Reading view

கொடிரோஸ் – கிரிசாந்:

ஆசிரியர் குறிப்பு:

யாழ்ப்பாணத்தில் வசித்துவரும் கவிஞர், எழுத்தாளர். இவரது கவிதைகள் “வாழ்க்கைக்கு திரும்புதல்” என்ற தொகுப்பிலும், ஆகாயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட “மயான காண்டம்” என்ற கூட்டுத் தொகுப்பிலும்  தொகுக்கப்பட்டுள்ளன.  ‘புதிய சொல்’ என்ற கலை இலக்கிய எழுத்துச் செயற்பாட்டிற்கான இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர். இது இவரது சமீபத்திய குறுநாவல்.

ஈழத்தில் இருந்து போரை மையப்படுத்தாது, உணர்வை மையப்படுத்தும் மற்றுமொரு நூல்.  சுகந்தன் என்னும் பதினோரு சிறுவனின் பார்வையில் நகரும் நாவல்

பதினைந்தாவது வயதில் சுகந்தனின் வாழ்வில் ஏற்பட்ட மிகப்பெரிய மாறுதலுடன் தன்னை நிறைவு செய்து கொள்கிறது. கொடிரோஸ் யார்? சுகந்தனின் அம்மா.

காதல், காமம், வன்முறை, உயிர்கள் பலி,  அதிர்ச்சித் திருப்பம் என்று எதுவுமேயில்லாத சுகந்தனின் Mundane

வாழ்க்கையில், நாவலின் இறுதிப்பகுதியைத் தவிர்த்து,  அப்பாவிடம் உடலெல்லாம் புண்ணாகும்படி அடி வாங்குதல், சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ளுதல்,  உடன் பயிலும் ஆண்பெண் நண்பர் காண, தேங்காய் பொறுக்குதல், மிக்சர் விற்றல்,  அப்பாவின் பிணைக்கடனுக்கு அம்மாவை தூஷணம் பேசியவனைக் கற்பனையில் கத்தியல் குத்துதல் போன்றவையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள்.

இழப்பு நிச்சயம் என்று தெரியும் போது பிடிப்பு அதிகமாதல் இயல்பு.  அது நாவலில் நன்கு வந்திருக்கிறது.  கிரிசாந்தின் மொழி புனைவுக்கு ஏதுவாகக் குழைந்து விரைகிறது.  யாழ்ப்பாணக்குடும்ப வாழ்வியல் அதற்கான மொழியுடன் அழகாகப் பதிவாகி இருக்கிறது.  எல்லாவற்றையும் விட முக்கியமாக புலிகள் ஆதரவு அல்லது எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை விட்டு நகர்ந்து உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படைப்புகளாக, வேல்விழி, தில்லை இவர்களைத் தொடர்ந்து கிரிசாந்தும் அந்த வரிசையில் இணைகிறார்.

பிரதிக்கு:

ஆக்காட்டி 33 6 52 53 75 84

முதல்பதிப்பு ஏப்ரல் 2025

விலை 1000 இலங்கை ரூபாய்கள்.

  •  

கொடிரோஸ் – கிரிசாந்:

ஆசிரியர் குறிப்பு:

யாழ்ப்பாணத்தில் வசித்துவரும் கவிஞர், எழுத்தாளர். இவரது கவிதைகள் “வாழ்க்கைக்கு திரும்புதல்” என்ற தொகுப்பிலும், ஆகாயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட “மயான காண்டம்” என்ற கூட்டுத் தொகுப்பிலும்  தொகுக்கப்பட்டுள்ளன.  ‘புதிய சொல்’ என்ற கலை இலக்கிய எழுத்துச் செயற்பாட்டிற்கான இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர். இது இவரது சமீபத்திய குறுநாவல்.

ஈழத்தில் இருந்து போரை மையப்படுத்தாது, உணர்வை மையப்படுத்தும் மற்றுமொரு நூல்.  சுகந்தன் என்னும் பதினோரு சிறுவனின் பார்வையில் நகரும் நாவல்

பதினைந்தாவது வயதில் சுகந்தனின் வாழ்வில் ஏற்பட்ட மிகப்பெரிய மாறுதலுடன் தன்னை நிறைவு செய்து கொள்கிறது. கொடிரோஸ் யார்? சுகந்தனின் அம்மா.

காதல், காமம், வன்முறை, உயிர்கள் பலி,  அதிர்ச்சித் திருப்பம் என்று எதுவுமேயில்லாத சுகந்தனின் Mundane

வாழ்க்கையில், நாவலின் இறுதிப்பகுதியைத் தவிர்த்து,  அப்பாவிடம் உடலெல்லாம் புண்ணாகும்படி அடி வாங்குதல், சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ளுதல்,  உடன் பயிலும் ஆண்பெண் நண்பர் காண, தேங்காய் பொறுக்குதல், மிக்சர் விற்றல்,  அப்பாவின் பிணைக்கடனுக்கு அம்மாவை தூஷணம் பேசியவனைக் கற்பனையில் கத்தியல் குத்துதல் போன்றவையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள்.

இழப்பு நிச்சயம் என்று தெரியும் போது பிடிப்பு அதிகமாதல் இயல்பு.  அது நாவலில் நன்கு வந்திருக்கிறது.  கிரிசாந்தின் மொழி புனைவுக்கு ஏதுவாகக் குழைந்து விரைகிறது.  யாழ்ப்பாணக்குடும்ப வாழ்வியல் அதற்கான மொழியுடன் அழகாகப் பதிவாகி இருக்கிறது.  எல்லாவற்றையும் விட முக்கியமாக புலிகள் ஆதரவு அல்லது எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை விட்டு நகர்ந்து உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படைப்புகளாக, வேல்விழி, தில்லை இவர்களைத் தொடர்ந்து கிரிசாந்தும் அந்த வரிசையில் இணைகிறார்.

பிரதிக்கு:

ஆக்காட்டி 33 6 52 53 75 84

முதல்பதிப்பு ஏப்ரல் 2025

விலை 1000 இலங்கை ரூபாய்கள்.

  •  

சொம்பு நீர்ப்பூ – நர்சிம்:

ஆசிரியர் குறிப்பு:

சொந்த ஊர் மதுரை. பணி நிமித்தம் வசிப்பது சென்னையில். 2007-இல் தொடங்கி, சிறுகதை, நாவல், கவிதை என மூன்று வடிவத்திலும் பயணப்படும்

நர்சிம்மின் மே 2025ல் வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு இது.

Lydia Davisன் குறுங்கதை ஒன்றில் குழந்தையைப் புகைப்படம் எடுக்கும் தாய், கடைசியில் தான் தெரிய வரும் அந்தக்குழந்தை இறந்துபோன குழந்தை என்பது.  தொகுப்பின் தலைப்புக்கதையில் அதே போல் குழந்தையுடன் தனித்திருக்கும் தாய்.  உயிருள்ள குழந்தை.  ஆனால் கதை அதேயளவு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.  சுசியின் உணர்வுகளை இவ்வளவு தத்ரூபமாக வடித்தல் ஒரு ஆணுக்கு மிகவும் கடினம்.

கடைசியில் ஒரு Change of mind (செந்தில்குமாரி) யதார்த்தமாக வந்திருக்கிறது.  செய்நேர்த்தி மிகுந்த கதை.

“நுரை” கதையில் இரண்டு Mutually exclusive events.  ஆண்பிள்ளைக்கு மார்புக்காம்பில் வலி, அடுத்தது பாம்பு கடித்தல்.  இரண்டு பிரச்சனைகளும் அந்தக் கதையில் Sync ஆவது மட்டுமல்ல, போகிற போக்கில் ஒருவர் முருகேசன் அண்ணனைப் பற்றிச் சொல்லும் ஒரு வரி, மொத்தக் கதையையும் திருப்பிப் போடுகிறது.  ‘புன்கணீர்’  கதையும் எந்த அணிகலனும் இல்லாது அழகாகத் தெரியும் யுவதியின் சாயல் கொண்ட கதை.

ஒன்பது கதைகள் கொண்ட தொகுப்பில் பல கதைகள், கல்யாண வீட்டிற்குச் செல்வதற்கு சகல அலங்காரங்களையும் செய்தபெண்,  பட்டுப்புடவையை ஏற்றிவிட்டு அவசரமாக வாசலில் மறந்த கோலத்திற்கு நான்கு கோடுகள் கிழித்த பாவனையில் இருக்கின்றன.  நர்சிம் கதைகள் அழகாக நேரத்தைக் கொடுக்க வேண்டும், Fine tuning ஒரு எரிச்சலூட்டும் பணி ஆனால் அதில் சிரத்தை காட்ட வேண்டும்.

கதைகள் எல்லாமே ஏதோ உணர்வைத் தொட்டுத் தொடருகின்றன.  உணர்வுகளுக்கு அதிக தூண்டுதல் கொடுத்து செயற்கையாக்காமல் அளவான கலவையில் கதைகளில் கலக்கத் தெரிந்திருக்கிறது நர்சிம்முக்கு.  தொடர்ந்து எழுதுங்கள்.

