Reading view

இந்தியாவிலும் பாலஸ்தீனத்திலும் அரசே முன்நின்று நடத்தும் புல்டோசர் இடிப்புகள்

அரசின் அனுமதியுடன் வீடுகளை இடிப்பது என்பது ஒரு தனித்துவமான, கொடூரமான வழிமுறையாகும். இது இஸ்ரேல் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் மக்களைக் கட்டுக்குள் வைப்பதற்கும் தண்டிப்பதற்குமான ஒரு முறையாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த இரு வெவ்வேறு புவியியல் பகுதிகளில், குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட சமூகங்கள் இதன் மூலம் குறிவைக்கப்படுகிறார்கள். வரலாற்று ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இந்த நாடுகள் மிகவும் வேறுபட்ட சூழல்களில் செயல்பட்டாலும், இரண்டுமே இத்தகைய இடிப்பு நடவடிக்கைகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன. ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவைச் […]

Source

  •  

சம்புரு பழங்குடிகளின் வாழ்வும் வரலாறும் – தீபா ஜெயபாலன்

வட கென்யாவின் சம்புரு மாவட்டத்திலும் அதனைச் சுற்றியுள்ள வெப்பமான, மணற்பாங்கான நிலங்களிலும் காலத்தின் ஓட்டத்துக்கு கட்டுப்படாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் இனம், சம்புரு பழங்குடியினர். இவர்களின் மக்கள்தொகை சுமார் 2,50,000 முதல் 3,00,000 வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அவர்களது வாழ்க்கையோ நம் கண்களுக்கு எளிதில் படாமல் போகலாம். ஆனால், அவர்களின் வரலாறு, பண்பாடு, மற்றும் உயிர்ப்பிரியம் (love for life/living beings) ஆகியவை மண்ணோடு கலந்ததொரு சங்கமம். பழங்குடி என்பதே இன்று நாகரிகக் கோடாரிக்கு விழும் […]

Source

  •  

மாதுளை மங்கை (சிறார் கதை) – தீபா சிந்தன்

சரியாக நான்கு பருவநிலை மாற்றங்களுக்கு முன்பு ஆச்சி எங்கள் வீட்டை விட்டுச் சென்றார்.  ஒருநாள் காலை திடீரென நான் கண்விழித்துப் பார்த்தபோது ஆச்சியை வீட்டில் காணவில்லை. அவருடைய கைத்தடி மட்டும் கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்தது.  ஆச்சியிடம் அதைக் கொடுப்பதற்காக கைத்தடியை எடுத்துக்கொண்டு நான் சென்றேன்.  எப்போதும் அவர் இருக்கும் மாட்டுத் தொழுவத்திற்கு ஓடிச்சென்று பார்த்தேன். ஆனால் அங்கு அவர் இல்லை.  பின்னர் வைக்கோல் வைத்திருக்கும் களத்திற்குச் சென்றேன். அங்கும் ஆச்சி இல்லை.  தண்ணீர் எடுக்க குளத்திற்கு சென்று […]

Source

  •  

தெருக்கூத்தும், ஊதுவத்தி வாழ்க்கையும் – ம. பரிமளா தேவி

வட தமிழகம்தான் தெருக்கூத்துக் கலையின் பிறப்பிடமாக இருந்திருக்கின்றது. ஆனால், சில தெருக்கூத்துக் குழுக்களும் கூத்துக் கலைப் பயிற்சி மன்றங்களும் மட்டுமே இன்று இயங்கி வருகின்றன. தெருக்கூத்துக் கலையின் மீது மக்களுக்கு இருந்துவந்த பற்று இன்று குறைந்துவிட்டது. தெருக்கூத்தின் இடத்தை ஆடல் பாடல் நிகழ்ச்சி பிடித்துவிட்டது. சினிமாவுக்கான அடித்தளமாக இருந்ததுவும் தெருக்கூத்துதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தொண்டை மண்டலத்தின் பல கூத்துக் கலைஞர்களும் மேடை நாடகக் கலைஞர்களும் மண்ணோடு மண்ணாக மக்கிப்போன பிறகு, அவர்களின் நினைவுகளைப் புனைவாக்கி நாவலில் […]

Source

  •  

தௌஹீது பாத்திமாவும், இல்லாதுபோன அவரது புத்தம்புது இல்லமும் (கட்டுரை – 9)

