Reading view

மினுங்கும் வரிகளும் உணர்வாழமும் - ரம்யா

 (’அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ’ கவிதைத் தொகுப்பை முன்வைத்து)உதிரி சிந்தனைகளை மட்டுமே பகிர்வதற்கு வாய்ப்பமைந்த இன்ஸ்டா, முகநூல், X, யூடியூப் போன்ற தளங்களில் தீவிர இலக்கியமும், எழுத்தாளர்களும், அவர்களின் எழுத்துக்களும் புழங்கும் விதமும் பெரும்பாலும் உதிரிகளாகவே இருப்பதைக் காணலாம். வேறு எந்த இலக்கிய வடிவத்தைவிடவும் இந்த உதிரி வரிகளை அடிக்கோடிட கவிதை என்ற வடிவம் கச்சிதமாக உள்ளது. இந்த ஐந்து
  •  

கவிஞர்கள் மேல் மட்டும் ஏன் இந்த குற்றச்சாட்டு? - ஜி.எஸ்.எஸ்.வி. நவின்

“நவீன கவிதையென்பது அடிப்படையில் ஒரு எதிர்மறைப் பண்பு கொண்டதாக, அடிப்படையில் ஒரு கசப்பு கொண்டதாக இருக்கிறது… “தேவதேவன் ஒருவரிடம் மட்டும் தான் தமிழ் கவிதையில் அந்த கசப்பு கிடையாது. அவர் மேலுள்ள மற்ற கவிஞர்களின் குற்றச்சாட்டே அவை இனிக்கிறது என்பது தான்…”“வே.நி. சூர்யாவின் இரண்டாவது கவிதை தொகுதியை வாசிக்கும் போது தமிழ் கவிதை ஒட்டுமொத்தமாக இனிக்கத் தொடங்கிவிட்டதோ என்பது தான்…”***மேலே சொன்ன வரிகள்

  •  

சோ. விஜயகுமார் நேர்காணல் - 1

இளமைகாலம் இலக்கிய பாதிப்பு:நான் பிஃஷப் க்யூபர் கல்லூரியில் எம்.எஸ்.சி (ஊடகவியல்) படிக்கத் தொடங்கினேன். ஆனால் அதை நிறைவு செய்யவில்லை. அக்காலகட்டத்தில் இலக்கிய வாசிப்புக்குள் அறிமுகமானேன். எங்கள் கல்லூரியின் நூலகம் சிறப்பானது. இன்றும் இலக்கிய நூல்கள் பெரிதும் அடங்கிய கல்லூரிகளில் எங்கள் கல்லூரியும் ஒன்று. நவீன இலக்கிய நூல்கள் அனைத்தும் அங்கே இருக்கும். புதிதாக வந்த புத்தகம் அனைத்தையும் நான்

  •  

தமிழர்கள் அறியாத தமிழ் இலக்கியம் - க.நா.சு

க.நா.சு.வின் மரபிலக்கியத் தேர்வுகளை அறிந்துகொள்வதற்கான வாயில் இந்தச் சிறிய கட்டுரை. இக்கட்டுரையில் கூறப்பட்டும் பெரும்பாலான படைப்புகள் பற்றி க.நா.சு. தனியே கட்டுரைகளை எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்.***ஆங்கிலத்தில்‌ கவிதை எழுதுகிறவர்களுக்கு என்று Ezra Pound என்கிற நவீன புரட்சிக்‌ கவி முப்பதுகளில்‌ The ABC of Reading என்று ஒரு புஸ்தகம்‌ எழுதினான்.இந்த மாதிரித்‌

  •  

வாயாடி - மதார்

கவிஞர் சோ.விஜயகுமார் எனக்கு அறிமுகமானது ஒரு கவிதை ரசிகராகத்தான். புத்தகத் திருவிழாக்களின் உயிர்மை அரங்குகளில் 'இங்கு கவிதை வாசிக்கப்படும்' என்ற போர்டு இருந்தால் அங்கு விஜயகுமாரும் இருப்பதாக அர்த்தம். 'கவிதையை வாசித்தல்' என்ற செயல் ஒருவரைக் கவிஞனாக்குமா அல்லது அவரது கவிதையில் தாக்கத்தைச் செலுத்துமா என்றால் அதற்கு விஜயகுமாரை முன்னுதாரணமாகச் சுட்டலாம். அது மட்டும் போதுமா என்றால் இல்லை.

