Reading view

அறிந்த நிலமும் அறியப்படாத மொழிவெளியும் – 4

1999இல் பாலச்சந்திரன் அவர்களால் தமிழில் இருந்து மலாய்க்கு மொழியாக்கம் கண்ட ‘Seruling Di Persimpangan’ எனும் தொகுப்பு குறிப்பிடத்தக்க முயற்சி என்றாலும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் எனச் சொல்ல மாட்டேன். கோ. புண்ணியவான், பாவை, மு. அன்புச்செல்வன் போன்றவர்களின் சிறுகதைகள் அதில் இடம்பெற்றிருந்தாலும் சிறுகதைகளின் அடிப்படை கூட அறியாதவர்களின் கதைகளும் அதில் இடம்பெற்றிருக்கின்றன. இக்கதைகள் மலாயா பல்கலைக்கழகம் வெளியிடும் ‘பேரவைக் கதைகள்’ தொகுப்பில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. ‘டேவான் பாஹாசா’ வெளியிட்டுள்ளது. பொதுவாகவே மலேசியத் தமிழர்கள் மத்தியில் ‘டேவான் […]
  •  

அறிந்த நிலமும் அறியப்படாத மொழிவெளியும் – 3

80களுக்குப் பின் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மொழியாக்க முயற்சிகள் முற்றிலுமாகச் செயலிழந்துவிட்டன எனக்கூறலாம். இதுவரை மலேசியத் தமிழ் இலக்கியம் சார்ந்து எழுதப்பட்ட ஆய்வு கட்டுரை தொகுப்பு நூல்களிலும் மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் குறித்த விரிவான கட்டுரைகள் இல்லை. இராம. சுப்பையா, ஜி. சூசை, விக்னேசன், எஸ். ராமச்சந்திரன், எஸ். சிங்காரவேலு ஆகியோரின் மொழிபெயர்ப்பு பங்களிப்புகள் குறித்த தரவுகளோ தகவல்களோ கிடைப்பதும் மிக அரிதாகவே உள்ளது. நானறிந்து ஜி. சூசை அவர்களின் சில மொழிபெயர்ப்புக் கவிதைகள் 1996இல் மா. இராமையா […]
  •  

அறிந்த நிலமும் அறியப்படாத மொழிவெளியும் – 2

வல்லினம் இன்று மூன்று மொழி இலக்கியங்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் வழியாக மூன்று மொழி எழுத்தாளர்களுடனான உரையாடலையும் சாத்தியப்படுத்த முனைகிறது. இது ஒரு தொடக்கம்தான். முழுமையான திட்டம் எனக் கூறிவிட முடியாது. மலேசியாவில் ஆங்கில இலக்கியச் சூழலில் மட்டுமே இயங்கும் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் உள்ளனர். சபா, சரவாக்கில் எழுதப்படும் இலக்கியங்கள் குறித்து தமிழில் நம்மிடையே எந்த அறிமுகமும் இல்லை. இந்த இடைவெளிகளை மெல்ல மெல்ல குறைக்க வேண்டியுள்ளது. ஆர்வமான இளம் எழுத்தாளர்களின் இணைவின் மூலமாகவே […]
  •  

அறிந்த நிலமும் அறியப்படாத மொழிவெளியும் – 1

இன்னும் ஏழு நாட்களில் ‘முக்கோணக் கதைகள்’ நிகழ்ச்சி. வல்லினத்தின் மற்றுமொரு பெருமுயற்சி. ‘மலேசிய இலக்கியச் சூழலில் புதிய, வரலாற்றில் நிலைகொள்ளும் முயற்சிகளை வல்லினம் முன்னெடுக்கிறது’ எனும் வாசகம் கிட்டத்தட்ட தேய்வழக்காகிவிட்டது. மூத்தப் படைப்பாளிகளின் ஆவணப்பட இயக்கம், எழுத்தாளர்களின் நிழல்படத் தொகுப்பு, எழுத்தாளர்களுக்கு உரிய உரிமத்தொகை வழங்குதல், மூத்தப்படைப்பாளிகளின் சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தல், நவீன இலக்கியம் சார்ந்த முகாம்கள், விருதுகள் – நூல் பதிப்புகள் வழி மலேசியாவின் சமகால இலக்கியத்தை உலகத் தமிழ் வாசகர்களிடையே கொண்டு செல்லும் […]
  •  

அஞ்சலி: மஹாத்மனின் இரகசியப் பயணம்

மஹாத்மன் இறந்துவிட்டார். அவர் இறந்து மூன்று வாரங்கள் ஆகின்றன என சற்று முன்னர்தான் தெரிய வந்தது. அவர் இறந்ததை அவர் மனைவியும் அண்ணனுமே இன்றுதான் தெரிந்துகொண்டனர் என்பது மேலும் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு முதியோர் பராமரிப்பு இல்லத்தில் இருந்த மஹாத்மனை மூன்று வாரங்களாக அவர் குடும்பத்தில் உள்ளவர்கள் பார்க்க வரவில்லை எனும் உண்மை சங்கடத்தை அளித்தது. நெஞ்சு வலியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் வழியிலேயே இறந்துள்ளார். இறுதி காரியங்கள் மருத்துவமனையிலேயே செய்துமுடிக்கப்பட்டு இஸ்லாமிய முறைபடி அடக்கம் செய்யப்பட்டார் […]
  •  