தௌகீது ஃபாத்திமா அன்று காலை எப்படித் தயாரானார் என்று அவருக்கு நினைவில்லை. புதிதாகக் கட்டப்பட்ட அவரது வீட்டின் கட்டுமானத் தளத்திற்கு எப்படி விரைந்தார் போன்ற விவரங்கள் அவருக்கு நினைவில்லை. இன்னும் சில தினங்களில் அவர் குடிபுகவிருந்த வீடு அது. அவரது தந்தை தனது செல்ல மகளுக்காக அளவிலாத அன்புடன் தனது வாழ்நாள் சம்பாத்தியத்தை முழுவதும் கொடுத்து எழுப்பிய வீடு அது. அன்றைய தினம் தௌகீது ஃபாத்திமா பேசிய வார்த்தைகளோ, அவரிடமிருந்து பீறிட்ட கூக்குரலோ எதுவும் இப்போது அவருக்கு […]

Source

  •  

அணில்குட்டிக்கு பள்ளி திறந்தாச்சி (சிறார் கதை) – தீபா சிந்தன்

இரண்டு மாதக் கோடை விடுமுறைக்குப் பிறகு இன்றுதான் பள்ளி மீண்டும் திறக்கிறது. காலை ஆறு மணி ஆனது. அப்போது அருள் என்கிற அணில் மெல்லக் கண் விழித்தான். பின்பு பல் துலக்கி, குளித்து முடித்து, காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். “சீக்கிரம் சாப்பிட்டு முடி அருள். இந்த இட்லியைச் சாப்பிட்டதும் வேகமாகப் பள்ளிக்குப் போகணும்” என்றார் அருளின் அம்மா. ஆனால் அருள் ஒவ்வொரு வாயாக மெதுவாக மென்று தின்று கொண்டிருந்தான்.  “பள்ளிக்குப் போய் ரொம்ப நாள் ஆச்சு […]

Source

  •  

நமீபியாவில் வாழும் ஹிம்பா பழங்குடிகள் – தீபா ஜெயபாலன்

ஹிம்பா: ஓர் அறிமுகம் அடர்ந்த பாலைவனங்கள் மற்றும் வறண்ட மலைப்பாங்கான நிலங்களால் சூழப்பட்ட நமீபியாவின் வடமேற்குப் பகுதியில் (குனேனே பிராந்தியம்) வாழும் ஓர் அரை நாடோடிப் பழங்குடியினர் தான் ஹிம்பா மக்கள். கிட்டத்தட்ட 50,000 மக்கள் தொகையைக் கொண்ட (2023 மதிப்பீடு) இவர்கள், தங்கள் பாரம்பரியத்தையும், தனித்துவமான வாழ்க்கை முறையையும் இன்று வரை கடைப்பிடிக்கின்ற இந்த பழங்குடியினர், உலகில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய கலாசார சமூகமாக விளங்குகின்றனர். ஹிம்பா மக்களின் பூர்வீகம் ஹிம்பா மக்கள், முதலில் ஹெரேரோ […]

Source

  •  

பொய்யாக உருவாக்கப்பட்ட கதைகளால் சஃப்தார் அலியின் வீடு பலியானது எப்படி? (கட்டுரை – 8)

தமிழில்: மணிபிரகாஷ் (தொடரின் அனைத்து கட்டுரைகளையும் வாசிக்க) சஃப்தார் அலிக்கு வயது 78. 1970-களில் கட்டப்பட்ட அவரது வீடு, அவரின் இரண்டு மகன்களான சையத் கமர் அப்பாஸ் மற்றும் சையத் ஃபராஸ் அப்பாஸ் ஆகியோருக்குச் சொந்தமானது. தங்கள் விவசாய நிலம் ஒன்றை விற்று வந்த பணத்தை வைத்து, 2002-இல் அந்த வீட்டை வாங்கினர். அப்போதிலிருந்து சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, எந்தவொரு சட்டவிரோதக் கட்டுமானம் குறித்தும் பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையத்திடமிருந்து (PDA) எந்த ஒரு அறிவிப்பையும் அவர்கள் […]