  •  

சில தமிழ் கவிதை - பிரமிள்

  வடக்குவாசல்: தபாலில் வந்த தனித்துவம்தபாலில் வந்தது -செந்தாமரையில்சீட் பிடித்துக் கைகாட்டிஅருள் பாலிக்கும்தெய்வத்தை அச்சிட்டசீப்பான காலண்டர் அல்ல.காலம் சரசரத்துஓடவிரியும்டைரியும் அல்ல.தபாலில் வந்ததுஊர்பேர் அற்றதனித்துவம் ஒன்று.‘என்னை உனக்குத்தெரியாது’ என்றுமைடியர் கூடஇல்லாமல் துவங்கி‘உன்னை எனக்குத்தெரியும்’ எனமுடிந்தது கடிதம்.ஊர்தேதி கையொப்பம்அனுப்புநர் முகவரி எதுவுமே இல்லை.தபால்

  •  

கவிதை - இந்திய, உலக இலக்கியப்‌ போக்குகள் – 2: க.நா.சு

மனித இனத்தின்‌ முதல்‌ இலக்கிய வடிவம்‌ கவிதையேகாவியங்களை பற்றி இவ்வளவு போதும்‌. இப்போது கவிதை என்று பார்க்கலாம்‌.பொதுவாக உலக மொழிகளில்‌ எல்லாம்‌ கவிதைதான்‌ முதலில்‌ தோன்றியது என்று ஒரு நினைப்பு இருக்கிறது, அப்படி முழுவதும்‌ சொல்லிவிட முடியாது என்றே தோன்றுகிறது. சீனத்தில்‌ ஆரம்ப காலத்தில்‌ கவிதை இருந்திருந்ததால்‌ அது இன்று வரை வந்திருப்பதாக தெரியவில்லை. ஜப்பானில்‌ கவிதையும்‌ வசனமும்‌ சற்றேறக்‌குறைய

  •  

கவிதையில் சொல்லாட்சிகள் - மதார்

சொல் - உரைநடையில் வைக்கப்படுவதற்கும் கவிதைக்குள் வைக்கப்படுவதற்கும் மலையளவு வேறுபாடு உண்டு. சொல்லே கவிஞனின் கருவி, அதுவே அவனது சொத்து. கவிஞனின் பெரிய தொந்தரவும் கூட சொல்தான். சொல் கவிதையில் எப்படி எப்படியெல்லாம் இயங்குகிறது என்பதையும், புதிய சொல்லாட்சிகள் பிறக்க என்னென்ன காரணிகள் துணை நின்று உதவுகின்றன என்பதையும் ஆராய்வதே இந்த அமர்வின் நோக்கம். முதலில் ஒரு கவிதையில் புதிய சொல்லாட்சி எவ்விதம்

  •  

கவிதைக்கு காலமில்லை - கமலதேவி

நவீன கவிதை ஒன்றை வாசிக்கும் போது அல்லது இசைப் பாடலாக கேட்கும் போது சங்கக் கவிதைகள் மூளையில் வருவதை  கவிதானுபவம் என்று சொல்லலாம்.உன்னை காணவே……சங்கப்பாடல்களில் தலைவன் வருகை குறித்து தலைவி, தோழி கூற்றுகளாக வரும் பாடல்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் வியப்பாக இருக்கும். கார்காலம் வந்து விட்டது, முல்லை மலர்ந்துவிட்டது, காலையில் மேய்சலுக்கு சென்ற மந்தை திரும்பும் மணியோசை கேட்கிறது, அந்தியும்

  •  

விழி நோக்குதல் - தேவி. க

ஒருமுறை திருநாகஸ்வரம் திருமணஞ்சேரி பரிகார தலங்களுக்கு சென்று திரும்பும் போது சிறிதும் பெரிதுமான சாலைப் பணிகளும் மேம்பாலம் வேலைகளும் நடந்து கொண்டிருந்ததால் கூகுளின் உதவியுடன் சின்ன சின்ன தெருக்களில் எல்லாம் நுழைந்து எங்கள் வாகனம் வந்துக் கொண்டிருந்தது. ஒரு திருப்பத்தில் சட்டென்று அழகிய பெரிய கோபுரம் எழுந்து வந்தது வியப்புடன் அதை பார்த்துக்கொண்டிருக்கும் போதே அரைத் தூக்கத்தில் இருந்து விழித்த என்