பிரதிக்கு:

Zero Degree 89250 61999

முதல்பதிப்பு மே 2025

விலை ரூ. 100.

  •  

Death Row by Freida McFadden –

Freida ஒரு அமெரிக்கத் திரில்லர் எழுத்தாளரும்,  மூளைக்காயச்சிகிச்சை நிபுணரும் ஆவார்.  Freida, plagiarismல் இருந்து தப்பித்துக் கொள்ள புகழ்பெற்ற நூல்களின் கருக்களை எடுத்து வேறுவிதமாக develop செய்கிறார் என ஒரு சாராரும்,  Freida தற்போது அமெரிக்காவின் சிறந்த திரில்லர் எழுத்தாளர்களில் ஒருவர் என்று மற்றொரு சாராரும் கூறி வருகின்றனர்.  இந்த நூல் ஜூன் 1, 2025 அன்று வெளியாகியது.

Talia மரணத்தண்டனையை எதிர்நோக்கி இருக்கிறாள்.  குற்றம்? கணவனைக் கொலை செய்தது.  Prologueலேயே நான் கொலைசெய்யவில்லை, அப்பாவி என்கிறாள் அவள்.  ஆனால் கடைசி Appealம் மறுக்கப்பட்ட நிலையில் மரணம் நிச்சயம்.  இப்போதெல்லாம் மின்சார நாற்காலியில் உட்கார வைத்துக் கொல்வது மனிதத்தன்மை இல்லாதது என்று Lethal injectionஆல் கொல்கிறார்கள்.

Freidaவின் strongest area, human anatomy.

மரணஊசி போடுகையில் உடலில் என்னவெல்லாம் நிகழும் என்பதை இவரால் Authoritative ஆகச் சொல்ல முடிகிறது.  அது போலவே பெரும்பாலான Freidaவின் கதைகளில் பிரதான கதாபாத்திரம் பெண் என்பதால் அவர்களின் Crush, பயம், பொறாமை போன்ற உணர்வுகளோடு பெண்களின் உடற்கூறு குறித்த விஷயங்களும் தெளிவாக இடம்பெறும்.

Freidaவின் வழக்கமான விரைந்தோடும் மொழிநடை.  உணர்வுகள் ததும்பும் எழுத்து.  அத்துடன் வழமை போலவே நூலின் இறுதியில் டிவிஸ்ட். சிறிய நூலில் இரண்டு முடிவுகளை Freida கொடுத்திருப்பதால் பலருக்குக் குழப்பம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.  இரண்டாவது முடிவு குறித்துப் பேசினால் Spoiler ஆகிவிடும் என்பதால் தவிர்க்கப்படுகிறது.  முடிவு குறித்து விவாதிக்க விரும்புவோர் தாராளமாகத் தொடர்பு கொள்ளலாம்.

  •  

You Killed Me First by John Marrs:

John ஆங்கிலேய எழுத்தாளர்.  முன்னாள் பத்திரிகையாளர்.  தொலைக்காட்சிக்காக, பத்திரிகைகளுக்காக எண்ணற்ற Celebrityகளை பேட்டி கண்ட இவர் இப்போது முழுநேர எழுத்தாளர்.

திரில்லர் Genreல் Freidaவிற்கு அடுத்து உலகெங்கும் Quote செய்யும் பெயர் இவருடையது.  Ruthware, Lisa Jewell, Paula Hakins, Alice Feeney, Alex Michaelides,

S J Watson ஆகியோர் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் ஆங்கிலேயத் திரில்லர் எழுத்தாளர்களில் முக்கியமானவர்கள்.  

மூன்று பெண்கள்,  மூவரிடமும் வெளியில் தெரிந்தால் சிறையில் வெகுகாலம் இருக்க வேண்டிய இரகசியங்கள்.  நாவலின் ஆரம்பத்தில் ஒருபெண்ணுக்கு Big Bonfire நெருப்புக்கு இடையில் நினைவு திரும்புகிறது.  என்ன காரணத்திற்காக, யார் அவளை நெருப்புக்குள் சிக்க வைத்திருப்பார்கள் என்பதும் புரிகிறது.  ஆனால் மூவருமே உயிர்கொல்லும் இரகசியத்தை மறைத்து வைத்திருப்பதால் மூவரில் யார் மாட்டிக் கொண்டது?

மூவருமே கதைசொல்லிகள், எனவே மூன்று Perspectivesல் கதை நகர்கிறது. 

இடையே வேறு சிலர் அவர்கள் கோணத்தில் கதையை நகர்த்துகிறார்கள்.  கடைசியில் அவர்கள் யார் என்பது தெரிய வரும்.

Margotவை அதிக வாசகர்கள் விரும்புவதற்கான வாய்ப்பதிகம்.  அவளுடைய மனவோட்டம் நம்மை எப்போதும் புன்னகைக்க வைக்கும்.

மூன்று கதாபாத்திரங்களுக்கேற்ப மொழிநடையிலும் சிறிய மாறுதலைக் கொண்டு வந்திருக்கிறார் John.  ஆரம்பத்தில் இருந்து Epilogue வரை பல டிவிஸ்டுகள் நிறைந்த நூலிது.  திரில்லர் நாவலை நான்கு நாட்கள் இடைவெளிவிட்டு வாசித்தாலும் எல்லாமே நினைவிலிருக்கும்.  ஆனால் இந்த நாவலுக்கு அப்படி சொல்வதற்கில்லை.  மார்ச் 2025ல் வெளியாகியது இந்த நாவல்.

  •  

சொம்பு நீர்ப்பூ – நர்சிம்:

ஆசிரியர் குறிப்பு:

சொந்த ஊர் மதுரை. பணி நிமித்தம் வசிப்பது சென்னையில். 2007-இல் தொடங்கி, சிறுகதை, நாவல், கவிதை என மூன்று வடிவத்திலும் பயணப்படும்

நர்சிம்மின் மே 2025ல் வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு இது.

Lydia Davisன் குறுங்கதை ஒன்றில் குழந்தையைப் புகைப்படம் எடுக்கும் தாய், கடைசியில் தான் தெரிய வரும் அந்தக்குழந்தை இறந்துபோன குழந்தை என்பது.  தொகுப்பின் தலைப்புக்கதையில் அதே போல் குழந்தையுடன் தனித்திருக்கும் தாய்.  உயிருள்ள குழந்தை.  ஆனால் கதை அதேயளவு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.  சுசியின் உணர்வுகளை இவ்வளவு தத்ரூபமாக வடித்தல் ஒரு ஆணுக்கு மிகவும் கடினம்.

கடைசியில் ஒரு Change of mind (செந்தில்குமாரி) யதார்த்தமாக வந்திருக்கிறது.  செய்நேர்த்தி மிகுந்த கதை.

“நுரை” கதையில் இரண்டு Mutually exclusive events.  ஆண்பிள்ளைக்கு மார்புக்காம்பில் வலி, அடுத்தது பாம்பு கடித்தல்.  இரண்டு பிரச்சனைகளும் அந்தக் கதையில் Sync ஆவது மட்டுமல்ல, போகிற போக்கில் ஒருவர் முருகேசன் அண்ணனைப் பற்றிச் சொல்லும் ஒரு வரி, மொத்தக் கதையையும் திருப்பிப் போடுகிறது.  ‘புன்கணீர்’  கதையும் எந்த அணிகலனும் இல்லாது அழகாகத் தெரியும் யுவதியின் சாயல் கொண்ட கதை.

ஒன்பது கதைகள் கொண்ட தொகுப்பில் பல கதைகள், கல்யாண வீட்டிற்குச் செல்வதற்கு சகல அலங்காரங்களையும் செய்தபெண்,  பட்டுப்புடவையை ஏற்றிவிட்டு அவசரமாக வாசலில் மறந்த கோலத்திற்கு நான்கு கோடுகள் கிழித்த பாவனையில் இருக்கின்றன.  நர்சிம் கதைகள் அழகாக நேரத்தைக் கொடுக்க வேண்டும், Fine tuning ஒரு எரிச்சலூட்டும் பணி ஆனால் அதில் சிரத்தை காட்ட வேண்டும்.

கதைகள் எல்லாமே ஏதோ உணர்வைத் தொட்டுத் தொடருகின்றன.  உணர்வுகளுக்கு அதிக தூண்டுதல் கொடுத்து செயற்கையாக்காமல் அளவான கலவையில் கதைகளில் கலக்கத் தெரிந்திருக்கிறது நர்சிம்முக்கு.  தொடர்ந்து எழுதுங்கள்.

பிரதிக்கு:

Zero Degree 89250 61999

முதல்பதிப்பு மே 2025

விலை ரூ. 100.

  •  

Death Row by Freida McFadden –

Freida ஒரு அமெரிக்கத் திரில்லர் எழுத்தாளரும்,  மூளைக்காயச்சிகிச்சை நிபுணரும் ஆவார்.  Freida, plagiarismல் இருந்து தப்பித்துக் கொள்ள புகழ்பெற்ற நூல்களின் கருக்களை எடுத்து வேறுவிதமாக develop செய்கிறார் என ஒரு சாராரும்,  Freida தற்போது அமெரிக்காவின் சிறந்த திரில்லர் எழுத்தாளர்களில் ஒருவர் என்று மற்றொரு சாராரும் கூறி வருகின்றனர்.  இந்த நூல் ஜூன் 1, 2025 அன்று வெளியாகியது.

