லாம்Aion. இந்து மதத்தில் 60 வருடங்கள் திரும்ப திரும்ப சுழற்சியாக வரும் இல்லையா அது Aion. சீனாவிலும் இதே 60 வருட காலண்டர் தான் இதை சீனாவில் sexagenary cycle என்கிறார்கள். 60 வருடங்கள் திரும்ப திரும்ப சுழற்சியாக வரும்.
இந்த 60 வருட சுழற்சி என்பது கோள்கள், நட்சத்திரங்களின் position பொறுத்து கணிக்கபடுகிறது. அதனாலயே இந்த Aion கடவுள் கையில் Zodiac wheel வைத்து கொண்டு இருக்கிறார்.
இன்னொரு கிரேக்க சொல் இருக்கிறது Kairos/Caerus. Kairos என்றாலும் நேரம் தான் ஆனால் சாதாரண நேரம் இல்ல. நமக்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்கும் ஒரு முக்கியமான தருணம் (right/most favorable time) Kairos எனப்படும். வழக்கம்போல இதுவும் ஒரு கிரேக்க கடவுள் தான். Kairos என்ற அந்த கிரேக்க கடவுள் வாய்ப்புகளை, அதிர்ஷ்டத்தை, முக்கியமான தருணத்தை வழங்கும் கடவுள்.
Kairos, Zeus இன் இளைய மகன், எப்போதும் கால்விரல் நுனிகளில் வேகமாக நடந்து கொண்டு இருப்பாராம். காலில் இறக்கை இருக்குமாம் (ஏன் கால்ல இறக்கை கட்டுன மாதிரி பறக்கிற? என்பார்கள் இல்லையா, இவருக்கு உண்மையில் காலில் இறக்கை இருக்குமாம்) மின்னல் மாதிரி நம் முன் விசுக்குன்னு போய்டுவாராம். நாம சுதாரிப்பா இருந்து கபால்ன்னு அவரை பிடிக்கணும் இல்லாட்டி வாய்ப்பு கை நழுவி போய்டும்.
அவரை அப்படி கபால்ன்னு பிடிக்கறதுக்கு வசதியா முன்நெற்றியில் கற்றை முடி இருக்குமாம். ஆனா பின்னந்தலையில் முடி இருக்காது வழுக்கையாக இருக்கும். அதாவது அவர் நம்மை தாண்டி போகும்போது அந்த முன்நெற்றி முடியை கொண்டு பிடித்தால் தான் உண்டு இல்லாட்டி நம்மை தாண்டியதும் பின்னாடி வழுக்கையாக தான் இருக்கும் பிடிக்க முடியாது.
இப்படி திடீர்னு வந்தா நமக்கு எப்படி தெரியும்? நாம் எப்படி பிடிக்க முடியும்? அப்படின்னு நீங்க கேக்கலாம். பேய் வரதுக்கு சில அறிகுறிகள் இருக்கு அப்படின்ற மாதிரி, Kairos வரதுக்கு முன்னாடியும் சில அறிகுறிகள் தெரியுமாம். ஆனா நம்ம விழிப்போடு கண்காணிச்சா தான் நமக்கு புலப்படும்.
அதாவது நமக்கு ஒரு வாய்ப்பு திடீர்னு எந்தவிதமான அறிகுறியும் இல்லாம வராது. இப்போ நமக்கு promotion கிடைக்க போகுது அப்படின்னா அதை பற்றி அரசல் புரசலா நம்ம காதுல விழும், மேனேஜர் போஸ்ட் க்கு ஒரு நல்ல ஆள் வேணும்ன்னு நம்மக்கிட்டயே சொல்லுவாங்க, நாம எப்படி respond பண்றோம்ன்னு பார்ப்பாங்க. அப்போ Kairos நம்ம கிட்ட வரார்னு புரிஞ்சுகிட்டு கபால்ன்னு அவர் முடியை பிடிச்சு இழுத்து நம்மபக்கம் வச்சுக்கணும். miss பண்ணிட்டா போய்டுவாரு அப்புறம் ஒன்னும் பண்ண முடியாது.
அந்த தருணத்தை விட்டுட்டா, அந்த குறிப்பிட்ட right/most favorable time திரும்ப வராது. அந்த பொக்கிஷமான நேரம் தான் Kairos.
10,200 BCE இல் இருந்து மனிதன் வண்ணங்களை பயன்படுத்தி வருகிறான். குகை ஓவியங்களில் சிகப்பு, மஞ்சள்,கருப்பு போன்ற நிறங்களை நாம் இன்றும் பார்க்கிறோம். மனிதன் முதலில் பயன்படுத்திய சாயம் இவை மூன்றும்.
