Reading view

ஏப்ரல் 2025 கதை பரிந்துரைகள்

சிறுகதை : ஒரு ரமளான் இரவு

ஆசிரியர்: குளச்சல் யூசப்

பரிந்துரை: லாவண்யா

இதழ்: காலச்சுவடு

சிறுவன் பார்வையில் விரியும் கதை. கதை முழுவதும் சிறுவன் கண்ணோட்டத்தின் அழகாக வந்திருக்கிறது. கதையில் வரும் பெரியவர்கள் அவனுக்கு கொடுக்கும் வினோத அனுபவங்களை கொஞ்சம் கூட குழந்தைமையின் innocence மாறாமல் சொல்லப்பட்டிருக்கிறது. மிக அழகான கதை. கதை நடக்கும் காலக்கட்டம் 1960 ளாக இருக்க வேண்டும். வட்டார வழக்கும் இஸ்லாத்தில் புழங்கப்படும் வழக்குகளும் தெரியாதவர்கள் கதையை புரிந்து கொள்வதில் கொஞ்சம் சிரமம் இருக்கலாம். குறிப்பாக “தாத்தா” என்ற வார்த்தைக்கு அக்கா என்ற பொருள் வரும் என்பதை யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். அது தத்தாவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

சிறுகதை : கௌரதை

ஆசிரியர்: எஸ் இலட்சுமணப்பெருமாள்

பரிந்துரை: லாவண்யா

இதழ்: உயிர் எழுத்து

முதல் முதலாக நிஜ காமம் துய்க்க பொருள் பெண்டிரிடம் செல்லும் இளைஞனின் கதை. அவனது தயக்கம், பதட்டம், ஆர்வம், புறத்தூண்டல்கள் இவை அனைத்தும் எதார்த்தமாய் அமைந்த கதை. முக சுளிப்பில்லாமல் வாசிக்க உகந்ததாக இருக்கிறது. அந்த பெண்கள் வசிப்பிடத்துக்கு அருகே சூழல் காரணமாய் வசிக்கும் இளம்பெண்ணும் அவளது நற்தாயும் அவனுள் ஏற்படுத்தும் நேர்மறை சலனம் கதையின் முரண்.

சிறுகதை : பலூன்

ஆசிரியர்: ஜார்ஜ் ஜோசப்

பரிந்துரை: லாவண்யா

இதழ்: உயிர் எழுத்து

திருமண வரவேற்பு மணமகனின் மன ஓட்டங்கள் அழகாக எழுதப்பட்டிருக்கின்றன. காட்சிகளை கற்பனை செய்ய முடிகிறது. ஒரு feel good story. ஆனால் அழுத்தமான கதை என்று சொல்ல மாட்டேன்

சிறுகதை – ஊடாடும் பெருநிழல்

ஆசிரியர் – பென்னேசன்

பரிந்துரை: தங்கவேல்

இதழ் – சொல்வனம் ஏப்ரல் 2025

சுட்டி: https://solvanam.com/2025/04/13/%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d/

சாருவின் பிளாக் நம்பர்: 27 திர்லோக்புரி கதையை இணைவுபடுத்தும் கதை. 1984 இந்திரா காந்தி படுகொலையும் அதையொட்டிய சீக்கியர்களுக்கெதிரார வன்முறையும் தான் கதைக்களம். நேரடியான கூறுமுறை. கல்லவரத்தின் பொழுது உதவி செய்தவர் மற்றும்  40 ஆண்டுகளுக்கு பிறகு அவரை தேடிவருபவருக்கிடையான உரையாடல் தான் கதை. பழையை நினைவுகளை அப்பாவிடமிருந்து பெற்றுக்கொண்ட மகனின் நினைவுகள் உதவி செய்தவரின் பார்வையில் இருப்பது சற்று குழப்பத்தை அளித்தது, ஆனால் புரிந்துகொள்ள முடிந்தது. 40 ஆண்டுகளுக்கு பிறகு நன்றி சொல்ல மட்டும்தான் வந்தாரா எனும் கேள்வியை வாசகருடன் விட்டுசெல்கிறார்.

  •  

ஏப்ரல் 2025 கதை பரிந்துரைகள்

சிறுகதை : ஒரு ரமளான் இரவு

ஆசிரியர்: குளச்சல் யூசப்

பரிந்துரை: லாவண்யா

இதழ்: காலச்சுவடு

சிறுவன் பார்வையில் விரியும் கதை. கதை முழுவதும் சிறுவன் கண்ணோட்டத்தின் அழகாக வந்திருக்கிறது. கதையில் வரும் பெரியவர்கள் அவனுக்கு கொடுக்கும் வினோத அனுபவங்களை கொஞ்சம் கூட குழந்தைமையின் innocence மாறாமல் சொல்லப்பட்டிருக்கிறது. மிக அழகான கதை. கதை நடக்கும் காலக்கட்டம் 1960 ளாக இருக்க வேண்டும். வட்டார வழக்கும் இஸ்லாத்தில் புழங்கப்படும் வழக்குகளும் தெரியாதவர்கள் கதையை புரிந்து கொள்வதில் கொஞ்சம் சிரமம் இருக்கலாம். குறிப்பாக “தாத்தா” என்ற வார்த்தைக்கு அக்கா என்ற பொருள் வரும் என்பதை யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். அது தத்தாவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

சிறுகதை : கௌரதை

ஆசிரியர்: எஸ் இலட்சுமணப்பெருமாள்

பரிந்துரை: லாவண்யா

இதழ்: உயிர் எழுத்து

முதல் முதலாக நிஜ காமம் துய்க்க பொருள் பெண்டிரிடம் செல்லும் இளைஞனின் கதை. அவனது தயக்கம், பதட்டம், ஆர்வம், புறத்தூண்டல்கள் இவை அனைத்தும் எதார்த்தமாய் அமைந்த கதை. முக சுளிப்பில்லாமல் வாசிக்க உகந்ததாக இருக்கிறது. அந்த பெண்கள் வசிப்பிடத்துக்கு அருகே சூழல் காரணமாய் வசிக்கும் இளம்பெண்ணும் அவளது நற்தாயும் அவனுள் ஏற்படுத்தும் நேர்மறை சலனம் கதையின் முரண்.

சிறுகதை : பலூன்

ஆசிரியர்: ஜார்ஜ் ஜோசப்

பரிந்துரை: லாவண்யா

இதழ்: உயிர் எழுத்து

திருமண வரவேற்பு மணமகனின் மன ஓட்டங்கள் அழகாக எழுதப்பட்டிருக்கின்றன. காட்சிகளை கற்பனை செய்ய முடிகிறது. ஒரு feel good story. ஆனால் அழுத்தமான கதை என்று சொல்ல மாட்டேன்

சிறுகதை – ஊடாடும் பெருநிழல்

ஆசிரியர் – பென்னேசன்

பரிந்துரை: தங்கவேல்

இதழ் – சொல்வனம் ஏப்ரல் 2025

சுட்டி: https://solvanam.com/2025/04/13/%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d/

சாருவின் பிளாக் நம்பர்: 27 திர்லோக்புரி கதையை இணைவுபடுத்தும் கதை. 1984 இந்திரா காந்தி படுகொலையும் அதையொட்டிய சீக்கியர்களுக்கெதிரார வன்முறையும் தான் கதைக்களம். நேரடியான கூறுமுறை. கல்லவரத்தின் பொழுது உதவி செய்தவர் மற்றும்  40 ஆண்டுகளுக்கு பிறகு அவரை தேடிவருபவருக்கிடையான உரையாடல் தான் கதை. பழையை நினைவுகளை அப்பாவிடமிருந்து பெற்றுக்கொண்ட மகனின் நினைவுகள் உதவி செய்தவரின் பார்வையில் இருப்பது சற்று குழப்பத்தை அளித்தது, ஆனால் புரிந்துகொள்ள முடிந்தது. 40 ஆண்டுகளுக்கு பிறகு நன்றி சொல்ல மட்டும்தான் வந்தாரா எனும் கேள்வியை வாசகருடன் விட்டுசெல்கிறார்.

  •  

மார்ச் 2025 கதைகள் பரிந்துரை

கதை: நினைவின் மழையில்

ஆசிரியர்: ரம்யா

இதழ்: வல்லினம்

பரிந்துரை: கமலதேவி

சுட்டி: https://vallinam.com.my/version2/?p=10104

தனிப்பட்ட ஒவ்வொருவரையும் தன் சிறுவயது நினைவுகளுடன் இணைக்கும் கதை.
கல்லூரி மாணவி ஒருத்தியின் மழை கால நினைவுகள் கதையாகியிருக்கின்றேன். சிறுவயதிலிருந்து பாட்டியின் வீட்டிலும் விடுதியிலுமாக வளரும் குழந்தையின் தனிமை இந்த கதையை முக்கியமாக்குகிறது. அந்த தனிமைக்குள்ளிருந்து வெளியேற விழையும் தத்தளிப்பும அதை தக்க வைத்து கொள்ளும் தவிப்புமாக இளமையின் ஆடும் கிளையில் தொங்கும் ஒரு கூட்டை போன்ற எண்ணஅலைகளின் மீட்டல் உள்ள கதை.
நிலை _ நிலையின்மை என்ற இரண்டிற்கும் இடையில் தத்தளிக்ம் மனதில் நினைவு என்ற பாத்திரத்தில் கடந்து போன சம்பவங்களை போட்டு வைக்கலாம் என்ற வழியை கண்டுபிடித்த களிப்பு கதையில் உள்ளது. மழையும் நினைவும்,நிறைவு ஏக்கம் என்ற இரு இயல்புகளால் திரிக்கப்பட்ட கயிறு. அவற்றை இணைத்து தன் தனிமையை கடக்க எத்தனிக்கும் மனதின் தழும்பும் இயல்பை கூறும் கதை. இருப்பது சட்டென இல்லாமலாகும் பதட்டத்தை கையாளும் கதை என்றும் சொல்லலாம். அந்த வகையில் கண்முன்னே இருக்கும் ஒன்றின் நிலையாமையை ஏற்றுகொள்ள முடியாது அனைத்திற்கும் காரணங்கள் தேடிக்கொண்டிருக்கும் மனம் ஒன்று ஒரு கட்டத்தில் அதில் திளைத்து பின் அதிலிருந்து சட்டென்று வெளியேற எத்தனிக்கும் தருணம் கதையாகியுள்ளது.

கதை : கோதுமை மணி

ஆசிரியர் – மலர்விழி மணியம்

பரிந்துரை – தங்கவேல் பரமசிவன்

இதழ்: வல்லினம்

சுட்டி : https://vallinam.com.my/version2/?p=10109

கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் எனும் கடற்கரை கிராமத்தில் நிகழும் கதை.

“கோதுமை மணிகள் மண்ணில் மடிந்து பலன்கள் தந்திடுமே” ஏனும் விவிலிய பாடல் வரிகளிலிருந்து பிறந்த கதை.

சீமோனின் தாய் லூர்தாம்மாள் தனது எண்ணத்தால் பேச்சால் செயலால் வலுவான கதாப்பாத்திரமாக படைக்கபட்டிருக்கிறார். சீமோனின் உதவும் குணம் பிற கதாப்பாத்திரங்களால் விளக்கப்படுவது பொருத்தமாக உள்ளது. வட்டார வழக்கில் சொல்லியிருப்பது  கதையின் நம்பகதன்மையை கூட்டுகிறது.

கதையின் முடிவு , சற்று தேய்வழக்கான “போர்களத்தில் மகன் புறமுதுகிட்டு ஓடியிருக்கமாட்டான்” என்ற சங்ககாலத்து பாடலை நினைவூட்டுவதாக இருந்தாலும் கதையின் கட்டமைப்பில் ஆசிரியர் புதுமை செய்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.

பேரிழப்பை உடனே மனம் ஏற்றுக்கொள்ளாது. அது உண்மையல்ல என்று தனக்கு தானே கூறிக்கொள்ள அனைத்து காரணங்களையும் தேடும். எதுவும் மாறவில்லை என்பதை தனக்கும் உற்றாருக்கு சொல்லிக்கொள்ள மூர்க்கமாக அன்றாடத்தில் ஈடுபடும். அந்த குமிழுக்குள் நீண்டநேரம் இருக்கமுடியாது என்று மனதுக்கு  நன்றாக தெரியும், அதனாலேயே குமிழியை உடைக்க வருபவர்களை நெருங்கவிட்டாமல் துரத்தும். துயரத்தை கோபமாக வெளிப்படுத்தும் கதை.