Talia மரணத்தண்டனையை எதிர்நோக்கி இருக்கிறாள்.  குற்றம்? கணவனைக் கொலை செய்தது.  Prologueலேயே நான் கொலைசெய்யவில்லை, அப்பாவி என்கிறாள் அவள்.  ஆனால் கடைசி Appealம் மறுக்கப்பட்ட நிலையில் மரணம் நிச்சயம்.  இப்போதெல்லாம் மின்சார நாற்காலியில் உட்கார வைத்துக் கொல்வது மனிதத்தன்மை இல்லாதது என்று Lethal injectionஆல் கொல்கிறார்கள்.

Freidaவின் strongest area, human anatomy.

மரணஊசி போடுகையில் உடலில் என்னவெல்லாம் நிகழும் என்பதை இவரால் Authoritative ஆகச் சொல்ல முடிகிறது.  அது போலவே பெரும்பாலான Freidaவின் கதைகளில் பிரதான கதாபாத்திரம் பெண் என்பதால் அவர்களின் Crush, பயம், பொறாமை போன்ற உணர்வுகளோடு பெண்களின் உடற்கூறு குறித்த விஷயங்களும் தெளிவாக இடம்பெறும்.

Freidaவின் வழக்கமான விரைந்தோடும் மொழிநடை.  உணர்வுகள் ததும்பும் எழுத்து.  அத்துடன் வழமை போலவே நூலின் இறுதியில் டிவிஸ்ட். சிறிய நூலில் இரண்டு முடிவுகளை Freida கொடுத்திருப்பதால் பலருக்குக் குழப்பம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.  இரண்டாவது முடிவு குறித்துப் பேசினால் Spoiler ஆகிவிடும் என்பதால் தவிர்க்கப்படுகிறது.  முடிவு குறித்து விவாதிக்க விரும்புவோர் தாராளமாகத் தொடர்பு கொள்ளலாம்.

  •  

You Killed Me First by John Marrs:

John ஆங்கிலேய எழுத்தாளர்.  முன்னாள் பத்திரிகையாளர்.  தொலைக்காட்சிக்காக, பத்திரிகைகளுக்காக எண்ணற்ற Celebrityகளை பேட்டி கண்ட இவர் இப்போது முழுநேர எழுத்தாளர்.

திரில்லர் Genreல் Freidaவிற்கு அடுத்து உலகெங்கும் Quote செய்யும் பெயர் இவருடையது.  Ruthware, Lisa Jewell, Paula Hakins, Alice Feeney, Alex Michaelides,

S J Watson ஆகியோர் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் ஆங்கிலேயத் திரில்லர் எழுத்தாளர்களில் முக்கியமானவர்கள்.  

மூன்று பெண்கள்,  மூவரிடமும் வெளியில் தெரிந்தால் சிறையில் வெகுகாலம் இருக்க வேண்டிய இரகசியங்கள்.  நாவலின் ஆரம்பத்தில் ஒருபெண்ணுக்கு Big Bonfire நெருப்புக்கு இடையில் நினைவு திரும்புகிறது.  என்ன காரணத்திற்காக, யார் அவளை நெருப்புக்குள் சிக்க வைத்திருப்பார்கள் என்பதும் புரிகிறது.  ஆனால் மூவருமே உயிர்கொல்லும் இரகசியத்தை மறைத்து வைத்திருப்பதால் மூவரில் யார் மாட்டிக் கொண்டது?

மூவருமே கதைசொல்லிகள், எனவே மூன்று Perspectivesல் கதை நகர்கிறது. 

இடையே வேறு சிலர் அவர்கள் கோணத்தில் கதையை நகர்த்துகிறார்கள்.  கடைசியில் அவர்கள் யார் என்பது தெரிய வரும்.

Margotவை அதிக வாசகர்கள் விரும்புவதற்கான வாய்ப்பதிகம்.  அவளுடைய மனவோட்டம் நம்மை எப்போதும் புன்னகைக்க வைக்கும்.

மூன்று கதாபாத்திரங்களுக்கேற்ப மொழிநடையிலும் சிறிய மாறுதலைக் கொண்டு வந்திருக்கிறார் John.  ஆரம்பத்தில் இருந்து Epilogue வரை பல டிவிஸ்டுகள் நிறைந்த நூலிது.  திரில்லர் நாவலை நான்கு நாட்கள் இடைவெளிவிட்டு வாசித்தாலும் எல்லாமே நினைவிலிருக்கும்.  ஆனால் இந்த நாவலுக்கு அப்படி சொல்வதற்கில்லை.  மார்ச் 2025ல் வெளியாகியது இந்த நாவல்.

  •  

The Culture Map: Decoding How People Think, Lead, and Get Things Done Across Cultures – Erin Meyer:

எரின் ஒரு அமெரிக்க எழுத்தாளர்.   பிரான்ஸ், சிங்கப்பூர்,  அபுதாபி உள்ளிட்ட நாடுகளில் Management studies குறித்துக் கற்பிக்கும் வருகைப் பேராசிரியர்.   Netflix cofounderஉடன் இணைந்து ஒரு நூலை எழுதியுள்ளார்.  இந்த நூல் மிகவும் புகழ் பெற்ற நூல்.

Second degree message என்பது Implied message.  உதாரணத்திற்குத் தமிழ்நாட்டில் “எங்க அம்மா சமையல் அருமையாக இருக்கும்”.   Implied message ” உன் சமையல் சரியில்லை”.  கலாச்சாரம் தெரியாமல் Implied messageஐ அறிவதற்கில்லை.

சீனாவில் முகவரி எழுதுகையில் தமிழ்நாடு, சென்னை, மயிலாப்பூர் என்று ஆரம்பித்துக் கடைசியாக வீட்டு எண் வருகின்றது.  அங்கு Surname என்பது First name.  

டச்சுக்காரர்கள் எதையும் வெளிப்படையாகப் பேசுபவர்கள்.   ஒரு டச்சுக்காரர் மற்றொரு டச்சுக்காரரின் குறைகளை வரிசையாக அடுக்குகையில் அருகிலிருந்த அமெரிக்கர்கள் எப்படி எதிர்வினை செய்வது என்பது தெரியாமல் கால்விரல்களை உற்றுப்பார்த்ததாகக் குறிப்பிடுவது கலாச்சார வேறுபாடுகளுக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.

அமெரிக்கர்களுக்கு ஜோக்கை சொல்வதுடன் நிறுத்தாமல் Just kidding என்பதைப் பலநேரங்களில் சேர்த்துச் சொல்ல வேண்டியதாகிறது.   ஆங்கிலேயர்களும், இந்தியர்களும் அவர்களுக்குத் தெரியாத விஷயத்தைத் தெரியாது என்று பலர் முன்னிலையில் ஒத்துக்கொள்ள விரும்பாது பூசிமெழுக முனைவார்கள்.

ஒரு மீட்டிங் இடையில் உணவை order செய்து சாப்பிடுதல் அநேக நாடுகளில் Speakerஐ அவமரியாதை செய்வதாக அர்த்தம். ஆனால் நார்வேயில் அதை Time management என்று எடுத்துக் கொள்வார்கள்.

எரின் ஏராளமான நிகழ்வுகளை இடையிடையே அவர் சொல்லும் கருத்தை வலியுறுத்த இந்த நூலில் கொண்டு வந்திருக்கிறார்.  வெவ்வேறு கலாச்சாரங்களை அறிய விரும்புபவருக்கு முக்கியமான நூலிது. Negotiation என்பது அடுத்தவரின் கலாச்சாரத்தைக் குறித்து அறிந்தபின் செய்வது.  அமெரிக்கரிடம் வெகுகாலம் தொடர்பிலில்லா விட்டாலும் ஆரம்ப நலம் விசாரித்தலுக்குப்பின் நாம் அழைத்த காரணத்திற்கு வரலாம்.  சவுதியில் முதலில் நலம் விசாரித்து மூன்று நான்கு நாட்களுக்குப்பின் மீண்டும் அழைக்க வேண்டும். சில கேள்விகள் கலாச்சார இடைவெளிகளால் எப்படி Offensiveஆக முடியும் என்பதற்கு நூலில் ஏராளமான உதாரணங்கள். ஆனால் நம்மூர் பாட்டிகளின் கேள்விக்கெல்லாம் எந்த நாட்டினரிடமும் விடையிருக்காது.

  •  

நிழல் மரங்கள் – ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்:

ஆசிரியர் குறிப்பு:

தமிழ்நாடு அரசுத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.  கணையாழியில் 1988ல் இருந்து தொடர்ந்து எழுதி முப்பத்தேழு வருடங்களை நிறைவு செய்துள்ளார்.  இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகளும் இரண்டு நாவல்களும் எழுதிய இவரது குறுநாவல்களின் தொகுப்பு இது

தொகுப்பிலுள்ள பிர்தவ்ஸ் கதைகள் எல்லாமே இஸ்லாமிய சமூகத்தை மையமாகக் கொண்டவை.  தமிழ்நாட்டில் குறிப்பாகக் கோவையில் ஒரு முஸ்லீமாக இருப்பதன் இன்னல்கள்,  இஸ்லாமில் தூய்மைவாதம் என்ற பெயரில் நம் கலாச்சாரத்திற்குச் சம்பந்தமில்லாத விஷயங்களை வலியுறுத்துதல், மதத்தின் பெயரால் பணத்தைச் சுருட்டுதல்,  இஸ்லாமியக் குடும்பங்களின் உள்ளே இருக்கும் உறவுச்சிக்கல்கள் ஆகியவையே இக்கதைகளின் கருப்பொருட்கள்.