ஆடை அணிய தொடங்கிய ஆரம்ப காலங்களில் மனிதன் சாயம் போட்ட வண்ண ஆடைகளை உடுத்தியதில்லை. வெள்ளை அல்லது பழுப்பேறிய நிறங்கள்தான். துணிகளுக்கு நிறமேற்றும் பழக்கம் ஆரம்பித்த பிறகு வசதி படைத்த மக்கள் மட்டுமே வண்ண ஆடைகளை அணிய ஆரம்பித்தனர். ராஜாக்கள், நிலப்பிரபுக்கள் போன்றவர்கள்.
ஆரம்ப காலங்களில் துணிகளுக்கு போடும் சாயங்கள் காய்கறிகள், பூச்சிகள், மரப்பட்டைகளில் இருந்து எடுக்கப்பட்டன. எளிதில் கிடைக்கும் நிறங்கள் மஞ்சள் (மஞ்சள், குங்குமப்பூ, பூஞ்சைப்பாசி) கருநீலம், சிகப்பு, கருப்பு போன்றவை. நத்தைகளில் இருந்து Tyrian purple என்னும் நிறம் எடுக்கப்பட்டது இவை விலை அதிகம். தாதுக்களில் இருந்தும் சாயம் எடுக்கப்பட்டது lazurite இல் இருந்து ஊதா, limonite இல் இருந்து மஞ்சள், hematite இல் இருந்து சிகப்பு.
இந்த Tyrian purple மிகவும் விலை மதிப்பான சாயம் என்பதால் இதை அரச குடும்பங்கள் மட்டுமேஅணிந்தனர். அவர்களை தவிர வேறு யாரும் அணிவது தடை செய்யப்பட்டு இருந்தது. இன்றும் இந்த நிறம் “color of royalty” என்றழைக்கப்படுகிறது.
இருக்கும் இடத்திற்கேற்ப கிடைக்கும் நிறங்களுக்கு ஏற்ப அன்றைய காலத்தில் மக்கள் துணிகளை சாயமேற்றி அணிந்து வந்தனர்.மொத்தத்தில் அன்றைய காலத்தில் பொதுவாக இருந்த நிறங்கள் வெள்ளை, சிவப்பு, மஞ்சள், கருப்பு.
வேதங்களில் பிராமணர்களுக்கு வெள்ளை நிறமும், சத்திரியர்களுக்கு சிவப்பும், வைசியர்களுக்கு மஞ்சளும், சூத்திரர்களுக்கு கருப்பும் என்று எழுதப்பட்டுஇருக்கிறது. Muir, Original Sanskrit Texts, Vol. 1, p. 140, fn. 248; Mackenzie, ‘Colour Symbolism’, pp. 144–45. Kathaka Brahmana (XI. 6)
இதில் சிவப்பு இருப்பதில் costly. அது ராஜ குடும்பங்களுக்கு, மஞ்சள் அடுத்தது வணிகர்களுக்கு. சாயம் ஏற்றப்படாத தூய்மையான வெள்ளை அடிக்கடி துவைத்து சுத்தமாக வைக்கப்படவேண்டிய வெள்ளை பிராமணர்களுக்கு, கருப்பு அழுக்குநிறம், சாம்பல் கரியேறிய நிறம் சூத்திரர்களுக்கு. ஆக அடிப்படையில் சாயம் கிடைக்கும் அளவை பொறுத்து அதன் மதிப்பும், அதை விலைகுடுத்து வாங்க முடிந்தவர்கள் அந்த நிறத்தையும் அணிந்து கொண்டனர். நிறத்திற்கு என்று எந்த தனி மதிப்பும் புனிதமும் இல்லை.
காவி நிறம் (Saffron) குங்குமப்பூவில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த குங்குமப்பூ மருந்தாக, உணவில் சுவையூட்டியாக, வாசனை திரவியங்களில், மற்றும் சாயமாக பல விதங்களில் உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. கானான் மக்கள் Assyrian ராஜாவிற்கு குங்குமப்பூவை பரிசாக கொடுத்ததாக குறிப்புகள் இருக்கின்றன.Rome மக்கள் திருமண நேர ஆடையாக காவி வண்ண துணியை அணிந்து வந்து இருக்கிறார்கள். எகிப்தில் mummify செய்வதற்கு காவி வண்ண துணியை பயன்படுத்தி இருக்கிறார்கள்.(வாசனையாகவும் இருக்கும், மருத்துவ குணமும் இருக்கு போன்ற காரணங்களால்.)