கதை : ம் என்னும் மரணம்

ஆசிரியர் – விஜயகுமார் சம்மங்கரை

பரிந்துரை – தங்கவேல் பரமசிவன்

இதழ்: வல்லினம்

சுட்டி : https://vallinam.com.my/version2/?p=10115

 நல்ல கதை. ரமேஷ் பிரேதன் வகை எழுது, உணர்ந்துகொள்ள சில முறை வாசிக்கவேண்டும்.

கதை: பூஜை மணியடிக்கும் அப்பா

ஆசிரியர்: கோவிந்த் பகவான்

இதழ்: உயிர் எழுத்து

தெரிந்த சொந்த தொழிலை உடல் வாதையின் பொருட்டு செய்ய முடியாத குடும்பத் தலைவன், வருமானத்துக்காக பஜனையில் கோஷ்டியில் மணியடித்து பாட்டுப்பாடி சம்பாதிக்கிறார். அது மகனுக்கு அகௌரமாக இருக்கிறது. அவன் தந்தை எப்படி இருக்க வேண்டுமென்று நினைக்கிறான். பின்னர் எப்படி தந்தையின் தற்கால தொழிலை ஏற்றுக் கொள்கிறான் என்று முடிகிறது. இந்த கதை கதைசொல்லி ஒரு சிறுவனின் அவன் மனப்பாடுகளை அதை அவன் வெளிபடுத்துவதில் அழகாக ஆரம்பமாகிறது. ‘வீதியில் நடந்து போனால் மற்றவர் வணக்கம் வைத்து கும்பிடுகிற குமாரின் அப்பா’ இந்த படிமம் நம் அப்பா ஏன் இப்படி இல்லை என்ற குழந்தைத்தனமான அந்த குழந்தையின் சூழல் அதன் மன முதிர்ச்சி சார்ந்த விஷயம் அபூர்வ அழகோடு வந்திருக்கின்றன. முடிவும் அந்த அறியாமை தருணத்தின் ஒன்றாக வந்திருக்கிறது. ஆனால் இடைப்படும் பெரியவர்கள் என்ன தான் குடி போதை என்றாலும் “அக்காவை அனுப்பி” என்ற மாதிரியான தேவையற்ற கதையாடல் கதையின் innocence scenes அருமையை கெடுக்கின்றன.

  •  

மார்ச் 2025 கதைகள் பரிந்துரை

கதை: நினைவின் மழையில்

ஆசிரியர்: ரம்யா

இதழ்: வல்லினம்

பரிந்துரை: கமலதேவி

சுட்டி: https://vallinam.com.my/version2/?p=10104

தனிப்பட்ட ஒவ்வொருவரையும் தன் சிறுவயது நினைவுகளுடன் இணைக்கும் கதை.
கல்லூரி மாணவி ஒருத்தியின் மழை கால நினைவுகள் கதையாகியிருக்கின்றேன். சிறுவயதிலிருந்து பாட்டியின் வீட்டிலும் விடுதியிலுமாக வளரும் குழந்தையின் தனிமை இந்த கதையை முக்கியமாக்குகிறது. அந்த தனிமைக்குள்ளிருந்து வெளியேற விழையும் தத்தளிப்பும அதை தக்க வைத்து கொள்ளும் தவிப்புமாக இளமையின் ஆடும் கிளையில் தொங்கும் ஒரு கூட்டை போன்ற எண்ணஅலைகளின் மீட்டல் உள்ள கதை.
நிலை _ நிலையின்மை என்ற இரண்டிற்கும் இடையில் தத்தளிக்ம் மனதில் நினைவு என்ற பாத்திரத்தில் கடந்து போன சம்பவங்களை போட்டு வைக்கலாம் என்ற வழியை கண்டுபிடித்த களிப்பு கதையில் உள்ளது. மழையும் நினைவும்,நிறைவு ஏக்கம் என்ற இரு இயல்புகளால் திரிக்கப்பட்ட கயிறு. அவற்றை இணைத்து தன் தனிமையை கடக்க எத்தனிக்கும் மனதின் தழும்பும் இயல்பை கூறும் கதை. இருப்பது சட்டென இல்லாமலாகும் பதட்டத்தை கையாளும் கதை என்றும் சொல்லலாம். அந்த வகையில் கண்முன்னே இருக்கும் ஒன்றின் நிலையாமையை ஏற்றுகொள்ள முடியாது அனைத்திற்கும் காரணங்கள் தேடிக்கொண்டிருக்கும் மனம் ஒன்று ஒரு கட்டத்தில் அதில் திளைத்து பின் அதிலிருந்து சட்டென்று வெளியேற எத்தனிக்கும் தருணம் கதையாகியுள்ளது.

கதை : கோதுமை மணி

ஆசிரியர் – மலர்விழி மணியம்

பரிந்துரை – தங்கவேல் பரமசிவன்

இதழ்: வல்லினம்

சுட்டி : https://vallinam.com.my/version2/?p=10109

கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் எனும் கடற்கரை கிராமத்தில் நிகழும் கதை.

“கோதுமை மணிகள் மண்ணில் மடிந்து பலன்கள் தந்திடுமே” ஏனும் விவிலிய பாடல் வரிகளிலிருந்து பிறந்த கதை.

சீமோனின் தாய் லூர்தாம்மாள் தனது எண்ணத்தால் பேச்சால் செயலால் வலுவான கதாப்பாத்திரமாக படைக்கபட்டிருக்கிறார். சீமோனின் உதவும் குணம் பிற கதாப்பாத்திரங்களால் விளக்கப்படுவது பொருத்தமாக உள்ளது. வட்டார வழக்கில் சொல்லியிருப்பது  கதையின் நம்பகதன்மையை கூட்டுகிறது.

கதையின் முடிவு , சற்று தேய்வழக்கான “போர்களத்தில் மகன் புறமுதுகிட்டு ஓடியிருக்கமாட்டான்” என்ற சங்ககாலத்து பாடலை நினைவூட்டுவதாக இருந்தாலும் கதையின் கட்டமைப்பில் ஆசிரியர் புதுமை செய்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.

பேரிழப்பை உடனே மனம் ஏற்றுக்கொள்ளாது. அது உண்மையல்ல என்று தனக்கு தானே கூறிக்கொள்ள அனைத்து காரணங்களையும் தேடும். எதுவும் மாறவில்லை என்பதை தனக்கும் உற்றாருக்கு சொல்லிக்கொள்ள மூர்க்கமாக அன்றாடத்தில் ஈடுபடும். அந்த குமிழுக்குள் நீண்டநேரம் இருக்கமுடியாது என்று மனதுக்கு  நன்றாக தெரியும், அதனாலேயே குமிழியை உடைக்க வருபவர்களை நெருங்கவிட்டாமல் துரத்தும். துயரத்தை கோபமாக வெளிப்படுத்தும் கதை.

கதை : ம் என்னும் மரணம்

ஆசிரியர் – விஜயகுமார் சம்மங்கரை

பரிந்துரை – தங்கவேல் பரமசிவன்

இதழ்: வல்லினம்

சுட்டி : https://vallinam.com.my/version2/?p=10115

 நல்ல கதை. ரமேஷ் பிரேதன் வகை எழுது, உணர்ந்துகொள்ள சில முறை வாசிக்கவேண்டும்.

கதை: பூஜை மணியடிக்கும் அப்பா

ஆசிரியர்: கோவிந்த் பகவான்

இதழ்: உயிர் எழுத்து

தெரிந்த சொந்த தொழிலை உடல் வாதையின் பொருட்டு செய்ய முடியாத குடும்பத் தலைவன், வருமானத்துக்காக பஜனையில் கோஷ்டியில் மணியடித்து பாட்டுப்பாடி சம்பாதிக்கிறார். அது மகனுக்கு அகௌரமாக இருக்கிறது. அவன் தந்தை எப்படி இருக்க வேண்டுமென்று நினைக்கிறான். பின்னர் எப்படி தந்தையின் தற்கால தொழிலை ஏற்றுக் கொள்கிறான் என்று முடிகிறது. இந்த கதை கதைசொல்லி ஒரு சிறுவனின் அவன் மனப்பாடுகளை அதை அவன் வெளிபடுத்துவதில் அழகாக ஆரம்பமாகிறது. ‘வீதியில் நடந்து போனால் மற்றவர் வணக்கம் வைத்து கும்பிடுகிற குமாரின் அப்பா’ இந்த படிமம் நம் அப்பா ஏன் இப்படி இல்லை என்ற குழந்தைத்தனமான அந்த குழந்தையின் சூழல் அதன் மன முதிர்ச்சி சார்ந்த விஷயம் அபூர்வ அழகோடு வந்திருக்கின்றன. முடிவும் அந்த அறியாமை தருணத்தின் ஒன்றாக வந்திருக்கிறது. ஆனால் இடைப்படும் பெரியவர்கள் என்ன தான் குடி போதை என்றாலும் “அக்காவை அனுப்பி” என்ற மாதிரியான தேவையற்ற கதையாடல் கதையின் innocence scenes அருமையை கெடுக்கின்றன.

  •  

பிப்ரவரி 2025 கதைகள் பரிந்துரை

கதை: காணாதவர்களின் நிழல்

ஆசிரியர்: பிரேம்

இதழ்: உயிர் எழுத்து

பரிந்துரை: லாவண்யா

மிக வித்தியாசமான வடிவம், பல கிளைக்கதைகளை உள்ளடக்கிய கதை.  ‘காணாமல் போவது’ இதை ஒரு கான்செப்ட் போல வைத்து, தத்துவம், அரசியல் சித்தாந்தம், குறிப்பிட்ட சிறுபான்மையினர் சமூகத்தின் மீது நடந்த வெறுப்பரசியல் போன்ற பலவேறு கதையனுபவங்களை கதையாக மிக வித்தியாசமான உத்தியையும் வடிவத்தையும் பயன்படுத்தி சுவாரஸ்யமாக எழுத்தப்பட்ட கதை. சிறந்த வாசிப்பனுவத்தை கொடுக்கிறது. ஆனால் எழுதப்பட்டது போலவும் இருக்கிறது. இலக்கியம் வாசிப்பது அதை சார்ந்து பேசுவது இதை எல்லாம் இயல்பான முறையில் வாசகர்களுக்கு கடத்தியிருப்பது சிறப்பானது.

கதை: கட்டிக்கிட்டு முட்டிகிட்டு

ஆசிரியர்: குமாரநந்தன்

இதழ்: காலச்சுவடு

பரிந்துரை: லாவண்யா

வழக்கமான காதல் திருமணம் மோதல் ஊடல் அதை தணிவிக்க மிக பழைய முறையான பச்சைகுத்துவதை அதை பார்த்து கொஞ்ச நாள் சமாதானம் என்பதில் எதுவும் புதிதாக இல்லை. நங்கூர வடிவ பச்சை குத்தியவர் வலியும் பரவசமுமே குறியீடாகி மணவாழ்க்கையின் கட்டிக்கொண்டும் முட்டிக்கொண்டும் வெளிப்படுகிறது. வழக்கமாக எழுதும் மரணம் அமானுயம் போன்ற விஷயங்கள் இதில் மிஸ்ஸிங்.

கதை: மொரிஸ் மைனர்

ஆசிரியர்: மாஜிதா

இதழ்: காலச்சுவடு

பரிந்துரை: லாவண்யா

கதை லண்டனில் நிகழ்வது, மிக வித்தியாசமான கதைக்களம். கதையில் கார்களும் அதை பொழுது போக்குக்காக வாங்கும் மிகப் பெரிய பணக்காரரும் அவரது சட்டசிக்கல்களை தீர்க்கும் சட்டதாரணி இவர்களுக்கு இடையில் கார்கள் மீதான அந்த பிரியம் அது கடைசியில் இழந்த காதல் அதைச் சார்ந்த பழிவாங்குதல் அல்லது போட்டி என்று இறுதி வரியில் வேறொன்றாக திறந்து கொள்ளும் அழகான கதை.

கதை: வெறியாட்டு

ஆசிரியர்: விஜய் ரங்கநாதன்

இதழ்: சொல்வனம்

பரிந்துரை: கமலதேவி’

சுட்டி : https://solvanam.com/2025/02/09/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/

இயற்கை சில உயிர்களில் சில நேரங்களில் விதிமுறைகளை கொள்ளும். இயற்கைக்கு நாம் நினைப்பது போன்ற திட்டவட்டமான தன்மை இல்லை. சில செடிகள் பூக்க நினைப்பதில்லை . சில தென்னைகள் கோட்டில் வளர்வதில்லை. மனிதரிலும் அப்படி உண்டு. நாம் திரிபு என்று அதை சொல்லலாம். ஆனால் அது திரிபல்ல இயல்பு என்று சொல்ல முயற்சிக்கும் கதை. சங்ககாலத்துடன் இணைந்த கதை சொல்லல் கதையில் அழகாக வந்திருக்கிக்கிறது. மேலும் அதனுடன் இணைந்த அம்மன் வழிபாடு கதைக்கு கூடுதல் வலு சேர்க்கிறது. பதின்வயது பையனின் மனநிலைக்குள் செல்ல முடிகிறது. புன்னகை கண்ணீர் என்று ஏதோ ஒன்றை உணர செய்யும் கதை சிறந்த கதை.