என்னளவில் நெருக்கமான கதைகள் மனச்சிடுக்கு & ஈர்ப்பு விசை இரண்டும்.  இரண்டிலும் பெண்களின் ஆழமான உணர்வுகள் பதிவாகி இருக்கின்றன.  பெண்களில் முஸ்லீம், இந்து, கிறிஸ்தவர் என்று இருக்கிறார்களா என்ன?  மும்தாஜின் தடுமாற்றங்களை உம்மா, மாமி இருவரும் உணராமல் போனாலும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.  மணமான முஸ்லீம் பெண்களின் எதிர்காலம் குறித்த பாதுகாப்பில்லாத சூழலை பிர்தவ்ஸும் இக்கதையில் கொண்டு வந்திருக்கிறார். ஜெமிலாவைக் குறித்து என்ன சொல்ல?  கோழையைக் காதலித்தது அவளது குற்றம்.  பாம்பு வந்தது என்று கண்காட்டிவித்தை காட்டும் ஜெமிலா, நகம் பதிய பிராண்டிய ஜெமிலா,  பொறாமையில் தவித்த ஜெமிலா, கடைசியில் முதுகைத் தட்டும் ஜெமிலா என்று கதையில் அவளது விஸ்வரூபம்.

பிர்தவ்ஸ்  இன்னும் பல கதைகளில் போதுமான அழுத்தத்தைச் சேர்க்க வேண்டும்.  கடைசிக்கதையில் அது நன்றாக வந்திருக்கிறது.  பலகாலம் எழுதுபவருக்கு மொழிநடை தங்குதடையின்றி வந்திருக்கிறது.  இஸ்லாமிய மக்களுக்குக் குரல் கொடுக்கும் கதைகள் இவை.  தொடர்ந்து எழுதுங்கள்.

பிரதிக்கு:

இக்றா பதிப்பகம் 82206 58318

முதல்பதிப்பு 2024

விலை ரூ. 200

  •  

உதிரிகள்- ஏப்ரல் 2025 சிறுகதைகள்:

இருண்மை – ரம்யா அருண்ராயன்:

வெகுகாலம் சிறுகதைகள் எழுதிக் கொண்டிருப்பது போன்ற Flow ரம்யாவிற்கு வாய்த்திருக்கிறது.  விபச்சாரி இருந்த வீட்டில் இருப்பதன் சிரமங்களைத் தாண்டி, அவளுடன் ஜோதி மனதால் Connect செய்துகொள்வது அழகாக வந்துள்ளது.  நடந்ததெற்கெல்லாம் காரணம் கடைசிவரியில் ஒளிந்திருக்கிறது. நல்ல கதை.

பாதி நிலவு ஒளிரும் வளைவு –  நந்தாகுமாரன்:

பெண்கள் இளகும் நேரமென்று ஒன்று உண்டு.  அதை ஒருமுறை தவற விட்டால் திரும்பக்கிடைக்கும் வாய்ப்பு அரிது.  அந்நிய நிலத்தில்,  ஒருபாலின உறவு கொள்ளும் அந்நியப் பெண்ணுடனான Fragile relationship இந்தக்கதையில் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது.  நந்தாகுமாரன் இக்கதைக்காக மொழிநடையில் மாற்றம் செய்துள்ளார்.

மதியம் 1லிருந்து 2.30 வரை – சுபி:

சுபியின் கதை இரண்டாவது ஆண் பூனை போல அரவமின்றி நுழையும் சந்தர்ப்பம் குறித்த கதை.  அறுபதை நெருங்கும் ஆண் என்றாலும் பெண் ஏன் சம்மதம் தெரிவிக்க வேண்டும்!  அருகிருப்பது எட்டியேயானாலும் அல்லிக்கொடி படர்ந்தே தீரும். கதை கடந்தகாலமும் நிகழ்காலமுமாக மாறிமாறி வந்து பின் ஒன்று கலக்கிறது.  சுபிக்கு எழுத்தில் தயக்கமில்லை, அது பாராட்டப்பட வேண்டிய விஷயம். அப்பு மறையும் வரை பிரேமா காத்திருக்க வேண்டுமா என்ன?.  முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுக்கு Advance congratulations.

நானென்ன வேற வயித்துலயா பிறந்தேன்?-வா.மு.கோமு:

அவரவர் குடும்பம் என்றான பின் அகப்பட்டதைச் சுருட்டும் கதை.  பழைய கரு,  ஏராளமான சென்டிமென்ட்ஸ்.

ஏதிலன்- ப்ரிம்யா கிராஸ்வின்:

ப்ரிம்யாவின் கதைகளில் வழக்கமாக இருக்கும் ஆழமும், அழுத்தமும் இந்தக்கதையில் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.  கதை கடைசி டிவிஸ்டை நம்பி விரைகிறது.  ப்ரிம்யாவின் Benchmark என்று நான் நம்புவது இன்னும் உயரத்தில்.

ஞாபகார்த்தம்-  அரவிந்தன் பெருமாள்:

வாரமலருக்குக் கனகச்சிதமாகப் பொருந்தும் கதை.

அலங்கோலம் – சௌம்யா:

இன்றும் பெற்றோர் முன் தங்களுக்குள் முகத்தைப் பார்த்துப் பேசிக்கொள்ளாத தம்பதியர் இருக்கின்றார்கள்.  இருந்தாலும் நெருங்கி இருந்ததைப் பையன் பார்த்ததற்கு இவர்கள் இருவரும் Overreact செய்வது போல் தோன்றுகிறது.

திசை- சுஜாதா செல்வராஜ்:

சுஜாதாவின் கதை சாதிமாற்று மணத்தைத் தடுத்து அவசரமாக சுயசாதியில் செய்ததன் விளைவைச் சொல்கிறது.  சுஜாதாவால் இது போன்ற சீரியல் கதைகளைத் தவிர்த்து அழுத்தமான கதைகளை எழுத முடியும்.

தருக்கு- இராஜலட்சுமி:

படித்தால் மட்டும் போதுமா கதை.   இராஜலட்சுமி அழுத்தமான கதைகளை எழுத முயற்சிக்க வேண்டும்.

விசுவாசி- ராணி கணேஷ்:

ராணி அயல்நாடுகளில் வசிப்பவர்.  இந்தக்கதையின் protagonist

அந்நியதேசத்தவன்.  அவனது கலாச்சாரமும் சிந்தனைகளும் கதையில் வெளிப்படுகின்றன.  ராணி அயல் கலாச்சாரத்தை மையம் கொண்ட கதைகளைத் தொடர்ந்து எழுதலாம்.

கருப்பு வெள்ளை-மனோஜ்:

மனோஜின் கதையில் அனுபவமும், யதார்த்தமும் இணைந்து களைகட்டுகின்றன.  ஆமாம். மதுரையை இப்போது பார்த்தால் அந்நியமாகத் தான் தோன்றுகிறது, அவ்வளவு மாறிவிட்டது.  வேலவன் மட்டுமில்லை, மாறுதலை யார் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் காலம் கரையோரம் ஒதுக்கிப் போய்விடும். Beautifully presented story.

பரிசுத்தம் – ராஜேஷ் வைரபாண்டியன்:

பரிசுத்தத்திற்கு எஸ்தரை விட நல்ல மனைவி கிடைத்திருக்கப் போவதில்லை, எஸ்தருக்கும் அப்படித்தான்.  எல்லாமிருந்தும் எதுவுமில்லாதொரு வாழ்வு.

  •  

The Culture Map: Decoding How People Think, Lead, and Get Things Done Across Cultures – Erin Meyer:

எரின் ஒரு அமெரிக்க எழுத்தாளர்.   பிரான்ஸ், சிங்கப்பூர்,  அபுதாபி உள்ளிட்ட நாடுகளில் Management studies குறித்துக் கற்பிக்கும் வருகைப் பேராசிரியர்.   Netflix cofounderஉடன் இணைந்து ஒரு நூலை எழுதியுள்ளார்.  இந்த நூல் மிகவும் புகழ் பெற்ற நூல்.

Second degree message என்பது Implied message.  உதாரணத்திற்குத் தமிழ்நாட்டில் “எங்க அம்மா சமையல் அருமையாக இருக்கும்”.   Implied message ” உன் சமையல் சரியில்லை”.  கலாச்சாரம் தெரியாமல் Implied messageஐ அறிவதற்கில்லை.

சீனாவில் முகவரி எழுதுகையில் தமிழ்நாடு, சென்னை, மயிலாப்பூர் என்று ஆரம்பித்துக் கடைசியாக வீட்டு எண் வருகின்றது.  அங்கு Surname என்பது First name.  

