Reading view

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 35

சேவல் கூவும் சத்தம் கேட்டும் தன்னவளை விட்டு விலக மனமில்லாமல் அணைத்துக்கொண்டே படுத்திருந்தான். இருவரின் கண்களும் தூக்கத்திற்கு கெஞ்சியது சில நொடிகள் முன்னே கூடல் முடிந்து அவன் மார்பில் படுத்திருந்தவள் உறக்கத்தை தழுவியிருந்தாள்.

நதியாவை விட்டு பிரிய மனமில்லாமல் அவளின் தூக்கம் கலையாமல் தலையணையில் படுக்க வைத்துவிட்டு கீழே கிடந்த துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு குளிக்கச் சென்றான். அவனது முதுகில் தண்ணீர் படவும் அவள் நகம் பட்ட இடமெல்லாம் எரிந்தது.

“இராட்சசி எப்படி கீறி விட்டிருக்கா பாரு” என்று காதல் மனைவியை வசைப்பாடிக்கொண்டு குளித்து வெளியே வந்த போது நதியா மீன்குஞ்சு போல இதழ் பிளந்து உறங்குவதை கண்டு மென்நகை புரிந்தவன் வேஷ்டியை கட்டிக்கொண்டு கதவு திறந்து வெளியே போனவன் அதிர்ச்சியில் கண்ணை விரித்தான்.

ராயன் காரில் சாய்ந்து நின்றான். மாட்டுப் பண்ணையிலிருந்து ஆட்களை அழைத்து வந்திருப்பான் போலும் பால்கறந்து முடித்து கேனில் நிரப்பி வைத்திருந்தனர். கோவிந்தன் கணக்கு நோட்டில் பால் அளவுகளை எழுதிக்கொண்டிருந்தான்.

“என்ன அதுக்குள்ள எழுந்துட்ட ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடிட்டு டயர்ட்ல தூங்கியிருப்பனு நினைச்சு உனக்கு உதவி பண்ண வந்தேன்டா” என்று கொட்டாவி விட்டு தலைக்கு மேல் கையை தூக்கினான் ராயன்.

“என் மேல உனக்கு இத்தனை பாசமாடா மச்சான்” என்று ஓடிவந்து அணைத்துக்கொண்டான் பாலாஜி.

“என்னடா பண்ணறது தங்கச்சியை உனக்கு கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கேன் தங்கச்சி சந்தோசமா இருக்கணும்ல அதுக்காகத்தான்” என்றான் உதட்டு மடிப்பு சிரிப்புடன்.

“டேய் நீ இருக்கியே” என்று அவன் தோளில் போலியாக அடித்தான் பாலாஜி. பால்காரர்கள் வரவும் அவர்களுக்கு பாலை சப்ளை செய்து விட்டு ராயன் பக்கம் வந்தவன் “வாடா டீ குடிச்சிட்டு போகலாம்” என ராயனின் கையை பிடித்தான்.

“உன் கையால டீ குடிச்சு ரொம்ப நாள் ஆச்சு வரேன்டா” என்று நண்பனுடன் வீட்டுக்குள் நுழைந்தான்.

குளித்து விட்டு வெளியே வந்த நதியாவோ ராயனை கண்டதும் “அண்ணா எப்போ வந்தீங்க?” என்று ராயனின் கையை பிடித்துக்கொண்டாள்.

“இந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன்மா நம்ம மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு அழைப்பு சொல்லிட்டு போயிடலாம்னு வந்தேன்டா இரண்டு பேரும் நேரமே வந்துடணும் இந்த முறை மாவிளக்கு மட்டும்தான் குழந்தை பிறந்ததும் கிடா வெட்டிக்கலாம்” என்றவனிடம்

“நான் நம்ம வீட்டுக்கு வந்தா அம்மா முகத்தை தூக்கி வச்சிப்பாங்க அண்ணா நான் கோவிலுக்கு மட்டும் வரேன்”

“நீ இந்த முறை வரும்போது அம்மா உங்களை வரவேற்பாங்க பாரேன்” என்று தங்கையை சமாதானம் செய்ய பார்த்தான்.

“அது நடக்காது அண்ணா இருங்க காபி போட்டு கொண்டு வரேன்” என்று சமையல்கட்டுக்குள் சென்றுவிட்டாள்.

காபியுடன் வந்த நதியாவை கண்ணெடுக்காமல் பார்த்தான் ராயன்.

“என்ன அண்ணா அப்படி பார்க்குறீங்க என்னடா இவ சமையல்கட்டு பக்கம் கூட போனதில்லை எப்படி காபி போடுறானா எல்லாம் உங்க மாப்பிள்ளை சொல்லிக்கொடுத்தாரு அண்ணா” என்றாள் பாலாஜியை ஓரக்கண்ணால் பார்த்தபடியே.

காபியை வாங்கி குடித்த ராயனோ “காபி சூப்பர் பாப்பா” என்றவனோ “டேய் மச்சான் நீ போடுற காபியை விட என் தங்கச்சி பிரமாதமா காபி போட்டிருக்கா” என்று கண்ணைச்சிமிட்டி சிரித்தான்.

அவனோ “உன் தங்கச்சிக்கு காபி போட சொல்லிக்கொடுக்கறதுக்குள்ள நான் பட்ட கஷ்டம் எனக்குத்தானே தெரியும்” என்றான் சலிப்பாக.

“அண்ணா சாப்பிட்டுத்தான் போகணும்” என்றாள் பிடிவாதமாக.

“இல்லம்மா முல்லையை ஹாஸ்பிட்டல் செக்கப் அழைச்சிட்டு போகணும் நான் கிளம்புறேன் மாப்பிள்ளை திருவிழாவுக்கு நேரமே வந்துடு” என்று பாலாஜியின் தோளை தட்டிவிட்டு “பாப்பா போய்ட்டு வரேன்” என்று கிளம்பிவிட்டான்.

தீபாவிற்கு வாமிட் அதிகம் இல்லை. அமுதாவிற்கு காய்கறிகள் நறுக்கிக்கொடுத்துவிடுவாள். பணக்காரி என்று திமிர்தனம் அவளை விட்டு காணாமல் போயிருந்தது. தோட்ட வேலைக்காரர்களிடம் சுள்லென்று விழுவதில்லை. கண்ணன் தன் மனைவியா இவள் என்று ஆச்சரியப்படும் அளவிற்கு மாறிவிட்டாள் தீபா.

கோமளமோ பிறக்க போகும் பேரன் சிவப்பாக பிறக்கவேண்டுமென இரவில் தீபாவுக்கு பாலில் குங்குமப் பூவை கலந்து கொடுத்தார்.

“என்னம்மா உங்க மருமகளுக்கு மட்டும் ஸ்பெஷலா பாலுல குங்குமப் பூ போட்டு கொடுக்குறீங்க எனக்கு இல்லையா?” என்றவனிடம்

“பையன் உன்னை போல கருப்பா பொறந்துட்டா அதான் குங்குமப்பூ கலந்து கொடுக்குறேன் என் பேரன் சிவப்பா பிறக்கட்டும்னு” என பெரும்மூச்சு விட்டார்.

“ஏன்மா பொண்ணு பொறந்தா ஏத்துக்க மாட்டீங்களா! எனக்கு பொண்ணு மேலதான் பிரியம்” என்றவனை

“வாயை பினாயில் போட்டு கழுவுடா அறிவுக்கெட்டவனே! உனக்கு பையன் பிறப்பான் ராயனுக்கு பொண்ணு பிறக்கும் நான் சொல்றது சத்தியவாக்கு மகனே” என்றார் அழுத்தமாக வார்த்தைகளுடன்.

தையல்நாயகியும் அழகம்மையும் சிரித்துக்கொண்டனர்.

“என்னங்கடி ரெண்டு பேரும் சிரிக்குறீங்க நான் சொல்றதுதான் நடக்கும்” என்றார் தெனாவெட்டாக.

அழகம்மையோ “புள்ளைபேரும் மழைபேரும் மகாதேவனுக்கு கூட தெரியாதாம் அண்ணி” என்றார் ராகமாக.

“பார்க்கலாம்டி” என்று முந்தானையை உதறிவிட்டுச் சென்றார்.

தென்னரசுவோ ஆர்கானிக் தோட்டத்தை பெரிதளவில் உருவாக்கி விட்டான். காய்கறிகள் வெளியூர்களுக்கு சப்ளை பண்ண திட்டம் போட்டிருந்தான். ஆர்டர்களும் குவிந்து விட்டது. பிஸினஸ்மேன் ஆகிவிட்டான் தென்னரசு.

பூங்கொடி மறுபடியும் கர்ப்பம் தரித்து விட்டாள்.

நீலகண்டனும் அழகம்மையும் மகளை பார்த்துவிட்டு “நீ வேணா நம்ம வீட்டுல வந்து இரேன்டி” என்றார் அழகம்மை.

“அத்தை இருக்காங்க பார்த்துப்பாங்க. அரசிக்கிட்டயும் தியா நல்லா ஒட்டிக்கிட்டாமா எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல நான் சந்தோசமாக இருக்கேன்” என்றாள் மலர்ந்த முகத்துடன்.

முல்லைக்கு ஒன்பதாம் மாதம் தொடங்கியது.

முல்லையால் வயிற்றை தூக்கிக் கொண்டு நடக்கவே முடியவில்லை.

“கோமளம் அண்ணி சொன்னது போலவே பொண்ணாத்தான் இருக்கும் போலங்க” என்றார் அழகம்மை நீலகண்டனிடம்.

“என்ன குழந்தையா இருந்தா என்னடி நல்ல விதமா தாயும் பிள்ளையும் வந்தா போதும்” என்று அங்கலாய்த்தார் நீலகண்டன்.

“நீங்க சொல்றது சரிதான்ங்க” என பெரும்மூச்சு விட்டார் அழகம்மை.

“அழகு பூங்கொடி ஏழுமாசத்துலதான் நம்ம வீட்டுக்கு வந்தா ஆனா முல்லை கரு உண்டானது முதல் இப்ப வரை உன்கூடவே வச்சு பார்த்துக்கிற உன் மனசு தங்கம்டி நீ பொண்டாட்டியா கிடைக்க நான் தவன் பண்ணியிருக்கணும்டி” என்று அழகம்மையின் கையை பிடித்துக்கொண்டார் நீலகண்டன்.

“எனக்கு எல்லாம் தெரியும்ங்க” என்றதும் ஒரு நிமிசம் ஆடிப்போனார் நீலகண்டன்.

“என்ன அப்படி பார்க்குறீங்க நம்ம அமுதாவோட வீட்டுக்காரன் குழந்தை உருவானதும் வியாபாரத்துக்கு போனவரு திரும்பி வரவேயில்லையாம்ங்க அவனெல்லாம் மனுசனாங்க அமுதாவை பார்க்கும்போது பாவமாய் இருக்கு… நம்ம முல்லைக்கு அப்பா இல்லைங்கற வருத்தம் வரவே கூடாது அதான் நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துட்டேன் உங்களையும் அப்பானு கூப்பிட அனுமதி கொடுத்தேன்” என்றார் நெகிழ்ச்சியாக.

“ஆமாடி அமுதாவை பாதியில விட்டுப்போனவன் மனுசன் கிடையாது” என்றவருக்கு மனதில் பாரம் ஏறியது.

“அப்பா இடுப்பு வலிக்குது மச்சானை வரச்சொல்லுங்க” என்று வயிற்றை பிடித்துக்கொண்டு நடக்க முடியாமல் வந்தாள் முல்லை.

“இன்னும் நாள் இருக்கு முல்லை இது பொய் வலி கசாயம் வச்சு தரேன் குடி வலி நின்னுடும்” என்று அவளின் கையை பிடித்து நீலகண்டன் பக்கத்தில் உட்கார வைத்து “புள்ளையை பார்த்துக்கோங்க” என்று ஜாடை காண்பித்துச் சென்றார்.

“அப்பா அமுதா அம்மாவை விட அழகு அம்மா என்னை ரெண்டு மடங்கு பார்த்துக்குறாங்கப்பா இவங்க கிட்ட உண்மையை மறைக்கிறோம்னு குற்ற உணர்வா இருக்கு” என்றாள் தந்தையின் தோளில் சாய்ந்துக் கொண்டு.

“சில உண்மைகளை இரகசியமா வச்சிருக்கறதுல தப்பில்லடா கொஞ்ச நாள் முன்னாடி உண்மை தெரிஞ்ச உனக்கே இவ்ளோ கஷ்டம்னா என்னைய நினைச்சி பாரு கண்ணு நானெல்லாம் பாவம் செய்த மனுசன் எனக்கெல்லாம் நரகம்தான் கிடைக்கும்டா” என்றவரின் குரலில் அத்தனை வலி இருந்தது.

“நீங்க வேணும்னு எதையும் பண்ணலையேப்பா விடுங்க” அழகம்மையின் தலை தெரிந்ததும் இருவரும் அமைதியாகி விட்டனர்.

“இந்த கசாயத்தை குடிமா” என்று முல்லையிடம் கசாயத்தை கொடுத்தார். கசாயத்தை குடித்ததும் கொஞ்ச நேரத்தில் அவளுக்கு வலி குறைந்திருந்து.

தையல்நாயகியோ இரவு ராயன் சாப்பிடும் நேரம் “ராயா திருவிழாவுக்கு நம்ம நதியா பாப்பாவுக்கு அழைப்பு சொல்லிட்டதானே?” என்றபடியே தோசையை தட்டில் வைத்தார்.

கோமளமோ “அவளுக்கு அழைப்பு சொல்லலைனு யார் அழுதாங்க அன்னிக்கு சும்மா அழுது கரைஞ்சு நகையை ஆட்டைய போட்டுட்டு போய்ட்டா இப்ப திருவிழாவுக்கு வந்தானா சும்மாவா போகப்போறா இல்ல நீங்கதான் அவளுக்கு சீர் கொடுக்காம அனுப்ப போறீங்களா!” என்றார் இழுவையாக.

“ஒத்த தங்கச்சியை வச்சிருக்கோம் அவளுக்கு நியாயமா சேர வேண்டியதை கொடுத்துடணும் இல்லனா அண்ணனுங்களுக்குத்தான் தோஷம் வருமாம் பெரியம்மா… நம்ம வீட்டு மருமகளுங்க ரெண்டு பேரும் மாசமா இருக்காங்க பிறக்க போற குழந்தைகளும் தோஷத்துல பிறக்கணுமா?” என சாப்பிட்டு முடித்து தட்டில் கை கழுவியவன் கோமளத்தின் பக்கம் வந்து உட்கார்ந்தான்.

“நான் இதை யோசிக்காம போயிட்டேன் ராயா அவளுக்கு கொடுக்க வேண்டிய பங்கை திருவிழா முடிஞ்சு போற அன்னிக்கு கொடுத்திறலாம் நம்ம பேரன்களுக்கு தோஷம் வரவேணாம்” என்றார் அச்சத்துடனே.

கோமளம் தன் மகன் வயிற்று பேரப்பிள்ளைக்குதான் மரியாதை கிடைக்கணும் பின் வரும் சந்ததியர் தன் பேரனை வழி தொடரணும்னு என்று சுயநலமாக ஆசைப்பட்டாரே தவிர மொத்த குடும்பத்துக்கு சாபம் வந்துவிடுமென்று அவர் யோசிக்கவில்லை.

“நீங்க சொன்னா அப்பீல் இல்லை பெரியம்மா நதியா பாப்பாவுக்கு என்ன என்ன கொடுக்கணும்னு நானே முடிவு எடுக்கட்டுமா இல்ல நீங்க முடிவு பண்ணி வச்சிருக்கீங்களா?” என்றான் கோமளத்தின் முகத்தை ஆழ்ந்து பார்த்தான்.

“நீ உன் தங்கச்சிக்கு என்ன கொடுக்கணும்னு முடிவு பண்ணி வச்சிருப்பியே என்கிட்ட சும்மா ஒப்புக்குத்தான் கேட்ப உன் மனசுக்கு என்ன படுதோ அதை பண்ணிடு” எழுந்து சாப்பிடச் சென்றார் கோமளம்.

ராயன் சாப்பிட்டு நீலகண்டன் வீட்டு கேட்டை திறந்து உள்ளே போக முல்லையோ வயிற்றை பிடித்துக்கொண்டு போர்ட்டிக்கோவில் நடந்துக் கொண்டிருந்தாள்.

“என்ன புள்ள வாக்கிங்கா?”

“ஆமா நார்மல் டெலிவரி ஆகணும்னா நடக்கணும்னு டாக்டர் சொன்னது மறந்துட்டீங்களா மச்சான்” என்று நடக்கும் போது பேசமுடியாமல் மூச்சு வாங்கினாள்.

“புள்ள நின்னு பேசு” அவளது கையை பிடித்து நாற்காலியில் உட்கார வைத்தான்.

“நான் நடக்கணும் விடுங்க மச்சான்” என்று சிணுங்கியவளின் கையை விட்டு “போடி” என்று முகத்தை உர்ரென்று வைத்தான்.

“அச்சோ மச்சானுக்கு ரொம்பதான் கோபம் வருது” என்று அவனது மீசையை பிடித்து இழுத்து யாரும் இருக்கிறார்களா என்று சுற்றி பார்த்துவிட்டு ராயனின் கன்னத்தில் முத்தம் கொடுத்தவள் “இதுக்குதானே என்னை உட்கார வச்சீங்க மச்சான்” அவனது தோளில் சாய்ந்தாள்.

அவள் எங்கே தடுமாறி விழுந்துவிடுவாளோ என்று அச்சத்தில் அவளை தன் கை வளைவில் நிறுத்தி வைத்து “உன் அறைக்குள் வந்தாவே அழகு அத்தை ராயா வெளிய வானு மிரட்டுறாங்க என் பொண்டாட்டிக்கிட்ட ஒரு முத்தம் கூட வாங்க முடியலை” என்றான் வருத்தமாக.

“நமக்குள்ள ஏதாவது கசமுசா நடந்து எனக்கு ஆபத்து வந்துடும்னு பயப்படுறாங்க அழகு அம்மா” என்றாள் முல்லை நமட்டுச் சிரிப்புடன்.

“ஏன் டி எனக்கு என் பொண்டாட்டி மேல அக்கறை இல்லையா பார்த்து நடந்துக்க மாட்டேனா மாமியார்னாவே கொடுமைக்காரவங்களா இருக்காங்க நம்ம அறையில உன்கூட வந்து படுத்துக்குறாங்க நான் சோபாவுல படுத்துக்குறேன் என் மேல நம்பிக்கை இல்லையாடி” என்று பொருமினான் ராயன்.

“ஆமாடா நான் கொடுமைக்காரி தான்” என்று இடுப்பில் கையை வைத்து நின்றார் ராயன் முன்னே.

“அ.அத்தை நா.நான் சும்மா விளையாடினேன்” என்று மழுப்பினான்.

“சரி சரி மாசமா இருக்கற புள்ள ரொம்ப நேரம் முழிச்சிருக்க கூடாது போய் நீ படு முல்லை” என்றார் அதிகாரமாக.

“என் பொண்டாட்டியை என்னை விட்டு துரத்துறதுலயே குறியா இருக்காங்கப்பா” என்று சடைத்துக் கொண்டான்.

முல்லையோ “நான் தூங்கப்போறேன் மச்சான்” என்று அறைக்குள் சென்றாள்.

ராயனும் முல்லையின் பின்னே செல்ல “டேய் டேய் நில்லுடா நானும் வரேன்” என்று மருமகனின் பின்னால் சென்றார் அழகு.

“மாமா எல்லாம் என்னை மாப்பிள்ளைனு மரியாதை கொடுத்து பேசுறாங்க நீ என்னடானா மருமகனை வாடா போடா ராயானு பேசுற அத்தை” என்று அழகம்மையை முறைத்தான்.

“நான் தூக்கி வளர்த்த பையன் நீ! உன்னை வாங்க போங்கனு கூப்பிடணுமா நான் முல்லை அறைக்குள்ள போகாம நீ போகக்கூடாது சோபாவுல உங்க மாமா கூட உட்கார்ந்து டிவி பாரு நான் அடுப்படியை சுத்தம் பண்ணிட்டு வந்துடறேன்” என்று ராயனுக்கு கட்டளை போட்டுச் சென்றார்.

நீலகண்டனோ “மாப்பிள்ளை நீங்க உள்ள போங்க உங்க அத்தை வந்து கேட்டா உனக்கு தூக்கம் வருதுனு போய்ட்டனு சொல்லிடறேன்” என்று கண்ணைச் சிமிட்டினார்.

“தேங்க்ஸ் மாமா” என்று அடுத்த நொடி முல்லையின் அறைக்குள் இருந்தான்.

“அச்சோ மச்சான் அழகு அம்மா வரதுக்குள்ள நீங்க ஏன் வந்தீங்க திட்டப்போறாங்க முதல் நாள் உங்களை தெரியாம உள்ளே விட்டு எனக்கு அடுத்தநாள் இடுப்பு வலி வந்துடுச்சுல அதான் உங்களை உள்ள விட பயப்படுறாங்க ஆனா எனக்கு உங்க மேல சாய்ஞ்சு படுத்துக்கணும்னு இருக்கு” என்றாள் முகத்தை அப்பாவி பெண் போல வைத்து.

“அவ்ளோதானே புள்ள என் நெஞ்சுல தான் நீ தூங்கப்போற ஒரு நிமிசம் இரு வரேன்” என்று ஹாலுக்குச் சென்றவன் “மாமா அத்தையை உள்ளே வரவிடாம பார்த்துக்கோங்க என் பொண்டாட்டி கூட தனியா இருக்கணும் எனக்கு உதவி பண்ணுவீங்களா?”

“நீ போ மாப்பிள்ளை உங்கத்தை கிடக்குறா ஆனா பார்த்து இருக்கணும் முல்லைக்கு நிறைமாசம் கவனம்பா” என்று அழுத்தி கூறவும்

“என் மேல நம்பிக்கை இல்லையா மாமா?”

“உன் மேல நம்பிக்கை இல்லாமலா போயா உங்கத்தை வர்றதுக்குள்ள” என்றார் சமையல்கட்டை பார்த்துக்கொண்டே.

ராயனோ முல்லையின் அறைக்குள் வந்து கதவை அடைத்து ஒரு எட்டில் கட்டிலில் ஏறி அமர்ந்து முல்லையை தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டான்.

முல்லையோ நெஞ்சில் சாய்ந்ததும் “மச்சான் பிரசவத்துல வலிக்குமாமே எனக்கு பயமா இருக்கு” என்றாள் அவனது நெஞ்சில் சுருள் முடியை விரலால் சுருட்டிக்கொண்டே.

“வலியில்லாம புள்ள பிறக்காதுடி அந்த நேரம் என்னை நினைச்சுக்கோ உனக்கு வலியே வராது புள்ள” என்றான் அவளது நெற்றியில் முத்தம் கொடுத்து.

“மச்சான் பிரசவ அறைக்குள்ள நீங்க வந்துடுங்களேன் நீங்க பக்கம் இருந்தா எனக்கு வலி இருக்காதுல” என்றவளின் முகத்தில் பயத்தின் சாயல் தெரிந்தது.

“கண்டிப்பா நான் உன்கூட இருக்கேன் புள்ள தூங்கு” என்று மனைவியின் தலையை வருடிக்கொடுக்க உறங்கிவிட்டாள் முல்லை.

அழகம்மையோ சமையல்கட்டை சுத்தம் செய்து விட்டு பூங்கொடிக்கு போன் போட்டார்.

“என்னம்மா இந்த நேரம் போன் போட்டிருக்க என் ஞாபகம் எல்லாம் இருக்கா?” என்று கிண்டலாக பேசினாள் பூங்கொடி.

“என்னடி இப்படி கேட்டுபுட்ட மாசமா இருக்காளே புள்ள எப்படி இருக்கானு ஒரு ரெண்டு வார்த்தை ஆசையா பேசலாம்னு போன் போட்டேன் பொசுக்குனு உன் ஞாபகம் எப்படி வந்துச்சுனு கேட்ப இதுதான் பெத்த மனசு பித்து பிள்ளை மனசு கல்லுனு சொல்லுவாங்க” என்றார் புலம்பலாக.

“ம்மா நான் சும்மா ஏதோ சொன்னேன்மா உன்கிட்ட வம்பிழுக்கலாம்னு என்னை கவனிக்க குமுதா அத்தை அரசி உங்க மருமகன் எல்லாரும் இருக்காங்க எனக்கு என்ன கவலை நான் ராணி போல இருக்கேன்” என்றாள் சந்தோசமாக.

“நீ பேசறதை வச்சே நான் கண்டுபிடிச்சிட்டேன்டி நேரம் நேரத்துக்கு சாப்பிடு குமுதா அம்மா இருக்காங்கனு தியாவை அவங்க கிட்ட கொடுத்துட்டு தூங்காதே அப்படியே வீட்டுக்குள்ள சின்ன சின்ன வேலையெல்லாம் பார்த்துக்கிட்டே இருடி” என்றார் மகள் மேல் உள்ள அக்கறையில்.

“சரிமா நான் பார்த்துக்குறேன் முல்லையை கவனிச்சிக்கோங்க” என்று போனை வைக்கபோனவளை “ஒரு நிமிசம் இருடி நான் இன்னும் பேசி முடிக்கலை” என்றவரோ “திருவிழாவுக்கு நேரமே வந்துடு நேர்ல வந்து அழைப்பு சொல்லலைனு நினைக்காதே” என்றவுடன்

“அட அப்பா நேத்து மதியம் வீட்டுக்கு திருவிழாவுக்கு நேரமே வந்துடணும்னு அழைப்பு சொல்லிட்டு போனாரு. ராயன் மாமா போன் போட்டு கண்டிப்பா திருவிழாவுக்கு குடும்பத்தோட வரணும்னு சொல்லியிருக்காருமா நான் திருவிழாவுக்கு வராம இருப்பேனா?”

“வாடி வாடி எல்லாம் குடும்பமா சந்தோசமா இந்த திருவிழாவை கொண்டாடுவோம்” என்று மனநிறைவுடன் போனை வைத்தார் அழகு.

ஹாலுக்குச் சென்ற அழகுவோ முல்லை அறைக்கதவு மூடியிருப்பதை கண்டு “இவன் வேலையை காட்டிட்டான் பாரு… டேய் ராயா கதவை திற” என்று சத்தம் போட்டு கதவின் பக்கம் போனவரின் கையை பிடித்துக்கொண்ட நீலகண்டனோ “புருசன் பொண்டாட்டி அறைக்கதவை தட்டுறியே உனக்கு இங்கிதம் இருக்காடி” என்று சண்டைக்கு வந்தார் நீலகண்டன்.

“அட நீங்க வேற முதல் நாள் முல்லை அறைக்குள் ராயன் போய்ட்டு வந்ததுனால அடுத்தநாள் முல்லைக்கு இடுப்பு வலி வந்துடுச்சு இவன் முரட்டு ஆளு அந்த பொண்ணு தாங்கணும்ல உங்களை யாரு அவனை உள்ளே விடச்சொன்னது” என்று நீலகண்டனை முறைத்தார் அழகு.

“அட விடுமா ராயன் பார்த்துப்பான் வா நாம தூங்கலாம்” என்று மனைவியின் கையை பிடித்துக்கொண்டு அறைக்குச் சென்றுவிட்டார்.

பாலாஜியோ வேக வேமாக மாடுகளுக்கு தீவனம் காட்டி முடித்து வீட்டுக்குள் சென்றான். நதியாவோ குளித்து விட்டு நைட்டியில் பவுடர் அடித்துக்கொண்டிருந்தவளை கண்டவனோ “நைட்டுக்கு ரெடியாகிட்ட போல சும்மா கும்முனு இருக்கடி உருண்டை” என்று அவளது கழுத்தில் முகம் புதைத்தான்.

“உருண்டைனு கூப்பிடாதீங்க மாமா” என்றாள் அவனை முறைத்து.

“அப்படித்தான் கூப்பிடுவேன் உருண்டை” என்று அவளது நைட்டியின் பட்டன்களை விடுவித்தான்.

“அச்சோ இப்ப கொஞ்ச நேரம் பேசலாம்”

“என்னத்த பேசறது வாயும் கையும்தான் பேசணும் வாடி” என்று நதியாவை தூக்கி கட்டிலில் போட்டு லைட்டை அணைத்தவன் நதியாவையும் அணைத்தான் பாலாஜி.

“கொஞ்சம் கூட பொறுமை இல்லையா மாமா நேத்து நைட் கடிச்சு வச்சி சிவந்து போச்சு” என்று காயப்பட்ட இடத்தை காண்பித்தாள்.

“நீயும்தான் கடிச்சிருக்க இங்க பாருடி காலையில உன் அண்ணன் என் கழுத்தை உத்து உத்து பார்க்குறான் எனக்கு வெட்கம் வந்து சட்டை காலரை இழுத்து விட்டுக்கிட்டேன்” என்றவனோ அவளை பேச விடாது இதழில் மூழ்கினான்.

கொஞ்ச நேரத்தில் நைட்டியும் அவனது லுங்கியும் ஒரு ஓரமாய் கிடந்தது. அவனது இதழ்களும் கைகளும் அவளது மேனியில் நாட்டியம் ஆடிக்கொண்டே இருந்தது. “இன்னிக்கு இப்படி” என்று அவளது காதில் ஏதோ இரகசியம் பேச “அய்யே சீ போடா நான் மாட்டேன்” என்றவளை “ஏய் ஏய் நதி ப்ளீஸ்டி” என்று அவன் கேட்டதை வாங்கிக்கொண்டே விட்டான். பெண்மையை மலர வைத்தான்.

  •  

என் இனிய ராட்சஷனே 17,18

அத்தியாயம் 17

 

சின்னப்பொண்ணு இளமதியின் கையை பிடித்து இழுத்து செல்ல 

“என் கையை விடு மா இந்த கிழிவியை இன்னைக்கு நான் உண்டு இல்லைன்னு ஆக்காம விட மாட்டேன்” என்று சிவகாமியை முறைத்துக் கொண்டே கூற “என்ன டி பண்ணுவ என்ன பண்ணுவ என் மகனுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான் உன்னை இந்த வீட்டை விட்டே வெளியே துரத்திடுவான்” என்று எகிறி கொண்டே சிவகாமி அவள் அருகில் கோபத்துடனே வர. 

 

“கூப்பிடுங்க உங்க மகனை இன்னைக்கு என்ன பண்றாருன்னு பார்ப்போம்” என்றாள் அவளும் அவருக்கு சற்றும் குறையாத கோபத்துடன் தைரியமாக “மதி நீ இப்போ உள்ளே வர போறியா இல்லையா” என்று சின்னப்பொண்ணு கோபத்துடன் கூறியவர் அவளின் கைப்பிடித்து இழுக்க சிவகாமியை முறைத்துக் கொண்டே உள்ளே சென்றாள் இளமதி. 

 

அறையின் உள்ளே வந்த இளமதி கோபத்துடன் படுக்கையில் அமர்ந்திருக்க “உனக்கு எதுக்கு இவ்வளவு கோபம் வருது பெரியவங்க பேசுனா நீயும் கூட கூட பேசுவியா சொல்லு டி” என்றார் கோபத்துடன் அவர். 

 

“அம்மா அந்த கிழவி பேசுனது எல்லாம் சரியா நீ என்னை மட்டும் கன்ட்ரோல் பண்ற” என்க அவள் அருகில் வந்து அமர்ந்த சின்னப்பொண்ணு “மதி மா நாம இந்த வீட்ல இருக்க வர அவங்களுக்கு அடங்கி தான் ஆகனும்” என்று கூறும் போதே அவரின் கண்கள் கலங்கியது. 

 

“அம்மா நாம இனிமே இந்த வீட்ல இருக்க தேவையில்லை” என்ற இளமதி தன் பையில் இருந்த அப்பாயின்ட்மென்ட் லெட்டரை எடுத்து அவர் கையில் கொடுத்தாள் “அம்மா எனக்கு வேலை கிடைச்சிருக்கு அதுவும் பெரிய ஐடி கம்பெனில மாசம் முப்பதாயிரம் சம்பளம்” என்றாள் மகிழ்ச்சியுடன். 

 

சின்னப்பொண்ணு ஒரு நிமிடம் அந்த பேப்பரை தன் கையில் வைத்து பார்த்து கண்ணீர் விட்டார் அடுத்த நிமிடம் 

“நீ என் தம்பி கூட வாழ வேண்டாமா உன் வாழ்க்கை என்ன ஆகும்” என்று கேட்க

“மா என் வாழ்க்கைக்கும் நான் வேலைக்கு போறதுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு” என்று அவள் கேட்க. 

 

“சம்மந்தம் இருக்கு நீ இங்கே இருந்து போய்ட்டா நந்தினியை கருப்பனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க 

நீங்க ரெண்டு பேரும் இன்னும் சேர்ந்து கூட வாழ ஆரம்பிக்கல”

 

“அம்மா மாமா அக்காவை கல்யாணம் பண்ண சம்மதிக்க மாட்டாரு” என்றாள் 

இவள் மிகவும் தைரியமாகவும் உறுதியாகவும் “உனக்கு எப்படி இவ்வளவு தைரியம் ஒரு நாளாவது அவன் குடும்பம் நடத்திருக்கியா உன் வாழ்க்கை என்ன ஆகும்” என்றார் பயத்துடன். 

 

“மா நாங்க ஒன்னா வாழலைன்னு யார் சொன்னா” என்றாள் அவள் அவரின் முகம் பார்க்காமல் 

“என்ன சொல்ற மதி” என்று அவர் ஆச்சரியம் அதிர்ச்சி கலந்த குரலில் கேட்க 

“அம்மா நாங்க வாழ ஆரம்பிச்சிட்டோம் அவரு கண்டிப்பா அக்காவை கல்யாணம் பண்ணிக்க மாட்டாரு இதுக்கு மேல என் கிட்ட எதுவும் கேட்க்காத” என்று அவள் சொல்லும் போதே அவளின் முகம் சிவந்து போனது அவளால் தாயின் முகம் பார்க்க முடியவில்லை எழுந்து வெளியே சென்றுவிட்டாள். 

 

சின்னப்பொண்ணுவுக்கு அனைத்தும் புரிவதை போல் இருந்தது அவருக்கும் இப்போது தான் கொஞ்சமே கொஞ்சம் நிம்மதியாகவும் இருந்தது. 

 

இளமதி அங்கிருந்து வெளியே சென்றவள் நேரே தன் மாமனை தேடி ரைஸ் மில்லுக்கு சென்றாள் அவன் அங்கே இல்லை என்றவுடன் மீண்டும் வயலுக்கு தேடிப்போக அங்கே தான் அவன் வேலை செய்து கொண்டு இருந்தான். 

 

அவனை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டே இருந்த மதி அவனுக்காக மரத்தடியில் சென்று அமர்ந்து காத்திருக்க ஆரம்பித்தாள் அவள் மறைவாக அமர்ந்திருக்க கருப்பன் அவளை பார்க்கவில்லை அப்போது வானம் இருட்டிக் கொண்டு மழை வருவதை போல் இருக்க கருப்பன் சீக்கிரமே வேலையாட்களை அனுப்பி வைத்தான். 

 

இறுதியாக கருப்பன் மட்டும் தான் நடந்து வந்து கொண்டிருந்தான் அவன் வருவதற்க்குள் மழை பொழிய ஆரம்பிக்க மா மரத்தின் அடியில் சென்று மழைக்காக ஒதுங்கி நின்றான் மழையை வேடிக்க பார்த்து கொண்டு இருந்தவன் தன் பக்கத்தில் யாரோ ஒரு பெண் நிற்பதை உணர்ந்து திரும்பி பார்க்க அங்கே நின்றிருந்த இளமதியை பார்த்தவனுக்கு கோபம் தலைக்கு மேல் ஏறியது அவளை பார்த்து முறைத்து வைக்க “என்ன மாமா என் மேல கோவமா” என்று கேட்க. 

 

அவனோ கண்டுகொள்ளாமல் மழை என்றும் பாராமல் நடந்து செல்ல “மாமா” என்று கத்திக் கொண்டே இளமதி அவன் பின்னே ஓடியவள் அவனின் கைப்பிடித்து இழுக்க 

சரியாக அவள் சேற்றில் காலை வைத்து விட கால் வழுக்கி விழ நிலைதடுமாறி அவள் விழ போக கருப்பன் அவள் விழுந்து விடாமல் பிடிக்க முயல இருவரும் ஒன்றாக சேர்ந்து கொட்டும் மழையில் சேற்றில் விழுந்தனர். 

 

கருப்பன் கீழே கிடக்க இளமதி அவன் மேலே கிடந்தாள் மழை பயங்கரமாக வெளுத்து கொண்டு இருக்க மின்னல் வேறு வெட்டி கொண்டு இருந்தது. 

 

இளமதி அவன் மேலே எக்கு தப்பாக விழுந்து கிடக்க அவள் தாவணி நழுவி அபாயகரமான பள்ளத்தாக்கு வெளியே தெரிய கருப்பனின் கண்கள் எதார்த்தமாக பார்க்க அவளின் இந்த நிலையை கண்டு வாயடைத்து போனான் ரத்தநாளங்கள் உடனே சுறுசுறுப்பாக ஆரம்பித்தது இரண்டு வார பிரிவு அவனை ஏதோ செய்தது அவன் ஆண்மை விழித்து கொள்ள பார்க்க உடனே அவளை தன்னில் இருந்து விலக்கியவன் தானும் எழுந்து நின்றான். 

 

கருப்பன் வேட்டி சட்டை என்று அனைத்தும் சேறாகி இருக்க இளமதியும் அதே நிலையில் தான் இருந்தாள்

“மாமா என் மேல கோவமா ஏன் என் கிட்ட பேச மாட்டேங்குறிங்க” என்று அவனிடம் கேட்க

“ஆமாம் டி கோவம் தான் பெரிய கலெக்டருக்கு படிக்கிறியா ஒரு நாள் என் கூட இருக்க உனக்கு உடம்பு நோவுது பெரிய இவள் மாதிரி பேசுன இப்போ எதுக்கு என் கிட்ட வந்த” என்றவன் தன் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு 

முன்னே நடந்து சென்றான். 

 

அவன் நடைக்கு இவளால் அவன் பின்னே ஓட தான் முடிந்தது “மாமா மாமா” என்று கத்தி கொண்டே வர அவன் கண்டுகொள்ளவேயில்லை மழை ஒரளவுக்கு குறைந்து விட பம்பு செட்டின் அருகில் சென்றவன் தன் ஆடையை கலைந்துவிட்டு தண்ணீர் தொட்டியில் இறங்கினான். 

 

சேற்றை சுத்தம் செய்ய தண்ணீரில் இறங்க அவன் பின்னே வந்த இளமதி 

‘இப்போ உன்னை என்ன பண்றேன்னு பாரு மாமா’ என்று மனதில் நினைத்தவள் அவளும் தண்ணீர் தொட்டியின் உள்ளே அவனுடன் இறங்கினாள். 

 

“ஏய் என்ன டி பண்ற” என்று கருப்பன் 

கத்த “உடம்பெல்லாம் ஒரே சேறா இருக்கு மாமா அதை சுத்தம் பண்ண வேண்டாமா” என்றாள் அவனை பார்த்து கொண்டே. 

 

“அதுக்கு ஒரு ஆம்பளை குளிக்கும் போது தண்ணீ உள்ளே வருவியா இறங்கு டி கீழ” என்றான் கோபத்துடன் கருப்பன் கூற. 

 

“நீங்க என் புருசன் தான உங்க கூட நான் குளிச்சா தப்பு இல்லை வேற ஆம்பளைங்க கூட குளிச்சா தான் தப்பு” என்றவள் தன் தாவணியை கழட்டி எறிந்தாள். 

 

கருப்பன் ஒரு கணம் அதிர்ந்தவன் “அடியேய் உன்னை வெளுக்க போறேன் ஒழுங்கு மரியாதையா கீழே இறங்கி போ” என்றான் “மாமா உங்களுக்கு என்னை பார்க்க பிடிக்கலைன்னா கண்ணை மூடிக்கங்க உடம்பெல்லாம் ஒரே சேறா இருக்கு ஒழுங்கா குளிக்க வேண்டாமா” என்றவள் தன் மேலாடையின் கொக்கியை கழட்ட முயற்சி செய்து கொண்டு இருந்தாள். 

 

‘அவளை பார்க்காத டா கருப்பா’ என்று தனக்கு தானே கடிவாளம் இட்டு கொண்டாலும் அவனால் அவனையே கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை தண்ணீரின் உள்ளேயே தடுமாற ஆரம்பித்தான். 

 

அவள் ஒவ்வொரு கொக்கியாக கழட்ட அவன் தன்னிலை இழந்து தவிக்க ஆரம்பித்தான் “அச்சோ மாமா வெட்ட வெளியா இருக்கே உங்க பின்னாடி மறைஞ்சு நின்னுக்கிறேன்” என்று கூறி அவன் பின்னே வர மாலை ஆறு மணி என்பதால் நன்றாகவே இருட்ட வேறு ஆரம்பித்து இருந்தது. 

 

“அய்யோ மாமா இந்த கடைசி கொக்கி மட்டும் கழட்ட வரலை நீங்களே கழட்டி விடுறிங்களா” என்று கருப்பனை தன் புறம் திருப்ப அவளின் ஈர ஆடையில் திமிறி பூத்து குலுங்கி கொண்டு இருந்தது இரட்டை ரோஜா அவற்றை பார்த்து எச்சில் விழுங்கியவன் முழுதாக தன் சுயத்தை இழந்தான். 

 

“மாமா கழட்டி விடுங்களேன்” என்று அவள் மீண்டும் கேட்க சும்மா அவள் மேல் பைத்தியமாக திரிபவன் மொத்தமாக அவளை இந்த நிலையில் பார்க்க எத்தனை முறை பார்த்தாலும் அவனுக்கு புதியதாக தான் தோன்றியது ரோஜா குவியலை அள்ளி எடுத்து ருசி பார்த்து கடித்து மென்று சுவைத்து முகற வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. 

 

தன்னை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தவித்தவன் அவளை தன் அருகில் சேர்த்தணைத்தான் இளமதி மனதில் ‘எனக்கு தெரியாதா மாமா உங்களை பத்தி’ என்று நினைத்தாள். 

 

அவள் அருகில் வந்தவன் “ஏன் டி இப்படி தான் கண்டதை காட்டி தான் மனுசனை உசுப்பேத்துவியா” என்று அவளை தன்னோடு மேலும் இறுக்கி கொண்டே கருப்பன் கேட்க “உங்க அம்மா உங்களை நல்லவரு வல்லவருன்னு சொல்றாங்களே நீங்க நல்லவரான்னு டெஸ்ட் பண்ணி பார்த்தேன்” என்றாள் அவனை பார்த்து கொண்டே. 

 

“ஊர்ல எல்லாருக்கும் நல்லவன் ஆனா உன் ஒருத்திக்கு மட்டும் ரொம்ப கெட்டவன் டி” என்றவன் அவளின் இதழில் முத்தமிட்டு அவளை கொள்ளையிட ஆரம்பித்தான்

யாரும் இல்லாத தனிமை இருள் இருவரையும் உல்லாச உலகுக்கு அழைத்துச் சென்றது. 

 

அவளை தண்ணீரில் இருந்து தூக்கியவன் உள்ளே இருந்த பம்பு செட் அறைக்குள் தூக்கி சென்றவன் அவள் மேல் படர ஆரம்பித்தான் இத்தனை நாள் பிரிவை அவனை வாட்டி வதைத்து இருக்க அதிரடியாக தன் ஆட்சியை நிலை நாட்ட அவன் இடையில் காலை சுற்றி போட்டு கொண்டு அவளும் “ம்ம்ம்ஆஆஆ” என்று துடிக்க ஆரம்பித்தாள் 

அவனின் ஒவ்வொரு அசைவுக்கும் 

“மாமா பொறுமையா பிளீஸ் ம்ம்ம்” என்று அவள் கெஞ்ச “முடியாது டி இத்தனை நாள் என்னை தவிக்க விட்டல்ல அனுபவி” என்றவன் அவளுள் அசுரனாக இயங்க ஆரம்பித்தான் “ம்ம்மாஆஆ” என்று அவள் கத்தும் சத்தமும்

இருவரின் முத்தம் சத்தமும் அறையெங்கும் எதிரொலிக்க இனிதாக இல்லறம் நடந்து முடிந்தது. 

 

இரவு இருவரும் தனியே தனியே ஈர உடையுடன் வந்து சேர்ந்தனர் சிவகாமி 

வீட்டில் இல்லாததால் இருவரையும் யாரும் கவனிக்கவில்லை மறுநாளில் இருந்து திருவிழா வேலைகள் ஆரம்பிக்க இருவரும் அவ்வப்போது கள்ளத்தனமாக சந்தித்து கொண்டனர். 

 

நான்கு நாள் திருவிழாவில் இரண்டு நாட்கள் கருப்பனுக்கு ஜீரம் வந்தது மழையில் நனைந்ததால் மூக்கு வேறு அடைந்திருந்தது எங்கும் வெளியே செல்லாமல் இருந்து கொண்டான். 

 

கடைசி நாள் திருவிழாவுக்கு அவன் கோவிலுக்கு செல்ல அவனுக்கு ராஜமரியாதை வழங்கப்பட்டது நாகராஜனுக்கு அவனை பார்த்து பொறாமை பொங்க இவனை எதாவது செய்தே ஆக வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தான். 

 

 அத்தியாயம் 18

 

அன்று கடைசி நாள் திருவிழா என்பதால் ஊரே கூடி இருந்தது பெண்கள் அனைவரும் பொங்கல் கூடையை சுமந்து கொண்டு வனத்தின் நடுவே இருந்த மைதானத்திற்க்கு வந்து கொண்டிருந்தனர். 

 

கருப்பனும் தன்னவளை தான் அந்த கூட்டத்தில் தேடிக் கொண்டு இருந்தான் அவன் எதிர்பார்பை எல்லாம் பொய்யாக்காமல் பொங்கல் கூடையுடன் நடந்து வந்தாள் அவனின் மனைவி இளமதி அரக்கு நிறத்தில் தங்க நிற பார்டர் வைத்து  பட்டு புடவை கட்டி பளபளவென நடந்து வந்து கொண்டு இருந்தாள் நேற்று இரவு அவன் தான் இந்த புடவையை கொடுத்து கட்டிவர கூறியிருந்தான். 

 

அவளின் பால் வண்ண நிறத்துக்கு அந்த புடவை அத்தனை எடுப்பாக வேறு இருந்தது தன் நீளக் கூந்தலை தளர பின்னி அதில் மல்லிப்பூ சூடி அழகான பெரிய முட்டை கண்களுடன் அதில் கண் மை ஐ லைனர் தீட்டி இருக்க அவளின் மை தீட்டிய கண்களே அவனை கொள்ளை கொண்டது. 

 

தேவலோக ரதியே நேரில் இறங்கி வந்ததை போல் இருந்தாள் கருப்பனின் கண்கள் அவளை விட்டு இம்மி அளவு கூட விலகவேயில்லை பொங்கல் கூடயை தூக்கி சென்றவளின் இடையில் இருந்த புடவை விலகி எலுமிச்சை நிற இடை பளிச்சென்று தெரிந்தது அந்த இடையிலேயே கருப்பனின் கண்கள் நிலைத்து நின்றது. 

 

பெண்கள் அனைவரும் முன்னே செல்ல இறுதியாக சென்ற இளமதியை தடுத்து நிறுத்தினான் அவள் கணவன் 

“ஏய் ஒரு நிமிசம் நில்லு டி புடவை மடிப்பே சரியில்லை” என்ற கருப்பன் அவளின் கைப்பிடித்து தனியே ஒரு பெரிய ஆலமரத்தின் பின்னே அழைத்து சென்றான் ஆலமரம் பெரிதாக இருந்ததால் அதன் பின்னே யார் நிற்கிறார்கள் என்பது சரியாக தெரியாது. 

 

அவளின் இடையில் இருந்த புடவை கொசுவத்தை சரி செய்கிறேன் என்ற பெயரில் கையை ஆடையின் உள்ளே நுழைக்க இளமதி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து திணற ஆரம்பித்தாள். 

 

ஏனெனில் அவள் தலையில் பொங்கல் கூடை இருக்க இரு கையும் மேலே கூடையை பிடித்து கொண்டு இருந்தது அவனை அவளால் தடுக்கவே முடியவில்லை அவன் கை புடவையை சரி செய்யாமல் கொசுவத்தின் உள்ளே சென்று இன்னும் ஆழமாக பாதாளத்தின் உள்ளே நுழைந்தது “அய்யோ என்ன பண்ணுறிங்க மாமா” என்று தவிப்புடன் கேட்டு கொண்டே அவள் நெளிய ஆரம்பித்தாள். 

 

“ரொம்ப அழகா இருக்க டி” என்று அவளின் கீழ் உதட்டை பார்த்து கொண்டே கூறியவன் அடுத்த நொடி அவளின் பட்டு போன்ற ரோஜா இதழை இதழை தன் இதழால் கல்வி இழுத்து முத்தமிட அவன் கைகள் இன்னும் உள்ளே சென்று ஆழத்துளையின் உள்ளே விரல் நுழைக்க அவனின் செயலில் அவள் இன்னும் தடுமாற ஆரம்பித்தாள். 

 

அவன் இதழில் இருந்த தன் இதழை வலுக்கட்டாயமாக பிரித்து எடுத்தவள் “ம்ம்ம் மாமா விடுங்க யாராவது வந்துட போறாங்க” என்று மூச்சு திணற கூற

கருப்பன் தன் கையை உடனே எடுத்து கொண்டான் அவளின் புடவையை சரி செய்தவன் கீழே குனிந்து அவளின் நாபியில் முத்தமிட்டு மேலே வந்தவன் “நைட் மேல இருக்க ரூமுக்கு வந்துரு டி” என்று மையலுடன் அவள் இதழை தன் ஒற்றை விரலால் தடவிக் கொண்டே முகத்தை தாபத்துடன் பார்த்து கொண்டே கூற பதிலுக்கு அவளின் முகம் வெட்கத்தில் இன்னும் சிவந்து போனது “ம்ம்ம்” என்று இதழ் கடித்து அவளும் தலையை ஆட்டினாள் அதன் பின் அவளை அழைத்து கொண்டு மைதானத்துக்கு வந்தான் கருப்பன். 

 

மைதானத்துக்கு வந்தும் இளமதியை விட்டு விலகாமல் கருப்பன் அவளுடனே நின்றிருந்தான் நந்தினி பொங்கல் கூடையுடன் பொங்கல் வைக்க தன் தாய் பெரியப்பொண்ணுவுடன் அங்கே வந்தாள் கருப்பன்-மதி இருவரும் ஜோடியாக நிற்பதை பார்த்து முறைத்து வைக்க கருப்பன் அவளை கண்டு கொள்ளவேயில்லை. 

 

பெரியப்பொண்ணுவும் அவளை பார்த்து முறைத்து கொண்டே அடுப்பை பற்ற வைத்து பொங்கல் வைக்க இளமதிக்கு தான் அவர்களின் முன்னே நிற்க ஒரு மாதிரியாக சங்கடமாக இருந்தது ஆனால் அவள் கணவன் மிகவும் சாதரணமாக தான் இருந்தான்

இளமதியுடன் வாழ ஆரம்பித்தது தெரிந்தால் தான் தன் அக்கா அவரின் மனதை மாற்றிக் கொள்வார் என்று நினைத்தான். 

 

“என் மகள் வாழ்க்கையை கெடுத்துட்டு எப்படி என் முன்னாடியே வந்து ஜோடியா நிக்குறா பாரு பாதகத்தி இவள் எல்லாம் நல்லா இருப்பாளா” என்று பெரியப்பொண்ணு புலம்பிக் கொண்டே கண்ணீருடன் பொங்கல் வைக்க 

“அம்மா நீ அழாத அவளுக்காக நான் ஒன்னு ரெடி பண்ணி வச்சிருக்கேன் இதை பாரு” என்று தன் போனில் இருந்த எதையோ காட்டினாள் நந்தினி அதை பார்த்தவர் அதிர்ச்சி குறையாமல் “இது எப்போ எடுத்தது” என்று கேட்க 

“அது நம்ம சுப்பையா மாமா பொண்ணு அதே காலேஜ்ல தான் படிக்குறா அவள் தான் எடுத்து கொடுத்தா இவளும் அந்த ஆளும் ரொம்ப நெருங்கி பழகுவாங்களாம் நேரம் வரும் போது நமக்கு இது உதவும்” என்றாள். 

 

“இப்போ தான் டி நீ என் பொண்ணுன்னு நிரூபிச்சிருக்க இது ஒன்னு போதும் அவளை துரத்த” என்றார் வன்மத்துடன் அதன் பின் அனைவரும் பொங்கல் வைத்து முடிக்க மாலை ஆனது பொழுது சாயும் வேளையில் ஒவ்வொருவராக கிளம்ப ஆரம்பித்தனர். 

 

இறுதியாக கருப்பன் இளமதியை தனக்கு தெரிந்தவர்களுடன் அனுப்பி வைத்துவிட்டு ஊர் பெரியவர்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பி வந்தான் இரவு நேரம் அந்த காட்டுப்பாதையில்  வழியே நடந்து வந்து கொண்டு இருந்தவன் பின்னே ஒரு நால்வர் பின் தொடர்ந்தனர். 

 

முன்னே நடந்து சென்று கொண்டிருந்த கருப்பன் தன் பின்னே காய்ந்த சருகுகள் மிதி படும் சத்தத்திலேயே அறிந்து கொண்டான் தன் பின்னே யாரோ பின் தொடர்ந்து வருகிறார்கள் என்று தெரிந்து கொண்டான் இன்னும் பொறுமையாக கருப்பன் நடந்து சென்றவன் இருள் சூழ்ந்த ஒரு மரத்தின் அருகே செல்லும் போது காற்று பலமாக வீச ஆரம்பித்தது கருப்பன் அங்கே நின்று திரும்பியவன் சிங்கத்தை போன்று ஒரு பார்வை அவர்களை பார்க்க ஏற்கனவே வானம் இருட்டி இருக்க மழை தூர ஆரம்பித்தது. 

 

அந்த நால்வரும் அவனை சூழ்ந்து நின்று கொண்டனர் கருப்பன் அங்கிருந்த யாருக்கும் அஞ்சாமல் தன் வேட்டியை மடித்து கட்டியவன் முழுக்கை சட்டையை மடித்து விட்டு கொண்டு சண்டைக்கு தயாரானான். 

 

“யார்ரா நீங்க எல்லாம்” என்று கருப்பன் அவர்களை பார்த்து கேட்டுக் கொண்டே இருக்க “நாங்கெல்வாம் நாகராஜ் அண்ணா ஆளுங்க உன்னை கொன்னு புதைச்சுட்டு வர சொன்னாரு அண்ணன்” என்க கருப்பன் இன்னும் கோபத்துடன் அவர்களை பார்த்து முறைத்தான்.

 

“அந்த நாய் சொன்னுச்சுன்னு நீங்க எல்லாரும் என்னை கொல்ல வந்திங்களா உங்களை வெட்டி கல்லுப்பாறையில புதைக்குறதுக்குள்ள இங்கே இருந்து ஓடிப் போய்டுங்க” என்றான் கருப்பன் மீசையை முறுக்கி விட்டு கொண்டே கர்ஜனையான குரலில். 

 

அவனை பார்த்து பயந்து ஓடாமல் நால்வரும் அங்கேயே நிற்க அதில் ஒருவன் அருவாளுடன் கருப்பனை நெருங்கி வர 

கருப்பன் ராவணன் தன் எதிரிகளை வேட்டையாடுவதை போல சினத்தோடு அவன் அருகில் நெருங்கி அசால்ட்டாக அவனை தூக்கி தரையில் வேகமாக போட அவன் முதுகில் பலமாக அடி பட “அம்மா” என்று கத்தினான் மற்றவர்கள் கருப்பனை பார்த்து பயம் கொள்ள நரம்புகள் புடைக்க முகம் சிவக்க கோபத்துடன் நின்றிருந்தான். 

 

இரண்டாவதாக ஒருவன் கருப்பனை நெருங்கி வந்து அவன் மீது அருவாளை வீச போக அடுத்த நொடி கருப்பன் அவன் கையை பிடித்து வளைத்து அவன் முகத்தில் ஓங்கி குத்தினான் அவன் முகமே ரத்தமாக மாற மூன்றாவதாக இருந்தவன் பயந்து நடுங்க ஆரம்பித்தான். 

 

“அண்ணா எங்களை மன்னிச்சிடுங்க காசுக்காக ஏதோ தெரியாம வந்துட்டோம் 

பிள்ளைக் குட்டிக்காரன் அண்ணா நான் எங்களை மன்னிச்சி விட்டுருங்க” என்று அவன் காலை பிடித்து கெஞ்சிக் கொண்டு இருக்க கருப்பனின் பின்னே வந்த ஒருவன் தன் கையில் இருந்த பெரிய அரிவாளால் கருப்பனை வெட்ட பின்னிருந்து கையை ஓங்கி கொண்டு வர கருப்பன் திரும்பி பார்க்காமலேயே அவனின் கைப்பிடித்து தடுத்தவன் தன் காலை உதறிவிட்டு திரும்பி நின்று அவன் நெஞ்சில் ஓங்கி மிதித்தான் இன்னும் மூன்று பேரும் சேர்ந்து அவனை மீண்டும் தாக்க ஆரம்பித்தனர். 

 

கருப்பன் அவர்களுடன் சண்டையிட ஆரம்பித்தான் இறுதியாக அனைவரையும் அடித்து வீழ்த்த மூலைக்கு ஒருவராக விழுந்து கிடந்தனர் அவன் பலத்துக்கு அவர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை தடுமாறினர். 

 

கருப்பன் அங்கிருந்து இறுதியாக நடந்து போக அவனின் பின்னே ஒருவன் ஓடி வந்து அவன் முதுகில் வெட்ட வலியுடன் திரும்பிய கருப்பன் தன்னை காத்துக்கொள்ள அவன் கையில் இருந்த அருவாளை பிடுங்கி அவன் கழுத்தில் ஓங்கி வெட்டினான் அவன் கழுத்தில் வெட்டு ஆழமாக விழுந்து விட ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்து துடித்தவன் அதே இடத்தில் இறந்து போனான். 

 

அந்த நேரம் அங்கு வந்த நாகராஜன் 

“அடப்பாவி கொலையே பண்ணிட்டியா” என்று ஊரை கூட்ட அனைவரும் அங்கே ஓடி வந்தனர் கருப்பன் கையில் அருவாளுடன் நிற்க இறந்து போனவனின் மனைவி தன் பிள்ளைக்களோடு அங்கு ஓடி வந்து கதறி அழ ஆரம்பித்தாள். 

 

நாகராஜன் போலீஸ்க்கு போன் செய்திருக்க கருப்பனின் கையில் விலங்கு மாட்டி அழைத்து செல்ல நாகராஜன் அவன் அருகில் வந்தவன்

“பங்காளி எனக்கு தெரியாதா நீ எவ்வளவு பெரிய பலசாலின்னு இப்படி எதாவது ஒன்னு நடக்கும் எனக்கு முன்னாடியே தெரியும் இனி இந்த ஊருக்கு தலைவர்ன்னா அது நான் ஒருத்தன் மட்டும் தான்” என்றான் சிரிப்புடன். 

 

போலீஸ் அங்கே எஞ்சி இருந்த மூவரிடம் என்ன நடந்தது என்று விசாரிக்க “ஜாதி வெறியில இந்த ஊர் தலைவர் வெட்டி கொன்னுட்டான் சார்” என்றான் அழுது கொண்டே ஒருவன் 

அவர்கள் அனைவரையும் ஜீப்பில் ஏற்ற இறுதியாக கருப்பனும் ஏறினான். 

 

இளமதி அவளின் தாய் கருப்பனின் தாய் தந்தை பெரியப்பொண்ணு நந்தினி என்று அனைவரும் விஷயம் கேள்விப்பட்டு அங்கே ஓடி வந்திருந்தனர் கருப்பனுக்கு இளமதியை பார்க்கும் போது மிகவும் மனம் வலித்தது. 

 

ஜீப் அங்கிருந்து செல்ல “மாமா மாமா” என்று கத்தி அழுது கொண்டே அவளும் அவன் பின்னேயே ஓடினாள் ஒரு கட்டத்தில் ஓட முடியாமல் தவிப்புடன் நின்றவள் தன் மாமனை அழுத விழிகளுடன் பார்த்து கொண்டே நிற்க 

கண்கள் சரியாக தெரியாமல் அனைத்தும் மங்கலாக தெரிந்தது அப்படி மயங்கி கீழே சரிந்தாள். 

 

இதை தூரத்தில் இருந்து பார்த்த சின்னப்பொண்ணு அவள் அருகில் ஓட அனைவரும் அவள் அருகில் வந்தனர் தண்ணீர் தெளித்து இளமதியை எழுப்ப 

அவளும் மெல்ல கண்ணை திறந்தாள். 

 

அந்த ஊரில் இருக்கும் மருத்துவச்சி ஒருத்தி அவளின் கைப்பிடித்து பார்த்தார் 

“எல்லாம் நல்ல விஷயம் தான் நம்ம மதி உண்டாகி இருக்காள்” என்றார் அதை கேட்ட இளமதியின் முகம் மலர்ந்தது. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  •  

அத்தியாயம் 36     திருவிழாவுக்கு ஒருநாள் முன்னமே தென்னரசு குடும்பத்துடன் ரா…

அத்தியாயம் 36
 
 
திருவிழாவுக்கு ஒருநாள் முன்னமே தென்னரசு குடும்பத்துடன் ராயனின் வீட்டுக்கு வந்துவிட்டான். பாலாஜியும் நதியாவும் அன்றிரவுதான் வீட்டுக்கு வந்திருந்தனர். கோமளமோ இன்று நதியாவையும் பாலாஜியையும் பார்த்து முகத்தை தூக்கவில்லை பாலாஜியை மட்டும் ஒரு பார்வை பார்த்தவர் அறைக்குள் சென்றுவிட்டார்.
 
“வாங்கனு கேட்டா இவங்க கிரீடம் இறக்கிடுமோ” என்று முகத்தை வெட்டிக்கொண்டாள் நதியா.
 
ராயனோ “வாங்க மாப்பிள்ளை, வாடா பாப்பா” என்று இருவரையும் கைகூப்பி வரவேற்றான்.
 
“என்னடா புதுசா வணக்கம் எல்லாம் வைக்குற நமக்குள்ள என்ன ஃபார்மாலிட்டீஸ்” என்று ராயனின் கையை பிடித்துக்கொண்டான்.
 
“நீ எங்க வீட்டு மாப்பிள்ளைல மரியாதை கொடுக்கணும்டா” என்றவனோ “பாப்பா ரெண்டு பேரும் சாப்பிட்டு உன்னோட அறைக்கு மாப்பிள்ளையை அழைச்சிட்டு போ காலையில கோவிலுக்கு போகலாம் நான் முல்லையை பார்த்துட்டு வந்துடறேன்” என்று சென்று விட்டான்.
 
கண்ணன் பால்பண்ணையில் வேலை இருக்க இன்னும் வீட்டுக்கு வரவில்லை.
 
தீபாவோ “வா நதியா, வாங்க பாலாஜி அண்ணா ஏன் நேத்து வரலை நீ வருவனு உன் ரெண்டு அண்ணன்களும் வாசலையே பார்த்துட்டிருந்தாங்க ரெண்டு பேரும் சாப்பிட உட்காருங்க” என்றாள் பாசம் தோய்ந்த குரலில்.
 
“இது நம்ம தீபா அண்ணியா இப்படியெல்லாம் கூட இவங்களுக்கு பாசமா பேசத்தெரியுமா” என்று சந்தேகத்துடன் சாப்பிட உட்கார்ந்தவள்  “நேத்து எங்க வீட்டுல மாடு கிடாரி கண்ணு போட்டுச்சு அதான் வரமுடியல” என்றபடியே சாப்பிட ஆரம்பித்தாள்.
 