  •  

ஜனவரி 2025 கதைகள் பரிந்துரை

  • கதை: அசாம் டீ
  • ஆசிரியர்: வினோத் குமார்
  • இதழ்: உயிர் எழுத்து
  • பரிந்துரை: லாவண்யா
    • முதலாளித்துவம் கருணையற்றது என்பதை சொல்லும் கதை கதைக்களம் சினிமாத்துறையை சார்ந்தது. திரைக்கலையை வாசித்து வாய்ப்புகளை எதிர்நோக்கும் இளைஞனின் கதை அழுகை பிழியாமல் எதார்த்தமாக எழுதப்பட்டிருக்கும் கதை. வாசிக்கலாம். இவரது பிறகதைகள் எங்கேனும் வந்திருக்கிறதா பார்க்க வேண்டும். அறிமுக எழுத்தாளர் என்றால் கட்டாயம் ஊக்கப்படுத்த வேண்டிய எழுத்து.
  • கதை: காணி பெற்றான்
  • ஆசிரியர்: லட்சுமிஹர்
  • இதழ்: உயிர் எழுத்து
  • பரிந்துரை: லாவண்யா
    • காலம் முழுக்க குடிப்பழக்கத்தால் வெறுக்கப்படும் கதை சொல்லி தன் தந்தையை பழிவாங்க தனக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் மனைவியை புதைத்து பழிவாங்குவது கதையின் கரு. அவன் ஏன் குடிகாரன் ஆனான் மரணபடுக்கையில் இருக்கும் அவன் தந்தை அவனையும், அவன் தன் தந்தையையும் ஏன் பழிவாங்க துடித்தனர் என்பதை நேரடியாக அல்லாமல் பூடகமாக உணர்த்தியிருந்தால் கதையின் வலு கூடியிருக்கும்
  • கதை: முடிவு
  • ஆசிரியர்: நிர்மல்
  • இதழ்: சொல்வனம்
  • சுட்டி: https://solvanam.com/2024/12/22/%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-2/
  • பரிந்துரை: சாய்
    • ஒவ்வொருவரும் ஏதோவொரு குற்ற உணர்வுக்கு ஆளாகியிருப்போம். அதைச் சுற்றி நம் வாழ்க்கையை அமைக்காமல், அதிலிருந்து மீண்டு பிராயச்சித்தம் தேடுவது/திருந்துவதே வாழ்க்கை முன்னேற உவந்தது என்பதைக் களமாகக் கொண்ட கதை.தொடக்கத்தில் மெதுவாக நகர்ந்து, மின்னல் வெட்டுகளாக முன்னால் நடந்த சம்பவத்தைக் காண்பித்து, பாதிக் கதையில் இதன் கருவைச் (குற்றவுணர்வு) சுட்டி, பின்பு அதன்மேல் மிச்சக் கதையை எழுப்பியுள்ளார்.
  • கதை: சூரியனின் முதல் கிரணத்திற்குப் பின்
  • ஆசிரியர்: இரம்யா
  • இதழ்: கனலி
  • சுட்டி: https://kanali.in/suryannin-mudhal-kirranathirku-pin
  • பரிந்துரை: சிவா
    • சுரேந்திர வர்மாவின் “சூர்யா கி அண்டிம் கிரண் சே சூர்யா கி பெஹ்லே கிரண் தக்” என்னும் நாடகத்தைப் பத்து வருடங்கள் கழித்து மீட்டுருவாக்கம் செய்யும் நாயகி , அது எழுப்பிய பழைய கேள்விக்குப் புதிய பதிலை கண்டைந்தாரா ? என்பதே நாடக வடிவில் எழுதப்பட்ட இந்தச் சிறுகதை.
    • நாடக மேடையின் ஒளி அமைப்பைப் பற்றிய சித்திரமே கதாபாத்திரங்களின் பிரதிபலிப்பாக அமைத்து எழுதிய நடை சிறப்பு
    • பெண்ணுக்குத் தேவை பாலியல் சுதந்திரமா மட்டுமா இல்லை குடும்பம்/உறவு என்னும் நிறுவனங்கள் உருவாக்கிய குற்றவுணர்வினிலேருந்தும் விடுதலை தேவையா? என்ற புதுக் கேள்வியையும் எழுப்பிச் செல்கிறது.
  • கதை: சங்கு
  • ஆசிரியர்: சுஜாதா செல்வராஜ்
  • இதழ்: காலச்சுவடு
  • பரிந்துரை: லாவண்யா
    • எழுதி எழுதி வழக்கொழிந்த கரு. முதிர்கன்னியின் கதை. சங்கு இதில் குறியீடாக வருகிறது. அதையும் கதையும் இணைக்கும் விஷயத்தை இன்னும் சற்று பூடகமாக எழுதியிருக்கலாம். கதையின் கரு ஒரு மீறலாக இருந்தாலும் முடிவு எதிர்பார்த்தைப் போலவும் அம்மா மகள் பிணைப்பு அழகாகவும் கையறு நிலை அழகாகவும் வெளிப்படுகிறது. கதையை இன்னும் கூர்மையாக எழுதியிருக்கலாம் என்ற எண்ணம் வராமலும் இல்லை.
  • கதை: தற்கொலை மகாத்மியம்
  • ஆசிரியர்: யுவன் சந்திரசேகர்
  • இதழ்: காலச்சுவடு
  • பரிந்துரை: லாவண்யா
    • மிக அபாரமான கதை. இரண்டு தற்கொலைகளைகளும் மூன்று அடுக்குகளும் கொண்ட கதை. இவ்விரண்டு தற்கொலைகளை விட அதிகம் நம்மை பாதிப்பது யமுனா தற்கொலைக்கு பின்னால வாழ்க்கை தற்கொலைக்கு பின்னும் வாழ முடியும் என்று காட்டியவள் அல்லவா யமுனா என்கிறார் யுவன் மேலும் அவரே சொல்கிறார் அவள் தற்கொலை ஒருமுறையோடு நிற்கவில்லை என்கிறார். விவாதிக்க உகந்த கதை.
  • கதை: சீனிச்சேவு
  • ஆசிரியர்: சரவணன் சந்திரன்
  • இதழ்: கனலி
  • சுட்டி: https://kanali.in/seenisevu
  • பரிந்துரை: சிவா
    • மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு முரடனின் எழுச்சியும் கோர வீழ்ச்சியும் என்று கதைப் போனாலும் , தன் ரத்தச் சம்பந்தமில்லாதஒரு ஜீவனின் மேலுள்ள காழ்ப்பே அடிநாதம்.”நீயும் வா சாமி. நாலு உசிர்களுக்கு சமைக்கிறேன். நீ ஐஞ்சாவதா இருந்துட்டு போ” என்று அம்மா சொல்லும்பொழுது ராஜா வந்திருக்கிறாரின் (கு. அழகிரிசாமி) தாயம்மாளாகவே மாறிவிடும் இடம் அழகுவெறும் வசனங்களில்லாமல் , வாழ்க்கையின் அவதானிப்பாக வார்த்தைகள் வந்து விழுதிருக்கின்றன “அவம் மேல கைபட்டுச்சு உன் சங்கை அறுதிருவேன் ,பார்த்துக்கோ , ஞாயத்துக்கு முன்னாடி பெத்த பிள்ளையாவது மசிராவது ?” கதைக் கரு அடித்துத் துவைத்த ஓன்று, இருந்தாலும் தன் எழுத்தினால் எழுந்து நிற்கிறது இந்தக் கதை.
  • கதை: மேலே திறந்து கிடக்கிறது
  • ஆசிரியர்: ஜெயமோகன்
  • இதழ்: வல்லினம்
  • சுட்டி: https://vallinam.com.my/version2/?p=10082
  • பரிந்துரை: கணேஷ் பெரியசாமி
    • பல்வேறு சம்பவங்களின் தொகுப்பாக கதை இருக்கிறது. அவற்றுக்கு கதையில் இடம்பெறும் வரிசையில் எண்களை கொடுத்துவிட்டு, சம்பவங்களின் காலக்கோட்டின்படி அவற்றை மாற்றி வரிசைப்படுத்தினால் அதன் வரிசை பின்வருவதுபோல இருக்கும். 5, 1, 2, 3, 4, 6, 7, 8, 9 கதைக்குள்ளேயே உரைகளின் வடிவத்தில் வரும் இரு தனிப்பகுதிகள் (மேற்காணும் எண்களில் 2 மற்றும் 6ம் பகுதிகள்) கதையை விளக்கிவிடுகின்றன. அவை நமக்கு விளக்கமுயல்வதை ஒரு விரிவான உதாரணத்துடன் நமக்கு விளக்க முயல்வதாக கதையின் பிற பகுதிகள் உள்ளன. அப்பகுதிகள் நிகழும் இடங்களாக தொல்லியல், தத்துவம், விண்வெளிப் பயணம், அயல்கிரக மனிதர்கள், நுட்பமான அரசியல் என பல்வேறு களங்கள் கதையில் இடம்பெற்றுள்ளன.நாவலுக்குள் ஒரு சுயசரிதையை, ஒரு கட்டுரையை இடம்பெறச் செய்துவிடலாம் என இக்கதையின் ஆசிரியர் ஜெயமோகன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார். அதே உத்தியை பயன்படுத்தி, இரு உரைகளின் பகுதிகளை இச்சிறுகதைக்குள் நுழைத்திருக்கிறார். நம் அறிதல் முறைகளின் எல்லைகளை மட்டுமல்லாது, சிந்தனை முறைகளில் உள்ள எல்லைகளையும் இக்கதை சுட்டுகிறது என புரிந்துகொள்கிறேன். தனது அறிதல்களின் கட்டமைப்புக்குள் அடங்கிவிடாத ஒன்றை எதிர்கொள்ளும்போது, அவ்விஷயங்களை மனித இனம், தான் ஏற்கனவே அறிந்தவற்றின் துணைகொண்டு, சற்றே எல்லைகளை விரித்து ஆனால் அவ்விஷயத்தை வரையறுத்துக் கொண்டு அதை தன் அறிதல் வளையத்துக்குள் கொண்டுவந்து விடுகிறது. இது அறிதல் முறையின் இயல்புதான் எனினும், இதனாலேயே நம் அறிதல்களின் எல்லைகள் கண்ணுக்குத் தெரியாத வண்ணம் ஒரு வேலிபோல சூழ்ந்துகொண்டு மேலதிக அறிதல்களை தடுத்துவிடும் அபாயமும் இக்கதையில் விளக்கப்படுகிறது. இவையனைத்தையும் ஒரு சிறுகதைக்குள் அடக்கிவிட முடியும் என்பதே திகைக்க வைக்கிறது. எனினும் வாசிப்பின்பத்தில் எவ்வித பாதிப்பும் இல்லாதவாறு ஜெயமோகன் (வழக்கம்போல) பார்த்துக் கொள்கிறார்.
  • கதை: ஆசிர்வாதம் ஸ்டூடியோஸ்
  • ஆசிரியர்: அஜிதன்
  • இதழ்: வல்லினம்
  • சுட்டி: https://vallinam.com.my/version2/?p=10077
  • பரிந்துரை: கணேஷ் பெரியசாமி
    • ஆடுகளை கிடைகளாக மேய்க்கும் சமூகத்தை சேர்ந்த கதைசொல்லி, துன்பம் நிறைந்த தன் இளமைக்கால வாழ்க்கையை தனது பதினேழாம் வயதில் உதறி, சென்னைக்கு வந்து ஞானய்யா என்னும் திரைப்பட இசையமைப்பாளரின் ஸ்டூடியோவில் ஒரு உதவியாளராக சேர்ந்து தன் வாழ்க்கையில் தான் காணாத மகிழ்ச்சியை அடைவதை கதை சொல்லிச் செல்கிறது. கதையை இரண்டு தனி பகுதிகளாக பிரிக்க முடிகிறது. கதைசொல்லியின் கிடை வாழ்க்கை விரிவாக விளக்கப்படும் முதல் பகுதி. ஞானய்யா என்னும் இசையமைப்பாளரை கண்டு, அவர் வாழ்க்கையுடன் தன் வாழ்க்கையை சற்று தள்ளி நின்று பிணைத்துக்கொண்டு வாழும் இரண்டாம் பகுதி. இரண்டு பகுதிகளையும் இணைக்கும் சரடாக ஞானய்யாவே அமைகிறார். கிடை வாழ்க்கையில் எதேச்சையாக கேட்க நிகழும் ஞானய்யாவின் இசை, கதைசொல்லி தனது கிடைவாழ்க்கையை துறந்து ஞானய்யாவின் அருகாமையை சென்றடைவதற்கும் உதவுகிறது. கிடைவாழ்க்கை அபரிமிதமான அளவில் நுண்விவரங்களை கொண்டு அமைந்துள்ளது ஒருபுறம் என்றால், தன்னை வசீகரித்த ஆளுமையை நேரில் கண்டு, நெகிழ்ந்து, அவருடனேயே தொழில் வாழ்க்கை அமையும் பேறும் பெற்று, அதை அனைத்து பொழுதுகளிலும் மனதினுள் ஆராதிக்கும் இரண்டாம் பகுதியுமே நிறைய ஆழமான தருணங்களை சொல்லிச் செல்கிறது. இறுதியில் நிகழும் திருப்பம் ஞானய்யாவுக்கு மட்டுமின்றி, கதைசொல்லிக்குமே ஒருவித விடுதலையை தருகிறது என புரிந்து கொள்கிறேன்.