டச்சுக்காரர்கள் எதையும் வெளிப்படையாகப் பேசுபவர்கள்.   ஒரு டச்சுக்காரர் மற்றொரு டச்சுக்காரரின் குறைகளை வரிசையாக அடுக்குகையில் அருகிலிருந்த அமெரிக்கர்கள் எப்படி எதிர்வினை செய்வது என்பது தெரியாமல் கால்விரல்களை உற்றுப்பார்த்ததாகக் குறிப்பிடுவது கலாச்சார வேறுபாடுகளுக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.

அமெரிக்கர்களுக்கு ஜோக்கை சொல்வதுடன் நிறுத்தாமல் Just kidding என்பதைப் பலநேரங்களில் சேர்த்துச் சொல்ல வேண்டியதாகிறது.   ஆங்கிலேயர்களும், இந்தியர்களும் அவர்களுக்குத் தெரியாத விஷயத்தைத் தெரியாது என்று பலர் முன்னிலையில் ஒத்துக்கொள்ள விரும்பாது பூசிமெழுக முனைவார்கள்.

ஒரு மீட்டிங் இடையில் உணவை order செய்து சாப்பிடுதல் அநேக நாடுகளில் Speakerஐ அவமரியாதை செய்வதாக அர்த்தம். ஆனால் நார்வேயில் அதை Time management என்று எடுத்துக் கொள்வார்கள்.

எரின் ஏராளமான நிகழ்வுகளை இடையிடையே அவர் சொல்லும் கருத்தை வலியுறுத்த இந்த நூலில் கொண்டு வந்திருக்கிறார்.  வெவ்வேறு கலாச்சாரங்களை அறிய விரும்புபவருக்கு முக்கியமான நூலிது. Negotiation என்பது அடுத்தவரின் கலாச்சாரத்தைக் குறித்து அறிந்தபின் செய்வது.  அமெரிக்கரிடம் வெகுகாலம் தொடர்பிலில்லா விட்டாலும் ஆரம்ப நலம் விசாரித்தலுக்குப்பின் நாம் அழைத்த காரணத்திற்கு வரலாம்.  சவுதியில் முதலில் நலம் விசாரித்து மூன்று நான்கு நாட்களுக்குப்பின் மீண்டும் அழைக்க வேண்டும். சில கேள்விகள் கலாச்சார இடைவெளிகளால் எப்படி Offensiveஆக முடியும் என்பதற்கு நூலில் ஏராளமான உதாரணங்கள். ஆனால் நம்மூர் பாட்டிகளின் கேள்விக்கெல்லாம் எந்த நாட்டினரிடமும் விடையிருக்காது.

  •  

நிழல் மரங்கள் – ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்:

ஆசிரியர் குறிப்பு:

தமிழ்நாடு அரசுத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.  கணையாழியில் 1988ல் இருந்து தொடர்ந்து எழுதி முப்பத்தேழு வருடங்களை நிறைவு செய்துள்ளார்.  இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகளும் இரண்டு நாவல்களும் எழுதிய இவரது குறுநாவல்களின் தொகுப்பு இது

தொகுப்பிலுள்ள பிர்தவ்ஸ் கதைகள் எல்லாமே இஸ்லாமிய சமூகத்தை மையமாகக் கொண்டவை.  தமிழ்நாட்டில் குறிப்பாகக் கோவையில் ஒரு முஸ்லீமாக இருப்பதன் இன்னல்கள்,  இஸ்லாமில் தூய்மைவாதம் என்ற பெயரில் நம் கலாச்சாரத்திற்குச் சம்பந்தமில்லாத விஷயங்களை வலியுறுத்துதல், மதத்தின் பெயரால் பணத்தைச் சுருட்டுதல்,  இஸ்லாமியக் குடும்பங்களின் உள்ளே இருக்கும் உறவுச்சிக்கல்கள் ஆகியவையே இக்கதைகளின் கருப்பொருட்கள்.

என்னளவில் நெருக்கமான கதைகள் மனச்சிடுக்கு & ஈர்ப்பு விசை இரண்டும்.  இரண்டிலும் பெண்களின் ஆழமான உணர்வுகள் பதிவாகி இருக்கின்றன.  பெண்களில் முஸ்லீம், இந்து, கிறிஸ்தவர் என்று இருக்கிறார்களா என்ன?  மும்தாஜின் தடுமாற்றங்களை உம்மா, மாமி இருவரும் உணராமல் போனாலும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.  மணமான முஸ்லீம் பெண்களின் எதிர்காலம் குறித்த பாதுகாப்பில்லாத சூழலை பிர்தவ்ஸும் இக்கதையில் கொண்டு வந்திருக்கிறார். ஜெமிலாவைக் குறித்து என்ன சொல்ல?  கோழையைக் காதலித்தது அவளது குற்றம்.  பாம்பு வந்தது என்று கண்காட்டிவித்தை காட்டும் ஜெமிலா, நகம் பதிய பிராண்டிய ஜெமிலா,  பொறாமையில் தவித்த ஜெமிலா, கடைசியில் முதுகைத் தட்டும் ஜெமிலா என்று கதையில் அவளது விஸ்வரூபம்.

பிர்தவ்ஸ்  இன்னும் பல கதைகளில் போதுமான அழுத்தத்தைச் சேர்க்க வேண்டும்.  கடைசிக்கதையில் அது நன்றாக வந்திருக்கிறது.  பலகாலம் எழுதுபவருக்கு மொழிநடை தங்குதடையின்றி வந்திருக்கிறது.  இஸ்லாமிய மக்களுக்குக் குரல் கொடுக்கும் கதைகள் இவை.  தொடர்ந்து எழுதுங்கள்.

பிரதிக்கு:

இக்றா பதிப்பகம் 82206 58318

முதல்பதிப்பு 2024

விலை ரூ. 200

  •  

உதிரிகள்- ஏப்ரல் 2025 சிறுகதைகள்:

இருண்மை – ரம்யா அருண்ராயன்:

வெகுகாலம் சிறுகதைகள் எழுதிக் கொண்டிருப்பது போன்ற Flow ரம்யாவிற்கு வாய்த்திருக்கிறது.  விபச்சாரி இருந்த வீட்டில் இருப்பதன் சிரமங்களைத் தாண்டி, அவளுடன் ஜோதி மனதால் Connect செய்துகொள்வது அழகாக வந்துள்ளது.  நடந்ததெற்கெல்லாம் காரணம் கடைசிவரியில் ஒளிந்திருக்கிறது. நல்ல கதை.

பாதி நிலவு ஒளிரும் வளைவு –  நந்தாகுமாரன்:

பெண்கள் இளகும் நேரமென்று ஒன்று உண்டு.  அதை ஒருமுறை தவற விட்டால் திரும்பக்கிடைக்கும் வாய்ப்பு அரிது.  அந்நிய நிலத்தில்,  ஒருபாலின உறவு கொள்ளும் அந்நியப் பெண்ணுடனான Fragile relationship இந்தக்கதையில் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது.  நந்தாகுமாரன் இக்கதைக்காக மொழிநடையில் மாற்றம் செய்துள்ளார்.

மதியம் 1லிருந்து 2.30 வரை – சுபி:

சுபியின் கதை இரண்டாவது ஆண் பூனை போல அரவமின்றி நுழையும் சந்தர்ப்பம் குறித்த கதை.  அறுபதை நெருங்கும் ஆண் என்றாலும் பெண் ஏன் சம்மதம் தெரிவிக்க வேண்டும்!  அருகிருப்பது எட்டியேயானாலும் அல்லிக்கொடி படர்ந்தே தீரும். கதை கடந்தகாலமும் நிகழ்காலமுமாக மாறிமாறி வந்து பின் ஒன்று கலக்கிறது.  சுபிக்கு எழுத்தில் தயக்கமில்லை, அது பாராட்டப்பட வேண்டிய விஷயம். அப்பு மறையும் வரை பிரேமா காத்திருக்க வேண்டுமா என்ன?.  முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுக்கு Advance congratulations.

நானென்ன வேற வயித்துலயா பிறந்தேன்?-வா.மு.கோமு:

அவரவர் குடும்பம் என்றான பின் அகப்பட்டதைச் சுருட்டும் கதை.  பழைய கரு,  ஏராளமான சென்டிமென்ட்ஸ்.

ஏதிலன்- ப்ரிம்யா கிராஸ்வின்:

ப்ரிம்யாவின் கதைகளில் வழக்கமாக இருக்கும் ஆழமும், அழுத்தமும் இந்தக்கதையில் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.  கதை கடைசி டிவிஸ்டை நம்பி விரைகிறது.  ப்ரிம்யாவின் Benchmark என்று நான் நம்புவது இன்னும் உயரத்தில்.

ஞாபகார்த்தம்-  அரவிந்தன் பெருமாள்:

வாரமலருக்குக் கனகச்சிதமாகப் பொருந்தும் கதை.

அலங்கோலம் – சௌம்யா:

இன்றும் பெற்றோர் முன் தங்களுக்குள் முகத்தைப் பார்த்துப் பேசிக்கொள்ளாத தம்பதியர் இருக்கின்றார்கள்.  இருந்தாலும் நெருங்கி இருந்ததைப் பையன் பார்த்ததற்கு இவர்கள் இருவரும் Overreact செய்வது போல் தோன்றுகிறது.