“பாலாஜி அண்ணா சாம்பார் நான்தான் வச்சேன் எப்படியிருக்குனு சொல்லுங்க” என்று பாலாஜியின் தட்டில் பார்த்து பார்த்து பரிமாறினாள்.
 
நதியாவுக்கு தீபாவின் அனுசரிப்பு விதத்தை கண்டு தன் கண்களையே  நம்ப முடியவில்லை எப்படியோ நம்ம குடும்பத்துக்கு தகுந்தாப்பல மாறினா சரிதான் என்று பெரும்மூச்சு விட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.
 
அடுத்தநாள் காலையில் ராயன் குடும்பம் அனைவரும் கோவிலுக்கு கிளம்பினார்கள். நடக்க போகும் விபரீதம் தெரியாமல். முல்லைக்கு வேறு இடுப்பு வலித்துக்கொண்டிருந்தது ஆனால் அவளது வலியை வெளியே காட்டிக்கொள்ளவில்லை. மாவிளக்கு போட்டு தீபம் ஏற்றினார்கள் முல்லையும் தீபாவும்.
 
மாவிளக்கு தட்டுடன் முல்லையால் நடக்க முடியவில்லை. “தீபா அக்கா மாவிளக்கு நீங்க எடுத்துட்டு வரீங்களா?” தீபாவிடம் மாவிளக்கு தட்டை கொடுத்து “விளக்கு அணையாம பார்த்துக்கோங்க” என்றவளோ வலியில் பெரும்மூச்சு விட்டாள்.
 
“ஏய் முடியலனா வீட்டுல இருந்துக்க வேண்டியதுதானே?”
 
“அக்கா நான் வீட்டுல இருந்தா அழகு அம்மாவும் நீலகண்டன் அப்பாவும் என்னை பார்த்துக்கணும்னு என்கூடவே இருந்துடுவாங்க.. எனக்கும் சாமியை கும்பிட்டா மனசும் நிம்மதியா இருக்கும் பிரசவ நாள் நெருங்க நெருங்க கொஞ்சம் பயந்து வருது அக்கா” என்றாள்.
 
“பயப்படாதே ராயன் மாமா எல்லார்க்கும் நல்லது நடக்க வைக்குறாரு அவர்  நல்ல மனசுக்கு உனக்கு சுக பிரசவம் தான் நடக்கும் கவலைப்படாதே” என பயந்திருந்த முல்லைக்கு தைரியம் கூறினாள் தீபா. 
 
கோவிலுக்குள் பூஜை முடிந்து பரிவட்டம் ராயனுக்கு மட்டும்தான் கட்டுவார்கள் ஆனால் இந்த முறை மருமகன்களுக்கும் தென்னரசு கண்ணன் என்று அனைவருக்கும் பரிவட்டம் கொண்டு வர சொல்லியிருந்தான் ராயன்.  சொந்தத்திற்குள் பாகுபாடு வரக்கூடாதென.
 
மாவிளக்கு தட்டு யார் எடுத்து வருகிறார்கள் என்று தலையை எட்டி பார்த்தார் கோமளம். 
 
தீபா எடுத்து வருவதை கண்டு என் மருமக தான் எடுத்துட்டு வரா என்று பெருமை பட்டுக் கொண்டார். வீட்டு மூத்த மருமகள் தான் மாவிளக்கு எடுத்து வரணும் ராயன் குடும்ப வழக்கம். எனக்கு கிடைத்த மரியாதை முல்லைக்கு போக கூடாது என் மருமகள் தீபாவுக்கு தான் கிடைக்கணும் என்று சுயநலமாக யோசித்தார் கோமளம். 
 
சாமிக்கு முன்னால் வந்ததும் மாவிளக்கு தட்டை முல்லை கையில் கொடுத்து கோவில் பூசாரியிடம் கொடுக்க சொன்னாள். 
 
“நீங்க கொடுங்க அக்கா” என்றாள் முல்லை. 
 
“நீதான் நம்ம வீட்டு மூத்த மருமக நீதான் கொடுக்கணும்” என்றாள் மலர்ந்த முகத்துடன். 
 
‘இவளுக்கு அறிவே இல்ல கிடைச்ச மரியாதையை விட்டு கொடுக்குறா’ என்று தீபாவின் மேல ஆத்திரப்பட்டார். 
 
தையல்நாயகியோ “ரெண்டு பேரும் சேர்த்து கொடுங்கம்மா” என்றதும் கோமளத்திற்கு முகம் விழுந்து விட்டது. நாம என் இப்படி யோசிக்கல அவர் மனம் கொஞ்சம் வருத்தப்பட்டது.
 
முதலில் ராயனுக்கு பரிவட்டம் கட்டி முடித்து மற்றவர்களுக்கு கட்டி முடித்தனர். கோமளமோ தன் மகனுக்கு பரிவட்டம் கட்டிவிட்டார்கள் என்று பூரிப்பில் நின்றிருந்தார். முல்லையால் ரொம்ப நேரம் நிற்க முடியவில்லை “கண்ணா பார்த்துக்கோ நான் முல்லையை வீட்டுக்கு அழைச்சிட்டு போறேன்” என்று அழைத்து வந்துவிட்டான் ராயன்.
 
முல்லையோ சோர்ந்து படுத்துவிட்டாள். “பெயின் இருக்காடி சொல்லு ஹாஸ்பிட்டல் போகலாம்” என்று மனைவியின் தலையை வருடினான்.
 
“இல்ல மச்சான் கொஞ்சமா வலி இருக்கு கொஞ்ச நேரம் படுத்து எழுந்தா சரியா போகும்” என்றவளை மடியில் படுக்க வைத்து அவளது முதுகை வருடிக்கொடுத்தான்.
 
முல்லையோ “மச்சான் சாய்ந்தரம் கோவிலுக்கு என்னையும் கூட்டிட்டு போங்க கடைத்தெருவை எல்லாம் சுத்தி பார்க்கணும்” என ராயனை நிமிர்ந்து பார்த்தாள்.
 
“கடைத்தெருவுல கூட்டமா இருக்கும் அடுத்த வருசம் திருவிழா கடையை பார்க்கலாம்டி” என்று அவளது நெற்றியில் முத்தமிட்டான்.
 
“மச்சான் என்னோட ஆசையை நிறைவேத்தமாட்டீங்களா?” என்றாள் சிணுங்கலாக.
 
“சரி உனக்கு வலி இல்லைனா கூட்டிட்டு போறேன் தூங்கு” என்றதும் சில நொடிகளில் உறங்கியும் இருந்தாள்.
 
ராயன் குடும்பத்தினர் மதியம் கோவிலில் சாப்பிட்டு ராயனுக்கும் முல்லைக்கும் சாப்பாடு எடுத்து வந்தனர்.
 
மதியம் எழுந்து சாப்பிட்டு முடித்த முல்லையோ  “சாய்ந்தரம் கண்டிப்பா கடைதெருவுக்கு போகணும் மச்சான்” என்றவளை முறைத்தவனோ “சொன்னா கேட்கமாட்ட புள்ள” என்று மிரட்டியதும் முல்லையின் முகம் வாடியது.
 
“சரி சரி கூட்டிட்டு போறேன் முகத்தை தூக்காதே” என்றவனின் கன்னத்தில் முத்தமிட்டாள்.
 
“முத்தம் கொடுத்து என்னை மயக்கிவிட பார்க்குற” என்றான் மந்தகாச புன்னகையுடன். 
 
“ஆமா நான் மயக்காம வேற யாரு உங்களை மயக்குவாங்க” என்று ராயனின் தோளில் சாய்ந்துக் கொண்டாள் முல்லை.
 
மாலையானதும் மீண்டும் குடும்பத்தோடு கோவிலுக்குச் சென்றான் ராயன்.
 
கடைத்தெருவில் முல்லை கேட்பதெல்லாம் வாங்கிக்கொண்டிருந்தான். அவனது கண்கள் நாலாப்புறமும் நோட்டமிட்டுக்கொண்டே இருந்தது.
 
ராயன் கண்ணுக்கு ஒருவன் புதிதாக தெரிய தென்னரசுவிற்கு போன் போட்டு “டேய் யாரோ புது ஆள் திருவிழா கூட்டத்துக்குள்ள வந்துட்டானுங்க நம்ம குடும்பத்து ஆளுங்க மேல ஒரு கண்ணு வை கண்ணனையும் உசார் படுத்து நான் பாலாஜிக்கு போன் போடுறேன்” என்று எச்சரிக்கை செய்தான்.
 
“நான் பார்த்துக்குறேன் அண்ணா” என்றவனோ அடுத்த நிமிடம் கண்ணனுக்கு விசயத்தை சொல்ல அவனும் உஷாராக குடும்பத்தை கண்காணித்தான். தீபா கல் தடுக்கி விழப்போனவளின் கையை இறுக்கமாய் பிடித்த கண்ணனோ “ஹேய் கூட்டத்துல பார்த்து நடக்கணும்பா” என்று தீபாவின் தோளில் கையை போட்டுக் கொண்டான் கண்ணன்.
 
“சரிடா உன் முகம் ஏன் ஒருமாதிரி இருக்கு எனி ப்ராப்ளம்?” என்றாள் கண்ணை சுருக்கி.
 
“ஒண்ணுமில்லடி” தீபாவின் கையை பிடித்துக்கொண்டான் கண்ணன்.  
 
நதியாவோ கடைத் தெருவில் விற்கும் குல்ஃபியை வாங்கி சாப்பிட்டுக்கொண்டே வந்தாள்.
 
முல்லை நடக்க முடியாமல் தடுமாற “நான் சொல்ற பேச்சை கேட்கலதானே இப்போ பாரு நடக்கவே கஷ்டப்படுற” என்று கோப முகத்தை  காண்பித்தான்.
 
திடீரென லைட் எல்லாம் அணைந்தது ராயன் ஏதோ சரியில்லையே என்று முல்லையை கையில் தூக்கிக்கொண்டான். அடுத்து பூம் என்று குண்டு வெடித்தது.  
 
மக்கள் கூட்டம் சிதறி ஓடியது. ராயனோ முல்லையை தூக்கிக்கொண்டு ஓடினான். 
 
“டேய் ராயா நில்லுடா என்னையவா ஊருக்குள்ள தலைகாட்ட முடியாத பண்ணின உன் குடும்பத்தை அழிக்கப்போறேன் பாரு” என்று நாராசமாய் சிரித்து ராயன் பின்னால் ஓடினார் ராஜமாணிக்கம்.
 
முல்லையை உட்கார வைத்து காரை லாக் பண்ணிவிட்டு வேஷ்டியை மடித்துக்கட்டி திரும்பினான் ருத்ர முகத்துடன். 
 
“டேய் உன் குடும்பத்தை வேரோடு அழிக்க போறேன்… என் ஆளுங்க உன் குடும்பத்தை பிடிச்சு வைச்சுருப்பாங்க எல்லாரும் ஒண்ணா கைலாசம் போங்கடா” என்று கையில் வைத்திருந்த கட்டையை தூக்கி ராயன் மேல் வீசினார் ராஜமாணிக்கம்.
 
“உன்னால ஒரு மயிரும் பிடுங்க முடியாதுடா கிழட்டு நாயே உன்னையெல்லாம் அப்போதே அடிச்சு கொண்டிருக்கணும் பாவம் பார்த்து விட்டேன் அது என் தப்பு தான்” என ஆத்திரப்பட்டு பேசியவன் கட்டை தன் பக்கம் வரும் நேரம் தள்ளி நின்றான்.
 
ராஜமாணிக்கத்தின் ஆட்கள் ராயனின் குடும்பத்தை சுற்றி வளைத்தனர். பெண்கள் அனைவர் முகத்திலும் திகில் பரவியது.
 
“நாங்க இருக்கோம் பயப்படாதீங்க” என்று மீசையை முறுக்கினார்கள் கண்ணன், தென்னரசு, பாலாஜி மூவரும்.
 
ராஜமாணிக்கத்தின் ஆட்களை அடி பின்னி எடுத்து தாக்கினார்கள்.
 
முல்லைக்கு பிரசவ வலி வந்து விட்டது. “மச்சான் இடுப்பு வலிக்குது” என்று கதறினாள். அமுதாவோ “என் பொண்ணை காப்பாத்துங்க” என்று கூக்குரலிட்டார்.
 
நீலகண்டனும் அழகுவும் எப்படியோ கூட்டத்தை தள்ளிக்கொண்டு ராயனின் காருக்கு பக்கம் போக “மாமா முல்லையை ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போங்க இந்த நச்சு பாம்பை நசுக்கி போட்டு வரேன்” என்றவனை “மச்சான் வாங்க எனக்கு பயமா இருக்கு நீங்களும் வாங்க” வலியில் கத்தினாள் முல்லை.
 
அமுதாவோ “நானும் வரேன் அக்கா” என்று அழகம்மைக்கு முன்னே மகளுடன் காரில் ஏறினார். 
 
கார் கதவின் கண்ணாடியின் மேல் கட்டையை தூக்கிப்போட்டான் ஒருவன் முல்லையை மடியில் படுக்க வைத்துக்கொண்டார் அமுதா.
 
ராயனை தாக்க அரிவாளை தூக்கிக்கொண்டு ஓடிவந்தார் ராஜமாணிக்கம்.
 
“ராயா” என்று பதறினார்கள் தெய்வநாயகமும் தையல்நாயகியும்.
 
கண்ணனும் பாலாஜியும் மற்றவர்களை அடித்துக்கொண்டிருந்தனர். தென்னரசுவோ அரிவாளோடு ராயனை தாக்கப்போகும் முன் ராஜமாணிக்கத்தின் பின்னே சென்றவன் அவரின் தலையில் கட்டையால் ஓங்கி  அடித்தான். 
 
ராஜமாணிக்கத்தின் தலையில் இரத்தம் கொட்டியது தலையை பிடித்துக்கொண்டு அரிவாளோடு திரும்பி பார்த்து “நீயாடா என்னை அடிச்ச இந்த ராயன் என்னை பத்தி கட்டுகதை கட்டி உன்னை என்கிட்ட இருந்து பிரிச்சிட்டான் இவனை சும்மா விடமாட்டேன் ராயனை வெட்டுறேன் பாருடா” என்று ராயனின் கழுத்துக்கு அரிவாளை கொண்டுச் செல்ல “ராயா” என்று அனைவரும் பதறினார்கள்.
 
தென்னரசு இனிமேல் இவரை விட்டு வைக்க கூடாதென்று ராஜமாணிக்கத்தின் முதுகில் கட்டையால் ஓங்கி அடிக்கவும் சுருண்டு விழுந்தார். 
 
“நீயெல்லாம் மனுசனா பொண்ணுங்களை போதை பொருளா பார்த்திருக்க வேலைக்கு வர பொண்ணுங்க கிட்ட அசிங்கமா பேசியிருக்க உன்னையெல்லாம் அப்பான்னு சொல்லிக்க கேவலமா இருக்கு… உன்னை  என்ன பண்ணனும் தெரியுமா” என்று ராஜமாணிக்கத்தின் அந்தரங்கத்தில் தாக்கி விட்டான் அவரால் இனிமேல் எந்த பொண்ணுக்கும் பாதிப்பு வராத வகையில்.
 
“தென்னரசுஊ” என்று ராஜமாணிக்கம் கண்ணை மூடினார். தென்னரசுவிற்கு வெறி அடங்கவில்லை இவன் இனிமே உயிரோட இருக்கவே கூடாது என்று அரிவாளை கையில் எடுத்ததும் அரிவாளை வாங்கி தூர போட்ட ராயனோ “பெத்த புள்ள கையில் நடு ரோட்டுல எப்போ அடி வாங்குனாரோ அப்பவே உன் அப்பா செத்த பாம்புக்கு சமம் உன் அப்பாவை வெட்டி நீ உன் கையை கறை ஆக்கிக்காதே”   என தென்னரசுவின் கோபத்தை  கட்டுப்படுத்திவிட்டு ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து ராஜமாணிக்கத்தை ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வைத்தான் ராயன்.
 
அனைத்தும் முடிந்தது என்று நிம்மதியாக நின்றிருந்தனர் மக்கள். வெடிகுண்டு வெடித்த சத்தம் கேட்டு கட்டி இருந்த கோவில் மாடு கயிறை அவிழ்த்துக் கொண்டு  தறிகெட்டுஓடியது.
 
கோமளம் பயந்து ஓட கோமளத்தை துரத்தியது அவரால் அவரது குண்டு உடலை தூக்கிக் கொண்டு ஓட முடியவில்லை. “யாராவது என்னை காப்பாத்துங்க” என்று சத்தம் போட்டவர் ஓட முடியாமல் கீழே விழப்போனவரை தாங்கிப்பிடித்தான் பாலாஜி.  
 
மாடு பாலாஜியின் முன்னே வந்து கொம்பை ஆட்டவும் “தம்பி பார்த்து” என்று பதறினார் 
 
“அத்தை நீங்க எழுந்து தள்ளி நில்லுங்க” என்று கோமளத்திற்கு கையை கொடுத்து தூக்கி விட்டான்.
 
கோமளமோ “தம்பி நீங்களும் தள்ளி வந்துடுங்க மாடு சீறி நிற்குது” என்றார் படபடப்புடன்.
 
“சும்மா நில்லுங்க அத்தை” என்றான் அதட்டலுடன்.
 
வாயை பசை போட்டு ஒட்டிக்கொண்டது போல அமைதியானார் கோமளம்.
 
ராயனும் கண்ணனும் தென்னரசுவும் மாடு இருக்கும் இடத்திற்கு வந்தவர்கள் பாலாஜியின் முன்னே கோவத்துடன் சீறி நின்ற மாட்டை கண்ட ராயனோ “டேய் மூணு பேரும் சேர்ந்து மாட்டை சூதானமா பிடிங்கடா”  என்றான் மாடோ பின்னங்காலை உதறி மண்ணை கிளறியது.
 
பாலாஜியும் ராயனும் மாட்டை அடக்க முற்பட்டனர் மாடு இன்னும் சீறலாக இருக்க நால்வரும் சேர்ந்து மாட்டை பிடித்து கட்டி வைத்தனர். 
 
பயந்து நின்ற கோமளத்திற்கு தண்ணீர் குடிக்க கொடுத்தான் பாலாஜி.
 
தண்ணீரை வாங்கி குடித்த கோமளமோ “தம்பி நான் உங்களை ஒரு முறை கூட மதிக்காம தான் நடந்துக்கிட்டேன் உங்க மனசை காயப்படுத்தி பேச கூடாத வார்த்தை எல்லாம் பேசிட்டேன் நீங்க மனசுல எதையும் வச்சுக்காம என்னை மாட்டுகிட்டயிருந்து காப்பாத்திட்டீங்க மனுஷங்களை மதிக்காம இருந்ததுக்கு கடவுள் எனக்கு கொஞ்சம் நேரம் தண்டனை கொடுத்துட்டாரு” என்று கண்ணீருடன் கையெடுத்து கும்பிட்டார் கோமளம்.
 
“அத்தை நீங்க பெரியவங்க என்னை பார்த்து கையெடுத்து கும்பிடணுமா நீங்க பேசினதை நான் பெருசா எடுத்துக்கல விடுங்க” என்று கோமளத்தின் கையை பிடித்துக்கொண்டான்.
 
“என்னை மன்னிச்சிடுங்க மாப்பிள்ளை” என மனதார மன்னிப்பு கேட்டார்.
 
“அத்தை என்ன மன்னிப்புனு பெரிய வார்த்தை பேசிக்கிட்டு நீங்க எனக்கு அம்மா மாதிரி” என்றான் உருக்கமான குரலில்.
 
“என் மூத்த மருமக முல்லையை பார்க்க போகணும் எல்லாரும் வாங்க போகலாம்”  என்று கோமளம் உரக்க பேசியதும் அனைவரும் ஹாஸ்பிட்டலுக்குச் சென்றனர்.
 
பிரசவ அறையில் “என் மச்சானை வரச்சொல்லுங்க டாக்டர் வலிக்குது” என்று கத்தி கூச்சல் போட்டுக்கொண்டிருந்தாள் முல்லை.
 
“சத்தம் போடக்கூடாதுமா தலை தெரியுது பாரு புஷ் பண்ணுங்க” என்றார் சிறு அதட்டலுடன்.
 
“என்னால வலி தாங்க முடியலை மச்சான்ஆ” என்று அவள் மீண்டும் கத்த ராயன் பிரசவ அறைக்குள் நுழைந்து விட்டான்.
 
ராயனை கண்டதும் “மச்சான் என்னால முடியல” என்று கதறினாள்.
 
அவளது தலையை வருடிக்கொடுத்து “டாக்டர் சொல்றதை கேளு கொஞ்சம் புஷ் பண்ணு புள்ள” என்று அவளது நெற்றியில் முத்தமிட்டான்.
 
“என்னால முடியல மச்சான்” என்றவளோ அடுத்த நொடி தன் பலத்தை திரட்டி மூச்சை இழுத்து விட்டு “மச்சான்” என்று சத்தம் போட்டாள் அடுத்த நிமிடம் ராயனின் மகன் பூமியில் பிறந்துவிட்டான்.
 
டாக்டரோ “பாய் பேபி ராயன்” என்றார் சந்தோசத்துடன்.
 
ராயன் முல்லையின் நெற்றியில் முத்தமிட்டதும் அவள் மெல்ல கண்மூடினாள். 
 
“டாக்டர்” என்று பதறினான்.
 
“ஒண்ணுமில்லை பதறாதீங்க சாதாரண மயக்கம்தான் குழந்தையை சுத்தம் பண்ணிக்கொடுப்பாங்க” என்ற டாக்டரோ முல்லையை சுத்தப்படுத்த துவங்கினார். 
 
முல்லையை நார்மல் வார்டுக்கு மாற்றியதும் 
குழந்தையுடன் ராயன் வெளியே வந்ததும் நீ நான் என்று போட்டி போட்டு குழந்தையை பார்த்தனர்.
 
“பெரியம்மா உங்களுக்கு பேரன் பிறந்திருக்கான்” என்றவுடன் “சந்தோசம் பா என்கிட்ட கொடு” என்று வாங்கிக் கொண்டார் கோமளம்.
 
“அப்படியே எங்க அப்பா ஜாடைல இருக்கான்ல  பெரிய அண்ணி” என்றார் அழகம்மை சந்தோசத்துடன்.
 
“ஆமா அழகு அப்படியே உரிச்சு வைச்சுருக்கான்” குழந்தையை பார்த்ததும் தன் கெட்ட குணம் எல்லாம் மறைந்து போனது அவருக்கு.
 
குழந்தை பசியில் வாயில் விரலை வைத்து சப்பியதும் 
 
“முல்லை கிட்ட கொடுங்க பசியாத்தட்டும்” என்று பக்கம் நின்ற அமுதாவிடம் கொடுத்தார்  கோமளம்.
 
கோமளம் எங்கே தன் பேரன் மேல் கோபத்தை காட்டுவாரோ என்று பயந்து இருந்தார் அமுதா. ஆனால் மாறாக கோமளம் தன் பேரனை  கொஞ்சியதும் அமுதாவுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை.
 
முல்லையை நார்மல் வார்டுக்கு கொண்டு வந்ததும் அமுதா குழந்தையுடன் முல்லை இருந்த வார்டுக்குள் சென்று முல்லையிடம் குழந்தையை கொடுத்து பசியாற்ற வைத்தார்.
 
குழந்தை பசியாறியதும் கொட்ட கொட்ட முல்லையை பார்த்தான் ராயனின் மகன். அமுதா வெளியே வரவும் ராயன் மட்டும் முதலில் உள்ளே சென்றான். 
 
“மச்சான் அப்படியே உங்களை போலவே இருக்கான் பாருங்க கண்ணு பாருங்க உங்களை போலவே” என்று கண்ணைச் சிமிட்டினாள்.
 
“தேங்க்ஸ் புள்ள” என்று அவள் பக்கம் குனிந்து முல்லையின் நெற்றியில் முத்தமிட்டு மகனின் நெற்றியில் பட்டும் படாமலும் முத்தமிட்டு “என் பொண்டாட்டியை கொஞ்சம் கஷ்டப்படுத்திட்ட தங்கம்” என்று மகனை செல்லமாய் மிரட்டினான்.
 
ராயனின் மகனோ அவனை உற்று பார்த்து சிரித்தான்.
 
“என்ன ராயா நீ மட்டும் உன் குழந்தையை கொஞ்சினா போதுமா நாங்களும் கொஞ்சுறோம் தள்ளி நில்லு” என்ற அழகம்மையோ முல்லையின் மடியில் இருந்த குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டார். 
 
“அத்தை மருமகனை என்கிட்ட கொடுங்க” என்று குழந்தையை வாங்கி “தங்கம் அத்தையை பாரு” என்று குழந்தையின் கன்னம் தொட்டு கொஞ்சினாள் நதியா.
 
“அடுத்த வருஷம் புள்ளையை பெத்து கொடு ராயன் மகனுக்கு ஜோடியா” என்று நதியாவின் தோளில் மெதுவாய் இடித்தார் அழகு.
 
“ஆமா பின்னே என் மருமகனை யாருக்கும் விட்டு தரமாட்டேன். எனக்கு பொண்ணு தான் பிறக்கும். என் மகளை என் மருமகனுக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன். என் உரிமையை யாருக்கும் விட்டு தர மாட்டேன்” என அழுத்தி கூறியவள் கோமளத்தை பார்த்தாள். 
 
தீபாவோ “ஏன் நதியா என் மகனுக்கு உன் மகளை கொடுக்க மாட்டியா?” என்று கிண்டலாக கேட்கவும் 
 
“ரெண்டு பொண்ணு பெத்துப்பேன் அண்ணி நீங்க கவலைப் படாதீங்க” என்றவளோ  பாலாஜியை பார்த்தாள்.
 
அவனோ மானத்தை வாங்குறாப்பா என்று பெருமூச்சு விட்டான்.
 
கோமளம் அமைதியாக இருக்கவும் “ஏன்மா உங்க வீட்டு பேரனை என்வீட்டுப் பொண்ணுக்கு தரமாட்டீங்களா?” என்றாள்.
 
“உனக்கு இல்லாத உரிமையாடி புள்ளைய பெத்து போடு என் பேரன்களுக்கு நான் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போறேன்” என்று வாயெல்லாம் பல் தெரிய சிரித்தார் கோமளம்.
 
தாயும் மகளும் சேர்ந்து விட்டனர். தாயின் கோபத்தையும் சாபத்தையும் மகளிடம் எத்தனை நாள் காட்டமுடியும். மகள் செய்த தவறை மன்னித்து ஏற்றுக்கொண்டார் கோமளம்.
 
“அடுத்த வருசத்துல இருந்து குழந்தை பெத்துக்க ஆரம்பிக்குறேன் பாருங்க” என்றதும் “அதுக்குத்தானே பெரியவங்க இருக்கோம்” என்றனர் வீட்டு பெரியவர்கள்.
 
தென்னரசுவோ “நானும் பையன் பெத்து தரேன் பாலாஜி மச்சான் எனக்கு ஒரு பொண்ணை பெத்து கொடுத்துடு என் வீட்டுக்கு மருமகளா அழைச்சுட்டு போவேன்” என்றான்.
 
“உன் தங்கச்சிக்கு ஓகேனா எனக்கு ஒரு கஷ்டமும் இல்ல மச்சான்” என்றான் மகிழ்ச்சியாக.
 
“எனக்கு டபுள் ஓகே மாமா” என பாலாஜியை பார்த்து கண்ணைச் சிமிட்டினாள்.
 
முல்லையோ “அடுத்து நான் பொண்ணு பெத்து கொடுப்பேன் நதியா நீ பையனை பெத்து கொடு” என்றாள் அவள் பங்குக்கு.
 
“முல்லை ராயன் ஜாதகத்துல பையனுக்கு தான் வாய்ப்பு அதிகம் இருக்காம்” என்று அழகம்மை விளையாட்டாய் பேச 
 
“பொண்ணு பிறக்குற வரைக்கும் விடமாட்டோம் அத்தை” என்று கன்னக்குழி தெரிய சிரித்து  முல்லையை பார்த்து கண்ணைச் சிமிட்டினான்.  முல்லையும் கண்ணைச் சிமிட்டினாள். அங்கே சந்தோசம் நிறைந்திருந்தது. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை… நாமும் சந்தோசமாய் விடைபெறுவோம் பிரண்ட்ஸ் அடுத்த கதையில் விரைவில் சந்திப்போம்.
 
நன்றி…
 
ஆறு வருடங்களுக்கு பிறகு …
 
ராயன் தனது பால்பண்ணை  உற்பத்தி பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து தொழில் வட்டாரத்தை பன் மடங்கு பெருக்கி இருந்தான். கண்ணன் ராயனுக்கு துணையாக இருந்து கொண்டான். ராயனை கேட்காமல் ஒரு துரும்பை கூட அசைக்கமாட்டான் கண்ணன்.
 
ராயன் பாலாஜிக்கு தொழிலில் தோள் கொடுத்து தூக்கி விட்டான். ராயனிடமிருந்து சீர் பணம் ஒரு பைசா வாங்க மறுத்துவிட்டான் பாலாஜி. தன் சொந்த உழைப்பில்  பால்பண்ணையை புதியதாக ஆரம்பித்து நடத்திக்கொண்டிருந்தான்.
 
ராயன் வீடு முழுக்க குழந்தைகளாக  நிறைந்திருந்தனர். 
 
ராயன் முல்லை மகன்கள் ஆரவ், அகரன், அதியன், அபிநாத் நான்கு பேர்.
 
கண்ணன் தீபா மகள்கள் பவன்யா, அதிரூபா, அவந்திகா…
 
பாலாஜி நதியாவின் மகள்கள் ஆதிரை, ஆதர்ஷினி மகன் அபிஜித்.
 
“ரெண்டு பொண்ணு போதும் கண்ணா  பேமிலி பிளானிங் பண்ணிடலாம்” என்ற தீபாவை  “அடுத்து பையனா பிறக்கும் சும்மா இருடி  எனக்கு பையன் வேணும்” என்று தீபாவை  பேமிலி பிளானிங் பண்ண விடவில்லை. தீபாவுக்கு அடுத்தும் பெண் பிள்ளைதான் பிறந்தது. 
 
கோமளமோ “அடுத்தும் உனக்கு பொண்ணு தான் டி பிறக்கும் நீ இப்பவே பேமிலி பிளானிங் பண்ணிக்கோ” என்றிருந்தார் மனதில் மகனுக்கு பையன் பிறக்கவில்லை என்று கவலை இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை கோமளம். 
 
சொந்தக்காரர்கள் அடுத்தும் கண்ணனுக்கு பொண்ணா என்று சலித்துக் கொள்ள “எத்தனை பொண்ணு பொறந்தாலும் என் மூத்த மகன் ராயன் இருக்கும் போது நான் கவலை படமாட்டேன் அவன் பசங்களை விட என் பேத்திங்க மேலதான் உயிராய் இருக்கான்” என்று பெருமை பீத்தி கொண்டார்.
 
தென்னரசு மகன் தியா, அர்ஷன்.
 
தென்னரசு ஆர்கானிக் காய்கறிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துக் கொண்டிருந்தான். ராஜமாணிக்கத்தை தோப்பு வீட்டில் படுக்க வைத்திருந்தான். அவரால் எழுந்து நடக்க முடியாது. ஒருத்தர் தயவு இல்லாமல் சாப்பாடு கூட சாப்பிட முடியாத நிலையில் இருந்தார். பண்ணிய பாவங்களுக்கு தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தார். பெத்த கடனுக்காக ஒரு முறை பார்த்து விட்டு வருவான். மகனிடம் பேசுவதற்கு துடிப்பார் ராஜமாணிக்கம்.  அவரால் பேசவும் முடியாது தென்னரசு பேசவும் மாட்டான். ராஜமாணிக்கத்தை பார்த்துக்கும் ஆளிடம் மட்டும் பேசிவிட்டு வந்து விடுவான்.
 
பூங்கொடிக்கு மான்டிசரி ஸ்கூல் வைத்து கொடுத்து விட்டான் தென்னரசு. 
 
குமுதா தியா அர்ஷனை பார்த்துக்கொண்டார்.
 
ப்ரனேஷ் அரசி முகூர்த்தத்துக்கு மண்டபத்தில் ரெடியாகிக் கொண்டிருந்தனர் ராயனின் குடும்பம்.
 
குட்டிஸ்கள் அனைவரையும் பெரியவர்கள் குளிக்க வைத்து ரெடி பண்ணி மண மேடைக்கு அழைத்து வந்தனர்.
 
கண்ணன் தீபாவும் ரெடியாகி மணமேடைக்கு முதலில் வந்து விட்டனர். “அத்தை அம்மா எப்போ வருவாங்க?” என்று பாலாஜியின் கடைசி மகன் தீபாவிடம் கேட்கவும் 
 
“இதோ அம்மா வந்துட்டா பாரு செல்லம்” என்று அபியை தூக்கி கன்னத்தில் முத்தம் கொடுத்தாள் தீபா.
 
பாலாஜியும் நதியாவும் மணமேடைக்கு வந்துவிட்டனர்.
 
அடுத்து தென்னரசுவும் பூங்கொடியும் வந்துவிட ராயனும் முல்லையும் மட்டும் மிஸ்ஸிங். 
 
குழந்தைகள் “ராயன் மாமா, முல்லை அத்தை இன்னும் வரலையே” என்று மண்டபத்தை சுற்றி பார்த்து தேடினார்கள்.
 
“விடுங்க மச்சான் இன்னும் புது மாப்பிள்ளைனு நினைப்பு புடவை மடிப்பு எடுக்க உதவி பண்ண சொன்னா அங்க இங்க கையை வைக்குறீங்க”  என்று செல்ல கோபம் கொண்டு அவன் கையை தட்டி விட்டாள் முல்லை. 
 
“வயித்துக்குள்ள புள்ளைய வைச்சுக்கிட்டு புடவை கட்ட சிரமப் படுறாளேன்னு உனக்கு உதவி பண்ண வந்தேன்டி ரொம்பத்தான் பண்ணுற” என்று அவளது கன்னத்தை பற்றியதும் “விடுங்க மச்சான் எல்லாரும் வெளியே இருக்காங்க சும்மா வம்பு பண்ணிக்கிட்டு” என்று சிணுங்கினாள்.
 
“நாலு குழந்தை பிறந்த பிறகும் புது பொண்ணு போல கன்னம் மின்னுது” என்று அவளது இதழில் முத்தமிட துவங்கினான்.
 
ராயனின் முத்தத்திற்கு இடைஞ்சல் பண்ண வந்தனர் குழந்தைகள் அனைவரும்…
 
“பெரியம்மா பெரியப்பா” என்றும் “அத்தை மாமா முகூர்த்தத்துக்கு நேரம் ஆச்சுன்னு உங்களை வர சொன்னாங்க” என்று கதவு தட்டினார்கள் வாண்டுகள்.
 
இருவரும் மெல்ல விலகி “ஒரு முத்தம் கொடுக்க விடமாட்டாங்கபா” என்று சலித்தாலும் முல்லையின் சேலையை சரி செய்து விட்ட ராயன் கதவை திறந்ததும் “மாமா, பெரியப்பா” என்று குழந்தைகள் ராயன் காலை கட்டிக் கொண்டனர்.
 
கட்டிக் கொண்ட குழந்தைகளுக்கு கன்னம் கிள்ளி முத்தம் வைத்து “பசங்களா வாங்க போகலாம்” என்று அனைவரையும் கூட்டிக் கொண்டு மணமேடையில் ஏறினான். 
 
முல்லை வயிற்றை பிடித்துக் கொண்டு தேர் போல நடந்து வந்து ராயன் அருகே நின்றாள்.
 
பாலாஜியோ “டேய் இந்த முறையாவது உனக்கு  பொண்ணு பிறக்குமா?” என்றான் கிண்டலாக.
 
“இந்த முறை பொண்ணு பொறக்கலனா அடுத்து ட்ரை பண்ணுவோம் இல்ல புள்ள” என்று தன் பக்கம் நின்ற முல்லையை பார்த்துக் கண்ணடித்தான் ராயன்.
 
“சும்மா இருங்க மச்சான்” என்று ராயன் தோளில் சாய்ந்தாள் முல்லை.
 
“கெட்டி மேளம் கெட்டி மேளம்” என்று ஐயர் சப்த மிட அரசி கழுத்தில் ப்ரனேஷ் தாலி கட்டினான். 
 
ப்ரனேஷ் அரசி நடுவில் அமர்ந்திருக்க பெரியவர்கள் மணமக்கள் இருபுறமும் நாற்காலியில் அமர்ந்திருந்தனர். பெரியவர்கள் மடியில் குழந்தைகள் அமர்ந்துக் கொண்டனர் கண்ணன் தீபா, தென்னரசு பூங்கொடி, பாலாஜி நதியா, ராயன் முல்லை நாலு தம்பதிகளும் கையை கோர்த்து நின்றனர்.
 
“ஸ்மைல்” என்றார் போட்டோஃகிராபர்.
 
ராயன் குடும்பம் மொத்தமும் சிரித்த முகத்துடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.
 
நாமும் சந்தோச சிரிப்புடன் விடைபெறுவோம்.
 
வாழ்க வளமுடன் 
 
சுபம்
 
கதை எப்படி இருக்குனு சொல்லுங்க பிரண்ட்ஸ் 
 
 
 
 
 
 
  •  

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 34

தாய்மையின் பூரிப்பில் புது தாமரைப்பூவாய் மலர்ந்த முல்லையை பட்டு வேஷ்டி சட்டையில் கையை கட்டி நின்று இரசித்துக்கொண்டிருந்தான் வல்லவராயன். 

“மாப்பிள்ளை எல்லாரும் நலங்கு வச்சாச்சு நீங்க வந்து நலங்கு வைங்க” என்றார் நீலகண்டன்.

அவனோ முல்லையின் பக்கம் நின்ற நதியாவின் கையை பிடித்து வந்தவன் “முல்லை நதியாவுக்கு வளையல் போட்டு விடு” என்றவுடன் அங்கிருந்த பெண்கள் கூட்டம் “அட நமக்கு  கூட இந்த யோசனை தோணலையே” என்று பேசி சிரித்தனர்.

முல்லை நதியாவுக்கு வளையலை போட்டு “அடுத்த வருஷம் உனக்கும் வளைகாப்பு நடக்கும்டி” என கன்னக்குழி தெரிய சிரித்தாள். 

நதியாவுக்கோ கை நிறைய வளையல் போட்டதும் தானும் கூடிய விரைவில் தாய்மை அடைய போகிறோம் என்ற சந்தோசம் பூரிப்பில் கையை தூக்கி வளையல் ஓசையை இரசித்தவள் தன்னவன் எங்கே நிற்கிறான் என்று கூட்டத்தை சுற்றிப்பார்த்தாள். 

பாலாஜி ராயன் பக்கம்தான் நின்றிருந்தான்..  பாலாஜி மட்டும் தனியே நிற்க அவனுடன் சென்று பக்கத்தில் நின்றவள் “என் கைக்கு கண்ணாடி வளையல் நல்லாயிருக்கா மாமா?” என்றாள் கண்களை உருட்டி.

“உன் அண்ணன் வாங்கி கொடுத்த வளையல் நல்லாயிருக்காமலா இருக்கும் நல்லாயிருக்கு ஆனா இன்னிக்கு நைட் இந்த வளையல் எல்லாம் உடைஞ்சிடுமே” என்றான் கூட்டத்தை சுற்றிப்பார்த்தபடியே கன்னத்தின் உள்ளே நாக்கை சுழட்டியபடி.

நதியா முதலில் கணவன் கூறியது புரியாமல் விழித்தவள் அவன் சிரிப்பில் கள்ளம் இருக்க அடுத்த நொடி அவன் சிரிப்பிற்கான காரணம் புரிந்து அவனை செல்லமாய் முறைத்தவளின்  கன்னம் செங்காந்தள் மலராக மலர்ந்தது.

கோமளமோ இருவரின் செயலை கண்டு “இத்தனை சொந்த பந்தங்கள் கூடி இருக்கற  இடத்துல நின்னுக்கிட்டு ரெண்டும் சேர்ந்து அலப்பறை பண்ணுதுங்க எல்லாம் கலி காலம்” என்று மகளை முறைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார். மகள் மருமகனிடம் சந்தோசமாக இருக்கிறாளென்று ஆனந்தப்படாமல் பொங்கிவிட்டுச் சென்றார். இன்னும் பாலாஜியை அவரால் மருமகனாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

பாக்கெட்டில் வைத்திருந்த முத்து பதித்த வளையலை முல்லைக்கு போட்டு விட்டு அவளது கன்னத்தில் சந்தனத்தை தடவிவிட்டு யாரும் அறியாமல் இதழ் குவித்து முத்தமிட்டான் ராயன்.

“ம்ம் எல்லாரும் இருங்காங்க மச்சான்” என்று அவளது செர்ரி பழ உதடுகள் அசையவும் அவளது இதழ்களை கவ்விக்கொள்ள ஆசைப்பட்ட மனதை அடக்கிக்கொண்டு எழுந்து நின்றான்.

ராயனுக்கும் முல்லைக்கும் வளைகாப்பு சாப்பாடு முதலில் பரிமாறிவிட்டு சொந்தங்களுக்கு சாப்பாடு பரிமாறினார்கள்.

தென்னரசுவும் பாலாஜியும் பந்தியை கவனித்தனர். சாம்பார் ஊற்றிக்கொண்டு வந்த பாலாஜியோ கோமளம் அமர்ந்து சாப்பிடுவதை கண்டு பக்கத்து இல்லைக்கு சாப்பாடு வைத்துக்கொண்டிருந்த தென்னரசுவின் தோளில் இடித்ததும் “சொல்லுடா” என்று திரும்பினான் தென்னரசு. 

“என் மாமியார் என்னை பார்த்ததும் எழுந்து போய்டுவாங்க நீ குழம்பு ஊத்துடா” என்று தென்னரசுவிடமிருந்து சாப்பாடு பாத்திரத்தை வாங்கிக்கொண்டான் பாலாஜி.

“சீக்கிரம் குழந்தை பெத்து பெரியம்மா முகத்துல உச்சா போக வைடா அதுக்கப்புறம் பாரு மாப்பிள்ளை மாப்பிள்ளைனு உன்னை தலையில தூக்கி வச்சு கொண்டாடுவாங்க” என்றான் கிண்டலுடன்.

“அட போடா உங்க பெரியம்மாவுக்கு இந்த ஜென்மத்துல முதல் எதிரி நானாத்தான் இருக்கும் அங்க பாரு என்னை பார்த்து எப்படி முறைக்குறாங்க என்ன என்னை ஒன்னுமில்லாதவன்னு சொல்லும் போது கஷ்டமாத்தான் இருக்கு! பட் எனக்கு அவங்க ஒதுக்கத்தால முன்னேறணும்னு ஒரு உத்வேகம் வருது. என்னை மோட்டிவேட் பண்ணுறாங்க ஒருவகையில சந்தோசம்தான் என் நண்பன் ராயனுக்காக என்னை யார் என்ன பேசினாலும் நான் சகிச்சுக்கிட்டு இருப்பேன்டா” என்றான் கண்ணைச்சிமிட்டி.

“நீ நல்லவன்டா உன்னை பெரியம்மா ஏத்துப்பாங்க காலம் வரும்டா பந்தியை கவனிப்போம்” என்று வேலையை பார்த்தனர் இருவரும்.

வளைகாப்பில் ஒரே இடத்தில உட்கார்ந்ததில் முல்லை சோர்ந்து போய் விட்டாள். வளைகாப்பு முடித்ததும் “ரெஸ்ட் எடுமா” என்று அழகம்மை அவளை அறைக்கு அனுப்பி வைத்தார்.

சொந்தங்களை வழியனுப்பி வைத்து விட்டு அறைக்குள் நுழைந்தான் ராயன். நகைகளை கழட்டிக்கொண்டிருந்தவளின் கையை பிடித்து “நீ ஸ்டெய்ன் பண்ணிக்காதே புள்ள நான் உதவி பண்ணுறேன்” என்று அவளது கழுத்தில் போட்டிருந்த நகைகளை அகற்றி விட்டு “சேலையை மாற்றிவிட உதவட்டுமா?” என்று அவளது காதில் மீசையை உரசினான்.

“மச்சான் நம்ம வீடு முழுக்க சொந்தம்  நிறைஞ்சு இருக்காங்க என்ன பண்ணுறீங்க நதியாவும் பாலாஜி அண்ணாவும் கிளம்பணும்னு சொல்லிட்டிருந்தாங்க அவங்கள வழி அனுப்பி வச்சிட்டு வந்து வைச்சுக்கலாம் நம்ம ரொமான்ஸை” என்றாலும் அவனது தாடையை பிடித்து கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.

“இந்த முத்தம் உன் மச்சானுக்கு பத்தாதுடி” என்று அவளது கன்னத்தோடு கன்னம் இழைந்தவன் அவளது இதழில் அவளுக்கு வலிக்காவண்ணம் முத்தாடினான்.

ராயன் போன் சிணுங்கவும் “கொஞ்சம் நேரம் முத்தம் கொடுக்க விடமாட்டானுங்களே கரடி போல வந்துடுவாங்க” என்ற சலிப்புடன் மனைவியின் இதழை விட்டு பிரிந்தவன் “ரொம்ப பண்ணுறாங்கடி” என்று பெரும்மூச்சுவிட்டு “சொல்லு மாப்பிள்ளை” என்றான் கோபத்தை விட்டு.

“நா.நாங்க கிளம்புறோம்டா” என்ற பாலாஜியை

“இப்ப என்ன அவசரம் கிளம்புறேனு பறக்குற… பால்கறக்க நம்ம பண்ணையிலிருந்து ரெண்டு ஆளை அனுப்பி வச்சிருக்கேன் நைட் கிளம்பலாம்” என்று பேசிக்கொண்டே கதவு திறந்து வந்தான்.

நதியா தையல்நாயகி கொடுத்த பலகாரப் பையை கையில் வைத்து ரெடியாக நின்றாள்.

“பாப்பா நைட் இருந்துட்டு காலையில கிளம்பலாம்” என்று அவளது கையிலிருந்து பையை வாங்கினான் ராயன்.

“அண்ணா நாங்க கிளம்பறோம் என்வீட்டுக்காரருக்கு மரியாதை இல்லாத இடத்துல என்னால ஒரு நிமிசம் இருக்க முடியாது” என்றாள் அடக்கப்பட்ட கோபத்துடன்.

“உன் மேல இருக்க கோபம் போகணும்னா நீ அடிக்கடி வந்து போக இருக்கணும் பெரியம்மா  மனசு மாறிடுவாங்க… சும்மா கத்துவாங்களே தவிர மனசுல எதையும் வச்சிக்கமாட்டாங்கடா ஒருநாளைக்கு அண்ணா கூட இருக்க மாட்டியா” என்றான் பாசக்குரலில் தங்கையின் தலையை வருடிக்கொண்டே.

“ம்க்கும் போறவங்களை ஏன் இழுத்து பிடிச்சு வைப்பானேன் போகட்டும் விடு ராயா” என்றார் அடக்கமாட்டாமல் கோமளம்.

“இதுக்கு மேல இங்க இருக்கணுமா அண்ணா நாங்க ஒண்ணும் இல்லாதவங்க கிடையாது நீங்களெல்லாம் மூக்கு மேல விரல் வச்சு பார்க்கும்படி நாங்களும் உயரத்துக்கு வருவோம்… உங்களை விட பெரிய பால்பண்ணையா வைப்போம்… இப்போ நாக்கு மேல பல்லை போட்டு எங்களை கேலி பேசறவங்களெல்லாம் அப்போ எங்க முகத்தை கொண்டு வச்சிப்பாங்கனு பார்க்குறேன்” என்று பொரிந்து தள்ளி விட தன்னை விட்டுக்கொடுக்காத மனைவியை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்த பாலாஜியின் கையை பிடித்து “வாங்க போகலாம்” என்று நாயகி கொடுத்த பலகாரப்பையையும் வாங்காமல் வைத்து விட்டுச் சென்றாள் கோபத்துடன்.

“ஏன் அக்கா இப்படி பேசுனீங்க வீட்டு புள்ளை மனம் நோக அனுப்பக்கூடாது” என்று ராயன் கையில் இருந்த பலகாரப் பையை வாங்கிக் கொண்டு ஓடினார் தையல்நாயகி. அழகம்மையும் கோமளத்தை முறைத்து விட்டு நாயகி பின்னே சென்றார்.

ராயனோ “இப்போ திருப்தியா பெரியம்மா நம்ம வீட்டுப் பொண்ணை நாமளே மதிக்கலைனா எப்படி!” என்று கடுப்பாக பேசியவன் வாசலுக்குச் சென்றான்.

பாலாஜி காரில் ஏறிவிட்டான் கார் கதவை வேகமாக திறந்தவளின் கையை பிடித்து நிறுத்தி விட்டான்.

தையல்நாயகியோ “பாப்பா உனக்கு பிடிக்குமேனு அதிரசமும், ரவாலட்டும், இனிப்பு சீடையும் செஞ்சு வைச்சிருக்கேன். உன் கோபத்தை தள்ளி வைச்சுட்டு சித்தி செய்த பலகாரங்களை வாங்காம போனா என் மனசு தாங்காது தங்கம்” என்று மகளிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார் நாயகி.

அழகம்மையோ “அண்ணி இவ்ளோ தூரம் சொல்லும்போது நீ பலகாரப் பையை வாங்காம இருக்க நதியா… இதுதான் எங்களுக்கு நீ கொடுக்கற மரியாதையா?” என்று சிடுசிடுக்கவும் 

“என்னை மன்னிச்சிடுங்க அத்தை இந்த வீட்டு ராஜமாதா எங்களை மதிக்காம பேசுறாங்க.   எப்படி இந்த பலகாரத்தை கொண்டு போறது.  ஏதோ எங்ககிட்ட ஸ்வீட் வாங்க காசு இல்லாத மாதிரி இருக்கு இந்த பலகாரத்தை எடுத்துட்டு போறது போல இருக்கு அத்தை” என்று மூச்சு வாங்க பேசினாள் நதியா.

ராயனோ “நல்லா பேசக் கத்துக்கிட்ட பாப்பா இப்போ பையை வாங்க போறியா இல்லையா?” என்று அதட்டல் போட்டதும் பாலாஜியை  பார்த்தாள் நதியா.

“வாங்கிட்டு வா” என உதடசைத்தான் பாலாஜி.

“ஓ மெயின் ஸ்விட்ச் அங்க இருக்கா..? உங்க வீட்டு விசேஷம் வரும்ல அப்போ நானும் இதே போல நடந்துக்குறேன்” என்றான் சிரிப்பை அடக்கிக்கொண்டு.

“அச்சோ அண்ணா நான் சும்மா ஏதோ பேசிட்டேன் எனக்கு உன்னை விட்டா யாரு ண்ணா சொந்தம்னு இருக்காங்க அம்மா பேசினதும் கோபம் வந்துருச்சு” என்று ராயன் நெஞ்சில் சாய்ந்து விசும்பினாள்.

“அத்தையோட இயல்பு குணம் உனக்கு தெரியும்தானே நதியா எங்க வீட்டு இளவரசி இப்படியே அழுதுக்கிட்டே இருந்தா எப்படி” என்று கட்டைப்பையில் பழங்களை கொண்டு வந்து பாலாஜியின் காரில் வைத்தாள் தீபா.

“நான் பலகாரமே வேணாம்னு சொல்றேன் நீங்க என்ன அண்ணி இத்தனை பழங்களை கொண்டு வந்து வைக்குறீங்க?” என்று முகத்தை தூக்கினாள்.

“ரொம்ப பண்ணாதடி நாங்க பாசமா கொடுக்கறதை ஒழுங்கா வாங்கிட்டு போ” என்று செல்ல கோபத்துடன் வயிற்றை பிடித்துக்கொண்டு நடந்து வந்தாள் முல்லை. 

முல்லையை பார்த்ததும் கோபம் குறைந்து நதியாவின் முகத்தில் லேசாக சிரிப்பு வந்தது.

கண்ணனோ கையில் நகைப்பெட்டியுடன் வந்தவன் “பாப்பா உனக்கு அண்ணாவோட கிஃபிட்” நகைப் பெட்டியிலிருந்து செயினை தங்கையின் கழுத்தில் போட்டு விட போக “நான் சாப்பிடற பொருளையே வேணாம்னு சொல்லுறேன் நீங்க தங்கத்துல செயினை போட்டு விடுறீங்க அண்ணா… எனக்கு உங்க அன்பு ஒண்ணே போதும். நம்ம குடும்பத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தின எனக்கு இன்னும் பாசத்தை குறையாம அள்ளிக்கொடுக்குறீங்க… எந்த ஜென்மத்துல புண்ணியம் பண்ணினேனோ தெரியல” என்றாள் கண்ணனின் கையை பிடித்துக்கொண்டு கண்கள் கலங்கினாள் நதியா.

“அழுது சீன் போட்டு நகையை ஆட்டைய போட்டுட்டு போறா பாரு” என்று ஹாலுக்குள் அமர்ந்துக் கொண்டு பொருமினார் கோமளம்.

“மாப்பிள்ளை காரை விட்டு இறங்கி வாங்க” என்றார் தெய்வநாயகம்.

காரை விட்டு இறங்கி வந்த பாலாஜியோ தெய்வநாயகம் பக்கத்தில் சென்றவன் “அப்பா என்னை மாப்பிள்ளைனு மரியாதை கொடுத்து பேசாதீங்க… வழக்கம் போல பேரு சொல்லியே கூப்பிடுங்க” என்றான் சங்கோஜத்துடன்.

“ராயன் நண்பனா இருக்கும்போது பேரு சொல்லி கூப்பிடலாம் தப்பில்ல…  இப்போ எங்க வீட்டு மருமகனை வா போனு கூப்பிட முடியாதுப்பா” என்று சிரித்தவரோ ராயனை பார்த்தார்.

அவனோ பாக்கெட்டில் வைத்திருந்த டாலர் செயினை எடுத்து “வாசல்ல வைச்சு கொடுக்குறேனு தப்பா எடுத்துக்காதீங்க மாப்பிள்ளை என் தங்கச்சி வீட்டுக்குள்ள நிற்கமாட்டேன்குறா வாசலில் வச்சு உங்களுக்கு சீர் பண்ணுறோம்” என்று ராயனின் குரல் வருத்தப்பட்டு வந்தது.

“என்ன ராயா இப்படியெல்லாம் பேசற உன் பாசம் எனக்கு எப்போதும் போதும் நகையெல்லாம் வேணாம் அப்புறம் நகைக்கு ஆசைப்பட்டுத்தான் நான் உன் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கிட்டதா ஆகும்” என்றவனின் குரல் கரகரத்தது.

“இப்போ நாங்க ஆசையா எங்க வீட்டு மருமகனுக்கு சீர் பண்ண நினைக்குறோம் நீ மறுக்காம வாங்கணும் இது என்னோட அன்புகட்டளை” என்று சொல்லியதோடு அல்லாமல் பாலாஜியின் கழுத்தில் ஐந்து பவுன் பட்டை செயினை போட்டு விட்டான் ராயன்.

கண்ணனோ “மாப்பிள்ளை இது என்னோட சீர்” என்று பாலாஜியின் கையை பிடித்து கைகாப்பை போட்டு விட்டான் பாலாஜிக்கு கண்கள் கலங்கியது.

“யாரும் இல்லாத அனாதை பயலுக்கு பார்த்து பார்த்து சீர் பண்ணுறீங்க” என்றவனின் கண்களில் கண்ணீர் வழிந்து விட்டது. 

“அடேய் மாப்பிள்ளை என்ன அழுதுக்கிட்டு இனிமே நாம எல்லாம் சந்தோசமா இருக்கப்போறோம் இனிமே ஒவ்வொரு விசேஷமும் நீயும் தங்கச்சியும் இல்லாது எங்க வீடு நிறையாது ரொம்ப நேரம் ஆச்சு கிளம்புங்க” என்றவனோ சந்தோச முகத்துடன் பாலாஜியை அணைத்துக்கொண்டான்.

“ரொம்ப நன்றிடா நண்பா” என்று அவன் காதில் கிசுகிசுத்தான்.

“நீ என் தங்கச்சியை லவ் பண்ணவே இல்லைனு எனக்கு தெரியும்டா என் குடும்ப மானம் போகக்கூடாதுனு உன் மேல பழியை போட்டுக்கிட்டேல்ல உன்னை நண்பனா அடைய நான்தான் பாக்கியம் பண்ணி இருக்கணும்டா” என்று இருவரும் பேசிக்கொண்டேயிருந்தனர்.

“ராயா மாப்பிள்ளை கிளம்பட்டும் நேரமாச்சு” என்று தெய்வநாயகம் கூறவும்

“கிளம்புடா நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும் அடுத்த வருசம் என்னை மாமன் ஆக்கணும் உங்க பிள்ளையை என் மடியில வச்சு காது குத்தணும்” என்றான் முகம் முழுக்க புன்னகையுடன்.

பாலாஜிக்கு வெட்கச் சிரிப்பு வந்துவிட்டது. சந்தோசமாக சிரித்தபடியே காரில் ஏறினான்.

தென்னரசுவோ “எனக்கு எந்த செயினும் இல்லையா அண்ணா” என்று வந்து நின்றான் ராயன் பக்கத்தில் தியாவை தூக்கிக்கொண்டு.

“உனக்குத்தான் என் அத்தை பொண்ணு பூங்கொடியை தங்கமாட்டம் தாரை வார்த்துக்கொடுத்திருக்கேன்லடா” என்றான் உதட்டுக்குள் சிரிப்பை மறைத்து வைத்துக்கொண்டு.

“ஆமா ஆமா சொக்கத்தங்கம் அண்ணா” என புன்னகைத்தவன் “நாங்களும் கிளம்பறோம்” என்று காரில் ஏறினான்.

குமுதாவும் அரசியும் காரில் ஏற பூங்கொடியின் கையில் பலகாரப் பையை கொடுத்தார் தையல்நாயகி. “உனக்கு பிடிச்ச லட்டும் குலோப்ஜாமூனும் வச்சிருக்கேன்மா” என்றார் சிரித்த முகத்துடனே.

தென்னரசு கார் கிளம்பியவுடன் பரமசிவமும் மங்களமும் “நாங்களும் கிளம்பறோம் ராயன் மாப்பிள்ளை” என்றதும்

கலகலப்பாக இருக்கும் பிரனேஷின்  முகம் களையிழந்து போயிருந்தது. அமைதியாக கையை கட்டி தலைகுனிந்து நின்றிருந்தான்.

“மாப்பிள்ளை ஊருக்குள்ள பல தவறை பண்ணிட்டு நல்லவன் வேஷம் போட்டு சுத்துறாங்க நீ தப்பே பண்ணாம தலைகுனிஞ்சு நிற்கக்கூடாது உன் கம்பெனியை அடுத்த லெவலுக்கு கொண்டு போ… வீடியோவை எல்லாம் டெலீட் பண்ண வச்சிட்டேன் பேசறவங்க பேசிக்கிட்டேதான் இருப்பாங்கப்பா… பிஸ்னஸ்ல கவனம் செலுத்து காலம் எல்லாத்தையும் மாற்றும்”  என்று பிரனேஷின் தோளில் தட்டிக்கொடுத்தான் ஆதரவாக.

“தேங்க்ஸ் மாமா” என்று ராயனை அணைத்துக்கொண்டான் பிரனேஷ்.

பரமசிவமும் ராயனின் கையை பிடித்து “ரொம்ப நன்றி மாப்பிள்ளை” என்று கண் கலங்கினார்.

“நீங்க பிரனேஷ்க்கு துணையா இருங்க மாமா” என்றான் இதழ் விரிப்புடன்.

காரில் ஏறிய பரமசிவமோ ‘உனக்கு துரோகம் நினைச்சேன் ராயா… படுக்குழியில விழப்போன என் குடும்பத்தை கரை ஏத்தி விட்டிருக்க நீதான் உயர்ந்த மனிதன்’ என்று மனதில் எண்ணியவர் ராயனை பார்த்து கையெடுத்து கும்பிட்டு தீபாவை பார்த்து கண்ணசைத்து காரை எடுத்தார். மங்களமோ வரேன் பார்த்துக்கோ என்று கையசைத்தார்.

கார் கிளம்பினதும் “முல்லை நம்ம வீட்டுக்கு போகலாமா?” என்றார் நீலகண்டன்.

“அது வந்துங்கப்பா” என்று முந்தானையை திருகிக்கொண்டு ராயனை பார்த்தாள் தயங்கியபடியே.

அவனோ “போய்ட்டு வா வளைகாப்பு முடிச்சா அப்பா வீட்டுக்கு போகணும் தானே என்னை பார்க்குற” என்றான் மந்தகாச புன்னகையுடன்.

‘என்னை போகவிடாம தடுப்பாருனு பார்த்தேன் போக சொல்லுறாரு’ என்று ராயன் பேசியதில் சிறு கோபம் கொண்டு “சரிங்கப்பா கிளம்பலாம் வாங்க” என்று நீலகண்டனின் கையை பிடித்துக்கொண்டாள்.

கண்ணனோ “அண்ணி வாசலை தாண்டினா அழகு அத்தை வீடு என்னமோ ஊரு தாண்டி போறது போல பேசுறீங்க” என்று கேலி செய்து சிரித்தான்.

அழகம்மையோ “டேய் கண்ணா என்னோட வீட்டை பக்கத்துல வச்சிக்கிட்டு நான் ஒரு நாள் கூட முழுசா இருந்தது இல்லை இனி மூணுமாசம் என்னோட வீட்டுல என் பொண்ணுகூட சேர்ந்து இருக்கப்போறேன்டா நீ அதை கெடுக்காதே” என்று ஆனந்த புன்னகையுடன் முல்லையின் கையை பிடித்து அழைத்துச் சென்றார்.

முல்லையோ பல மைல் தூரம் கணவனை விட்டுச் செல்பவள் போல விசனத்துடன் ராயனை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்றாள்.

இந்த பெரிய வீட்டில் மகளுக்கு கிடைத்த அங்கீகாரத்தில் அமுதாவின் கண்கள் பனித்து போனது. 

இரவு முல்லை சாப்பிட்டு முடித்து அழகம்மையின் மடியில் படித்திருந்தவள் “அம்மா மச்சான் இங்க வருவாரு தானே?” என்று கேட்டவளிடம் “அம்மா வீட்டுக்கு வந்துட்டா மருமகன் வரமாட்டாங்கடா உன்னையும் ராயனையும் சேர விடக்கூடாது அதான் இந்த ஏற்பாடு” என்றார் நமட்டுச் சிரிப்புடன் முல்லையின் கன்னத்தை கிள்ளி.

“மச்சானை பார்க்கணும் போல இருக்கு!” என எழுந்து உட்கார்ந்து விட்டாள் முல்லை.

“இந்த வீட்டுக்கு வந்ததுலயிருந்து மச்சான் மச்சான்னு நூறு முறை சொல்லியிருப்ப முல்லை பேசாம தூங்கு” என்று அவளது தலையை வருடிக்கொடுத்தார் அழகம்மை.

‘யோவ் மச்சான் நான் உன் நினைப்பாவே இருக்கேன் நீ என்ன பண்ணுற என்னை பார்க்க வரமாட்டியா?’ என்று சோக முகத்துடன் ராயனை கடிந்துக் கொண்டிருந்தாள்.

நேற்று இரவு தன் நெஞ்சில் சாய்ந்து படுத்திருந்தவள் இன்று பக்கம் இல்லையென்றதும் ராயனுக்கு உறக்கம் வரவில்லை. இப்பவே போயிரலாம் என்னால என் பொண்டாட்டியை பார்க்காம இருக்க முடியாது என்று எழுந்தவனோ விறு விறுவென அழகம்மையின் வீட்டின் கதவை தட்டினான்.

