தீச்சொல் நிகண்டு நாஞ்சில் நாடன் கும்பமுனி கர்நாடக சங்கீதம் கேட்டுக் கொண்டிருந்தார். அப்படி எழுதினால் அவர் சங்கி என உலகம் தூற்றும் அல்லால் பூமாரி பொழியும் என்பதுவும் அறிவார். 1919-ம் ஆண்டில் பிறந்த நாகப்பட்டினம் சந்திரசேகரன் வசந்த கோகிலம் என்பது பாடகியின் முழுப்பெயர். இரிஞ்ஞாலைக்குடா, கோபாலபுரம் ஆகிய ஊர்களில் வாழ்ந்தவர். காசநோய் வந்து, 1951-ல் … Continue reading →
By Funky Ronin (மோகன் சுப்ரமணியன்/ஆனந்த் உன்னத்) October 13, 2024 கல்லூரியில் முதல் வருடம் இரண்டாம் பருவம். செமஸ்டருக்கு முன் நடக்கும் தேர்வு. ForTran பாடம். எந்த கேள்விக்கு பதில் எழுத துவங்கலாம் என்று தேடிப் பார்த்ததில் 10 மதிப்பெண்கள் கொண்ட ஒரு கேள்வி கவனத்தை ஈர்த்தது. மற்றவையெல்லாம் வெறும் கேள்விகள். இது நிரல் எழுத வேண்டிய … Continue reading →
தாமரைக்கண்ணன் எந்தை தந்தை மூத்தப்பன் எனது அண்ணன் தேவசேனாதிபதிக்கு நான் எப்போதும் நன்றி சொல்ல ஒரு விஷயம் எஞ்சும் என்றால் அது அவனது வாசிப்புப்பழக்கத்திற்காகத்தான் இருக்கும் . நினைவுதெரிந்த நாட்களிலேயே அவன் படித்துவிட்டு போட்ட புத்தகங்கள் எங்கள் வீடெங்கும் இருக்கும், அந்தப்புத்தகங்கள் என்னை திறந்துபார் என்று அழைத்தன, எனவே நான் வாசிக்கத்துவங்கினேன். நான் ஒன்றாம் வகுப்பில் … Continue reading →
ஊடக வெளிச்சம் புறநானூற்றின் உரிமைத் தமிழ்க்குடிதிருக்குறளின் பட்டாக்காரன்காப்பியங்களை திரைக் காவியம் செய்தவன்கம்பனில் காமரசங்கள் பிழிந்தவன்அறிவது மிகவும் அவசியம் எனஊடகங்களின் உயர்தரச் செய்திகள் இமயத் தாரகை ஆம்னிஶ்ரீயின்ஐந்தாம் கணவன் ஆண்குறி நீளம்மூன்றே அங்குலம்! 2.பிரபஞ்ச காவலன் ஆத்மார்த்த மயன்காமம் துய்த்த காரிகைக் கணக்குஐந்நூற்று ஒன்றென அறிவீரா நீர்? ம.பி.க. கட்சி வேட்பாளர்அறிவித்த சொத்து மதிப்பு66,343 கோடி என்பது … Continue reading →
”வீராணமங்கலத்திலே செல்லப்பன் இருந்தாம்லா?” எந்த செல்லப்பன் என்று அவசர அடியாக நினைவுக்கு வரவில்லை. அந்த சின்ன ஊரில் ஏழு செல்லப்பன் உண்டும். நெட்டை செல்லப்பன், கட்டைச் செல்லப்பன், வெள்ளைச் செல்லப்பன், காக்கா செல்லப்பன், நொண்டிச் செல்லப்பன், மொட்டைச் செல்லப்பன், கள்ளச் செல்லப்பன் என. எந்த செல்லப்பனைச் சொல்கிறார் என யோசித்தான். ”அதாம்போ பகவதியம்மைக்கு மாப்பிள்ளை!” பகவதியம்மையும் … Continue reading →
ஓடும் தேர் நிலையும் நிற்கும்! நாஞ்சில் நாடன் வாசித்த புத்தகங்களையும், பருவ இதழ்களையும், பிறிதோர் காலத்துத் தேவைப்படும் எனக் கருதியவற்றை மாற்றி வைப்பான். தேவைப்படாது எனக் கண்டவற்றைத் தனியாக அடுக்கி வைப்பான். இனி எத்தனை காலம் மிச்சம் இருக்கிறது? இன்றுவரை 27,823 நாட்கள் வாழ்ந்தாயிற்று. எஞ்சிய நாட்களை சித்திரகுப்த நயினார் அறிவாரா? தென்திசைக் காவலன் அறிவானா? … Continue reading →
தமிழாசிரியர் என்றாலே பலருக்கும் இளக்காரம் என்று மனக்குறுகலுடன் நடந்தார். எல்லோருமா சீட்டுக் கம்பனி நடத்துகிறார்கள், பால் வியாபாரம் செய்கிறார்கள், வட்டிக்கு விடுகிறார்கள், புடவை வணிகம் செய்கிறார்கள், அரசியல்காரர்களுக்கு எடுபிடி வேலை செய்கிறார்கள்? நவீன இலக்கியம் வாசிக்கிற, பயணம் போகிற, மாணவர் நலனில் அக்கறை செலுத்துகிற நல்லாசிரியர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்? விருது கிடைத்தால்தான் நல்லாசிரியரா?………(நாஞ்சில்நாடன்) கற்றாரே காமுறுவர்’ … Continue reading →