Source

  •  

அமீராவும் ஆலிவ் மரமும் (சிறார் கதை) – தீபா சிந்தன்

அன்று காலை, அமீரா எழுந்ததும் முதன்முதலில் பார்த்தது, கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த மேசையின் மீது இருந்த ஒரு ஆலிவ் விதையைத் தான். “அம்மா! அம்மா! இந்த ஆலிவ் விதையை யார் இங்கே வைத்தார்கள்?” என்று கேட்டுக்கொண்டே, தன் அறையில் இருந்து வெளியே வந்தாள் அமீரா. அமீராவின் அம்மாவும், தாத்தா முஹமதும் திண்ணையில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தனர்.  அமீரா கையில் வைத்திருந்த ஆலிவ் விதையைப் பார்த்ததும், “இதுக்காகவா எழுந்தவுடன் ‘அம்மா, அம்மா’ என்று ஓடிவந்தாய்?” என்று கேட்டார் […]

Source

  •  

ஐஎம்எஃப்-இல் வாக்களிக்கும் அதிகாரம் அதிகமிருப்பது யாருக்கு? ஏன்? எப்படி?

-விஜய்பிரசாத் தமிழில்: பொன்சங்கர் சர்வதேச நாணய நிதியம் (IMF) ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாகவே செயல்படுகிறது. இங்கு, ஒரு நாட்டின் வாக்களிக்கும் சக்தி அதன் மக்கள்தொகையைச் சார்ந்தது அல்ல, மாறாக அதன் பொருளாதார வலிமையைச் சார்ந்தது. எந்தவொரு முக்கிய முடிவையும் தடுக்கும் வீட்டோ அதிகாரம் அமெரிக்காவிடம் உள்ளது. இதனால், தன் விருப்பங்களுக்கு ஏற்ப கொள்கைகளை அது வடிவமைக்கிறது. வாக்களிக்கும் அதிகாரத்தில் ஏற்றத்தாழ்வு சர்வதேச நாணய நிதியத்தைப் பொறுத்தவரை, வடபுல நாடுகளில் உள்ள ஒருவரின் வாக்கு, தென்புல நாடுகளில் உள்ள […]

Source

  •  

புல்டோசர் இடிப்புகள் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்ன சொல்கிறது? (கட்டுரை – 7)

தமிழில் : நந்தினி கடந்த நவம்பர் மாதம், சட்டத்திற்குப் புறம்பாக நடைபெறும் புல்டோசர் இடிப்புகள் தொடர்பாக, பரவலான வரவேற்பைப் பெற்ற ஒரு தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கியது. இருப்பினும், அதன் நோக்கத்திலும் செயலாக்கத்திலும் அத்தீர்ப்பு குறைபாடுகளைக் கொண்டிருப்பதாகவே தோன்றியது. இக்கட்டுரையில், இத்தீர்ப்பையும், புல்டோசர் இடிப்புகள் தொடர்பாக அது முன்வைத்த கருத்துகளையும், சமூகத்தில் அது ஏற்படுத்திய மற்றும் ஏற்படுத்தத் தவறிய பாதிப்புகளையும் விரிவாக ஆராய்வோம். இந்திய நீதித்துறையில் அடிப்படைத் தூண்களாகக் கருதப்படும் சட்டத்தின் ஆட்சி , அதிகாரப் […]

Source

  •  

தென்னாப்பிரிக்க ஜூலு பழங்குடிகள் – தீபா ஜெயபாலன்

தென்னாப்பிரிக்காவின் தென்கோடியில், தங்கமென மலர்ந்த இனம், பசுமையால் புனைந்த வனம், காற்றின் அலைகளும், களிறுபோல் விரிந்து பரந்த மலைச்சரிவுகளும், மண் வாசனையால் நெஞ்சைத் துளைக்கும் பசுமை மலைகளின் வாசல் வழியாகப் பளிங்குப் போல ஓடும் சுனைகளோடும், வானளாவும் மரங்களின் நிழலோடும் வாழும் பழங்குடியாம் ஜூலு! ஆளுமைத் தன்மைக்கும் பாரம்பரியத்திற்கும் அச்சாரமாக இருக்கும் இவர்களின் வாழ்க்கை முறையை எழுதிடப் பேரவா… ஜூலு பழங்குடி அறிமுகம்: ஜூலு பழங்குடி என்பது தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய பழங்குடிகளில் ஒன்றாகும். ஜூலு மக்கள், நுகுனி […]

Source

  •  

வேட்டைக்காரன் – ஆன்டன் செகாவ் (தமிழில் தீபக்)