முல்லை உறங்கியதும் அழகம்மையும் நீலகண்டனும் சாப்பிட்டு ஹாலில் பேசிக்கொண்டிருந்தனர். கதவு தட்டும் ஓசையில் “உன் மருமகன் வந்துட்டான் பொண்டாட்டிய விட்டு ஒரு நிமிசம் கூட இருக்க முடியல போல” என்று ராயனை கேலி செய்து புன்னகைத்தார்.

அழகம்மையோ “நீங்க என்னோடவே இருந்துட்டீங்க அதான் பிரிவோட அருமை தெரியலை” என்று கணவனை முறைத்துவிட்டு கதவை திறந்ததும் 

“அத்தை முல்லை தூங்கிட்டாளா மாத்திரை போட்டாளானு தெரியல பார்த்துட்டு போலாம்னு வந்தேன்” என்றான் தயக்கத்துடனே.

“மாத்திரை எல்லாம் போட்டாச்சு மருமகனே நீ கிளம்பு” என்றார் சிரிப்பை அடக்கிக்கொண்டு.

“வந்தது வந்துட்டேன் முல்லையை பார்த்துட்டு போயிடறேன்” 

“அடியே புள்ளை பொண்டாட்டியை பார்க்க வந்திருக்கான் உள்ளே அனுப்பறதை விட்டு சும்மா வம்பு இழுத்துக்கிட்டு இருக்கா நீங்க வாங்க மாப்பிள்ளை” என்று அறைக்கதவிற்கு பக்கம் சென்று ராயனை வரவேற்றார் நீலகண்டன்.

அடுத்த நொடி வீட்டுக்குள் ராயன் வந்ததுதான் தெரியும் முல்லை இருந்த அறைக்குள் சென்றுவிட்டான்.

“மருமகன் எல்லாத்துலயும் ஸ்பீடுதான்” என்றார் நமட்டுச் சிரிப்புடன் நீலகண்டன்.

முல்லைக்கு தூக்கம் வரவில்லை பேசாம மச்சான் கிட்ட போயிடலாம் என்று எழுந்து உட்கார்ந்தாள் ராயனை கண்டதும் “மச்சான் வந்துட்டீங்களா?” என்று சந்தோசமாக கேட்டவள் கட்டிலை விட்டு இறங்க சிரமப்பட “ஏய் புள்ள இரு நான் வரேன் அவசரப்படாதே”  என்று ஒரே எட்டில் நடந்து வந்தவன் அவள் பக்கம் அமர்ந்து அவளை நெஞ்சோடு அணைத்துக்கொண்டான் ராயன்.

“மச்சான் நீங்க இல்லாம எனக்கு தூக்கமே வரலை” என்றாள் சோகம் வழிந்த குரலில்.

“எனக்கும்தான் புள்ள” என்று அவளை மெதுவாய் அணைத்து நெற்றியில் முத்தமிட்டதும்

“ஆஆ உதைக்குறான் உங்க பையன்” என்று சிணுங்கினாள் முல்லை.

“அப்படியா” என்று முல்லையின் வயிற்றில் கையை வைத்தான் குழந்தை அசைந்தது. 

“உங்க குரல் கேட்டதும் வயித்துக்குள்ள சும்மா துள்ளி குதித்து வருவான்” என்றாள் கண்ணைச்சுழட்டி

“என் மகன் என்னை போல ஸ்பீடா இருப்பான்டி” என்று மீசையை முறுக்கினான் ராயன்.

“அச்சோ அழகு மச்சான் இந்த மீசை உங்களுக்கு அழகு” என்று மீசையை பிடித்து இழுத்தாள்.

“வலிக்குது புள்ள” என்று போலியாக நடித்தான் ராயன். இருவரும் கொஞ்சிக்குலாவினர் காதல் கிளிகளாக.

பாலாஜி காரில் போகும் போது “ஏன் டி இத்தனை கோபம் மூக்குக்கு மேல வருது?” என்றான் ரோட்டில் கவனம் வைத்து நதியாவின் முகம் பார்க்காமல்.  

“பின்ன உங்களை குறைச்சு பேசினா என்னால பார்த்துட்டு இருக்க முடியாது குத்து கல்லாட்டம் பொண்டாட்டி இருக்கேன் உங்களை சும்மா அனாதை பயல் ஒன்னும் இல்லாதவன்னு குத்தி குத்தி காட்டி பேசினா சாமியாடாம இருப்பேனா எங்கம்மா இனி வாயை திறக்கட்டும் அப்புறம் இருக்கு சங்கதி” என்று காருக்குள்ளும் சாமி ஆடினாள் நதியா.

தனக்காக ராயன் மட்டும்தான் இருக்கிறான் என்றிருந்தவனுக்கு நதியாவின் காதல் முதலில் பாகற்காயாய் கசந்தாலும் அவளின் வெள்ளை உள்ளம் கொண்ட காதலை கண்டு மனம் மாறி அவளை மனைவியாக ஏற்றுக்கொள்ள மனம் இறங்கிவிட்டான் பாலாஜி.

காரிலிருந்து இறங்கியதும் பாலாஜியின் பார்வை மாறியிருந்தது. கோபக் கண்களுடன் தன்னை பார்ப்பான் இன்று அவனது கண்கள் காதல் கதை பேசியது. நதியாவுக்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது.

பக்கத்து வீட்டு பாட்டி கார் சத்தம் கேட்டு வந்தவர் “வளைகாப்பு விருந்து முடிஞ்சுதா புள்ள முகத்துல இருக்க சந்தோசத்தை பார்த்தா எல்லாம் ராசி ஆகிட்டீங்க போல” என்று பால் பாத்திரத்தை திண்ணையில் வைத்தார். 

“அம்மாவை தவிர எல்லாரும் ராசிதான் பாட்டி” என்றவளோ வீட்டுத்திண்ணையில் பலகாரப் பையை வைத்தவள் அதிலிருந்த கொஞ்சம் பலகாரங்களை எடுத்து “இந்தாங்க பாட்டி தாத்தாவும் நீங்களும் சாப்பிடுங்க” என்று கொடுத்தாள் மலர்ந்த முகத்துடன்.

“வயசான காலத்துல இதெல்லாம் சாப்பிட்டா ஜீரணம் ஆகாது கண்ணு இருந்தாலும் பாசமா கொடுக்குற கோவிந்தவனுக்கு இனிப்புனா ரொம்ப பிடிக்கும்” என்று அவள் கொடுத்த பலகாரத்தை வாங்கிக்கொண்டு “நாளைக்கு காலையில உனக்கு பிடிச்ச சுண்டல் குழம்பு வைக்குறேன் நீ காலையில குழம்பு வைக்க வேணாம்… விருந்து அலுப்பு இருக்கும் வாசலும் நானே தெளிச்சு பெருக்கிடறேன்” என்றார் பொக்கை வாய் சிரிப்புடன்.

“நானே எழுந்து வாசல் தெளிச்சு பெருக்குறேன் நீங்க சிரமப்படவேணாம்” என்றவளிடம் சிரித்து விட்டுச்சென்றார் பாட்டி.

“எதுக்கு பாட்டி என்னை பார்த்து சிரிக்குறாங்க” என்று குழம்பிக்கொண்டு வீட்டுக்குள் சென்றாள் நதியா.

பாலாஜியின் கண்கள் பலாப்பழத்தை மொய்க்கும் ஈ போல நதியாவை பார்த்துக்கொண்டிருந்ததை கண்டு தான் சிரித்துச் சென்றார் பாட்டி.

அறைக்குள் சென்றவள் தாய் வீட்டிலிருந்து எடுத்து வந்த பொருட்களை சமையல்கட்டில் அடுக்கி வைத்து பாட்டி கொண்டு வந்த பாலை காய்ச்சி விட்டு அலுப்பாக இருக்கவும் பெட்ரூமிற்குள் வந்தாள். 

பாலாஜி குளித்து விட்டு இடுப்பில் துண்டோடு வெளியே வந்தவன் நதியாவின் முகத்தருகே வந்து தலையை சிலுப்பி விட்டு தலையை துண்டால் துவட்டினான்.

“மாமா என்ன இது” என்றவளை மோகமாய் பார்த்தான். 

“என்ன இது ரொமான்டிக் லுக் இந்த லுக் சரியில்லையே!” என்று இடுப்பில் கையை வைத்து முறைத்தாள்.

“ம்ம் உன் அண்ணனுக்கு அடுத்த வருசம் மருமக வேணுமாம் அப்போ ரொமான்டி லுக் விடணும்ல டெய்லி உன்கூட சண்டை போட்டு இருக்கேன் போரே அடிச்சு போச்சு… இனிமே அப்படியில்ல ஒரே லவ்ஸ்தான் நீ காட்டின லவ்வை நான் உனக்கு காட்டப்போறேன்டி என்னோட லவ்வை நீ பார்த்தது இல்லையே!” என்று உதடு கடித்தான்.

அச்சோ நான் காண்பது கனவா இல்லை நனவா என்று அவள் கையை கிள்ளிப்பார்த்தாள்.

சட்டென்று நதியாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்தான் பாலாஜி.

பெண்ணவளின் கண்கள் சாசர் போல விரிந்தது.

“முட்டை கண்ணை விரிக்காதடி குளிச்சிட்டு வா மாமன் வெயிட்டிங்” என்று அவளை இறுக்கினான்.

“அண்ணா சொன்னதுக்காக என்கூட” என்றவளை முறைத்தான்.

“இங்கபாரு டி நதி உன் மேல லவ் ஆரம்பத்துல இல்ல. ஆனா என் பின்னாலயே பொமேரியன் நாய்க்குட்டி போல லவ் பண்ணுறேன் லவ் பண்ணுறேன்னு சுத்திக்கிட்டே இருந்த ஒரு கட்டத்துல உன் மேல காதல் வந்துச்சுத்தான் ஆனா என் நட்பு முன்னால காதல் காணாம போயிடுச்சு உன்னை பார்ப்பதை தவிர்த்தேன்டி! உன்கிட்ட எரிஞ்சு விழுந்தேன். ஏன் அடிக்கவும் கூட செய்தேன்… அதிகப்படியா   அவமானமும் படுத்தினேன். ஆனா உன் காதல் உண்மையாக இருக்க நீ ஜெயிச்சிட்ட உன் மேல இன்னமும் கோபத்தோடத்தான் இருக்கேன்டி. மண்டபத்துல முட்டாள் போல என் முன்னால சேலையை கழட்டி போட்டு நிற்குற வேற யாராவது இருந்தா எதாவது செய்துட்டு ஓடி போயிருந்தா என்னடி பண்ணுவ நீ அறிவுக் கெட்டவளே” என்று அவளை இப்போதும் திட்டினான் பாலாஜி.

“நீ ராயா அண்ணாவோட ப்ரண்ட் பாலாஜி. அண்ணா துரோகம் பண்ணுறவங்களை பக்கத்துல கூட சேர்க்க மாட்டாரு உன் மேல எனக்கு நம்பிக்கை நீ என்னை கைவிடமாட்டனு கடைசி வரை போராடி உன்னை கல்யாணம் பண்ணியிருக்கேன். நான் என் காதலை அடைஞ்ச விதம் வேணா முறை இல்லாம இருக்கலாம் உன் மேல வச்சிருக்க காதல் தாய்ப் பாலை விட சுத்தம்… அதுல  பொய் கிடையாதுடா” என்று பாலாஜியை தாவி அணைத்துக்கொண்டு அவன் முழுக்க முத்தம் கொடுத்தாள் நதியா.

அவள் கன்னத்தை பற்றி “என் நண்பனை யாரும் அனாதைனு சொல்லக்கூடாது நான் இருக்கேன்னு ராயன்தான் சொல்லுவான் அவனுக்கு பிறகு எனக்கு என் பொண்டாட்டி இருக்கா இனிமே நான் அனாதை கிடையாதுடி” என்றான் நெகிழ்ச்சியானவனின் கண்கள் கலங்கவும்

“மாமா நான் இருக்கேன்டா உனக்கு” என்று அவள் இதழ்கள் நடுங்கியது.

நடுங்கிய இதழ்களை கவ்விக்கொண்டான் ஆணவன்.

அவளை கையில் ஏந்திக்கொண்டு கட்டிலுக்குச் சென்றவன் “எனக்கு இருக்க ஆசையில் இப்பவே எல்லாம் பண்ணனும்னு தோணுது கொஞ்சம் காதலிச்சுட்டு முழுசா எடுத்துக்குறேன் இப்ப கொஞ்சமா மினி மில்ஸ் சாப்பிடுறேன் “என்று அவளது இதழைக் கவ்வினான்.

இதழ் முத்தம் மட்டும் போதவில்லை அவனுக்கு. கழுத்தில் மீசையை உரசியவன் “முழு மீல்ஸ் கிடைக்குமா என்னால முடியல பப்ளிமாஸ்” என்றவனின் கைகள் அவளது மாராப்பு சேலையை விலக்கியது.

“நான் உனக்கு சொந்தம்டா இப்பவே எடுத்துக்கோ என்கிட்ட கேட்கணுமா” என்று அவனை அணைத்துக்கொண்டாள்.

அவளது கண்களை பார்த்தவன் “ஐ லவ் யு டி” என்றவன் அவளது இதழ்களை முற்றுகையிட்டவன் “இனிப்பு ரொம்ப சாப்பிட்டியா ஒரே தித்திப்பா இருக்கு” என்று அவளது சோளிகளுக்கு விடுப்பு கொடுத்ததும் அவளுக்கு வெட்கம் வந்து சட்டென்று முதுகுகாட்டி படுத்துக்கொண்டாள். 

“ஏய் என்னடி வெட்கம்” என்று அவளை பின்னிருந்து அணைத்தான். அவனது கைகள் அவளது மென் அங்கங்களில் பட்டு விட அவள் தேகம் சிலிர்த்து அடங்கியது. 

“திரும்புடி” என்றான் மோகமாய்.

அவளோ “மாட்டேன் வெட்கமா இருக்கு மாட்டேன்” என்று சிணுங்கினாள்.

“இப்போ திரும்பலைனா மாமா எழுந்து போயிடுவேன் போகவா?” என்று அவன் பேசி முடிக்கவில்லை அவன் புறம் திரும்பி படுத்து கண்களை மூடிக்கொண்டாள்.

அவளது இமைக்குடைகளுக்கு முத்தம் கொடுத்தான் மெதுவாய் கண்ணை விரித்தாள்.

“பேசுடி வாய் ஓயாம பேசுவ” என்றான்.

“இந்த நேரத்துல யாராவது பேசுவாங்களா?” என்றாள் உதடு கடித்து.

“விவரம்தான்டி நீ” என்றவனின் கரங்கள் அவளது தேகத்தை வீணையாய் மீட்டியது. இதோ அவளது மேடு பள்ளங்களில் உதடுகள் கொண்டு விளையாடினான். ஆணவனின் ஒவ்வொரு தொடுதலிலும் மெய் சிலிர்த்தாள் மங்கை. இருவரும் ஒரே போர்வைக்குள் வியர்வையால் குளித்தனர். அவனது இதழ்கள் அவளது மேனியில் நத்தையாய் ஊர்ந்தது. அவளது அழகுகளை கண்டு எச்சில் விழுங்கினான் காளையவன். அவளோ “மாமா” என்று மோகமாய் பிதற்றியதும் அவள் மார்புக்குழிக்குள் முகம் புதைத்தான். அவனது அணைப்பினில் பாகாய் உருகினாள் மங்கையவள். அவனது வேகம் கண்டு அச்சப்பட்டு அவளுக்கு கண்ணீர் கண்களில் உருண்டோடியது.

“ரிலாக்ஸ்டி” என்று அவளது இதழில் முத்தமிட்டு அவளை ஆசுவாசப்படுத்தி பெண்ணவளை களவாடினான். விடியும் வரை அவ

  •  

என் இனிய ராட்சஷனே 16

அத்தியாயம் 16

 

தனக்கு இது போன்று வெளியில் சந்திப்பது பிடிக்கவில்லை என்று இளமதிக்கு தன் மாமனிடம் கூறவும் முடியவில்லை அதை உள்ளேயும் வைத்து கொள்ளவும் முடியவில்லை அவனுக்காக தன் மனதில் தோன்றிய எதையும் வெளியே சொல்லாமல் உள்ளேயே வைத்து பூட்டி கொண்டாள். 

 

மறுநாள் காலை இளமதி வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுவிட கருப்பனும்  தன் வீட்டுக்கு சென்றான் அவன் வீட்டின் உள்ளே நுழைய மகனை வாசலிலேயே நிறுத்தி கேள்வி கேட்க ஆரம்பித்தார் சிவகாமி “எங்க டா போன ராத்திரியெல்லாம் ஏதோ பத்து லோடு மூட்டையை தூக்கி போட்டவன் மாதிரி களைச்சு போய் அசதியா வர” என்று கேட்க “மா நேத்து மில்லுல லோடு வந்துச்சு அதை இறக்கி வச்சுட்டு வந்தேன் அதான் அசதியா இருக்கு” என்றான். 

 

“ஏன் டா லோடு இறக்க தான் ஆளுங்க இருக்காங்கலே உனக்கு என்ன அப்படி ஒரு அசதி” என்று கேட்க “அம்மா சும்மா கேள்வி மேல கேள்வி கேட்க்காத எனக்கு தூக்கம் வருது வழியை விடு” என்றவன் உள்ளே சென்று தன் அறையில் படுத்து உறங்க ஆரம்பித்தான். 

 

சிவகாமி அவனை ஆச்சிரியமாக பார்த்து கொண்டே நின்றிருந்தார் 

எப்போதும் பகலில் உறங்காத தன் மகன் இன்று பகலில் உறங்குவதை பார்த்தவருக்கு ஆச்சரியமாக தான் இருந்தது கருப்பன் நேற்று இரவு முழுவதும் இளமதியுடன் இருந்ததால் அவன் நேற்று இரவு ஒரு நேரம் கூட கண் மூடவேயில்லை  அதனால் தான் பகலில் உறங்கி கொண்டு இருந்தான். 

 

அதே நேரம் கல்லூரியில் தன் வகுப்பறையில் அமர்ந்து இருந்த இளமதி பாடம் நடக்கும் வேளையில் பாடத்தை கவனியாமல் உறங்கி விழுந்து கொண்டே இருந்தாள் பாடம் நடத்தி கொண்டிருந்த பேராசிரியர் இதை பார்த்துவிட “இளமதி” என்று அந்த வகுப்பே அதிரும் படி கத்தினார். 

 

இளமதி அவர் கத்திய சத்தத்தில் அடித்து பிடித்து கொண்டு எழுந்து நின்றாள் அவள் “நான் என்ன டாப்பிக் எடுத்துட்டு இருக்கேன் சொல்லு” என்று அவர் தன் கையை கட்டிக் கொண்டு அவளிடம் கேள்விக் கேட்க அவளோ பதிலுக்கு ஒன்றும் தெரியாமல் திருதிருவென விழிக்க “நீயெல்லாம் எதுக்கு படிக்க வர உனக்கு படிக்க விருப்பம் இல்லைன்னா வீட்லயே இருந்துக்க வேண்டியது தான நீ தூங்கி வழிய இது என்ன உன் வீட்டு பெட் ரூமா இங்கே வந்து தூங்கி எதுக்கு ஒரு சீட்டை வெஸ்ட் பண்ற இடியட் வெளியே போ” என்று திட்ட வகுப்பில் இருந்த மாணவ மாணவிகள் அனைவரும் அவளை வேடிக்கை பார்க்க அவளுக்கு ஒரே அவமானமாக இருந்தது அழுது கொண்டே வெளியே ஓடினாள். 

 

அந்த வகுப்பு முடியும் வரை வெளியே தான் நின்றிருந்தாள் இளமதி அழுது கொண்டே நின்றிருக்க பேராசிரியர் வெளியே வந்தவர் “இளமதி என்னோட ரூம்க்கு வா” என்று கூறிவிட்டு சென்றார். 

 

இளமதியும் அவரின் பின்னே கண்களை துடைத்து கொண்டே வந்தவள் வாசலில் நின்று “எக்ஸ்கியூஸ் மீ மேம்” என்றாள்

“கம் இன்” என்றார் அந்த பேராசிரியர் 

அவளும் அவரின் முன்னே வந்து தலை குனிந்து நின்றாள். 

 

அவளை ஒரு முறை பார்த்தவர் “உனக்கு என்ன தான் ஆச்சு இளமதி நீ நல்லா படிக்கிற ஸ்டூடன்ட் கிளாஸ் டாப்பர் லாஸ்ட் செமஸ்ட்டருக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு பட் உன் கவனம் படிப்புல சுத்தமா இல்லை கிளாஸ்ல தூங்கி வழியுற இன்டர்ன்ல்ஸ் மார்க் கூட ரொம்ப லோவா இருக்கு இப்படியே போனா நீ கண்டிப்பா டிகிரி வாங்க மாட்ட உனக்கு என்ன பிராப்ளம்ன்னு என்கிட்ட சொல்லு” என்றார். 

 

இளமதி அவரிடம் எப்படி என்ன சொல்வது என்று தெரியாமல் தவிப்புடன் நின்றிருந்தாள் அவளின் கணவனுடன் இருந்த இந்த கொஞ்ச நாட்களில் தான் அவளால் படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை இரவு முழுவதும் அவனுடன் கழித்தவள் பகலில் தூங்கி வழிந்து கொண்டு இருந்தாள் அதை எப்படி அவரிடம் கூறுவது என்று தெரியாமல் தவித்தவள் “சாரி மேம் இனிமேல் இப்படி நடக்காது” என்றாள் அழுத விழிகளுடன். 

 

அவளை ஒரு முறை பார்த்த அந்த பேராசிரியர் “உனக்கு அப்பா இல்லை அம்மா மட்டும் தான முதல் நாள் இந்த காலேஜ்க்கு வந்து சேரும் போது உன் அம்மா என் கிட்ட வந்து பேசுனாங்க என் பொண்ணு ரொம்ப நல்லா படிக்கிற பொண்ணுன்னு சொன்னாங்க அதை சொல்லும் போது அவங்க கண்ணுல அப்படி ஒரு பெருமை அவங்களை ஏமார்த்திடாத போய் ஒழுங்கா படி” என்று அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தார். 

 

இளமதி அழுது கொண்டே வெளியே வந்தவளுக்கு தன் தாயின் நினைவு வந்தது அவர் அவமானப்பட்டு நின்ற நாட்கள் அனைத்தும் கண்ணில் வந்து போனது தன் தாய்க்காகவாது நன்றாக படிக்க வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டாள். 

 

அன்று வெள்ளிக்கிழமை என்பதால் அவளின் அறை தோழி ஊருக்கு கிளம்பி இருந்தாள் இதை முன் கூட்டியே இளமதி கருப்பனிடம் கூறியிருக்க அவனும் எப்போதும் போல இரவு பன்னிரெண்டு மணிக்கு அவள் அறையின் கதவை தட்டினான். 

 

இளமதி படித்து கொண்டு இருந்தவளுக்கு கதவை தட்டும் சத்தத்திலேயே தெரிந்து போனது அது தன் மாமன் தான் என்று புத்தகத்தை மூடி வைத்துவிட்டு வந்து கதவை திறந்தாள் அடுத்த கணம் அவளின் இடையில் கைக் கொடுத்து தன் கைகளில் தூக்கியவன் கதவை காலால் எட்டி உதைத்து மூடினான்.

 

இளமதி கன்னத்தில் முத்தமிட்டவன் “தங்கம் என்ன டி ரொம்ப நேரமா மாமனுக்காக காத்துக்கிட்டு இருந்தியா ” என்று கேட்க அவளோ பதிலுக்கு எந்த வித எதிர்வினையும் காட்டாமல் தன் இடையில் இருந்த அவன் கையை எடுத்து கொண்டாள். 

 

அவள் திடீரென தன்னிடமிருந்து விலக கருப்பனின் முகம் வாடியது “என்னாச்சு கண்ணு மாமா மேல கோவமா” என்று கேட்க இளமதி அவனிடம் எப்படி கூறுவது என்று தடுமாறியவள் “மாமா நான் படிக்கனும்” என்றாள். 

 

கருப்பன் அவளின் கைக்கொடுத்து மீண்டும் அவளை தன்னோடு சேர்த்தணைத்தவன் “இவ்வளோ தானா அப்புறமா படிக்கலாமே” என்று கூறிக் கொண்டே அவளின் இதழின் அருகில் நெருங்கி வர “மாமா நான் படிக்கனும் பிளீஸ் எனக்கு எக்ஸாம் இருக்கு” என்றாள். 

 

“நாளைக்கு படிச்சிக்கலாம் டி இன்னைக்கு ஒரு நாள் மட்டும் சரியா” என்று அவள் அருகில் அவன் நெருங்கி வர அவனை பிடித்து தள்ளினாள் இளமதி “மாமா நான் படிக்கனும் பிளீஸ் என் கிட்ட வராதிங்க” என்றாள் இளமதி அவனை தடுத்து நிறுத்தி. 

 

“சரி நீ படி நான் கிளம்புறேன்” என்றவனின் முகம் வாடிப் போனது அவன் அங்கிருந்து செல்லும் போது அவள் போகதே என்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. 

 

கருப்பன் அங்கிருந்து செல்வதை இளமதி மேலே இருந்து பார்த்து கொண்டு தான் இருந்தாள் அதன் பின் நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தன 

இளமதி அவன் கொடுத்த போனை ஸ்விட்ச் ஆப் செய்து வைத்துவிட்டாள் தன் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தாள் இறுதி தேர்வை நல்லபடியாக முடித்தாள் ஆனால் கருப்பன் அவள் இன்றி கவலைக் கொள்ள ஆரம்பித்தான். 

 

இளமதி இறுதி வருடத்தில் இருந்ததால் கல்லூரிக்கு வந்த கேம்ப்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகி மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை வாங்கி இருந்தாள். 

 

இந்த நிலையில் அவர்கள் ஊரின் இஷ்ட தெய்வமான முள்ளையூர் அம்மன் கோவில் திருவிழா நாளும் வந்தது

முழு கிராமமும் களைக்கட்டிது நாதஸ்வரம், தப்பாட்டம், மலர் தூவி பூஜைகள் நடந்தது ஊரில் அனைவரின் வீட்டிலும் சொந்த பந்தங்கள் வந்திருந்தனர் சப்பாத்தி, இடியாப்பம், கோழி குழம்பு வாசனை என்று ஊரே மணம் வீசியது காப்பு கட்டி முடிக்க சின்னப்பொண்ணுக்கு தன் மகளின் நினைவாக இருந்தது. 

 

இளமதியை ஊருக்கு வர சொல்லி சின்னப்பொண்ணு அழைக்க அவளும் வந்திருந்தாள் பஸ்சில் இருந்து இறங்கியவள் தெருவில் பையை எடுத்து கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தாள். 

 

அவள் வரும் வழியில் எதிரே நந்தினி தன் தங்கையுடன் ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தாள் இளமதியை பார்த்த நந்தினி கண்களாலேயே எரிப்பதை போல் பார்த்துவிட்டு முறைத்து கொண்டே செல்ல பதிலுக்கு அவளை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றாள். 

 

இளமதி வீட்டின் உள்ளே வர சின்னப்பொண்ணு அவள் கையில் இருந்த பையை வாங்கி கொண்டவர் “தங்கம் எப்படி இருக்க” என்று அவளை வாசலிலேயே வரவேற்றார் 

இளமதி பதிலுக்கு “ம்ம் நல்லாருக்கேன் மா” என்று சோர்வுடன் கூறியவளின் கண்கள் தன் மாமனை தான் முதலில் தேடியது அவன் எங்கே என்று கண்களால் வீடு முழுக்க தேட அவனோ அங்கே இல்லாமல் வயலில் வேலை பார்த்து கொண்டு இருந்தான். 

 

அப்போது சிவகாமி தன் அறையின் உள்ளே இருந்து வந்தார் “இந்தா டி நீ எப்போ வந்த” என்று அவள் அருகில் வந்து கேட்க. 

 

“இப்போ தான் பாட்டி வந்தேன்” என்றாள் பதிலுக்கு இளமதி “ஆஊன்னா கிளம்பி வந்துடுறியே உனக்கு காலேசுல படிக்குற வேலையே இல்லையா என் மவன் பின்னாடியே தான் அலையுவியா” என்று கேட்க “அம்மா என்ன பேசுற நீ” என்று சின்னப்பொண்ணு கோபத்துடன் கத்த “என்ன டி ரோஷம் பொத்துக்கிட்டு வருதோ நான் உண்மையை தான சொன்னேன் ஏற்கனவே ஊரே இவளை பார்த்து சிரிச்சது போதாது இன்னும் திருவிழாவுக்கு வேற இவள் வந்து இவளை பார்த்து சிரிக்கனுமா இவள் என்ன முறையாவா கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த வீட்டுக்கு வந்தா முறை கெட்டு வந்தவள் தான” என்று கேட்டார். 

 

இளமதிக்கு உடனே கோபம் வந்து விட

“இல்லையே பாட்டி மாமா முறையா தான என் கழுத்துல தாலி கட்டுனாரு நான் பண்ணுனது தப்புன்னா உங்க மகன் அன்னைக்கு என் கூட இருந்ததும் தப்பு தான” என்று கேள்வி கேட்டாள் முகத்தில் அடித்ததை போல. 

 

“இந்தா டி இந்த மாதிரியெல்லாம் பேசிக் கிட்டு இருந்த உன் காலை உடைச்சு அடுப்புல வச்சிருவேன் என் மகன் எந்த பொண்ணையும் ஏறெடுத்து பார்க்காதவன்” என்று சிவகாமி கோவப்பட சின்னப்பொண்ணு இளமதியை சமாதானம் செய்து அவருடன் அழைத்து சென்றார். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  •  

என் இனிய ராட்சஷனே 15

அத்தியாயம் 15

 

“மாமா என்னை விடுங்க” என்று அவன் கைகளில் இருந்து துள்ளி குதித்து கீழே இறங்கினாள் இளமதி அவள் துள்ளி குதிக்கும் போது அவளின் நைட்டியின் உள்ளே இருந்த இரட்டை முயல் குட்டிகளும் அவளுடன் சேர்ந்து நடனமாட அவன் கண்களை அவளிடமிருந்து விலக்கவே முடியவில்லை. 

 

“மாமா முதல்ல இங்கே இருந்து கிளம்புங்க” என்ற இளமதி அவன் பார்வை தன்னிடம் இல்லாமல் வேறு எங்கோ இருப்பதை கவனித்தவள் தன்னை கீழே குனிந்து பார்த்தாள் பதறி அடித்து கொண்டு உடனே தரையில் கிடந்த துப்பட்டாவை எடுத்து தன் மேலே போட போக கருப்பன் அவளை போட விடாமல் அவளின் இடையில் கைக் கொடுத்து தன்னோடு சேர்த்தணைத்தவன் “எதுக்கு டி இதெல்லாம் இதுவே நல்லா தான இருக்கு நல்லா கொழுக்குமொழுக்குன்னு” என்றவன் வெண்ணை கட்டிகளை பார்த்து கொண்டே துப்பட்டாவை தூக்கி எறிந்தான். 

 

“மாமா இதெல்லாம் ரொம்ப தப்பு அந்த குண்டு வார்டனுக்கு தெரிஞ்சா என்னை கொன்னுடுவாங்க” என்றாள் பயத்துடன் 

“என் பொண்டாட்டியை எவள் டி கேள்விக் கேட்ப்பா மாமா பார்த்துக்குறேன் டி தங்கம்” என்று அவளின் பின் மேட்டில் கை வைத்து அழுத்தமாக பிடித்து கொண்டே கூற. 

 

“மாமா எனக்கு பயமா இருக்கு போங்க இங்கிருந்து முதல்ல” என்றாள் சினுங்கலுடன் “போகனுமா டி” என்று ஏக்கம் சுமந்த விழிகளுடன் கேட்டவனின் கை அவளின் கொங்கைகளில் ஒன்றை ஆடை மேலேயே அழுத்தி பிடித்து கொண்டே கேட்டது அவன் செயலில் இளமதி முகம் சிவந்து தடுமாற மீண்டும் “போகனுமா டி” என்று அவளின் காது மடலை பற்களால் கல்வி மீசை முடியால் உரசிக் கொண்டே கேட்டான் கருப்பன். 

 

 “ம்ம்ம்” என்றாள் சுகமான அவஸ்தையுடன் “நல்லா பெருசா மெது மெதுன்னு இருக்கு டி ரெண்டு கையால தான் புடிக்கனும் போல” என்றவன் இரண்டு கையாலும் அந்த தண்ணீர் பந்துகளை பிடித்து அழுத்த “ம்ம்ம் அ..ய்..யோ மா..மா” என்று துடித்தாள். 

 

அவன் கைகள் இன்னும் இன்னும் அழுத்தி கொண்டே “மதி என்னால நீ இல்லாம அங்கே தனியா இருக்க முடியலை டி” என்று கூறிக் கொண்டே அவளை வெறும் தரையில் கிடத்தினான் ஆடை மேலேயே நுனி மொட்டை விரலால் பிடித்து நசுக்கி கொண்டே. 

 

“இன்னைக்கு ஒரு படம் பார்த்தேன் அதுல இருந்து உன் நினைப்பு தான் டி” என்றான் அவள் மேலே இருந்து கொண்டே நுனி மொட்டை கையால் பிடித்து அழுத்தி கொண்டே இளமதி அவன் செயலில் துடித்து கொண்டே “ம்ம்ஆஆ என்ன படம் மாமா” என்று கேட்க அவள் காதில் அவன் ஏதோ கூற அவன் பச்சை பச்சையாக பேசிய வார்த்தையை கேட்டு “அய்யோ ச்சீ” என்று முகம் சுழித்தாள் மதி. 

 

“என்ன டி ச்சீ அதெல்லாம் இன்னைக்கு முயற்சி பண்ணி பார்ப்போம்” என்றான்

“ச்சீ நான் மாட்டேன் பா” என்றாள் இளமதி உதட்டை சுழித்து கொண்டே 

அவள் உதட்டை சுழிக்கும் போது அவளின் தடித்த கீழ் உதட்டை பார்த்தவன் அப்படியே தன் இதழால் கல்வி கொண்டான். 

 

“ம்ம்ம்” என்று அவள் முனக முழு முரடாக மாறி முத்தமிட ஆரம்பித்தான் முத்தமே அத்தனை இனிப்பாக இருக்க கழுத்து வளைவில் முகம் புதைத்தான் அங்கிருந்து வந்த அவளின் வியர்வை மணத்துடன் சேர்ந்து வந்த அவளுக்கே உண்டான நறுமணத்தையும் முகர்ந்தான் 

கழுத்தில் பல் தடம் பதியும் அளவுக்கு கடித்து வைக்க

“மாமா வலிக்குது” என்று துடித்தாள் இளமதி. 

 

மீண்டும் அங்கே முத்தமிட்டு அவளின் வலியை தீர்த்து வைத்தவன் அவனுக்கு இடையூறு செய்த நைட்டியை கை வைத்து பிடித்து இழுக்க அவளோ “வேண்டாம் மாமா நைட்டி கிழிஞ்சிரும்” என்று கத்த அந்த நைட்டி பரிதாபமாக அவன் கைகளின் பலத்தால் கிழிந்து போனது உள்ளே எதுவும் ஆடை இல்லாதது அவனுக்கு குஷியாகி விட

“உள்ளே எதுவும் போடலையா டி” என்று கேட்டுக் கொண்டே அவளின் நாபியில் முத்தமிட “ம்ஹிம் நைட்ல கசகசன்னு இருக்கு” என்றவள் கண்களை மூடி இதழ் கடித்து. 

 

அவளின் தொப்புளில் முத்தமிட்டு கொண்டே மீசை முடியால் உரியவன் இன்னும் கீழே சென்று அவளின் பெண்மையில் முகம் புதைக்க அவளுக்கு தூக்கி வாரிப்போட்டது 

“மாமா வேண்டாம்” என்று கத்திக் கொண்டே காலை சேர்த்து வைக்க போக 

அவனோ விடா காண்டனாக அவளின் பெண்மையில் முகம் புதைத்து மீசை முடியால் தேய்த்து எச்சில் முத்தமிட்டான். 

 

“ம்ம்ம்மாஆஆ மாமா வேண்டாம்” என்று அவள் துடித்து கொண்டே அவன் தலைமுடியை பிடித்து கொள்ள 

அவனோ தன் நாவால் அங்கிருந்த சிறிய முல்லை மொட்டின் உள்ளே மேலும் கீழுமாக கோடிழுத்தான் அங்கே பாலும் தேனும் வெளியே வர நாவால் வட்ட மடித்து இன்னும் வேகமாக உறிஞ்சி இழுத்தான் அவளோ “ம்ம்மாஆஆஆ” என்று கீழ் உதட்டை கடித்துக் கொண்டே அவனுடன் ஒத்துழைக்க. 

 

இன்னும் இன்னும் அங்கிருந்த விலகாமல் தன் நாவால் வருடி இதழால் கவ்வி உறிஞ்சி பற்களால் கடித்து வைத்து என அவளை முகம் சிவக்க வைத்தான் அவனின் ஒவ்வொரு தீண்டலுக்கும் இளமதி “ஸ்ஸ்ஸ்ஆஆஆ வேண்டாம்” என்று துடித்து கொண்டிருந்தாள். 

 

அவள் வாய் வேண்டாம் என்று கூறினாலும் அவள் கைகள் இன்னும் அவன் தலை முடியை பிடித்து அங்கேயே அழுத்தியது கருப்பன் மீண்டும் மேலே வர இளமதி மூச்சு வாங்க முகமெல்லாம் ரத்த நிறத்தில் சிவந்து கண்களை மூடிக் கிடந்தாள். 

 

அவள் காது மடலை கவ்வியவன் “ஏய் அந்த படத்துல பண்ணுன மாதிரி பண்ணலாமா டி” என்று கேட்க 

“நான் மாட்டேன்” என்றாள் அவள் பதிலுக்கு “சரி நான் கிளம்புறேன்” என்று அவன் எழுந்து கிளம்ப போக இளமதி தன் மேலே நைட்டியை எடுத்து மறைத்து கொண்டவள் அவன் கையை பிடித்து கொண்டாள். 

 

அவன் முகம் பார்க்காமல் வெட்கத்துடன் “மாமா லைட் ஆஃப் பண்ணுங்க கூச்சமா இருக்கு” என்க அவனும் சிரித்து உல்லாசத்துடன் நடந்து சென்று விளக்கை அணைத்து விட்டு தன் ஆடைகளை கலைந்தான் இருட்டில் அவள் எங்கே என்று தேட “ஏய் எங்கே டி இருக்க” என்று கேட்க “இங்கே தான் இருக்கேன் மாமா” என்று சத்தம் மட்டும் வந்தது இருள் அவனுக்கு ஒரளவு பழகி விட கதவின் பின்னே ஒளிந்து நின்றவளை கைப்பிடித்து இழுத்தான். 

 

அவளை வேகமாக படுக்கையில் குப்பற கிடத்தியவன் தானும் அவளின் பின்னே விழுந்து அம்பை குறி பார்த்து ஏய்த “ம்ம்ம்ஆஆஆ” என்று வலியில் துடிக்க ஆரம்பித்தாள் அவள் முன்னே கை நுழைத்து அவளின் கொங்கைகளை பிடித்து இரு கைக்கொண்டு அழுத்தி பிடித்து கசக்கி கொண்டே “ஸ்ஸ்ஆஆ இன்னும் கொஞ்ச நேரம் தான் டி” என்று அவனும் முனகினான். 

 

முதலில் அவளுக்கு வலிக்குமே என்று பொறுமையாக இயங்கியவன் நேரம் செல்ல முழு முரடனாக மாற அவளோ கத்தி கதறி துடிக்க ஆரம்பித்தாள் “அவ்ளோ தான் டி இன்னும் கொஞ்ச நேரம்” என்று கெஞ்சி கொஞ்சி அவளுள் முழுதாக ஆட்சி செய்ய அவளின் பெண்மை பொங்கி வழிந்து கதற ஆரம்பித்தது. 

 

அப்போதும் அவளை விடாமல் முழுதாக அவளுள் தன் தேவை முடிந்த பின்  மன்மத ஊற்றை முழுதாக அவளுள் கொட்டி முடிக்க இருவருக்கும் வியர்த்து வடிய ஆரம்பித்தது சோர்ந்து போய் படுக்கையில் விழுந்தவன் அவளையும் தன்னுடன் சேர்த்தணைத்து கொண்டான். 

 

அடுத்து வந்த நாட்களில் இளமதியின் அறை தோழிக்கு அம்மை போட்டு இருந்ததால் அவள் வரவில்லை அவளுக்கு பதிலாக இரவு 12 மணி ஆனால் அவளின் மாமன் அவளுக்கு துணையாக வந்துவிடுவான் தினமும் 

வரும் போது வெறுங்கையுடன் இல்லாமல் பூவுடன் வந்துவிடுவான்

புதிதாக திருமணம் ஆனவர்கள் தங்களின் ஒவ்வொரு நாளையும் ரசித்து வாழ ஆரம்பித்தனர். 

 

இளமதி இரவெல்லாம் தன் கணவனுடன் கூடி கழித்து விட்டு காலை எழுந்தவுடன் சோர்வாக இருக்க கல்லூரியில் தன் வகுப்புக்கு சென்றவுடன் தூங்கி வழிந்து கொண்டு இருந்தாள் மதிய இடைவெளியில் சாப்பிட கூட செல்லாமல் படுத்து உறங்கி கொண்டு இருந்தாள். 

 

கருப்பன் இப்போதெல்லாம் நந்தினியை கண்டுகொள்வதே இல்லை தன் வாழ்க்கையை ஒவ்வொரு நொடியும் ரசித்து வாழ ஆரம்பித்தான் மனதாலும் உடலாலும் இளமதியை நேசிக்க ஆரம்பித்தான் நாட்கள் அதன் போக்கில் செல்ல ஒரு வாரத்துக்கு பின் இளமதியின் அறை தோழி வந்துவிட இருவரும் சந்திக்க முடியவில்லை. 

 

ஒரே ஒரு நாள் அவளை பார்க்காததே அவன் மனதில் அப்படி ஒரு வலியை கொடுக்க அவளை தேடி கல்லூரிக்கே சென்றான். 

 

மதிய இடைவெளியில் அவளுக்காக காத்திருக்க அவளும் வந்தாள் தன் மாமனை பார்த்தவுடன் அவளின் கண்கள் கலங்கியது அவன் அருகில் ஓடிச் செல்ல அவனோ எந்த வித உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் நின்றிருந்தான். 

 

இளமதி முகத்தை தூக்கி வைத்து அழுது கொண்டே காரில் ஏறிக் கொள்ள கார் நேராக சென்று பிரபல ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றின் வாசலில் நின்றது. 

 

அவள் ஒன்றும் புரியாமல் அமர்ந்திருக்க “மதி கீழே இறங்கு” என்றான் கருப்பன் அவளும் கீழே இறங்க அவளின் கைப்பிடித்து அழைத்து கொண்டு ஒரு அறைக்குள் சென்றான் 

இளமதி அவனுடன் உள்ளே வந்தவள் ஒன்றும் புரியாமல் பார்க்க கருப்பன் கதவை தாழிட்டுவிட்டு அவள் அருகில் வந்து இறுக அணைத்து கொண்டவன் அவளின் இதழை கவ்வி முத்தமிட ஆரம்பித்தான். 

 

மதி அவனிடமிருந்து வலுக்கட்டாயமாக தன் இதழை பிரித்து எடுத்தவள் 

“போங்க என் கிட்ட வராதிங்க” என்றாள்

“என்ன டி” என்று அவன் கேட்க

“ஒரு நாள் முழுக்க உங்களை பார்க்கலை உங்களுக்கு கஷ்டமாவேயில்லையா” என்று கேட்டாள். 

 

கருப்பன் அவளின் இடையில் கைக் கொடுத்து தன் அருகில் இழுத்தவன் 

“கஷ்டமா இருந்ததால தான் உன்னை இங்கே கூட்டிட்டு வந்தேன் நீயில்லாம நான் மட்டும் எப்படி நிம்மதியா இருப்பேன்” என்றான். 

 

அவன் பேசிக்கொண்டே அவளின் மேலே இருந்த துப்பட்டாவை கழட்டி இருக்க இளமதி அப்போது தான் கவனித்தாள் ‘அட கள்ளா’ என்று மனதில் நினைத்தாள். 

 

அதன் பின் எங்கே அவளை பேசவிட்டான் அனைத்தும் முடிந்த பின் விலகி படுக்க “மாமா இப்படி ரூம் போட்டு நாம ஒன்னா இருக்குறது உங்களுக்கு தப்பா படலையா நான் உங்க பொண்டாட்டி எதுக்கு ஒளிஞ்சி மறைஞ்சி இந்த மாதிரி இருக்கனும்” என்றாள். 

 

கருப்பன் அவள் புறம் திரும்பி படுத்தவன் “இப்போதைக்கு வீட்ல இருக்க சூழ்நிலை சரியில்லை பெரிய அக்கா என் கிட்ட பேசுறதே இல்லை எல்லாம் சரி ஆன பிறகு நீ வீட்டுக்கு வந்துரு டி” என்றான் ஆனால் இளமதிக்கு ஏனோ இப்படி இருக்க பிடிக்கவேயில்லை. 

 

 

 

 

 

 

 

  •  

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 33

பூங்கொடி கல்யாணம் ஆன புதிதில் தென்னரசுவிடம் “இந்த வீட்ல மாமியார் இருந்துருக்கணும் அவங்களும் இல்ல… அட உங்களுக்கு ஒரு தங்கச்சி இருந்திருந்தா அவ கூட பேசிட்டு இருந்திருக்கலாம்… நீங்க வெளியே போன பிறகு நான் இந்த டிவியையும் போனையும் எவ்ளோ நேரம் பார்க்குறது” என்று சலித்துக்கொள்வாள்.

குமுதாவோ பூங்கொடி தங்களை ஏற்றுக்கொள்வாளோ என்று தயங்கிக்கொண்டே பூங்கொடியிடம் பேசினார்.

ஆனால் பூங்கொடி குமுதாவையும் அரசியையும் அவர்களது உறவுமுறையை பற்றி கேட்கவில்லை “அத்தை தியாவை பார்த்துக்கோங்க நான் சமைச்சிடறேன்” என்று சமையல் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.

அடுத்த நாள் “அண்ணி நீங்க மேக்ஸ்ல புலினு அண்ணா சொன்னாரு எனக்கு இந்த சம்க்கு ஆன்சர் வரலை கொஞ்சு சொல்லிக்கொடுங்க” என்று வந்து நின்ற அரசியிடம் அவளுக்கு புரியும்படி சம்மை போட்டுக்காட்டினாள் 
பூங்கொடி. 

தென்னரசுவோ ஆர்கானிக் காய்கறிகள் விளைவிப்பதில் இறங்கியிருந்தான். தோப்பு வீட்டை விட்டு வெளியே வரவில்லை ராஜமாணிக்கம். ஆனால் அவரிடம் பழி உணர்வு உயர்ந்துக் கொண்டே சென்றது. ராயன் குடும்பத்தை நிம்மதியிழக்கச் செய்வது எப்படி என்று இரவெல்லாம் தூங்காமல் திட்டம் போட்டுக்கொண்டிருந்தார்.

நதியாவுக்கு காய்ச்சல் குறைந்திருந்தது நாயகியோ இட்லியும் காரமில்லா சாம்பாரும் வைத்து மகளுக்கு ஊட்டி விட மாடுகளுக்கு தீவனம் காட்டி வந்த பாலாஜியோ “எனக்கும் பசிக்குதுமா” என்று வந்து நதியாவின் பக்கம் உட்கார்ந்தான். 

நதியாவை திருமணம் செய்த பிறகுதானே நாயகிக்கு மருமகன் ஆனால் பாலாஜி ராயனின் நண்பனாக இருக்கும்போது நாயகியை அம்மா என்றுதானே கூப்பிடுவான். இப்போதும் நாயகி மருமகனாக பார்க்கவில்லை. 

“இருப்பா நதி பாப்பாவுக்கு ஊட்டி முடிச்சிட்டேன் உனக்கு வேற தட்டுல போட்டு எடுத்துட்டு வரேன்” என்று எழும்பியவரை “அம்மா எனக்கு கையில வைங்க நான் சாப்பிடறேன்” என்று கையை நீட்டினான் தாய்பாசத்திற்காக ஏங்கியவன் பாலாஜி.

அவரோ “நீ எனக்கு மகனும் கூடப்பா” என்றவரோ பாலாஜிக்கு கையில் இட்லியை வைத்தார். பாலாஜிக்கோ கண்ணீர் வந்துவிட்டது.

“காரமா இருக்காப்பா காரம் குறைவாத்தானே வச்சேன்” என்று நாயகி பதறினார்.

“இல்லம்மா நான் உங்க கையால மட்டும்தான் அடிக்கடி சாப்பிட்டிருக்கேன் அப்போவெல்லாம் உங்களை அம்மாவா நினைச்சுதான் சாப்பிட்டேன் இப்போ அப்படி நினைக்க முடியாதே” என்றான் ஏக்கத்துடன்.

“நான் உன்னை மகனாகத்தான் பார்க்குறேன்பா” என்றார் புன்சிரிப்புடன்.

“அம்மா நீங்க சாப்பிட்டு நதியாவோட படுத்துக்கோங்க நான் ஹாலுல படுத்துக்குறேன்” என்றவனோ நதியாவை பார்த்தான்.

பாலாஜி தாய் பாசத்துக்கு ஏங்கியது அவள் மனதில் வலியை கொடுத்தது. இனிமே நான் உங்களுக்கு தாயா இருந்து பார்த்துப்பேன் பாலாஜி நான் உங்களை காயப்படுத்திட்டே இருந்திருக்கேன் நான் ஒரு முட்டாள் என்று தன்னையே திட்டிக்கொண்டிருந்தாள்.

வீட்டுக்கு வந்த அழகம்மையிடம் “என்ன காய்ச்சலாம் உன் மருமகளுக்கு நல்லாயிருக்காளா! இப்படித்தான் ஒன்னும் இல்லாதவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா அனாதை போல படுத்துக்கிடக்கணும்” என்றார் முகம் சுளித்து.

“அண்ணி நாமளா பார்த்து நதியாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருந்தா கூட அந்த பையன் மாதிரி நதியாவுக்கு உடம்பு சரியில்லைனா பார்த்திருப்பாரானு தெரியலை ஆனா பாலாஜி தம்பி நதியாவை கண்ணுக்குள்ள வச்சி கவனிக்குது” என்றார் சந்தோசமாக.

“ம்க்கும் நீதான் அவனை மெச்சிக்ணும்” என்று முகத்தை தோளில் இடித்துச் சென்றார்.

கோமளத்தின் அறைக்குள் வந்த தீபாவோ “அத்தை நம்ம பரம்பரை நகையெல்லாம் உங்க பொறுப்புலதானே இருக்கு என்கிட்ட காட்டுவீங்களா பார்க்கணும்னு ஆசையா இருக்கு” என்றாள் நகைகள் இருந்த மரபீரோவை நோட்டமிட்டபடியே.

கோமளமோ”இரு காட்டுறேன்” என்று கதவை சாத்தி விட்டு இடுப்பில் சொருகி வைத்திருந்த கொத்து சாவியை எடுத்து மரபீரோவை திறந்தார்.

கல்வைத்த நகைகள் தனி பாக்ஸிலும், கல் வைக்காத நகைகள் தனி பாக்ஸிலும், வைர நகைகள், முத்து என்று பாக்ஸ் பாக்ஸாக இருப்பதை கண்டு அதிசயமாக பார்த்தாள். அவளும் பணக்காரவீட்டுப்பெண்தானே ஆனால் இவ்ளோ நகைகள் இருப்பதை இப்போதுதான் பார்க்கிறாள்.

ஓவ்வொரு பாக்ஸாக எடுத்துக்காட்டவும் “அத்தை எனக்கு இந்த வைர அட்டிகை வேணும்… இந்த ஒட்டியாணம் வேணும் எனக்கு இந்த டிசைன் ரொம்ப நாளா தேடிக்கிட்ட இருந்தேன்” என்றவளோ வைர அட்டிகையை பார்த்ததோடு அல்லாமல் கழுத்தில் வேறு போட்டு “நல்லாயிருக்கா அத்தை?” என்று கண்கள் மின்னும் சிரிப்போடு சந்திரமுகி ஜோதிகா போல ஒரு நிமிடம் மாறினாள் தீபா.

“இந்த வைர அட்டிகை இந்த வீட்டு மூத்தவாரிசுக்கு கொடுக்கணும் தீபா அந்த நகையை வச்சிட்டு வேற வேணா எடுத்துக்கோ  என்னோட எல்லா நகையும் உனக்கு தான்” என்றார். நகை பணத்துக்கு ஆசைப்பட்டாலும் யார் யார்க்கு என்ன கொடுக்கணும் என்பதில் சரியாக இருந்தார் கோமளம். 

“அப்போ இந்த வைர அட்டிகை முல்லைக்குதானா எனக்கு இல்லையா அத்தை நானும் இந்த வீட்டு மருமகதானே எனக்கு ஆசையா இருக்கு” என்றவளுக்கு வைர அட்டிகையை விட்டு அவள் கண்கள் நகரவில்லை.

“வேணும்னா ராயன் கிட்ட கேளு கொடுத்தா வாங்கிக்கோ” என்று க்ளூ கொடுத்தார் கோமளம் மருமகளுக்கு.

“அப்படியா இப்போவே கேட்குறேன்” என்று அறையை திறந்துக் கொண்டு வெளியே சென்றாள்.

கோமளமோ “என் மருமக பிழைச்சுப்பா” என்று சந்தோஷப்பட்டார்.

ஹாலில் நீலகண்டன் தெய்வநாயகம் இருவரும் சாப்பிட்டு அமர்ந்திருந்தனர். ராயனும் முல்லையும் சாப்பிட்டு எழுந்து வந்தவர்கள் நீலகண்டன் பக்கம் முல்லையும் தெய்நாயகம் பக்கம் ராயனும் உட்கார்ந்துக் கொண்டனர்.

அழகம்மையோ “ராயா எங்க அம்மாவோட ஆசை தன் பேரன் பொண்டாட்டிக்குத்தான் அவங்க வைர அட்டிகையை கொடுக்கணும்னு முல்லை வளைகாப்பிற்கு நம்ம பரம்பரை வைர அட்டிகையை அவளுக்கு கொடுக்கணும்” என்றார் புன்னகையுடன்.

“சரிங்க அத்தை பெரியம்மாகிட்ட சொல்லுறேன்” என்றான் ராயன்.

வெளியே சென்றிருந்த கண்ணன் வீட்டுக்குள் வரவும் ராயன் முன்னே நின்ற தீபாவோ “மாமா நான் ஒன்னு கேட்பேன் இல்லைனு சொல்லக்கூடாது சொத்து தான் பிரிக்க மாட்டேன்னு சொல்லிட்டீங்க இப்போ நான் கேட்க போறதை மறுக்க கூடாது” என்றாள் பீடிகையோடு.

அழகம்மையோ மாமியாரை மிஞ்சிடுவாள் போலயே என்ன கேட்கப்போறாளோ தெரியலையே என்று அவளையே பார்த்திருந்தார் ஆயாசமாக.

“கேளுமா” என்றான் ராயன்.

“அத்தைகிட்ட நம்ம பரம்பரை நகையை பார்க்கணும்னு ஆசையா கேட்டேன் அத்தை காட்டினாங்க அதுல எனக்கு வைர அட்டிகை பிடிச்சு இருந்துச்சு. ஆனா அத்தை எனக்கு அட்டிகையை தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க வைர அட்டிகை முல்லைக்கு கொடுக்கணும்னு சொன்னாங்க ஆனா எனக்கு வைர அட்டிகைத்தான் வேணும் மாமா” என ஒற்றைக்காலில் நின்றாள் தீபா.

‘அல்பம் இவ கிட்ட இல்லாத நகையா முல்லை அண்ணிக்கு கொடுக்கப்போற நகைனு தெரிஞ்சும் வந்து கேட்குறா இவ பின்னால அலைஞ்சு திரிஞ்சு லவ் பண்ணினேன் பாரு என்னை செருப்பால அடிக்கணும்’ எனறு நொந்துக் கொண்ட கண்ணனோ “ஏய் உனக்கு நான் வைர அட்டிகை வாங்கித்தரேன் அண்ணிக்கு போட வேண்டியதை கேட்காதே அல்பமா இருக்கு” என்று கண்ணன் தீபாவை முறைத்தான்.

“எனக்கு இந்த வீட்டு நகையை கேட்க உரிமை இருக்குதானே மாமா உங்க தம்பி என்கிட்டே கேட்காதேன்னு சண்டைக்கு வராரு” என்று ராயனிடம் பஞ்சாயத்துக்குச் சென்றாள்.

“அப்படியில்லமா” என்று ராயன் பேச ஆரம்பிக்கும் முன்பு முல்லையோ “மச்சான் வைர அட்டிகையை தீபாவுக்கே கொடுத்துடுங்க” என்றாள் பெருந்தன்மையாக முல்லை.

ராயனோ “வைர அட்டிகையை உனக்கு  போட்டுக்க தரச்சொல்லுறேன்” என்றான் சின்னச் சிரிப்புடன்.

“தேங்க்ஸ் மாமா” என்று துள்ளிக்குதித்து ஓடினாள்.

அழகம்மைக்கு மனதே இல்லை. “ஏன் ராயா முல்லைக்கு கொடுக்க வேண்டிய பரம்பரை நகையை தீபா கேட்டதும் கொடுக்க சொன்ன” என்றார் கோபத்தோடு.

“அத்தை பாட்டியோட வைர அட்டிகை அம்மாகிட்ட ஒன்னு இருக்கு அதை முல்லைக்கு கொடுத்திடலாம் விடுங்க நகையால பிரச்சனை வேணாம் அத்தை” என்றான் நடுநாயகமாக.

கண்ணனோ ராயன் முன் சங்கடப்பட்டு நின்றவன் “அண்ணா அவ சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்” என்றான்.

“இருக்கட்டும்டா இதெல்லாம் சின்ன பிரச்சனை பெரிசு பண்ணக்கூடாது தூங்குற வழிய பாரு” என்றிருந்தான் ராயன்.

தீபாவோ “அப்பா நான் நகையை வச்சு பிரச்சனை பண்ணலாம்னு இருந்தேன் ஆனா ராயன் ஈசியா முடிச்சிட்டாரு இந்த வீட்டு சொத்தை பிரிக்க என்னால முடியாது போலவே” என்றாள் சோகமாக.

“முயற்சி பண்ணுமா உன்னால முடியும்” என்று மகளுக்கு ஸ்க்ரூ ஏத்தி விட்டார் நாளை நடக்க போகும் விபரீதம் தெரியாமல்.

“பார்க்குறேன் பா அவரு வராரு நான் போனை வைக்குறேன்” என்று கண்ணன் அறைக்குள் நுழைய போனில் ரீல்ஸ் பார்ப்பது போல காட்டிக்கொண்டாள்.

“ஏய் அல்பம் நகைக்கு பேயா அலையுற முல்லை அண்ணி பாரு நகை உனக்கு கொடுக்க சொல்லி பெருந்தன்மையா சொன்னாங்க அவங்களுக்கும் உனக்கும் ஏணி வச்சா கூட எட்டாதுடி உன்னையெல்லாம் லவ் பண்ணி கல்யாணம் பண்ணினேன் பாரு” என்று தலையில் அடித்துக்கொண்டு படுத்துவிட்டான்.

“போடா உனக்குத்தான் பிழைக்கத்தெரியல நான் இப்படியே ஒவ்வொரு நகையா கேட்டு வாங்கி வச்சிப்பேன் நாளைக்கு நமக்கு பிறக்க போற குழந்தைகளுக்கு சொத்து சேர்க்கணும்ல சொத்து இருக்குனு நகை வேணாம்னு சொல்ல முடியுமாடா” என்று ஆர்ப்பரித்தாள்.

கண்ணனோ குறட்டை விட்டான். 

வளைகாப்பிற்கு மூன்று நாட்கள்தான் இருந்தது. தன்வீட்டின் பக்கத்தில் சாமியானா போட்டு திருவிழா போல வளைகாப்பை நடத்த ஏற்பாடு செய்திருந்தான் ராயன்.

அடுத்த நாள் காலையில் தீபா சமையல்கட்டில் வேலைபார்த்ததுக்கொண்டிருந்தவள் அப்படியே மயங்கி விழுந்தாள். 

அமுதாவோ “அச்சோ தீபா என்னமா ஆச்சு?” என்று மயங்கிவிழுந்தவளை பிடித்து நாற்காலியில் சாய்த்து உட்கார வைத்து தண்ணீரை முகத்தில் தெளித்தார். 

அமுதாவின் சத்தம் கேட்டு அழகம்மையும் சமையல் கட்டுக்கு வந்துவிட்டார்.

தீபா கண்விழித்ததும் “என்னம்மா ஆச்சு?” என்று தீபாவின் கையை பிடித்து நாடி பார்த்து “தலைக்கு ஊத்தி எத்தனை நாள் ஆகுது இந்த மாசம் நீ தலைக்கு ஊத்தின போலயே எனக்கு தெரியலையேமா” என்றவரிடம் “ஆமா அத்தை நாள் தள்ளிப்போயிருக்கு” என்றாள் வெட்கப்பட்டுக்கொண்டே.

கோமளத்துக்கு தலைகால் புரியவில்லை. “தலைநாளு பேரனா பெத்துக்கொடுத்து முல்லைக்கு வயிறு பெரிசா இருக்கு அவளுக்கு பெண்பிள்ளைதான் பிறக்கும்” என்று யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கவில்லை மனதில் உள்ளதை பட்டென்று சொல்லி விட்டார்.

அழகம்மையோ “வயிறு பெருசா இருக்கறதை வச்சு என்ன குழந்தைனு சொல்ல முடியாதுல்ல அண்ணி”

“எனக்கு தெரியாதது உனக்கு தெரியப்போகுதாக்கும் தீபாவுக்கு பால் ஏதாவது குடிக்க கொடு” என்று அதிகாரம் தான் செய்தார்.

அழகம்மையோ இவங்க திருந்தவே மாட்டாங்கபோல என்று தலையை ஆட்டியவர் தீபாவுக்கு பாலை சூடு செய்து கொடுத்தவர் “குடிச்சிட்டு நீ ரெஸ்ட் எடுமா நாங்க வேலையை பார்த்துக்குறோம்” என்றிருந்தார் அழகு.

வீட்டில் அனைவருக்கும் தீபா கர்ப்பம் ஆனது தெரியவர சந்தோசப்பட்டனர். தீபா அறைக்குள் சென்றதும் வெட்கப்பட்டு தலை குனிந்தாள்.

கண்ணன் குளித்து வந்தவன் “என்னடி இப்போ வெட்கப்படுற எனக்கு மூட் இல்லை” என்று தலையை துவட்டிக்கொண்டு பால்கனிக்குச் சென்றான்.

“அட என்புருசன் அரை வேக்காடு” என்று தலையில் அடித்துக்கொண்டு பால்கனிக்குச் சென்ற கண்ணனின் கையை எடுத்து அவளது வயிற்றில் வைத்தாள்.

“பசிக்குதா போய் சாப்பிட வேண்டியதுதானே?” என்று கடுப்பேற்றினான் தீபாவை.

“அடேய் நான் ப்ரக்னன்ட்டா இருக்கேன்டா” என்றாள் கோபத்துடன்.

“நிஜமாவா தீபு” என்று மனைவியை அணைத்துக்கொண்டான் அப்பா ஆகும் சந்தோசத்தில்.

“நிஜம்தான் டா” என்று கண்ணைச் சிமிட்டியவள் “அப்பா அம்மாகிட்ட சொல்லுறேன் ஹேப்பி ஆவாங்க” என்றாள் சந்தோசத்தில்.