  • கதை: நேர்காணல்
  • ஆசிரியர்: சசி
  • இதழ்: சொல்வனம்
  • சுட்டி: https://solvanam.com/2025/01/12/%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b2%e0%af%8d/
  • பரிந்துரை: கா.சிவா
    • சென்னையில் பேருந்து நிறுத்தங்களில் ஊருக்குச் செல்ல பணமில்லை எனக் கேட்பவர்களிடம் பரிதாபம் கொண்டு, கொடுத்து ஏமாந்த அனுபவம் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். கதைசொல்லி, அம்மாதிரிக் கேட்கும் ஒருவனிடம் பல கேள்விகள் கேட்பதையும் பணம் கொடுத்து ஏமாந்தாரா என்பதையும் கூறுகிறது இக்கதை.
  • கதை: ஐஸ்கீரிம்
  • ஆசிரியர்: பாலாஜி ராஜு
  • இதழ்: சொல்வனம்
  • சுட்டி: https://solvanam.com/2025/01/12/%e0%ae%90%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%80%e0%ae%ae%e0%af%8d/
  • பரிந்துரை: சாய்
    • 20 வயதில் கணவனை இழந்து, மகனை வளர்த்து, பின்பு பேரக் குழந்தைகள் வரை பார்த்துவிட்ட 55 வயதான கூலித் தொழில் செய்யும் பாட்டிக்கு ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. அந்த எண்ணத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் பாட்டி என்ன செய்தார் என்பதான கதைக்களம். மேலோட்டமாகப் பார்த்தால் சுமாரானக் கதைதான் என்றாலும், கணவன் இறந்ததும் இழந்த அன்பை அடைய என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் பெண்ணின் மனநிலையை ஐஸ்கிரீமுக்கான ஏக்கமாய்ப் பார்த்தால், கதையை வேறொரு கோணத்திலும் புரிந்து கொள்ளமுடிந்து, கதை ரசிக்கும் படியாக அமைகிறது.
  • கதை: நிறை சூலி
  • ஆசிரியர்: பா திருச்செந்தாழை
  • இதழ்: உயிர்மை
  • பரிந்துரை: குலசேகரன்
    • சிறிது காலம் முன்பு வரை தன் துறை சார்ந்தவற்றை எழுதத் தயங்கினார்கள். தன் இளம் செகந்திராபாத்தை எழுத அசோகமித்திரனுக்கு நீண்ட காலம் பிடித்தது. ஜெயமோகனுக்கு தகவல் தொடர்புத் துறை வேலையைத் துறந்த பிறகு. அவற்றை நோக்குவதற்கு சார்பற்ற விலகல் தன்மை தேவைப்பட்டிருக்கலாம். இப்போது பலரால் அச்சூழலில் அதையே எழுத முடிகிறது. பா. திருச்செந்தாழையின் பல சிறுகதைகளில் தானிய வணிக நடவடிக்கைகள் தொடர்ந்து வருவன. கார்ப்பரேட்டுடன் ஒப்பிட சிறு லாப நட்டம் புழங்கும் சிற்றிடம். ஆனால் ஈவிரக்கமின்மையும் நெருக்கடியும் குரூரமும் அளவற்றவை. “நிறை சூலி” சிறுகதை அத்தன்மையுடையது. பா.திருச்செந்தாழை அதிலிருந்து எழுதுகிறார் எனக் காரணம், அதை மிகுந்த ஈடுபாட்டுடன், நேசிக்கிறார் எனத் தோன்றுமளவுக்கு ரசனையுடன்எழுதுகிறார். அனுபவத்திளைப்பால் மட்டும் பயின்று வரும் உத்திகளை தந்திரங்களை சூதுவாதுகளை சூத்திரங்களை பழக்க வழக்கங்களை நுட்பமாக பதிகிறார்.இதில் குழந்தையுருவாகும் வளமையும் வணிகமும் அருகருகே வைக்கப்பட்டு ஒப்பிடத் தூண்டுகிறது. இன்னதென அறியவியலாத பக்தி போன்ற வியாபாரத் திறன், நிறை சூலி காளியைப் போல் வெளியிலிருப்பது. வணிகம் செய்ய அத்தியாவசியமான இடத்தை சோதி தருவது, சன்னத மேற்பட்டு குழந்தையுண்டாக அருளுவதுதான். மகேந்திரனுக்கு இடம் கிடைப்பதற்கு முன்பு வியாபாரத்தில் வளராதது முன்பு குழந்தைப் பேறில்லாததை ஒத்தது. இனி கிடைக்கப் பெறலாம். அவர்கள் உறவால் உருவான கருவை, தொழில் வளத்தை சோதி கலைக்கப் போகிறாள். அவள் தொன்ம தெய்வமான நிறை சூலி காளி. புறங்காட்டைப் போன்ற மர்மமான சந்தைக்கு ஒதுக்கப்பட்டவள்.பெரும்பாலோர் கைக்கொள்ளும் புறவயமான நடைக்கு மாற்றாக அக மொழியில் தோய்ந்து எழுதுபவர் பா.திருச்செந்தாழை. மெல்லுணர்வோ என்று தோன்றுகிற ஆழ எல்லைக்கும் செல்பவர். அதேபோல்தான், மனித உறவுகள் வியாபாரமாகி விட்டதாக பல இலக்கிய ஆக்கங்கள் தெரிவிப்பதற்கு பதிலாக, வணிகம், உணர்வுபூர்வமடைவதை பா.திருச்செந்தாழை படைத்துக் காட்ட முயலுகிறார் எனப் படுகிறது.
  • கதை: இறந்த காலத்தை மாற்றும் கலை
  • ஆசிரியர்: குமாரநந்தன்
  • இதழ்: கலகம் இணைய இதழ்
  • சுட்டி: https://kalakam.in/archives/3616
  • பரிந்துரை: லாவண்யா
    • Day looping போன்ற கதை இது இரண்டொரு சினிமாவில் பார்த்தது நினைவுக்கு வருகிறது. சுவாரஸ்யமான நடை. கால இயந்திரத்தில் முன்னும் பின்னும் பயணித்து தனது சாவை அறிவது அதை மாற்றுவது என்பதே ஒரு கால விளையாட்டு போல நிகழ்கிறது.
  • கதை: தலைக் கசம்
  • ஆசிரியர்: மு குலசேகரன்
  • இதழ்: தமிழ்வெளி
  • பரிந்துரை: லாவண்யா
    • கதை சொல்லியின் பால்ய நினைவுகளால் நகரும் கதை. கதை தொடங்கும் போது வரும் மாயாக்காவின் தற்கொலை கதைச்சொல்லியின் அக்காவின் முடிவும் இப்படி தான் இருக்குமோ என்று எண்ணம் கதையின் இடையிலேயே வந்துவிடுகிறது. ஆனால் முடிவு வேறு விதமாய் இருக்கிறது. சாவு வீட்டின் தீபம் அசைவதை தீ நாக்கு என்று சொல்லும் உவமை அழகு, அதற்கு அந்த grossip க்கும் சம்மந்தம் இருப்பது போலிருக்கிறது. சாவு வீட்டுக்கு கிளம்ப அம்மா கையகல கண்ணாடியில் தன்னை அலங்கரித்துக் கொள்ளவது சிறிது அதிர்ச்சியை தந்தாலும் அழகாக வந்திருக்கும் இடம். பால்ய நினைவு, அந்த பருவத்தில் ஒவ்வொருவர்க்கு ஒரு நாயகன் நாயகி அவனுக்கு முன்னால் இருப்பார்கள் அந்த நாயக பாவம் பாலகனிடம் வந்து சேரும் தருணம் அவனது பால்யம் முடிந்து விடும் இது இயல்பான ஒரு விஷயமே. எல்லோர்க்கும் நடப்பது. கதை அந்த நாயக பாவத்தை அடியொட்டி ஒரு இணைய முடியாத காதலை பூடக வெளிப்படையாகச் சொல்கிறது. கதையின் சமூக ஏற்தாழ்வு அடுக்குகளில் அந்த பூடகக் காதல் நசுங்கிவிடும் என்பது வெளிப்படையாய் தெரிவது போலவே நடந்தாலும் கதையை இறுதிவரை வாசிக்க வைக்கிறார் ஆசிரியர். இந்த சமூக ஏற்றத்தாழ்வு சொல்லாமே வாசிப்பவர்க்கு புரியும் என்பது என் எண்ணம். நல்ல கதை
  • கதை: காதுகளின் கல்லரை
  • ஆசிரியர்: ரா. செந்தில் குமார்
  • இதழ்: வல்லினம்
  • சுட்டி: https://vallinam.com.my/version2/?p=9997
  • பரிந்துரை: கணேஷ் பெரியசாமி
    • ஜப்பானின் வரலாற்று பின்னணியையும், அதில் நடக்கும் நிகழ்ச்சிகளால் தோன்றியிருக்க வாய்ப்புள்ள, ஒரு குடும்பத்தை தலைமுறை தலைமுறையாக தாக்கும் மனநோய் பற்றியும் பேசும் கதை.கதையில் சஸ்பென்ஸ் என வைக்காமல் ஏறத்தாழ அனைத்து செய்திகளையுமே கதை சொல்லிவிடுகிறது. இது வாசகருக்கு, “இவை தவிர இந்த கதையில் என்ன உள்ளது?” என்பதை நோக்கி சிந்திக்க உந்தும் சவாலைத் தருகிறது. கதையின் பெரும்பகுதி உரையாடலாகவே செல்வதை ஆசிரியர் தவிர்த்திருக்கலாம் என தோன்றுகிறது. அக்குடும்பத்தின் ஒவ்வொருவருக்கும் அவரது பெருவிருப்பம் உள்ள துறை/செயலை, தன்னை அவர்களுக்குள் உள்நுழைத்துக்கொள்ளும் வழியாக அந்த மனநோய் தேர்ந்தெடுப்பதும் சுவாரஸ்யம். ஜெயமோகன் அவர்களின் பலிக்கல் கதையை கருவின் அளவில் நினைவூட்டுகிறது.
  • கதை: இன்துயில் கொள்க
  • ஆசிரியர்: சர்வின் செல்வா
  • இதழ்: வல்லினம்
  • சுட்டி: https://vallinam.com.my/version2/?p=9994
  • பரிந்துரை: கணேஷ் பெரியசாமி
    • குடும்ப வன்முறையின் விளைவாக அப்பா விலகிப்போக, வறுமையால் பாலியல் தொழிலுக்கு அம்மா செல்ல, அவரைப் பிரிந்து அண்ணனும் கதைசொல்லியுமாய் சிறுவயதிலிருந்து தனியாக வளர்கிறார்கள். பல வருடங்கள் கழிந்து அம்மா நோயுற்றிருப்பதை அறிந்து அண்ணா அவரை தன் வீட்டுக்கு அழைத்து வர அங்கு நடக்கும் நிகழ்வுகளே கதைக்களமாக உள்ளது.ஒரு சிறுகதைக்குள் நீண்டதொரு வாழ்க்கையை சுருக்கி அளித்திருக்கிறார் ஆசிரியர். நிகழ்காலத்தில் குறைந்த அளவே சம்பவங்கள் நடக்கின்றன. கதையின் பெரும்பகுதி இறந்த காலத்தை சொல்லவே பயன்படுத்தப்பட்டு விடுகிறது. இது ஒரு பலவீனமாக உள்ளது.