இந்தியாவில் காவி பயன்பாடு இல்லை. புத்த பிட்சுக்கள் மட்டுமே காவி துண்டு அணிந்து வந்தனர். அதுவும் சாயம் போட்டதால் வந்த காவி அல்ல. சிகப்பு மண்ணில் புழங்கியதால் வந்த பழுப்பேறிய நிறம்.
இந்தியாவிற்கு குங்குமப்பூவையும், மஞ்சளையும் அறிமுகப்படுத்தியது அரபியர்கள் மற்றும் Portuguese. 1500 களுக்கு பிறகுதான் இந்தியாவில் காவி நிறம் வருகிறது. அதுவரை எந்த இந்து சாமியாரும் காவி ஆடை அணிந்ததில்லை. (probably திருவள்ளுவர் காவி ஆடைகளையே பார்த்து இருந்திருக்க மாட்டார்.)
இந்தியாவிற்கு அண்டை நாடான (அன்றைய காலத்தில்) பெர்சியாவில் காவி (al-kurkum) வண்ணம் (முகலாயர்களிடம்) பிரபலமாக இருந்தது. காஷ்மீரில் குங்குமப்பூ பயன்பாடு பெர்ஷியாவில் இருந்தும் பின்னர் France, China போன்ற நாடுகளில் இருந்தும் வந்தது.
அப்படியே வந்தாலும் உடனே அது சாயமாக பயன்படுத்தப்படவில்லை. வெளியில் இருந்து வரவழைக்கப்பட்ட வேண்டி இருந்ததாலும், அப்போது அதிகமாக புழக்கத்தில் இல்லாத காரணத்தாலும், சாயத்தை தவிர மருத்துவம், உணவு, வாசனைக்கு அதன் தேவை அதிகமாகஇருந்ததாலும் குங்குமப்பூ சாயமாக பயன்படவில்லை.
குங்குமப்பூவை (Saffron, Crocus sativus) போன்றே இன்னொரு மலர் உண்டு அதுSafflower (Carthamus tinctorius). குங்குமப்பூ காவிநிறத்தையும் safflower சிவப்பு நிறத்தையும் தரும். कुसुम (குசும்) என்று இந்தியில் அழைக்கப்படும் safflower சிவப்பு நிற சாயமாக பயன்பட்டு வந்தது. இதுல என்ன ஒரு பிரச்சனை என்றால் இந்த குசும் சிவப்பு, நிரந்தரமாக இருக்காது. கொஞ்ச நாளில் மெல்ல சாயமிழந்து மஞ்சளுக்கும் காவிக்கும் இடையில் ஒரு நிறமாக வந்து நிற்கும். ராஜ குடும்பத்தினர் சிவப்பு நிற உடையை அணிந்து வருவார்கள் இல்லையா? அவர்கள் அணிந்து சாயம் போனதும் இந்த காவி நிற ஆடை தானமாக வழங்கப்படும். இந்த குசும், அதாவது safflower க்கு அன்றைய காலத்து ஐரோப்பியர்கள் வழங்கிய பெயர் “bastard saffron”. அதாவது போலி காவி! இந்த போலி காவியை அரச குடும்பங்களில் தானமாக பெற்றவர்கள் அணிந்து வந்தார்கள்.
Bombay Presidency யில் இருந்த வசதி படைத்த மார்வாரிகள், முகலாயர்கள், மராத்தியர்கள், குங்குமப்பூ சாயம் ஏற்றிய ஒரிஜினல் காவி வண்ண ஆடை அணிந்து வந்தனர் இவை விலை அதிகம். வெளியில் இருந்து தருவிக்கப்பட்டது.
‘விஷ்ணு தர்ம சூத்திரம்’ என்னும் புத்தகத்தில், காவி உடை அணிந்தவர்கள் மோசமானவர்கள் தீயவர்கள் என்று இருக்கிறது. ‘விஷ்ணுஸ்மிரிதி’ யில் காவி நிறம் கெட்ட சகுனம் என்ற குறிப்பு இருக்கிறது (காரணம் விலைமதிப்பு மிக்க காவி உடை அணிந்து வந்தவர்கள் முகலாயர்கள்) (Kane, History of Dharmasastra, Vol. I (I), p. 121)
அப்புறம் கால போக்கில் காவி நிறம் விலை குறைந்து, குங்குமப்பூ பயன்பாடு பூஜைகளில் அதிகரித்து வந்ததும், காவியை விஷ்ணுவிற்கு உகந்த நிறம் என்று கதை கட்டப்பட்டது. விலை அதிகமாக இருந்த போது விஷ்ணுவிற்கு ஆகாத நிறம், விலை குறைந்ததும் விஷ்ணுவிற்கு பிடித்த நிறமாகி போனது.