என் மலாய் சிறுகதை நூல் வெளியீடு

நூலை ஷோப்பியில் வாங்க: https://my.shp.ee/1vFtmrs நேற்று (பிப்ரவரி 1) எனது முதல் மலாய் சிறுகதை தொகுப்பான ‘Pita Suara Mona Fandey’ மாற்று புத்தகக் கண்காட்சியில் வெளியீடு கண்டது. இந்தக் கண்காட்சி ஜனவரி 29 முதல் பிப்ரவரி 2 வரை சென்ட்ரல் மார்க்கெட்டில் (Central Market) நடைபெறுகிறது. மாற்று புத்தகக் கண்காட்சி (Kuala Lumpur Alternative Bookfest – KLAB) என்பது மலேசியாவில் தனி நபர்கள் முயற்சியில் இயங்கும் பதிப்பகங்களும் மாற்று குரல்களை வெளிப்படுத்தும் எழுத்தாளர்களும் இணைந்து […]
  •  

அ. ரெங்கசாமிக்கு அஞ்சலி

ஜனவரி 13 ஆம் திகதி அ. ரெங்கசாமியின் மூத்த மகன் சுந்தரத்திடமிருந்து அழைப்பு வந்தபோதே அது ஏதோ துக்கமான செய்தியைத் தாங்கி வருவதாக உள்ளுணர்வு சொன்னது. பெரும்பாலும் துக்கச் செய்திகளைத் தாங்கி வரும் அழைப்புகளுக்கு அத்தகைய தன்மை இருப்பதுண்டு. அவ்வழைப்புகளின் சத்தம் அழுகைபோல ஒலிக்கக்கூடியது. “அப்பா இறந்துட்டாருய்யா,” சுந்தரம் அண்ணனிடமிருந்து சுரத்தில்லாதச் சொற்கள். “எப்போது?” என்றேன். என் சொற்கள் உலர்ந்துவிட்டன. “மதியம் இரண்டு மணிக்கு,” என்றார். நான் மணியைப் பார்த்தேன். மாலை 5. நான் அப்போது வெளியில் […]
  •  

சீனப்பயணம்: அறியப்படாத நூறு மலர்கள் – 13

காலையிலேயே மேற்கு ஏரிக்குப் புறப்பட்டோம். இதைச் சீனாவின் அழகிய இதயம் எனக் குறிப்பிடுவதால் இதயத்தைக் காண ஆவலாக இருந்தது. இயற்கை அழகு, கலாசார முக்கியத்துவம், வரலாற்று முக்கியத்துவம் ஆகியவற்றால் கவனம் பெற்ற ஏரி இது. அஸ்ரின் அங்குள்ள வாடகை வண்டி பிடிக்கும் செயலியைத் தறவிரக்கம் செய்திருந்ததால் காலை 9 மணிக்கெல்லாம் அவ்விடத்தை அடைந்தோம். காலைக் காற்று புத்துணர்ச்சியைக் கொடுத்தது. ஏரியைச் சுற்றி மலைகள். மலைகள் ஏரியில் பிரதிபலித்தன. மூங்கில் ரகத்தைச் சேர்ந்த ஒருவித மரம் ஏரியைச் சுற்றி […]
  •  

சீனப்பயணம்: அறியப்படாத நூறு மலர்கள் – 12

காப்பி இதமான இருந்தது. நடுங்கி உதறச் செய்த குளிரைக் கொஞ்சம் கொஞ்சமாக விரட்டியது. பால்கனிக்குச் செல்லும் தைரியம் எழவில்லை. முன்னறைக்குச் சென்று சாய்ந்து அமர்ந்தேன். தூரமாகக் கிடந்த சிவப்பு நிற அட்டை பயமுறுத்தியது. அதில் ‘சிப்’ இருக்கலாம் என விளையாட்டாகத்தான் சொன்னேன். ஆனால் ‘இருக்கலாமோ’ என இப்போது தோன்றியது. அறையைச் சுத்தம் செய்யும் கிழவி ஒரு விசையை அழுத்தி நான் யார் என உறுதிப்படுத்திக்கொண்டதும் அமரும் இடம் தொடங்கி ஒவ்வொரு இடத்திலும் என் இருப்பை ஏற்பாட்டுக்குழு உறுதி […]
  •  

சீனப்பயணம்: அறியப்படாத நூறு மலர்கள் – 11

எதிர்பார்த்ததைவிட இரவு குளிர்ந்தது. கையுறையால் விரல்களில் ஏற்படும் குளிர்வலியில் இருந்து தப்ப முடிந்தது. நாங்கள் குளித்திருக்கவில்லை. நேரத்தை விரையம் செய்ய வேண்டாமென குளிராடையை உடுத்திக்கொண்டு அவசரமாக வெளியேறி இருந்தோம். அந்த அவசரத்தில் எங்களிடம் கொடுத்த சிவப்பு நிற அட்டையும் உடன் வந்தது. எங்குச் சென்றாலும் அந்த அட்டையை அணியச் சொன்னது நினைவுக்கு வந்தது. கழுத்தில் இருந்ததை சுருட்டி பாக்கெட்டில் வைத்துக்கொண்டேன். நானும் அஸ்ரினும் தொடர்ந்து மலேசிய இலக்கியச் சூழல் குறித்து பேசிக்கொண்டே வந்தோம். மலேசியாவில் குறிப்பிடத்தக்க மலாய் […]
  •