  •  

பிப்ரவரி 2022 சில கதைகள்

கதை: அடிகுச்சி
ஆசிரியர்; சு சரவணன்
இதழ்: யாவரும்.காம்

கலையும் சாதி அமைப்பும் இணையும் நுட்பமான முடிச்சை தொட்டிருக்கிறது. ஆசிரியரின் இரண்டாவது கதை என்ற குறிப்பும் இருக்கிறது. மௌனமாய் உணர்த்தப்பட வேண்டியவை வார்த்தைகளிலும் வெளிப்பட்டிருக்கிறது என்பது மட்டும் சிறு குறை

*

கதை: இடுக்கண்
ஆசிரியர்: அசோக்ராஜ்
இதழ்: யாவரும்.காம்

கதை ஆரம்பித்த முதல்வரியிலேயே உள் இழுத்துக்கொள்ளும் கதை நண்பரிடம் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்த கதை. மிக இயல்பாக வெளிப்பட்டிருக்கிறது. கதையில் புதுமை என்று எதுவுமில்லை ஆனால் மிக எதார்த்தமான நிஜம் போலிருப்பது இந்த கதையின் பலம்.

*

கதை: சூலி
ஆசிரியர்: வைரவன்
இதழ்: வனம்

பிரசவத்துக்கு மனைவியை ஊருக்கு அனுப்பி விட்டு வீட்டின் தனிமை கொடுக்கும் ஆசுவாசுவசத்தையும் பயத்தையும் கதைக்குள் கொண்டு வந்திருக்கிறார். பெங்களூரில் புறாக்கள் அதிகம் ஆனால் அவை ஏப்ரல் மே மாதங்களில் தான் இனப்பெருக்கம் செய்யும். இந்த கதையில் பெங்களூர் குளிர் வீட்டு பால்கனியின் புறாக்கூடு அதன் முட்டை என்பது புனைவுக்காக சரி என்று எடுத்துக் கொள்ளலாம். அந்த காலத்தில் வீட்டில் குளவி கூடு கட்டும் சகுனத்தை வாரிசை எதிர்பார்த்திருக்கும் வீட்டுக்கு நல்ல செய்தியை தரும் என்ற நம்பிக்கையுண்டு அதை புறாக்கூடு அதன் முட்டையோடு ஒப்பிட்டு எழுதியிருக்கிறார். வாசிக்க சிக்கல் இல்லாத கதை. ஆனால் கரு மிகவும் பழையது. சொல்லிய விதமும் பல புறாக்கதைகளில் வந்திருப்பது தான்.

*

கதை: ஈய உயிரியின் பாடல்
ஆசிரியர்: செந்தூரன் ஈஸ்வரநாதன்
இதழ்: அகழ்

அதிகாரத்துக்கு எதிர்க்கும் குரல் எவ்வளவு ஒடுக்கப்படுகிறதோ அதே விட வேகமாக ஒலிக்கிறது. அதை மௌன சாட்சியாக பார்க்கும் கோணத்தின் கதையின் காட்சி வரைவுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த கதையின் முக்கிய அம்சம் இதன் வடிவம். சில காட்சிகளையும் ஓசைகளையும் நாடகபாணியில் அல்லது திரைகதை வடிவில் சொல்லியிருப்பது. முழுகதையை சொல்லாமல் சில புள்ளிகளை ஆங்காங்கே வைத்து நீங்களே கதையை புனைந்து கொள்ளுங்கள் என்ற வாசகர் மேல் பெரும் நம்பிக்கை வைத்து எழுதியிருக்கும் கதை. ஓரிரு வரிகளில் வரும் கதாபாத்திரங்கள் கூட மனிதில் நிற்கும் படி எழுதிருப்பது கதையின் பலம். ஆனால் இதன் மொழியிருக்கும் இதனுள்ளே பகடிக்காக சொன்ன விஷயத்தை கூட மிக சீரியஸான விஷயம் போல வாசகர்களை ஏமாற்ற வாய்ப்புள்ளது.

*

  •  

ஜனவரி 2022 சில கதைகளின் பரிந்துரை

கதை: விளிம்பு
ஆசிரியர்: வைரவன் லெ ரா
இதழ்: ஓலைச்சுவடி

மாய எதார்த்த கதை போல மொழியும் வடிவமும் மிக அருமையாய் குலைந்திருக்கிறது சிரஞ்சீவி மலைகள் இந்தியாவின் பலபகுதிகளில் இருப்பது போல குமரிமுனையிலும் ஒன்று அந்த மலையையும் இமயமலையையும் இணைக்கும் ஒரு சிறுபுள்ளி. நல்ல கதை.

*

கதை: யாருக்காகவும் பூக்காத பூ
ஆசிரியர்: அரவின் குமார்
இதழ்: வல்லினம்

கதைசொல்லி ஒரு பள்ளி மாணவன் பத்துவயதுக்கு குறைவான வயதுடைய பையன் சொல்வது போன்ற கதை அதற்கே உரிய(குழப்பமான) போக்கில் இருக்கிறது. கதை சொல்லியும் அவன் நண்பர்கள் எல்லோருமே ஏழ்மை நிலையிலுள்ள பெற்றோரின் பிள்ளைகள். சிறுபிள்ளைகளிலுக்கிடையே நிகழும் சின்ன சின்ன போட்டி பொறாமைகள் மிகத்தெளிவாக பதிவாகியிருக்கிறது. அன்னையற்ற குழந்தைக்கு தராத சலுகையை அவர் கதைசொல்லிக்கு தருகிறார். இந்த இடத்தில் கதாரியர் நமக்கு ஏதோ ஒரு ஏற்றதாழ்வை உணர்த்த விரும்புகிறார் ஆனால் அது தெளிவாக உணர தேவையாக உரிபொருள் இல்லையோ என்று தோன்றுகிறது. பால்ய வயதில் நிகழும் கதைகளுக்குண்டான innocence இன்னும் கொஞ்சம் புனைப்பட்டிருந்தால் இந்த கதை எங்கோ சென்றிருக்கும். வாசிக்கலாம்.

*

ஆசிரியர்; எம்.கோபாலகிருஷ்ணன்

கதை: திரும்புதலற்ற பாதை

இதழ்: வல்லினம் இணைய இதழ்

பரிந்துரை: மு. குலசேகரன்

நேர்த்தி மிகுந்த நெடுங்கதை. இதில் இந்த தனித்த வடிவத்துக்கேயுரியதான, வெவ்வேறான, ஆனால் வரையறுக்கப்பட்ட ஒரு விதத்தில், கதைமாந்தர், காலம், இடம், சிறப்பாக அமைந்துள்ளன. இந்தியாவின் இரு வேறு மூலைகளை பிணைக்கிற சாதிய சிக்கல் பின்னணியில், மிகவும் கலையமைதியுடன், சொல்லப்படாத பலவற்றை உணர வைக்கும் மொழியில் இக் கதை எழுதப்பட்டுள்ளது. நிலவுடமை முறை சரிந்து, முதலாளித்துவம் வளர்ந்த சூழலிலும் வேரோடிப்போயுள்ள, மேல்/கீழ் பிரச்சினை மாறாமலிருக்கிறது. உற்பத்தி உறவுகள் மாறினால் சாதியம், மத சிக்கல்கள் தேயும் என்பது இன்னும் கனவாகவே நின்றிருக்கிறது. குறிப்பிட்ட இருவரும் ஒத்த பொருளாதார நிலையிருந்தாலும், அந்நியமான பிரதேச அவலத்திலிருந்தாலும், ஒருவன் உயர்சாதிய மனோபாவம் கொண்டிருக்கிறான். அதுவே அவன் உடல், நடத்தை பாவனைகளாக வெளிப்படுகின்றன. அது போலவே, களமும் மாறுபட்டிருப்பதால், ஒடுக்குதலுக்குள்ளானவன் இம்முறை எதிர்த்து நிற்கிறான், காகம் வலிமையான கழுகிடம் போரிடுவது போல். இதில் ஊழ் போல் சிக்கி மரணமடைகிறான் மற்றொருவன். அவனுக்கு சாதியப் பிரச்சனைகள் இல்லை போலிருந்தாலும், குடும்ப அமைப்பை மீறிய காதல் மணம் புரிந்தவன். இறுதியில் ஆதரவற்று நிற்கும் மனம் வெதும்ப செய்யும் மனைவிகள், உற்றார்கள். சாதியம், மீறல் என்ற வெற்று உணர்வுகள் ஒரு தற்செயலான அபத்தப் புள்ளியில் வைத்து, பல நுட்பங்கள் கொண்டு விவரிக்கப்படுகின்றன.

*

கதை: பிரதி ஜெராக்ஸ்
ஆசிரியர்: சேவியர் ராஜதுரை
இதழ்: சொல்வனம்

பிரதி எடுக்கும் கடையில் மறுபடி மறுபடி பிரதி எடுக்க எடுக்க வருவதற்கு காரணம் இதுவாக இருக்கலாம் என்று நினைக்கும் படியான கதை. கதையின் முடிவை இன்னும் இறுக்கமான, உனக்காகத் தான் வருகிறேன் என்றெல்லாம் சொல்லாமல் விட்டிருந்தால் இந்த கதை இன்னும் நன்றாக இருந்திருக்கும். எழுதுவது ஒருவிதத்தில் பிரதி எடுப்பது போன்றதே என்ற இடத்தை இந்த கதை தொட முயற்சி செய்திருக்கிறது. அந்த கோணத்தை இன்னும் வலுபடுத்தியிருந்தால் இந்த கதை இன்னும் வேறு தளத்தைத் தொட்டிருக்கும்.

*

ஆசிரியர்:கனகராஜ் பாலசுப்பிரமணியம்

கதை: நிலவுண்ணும் மண்

இதழ்: காலச்சுவடு

பரிந்துரை: அனோஜன் பாலகிருஷ்ணன்

சமீபத்தில் உரையாடல் ஒன்றில் நண்பர் சொன்னார், “அடிப்படைவாத இஸ்லாமியர்களிடம் இருந்து, முற்போக்கு இஸ்லாமியர்கள் தம்மைப் பாதுகாக்க இனிவரும் காலங்களில் அதிகம் கடினப்பட வேண்டியிருக்கும்…” என்று. ஏறக்குறைய அதை உணர்த்திச் செல்லும் கதை. துனேசியா நாட்டில் அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழும் அரசியல் புரட்சியை, குடும்ப உறவுச்சிக்கலுடன் இணைத்துக் கச்சிதமாக எழுதப்பட்டுள்ளது. பிரான்ஸில் அரேபிய பின்புலத்தில் எழுதப்பட்ட வாழ்க்கைச்சூழல், பழகிப்போன கதைக்களங்களில் இருந்து நம்பகமான வேறுப்பாட்டைத் தருகிறது; காரணம் கனகராஜின் நுண்தகவல்களும் அவதானங்களும். காலனிய காலத்தின் பின்னர் ஏற்பட்டிருக்கக்கூடிய இடம்பெயர்வுகள், குடியேற்றங்கள், அதன் அரசியல் முரண்கள் போன்றவை தமிழ் இலக்கியத்திலும் வருவது நல்ல விஷயம். சுருக்கத்திலிருந்து இன்னும் இன்னும் விரிவுக்குள் செல்ல அது உதவும். அரசியல் கதைகளில் இருக்கும் பிரச்சார நெடி அது கொண்டுசெல்லும் தீர்வில் மட்டுமல்ல; கதையைப் பிரஸ்தாபிக்கும் விதத்திலும் உண்டு. கனகராஜால் பக்குவமாக எழுதிச்செல்ல முடிகிறது. ஜனவரி காலச்சுவட்டில் இக்கதையை வாசிக்கலாம்.

*

  •  

டிசெம்பர் 2021 சில கதைகள்

கதை: சீதையின் கிளிகள்

ஆசிரியர்: கா சிவா

இதழ்: புரவி

பரிந்துரை: லாவண்யா

*

ஊர்மிளையை நாயகியாகக் கொண்ட கதை. இராமயண நிகழ்வுகளை இடையில் வந்திருக்கிறது. மனைவியிடம் சொல்லாமல் கூட காட்டுக்கு சென்றுவிட்ட லஷ்மணன் மீது ஊர்மிளாயின் கோபம், வெறுப்பு, தாபம், சமாதானம் எல்லாம் இன்னும் நுட்பமாக வந்திருக்க வேண்டிய கதை. ஊர்மிளையை நாயகியாக கொண்ட கதை என்பதற்காகவே இதை கண்டிப்பாக வாசிக்கலாம்.