காவி இந்த பக்கம் வந்ததும், 19ஆம் நூற்றாண்டு வாக்கில் இஸ்லாமிய பிரிவுகளில் (Sunni மற்றும் Hanafi) ஆண்கள் காவி நிறம் அணிவதற்கு தடை கொண்டு வரப்பட்டது.
1920 களில் காவி நிறம் இந்தியாவில் மிக பிரபலமானது. இந்துக்களுக்கு உகந்த நிறமாகவும், புனிதமான நிறமாகவும் மாறியது. 1915 இல் கும்பமேளாவில் பங்குபெற்றதை பற்றி காந்தி கூறுகையில் காவி நிறம் சந்நியாசிகளுக்கு மட்டுமல்ல அது உலக நன்மைக்காக பாடு படும் அனைவரும் தரிக்க வேண்டிய நிறம் என்றார்.
சுதந்திர இந்தியாவிற்கென்று ஒரு கொடி உருவாக்க முயன்றபோது, காந்தி, ஹிந்து முஸ்லீம் இரு மதங்களையும் குறிக்கும் வண்ணங்கள் இருக்க வேண்டுமென்று சிவப்பு நிற spinning wheel (ஹிந்து மதம்) இஸ்லாமியர்களுக்கு பச்சை நிறமும் இருக்க வேண்டுமென்று Pingali Venkayya விடம் சொல்லி இருக்கிறார். சீக்கியர்கள், அவர்களையும் குறிக்கும் வகையில் மஞ்சள் நிறம் வேண்டும். அப்படி இல்லையென்றால் ஒரு non communal கொடியை தேர்வு செய்யுமாறு வலிமையான எதிர்ப்பு குரல் வைத்தார்கள்.
நேரு, எந்த வண்ணமும் எந்த சமுதாயத்தையும் குறிப்பிட தேவையில்லை non communal கொடி இருக்கட்டும். அதில் சிவப்பும் பச்சையும் இருக்கட்டும் அது பார்க்க அழகா இருக்கும் என்றார். Suniti Kumar Chatterjee சிவப்பும் பச்சையும் பல நாடுகளின் கொடிகளில் இருக்கிறது சிவப்பிற்கு பதிலாக காவியை பயன்படுத்துவோம் அது வேறு நாட்டு கொடிகளில் இல்லை என்ற பரிந்துரையை முன்வைத்தார். காவி, ‘இந்து, சீக்கியர்கள், புத்த மதத்தினருக்கும்’ பொதுவான வண்ணமாக இருக்கும் என்று நினைத்தார்கள். இப்படி பல பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் காவி ஏற்கப்பட்டது.
சாவர்க்கரை பொறுத்தவரை, மராத்திய சிவாஜி ஒரு ரோல் மாடல். அவர் எழுதிய Hindu-Pad-Padashahi (1925) புத்தகத்தில் சிவாஜியை பற்றி மிக புகழ்ந்து எழுதி இருப்பார். அதில் மராட்டியர்களின் பெருமைக்குரிய காவி நிறம் என்கிறார். (வசதி படைத்த மராட்டியர்கள் குங்குமப்பூ காவியை விரும்பி அணிந்து வந்ததை முன்பே பார்த்தோம்)
இந்தியாவிற்காக போராடிய சிவாஜியை, ஒரு இந்து மதத்தின் போராளியாக சாவர்க்கர் எடுத்துரைக்கிறார். அந்த சிவாஜி அணிந்திருந்த காவி நிறம், இந்துக்களின் நிறமாக சாவர்க்கருக்கு இருக்கிறது.
RSS க்கு காவி நிறம் முக்கியமானதாகிறது. காவி நிறம் RSS கொடியாகிறது. இந்திய கொடியிலும் RSS கொடியிலும் இடம் பெற்ற காவி நிறம், ஹிந்துக்களின் புனிதமான நிறம் என்று 1930 களுக்கு பிறகு பெயர் எடுக்கிறது.
ஆக, ஒரு துணி சாயம் (இன்றைக்கு இயற்கை சாயம் இல்லை Chemical Dye தான்) அதன் availability, விலை இதை வைத்து புனிதமாக மாறிய அற்புத வரலாறு இதுதான்.