ஒரு சூடான, மூச்சுத் திணறும் நண்பகல். வானத்தில் ஒரு மேகமும் இல்லை… சூரியனால் வாட்டப்பட்ட புல், ஒரு விரக்தியான, நம்பிக்கையற்ற தோற்றத்தைக் கொண்டிருந்தது; மழை பெய்தாலும் அது மீண்டும் பச்சையாக மாறாது போலிருந்தது… காடு அமைதியாக, அசைவில்லாமல் நின்றது. அது தன் மரங்களின் முனைகளால் ஏதோ பார்ப்பதுபோல்—அல்லது ஏதோ எதிர்பார்ப்பதுபோல்—இருந்தது. திறந்தவெளியின் ஓரத்தில், சிவப்பு சட்டை, பிரபுவின் பழைய துண்டுத் துணிகளால் செய்யப்பட்ட கால்சட்டை, மற்றும் உயர்ந்த பூட்ஸ் அணிந்த, நாற்பது வயதுடைய ஒரு உயரமான, குறுகிய […]

Source

  •  

காஷ்மீர் மக்களின் வீடுகளை இடித்துத்தள்ளுவது யாருக்குத் தண்டனை?

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதகுக்குப் பின்னர் நடத்தப்படும் புல்டோசர் இடிப்புகளும், காஷ்மீரில் நிகழ்த்தப்படும் அழிவுகளின் நீண்ட வரலாறும் (1990 முதல் இன்று வரையிலும் இடிக்கப்பட்ட கட்டிடங்களின் தொகுப்புடன்) பஹல்காம் தாக்குதலும் அதனைத் தொடர்ந்த அடக்குமுறையும் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதியன்று துப்பாக்கி ஏந்திய அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளால் பஹல்காமுக்கு மேலிருக்கும் பைசரன் பள்ளத்தாக்கில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அடுத்த சில மணி நேரங்களிலேயே ஏற்கனவே பலமுறை பார்த்துப் பழகிய காட்சிகள் அரங்கேற்றப்பட்டன. காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் […]

Source

  •  

வாடகை வீட்டையும் விட்டுவைக்காத புல்டோசர் இடிப்பாளர்கள் (கட்டுரை – 6)

தமிழில்: காளிமுத்து 2022 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி, ‘கலவரக்காரர்களை’ குறிவைப்பதாகக் கூறிக்கொண்டு, கட்டகேரி பகுதியில் உள்ள இரண்டு வீடுகளை இடிக்க புல்டோசர்களை அனுப்பியது சஹாரன்பூர் மேம்பாட்டு ஆணையம் (SDA). அதற்கு முந்தைய இரவு, வடக்கு உத்தரப் பிரதேசப் பகுதிகளில் கலவரத்தைத் தூண்டியதாகவும், அதை வழிநடத்திச் சென்றதாகவும் பொய்யாகக் குற்றஞ்சாட்டி, பிடி ஆணை கூட இல்லாமல் சட்டவிரோதமாக 17 வயதே ஆன முஸம்மில் சௌத்ரி என்னும் சிறுவன் கைது செய்யப்பட்டான். அச்சிறுவனைக் காவலில் வைத்திருந்தபோது, […]

Source

  •  

மாசாய் பழங்குடி (பழங்குடிகள் தொடர் – 1) – தீபா ஜெயபாலன்

வரலாறு எங்கு இருக்கிறது நேற்றைய செய்தியிலா? இன்றைய நிகழ்விலா? காலம் காலமாக வேரோடு ஓடும் நீரை போல வாழும் வாழ்வியலின் வழி தோன்றலாகவும், வலியை தோளில் சுகமாய் சுமந்து கொண்டு உலகத்தில் உலா வந்து கொண்டு உள்ளது. பூலோகத்தின் பல பகுதிகளில் பல இன குழுக்கள் வாழ்ந்து கொண்டு உள்ளது என்றாலும், எந்த இனத்தின் கைகள் இரும்பு கரமும் உறுதியான மன பிடிப்பும் தன்னகத்தே வைத்து உள்ளதோ, அது அதிகாரத்தைத் தனதாக்கி கொள்ளும் என்பதில் ஐயம் இல்லை.. […]