கதை: சகதர்மினி
ஆசிரியர்:ஊஷாதீபன்
இதழ்:ஆவநாழி
பரிந்துரை: கமலதேவி

*

எந்தவகையிலும் சின்னஞ்சிறு வளைவுகூட இல்லாத நேர்கோடு போன்று எல்லாவகையிலும் சரியாக இருக்கும் ஆளுமையான மனைவி பற்றிய கதை.கதையின் முடிவு அவளின் சிறுபிசகிலிருந்து தொடங்குகிறது

கதை: நெருநல் உளலனொருத்தி

ஆசிரியர்: செந்தில் ஜெகன்நாதன்

இதழ்: தமிழினி

பரிந்துரை: லாவண்யா

*

வாசிக்கும் போது சமீபத்தில் இதே கருவைக் கொண்ட ஒரு கதை நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. ஒருசமயம் வேண்டுமென்று ஏங்கி தவித்தது பின்னர் பாரமாவது தாய்மைக்கே உரிய சிக்கலோ?

https://tamizhini.in/2021/12/24/%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%ae%a9%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/

கதை: ஹேர் கட்

ஆசிரியர்: ராம்சந்தர்

இதழ்: சொல்வனம்

பரிந்துரை: லாவண்யா

*

“ஒவ்வொரு சாகசத்துக்கும் ஒரு தோரணை”

மிக எளிமையான கதை. வாழ்க்கையின் ஒவ்வொரு பத்தாண்டும் ஒரு சாகசம் அல்லது வாழ்க்கையே சிந்துபாத் கதையை போல விரியும் சாகசம். சாகசம் என்றால் வில்லை வளைத்து மலையைப் பிடுங்கி என்று செய்வதற்கு அறியதை செய்வதில்லை. வாழ்தலே சாகசம் என்பதை சில சில சம்பவங்களாக நினைவோடையில் சொல்லிக் கொண்டே போகும் கதை. முடி வெட்டிக் கொண்டு வரும் போது வீட்டின் முதியவர்கள் காட்டும் கட்டுப்பாடு, அப்போது சம்மந்தப்பட்டவர் உணர்வது எல்லாமே சிறப்பாக வந்திருக்கிறது. நல்ல கதை சிறந்த வாசிப்பனுபவம்.

https://solvanam.com/2021/12/26/%e0%ae%b9%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d/

கதை:பெருக்கு
ஆசிரியர்:ஐ.கிருத்திகா
இதழ்: சொல்வனம்
பரிந்துரை: கமலதேவி

*

பாலூட்டும் பெண்ணின் சிரமங்களை சொல்லும் கதை. அதை உணர்வுபூர்வமாக அணுகுவதை விட உடலியல் உயிரியியல் சார்ந்த அனுபவமாக …அதன் நடைமுறை சிக்கல்களை எழுதியிருக்கிறார். இந்த இயல்பான தன்மை கதையின் பலம் என்று தோன்றுகிறது.

கதை: மணிமேகலையின் வாழ்விலே ஒரு தினம்
ஆசிரியர்: ஸிந்துஜா
இதழ்: பதாகை
பரிந்துரை: மு. குலசேகரன்

*

வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்ல முடியாமல் தேர்தல் பணியாற்ற வேண்டிய வழக்கமான மேல் மட்ட பெண் உயரதிகாரியின் சிறு அனுபவம். அரசு கட்டிடங்கள், வேலை, சூழல், மனிதர்கள், வேறு மொழி, பிரதேசம் என்று எல்லாவற்றின் மீதும் மெல்லிய கசப்பைக் கொண்டிருக்கிறாள் அவள். அதைப் போக்கிக் கொள்ளும் விதமாக வாழ்க்கையைப் பற்றிய சிறு வெளிச்சம் அவளுக்குக் கிடைக்கிறது. அதை இனி வளர்த்தெடுத்துக் கொள்ள வேண்டியது அவள் பொறுப்பு.

கதை: தேவைகள்
ஆசிரியர்: உஷாதீபன்
இதழ்: பதாகை
பரிந்துரை: மு. குலசேகரன்

*

வழக்கமான ஒண்டுக் குடித்தன வீட்டில் கணவன் உடலுறவுக்கு மனைவியை மறைவாக அழைக்கிறான். அதனுடன், அந்த வீட்டின், மில் வேலையின், சுற்றியுள்ள மனிதர்களின் பிரச்சினைகளை அவள் விரித்து, விரித்துக் காணுகிறாள். கூடவே பிரத்யேகமான தன் உடலின் சிக்கல்களையும். அவற்றிலிருந்து விடுபட தனிவீடு செல்லும் எண்ணத்தை உகந்த தருணமான உடலுறவின் போது கணவனிடம் வைக்கிறாள். அவன் கேட்காததால் அவள் உறவுக்கு மறுக்கிறாள். அங்கு நிறுத்திக் காட்டுவதின் வழி ஒரு பெரும் போராட்டத்தையே சித்தரித்து விடுகிறார் கதையாசிரியர்.

கதை: போட்டோ சார்
ஆசிரியர்: லட்சுமிஹர்
இதழ்: பதாகை
பரிந்துரை: மு. குலசேகரன்

*

பொது பூங்கா, அங்கு கட்டணத்துக்கு புகைப்படம் எடுக்கும் ஊழியரான போட்டோகிராபர் என்று புதிய கதைக் களம் நிறுவப்படுகிறது. ஒரு பெரும் கால மாற்றம் காமிரா வழியாகவே சொல்லப்பட்டு விடுகிறது. காமிராவுடன் பேசிக் கொண்டு தனிமையில் வாழ்கிறார் அந்த புகைப்படக் கலைஞர் யாசிர் பாய். பார்க், பழைய காமிரா, பிலிம்ரோல்கள், லென்ஸ், புதிய காமிரா, சூழல் எல்லாமும் கதையில் புகைப்படக் காட்சிகள் போல் அழுத்தமாக பதிவாகியுள்ளன. அந்த சட்டகத்துக்குள் புகைப்படப் பின்னணியாக யாசிர் பாயின் நீண்ட வாழ்க்கையுள்ளது. அவர் காலத்தின் வேகத்துடன் பயணிக்க விரும்பவில்லை. புதிய காமிராவுடன் புது இடத்துப் பணியையும் துறந்து விட்டு, மகிழ்வூட்டும் பழைய காமிராக் காட்சி போன்ற நிலைக்கு திரும்பப் போக நினைக்கிறார். அவருக்கு எதிர்காலம் குறித்த கவலைகளில்லை. மனதின் மொழி படிந்த, நல்ல வடிவத்துடனான சிறந்த கதை இது.

கதை: பொது இடம்
ஆசிரியர்: பெருந்தேவி
இதழ்: காலச்சுவடு
பரிந்துரை: சிவப்ரசாத்

*

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் எதிரெதி வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்குள் நடக்கும் சின்னப் போட்டி அல்லது மறைமுகமான சண்டை தான் பெருந்தேவியின் பொது இடம் என்ற குறுங்கதை. சின்ன உரையாடல் மூலமாகத் தீர்க்க வேண்டியப் பிரச்சினையை இரண்டு குடும்பமும் வளர்த்துக் கொண்டே போவதையும் அதை அந்த குடியிருப்பே இரண்டு பிரிவாக நின்று ஆதரிப்பதையும் மிகைபுனைவாக எழுதியிருக்கிறார். இந்த கதை Fernando Serrentino எழுதிய In Self Defence என்ற கதையை நினைவுபடுத்தியது. இதிலும் இரண்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக தங்களுக்குள் மாறிமாறி பரிசுக் கொடுத்துக் கொள்வது எந்த எல்லை வரைக்கும் செல்கிறது என்பதை மிகைபுனைவாக எழுதியிருப்பார். Fernando ஐரோப்பியர்களின் போலியான அன்பை கிண்டலாக எழுதியிருப்பார். இக்குறுங்கதையில் பெருந்தேவி பெருநகர அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளின் மனோபாவத்தை பகடியாக எழுதியிருக்கிறார். நல்ல குறுங்கதை.

  •  

நவம்பர் 2021 சில கதைகள்

கதை: மழையில் நனையும் அலைகள்
ஆசிரியர்: இவான் கார்த்திக்
இதழ்: சொல்வனம்
பரிந்துரை: கமலதேவி

தற்கொலை செய்து கொள்வதை பெரும்பாலும் மனம் விரும்புவதில்லை. அந்த ஒரு நிமிட அசாதாரணமான மனநிலையை கடந்துவிட நம் உயிர் எத்தனிக்கவே செய்கிறது என்பதுதான் கதை. எழுத்தாளர் மனம் செய்யும் ஜாலவித்தையை சொல்லிப்பார்த்திருக்கிறார். பிளவுகொண்ட மனமே என்ற ஐயமும் ஏற்பட்டது. தந்தையின் தற்கொலை தருணங்களை அதுஎது என்று அறியாத வயதில் கண்ட சிறுவனின் பிளவுபட்ட ஆளுமை தன்னுடைய அத்தகைய தருணத்தில் விழித்துக்கொள்கிறது என்று தோன்றியது. இதுவுமே உளவியலின்படி எஸ்கேபிசம் வகையை சார்ந்த கதை எனலாம்

*

கதை:கம்பாட்டம்
ஆசிரியர்:ஜெயன் கோபலகிருஷ்ணன்
இதழ்:கனலி
பரிந்துரை: லாவண்யா

கதைகளம் சூழல் எல்லாமே அருமை. கதை தொடக்கத்தில் குடிசை, பொழியும் மழையால் வரும் இன்னல்கள் என்ற சித்தரிப்புகள் கதையை வாசித்து முடித்தபின்னர் இன்னும் அழுத்தத்தை உண்டாக்குகின்றன. இடையில் சொல்லப்படும் தொன்மக்கதையும் அருமை. கம்பாட்டம் என்பது பெரிய குச்சியை காலில் கட்டிக் கொண்டு நடக்கும் ஆட்டம் என்று நினைத்திருந்தேன். இதில் சொல்லியிருப்பது வேறு விதமானது. ஆனால் அது மழைவேண்டி செய்யப்பட்ட யாகம் போன்ற ஒன்று என்பது புதிது.

*

கதை: வண்ணச் சீரடி
ஆசிரியர்: உமா மகேஸ்வரி
இதழ்: அகழ்
பரிந்துரை: கமலதேவி

கதையை ஒரு இடத்தில்கூட நிறுத்தாமல் வாசிக்கமுடிந்தது. கால்கள் காணவில்லை என கதை தொடங்குகிறது. மருத்துவமனை குறிப்புகள் அனைத்தும் அவள் சரியாக இருப்பதாக சொல்கிறது. அவளுக்கு மட்டும் தன் கால்களை காணவில்லை. நடக்கமுடியவில்லை. அந்த மனநிலை மற்றும் சூழ இருப்பவர்கள் மனநிலையை நன்றாக எழுதியிருக்கிறார். ஒருசில இடங்களில் அழகான கவித்துவங்களை கதை தொட்டுசெல்கிறது. அவள் தொலைத்து மீண்டும் தன் மனதை அல்லது நம்பிக்கையை கண்டெடுக்கிறாள். மருத்துவங்களை தாண்டி ஏதோ ஒன்று உள்ளதாக மருத்துவர்களே சொல்லும் அந்தஒன்றை இந்தக்கதை தொட்டிருக்கிறது. அந்த பலநூறு விசைகளில் ஒன்று மனிதத்தொடுகை. நண்பர்களை வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

*

கதை: பௌர்ணமி
இதழ்: செல்வனம்
ஆசிரியர்: மு வெங்கடேஷ்
பரிந்துரை: லாவண்யா, கமலதேவி


அம்மாவாசை இருட்டு மட்டுமில்லை கூடவே வரும் பௌர்ணமி வெளிச்சம் கூட பயமே என்பது அவ்வளவு இயல்பாக வந்துவிழுந்திருக்கிறது. மனசே பயம் என்பதைத் தாண்டி தினம் குடிக்க பேய் பயம் என்பது ஒரு சாக்கு. சேலை வியாபாரம் செய்யும் அன்னாடங்காச்சி முருகன் அவன் வீடு திரும்பும் பாதை இது தான் கதை. அம்பை, கல்லிடை, கல்யாணி, திருநெல்வேலி ஜங்சன் என்று புகழ்பெற்ற இடங்கள் கதைக்குள் வருவதால் எளிதாக கதைக்குள் ஒன்றிவிட முடிகிறது. ஆனால் இந்த இடங்களை நேரில் பார்க்காதவர்களுக்கு அவை வார்த்தைகளாக பெயர்களாக மட்டுமே தெரியும் என்பதும் வருத்தும் உண்மை. புது நெல்லு புது நாத்து படம் வந்தது 1991. அப்போது மினி பஸ்கள் வரவில்லை. மினி பஸ் முதலில் தொடங்கியது 1997. இப்படி காலக்குழப்பமும் இருக்கு. அவன் மனைவியும் மகளும் பௌர்ணமி, நட்சத்திரம் என்பது இறுதி வரிக்கு கொஞ்சம் முன்னரே விளங்கிவிடுவது இந்த கதையில் சின்ன சறுக்கல். என்ன இருந்தாலும் கதையும் நெட்டிவிட்டியும் அதன் மொழியும் அழகு. நல்ல கதை.