“சரிடி சொல்லு” என்று அவளின் கன்னத்தில் முத்தமிட்டு அணைப்பிலிருந்து விலக்கிவிட்டான்.

முதலில் மங்களத்திற்கு போன் போட்டாள் தீபா. ஒரே ரிங்கில் மகளின் போனை எடுத்துவிடுபவர் இன்று முழுவதும் ரிங்காகி கட் ஆகும்வரை எடுக்கவில்லை. அம்மாவுக்கு என்னாச்சு போன் எடுக்கலையே என்று அடுத்து பரமசிவத்துக்கு கூப்பிட்டாள் அவரும் போன் எடுக்கவில்லை. என்னாச்சு என்று அவளுக்கு சிறு பதட்டம் வந்தது.

“பிரேனஷ்க்கு பண்ணுவோம்” என்று முகத்தில் அரும்பிய வியர்வையை துடைத்து தம்பிக்கு அழைத்தாள். 

அவனும் போன் எடுக்கவில்லை. மீண்டும் மங்களத்திற்கு போன் போட அப்போதும் போன் எடுக்கவில்லை. கண்ணனோ பால்பண்ணைக்கு ரெடியாகி வந்தவன் “போன் பண்ணிட்டியா அம்மா அப்பா வரேன்னு சொன்னாங்களா?” என்று அவன் கேட்கவும்

“க.கண்ணா அப்பா, அம்மா, தம்பி மூணு பேருக்கும் ரொம்ப நேரமா போன் போடுறேன் யாரும் எடுக்கலை என்னனு தெரியலையே” என்றாள் பதட்டத்துடன்.

“ஏய் ஏதாவது வேலையா இருந்திருப்பாங்க இரு நான் கூப்பிடறேன்” என்று பிரனேஷ்க்கு போன் போட்டான் இம்முறையும் போன் எடுக்கவில்லை.

தீபாவோ “அச்சோ அம்மாவுக்கு ஏதும் உடம்பு சரியில்லாம போயிருக்குமோ அடிக்கடி மயக்கம் வருதுனு சொல்லுவாங்க கண்ணா நாம சென்னைக்கு கிளம்பலாம் வாங்க” என்று அவசரப்படுத்தினாள்.

“இந்த நேரத்துல நாம சென்னைக்கு போறது சரியில்லைடி இரு இன்னொரு முறை போன் பண்ணிப்பார்க்கலாம்” என்று தீபாவின் போனை வாங்கி மங்களத்தின் போனுக்கு போட்டான்.

ரெண்டு ரிங்கில் போன் எடுத்த மங்களமோ “தீ.தீபா நாம மோசம் போய்ட்டோம்டி உன் தம்பியோட ப்ரணட்ஸ் சில பேர் பிரேன்ஷ்க்கு ட்ரக் கொடுத்து ஒரு பொண்ணு கூட இருக்கும் படி போட்டோ எடுத்து என்ன என்னமோ நடந்துருச்சு ப்ரனேஷ் இப்போ ஹாஸ்பிட்டல இருக்கான். அப்பா அலைஞ்சுக்கிட்டு இருக்காருடி எனக்கு பயமா இருக்கு நீ கிளம்பி வரியா” என்றார் அழுகையுடன் மகள் மாசமாய் இருப்பது அறியாமல்.

“அத்தை பயப்படாதீங்க நாங்க இப்போவே சென்னைக்கு கிளம்பி வரோம்” என்ற கண்ணனோ ராயனிடம் நடந்ததை கூற ராயன் தாடையை தடவி போனை எடுத்தான்.

“மாமா நான் உங்ககிட்ட துடுக்குத்தனமா நகை வேணும் பணம் வேணும் சொத்தை பிரிச்சு கொடுங்கனு கேட்டேன்னு எங்கப்பாவுக்கு உதவி பண்ணாம விட்டிராதீங்க” என்று கைகூப்பி காலில் விழபோனவளின் கையை பிடித்து “கர்ப்பமா இருக்க பொண்ணு என் காலுல விழக்கூடாதுமா நான் பார்த்துக்குறேன் உன் அப்பாவோட சொத்துக்களை நான் வாங்கிக்கொடுக்குறேன்” என்று வாக்கு கொடுத்தவன் அடுத்த நிமிடம் சென்னையில் இருந்த கமிஷ்னர், வக்கீல் அனைவரிடமும் விசயத்தை கூறி “எனக்கு நீங்க சுமூகமா முடிச்சுக் கொடுங்க நான் சென்னைக்கு வந்துட்டே இருக்கேன்” என்றான் ராயன்.

நீலகண்டனும் தெய்வநாயகமும் “ராயா நாங்களும் வரோம்பா” என்றதும் “அப்பா, மாமா நீங்க ரெண்டு பேரும் வளைகாப்பு வேலையை பாருங்க நானும் கண்ணனும் போய்ட்டு வந்துடறோம்” என்றவனோ முல்லையை பார்த்து பத்திரமா இருக்கணும் என்று கண்ணசைத்து “கண்ணா போகலாம்டா” என்று வெளியே சென்றான்.

“கண்ணா நானும் வரேன்” என்று தீபா கூறியதும்

கோமளமோ “இப்போ பிரயாணம் பண்றது நல்லது இல்ல நீ போகக்கூடாது பெரியவன் பார்த்துப்பான் தீபா” என்றார் அதட்டலாக.

“அத்தை என் தம்பியை பார்க்கணும் அவனுக்கு என்ன ஆச்சோ தெரியலை. அவன் ட்ரக் யூஸ் பண்ணமாட்டான் குடிக்கறவங்களை கண்டாலே அவனுக்கு பிடிக்காது” என்றாள் அழுகையுடன்.

“எல்லாம் ராயன் பார்த்துப்பான் நீ அழாதேமா” என்று அழகம்மை அவளது கையை பிடித்துக்கொண்டார்.

ராயன் சென்னைக்குச் சென்றதும் பிரனேஷ்  இருக்கும் ஹாஸ்பிட்டலுக்குச் செல்ல அங்கே பரமசிவமும் மங்களமும் பிரனேஷ் இருந்த ஐ.சியுவின் முன்னே பதட்டத்துடன் நின்றிருந்தனர்.

“எப்படி மாமா நடந்துச்சு?” என்றான் பரமசிவத்தின் தோளைத்தொட்டு.

“மாப்பிள்ளை என் மகன் ட்ரக் அடிக்ட் கிடையாது. அவனோட ப்ரண்ட்ஸ் நல்லவங்க போல வேஷம் போட்டு அவனை ஏமாத்திட்டாங்க இப்போ போலீஸ் என் மகன் மேல ட்ரக் யூஸ் பண்ணிட்டான்னு கேஸ் போட்டிருக்காங்க என்னால ஒண்ணும் பண்ண முடியலை” முகத்தை பொத்திக்கொண்டு அழுதார்.

“நான் எனக்கு தெரிந்த கமிஷனர்கிட்ட பேசியிருக்கேன் மாமா பிரச்சனையை சுலபமா முடிச்சிடலாம்னு சொல்லியிருக்காரு” என்ற நேரத்தில் கமிஷனர் ராயனுக்கு போட்டார். 

“பரமசிவம் கம்பெனியோட ஆபிஸ்ல ரெண்டு கேமரா இருக்கு அதுல ஒன்னைதான் அவன் ப்ரண்ட்ஸ் உடைச்சி பிரனேஷ்க்கு ட்ரிங்ஸ் யூஸ் பண்ண சொல்லியிருக்காங்க அவரு மறுத்து இருப்பது கேமராவுல பதிவு ஆகியிருக்கு. அவரை வற்புறுத்தி குடிக்க வச்சியிருக்காங்க குடிச்ச கொஞ்ச நேரத்துல அவர் மயங்கினதும் பத்திரத்துல கையெழுத்து வாங்கின பிறகுதான் ஒரு பெண் வந்து பிரனேஷுடன் நெருக்கமா இருப்பது போல தெளிவா பதிவு ஆகியிருக்கு சோ நோ ப்ராப்ளம் கேஸ் ஈசியா முடிச்சிடலாம் கவலைவேண்டாம்” என்று ராயனிடம் கூறவும் “தேங்க்ஸ் சார்” என்று போனை வைத்திருந்தான் ராயன்.

இரவுதான் கண்விழித்தான் பிரனேஷ் சோசியல் மீடியா முழுக்க பிரனேஷ் மோசமானவன் என்று நியூஸ் வந்துவிட்டது. பரமசிவம் கம்பெனியின் பங்குகள் சரிந்து விட்டது. ஒரே நாளில் அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்பட்டால் இப்படிதான் ஒரே நாளில் அழிந்துவிடும்.

ராயன் பிரச்சனைகளை முடித்துவிட்டு “மாமா இங்க இருக்க வேணாம் பிரனேஷ்க்கு ஒரு சேன்ஞ் வேணும் நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துடுங்க நாங்க கிளம்புறோம்” என பரமசிவத்துக்கு ஆறுதல் கூறினான்.

“ரொம்ப நன்றி மாப்பிள்ளை நீங்க இல்லைனா இந்நேரம் எங்க குடும்பம் என்ன கதியாகியிருக்குமோ தெரியலை” என்று ராயனின் கையை பிடித்துக்கொண்டு கதற ஆரம்பித்தார் பரமசிவம்.

“எல்லாம் சரியாகும் மாமா நாங்க கிளம்புறோம்” என்று கிளம்பிவிட்டனர் ராயனும் கண்ணனும். 

தீபாவோ பரம்பரை வைர அட்டிகையை முல்லையின் கழுத்தில் போட்டுவிட்டு “இந்த அட்டிகை உனக்குத்தான் எடுப்பா இருக்கும் நான் உன்னை விட நிறம் கொஞ்சம் கம்மியா இருக்கேன் முல்லை” என்றாள் புன்னகையுடன்.

தன் குடும்பத்து பிரச்சனையை தீர்த்து வைத்த ராயன் மேல மரியாதை கூடியது தீபாவிற்கு. மனம் திருந்தி விட்டாள். காசு பணம் முக்கியம் இல்லை சொந்தம் தான் முக்கியம் என்று பட்டு தெரிந்துக் கொண்டாள் தீபா.

பூங்கொடியோ குமுதாவையும் அரசியையும் வளைகாப்பிற்கு அழைத்துவந்திருந்தாள். தென்னரசுவோ வளைகாப்பு முடிந்து பந்தியை கவனிக்க நாற்காலியை போடச் சொல்லி ஆட்களிடம் வேலை வாங்கிக்கொண்டிருந்தான்.

பரமசிவம் மகனுடன் வந்துவிட்டார் வளைகாப்பிற்கு பிரேனஷ் தீபாவின் அறையை விட்டு வெளியே வரவில்லை. கலகலவென்று இருப்பவன் இப்போது பிரம்மை பிடித்தவன் போல அமர்ந்திருந்தான்.

தம்பியை அணைத்துக்கொண்டு “நீ நல்லவன் டா உன்னோட வளர்ச்சி கண்டு பொறாமையில எல்லாம் பண்ணி இருக்காங்க நீ சென்னை போக வேணாம் ராயன் மாமா கிட்ட இந்த ஊருல பிஸ்னஸ் ஏற்பாடு பண்ணி தர சொல்லுறேன்” என்றாள்.

பிரனேஷோ “இல்லக்கா நான் துவண்டு போகமாட்டேன் ராயன் மாமா என்னை சென்னையில் தான் பிஸ்னஸ் பண்ண சொல்லி இருக்காரு” என்றான் உறுதியாக.

வளைகாப்பு ஆரம்பம் ஆனது. முல்லைக்கு சந்தோசம் முகத்தில் தாண்டவம் ஆடியது. அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டனர். தோழி நதியா மட்டும் வரவில்லையென்று வாசலையே பார்த்திருந்தாள் முல்லை.

பாலாஜியும் நதியாவும் வீட்டுக்குள் தயங்கிக்கொண்டு வர கோமளம் மட்டும் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

தையல்நாயகி நதியாவுடன் ஒருநாள் இருந்து விட்டு வீட்டுக்கு வந்திருந்தார்.

“இப்போ காய்ச்சல் சரியாகிடுச்சுதானே?” என்று அழகம்மை நதியாவின் கன்னத்தை பிடித்தார்.

“இப்போ நான் நல்லாயிருக்கேன் அத்தை” என்றாள். 

அவளது கழுத்தில் தாலிச் செயினை தவிர வேறு எதுவும் போடவில்லை. 

நாயகியோ தன் கழுத்தில் போட்டிருந்த ரெட்டைவடச்செயினை கழட்டி நதியாவின் கழுத்தில் போட போக “வேணாம் சித்தி அம்மா ஏதும் சொல்லுவாங்க” என்று மறுத்துவிட்டாள்.

அழகம்மையோ “நதியா என்னோட நகைகள் இருக்கு வா அத்தை நான் உனக்கு போட்டு விடுறேன்” என்றதும்

“ஏன் அத்தை நான் ஒரு செயினோட வந்தா என் ப்ரண்ட்க்கு வளையல் போட விடமாட்டீங்களா?” என்றாள் விளையாட்டாக.

“அடி கழுதை என்ன பேச்சு பேசுற நாங்க எல்லாம் கழுத்து நிறைய நகை போட்டிருக்கோம் நான் வளர்த்த பொண்ணு ஒரு நகை மட்டும் போட்டிருந்தா எங்களுக்கு மனசு ஒப்புமா சொல்லு புள்ள” என்று நதியாவை செல்லமாய் மிரட்டினார்.

“எனக்கு இந்த ஒரு செயின் போதும் அத்தை” என்றவளோ முல்லையின் பக்கம் சென்று நின்றுக் கொண்டாள்.

வளைகாப்பு சிறப்பாக நடைபெற்றது. பெரியவர்கள் நலங்கு வைத்து வளையல் போட்டு விட்டனர் கோமளம் மட்டும் மகளை பார்ப்பதும் முகத்தை திருப்புவதுமாக இருந்தார்.

  •  

என் இனிய ராட்சஷனே 14

அத்தியாயம் 14

 

கருப்பன் விசிலடித்துக் கொண்டே துள்ளலுடன் வீட்டின் உள்ளே வர அங்கே அவனுக்கு முன்பு வந்து அவனின் பெரிய அக்காவும் அவரின் மகள் நந்தினியும் காத்துக் கொண்டு இருந்தனர். 

 

கருப்பனின் துள்ளல் நடை உடனே தடைப்பட்டு நின்று போனது ஒரு கணம் அப்படியே தயங்கி எப்போதும் போல் நடந்து வந்து சோபாவில் பெரியப்பொண்ணுவின் முன் வந்து அமர்ந்தான் “என்ன அக்கா திடீர்னு வீட்டுக்கு வந்துருக்க எதாவது முக்கியமான விஷயமா” என்று கேட்க்கும் போதே சின்னப்பொண்ணு அங்கே காபியுடன் வந்தார். 

 

அவர் டேபிளில் காபியை வைத்து விட்டு போக பெரியப்பொண்ணு அவரை பார்த்து முறைத்து கொண்டே மீண்டும் பேச ஆரம்பித்தார் “ஏன் டா தம்பி எதாவது விஷயம் இருந்தா தான் நானும் என் மகளும் இந்த வீட்டுக்கு வரனுமா இது எனக்கும் தான் அம்மா வீடு இங்க இருக்கவங்களுக்கு மட்டும் இல்லை” என்றார் கோபத்துடன்.

 

“அய்யோ அப்படி இல்லை அக்கா சொல்லாம கொல்லாம வந்திருக்கியே அதனால தான் கேட்டேன்” என்றான் பதிலுக்கு தனிவாக கருப்பன். 

 

“உனக்கு தெரியாதது ஒன்னுமே இல்லை டா தம்பி நந்தினி உன் மேல உயிரையே வச்சிருக்கா” என்றார் தயக்கத்துடன் கருப்பன் நந்தினியை ஏறெடுத்து பார்க்க அவள் தலை குனிந்து அப்பாவியை போல் அமர்ந்து இருந்தாள்.

 

“அவளுக்கு நீ இல்லாமல் அன்னம் தண்ணீ இறங்க மாட்டேங்குது தனியா இருந்தா உன் நினைப்புல எதாவது பண்ணிக்கிவாளோன்னு பயமா இருக்கு டா” என்று கூறும் போதே அவரின் கண்கள் கலங்கியது கண்ணீரை புடவை முந்தானையில் துடைத்து கொண்டு மூக்கை உறிஞ்சிக் கொண்டே மீண்டும் பேச ஆரம்பித்தார். 

 

இப்போது கருப்பனின் கையை கெட்டியாக பிடித்து கொண்டார் பெரியப்பொண்ணு அவனோ ஒன்றும் புரியாமல் அவரை பார்க்க 

“அதனால தான் தம்பி உன்னை பார்த்து பேசிட்டு போலாம்ன்னு வந்தேன் நீயே நம்ம நந்தினியை ரெண்டாம் தாரமா கட்டிக்கயேன் நம்ம ஊர்ல ரெண்டு பொண்டாட்டி கட்டுறது ஒன்னும் பெரிய விஷயம் கிடையாதே” என்று கூறி முடிக்க தீச்சுட்டார் போல அவர் கையில் இருந்த தன் கையை உதறினான் கருப்பன். 

 

சமயலறையில் இருந்த சின்னப்பொண்ணுவின் காதிலும் இது விழுந்தது ஒரு கணம் தூக்கி வாரிப்போட்டது தன் மகளின் வாழ்க்கை இனி என்ன ஆகுமோ என்று நினைத்து கண்ணீர் விட ஆரம்பித்தார். 

 

அப்போது “அக்கா முதல்ல என் வீட்டை விட்டு வெளியே போ” கருப்பனின் கர்ஜனையான கோப குரல் சமயலறையை வந்தடைந்தது சின்னப்பொண்ணு உடனே வெளியே ஓடி வந்து பார்த்தார். 

 

பெரியப்பொண்ணு “என்ன டா தம்பி இப்படி சொல்ற” என்று அவனை பார்த்து அதிர்வுடன் கேட்க “அக்கா இந்த மாதிரி நினைப்போட வரன்னா இனி இந்த வீட்டு பக்கமே வராத என்னால ரெண்டு பொண்ணுங்களோட வாழ்க்கையை வீணாக்க முடியாது” என்றான். 

 

பெரியப்பொண்ணு உடனே கண்ணீர் விட ஆரம்பித்தார் “அப்போ இத்தனை நாளா என் மகள் மேல பாசமா இருக்க மாதிரி நடிச்சியா” என்று கேட்க 

“அக்கா எனக்கு இப்பவும் நந்தினி மேல பாசம் இல்லாம இல்லை நானே அவளுக்கு ஒரு நல்ல பையனா பார்த்து கட்டி வைக்கிறேன் கொஞ்சம் பொறுமையா இரு” என்றான். 

 

“நீங்க மாப்பிள்ளை பார்த்து கட்டி வைப்பிங்கன்னு தான் நாங்க எங்க பிள்ளையை வச்சுக்கிட்டு இருக்கோமா போ டா நீ இல்லைன்னா என் பொண்ணுக்கு கல்யாணமே நடக்காது பாரு, இந்த ஊரே மெச்சுர அளவுக்கு ஜாம் ஜாம்ன்னு நான் கல்யாணம் பண்ணி வைப்பேன் 

தம்பியாச்சே உறவு விட்டு போக கூடாதுன்னு நினைச்சா உனக்கு அந்த கீழக்குடிக்காரி தான் அவ்வளவு முக்கியமா போய்ட்டால்ல” என்றார் கோபத்துடனே. 

 

“அக்கா இன்னொரு தடவை அவளை கீழ்க்குடிக்காரின்னு சொன்ன நான் மனுசனாவே இருக்க மாட்டேன் அவள் என் பொஞ்சாதி இந்த கருப்பனோட பொண்டாட்டி” என்றான் அவனும் ரோஷத்துடன் பதிலுக்கு சற்றும கோபம் குறையாமல். 

 

“ஓஹோ அந்த அளவுக்கு ஆகிப் போச்சா 

இந்தா வந்து நிக்குறாளே ஒன்னும் தெரியாத அப்பாவி மாதிரி இவள் சமத்து எல்லாம் எனக்கு ஆகாது பா கல்யாணத்துக்கு முன்னாடியே பொண்ணை கூட்டி கொடுத்துட்டு இந்த சொத்தை எல்லாத்தையும் வளைச்சி போட்டுட்டா நமக்கு அந்த சாமர்த்தியம் எல்லாம் வராது மா” என்று சின்னப்பொண்ணை பார்த்து கொண்டே கூற. 

 

அவர் பேச்சில் சின்னப்பொண்ணை அழுதேவிட்டார் “அக்கா என்ன இவ்வளவு மோசமா பேசுறிங்க” என்று கண்ணீருடன் சின்னப்பொண்ணு கேட்க 

“என்ன டி ரோஷமா உன் புத்தி தான உன் மகளுக்கும் வரும் நம்ம அப்பா அம்மாவை அசிங்கப்படுத்தி ஊரை விட்டு ஓடிப்போனவள் தான டி நீ நல்லா ஆடுறிங்க டி நாடகம்” என்று அவரை மேலும் கீழும் பார்த்துக் கொண்டே கூற. 

 

“அக்கா நீ வெளியே போ” என்று மீண்டும் கத்தினான் கருப்பன் அந்த வீடே அதிரும் படி அவன் கண்களில் அத்தனை கோபம் “டேய் தம்பி” என்று பேரதிர்ச்சியுடன் பெரியப்பொண்ணு அவனை பார்க்க “உன்னை வெளியே போன்னு சொன்னேன்” என்றான். 

 

பெரியப்பொண்ணு அழுது கொண்டே நிற்க “அம்மா வா போலாம்” என்று நந்தினி அவரின் கைப்பிடித்து இழுத்தவள் கருப்பனை முறைத்துக் கொண்டே விறுவிறுவென அங்கிருந்து தன் தாயை அழைத்துக் கொண்டு சென்றாள். 

 

இவர்கள் இருவரும் தன் வீட்டில் இருந்து வெளியே வருவதை வழியில் பார்த்த சிவகாமி “நந்தினி மா எப்போ வந்த” என்று அவளிடம் கேட்க அவள் அவரிடம் எதுவும் பேசாமல் முகத்தை திருப்பி கொண்டு சென்றாள். 

 

சிவகாமி வீட்டின் உள்ளே வந்தவர் கருப்பனிடம் “டேய் உங்க அக்காவை என்ன டா சொன்ன அழுதுட்டே போறா” என்று கேட்க “அக்காவை நான் எதுவும் சொல்லலை மா அவங்க தான் என் கிட்ட தப்பா பேசிட்டு போறாங்க” என்றவன் நடந்த அனைத்தையும் கூற. 

 

“அவள் சொன்னதுல என்ன தப்பு இருக்கு” என்று அவனிடம் கேட்க 

“என்ன மா நீயும் இந்த மாதிரி பேசுற” என்று அவன் கேட்க. 

 

“ஆமாம் டா என் பேத்தி வாழ வேண்டிய இடத்துல இன்னொருத்தி வந்து வாழுறாளே” என்றார் ஆதங்கத்துடன்

“அம்மா அப்போ இளமதி யாரு” என்று அவன் கேள்வி கேட்க “அவள் என் பேத்தி இல்லை” என்றார் கொஞ்சம் கூட யோசியாமல் அதைக் கேட்ட சின்னப்பொண்ணு மனம் தாங்க முடியாமல் அழுது கொண்டே உள்ளே சென்றுவிட்டார். 

 

கருப்பனும் அதற்க்கு மேல் அவரிடம் பேசி எந்த பயனும் இல்லை என்று நினைத்தவன் அங்கிருக்க பிடிக்காமல் வெளியே சென்றுவிட்டான் 

அவனின் மனம் வலித்தாலும் தான் செய்த தவறுக்கு தன் அக்கா காயப்படுவதை அவனால் தாங்கி கொள்ள முடியவில்லை அதனால் தான் தன் பெரிய அக்காவிடம் அவ்வாறு நடந்து கொண்டான். 

 

நந்தினி வீட்டுக்கு வந்தவுடன் தன் தாயை முதல் வேலையாக திட்ட ஆரம்பித்தாள் “அம்மா உனக்கு கொஞ்சம் கூடவா அசிங்கமா இல்லை அங்க போய் அந்த ஆளு கிட்ட கெஞ்சிட்டு இருக்கியே” என்றாள். 

 

“ஆமாம் டி இவன் இப்படி மாறுவான்னு நான் கனவுல கூட நினைக்கல” என்று பெரியப்பொண்ணு கண்ணீர் விட 

“அம்மா நீ அழாத நமக்கான நேரம் வரும் அன்னைக்கு அவங்களை கவனிச்சிக்கலாம்” என்று வன்மத்துடன் அவரிடம் கூறினாள் நந்தினி இருப்பினும் பெரியப்பொண்ணு அழுவதை நிறுத்தவேயில்லை. 

 

கருப்பனுக்கு மனதில் அவன் அக்காவை காயப்படுத்தியது அவன் தாயின் பேச்சு மிகவும் வலிக்க செய்ய மனம் தாங்க முடியாமல் வழமை மாறாமல் குடிக்க சென்றான் 

குடித்துவிட்டு வந்தவனுக்கு அப்போதும் அவனின் மனதின் ரணம் ஆறாமல் வலிக்க இரவு தன் அறையின் உள்ளே சென்று படுக்கையில் விழுந்தான். 

 

அவன் போதையில் படுத்திருக்க அவன் அலைப்பேசி ஒலித்தது அதை எடுத்து திரையில் யார் என்று பார்க்க பொண்டாட்டி என்று பக்கத்தில் அழகிய ஹார்ட் வேறு இருந்தது இளமதி தான் அழைத்திருந்தாள்.

 

அதை பார்த்துவிட்டு அழைப்பை எடுக்காமல் படுக்கையில் உருண்டு புரண்டு கொண்டு இருந்தான் மீண்டும் மீண்டும் அழைப்பை வர கோபத்துடன் அழைப்பை எடுத்தவன் காதில் வைக்க “ஹலோ மாமா” என்று இளமதி அழைக்க

“ஒரு தடவை எடுக்கலைன்னா விட மாட்டியா சும்மா சும்மா தொல்லை பண்ணிக்கிட்டு” என்று மறுமுனையில் இருந்து அவன் எரிந்து விழ அவள் அழுது கொண்டே அழைப்பை துண்டித்தாள்.

 

‘ஏதோ நைட் போன் பண்றேன்னு சொன்னாரு போன் பண்ணினா இப்படி எரிஞ்சு விழறாரு’ என்று மனதில் நினைத்தவள் கோபத்துடன் படுத்து கொண்டாள் ஆனால் அவளும் உறங்கவில்லை. 

 

கருப்பனுக்கு இன்று உறக்கமே வரவேயில்லை சிறிது நேரம் அலைபேசியில் எதையாவது பார்க்கலாம் என்று தள்ளிக் கொண்டு இருக்க அவன் நண்பர்கள் அடங்கிய பக்தி வாட்சாப் குரூப்பில் ஏதோ ஒரு வீடியோ வந்திருக்க தெரியாமல் அதை எடுத்து பார்த்துவிட்டான் அதை பார்த்த பின் அதற்க்கு முன் அவன் மனதில் இருந்த அனைத்து கோபங்களும் இறங்கி முழுதாக இளமதி நினைவு ஒன்று மட்டுமே இருந்தது. 

 

அவளை நினைத்து கொண்டே அவளுக்கு அழைக்க அவள் அழைப்பை எடுக்கவில்லை இரண்டு முறை அழைத்தும் அவள் எடுக்கவில்லை என்றவுடன் போதையில் தன் புல்லட்டை எடுத்துக் கொண்டு அவள் விடுதிக்கே சென்றுவிட்டான். 

 

பின்பக்கம் இருந்த வனத்தில் வண்டியை நிறுத்தி விட்டு நடந்து வந்து காம்பெளவுன்ட் சுவர் வழியாக உள்ளே குதித்தான் வெளியே வேறு இடியும் மின்னலுமாக இருந்தது செக்யூரிட்டி உறங்கி கொண்டு இருக்க சத்தமில்லாமல் அவனை கடந்து சென்றான். 

 

ஹாஸ்ட்டல் உள்ளே வந்தவன் இளமதி அறை எங்கு இருக்கிறது என்று தெரியாமல் அவளுக்கு அழைக்க இந்த முறை அவள் எடுத்துவிட்டாள். 

 

“உன் ஹாஸ்ட்டல் ரூம் நம்பர் என்ன” என்று அவன் கேட்க 

“எதுக்காக கேட்க்குறிங்க” என்றாள் அவள் பதிலுக்கு “சொல்லு டி” என்று அவன் கத்த அவளும் நம்பரை கூறினாள் சரியாக அந்த அறையின் வாசலில் சென்று நின்றவன் கதவை தட்ட. 

 

இளமதி போனில் “மாமா இருங்க யாரோ கதவை தட்டுறாங்க வரேன்” என்று கதவை திறக்க அங்கே தன் முன்னே நின்றிருந்த தன் மாமனை பார்த்து விழி விரித்து நின்றுவிட்டாள். 

 

அவளின் அறை தோழி உடல்நிலை சரியில்லாமல் ஊருக்கு சென்றிருக்க அறையில் அவள் மட்டுமே தனியாக இருந்தாள் வெளியே யாரோ வரும் அரவம் கேட்க அவனின் கைப்பிடித்து உள்ளே இழுத்து கதவடைத்தாள் சரியாக அந்த நேரம் மின்சாரமும் துண்டானது “மாமா எதுக்காக இங்கே வந்திங்க” என்று அவன் அருகில் வந்து அவள் சத்தமில்லாமல் கேட்க அடுத்த நொடி அவளை தன் கைகளில் தூக்கி சென்றான். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  •  

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 32

பாத்திரங்களை சுத்தம் செய்து வந்தவளிடம் “என்ன இது எப்போ ராயன்கிட்ட பணம் கேட்ட என்னை அவமானப்படுத்துறதே உனக்கு வேலையா போச்சு டி” என்று தன்னிடம் உண்மையை மறைத்து விட்டாளென்று கன்னத்தில் அடித்து விட்டான்.

“என்னை சும்மா சும்மா அடிக்குறீங்க என்னை அடிச்சா யாரும் வரமாட்டாங்கனுதானே அடிக்குறீங்க” என்று இதழ் பிதுக்கி அழ ஆரம்பித்தாள் நதியா.

பாலாஜிக்கு அவள் அழுததும் ஒருமாதிரி ஆகிவிட்டது. அதுவும் எனக்கு யாரும் இல்லைனு அடிக்குறீங்களா என்ற கேவலை கண்டதும் அவளது கையை பிடித்து இழுத்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டான். அவள் கோமளம் போல குள்ளம் கொஞ்சம் பப்ளிமாஸ் போலவும் இருப்பாள்.

“ஏய் உருண்டை அழாதடி” என்று அவளது முதுகை வருடிக்கொடுத்தான்.

நதியாவின் கையை பிடித்திருக்கிறான் இப்படி மென்மையாக பிடித்ததும் கிடையாது. ஏய், ஏன்டி, நதியா என்று கன்னா பின்னாவென்று பேசுபவன் இன்று உருண்டை என்று புதியதாய் வார்த்தையை போட்டு கூப்பிட்டிருந்தான்.

அவனது நெஞ்சில் சாய எப்போது நேரம் வரும் என்று காத்திருந்தவளுக்கு ஜாக்பாட் அடித்தது அவளை அணைத்துக்கொண்டது. அவளுக்கு சில்லென்று பனிமழையில் நின்றது போல இருந்தது. காலத்திற்கும் என்னை தொடமாட்டானா கொஞ்சமாட்டானா என்று தவம் கிடந்தவளுக்கு இன்று ஏதோ தான் செய்த தவத்துக்கு பலன் கிடைத்ததை போல இருந்தது அவனது அணைப்பு. அவளுமே அவனை இறுக அணைத்துக்கொண்டாள். இருவரும் அப்படியே நின்றுக் கொண்டிருந்தனர். அவனது தலை வருடுவது நின்றதும் தலையை நிமிர்த்தி அவனது முகத்தை அப்பாவியாய் பார்த்தாள்.

“போடி படுத்து தூங்கு” என்று அவளை விட்டு விலகினான். 

“இப்படியா காட்டுமிராண்டி போல அடிப்பாங்க கன்னம் இன்னும் எரியுது” என கன்னத்தை தடவிக்கொண்டு அவனை முறைத்தாள்.

“ரொம்ப பண்ணாதடி மூனு மணிக்கு எழும்பணும்” என்று அவளது முதுகில் கை வைத்து தள்ளிக் கொண்டு அறைக்குள் தள்ளி விட்டு சமையல்கட்டுக்குச் சென்று ஃபிரிட்ஜிலிருந்து ஐஸ்கட்டியை கண்ணாடி பவுலில் எடுத்து வந்தவன் மெத்தையில் கன்னத்தை பிடித்துக்கொண்டு படுத்திருந்தவளை “எழும்பி உட்காருடி” என்றான் சிறு அதட்டத்துடன்.

அவளோ எழும்பலைனாலும் திட்டுவாரு என்று கன்னத்தை பிடித்துக்கொண்டு எழுந்து அமர்ந்தாள்.

அவளது பக்கம் உட்கார்ந்து ஐஸ்கட்டியை அவளது கன்னத்தில் சிவந்த இடத்தில் ஒத்தடம் போல வைத்து வைத்து எடுத்தவன் “கல்யாணம் முடிச்சு மூனு நாளுல உன் அண்ணன் கம்பெனி ஆளு மூலம் உன் போனை கொடுத்துவிட்டான்ல அப்பவே போன் வேணாம்னு திருப்பி அனுப்பி வச்சிருக்கணும் பாவம் பார்த்து உனக்கு போனை வாங்கிக்கொடுத்தேன் பாரு என்னை செருப்பால அடிக்கணும்” என்று தன்னையே திட்டிக்கொண்டான் பாலாஜி.

“ஆஆ வலிக்குது” 

“ரொம்ப ஓவரா பண்ணாதே எனக்கு வர கோபத்துக்கு கடிச்சு வச்சிருவேன்” 

“ம்க்கும் கடிச்சிட்டாலும்” என்று முணகியதும்

“என்ன சொன்ன” என்றான் வேகமாக.

“இப்போ வலிக்கலனு சொன்னேன்” என்று இதழை சுளித்தாள்.

“உதட்டை சுளிக்காதடி” அவளது உதட்டை விரலில் சுண்டி விட்டான்.

“போடா வலிக்குது” என்று அவனது கையை தட்டிவிடவும் பவுலில் இருந்த ஐஸ்கட்டியெல்லாம் அவளது ஆடைகளுக்குள் போய்விட்டது. 

“ஆஆ ஜில்லுனு இருக்கு” மெத்தையில் குதித்தாள். நைட்டி மட்டும் போட்டிருக்க அவளது அழகுகள் கதை படித்தது.

“ஏய் எதுக்குடி இப்படி ஜங்கு ஜங்குனு குதிக்கற அறிவு இல்லையாடி” என்று அவளது கையை பிடித்து உட்கார வைத்ததும் 

“உங்க பனியன்குள்ள ஐஸ்கட்டியை போட்டா இப்படித்தான் நீங்களும் குதிப்பீங்க இருங்க வரேன்” என்று மெத்தையிலிருந்து வேகமாக இறங்கி சமையல்கட்டுக்குச் சென்று ஃபிரிட்ஜிலிருந்து ஐஸ்கட்டியை எடுத்து வந்தவளை பார்த்து “என்ன பண்ணுற லூசு?” என்று கேட்கும் நேரத்திற்குள் அவனது பனியனுக்குள் ஐஸ்கட்டியை போட்டுவிட்டாள்.

“ஏய் லூசு உருண்டை என்னடி பண்ணுற?” என்று அவனது பனியனுக்குள் இருந்த ஐஸ்கட்டியை எடுத்து அவளது நைட்டிக்குள் போட்டு விட்டான். 

அவள் “ஸ்ஆஆ குளிருது” என்று குதிக்க இவன் அவளை தூக்கி மெத்தையில் போட்டு “தூங்குடி வானரமே” என்று அவளது முகத்தருகே நெருக்கமாக தன் முகத்தை கொண்டுச் சென்றான்.

அவளோ அவனது முக நெருக்கத்தில் மூச்சடைத்துப்போனாள். இருவரும் முதல் முறை மோகத்துடன் பார்த்துக்கொண்டனர். கண்கள் நான்கும் காதல் கதை பேசியது. முதலில் அவன் தான் சுதாரித்தது. அடுத்த நொடி அவள் மேலிருந்து விலகி அவளுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டான்.

“இப்போ எதுக்கு முதுகை திருப்பி படுத்துக்கிட்டீங்க என் பக்கம் பார்த்தா என்னை கட்டிபிடிச்சு ஃபர்ஸ்ட் நைட் நடந்துரும்னு உங்களுக்கு பயம் அப்படித்தானே?” என்றாள் மூக்கு விடைக்கும் கோபத்தில்.

அவள் புறம் திரும்பியவன் “ஆமா அப்படியே இவ பெரிய ரதி இவ மேல ஆசைப்பட்டு கட்டிபிடிச்சு முத்தம் கொடுத்து அப்படியே உன் மேல பாயத்தோணுது” என்றான் தோரணையாக.

“நேத்து காலையில நான் வாசல் பெருக்கி கோலம் போடும்போது நீங்க என்னை சைட் அடிச்சீங்க இல்லைனு மட்டும் சொல்லாதீங்க பாலாஜி! என் கூட எட்ட நின்னு பார்த்து குடும்பம் நடத்த போறீங்களா!” என மூச்சு வாங்க பேசினாள்.

அவன் அவளையே உற்றுபார்த்திருந்தானே தவிர ஒரு வார்த்தை பேசவில்லை. அவனிடம் பதில் இல்லை. ஏன் அவளை அவனும் விரும்புகிறான். விரும்ப வைத்துவிட்டாள் நதியா. 

“நான் என்ன கொலைக்குத்தமா பண்ணிட்டேன் என்னை விலக்கி வச்சிருக்கீங்க. உங்க மேல ஆசைப்பட்டேன் அது ஒரு குத்தமா! எல்லாரும் என் அண்ணன் காதலுக்கு எதிரி இல்லனு சொல்லுறீங்க. அண்ணாகிட்ட சொல்லியிருந்தா கல்யாணம் பண்ணி வச்சிருப்பாருனும் சொல்றாங்க…அம்மாவுக்கு உங்களை அறவே பிடிக்காது பார்த்தாவே வெறுப்பா பேசுவாங்க. அப்படியிருக்க நான் அண்ணாகிட்ட போய் எனக்கு பாலாஜியை பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணி வைங்கனு கேட்கவா முடியும்… அண்ணாவும் அம்மாகிட்ட நம்ம லவ் பத்தி சொல்லுவாங்க.

ஆனா அம்மா கண்டிப்பா நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்கமாட்டாங்க அண்ணாவுக்கு என்னால சிரமம் வேணாம்னுதான் நான் மண்டபத்துல அப்படி பண்ணிட்டேன். இப்போதான் நான் பண்ணியது எவ்வளவு பெரிய தவறுனு புரியுது. எனக்கு நீங்க கிடைக்கணும் அவ்ளோதான் அப்போதைக்கு என் மூளைக்கு தோணுச்சு. அப்ப எதுவும் புரியலைங்க வெட்கத்தை விட்டு சொல்லுறேன் நான் உங்களோட சேரணும் எனக்கு உங்களை போல குண்டு குண்டு கண்ணோட குழந்தை பிறக்கணும்” என்று தாவி அவனை அணைத்துக்கொண்டாள்.

அவனோ அவளை அணைக்கவில்லை அப்படியே அமர்ந்திருந்தான். அவளோ அவனிடமிருந்து விலகி அவன் தன்னை அணைக்கவில்லையென்ற கோபத்தில் “நீங்களும் என்னை விரும்பறீங்கனு எனக்கு தெரியும் பாலாஜி… எனக்கு புரியுது நீங்க அண்ணனுக்கு துரோகம் பண்ணிட்டீங்கனு என்கிட்ட வர யோசிக்குறீங்க அதுக்காக அதையே இழுத்து பிடிச்சு இருக்க முடியுமா..?” என்று அங்கலாய்த்தவள் அவன் அமைதியாக அவளது முகத்தை பார்த்திருக்க அவளாக தொடர்ந்து “நீங்களா வந்து என்னை கட்டிபிடிக்காம நான் உங்க நிழலைக்கூட தொடமாட்டேன்” என்ற கோபம் வந்து மெத்தையில் படுத்துக்கொண்டவளுக்கு அழுகைதான் வந்தது. அழுதபடியே உறங்கியும் விட்டாள்.

அடுத்த நாள் காலையில் பாலாஜி எழுந்த போது அவள் எழும்பவில்லை மணியை பார்த்தான் நாலு ஆகியிருக்க “அச்சோ நேரம் ஆச்சே ஐஞ்சு மணிக்கு எல்லாம் பால்காரவங்க வந்துடுவாங்க” என்று அடித்து பிடித்து எழுந்து பால் கறக்கச் சென்றான். 

அவனுக்கு உதவியாக பாட்டியின் பேரன் கோவிந்தனை காலை மாலை பால் கறக்க மட்டும் வரச்சொல்லியிருந்தான். கட்டுத்தரைக்கு போகும்போது கோவிந்தன் பால் கறந்துக் கொண்டிருந்தான். அவசரமாக பைப்பில் தண்ணீரை பிடித்து முகம் கழுவிவிட்டு பால் சொம்பை எடுத்துக்கொண்டு மாட்டு பக்கம் சென்றவன் மாட்டை தடவி கொடுத்து பால் கறக்க ஆரம்பித்தான் பாலாஜி.

“என்ன அண்ணா எப்பவும் எனக்கு முன்னே வந்து பால் கறந்துட்டிருப்பீங்க என்னாச்சு உடம்பு கிடம்பு சரியில்லையா?” என்றான் கோவிந்தன்.

“இல்லடா நைட் உங்க அக்காகூட சின்ன சண்டைபோட்டேன் தூங்கறதுக்கு கொஞ்சம் லேட்டாகி எழும்ப நேரம் ஆச்சு” என்றான் சின்னசிரிப்புடன்.

“நான் நம்பிட்டேன் அண்ணா அக்கா உங்க மேல பிரியமா இருக்காங்க அவங்க கூட சண்டைபோட்டீங்கனு சும்மா சொல்லாதீங்க நானும் காலேஜ் போறேனல் எனக்கும் எல்லாம் தெரியும்” என்று அவன் வெட்கப்பட்டு சிரித்தான்.

“அடேய் இப்பதான் மீசை முளைச்சிருக்கு வயசுக்கு மீறி பேசாதடா” என்று அவனை செல்லமாய் திட்டிக்கொண்டே பாத்திரத்தில் கறந்த இருந்த பாலை கேனில் ஊற்றினான்.

எப்போதும் தன்னுடன் எழுந்து வாசல் தெளிப்பவள் இன்னும் தூங்குறாளே நைட் அடிச்சதுல இன்னும் கோபம் போகலை போலயே என்ற யோசனையும் பால்காரர்களுக்கு பாலை ஊற்றி கணக்கு நோட்டில் எழுதி வைத்துவிட்டு வீட்டுக்குள் சென்றான்.

நதியா இன்னும் அறையைவிட்டு எழுந்து வரவேயில்லை. “ஓ மேடம்க்கு இன்னும் கோபம் போகலை போலயே இப்ப சமாதானம் பண்ண மாட்டேன் போடி” என்று மாட்டுக்கு தீவனம் வாங்குவதற்கு சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு வெளியே சென்றுவிட்டான் பாலாஜி.

முல்லைக்கு ஏழு மாதங்கள் ஆகியிருக்க வளைகாப்பு போடுவதை பற்றி அழகம்மை பேச்சு எடுத்தார். தெய்வநாயகமும் “நானும் வீட்டு பெண்கள் கிட்ட பேசணும்னு இருந்தேன் நீயே பேச்சை துவங்கிட்ட அழகு வர புதன்கிழமை நாள் நல்லாயிருக்கு அப்பவே வளைகாப்பை வச்சிடலாம்” என்றார்.

தன்னிடம் வளைகாப்பை பற்றி முதலில் கேட்கவில்லை என்று முகத்தை தூக்கி வைத்துக்கொண்டிருந்தார் கோளம். 

“அண்ணி நீங்க என்ன எதுவும் பதில் சொல்லாம இருக்கீங்க?” என்றார் தெய்வநாயகம்.

“அதான் உங்க தங்கச்சிகிட்ட கேட்டுட்டீங்களே என்கிட்ட தனியா என்ன கேட்க வேண்டி கிடக்கு பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காதுனு சொல்லுவாங்க வளைகாப்பை புதன்கிழமை வச்சிக்கலாம். ஆனா வளைகாப்பு போட்டு புள்ளையை அவங்க தாய் வீட்டுக்கு அனுப்பி வைப்பாங்க முல்லையை எந்த வீட்டுக்கு அனுப்ப போறீங்க?” என்றார் வெடுக்கென.

“என் பொண்டாட்டிக்கு தாய் வீடும் புகுந்த வீடும் இதுதான் பெரியம்மா!” என்று கைக்காப்பை ஏத்தி விட்டுக்கொண்டு அங்கே வந்தான் ராயன்.

“வந்துட்டான் இனி எதுவும் அத்தையால பேச முடியாது” என்று முகத்தை திருப்பினாள் தீபா.

நீலகண்டனோ “முல்லைக்கு தாய் வீடு இல்லைனு யார் சொன்னாங்க அக்கா…  நாங்க கட்டி வச்ச வீடு சும்மாதான் கிடக்கு. முல்லையை நாங்க எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போறோம்” என்று அழகம்மையை பார்த்தார் நீலகண்டன்.

“நான் மனசுல நினைச்சதை நீங்க சொல்லிட்டீங்க” என்றார் வாய்கொள்ளா புன்னகையுடன் அழகம்மை.

அமுதா அழகம்மைக்கு கண்களால் நன்றி கூறினார். அவரோ இருக்கட்டும்டி என்று கண்ணைச்சிமிட்டினார்.

ராயன் பக்கத்தில் வயிற்றை பிடித்துக்கொண்டு நின்றிருந்த முல்லைக்கு வளைகாப்பிற்கு தன் நண்பி நதியாவை கூப்பிடணும் அவள் தனக்கு வளையல் போட்டு விடணும் என்ற ஆசையும் இருந்தது. தன் ஆசையை யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள்.

ராஜமாணிக்கத்தை வீட்டை விட்டு விரட்டியதும் முதல் வேலையாக பூங்கொடியை அழைத்துச் சென்றுவிட்டான் தென்னரசு.

“நம்ம சொந்தபந்தங்களுக்கு வளைகாப்பு அழைப்பு சொல்ல ஆரம்பிச்சிடலாம்” என்றார் சந்தோசமாக தையல்நாயகி.

அழகம்மையோ “ராயா ஆண் வாரிசு மனைவிக்கு சீமந்தம் நடக்குது உன் தங்கச்சி நதியா இல்லாம சபை நிறையாது உன் கோபத்தையெல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு அவளுக்கு முதல் அழைப்பு கொடு” என்றார் கோமளத்தை ஓரப்பார்வையால் பார்த்தபடியே.

“அந்த ஓடுகாலி வந்தானா நான் வளைகாப்புக்கு வரல” என்று முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டார்.

“பெரியம்மா எத்தனை நாளு நதியா மேல கோபமா இருக்கறது போல நடிப்பீங்க..! நேத்து நைட் உங்க அறையை தாண்டி போகும்போது நதியோட போட்டோவை வச்சு பார்த்துட்டு இருந்தீங்க அதை நான் கவனிச்சேன் பாப்பாவை நாம மன்னிச்சு ஏத்துக்கலாம்… இத்தனை பேர் சொந்தம் இருந்தும் நம்ம வீட்டுப் பொண்ணு அனாதை போல இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஏதோ சின்னப் பொண்ணு தவறு பண்ணிட்டா நாம பெரியவங்க மன்னிச்சு ஏத்துக்கணும்..! பாலாஜியும் இப்ப அவனாக காலூன்றி இருபது மாடுகளுக்கு மேல வச்சு பண்ணையம் நடத்துறான் நாம அவனுக்கு கைகொடுத்து தூக்கிவிடுவோம் நம்ம வீட்டு புள்ளை கஷ்டப்படறது என்னால பார்க்க முடியலை பெரியம்மா தப்பு பண்ணியவளை அப்படியே தண்ணி தெளிச்சு விடமுடியுமா சொல்லுங்க” என்றான் ராயன் ஆயாசமாக.

கோமளம் எதுவும் பேசாமல் எழுந்து அறைக்குச் சென்று விட்டார்.

அழகம்மையோ “அண்ணி பேசாம அமைதியா போறாங்கனா நதியாவை கூப்பிடுனு அர்த்தம் ராயா உன்னை தவிர இந்த வீட்ல யார் பேசினாலும் அண்ணி மசிய மாட்டாங்க” என்றார் புன்சிரிப்புடன்.

“சரிங்க அத்தை பெரியவங்க எல்லாரும் புறப்பட்டு இருங்க போகலாம் நானும் கிளம்பி வரேன்” என்று அறைக்குள் சென்றுவிட்டான்.

தீபாவோ ஆளுக்கு முன்னே புறப்பட்டு நின்றாள் கழுத்து நிறைய நகைகளை அள்ளிப்போட்டுக்கொண்டு.

சட்டைக்கு பட்டன் போட்டுக்கொண்டிருந்தவன் முன்னே நின்ற முல்லையோ “மச்சான் நானும் நதியாவை பார்க்க வரட்டுமா?” என்றாள் அவனது சட்டை பட்டனை திருக்கொண்டே.

“நான் வேணாம்னு சொன்னா இங்கயே இருந்துடப்போறியா அதான் ரெடியாகி இருக்கியே வா போகலாம்” என்றவனோ கதவை பார்த்தான் கொஞ்சமாய் சாத்தியிருக்க அவளது கன்னத்தில் முத்தம் கொடுத்து “அழகா இருக்கடி” என்று அவளது இதழில் பட்டும் படாமலும் முத்தமிட்டான்.

அவளோ “அய்யே இப்படித்தான் முத்தம் கொடுப்பீங்களா!” என்று கண்ணைசுருக்கி தலையை சாய்த்தாள்.

“மாசமா இருக்க புள்ளையை கஷ்டப்படுத்தக்கூடாதுனு பார்த்தேன்டி நான் அழுத்தமா கொடுத்தா தாங்கமாட்ட புள்ளை பிறக்கட்டும் அப்புறம் வச்சிக்குறேன் இருந்தாலும் நீ கேட்ட முத்தத்தை நான் கொடுக்காம இருப்பேனா” என்று அவளிதழில் முத்தக் கவிதை எழுதினான்.

“முல்லை” என்று தையல்நாயகியின் குரல் கேட்கவும் அவசரமாய் இருவரும் பிரிந்து “சேலையை சரிபண்ணுடி” என்றவனோ அவனாகவே அவளது களைந்த சேலையை சரிசெய்தான்.

“ஆஆ மெதுவா மச்சான்” என்றாள் சிணுங்கலாக.

“ஆசையா இருக்குடி” என்று அவளை ஒரு முறை அணைத்துவிட்டு “இதோ வரோம்மா” என்று அறையிலிருந்து குரல் கொடுத்ததும் “அண்ணா உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணுறோம்” என்றான் கண்ணன் குறும்பாக.

“மானத்தை வாங்குறான் உன் கொழுந்தன்” என்று கலைந்த கேசத்தை சரிசெய்து அறையை விட்டு வெளியே வந்தனர். 

ராயன் பின்னால் வயிற்றை பிடித்துக்கொண்டு தேர் போல நடந்து வந்தவளை பார்த்து 
பொறாமையில் பொங்கினாள் தீபா. ‘இவ எந்த மேக்கப்பும் போடறது இல்லை மினுமினு மின்னுறா’ என்று புகைந்துக் கொண்டு வெளியே சென்றாள்.

அண்ணன் தங்கை வீட்டுக்கு வருவது தெரியாமல் இன்னும் காய்ச்சலில் அனத்திக்கொண்டிருந்தாள் நதியா.

மாட்டுக்கு தீவனம் வாங்கிக் கொண்டு வந்தவன் இன்னும் தூங்குறாளா காலேஜ் லீவு விட்டாப்போதுமே தூக்கம் தான் அவளுக்கு பிரதானம் என்று மனைவியை கடிந்துக் கொண்டு வீட்டுக்குள் வந்தவன் அறையில் இன்னும் உறங்குவதை கண்டு கொஞ்சம் பதட்டம் வந்தது பாலாஜிக்கு.

“அம்மு” என்று நதியாவின் கையை தொட்டான். அனலாக கொதிக்கவும் “அம்மு என்னடி பண்ணுது?” என்று அவள் பக்கம் உட்கார்ந்து கழுத்தில் கையை வைத்தான். அவளோ அவனது கைச்சூட்டில் அவனது கையை நெஞ்சுக்குள் வைத்துக்கொண்டாள். மணி எட்டாகியிருந்தது.

இப்படி காய்ச்சல் வந்தது கூட தெரியாமல் இருந்திருக்கேனே என்று தன் மேல் கோபப்பட்டுக்கொண்டவன் “இருடி அம்மு கஞ்சி வைச்சு குடிச்சுட்டு ஹாஸ்பிட்டல் போலாம்” என்று அவசரமாக சமையல்கட்டுக்குச் சென்றவன் அரிசியை லேசாக வறுத்து மிக்சியில் பொடி செய்து கஞ்சியை வைத்து ஹாலில் ஃபேனை போட்டு ஆற வைத்து பெட்ரூம்க்கு வந்தவன் அனத்திக்கொண்டிருந்தவளை தூக்கிக்கொண்டு குளியலறைக்குள் அழைத்துச் சென்று முகம் கழுவி ஃபிரெஷ் பண்ண வைத்தான்.

“முடியல மாமா” என்றவளை நெஞ்சோடு அணைத்து தூக்கியவன் “இதுக்குத்தான் ரொம்ப கோபப்பட்ட ஆடக்கூடாது” என்று அவளை கொஞ்சமாய் கடிந்துக் கொண்டு ஹாலுக்கு தூக்கி வந்தவன் துண்டால் அவளது முகத்தை துடைத்து சோபாவில் உட்கார்ந்து அவளை நெஞ்சோடு சாய்ந்து வைத்து கஞ்சியை குடிக்க வைத்தான்.

“எனக்கு வாயெல்லாம் கசக்குது மாமா கஞ்சி வேணாம்” என்று அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்.

“ஏய் இப்ப கஞ்சியை குடிச்சாத்தான் தெம்பா இருக்கும் வம்பு பண்ணாத குடிடி” என்றான் கெஞ்சலாக.

அவனது முகத்தை வலியோடு பார்த்தவள் “இப்ப மட்டும் கெஞ்சல் கொஞ்சல் எல்லாம் வரும் நேத்து நீங்கதானே என் நைட்டிக்குள்ள ஐஸ்கட்டியை போட்டு விளையாடினீங்க அதான் காய்ச்சல் வந்துருச்சு காய்ச்சல் வந்தகாட்டிதான் என்னை நெஞ்சோடு அணைச்சு பிடிச்சிருக்கீங்க ஒரு சமயம் பாசமா இருந்துட்டு பல சமயம் எரிஞ்சு விழுந்தா எப்படி… எப்போ என்னை மனைவியா நடத்துவீங்க மாமா?” என்றாள் ஆயாசமாக வலி நிறைந்த குரலில்.

“இப்போ இந்த கஞ்சியை குடிச்சிட்டு ஹாஸ்பிட்டல் போற வழிய பார்க்கணும் பொண்டாட்டியை நினைக்காமதான் உன்னை நெஞ்சுல சாய்ச்சு வச்சிருக்கேனா இப்ப குடிக்கலைனா நேத்து நைட் ஒரு கன்னம் பழுத்தது போல இன்னொரு கன்னமும் பழுத்திடும் பார்த்துக்கோ” என்று அவன் பொறுமை இழந்து பேசவும் அவளோ அவனது கோபத்தை தாங்கமாட்டாமல் “என் பக்கம் யாருமே இல்லைனுதானே எப்போ பாரு திட்டிக்கிட்டே இருக்கீங்க என் அண்ணாவுக்கு ஒரு போன் போட்டு சொன்னேன்னா உங்க கன்னம் பழுத்துரும் தெரியும்ல” என்றாள் விசும்பிக்கொண்டே.

“ஏய் என்னை கோப்படுத்தாடி இத்தனை காய்ச்சல் அடிக்குது அப்பவும் வாய் ஓயுது பாரு ஒழுங்கா கஞ்சியை குடி” என்று கையை ஓங்கவும் ராயன் குடும்பத்தோடு வந்து நின்றவன்

“டேய் மடையா என்னடா பண்ணுற கையை கீழ இறக்குடா என் முன்னால என் தங்கச்சியை அடிக்குறியா?” என்று பல்லைக்கடித்தான்.

பாலாஜியின் நெஞ்சில் சாய்ந்திருந்த நதியாவோ ராயனின் குரல் கேட்டதும் “அண்ணா” என்று தாவி ராயனை அணைத்துக்கொண்டு “இப்பதான் இந்த தங்கச்சியை பார்க்கணும்னு உனக்கு தோணுச்சா..? நான் சின்னப் பொண்ணுதானே தப்பு பண்ணியிருந்தா மன்னிக்கமாட்டீங்களா இவன் என்னை நேத்து அடிச்சிட்டான் நீ… நீங்க ஒரு அறை அடிங்க அண்ணா” என்றாள் சிறுபிள்ளை போல தேம்பிக்கொண்டு.

ராயனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. அழகம்மையோ “என்னடி பேச்சு இது நாங்க வீட்டுக்குள் வரும் போது உன் புருசன் நெஞ்சுல சாய்ஞ்சு பாலாஜி கிட்ட சண்டை போட்ட இப்ப என்னடானா ராயனை பார்த்ததும் புகார் பண்ணுறியா. குழந்தை எடுப்பார் இருந்தா எக்கி எக்கி அழுகுமாம் எங்களை பார்த்ததும் உன்னை குழந்தை போல பார்த்துக்கிட்ட பாலாஜி அடிக்க சொல்லுறியா?” என்று அவர் செல்லமாக அதட்டவும்

“போங்க உங்க மகனை பத்தி உங்களுக்கு தெரியலை” என்று முகத்தை வெட்டினாள்.

நதியாவின் உடல் அனலாக கொதிப்பதை கண்ட ராயனோ “பாப்பா ஃபர்ஸ்ட் கஞ்சியை குடி” என்றான் சிறு கண்டிப்புடன்.

ராயனை கண்டதும் பாலாஜிக்கு நெஞ்சுக்குள் சந்தோசம். பலநாள் கழித்து இருவரும் முகம் பார்த்துக்கொள்கிறார்கள்.

“கஞ்சியை கொடுடா” என்று எப்போதும் போல இயல்பாக பேசினான் பாலாஜியிடம்.

கஞ்சி டம்ளரை ராயனிடம் கொடுத்தவன் “எல்லாரும் உட்காருங்க” என்று பாயை விரித்து போட்டு நாற்காலியை எடுத்தும் போட்டான். தெய்வநாயகமும் நீலகண்டனும் சிறு புன்னகையுடன் உட்கார்ந்தனர் அனைவரும் இப்போது வருவார்களென்று பாலாஜி எதிர்பார்க்க வில்லை.

“என்னை எல்லாரும் மன்னிக்கணும் மண்டபத்துல அப்படியொரு காரியத்தை பண்ணிட்டேன்” என்றவனோ அடுத்த வார்த்தை வராமல் தலையை குனிந்துக் கொண்டான்.

“எனக்கு எல்லாம் தெரியும்டா நீ உன் மேல பழியை போட்டுக்காதே! நீ என் நண்பன்டா உனக்கு துரோகம் பண்ணத்தெரியாது என் குடும்பத்து பொண்ணுக்கு கெட்ட பேரு வரக்கூடாதுனு உன் மேல் பழியை போட்டுக்கிட்ட பாரு நீ தான் என் உயிர் நண்பன். உன்னைய விட என் தங்கச்சிக்கு பெஸ்ட் மாப்பிள்ளை தேடினாலும் கிடைக்கமாட்டான்டா” என்றான் உருக்கமான குரலில்.

“எனக்கு உன்னை விட்டா யாருடா இருக்காங்க” நண்பனின் கையை பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தான் பாலாஜி. 

நதியாவோ “நான்தான் அண்ணா பாலாஜியை போன் பண்ணி நான் இருந்த அறைக்கு வரச்சொன்னேன் என் மேலதான் தப்பு” என்று அவள் அழுகவும்

“நடந்து முடிஞ்சதை பேசவேணாம் கஞ்சியை குடிச்சிட்டு ஹாஸ்பிட்டல் போய்ட்டு வாங்க” என்றார்கள் பெரியவர்கள்.

முல்லையோ “காய்ச்சலோட அழுகாதடி ரொம்ப உடம்பு முடியாம போயிடும்” என்றாள்.

கண்ணீரை துடைத்துக்கொண்ட நதியாவோ  “நான் அழலடி எல்லாரும் என்னை பார்க்க வந்ததுல என் காய்ச்சல் பறந்து போனது போல இருக்கு” என்று கஞ்சியை குடிக்க ஆரம்பித்தாள். 

கண்ணன் “பாப்பா எழும்பு ஹாஸ்பிட்டல் போகலாம் இப்போ வர காய்ச்சலுக்கு உடனே இன்ஜக்சன் போட்டுக்கணும்” என்று கண்ணனும் தங்கை பக்கத்தில் வந்தான்.

“அண்ணா” என்று கண்ணனையும் அணைத்துக்கொண்டாள். 

“ஸப்பா இந்த பாசமலர் காட்சியை பார்க்க நான் வராம இருந்திருக்கலாம்” என்று  பொருமிக்கொண்டாள் தீபா.

அழகம்மையோ “தீபா எல்லாருக்கும் டீ போட்டு கொண்டு வாமா” என்றார். 

“இந்த அம்மா எனக்கு வேலை வைக்குறதலேயே குறியா இருக்கும்” என்று சலம்பிக்கொண்டு டீ போடச் சென்றாள்.

சின்ன சமையல்அறைக்குள் டீ தூள், சர்க்கரை எல்லாம் ஈசியாய் தீபாவால் எடுக்க முடிந்தது. இங்க வந்து நான் இவங்களுக்கு வேலைக்காரி போல டீ போடணுமா என்று புலம்பிக்கொண்டு டீயை போட்டுக்கொண்டு வரவழைக்கப்பட்ட சிரிப்புடன் டீயை அனைவருக்கும் கொடுத்தாள் தீபா.

டீயை குடித்த பெரியவர்கள் “நதியா ஹாஸ்பிட்டல் போய்ட்டு வரும் வரை நாங்க இங்கயே இருக்கோம் போய்ட்டு வாங்க” என்றனர்.

பக்கத்தில் இருக்கும் க்ளீனிக்கிற்கு கூட்டிச்சென்றான் பாலாஜி. “101° ஃபீவர் இருக்கு. நாளைக்கும் காய்ச்சல் குறையாம இருந்துச்சுன்னா ப்ளட் செக்கப் பண்ணிக்கலாம் சுடுதண்ணி குடிங்க வெளியே போகாதீங்க” என்று இன்ஜக்ஷன் போட்டு மாத்திரையை எழுதிக்கொடுத்தார்.

மதியம் சமையல் செய்து வைத்திருந்தனர் ராயன் வீட்டு பெரியவர்கள். 

“எனக்கு தலைவலிக்குது அத்தை” என்று சமைக்க டிமிக்கி கொடுத்து நைசாக சோபாவில் உட்கார்ந்துக் கொண்டாள் தீபா.