  •  

கவிதை - இந்திய, உலக இலக்கியப்‌ போக்குகள் - 1 - க.நா.சு

உலகத்து கவிதைகளைப்‌ பற்றி ஒரு மணிநேரத்துக்குள்‌ சொற்பொழிவு ஆற்ற வேண்டும்‌ என்று எனக்குப்‌ பணித்திருக்‌கிறார்கள்‌. இது கொஞ்சம்‌ சிரமம்‌ என்றுதான்‌ சொல்ல வேண்டும்‌.விஷயம்‌ மிகப்பெரிது. அதில்‌ எனக்குத்‌ தெரிந்ததோ குறைவு. பல பகுதிகள்‌ என்‌ அனுபவத்துக்‌காட்படாமலே இருக்கலாம்‌. எல்லாவற்றையும்‌ கரைத்து குடித்துவிட்டதாக நான்‌ சொல்ல முன்‌வரமாட்டேன்‌. படிக்க, படித்து அறிந்துகொள்ள, தெரிந்துகொள்ள,

  •  

வீரான்குட்டி கவிதைகள்

 வாசிப்பு வலையில் சிக்கிய பட்டாம்பூச்சி                                                                  சிலந்தியிடம் சொன்னது உன்னுடைய வலை ஒரு அபாரமான கலைப்படைப்பு அதில் மூழ்கி இல்லாமலாகவே நான்

  •  

நுனியில் பூ - கமலதேவி

 ஔியிடமிருந்து கற்றுக்கொள்ளஎதுவும் இல்லை.எல்லாவற்றையும்ஔி இருளிடமிருந்துதான்கற்றுக்கொண்டிருக்கிறதுஒரு கவிஞரை, ஒரு படைப்பாளியை படைப்பில் தொடர்ந்து வரும் வாசகர் பதறி நிற்கும் இடங்கள் மிகமுக்கியமானவை. ஏனென்றால் படைப்பாளியும் வாசகரும் ஒரே இடத்தில் வெவ்வேறு தளங்களில் நிற்கிறார்கள். அந்த படைப்பாளரால் வாசகர் கண்டுகொள்ளும் அல்லது படைப்பால் வாசகர் உணர்ந்து கொள்ளும் ஒன்று தத்தி நிற்கும் இடம் அது.

  •  

கணுக்கணுவாய் மூழ்கும் சுழல் - பாபு ப்ரித்விராஜ்

மரணத்தை அடைந்த ஆதி மனிதன் யமன். அவன் மறுபிறப்பின் கடவுள்,  விதியின் கடவுள், கர்மவினையின் கடவுள் என அழைக்கப்படுகிறான் அவன் கடவுளாவது எந்த விதியென்று தெரியவில்லை. விளங்கிக்கொள்ள இயலாத ஒரு கவிதைதான் போல. யமனின் முடிவிலா இருப்பில் தன்னை பிரித்தறிய யமிக்கு ஓர் இருள் தேவைப்படுகிறது. படைப்பின் ஆதியில் யமியின் தீராத இச்சையில் இரவு நிகழ்கிறது. எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒன்று காதலின் பாதை

  •  

சில தமிழ் கவிதைகள்

 உள்பாடுஇந்தப் பழக்கம்விட்டுவிடுஎங்காயினும்வானிலேனும் மண்ணிலேனும்புள்ளியொன்று கிடக்கக் கண்டால்சுற்றிச் சுற்றிவட்டங்கள் வரைவதும்சுழன்று சுழன்றுகோலங்கள் வரைவதும்குறுக்கும் நெடுக்குமாய்ப்புள்ளியின் வழியேபரபரத்துத் திரிவதும் --இந்தப் பழக்கம் விட்டுவிடுமுடிந்தால்புள்ளியைத் தொட்டுத்தடவிஅதன் மூடிதிறந்துஉள் நுழைந்துவிடு- அபி***3 கி.மீஅந்த ஊருக்குஇந்த வழியே3 கி.மீ. எனக் காட்டிக்கொண்டுநிற்கும்கைகாட்டி