இருட்டில் பயணிப்பது மனதை எந்தஅளவிற்கு சப்தமும்,வெளிச்சமும் மனதுடன் மாயம்காட்டி விளையாடும் என்பதற்காகவே வாசிக்கலாம். இறந்தவர்கள் இருப்பவர்களை விட மனதில் துல்லியமாக நினைவில் இருப்பது வியப்புதான். அதுவும் தற்கொலை செய்து கொள்பவர்களை மனம் மறப்பதேயில்லை. அவர்கள் ஊரில் இருப்பவர்களை குற்றவுணர்வு கொள்ள செய்கிறார்கள். இந்தக்கதையில் அந்த மனவோட்டம் இயல்பாக வந்திருக்கிறது. தேன்மிட்டாய்களை… இறந்தவர்கள் உறைவதாய் சொல்லப்படும் புளியமரத்தின் அடியில் படைப்பது என்பது ஒரு அழகான அல்லது வெகுளித்தனமான மனிதஇயல்பு வெளிப்படும் தருணமாக இருந்தது. நாம் அதையும்கூட வழிபாடாக மாற்றிக்கொள்ளும் மனஇயல்புடன் இருக்கிறோம். இதை தற்காப்பு நடத்தை என்று உளவியல் சொல்வது மனதில் வந்து போனது. வழிநெடுக உடன்வரும் இறந்தவர்களில் யாருக்கு தேன்மிட்டாய் பிடிக்குமோ தெரியவில்லை. அது அனைவருக்கும் பிடித்தது தானே என்று தோன்றியது.

*

கதை:கத்தும் குயிலோசை
ஆசிரியர்: நந்தாகுமாரனின்
இதழ்: கனலி
பரிந்துரை: லாவண்யா

சூழலியல் என்பதைத் தாண்டி நவீன தகவல்கள் இயற்கை சார்ந்து மனிதனுக்கு வரும் மனசிக்கல்கள், தொழிற்நுட்பம் ஹைக்கூ கவிதை என்று கதைக்குள் பல வெரைட்டி கொடுத்திருக்கிறார். மிகவும் எடிட் செய்யப்பட்ட கச்சிதமான கதை. தலைப்பு மட்டுமே பாரதி கவிதைகளில் விவாதத்துக்கு உள்ளான சொல் தொடர். ஆனால் இந்த கதைக்கு வேறெந்த தலைப்பு தரமுடியுமென யோசிக்கிறேன்

கதை: பெயரெச்சம்

ஆசிரியர்: கார்த்திக் பாலசுப்ரமணியன்

இதழ்: வனம்

பரிந்துரை: கமலதேவி

*

கதை உணர்வுபூர்வமாக நன்றாக வந்திருக்கிறது. இதில் வரும் சித்தப்பா போன்ற குணாதிசயங்களை கொண்டவர்கள் வீட்டில் நிலைக்க முடியாததன் அலைவை கதை சொல்கிறது.

கதை: ஒரு முடிவில்லா குறிப்பு

ஆசிரியர்: கணேஷ் வெங்கட்ராமன்

இதழ் : சொல்வனம்

பரிந்துரை: நந்தாகுமாரன்

*

இந்த புனைவு அதன் ஆரம்பத்தில் என் சிந்தனைக்கு மூன்று நிகழ்வுகளை ஒரு சேரக் கொணர்ந்தது – ‘The Great Resignation’, ‘The Great Recession’ மற்றும் ‘The Great Depression’. Autofiction போன்ற வடிவம் கொண்ட கதை. ஆனால் நடு நடுவே வரும் சுய அறிவுரைகள் எல்லாம் என்ன தான் நெஞ்சோடு கிளர்தல் என்றாலும் சற்றே வாசிப்புத் தடை ஏற்படுத்தி அயற்சி தருகின்றன தான். நாம் எழுதிய ஒரு text சில காலம் கழித்து நாமே வாசிக்கும் போது அது தரும் அனுபவம் குறித்து உரையாடும் இது குறிப்பு, இன்னும் ஒரு குறிப்பு, மேலும் ஒரு குறிப்பு என நகர்கிறது. Sources of Modern Fiction – The Myths – குறித்து ஆராய்ந்து பார்கிறது. பணி அழுத்தம் குறித்தும் பேசுகிறது. புனைவில் இம்மாதிரிப் பரிசோதனை முயற்சிகள் எனக்குப் பிடிக்கும் தான். ஆனால் pleasure of text என்பது எனக்கு இதில் வாய்க்கவில்லை என்பதே குறை. எனினும் கதையின் இறுதி வரிகள் ஒரு case study போன்ற இக்கதை வடிவத்தை சற்றே ஒரு சிறு தரிசனமாகத் தோன்றச் செய்வது ஒன்றே ஆசுவாசம்.

  •  

அக்டோபர் 2021 சில கதைகள்

கதை: விலக்கம்
ஆசிரியர்: கமலதேவி
இதழ்: சொல்வனம்
பரிந்துரை: லாவண்யா

அண்ணன் தங்கைக்கு நடுவில் அண்ணன் மனைவியின் possiveness என்ற சின்ன முடிச்சு. ஆனால் இந்த கதையில் மஹா வருவதன் பங்கென்ன?

*

கதை: இரட்டை இயேசு
ஆசிரியர்: விஜய ராகவன்
இதழ்: வனம் இதழ்
பரிந்துரை: லாவண்யா

இந்த கதையை வாசிக்கும் போது எனக்கு நந்தாவின் கதைகள் நினைவுக்கு வருகின்றன. காரணம் இது இந்திய மண் அல்லாத இடத்தில் நடப்பது மேலும் கதையிலிருந்து நழுவி இடையிடையே ஒரு கதை சம்பவமும் மற்றொன்று தொன்ம கதையுமாக வருகிறது. கூடவே இந்தியா சினிமாவை பரிகசிக்கும் விஷயமும். தொற்று தொடங்கிய காலத்தில் இப்படி நடந்திருக்க வாய்ப்பு உண்டு என்று எண்ணும்படியான புனைவு.

*

கதை: அந்தர்வாஹினி
ஆசிரியர்: மாலதி சிவா
இதழ்: பதாகை அக்டோபர்
பரிந்துரை: லாவண்யா


இந்த காலத்தில் இவ்வளவு நல்லவாளா என்று யோசிக்க வைத்த கதை. கதைகளாவது அந்த யோக்கிதை மிச்சமிருக்கட்டுமென்று வாழ்த்திவிட்டு, யோசிக்கும் போது இந்த கதை நடந்து குறைந்தபட்சம் 70 ஆண்டுகளாவது ஆகியிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது, வீடெல்லாம் அம்பாள்களென்று ஏகப்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொள்வது சமீபகாலமாக இருக்க வாய்ப்பில்லை, இது தி ஜா கதை எழுதிய காலகட்டத்தில் நடக்கும் கதை.

*

கதை: நீக்(ங்)குதல்
ஆசிரியர்: உஷாதீபன்
இதழ்: சொல்வனம்
பரிந்துரை: கமலதேவி

ஒரே ஒருமுறை தவறு செய்தவரின் மாட்டிக்கொண்ட நிலை தான் கதை. அதிலிருந்து தொடங்கும் வெறுப்பு அனைத்து மனிதர்கள் மீதான கசப்பாக மாறுகிறது. உண்மையில் இதுபோன்று தான் இன்றைய சூழல் உள்ளது. யாரும் யாருடனும் இருப்பதில்லை. அவருக்கென்று ஒரு மனிதர் கூடவா இங்கு இல்லை என்று ஆதங்கமாக உள்ளது. நேர்மையாய் இருப்பவர்கள்…புறம் பேசாதவர்கள் என்று சில இத்தியாதிகள் உள்ளவர்கள் தனியர்களாகவே இருப்பது துயரத்திற்கு உரியது. இறுதியில் அவர் அனைவரின் மேலும் புகார்கள் உள்ளவராவது அதை விட துயரத்திற்குரியது.

  •  

செப்டம்பர் 2021 சில கதைகளில் பரிந்துரை

கதை: குளிர்ச்சி
ஆசிரியர்: ஐ கிருத்திகா
இதழ்: யாவரும் செப்டம்பர் 2021
பரிந்துரை: லாவண்யா
நாற்பதுகளில் தாம்பத்தில் பெண்ணுக்கு ஏற்படும் சிக்கல்களை பேச முயற்சி செய்திருக்கிறது. பத்து வயது பிள்ளைக்கு தாயான பெண் தாய் வீட்டுக்கு தனிமையை நாடு வரும் போது அனுபவிக்கும் ஏகாந்த சுகம் மிக அழகான எழுதப்பட்டிருக்கிறது. கதைசொல்லியின் அம்மாவைப் பற்றிய சித்தரிப்புகள் புற வர்ணனைகள் எல்லாம் மிக நேர்த்தியாக இருக்கின்றது. இன்னும் ஆழமாக வர வாய்ப்புள்ள கதை.

*

கதை: அனல் அவித்தல்
ஆசிரியர்: பாலாஜி பிருத்திவிராஜ்
இதழ்: வல்லினம் பரிந்துரை:லாவண்யா


நீத்தார் சடங்களில் ஒன்றான அடுக்கம் செய்த மறுநாள் சடங்கை சொல்லும் கதை. மிகச் சிறப்பான கதை, வழுக்கிச் செல்லும் மொழி நடை. பிருந்தா கவிதை ஒன்று எந்த சாவிலும் இறந்து போன அப்பாவை நினைத்தே அழுகை பீறிடும் என்பது போல, இதில் காக்கைக்கு சாப்பாடு வைக்கும் அந்த இடத்தில் ஒவ்வொருவரும் தனது முன்னோரின் சாயலை காண்பது. நல்ல வாசிப்பனுபவம்.*

கதை: காகளம்
ஆசிரியர்: செந்தில் ஜெகநாதனன்
இதழ் : தமிழினி செப்டம்பர், பரிந்துரை; லாவண்யா
குற்றவுணர்வும் தொழில் ஆளுமையும் ஒன்றோடு ஒன்று போட்டியிடும் கதை. மிக நல்ல விவரிப்பு. முதலாளிகள் பணத்தாசை கொண்டவர்கள் என்ற பொதுபுத்தியை உடைக்கிறது. விசுவாசிகள் தவறிழைக்கும் போது ஏற்படும் வலியை தாண்டி அவர்கள் முன்னேற உதவும் ராமஜெயம் மனதில் நிற்கிறார். சிடுக்கல் இல்லாத மொழிநடை. சிறந்த வாசிப்பனுபவம்.

*

கதை: மரத்தில் மறைந்தது

ஆசிரியர்: எம் கோபாலகிருஷ்ணன்

இதழ்: தமிழினி

பரிந்துரை: கமலதேவி

குரு,பெற்றோர்,ஆசிரியர் போன்ற உறவுநிலைகளில் நமக்கு ஏற்படும் அகச்சிக்கலுடன் இணைத்து கலைமனத்தின் அலைகழிப்பை பற்றி கதை பேசுவதால் நம் அனைவருக்குமேயான கதை. ஒரு அகச்சிக்கல் கலைமனதில் ஏற்படுத்தும் சலனங்கள் கதையில் நுணுக்கமாக வந்திருக்கிறது. குருவின் அருகாமை மாறும் தருணத்தை சசி எதிர்கொள்வதை உணர்வுபூர்வமாக வந்திருக்கிறது. ஊட்டியின் பனியும் ஈரமும்…ஈரம் மின்னும் மலர்களும் அந்தஉணர்விற்கு மேலும் கனம் சேர்க்கின்றன. இறுதியாக குரு… இன்னும் கிறிஸ்து கண்திறக்கலையா என்று கேட்கும் போது வாசிக்கும் நமக்கு ஒருவித உணர்வெழுச்சி எற்படுவதை தவிர்க்க முடியாது. அந்த வரி எத்தனையோ கண்திறப்பை கொண்டுவருகிறது.