மாடுகள் கட்டியிருக்கும் கட்டுத்தரைக்குச் சென்றவன் மாடுகளை பார்த்துவிட்டு வந்தான். காலியா இருக்கும் இடத்தில் இன்னும் பத்து மாடு வாங்கிப்போட்டு பிஸ்னஸை பெரிதாக்க சொல்லணும் பாலாஜிகிட்ட என்று யோசனையில் வீட்டுக்குள் வந்தான்.

நதியாவும் பாலாஜியும் வர நதியாவுக்கு சுடு தண்ணீர் கொடுத்து அவளுக்கு கஞ்சியை கொடுத்தார் தையல்நாயகி. 

கஞ்சியை குடித்தவள் மாத்திரையை போட்டு படுத்துவிட்டாள். கோமளமோ வளைகாப்பு அழைப்பு சொல்ல போனவங்க இன்னுமா வராங்க என்று தீபாவிற்கு போன் போட்டார்.

தீபாவோ “அத்தை நதியாவுக்கு காய்ச்சல் அதான் எல்லாரும் இருந்துட்டோம் நாங்க வர நைட் ஆகிடும்” என்றாள்.

“என்ன காய்ச்சலா இப்போ ஏதோ மறுபடியும் கொரோனா பரவுதாமே நல்லாயிருக்காளா?” என்றார் தவிப்பாய்.

“சாதாரண காய்ச்சல்தான் அத்தை நான் வேணா இருந்து பார்த்துக்கட்டுமா?” என்று நல்ல மருமகளாக பேசினாள்.

“இல்ல நீ வீட்டுக்கு வந்துடு. அவ புருசனே பார்த்துப்பான்” என்றார் பெரும்மூச்சுடன்.

“புள்ள ரொம்ப வாடிப்போய்ட்டா அத்தை” என்றாள் நல்லகுடிநாச்சியாக.

“சரி நான் போனை வைக்குறேன்” என்று போனை வைத்த கோமளத்திற்கு இவளுக்கு ஊசினாவே பயந்து கிடப்பாளே எப்படி ஊசி போட்டுக்கிட்டாளோ என்று மகளை பற்றி கவலைப்பட்டார்.

பாலாஜி மாலையானதும் பால் கறக்கச் சென்றான். ராயனோ நண்பனுடன் சென்றவன் “நானும் பால் கறக்குறேன்டா” என்றவனோ பாலாஜிக்கு உதவி செய்தான்.

“டேய் நீ பெரிய பால்பண்ணைக்கு சொந்தக்காரன்டா நீ ஏன் இந்த வேலையை பார்க்குற சும்மா நில்லு” என்று நண்பனிடம் இயல்பாய் பேசினான்.

“நானும் உன்னை போல மாடு வாங்கி பால் கறந்து படி படிப்படியாக முன்னேறியவன்தான் டா மச்சான்” என்று அவனது தோளில் தட்டி பாலை கேனில் ஊற்றினான்.

வியாபாரிகள் பாலை வாங்கிக் கொண்டுச் சென்றதும் “டேய் என்னை மன்னிச்சிட்டல” என்றான் மீண்டும் ராயனின் கையை பிடித்துக்கொண்டு.

“நீ என் நண்பன்டா உன் மேல கோபம் வராது” என்று பாலாஜியை அணைத்துக்கொண்டான்.

“முல்லை வளைகாப்பு புதன்கிழமை வச்சிருக்கோம் நீயும் நதியாவும் வந்துடணும் உங்களுக்காக காத்திருப்பேன்” என்றான் சந்தோச சிரிப்புடன்.

“டேய் நான் வளைகாப்புக்கு வந்தா உங்க பெரியம்மாவுக்கு பிடிக்காதே” என்றவன் முகம் சுருண்டு போனது.

“பெரியம்மா உனக்கு அழைப்பு சொல்ல சொன்னாங்க” என அவன் தோளில் கையை போட்டுக்கொண்டான்.

“சரி வரேன்டா” என்றான் அரைமனதாகத்தான்.

“பாலாஜி என் தங்கச்சியை தள்ளி வைக்காதேடா அவ கூட வாழ ஆரம்பி” என்றான் இதழ் விரிப்புடன்.

“சரிடா” என்றான் வெட்க புன்னகையுடன்  மாமனும் மச்சானும் சேர்ந்து விட்டனர். 

இரவு சமையல் சாப்பிட்டு முடித்தனர். நதியாவுக்கு தன் வீட்டு மக்களை பார்த்ததில் காய்ச்சல் சரியாகிவிட்டது. நாயகியோ “நான் நதியாவோட ஒருநாள் இருந்துட்டு வரேன்” என்று நதியாவுடன் இருந்துகொண்டார். அனைவரும் சந்தோசமாக கிளம்பினார்கள்.

  •  

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 31

கணவனின் மோக சிரிப்பை கண்டு மனைவிக்கு வெட்கம் வந்துவிட்டது. “போங்க மச்சான்” என்று அவன் மார்பில் கை வைத்து தள்ளி டவலுடன் குளியலறைக்குள் நுழைந்தாள் முல்லை.

அவளுக்கு முன்னே குளியலறைக்குள் நுழைந்துவிட்டான் ராயன்.

“அச்சோ மச்சான் என்ன இது விளையாட்டு இன்னும் எல்லாரும் முழிச்சிருக்காங்க” என்று முல்லை சிணுங்கினாள்.

சிணுங்கியவளை சிவக்க வைத்தான் முத்தம்கொடுத்து. இருவரும் வெகுநாட்கள் கழித்து கொடுக்கும் முத்தம் அவனுக்கு அவள் இதழில் இருந்து பிரிந்து வரவே மனமில்லை. ஆனால் பெண்ணவள் இருக்கும் சூழ் கண்டு அவள் இதழை விட்டு பிரிந்து பெரும்மூச்சு விட்டு பின்னந்தலையை அழுந்தக்கோதிக்கொண்டான் அவனது ஆசையை அடக்க முடியாமல்.

கணவனின் நிலையை புரிந்துக் கொண்டவள் ராயனின் கன்னத்தை பற்றி தன்னை பார்க்க வைத்தவள் “மச்சான் ஏன் தயக்கம் டாக்டர் நம்மளை பாதுகாப்பா சேர்ந்துக்க சொல்லியிருக்காங்க நீங்க பயப்படத்தேவையில்லை” வெட்கப்புன்னகையுடன் அவனது முன் சட்டை பட்டனை கழட்டி வெற்று மார்பில் முத்தமிட்டாள். 

“புள்ளஅஅ” என்று அவன் இதழ்கள் மோகமாய் பிதற்றியது. கோபம் மறைந்து முதல் கூடல் இருவருக்கும். அவளது சேலை எப்போது அவளது மேனியிலிருந்து காணாமல் போனது என்று அவளுக்கும் தெரியாது அவனுக்கும் தெரியாது. 

கைகளில் தன்னவளை தூக்கிக்கொண்டு கட்டில் வரை போவதற்குள் மோகம் அவனை அலைக்கழித்தது. அவளது இதழில் முத்தமிட்டுக்கொண்டே மெத்தையில் கிடத்தியவன் பெண்ணவளின் நெற்றியில் மெல்ல இதழ் ஒற்றினான். அவள் அவன் கண்களை பார்த்திருந்தாள் அவனது கோபம் போய்விட்டாதாவென்று. 

“கோபம் இப்போ இல்லடி” என்று அவளது மூக்கில் முத்தமிட்டு அவனது கன்னத்தையும் லேசாய் கடித்து வைத்தான்.

“மச்சான் நானும் கடிப்பேன் மெதுவா கடிங்க” என்றவளோ சொன்னதோடு அல்லாமல் அவனது கன்னத்தை கடித்தும் வைத்தாள்.

“நானும் கடிப்பேன்டி என்னை பத்தி தெரியும்ல” என்று இதழ்கடித்தவனின் பார்வை போன இடத்தை கண்டு “சீ போக்கிரி மச்சான்” என்று அவனது வெற்று மார்பில் மென்மைகள் அழுந்த புதைந்து கழுத்து வளைவில் முகம் புதைத்தாள். 

ராயனின் கைகள் அவளது பஞ்சுபொதிகளை ஆராய்ந்தது. அவளது காதில் ஏதோ இரகசியம் பேசினான். “ஆமா மச்சான் கொஞ்சம் பெ.” என்று அவளால் சொல்ல முடியாமல் உதடு கடித்தாள்.

அவளது ஆழிலை வயிற்றில் மெதுவாய் முத்தமிட்டான். “பட்டு பாப்பா அம்மாவுக்கு தொந்தரவு கொடுக்காதீங்க” என்று மீண்டும் மென்மையாய் ஒரு முத்தம் அவனது உதடு பட்டதில் அவளது உடலில் சிலிர்ப்பு உண்டாக “மச்சான்” என்று அவனது உச்சந்தலையை இழுத்து மேலே போட்டுக்கொண்டாள்.

அதற்குமேலும் அவனது உதடுகளும் கைகளும் சும்மா இருக்குமா! முன்னே போல முரட்டுத்தனம் இல்லாமல் பூபோல நடத்தினான் பெண்ணவளை. ஊடலுக்கு பிறகு வரும் கூடல் இனிக்கும் அல்லவா! பெண்ணவளின் மென்மையை பூ போல தொட்டு உதடுகளால் ஒத்தடம் வைத்தான். 

“மச்சான்” என்று அவள் மோகத்தில் இதழ் கடித்தாள்.

“ரிலாக்ஸ் புள்ள” என்று அவளை மெல்ல அணைத்து இதழில் முத்தமிட்டு பெண்ணவளுக்குள் நுழைந்துக் கொண்டான்.

கூடல் முடிந்து அவளது நெற்றியில் முத்தம் கொடுத்து “இப்பவும் புது பொண்ணு போலவே இருக்கடி சோ சாஃப்ட்” என்று அவளது மார்பில் தலைசாய்த்தான்.

“இருக்கும் இருக்கும் எனக்கு மூச்சு முட்டுது தள்ளிப்போங்க மச்சான்” என்று அவனது முடியை பிடித்து இழுக்க அவன் செய்த வேலையில் “ஆவ் விடுங்க மச்சான் வலிக்குது” என்று அவள் கத்த வேண்டியதாய் போச்சு. அவளுக்கு பசியெடுக்க “மச்சான் பசிக்குது” என்றாள் சிணுங்கலாக.

“குளிச்சிட்டு சாப்பிட போகலாம்டி” என்றவனோ அவளை மீண்டும் கையில் ஏந்தி குளியலறைக்குள் சென்று குளித்து வந்ததும் “இந்த மாதிரி நேரத்துல நைட்டி போட்டுக்கோடி ஃப்ரீயா இருக்கும்ல” என்று அவளுக்கு கப்போர்ட்டிலிருந்து நைட்டியை எடுத்துக்கொடுத்தான்.

“ஆமா மச்சான் வயிறு பெருசாக பெருசாக ட்ரஸ் இறுக்கமா போடக்கூடாது அறைக்குள்ள இருக்கும்போது நைட்டியே போட்டுக்குறேன் பெரியம்மா ஏதும் சொல்லுவாங்கனு தான் பயமா இருக்கு” என்றாள் கண்களை சுழட்டி.

“பெரியம்மா பேசமாட்டாங்க புள்ள நீ அவங்களுக்காக பயப்படத்தேவையில்லை” என்றவனோ டைனிங் டேபிளுக்குச் சென்றவன் இட்லியை எடுத்து வந்து அவளுக்கு ஊட்டி விட்டான். அவளுக்கு இரண்டு இட்லிக்கு மேல் சாப்பிட்டதும் குமட்டிக்கொண்டு வந்தது.

“மச்சான் சாப்பிட முடியாது வாமிட் வரது போல இருக்கு” என்று முகம் சுளித்தாள்.

“இன்னும் ஒருவாய் சாப்பிடு புள்ள” என்று அவளை செல்லமாய் அதட்டி மூணு இட்லியை ஊட்டிவிட்டான். ஆனால் அடுத்த நிமிசம் ராயனின் மேல் சாப்பிட்டதை வாந்தி எடுத்து விட்டாள்.

“அச்சோ சாரி மச்சான் நான்தான் சொன்னேனே என்னால சாப்பிட முடியாதுனு” என்று இதழ் பிதுக்கினாள்.

“இப்போ என்ன வாஷ் பண்ணினா போகுது” அவளை தூக்கிக்கொண்டுச் சென்றவன் சுத்தப்படுத்தி அறைக்குள் கொண்டு வந்து படுக்க வைத்து சமையல்கட்டுக்குச் சென்று பால் ஆத்தி எடுத்து வந்தான்.

“மச்சான் உங்களை சிரமப்படுத்துறேன்” என்று சிணுங்கியவளை “எனக்கு புள்ளைய பெத்து கொடுக்குற மகராசிக்கு என் உயிரையே தருவேன் புள்ள பாலைக்குடிச்சிட்டு தூங்கு புள்ள” என்றான் அவளது தலையை வருடி.

அவளும் “இந்த பாலாவது தங்குமானு தெரியலை மச்சான்” என்று பாலைவாங்கிக்குடித்து விட்டு கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்துக் கொண்டாள். கதவை அடைத்து வந்தவன் தன் மார்பில் சாய்த்துக்கொண்டு தலையை வருடிக்கொடுக்க அப்படியே கண்உறங்கி விட்டாள். அவனுமே தன்னவளை சுமந்திருக்கிறோம் என்ற ஆனந்தத்தில் உறங்கிவிட்டான்.

தீபாவுக்கு வீட்டில் உள்ள அனைவரும் முல்லையை தலையில் வைத்து தாங்குகிறார்கள் தன்னை யாரும் சாப்பிட்டியா என்று கூட கேட்பதில்லை என்று வருத்தம் அவளுக்கு.

கண்ணனுடன் இணக்கமாகத்தான் இருக்கிறாள். இந்த வீட்டில் முதல் மரியாதை ராயனுக்கு கிடைக்கிறது கண்ணனுக்கு எதுவும் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்பட்டாள்.  ராயன் கண்ணனை பாசத்துடன் நடத்துவதும் அவனுக்கு தொழிலை கற்றுக்கொடுப்பதை கவனிக்க மறந்துவிட்டாள். தையல்நாயகி ராயனை விடவும் கண்ணன் மேல் பாசம் கொண்டவர் கண்ணனுக்கு பிடித்த மீன்குழம்பை தனியாக எடுத்து வைத்திருந்து அவனுக்கு சாப்பிட கொடுப்பார். இவற்றையெல்லாம் வந்த மூன்று மாதத்தில் தீபா பார்த்திராதது அவளது தவறு.

எந்நேரமும் போனும் கையுமாக அறைக்குள் அடைந்து கிடப்பாள். வீட்டில் பெரியவர்கள் பேசினால் பதில் கொடுத்துவிட்டு வந்து விடுவாள். முல்லை இந்த வீட்டில் வேலை செய்த வேலைக்காரி என்று கோமளம் கூறியதிலிருந்து நான் வசதியான வீட்டுப் பொண்ணு நானும் அவளும் ஒன்னாவென்று முல்லையை இளக்காரமாக பார்த்தாள். முல்லையிடம் அதிகம் பேச்சு வைத்துக்கொள்ளவில்லை.

அறைக்குள் கதவை லாக் பண்ணிக்கொண்டு பரமசிவத்திடம் அடிக்கடி போனில் பேசிக்கொண்டிருப்பாள். கோமளமோ போனமாதம் தீபா தலைக்கு குளித்ததும் என்ன இந்த மாசமும் தலைக்கு குளிச்சிட்டியா சீக்கிரம் மாசம் ஆகி எனக்கு பேரனை பெத்துக்கொடு அவன் இந்த வீட்டை ஆளணும் என்று அவளை வெறுப்பேத்திக்கொண்டிருந்தார்.

ஆனால் ராயனுக்கு குடும்பம் கொடுக்கும் மரியாதையை கண்டு அத்தை சொல்வது சரிதான் நாம குழந்தைக்கு ப்ளான் பண்ணனுமென்று கண்ணனுடன் காதலுடன் கலந்திருந்தாள் தீபா.

அன்று காலை நேரமே எழுந்து கிச்சனுக்கு வந்தவள் “அமுதாம்மா நான் ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா?” என்றவளோ ப்ரிட்ஜிலிருந்து காய்கறிகளை எடுத்து நறுக்க ஆரம்பித்தாள்.

“இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து வந்திருக்கலாம் மா நானே எல்லா வேலையும் முடிச்சிருப்பேன் உனக்கு ஏன் சிரமம்மா நான் பார்த்துக்குறேன்” என்றவரை

“இல்லம்மா எனக்கு நாலு பேருக்கு மட்டும் சமைக்க அளவு தெரியும் இந்த வீட்டுல யாருக்கு என்ன சமையல் பிடிக்கும்னு கத்துக்கிடலாம் பாருங்க! நான் இந்த வீட்டு சின்ன மருமகதானே உங்க மக போல இன்னும் எழுந்து வராம படுத்திருக்க முடியுமா?” என்றாள் ஊசி குத்தும் வார்த்தைகளில்.

அமுதா தீபா பேசியதில் அதிர்ந்து விட்டார். “முல்லை கர்ப்பமா இருக்காமா அதான் எழுந்து வர முடியலைமா இல்லைனா அவ என்னைக்கூட எதிர்பார்க்க மாட்டா ஒத்த ஆளா இருந்து சமையலை முடிச்சிடுவா” என்றார் கள்ளம் கபடம் இல்லாமல்.

“அப்போ எனக்கு சமைக்க வராதுனு சொல்ல வரீங்களா?” என்று மிளகாய் போல காய்ந்தாள்.

அழகம்மை டீ குடிக்க வந்தவர் “என்ன தீபா பெரியவங்க கிட்ட இப்படித்தான் வாயாடுவியா முல்லை கர்ப்பமா இருக்கா அதான் அவளால எழுந்துக்க முடியலை… உன்னையும் யாரும் இங்க கட்டாயப்படுத்தி வேலை பார்க்க சொல்லலையேமா இந்த வீட்டுக்குள்ள வேலை செய்ய இதுவரை யாரும் போட்டி போட்டது கிடையாதுமா! நீ படிச்ச பொண்ணு பக்குவமா நடந்துக்கோ..!” என்று பொறுமையாக பேசியவர்

“அமுதா எனக்கு காலையிலயே தலை வலிக்குது ஒரு டம்ளர் டீ போட்டுத்தரியா?” என்றார் தலையை பிடித்தபடியே.

“நான் பேசறதை கேட்டு உங்களுக்கு தலை வலி வந்துருச்சா சித்தி?” என்றாள் வம்பிழுக்க எண்ணி.

“என்ன சத்தம் இங்கே?” என்று வந்தார் கோமளம்.

அழகம்மையோ “அண்ணி நீங்க கூட என்னை இந்தளவு பேச வச்சதில்லை” என்று சலித்துக்கொண்டதும்

“அழகு இந்த வீட்டுப் பொண்ணு… எனக்கு கொடுக்கற மரியாதையை அழகுக்கும் கொடுக்கணும தீபா” என்றார் சிறு அதட்டலுடன்.

“நேத்து நீங்கதானே சொன்னீங்க அத்தை உனக்கு சரினு படறதை தைரியமா பேசுனு இந்தவீட்டுல உங்களுக்கு மட்டும்தான் நான் மரியாதை கொடுப்பேன் இவங்களுக்கு மரியாதை கொடுக்கணும்னு எனக்கு அவசியம் இல்லை” என்று பொரிந்து தள்ளியவளின் சத்தம் கேட்டு வந்த கண்ணனோ 

“என்னடி வாய் நீளுது கன்னம் பழுத்திடும் பார்த்துக்கோ முல்லை அண்ணி யாரையும் ஒரு வார்த்தை எதிர்த்து பேசினது கிடையாது தெரியுமா” என்று கையை ஓங்கிக்கொண்டு வந்தான்.

கோவிலுக்குச் சென்று வந்த தையல்நாயகியோ “சின்னவனே என்ன இது நடு வீட்டுல பொண்டாட்டி மேல கையை நீட்டுற பழக்கம்” என்று அவர் அதட்டியதும்

கோமளம் கண்ணனை முறைத்தார். “தீபா உன்னை யாரு சமையல்கட்டுக்கு போகச் சொன்னது?” என்றார் கோமளம் கோபத்துடன்.

“நம்ம வீட்டு பழக்கத்தை கத்துக்கட்டும்னு நான்தான் சமையல்கட்டுக்கு போச்சொன்னேன்மா இப்போதான் இவளை ஏன் சமைக்க போகச்சொன்னேனு வருத்தமா இருக்கு” என்றான் தீபாவை முறைத்தபடி கண்ணன்.

“இந்த வீட்டுல எனக்கு ஒரு மரியாதையும் முல்லைக்கு ஒரு மரியாதையும் கிடைக்குது. அவளுக்கு அழகு அம்மா ஜுஸ் கொடுக்குறாங்க..! நாயகி அத்தை இஞ்சி டீ போட்டுக்கொடுக்கறாங்க மகளுக்காக அமுதாமா சமையல்கட்டுல எல்லாம் வேலையும் பார்க்குறாங்க..! என்னை யாருமே ஒருவாய் டீ குடிச்சியானு கேட்கலையே ஒரு கண்ணுல வெண்ணெய்யும் ஒரு கண்ணுல சுண்ணாம்பும் வைக்குறீங்க” என்று எண்ணெயில் போட்ட கடுகாக வெடித்தாள்.

ராயன் தீபா பேசுவதை காதில் கேட்டுக்கொண்டுதான் இருந்தான் பெண்கள் பிரச்சனைகளில் தலையிடக்கூடாது என்று ஒதுங்கி இருந்தான்.

இதெல்லாம் தெரியாமல் முல்லை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். கதவை வெளியே லாக் போட்டு விட்டு வந்த ராயனோ கண்ணனை பார்த்தவன் “கம்பெனிக்கு வராம இங்க என்ன பண்ணுற கிளம்பி வா நிறைய வேலை இருக்கு” என்றவனோ “அம்மா நான் கிளம்புறேன் ” என்று ஹேங்கரில் மாட்டியிருந்த கார் கீயை எடுத்தான்.

“ஒரு நிமிசம் நில்லுங்க ராயன்” என்றாள் தீபா.

வீட்டு பெரியவர்கள் அனைவரும் அதிர்ந்து விட்டனர். கண்ணனோ “என்னடி அண்ணாவை பேரு சொல்லி கூப்பிடற!” என்று அறைந்தே விட்டான் தீபாவின் கன்னத்தில்.

“கண்ணா இந்த பக்கம் வா” என்ற ராயனோ தீபாவின் முன்னே நின்றவன் “என்னனு சொல்லுமா” என்றான் நிதானமாக.

“எனக்கு இந்த வீட்டோட சாவிக்கொத்து வேணும் அப்புறம் பால்பண்ணையை எங்க வீட்டுக்காரர் பேர்ல எழுதி வச்சிடுங்க” என்றாள் அதிகாரமாக.

கோமளம் ராயனிடம் கேட்கமுடியாமல் மருமகளிடம் ஏவிவிட்டிருந்தார் நீ கேட்டா ராயனால் கொடுக்க மாட்டேன்னு சொல்லமுடியாதென்று.

ராயனோ கோமளத்தை ஆழ்ந்து பார்த்தவன் “கம்பெனியை கொடுக்க முடியாதுமா பெரியம்மாகிட்ட இருக்க சாவியை வேணா வாங்கி வச்சிக்கோ” என்றான் பொறுமையாக.

“ஏன் கொடுக்க முடியாது நீங்க எப்படி இந்த வீட்டு பேரனோ அதுபோலத்தான் என் புருசனும் இந்த வீட்டு பேரன்” என்றாள் தெனாவெட்டாக.

கண்ணனோ “ஏய் இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினா உன்னை டைவர்ஸ் பண்ணிடுவேன்டி ராயன் அண்ணா அந்த பால்பண்ணையை உருவாக்கினவரு. எத்தனை நாள் தூக்கம் கூட இல்லாம உழைச்சு இருக்காரு தெரியுமா. ஏழு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிட சொத்து இருந்தாலும் அதை இன்னும் ஏழு தலைமுறை உட்கார்ந்து சாப்பிட உழைச்சு உயர்த்தியிருக்காரு. அண்ணாகிட்ட கேள்வி கேட்க உனக்கு உரிமை கிடையாதுடி… என்னை மீறி அண்ணாவை கேள்வி கேட்டா இந்த நிமிசமே வெளியே போயிடு” என்று அடிக்க கையை ஓங்கியவனை “கண்ணா” என்று ராயன் குரல் உயர்ந்து தடுத்து நிறுத்தியது.

“அண்ணா அவ ரொம்ப வாய் பேசுறா அவளுக்காக நான் மன்னிப்பு கேட்குறேன்” ராயனின் கையை பிடித்துக்கொண்டான்.

“வீட்டு வேலை விசயத்துல நான் தலையிடமாட்டேன் ஆனா பால்பண்ணையை ஒருநாளும் யாருக்கும் எழுதி தரமாட்டேன் பால்பண்ணை பொதுவுலதான் இருக்கும். மத்த சொத்துக்கள் என்ன வேணுமோ கேட்டு வாங்கிக்கோ” என்று பொறுமையாகவே பேசியவன் கோமளத்தை பார்த்தான்.

கோமளோ “தீபா சின்னப் பொண்ணு ராயா அவ ஏதோ தெரியாம பால்பண்ணையை எழுதிக்கொடுக்க கேட்டுட்டா அவளை மன்னிச்சிடுப்பா அவ சார்பா நான் மன்னிப்பு கேட்குறேன்” என்றார் வருத்தமாக.

“பெரியம்மா பெரிய வீட்டு சொத்தை இதுவரைக்கும் யாரும் பிரிக்காமதான் இருந்தோம் நீங்களா பார்த்து சொத்தை பிரிச்சு வைச்சுடுங்க… நான் இதுல தலையிடமாட்டேன் எங்க கையெழுத்து போடணுமோ நான் போடறேன்” என்றதும் கோமளத்திற்கு இப்போதுதான் கண்ணன் தங்களது குலத்தொழிலை கற்றுக்கொண்டிருக்கிறான். சொத்தை பிரித்துவிட்டால் கண்ணனை கைவிட்டுவிட்டால் என்ன செய்வது கொஞ்சம் காலம் கண்ணன் தொழிலை கற்றுக்கொள்ளட்டும் சொத்து எங்கே போய்விடப்போகிறது! இப்போதைக்கு சொத்தை பற்றி பேச தேவையில்லை என்று நரித்தனமாக யோசித்தவர்

“ராயா நான் தான் சொன்னேனே தீபா சின்னப் பொண்ணு தெரியாம பேசிட்டானு நான் பார்த்துக்குறேன் எந்த சொத்தும் பிரிக்க வேணாம்ப்பா நாம எல்லாம் கூட்டுக்குடும்பமாகவே இருக்கலாம் நீ பண்ணைக்கு கிளம்பு” என்று அனைத்து பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

ராயனுக்கு எங்கே அடித்தால் எங்கே வலிக்குமென்று மந்திரம் தெரியுமே கோமளத்திடம் சூட்சமமாக பேசிவிட்டான்.

“ஏய் தீபா உனக்கு யார்கிட்ட என்ன பேசணும்னு அறிவு இல்லையா ராயன் இந்த வீட்டோட ஆணிவேர் அவன் இல்லாம ஒரு அணுவும் அசையாது” என்று கண்ணைச்சிமிட்டி அவளை அதட்டவும் 

“நீங்கதானே அத்தை என்னை பேச சொன்னீங்க” என்று அவள் குசுகுசுவென்று கோமளத்தின் காதை கடித்தாள்.

“வாயை மூடு அழகு நம்மளையே பார்க்குறா நான் என்னோட ரூமுக்கு போறேன் கொஞ்ச நேரம் கழிச்சு பேசலாம்” என்று மெல்லமாய் பேசி விட்டுச் சென்றார்.

கண்ணனோ கோமளமும் தீபாவும் பேசுவதை கண்டு எல்லாம் அம்மாவோட ப்ளான்தானா “ஏய் தீபா என்கூட வா” என்று அவனது அறைக்குள் இழுத்துச் சென்று கதவை மூடியவன் “நீ எப்படி அண்ணாவை மரியாதை குறைவா பேசலாம்?”

“அத்தைதான் இந்த வீட்டுல உனக்கு மரியாதை கிடைக்கணும்னா எல்லாரையும் எதிர்த்து சண்டை போடணும்னு சொன்னாங்க” என்று பழியை தூக்கி கோமளத்தின் மீது போட்டாள்.

“இங்கபாருடி குடும்பம் ஒத்துமையா இருக்கணும்னா நாம விட்டுக்கொடுத்து போகணும். சும்மா காசு பணம்னு எப்பவும் அலையக்கூடாது… சொந்தம் பந்தம்தான் நாளைக்கு ஏதோ ஒன்னுனா கூட இருப்பாங்க. பணம் பணம்னு ஆசைப்பிடிச்சு திரிஞ்சா ஆபத்துலதான் முடியும். அம்மா ஏதாவது உளறி வைப்பாங்க கடைசியா ராயன் அண்ணா மடக்கி பேசினதும் அவங்க நீ சொல்றது சரிதான் ராயானு அந்தர் பல்டி அடிச்சிருவாங்கடி நீதான் வாயாடி மருமகள்னு பேர் எடுக்கணும். நான் அப்போ உனக்கு உதவிக்கு வரமாட்டேன் பார்த்துக்கோ” என்று தீபாவுக்கு எச்சரிக்கை கொடுத்து பால் பண்ணைக்கு கிளம்பியிருந்தான்.

தூக்கம் தெளிந்து எழுந்து வந்த முல்லையை “இப்படித்தான் ஏழுமணி வரை தூங்குவியாடி?” என்று கடிந்துக் கொண்டார் அமுதா.

“அம்மா எனக்கு நைட் தூக்கமே வரலை காலையிலதான் அசந்து தூக்கம் வந்துச்சு” என்று சமாளித்தாள் கணவனும் மனைவியும் விடிய விடிய தூங்கவில்லை என்று அம்மாவிடம் சொல்ல முடியாமல் மறைத்துவிட்டாள்.

மேலோட்டமாக விசயத்தை கூறிய அமுதாவோ “நாளையிலிருந்து கொஞ்சம் நேரமே எழுந்து சின்ன சின்ன வேலையை பாருடி உன்னால இந்த வீட்டுல பிரச்சனை வரக்கூடாது பார்த்துக்கோ” என்று மகளை கண்டித்தார்.

“சரிங்கம்மா நான் நாளையிலிருந்து நேரமே எழுந்து வேலை பார்க்குறேன். ஆனா தீபா மச்சானை பேர் சொல்லி கூப்பிட்டிருக்க கூடாதுல” என்று கணவனின் தன்மானம் அடிப்பட்டதே என்று கவலைப்பட்டாள்.

“ராயன் தம்பி பெரிசா எடுத்துக்கல. கண்ணன் தம்பி தீபாவை அடிச்சிட்டாரு முகமெல்லாம் வீங்கிப்போச்சு” என்றார் மனத்தாங்கலாக.

“வயசுல பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்கணும்னு தீபா அக்காவுக்கு தெரியலை அதான் கண்ணன் மாமா அவங்களை அடிச்சிருக்காரு எல்லாம் சரிதான்மா எனக்கு பசிக்குது சாப்பாடு போடுங்க” என்று டைனிங் டேபிளில் அமர்ந்தாள்.

நாளும் பொழுதும் காத்திருக்காமல் சென்றது. 

நதியாவோ காலையில் பாலாஜி எழும்போது எழுந்து குளித்து சாணத்தில் வாசல் தெளித்து கோலம் போட்டு பூஜையறையில் விளக்கேற்றி சாம்பிராணி போட்டு வீட்டை தெய்வீகமாக மாற்றிக்கொண்டிருந்தாள். அனைத்தும் பக்கத்து வீட்டு பாட்டி கொடுக்கும் டிப்ஸ்… நாயகியையும் அழகம்மையையும் கோவிலில் பார்த்த நதியா “சித்தி, அத்தை நீங்க கூட என்னை பார்க்க வரவேயில்லை என்னை மறந்துட்டீங்கல்ல” என்று இருவரையும் அணைத்துக்கொண்டே மூக்கை உறிஞ்சினாள்.

“உன்னை யாரும் மறக்கல கண்ணு..!” என்று நாயகி மகளின் முதுகை வருடிக்கொடுத்தார்.

“என்னை ஒருநாளாவது வீட்டுல வந்து பார்த்தீங்களா அத்தை தென்னரசு அண்ணாவும் பூங்கொடியும் லவ் பண்ணுறாங்கனு தெரிஞ்சு அவங்களுக்கு காதல் கல்யாணம் செய்து வச்சீங்க… என்னோட காதலை மட்டும் ஏத்துக்கல நீங்க” என்று அவள் பண்ணிய தவறை மறந்து பேசிக்கொண்டிருந்தாள்.

அழகம்மையோ “பூங்கொடி தென்னரசுவை லவ் பண்ணுறேன்னு ராயன்கிட்ட சொல்லியிருக்கா எனக்கு பிடிக்கலைனாலும் அவ விரும்பிட்டானு கல்யாணம் பண்ணி வச்சோம்… நீயும் மண்டபத்துல நம்ம வீட்டுக்கு தலைகுனிவு வரும்படி நடந்துக்கிட்ட பூங்கொடியோட காதலை ஏத்துக்கும்போது உன் காதலுக்கு நாங்க ஏன் மறுப்பு தெரிவிக்கப்போறோம்?

உன் அம்மா முதலில் கத்துவாங்க அப்புறம் ராயன் எடுத்துச்சொன்னா கேட்டுவாங்க ஆனா நீயோ உங்க அம்மா மாதிரி எடுத்தோம் கவிழ்த்தோம்னு பண்ணி வச்சிருக்க. நாங்களே உன்னை பார்க்க வீட்டுக்கு வரதா இருந்தோம்” என்றதும் “அப்போ இப்பவே வாங்க வீட்டுக்கு போகலாம் அத்தை” என்று அழகம்மையின் கையை பிடித்துக்கொண்டாள் நதியா.

“இந்த வாரத்துல நல்லநாள் பார்த்து உனக்கு சீர் கொண்டு வரோம் கண்ணு அம்மாவையும் சமாதானம் செய்து கூட்டிட்டு வரோம்” என்றிருந்தனர் நாயகியும் அழகம்மையும்.

“நீங்க வருவீங்கனு எதிர்ப்பார்ப்போடு இருப்பேன் சித்தி” என்றாள். 

“வரோம் கண்ணு” என்று கோவிலிருந்து கிளம்பியிருந்தனர். வீட்டுக்கு வந்து கோமளத்திடம் கூறவும் “நான் அவளை பார்க்க வரமாட்டேன் என்னை சொந்தங்கள் மத்தியில சந்தி சிரிக்க வச்சவளை பார்க்க மாட்டேன்” என்று உறுதியாக கூறிவிட்டார்.

ராயனிடம் “நம்ம நதியா யாரும் அவளை பார்க்கப்போகலைனு ஒரே அழுகை ராயா” என்று வருத்தப்பட்டு கூறவும்

“பெரியம்மா போகலாம்னு சொன்னதும் நாம போகலாம் அத்தை அவளுக்கு நான் பண்ண வேண்டியதை பண்ணிக்கிட்டுதான் இருக்கேன் நீங்க நதியா பாப்பாவை பத்தி கவலைப்படாதீங்க” என்றிருந்தான் பெரும்மூச்சுடன்.

ஆஹா ஓஹோவென்று சமைக்கவில்லையென்றாலும் வாய்க்கு ருசியாக சமைத்து வைக்கிறாள் நதியா. பக்கத்து வீட்டு பாட்டியை தெய்வமாக பார்த்தாள் நதியா. 

நதியாவுக்கு தேவையானதை அவள் கேட்கும் முன் வாங்கி வந்து கொடுத்து விடுவான் பாலாஜி. இப்போதெல்லாம் அவளை திட்டுவதில்லை. திட்டுவதற்கான காரணமும் இருக்கவில்லை. அதுபோல பாலாஜி என்ன நினைக்கிறான் என்று அவன் கண்ணை வைத்து கண்டு பிடித்து விடுகிறாள் நதியா. இருவரும் ஒரே வீட்டில் இருந்தாலும் தாமரை இலை போல ஒட்டியும் ஒட்டாமலும்தான் வாழ்கின்றனர். இருவரும் சேர்ந்து இரவு உணவு உண்கிறார்கள். ஒரே மாறாக இருவரும் ஒரே அறையில் உறங்குகின்றனர். பாலாஜி தூக்கத்தில் கூட நதியாவின் பக்கம் திரும்பி படுக்கமாட்டான்.

பாலாஜி இன்னும் பத்து மாடுகள் லோன் போட்டு வாங்கிவிடலாம் என்று லோன் கேட்டு பேங்கிற்குச் சென்றான். பேங்கில் லோன் கேட்டு சென்ற போது பேங்க் மேனேஜர் “என்ன ஷுரிட்டி இருக்கு யாராவது ஜாமீன் போடச்சொல்லுங்க…” பாலாஜி அமைதியாக இருக்கவும் “இப்போ வேலை இருக்கு நாளைக்கு வாங்க” என்று தாட்டு வார்த்தை பேசி அனுப்பியிருந்தார்.

ராயன் நேத்து பேங்கிற்கு வந்தவன் பாலாஜி லோன் கேட்டு மேனேஜர் நாளைக்கு வாங்க என்று கூறியதை பார்த்துவிட்டான். பாலாஜி மேனேஜர் அறையிலிருந்து லோன் கிடைக்கவில்லையென்று முகம் வெளிறிபோய் வெளியே வந்ததை கண்ட ராயனுக்கு மனம் பதறியது.

“என் நண்பனுக்கு லோன் இல்லைனு சொல்லிடுவாங்களா?” என்று மேனேஜர் அறைக்குள் வேகமாக நுழைந்ததும் “வாங்க ராயன் சார் உட்காருங்க” என்று அவனுக்கு மரியாதை கொடுத்தார். இந்த பேங்கில்தான் ராயன் கணக்கில் பல லட்சம் போட்டு வைத்திருக்கிறான்.

“சார் இப்போ லோன் கேட்டு வந்துட்டு போனாருல அவருக்கு நான் ஜாமீன் போடுறேன் எத்தனை லட்சம் கேட்குறாரோ அந்த பணத்தை கொடுத்துடுங்க” என்றிருந்தான் உயர்ந்த குரலுடன்.

“சார் உங்க பேரை அவர் சொல்லியிருந்தா ud லோன் கொடுத்திருப்பேன்” என்றிருந்தார் பேங்க் மேனேஜர். 

அடுத்தநாள் பாலாஜி பேங்க் மேனஜரை பார்க்க போகும்போது அவனிடம் ஷுரிட்டி எதுவும் கேட்கவில்லை.

“வல்வராயன் சாரை தெரியும்னு சொல்லியிருந்தா நேத்து உங்களுக்கு லோன் சாங்ஷன் பண்ணியிருப்பேனே” என்று மேனேஜர் வாயெல்லாம் பல் தெரிய சிரித்தார்.

‘டேய் ராயா எனக்கு இன்னும் எத்தனை நல்லது பண்ணுவடா என்னை மேலும் மேலும் கடன்காரன் ஆக்குற! எனக்கு எப்பவும் நல்லது செய்யுற உனக்கு நான் நம்பிக்கை துரோகம் பண்ணிட்டேன்டா’ என்று மனம் சுணங்கினான்.

லோன் பணத்தில் இன்னும் பத்து மாடுகளை வாங்கிவிட்டான். சாணத்தை நாற்றம் அடிக்குது என்று சொல்லிய நதியாவோ இன்னும் மாட்டுச் சாணங்களை அவள் தான் சுத்தம் செய்கிறாள். பாலாஜிக்கு ஏற்ற மனைவியாக மாறிவிட்டாள். 

அன்றிரவு பாலாஜியும் நதியாவும் சாப்பிட்டு முடித்து நதியா பாத்திரங்களை சுத்தம் செய்துக் கொண்டிருந்தாள்.

“ஏய் உன் போன் கொடு என் போன்ல சார்ஜ் இல்லை” என்று நதியாவின் போனை எடுத்தவன் போன் பேசி முடித்து ஏதேச்சையாக அவளது அக்கௌண்டை செக் பண்ணினான்.

ராயன் அக்கௌண்ட்டிலிருந்து பணம் வந்திருந்தது. பணம் வேணும்னா என்கிட்ட கேட்டு இருக்க வேண்டியதுதானே எதுக்கு அண்ணாகிட்ட கேட்டு வாங்கியிருக்கா… அதுவும் பணம் போட்டு இரண்டு மாதங்களாக என்னிடம் மறைத்திருக்கிறாளே என்ற கோபம் அவனுக்கு. நதியா ராயன் போட்ட பணத்தை திருப்பி அனுப்பினால் அண்ணனுக்கு மரியாதையாக இருக்காது என்று எண்ணி பணத்தை தன் அக்கௌண்டில் வைத்துக்கொண்டாள்.

பாத்திரங்களை சுத்தம் செய்து வந்தவளிடம் “என்ன இது எப்போ ராயன்கிட்ட பணம் கேட்ட என்னை அவமானப்படுத்துறதே உனக்கு வேலையா போச்சு டி” என்று தன்னிடம் உண்மையை மறைத்து விட்டாளென்று கன்னத்தில் அடித்து விட்டான்.

“என்னை சும்மா சும்மா அடிக்குறீங்க என்னை அடிச்சா யாரும் வரமாட்டாங்கனுதானே அடிக்குறீங்க” என்று இதழ் பிதுக்கி அழ ஆரம்பித்தாள் நதியா.

  •  

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 30

மகன் அடித்து விட்ட அதிர்ச்சியில் எழுந்து நிற்க கூட முடியவில்லை ராஜமாணிக்கத்தால்.

“அப்பாஆஆ” என்று ஓடிவந்த அரசியை “உள்ளே போ அரசி” என்ற தென்னரசுவின்  சிம்மக்குரலில் பயந்து வீட்டுக்குள் ஓடியவள் “அம்மா அப்பாவை அண்ணா அடிக்குறாங்க” என்று தாயிடம் புகார் கூறினாள் அவளுக்கு தந்தையின் முழு பரிமாணமும் தெரியாமல் போய்விட்டதே!

குமுதாவோ மகளுக்கு தன் கணவனின் போக்கிரித்தனம் தெரியக்கூடாதென அரசியை அறைக்குள் தள்ளி கதவை மூடிவிட்டார்.

குமுதா பக்கத்து ஊரில் நர்ஸாக இருந்தவர் அவரை எப்படியோ தன் வார்த்தை ஜாலத்தில் பேசி மயக்கி தனக்கு கல்யாணம் ஆகி மனைவி இறந்து விட்டாள் ஏழு வயதில் மகன் இருக்கிறான் என்ற விசயத்தையே மறைத்து குமுதாவுடன் வாழ்ந்துக் கொண்டிருந்தார் ராஜமாணிக்கம்.

அரசி பிறந்த பிறகுதான் குமுதாவிற்கு ராஜமாணிக்கத்தை பற்றி முழு விவரமும் தெரிய வந்தது. “என்னை ஏன் ஏமாற்றினீங்க?” என்று அழுது புலம்பிய குமுதாவை “உன்னை கடைசி வரை சந்தோசமா வாழ வைக்குறேன் நீதான் என் பொண்டாட்டி ஆனா நாம ஒன்னா வாழறது யாருக்கும் தெரியக்கூடாது” என்று சத்தியம் வாங்கிக்கொண்டார்.

குமுதா காதல் திருமணம் செய்துக் கொண்டதால் அவரை அவரின் பெற்றோரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ராஜமாணிக்கத்தை விட்டு வேறு ஊருக்கு போய்விடலாம் என்று எண்ணியிருந்தார். ஆனால் என்னை விட்டு போனா உன்னையும் பிள்ளையையும் கொன்னுடுவேன் என்று மிரட்டியிருக்க குமுதாவிற்கு வேறு வழி தெரியாமல் ராஜமாணிக்கத்துடன் வாழ ஆரம்பித்தார்.

இப்போது ராஜமாணிக்கத்தை தென்னரசு அடிக்கும் போது அவரின் மனதில் அழுத்திக்கொண்டிருந்த பாரம் இறங்கியிருந்தது. என்னை போல நிறைய பொண்ணுங்களை ஏமாற்றியவனுக்கு தாமதமாக தண்டனை கிடைச்சிருக்கு என்று பெரும்மூச்சு விட்டு சமையல்கட்டுக்குள் சென்றார் குமுதா.

“டேய் என் வீட்டுக்குள்ள இருந்துக்கிட்டு என்னையே அடிக்குறியா இந்த பஞ்ச பரதேசிகளை கூட்டிட்டு வெளியே போயிடு இது என்னோட வீடு” என்று வேஷ்டியை மடித்துக்கட்டிக்கொண்டு மகனிடம் எகிறிக்கொண்டு வந்தார் ராஜமாணிக்கம்.

“அட போயா நீதான் இந்த வீட்டை விட்டு வெளியே போகணும்… தோப்பு, வீடு எல்லா சொத்தும் என் பேர்ல இருக்குனு மறந்து போய்ட்டியா..! நைட் முழுக்க இருந்தியே அந்த தோட்டத்து வீடு மட்டும்தான் உன் பேர்ல இருக்கு அங்கேயே போய் கிடந்து சாவு என்னை பெத்த தாயை தள்ளி விட்டு கொன்ன உன்னை இப்பவே அடிச்சு சாகடிச்சுடுவேன் ஆனா நீ உயிர் போற வலியை அனுபவிக்கணும் அதை நான் பார்க்கணும்டா வெளியே போடா” என்று ராஜமாணிக்கத்தின் கழுத்தை பிடித்து வெளியே தள்ளினான். 

ராஜமாணிக்கமோ “நீ வல்லவராயன் பேச்சை கேட்டு தப்பு செய்யாத அப்பன் மேல வீணா பழிப்போடுற டா மகனே” என்று நல்லவனை போல நாடகம் ஆடி கண்ணீர் விட்டார்.

“என்னை ஏமாத்த நான் என்ன வாய்ல விரல் வைச்சு திரியுற சின்னப் பையனா இந்த வீட்டுப்பக்கம் தலை வச்சு படுத்திராதே ஓடி போயிடு” என்று நடுவீதியில் வைத்து அவமானப்படுத்தினான் தென்னரசு.

ஊர் மொத்தமும் ராஜமாணிக்கத்தை காறிதுப்பியது. ராஜமாணிக்கத்தின் வயலுக்கு வேலைக்கு போன பெண்களை வார சம்பளம் கொடுக்கும்போது அவர்களது விரலை தொட்டும் அசிங்கமாக பேசிய பெண்கள் ராஜமாணிக்கத்தை ஏளனமாக பார்த்து சிரித்தனர். 

ராஜமாணிக்கம் கீழே விழுந்து எழமுடியாமல் தடுமாற “எழுந்திருங்க” என்று அவருக்கு கையை கொடுத்தான் ராயன்.

“புள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலும் ஆட்டி விடுறியாடா என் மகனை என்கிட்ட இருந்து பிரிச்சிட்டல உன் குடும்பத்தை நிம்மதியா வாழ விடமாட்டேன்” என்று அவனது கையை உதறிவிட்டு தரையில் கையை ஊன்றி தட்டுமாறி எழுந்தார் ராஜமாணிக்கம்.

ராயனனோ “கத்தி எடுத்தவனுக்கு கத்தியால தான் சாவுனு உனக்கு தெரியாதா ராஜமாணிக்கம்?” என்று ஏளன புன்னகை சிந்தினான் ராயன். இதற்கு மேல் அங்கே நிற்பாரா ராஜமாணிக்கம் உடல் முழுக்க அழுக்கு கொண்ட மனிதன் திருந்துவானா? அடிப்பட்ட கிழட்டு நரி போல ஓடிப்போனார் தோட்டத்து வீட்டுக்கு.

கண்ணனும் தீபாவும் காஷ்மீர் ஹனிமூன் சென்று விட்டு வந்தனர்.

ஒருவாரம் ரெஸ்ட் எடுத்துவிட்டு காலேஜ் செல்ல தொடங்கினாள் முல்லை. மூன்று மாதங்கள் முடிந்து விட்டது காலையில் ராயன்தான் முல்லையை காலேஜ் அழைத்துச் செல்வான். மாலையில் நீலகண்டன் முல்லையை அழைத்துச் செல்வார். மகளும் தந்தையும் வீட்டுக்குள் பேச முடியாததை காரில் வரும் போது பேசிக்கொள்வார்கள் ராயனால் முல்லையிடம் கோபத்தை இழுத்து பிடித்து வைத்திருக்க முடியவில்லை. ஆனாலும் அவள் தன்னிடம் உண்மையை மறைத்துவிட்டாளே என்ற ஆதங்கத்தில் அவன் மனதில் நெருடல் இருக்கவே அவளிடம் நெருங்க முடியவில்லை அவனால்.

நதியாவுக்கு கை காயம் ஆறியிருக்க மீண்டும் அவளிடமிருந்து தள்ளியே நின்றான். காலையில் நதியாவை காலேஜில் இறக்கிவிட்டான் பாலாஜி. மாலை பால் கறந்து  பால்காரர்களுக்கு பாலை கொடுக்க வேண்டும் சாய்ந்தரம் காலேஜ் முடிந்து நதியா பஸ்ஸில்தான் வந்தாக வேண்டிய நிலை. கேட்டருகே சென்றவளுக்கு பாலாஜியிடம் பணம் வாங்க மறந்தது நினைவு வர பாலாஜியை திரும்பி பார்த்தாள் அவன்  பைக்கை எடுத்துவிட்டான். 

“மாமா நில்லுங்க” என்று பாலாஜியின் அருகே ஓடினாள் அவனோ பிரேக்போட்டு நிறுத்தி “என்ன” என்று புருவம் உயர்த்தினான்.

“செமஸ்டர் ஃபீஸ் கட்டணம் காலையில கேட்கணும்னு இருந்தேன் மறந்துட்டேன்” என்றாள் தயங்கியபடியே .

“வீட்டுலயே கேட்க வேண்டியதுதானே நான் என்ன பரம்பரை பணக்காரனா
எந்நேரமும் பாக்கெட்டுல பணத்தோட இருக்க! இரு ஏ.டிம்ல பணம் எடுத்துட்டு வரேன்” என்று காய்ந்து விட்டு பைக்கை எடுத்தான்.

பாலாஜியின் பின்னால் ராயனின் கார் வந்து நின்றது கவனிக்கவில்லை பாலாஜி.

தங்கையை மிரட்டிக்கொண்டிருப்பதை கண்டு கை முஷ்டியை இறுக்கினான். தங்கை கணவனாக தன் நண்பனாகவே இருந்தாலும் தன் கண் முன்னால் நதியாவை திட்டுவதை அவனால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ரோட்டுல வச்சு இப்படித்தான் கோபமா பேசணுமா பாலாஜியின் மீது ஆத்திரப்பட்டான் ராயன்.

முல்லையோ ராயன் கை முஷ்டியை இறுக்குவதை பார்த்தவளுக்கு ‘பாலாஜி அண்ணாகிட்ட சண்டைக்கு போயிடுவாரோ’ என்று பயந்தாள். ராயன் நதியா மேல் பாசத்தை கொட்டி வைத்திருக்கிறான். அதிலும் பாலாஜி அதட்டியதில் அவள் கண்கள் கலங்க நின்றிருந்ததையும் பார்த்த முல்லை பெரிய பிரயளம் வந்துவிடுமோ என்று அச்சத்தோடு ராயனையே பார்த்திருந்தாள்.

ஆனால் ராயனோ தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவன் “இறங்கு புள்ள சாய்ந்தரம் நான் வந்து அழைச்சிட்டு போறேன்” என்றவனோ காரை எடுத்துச் சென்றுவிட்டான் அங்கே நின்றால் பாலாஜியை அடித்து விடுவோமோ என்று அச்சப்பட்டு சென்றுவிட்டான் ராயன்.

நதியாவோ முல்லையை முதல் நாள் காலேஜில் பார்த்ததும் “முல்லை உன்கூட பேசி எத்தனை நாள் ஆச்சு என்னை மன்னிச்சுடுடி உனக்கு தேவையில்லாம கெட்ட பேரு வாங்கிக்கொடுத்துட்டேன்” என்றாள் கண்ணீருடன் வருத்தமாக.

“கையை எடுடி எனக்கு மட்டுமா கெட்ட பேரு வாங்கிகொடுத்த உங்க அண்ணா நிமிர்ந்த நெஞ்சோடு ஊருக்குள்ள நடப்பாரு அவரை மண்டபத்தல கூனிக்குறுக வச்சிட்டியே! என்கூட மச்சான் முகம் கொடுத்து சரியா பேசறது கிடையாது தெரியுமாடி! உனக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லையாடி மண்டபத்துல அத்தனை பேர் முன்னாடி பாலாஜி அண்ணாவை வரவைச்சு அவருக்கும் கெட்ட பேரு வாங்கி கொடுத்து இருக்க பைத்தியகாரத் தனமா நடந்திருக்க… நம்ம வீட்டு பெரியவங்க எல்லாரையும் அவமானப்பட்டு நிற்க வைச்சிட்ட” என்று அவளது கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டாள் முல்லை.

“என்னை அடிக்க உனக்கு உரிமையிருக்குடி நான் அவரசப்பட்டு எடுத்த முடிவு எவ்வளவு பெரிய விபரீதம்னு எனக்கு அப்போ தெரியலை உங்களை எல்லாம் விட்டு பிரிஞ்சு வந்தபோதுதான் என்னால குடும்பத்துக்கு எவ்வளவு பெரிய தலைகுனிவை வரவச்சுட்டேன்னு தவிச்சேன். நம்ம குடும்பத்தை ரொம்ப மிஸ் பண்ணுறேன்டி! அம்மாவை போன வாரம் கோவிலில் பார்த்து பேச போனேன் அம்மா என்னை திட்டிட்டு போயிட்டாங்கடி யாரும் என்கிட்ட முகம் கொடுத்து பேசலை நீயாவது என்கிட்ட பேசுடி” என்று கண்ணீர் விட்டாள் நதியா.

“மச்சான் உன்கிட்ட பேசவேணாம்னு சொல்லியிருக்காரு” என முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“இருக்காதுடி அண்ணா நிச்சயமா என்கிட்ட உன்னை பேசவேணாம்னு சொல்ல மாட்டாரு” என்று மூக்கை உறிஞ்சினாள்.

“உனக்கு செய்த கொடுத்த சத்தியத்துனாலதான் உன் காதல் விசயத்தை அவருக்கிட்ட மறைச்சேன் அதுக்கு தண்டனையும் இப்போ அனுபவிச்சிட்டு இருக்கேன்டி..! இனிமே உன்கிட்ட பேசமாட்டேன்” என்று வேகமாக பேசி சென்றுவிட்டாள். 

நதியாவோ “நீயாவது என்கிட்ட பேசுவேனு நினைச்சேன்டி ஆனால நீயும் பேசலை எனக்கு பிறந்த வீடு பக்கம் யாருமே சப்போர்ட் இல்லை” என்று சோர்ந்த முகத்துடன் முல்லையின் பக்கம் உட்கார்ந்தாள்.

முல்லையே வேறு இடத்தில் சென்று உட்கார்ந்துக் கொண்டாள். நதியாவாக பேசினாலும் அவளுடன் பேசுவதை தவிர்த்து வந்தாள். இன்று பாலாஜி அவளை திட்டுவதை பார்த்தவளுக்கு நதியாவை பார்க்க பாவமாய் இருந்தது. அவளது கையில் எப்போதும் பணம் புரண்டுக் கொண்டேஇருக்கும் வீட்டில் நீலகண்டன், தெய்வநாயகம், ராயன் என்று அனைவரும் அவளுக்கு பணத்தை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்.  கேண்டீனில் அவளை சுற்றி நண்பிகள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இப்போதெல்லாம் அவள் கேண்டீன் செல்வது கூட இல்லை. 

முல்லை பாலாஜியையும் நதியாவையும் தாண்டித்தான் சென்றாக வேண்டும். அவளுக்கு சங்கடமான நிலை.

என் தங்கச்சியை திட்டுவியா என்று ராயன் காருக்குள் உட்கார்த்து பார்த்த பார்வையில் பாலாஜிக்கு முகம் கருத்துவிட்டது.

பாலாஜியோ முல்லையிடம் பேசவில்லை. அவள் கர்ப்பமாய் இருப்பது தெரியும் எப்படி இருக்கனு கூட கேட்க முடியாத நிலை பாலாஜிக்கு. இதற்கு காரணமான நதியாவின் மேல் அத்தனை கோபமும் திரும்பியது.

“ஏன் டி வீட்லயே பணம் என்கிட்டே கேட்டிருந்தா நான் உன்னை திட்டியிருக்க வேண்டிய நிலை வந்திருக்காது. உன் அண்ணா என்னை முறைச்சு பார்த்துட்டு போறான்! என்னை வில்லனா ஆக்கிட்டியே” என்று அவளை கரித்துவிட்டு ஏ.டிம் சென்று பணம் எடுத்து வந்தவன் “சாய்ந்தரம் பார்த்து வா” என்று கூறிவிட்டு பைக்கில் கிளம்பிவிட்டான். 

“எல்லாரும் என்னை திட்டுங்க! ஆசைப்பட்டவன் கிடைக்க வேறு வழி எனக்கு தெரியலை!” என்று புலம்பிக்கொண்டே காலேஜிற்குள் சென்றாள்.

பாலாஜியுடன் சந்தோசமாக இருப்பாளென்று நினைத்திருந்தாள் முல்லை. ஆனால் இன்று பொது இடத்தில் பல பேர் பார்க்க பாலாஜி நதியாவை திட்டியது அவளுக்கு உறுத்திக்கொண்டிருந்தது.

நதியா அவள் இடத்தில் உட்கார்ந்ததும் “பணம் இல்லைனா என்கிட்ட சொல்லு நான் தரேன்டி” என்றாள் மெல்லிய குரலில்.

“இப்ப மட்டும் பணம் கொடுத்தா அண்ணாவுக்கு சந்தேகம் வராதா எங்ககிட்டயே பணம் இருக்கு நீ ஒண்ணும் தரவேணாம்” என்று முகத்தை தூக்கிக்கொண்டாள் நதியா. 

ஆனால் கொஞ்ச நேரத்தில் நதியாவின் அக்கௌண்டிற்கு ஒரு லட்சம் பணம் போட்டு விட்டிருந்தான் ராயன். நதியா சாப்பிடும் நேரம் “ஐ அண்ணா எனக்கு ஒன் லேக் அமௌன்ட் போட்டு இருக்காரு. என் அண்ணன் கோபம் தீர்ந்து என்னை வீட்டுக்கு அழைச்சுட்டு போவாரு” பக்கத்தில் அமர்ந்து சாப்பிடும் முல்லையின் காதில் விழுமாறு பேசினாள். 

மாலையில் ராயன் முல்லையை அழைத்து வரச் சென்றிருந்தான். நதியா பஸ் ஸ்டாப்பில் நின்றுக் கொண்டிருந்தாள் மழை தூறல் போட ஆரம்பித்தது. அவள் போக வேண்டிய பஸ் வரவில்லை. நிழற்குடையில் நிறைய பேர் நின்றிருக்க மழையும் வேகமாக வந்துவிட்டது. யாரிடமோ போனில் பேசினான். அடுத்த சில நிமிடங்களில் நதியாவின் பக்கத்தில் குடையில்லாமல் நின்றிருந்தவர்களுக்கு “எங்க கம்பெனி எம்.டிக்கு கல்யாண நாள் கொஞ்ச பேருக்கு கிஃபிட்டா குடை கொடுக்குறோம்” என்று குடையை  கொடுத்துக்கொண்டிருந்தார். 

நதியாவுக்கு தெரியும் இது அண்ணாவோட வேலைதான் என்று தன் மேல் கோபம் இருந்தாலும் பாசம் குறையவில்லையென்று அவளுக்கு கண்கள் கலங்கி “தேங்க்ஸ் அண்ணா” என முணகினாள்.

முல்லை காரில் ஏறியதும் ராயன் நதியாவை பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது நமக்கு என்ன வந்தது அண்ணனும் தங்கையும் உடனே சேர்ந்துடுவாங்க நம்மளைத்தான் டீலில் விட்டுடுவாங்க என்று சலித்துக்கொண்டு அமைதியாக உட்கார்ந்துக் கொண்டாள். 

காரில் முல்லை ராயனை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே வந்தாள். “என்ன” என்று அவன் புருவம் உயர்த்தவும் “ஒன்னுமில்லை” என்று தலையை ஆட்டினாள்.

மறுபடியும் ராயனை பார்த்தாள் காரை ஓரமாக நிறுத்தியவன் “என்ன புள்ள ஏதாவது வேணுமா?” என்றான் அழுத்தமாக.

“ஆமா புளிப்பா மாங்கா வேணும் வாங்கி தருவீங்களா?”

பழமுதிர்சோலை முன்னே காரை நிறுத்தியவன் ஒருகூடை நிறைய மாங்காயோடு வந்தான். 

“சும்மா பேச்சுக்கு கேட்டேன் மனுசன் இப்படியா ஒருகூடை வாங்கிட்டு வருவாங்க கோபத்தையும் பாசத்தையும் ஒரேமாதிரி காட்டினா எப்படி” என்ற மலைத்துப்போனாள் முல்லை.

மாங்காயை பின் சீட்டில் வைத்துவிட்டு டிரைவர் சீட்டுக்கு வந்தவன் “இன்னும் வேற வேணுமா?” என்றான் அவளது கண்களை பார்க்காமல். ராயனால் ஒரு கட்டத்துக்கு மேல கர்ப்பமாய் இருக்கும் காதல் மனைவியிடம் அவனது கோபத்தை காட்டமுடியவில்லை. எத்தனை நாள் முகம் பார்க்காமல் ஒரே அறைக்குள் இருப்பான். அவளின் விசும்பலை கேட்டு அவனின் இதயம் அதி வேகமாய் துடிக்கும்..! அழாதே புள்ள என்று அவளை தாவி அணைத்து தலையை வருட கைகள் தவிக்கும். காதலை உள்ளே வைத்து வெளியே கோப முகத்துடன் நடித்துக் கொண்டிருக்கிறான் ராயன்.

“ஆமா என் மச்சான்கிட்டயிருந்து முத்தம் வேணும் ரொம்ப நாள் ஆச்சு முத்தம் கொடுத்து வாங்கி கொடுங்க” என்றாள் தைரியத்தை வரவழைத்து.

“என் பொண்டாட்டி கூட சண்டைங்க நான் முத்தமெல்லாம் தரமாட்டேன்னு சொல்லிடுங்க” என்றான் அவனும் விடாப்பிடியாக.

“சரிங்க எனக்கு தரவேணாமுங்க அவரோட குழந்தை முத்தம் கேட்குது குழந்தைக்காவது முத்தம் கொடுப்பீங்களானு கேட்டுச் சொல்லுங்க” என்றாள் ராகமாக.

“என் குழந்தைக்கு முத்தம் கொடுப்பேன் ஆனா காருக்குள்ள கிடையாது வீட்டுக்கு போய் தருவேன்னு சொல்லிடுங்க” என்றான் கார் ஸ்டேரிங்கில் தாளம் போட்ட படியே.

“இப்பவே குழந்தை முத்தம் கேட்டு உதைக்குது” என்று நாக்கை கடித்துக்கொண்டாள்.

“என்ன” என்று அவளை முறைத்தான்.

“எனக்கு இப்ப முத்தம் வேணும் கொடுக்க முடியுமா முடியாதா மச்சான்?” என்றாள் வெட்கத்தை விட்டு.

“கொடுக்க முடியாதுடி” என்று முகத்தில் அடித்தாற் போல பேசி காரை எடுத்தான். அவள் துவண்டு போகவில்லை.