Source

  •  

தொலைந்து போன நரி (சிறார் கதை) – தீபா சிந்தன்

அகிலா மாஞ்சோலை மலை அடிவாரத்தில் தன் குடும்பத்தோடு வசித்து வந்தாள். அவளது அப்பா தச்சு வேலைகளை செய்யும் தச்சர். அதென்ன தச்சு வேலை? மரப்பலகைகளில் இருந்து கலை பொருட்கள் செய்வதும், கட்டிடங்களுக்குத் தேவையான கதவுகள், ஜன்னல்கள் செய்வதும் அவரது தொழில். அதற்காக மாஞ்சோலை மலை அடிவாரத்தில் குடிசை அமைத்து அவர்கள் வசித்து வந்தனர். அந்த பகுதிக்கு அருகே ஒரு அடர்ந்த வனப் பகுதியை இருந்தது. அந்த மலைக் குன்றில் ஆங்காங்கே ஓரிரு வீடுகள் இருந்தன. அக்கம் பக்கத்தில் […]

Source

  •  

மாறிவரும் பாடத்திட்டங்களும் மாறாத தேர்வுமுறைகளும்!!

மாணவர்களிடம் சென்று சேர்ந்த பாடக் கருத்துக்கள் எந்த அளவுக்கு அவர்களது மனதில் ஆழமாகப் பதிந்துள்ளன?  மாணவர்களின் கற்றல் திறன் எவ்வாறு உள்ளது?! என்பனவற்றை மதிப்பீடு செய்வதற்கே மதிப்பீட்டு முறைகள் உருவாக்கப்படுகின்றன. கல்வியில் நவீனமயமாக்கம் கல்விக் கொள்கைகள் மாறிவரும் சமூகச் சூழலுக்கு ஏற்ப அவ்வப்போது மாற்றம் கண்டு வருகின்றன. கல்விக் கொள்கைகள் மாற்றம் அடையும்போது, அதற்கு ஏற்றாற்போல் கலைத்திட்டமும் நவீனமாகி வருகிறது.  கலைத்திட்டத்தில் வந்து சேரும் புதியபுதிய கலை அறிவியல் கருத்துக்கள் அனைத்தையும் மாணவர்களின் பருவத்திற்கு ஏற்றவாறு வழங்குவதற்கு […]

Source

  •  

குடும்பத்தினர் வீட்டினுள் இருக்கையிலேயே முகமது பிலாலின் வீடு இடிக்கப்பட்டது (கட்டுரை – 5)

தமிழில்: சேதுசிவன் வெறுமனே ஒரு கட்டிடமாக இருந்த இதனை, எங்களுக்குப் பாதுகாப்பு உணர்வைத் தரும் சொந்த வீடாக மாற்றுவதிலேயே எங்கள் முழு வாழ்க்கையும் கழிந்து விட்டது – முகமது பிலால் வடமேற்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள சஹாரன்பூர் என்ற நகரம், மரத்தினால் செய்யப்படும் கைவினைப் பொருட்களுக்குப் பெயர்பெற்ற ஊராகும். அங்குள்ள கட்டகேரி பகுதியின் மிகச்சிறிய தெருக்களில் மரப்பொருட்கள் செய்யும் மரப்பட்டறைகள் வரிசையாக அமைந்திருக்கும். மரம் இழைக்கும் சத்தமும், உளியின் ஓசையும், மரங்களை அறுக்கும் ஒலியும் காற்றில் எங்கும் நிறைந்திருக்கும். […]

Source

  •  

பகிரப்படாத அறிவு கரைந்து காணாமல் போகும்… -பி.அம்பேத்கர்

தமிழில்: வெ. ஸ்ரீஹரன் ஒப்பீட்டளவில் ஒரு சிறிய நிறுவனத்தால் தொடங்கப்பட்ட ‘டீப் சீக்’ (DeepSeek), அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு  அடிப்படையிலான தொழில்நுட்பத் துறையுடன் இணைக்கப்பட்ட பங்குச் சந்தைகளை ஆட்டம் காணச் செய்தது. டீப் சீக் செயலி  விரைவாக ஆப்பிளின் ஏப் ஸ்டோரில் அதிகளவு பதிவிறக்கம் செய்யப்பட்ட செயற்கை நுண்ணறிவு செயலிகளின் பட்டியலில் முதலிடம் பிடித்தது. அதன் தொடர்ச்சியாக, டீப் சீக் செயலியின் வளர்ச்சியை நிர்வகித்த சில கொள்கைகளான ‘பொதுமை அறிவு’ (Knowledge Commons) மற்றும் ‘திறந்த-மூலம்’ (Open-Source) […]

Source

  •