*

கதை: நல்லாற்றின் நின்ற துணை

ஆசிரியர்: ஹரீஷ் கணபதி 

இதழ்: தமிழினி

பரிந்துரை: கமலதேவி

விவாகரத்து பெறுவதற்கான நடைமுறை சிக்கல்களும், அதனால் ஏற்படும் மனஅலைகழிப்புகளும் கதையின் பேசுபொருள். தரமாட்டேன் என்று சொல்வதன் பின்னுள்ள வன்மம் கதை போக்கில் சொல்லப்படுகிறது. வீட்டைக்கட்டிப்பாருன்னு சொல்லுவாங்கல்ல அந்தமாதிரி விவாகரத்து வாங்கிப்பாருன்னு சொல்ற மாதிரி இருக்கு.

  •  

ஆகஸ்ட் 2021 வெளியான சில கதைகள் மீதான் விவாதம்

கதை: பர்ப்பிள் மலர்கள்

ஆசிரியர்: மைதிலி

இதழ்: உயிரெழுத்து

பரிந்துரை: குமாரநந்தன்

கணவன் ஆதீதமாக சிகரெட் புகைப்பவனாக இருக்கிறான், மனைவிக்கு அது பிடிக்காது அவள் அவனிடம் இனி சிகரெட் புகைக்கக் கூடாது என வாக்குறுதி வாங்கிக் கொள்கிறாள்.
அவனும் வாக்குக் கொடுத்துவிடுகிறான்.
ஆனால் அவள் அதை நம்பவில்லை. கணவன் வாக்கை மீறிவிட்டு நாடகமாடுகிறான் என சந்தேகப்படுகிறாள். இருவருக்குமிடையே சதா வாக்குவாதம் போர்் போர்தான் சண்டையில்லை நடக்கிறது.
இருவரும் உக்கிரமான நிலைக்கு செல்கிறார்கள் அவள் அவனைத் தாக்குகிறாள். பின் அந்த நிலையைத் தாங்க முடியாமல் மயங்கி தூங்கிவிடுகிறாள். எழுந்து பார்க்கும்போது அப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கான எந்தத் தடயமும் இருப்பதில்லை அந்த சம்பவம் நடந்ததா கற்பனையா என்றே கண்டுபிடிக்க முடிவதில்லை. அவள் அதற்காக ஆதாரங்களைத் தேடித் தேடியே சோர்வடைகிறாள் என மிக விறுவிறுப்பாகப் போகிறது.
இரண்டு சராசரி மனிதர்களின் ஆளுமைகள் மோதிக் கொள்ளும்போது மன ரீதியாக உடல் ரீதியாக ஏற்படும் விளைவுகள் அச்சமூட்டும் வகையில் திரள்கின்றன. மேலும் ஒருவரின் மேல் ஒருவர் ஏன் ஆளுமை செலுத்த விளைய வேண்டும் ஏன் சந்தேகப் பட வேண்டும் என்ற கேள்விகளை இந்தக் கதை வாசகர்களின் மனதில் ஆழமாக விதைக்கிறது. மேலும் அவர்கள் மனமொத்த கணவன் மனைவியாக இருந்துமே இந்த நிலை ஏற்படுவதென்பது பிரச்னையின் விசித்திரத்தை ஒரே ஆளுமையின் மேல் ஏற்படும் அன்பின் வெறுப்பின் கூர்மையை கதை விரிவாகவே பதிவுசெய்ய முயற்சிக்கிறது.
மைதிலியின் முதல் கதை இது முதல் கதையிலேயே இவ்வளவு தீவிரமாக ஒரு விஷயத்தை சொல்ல முடிந்திருப்பது பெரும் நம்பிக்கையை அளிக்கிறது.
இவர் தேவிபாரதியின் மனைவி என்பதால், கதை வடிவத்தை இறுதி செய்வதில் அவர் உதவியிருக்கக் கூடும் என்ற எண்ணமும் எழாமல் இல்லை. சுமாரான கதையாக இருந்திருந்தால் இப்படி நினைக்கத் தோன்றியிருக்காது என்பதே கதையின், மைதிலி அவர்களின் பெரும் வெற்றி என்று நினைக்கிறேன்.

குருங்கதைகள்: மால், படமானவர்கள், வெளியாள்

ஆசிரியர்: பெருந்தேவி

இதழ்: காலச்சுவடு

பரிந்துரை: நந்தாகுமாரன்

முதல் கதை ‘மால்’ ஒரு விஞ்ஞானப் புனைவினை எந்தத் திகைப்பும் இல்லாமல் இயல்பாகக் காட்சிப்படுத்துகிறது. நகரங்களின் முக்கிய கேளிக்கை அடையாளங்களான மால்களில் இப்போது இருக்கும் புதிய இயல்பு என்பது வாரக் கணக்கில் சில தேர்ந்தெடுத்த குடும்பங்களை பொருட்கள் வாங்க அனுமதிக்கிறது. அப்படி ஒரு குடும்பம் தங்கள் குழந்தைகளை அழைத்து வரவில்லையே எனப் புலம்பியபடி சுற்றுகிறது. இறுதியாக அந்தக் குழந்தைகள் டிசைனர் ஹ்யுமனாய்ட் வகைகள் – நிஜக் குழந்தைகள் அல்ல மேலும் அவற்றை மாற்றத் தான் (புதிய வெர்ஷன்) இவர்கள் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற திரை விலகல் ஒரு எளிய திகைப்புடன் ஒரு இயல்பான டிஸ்டோப்பியன் சமூகத்தைக் காட்டிவிடுகிறது. ஆனால் இதில் எந்தப் புதுமையும் இல்லை எனினும் ஒரு சிறு வியப்பு மேலோங்கிறது என்பதையும் மறுக்க முடியாது.

இதை விட அடுத்த கதையான ‘படமானவர்கள்’ அலட்டாமல் மனித மனதின் inhibitions குறித்துச் சுட்டிக்காட்டிவிடுகிறது. சரசமாடும் படுக்கையறயில் மூத்தோர் மற்றும் நீத்தோர் படங்கள் இருந்தால் மூடு வருமா, பாதுகாப்பு உணர்வு வருமா இல்லை விலகல் உணர்வு வருமா என்ற எண்ணங்களுக்கிடையேயான போராட்டம் எளிதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இதுவும் ஏதோ இம்மாதிரி ஏற்கனவே படித்தது அல்லது பார்த்தது அல்லது கேள்விப்பட்டது மாதிரியே இருப்பதாத் தோன்றுகிறது. இல்லை அந்த தேஜாவூ தான் இக்கதையின் அடிநாதமா?

ஆனால் ‘வெளியாள்’ கதையின் – scene, set and prop construction மிக அற்புதமாக ஏதோ ஒரு உச்சத்திற்கான case building போல மெதுவாக விரித்துக் காட்டப்படுகிறது. வாசகரை கவனத்துடன் உள்ளுழுத்துக் கொள்ளும் மொழியின் லாவகம் இக்குறுங்கதையில் அருமையான யுக்தியாகப் பயன்படுகிறது. மற்ற குறுங்கதைகளைப் போல ஒரு அவசரத்தன்மை இல்லாமல் unfolding of scenes கச்சிதமாக நிகழ்கிறது. சமீபத்தில் ஒரு சின்னக் கதையில் இப்படி ஒரு euphoria மாயத்தைச் சிறைபிடித்து நான் படித்ததில்லை. நல்ல கதை.

கதை: ஆபரணம்

ஆசிரியர்: பா திருச்செந்தாழை

இதழ்: தமிழினி

பரிந்துரை: லாவண்யா

இந்த கதையில் எது ஆபரணம் என்ற கேள்வி இந்த கதையை வாசித்த உடன் எழுந்தது. சித்திரை கழுத்து, காதுகளில் அலங்கரித்தவையா அல்லது அவளது மேடிட்ட வயிற்றில் மரியத்துக்கு ஏற்படும் பொறாமையை மறைக்க அதை சித்திரையில் திலகரின் பொருளாதாரத்தைத் தாக்கும் சதுரங்க விளையாட்டா? தத்து கொடுக்க மனமில்லாமல் சித்திரையின் கையில் இருக்கும் குழந்தையா? ( “திடீரென தன்மீது கவிந்த இருளைக் கிழித்தபடி தனது முகத்தை முண்டி வெளியே வந்தது  அதன்முகம்”) கூட்டு குடும்பங்களில் நிகழும் குடும்ப அரசியல் சகோதரன் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிவிடுதல் போல எல்லாமும் இருந்தாலும் குழந்தையின்மையின்  வேதனையைப் பணத்தாசையாக மாற்றிக்காட்டும் மரியத்தின் மீது எனக்கும் வாஞ்சை பொங்குகிறது.  சித்திரைக்குக்  குழந்தைகள்  மரியத்துக்கு  நகைகள். சமீபத்தில் வாசித்ததில் மிகப்பிடித்த கதை. ஆனால் கதை நெகிழ்வாக நகராத மொழி திருச்செந்தாழையினுடையது அது இவர்கள் கதை வாசிக்கத் தடையாக இருக்கலாம்.

  •  

ஜூலை 2021 மாதம் வெளியான சில கதைகள்

கதை: அழைப்பு

ஆசிரியர்: கார்த்திக் பாலசுப்ரமணியன்

இதழ்: அகழ் இணைய இதழ்

பரிந்துரை: கமலதேவி

ஒரு வானியலாளரின் மனநிலையை பேசும்கதை. அது விரிந்து நடைமுறை வாழ்வில் உள்ள கடமைகளை மீறி தனக்கென்ற தீவிரமான தேடலை கொண்ட ஒருவர், அவரை சுற்றியுள்ளவர்களை பேசுகிறது. முடிவில் அவரை அழைப்பது அவரே அறியாத அவரின் பிரபஞ்சத்தின் குரல்.


கதை: ஏவாளின் ஆதாம்

ஆசிரியர்: மயிலன் ஜி சின்னப்பன்

இதழ்: யாவரும் இணைய இதழ்

பரிந்துரை: ஹரீஸ் கண்பத்

ஆண் பெண் உறவு குறித்து எத்தனையோ கதைகள் வந்திருந்தாலும் இன்னும் சொல்வதற்கு நிறைய நுட்பமான கதைகள் மீதம் உண்டு. அவருக்கே உரிய அகவயமான பாணியில் மயிலனால் எழுதப்பட்ட சிறப்பான கதை.


கதை: அமுதம்

ஆசிரியர்: கமலதேவி

இதழ்: சொல்வனம்

பரிந்துரை: லாவண்யா

கதைகளம் பலரும் பேசிய கதைகளம். கமலதேவியின் கதைகளின் மண் மணம் இந்த கதையிலும் உண்டு. சிறு சிறு தீற்றலில் உணர்வுகளை வரைந்து விடுகிறார். ஆனால் கதையோடு ஒட்டாத சில விஷயங்களும் உண்டு. இவர் கதைகளில் வழக்கமாக வெட்டி திசைமாறும் இடங்கள் சில இந்த கதையிலும் உண்டு.


கதை: நறுமணம்

ஆசிரியர்: சுரேஷ் பிரதீப்

இதழ்: புரவி

பரிந்துரை: லாவண்யா

கதை நன்று. சிக்கலான களம். ஆனால் அந்த அகல்யாவை லெஸ்பியன் என்று இதில் திணித்திருக்காமலே முழு கதையாக இருக்கிறது. கனவில் வரும் காடு, கதையில் இடையிலேயே வந்திருந்தால் இன்னும் வலுவாக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு. ஆணிலி என்ற சொல் பிரயோகத்தை ரசித்தேன்


கதை: துலாத்தான்

ஆசிரியர்: பா. திருசெந்தாழை

இதழ்: தமிழினி

பரிந்துரை: கமலதேவி

வழக்கம் போல திருச்செந்தாழை அவர்களின் வியாபார களம் சார்ந்த கதை. ஆ.மாதவன் அவர்களின் கடைத்தெருவின் கலைஞன் போல இவரிடம் மண்டி வாழ்க்கை சித்திரங்கள் நிறைய இருக்கின்றன. தரகு வேலையின் சாமர்த்தியமும்,தரகரின் உண்மை வாழ்க்கை நிலையும் பற்றிய கதை. கதை முடிவு அத்தனை எதார்த்தமாக இருந்த போதும் கவித்துவமானது என்று தோன்றுகிறது.


  •