திசை- சுஜாதா செல்வராஜ்:

சுஜாதாவின் கதை சாதிமாற்று மணத்தைத் தடுத்து அவசரமாக சுயசாதியில் செய்ததன் விளைவைச் சொல்கிறது.  சுஜாதாவால் இது போன்ற சீரியல் கதைகளைத் தவிர்த்து அழுத்தமான கதைகளை எழுத முடியும்.

தருக்கு- இராஜலட்சுமி:

படித்தால் மட்டும் போதுமா கதை.   இராஜலட்சுமி அழுத்தமான கதைகளை எழுத முயற்சிக்க வேண்டும்.

விசுவாசி- ராணி கணேஷ்:

ராணி அயல்நாடுகளில் வசிப்பவர்.  இந்தக்கதையின் protagonist

அந்நியதேசத்தவன்.  அவனது கலாச்சாரமும் சிந்தனைகளும் கதையில் வெளிப்படுகின்றன.  ராணி அயல் கலாச்சாரத்தை மையம் கொண்ட கதைகளைத் தொடர்ந்து எழுதலாம்.

கருப்பு வெள்ளை-மனோஜ்:

மனோஜின் கதையில் அனுபவமும், யதார்த்தமும் இணைந்து களைகட்டுகின்றன.  ஆமாம். மதுரையை இப்போது பார்த்தால் அந்நியமாகத் தான் தோன்றுகிறது, அவ்வளவு மாறிவிட்டது.  வேலவன் மட்டுமில்லை, மாறுதலை யார் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் காலம் கரையோரம் ஒதுக்கிப் போய்விடும். Beautifully presented story.

பரிசுத்தம் – ராஜேஷ் வைரபாண்டியன்:

பரிசுத்தத்திற்கு எஸ்தரை விட நல்ல மனைவி கிடைத்திருக்கப் போவதில்லை, எஸ்தருக்கும் அப்படித்தான்.  எல்லாமிருந்தும் எதுவுமில்லாதொரு வாழ்வு.

  •  

As Long as the Lemon Trees Grow

by Zoulfa Katouh:

Zoulfa கனடாவில் பிறந்து, துபாய், சுவிஸ் போன்ற நாடுகளில் வளர்ந்தவர்.

சிரியா தம்பதிகளுக்குப் பிறந்தவர். மருந்தியலில் முதுகலைக் கல்வி கற்றவர்.  இவருடைய முதல் நாவலான இது 2022ல் வெளியாகியது.

சிரியா Ottoman வீழ்ச்சிக்குப்பிறகான பிரஞ்சுக் காலனியாதிக்கத்திற்குப்பின் சுதந்திரமடைந்ததும் பலவித மாறுதல்களை எதிர்கொண்டது.  எகிப்துடன் இணைக்கப்பட்டு சரிவராது பிரிந்தது.  இஸ்ரேலுடன் இணைந்து போரிட்டிருக்கிறது.  ஐம்பது வருடங்களுக்கு மேலாக தந்தை&மகனின் சர்வாதிகாரத்திலிருந்த சிரியா, ஆஸாத்தின் ஆட்சி டிசம்பர் 2024ல் விழுந்து, மார்ச் 2025ல் புதிய அரசு பொறுப்பேற்றிருக்கின்றது.  சிரியாவில் அமைதி திரும்புவதற்கான அறிகுறி தென்படுகிறது.

2011ல் தொடங்கிய உள்நாட்டுப் போரை மையமாகக் கொண்ட நாவலிது.  சிரியா ராணுவம் தன் சொந்த மக்களை எவ்வாறு சித்திரவதை செய்தது என்பதைப் புனைவின் மூலம் சொல்கிறார் Zoulfa.  Salama என்ற பதினெட்டு வயதுப்பெண் கதைசொல்லி.  Pharmacy படிப்பை முடிக்குமுன்பே, கலவரத்தால் பாதிக்கப்பட்டு படிப்பை நிறுத்திய சலாமா,  மருத்துவமனையில் போதுமான மருத்துவர் இல்லாததால் உயிர்காக்க ஆயிரக்கணக்கில் அறுவைசிகிச்சை செய்கிறாள்.  பலரைக் காப்பாற்றுகிறாள்.  பலர் இறக்கின்றனர்.  நோயாளிகளுக்குக் குறைவின்றி ராணுவம் அனுப்பிக் கொண்டே இருக்கின்றது.

மருத்துவமனையில் குண்டு போடுதல்,  கர்ப்பிணிப் பெண்ணை Sniper தலைக்கு ஒரு புல்லட், கர்ப்பப்பைக்கு ஒரு புல்லட் கொண்டு கொல்வது, சொந்த நாட்டினர் மீது Chemical attack செய்வது, பெண்களிடம் ராணுவத்தின் அத்துமீறல்கள் என்று வரலாற்றில் நடந்த பலவும் பதிவாகியிருக்கின்றன.

இங்கே உயிருக்குப் பாதுகாப்பில்லை,  அது மட்டுமல்ல எந்தவித முகாந்திரமுமின்றி சித்திரவதைக்கு உள்ளாக நேரிடும் என்பது தெரிந்த பின் தாய்நாட்டை விட்டு வெளியேறுதல் எப்படி Cowardice thing ஆகும்?  வெளியேறுபவர்களின் தேசபக்தி, தங்கியவர்களுக்கு எந்த வகையிலும் குறைவானதல்ல.  முக்கியமான சிலவற்றை அள்ளிக் கொண்டு,  கையில் இருக்கும் பெரும்பகுதிப் பணத்தைப் புரோக்கர்களுக்கு அளித்து, 

பாதுகாப்பில்லாத மீன்பிடிப்படகில் செல்ல நேரும் போதும் சலாமாவிற்கு, தாய் நாட்டையும், சிகிச்சை வேண்டுபவருக்குச் செய்யாமல் தான் மட்டும் தப்பிக்க நினைப்பதாகக் குற்றஉணர்வு.

முதல்நாவல் என்பது தெரியாத வகையில் Zoulfaவின் Flow சரளமாக உள்ளது.  நாவலின் இறுதிப்பகுதிக்கு முன்னால் ஒரு டிவிஸ்டை வைத்திருக்கிறார்.  யாரும் எதிர்பாராதது அது.  நாட்டை விட்டு வெளியேறிய குற்றஉணர்வு கொண்ட எல்லோருக்குமான Love letter இந்த நாவல்.

  •  

தமிழ்வெளி ஏப்ரல்-ஜூன் 2025 சிறுகதைகள்:

எலுமிச்சைத் தேயிலையில் காதல் வார்த்தைகள் – எஸ்.செந்தில்குமார்:

செந்தில்குமார் தொடர்ந்து நல்ல கதைகளை எழுதி வருகிறார்.  இவருக்கு ஒரு வாரம் ஒதுக்கி முழுமையாக வாசிக்க வேண்டும்.  

கதை முழுதும் ஸ்பூன்கள் தான் வருகிறது.  கல்யாணம் முடித்த தம்பதிகளுக்கிடையேயும் அதே ஸ்பூன்கள்.  சற்று கவனமாக வாசியுங்கள்.   இடையே இருப்பது ஸ்பூனல்ல என்பது விளங்கும்.  அலட்டாமல் ஆழமான ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார் செந்தில்குமார்.

சமையலம்மா – பாட்டக்குளம் துர்க்கையாண்டி:

சென்டிமென்டால் நிறைந்த கதை.  இருந்தும் ஏன் என்ற கேள்வி தொக்கி நிற்கின்றது.  காலம் முழுதும் மனிதர்களோடு பேசிக்கொண்டே இருக்க ஆசைப்படுபவர்கள் யாரும் அருகிலின்றித் தனியாக இறப்பதேன்?  மற்றவர்களுக்கு உணவளித்தவர் உணவின்றி இறப்பதேன்?

குருதியுறவுள்ள ஆவிகள் – ஆலிஸ் வாக்கர் –  தமிழில் ராணி கணேஷ்:

கறுப்பினக் குடும்பத்தின் உறவுச்சிக்கல்களைச் சொல்லும் கதை.  ஆலிஸ் வாக்கர் நல்ல நாவல்களைப் போலவே நல்ல சிறுகதைகளும் எழுதியுள்ளார்.  ராணியின் உற்சாகம் பாராட்டத்தக்கது,  ஆனால் மொழிபெயர்ப்புத்தேர்வில் கவனம் அவசியம்.

மன்னிப்பு – ராஜலட்சுமி- ஆங்கிலத்தில் A J Thomas-  ஆங்கிலம் வழித்தமிழில் தி.இரா.மீனா:

ராஜலட்சுமியின் கதையில் ஒளிந்திருக்கும் Embers இரண்டு மொழிக்கு மாற்றப்பட்ட போதிலும் வெம்மை தணியாதிருக்கிறது.  கடைசி வரியில் கதையே மாறுகிறது.  ரெமாவிற்குக் கூடுதல் குற்றஉணர்வு வரப்போகிறது.  நல்ல, தெளிவான மொழிபெயர்ப்பு.  Pronounஐப் பிரதிப்பெயர்ச்சொல் என்றால் புரிதல் எளிது.