  •  

மாற்றுச் சொற்கள்: 1 - மதார்

கேரள மாநிலம் பட்டாம்பி அரசுக் கல்லூரியில் கேரள பள்ளிக் கல்வித் துறையும் SNGS பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய Poetry carnival festival 2025 ல் தமிழிலிருந்து கவிஞர்கள் வே.நி.சூர்யா, பெரு.விஷ்ணுகுமார், ஆனந்த் குமார், சந்திரா தங்கராஜ், லாவண்யா சுந்தரராஜன் ஆகியோரோடு நானும் கலந்துகொண்டேன். ஜனவரி மாதம் 17,18,19 ஆகிய மூன்று தேதிகளில் நடைபெற்ற இக்கவிதைத் திருவிழா பெரும் உற்சாகத்தையும், மனநிறைவையும் தந்தது

  •  

மாற்றுச் சொற்கள்: 2 - மதார்

அபிராம்சந்திராவின் "மாயராணி" கவிதை போலவே பெரு.விஷ்ணுகுமாரின் "காலம் போல கல்" கவிதை மலையாளத்தில் சிலாகிக்கப்பட்டது. பெரு.விஷ்ணுகுமார் மலையாளக் கவி அபிராமின் இரண்டு கவிதைகளை மொழியாக்கம் செய்திருந்தார். அவை : 1எளிதல்ல இந்த முகபாவம்1989-இல்பகலென்று தோன்றாதஒரு பகலில்,மழையென்று உறுதியாய் கூறமுடியாத ஒரு மழையில்சுயம் இழந்த வண்ணத்துபூச்சிகளைதேநீர் அருந்தும்போதுநினைத்துப்பார்க்கும்

  •  

கவிதை பற்றி இன்னும் சில குறிப்புகள் - க.நா.சு

‘என்னுள்ளேயே பல லட்சங்கள் அடங்கியிருக்கின்றன’ என்றும், ‘முன்னுக்குப் பின் முரணாகப் பாடுகிறேனா? என்னுள்ளே பல முரண்கள் அடங்கியுள்ளன’ என்றும் வால்ட்விட்மன் கவிதை செய்தான், எல்லாக் கவிகளுள்ளும் பல லட்சங்கள் அடங்கியுள்ளன. லட்சங்கள் என்ன கோடிகள் அடங்கியுள்ளன. பல ஒன்றுக்கொன்று முரணாக விஷயங்கள் அடங்கியுள்ளன. இது எல்லாக் கவிகளுக்கும் பொருந்தும். பாரதியாரில் காணமுடியாத முரண்களா? அரசியல் எழுச்சியைத்

  •  

கிரிராஜ் கிராது கவிதைகள்

பெங்களூரு 4.0  கார்கள் மூழ்குகின்றன ஸ்கூட்டர்கள் நீந்துகின்றன துணிகளும் காண்டமும் காமவாசனைகளும் ஏழு வாரங்களுக்கு ஈரமாகவேயிருக்கும் ஸ்விகி பிளிங்கிட் ஜமோடா அமேசான் அலிபாபாக்களின் டிரோன்கள் கவலைகளுடன் சுற்றுகின்றன. சிலைகள் சிலைகளாக கிடக்கும் ஏரியின் கல்லறையின் மீது திருவிழா கொண்டாடினால் எத்தனை பிரமாதமாக இருக்கும்***லைவ்  ஒரு கொலையை நேரடி ஒலிபரப்பு செய்வதென்பது சிறிதும் கஷ்டமில்லை,

  •  

பறவைகளை அறிதல் - கேரி ஸ்னிடர்

பறவைகளை அறிதல்நீ வாழும் நிலம்அந்நிலத்தின் பருவகாலம்அப்பறவைகள் பறந்தலையும் பரப்புபுல்வெளியில்புதரில்கானகத்தில்கற்பாறையில்நாணல் இடையில்தனியெனகுழுவெனசிறுகுழுவென?அதன்உருவம்விசைபறத்தலில் தனி லாவகம்அதற்கே உரியவினோதம்வாலின் சிற்றசைவுசிறகசைப்புதலைநாடல்அவை உண்ணும் உணவை உன்னால் பார்க்கமுடிகிறதா?அதன் அழைப்புகளை பாடல்களை?இறுதியில்உனக்கு வாய்க்குமெனில்அவைகளின் வண்ணங்களைஇறகுகளின் வடிவங்களின் நுண்மையை

  •