“மாசமா இருக்க பொண்ணு ஆசைப்பட்டதை கொடுத்துடணுமாம் இல்லைனா பொறக்கப்போற குழந்தைக்கு காதுல சீழ் வரும்னு பெரியவங்க சொல்லுவாங்க” என்று இதழை சுளித்தாள். ராயன் உதட்டுக்குள் சிரித்துக்கொண்டான். 

காரை விட்டு இறங்கியதும் மழை ஜோராக பெய்தது “ஏய் நில்லு புள்ள மழையில நனைஞ்சா ஜலதோசம் பிடிச்சிக்கும்” என்று காருக்குள் இருந்த குடையை எடுத்து மனைவிக்கு பிடித்தான்.

கோமளமோ வாசலுக்கு வந்தவர் “ம்க்கும் இவன் பொண்டாட்டிதாசன்” என்று முகத்தை திருப்பினார்.

ராயன் அவரை பொருட்டாக பார்க்கவில்லை. வீட்டுக்குள் வந்ததும் முல்லை “அச்சு அச்சு” என்று வயித்தை பிடித்துக்கொண்டு தும்மினாள்.

“தலையை துவட்டு கண்ணு இஞ்சியை தட்டிப்போட்டு சூடாக டீ கொண்டு வரேன்” என்று சமையல்கட்டுக்குள் சென்றுவிட்டார். ராயனும் முல்லையும் கீழே உள்ள அறைக்குள் நுழைந்துக் கொண்டதும் துண்டை எடுத்து ராயனுக்கு கொடுத்தாள்.

ராயனோ “நீதான் நனைஞ்சு இருக்க தலையை துவட்டு” என்று அவளிடம் கொடுக்க அவளோ “துவட்டி விடுங்க மச்சான்” என்று கையை கட்டிக்கொண்டாள் அவனது விழிகளை பார்த்துக்கொண்டே காதலாக.

“என்னடி வம்பு பண்ணுறியா?”

“நான் வம்பு பண்ணத்தான் நினைக்குறேன் என் வீட்டுக்காரர் என் மேல கோபமா இருக்காரு நான் என்ன பண்றது நான் பண்ணிய தப்புக்கு இப்போகூட காலுல விழத்தயாரா இருக்கேன்” என்று அவனது காலில் பொசுக்கென விழுந்துவிட்டாள்.

“ஏய் புள்ள எதுக்கு குனியறவ வயித்துப்புள்ளைக்கு ஏதாவது ஆகிடுச்சுனா” என்று பதறி விட்டான் ராயன்.

“இப்போ உங்க புள்ள மேல மட்டும்தான் கரிசனம் என் மேல கிடையாது அப்படித்தானே நான் உங்க மாமா பொண்ணுனு தெரிஞ்சுதான் என் கழுத்துல தாலி கட்டியிருக்கீங்க. நான் ஒரு வேலைக்காரியா இருந்தா என்னை கல்யாணம் பண்ணியிருப்பீங்களானு சந்தேகம்தான்! உங்க தங்கச்சியை பாலாஜி அண்ணா திட்டியதும் உங்களுக்கு கோபம் வந்துச்சு அவ மழையில நனையுறானு குடை வாங்கிக்கொடுக்குறீங்க!

நதியா அக்கௌவுண்டல பணம் போட்டு விடுறீங்க எனக்கு என் புருசனை தவிர வேற யாரும் இல்லைங்க நான் சொல்ல வந்தததை ஒரு நிமிஷம் காது கொடுத்து கேட்க மாட்டேன்னு இருந்துட்டீங்க” என்றாள் இத்தனை நாள் பிடித்து வைத்திருந்த கோபத்தையெல்லாம் கொட்டினாள் மடை திறந்த வெள்ளம் போல.

“பேசி முடிச்சிட்டியா?” என்றான் மார்புக்கு குறுக்கே கையை கட்டிக்கொண்டு.

“இன்னும் நிறை பேசுவேன் பாலாஜி அண்ணா உங்க தங்கச்சியை லவ் பண்ணவே இல்ல! உங்க தங்கச்சி தான் அண்ணா பின்னாடி லவ் பண்ணுறேன்னு அவருக்கு தொந்தரவு கொடுத்தா அண்ணன் உன் காதலை ஏத்துக்க முடியாது ராயனுக்கு என்னால துரோகம் பண்ண முடியாதுனு பொறுமையா எடுத்து சொன்னாரு நதியா அண்ணா சொல்லுவதை காது கொடுத்து கேட்கலை… மண்டபத்துல அவ அப்படி ஒரு கூத்து பண்ணுவானு எனக்கு தெரியாம போச்சு… மாசமா இருக்க என்னைய என்ன சொல்ல வரேன்னு நிதானம் இல்லாம என்னைய அடிச்சுட்டீங்க” என்று இத்தனை நாள் மனதில் உள்ளதை கொட்டி விட்டாள்.

அவன் அமைதியாக அவளையே பார்த்திருக்க   எங்கே தன் மேல் கோபம் கொண்டு இன்னும் பேசாமல் இருந்து விடுவானோ என்று பயம் வந்தது முல்லைக்கு.

“நீ என் மாமா பொண்ணுகிறதால மட்டும் கல்யாணம் பண்ணல. சும்மா மொசக்குட்டி போல துறுதுறுவென சுற்றித்திரியும் புள்ள மேல ஆசைப்பட்டேன்டி வருசா வருசம் தீபாவளிக்கு நானே கடைகடையா ஏறி இறங்கி உன் எலுமிச்சை நிறத்துக்கு ஏத்தபடி தாவணி பாவாடை ஆகட்டும் சுடிதாராகட்டும் எடுத்து தருவேன்டி. எனக்கு வயசாகிடுச்சு சின்னப் பொண்ணு மேல ஆசைப்படுவது தவறோனு என் ஆசையை கட்டுப்படுத்திப்பேன்டி உன்னை எவ்ளோ பிடிக்கும்னு கேட்டா சொல்லத்தெரியாது. ஆனா ரொம்ப பிடிக்கும் என்னோட உயிர் போறதா இருந்தா உன் மடியிலதான் போகணும்டி உன் மேல ரொம்ப நாளைக்கு என்னால கோபத்தோட இருக்க முடியலையேடி என்னை என்ன வசியம் பண்ணி வச்சிருக்க” என்றான் உயிர் உருகும் குரலில்.

“இப்படிபட்ட மனுசன்கிட்ட உண்மையை மறைச்சது ரொம்ப தப்பு மச்சான்” என்று அவனது நெஞ்சில் சாய்ந்து குலுங்கினாள்.

“ஏய் புள்ள அழாதே என் பாப்பாவுக்கு வலிக்கக் போகுது” என்று முல்லையை தூக்கி விட்டு அவளை அணைத்துக் கொண்டவன் “என் நண்பன் நதியா பாப்பாவுக்காக தன் மேல பழியை போட்டுக்கிட்டான்னு தெரியும். ஆனா அவன் என்கிட்டே முன்னமே நதியா அவன்கிட்ட லவ் சொன்னதை சொல்லி இருந்தா இவ்ளோ பிரச்சனை வந்திருக்காதே ..! என்கிட்ட உண்மையை மறைச்சுட்டான் அதான் இன்னமும் பேசாம இருக்கேன். என்னவா இருந்தாலும் காலையில நதியாவை அவன் பொது இடத்துல வைத்து திட்டி இருக்க கூடாது. எங்க வீட்டுப் பொண்ணு கண்ணு கலங்கி நிற்குறதை பார்க்க முடியலடி” என்றான் ஆதங்கத்துடன்.

“என் மச்சான் ரொம்ப நல்லவரு” என்று அவனை அணைத்துக்கொண்டாள்.

“ரொம்ப நேரம் வயிறு அழுந்த கூடாதுடி பாப்பாவுக்கு வலிக்கும்ல” என்று அவளை மெதுவாய் விலக்கி விட்டான்.

“பையன்னு சொல்லு மச்சான் எனக்கு உன்னை போலவே எல்லாருக்கும் பாதுகாப்பு கவசமா இருக்கற மாதிரி மகன் வேணும்” என்றாள் குழைவான குரலில் அவனது சட்டை பட்டனை திருகிக்கொண்டு.

“முதல்ல பொண்ணை பெத்துக்கொடு அப்புறம் பையனை பெத்துக்கொடுடி” என்று அவளது நெற்றியில் முட்டினான்.

“முல்லை” என தையல்நாயகியின் குரல் கேட்கவும்

“அச்சோ அத்தை வந்துட்டாங்க மச்சான்” என்று இருவரும் பிரிந்து நின்றனர்.

“கண்ணு இந்த டீயை குடி குளிருக்கு இதமா இருக்கும்” என்று மருமகளின் கையில் கொடுத்தார். 

“தேங்க்ஸ் அத்தை” என்று அவளின் முகத்திலிருந்த புன்னகையே கூறியது மகனும் மருமகளும் பிணக்கு முடிந்து இணக்கமாகிவிட்டனர் என்று நிம்மதியானார் நாயகி.

“பச்சத்தண்ணி ஊத்திடாதே காய்ச்சல் வந்துடும் சுடுதண்ணியில குளி கண்ணு” என்று மருமகளிடம் பாசமாய் பேசி விட்டு வெளியேறினார் தையல்நாயகி.

“குளிப்போமா புள்ள!” என்றான் கண்ணைச் சிமிட்டி ராயன்

  •  

உயிர்வரை பாயாதே பைங்கிளி -22

 

22

 

 ஒரு தாய் தன் மகளை எந்த நிலையில் காணக்கூடாதோ அந்த நிலையில் தான் மேனகையை கண்டார்  தையல்நாயகி…

 

உடலில் ஒட்டு துணியின்றி சீராளனின் சட்டையை தொடைவரை போட்டு கொண்டு கண்ணீர் சிந்தியப்படி வெளியே வந்த மகளை கண்டு உயிரே போய் விட்டது என்றால்… அவள் பின்னேயே மேல் சட்டை எதுவும் இன்றி கசங்கிய தோற்றத்துடன் வந்த சீராளனை கண்டு பேரிடியே அவர் தலையில் வந்து விழுந்தது போல் நின்றார் தையல் நாயகி…

 

 அடப்பாவீ  என் குடிய கெடுத்துட்டியேடா… கூட பொறந்தவள் குடும்பத்தையே கருவறுத்திட்டியேடா குடிகார பயலே… பாவி பயலே இந்த கையால  உனக்கு எத்தனை தடவை சோத்தை போட்டு இருப்பேன்… எப்படிடா உனக்கு என் பொண்ணு வாழ்க்கைய கெடுக்க மனசு வந்தது…

 

ஐயோ என் குடும்ப குல விளக்கை அழிச்சு புட்டானே… இனி என்ன நான் செய்வேன் யார்கிட்ட போய் முறையிடுவேன்… என் பொண்ணு வாழ்க்கை இப்படி நாசமா போச்சே…கடவுளே… பாவி பாவி இப்படி ஒரு துரோகம் பண்ண உனக்கு எப்படிடா மனசு வந்துச்சு… செத்துப்போ நாயே செத்துப்போ என்று சீராளனை போட்டு அடி வெளுத்து வாங்கினார் தையல் நாயகி… அவரின் அழுகுரல் கேட்டு ஊரே ஒன்று கூடின…

 

 யார் தடுத்தும் கேட்கவில்லை… கை வலிக்க வலிக்க அடித்து துவைத்து விட்டார்…

 

 சீராளன் மேனகையை கெடுத்த செய்தி அனைவருக்கும் தெரிந்து அதிர்ச்சியுடன் ஓடி வர… ஆண்கள் கூட்டம் திரளும் முன்னே திலோ அவசரமாக ஓடி வந்து மேனகை மீது துணியை போர்த்தி அணைத்து வீட்டிற்கு அழைத்து சென்று விட்டாள் சாமர்த்தியமாக…

 

“என்னப்பா சீராளா இப்படி பண்ணிட்ட… விடிஞ்சா மணவறை ஏற வேண்டிய புள்ளய மானபங்கம் படுத்திட்டியே இது உனக்கே நியாயமா…??? உன்னை இதுவரைக்கும் குடிகாரன்னு மட்டும் தான் நினைச்சேன் இன்னைக்கு அந்த புள்ள வாழ்க்கைய கெடுத்த கொடுமை காரனா  நிக்கிறீயே நீயெல்லாம் மனுஷனா…!!” என ஊர் பெரியவர்கள் நிற்க வைத்து சரமாரியாக கேட்க…

 

 சீராளன் அசையாது அப்படியே நின்றான்… அவர்கள் மிரட்டல் உருட்டல் அதட்டல் அடி எதற்கும் வாயை திறந்தான் இல்லை… வாயை இறுக பூட்டி மௌனியாக நின்றான்…

 

 விஷயம் கேள்விப்பட்டு வந்த மாப்பிள்ளை வீட்டாரும்… சீராளனை போட்டு அடிக்க அவர்களை குறுக்கே புகுந்து தடுத்து விட்டான் கிரிதரன்…

 

என்னை தடுக்காதீங்க விடுங்க அவனை அடிச்சு கொன்னு புதைச்சா தான் என் ஆத்திரமே தீரும் என மேனகைக்கு முடிவான மாப்பிள்ளை சுதர்சன்… ஆவேசத்துடன் கத்த…

 

இருப்பா தம்பி கொஞ்சம் அமைதியா இருங்க… இவன அடிச்சு போடுறதால மட்டும் பிரச்சனை தீர்ந்திடுமா என்ன… இங்க கேள்விக்குறியாகி நிக்கிறது அந்த பொண்ணோட வாழ்க்கை… அதுக்கு என்ன பண்ணலாம் அதை மொதல்ல பேசி முடிவு எடுப்போம்… நீங்க என்ன சொல்றிங்க… ஊர் பெரியவர் மாப்பிளை அபிப்பிராயத்தை கேட்க…

 

யாரோ ஒரு குடிகார நாய் தப்பு பண்ணினதால நான் மேனகைய  விட்டு கொடுக்க மாட்டேன்… என்ன நடந்தாலும் சரி மேனகை தான் என் மனைவி… என உறுதியாக கூறியவனை கண்டு ஊரே மெச்சியது… ஆனால் அவன் வீட்டுக்கு இளிச்சவாயனாக தான் தெரிந்தான்….

 

 உனக்கு என்ன புத்தி  கெட்டு போச்சா டா… இப்படி கெட்டுப் போய் வந்து நிக்கிற பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்ற… நீ ஒத்துக்கிட்டாலும் நாங்க அந்த பொண்ண  எங்க வீட்டு மருமகளா ஏத்துக்க மாட்டோம்… ஒழுங்கு மரியாதையா அந்த பொண்ண இங்கேயே தலைமுழுக்கிட்டு எங்க கூட வா என சுதர்சன் தந்தை மிரட்ட…

 

மகன் முரண்டு பிடிக்க தந்தை மறுக்க என மீண்டும் உள் நாட்டு கலவரம் ஆனது…

 

 எப்பா இப்படி உங்களுக்குள்ளே அடிச்சுக்குறது நல்லவா இருக்கு அட நிறுத்துங்கப்பா… பாதிக்கப்பட்டது அந்த பொண்ணு தான் நாளைக்கு வாழ போறதும் அந்த பொண்ணு தான் பேசாம அதுகிட்டயே என்ன முடிவுனு கேட்டுடுங்க அதுதான் எல்லாருக்கும் நல்லது என முடிவு எடுக்க…

 

மேனகையை அழைத்து அவள் விருப்பத்தை கேட்க… நீ தைரியமா சொல்லுமா உன்னை காலம் முழுக்க கண் கலங்காமல் வச்சி பார்த்துக்கிறேன்… இந்த நாய நினைச்சி நீ பயப்பட வேணாம்… நீ தெருவுல போறப்போ தெரியாமல் உன் மேல சகதி பட்டா அது உன் தப்பில்லை அந்த சாக்கடையை  சுத்தம் செய்யாத ஊர் தப்பு…  அதுக்காக எல்லாம் உன்னை நான் வெறுக்கவும் மாட்டேன் விட்டு கொடுக்கவும் மாட்டேன் என சுதர்சன் நெஞ்சை நிமிர்த்தி கூற…

 

கை கூப்பி அவனை கண்ணீர் கண்களோடு ஏறிட்ட மேனகா சடார் என்று அவன் காலில் விழுந்து விட…

 ஸ்தம்பித்து போயினர் அனைவரும்…

ஏய் என்னமா பண்ற எந்திரி என அவளை எழுப்பி விட 

“உங்க பேச்சே  உங்க  நல்ல மனசை எடுத்து சொல்லுதுங்க… உங்கள மாதிரி நல்ல மனுஷன் கிடைச்சது  எந்த ஜென்மத்து புண்ணியமோ தெரியல ஆனா அதை விட மன்னிக்க முடியாத பாவத்தை செஞ்ச பாவியா உங்க முன்னாடி கூனி குறுகி நிக்கிறேன்…  நீங்க நல்லவர் உங்க தங்க மனசுக்கு என்னை விட சுத்தமான நல்ல பொண்ணு தான் கிடைக்கணும்… நா…நான் ஒரு பாவி… நான் மாசு பட்டவள் உங்களுக்கு வேண்டாம் என்னை மன்னிச்சிடுங்க… என்னை விட்ருங்க… நான் என் மாமாவையே கட்டிக்கிறேன்…!!”என்று கூறியவளை கண்டு ஏமாற்றத்துடன் தோற்றுப் போனான் சுதர்ஷன்…

 

ஏன்டா இதுக்கு மேல இங்க இருந்து என்னடா செய்யப் போற அதான் உன் மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டாங்க இல்ல வா… இந்த பொண்ணு இல்லனா ஊர்ல வேற பொண்ணு இல்லையா… ஏன்டா மாரியப்பா உன் பொண்ணு ரத்னா இங்க தான இருக்கா… அவளை என் பையனுக்கு கட்டி தர உனக்கு சம்மதமா…?? என மாப்பிள்ளை  அப்பா  சூட்டோட சூட்டாக ஒரு முடிவை எடுக்க…

 

என்ன மச்சான் இப்படி கேட்டு புட்டிங்க… நீங்க சொந்தத்துக்குள்ள பொண்ண வச்சுட்டு அசல்ல எடுக்கும்போதே நான் ரொம்ப வருத்தப்பட்டேன்… என் பொண்ண நம்ம சுதர்சனுக்காகவே வளர்த்து வச்சி இருந்தேன்…நீங்க ம்ம்ம் னு சொன்னா போதும் அவளை மணமேடை ஏத்திப்புடுவேன்… ஆனால் மாப்பிள்ளை… என பெண்ணை கொடுக்க சுதர்சனின் சொந்த அத்தை மாமா ஒத்துக் கொள்ள…

 

 அவன் கிடக்கிறான் அவன் எடுத்த முடிவு தான் விளங்காம போச்சே… இனி அவன் கிட்ட என்ன கேட்கிறது கட்டுடா தாலியனா கட்டி தான் ஆகணும்… என்று மகனை பார்க்க அவனோ தோற்று விட்ட வலியில் நிற்க அதற்கு மேல் மறுக்கவோ தடுக்கவோ அவனால் முடியுமா??? வேறு வழி இல்லாமல் தந்தை காட்டிய பெண்ணின் கழுத்தில் கடமைக்காக தாலி கட்டினான் குறித்த முகூர்த்தத்தில்…

 

கவலை வேண்டாம் சுதர்சன் கடமைக்காக தாலி கட்டினாலும்… அவன் வாழ்க்கை நிச்சயம் கடமைக்காக இருக்காது அப்படி இருக்கவும் விட மாட்டாள் அவனின் சகதர்மினி ஆன ரத்னா…

 

 சிறு வயதிலிருந்தே  அவனுக்காக வளர்ந்தவள் அவனை மட்டுமே நெஞ்சுக்குள் வைத்து சுமந்தவள்… அவனுக்கும் மேனகைக்கும் திருமணம் என்றதும்  தற்கொலை வரை சென்று வந்தவள்… தனக்கில்லை என்றானது மீண்டும் கிடைத்த சொர்க்கத்தை நிச்சயம் அவள் கைவிட்டு போக விட மாட்டாள்… அவனுக்காக உயிரையே கொடுக்க துணிந்தவள் அவன் உலகத்தை அவளுக்காக மாற்ற மாட்டாளா என்ன…??அவளின் மாசில்லாத தூய காதல் அவனை மாற்றும் என்று நம்புவோம்…

 

 

 மற்ற விவாதங்களுக்கு இடம் அளிக்காமல் மேனகையே சீராளனை திருமணம் செய்துக் கொள்ள ஒத்துக் கொண்டு விட… மேனகைக்கும் சீராளனுக்கும் குறித்த  நேரத்தில் திருமணம் நடக்க…

 

தன்  கையில் கொடுத்த தாலியை வெறித்த கண்களோடு பார்த்து இருந்தான் சீராளன்…என்னப்பா யோசிக்கிற கட்டு தாலிய என பெரியவர்கள் ஊந்த… கடமையாக மேனகை கழுத்தில் கட்டி  முடித்தவன்… அளவில்லா ரௌத்திரம் அவன் முகத்தில் தாண்டவம் ஆடியது… தாலி கட்டியதோடு கடமை முடிந்து விட்டது போல் விருட்டு என்று மணமேடையை விட்டு எழுந்து சென்று விட்டான்… யார் குரலுக்கும் செவி சாய்க்காமல்… விக்கித்து போனாள் பெண்ணவள்…

 

அடுத்து என்ன என பெரியவர்கள் ஒன்று கூடி அலசி ஆராய்ந்து… மேனகையை சீராளன் வீட்டுக்கு அனுப்பி வைக்க ஒரு மனதாக முடிவு எடுத்து… ஆயிரத்தெட்டு அறிவுரைகள் அவளுக்கு வழங்கி அனுப்பி வைத்தனர்…

 

கிரிதரனும் பஞ்சாட்சரமும் மேனகையை சீராளன் வீட்டில்  விட்டு வர உடன் சென்றனர்…தையல் நாயகி மகள் வாழ்வு பாழாகி போனதே என்கிற வருத்தத்தில் மூலையில் முடங்கி போனார்… 

 

சீர் சினத்தியோடு மேனகை சீராளன் வீட்டு வாசல் வந்து நின்று வெகு நேரம் ஆகியும் கதவு திறக்கப் படவில்லை… 

ஆள் உள்ளே தான் இருக்கிறான் என்பதை உள்பக்கம் தாழ்ப் போட்டிருந்த கதவு  சொன்னது…

 

“ஏன்பா சீராளா என்னப்பா இது சின்னப் புள்ள தனமா பண்ணிக்கிட்டு இருக்க… பொண்ண கொண்டு வந்து விட்டு போக மச்சானும் மாப்பிள்ளையும் வந்து வாசல்ல எம்புட்டு நேரம் நிப்பாங்க… மத்தவங்கள விடு உன் மச்சான  நினைச்சு பாரு… ஊரே நிமிர்ந்து  பார்க்கும் பெரிய மனுஷனை இப்படி வாசல்ல காக்க வைக்கிறது எல்லாம் நல்லாவா இருக்கு… உங்களுக்குள்ள ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் உள்ள கூட்டி போய் பேசுபா… என்றதும் படார் என கதவு திறந்து கொண்டது அவ்வளவு தான்…மற்றபடி ஆள் வெளியே வரவே இல்லை… அது மேனகை உட்பட அனைவருக்கும் அவமானத்தை ஏற்படுத்த… 

 

 பொருட்களை எல்லாம் உள்ளே வைக்க சொன்ன  பஞ்சாட்சரம் வெளியேவே உட்கார்ந்து கொண்டார் மதியாதார் தலைவாசல் மிதியாதே என சொல்லி கொடுத்தவர் ஆகிற்றே… 

 

மேனகைக்கு சீராளனின் இந்த செயலில் வருத்தமே… ஆனாலும் அவனை விட்டு கொடுக்க முடியாதே…

 

“அப்பா  மனசுக்குள்ள எதையும் வச்சுக்காதீங்க… அவருக்கு என் மேல கோவம் அதுதான் உங்க மேலையும் மத்தவங்க கிட்டையும் காட்டுறார் எனக்காக அவரை மன்னித்து விடுங்க அப்பா… என ஒரே நாளில் வளர்ந்த பொண்ணாக நின்ற மகளை பார்க்க பஞ்சாட்சரத்துக்கும் கிரிதரனுக்கும் ஆச்சரியம் தான்…

 

“பரவால்லடா நான் தூக்கி வளர்த்த பையன் தான எங்க போயிட போறான்… பார்த்துக்கலாம் அவனே வந்து வாங்க மாமா கூப்பிடற காலம் வராமலா போக போகுது… நீ போ தாயீ உம்ம நல்ல மனசுக்கு எல்லாம் நல்லாதாவே நடக்கும் அப்பா எப்பவும் உனக்கு உறுதுணையா உன் கூடவே இருப்பேன்… நீ  போற இடத்துல பொறுப்பா வாழறத நான் என் கண்ணாற பார்க்கணும்… படிச்ச புள்ள உனக்கு சொல்ல தேவை இல்லை… என பெரு மூச்சு விட்டு உள்ளே பார்த்தவர்… என் தாயீ குணத்துக்கு எல்லாம் சரி ஆகிடும் நீ நிம்மதியா போ வாழு தாயீ…!!” என மகளை ஆசீர்வாதம் செய்ய…

 

கிரிதரனிடம் வந்தவள் அவன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க போனவளை பிடித்து… “நல்லா இருமா எனக்கு அப்பா மாதிரி அட்வைஸ் பண்ணத் தெரியாது… அதற்கான தகுதியும் என்கிட்ட இருக்கான்னு தெரியல… ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன்  நமக்கு பிடிச்சவங்கள எக்காரணம் கொண்டும் விட்டு கொடுக்க கூடாது… நமக்கு பிடிச்சதை அடைய எவ்வளவு வேணாலும் போராடலாம்… என்னைக்காவாது  ஒரு நாள் நம்மள புரிஞ்சி கிட்டு நம்மள ஏத்துப்பாங்க அதுவரை மனசு விட்ராம போராடுறதில தான் இருக்கு… நம்மளோட வாழ்க்கை என்ன புரிஞ்சிதா…!!” என தன் அனுபவத்தை வைத்து அறிவுரை வழங்கி மேனகையை அனுப்பி வைத்தான்…

 

உள்ளே சென்ற மேனகை சீராளனை தேடி போக அவனோ உள் அறைக்குள் முகத்தை மூடி படுத்து கிடந்தான்… உறங்கவில்லை முழித்து கொண்டு தான் இருந்தான் அவன் உடல் மொழியை வைத்து கண்டு பிடித்தாள்…

 

தயங்கி தயங்கி அவன் கைகளை தொட போக… 

 

சட்டென்று முகத்தை மறைத்து இருந்த கையை விலக்கியவன் கண்ணில்… அத்தனை ரௌத்திரம்… தீ பிழம்பென கண்கள் சிவக்க… செங்குருதி வழிந்தோட நீட்டி இருந்த மேனகையின் கைகளை படார் என்று தட்டி விட்டவன்… 

 

“இப்போ உனக்கு சந்தோசமா… முன்ன போனவளாவது எனக்கு **** பட்டத்தை மட்டும் தான் வாங்கி கொடுத்தா… ஆனால் நீ,  ஆறாத பழியையும் துரோகிங்குற பட்டத்தையும் வாங்கி கொடுத்துட்டியே ராட்சசி… இனி எப்படி நான் என் அக்கா முகத்துல முழிப்பேன்… இந்த ஊரே என் மூஞ்சில காறி துப்ப வச்சிட்டல்ல…!!” என மேனகையின் கன்னத்தில் பளார் பளார் என்று அடிக்க…

 

அவள் ஆஆ மாமா மாமா நா… என வார்த்தை வராமல் சீராளனின் முரட்டு தனத்தில் மிரண்டு போய் முழிக்க…

 

“ஏண்டி ஏண்டி இப்படி செஞ்ச… இதோ இந்த தாலிய  வாங்க தான இத்தனையும் செஞ்ச… அந்த தாலிய எப்படி உன் கழுத்துல இருந்து எடுக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும்… என்ன பார்க்கிற நான் உயிரோட இருந்தா தான இந்த தாலி கழுத்துல தொங்கும்… நான் போறேன்… உன் கண் காணாமல் எங்கேயாவது போய் செத்துப் போறேன்…நீ இந்த தாலியவே கட்டிக்கிட்டு அழுவு என்று ஆத்திரத்தில் அறிவிழந்து கத்தி விட்டு    மேனகையை  பிடித்து தள்ளி விட்டு வெளியே சென்ற சீராளன் இரவாகியும் வீடு திரும்பவே இல்லை…

  •  

உயிர்வரை பாயாதே பைங்கிளி -21

21

 

திருமணத்திற்கு முந்தய நாள் இரவில்…

 

மேனகையை உறவுக்கார பெண்களின் பாதுகாப்பில் விட்டு திருமண வேலைகளை கவனித்தார் தையல் நாயகி… பஞ்சாட்சரமும் கிரிதரனும் மண்டபத்தில் இருந்து கல்யாண ஏற்பாடுகளை கவனித்து கொண்டாலும் வீட்டில் தங்கி இருக்கும் உறவினர்களை கவனித்து கொள்வது மேனகைக்கு மிச்சம் இருக்கும் நலங்கு சடங்குகளுக்கு  தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தையல் நாயகி கூடவே இருந்து கவனித்து கொண்டார்… ஒரே செல்வ மகள் அவள் திருமணத்தில் ஒரு குறை வராமல் நடத்திட வேண்டி அலைந்து திரிந்து செய்தார்…

 

பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் என்பதால் யாரும் தூங்காமல் விடிய விடிய  ஊற போட்ட ஊர் கதைகளை பேசிக் கொண்டிருந்தனர்… இடையிடையே தூங்கி விடாமல் இருக்க காபி தண்ணி வேறு…

 

காலையில் திருமணம் என்பதால் அர்த்த ஜாமத்தில் மேனகைக்கு நலங்கு வைக்க உறவுக்கார பெண்களை அழைத்தார் தையல் நாயகி…

 

அனைவரும் மேனகையை உட்கார வைத்து விட்டு குழுமி இருக்க… “நாயகி அண்ணி நாலு பேர் தான் இருக்கோம் இன்னும் யாராவது ஒரு சுமங்கலிய அழைச்சுட்டு வாங்க மேனகைக்கு ஆலம் சுத்தணும்… இங்க எல்லாம் கல்யாணம் ஆகாத சின்ன பொண்ணுங்களும் தாலி இழந்த வயசானவங்களுமா இருக்காங்க… கொஞ்சம் வெளில இருந்து யாரைவது கூட்டி வாங்க அண்ணி…!” என உறவு முறை பெண் கூற…

 

இந்நேரத்துல சுமங்கலிக்கு நான் எங்கடி போவேன்…இந்த அர்த்த ராத்திரியில எவள் வீட்டு கதவை போய் நான்   தட்ட, அதெல்லாம் சரி பட்டு வராது இருக்குறவங்கள வச்சி முடிச்சு விடு புஷ்பா… தையல் நாயகி ஆயசமாக இருந்தது…

 

“ என்ன  அண்ணி  இப்படி சொல்றீங்க  நம்ம பொண்ணு சீரோடும் சிறப்போடும் நிறைஞ்சி வாழனும்ல அதுக்கு அவங்க ஆசீர்வாதம் எல்லாம் கட்டாயம் வேணும் போங்க போய் யாரையாவது கூட்டி வாங்க…!!”என பொறுப்பாக பேசி விரட்ட .. 

 

மகள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பது தான ஒவ்வொரு தாயின் ஆசையும்… எனவே மறுப் பேச்சின்றி வாசல் வரை வந்து விட்டார் தையல் நாயகி…

 

ஆனால் இந்த நட்ட நடுநிசியில் யாரை போய் அழைக்க… தெரியவில்லை… ஊரில் போய் கண்ட நேரத்தில் கதவை தட்டினால் என்ன நடக்கும் என்பது அவருக்கும் தெரியுமே… எனவே தெரிந்தவர்கள் யாரை அழைப்பது என புரியாமல் கையை பிசைந்து கொண்டு நின்று இருந்தார் தையல் நாயகி…

 

அவரது தயக்கம் புரிந்து தான் என்னவோ கடவுளாக பார்த்து ஒரு சுமங்கலியை அனுப்பி வைத்தார்… இருட்டில் முகம் சரியாக தெரியாவிட்டாலும் பட்டு சேலை பளபளக்க கழுத்து நிறைய  நகை நட்டும் தலை நிறைய மல்லிகை பூவும் நெற்றி வகுட்டில் வைத்த தாழம்பூ குங்குமம் என மனம் நிறைந்த மகாலட்சுமி போல் வந்து நின்றாள் அவள்…!!எவள் ??வேற யாரு நம்ம திலோத்தமா தான்…

 

புடவை கட்டிய பொன் மானாய் கண்முன்னால் வந்து நின்ற திலோத்தமாவை பார்த்து வாயை பிளந்து நின்றார் தையல் நாயகி…

 

வாசல் வரை வந்து விட்டு தயக்கத்துடன் தையல் நாயகியை பார்க்க அவரோ… அவளை தான் ஏற இறங்க பார்த்து கொண்டு இருந்தார்…

 

அண்ணி சுமங்கலி பொண்ண கூட்டி வர எவ்வளவு நேரம் என்றப்படி வாசல் வரை வந்தார்  புஷ்பா… 

 

இங்க நின்னு யாரை அப்படி வெறிச்சி பார்த்துட்டு இருக்கீங்க அண்ணி என்று அவர் பார்வை உணர்ந்து கேட்க… 

 

இவள் எதுக்குடி இந்த நேரத்துல இப்படி மினிக்கி கிட்டு வந்து இருக்கா என்று நாயகி  வாயைக் கோண

 

வருவது கிரிதரன் மனைவி என்பதை கண்டு கொண்டவர் ம்ம் நீங்க போட்ட பத்தாயிரம் புள்ளி கோலத்துக்கு எத்தனை புள்ளி கேட்டு போக வந்து இருப்பாள் அட ஏங்க அண்ணி  வீட்டுக்கு வந்த புள்ளையா வாசல்ல நிக்க வச்சி பேசிட்டு இருக்கீங்க   

அடடே வாமா நீ நம்ம கிரிதரன் பொண்டாட்டி தான ஏம்மா நாத்தனார் நலங்குக்கு  இவ்வளவு தாமதமாவா  வரத்து… இந்த வீட்டு பொண்ணு நீ, நீயே இவ்வளவு தாமதமா வந்தா எப்படி சரி சரி இப்போவாது வந்தியே வா… சீக்கிரம் நல்ல நேரம் முடியறதுக்குள்ள உன் நாத்தனார்க்கு நலங்கு வைக்கணும் என்று திலோ வை அழைக்க…

 

அவளோ பதில் ஏதும் பேசாது தையல்நாயகியின்  முகத்தை பார்த்தப்படி கையை பிசைந்து கொண்டு நிற்க…

 

 அவரோ வா என்றும் அழைக்கவில்லை போ என்றும் விரட்டவில்லை…அமைதியாக அவளை அளவெடுத்து கொண்டு இருந்தார்… 

 

அட என்னமா உன் மாமியார பார்த்துட்டு நிக்கிற… நேரம் ஆச்சு சீக்கிரம் வா என கையை பிடித்து இழுத்து சென்று விட்டார்…

 

எங்கே தன்னை தையல் நாயகி தடுத்து அவமானப்படுத்தி விடுவாரோ என்று அஞ்சியவளுக்கு அப்படி எதுவும் அவர் செய்யாமல் விட்டது பெருத்த நிம்மதி… 

 

இவள் எப்படி இங்க வந்தாள்??? என வியந்த படி உள்ளே வந்த தையல் நாயகிக்கு எங்கனம் தெரியும்…    தார் குச்சி கொண்டு கிளப்பாத குறையாக இங்கே அனுப்பி விட்டதே அவரது அரும் பெரும் மைந்தன் கிரிதரன் என்பது…

 

 தன்னிரக்கத்தில் தனக்குள்ளேயே உழன்று கொண்டிருந்த திலோத்தமாவுக்கு அழைப்பு விடுத்தான் கிரிதரன்… அவளுக்கு அவன் எண் தெரியாது…எனவே இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று யோசித்தவள் அழைப்பை எடுக்க தயங்கிட அதுவோ… அணைந்து மீண்டும் மீண்டும் விடாமல் அடித்து கொண்டே இருக்க… 

 

இப்படி இடை விடாமல் அடித்து அலப்பறை கூட்டும் போதே தெரிந்து விட்டது அழைப்பது யார் என்று… எடுக்கலாமா வேணாமா எடுக்காட்டி விடமாட்டான் என்பதை அறிந்தவள் ஃபோனை  உயிர்ப்பித்து காதில் வைக்க… இச் இச் இச் ஒரே முத்தம் … அப்பக்கம் கொடுத்த முத்தத்தில் இப்பக்கம் எச்சில் தெறிக்க… கூசி சிலிர்த்து போனாள் பெண்ணவள்… இதை அவள் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை… எதிர்பார்க்கா முத்தச் சத்தத்தில் கன்னங்கள் சிவக்க வாய் அடைத்து போனவளை உசுப்பி விட்டது கிரிதரனின் குரல்…

 

“என்னடி பொண்டாட்டி அத்தான் ஃபோன்ல கொடுத்த முத்தத்துக்கே மூச்சு முட்டி போச்சா… ஒய் என்ன சத்தத்தையே காணோம்??? மௌனமா இருக்கிறத பார்த்தா அப்படி தான் நினைக்கிறேன்…!!”

 

“டி பொண்டாட்டி இங்க செமயா குளிருது… நீ பக்கத்துல இருந்தா உன்னை அணைச்சுகிட்டு இருந்து இருக்கலாம்… அதுவும் ஒரே போர்வைக்குள்ள இரண்டு பேரும் ட்ரெஸ் எதுவும் போடாம… அணைச்சுகிட்டு இருந்தா எப்படி இருக்கும் ப்பா நினைக்கும் போதே உடம்பு முறுக்குதுடி பொண்டாட்டி… எனக்கு வந்ததுல இருந்து உன் நினைப்பாவே இருக்கு எப்போடா தனியா பார்ப்போம்னு இருக்கு… ஏய் எல்லாம் பெருசா ஆகிடுச்சாடி… அப்போ எல்லாம் பிஞ்சா இருந்தது எல்லாம் பழுத்து இருக்கும் இல்ல… சைஸ் என்ன…?? என்ன வெக்கமா விடு நானே புடிச்சு என் கையால எடைப்போட்டு பார்த்துக்கிறேன்… இப்போ என்னடி ட்ரெஸ் போட்டு இருக்க… தனியாவா இருக்க நான் வீடியோ கால் வரவா ஃப்ரீயா பேசலாம்…!!”என மயக்கத்தில் கிரிதரன் பேசி கொண்டு இருக்கும் போதே…

 

“டேய் கிரி இன்னும் மேளக்காரங்க வரலையாம் மாமா உன்னை ஃபோன் பண்ணி என்னனு கேக்க சொன்னார்…சமையல் காரர் எதோ பொருள் விட்டு போச்சு நான் சமைக்க மாட்டேன்னு குதிக்கிறார் அதையும் என்னனு பார்த்து கேட்டு வாங்கி கொடுக்க சொன்னார்… அப்புறம் இந்த பூ அலங்காரம் பண்றவங்க நீ வந்தா தான் அடுத்த வேலையே செய்வேன்னு  அடம் பிடிக்கிறாங்க என்னனு வந்து  பாருடா…!!” என கிரிதரனை அழைக்கவும் சைக்கு ஐஞ்சு வருஷம் கழிச்சு வந்து இருக்கானே பொண்டாட்டி கூட தனியா இருக்கட்டும்னு விடுறாங்களா… போடா பொறாமை புடிச்ச போலர் பியர் பின்னாடியே வரேன்… என சலித்து கொண்டவன்…

 

“சரிடி பொண்டாட்டி ஆனது ஆச்சு அஞ்சு வருஷம் பொறுத்துக் கிட்டோம் இன்னும் ஒரு நாள் தான தங்கச்சி கல்யாணம் முடியட்டும் அதுக்கு அப்புறம் அத்தான் உன் முந்தானைய விட்டு எங்கையும் போக மாட்டேன்… அதுவரை கொஞ்சம் அட்ஜஸ்ட்  பண்ணிக்கோ… சரி அப்புறம் சொல்ல மறந்துட்டேன் பாரு எதுக்கு கூப்பிட்டேனோ அந்த விஷயத்தையே சுத்தமா மறந்துட்டேன்… நீ என்ன பண்ற கிளம்பி நேர எங்க வீட்டுக்கு போ அங்க மேனகைக்கு நலங்கு வைக்க போறாங்க… நீயும்  போய்  உன் நாத்தனார்க்கு நலங்கு  வைக்கிற புரியுதா… அத்தானுக்கு அசத்தலா ஒரு கிஸ் கொடுத்துட்டு சீக்கிரம் கிளம்பி போ பார்க்கலாம்…!!”என அதுவரை ரெமோவாக பேசி கொண்டு இருந்தவன் திடீர் என்று அம்பியாக பேச…

 

முதலில் அவன் காதல் பேச்சில் கட்டுண்டு அமைதியாக கிடந்தவள் பின்பு அவன் கூறியதை கேட்டு மயக்கத்தில் இருந்து விழித்து கொண்டு… 

 

“என்ன நினைச்சிட்டு உங்க வீட்டுக்கு என்னை போக சொல்றிங்க என்னால எங்கையும் போக முடியாது…போகவும் மாட்டேன்…!!”என ஆவேசமாக எடுத்தெறிந்து பேசிட… 

 

“ஏய்ய் என கத்த போனவன் பின்பு நீண்ட மூச்சை எடுத்து விட்டு… இங்க பாரு திலோ நீ என் பொண்டாட்டி நீ போய் என் தங்கச்சி அதான் உன் நாத்தனார் சடங்க எடுத்து செய்யுறது தான் முறை ஆனால் இப்படி நீ கலந்துக்கவே மாட்டேன்னு சொல்றது படிச்ச பொண்ணு உனக்கு கொஞ்சம் கூட நல்லா இல்லை பார்த்துக்கோ… அங்க போறதுல அப்படி என்னடி பிரச்சனை உனக்கு ஆஹான் சொல்லு…!!” என்ன தன்மையாக பேச முயன்றும் அவன் குரலில் சிறு எரிச்சல் எட்டி பார்க்க தான் செய்தது…

 

“உங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா… எதை வச்சி என்னை அங்க போக சொல்றிங்க… உங்க அம்மா பேசுனது எல்லாம் என்னால மறக்க முடியல… என் கழுத்தை பிடிச்சி வெளியே தள்ளுன அந்த வீட்டு வாசல எப்படி என்னால மிதிக்க  முடியும்… அதை கொஞ்சமாவது யோசிச்சு பார்த்திங்களா… என் கண்ணு முன்னாடியே எங்க அம்மாவை தூக்கி வெளியே எறிஞ்சாங்க… இன்னும் என் கண் முன்னாடி அந்த காட்சி நினைவில் இருக்கு… கொஞ்சம் கூட மனசுல ஈரமே இல்லாம உங்க அம்மா நடந்து கிட்டாங்க…அவங்க முன்னாடி எந்த முகத்தை வச்சி போய் நிற்க சொல்றிங்க…??” என வெடித்து சிதறியவளுக்கு அந்நாளின் தாக்கம் இன்னும் குறையவே இல்லை… 

 

எந்த பதிலும் இல்லை அப்பக்கம் நீண்ட மௌனத்திற்கு… “இங்க பாரு திலோ பழசையே நினைச்சுட்டு இருந்தா யாருக்கு என்ன  இலாபம் நீ வருத்தப்படறதாலோ இல்ல கோபப்படுறதுனாலோ ஏதாவது மாறப்போகுதா… இல்லையே அதுக்காக உன்ன பழசை மறந்துவிடு மன்னித்துவிடு என்று சொல்ல வரல… உன்னால எப்ப மன்னிக்க முடியுமோ  அப்ப மன்னிச்சிக்கோ… அதுவரை பழசையே பிடிச்சிட்டு தொங்கிட்டு இருக்காதன்னு தான் சொல்றேன்…!!” என்றதும் இப்பக்கம் மௌனம் ஆகும் முறை  திலோத்தமாவிற்கானதாகியது…

 

 “உனக்கு எங்க அம்மா கூட தான சண்டை… அவங்க கிட்ட பேசாம இரு இல்ல அவங்க கிட்ட நியாயம் கேட்டு  சண்டை போடு என்ன வேணாலும் பண்ணு  ஆனால் மேனகா என்னடி பண்ணா…?? அவளை ஏன் தள்ளி வைக்கிற… இங்க பாரு திலோ அவளும் உன்ன மாதிரி ஒரு அப்பாவி  பொண்ணு தான்… அதிர்ந்து கூட பேச மாட்டாள் ஆசைப்பட்டதை கூட வாயை விட்டு கேக்க  தெரியாது…

 

 இங்க பாருடி நமக்குள்ள எது வேணாலும் நடந்துட்டு போகட்டும்… ஆனா என் தங்கச்சி கல்யாணத்துல அது சிறு குறையா கூட வந்து நிக்க கூடாது… நீ உடனே கிளம்பி போற…

 

 இப்படி போ போ ன்னு சொன்னா  எப்படி உங்க அம்மா என்னை உள்ள விடுவாங்களா அத்தான் கொஞ்சம் கூட யோசிச்சு பேச மாட்டிங்களா… என்றவளுக்குமே மேனகை திருமணத்தில் கலந்து கொள்ள ஆசை தான்…

 

 பேசி பழகாவிடிலும்  சிரித்து மகிழாவிடிலும் அவளின் சுக துக்கத்தில் பங்கு கொள்ள விட்டாலும் அவளுக்காக கண்ணீர் சிந்தும் ஓர் அன்பு பிறவி  மேனகா மட்டுமல்லவா… ஆனால் தையல் நாயகியின் வாய்க்கு பயந்தே போக தயங்கினாள் …

 

ப்ச் என்ன திலோ இது பசங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்குற டீச்சர் மாதிரியா பேசுற… அம்மா திட்டு வாங்க ஆட்டுக்குட்டி திட்டு வாங்கன்னு சொல்லிக்கிட்டு… உனக்கு அந்த வீட்டுக்குள்ள போக மட்டுமில்ல அங்கயே என்ன செய்யவும் முழு உரிமை உனக்கு  இருக்கு… உரிமைக்காரி போனா யார் என்ன சொல்ல முடியும்… அப்படியே யாராவது சொன்னா என்ன இது என் புருஷன் வீடு நான் வருவேன் என்னை யார் கேக்க முடியும்ன்னு தைரியமா பேச வேண்டாமா…?? படிச்சவ நீ உனக்கு சொல்லியா தரணும்… ஒழுங்கா கிளம்பி போ… ஆன் அப்புறம் அப்படியே சிம்பிளா போய்டாதடி… உள் பீரோவுல உன் பச்சை கலர் பட்டு இருக்குல்ல அதை கட்டிக்கோ அப்பிடியே உன் மாமனார் பீரோல இருக்கிற நகையை போட்டுக்கோ… சும்மா மாட்டேன் கீட்டேன்னு அடம் பிடிக்காத…  உன் மாமனார் மேல மரியாதை இருந்தா  சொன்னதை செய்… கொஞ்சமே கொஞ்சோண்டு இந்த அத்தான் மேல அபிப்ராயம் இருந்தா நீ போட்டுக்கோ அவ்ளோ தான் சொல்ல முடியும்… இங்க வேலை நிறைய இருக்கு இல்லாட்டி நானே வந்து எல்லாத்தையும் என் கையால போட்டு விட்டுருப்பேன்… என்ன நான் போட்டு விட வரவா இல்லை நீயே எல்லாத்தையும் போட்டு கிளம்பி போறியா…என திரும்பவும் ரெமோவாக மாறியவனை கண்டு தலையில் அடித்து கொண்டாள் திலோ…

 

போட்டு போய் தொலையுறேன் வைங்க… என்றவளுக்கு எங்கே இல்லை என்றால் நிஜமாக கிளம்பி வந்து விடுவானோ என்கிற அச்சம் தான்…

 

 கிரிதரன் சொன்னபடியே திலோ சென்று மேனகையின் நலங்கில் கலந்து கொண்டாள்…அவள் வரவு மேனகைக்கு எவ்வளவு சந்தோசத்தை கொடுத்தது என்று வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை… திலோத்தமாவின் கைகளை பிடித்துக் கொண்ட மேனகை தேங்க்ஸ் அண்ணி என ஆனந்த கண்ணீரோடு சொன்னவள் அவளை ஆரத்தழுவிக் கொண்டாள்…

 

 அதுவரைக்கும் திலோத்தமா மனதில் இருந்த சிறு சஞ்சலம் மறைந்து யார் என்ன சொன்னால் எனக்கு என்ன நான் என் நாத்தனார் மேனகைக்காக வந்து இருக்கிறேன்… என்று எண்ணியவளுக்கு புருஷனை மட்டும் புடிக்காது… இதையெல்லாம் எங்க போய் சொல்ல…

 

சடங்கு முடிந்து மேனகையை திருமணத்திற்கு தயாராகி வரச்சொல்ல கழிவறை சென்று வருவதாக சொல்லி சென்ற மகளை காணாமல் தேடி சென்ற தையல்நாயகிக்கு ஏற்பட்ட பெரும் அதிர்ச்சி  அவள் தம்பி சீராளனோடு மேனகை இருந்தது என்றால் அதை விட பேரதிர்ச்சி   என்னவென்றால்  ஆடைகளின்றி தன் மகள் மேனகை சீராளனோடு இருந்தது தான்… 

  •  

2 மரபே பிழையாம்

கில்மா விடியோவுக்கு வெறுத்து கிடந்தவளை, விடுவேனா பார்! என்பது போல சரத் காலிங்..

ஐயையோ! இன்னும் என்ன பேசுவாரோ?! இதுவரை கொடுத்த அதிர்ச்சிகள் போதும்பா போதும். காதலாவது?! கல்யாணமாவது?! ஆள விடுங்கடா சாமிகளா! போனை பிளைட் மோடில் போட்டு விட்டு தூக்க மாத்திரை முழுங்கி படுத்துவிட்டாள் வசுமதி.. தப்பித்தல் இஸம்.

இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் பணிசுமைகள் பற்றி கவலை படாது எந்திரித்தவளுக்கு இன்னும் சரத்தின் வாசம் தன்னுடலில் வீசுவது உணர்ந்தாள்.

மதியமாய் எழுந்ததால் பசித்தாலும் முதலில் குளிக்கணும் என்று தயாரானாள். அதற்கு முன் செல் பார்ப்போம் என்று அதன் நிலையையும் மாற்றி பார்க்க.. ஏகப்பட்ட செய்திகள்.. லன்ச் க்கு வீட்டுக்கு வரேன்.. உன் ரூம் மேட்டை எங்காச்சும் அனுப்பிவிடு. ஜஸ்ட் அரை மணிநேரம்.. சாப்பாடுலாம் வேணாம் நீ தான் வேணும்.. உன்னை அப்படியே சாப்பிடுவேன்..

சரத் இரக்கமே இல்லாது விளாடியிருந்தான். நல்ல நேரம் ரூம் மேட் காலி பண்ணிட்டு போனதை சொல்லல..

என்ன இப்படி பண்றார்? யார் கிட்டே சொல்றது?!! அம்மா தான் பொண்ணுக்கு முதல் தோழி சொல்வாங்க.. இவளுக்கு இந்த சொலவடை செல்லாது. அந்தம்மா ஸ்கூலில் எப்படி ஹெச் எம் யோ அதே போல தான் கட் அண்ட் ரைட்டா பேசும். இவளின் அண்ணன் வார்த்தையை கூட லேசா காதில் வாங்கும். வசுமதி பேசினால் உனக்கு ஒன்னும் தெரியாது கம்முன்னு கிட.. ன்னு போயிரும்..

மகளுக்கு தாய் செய்த ஒரே நல்ல விஷயம் கிலோ கணக்கில் நகை சேர்த்து வைத்திருப்பதும் கல்யாணத்துக்கு என்று லட்ச கணக்கில் பேங்க்ல சேர்த்து வைத்திருப்பது தான். ஏதாவது ஒன்னு தான் கிடைக்கும்.

எல்லாமே எல்லார்க்கும் எப்போதும் கிடைக்காதுல.

அம்மா இப்படி அளந்து பேசுவதாலோ என்னவோ இவளுக்கும் சகஜமாக பேசும் பழக்கம் வாய்க்கவில்லை. யாருக்கும் ஆமாம் அல்லது இல்லை என்ற சின்ன வார்த்தைகளில் உரையாடல் மட்டுமே வரும்.

சென்னையில் ஒரு என்ஜினீயரிங் காலேஜில் லெக்சரர் வேலை பார்த்துக்கொண்டே பிஹெச்டி முதல் வருட படிப்பில் இருந்தாலும் பேச ஆசைப்பட்டாலும் வார்த்தைகள்தான் வரவில்லை.

சரத்துடன் பழகும் பொழுது அவன் தான் பேசுவான் மெல்லிய புன்னகையோடு அதை காதில் வாங்கி ரசிப்பாள்.. பேசவேண்டும் எந்த உள்ளுணர்வும் தூண்டவில்லை.

இனிமையாய் பேசுகிறான். மரியாதையாய் நடத்துகிறான்.
என்னவள் என்பதாய் பதுகாக்கிறான். சரத்தை திருமணம் செய்தால் எதிர்காலம் இலகுவாயிருக்கும் என்றே இந்த ஊமை கோட்டான் லவ் என்று அதை தப்பாக எண்ணி கல்யாணம் வரை சிக்கிக்கொண்டது.

புது நம்பரில் இருந்து போன் வர..
யோசனையுடன் எடுத்தாள் வசு. வேறு எண்ணிலிருந்து சரத் தான் பேசுகிறாரோ என்று பயம். சூடு கண்ட பூனை அல்லவா?!

“ஹலோ”

மேம் என் பேர் சுனிதா..

ம்ம்ம்

இன்ப ராணி மேம் சொன்னாங்க உங்க பிஜில வேகண்ட் இருக்கு னு
என் கசினுக்கு அர்ஜன்டா தங்க இடம் வேணும்.. உங்களுக்கு ஓகே தானே..

தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே! என் கற்பை காப்பாற்ற ஒரு ஆத்மாவை அனுப்புவதுக்கு நன்றி தெய்வமே!

இல்ல.. இல்ல

ஓகே மா அனுப்புங்க எப்போ வருவாங்க..

இப்பவே அவங்க என் ஆர் ஐ ஏர்போர்ட் லேர்ந்து அப்டியே உங்க அபார்ட்மெண்ட் வந்துருவாங்க. அட்வான்ஸ் அன்ட் ரென்ட் மேம்..

சொன்னாள். உடனே அவளும் வசுவின் போன் பே க்கு அனுப்பிவிட திருப்தி.

இன்னொன்னு மேம்..

இனி நான் பார்த்துகிறேன் சுனிதா.. பை .. வைத்துவிட்டாள்.

சும்மா வள வளன்னு மனுஷர் ஏன்தான் இவ்ளோ பேசுராங்களோ?! சடைத்தும் கொண்டாள்.

கொஞ்சம் பொறுத்திருந்தால் இன்னொரு அதிர்ச்சிக்கும் ஆளாகி இருக்கமாட்டாள் வசுமதி.

ரோஜாவுக்கு நன்றி சொல்லும் நீங்கள் முட்களுக்கும் நன்றி சொல்ல பழகுங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு நகர்வும் ஒவ்வொரு அனுபவம். இன்பம் இனிப்பென்றால் துன்பம் கசப்பு அவ்வளவே! நாக்குக்கே ஏழு சுவை தேவையெனும் போதில் அனுதினமும் அலுக்காமல் ஓட நவரசங்களும் வேண்டும் அல்லவா!

குளித்து விட்டு ஒற்றை நைட்டியில் மீல்ஸ் ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டிருந்த வேளையில் காலிங் பெல் அடித்தது.

ரூம் மேட்டாக இருக்குமோ?! எச்சில் கையோடு கதவு திறக்க .. சாட்சாத் இவளின் ஷியாம் சரத் தான்

மாட்டிக்கிட்டான் மைனரு! நிலையில் வசுமதி.

சுமி டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?! கோழியை அமுக்குவது போல நேற்று போலவே டர்ட்டியா ஒரு அணைப்பு. கொல்றானே! 100க்கு கால் பண்ணுவோமா?! வசு யோசிக்க.. இன்னைக்கு மூணு டயமாச்சும் செய்யணும்.. உயிர் பாதுகாப்பு உறையோடு சரத்..

பாதி பசியாறி கொண்டிருந்தவளுக்கு இனி ஒரு கவளம் உள்ளே போகுமா எனும் நிலை.

என்னங்க சாப்பிட்டுட்டு வரேன்.. சும்மா சாக்கு வைத்தாள்.

நீ சாப்பிடு ஒய்ஃபி உன்னை நான் சாப்பிடுறேன்.. சரத் பல்லை காட்டி கண்ணடிக்க… மாட்டு பல்லு போல இருக்கே! இத்தனை நாள் கவனிக்கலயே! வசுவுக்கு நடப்பு கவலை தாண்டி புதுசாய் ஒன்னு முளைத்தது..

பெண்கள் அழகை ஆராதிப்பவர்கள் தான்.. அதுக்கும் நேரம் காலம் இல்லையா!

காதலனை புறக்கணித்து சோறே சொர்க்கத்தின் வாசல் என்பதை போல கூட்டு பொரியல் ரசம் மோர் என்று எல்லாத்தையும் பிரசாதம் போல தட்டில் கொட்டிக்கொண்டிருக்க..

செல்லம் எதற்கு சோபா? நான் இருக்கும் போது என்று அழகாய் மடிமேல் அமர்த்தி.. இடையை வளைக்க.. எந்த சுவற்றில் தலையை முட்டிக்கொள்ளலாம்?! எரிச்சலில் வசுமதி.

பிடிக்கல! அவ்ளோதான். அதற்கு என்ன சொல்வது தெரில.. என்னை மெல்ல ஆட்கொள்! கண்ணோடு கண் பாரு.. மெல்ல எனக்கு உன்னை தர வசதி பண்ணி கொடு.

இப்படி பரக்காவெட்டி போல அலையாதே! உன் தேவையை கூட புரிய வை.. அதும் இப்போது வேணாம் கல்யாணத்துக்கு அப்புறம் புரிஞ்சிக்க சரத்.. நீ உண்மையில் ரொம்ப நல்லவன்.. ஏன் இப்படி உன்மேலான என் நல்லெண்ணகளை கெடுத்துக்கிற!

வெளியில் பேச வசதியாய்… தத்தி தத்தி தன் மனதுக்குள் பேசி ஒத்திகை பழக.. அவனோ சட்டென்று ஜிப் இறக்கி.. உள்ளே ஒன்னும் போடலியா ஹனி என்று கேட்டு வராத வெட்கத்தை வரவழைத்து விட்டான்..

கொடுமைக்காரா! முனகும் போதே வலிக்க வலிக்க கொய்யா கனிகளை பிசையவாரம்பிக்க, சுகத்துக்கு பதில் வலித்தது.

பிடிக்காவிட்டால் காதலன் தொட்டாலும் ரேப் விக்டிம் போல எழுந்து ஓடும் உணர்வுகள் வரும்.

ப்ளீஸ்.. வெய்ட் நான் இப்ப வந்துடுறேன்.. பெட் ரூம் போயிரலாம்.. ஏமாற்றப்பார்த்தாள்.

நீ சாப்பிடு நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணாம என் வேலையை பார்க்கிறேன்..

உச்சியில் நெற்றியில் கண்ணில் காதில் கன்னத்தில் மூக்கில் உதட்டில் என்று குட்டி குட்டி முத்தங்கள். மெல்லிய இடங்களில் மீசையின் உராய்வு பட்டு உடம்பு பூரா கூசி போனது வசுமதிக்கு.. ஆனால் அவனோடு கூடும் உணர்வு மட்டும் வரவேயில்லை. வேணாம்! விட்ரு! ப்ளீஸ் தான் தொண்டை வரை நின்றது. மேற்கொண்டு உடலில் ஊறும் கைகளை தள்ளிவிட்டு..

“ரூம் மேட் இப்ப வந்துருவாங்க. வேணாம் சரத்.. ப்ளீஸ்”

ம்ம்ம்.. சரி.. அவனுக்கு எங்கே காது கேட்டது?! கைகளும் கண்களும் வருங்கால மனைவியின் அங்கங்களை ஆர்வமாய் என்ன செய்யலாம்? எப்படியெப்படி செய்யலாம்? வித விதமாய் விபரீத கற்பனையில் ஆழ்ந்து வாகாய் பல்படாத பால் கொழுக்கட்டைகளை உருட்டிக்கொண்டிருந்தது.

“சரத் விடுங்கப்பா.. காம்பர்ட்டா இல்ல… ப்ளீஸ்.. “அவள் மடியிலிருந்து எந்திருக்க.. சட்டென்று தன்னை குறுக்கி மிளகு சைசிலிருந்த காம்பை முன்னோக்கி முகத்தை குனிந்து கவ்விவிட்டான். அவனையும் தாண்டி ஜெர்க்கானாள் வசுமதி.

ஆயிரம் உணர்வு நரம்புகள் முடிச்சு பகுதி அது தொட்டாலே பற்றும் தன்மை கொண்ட இடம் அது.. இதோ காதலன் கடிச்சி கவ்வியும் கூட தலையை தள்ளி விட தான் கைகள் நீண்டது வசுவிற்கு.. தலையையும் தொட்டுவிட்டாள்..

எதற்கு இப்படி இயல்புக்கு மாறாகவே நாம் நிக்கணும். அவன் தான் இனி உனக்கான ஆண்.. உனக்கு இஷ்டமில்லை இன்பமில்லை என்றாலும்.அவன் ஆர்வமாய் அணுகுகிறான்.. இந்த உடல் மூலம்.அவனுக்கு.ஏதோ ஒரு இன்பம் கிடைக்குது.. போ அவனுக்காவது சந்தோசம் போவட்டும் விட்டு விட்டாள். சக கூட்டாளியாக அவளும் ஒத்துழைப்பு கொடுக்கணும்.. இது இயல்பு. ஆனால் அவ்வாறில்லாது அவனை செய்ய விட்டு வேடிக்கை பார்ப்பது என முடிவெடுத்தாள்.

இவளின் “இது பிடிக்கவில்லை” என்ற எண்ணத்தை மட்டும் சற்று தள்ளிவைத்தாள்.

கைகளை கழுவிவிட்டு சரத்தின் உணர்வுகளை பார்வையாளராக பார்க்க, ஒற்றை காம்பை கவ்வியவனின் ஆசைகள். எச்சிலாய் அதன் மீதே கொட்ட.. மூச்சு வாங்கினான்.. மற்றொரு மேட்டில் அவனின் விரல்கள் மிளகை சுண்டைக்காய் சைசுக்கு மாற்ற முயன்று கொண்டிருந்தது. வியர்த்தமான முயற்சி வசுவின் மைண்ட் வாய்ஸ்..

இன்னும் பெருசா வேணும்டி.. புலம்பினான். முத முத இதை சப்புறேன்.. நல்லாருக்குடி.. இதை கொஞ்சம் தொட்டு பாரேன்..

கீழே உடையை துளைத்து வெளிவருவது போன்றிருந்த பொருளை கைகளை இழுத்து வைத்து விட.. பெருசாத்தான் இருக்கும் போல.. நினைத்துக்கொண்டாள்..

தடவிக்கொடுடி.. என் கொடுமையே! செய்தாள்..

சோபாவிலேயே கிடத்தி.. நைட்டியை கழற்ற முனைய.. இவளுக்கு நிஜமாவே அந்நேரம்.வெட்கம் வந்துவிட்டது..