தொடுகை – தேவிலிங்கம்:

இந்தியப்பெண்கள் விளையாட்டுத்தனத்தை மணமானதும் வெட்டென மறத்தல் எப்போதும் ஆச்சரியம் தருவது.  தேவி பெண்பிள்ளைகளின் பதின்மவயதில் நடைபெறும் Extracurricular activities எல்லாவற்றையும் கதைகளில் வரிசையாகப் பார்வைக்கு வைக்கிறார்.  கதையின் Open ending. நன்றாக வந்திருக்கிறது.

பிரதிக்கு 90940 05600

  •  

தாயைத்தின்னி -தில்லை:

ஆசிரியர் குறிப்பு:

கிழக்கிலங்கையை சேர்ந்த தில்லை சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்தவர்.  . பெண்ணிய செயற்பாட்டாளர், ஊடகவியலாளர், ஓவியர், சமூக செயற்பாட்டாளர்,கவிஞர், அரங்கச் செயற்பாட்டாளர், பதிப்பாளர் என்று பல்வேறுபட்ட ஆளுமைகளைக் கொண்டவர்.  இரண்டு கவிதைத் தொகுப்புகளைத் தொடர்ந்து வெளியான  இவருடைய முதல் நாவல் இது.

Coming of age story என்பது வெகுசிலருக்கே  வெளியில் சொல்வதற்கு சுவாரசியம் மிகுந்ததாக அமைகிறது.   அதிகம் வெளியில் அலையும் ஆண்பிள்ளைகளுக்கே அது சொற்பம் எனும் போது பெண்பிள்ளைகளுக்கு இன்னும் அரிது.

தாயத்தின்னி தனது கதைகளை முழுமையாகச் சொல்லவில்லை என்று நாவல் முடிகிறது.  சொல்லியதைத் தாங்குவதற்கே பலரது மனதுக்கு சக்தி இருக்கப்போவதில்லை.

தமிழகத்தில் இருந்து ஆகமவிதிகள் தெரிந்த சிற்பிகளை இலங்கையில் இந்து கோயில்களுக்குச் சிற்பங்கள் செய்ய அழைப்பது இன்றும் நடந்து கொண்டிருக்கிறது.  இலங்கையின் மிகக்கட்டுப்பாடான ஊர் ஒன்றில் தமிழகச்சிற்பிக்கும் வேற்றுப்பெண்ணுக்குமான காதல் அவளுக்கு குழந்தையையும் தாளவியலாத துயரத்தையும் தருகின்றது.  துயரம் ஒரு தொற்று நோய்.  அடுத்த தலைமுறையையும் அது இன்னும் கடுமையாகப் பாதிக்கும் என்று தெரிந்திருந்தால் அவள் ஒருபோதும் காதலித்திருக்க மாட்டாள்.

 யாருக்கு இடையில் பிரச்சனை என்றாலும் பெண்கள் பாதிக்கப்படுவதும் புதிதல்ல.  ஆதியில் மனிதன் குழுவாக இடம்பெயர்ந்தபோது கூட அடுத்த குழுவின் ஆண்களைக் கொல்வதில் மட்டும் வெற்றி முடிவதில்லை.  பெண்களை சிறைபிடித்தாலே அது முடிவடையும்.  இவன் தோற்றால் அடுத்தவன் சிறைபிடிப்பான்.  நாவலில் இது நுட்பமாகக் கையாளப்பட்டிருக்கிறது. அதே போல் முற்போக்காளன் புத்திசாலிப் பெண்ணுக்கு சுவிஷ் நாட்டில் விரிக்கும் வலை.

ஒரு பெண்ணுக்குள் மூன்று பெண் பிம்பங்கள் இருக்கின்றன.  இருந்த போதிலும் தாயத்தின்னியே Strong personality.  அவளுக்கு நேர்ந்ததில் பாதி வேறு யாருக்கும் நடந்திருந்தாலும் அவர்கள் மீண்டு வந்திருப்பது கடினம்.

தாயத்தின்னி கதாபாத்திரம் கனகச்சிதமாக வடிவெடுத்திருக்கிறது.  அதன் காரணம் நாவலை வாசிப்பவருக்குப் புரிபடும்.  கோவில் தலைவர் விஷயத்தில் மட்டுமல்ல, 

ஆதம் காக்கா சம்பவத்திலும் அவள் வாயைத் திறக்காததற்குப் பின்னான முதிர்ச்சி ஆச்சரியப்பட வைக்கிறது.  இந்த வகையில் லிலித் பிம்பத்தை விட தில்லை பிம்பத்துடன் அவள் நெருங்கிப் போகிறாள்.  

ஐரோப்பாவில் அயல் தேசத்தவரை, குறிப்பாக Brown skin peopleஐ உயரத்தில் இருந்து தான் பார்ப்பார்கள். அது உடல் வளர்ச்சியால் வந்த உயரத்தால் அல்ல.  உலகம் முழுக்கக் கொள்ளையடித்தவை, அடிமை வியாபாரம் என்று அவர்களுக்கு ஒற்றுமை இல்லாத நம் முன்னோர்கள் எத்தனையோ வழிகளை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். லிலித்துக்கும் தில்லைக்குமான உரையாடல்கள்,  லட்சியவாதிக்கும், இருத்தியலியவாதிக்கும் இடையேயானவை.

தில்லையின் மொழி நேரடியாக இதயத்துக்குள் நுழைகிறது.   தாயத்தின்னியின் வலியை வாசகருக்குக் கடத்துவதில் தில்லை வெற்றி பெற்றிருக்கிறார்.  கதை சொல்லும் யுத்தியிலும், வடிவத்திலும் உறுத்தாத புதுமை இருக்கின்றது. எல்லாவற்றையும் தாண்டி அசைக்க முடியாத நேர்மை இருக்கின்றது. பாதகத்தி-ஒத்தக்கொட்டை உறவைப் பார்த்தும் விளங்காத தாயத்தின்னி, கைமரத்தில் உன்னி உன்னி நகர்வதில் கிடைப்பது பாலியல் சுகம் என்றறியாத தாயத்தின்னி,  கண்பெரட்டிக்காளிக்கு இரத்தத்தைத் தொட்டுக் காட்டும் தாயத்தின்னி என்று அவளது அறியாமை அவளை நமக்கு இன்னும் நெருக்கமாக்குகிறது.  அனுபவம் நிறைந்தவர்கள் கையில் எழுத்துக்கலை இருந்தால் மட்டுமே மாஸ்டர்பீஸ்கள் உருவாகும் என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது.  தில்லையால் எப்படி இவ்வளவு நாள் எழுதாமல் இருக்க முடிந்தது?  தவறாது, வாங்கி வாசிக்க வேண்டிய நூலாக இதைக் குறித்துக் கொள்ளுங்கள்.

பிரதிக்கு:

தாயதி இலங்கை

இந்தியாவில் பாரதி புத்தகாலயம்

044-2433 2924

முதல்பதிப்பு டிசம்பர் 2024

விலை ரூ.280.

  •  

One Half from the East by Nadia Hashimi:

நாடியா ஆப்கானிய தம்பதிகளுக்கு அமெரிக்காவில் பிறந்தவர். குழந்தைகள் மருத்துவராக பணியாற்றிப்பின் எழுத வந்தவர்.  இவர் 

கதைகள் ஆப்கன் பெண்கள் வாழ்வை மையம் கொண்டன.  நாடியா அமெரிக்கத் தேர்தலில் நின்ற ஒரே ஒரு ஆப்கானியப்பெண் ஆவார்.

மேல்நிலைப்பள்ளி, உயர்கல்விக்கு அனுமதியில்லை,  உடலின் எந்த சிறுபாகமும் தெரியாத உடை, ஆண் துணை இன்றிப் பயணம் செய்ய அனுமதியில்லை,  வெளியே சத்தமாகப் பேசக்கூடாது, பெண் மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட பலரும் காரணமின்றி பணிவிலக்கு செய்யப்பட்டனர், Ministry of Women affairs என்பதே இல்லாது போனது and so on.  இவையெல்லாம் போன நூற்றாண்டில் இல்லை இன்றைய ஆப்கானில் நடப்பது.  பெண்களை அடிமைகளாக ஒரு கூட்டம் வைத்திருப்பதை உலகம் உள்நாட்டுப்பிரச்சனை என்று வாளாவிருக்கிறது.

Obayda பத்துவயதுப் பெண்  ஆண்பிள்ளைகள் இல்லாத வீட்டில் கடைக்குட்டி.  காவல்துறை அதிகாரியான அவளது அப்பா வெடிமருந்து விபத்தில் ஒரு காலை இழந்ததும் குடும்பம் வறுமை வாய்ப்படுகிறது.  அவளது அக்காக்கள் மூவருமே பருவம் அடைந்தவர்கள்.  அதனால் Obaydaவை ஆப்கான் வழக்கப்படி உடையை மாற்றி, முடியைக் கத்தரித்துப் பையனாகப் பணம் சம்பாதிக்க அனுப்புகிறார்கள்.