இடுப்பு வரை மட்டுமே உயர்த்தி விட்டு அவன் தொடைகளை முத்தமிட்டவாறே நடுவில் வர பார்க்க .. பெண்மையின் இயல்பில் தானாய் கால்கள் ரெண்டையும் பின்ன.. தடை நீக்கி தேனடைக்குள் முகம் வைக்க… ஆத்தா மீது சத்தியம் வசவுக்கு இப்பவும் கூச்சம் தவிர காதல் உணர்வுகள் முகிழ்க்கவில்லை.

அவனுக்கு வேணும் சகிச்சி கொடுக்கிறோம் தியாகி மனப்பான்மையில் இவள்.

மேலில் ஜிப் திறக்கப்பட்டு வி ஷேப்பில் பாதி தெரிந்தும் தெரியாத மாறியும் இருந்த வெண்ணெய் தனங்களை வெளியில் போட்டு அழகு பார்த்தவன்.. கீழே கருப்பு புல்வெளியில் மறைந்திருந்த பவள முத்துகளை நாவால் நெருடி சுவைத்தெடுத்தான்.

அந்த இடமே நீர் சேர்ந்து எப்பவும் அழுக்காயிருக்குமே.. நைட்டி துணியாலேயே துடைத்தும் கொடுக்க..

அப்படியே இருக்கட்டும் இதான் டேஸ்ட்டா இருக்கு.. திரும்ப திரும்ப சுர சுர நாக்கால் இழுக்க.. பெண்மையின் மென்மையான ஓரங்கள் ரம்பத்தால் இழுக்கப்படுவது போல லேசு வலி..

மெதுவாப்பா! இடுப்பை இழுக்க.. மறு நொடி .. அதே வாயால் அவளுக்கு நாக்கோடு நாக்கு இழுத்து தன் எச்சிலை அவள் வாய்க்குள் அனுப்ப.. திணறிப்போனாள் வசுமதி.. இவ்ளோ தூரம் விட்டது தப்போ?!

அடுத்த நொடி தன் முக்கோண பெட்டகத்தின் வாசலில்சரத்தின் உறுப்பு ஏறி நிற்க.. உள்ளே போகவில்லை.. போனவரைக்கும் வலி கொடுக்க அஆஆஆ.. கத்தியே விட்டாள். உடல் வேறு மனம் வேறு அல்ல.. ஒன்றே நிஜம்.

இவளின் ரியாக்சனுக்கு பயந்து போன சரத் .. ஏதாவது போட்டுட்டு செய்யவா சுமி?! கேட்ட நேரம்..

காலிங் பெல்.. ரூம் மேட் தான்..

வாரிசுருட்டி எழுந்தவள்.. கண்றாவியா கலைந்து கிடந்த தலை முடியை கொண்டை போட்டு.. நைட்டியை திருத்தி வெளியே ஓட முயற்சித்தவளை.. சரத், இழுத்து அணைத்து உதட்டில் மென் முத்தமிட்டு “ஐ லவ் யூடி அம்மு” என்று ஒதுங்கி கிடந்த பொட்டை எடுத்து புருவ மத்தியில் வைத்து விட..சுனாமி போல வாரி அணைக்கும் கொள்ளை காதல் வந்தது. இத்தனை நேரம் கட்டிலில் முட்டி மோதி வராதது. இதென்ன வினோதம்.

உண்மையில் காதல்ன்னா என்ன?!

நீங்க உள்ளேயே இருங்க சரத்..
ஹாலில் இருந்த சின்ன கண்ணாடியில் பார்த்து கொண்டே கதவை திறக்க.. சிலையானாள்.

நல்ல உயரம் ஒல்லியான உறுதியான தேகத்தில் செவ செவ ன்னு நிறத்தில் பெட்டி பேகோடு வாலிபன்..

அப்போ ரூம் மேட் என்றது பெண்ணில்லையா?!

ஹாய்! மை நேம் விவியன் ஜார்ஜ் பிரஃம் அமெரிக்கா.

எதிர் பதிலில்லை இன்னும் சிலை உயிர் பெறவில்லை.

போலாம் ரைட்.. ம்ம்ம்ம்

 

  •  

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 29

“நீங்க சொல்றதை நான் நம்ப மாட்டேன் பொய் சொல்லுறீங்களா எங்களை போல பணம் இருக்க பெரிய மனிதர்களை பார்த்து காசு பிடுங்க பார்க்குறீங்களா இந்த மாதிரி எத்தனை போட்டோ வேணும் நான் ரெடி பண்ணித்தரட்டுமா?” என்று அவன் தந்தையின் மேல் உள்ள நம்பிக்கையில் குமுதாவிடம் எரிந்து விழுந்தான்.

“நான் சொல்றது உண்மை தம்பி உங்கம்மா இறந்து போன கொஞ்ச நாளுல என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு இதோ அவரு கட்டின தாலி” என்று குமுதா அவர் கழுத்தில் போட்டிருந்த தாலியை எடுத்து காட்டியதும் தென்னரசுக்கு கால்கள் தரையில் நிற்க முடியாமல் தடுமாறியது தூணை பிடித்து நின்றுக் கொண்டான்.

“ஆமா அண்ணா அம்மா சொல்றது உண்மைதான் எங்க வீட்டுக்கு தினமும் நைட் வந்துட்டு காலையில போயிடுவாரு என் மேல பாசமாத்தான் இருந்தாரு ஆனா இந்த ஒரு மாசமா அவரு வரவேயில்லை போன் போட்டா சுவிட்ச் ஆஃப்னு வருது. போன வாரம் நானும் அம்மாவும் இங்க வந்தப்ப அப்பா வீட்டுக்குள்ள இருந்துக்கிட்டே வீட்ல வேலை பார்க்கறவங்ககிட்ட அப்பா வீட்ல இல்லைனு சொல்ல சொன்னாரு ஆனா அப்பாவோட காரு இதோ இந்த இடத்துலதான் இருந்துச்சு அப்பாவை பார்க்காம நான் அழுதுக்கிட்டே போனேன் தெரியுமா அண்ணா” என்றாள் அரசி சிறு கேவலுடன்.

“நான் சொன்னா நம்புவியா தென்னரசு?” என்று அங்கே கை காப்பை ஏத்திவிட்டுக்கொண்டு வந்தான் ராயன்.

“அ.அண்ணா அப்பா தப்பு பண்ணியிருப்பாருனு என்னால நம்ப முடியலை நம்பாம இருக்கவும் முடியலை” என்றான் தவிப்பாக.

“உன் தோட்டத்து வீட்ல போய் பார்த்துட்டு வா உன் அப்பாவோட லீலைகளை” என்றான் அவன் காதுக்கு மட்டும் கேட்கும்படி.

தென்னரசு தோட்டத்து வீட்டுக்கு வேகமாய் நடந்துச் சென்றான். வீட்டு பக்கம் சென்றதும் ஜன்னல் வழியே கண்ட காட்சியில் உறைந்து நின்றான். வேலைக்காரி சரசு பாதி ஆடையில் ராஜமாணிக்கத்துடன் நெருக்கமாய் இருந்ததை கண்டு “ச்சே” என்று சுவற்றில் கையை குத்திக்கொண்டான் தந்தையின் மேல் வைத்திருந்த மரியாதை சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது.

சுவற்றில் சாய்ந்து அமர்ந்து “அம்மா” என்று வாயை பொத்திக்கொண்டு அழுதான் தாய் இறந்த காரணம் தெரிந்தால் இன்னும் என்ன பாடுபாடுவானோ தெரியவில்லை. அப்போதே கதவை உடைக்க எழுந்து நின்றவனின் கையை பிடித்துக்கொண்டான் ராயன். தென்னரசு ஆத்திரத்தில் முட்டாள் தனமாக முடிவு எடுத்து விடுவான் என்று தென்னரசு பின்னே சென்றிருந்தான்.

“இப்போ உன் அப்பாவை பத்தின இன்னொரு ரகசியத்தை பத்தி தெரிஞ்சுக்கற நேரம் வந்துருச்சு” என்றவனோ ராஜமாணிக்கம் வீட்டில் வேலை பார்க்கும் முனியனை கூப்பிட்டான். 

“என்ன இரகசியம் அண்ணா சொல்லுங்க”  என்று கழுத்தை தடவிக்கொண்டு கேட்டான் தென்னரசு. 

தன் மாமன் நீலகண்டனை  ஊர் முன்னால அவமானப்படுத்த எண்ணிய ராஜமாணிக்கத்தை சமயம் பார்த்து அவரை தலைகுனிய வைக்க திட்டமிட்டு காய் நகர்த்தி வந்திருந்தான் தென்னரசு வீட்டிற்கு ராயன். 

“நடந்தது என்னனு சொல்லுங்க முனியன் அண்ணா” என்றான் சிறு அதட்டலோடு.

முனியனோ “தம்பி ஐயாவுக்கு தெரிஞ்சா என்னை கொன்னு போடுவாரு” என்று தலையை சொறிந்தான்.

“இப்ப நீங்க உண்மையை சொல்லலைனா நான் உங்களை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்று பல்லை கடித்துக்கொண்டு  முனியனை மிரட்டி கையை ஓங்கிச் சென்றான் ராயன்.

“அடிக்காதீங்க தம்பி நா.நான் உண்மையை சொல்லிடறேன்” என்றவரோ தென்னரசுவின்  தாய் ராணியை அடித்து கொடுமை படுத்தியதையும் அவரை தள்ளி விட்டு   ராஜமாணிக்கம்தான் கொன்றார் என்பதை கூறியதும் கற்சிலையாக நின்றுவிட்டான் தென்னரசு. 

“உன் அம்மா மேல காதலா இருந்தேன் அவ உன்னை என் கையில கொடுத்துட்டு போய்ட்டா  என்கிட்ட எப்படியெல்லாம் நடிச்சான் அந்த ஆளு” என்று நரம்புகள் புடைக்க கொதித்து பேசினான். ராஜமாணிக்கத்தை அப்பா என்று  பாசமாக அழைப்பவன் இன்று “அந்த ஆளு” என்று பேசும் அளவிற்கு ராஜமாணிக்கத்தின் மீது வெறுப்பு வந்தது. 

“எங்க அம்மாவை கொன்னவனை இப்போதே கொல்லப்போறேன் அண்ணா” என்று மோட்டுவலையில் சொருகியிருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு ஐய்யனார் போல நின்றவனின் கையிலிருந்த அரிவாளை வாங்கிப்போட்டவன் “ஆத்திரப்படலாம் அவசரப்படக்கூடாது உன் சித்திக்கு தெரியும் உன் அப்பம் பொம்பளை பொறுக்கினு… ஆனா உன் தங்கச்சி உன் அப்பன் நல்லவன்னு நம்பிக்கிட்டு இருக்கு… இப்போ நீ உன் அப்பாவோட தவறை வெளியே தெரியப்படுத்தினா… நீ இப்போ எப்படி உன் அப்பாவை பத்தி தெரிஞ்சு துடிக்கிறியோ அதுபோல உன் தங்கச்சியும் அப்பா கெட்டவருனு துடிக்கணுமா! உங்கப்பாவுக்கு தண்டனை கொடு அவருக்கு உயிர் போகக்கூடாது உயிர் போகிற வலியை கொடு ஏன்னா உங்கப்பாவால  பல குடும்பம் பாதிக்கப்பட்டு இருக்கு!” என்றான் அடக்கப்பட்ட கோபத்தோடு.

“நான் தண்டனை கொடுக்குறேன் அண்ணா எங்கப்பாவை பத்தி எனக்கு தெரியப்படுத்தினதுக்கு உங்களுக்குத்தான் கோடி முறை நன்றி சொல்லணும்” என்று மூக்கை உறிஞ்சியவன் ராயனின் கையை பிடித்துக் கொண்டு அழுக ஆரம்பித்தான்.

“டேய் நீ ஆம்பிள்ளைடா இப்படி பொண்ணு போல அழற” என்ற அவனது தோளில் தட்டிக்கொடுத்தான் ஆதரவாக ராயன்.

“அண்ணா அப்பா மேல ரொம்ப நம்பிக்கையா இருந்தேன் என் நம்பிக்கை குப்பையா போச்சு அண்ணா” என்று ராயனின் தோளில் சாய்ந்து அழுதான். அவன் அழுது முடியட்டும் என்று காத்திருந்தவன் அவனது அழுகை நின்றவனுடன் “நாம வந்து ரொம்ப நேரம் ஆச்சு வா போகலாம்” என்று குமுதாவின் பக்கம் வந்து நின்றனர்.

அரசியோ “அண்ணா அப்பா எங்களை பார்க்க வரமாட்டேன்னு சொல்லிட்டாரா இந்த செமஸ்டர் ஃபீஸ் கட்ட முடியாதா?” என்று புலம்பியவளை தோளோடு அணைத்துக்கொண்டவன் “அப்பா ஃபீஸ் கட்டலைனா என்னடா இந்த அண்ணா இனிமே உன் படிப்பு செலவை பார்த்துப்பேன் இனிமே அண்ணாகூட இந்த வீட்டுலதான் இருப்பீங்க நீ சந்தோசமா இருக்கலாம்” என்றான் கண்ணைச்சிமிட்டி.

“ஐ இவ்ளோ பெரிய வீட்ல நான் இருக்கப்போறேனா ஹேப்பி அண்ணா” என்று துள்ளிக்குதித்தாள் அரசி.

“அச்சோ தம்பி அவருக்கு தெரிஞ்சா இங்க எதுக்கு வந்தேனு என்னை கொன்னு போடுவாரு நாங்க கிளம்பறோம். இவ அப்பாவை பார்க்கணும்னு அடம் பிடிச்சா அதான் கூட்டிட்டு வந்தேன்” என்றார் குமுதா  தயங்கியபடியே.

“சித்தி வீட்டுக்குள்ள போங்க அவரு வந்து என்ன பண்ணுறாருனு நான் பார்க்குறேன்” என்றான் கோபக்குரலுடன்.

“அம்மா அண்ணாதான் போக சொல்றாங்கல்ல வாங்க போகலாம்” என்ற தாயின் கையை பிடித்துக்கொண்டு தென்னரசுவின் வீட்டுக்குள் சென்றாள்.

“அப்போ நான் கிளம்புறேன் தென்னரசு… கோபத்துல ஏதாவது கிறுக்குத் தனமா பண்ணிடாதே உன்னை நம்பி பூங்கொடியும் தியாவும் மட்டுமல்ல இப்போ உன் சித்தி உன் தங்கச்சியும் இருக்காங்க மறந்துடாதே” என்று எச்சரிக்கை செய்து விட்டுச் சென்றான் ராயன்.

நதியாவோ இரவு சமையல் எப்படி செய்வது என்று வெளியே வீட்டு திண்ணையில் அமர்ந்து யோசனையில் இருந்தாள்.

‘இந்த நேரம் எங்க வீட்டுல இருந்தா சித்தி காபி போட்டு கொடுத்திருப்பாங்க காபி போடக்கூட தெரியலை எனக்கு! சமையல் கத்து வச்சிருந்தா இன்னேரம் விதவிதமா சமைச்சு பாலாஜி மனசுல இடம்பிடிச்சிருக்க முடியும்’ என்று கவலைப்பட்டு உட்கார்ந்திருந்தாள். 

பக்கத்து வீட்டு பாட்டியோ “என்ன கண்ணு தனியா உட்கார்ந்திருக்க உன் வீட்டுக்காரனை காணோம் இந்த வீடு கட்டும்போது அடிக்கடி என்கிட்ட வந்து பேசிட்டு நான் சுட்டுக்கொடுக்கும் வடையை சாப்பிட்டு  இரண்டு வடை நூறு ரூபாய் கொடுத்துட்டு போகும் நல்ல குணம் தம்பிக்கு” என்று சிரித்தவரிடம்

“பாட்டி எனக்கு சமையல் கத்துக்கொடுக்குறீங்களா?” என்று பாட்டியிடம் அவசரமாக கேட்டாள்.

“ஏன் கண்ணு உனக்கு சமைக்க வராதா?” என குமட்டில் கைவைத்துக் கேட்கவும்

“தெரியாது” என்று இதழ் பிதுக்கினாள்.

“வீட்ல செல்லப்பிள்ளையா வளர்த்தாங்களோ?”

“ஆமா பாட்டி எங்க வீட்டுல எல்லாருக்கும் நான் செல்லப்பிள்ளைதான்”  

“சமையல் என்ன கம்பசூத்திரமா நான் சொல்லிக்கொடுக்குறேன் வா” என்று வீட்டுக்குள் நதியாவை அழைத்துச்சென்றவர் “சப்பாத்தி மாவு இருக்கா?” என்று கேட்கவும் 

“ஓ நேத்து நைட் மளிகை சாமான் எல்லாம் வாங்கிட்டு வந்துட்டாரு” என்று மாவு டப்பாவை எடுத்து பாட்டியின் கையில் கொடுத்தாள்.

“நான் எப்படி மாவு பிசையுறேன்னு கவனமா பாரு எப்பவும் பொண்டாட்டி சாப்பாடு விசயத்துல தான் புருசனை கட்டிப்போட முடியும். அப்புறம் இப்படி தலை வாராம ஏதோ பத்து நாள் காய்ச்சல படுத்து எழுந்தவ போல இல்லாம விளக்கு வைக்கும் நேரம் குளிச்சிட்டு தலைவாரி பூ வைச்சு கை நிறைய கண்ணாடி வளையல் போட்டு சாய்ந்தரம் வேலை முடிஞ்சு வர புருசனை வரவேற்கணும் நீ என்னமோ இப்படி அழுக்கு முகத்தோட நிற்குற” என்று சலித்துக்கொண்டே மாவை பிசைந்து முடித்தவர் குருமா எப்படி வைக்கணும் என்பதை வெங்காயம் நறுக்கி தாளித்து மசாலா போடுவது முதல் ஒவ்வொன்றாக சொல்லிக்கொடுத்தார் பாட்டி. 

பாலாஜியின் மனதில் எப்படியாவது இடம்பிடிக்கவேண்டுமென்று பாட்டி சொல்லி கொடுத்ததை கற்பூரம் போல கற்றுக்கொண்டாள் நதியா. 

“சரி கண்ணு எங்க வூட்டுக்காரர் எனக்காக சாப்பிடாம காத்திருப்பாரு நான் கிளம்புறேன் அப்புறம் வரேன்” என்று கிளம்பிவிட்டார். 

நதியாவோ குளித்து முடித்து தலைவாரியவள் இப்போ பூவுக்கு என்ன பண்ணறது என்று யோசித்துகொண்டிருக்க வீட்டுக்கு பின்னே மல்லிகை பூத்திருந்ததை பார்த்தது நினைவு வர பூவை பறித்து வந்து பந்தாக கோர்த்து தலையில் வைத்துக்கொண்டு சாமிபடத்துக்கு பூ வைத்து விளக்கு ஏற்றி பாலாஜிக்காக காத்திருந்தாள். எட்டு மணி ஆகியும் பாலாஜி வரவில்லை. 

“ப்ச் போனும் என்கிட்ட இல்லை இப்ப எங்க இருக்காருனு தெரியலையே! தனியா இருப்பாளே எனக்கு ஒரு போன் வாங்கித்தரணும்னு தோனுச்சா என் மாமாவுக்கு” என்று பாலாஜியின் மீது கோபமும் வந்தது நதியாவுக்கு.

ஒன்பது மணியாகவும் நதியாவுக்கு பசி எடுக்க ஆரம்பித்தது. சரி ஒரு ரெண்டு சப்பாத்தி சுட்டு சாப்பிடலாம் என்று சமையல்கட்டுக்குள் சென்றவளுக்கு சப்பாத்தி சாப்பிட விருப்பமில்லை பூரி சாப்பிடணுமென்று தோன்ற கடாயில் எண்ணெயை ஊத்தி விட்டு எண்ணெய் காய்ஞ்சதும் மாவை தேய்க்க தெரியாமல் பிய்த்து எப்படியோ வட்டமாக தேய்த்து மாவை எண்ணெய்க்குள் வேகமாக போட்டதும் எண்ணெய் அவளது கையில் தெறித்துவிட்டது.

“ஆஆ அம்மா கையில எண்ணெய் பட்டிருச்சு” என்று கத்தி கூப்பாடு போட்டதும் நல்ல வேளை பாட்டி வீட்டுக்குள் வந்துவிட்டார்.

அவள் கையை உதறி துடிப்பதை கண்டு “என்ன பாப்பா இப்படியா கவனம் இல்லாம சமையல் பண்ணுவ நான் வரேன்னு சொல்லி இருதேன்ல” என்று அவளை கடிந்துக் கொண்டவர் ஹாலுக்கு நதியாவை கூட்டி வந்து உட்கார வைத்தவர் வேகநடையுடன் அவரது வீட்டுக்குச் சென்று தோசை மாவை எடுத்து வந்து அவளது கையில் எண்ணெய் தெறித்த இடத்தில் போட்டு விட்டதும்தான் அவள் அலறுவதை நிறுத்தினாள். அவளது கண்களில் மாலையாக கண்ணீர் சொரிந்துk கொண்டே இருந்தது.

“உங்க கல்யாணம் காதல் கல்யாணமா கண்ணு?” என்று நதியாவின் தலையை வருடிக்கொண்டு கேட்க

“ம்ம் ஆமா பாட்டி ராயன் பால்பண்ணை வீட்டோட பொண்ணு நான்” என்றாள் கண்ணீரைத்துடைத்துக்கொண்டு.

பாலாஜியின் பைக் சத்தம் கேட்டு எழுந்து “அவரு வந்துட்டாரு போல பாட்டி” என்று வேகமாக எழுந்தவள் வாசலுக்கு போக பெரிய வேன் வாசல் முன்னே நின்றது அதில் ஐந்து கறவை மாடுகளும் கன்றுக்குட்டியும் மே மே என்று கத்திக்கொண்டிருந்தது.

“பார்த்து மெதுவா இறக்குங்க” என்று மாடுகளை இறக்குபவர்களிடம் கவனமாய் இருந்தான் பாலாஜி.

தன் வீட்டுக்கு பின்னே இருந்த காலியிடத்தை வாடகைக்கு கேட்டிருந்தான். மாடுகள் புது இடமாக இருக்க கத்திக்கொண்டே இருந்தது. மாடுகளை தொழுவத்தில் கட்டி விட்டு மாட்டு வியாபாரிகளுக்கு பணத்தை கொடுத்தவன் “ரொம்ப நன்றிங்க வீட்டுக்கே மாடுகளை கொண்டு வந்து கொடுத்ததுக்கு” என்று கையெடுத்து கும்பிட்டான்.

“ராயன் தம்பியோட நண்பன் நீங்க உங்களுக்கு இதுகூட பண்ணலைனா எப்படி..! நீங்க மாடு வேணும்னு எனக்கு போன் பண்ணியதும் நான் ராயன் தம்பிக்குத்தான்னு நினைச்சு ராயன் தம்பிக்கு போன் போட்டேன். அவருதான் மாடு நான் கேட்கல என் நண்பன் கேட்டு இருப்பான் உங்க வீட்டுக்கே மாட்டை கொடுத்துட்டு வாங்கனு சொன்னாரு” என்றார் புன்னகையுடன்.

பாலாஜிக்கு கண்கள் கலங்கிவிட்டது. உன்னை போல நண்பன் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்டா நான் தான் உனக்கு துரோகம் பண்ணிட்டேன் விழியோரம் கசிந்த நீரை துடைத்துக்கொண்டு திரும்பினான்.

கையை பின்னால் மறைத்துக்கொண்டு நின்றிருந்தாள் நதியா. ராயனும் தானும் பிரிவதற்கு நதியாதானே காரணம் அவளை தன் கண்முன்னே பார்த்ததும் “என்னடி” என்றான் எரிச்சலாக.

“நாம பால் வியாபாரம் பண்ணப்போறோமா!” 

“இல்ல பன்னிக்குட்டி வியாபாரம் பண்ணப்போறோம் பசிக்குது உனக்குதான் ஒரு மண்ணும் செய்ய தெரியாது நான்தானே ஏதாவது சமைக்கணும் தள்ளிப்போடி மனுஷனை கடுப்பேத்திக்கிட்டு” என்று அவளது கையை பிடிக்கவும் “ஆஆ அம்மா வலிக்குது” என்று கத்திவிட்டாள். 

“என்ன பண்ணித்தொலைச்சடி” என்று மிரட்டினாலும் அவளது கையை பிடித்துப்பார்த்தான்.

கையில் எண்ணெய் பட்ட இடமெல்லாம் சிவந்து கொப்பளம் போட்டிருந்தது.

“ஏன் டி இம்சை என்னை படுத்துற வண்டியில ஏறுடி” என்ற கடுகடுத்தவன் பைக்கில் ஏறி அமர்ந்து எக்ஸ்லேட்டரை முறுக்கினான் பாலாஜி.

“இல்ல கை வலிக்கல” என்று அவனுடன் பைக்கில் ஏறாமல் திரும்பி நின்றாள்.

“என் கோபத்தை கிளறாதே நதியா” என்று மீண்டும் காய்ந்ததும் பைக்கில் ஏறியதும் உட்கார முடியாமல் தடுமாறினாள் பிடிப்பு இல்லாமல்.

“தோளுல சாய்ஞ்சுக்கோடி” என அவன் குரல் இளகி வரவும் அடுத்த நொடி அவனது முதுகில் சாய்ந்திருந்தாள் நதியா.

பக்கத்தில் இருந்த கிளீனிக்கில் அவளது காயத்தை ஆராய்ந்த மருத்துவரோ “பார்த்து வேலை பார்க்க வேணாமா மா” என்றபடியே மருந்தை எழுதிக்கொடுத்து “இன்ஜக்சன் போடணும்” என்றதும் 

“எ.எனக்கு மாத்திரை கொடுங்க டாக்டர் இன்ஜக்சன் வேணாம்” என்றாள் பயத்தோடே. 

“இன்ஜக்சன் போடலனா செப்டிக் ஆகிடும்மா என்னப்பா தம்பி உங்க வொய்ஃப் கிட்ட சொல்லுங்க” என்றதும் 

அவன் பார்த்த பார்வையில் அமைதியாகி விட்டாள் நதியா.

இன்ஜக்சன் போடும் போது பாலாஜியின் கையை இறுக்கிப்பிடித்துக்கொண்டு கண்ணைமூடிக்கொண்டாள். அவனோ அவளது தோளில் கைபோட்டுக்கொண்டான் அக்கறையோடு. 

வெளியே மழைக்காற்று வீசிக்கொண்டிருந்தது. பாட்டி பாலாஜி வீட்டு வாசலிலேயே அமர்ந்திருந்தார். 

“பாட்டி இந்த பேய் காத்துல ஏன் வெளியே உட்கார்ந்திருக்கீங்க?” என்று பைக்கிலிருந்து இறங்கினான் பாலாஜி.

“இல்லப்பா பாப்பா கையில எண்ணெய் பட்டுச்சுல அவளால வேலை பார்க்க முடியாது நான் உங்க ரெண்டு பேருக்கும் தோசை சுட்டு கொண்டு வந்தேன் உங்க பைக் வெளியே போனதை பார்த்துட்டு இப்படியே உட்கார்ந்துட்டேன் தம்பி” என்றவர் “இப்போ கைவலி எப்படி இருக்கு கண்ணு?” என்றார்  நதியாவிடம்.

“இப்போ வலி குறைஞ்சிருக்கு பாட்டி” என்று கூறிக்கொண்டிருக்க மழை பெய்யத்துவங்கிவிட்டது.

“நீங்க சாப்பிடுங்க மழை வேகமாக வருவதற்குள்ள வீட்டுக்குள்ள போயிடறேன்  நான் காலையில வந்து பார்க்குறேன்” என்று பாட்டி கிளம்பி விட்டார்.

“வீட்டுக்குள்ள போய் உட்காரு மாட்டுக்கு தீவனம் வச்சிட்டு வந்துடறேன்” என்றவனை 

 “மழை வருது”

“வீட்டுக்குள்ள போடினு சொன்னேன் ரொம்பத்தான் அக்கறை” என்று பல்லைக்கடித்ததும்

நதியா கதவோரம் நின்றவள் பாலாஜியை பார்த்து நின்றாள். அவன் மாடுகளுக்கு தீவனம் வைத்து விட்டு வீட்டுக்குள் வந்தவனுக்கு பயங்கர அலுப்பாக இருந்தது குளித்து விட்டு வந்தவன் பாட்டி சுட்டு வைத்த தோசையை போட்டு வந்து நதியாவின் முன்பு அமர்ந்தவனிடம் “எனக்குத்தான் கையில அடி பட்டிருக்கே” என்று பாவமாய் விழித்தாள். 

“நீயே சாப்பிடுனு நான் சொன்னேனாடி என்கிட்ட திட்டு வாங்கணும்னு உனக்கு தலையெழுத்தா?” என்றபடியே அவளுக்கு தோசையை பிய்த்து ஊட்டி விட்டான். அவளுக்கு கண்ணீர் வந்துவிட்டது. 

“யாரு குழம்பு வச்சாங்க?”

“பாட்டிதான் வச்சாங்க”

“காரமா இருக்கா?” தண்ணீர் டம்ளரை எடுத்துக்கொடுத்தான்.

“இல்ல என் மேல கோபமா இருந்தாலும் ஊட்டி விடறீங்கல்ல என் மேல பாசம் வந்துருச்சுனு சந்தோஷத்துல” கண்ணீர் என்றதும்

“ஒழுங்கா வாயை மூடிக்கிட்டு சாப்பிடு எரிச்சலை கிளப்பாதே” என்று கடிந்துக் கொண்டதும் 

“இதுக்கு நான் பட்டினியாவே இருந்திருக்கலாம் இப்படி திட்டினா எனக்கு தோசையே வேணாம்” என்று முகத்தை திருப்பினாள்.

“சரி பேசல சாப்பிடுடி மாத்திரை போடணும்ல” என்று முதன்முறை அவளிடம் பொறுமையாக பேசினான். 

அவள் சாப்பிட்டு முடித்ததும் கொட்டாவி விட்டாள். அவளுக்கு வாயை துடைத்து விட்டு  தட்டை சிங்கில் கழுவி வைத்து விட்டு தானும் இரண்டு தோசையை சாப்பிட்டவன் சமையல்கட்டை ஒழுங்குபடுத்திவிட்டு ஹாலுக்குச் சென்று பார்க்க நதியா சாமியாடிக்கொண்டிருந்தாள். 

“மாத்திரையை போடு” என்று அவளிடம் நீட்ட 

“மாத்திரை கசக்கும் எனக்கு வேணாம்” முகத்தை திருப்பினாள்.  

“ஓங்கி அறைஞ்சிடுவேன் பார்த்துக்கோ” என்றதும் மாத்திரையை வாங்கி போட்டு தண்ணீரைக்குடித்தாள்.

“ரூம்க்குள்ள போய் படு” என கதவை அடைத்து வந்து ஹாலில் பாயை விரித்தான்.

“நானும் இங்கயே படுத்துக்கட்டுமா வானம் இடி இடிக்குது எனக்கு பயமா இருக்கும்” என்றாள் தயங்கியபடியே.

“படுத்துத்தொலை” என்று தலையணையும் போர்வையும் அவளுக்கு எடுத்து வந்து கொடுத்தவன் இன்னொரு பாயை போட்டு படுத்துவிட்டான் படுத்தவன் உடனே உறங்கியும் விட்டான்.

வெளியே இடி பயங்கரமாக விழவும் “அர்ச்சுனா அர்ச்சுனா” என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டே பக்கத்தில் படுத்திருக்கும் பாலாஜியை பார்த்தாள் அவனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். 

“பாவம்ல என்னால ரொம்ப கஷ்டப்படுறாரு”  என்று உச்சு கொட்டியவள் கண்ணை இறுக்கி மூடிக்கொண்டாள். நடுஜாமத்தில் நதியாவுக்கு குளிரெடுத்தது முணக ஆரம்பித்தாள்.

சட்டென பாலாஜி கண்விழித்தவன் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த நதியாவை பார்த்தான். அவனுக்கு பயம் வந்துவிட்டது “ஏய் நதியா என்னாச்சு?” என்று படுத்தவாறே கூப்பிட்டான் அவள் அனத்தல் நிற்கவில்லை. பட்டென்று எழுந்து வந்தவன் அவளது கழுத்தில் கைவைத்தான் அனலாக உடம்பு கொதித்தது. அவளை தூக்கி மடியில் போட்டுக்கொண்டு அவளது கையை தேய்த்துவிட்டான். அவளோ அவனது இடுப்பைக்கட்டிக்கொண்டாள். 

“ஏய் அம்மு” என்று அவளது கன்னத்தை தட்டினான்.

“குளிருதுடா மாமா” என்று உளறினாள்.

அவளை அணைத்துக்கொண்டு படுத்துக்கொண்டான் மோகம் அவனுக்கு வரவில்லை அவள் மீது பரிதாபம்தான் வந்தது. 

“ஏன் டி உன் அண்ணன் பார்த்துவைத்தவனை திருமணம் செய்திருந்தா இப்படி என்கூட வந்து கஷ்டப்படவேண்டிய அவசியம் இருந்திருக்காதுல” என்றான் அவள் உறங்குகிறாள் என்று நினைத்து.

அவளோ ‘என்ன கஷ்டம்னாலும் உன் கூட இருக்கறதுனா நான் தாங்கிப்பேன்டா’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு அவனது அணைப்பில் அப்படியே உறங்கியும்விட்டாள்.

ராயன் மெதுவாக அறைக்கதவை திறந்து உள்ளே வந்ததும் தூங்குவது போல  கண்ணைமூடிப்படுத்திருந்தாள் முல்லை. 

அவனோ அவளது பக்கம் வந்து அவளையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான் அவளது கருமணிகள் அசையவும் “தூங்கமாத்தான் படுத்திருக்காளா கேடி” என்று முணுமுணுத்தவன் சட்டையை கழட்டி வைத்து குளிக்கச் சென்றவன் டீசர்ட் பேண்ட்டுடன் வந்தவன் தலையை துவட்டி துண்டை சோபாவின் மேல் காய வைத்துவிட்டு அவளது அருகே எப்போதும் போல படுத்துக்கொண்டான் ராயன்.

அவளோ ராயன் மேல் தூக்கத்தில் கை போடுவது போல அவனது இடுப்பில் கையை போட்டு காலை அவனது கால் மீது போட்டாள். 

“ரொம்ப படுத்துறாளே” என்று இதழ் குவித்து ஊதினான்.

ராயனோ அவளது கையை மெதுவாக எடுத்து விட்டு திரும்பி படுத்தான். அவளோ அதற்கு மேல் ஒருபடியாக அவன் பக்கம் நெருங்கி வந்து அவனது முதுகோடு ஒட்டிப்படுத்துக்கொண்டாள்.

“வயித்துல புள்ள இருக்கு ஞாபகம் இருக்கட்டும்” என்றான் இயந்திர குரலில்.

“மெதுவாத்தான் கட்டிபிடிச்சிருக்கேன் மச்சான். உங்களுக்கு பிடிக்கலைனா கையை எடுத்துக்குறேன்” என்று மூக்கை உறிஞ்சி அவன் இடுப்பிலிருந்து கையை எடுக்க அவளின் கையை பிடித்து நெஞ்சில் அழுத்தி வைத்துக் கொண்டான். 

அவனாக தன்னை அணைக்கவில்லையே என்ற ஏக்கம் இருந்தாலும் இந்தளவு அவனை தொட விடுகிறானே என்று கண்ணில் கசிந்த நீரை துடைத்துக்கொண்டு அவன் முதுகோடு ஒட்டிப்படுத்துக்கொண்டாள்.

அவள் உறங்கிவிட்டாள் என்று உறுதிப்படுத்தியவன் அவளது புறம் திரும்பி படுத்து அவளை தூக்கி தன் நெஞ்சில் போட்டுக்கொண்டவன் அவளது வயிற்று சேலையை விலக்கி மெதுவாக வருடியவன் “பாப்பா உன்னை கொஞ்ச கூட என்னால முடியலை உன் அம்மா பண்ணியிருக்க காரியம் அப்படி… அவகிட்ட நான் கல்யாணம் ஆன நாளுல இருந்து எதையும் மறைச்சது கிடையாது ஆனா அவளுக்கு என் தங்கச்சி காதல் தெரிந்தும் அதை பற்றி ஒருநிமிசம் என்கிட்ட பேச நேரம் இல்லையா… என் தங்கச்சி காதலை என்கிட்ட சொல்லியிருந்தா எங்க குடும்பம் அத்தனை பேர் முன்னாடியும் அவமானப்பட்டு நின்றிருக்கவேண்டிய அவசியம் இல்லையே..! உன் அம்மாவுக்கு  தண்டனையை கொடுத்துட்டு நானும் தினம் தினம் வேதனைப்படுறேன்” என்று சத்தம் வராமல் ஊமையாக அழுதான் ராயன்.

முல்லையின் வயிற்றை வருடியதும் கண் முழித்துக்கொண்டாள். தான் கண் முழித்து விட்டேனென்று தெரிந்தால் இப்படி தன்னவன் நெஞ்சில் சாய்ந்திருக்க முடியாதே என்று மனம் வெதும்பியவள் மனதிற்குள்ளே அழுதுக் கொண்டு அப்படியே தூங்குவது போல நடித்துக்கொண்டிருந்தவள் ‘மச்சான் என்னை மன்னிச்சுடுங்க நான் சொல்ல வந்த நேரம் பண்ணைக்கு தீ வைச்சிட்டாங்க உங்க கோபம் எப்போ தணியும் அந்த நாளுக்கு காத்திருக்கேன் மச்சான்’ என்று அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டாள்.

அடுத்த நாள் காலையில் நதியா எழுந்த போது பாலாஜி மாட்டுத்தொழுவத்தில் இருந்தான் பால்காரர்கள் வண்டி வீட்டின் முன்னே நின்றிருந்தது. அதிகாலை மூன்று மணியிலிருந்து பால்கறந்து பால்காரரின் கேனில் ஊற்றிக்கொண்டிருந்தான்.

“நாளையிலிருந்து பால் கணக்குக்கு கார்டு போட்டு கொடுக்குறேன் அண்ணா” என்றதும் “சரிங்க தம்பி” என்று பால்காரரும் கிளம்பி விட்டார்.

நதியா நின்றுக் கொண்டிருப்பதை கண்டு பால் சொம்புடன் அவளருகே வந்தவன் “இப்போ வலி எப்படி இருக்கு?” என்றான் முகம் இறுக்கத்துடன்தான்.

“இப்போ வலி குறைஞ்சிடுச்சு”

“வெளியே வரும்போது மேல ஷால் போட்டுக்கிட்டு வந்து நில்லு இனிமே நம்மகிட்ட பால் வாங்க நிறையபேர் வருவாங்க அப்போ நீ இப்படி நின்னா நல்லாயிருக்காது” என்றவனோ வீட்டுக்குள் நுழைந்திருந்தான்.

பாலாஜி பின்னால் குட்டி போட்ட பூனையாக சென்றவளை “வீட்டு வேலை செய்ய வேண்டி பயந்து கையில காயத்தை பண்ணிவச்சிக்கிட்ட போய் தொந்தரவு பண்ணாம உட்காரு” என்று அதட்டினான்.

அவளோ “நைட் என்னை ஹக் பண்ணி படுத்திருந்தீங்கதானே ஐ லவ் யு பாலாஜி” என்றவளை திரும்பி முறைக்கும் முன் ஹாலுக்குள் ஓடிவிட்டாள்.

இவள் என்ன டிசைனோ என்று இதழ் குவித்து ஊதிக்கொண்டு பாலை காய்ச்சி டீ போட்டு இரண்டு டம்ளர்களில் கொண்டுச் சென்றவன் அவள் கையில் ஒரு டம்ளரை கொடுத்து விட்டு “பல்லு விலக்குனியா” என்றதும் “ம்ம்  விலக்கிட்டேன் பசிக்குது” என்று டீ டம்ளரை வாங்கிக்குடித்தாள்.

“இவ வேணும்னே நடந்துக்கறாளா இவ இயல்பே இப்படித்தானா” என்று குழம்பிக்கொண்டே டீயை குடித்து முடித்து காலை சமையலை அவனாகவே செய்து வைத்து விட்டு மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்து வந்தவன் “இன்னும் குளிக்கலையா?” என்றதும் “கையில காயம் இருக்கு ட்ரஸ் கழட்ட முடியலை” என்றாள் தயங்கியபடியே.

“வந்து தொலை தாலி கட்டி இருக்கேன்ல” என்று அவனது அறைக்குள் இருக்கும் குளியலறைக்குள் கூட்டிச்சென்று அவளது கைக்கு பாலீதின் கவர் போட்டு விட்டு கண்ணைமூடிக்கொண்டு அவளது சுடிதார் கழட்டுவதற்கு உதவி செய்தான். 

“பொண்டாட்டிதானே பார்த்தா தப்பில்ல” என சிரித்தவளின் கன்னத்தில் மெதுவாய் அடி வைத்து அவளுக்கு குளிக்க வைத்து அவளுக்கு சுடிதார் போட்டு விடவும் செய்தான். 

அவளோ ‘இப்படி எனக்கு பார்த்து பார்த்து எல்லாம் பண்ணுவார்னு தெரிஞ்சிருந்தா இன்னொரு கையையும் எண்ணெய்க்குள் விட்டிருப்பேன்’ என்றாள் மனதிற்குள்.

அவளுக்கு தலைமுடியை துவட்டி கிளிப் போட்டு விட்டு சாப்பாடு போட்டு வந்து கிட்டத்தட்ட குழந்தையை பார்த்துக்கொள்வது போல பார்த்துக்கொண்டான் பாலாஜி.

ராஜமாணிக்கம் சரசுவுடன் சல்லாபம் கொண்டு கைகளை நெட்டி முறித்து “ராஜமாணிக்கம் நீ எப்பவும் ராஜாதான் டா அந்த காலத்துல வாழ்ந்த ராஜாவை விட தினம் தினம் ஒரு பொண்ணோட மஜா பண்ணுறேன்” என்று சந்தோசமாக கிணற்றில் தண்ணீரை இறைத்து குளித்துவிட்டு கொடியில் காய்ந்த வேஷ்டியை எடுத்துக்கொண்டவர் தோட்டத்து வீட்டில் மாடத்தில் வைத்திருந்த திருநீறை அள்ளி நெற்றி நிறைய பூசிக்கொண்டு நல்லவனை போல வீட்டுக்குச் சென்றவர் வீட்டு வாசலில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்த அரசியை கண்டு அதிர்ச்சியில் பேயறைந்தது போல நின்றார்.

குளித்து விட்டு கையில் வாட்ச்சை கட்டிக்கொண்டு வந்த தென்னரசுவோ  “என்னப்பா அப்படி பார்க்குற இந்த பொண்ணை உனக்கு தெரியுமா?” என்றான் கை முஷ்டியை இறுக்கி அடக்கப்பட்ட கோபத்துடன்.

“ஓ எல்லாம் உனக்கு தெரிஞ்சுடுச்சா ஆமாடா எனக்கு இன்னொரு குடும்பம் இருக்கு உன்கிட்ட சொல்லி உன் மனசை காயப்படுத்த வேணாம்னு சொல்லலை. நானே ஒருநாள் உனக்கு சித்தியும் ஒரு தங்கச்சியும் இருக்காங்கனு சொல்லலாம்னு இருந்தேன் அதுக்குள்ள இவங்க என்னை தேடி வந்துட்டாங்க” என்றார் அசால்ட்டாக.

அடுத்த நொடி தரையில் கிடந்தார் ராஜமாணிக்கம் தென்னரசு அறைந்த வேகத்தில்.

  •  

யாரார்கு யாரடி உறவு 12-13

அத்தியாயம் 13

மருத்துவமனைக்குள் இருக்கும் சிறிய பூங்காவிற்கு மயூரியை அழைத்துச் சென்ற திவ்ய பாரதியின் மனதில் பல எண்ணங்கள் ஓடி கொண்டிருந்தன. ‘எதற்காக அங்கிள் என்னைய வெளிய அனுப்பிட்டு, அவரோட மட்டும் பேசுறாரு? இதுல என்னமோ இருக்கு? என்னது?’ என்று யோசித்துக் கொண்டிருந்தவளின் பின்னால்,

“மிஸஸ். ஆதித்யா..” என அவளை டேவிட் அழைக்க, மகளுக்கு ஊஞ்சல் ஆட்டிக் கொண்டிருந்தவள் திரும்பி பார்த்தாள். 

 

“டாக்டர்.. டேவிட்..”

 

“ஒரு குட் நியூஸ்..” என்றவளை புரியாது பார்த்தாள் திவ்யபாரதி. 

 

“ப்ச்.. ரொம்ப யோசிக்காதே.. நாளைக்கு மயூரி குட்டிக்கு போன்மாரோ ட்ரான்ஸ்ஃபர் ஆப்ரேஷன் நடக்கப் போகுது..” 

 

“வாட்? அப்போ டிஎன்ஏ?”

 

“அதெல்லாம் செக் பண்ணியாச்சு.. சோ, நாளைக்கு ஈவினிங் பாப்பாக்கு ஆப்ரேஷன்.. நீ ஹாப்பி..”

 

“அர்ஜுன் அங்கிள் தான் பண்ணப் போறாரா? டிஎன்ஏ ப்ளட் செல்ஸ் வேணும்னு சொன்னீங்களே?!”

 

“அதெல்லாம் நாங்க பார்த்துக்குறோம்.. பாப்பா சீக்கிரமே குணமாகப் போறா.. நீ போய் பாப்பா பெயர்ல அர்ச்சனை பண்ணிடு..” 

 

“டாக்டர்.. ஒரு சின்ன டவுட்.. போன்மாரோவிற்கும் மயூரி அப்பாவிற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?”என்றவள் கேட்க, சற்று தடுமாறியவன்,

 

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லம்மா.. நீயா மனசை போட்டு குழம்பிக்காதே.. அப்புறம், ஒரு விஷயம் கேட்கணும்..” என்று கேட்க,

 

“சொல்லுங்க டாக்டர்..” என்றவள் தன் மகளின் ஊஞ்சலை நிறுத்தி, அவளை தன் கையில் தூக்கிக் கொண்டாள். 

 

“நீ ஏன் இப்போ எல்லாம் ஆதியை மாமான்னு கூப்பிடமாட்டேங்குற? அவன் மேல அப்படியென்ன கோபம்?”

 

“வெளியில இருந்து பார்க்குறவங்களுக்கு என்னோட கஷ்டம் எப்படி புரியும்? நாணயத்திற்கு ரெண்டு பக்கம் இருக்கு டாக்டர்.. அந்த நாணயம் மாதிரி எங்க ரெண்டு பேருக்கும் தனித்தனி பக்கங்கள் இருக்கு.. நீங்க ஒரு பக்கம் மட்டும் பார்த்தால், நான் குற்றவாளி.. ரெண்டு பக்கமும் பாருங்க.. அப்போ ஏன் நான் அவர்கிட்ட பேசமாட்டேங்குறேன்னு புரியும்!” என்றவள்‌ அங்கிருந்து நகர்ந்து செல்ல, அதே நேரம் அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டபடியே அங்கு வந்தான் ஆதித்யா கரிகாலன். 

 

“டேய் ஆதி.. நீ ஏன் உன்னோட வொய்ஃப்கிட்ட உண்மையை சொல்லக்கூடாது?”

 

“அவ ஒத்துக்கமாட்டா..”

 

“செகண்ட் பேபிக்கு ரெடியானவங்க.. இதுக்கு ஒத்துக்க மாட்டாங்களா? நீ சொல்றது நம்புற மாதிரியில்ல..”

 

“செகண்ட் பேபிக்கு ஒத்துக்கிட்டான்னா.. அதுக்கு அர்த்தம் அவ என்கூட சேர்ந்து வாழ்றதுக்காக இல்ல.. அவளோட ஒரு குழந்தை மூலமாக இன்னொரு குழந்தையை காப்பாத்துறதுக்காக.. அங்க நான் ஒரு கருவி மட்டும் தான்..”

 

“ஏன்டா இப்படி எல்லாம் யோசிக்குற? உன் மேல லவ் இல்லாமலா மயூரியை யாரோட உதவியும் இல்லாமல் தனியா பெற்று வளர்த்துருகா? முதல்ல உனக்கு அவ மேல லவ் இருக்கா?”

 

“லவ் இல்லாமலா இத்தனை வருஷமா அவளை தேடிட்டு இருக்கேன்?! அவ சின்ன பொண்ணு டா.. அவளை கட்டாயப்படுத்தி என்னோட மனைவியாக்க விரும்பவில்லை.. அதனால் தான் அவக்கிட்ட இருந்து தூரமா இருந்தேன்.. அவளைப் பிடிக்காம இல்ல..”

 

“இப்ப உன்னைய வெறுக்குறாளே.. என்ன பண்ணப் போற?”

 

“அவ தூரமா இருந்தப்போவே, அவளுக்காக இத்தனை வெயிட் பண்ணேன்.. இப்போ, பக்கத்துல தானே.. எனக்கு அதுவே போதும்.. என் பொண்டாட்டி.. பொண்ணுக்கூட, அவங்களை பார்த்துட்டு இருந்தாலே போதும்.. என்னைக்காவது ஒரு நாள் அவ என்னைய புரிஞ்சுப்பா.. அது வரைக்கும் நான் வெயிட் பண்ணுவேன்..” என்றவன் டேவிட்டுடன் மருத்துவமனைக்குள் சென்றான். கோயிலுக்கு சென்று மயூரியின் பெயரில் அர்ச்சனை செய்தவள், வீட்டிற்குள் நுழைய, ஹாலில் அமர்ந்திருந்த வள்ளியம்மையிடம் பிரசாதம் கொடுத்தவளின் காதில், ஹாலின் ஓரமாக இருக்கும் ஜன்னல்களை துடைத்தவாறு இருக்கும் சில பெண்களின் பேச்சுக் குரல் காதில் விழுந்தது. 

 

“ஏன்க்கா.. நம்ம வீட்டுக்கு புதுசா வந்துருக்காங்களே.. ஒரு அம்மாவும் பொண்ணும்..”

 

“ஆமா.. அவங்களுக்கென்ன?”

 

“அவங்க நிஜமாவே சாரோட வொய்ஃப் தானா? அந்த சின்ன பொண்ணு.. சாரோட பொண்ணா?”

 

“ஆமா.. இப்போ எதுக்கு உனக்கு இவ்வளவு சந்தேகம் வருது?”

 

“இல்ல.. பார்க்க ரொம்ப சின்ன பொண்ணா தெரியுறாங்க.. இவங்களை சார் எப்படி கல்யாணம் பண்ணாரோ? அதுவும் இத்தனை வருஷங்கழிச்சு திரும்பி வந்துருக்காங்க.. இவ்வளவு நாள் எங்க இருந்தாங்க? சார்.. அவங்களை தேடி போகவேயில்லயா? நிஜமாவே அந்த பொண்ணு சாரோட பொண்ணு தானா?”

 

“இங்கப்பாரு.. இப்படியே கேள்வி கேட்டுட்டே இருந்த.. பாட்டியம்மா உன் சீட்டை கிழிச்சு வெளியே அனுப்பிடுவாங்க.. பேசாம வேலையை பாரு..” என்ற வேலைக்காரி பெண்மணி, மற்றொரு பெண்மணியிடம் கூற, 

 

“என்னமோ.. நம்மளுக்கு தேவையில்லாத வேலை..” என்ற மற்றொரு பெண்மணியோ, அங்கிருந்து எழுந்து வீட்டின் பின்புறம் செல்ல, கண்ணில் வந்த கண்ணீரை உள்ளிழுத்தவாறே, தன்னறையை நோக்கி செல்ல முயன்றவளின் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தினார் வள்ளியம்மை. 

 

“திவிக்கண்ணா.. அவங்க பேசுற எதையும் நீ எதுவும் மனசுல வைச்சுக்காத.. இப்போவே அவங்க ரெண்டு பேரையும் வேலையை விட்டு தூக்குறேன் பார்..”

 

“வேணாம் பாட்டி.. அவங்க என்ன நடக்காததையா பேசுறாங்க? நடந்ததைத் தானே பேசுறாங்க.. விடுங்க பாட்டி..”

 

“அவங்க உன்னோட கேரக்டரை பத்தி எப்படி பேசலாம்? அவங்க இனிமே இந்த வீட்டுல இருக்கக் கூடாது..”

 

“இந்த பாட்டியை மன்னிச்சுடுடா.. சூழ்நிலை.. பெத்தபுள்ள பாசம்.. அவன் மீதிருந்த நம்பிக்கை.. எல்லாம் சேர்ந்து, உன்னைய தப்பா நினைக்க வைச்சுடுச்சு.. தன்னந்தனியா பிள்ளையை பெத்தெடுக்க நீ எவ்வளவு கஷ்டப்பட்டியோ.. என்னை மன்னிச்சுடுத்தா.. உன்னைய நல்லா பார்த்துப்பேன்னு என் பொண்ணு வளர்மதிக்கு சத்தியம் பண்ணி கொடுத்தேன்.. ஆனா, அதை காப்பாற்ற தவறிட்டேன்.. என்னை மன்னிச்சுடுத்தா..”

 

“இப்ப எதுக்கு பாட்டி பழசையெல்லாம் பேசிக்கிட்டு? நான்.. உங்களை என்னைக்கும் தப்பா நினைச்சதேயில்ல.. அனாதையா வந்த என்னை உங்க பொண்ணை விட, அதிகமா.. பாசமா தானே பார்த்துக்கிட்டீங்க.. அதை என்னைக்கும் நான் மறக்கமாட்டேன் பாட்டி..”

 

“நீ அனாதையா? எம்மாடி, அப்படி சொல்லாதேடா கண்ணா.. குத்துக்கல்லு மாதிரி பாட்டி இருக்கும் போது, நீ அனாதையாக விட்டுடுவேனா? இதுக்கு முன்னாடி எப்படியோ.. இப்போ இருந்து நீ என்கூட தான்‌ இருக்கணும்.. உன்னைய யாராவது ஏதாவது சொன்னா.. பாட்டின்னு ஒரு குரல்‌ கொடு போதும்.. அது மாமனாவே இருந்தாலும் ரெண்டுல ஒன்னு பார்த்துடுறேன்.. நாளைக்கு காலைல குட்டிம்மாக்கு சர்ஜரின்னு டேவிட் சொன்னான்.. நீ ஹாஸ்பிடலுக்கு கிளம்பு.. நான் இவளுங்களை ஒரு கை பார்த்துட்டு வந்துடுறேன்..”

 

“இல்ல.. பாட்டி வேணாம்.. நீங்க வீட்டுல ரெஸ்ட் எடுங்க.. உங்க பையன் ஆஃபிஸ் விஷயமா பிஸ்னஸ் ட்டூர் போறாராம்.. உங்கக்கிட்ட சொல்ல சொன்னாங்க..”

 

“யாரு? ஆதித்யாவா?”

 

“இல்ல.. அவரோட பிஏ..”

 

“இருக்காதேமா.. மயூரிக்காக போன்மாரோ பண்ண போறேன்னு தானே என்கிட்ட சொன்னான்..”

 

“என்னது போன்மாரோ.. ப்ளட் செல்ஸ் அவரா கொடுக்கப் போறாரு?”

 

“அப்படி தான்‌ டேவிட் சொன்னான்.. நான் தான் உன்கிட்ட உலறிட்டேன்னு நினைக்குறேன்.. நான் சொன்னதை மனசுல இருந்து அழிச்சுடுமா.. நான் தான் இதைப் பற்றி உன்கிட்ட சொன்னேன்னு தெரிஞ்சா.. ஆதி கொன்னே போட்டுடுவான்..” என்ற வள்ளியம்மை திகைத்து போய் 

நிற்பவளைப் பார்த்து,

 

“மயூரிக்குட்டிக்கு ஒன்னும் ஆகாது.. அவ நல்லாகிடுவா.. நீ ஒன்னும் கவலைப்படாத.. எல்லாம் நல்லபடியா நடக்கும்.. வளர்மதி சாமியா நின்னு காப்பாத்துவா.. மயூரியோட சர்ஜரி முடிஞ்சதும், நீ திரும்பவும் காலேஜ் போகணும்னு ஆசைபட்டா.. காலேஜ் போ.. இல்ல, வேலை பார்க்கணும்னு நினைச்சா.. வேலைக்கு போ.. ஏதுவாக இருந்தாலும் உன் இஷ்டம் தான்.. மயூரியைப் பற்றி நீ கவலைப்படாத.. அவளைப் பார்த்துக்க நானிருக்கேன்.. அவளை என்கிட்ட விட்டுட்டு, நீ உனக்கு பிடிச்சதை பண்ணு.. பாட்டி எப்பவுமே உன்கூட தான் இருப்பேன்.. என்னைய மீறி தான் யாரும் உன்னைய எதுவும் சொல்ல முடியும்.. நீ இனிமே ராணியாத் தான் இருக்கணும்..” என்றவர் திவ்யபாரதியைப் பற்றி தவறாக பேசிய இரு வேலைக்காரப் பெண்களையும் கூப்பிட்டு வீட்டுக்கு அனுப்பி விடுவதாக மிரட்ட, அவர்கள் இருவரும் அதன்பிறகு திவ்ய பாரதியிடம் எந்த வம்பு வழக்கும் வைத்துக் கொள்ளவில்லை. 

 

வள்ளியம்மை பேசிய அனைத்தும் திவ்ய பாரதிக்கு ஆச்சரியத்தை அளித்தது. முன்று வருடங்களுக்கு முன்பு, தனக்காக ஒரு விரலைக் கூட அசைக்காதவர், இப்போதும் தான் வந்த போது கூட, தன்னிடம் முகம் கொடுத்து பேசாதவர் திடீரென மாறக் காரணம் என்ன? மனதில் பல கேள்விகள் எழுந்தாலும், தன் மகளை நினைத்தவாறு மருத்துவமனைக்கு கிளம்பினாள் திவ்யபாரதி. 

 

“அர்ஜுன் சார்.. இது வேலை செய்யுமா? ஏன்னா.. மயூரிக்கு வந்துருக்குறது லுக்கீமியா..”

 

“தந்தையின் bone marrow (மூளைஎலும்பு) மாற்றம் மூலம் சில சந்தர்ப்பங்களில் குணப்படுத்த முடியும். இதை போன்மாரோ ட்ரான்ஸ்ஃபளனேசன் (BMT) அல்லது ஸ்டெம் செல் ட்ரான்ஸ்ஃப்ளனேசன்னு சொல்லுவாங்க.. லுக்கீமியாவால் பாதிக்கப்பட்டவரின் தனது பாதிக்கப்பட்ட போன் மாரோ மூலமாக முற்றிலும் அழிக்கப்பட்டு, பின் ஆதியோட (HLA match) செல்கள் மயூரிக்கு செலுத்துவோம். அப்புறம் புதிய செல்கள் உடலுக்குள்ள போய் நல்ல ரத்த அணுக்களை உருவாக்க தொடங்கும்..”

 

“இது சாத்தியமா? ஏன் கேட்குறேன்னா.. ஹெச்எல்ஏ மேட்ச்சாகணும்.. அது ரொம்ப முக்கியம். அதே சமயம், ஆதியோட செல்கள் மயூரிக்கு பொருந்தணும்.. இப்போ மயூரி ரொம்ப வீக்கா இருக்கா.. இதை விட செல்கள் பொருந்தணும்.. அது ரொம்ப முக்கியம்.. பொதுவாக கூட பிறந்தவங்க தானே நல்ல மேட்ச் ஆவாங்க?”

 

“எஸ்.. யு ஆர் கரெக்ட் டேவிட்.. பட் இதுல பாதிக்கு பாதி குணமாக வாய்ப்பிருக்கு.. அதுவுமில்லாம, திவ்யா அடுத்து கர்ப்பமாகுற வரைக்கும் கேன்சர் செல்ஸ் டெவலப் ஆகாம கட்டுக்குள்ள வைச்சுருக்கலாம்.. எப்படியும் நமக்கு இதுல லாபம் தான்..”

 

“அப்போ, திவ்யா கர்ப்பமாகணுங்குறது?”

 

“கண்டிப்பா நடக்க வேண்டிய ஒன்று.. நம்மால் முடிஞ்சதை நாம் பண்ணுவோம்.. மீதி எல்லாத்தையும் கடவுள்கிட்ட விட்டுருவோம்..” என்றவாறே அர்ஜுன் டேவிட்டுடன் ஆதித்யா கரிகாலன் இருக்கும் அறையை நோக்கிச் செல்ல, அறையின் ஜன்னல் வழியாக, அவர்கள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த திவ்யபாரதியோ சிலையாக நின்றிருந்தாள். ஆதித்யா கரிகாலனின் செல்கள்

மயூரியுடன் சேருமா? அப்படி சேரவிட்டால் ஆதித்யா கரிகாலன் மற்றும் திவ்ய பாரதியின் நிலையென்ன? 

  •  

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 28

“ஏய் சரசு காபியில சர்க்கரை அள்ளி போட்டிருக்க எனக்கு சர்க்கரை வியாதி வரணுமா?” என்று வேலைகாரியிடம் கடினமாக பேசுவது போல நடித்தார் ராஜமாணிக்கம்.

வேலைக்காரியோ “அய்யா மன்னிச்சுடுங்க கைதவறி போட்டுட்டேன்” மன்னிப்பு கேட்பது போல் அவளும் நடித்து விட்டாள்.

நேற்றிரவு தென்னரசு வீட்டுக்கு வந்த நேரம் ராஜமாணிக்கம் அறையில் இல்லை. தோட்டத்து வீட்டில் லைட் எரிய அம்மாவோட நினைப்பு வரும் போதெல்லாம் அப்பா அங்க போயிடுறாரு என்று நினைத்திருந்தான் தென்னரசு.

“உன் அம்மா நினைவு வரும்போது தோட்டத்து வீட்டுக்கு போயிடுவேன்பா நானும் உன் அம்மாவும் நிறைய நேரம் தோட்டத்து வீட்டுல தான் இருப்போம்” என்று ராஜமாணிக்கம் விசனப்பட்டு பல முறை கூறுவதை கேட்டிருக்கிறான் தென்னரசு.

ஆனால் இப்போது தான் பார்க்கும்போது வேலைக்காரி சரசுவிடம் சிரித்து பேசியவர் என் தலையை கண்டதும் முகத்தை மாற்றி கோபமாக பேசுறாரே! என்று தாடையை தேய்த்தவன் ராஜமாணிக்கம் பக்கம் போய் உட்கார்ந்தவன் சரசுவின் கை நடுங்குவதை பார்த்துவிட்டான்.

ஆனால் எதையும் பார்க்காதது போல “அப்பா தோட்டத்துல தேங்காய் லோடு ஏத்த வரேன்னு சொல்லியிருக்காங்க நான் பார்த்துட்டு வந்துடறேன்” என்றான் சட்டையை மடித்துவிட்டுக்கொண்டே.

“இங்க என்ன வேடிக்கை தென்னரசுக்கு டிபன் எடுத்து வை” என்று சரசுவை விரட்டினார். இருவரும் ஜாடை செய்துக் கொள்வதை பார்த்துவிட்டவனுக்கு நெஞ்சே அடைத்துவிட்டது. தாயை தவிர வேறு யாரையும் நினைத்து பார்க்கமாட்டார் அப்பா என்று நம்பியிருந்தோமே என்று உடைந்து விட்டான்.

இல்ல இருக்காது கண்ணால் பார்ப்பது பொய் தீர விசாரிப்பதே மேல் என்று நினைத்து பெரும்மூச்சு விட்டு “நான் ராயன் அண்ணா வீட்ல சாப்பிட்டுக்குறேன் அப்பா” என்றதும் “எனக்கு ஆகாதவன் வீட்டுக்கு போகாதேனு பல முறை சொன்னாலும் கேட்க மாட்டேகின்ற பொண்டாட்டி கிறுக்கு பிடிச்சிருக்கு உனக்கு!” என்று மகனிடம் சண்டைக்கு வந்துவிட்டார்.