Bacha posh என்பது ஆண்குழந்தைகள் இல்லாத வீட்டில் பருவமெய்தாத பெண்குழந்தையை ஆணைப்போல் உடை உடுத்தி வேலைக்கு அனுப்பி வைப்பது.  ஆப்கானில் கட்டுப்பாட்டால் பெண்கள் வேலைக்குச் செல்வதோ, சுதந்திரமாக இருப்பதோ தடை செய்யப்பட்டது.  பொதுவாக அந்தப்பெண் பருவமடைந்ததும் பையனாக நடிப்பது முடிவுக்கு வந்து விடும்.

பெண்ணுக்குரிய கட்டுப்பாடுகளில் இருந்து ஆணாக மாறுவதிலிருக்கும் அளப்பரிய சுதந்திரங்களுடன்,  மீண்டும் அவள் பெண்ணாக மாறுகையில் ஏற்படும் கட்டுப்பாடுகளால்,  மற்ற பெண்களை விட உளவியல் ரீதியாக அவள் அவதிக்குள்ளாவதையும் நாவல் மையஇழையாய் கொண்டிருக்கிறது.  நாடியாவால் சமகால சரித்திரத்தின் வெறும் தகவல்களை அடுக்காமல்,  உணர்வுகளை, குறிப்பாக Oppressed Women, ஆழமாகக் கதைகளில் கொண்டு வர முடிகிறது.  அதுவே அவரை முன்வரிசைக்குக் கொண்டுவரப் போகிறது.

  •  

As Long as the Lemon Trees Grow

by Zoulfa Katouh:

Zoulfa கனடாவில் பிறந்து, துபாய், சுவிஸ் போன்ற நாடுகளில் வளர்ந்தவர்.

சிரியா தம்பதிகளுக்குப் பிறந்தவர். மருந்தியலில் முதுகலைக் கல்வி கற்றவர்.  இவருடைய முதல் நாவலான இது 2022ல் வெளியாகியது.

சிரியா Ottoman வீழ்ச்சிக்குப்பிறகான பிரஞ்சுக் காலனியாதிக்கத்திற்குப்பின் சுதந்திரமடைந்ததும் பலவித மாறுதல்களை எதிர்கொண்டது.  எகிப்துடன் இணைக்கப்பட்டு சரிவராது பிரிந்தது.  இஸ்ரேலுடன் இணைந்து போரிட்டிருக்கிறது.  ஐம்பது வருடங்களுக்கு மேலாக தந்தை&மகனின் சர்வாதிகாரத்திலிருந்த சிரியா, ஆஸாத்தின் ஆட்சி டிசம்பர் 2024ல் விழுந்து, மார்ச் 2025ல் புதிய அரசு பொறுப்பேற்றிருக்கின்றது.  சிரியாவில் அமைதி திரும்புவதற்கான அறிகுறி தென்படுகிறது.

2011ல் தொடங்கிய உள்நாட்டுப் போரை மையமாகக் கொண்ட நாவலிது.  சிரியா ராணுவம் தன் சொந்த மக்களை எவ்வாறு சித்திரவதை செய்தது என்பதைப் புனைவின் மூலம் சொல்கிறார் Zoulfa.  Salama என்ற பதினெட்டு வயதுப்பெண் கதைசொல்லி.  Pharmacy படிப்பை முடிக்குமுன்பே, கலவரத்தால் பாதிக்கப்பட்டு படிப்பை நிறுத்திய சலாமா,  மருத்துவமனையில் போதுமான மருத்துவர் இல்லாததால் உயிர்காக்க ஆயிரக்கணக்கில் அறுவைசிகிச்சை செய்கிறாள்.  பலரைக் காப்பாற்றுகிறாள்.  பலர் இறக்கின்றனர்.  நோயாளிகளுக்குக் குறைவின்றி ராணுவம் அனுப்பிக் கொண்டே இருக்கின்றது.

மருத்துவமனையில் குண்டு போடுதல்,  கர்ப்பிணிப் பெண்ணை Sniper தலைக்கு ஒரு புல்லட், கர்ப்பப்பைக்கு ஒரு புல்லட் கொண்டு கொல்வது, சொந்த நாட்டினர் மீது Chemical attack செய்வது, பெண்களிடம் ராணுவத்தின் அத்துமீறல்கள் என்று வரலாற்றில் நடந்த பலவும் பதிவாகியிருக்கின்றன.

இங்கே உயிருக்குப் பாதுகாப்பில்லை,  அது மட்டுமல்ல எந்தவித முகாந்திரமுமின்றி சித்திரவதைக்கு உள்ளாக நேரிடும் என்பது தெரிந்த பின் தாய்நாட்டை விட்டு வெளியேறுதல் எப்படி Cowardice thing ஆகும்?  வெளியேறுபவர்களின் தேசபக்தி, தங்கியவர்களுக்கு எந்த வகையிலும் குறைவானதல்ல.  முக்கியமான சிலவற்றை அள்ளிக் கொண்டு,  கையில் இருக்கும் பெரும்பகுதிப் பணத்தைப் புரோக்கர்களுக்கு அளித்து, 

பாதுகாப்பில்லாத மீன்பிடிப்படகில் செல்ல நேரும் போதும் சலாமாவிற்கு, தாய் நாட்டையும், சிகிச்சை வேண்டுபவருக்குச் செய்யாமல் தான் மட்டும் தப்பிக்க நினைப்பதாகக் குற்றஉணர்வு.

முதல்நாவல் என்பது தெரியாத வகையில் Zoulfaவின் Flow சரளமாக உள்ளது.  நாவலின் இறுதிப்பகுதிக்கு முன்னால் ஒரு டிவிஸ்டை வைத்திருக்கிறார்.  யாரும் எதிர்பாராதது அது.  நாட்டை விட்டு வெளியேறிய குற்றஉணர்வு கொண்ட எல்லோருக்குமான Love letter இந்த நாவல்.

  •  

தமிழ்வெளி ஏப்ரல்-ஜூன் 2025 சிறுகதைகள்:

எலுமிச்சைத் தேயிலையில் காதல் வார்த்தைகள் – எஸ்.செந்தில்குமார்:

செந்தில்குமார் தொடர்ந்து நல்ல கதைகளை எழுதி வருகிறார்.  இவருக்கு ஒரு வாரம் ஒதுக்கி முழுமையாக வாசிக்க வேண்டும்.  

கதை முழுதும் ஸ்பூன்கள் தான் வருகிறது.  கல்யாணம் முடித்த தம்பதிகளுக்கிடையேயும் அதே ஸ்பூன்கள்.  சற்று கவனமாக வாசியுங்கள்.   இடையே இருப்பது ஸ்பூனல்ல என்பது விளங்கும்.  அலட்டாமல் ஆழமான ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார் செந்தில்குமார்.

சமையலம்மா – பாட்டக்குளம் துர்க்கையாண்டி:

சென்டிமென்டால் நிறைந்த கதை.  இருந்தும் ஏன் என்ற கேள்வி தொக்கி நிற்கின்றது.  காலம் முழுதும் மனிதர்களோடு பேசிக்கொண்டே இருக்க ஆசைப்படுபவர்கள் யாரும் அருகிலின்றித் தனியாக இறப்பதேன்?  மற்றவர்களுக்கு உணவளித்தவர் உணவின்றி இறப்பதேன்?

குருதியுறவுள்ள ஆவிகள் – ஆலிஸ் வாக்கர் –  தமிழில் ராணி கணேஷ்:

கறுப்பினக் குடும்பத்தின் உறவுச்சிக்கல்களைச் சொல்லும் கதை.  ஆலிஸ் வாக்கர் நல்ல நாவல்களைப் போலவே நல்ல சிறுகதைகளும் எழுதியுள்ளார்.  ராணியின் உற்சாகம் பாராட்டத்தக்கது,  ஆனால் மொழிபெயர்ப்புத்தேர்வில் கவனம் அவசியம்.

மன்னிப்பு – ராஜலட்சுமி- ஆங்கிலத்தில் A J Thomas-  ஆங்கிலம் வழித்தமிழில் தி.இரா.மீனா:

ராஜலட்சுமியின் கதையில் ஒளிந்திருக்கும் Embers இரண்டு மொழிக்கு மாற்றப்பட்ட போதிலும் வெம்மை தணியாதிருக்கிறது.  கடைசி வரியில் கதையே மாறுகிறது.  ரெமாவிற்குக் கூடுதல் குற்றஉணர்வு வரப்போகிறது.  நல்ல, தெளிவான மொழிபெயர்ப்பு.  Pronounஐப் பிரதிப்பெயர்ச்சொல் என்றால் புரிதல் எளிது.

தொடுகை – தேவிலிங்கம்:

இந்தியப்பெண்கள் விளையாட்டுத்தனத்தை மணமானதும் வெட்டென மறத்தல் எப்போதும் ஆச்சரியம் தருவது.  தேவி பெண்பிள்ளைகளின் பதின்மவயதில் நடைபெறும் Extracurricular activities எல்லாவற்றையும் கதைகளில் வரிசையாகப் பார்வைக்கு வைக்கிறார்.  கதையின் Open ending. நன்றாக வந்திருக்கிறது.

பிரதிக்கு 90940 05600

  •