“என்னால என் பொண்டாட்டியையும் புள்ளையையும் பார்க்காம இருக்க முடியாதுப்பா!” என்று வேகமாக பேசியவனோ கார் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

காரை ஓட்டும்போது அவனுக்கு ராஜமாணிக்கமும் சரசுவும் சிரித்தது கண்முன்னே நிழலாடியது. சில நாட்கள் முன்னே ராயன் உன் அப்பாவை பற்றி தெரிஞ்சுக்கிட்டு வாடானு சொன்னது அவன் காதில் ஒலிக்கவும் அப்பா அப்போ ஒழுக்கம் சரியில்லாதவரா இருக்காது என்று மனதை போட்டு குழப்பிக்கொண்டே சென்றான் ராயன் வீட்டுக்கு பூங்கொடியையும் தியாவையும் பார்த்தால் கொஞ்சம் மனதிற்கு நிம்மதியாக இருக்குமென்று…

முல்லை எழும்பும் நேரம் ராயன் அவள் பக்கம் இல்லை நேரமே எழுந்து குளித்து பால்பண்ணைக்குச் சென்றிருந்தான். மெல்ல எழுந்தவளுக்கு தலையை சுற்றிக்கொண்டு வர அப்படியே உட்கார்ந்து விட்டாள். கிறுகிறுப்பு நின்றவுடன் எழுந்துச் சென்றவள் குளித்து விட்டு தலையை துவட்டிக்கொண்டு வந்தவளுக்கு பால் ஆத்தி கொண்டு வந்தார் தையல்நாயகி.

“நீங்க எதுக்கு மேல வந்தீங்க அத்தை நானே கீழ வந்துருப்பேனே” என்றவளோ தலைமுடியை துவட்டி கிளிப் போட்டுக்கொண்டாள்.

“அம்மாடி உன் புருசன் நேரமே பண்ணைக்கு கிளம்பி போகும்போது மருமகளை அடிக்கடி கீழ படி இறங்க விடாதீங்க சாப்பாடு பால் என்னவா இருந்தாலும் உன் அறைக்கே கொண்டு வந்து கொடுக்கச் சொல்லியிருக்கான்மா நான் கூட உன் மேல கோபத்தை இழுத்து பிடிச்சு இருப்பான்னு நினைச்சேன். ஆனா உன் மேல ஒரு துளி கோபம் கூட இல்ல மா” என்று சிலாகித்துக் கொண்டவர் பால் டம்ளரை முல்லையிடம் கொடுத்தார்.

முல்லையோ “ஆமா அத்தை என் மேல கோபம் போயிடுச்சு” என்று அவரிடம் தங்களுடைய சலிப்பை காட்டிக்கொள்ளவில்லை பாலை குடித்துவிட்டு “நான் கொஞ்ச நேரம் உங்க கூட கீழ இருந்துட்டு மேல வரட்டுமா அத்தை?” என்றாள் கண்ணைச்சுருக்கி.

“எங்க அறைக்கு பக்கம் இருந்த ராயனோட பழைய அறை பெயிண்ட் அடிக்காம இருந்துச்சு நேத்து பெயிண்ட் அடிக்க சொல்லியிருக்கான் பெயிண்ட் அடிச்சு முடிச்சதும் அந்த அறையிலதான் நீங்க ரெண்டு பேரும் இருக்க போறீங்களாம் வயிறு பெரிசாக பெரிசாக உன்னால படி ஏற முடியாதுல உன் மேல உள்ள பாசத்தால அறையை ரெடி பண்ணிட்டு இருக்கான் கண்ணு” என்றார் சின்னச் சிரிப்புடன்.

“உங்க மகனுக்கு என்மேல கொள்ளை பிரியம் அத்தை நான்தான் அவர்கிட்ட நதியா விசயத்தை சொல்லாம மறைச்சு அவரை காயப்படுத்திட்டேன்” என்று விம்மியவளை அணைத்துக்கொண்டு “முடிஞ்ச விசயத்தை தோண்டி துருவக்கூடாது. அவன் கோபத்துல ரெண்டு வார்த்தை கூட பேசினாலும் நீ கொஞ்சம் பொறுத்து போகணும். வாயும் வயிறுமா இருக்க பொண்ணு அவன் பேசியதை மனசுக்குள்ள போட்டு புழுங்கக்கூடாது சரியா! ரெண்டு பேரும் சந்தோசமா இருந்தாதான் பெரியவங்க நாங்களும் நிம்மதியா இருப்போம் தங்கம்” என்று மருமகளின் உச்சியில் முத்தமிட்டார்.

“சரிங்க அத்தை நீங்க சொல்றது படியே நான் நடக்குறேன்” என்றாள் சிறு இதழ் விரிப்புடன்.

“நீ உட்கார்ந்து டிவி பாரு அம்மா டிபன் எடுத்துட்டு வருவாங்க” என்று கீழே சென்றுவிட்டார்.

ராயனுக்கு போன் போட்டாள் முல்லை. முன்னேல்லாம் முதல் ரிங்கிலேயே எடுத்து “சொல்லு புள்ள” என்பவன் இன்று கடைசி நிமிசத்தில் போனை ஆன் செய்து காதில் வைத்தான் ஆனால் பேசவில்லை.

அவளின் மனதின் வலியின் மூச்சுக் காற்று அவனது செவியில் பட்டது. “சொல்லு” என்றான். அவனது சொல்லு புள்ள என்ற உரிமை மொழி இன்று அவன் வாயிலிருந்து வரவில்லை.

“சா.சாப்பிட்டீங்களா மச்சான்?” என்றாள் தடுமாற்றக்குரலுடன்.

“சாப்பிட்டேன் நீ சாப்பிட்டியா?” என்று மட்டுமே கேட்டான் அவ்ளோதான்.

“வேற பேசணுமா?”

“இ.இல்ல சு.சும்மாதான்” என்று குரல் கமறியது.

“சாப்பிட்டு மாத்திரை போடு” என்றவனோ போனை வைத்துவிட்டான்.

“ஓ என் மேல கோபம் போகல என்னை விரும்பவும் இல்ல போல நான் நீலகண்டன் அப்பா பொண்ணு அதான் என்னை கல்யாணம் பண்ணியிருக்காரு” என்று அவளாக ஏதோ நினைத்து மனதை போட்டு அலட்டிக்கொண்டிருந்தாள்.

ராயனோ பூங்கொடிக்கு போன் போட்டான். தென்னரசுவிற்கு சாப்பாட்டு போட்டுக்கொண்டிருந்தவள் “மாமா போன் பண்ணுறாங்க” என்று போனை எடுத்தவள் “சொல்லுங்க மாமா” என்றாள் பவ்யமாய்.

“முல்லைக்கு காலேஜ் லீவு அவ தனியா இருந்தா எதாவது மனசை போட்டு குழப்பிக்கிட்டே இருப்பா மா தியாவுக்கு பசியாத்தி முல்லைகிட்ட விட்டு வந்துடு” என்றதும்

“சரிங்க மாமா” என்று போனை வைத்து விட்டாள்.

“பங்காளி பொண்டாட்டி மேல இவ்வளவு அக்கறையா இருக்கவரு அந்த பொண்ணுக் கிட்ட கடுகடுனு முகத்தை காட்டுறாரு உங்க மாமா புரியாத புதிர்டி” என்றான் தலையை ஆட்டிக்கொண்டு.

“நாம எப்ப தனியா போறோம்?” என்று பூங்கொடி பேச்சை மாற்றவும்

“போலாம் போலாம் இப்ப என்ன அவசரம் நாயகி அம்மாவோட கைப்பக்குவம் நல்லாயிருக்கு வாய்க்கு ருசியா சாப்பிடுறேன் நாம தனியா போனா உன்னோட உப்பு சப்பில்லா சாப்பாட்டை சாப்பிடணும்” என்றவனை இடுப்பில் கையை வைத்து முறைத்தவள் அவனது முடியை பிடித்து ஆட்டி “ஏன் டா என்னோட சாம்பார் நல்லாயிருக்கு இன்னும் கொஞ்சம் ஊத்துனு சாப்பிட்டுட்டு இப்போ அத்தை சமையல் நல்லாயிருக்குனு என்னை வெறுப்பேத்துறியா உங்கப்பனை விட்டு உன்னால வரமுடியலை இனிமே என் கையால சாப்பாடு போட மாட்டேன் போடா” என்று கோபமாக கத்திவிட்டு தரையில் விளையாடிக்கொண்டிருந்த தியாவை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு முல்லையின் அறைக்குச் சென்றுவிட்டாள் பூங்கொடி.

“அப்பா சாமி நான் துரத்தி துரத்தி இவளை லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இப்போ தினமும் இவ கையால அடி வாங்கறதே எனக்கு வேலையா போச்சு” என்று சலித்துக் கொண்டு தட்டில் கையை கழுவி எழுந்தவனிடம் “ரோசம் மானம் உள்ளவன் மாமனார் வீட்டுல வந்து சாப்பிடமாட்டான்” கோமளம் ஜாடை பேசி சாப்பிட அமர்ந்தார்.

அவனோ இந்த பெரியம்மா பேசறதையெல்லாம் காதுல வாங்கக்கூடாது என்று கையை கழுவிச் சென்று விட்டான்.

கோமளமோ கண்ணனின் அறையை பார்த்தார். அறை இன்னும் திறக்காமல் இருக்க “இந்த காலத்து பொண்ணுங்களுக்கு தினம் பாடம் எடுக்க வேண்டியிருக்கு எழுந்து வரட்டும் தீபாவுக்கு எடுக்குறேன்” என்று கோபம் கொண்டவர் மகள் இருக்கும் நினைவில் “ஏய் நதியா இன்னுமாடி தூங்குற?” என்று சத்தம் போட்டவருக்கு அவள்தான் நேற்று அனாதை பயலை கல்யாணம் பண்ணிக்கிட்டு போய்ட்டாளே என்று நினைவு வந்தது.

“கழுதை கஷ்டப்பட்டு அழுதுக்கிட்டு வரட்டும் செவினில நாலு போடுறேன்” என்று மகளை கறுவிக்கொண்டிருந்தார்.

மாவுபாக்கெட் வாங்கி வந்த பாலாஜியோ தக்காளி தொக்கு எப்படி வைக்கணும் என்று நதியாவுக்கு சொல்லிக்கொடுத்தான் அவளோ தலையை நாலாப்புறமும் ஆட்டிக்கொண்டு கேட்டிருந்தாள்.

“தோசையாவது ஊத்த தெரியுமா?” என்றான் முறைப்புடன் நக்கல் தொனியில்.

தெரியாது என்று சொன்னால் கழுவி ஊத்துவானென்று பயந்து “ம்ம் ஊத்தத்தெரியும்” என்றாள்.

“அப்போ ஊத்துடி” என்று கையை கட்டி சமையல்கட்டு திண்டில் உட்கார்ந்தான்.

தோசைக்கல்லில் உடனடியாக தோசை ஊத்தலாம் என்று கல்லைத்தான் நேற்று வாங்கி வந்திருந்தான்.

அவளுக்கு தோசை ஊற்றவே தெரியவில்லை மாவை மொத்தமாக எடுத்து ஆப்பம் போல ஊத்தியதும் அவள் பிடறியில் லேசாய் தட்டியவன் “தள்ளுடி ஒரு தோசை மாவு கூட ஊத்த தெரியல” என்று அவளது கையிலிருந்த கரண்டியை வாங்கி தோசையை திருப்பி போட்டு முதல் தோசையாக இருக்க தனியாக எடுத்து போட்டு மெலிதாய் தோசையை ஊற்றியவனை பார்த்து “நீங்க எப்படி இவ்ளோ அழகா தோசை சுடுறீங்க?” என்றவளை பார்த்து முறைத்தவன் “வாய் மட்டும் பேசினா போதாதுடி” என்றவன் ரெண்டு தோசை ஊற்றி விட்டு தட்டில் போட்டுக் கொண்டு “உனக்கு நீயே சுட்டு தின்னு” என்று தோசையை தட்டில் ஊற்றி திண்டில் உட்கார்ந்து சாப்பிட்டு தட்டை கழுவி வைத்தவன் “நான் வெளியே போய்ட்டு வரும் வரை கதவை சாத்திட்டு இரு யாரும் வந்து கதவை தட்டினா ஜன்னல் வழியே பார்த்துட்டு கதவு திறந்து விடு இந்த ஏரியாவுல திருடங்க கூட்டம் இருக்குனு கேள்விப் பட்டேன்” என்றான் அசால்ட்டாய்.

“என்னது திருடனுங்க வருவாங்களா நா.நான் கதவை திறக்கமாட்டேன்ப்பா” என்று பயந்து அரண்டாள்.

“ராயன் தங்கச்சினு வெளியே சொல்லாதடி எல்லாரும் சிரிப்பாங்க ரொம்ப பயந்தவ போல சீன் போடாதே நான் வர நைட் ஆகும் மதியத்துக்கு ஏதாவது சமைச்சு சாப்பிடு” என பைக் சாவியை எடுத்தவனை “ஏன் கார்ல போகலையா?” என்று அவன் முன்பு நின்றாள்.

“காருக்கு பெட்ரோல் அடிக்க நீ காசு தரியாடி வாயை மூடிக்கிட்டு தோசை சுடு” என்று எரிந்து விழுந்தான்.

“கொஞ்சம் பாசமா பேசமாட்டீங்களா?” என்று முகத்தை சுளித்தாள்.

“ஆமா உன்னை துரத்தி துரத்தி லவ் பண்ணி கல்யாணம் கட்டிட்டு வந்திருக்கேன் பாரு சும்மா கண்ணே மணியேனு கொஞ்சறதுக்கு ப்ளான் போட்டு எனக்கு நம்பிக்கை துரோகி பட்டம் வாங்கிக்கொடுத்தவகிட்ட இப்படித்தான் பேச முடியும்” என்று சுள்லென்று பேசிவிட்டுச் சென்றுவிட்டான்.

நதியாவுக்கு பாலாஜி பேசுவது சுருக்கென்று தைத்தாலும் தான் செய்து விட்ட தவறிற்கு தண்டனையாக அவனின் கோபத்தை பொறுத்துக்கொண்டாள் பெண்ணவள்.

எட்டு மணிக்கு மேல் கண்ணனின் அறைக்கதவு திறந்தது. டாப்பும் ஜீன்ஸுமாக வந்தவளை கண்டு கடுப்பாகி விட்டார் கோமளம்.

“ஏய் என்ன மண்ணாங்கட்டி ட்ரஸ் இது ஒழுங்கா சேலையை கட்டிட்டு வா” என்றார் முகத்தை கடுகடுவென வைத்து.

“இந்த ட்ரஸ்க்கு என்ன குறைச்சல் அத்தை?” என்று கோமளம் முன்னே கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள்.

“என்னடி பெரியவங்க முன்னாடி மட்டு மரியாதை இல்லாம கால் மேல கால் போட்டு உட்கார்ந்திருக்க அதுவும் பொண்ணுங்க கால் மேல் கால் போட்டு உட்கார கூடாது படிச்ச உனக்கு தெரியாதா?” என்று மூச்சு வாங்க பேசியதும்

காதை குடைந்துக் கொண்டு காலை சரியாக வைத்தவள் “போதுமா அத்தை” என்றாள் சலித்துக்கொண்டு.

“இன்னிக்கு ஒருநாள் நேரம் கழிச்சு எழுந்து வந்தா பரவாயில்ல நாளைக்கு காலையில ஐஞ்சு மணிக்கு எழுந்து வந்திருக்கணும் வீட்டு வேலை எல்லாம் பார்க்க தெரியும்தானே?”

“ம்ம் சமைக்கத்தெரியும் அத்தை ஆனா நான் எதுக்கு சமைக்கணும் ஏழு தலைமுறை தாண்டியும் உட்கார்ந்து சாப்பிடற அளவுக்கு சொத்து மதிப்பு வச்சிக்கிட்டு சமைக்க ஆள் போடலையா நீங்க?” என்றாள் அசால்ட்டாக.

“அமுதாவை தவிர நாங்க வீட்டு வேலைக்கு யாரையும் வீட்டுக்குள்ள விட்டதில்லை. நானெல்லாம் உன் வயசுல நாலு ஆளு வேலையை ஒத்த ஆளா செய்வேன் தெரியுமா! இப்படி என் மாமியார் முன்னால உட்கார்ந்து பேசமாட்டேன். நீ என்னடானா எனக்கு மரியாதை கொடுக்காம கால் மேல கால் போட்டு உட்கார்ந்திருக்க போய் எனக்கு சூடா சர்க்கரை கம்மியா டீ போட்டு கொண்டு வா பார்க்கலாம்” என்றார் அதிகாரமாக.

“முதல் முறை கேட்குறீங்கனு போட்டு கொண்டு வரேன்” என்று எழுந்து தீபாவும் சமையல்கட்டுக்குள் சென்றாள். அமுதா பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தவர் தீபாவை பார்த்ததும் புன்னகை புரிந்தவர் “ஏதாவது வேணுமா பாப்பா?” என்றார் கனிவான குரலுடன்.

“இல்ல நீங்க பாருங்க நான் அத்தைக்கு டீ போட வந்தேன் நான் கண்ணன் எழுந்து வந்ததும் அவன்கூட சாப்பிட்டுக்குறேன்” என்றாள் மெலிதான புன்னகையுடன்தான்.

“நா.நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதே பொண்ணு கண்ணன் தம்பியை என் முன்னால கூப்பிட்டது போல இந்த வீட்டு பெரியவங்க முன்னே பேர் சொல்லி கூப்பிட வேணாம் பாப்பா..! பெரியம்மா யார் இருக்காங்கனு பார்க்க மாட்டாங்க உன்னைத்தான் திட்டிடுவாங்க..! பட்டணத்துல புருஷன் பேரு சொல்லி கூப்பிட்டுக்கறது அங்க நடைமுறைக்கு சரிப்பட்டு வரும்..! இங்க கிராமத்துல சரியா வராதுமா” என்றவரை பார்த்து “நீங்க உங்க வேலையை பார்த்தா மட்டும் போதும் எனக்கு எங்க எப்படி பேசணும்னு தெரியும்” என்று முகத்தில் அடித்தாற் போல பேசவும் “மன்னிச்சிடுங்க பாப்பா” என்று அமுதா அவரது வேலையை பார்க்க ஆரம்பித்தார்.

அழகம்மையோ தீபா அமுதாவை எடுத்தெறிந்து பேசும் போது வந்துவிட்டார். பாத்திரம் விலக்கி முடித்ததும் அமுதா பின்வழியாக வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

“எனக்கும் டீ கிடைக்குமா இல்ல உங்க மாமியார்க்கு மட்டும் டீ போட்டுத்தருவியா?” என்றார் சிரித்தபடியே

“வாங்க சித்தி டீ சேர்த்து தான் வச்சிருக்கேன் இருங்க டம்ளர்ல ஊத்தி தரேன்” என்று டீயை ஆத்தி இரண்டு டம்ளரில் ஊற்றியவளிடம் “ஏம்மா அமுதா உன்கிட்ட பொறுமையா தானே பேசினாங்க ஏன் நீ அவங்க முகத்துல அடிச்சாப்பல உங்க வேலையை பாருங்கனு சொல்லுற அமுதா நம்ம வீட்டுல ஒருத்தவங்க மாதிரி பெரியவங்க கிட்ட இப்படித்தான் பேசுவியா?” என்று சற்று கோபத்துடன் தான் கேட்டார்.

“வீட்டு வேலைக்காரவங்களை வைக்கற இடத்துல வைக்கணும் சித்தி” என்றாள் தீபா வெடுக்கென.

“என்னது அமுதா வீட்டு வேலைக்காரியா ராயன் தம்பியோட மாமியார் அமுதா, கிட்டத்தட்ட எனக்கு என்ன உரிமை இருக்கோ அதே உரிமை அமுதாவிற்கு உண்டு நீ படிச்ச பண்பான பொண்ணுனா அவங்க கிட்ட இனிமே எடுத்துதெறிஞ்சு பேசாதம்மா” என்றார் கொஞ்சம் அதட்டலாகத்தான்.

தீபாவோ அமுதா ராயன் மாமியார் என்பதை மறந்திருந்தாள். “சாரி சித்தி இனிமே நான் அமுதா அம்மாவுக்கு மரியாதை கொடுக்குறேன்” நல்லவள் போல நடிப்புடன் டீ டம்ளரை அழகம்மையிடம் கொடுத்து விட்டு “வரேன் சித்தி” எப்படியோ சமாளிச்சிட்டேன் என்று கண்ணை சுழட்டிக்கொண்டு ஹாலுக்குச் சென்று கோமளத்திடம் டீயை கொடுத்தாள்.

டீயை குடித்த கோமளமோ “ம்ம் டீ நல்லாத்தான் போட்டிருக்க ஆனாலும் நான் போடறது போல இல்ல” என்று சலித்துக்கொண்டு குடிக்கவும் அவரது தலையில் நங்கென்று கொட்டு வைக்கணும் போல இருந்தது தீபாவிற்கு.

“தீபா இங்க வந்து என் பக்கம் உட்காரு” என்றதும் அவளும் கோமளம் பக்கம் உட்கார்ந்து “சொல்லுங்க” என்றாள்.

“ஆமா நேத்து ரெண்டு பேரும் சந்தோசமா இருந்தீங்களா… நீயும் சீக்கிரம் மாசமாகணும். நான் ஜோசியம் பார்த்தேன் ராயனுக்கு முதல்ல பொண்ணுதான் பொறக்கும்னு சொல்லியிருக்காங்க ஆனா உனக்கு பையன்தான் பொறக்கும்னு சொல்லியிருக்காரு ஜோசியக்காரர். ராயன் முன்னால என் மகன் கையை கட்டி நிற்குறான்னு கவலையா இருந்தேன் இப்போ என் பேரன் முன்னால ராயன் மகளும் மகனும் கையை கட்டி நிற்கணும் அதை பார்த்து ஆனந்தப்படுவேன்” என்று அல்ப ஆசைபட்டார் கோமளம்.

“சீக்கிரமா பேரனை பெத்துக்கொடுக்குறேன் அத்தை ஒரு வேளை ராயனுக்கு பையன் பொறந்துட்டா என்ன பண்ணுவீங்க?” என்றாள் புருவம் உயாத்தி.

“உன் வாயை பினாயில் போட்டு கழுவுடி நான்தான் ராயனுக்கு பொண்ணுதான் முதல்ல பிறக்கும்னு சொன்னேன்ல” என்றார் எரிச்சலாக.

“சரி கோபப்படாதீங்க” என்று இருவரும் ராசியாக கைகோர்த்தனர்.

கண்ணன் குளித்து வெளியே வந்தவன் கண்ட காட்சியில் ‘நேத்து ரெண்டு பேரும் சண்டைக்கோழியாக நின்னாங்க இப்ப என்னடானா ரெண்டு பாச பறவைகள் கொஞ்சிக்கிறாங்க ரெண்டு பேரும் டேன்ஜரான ஆளுங்க கொஞ்சம் சூதானாமா இருக்கணும்’ என்று தோளைக்குலுக்கிக் கொண்டவனோ “தீபா சாப்பாடு எடுத்து வை பசிக்குது” என்று அவர்கள் பக்கம் வந்ததும் “டேய் நாளையிலிருந்து நேரம் காலமா எழுந்து பால்பண்ணைக்கு போகிற வழியா பாருடா” என்றதும்

“அடுத்த வாரம் போறேன்மா இந்த வாரம் நானும் தீபாவும் ஹனிமூன் காஷ்மீர் போறோம்” என்றான் தீபாவை பார்த்து ஒற்றைக்கண்ணைச் சிமிட்டி.

“என்கிட்ட சொல்லவே இல்லை கண்ணா” என்றவளோ நாக்கை கடித்துக்கொண்டு “நீங்க சொல்லவேயில்லையே” என்றாள் கோமளத்தை ஓரக்கண்ணால் பார்த்தபடியே.

“சர்பிரைஸ்டி” என்றவன் கையை பிடித்து “வாங்க சாப்பிட போகலாம்” என்று இருவரும் ஜோடியாக போவதை பார்த்து “என்னமோ சந்தோசமா இருந்தா சரி” என்று டீவி ரிமோட்டை எடுத்து டிவியை ஆன் செய்த கோமளத்துக்கோ நதியா வீட்டுக்குள் இல்லாதது ஒரு மாதிரி மனச் சங்கடமாக இருந்தது.

‘கழுதைக்கு ஒரு வேலையும் பார்க்க தெரியாது என்ன பண்ணுறாளோ தெரியலை?’ என்று புலம்பவும் செய்தார்.

அன்று மதியம் தீபாவை அழைத்துக்கொண்டு வயற்காட்டிற்குச் சென்றான் கண்ணன். வெயிலில் தலைக்கு முந்தானை சேலையை கட்டிக்கொண்டு வேலை பார்த்துக்கொண்டிருந்தனர் பெண்கள்.

“அப்பாடி இந்த வெயிலுல எப்படி கண்ணா இவங்க எல்லாம் வேலை பார்க்குறாங்க கால் சுடாதா செருப்பு கூட போடாம வேலை பார்க்குறாங்க எப்படிடா முடியுது இவங்களால” என்று அவர்களை அதிசயமாய் பார்த்துக் கொண்டே நடந்தவள் சேற்றில் காலை வைத்துவிட்டாள். “ஐயே சேறு” என்று காலை உதறினாள்.

ஹாஹாவென்று சிரித்த கண்ணனோ “நான் தோட்டத்துல வேலை பார்ப்பேன் எல்லாரையும் அதிகாரம் பண்ணுவேன்னு சொன்ன இங்க பாருடி இவங்களெல்லாம் வெயில் பார்க்காம சேத்துல இறங்கி வேலை பார்த்ததுனாலதான் நாம ஏசி ரூம்ல உட்கார்ந்து சாப்பிட்டு சம்பளம் வாங்கினோம் சேறுதான் டி பல பேருக்கு சோறுபோடுது. பம்பு செட்டு தொட்டியில தண்ணியிருக்கும் காலை கழுவலாம்” என்று அவளை கூட்டிக்கொண்டு போக “கண்ணா சினிமாவுல வரது போல என்னை தூக்கிட்டு போகமாட்டியா?” என்றாள் கொஞ்சல் மொழியுடன்.

கண்ணனோ வயற்காட்டை சுற்றிப்பார்த்தான் அனைவரும் குனிந்து வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். தீபாவை கையில் தூக்கிக்கொண்டு பம்பு செட்டுக்குச் சென்றவன் மோட்டார் தொட்டிக்குள் போட்டு விட்டு தானும் குதித்ததும் “ஏய் ஜாலியா இருக்கு கண்ணா” என்று கண்ணனின் கையை பிடித்துக்கொண்டதும்

“எனக்கு உன்னை இப்படி பார்த்ததும் டெம்ப்ட்தான் ஆகுது” என்றான் அவளது ஆடை விலகிய அழகுகளை பார்த்து.

“ஏய் கேடி நாம இப்ப வெளியே இருக்கோம்டா அடங்கி இரு” என்று அவனது முகத்தில் தண்ணீரை அள்ளி அடித்தாள்.

அவனோ “இந்த நேரம் யாரும் வரமாட்டாங்கடி” என்று அவள் மேல் தண்ணீரை அள்ளி தெளித்து இருவரும் தண்ணீருக்குள் விளையாடிக்கொண்டிருந்தனர். கண்ணனுக்கு கிணற்று தண்ணீருக்குள் இருந்து பழக்கம் ஆனால் தீபாவிற்கோ கொஞ்ச நேரத்தில் தண்ணீருக்குள் இருக்கவே குளிரில் நடுங்கினாள்.

அவள் நடுங்குவதை கண்ட கண்ணனோ “தோப்புக்கு வந்தா தங்கறதுக்கு அறை இருக்கு ட்ரஸை காயவச்சிட்டு போகலாம்” என்று அவளை தூக்கிக்கொண்டு சிறியதாய் இருக்கும் வீட்டுக்குள் நுழைந்தவன் அவளை ஈர ஆடையில் பார்த்தவனுக்கு ஹார்மோன்கள் எக்குதப்பாய் ஆர்ப்பரித்தது அவளை ஆளவேண்டுமென்று அவளது கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டான்.

“டேய் வீட்டுக்கு போகலாமா?” என்று அவனது தோளில் சாய்ந்துக் கொண்டாள் வெட்கத்தில்.

“இந்த இயற்கைக்கு நடுவுல இருக்க வீட்டுக்குள்ள நாம ஒண்ணா சேர்ந்தோம்னா அதுல ஒரு கிக்குடி” என்று கண்ணடித்தவனோ அங்கிருந்த கயிற்று கட்டிலில் தீபாவை மெல்ல படுக்க வைத்தவன் அவள் எதிர்பார்க்காத நேரம் அவளது ஈரமான சேலையை உருவினான்.

அவளுக்கோ வெட்கம் வந்து மார்புக்கு குறுக்கே கையை வைத்து மறைத்துக்கொண்டாள். இந்த நாளுக்காய்த்தான் காத்திருந்தேன் என்று அவளது அருகே நெருங்கிப்படுக்கவும் “இங்க யாரும் வரமாட்டாங்களா பயமா இருக்குடா” என்று அவனது மார்பில் படுத்துக்கொண்டாள்.

“இங்க யாரும் வரமாட்டாங்கடி கதவு லாக் போட்டு இருக்கு நான் உன் பக்கம் இருக்கேன் என்ன பயம்” என்றபடியே அவளது கழுத்தில் முகம் புதைத்தான்.

“கூசுதுடா கண்ணா” என்று சிணுங்கினாள்.

“கூசாம எப்படி பண்ண முடியும்” என்று அவளது நெற்றியில் முத்தம் கொடுத்து அவளது இதழில் இளைப்பாறினான். நீண்ட நெடிய முத்தம் முடிவுக்கு வந்து அவளது அங்க வனப்புகளில் அவனது பார்வை பதிய அவளோ “போடா” என்று அவனது முதுகில் அடி வைத்தாள்.

“எனக்கு எல்லாம் வேணும்டி” என மோகத்தில் பிதற்றியவன் அவளது வனப்பில் முகம் புதைத்தான்.

“கண்ணா” என்று அவனது பின்னந்தலைக்குள் கையை நுழைத்துக்கொண்டாள்.

அவளது ஆடைகளுக்கு மேலாக அவளை கொஞ்சி தீர்த்தவன் ஆடையில்லாமல் பார்க்க அவனது இதழ்கள் ஏங்கியது. பரபரவென அவளது ஆடைகளை களைந்தவன் அவளது இதழ்களை கவ்வி சுவைத்தான்.
இருவருக்கும் இதழ் முத்தம் புதிதல்ல ஆனால் திருமணம் ஆன பிறகு மெதுவாய் தன் பொண்டாட்டி என்ற உரிமையில் அவன் கொடுக்கும் முத்தம் அவனுக்கு புதிதாய் தோன்றியது.

அவனது இதழ்கள் அவளது மேனியில் தங்கு தடையின்றி விளையாடியது. அவளது அழகுகளின் மொக்குகளில் அவனது பற்தடம் பட்டு அவள் கண்சொருகினாள். அவளது கண் சொருகலில் அவனது ஆண்மை பேயாட்டம் போட்டு அவளுக்குள் மெதுவாய் மென்மையாக பூவை பறிப்பது போல பெண்மைக்குள் நுழைந்துக் கொண்டான் ஆணவன்.

“கண்ணாஆஆ” என்று வாய்திறந்தவளின் இதழ்களை கவ்விக்கொண்டான். முழுதாய் இருவரும் தாம்பத்தியத்தை இனிதாய் துவங்கிவிட்டனர். கூடல் முடிந்து அவளது நெற்றியில் முத்தமிட்டவன் “உனக்கு பிடிச்சிருந்ததா” என்றவனை “எனக்கு பெயினா இருக்குடா மண்டையா பிடிச்சிருந்ததானு கேட்குற” என்று அவனது மார்பில் அடித்தாள்.

“ஃபர்ஸ்ட் டைம் அப்படித்தான்டி இருக்கும்” என அவளது கன்னத்தில் முத்தமிட்டான்.

“ம்ம் கொஞ்சம்தான் வலி ஆனா சந்தோசமா இருந்தேன்டா” என்று அவனது கன்னத்தில் எக்கி முத்தமிட்டாள். இருவரும் மீண்டுமொரு முறை கூட மாலை மங்கியது. தண்ணீர் தொட்டியில் இருவரும் குளித்துவிட்டு காய்ந்த துணிகளை போட்டுக்கொண்டு வீட்டுக்குச் சென்றனர்.

தென்னரசுவிற்கு இரவு தூக்கம் வரவில்லை தோட்டத்து வீட்டுக்கு போய் பார்த்துட்டு வந்துடலாமா அப்பாவை தப்பா நினைக்க கூடாது என்று அவன் மனம் துடித்தது.

இல்ல போய் பார்த்துட்டு வந்துடலாமென்று வெளியே வந்தவன் முன்னே ராஜமாணிக்கம் ஊருக்கு தெரியாமல் குடும்பம் நடத்திய குமுதாவும் ராஜமாணிக்கத்துக்கு பிறந்த மகள் அரசியும் தென்னரசுவின் முன்னால் நின்றனர்.

“யாரு நீங்க இந்த நேரத்துல இங்க வந்துருக்கீங்க அதுவும் வயசு பொண்ணை கூட்டிக்கிட்டு வந்திருக்கீங்க?” என்றதும்

“நா.நாங்க அப்பாவை பார்க்க வந்திருக்கோம். அப்பா எங்களை பார்க்க வந்து ஒரு மாசம் ஆச்சு… எனக்கு காலேஜ் ஃபீஸ்க்கு பணம் தரேனு சொன்னாரு அப்பா ஆனா வீட்டுக்கு வரவேயில்லை” என்றாள் அழுகையுடனே அரசி.

“யாரு பாப்பா உங்கப்பா நீங்க அட்ரஸ் மாறி வந்துட்டீங்கனு நினைக்குறேன்?” என்றவன் அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்துக் கொண்டான்.

“ரா.ராஜமாணிக்கம்தான் என்னோட அப்பா இதோ நான், அப்பா, அம்மா மூணுபேரும் சேர்ந்து எடுத்துக்கிட்ட போட்டோ” என்று அவளது மொபைலில் இருந்த போட்டோவை காண்பித்ததும் ஆடிப்போய்விட்டான் தென்னரசு.

அவனுக்கு முகம் முழுக்க வியர்த்துக்கொட்டியது. தன் தந்தை தாயை தவிர யாரையும் ஏறெடுத்து பார்க்கமாட்டாரு என்று ஆணித்தரமாக நம்பியிருந்தவன் தலையில் பேரிடியாக ராஜமாணிக்கம் ஒருபெண்ணுடன் சேர்ந்து நிற்க ராஜமாணிக்கத்தின் தோளில் கைபோட்டு சிரிப்புடன் நின்றிருந்த அரசியை கண்டதும் அதிர்ச்சியில் எழுந்து நின்றான்.

  •  

என் இனிய ராட்சஷனே 13

அத்தியாயம் 13

 

இளமதி அவன் கையை பிடித்து தடுக்க அசால்ட்டாக அவளின் கையை தட்டிவிட்டவன் அவளின் ஒத்துழைப்பில் இன்னும் தைரியம் வந்தவனாய் கைகளை தாராளமாக உள்ளே நுழைத்தான். 

 

அவள் அவன் அருகில் அத்தனை நெருக்கத்தில் இருக்கும் போது அவள் உடலில் இருந்து வந்த சந்தன மணம் அவனை இன்னும் உசுப்பேற்றியது கைகள் அவளின் வெற்றிடையை அழுத்தி பிடித்து கசக்கி விட அவன் பிடியில் பெண்ணவள் நெளிந்து கொண்டே இருக்க மற்றொரு கையால் அவளின் இடையை வளைத்து தன்னோடு நெருக்கினான். 

 

இன்னுமே அவனுக்கு சரியாக வசதி பத்தமால் போக பின்னிருக்கையில் அவளை தூக்கி சென்று கிடத்தியவன் அவள் மீது படர போக “மாமா என்ன பண்ணுறீங்க யாராவது வர போறாங்க” என்று அவள் கத்த “சும்மா இரு டி மனுஷன் அவஸ்தை புரியாம” என்று பல நாள் கூடி கழித்த மனைவியுடன் கூறுவதை போல் தடலாடியாக கூறிக் கொண்டே அவள் மீது படர்ந்தான்.

 

அவனுக்கு இடைஞ்சல் கொடுத்து டி ஷர்ட்டை கழட்டி எறிய போக “மாமா வேண்டாம் யாராவது வர போறாங்க” என்று அவள் தவிக்க 

“ம்ம்ச்ப்” என்று உச்சு கொட்டியவன் கழுத்து வளைவில் முகம் புதைத்தான் தன் மீசை முடியால் உரசி குட்டி குட்டி முத்தங்கள் இட்டான். 

 

அவன் கைகள் அவளின் ஆடை மேலேயே ஊர்ந்து சென்று குவிந்த தாமரை மொட்டுகளில் ஒன்றை பிடித்து கசக்கி விட “ம்ம்ம் மா..மா..” என்று திணற ஆரம்பித்தாள். 

 

அவள் டி ஷர்ட்டை கழட்டி விடாமல் பிடிவாதமாக பிடித்து வைத்து கொள்ள மேலாடையின் உள்ளே அதிரடியாக தன் தலையை நுழைத்தவன் இடைஞ்சல் செய்த உள்ளாடையின் ஊக்கையும் பின்னே கை நுழைத்து கழட்டினான் அவளின் மார்பின் மத்தியில் முகம் புதைத்து அங்கிருந்த பன்னீர் துளிகளை நா கொண்டு வருடினான் இளமதி இதழ் கடித்து தன் தவிப்பை அடக்கியவள் இடம் பொருள் ஏவல் மறந்து காலை அவனின் இடையை சுற்றி போட்டு தன் தவிப்பை அடக்க அவனை தன்னோடு இன்னும் சேர்த்தணைத்து கொண்டாள் அவளின் பெண்மை அவன் செயலில் பொங்கி வழிய தடுமாற ஆரம்பித்தாள். 

 

அந்த நேரம் சரியாக கருப்பனின் மொபைல் ஒலித்தது அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கருமமே கண்ணாக அவளுள் முழுதாக தொலைந்து போக அவன் நினைக்க 

முழுதாக ரீங் வந்து அழைப்பு துண்டிக்கப்பட்டு மீண்டும் மொபைல் ஒலித்தது கருப்பன் எழுந்து முன் இருக்கையில் இருந்த மொபைலை எடுக்க தீலிப் தான் அழைத்திருந்தான் அதை எடுத்து காதில் வைக்க. 

 

இளமதி பதட்டத்துடன் எழுந்த அமர்ந்தவள் யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பயத்தில் தன் உடையை அவசர அவசரமாக சரி செய்து கொண்டு இருந்தாள் போனில் அவனுடன் பேசிக் கொண்டு இருந்தாலும் கண்கள் இளமதியை தான் பார்த்தது அவளின் ஒவ்வொரு செயலையும் கண்களாலேயே படம் பிடித்து கொண்டு இருந்தான் அவளின் முகச்சிவப்பையும் சேர்த்து ரசித்து கொண்டு இருந்தான் இத்தனை அழகும் தனக்கு தான் என்று நினைத்தவனுக்கு தன்னை அறியாமல் உள்ளம் துள்ளாட்டம் போட்டது. 

 

போனில் மறுமுனையில் இருந்த தீலிப் “ஹலோ மச்சான் இருக்கியா” என்று கத்திக் கொண்டே இருக்க கருப்பன் சுயநினைவுக்கு வந்து “சொல்லு டா” என்க “மச்சான் கிளம்பிட்டியா” என்று கேட்டான். 

 

“ம்ம் கிளம்ப போறேன்” என்றான் அவளை மையலுடன் பார்த்து கொண்டே 

“மச்சான் ஒரு ஹெல்ப் டா எங்க இரண்டு பேரையும் பஸ் ஸ்டாப்ல டிராப் பண்ணிடு டா இங்கே ஆட்டோ எதுவும் கிடைக்கல நீ எங்கே இருக்க” என்று கேட்டான் தீலிப். 

 

“இங்கே தான் இருக்கேன் வரேன்” என்றவன் அழைப்பை துண்டித்தான்

“நான் இப்போ கிளம்பனும் தீலிப் வெளியே காத்துட்டு இருக்கான்” என்று தயங்கி கொண்டே கூற 

“அப்போ நீங்க எனக்காக வரலையா” என்று அவள் முகத்தை திருப்பி கெண்டு கோபித்துக் கொள்ள 

“இன்னொரு நாள் கண்டிப்பா வரேன் 

என் செல்லம்ல வெள்ளக்கட்டில்ல அவளின் கன்னத்தை பிடித்து கொஞ்ச” அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. 

 

வீட்டில் இருந்தால் நாலு வார்த்தைக்கு மேல் பேசாதவன் இன்று இவ்வளவு பேசுவது அவளுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது “சரி கிளம்புங்க” என்றாள்

கருப்பன் அவளை விட்டு பிரிய மனமே இல்லாமல் அவளை தன்னோடு சேர்த்தணைக்க அவனின் மொபைல் மீண்டும் ஒலித்தது “ இவன் ஒருத்தன் மனுசனை நிம்மதியா இருக்க விடாம” என்று வாய்விட்டு புலம்பியவன்

 “சரி நான் கிளம்புறேன்” என்று அவளை வெளியே இறக்கிவிட்டு அங்கிருந்து தன் காரில் சென்றான். 

 

மதி அவனுக்கு கையை காட்டிக் கொண்டே ஏக்கம் சுமந்து விழிகளுடன் அவனை பிரியவே மனம் இல்லாமல் பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள் கருப்பனும் அவளை கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டே புது பொண்டாட்டியை விட்டு பிரிய மனம் வலித்தாலும் வேறு வழியில்லாமல் அங்கிருந்து சென்றான். 

 

மறுநாளும் கருப்பனுக்கு அவளின் நினைப்பில் வேலையே ஓடவில்லை 

இங்கே இளமதியும் பாடத்தில் கவனம் இல்லாமல் தன் மாமன் நினைவிலேயே உண்ணாமல் உறங்காமல் இருந்தாள். 

 

கருப்பன் இது சரிப்பட்டு வராது என்று நினைத்தவன் அவளுக்கு போன் வாங்க சென்றான். 

 

மதியிடம் மொபைல் இல்லாததால் அவனால் அவளிடம் பேசக் கூட முடியவில்லை அவள் கல்லூரியில் முதல் நாள் சேரும் போது இவன் மொபைல் வாங்கி தர கேட்க சிவகாமி உடனே “எதுக்கு இவளும் அவங்க ஆத்தாக்காரி மாதிரி எவன் கூடயாவது பேசி ஓடிப்போக வா” என்று கேட்க இளமதி “எனக்கு போனே வேண்டாம்” என்று கோபத்தில் கூறிவிட்டாள் அதன் பின் அவனும் வாங்கி தரவில்லை.

 

இப்போது அவளை எப்படி தொடர்பு கொள்வது என்று தெரியாமல் தவித்த கருப்பன் அன்றே ஒரு மொபைல் கடைக்கு சென்று இளமதிக்கு ஒரு மொபைலை வாங்கி கொண்டு அவளின் கல்லூரிக்கு சென்றான். 

 

மதிய வேளையில் அனைவரும் சாப்பிட செல்ல அவளுக்காக கல்லூரி வளாகத்தில் காத்திருந்தான் காலம் போன காலத்தில் காதல் கத்திரிக்காய் எல்லாம் தேவையா என்று அவன் மனம் கேள்வி எழுப்பினாலும் அவன் அதையெல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை புதிதாக காதலிக்கும் காதலனை போல் தன்னவளுக்காக காத்துக் கொண்டு இருந்தான். 

 

 இளமதி தன் தோழியிடம் ஏதோ பேசிக் கொண்டே வந்தவள் அங்கே மரத்தடியில் தனக்காக காத்திருக்கும் தன் மாமனை பார்த்து வெட்கம் பிடுங்கி தின்றது உடனே அவன் அருகில் செல்லாமல் அவனை தூரத்தில் இருந்தே ஒளிந்து கொண்டு அவன் செயல்களை பார்த்து ரசிக்க ஆரம்பித்தாள். 

 

மரத்தடியில் அங்கே வந்து கொண்டு இருக்கும் பெண்களில் தன்னவள் எங்கே இருக்கிறாள் என்று அவன் கண்கள் தேடிக் கொண்டு இருந்தது கையில் இருந்த பிளாஸ்டிக் கவரில் ஏதோ ஒரு பொருளை வைத்து கொண்டே நின்றிருந்தான். 

 

ஆறடிக்கு சற்று அதிகப்படியான உயரம் தான் உயரத்துக்கு ஏற்ற உடல்வாகு கம்பீரமான தோற்றத்துடன் எப்போதும் அணியும் அதே வெள்ளை நிற வேட்டி சட்டை தான் அணிந்து இருந்தான் வலது கையில் தங்க காப்பு இடது கையில் சில்வர் நிற கைக்கடிகாரம் அவன் அகன்று விரிந்த மார்பு மேலே இரண்டு பட்டன்கள் போடாததால் நன்றாகவே காற்று வாங்கி கொண்டிருந்தது அதில் மீன் போன்ற டாலருடன் கூடிய தங்க செயின் அணிந்து இருந்தான் இருவரும் ஒன்றாக தனிமையில் இருக்கும் போது அவன் அசைவுகளுக்கு ஏற்ப அவள் முகத்தில் மோதிக் கொண்டு இருக்கும் அதே செயின், காற்றில் அலை அலையான கேசம் பறந்து கொண்டு இருக்க ஆங்காங்கே நரை முடிகளும் இருந்தது அதுவும் அத்தனை அழகாக தான் இருந்தது. 

 

அங்கிருந்த அனைத்து மாணவ மாணவிகளும் சென்ற பின் தன்னவளை தேடி அவள் வராததால் அவன் முகம் சோர்ந்து போனது 

அவள் இல்லை என்று திரும்பி செல்ல அவன் முன் ஓடிச்சென்று மூச்சிறைக்க நின்றாள் இளமதி. 

 

அவளை பார்த்த அடுத்த நொடி தலைவன் அவனின் முகம் மலர்ந்தது அத்தனை மகிழ்ச்சி அவன் முகத்தில் 

அவன் முன் ஓடி வந்ததில் மூச்சு வாங்கி கொண்டு நின்றிருந்தாள் இளமதி. 

 

“எதுக்கு கண்ணு இப்படி ஓடி வர” என்று கேட்டவனின் கண்கள் அவள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஏறி இறங்கிய திமறி தெரிந்த அவளின் கொங்கைகளுக்கு சென்றது அவன் பேச்சுக்கும் பார்வைக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது மதி உடனே தன் துப்பட்டாவை சரி செய்ய அவன் பார்வையை அங்கிருந்து அவள் முகத்துக்கு கொண்டு வந்தான். 

 

“இந்தா கண்ணு உனக்கு போன் வாங்கிட்டு வந்தேன்” என்று அவள் கையில் கொடுக்க மதி அதை தன் கையில் வாங்கியவள் “இப்போ எதுக்கு மாமா எனக்கு போன்” என்று கேட்டாலும் கவரில் இருந்த போனை அவள் கைகள் பிரித்து பார்த்தது. 

 

“எதுக்குன்னு உனக்கு தெரியாதா இத்தனை நாள் எப்படி இருந்தேன்னு தெரியலை இப்போலாம் ஒரு ராவு கூட நீ இல்லாம கடத்த முடியலை எப்பவும் அதே நினைப்பா தான் இருக்கு” என்று அவள் அருகில் வந்து ஹஸ்கி குரலில் அவளுக்கும் மட்டுமே கேட்க்கும் படி கூற

“ச்சீ போங்க நீங்க ரொம்ப மோசம்” என்றவள் தலைகுனிந்து நிற்க

 “ராவுல உன் நினைப்பு வரும் போது போன் பண்றேன் பேசு வெள்ளிகிழமை சாய்ந்திரம் ரெடியா இரு உன்னை வந்து கூட்டிட்டு போறேன்” என்றான். 

 

“எங்கே” என்று அவள் கேட்க

“ம்ம் தேன்நிலவுக்கு” என்றான் அவளை பார்த்து கண்ணடித்து இவனுக்கு இவ்வளவு தெரியுமா என்று தோன்றியது அவளுக்கு எப்போதும் விரைப்பாக ஊரில் சுற்றுபவன் இவ்வளவு ரொமான்டிக் பாயாக இருப்பான் என்று அவள் கனவில் கூட நினைக்கவில்லை. 

 

“ராத்திரி மாமா போன் பண்றேன் எடு” என்று கூறியவன் தன் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து அவளிடம் கொடுக்க “எதுக்கு” என்று அவள் கேட்க 

“இந்த ஒரு வாரத்துல சாப்பிட்டு உடம்பை தேத்தி வை என்னை தாங்கனும்ல்ல உடம்புல வலு வேண்டாம் எனக்கு நிறைய ஆசை இருக்கு எனக்கு இணையா ஈடு கொடுக்கனும்ல்ல” என்று அவன் கூற. 

 

“அய்யோ எப்போ பாரு இதை பத்தி மட்டும் தான் பேசுவிங்களா” என்று அவள் வெட்கம் மற்றும் சற்று கோபமும் கலந்த குரலில் கேட்க 

“ம்ம் பொண்டாட்டி கிட்ட வேற எதை பத்தி பேசுவாங்க முப்பது வருஷமா பிரம்மச்சாரியாவே இருந்துட்டேன் பிள்ளை குட்டின்னு இனிமேவாது ஜாலியா இருக்க வேண்டாமா” என்றான். 

 

அவன் பேச்சில் மெய் மறந்து அவனை வைத்த கண் வாங்காமல் அவள் பார்க்க “போ போய் சாப்பிடு மாமனை சைட் அடிக்காம” என்று கூறிவிட்டு அவளை பார்த்துக் கொண்டே அங்கிருந்து கிளம்பினான். 

 

 

 

 

 

 

  •  

உயிர்வரை பாயாதே பைங்கிளி

20

 

இன்று 

 

 கிரிதரன் பேசி விட்டு சென்ற பின்பு அங்கேயே  ஆணி அடித்தார் போல் நின்ற திலோத்தமாவுக்கு கடந்த கால வாழ்க்கை அலை போல தோன்றி அவளை அலைக்கழிக்க… 

 

 அதன் தாக்கத்தை தாங்க முடியாமல் கால்கள் துவள அங்கையே ஒரு நாற்காலியை பிடித்து கொண்டு சரிந்து அமர்ந்தவளுக்கு இன்னமும் அவள் எந்த இடத்தில் தவறு செய்தால் என்று புரியவே இல்லை…

 

 தவறு செய்யாமல் தண்டனை அனுபவிப்பது தான் அவல் தலை எழுத்தா…?? என தன் மேல் எழுந்த கழிவிரக்கத்தில் தன்னை தானே நொந்து கொண்டு கதறி அழுதாள் … தலையில் அடித்து கொண்டு அழுதவள் கையில் வந்து சிக்கியது கிரிதரன் இழுத்து போட்டு அவள் பதுக்கி வைத்திருந்த தாலி…

 

இது…இதுவல்லவோ அவள் பட்ட அனைத்து துன்பங்களுக்கான அடையாளம்… அவள் அறியாமைக்கு கிடைத்த தண்டனை… அவள் அனுபவித்த நரக வேதனைகளின் நியாபக சின்னம் இன்னும் என்ன என்னவோ எண்ணங்கள் மேலேழும்பி… இதை கழட்டி எரிந்தால் என்ன என்கிற தோன்றுகையிலே அவள் உள்ளம் தொய்ந்து போய் விடுகிறது… அது  முடிந்து இருந்தால் எப்போவோ கழட்டி எரிந்து இப்பாளே… தாலி தமிழ் நாட்டு பெண்களின் உயிர் அல்லவா…

 

ஒரு மூச்சு முழுவதும் அழுது தீர்த்தவள்… அதற்கு மேல் அங்கு இருக்க முடியாதவள்… எப்படி வீடு வந்து சேர்ந்தால் என்றால் பதில் அவளுக்கே தெரியாது… இந்த ஐந்தரை அடி உருவத்தில் அவளுக்கு அந்த நானூறு கிராம் இதயத்தை சுமப்பதற்கே பெரும் பாடு பட்டு போனாள் பெண்ணவள்… அதிக கனம் கூடியக் காரணத்தால்…

 

பஞ்சாயத்தை முடித்து விட்டு பஞ்சாட்சரம் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தார்…

 

 திலோவின் திருமணம்  நின்ற செய்தியை கேட்டு தையல்நாயகிக்கு ஒரே கும்மாளம் தான்…

 

 இந்த மாதிரி கூத்து எல்லாம் எங்க நடக்கும்… கேட்டியா சொந்த மகன் தாலி கட்டுன மருமகளுக்கு வேற மாப்பிளை பார்க்கிற அதிசய மாமனார்  இங்கன இருக்குற வரைக்கும் இன்னும் என்ன கூத்து வேணுனாலும் நடக்கும்… அடியே வசந்தி!!! பொண்டாட்டி ஆகாது புள்ளைங்க ஆகாதுன்னு ஒதுக்கி வச்சிட்டு மருமகள் மருமகள்னு தலையில தூக்கி வச்சி ஆடுனாரே ஒரு பெரிய மனுஷன்… இப்போ அவருக்கு கதி என்ன தெரியுமா… ஊரை கூட்டி வச்சி உச்சந்தலையில் ஆணி அடிச்சி புட்டா அந்த சிறுக்கி இங்க அவர் பெத்த புள்ளை கல்யாணத்தை அம்போன்னு விட்டுட்டு… கண்ட கழுதைக்கு கல்யாணம் கலட்கிட்டிக்கிட்டு திரிஞ்சார் இல்லை அவருக்கு இதுவும் வேணும் இதுக்கு மேலையும் வேணும்… பெத்த பிள்ளைங்க மேல பாசமும் பொறுப்பும் காட்டலைனா… இப்படி தான் நடக்கும்…என வாய்க்கு வந்ததை பேசிவிட்டு பஞ்சாட்சரத்தை பார்த்து நொடித்துக் கொண்ட தையல் நாயகிக்கு…

 

 நாக்கு மேல் பல்லை போட்டு பேசும் மனைவியை எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தார் பஞ்சாட்சரம்… அதற்காக அவர் சொல்லும் அபண்டாமான பழிச் சொல்லை தாங்கிக் கொள்ளவும் இல்லை அவர்…  “யாரை பார்த்துடி பொறுப்பில்லாத அப்பன்னு சொல்ற… ஓடி போன உன் புள்ளை எங்க போனான் எப்படி போனான்னு உனக்கு தெரியுமாடி… இல்லை அவன் எங்க போனானோன்னு பதறி ஆளை வச்சாவது தேடி இருப்பியா… நான் தேடுனேன்டி என் புள்ளைய காணாம இராப் பகலா ஊர் ஊருக்கு ஆளை வச்சு நான் தேடினேன்… இப்போ உன் புள்ள ஊர் மெச்சும் படி வந்து நிக்க யாருடி காரணம் நீயா…??? மனசு ஒடிந்து போன பிள்ளைய மனச தேத்தி  வெளிநாட்டுக்கு மறைமுகமா ஆள் வச்சு அனுப்பி வச்சது நான்டி… என்ன சொன்ன என் பொண்ணு கல்யாணத்தை அம்போன்னு விட்டுட்டேனா… ஆமா நீ பார்த்து வச்ச மாப்பிள்ளை யார் சொல்லி வந்தான்னு நினைச்சுட்டு இருக்க… அவன் என்கிட்ட படிச்ச பையன்டி… மேனகா என் பொண்ணுன்னு தெரிஞ்ச ஒரே காரணத்துக்காக மறு வார்த்தையே கேக்காம கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டான்… பெருசா பேச வந்துட்டா  பிள்ளைகளை பெத்து வளர்த்தால் மட்டும் போதாது… அவங்களுக்கு நாலு நல்லது கெட்டது சொல்லிக் கொடுத்து வளர்க்கணும்…!!” என்றார் முகத்தில் தான் சரியான தந்தையாக தான் இருந்தேன் என்கிற நிமிர்வு அவரிடம்…

 

க்கும் புள்ளையாம் புள்ளை பொண்டாட்டி இல்லாம புள்ளைங்க எங்க இருந்து வந்தாங்களாம்… வானத்தில் இருந்து குதிச்சா இல்லை… பூமியில் இருந்து பொத்துகிட்டு வந்துச்சா என புருஷன் பேச்சில் கடுப்பானார் தையல் நாயகி 

 

“ உன்கிட்ட போய் சொன்னேன் பாரு என்னை சொல்லணும்…!!” என்று காட்டமாக சொன்னவர் தோளில் இறங்கிய துண்டை உதறி போட்டுக் கொண்டு எதிர் வீட்டை நோக்கி சென்றார்… மாமனார் கடமை முடியவில்லையே…

கிரிதரன் விஷயத்தில் வேண்டுமானால் முதலில் அவர் கோட்டை விட்டு இருக்கலாம் ஆனால் ஒரு தந்தையாக எந்த இடத்திலும் அவர் கடமையை விட்டுக் கொடுத்ததில்லை… மகன் ஒழுக்கமாக வளர வேண்டும் என்று கண்டித்தாரே ஒழிய அவன் நாசமா போக வேண்டும் என்று ஒரு நாளும் எண்ணியது இல்லை… அன்று வீட்டை விட்டு ஓடி போனவனை இரண்டு வாரம் ஊன் உறக்கம் இன்றி தேடி அலைந்து கண்டு பிடித்தவர்… அவனை நேரடியாக அணுக முடியாமல் தன்னோடு பணி புரிந்த வேதாச்சலம் மூலம் அவனை திரட்டி தேற்றி வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தார்… அதுவும் அவனுக்கே தெரியாமல்…எங்கே தெரிந்தால் தன் மீது உள்ள கோவத்தில் செல்லாமல் இருந்து விடுவானோ என்று அஞ்சியே மறைத்தார்… மேனகை விஷயத்திலும் அப்படியே எட்டி நின்றாவது மகளை பார்த்து விட வேண்டும் இல்லாவிட்டால் அந்த நாளே விடியாது… திலோவை பள்ளியில் விடும்  போது மேனகையுடன் பேசி விட மாட்டோமா என்றே ஆவலோடு செல்வது… மற்ற இடத்தில் என்றால் எங்கே தையல் நாயகி பார்த்து விடுவாளோ பின் மகளை நோகடித்து விடுவாளோ என்றே தள்ளி நின்றார்… ஆல மரத்தின் கிளை போல நீண்டு படர்ந்து நிழல் தந்தார் பஞ்சாட்சரம்…இதில் அவர் சொல்லாமல் விட்ட ஒன்று தான் தன் மனைவி மீது வைத்த மாறாத நேசம்…

 

என்னது நேசமா ஆம் எட்டி நின்றாலும் அது நேசம் தான்… என்னதான் மனைவி தவறே செய்திருந்தாலும்… அவரை முழுதாக வெறுத்து விடவில்லை பஞ்சாட்சரம்… தன் கண் பார்வையிலே மனைவி இருக்க வேண்டும் என்று தானே அவர் எதிர் வீட்டுக்கே குடி போனது… தள்ளி நின்றாலும் பந்த பாசம் விட்டு போகவில்லை… என் மனைவி என் மக்கள் என் பாதுகாப்பு என்றே அவர் இருவீட்டுக்கு சேர்த்து காவல் காப்பது போல் திண்ணையில் படுத்துக்கொண்டது… புயல் மழை இடி என எதற்கும் அவர் அந்த இடத்தை விட்டு அசைந்தது இல்லை… என்று சொன்னால் நம்புவீர்களா…?? ஆனால் அது தான் சத்தியமான நிஜம்… மெய்யான நேசம் கொண்டவர்கள் அவர்களுக்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டு… ஆனால் அதை புரிந்து கொள்ளும் பக்குவத்தில் தையல் நாயகி இல்லை என்பது தான் துரதிஷ்டமே…

 

 

 கணவன் பேசி சென்றதிலிருந்து தையல் நாயகிக்கு உற்சாகம் தாங்கவில்லை… கணவன் பாசம் மாறவில்லை ஒரு பக்கம் மறுப்பக்கம் எங்கே திலோவின் திருமணம் நடந்து விடுமோ என்று பொருமி கொண்ட திரிந்தவருக்கு எண்ணம் எல்லாம்… என் மகனை விட்டுட்டு நீ இன்னொரு கல்யாணம் பண்ணிட்டியாடி என்பது மட்டும் தான்… வெறும் குற்றமாக அவர் கண்களுக்கு தெரிந்தது…

 

 அவர் மகன் தாலி கட்டின கையோடு விட்டு சென்றதோ அல்லது இவளை மருமகளாக ஏற்க மாட்டேன் என்று தையல்நாயகி செய்த ரகளையோ எதுவும் அவருக்கு நினைப்பில்லை… அது எப்படி என் மகன் உயிரோட இருக்கும்போதே அவள்  இன்னொரு கல்யாணம் பண்ணுவாள்… என குதித்தவர்…

 

 வக்கத்தவளுக்கே இன்னொரு கல்யாணம் கேக்குதுனா என் பையனுக்கு ஆயிரம் கல்யாணம் பண்ணி வைப்பேன் டி  என்கிற போட்டியில் தானே அவர் கிரிதரனுக்கு வேறு பெண்ணை பார்த்தது… எங்கே அவன் தன் பேச்சைக்கு கேட்காமல் போய்விடுவானோ என்கிற அச்சத்தில் தானே மேனகையை சாக்கிட்டு இருவருக்குமே ஒன்றாக திருமண ஏற்பாட்டை செய்தது… அதுவும் தன் மகன் கையால் தாலி வாங்கி கொண்ட திலோவுக்கு முன்பே இவர்கள் திருமணத்தை நடத்த வேண்டும் என அவர் பிடிவாதம் பிடிக்க காரணமே நீ இல்லாட்டியும் என் மகன் நல்லா வாழுவான்டி என்பதை காட்டத் தானே…

 

எப்படியோ அவர் நினைத்தது போல திலோத்தமாவிற்கு திருமணம் நடக்கவில்லை நின்று விட்டது நிறுத்தியது மகன் என்பதே அவருக்கு மிக்க மகிழ்ச்சி… ஏன்…? எதற்கு…?? எல்லாம் ஆராயவில்லை… கல்யாணம் நின்னுருச்சா அது போதும் தையல்நாயகி ஹேப்பி அண்ணாச்சி…  இதை பார்த்து  தான் தானும் படுக்க மாட்டார் தள்ளியும் படுக்க மாட்டார் என்றார்களோ… 

 

இதோ புதிதாக முளைத்த உற்சாகத்துடன் தன் மகள் கல்யாணத்தை பார்க்க விரைந்து விட்டார்… இறக்கை முளைக்காதது மட்டும் தான் குறை…மற்றபடி பறந்து பறந்து அத்தனை வேலைகளையும் பார்த்தார்…குழந்தையின் குதூகலத்துடன்…

 

தான்  பிறருக்கு எதை செய்கிறோமோ அல்லது செய்ய நினைக்கிறோமோ அதுவே நமக்கு திரும்பி வரும் என்பதை மறந்து விட்டார் தையல் நாயகி… 

 

அதன் விளைவு தையல்நாயகியின் ஆருயிர் மூச்சாக இருந்த அவரது மகளின் வாழ்க்கை பறிப்போனது… அதுவும் அவளது சொந்த தம்பி சீரளானிடமே என்றால்… அது எத்தனை பெரிய மரண இடி… குடிகாரனிடம் வாழ்க்கை இழந்து விட்டு நிற்கும் மகளை என்ன செய்ய போகிறார் தையல் நாயகி…??? அடுத்து பகுதியில் சந்திப்போம் டார்லிஸ்…

 

  •